tamil lanka murli 29-05-18
tamil lanka murli 27-05-18
tamil lanka murli 24-05-18
tamil lanka murli 22-05-18
tamil lanka murli 21-05-18
tamil lanka murli 20-05-18
tamil lanka murli_30-01-18
tamil lanka murli 23-10-17
tamil lanka murli 21-10-17
tamil lanka murli 15-08-17
tamil lanka murli 23-07-17
tamil lanka murli 05-06-17
tamil lanka murli 04-06-17
tamil lanka murli 03-06-17
tamil lanka murli 02-06-17
tamil lanka murli 14-05-17
tamil lanka murli 15-04-17
tamil lanka murli 09-04-17
tamil lanka murli 07-04-17
tamil lanka murli 02-04-17
tamil lanka murli 26-03-17
tamil lanka murli 19-03-17
tamil lanka murli 16-03-17
tamil lanka murli 15-03-17
tamil lanka murli 14-03-17
tamil lanka murli 12-03-17
tamil lanka murli 11-03-17
tamil lanka murli 09-03-17
tamil lanka murli 08-03-17
tamil lanka murli 06-03-17
tamil lanka murli 05-03-17
tamil lanka murli 01-03-17
tamil lanka murli 28-2-17
tamil lanka murli 27-2-17
tamil lanka murli 26-2-17
tamil lanka murli 24-2-17
tamil lanka murli 23-2-17
tamil lanka murli 19-2-17
tamil lanka murli 18-2-17
TAMIL LANKA MURLI 15-10-16
ENGLISH MURLI 14-10-16
TAMIL LANKA MURLI 13-10-16
TAMIL LANKA MURLI 12-10-16
TAMIL LANKA MURLI 11-10-16
TAMIL LANKA MURLI 10-10-16
11. TAMIL LANKA MURLI 09-10-16
11-TAMIL____02-10-16
11-tamil______murli_29-09-16
ENGLISH MURLI 14-10-16
TAMIL LANKA MURLI 13-10-16
TAMIL LANKA MURLI 12-10-16
TAMIL LANKA MURLI 11-10-16
TAMIL LANKA MURLI 10-10-16
11. TAMIL LANKA MURLI 09-10-16
11-TAMIL____02-10-16
11-tamil______murli_29-09-16
TAMIL MURLI 29 TO 04 SEPTAMBER - 2016
http://j.mp/TAMIL2-03-09-16
http://j.mp/TAMIL2-02-09-16
http://j.mp/TAMIL2-01-09-16
29
.08.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே ! மன்மனாபவ என்ற டிரில்லை சதா செய்து
கொண்டேயிருந்தால் 21 பிறவிகளுக்கு நிரந்தரமாக நோயற்றவராக ஆகிவிடலாம்.
கேள்வி : சத்குருவின் எந்த ஸ்ரீமத்தை பாலனை செய்வதில் குப்தமான (மறைவான) உழைப்பு
இருக்கின்றது?
பதில் : இனிமையான குழந்தைகளே! இந்த தேகத்தை மறந்து என்னை நினையுங்கள் என்பது சத்குருவின்
ஸ்ரீமத்தாகும். தன்னை தனியான ஆத்மா என புரிந்து கொள்ளுங்கள். ஆத்ம உணர்வில் இருப்பதற்கு முயற்சி
செய்யுங்கள். அனைவருக்கும் அசரீரி ஆகுங்கள் என்ற செய்தியை கொடுங்கள். தேகம் உட்பட தேகத்தின்
அனைத்து தர்மங்களையும் மறந்தால் நீங்கள் தூய்மையாகி விடலாம். இந்த ஸ்ரீமத்தைக் கடைபிடிப்பதில்
குழந்தைகள் குப்தமாக உழைக்க வேண்டியிருக்கின்றது. அதிர்ஷ்டசாலி குழந்தைகள் தான் இந்த குப்தமான
உழைப்பை செய்ய முடியும்.
ஓம் சாந்தி. தங்களுடைய சகோதரர்கள் அல்லது சகோதரிகளுக்கு டிரில் கற்றுக் கொடுப்பதற்காக குழந்தைகள்
அமர்ந்திருக்கிறார்கள். இது எப்படிப்பட்ட டிரில்? இதில் குழந்தைகள் எதையும் கூற வேண்டியதில்லை. அந்த
உடலுக்கான உலகீய பயிற்சியில் சொல்ல வேண்டியிருக்கின்றது. இவரோ சுப்ரீம் டீச்சர், கீதையின் பகவான்
குழந்தைகளுக்கு வந்து யோகத்தின் டிரில்லைக் கற்பிக்கிறார். இது குப்தமாக உள்ளது. மாணவர்கள் ஆரோக்கியமாக
இருப்பதற்காக இந்த டிரில் கற்பிக்கப்படுகிறது. இந்த மன்மனாபவ டிரில்லினால் 21 பிறவிகளுக்கு ஆரோக்கியமாக
இருக்கலாம். ஒருபோதும் நோய் ஏற்படாது. எனவே இது எவ்வளவு நல்ல ஆன்மீக டிரில்லாகும். மன்மனாபவ
என்பதை பாபா புரிய வைக்கின்றார். இதில் சொல்வதற்கு எதுவும் இல்லை. தன்னை ஆத்மா என உணருங்கள்
என்று மட்டும் புரிய வைக்கப்படுகிறது. ஆத்ம அபிமானி ஆகுங்கள். ஆகுக என்பதன் பொருளே நீங்கள்
தந்தையை நினைவு செய்யுங்கள், சதா ஆரோக்கியமாக ஆகிவிடலாம். போன கல்பத்தில் கூட நாம் இந்த
ஆன்மீக டிரில்லினால் சதா ஆரோக்கியமாக மாறினோம். ஆன்மீக டிரில், ஆன்மீகத் தந்தை பரம்பிதா பரமாத்மா
சிவன் தான் கற்பிக்கின்றார். பகவான் என்று அவருக்குத்தான் கூறப்படுகிறது. அவருக்குத்தான் பூஜையும்
நடக்கிறது. சிவாய நமஹ என்றும் கூறுகின்றார்கள் அல்லவா? பிரம்மா தேவதாய நமஹ, சிவபரமாத்மாய
நமஹ என்கிறார்கள். இந்த டிரில்லை வேறு எவரும் கற்றுத்தர முடியாது. இந்த டிரில்லை பிரம்மா கற்பித்தார்
என்பதும் கிடையாது. பிரம்மா குமார் பிரம்மா குமாரிகள் என அழைத்துக் கொள்ளலாம். ஆனால்.... கடிதத்தில்
கூட சிவபாபா கேர் ஆப் பிரம்மா என்று தான் எழுதுகின்றீர்கள். அவர் குப்தமாகி விட்டார், ஆனால் மனிதர்களுக்கு
எப்படித் தெரியும் பிரம்மாவோ பிரஜாபிதா ஆவார். முழு உலகத்தினரும் அவருடைய குழந்தைகள் ஆவர்.
பிரஜா பிதா அல்லவா? டிரில் கற்பிக்கக்கூடியவர் நிராகார தந்தை ஆவார். அவர் குப்தமாக இருக்கின்றார்.
குப்தமாக இருக்கின்ற காரணத்தினால் மனிதர்களுக்கு புரிந்து கொள்ள கடினமாக இருக்கின்றது. பிரம்மாவை
பகவான் என்று கூறமுடியாது. இங்கே பெயரே பிரம்மா குமாரிகள் பிரம்மா குமார். அதாவது பிரம்மாவின்
குôந்தைகள். யாராவது வருகிறார்கள் என்றால், அவர்களுக்கு புதிய உலகத்தை படைப்பவர் பிரம்மா இல்லை,
நிராகார் தந்தை என்று கூறவேண்டும். அவர் பிரம்மா மூலமாக படைக்கின்றார். பாரலௌகீக பரம்பிதா பரமாத்மா
பிரம்மா மூலமாக படைக்கின்றார் என்றால் பரமாத்மாவின் படைப்பு ஆகிவிட்டது. நீங்கள் கடிதத்தின் மீது
சிவபாபா கேர் ஆப் பிரம்மா என்று எழுதுகின்றீர்கள். எனவே இதுவும் நினைப்பதற்கான யுக்தியாகும். சிவபாபா
பிரம்மா மூலமாகக் கற்பிக்கின்றார். மன்மனாபவ என்று மட்டும் கூறுகின்றார். வேறு எந்த துன்பமும் கொடுப்பதில்லை.
நீங்கள் தங்கள் முன்னேற்றத்தை விரும்புகிறீர்கள் என்றால், உண்மையான உலகிற்கு அதிபதி ஆக வேண்டும்
என விரும்புகிறீர்கள் என்றால், உண்மையான கண்டத்தை படைக்கக் கூடியவர் ஒரே ஒரு சத்தியமான
தந்தையாவார். அவரை நினையுங்கள். என்னை நினைத்தால் பாவங்களிலிருந்து விடுபடலாம் என எல்லையற்ற
தந்தை தான் வந்து குழந்தைகளுக்குக் கூறுகின்றார். கிருஷ்ணரை பதீத பாவனர் என்று கூறமுடியாது. பரம்பிதா
பரமாத்மாவைத் தவிர. வேறு எவரையும் கூற முடியாது. இறை தந்தை என்று தான் கூறுவார்கள். அனைவரும்
அவரை தந்தை என்கிறார்கள். பிறகு அவரை சர்வ வியாபி என்று எப்படி கூற முடியும்? அவர் விடுவிப்பதற்காக
வருகிறார் என்று கூறுகின்றார்கள். இதை மனிதர்கள் அறியவில்லை. எனவே கல்பத்தின் ஆயுளை தலைகீழாக
எழுதி விட்டனர். இப்போது குழந்தைகள் இந்த டிரில்லை செய்ய வேண்டும். ஞானம் கிடைத்திருக்கிறது.
உட்காரும் பொழுது தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைத்தால் விகர்மங்கள் அழியும். டீச்சர்
எதிரில் ஆசனத்தில் அமர்ந்திருக்கின்றார் என்றால், அழகாகும். டிரில் செய்விப்பதற்கு ஆசிரியர் நிச்சயம்
தேவை என்பது முறையாகும். சிலர் பெரிய ஆசிரியராக இருந்தால் சிலர் சிறிய ஆசிரியராக இருப்பர். இப்போது
உங்களை சோதிப்பதற்கு அவசியம் இல்லை. ஏனென்றால் நாம் எவ்வளவு நேரம் மிகவும் அன்பான தந்தையை
29.08.2016
(2/4)
நினைக்கின்றோம் என உங்களுக்கே தெரியும். பிரம்மா ஒன்றும் மிகவும் அன்பானவர் கிடையாது. மிகவும்
அன்பானவர் சதா தூய்மையாக இருப்பவர். எல்லோரையும் விட அன்பானவர் யார் என குழந்தைகள் அறிகிறீர்கள்.
துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவரே என மனிதர்கள் பரமாத்மாவைத்தான் நினைக்கின்றார்கள். அவரை
விடுவிக்கக்கூடியவர் என்றும் கூறுகின்றார்கள். அதாவது துக்கத்தில் இருந்து விடுவிக்கக் கூடியவர் எனவே
குழந்தைகள் தங்களது முயற்சியை செய்ய வேண்டும். நாடகத்தின் படி இந்த உலகம் தூய்மையாக வேண்டும்.
மேலும் தூய்மையான உலகத்தை உருவாக்க தீப்பற்றி எரிய வேண்டும். எப்படி தீப்பற்றி எரியும் என்பதையும்
அறிகிறீர்கள். அழியாமல் உலகம் தூய்மையாக முடியாது. இதுவே ருத்ர ஞான யக்ஞம்.......... ருத்ரனுக்கும்
சிவனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் சிவன் என்ற பெயர் முக்கியமானதாகும். மற்ற படி
அவரவர் மொழியில் பல பெயர்கள் வைத்துவிட்டனர். சிவஜெயந்தி கூட கொண்டாடுகிறார்கள். பாரதத்தில் தான்
சிவ ஜெயந்தி புகழ்பெற்றதாகும். எல்லையற்ற தந்தையின் சிவஜெயந்தி என்றால் நிச்சயம் வந்திருப்பார்.
சிவபாபாவின் பெயர் பிரசித்தமாக இருக்கின்றது. பிரம்மா மூலமாக சொர்க்கத்தின் ஸ்தாபனை செய்யக்கூடியவர்
ஆவார். எனவே அந்த உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையை நினைக்க வேண்டும். பிரம்மா உயர்ந்ததிலும்
உயர்ந்தவர் கிடையாது. உண்மையில் பிரம்மா உயர்ந்தவராகவும் ஆகிறார். பிறகு கீழேயும் இறங்குகிறார்.
நீங்கள் பிகேவும் கீழே இறங்குகிறீர்கள். இப்போது உயர்ந்தவர் ஆகிக்கொண்டு இருக்கின்றீர்கள். ஒரேயடியாக
உயர்ந்த பாபாவின் வீட்டிற்குச் சென்று விடுவீர்கள். நீங்கள் இச்சமயம் திரிகாலதர்μ ஆகிக்கொண்டு இருக்கின்றீர்கள்.
நாம் தான் சுயதரிசன சக்கரதாரி என நீங்களே அறிகிறீர்கள். நாம் பிரம்மாண்டம் மற்றும் சிருஷ்டியின் முதல்
இடை இறுதியை அறிந்தவர்கள். பிரம்மாண்டம் என்றால் உயர்ந்தது. அங்கே அனைத்து ஆத்மாக்களும்
வசிக்கிறார்கள். உலகத்தில் வேறு யாரும் மூலவதனத்தில் ஆத்மாக்கள் வசிக்கின்றனர் என்று கூறவில்லை.
உலகம் மற்றும் பிரம்மாண்டம் தனித்தனியாகும். ஆத்மாக்கள் நிர்வாணதாமத்தில் வசிக்கின்றார்கள். அதற்கு
சாந்தி தாமம் என்று கூறப்படுகிறது. அது அனைவருக்கும் பிடித்திருக்கின்றது. அதனுடைய உண்மையான
பெயர் சாந்தி தாமம் அல்லது நிர்வாணதாமம் ஆகும். ஆத்மாவின் சொரூபம் அமைதியாகும். ஒன்று சாந்திதாமம்,
இன்னொன்று சைகையின் உலகம் மற்றும் இது பேசும் உலகம் ஆகும். சைகையின் உலகத்தில் அதிகம்
இருக்க வேண்டியதில்லை. சாந்தி தாமத்தில் நிறைய பேர் வசிக்க வேண்டி இருக்கின்றது. வேறு எந்த இடமும்
இல்லை. ஆத்மா பாபாவையோ வீட்டையோ நினைக்கும் பொழுது மேலே நினைக்கின்றது. இடையில்
இருக்கும் தாமத்தை உங்களைத் தவிர வேறு யாரும் அறியவில்லை. மனிதர்களுக்கு இவ்வளவு ஞானம்
இல்லை. பிரம்மா, விஷ்ணு, சங்கர் சூட்சும வதனத்தில் இருக்கிறார் என்று மட்டும் கூறுகிறார்கள். மற்றபடி
அவர்களுடைய தொழிலைப் பற்றி எதுவும் தெரியவில்லை. 84 பிறவிகள் எடுக்கின்றார்கள். பிரம்மாவிலிருந்து
விஷ்ணு, விஷ்ணுவிலிருந்து பிரம்மா. இதுவே லீப் யுகம் ஆகும். சிறிய காலம் ஆகும். புருஷோத்தம மாதம்
என்று கூறுவதைப் போன்று ஆகும். இது உங்களை வைரம் போன்று உயர்ந்தவர்களாக மாற்றுவதற்கான
பிறவியாகும். சூத்திரனிலிருந்து பிராமணன் ஆவது அனைத்தையும் விட உயர்ந்ததாகும். பிராமணன் ஆகின்றீர்கள்
என்றால் தாத்தாவின் சொத்தை அடைவதற்கு உரிமையானவர்கள் ஆகிறீர்கள்.
குழந்தைகளே! எப்பொழுதும் மன்மனாபவ என பாபா குழந்தைகளுக்கு கூறுகின்றார். பாபாவின் செய்தியை
அனைவருக்கும் கொடுத்துக் கொண்டேயிருங்கள். பாபாவிற்குத்தான் தூதுவர் என்று கூறுப்படுகின்றது. வேறு
யாருக்கும் தூதுவர் என்று கூற முடியாது. அவர்களோ வந்து தர்மத்தை உருவாக்குகின்றார்கள். தூதுவர்
ஒருவரே. அவரே வந்து உங்களுக்கு தூய்மையாவதற்கான செய்தியை அளிக்கிறார். அவர்கள் தர்மத்தை
ஸ்தாபனை செய்வதற்காக வருகிறார்கள். அவர்கள் யாரும் திரும்ப அழைத்துச் செல்லும் வழிகாட்டி கிடையாது.
அவரோ ஒரே ஒரு சத்குரு சத்கதி அளிப்பவர் ஆவார். உண்மையைப் பேசக்கூடியவர் உண்மையான வழியை
காட்டக்கூடியவர் ஒரே ஒரு பரம்பிதா சிவனே ஆவார். எனவே மிகவும் குப்தமாக குழந்தைகள் உழைக்க
வேண்டும். இப்போது நாம் இந்த தேகத்தை மறந்து ஒரு தந்தையை நினைக்க வேண்டும் என நீங்கள்
அறிகிறீர்கள். சரீரத்தை விட்டுவிட்டால் முழு உலகமும் விடுபட்டு விடும். ஆத்மா தனியாகி விடுகிறது. ஆத்ம
உணர்வில் வந்தால் வேறு எந்த நண்பர்கள் உறவினர்கள் நினைவில் வரமாட்டார்கள் என பாபா கூறுகின்றார்.
நாம் ஆத்மாக்கள் நாம் பாபாவுடன் சென்றுவிடுவோம். நீங்கள் என்னிடம் எப்படி வரமுடியும் என பாபா
ஆலோசனை வழங்குகின்றார். இந்த பாபாவும் புகழ் பெற்றவர் ஆவார். இவர் மூலமாக பாபா அனைத்து
ஆத்மாக்களுக்கும். வழிகாட்டியாகி கொசுக்கூட்டம் போன்று அழைத்துச் செல்கின்றார். இந்த உண்மையான
ஞானம் குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் மட்டுமே இருக்கின்றது. உங்களை பாண்டவ சேனை என்றும்
கூறுகின்றார்கள். பாண்டவ பதி, சுயம் சாட்சாத் பரம் பிதா பரமாத்மா ஆவார். அவரே குழந்தைகளாகிய
உங்களுக்கு டிரில்லை கற்றுக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார். போன கல்பத்தைப் போன்றே வினாசம்
நடக்கும் பொழுது அனைத்து ஆத்மாக்களும் உடலை விட்டு விட்டு சென்று விடுவர். சத்யுகத்தில் சில
ஆத்மாக்களே இருப்பதால் ஒரே இராஜ்யம் இருக்கின்றது. இப்போது பல்வேறாக இருக்கின்றது. மீண்டும்
29.08.2016
(3/4)
ஒன்றாக மாறும். இந்த ஞானத்தை முழு நாளும் புத்தியில் நினைக்க வேண்டும். குழந்தைகள் பட கண்காட்சிகளில்
கூட புரிய வைக்க வேண்டும். புது டெல்லி இருந்த போது புதிய பாரதம் இருந்தது. ஒரே ஒரு ஆதி சனாதன
தேவி தேவதா தர்மம் இருந்தது. இந்து தர்மம் ஆதி சனாதன தர்மம் கிடையாது. நாம் பிராமணரிலிருந்து
தேவதை ஆகின்றோம். இதை மற்ற தர்மத்தினர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். யார் முதலில் வருகிறார்களோ
அவர்களே 84 பிறவிகளை எடுக்கின்றார்கள். இது முற்றிலும் எளிதாகப் புரிந்து கொள்ள வேண்டிய விசயம்
ஆகும். இப்போது குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் இந்த நாடகம் முடியப் போகின்றது என்பது இருக்கின்றது.
அனைத்து நடிகர்களும் வந்துவிட்டனர். 84 பிறவிகள் முடிந்து விட்டது. இப்போது மீண்டும் வீட்டிற்குப் போக
வேண்டும். ஏனென்றால் மிகவும் களைத்துப் போய்விட்டனர் அல்லவா? பக்திமார்க்கம் என்பதே களைப்படையும்
மார்க்கம் (வழி) ஆகும். இப்போது என்னை நினையுங்கள் மற்றவர்களுக்கும் தேகம் உட்பட தேகத்தின்
அனைத்து தர்மங்களையும் விட்டு விட்டு தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தையை நினையுங்கள் என்ற
செய்தியை அளியுங்கள். அசரீரி ஆகினால் தூய்மையாகி விடலாம். ஏனென்றால் இப்போது வீட்டிற்குத் திரும்பிப்
போக வேண்டும். மரணம் எதிரிலேயே உள்ளது.
இங்கே கூட குழந்தைகள் தந்தையிடம் புத்துணர்வு அடைவதற்காக வருகின்றார்கள். பாபா நேரடியாக
குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார் லி குழந்தைகளே தேக உணர்வை விட்டுவிட்டு என்னை மட்டும்
நினையுங்கள். இந்த பழைய உலகம் இப்போது அழியப் போகின்றது. நீங்கள் ஒரு தந்தையை நினைத்து
தூய்மையானால் தூய்மையான உலகத்திற்கு அதிபதியாகி விடலாம். ஒருவேளை முயற்சி செய்யவில்லை
என்றால் பலனும் கிடைக்காது. பிறகு தன்டனையும் அடைய வேண்டியிருக்கும். தங்களின் வருமானத்தை
சேமித்துக் கொண்டே இருங்கள் மற்றும் மற்றவர்களுக்கும் அழைப்பு கொடுங்கள் என்று பாபா கூறுகின்றார்.
பாபாவின் வழியைக் காண்பியுங்கள். குழந்தைகளாகிய நீங்கள் நன்மை செய்யக்கூடியவர் ஆகவேண்டும்.
தன்னுடைய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும். இங்கே உங்களை ஆத்ம
உணர்வுடையவர் ஆக்கப்படுகிறது. மகா மந்திரம் அளிக்கப்படுகிறது. பழமையான யோகத்தை தந்தை தான்
வந்து கற்பித்திருக்கின்றார். இதற்குத் தான் யோக அக்னியினால் பாவம் பஸ்பம் ஆகிவிடும் என்று பாடப்பட்டு
இருக்கின்றது. போன கல்பத்திலும் கூட இதே சைகை கிடைத்துள்ளது. தன்னை ஆத்மா என்று உணர்ந்து
தன்னை நினையுங்கள் என பாபா சைகை அளிக்கின்றார். தங்களுடைய இல்லற விவகாரத்தில் இருங்கள்.
நல்லது. உங்களை சரணடைந்து இருக்கிறோம் என பாடப்பட்டு இருக்கின்றது. யாருக்காவது துக்கம் ஏற்படும்
போது உயர்ந்த சக்தி உடையவர்களிடம் சென்று சரணடைகிறார்கள். இங்கேயோ நடைமுறையில் இருக்கின்றது.
எப்போது நிறைய துக்கத்தை பார்க்கிறார்களோ பொறுத்துக் கொள்ள முடியவில்லையோ வேறு வழி இல்லை
என்ற போது பாபாவிடம் ஓடி வந்து சரணடைகிறார்கள். பாபாவைத் தவிர வேறு யாரும் சத்கதி அளிக்க
முடியாது. பழைய உலகம் அழியப்போகிறது என குழந்கைதள் அறிகிறீர்கள். ஏற்பாடுகள் நடந்து கொண்டு
இருக்கின்றது. இந்த பக்கம் உங்கள் ஸ்தாபனையின் ஏற்பாடு, அந்த பக்கம் அழிவிற்கான ஏற்பாடு நடக்கின்றது.
ஸ்தாபனை ஆகிவிட்டது என்றால் நிச்சயம் அழிவும் ஏற்படும். பாபா ஸ்தாபனை செய்வதற்காக வந்திருக்கின்றார்.
இவர் மூலமாக நிச்சயமாக சொத்தும் கிடைக்கும் என அறிகிறீர்கள். மற்றபடி தூண்டுதலினால் வேலை
நடக்காது. நாங்கள் உங்களின் தூண்டுதலினால் படித்து விடுவோம் என்று ஆசிரியரிடம் கூற முடியாது.
தூண்டுதலினால் அனைத்தும் நடக்கின்றது என்றால் சிவ ஜெயந்தி ஏன் கொண்டாடப்படுகின்றது. தூண்டுதலினால்
செய்யக்கூடியவருக்கு சிவஜெயந்தி கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை. அனைத்து ஆத்மாக்களுக்கும்
ஜெயந்தி இருக்கின்றது. ஆத்மாக்கள் அனைத்தும் உடலில் வருகின்றது. ஆத்மாவும் உடலும் ஒன்றாக இருக்கும்
பொழுது நடிப்பை நடிக்கின்றது. ஆத்மாவின் சுய தர்மமே அமைதியாகும். அதில் தான் ஞானம் தாரணை
ஆகின்றது. ஆத்மா தான் நல்ல கெட்ட சம்ஸ்காரங்களை எடுத்துச் செல்கிறது. பாபா சொர்க்கத்தைப் படைப்பவர்
ஆவார். அங்கே தூய்மை தான் இருக்கின்றது. அசுத்தத்தின் பெயர் அடையாளம் இல்லை. இது விஷக்கடல்
ஆகும். எவ்வளவு தெளிவாகப் புரிய வைத்தாலும் புரிய வில்லை. ஆனால் நீங்கள் யாரையும் குற்றம்
சொல்வதில்லை. நாடகத்தில் கட்டுப்பாட்டில் அனைவரும் கட்டுப்பட்டு இருக்கின்றனர்.
ஏணிப்படியில் மேலிருந்து கீழே இறங்கி வந்துவிட்டோம் என புரிந்து கொள்கிறீர்கள். நாடகத்தின் படி
நாம் இறங்கத்தான் வேண்டும். பிறகு இப்போது ஏறுவதற்கு முயற்சி செய்யுங்கள் என பாபா கூறுகின்றார்.
ஆனால் யாருடைய அதிர்ஷ்டத்தில் இல்லையோ அவர்கள் இவ்வாறு கூறகின்றார்கள். யார் இவ்வாறு
கூறுகின்றார்களோ அவர்கள் மூலம் இவர்கள் அதிர்ஷ்டத்தில் இல்லை என்று புரிந்து கொள்ளப்படுகிறது. 2லி4
வருடங்கள் போகப் போக விழுந்து விடுகிறார்கள். நாம் பெரிய தவறு செய்து விட்டோம் என்று உணருகின்றார்கள்.
பெரிய அடி பட்டு விட்டது. இது கூட அரை கல்பத்தின் நோயாகும். குறைந்தது இல்லை. அரை கல்பத்தில்
நேயாளிகளாக இருக்கின்றனர். போகியானதால் நோயாளி ஆகிவிட்டனர். எனவே பாபா வந்து முயற்சி
செய்விக்கிறார். கிருஷ்ணரை யோகேஷ்வர் என்கின்றார்கள். இச்சமயம் நீங்களே உண்மையிலும் உண்மையான
29.08.2016
(4/4)
யோகி. யோகேஷ்வர் உங்களுக்கு யோகத்தை கற்பிக்கின்றார். நீங்கள் ஞான ஞானேஷ்வர், பிறகு இராஜ
இராஜேஸ்வர் ஆகிறீர்கள். ஞானத்தினால் நீங்கள் செல்வந்தராக ஆகிறீர்கள். யோகத்தினால் நோயற்றவராக சதா
ஆரோக்கியமானவராக ஆகிறீர்கள். அரைக்கல்பத்திற்கு உங்களுடைய துக்கமும் விலகிப்போகின்றது என்றால்
அதற்காக எவ்வளவு முயற்சி செய்ய வேண்டும். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை
வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம் :
1. தூய்மையாவதற்கு அசரீரி ஆகும் பயிற்சி செய்ய வேண்டும். ஒரு தந்தையை நினையுங்கள்.
தேகம் உட்பட அனைத்தையும் மறந்து விடுங்கள் என்ற செய்தியை அனைவருக்கும் கொடுக்க
வேண்டும்.
2. . யோகேஷ்வர் பாபாவிடம் யோகத்தைக் கற்றுக் கொண்டு உண்மையிலும் உண்மையான
யோகி ஆக வேண்டும். ஞானத்தினால் செல்வந்தர் மற்றும் யோகத்தினால் நோயற்றவராக
சதா ஆரோக்கியமானவராக ஆகவேண்டும்.
வரதானம் : ஒவ்வொரு போதனையையும் சொரூபத்தில் கொண்டு வந்து நிரூபணம்
கொடுக்கக்கூடிய நல்ல குழந்தை அல்லது சாட்சாத்கார மூர்த்தி ஆகுக.
எந்த குழந்தைகள் போதனைகளை அப்படியே புத்தியில் வைக்காமல் அவைகளை சொரூபத்தில் கொண்டு
வருகிறார்களோ அவர்களே ஞான சொரூபம், அன்பு சொரூபம், ஆனந்த சொரூப நிலையில் நிலைத்திருக்கிறார்கள்.
யார் ஒவ்வொரு பாயிண்டையும் சொரூபத்தில் கொண்டு வருகிறார்களோ அவர்களே பாயிண்ட் ரூபத்தில்
நிலைத்திருக்க முடியும். பாயிண்டை சிந்தித்தல் அல்லது வர்ணனை செய்தல் எளிதாகும். ஆனால் சொரூபம்
ஆகி மற்ற ஆத்மாக்களையும் சொரூபத்தில் அனுபவம் செய்வித்தலே நிரூபணம் அளித்தல் ஆகும். அதாவது
நல்ல குழந்தை அல்லது சாட்சாத்கார மூர்த்தி ஆவதாகும்.
சுலோகன் : ஏகாக்ரதா (ஒருமுகப்படுத்துதல்) சக்தியை அதிகரித்தால்
மனம், புத்தி அலைவது நின்று விடும்.
,,
(1/4)
30
.08.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! இந்த சங்கமயுகமே ஏறும் கலைக்கான யுகம் என்ற நாடகத்தின்
ஆழமான ரகசியத்தை நீங்கள் அறிந்துள்ளீர்கள். சத்யுகத்திலிருந்து கலைகள் குறைந்துக்
கொண்டே போகின்றன.
கேள்வி: எல்லாவற்றையும் விட உத்தமமான சேவை எது? மேலும் அந்த சேவையை யார்
செய்கிறார்கள்?
பதில்: பாரதத்தை சொர்க்கமாக ஆக்குவது, ஏழையை செல்வந்தராக ஆக்குவது, பதீதர்களை பாவனமாக
ஆக்குவது லி இது எல்லாவற்றையும் விட உத்தமமான சேவையாகும். இப்பேர்ப்பட்ட சேவை ஒரு தந்தையைத்
தவிர வேறு யாருமே செய்ய முடியாது. தந்தை அப்பேர்ப்பட்ட மகான் சேவை செய்துள்ளார். அதனால் தான்
குழந்தைகள் அவரை கௌரவப் படுத்துகிறார்கள். அனைத்திற்கும் முதலாக சோமநாத்தில் கோவில் கட்டி
அவருக்கு பூஜை செய்கிறார்கள்.
பாடல்: கடைசியில் அந்த நாளும் வந்தது இன்று .. .. ..
ஓம் சாந்தி. இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் இந்த பாட்டைக் கேட்டீர்கள். எப்படி
ஆத்மா மறைமுகமாக உள்ளது மற்றும் சரீரம் பிரத்யட்சமாக (வெளிப்படையாக) உள்ளது. ஆத்மாவை இந்த
கண்களால் பார்க்க முடியாது. மறைவாய் உள்ளது. அவசியம் இருக்கிறது. ஆனால் இந்த உடலால் மூடப்பட்டுள்ளது.
எனவே ஆத்மா மறைவாக உள்ளது என்று கூறப்படுகிறது. நான் நிராகாரமானவன் ஆவேன். இங்கு சாகாரத்தில்
வந்து மறைவாக ஆகி உள்ளேன் என்று சுயம் ஆத்மா கூறுகிறது. ஆத்மாக்களின் நிராகாரி உலகமாகும்.
அங்கோ மறைவு என்ற விஷயம் கிடையாது. பரமபிதா பரமாத்மா கூட அங்கு இருக்கிறார். அவருக்கு சுப்ரீம்
என்று கூறப்படுகிறது. உயர்ந்ததிலும் உயர்ந்த ஆத்மா. இந்த ஸ்தூல உலகத்திற்கு அப்பாற்பட்டு இருப்பவர்
பரமபிதா பரமாத்மா ஆவார்.எப்படி நீஙகள் மறைவாக இருக்கிறீர்கள். நான் கூட மறைமுகமாக வர வேண்டி
உள்ளது என்று தந்தை கூறுகிறார். நான் கர்ப்ப சிறையில் வருவது இல்லை. எனது பெயர் ஒரே ஒரு சிவன்
என்பதே நடந்து கொண்டிருக்கிறது. நான் இவருக்குள் வருகிறேன். அதனால் என் பெயர் ஒன்றும் மாறுவதில்லை.
இவருடைய ஆத்மாவின் சரீரத்திற்கு பெயர் மாறுகிறது. என்னை சிவன் என்றே கூறுகிறார்கள். அனைத்து
ஆத்மாக்களின் தந்தை ஆவேன். எனவே ஆத்மாக்களாகிய நீங்கள் இந்த சரீரத்தில் மறைவாக இருக்கிறீர்கள்.
இந்த சரீரத்தின் மூலமாக கர்மம் செய்கிறீர்கள். நான் கூட மறைவாக இருக்கிறேன். நான் ஆத்மா, இந்த
உடலால் மூடப்பட்டிருக்கிறேன் என்ற இந்த ஞானம் குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது கிடைத்துக்
கொண்டிருக்கிறது. ஆத்மா மறைவாக உள்ளது. சரீரம் வெளிப்படையாகத் தெரிகிறது. நான் கூட அசரீரி
ஆவேன். தந்தை மறைவாக இருப்பவர். இந்த சரீரத்தின் மூலமாக கூறுகிறார். நீங்கள் கூட மறைவாக
இருக்கிறீர்கள். சரீரம் மூலமாக கேட்கிறீர்கள். பாபா வந்து விட்டுள்ளார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
தந்தை பாரதத்தை மீண்டும் ஏழையிலிருந்து செல்வந்தராக ஆக்குவதற்காக வருகிறார். நமது பாரதம் ஏழையாகும்
என்று நீங்கள் கூறுவீர்கள். எல்லோரும் அறிந்துள்ளார்கள். ஆனால் நமது பாரதம் எப்பொழுது செல்வந்த
நாடாக இருந்தது? எப்படி இருந்தது என்பது அவர்கள் யாருக்குமே தெரியவே தெரியாது. நமது பாரதமோ
மிகவும் செல்வம் நிறைந்ததாக இருந்தது என்று குழந்தைகளாகிய உங்களுக்கு மிகுந்த போதை உள்ளது.
துக்கத்தின் விஷயமே இருக்கவில்லை. சத்யுகத்தில் வேறு எந்த தர்மமும் இருக்கவில்லை. ஒரே ஒரு தேவி
தேவதா தர்மம் இருந்தது. இது யாருக்குமே தெரியாது. இந்த உலக சரித்திரம் பூகோளம் பற்றி யாருக்குமே
தெரியாது. நமது பாரதம் மிகவும் செல்வந்த நாடாக இருந்தது என்பதை இப்பொழுது நீங்கள் நல்ல முறையில்
புரிந்துள்ளீர்கள்.இப்பொழுது மிகவும் ஏழையாக உள்ளது. இப்பொழுது மீண்டும் தந்தை செல்வந்தராக ஆக்க
வந்துள்ளார். பாரதம் சத்யுகத்தில் மிகவுமே செழிப்பாக இருந்தது. அப்பொழுது தேவி தேவதைகளின் இராஜ்யம்
இருந்தது. பிறகு அந்த இராஜ்யம் எங்கே போயிற்று என்பது யாருக்கும் தெரியாது. ரிμ முனிவர்கள் கூட
நாங்கள் படைப்பவர் மற்றும் படைப்பை தெரியாது உள்ளோம் என்று கூறுகிறார்கள். சத்யுகத்தில் இந்த தேவி
தேவதைகளுக்கு படைப்பவர் மற்றும் படைப்பின் ஞானம் இருக்கவில்லை என்று தந்தை கூறுகிறார். முதல்
இடை கடையை அறியாமல் உள்ளார்கள். நாங்கள் படி இறங்கி பாதாளத்திற்குச் சென்று விடுவோம் என்ற
ஞானம் ஒரு வேளை அவர்களுக்கு இருந்திருந்தது என்றால் அரசாட்சியின் சுகம் கூட இல்லாமல் போய்
விடும்.கவலை ஏற்பட்டு விடும்.
நாம் தமோபிரதான நிலையிலிருந்து சதோபிரதானமாக எப்படி ஆகலாம் என்று இப்பொழுது உங்களுக்கு
கவலை ஏற்பட்டுள்ளது. ஆத்மாக்களாகிய நாம் நிராகாரி உலகத்தில் இருந்திருந்தோம். அங்கிருந்து பிறகு
எப்படி சுகதாமத்திற்கு வந்தோம் லி இதுவும் ஞானம் இருக்கிறது. நாம் இப்பொழுது ஏறும் கலையில் இருக்கிறோம்.
30.08.2016
(2/4)
இது 84 பிறவிகளின் படி ஆகும்.இதற்கு இடையில் என்ன ஆகிறது என்பதையும் நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
சத்யுகத்தில் எல்லோருமே வரமாட்டார்கள். நாடகப்படி ஒவ்வொரு நடிகரும் வரிசைக்கிரமமாக அவரவர் நேரத்தில்
வந்து பாகத்தை ஏற்று நடிப்பார்கள்.
ஏழைப்பங்காளன் என்று யாருக்கு கூறப்படுகிறது என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள்
அறிந்துள்ளீர்கள். உலகத்திற்கு தெரியாது. கடைசியில் அந்த நாளும் இன்று வந்தது.. என்ற பாடலும் கேட்டீர்கள்.
இவை எல்லாமே பக்தி ஆகும். பகவான் எப்பொழுது வந்து பக்தர்களாகிய நம்மை இந்த பக்தி மார்க்கத்திலிருந்து
விடுவித்து சத்கதியில் அழைத்துச் செல்கிறார் என்பதையும் புரிந்துள்ளீர்கள். இராம இராஜ்யம், இராவண
இராஜ்யம் எந்த பொருளின் பெயர் என்பது கூட எந்த மனிதருக்கும் தெரியாது. பாபா மீண்டும் இந்த சரீரத்தில்
வந்து விட்டுள்ளார் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துள்ளீர்கள். சிவஜெயந்தி கூட
கொண்டாடுகிறார்கள். எனவே சிவன் அவசியம் வருகிறார். கிருஷ்ணருடைய உடலில் வருகிறேன் என்று கூட
கூறுவதில்லை. இல்லை. கிருஷ்ணரின் ஆத்மா 84 பிறவிகள் எடுத்துள்ளார் என்று தந்தை கூறுகிறார். முதல்
நம்பரில் இருந்தவர் இப்பொழுது கடைசியில் இருக்கிறார். தத்லித்வம் நீங்களும் அதே போல. நானோ வருவதே
சாதாரண உடலில். நீங்கள் எப்படி 84 பிறவிகள் அனுபவிக்கிறீர்கள் என்பதை உங்களுக்கு வந்து கூறுகிறேன்.
இச்சமயத்தில் ஒருவர் கூட தங்களை தேவதா தர்மத்தினர் என்று நினைப்பதில்லை. ஏனெனில் சத்யுகத்தை
மிகவும் தூரத்திற்கு எடுத்துச் சென்று விட்டார்கள். கல்பத்தின் ஆயுள் இலட்சக்கணக்கான வருடங்கள் என்று
எழுதி விட்டுள்ளார்கள். உண்மையில் நாடகத்தின் சரித்திரமோ மிகவும் சிறியதாகும். இதில் ஒரு தர்மத்தின்
சரித்திரம் 500 வருடங்கள். மற்றொரு தர்மத்தின் சரித்திரம் 2500 வருடங்கள். உங்களுடைய சரித்திரம் 5
ஆயிரம் வருடங்கள். தேவதா தர்மத்தினர் தான் சொர்க்கத்தில் வருவார்கள். மற்ற தர்மங்களோ வருவதே
பின்னால் தான். தேவதா தர்மத்தினர் தான் மற்ற தர்மங்களில் மாற்றம் அடைந்து போயிருக்கிறார்கள். நாடகப்படி
பிறகும் இவ்வாறே மாறி போய் விடுவார்கள். பிறகு அவரவர் தர்மங்களில் திரும்பி வருவார்கள். குழந்தைகளே
நீங்களோ உலகத்தின் அதிபதியாக இருந்தீர்கள் என்று தந்தை புரிய வைக்கிறார். பாபா சொர்க்கத்தை ஸ்தாபனை
செய்பவர் ஆவார் என்றால் நாம் ஏன் சொர்க்கத்தில் இருக்கக் கூடாது என்று நீங்கள் இப்பொழுது
புரிந்துள்ளீர்கள்.தந்தையிடமிருந்து நாம் அவசியம் ஆஸ்தி பெறுவோம். ஆக இதிலிருந்து இவர் நமது தர்மத்தினர்
ஆவார் என்பது நிரூபணமாகிறது. யார் நமது தர்மத்தினராக இல்லையோ, அவர் வரவே மாட்டார். அந்நிய
தர்மத்தில் நாம் ஏன் செல்ல வேண்டும் என்பார். சத்யுகமான புது உலகத்தில் தேவதைகளுக்கு நிறைய சுகம்
இருந்தது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். தங்க மாளிகைகள் இருந்தன. சோமநாத்தின்
கோவிலில் எவ்வளவு தங்கம் இருந்தது. இது போன்று வேறு எந்த கோவிலும் இருப்பதே இல்லை.அதில்
நிறைய வைரங்கள், வைடூரியங்கள் இருந்தன.புத்தர் ஆகியோரினுடையது ஒன்றும் வைரம், வைடூரியங்களின்
அரண்மனை இருக்காது. குழந்தைகளாகிய உங்களை எந்த தந்தை இவ்வளவு உயர்ந்தவராக ஆக்கினாரோ
அவர் மீது நீங்கள் எவ்வளவு மதிப்பு வைத்துள்ளீர்கள். யார் நல்ல கர்மங்கள் செய்து விட்டு போகிறார்களோ
அவர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள். எல்லாவற்றையும் விட நல்ல கர்மம் பதீத பாவனரான தந்தை தான் வந்து
செய்கிறார் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். எல்லாவற்றையும் விட உத்தமத்திலும் உத்தமமான
சேவை எல்லையில்லாத தந்தை வந்து செய்கிறார் என்று உங்கள் ஆத்மா கூறுகிறது. நம்மை ஏழையிலிருந்து
செல்வந்தராக, ஆண்டியிலிருந்து இளவரசனாக ஆக்கி விடுகிறார். யார் பாரதத்தை சொர்க்கமாக ஆக்குகிறாரோ
அவரைக் கூட யாரும் மதிப்பதில்லை. சோமநாத் கோயில் உயர்ந்ததிலும் உயர்ந்த கோவிலாக பாடப்பட்டுள்ளது
என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அதை கொள்ளையடித்து எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள். இலட்சுமி
நாராயணரின் கோவிலை ஒரு பொழுதும் யாரும் கொள்ளை அடிக்கவில்லை. சோமநாத்தின் கோவிலை
கொள்ளையடித்துள்ளார்கள். பக்தி மார்க்கத்தில் இவர்கள் மிகவும் செல்வந்தர்களாக இருப்பார்கள். இராஜாக்களில்
கூட வரிசைக்கிரமமாக இருப்பார்கள் அல்லவா? யார் உயர்ந்த பதவி உடையவர்களாக இருப்பார்களோ
அவர்களுக்கு குறைந்த பதவி உடையவர்கள் மதிப்பு வைக்கிறார்கள். தர்பாரில் கூட வரிசைக்கிரமமாக
அமருகிறார்கள். பாபாவோ அனுபவம் உடையவர் ஆவார் அல்லவா? இங்கு பதீத இராஜாக்களின் தர்பார்
இருக்கிறது. பாவன இராஜாக்களின் தர்பார் எப்படி இருக்கும்! அவர்களிடம் அவ்வளவு செல்வம் இருக்கிறது
என்றால், அவர்களுடைய வீடு கூட அவ்வளவு நன்றாக இருக்கும். பாபா நமக்கு படிப்பித்துக் கொண்டிருக்கிறார்
என்பது இப்பொழுது உங்களுக்குத் தெரியும். சொர்க்கத்தின் ஸ்தாபனை செய்வித்துக் கொண்டிருக்கிறார். நாம்
சொர்க்கத்தின் மகாராஜா மகாராணி ஆகிறோம். பிறகு நாம் கீழே விழுகிறோம். பிறகு நாம் முதன் முதலில்
சிவபாபாவின் பூசாரி ஆகிடுவோம். யார் நம்மை சொர்க்கத்தின் அதிபதியாக ஆக்கினாரோ அவரை நாம் பூஜை
செய்வோம். அவர் நம்மை மிகவும் செல்வந்தராக ஆக்குகிறார். இப்பொழுது பாரதம் எவ்வளவு ஏழையாக
உள்ளது. இதற்கு முன்பு இவ்வளவு ஏழையாக இருக்கவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். எந்த
பூமியை 500 ரூபாய்க்கு வாங்கி இருந்தோமோ, அது இன்று 5 ஆயிரம் ரூபாய்க்குக் கூட கிடைப்பதில்லை.
அங்கோ பூமிக்கு விலையே இருக்காது. யாருக்கு எவ்வளவு வேண்டுமோ, அவ்வளவு எடுத்துக் கொள்ளலாம்.
30.08.2016
(3/4)
ஏராளமான பூமி இருக்கும். இனிமையான நதிகள் மீது உங்களுடைய அரண்மனைகள் இருக்கும்! மனிதர்கள்
மிகவும் குறைவாக இருப்பார்கள். இயற்கை அடிமையாக இருக்கும். பழங்கள் பூக்கள் மிகவும் நன்றாகக்
கிடைத்துக் கொண்டே இருக்கும். இப்பொழுது நீங்கள் எவ்வளவு உழைக்கிறீர்கள். ஆனால் வறண்டு விடும்
பொழுது தானியம் கிடைப்பதில்லை.எனவே பாடல் கேட்டவுடனேயே உங்களுக்கு புல்லரித்துப் போய் விட
வேண்டும். தந்தைக்கு ஏழைப்பங்காளன் என்று கூறுகிறீர்கள். இப்பொழுது அர்த்தம் புரிந்தது அல்லவா? யாரை
செல்வந்தராக ஆக்குகிறார். அவசியம் யார் இங்கு வருகிறார்களோ, அவர்களை செல்வந்தராக ஆக்குபவர்
அல்லவா? நாம் பாவன நிலையிலிருந்து பதீதமாக ஆவதில் 5 ஆயிரம் வருடங்கள் பிடித்தன என்பதை
குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். இப்பொழுது பின்னர் சட்டென்று பாபா பதீத நிலையிலிருந்து
பாவனமாக ஆக்குகிறார். உயர்ந்ததிலும் உயர்ந்தவராக ஆக்குகிறார். ஒரு நொடியில் ஜீவன் முக்தி கிடைத்து
விடுகிறது. பாபா நாங்கள் உங்களுடையவர் ஆவோம் என்று கூறுகிறார்கள் .குழந்தைகளே நீங்கள் உலகின்
அதிபதி ஆவீர்கள் என்று தந்தை கூறுகிறார். பையன் பிறந்த உடனேயே வாரிசு ஆகி விடுகிறார். எவ்வளவு
குμ ஏற்படுகிறது. ஆனால் பெண் குழந்தையைப் பார்த்த உடன் முகமே தொங்கிப் போய் விடுகிறது. இங்கோ
எல்லா ஆத்மாக்களுமே ஆண் குழந்தைகள் ஆவார்கள்.நாம் சொர்க்கத்தின் அதிபதி ஆகி விட்டோம். நாம் 5
ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் சொர்க்கத்தின் அதிபதியாக இருந்தோம் என்பது இப்பொழுது தெரிய
வந்துள்ளது .பாபா இது போல ஆக்கி இருந்தார். சிவஜெயந்தி கூட கொண்டாடுகிறார்கள். ஆனால் அவர்
எப்பொழுது வந்திருந்தார் என்பது தெரியாமல் இருக்கிறார்கள். இலட்சுமி நாராயணரின் இராஜ்யம் எப்பொழுது
இருந்தது, எதுவுமே தெரியாது. உண்மையில் பாரதத்தின் ஜனத்தொகை எல்லாவற்றையும் விட அதிகமாக
இருக்க வேண்டும். பாரதத்தினுடைய பூமி எல்லாவற்றையும் விட பெரியதாக இருக்க வேண்டும். இலட்சக்கணக்கான
வருடங்களாக இருந்தது என்றால் நிறைய பூமி வேண்டும். முழு உலகத்தின் நிலம் கூட போதுமானதாக
இருக்காது. இலட்சக்கணக்கான வருடங்களில் எத்தனை மனிதர்கள் பிறந்து விடுவார்கள். கணக்கற்ற மனிதர்கள்
ஆகி விடுவார்கள். அவ்வளவு பேரோ இல்லை. இந்த எல்லா விஷயங்களையும் தந்தை வந்து புரிய வைக்கிறார்.
மனிதர்கள் கேட்கும் பொழுது இந்த விஷயங்களை ஒரு பொழுதும் கேட்பதில்லை, சாஸ்திரங்களில் படிக்கவும்
இல்லை என்று கூறுகிறார்கள்.இதுவோ அதிசயமான விஷயங்கள் ஆகும்.இப்பொழுது குழந்தைகளாகிய
உங்களுடைய புத்தியில் முழு சக்கரத்தின் ஞானம் உள்ளது. இவர் அநேக பிறவிகளுக்கு கடைசியில் இப்பொழுது
பதீத ஆத்மாவாக உள்ளார். யார் சதோபிரதானமாக இருந்தாரோ அவரே இப்பொழுது தமோபிரதானமாக
இருக்கிறார். மீண்டும் சதோபிரதானமாக ஆக வேண்டும். ஆத்மாக்களாகிய உங்களுக்கு இப்பொழுது அறிவுரை
கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆத்மா சரீரத்தின் மூலமாக கேட்கிறது. அப்பொழுது சரீரம் (சொகுசாக)
ஊஞ்சலாடுகிறது .ஏனென்றால் ஆத்மா கேட்கிறது அல்லவா?உண்மையில் ஆத்மாவாகிய நான் 84 பிறவிகள்
எடுத்துள்ளேன். அவசியம் 84 தாய் தந்தையர் கிடைத்திருக்கக் கூடும். இது கூட கணக்கு தான் இல்லையா?
84 பிறவிகள் எடுக்கிறார்கள் பின் குறைவாக பிறவி எடுக்கும் மற்றவர்கள் கூட இருப்பார்கள் என்பது புத்தியில்
வருகிறது. குறைந்த பட்சம், அதிக பட்சம் என்ற கணக்கு இருக்கும் அல்லவா? சாஸ்திரங்களில் என்னவெல்லாம்
எழுதி விட்டுள்ளார்கள் என்பதை தந்தை வந்து புரிய வைக்கிறார் .உங்களுக்காக பிறகும் 84 பிறவிகள்
கூறுகிறார்கள். எனக்கோ கணக்கற்ற எண்ணிக்கையற்ற பிறவிகளை கூறி விட்டுள்ளார்கள். அணு அணுவிலும்
அவ்வளவு........ எங்கு பார்த்தாலும் நீயே நீ தான்.... கிருஷ்ணரே கிருஷ்ணர்... மதுரா பிருந்தாவனத்தில்
கிருஷ்ணர் சர்வ வியாபி (எங்கும் நிறைந்தவர்) என்று கூறுகிறார்கள்.இராதை வழியினர்.பிறகு இராதையே
இராதை என்பார்கள்.நாங்கள் இராதா சுவாமி என்று கூறுகிறார்கள். கிருஷ்ண ஸ்வாமி என்பவர்கள் வேறு.அவர்கள்
ராதையை ஏற்றுக் கொள்கிறார்கள். எங்கு பார்த்தாலும் இராதையே இராதை.நீயும் இராதை நானும் ராதை.
உண்மையில் நான் ஏழைப்பங்காளன் ஆவேன் அல்லவா என்று இப்பொழுது தந்தை வந்து புரிய
வைக்கிறார். பாரதம் தான் எல்லாவற்றையும் விட செல்வந்த நாடாக இருந்தது. இப்பொழுது எல்லாவற்றையும்
விட ஏழையாக ஆகி விட்டுள்ளது. எனவே நான் பாரதத்தில் தான் வர வேண்டி இருந்தது. ஏற்கனவே இது
அமைந்துள்ள, அமைக்கப்பட்ட நாடகம் ஆகும்.இதில் சிறிதளவு கூட வித்தியாசம் ஏற்பட முடியாது.இது மிகப்
பெரிய நாடகமாகும்.டிராமாவில் எந்த படம் பிடிக்கப்படுகிறதோ அது மிகச் சரியாக அவ்வாறே திரும்ப நடைபெறும்.
நாடகம் பற்றி கூட தெரிந்திருக்க வேண்டும். டிராமா என்றால் டிராமா. அது எல்லைக்குட்பட்ட டிராமா ஆகும்.
இது எல்லையில்லாத டிராமா. இதனுடைய முதல் இடை கடை பற்றி யாருக்கும் தெரியாது. எனவே ஏழை
பங்காளர் என்று நிராகார பகவானைத் தான் ஏற்றுக் கொள்வார்கள். கிருஷ்ணரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
கிருஷ்ணரோ செல்வந்தராக சத்யுகத்தின் இளவரசர் ஆகிறார். பகவானுக்கோ தனக்கென்று உடல் கிடையாது.
ஆம், வந்து குழந்தைகளாகிய உங்களை செல்வந்தராக ஆக்குகிறார். உங்களுக்கு இராஜயோகத்தின் கல்வி
அளிக்கிறார் .அவர்கள் படிப்பின் மூலம் வழக்கறிஞர் ஆகியோராக ஆகிறார்கள். பிறகு சம்பாதிக்கிறார்கள்.
தந்தை கூட உங்களுக்கு இப்பொழுது படிப்பிக்கிறார். நீங்கள் வருங்காலத்தில் நரனிலிருந்து நாராயணர் ஆகிறீர்கள்.
உங்களுக்கு ஜன்மமோ ஆகும் அல்லவா? அப்படியின்றி சொர்க்கம் ஏதோ சமுத்திரத்திலிருந்து வெளி வரும்
30.08.2016
(4/4)
என்பதல்ல. கிருஷ்ணர் கூட ஜன்மம் எடுத்தார் அல்லவா? கம்சபுரி ஆகியவையோ அந்த சமயத்தில்
இருக்கவில்லை. கிருஷ்ணருடைய பெயர் எவ்வளவு பாடப்படுகிறது. அவருடைய தந்தையின் பெயரே இல்லை.
அவருடைய தந்தை எங்கே இருக்கிறார்? நிச்சயம் இராஜாவின் குழந்தையாக இருப்பார் அல்லவா? அங்கு
பெரிய இராஜாவின் வீட்டில் ஜன்மம் ஆகிறது. ஆனால் அவர் பதீதமான இராஜாவாக இருக்கும் காரணத்தால்
அவருடைய பெயர் இருக்குமா என்ன? கிருஷ்ணர் இருக்கும் பொழுது பதீதமானவர்கள் கூட கொஞ்சம் பேர்
இருப்பார்கள். அவர்கள் முற்றிலும் இல்லாது போய் விடும் பொழுது, அவர் சிம்மாசனத்தில் அமருகிறார். பிறகு
இராஜ்யத்தை எடுத்துக் கொண்டு விடுகிறார். அப்பொழுது தான் அவரது சகாப்தம் ஆரம்பமாகிறது. இலட்சுமி
நாராயணரிலிருந்து சகாப்தம் ஆரம்பமாகிறது. நீங்கள் முழு கணக்கும் எழுதுகிறீர்கள். இவர்களுடைய இராஜ்யம்
இவ்வளவு காலம். பிறகு இவர்களுடையது. இவ்வளவு காலமாக கல்பத்தின் ஆயுள் நீண்டதாக இருக்கவே
முடியாது என்பதை மனிதர்கள் புரிந்து கொண்டு விடுவார்கள்.5 ஆயிரம் வருடங்களின் முழு கணக்கு
இருக்கிறது.நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட
செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும்
காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. படைப்பவர் மற்றும் படைப்பின் ஞானத்தை புத்தியில் இருத்தி சதோபிரதானம் ஆவதற்கான
முயற்சி செய்ய வேண்டும். நாம் சதோபிரதானமாக அவசியம் ஆக வேண்டும் என்ற ஒரே
ஒரு கவலை மட்டும் கொள்ள வேண்டும்.
2. இந்த எல்லையில்லாத நாடகத்தை புத்தியிலிருத்தி அளவற்ற குμயில் இருக்க வேண்டும்.
தந்தைக்கு சமமாக மதிப்பைப் பெறுவதற்காக பதீதர்களை பாவனமாக ஆக்கும் சேவை செய்ய
வேண்டும்.
வரதானம்:அனைத்து ஆத்மாக்கள் மீதும் சிநேகத்தின் ஆட்சி புரியும் உலக இராஜ்ய
அதிகாரி ஆவீர்களாக.
எந்த குழந்தைகள் நிகழ்காலத்தில் அனைத்து ஆத்மாக்களின் இதயங்கள் மீது சிநேகத்தின் ஆட்சி
புரிகிறார்களோ அவர்களே வருங்காலத்தில் உலக இராஜ்யத்தின் அதிகாரத்தைப் பெறுகிறார்கள். இப்பொழுது
யார் மீதும் உத்தரவிடக் கூடாது.இப்பொழுதிலிருந்தே விஷ்வ மகாராஜனாக ஆகிவிடக்கூடாது. இப்பொழுது
விஷ்வ சேவாதாரி ஆக வேண்டும்.சிநேகம் கொடுக்க வேண்டும்.தங்களது வருங்கால கணக்கில் எவ்வளவு
சிநேகம் சேமிப்பு செய்துள்ளோம் என்று பார்க்க வேண்டும்.விஷ்வ மகாராஜன் ஆவதற்கு ஞானமளிக்கும்
வள்ளலாக மட்டும் ஆனால் போதாது.இதற்காக அனைவருக்கும் சிநேகம் அதாவது சகயோகம் கொடுங்கள்.
சுலோகன்: களைப்பின் உணர்வு ஏற்படும் பொழுது குμயில் நடனமாடுங்கள்.
இதனால் மனநிலை (மூட்) மாறி விடும்.
(1/4)
31
08-2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! இது புருஷோத்தம் (உத்தமர்களகா) ஆவதற்கான சங்கமயுகம்.
இதில் எந்த ஒரு பாவ கர்மமும் செய்யக் கூடாது.
கேள்வி : சங்கமயுகத்தில் குழந்தைகள் நீங்கள் அனைத்திலும் புண்ணிய காரியமாக எதைச்
செய்கிறீர்கள்?
பதில் : தன்னை பாபாவிடம் ஒப்படைத்து விடுவது, அதாவது சம்பூர்ண ஸ்வாஹா (பலி) ஆகி விடுவது
என்பது அனைத்திலும் பெரிய புண்ணியம். இப்போது நீங்கள் மோகத்தை விட்டு விடுகிறீர்கள். குழந்தைலிகுட்டிகள்,
வீடுலிவாசல் அனைத்தையும் மறக்கிறீர்கள். இது தான் உங்களுடைய விரதம். நீங்கள் இறந்தால் உலகமும்
இறந்து விட்டது. இப்போது நீங்கள் விகாரி சம்மந்தங்களில் இருந்து விடுபடுகிறீர்கள்.
பாடல் : விட்டில் பூச்சிகள் ஏன் எரியவில்லை.....
ஓம் சாந்தி. இவை அனைத்தும் பக்தி மார்க்கத்தில் தந்தையின் மகிமை செய்வதாகும். இது விட்டில்
பூச்சிகள் ஜோதிக்குச் செய்யும் மகிமை ஆகும். தந்தை வந்துள்ளார் எனும் போது உயிருடன் இருந்து
கொண்டே அவருடையவர்களாக ஏன் ஆகக் கூடாது? உயிருடன் இருந்து கொண்டே என்று சொல்லப்
படுவதே தத்தெடுப்பவர்களுக்காகத் தான். முதலில் நீங்கள் அசுரப் பரிவாரத்தினராக இருந்தீர்கள். இப்போது
நீங்கள் ஈஸ்வரியப் பரிவாரத்தினராக ஆகியிருக்கிறீர்கள். உயிருடன் இருக்கும் போதே ஈஸ்வரன் வந்து உங்களைத்
தத்தெடுத்துள்ளார். அது பிறகு சரணாகதி எனச் சொல்லப்படுகின்றது. பாடுகின்றனர் இல்லையா, நான் உங்கள்
முன் சரணடைந்தேன்........ இப்போது பிரபு எப்போது இங்கே வருகிறாரோ, தமது சக்தியை, சிறப்பைக் காட்டுகிறாரோ,
அப்போது தான் அவர் முன் சரணடைவோம். அவர் தான் சர்வசக்திவான் இல்லையா? நிச்சயமாக அவரிடம்
கவர்ச்சியும் உள்ளது இல்லையா? அனைத்தையும் விலகச் செயது விடுகிறார். நிச்சயமாக யார் பாபாவின்
குழந்தைகளாக ஆகின்றனரோ, அவர்கள் அசுர சம்பிரதாயத்தினரின் சம்மந்தத்தில் சலிப்படைந்து விடுகின்றனர்.
பாபா, எப்போது இந்த சம்மந்தங்கள் விட்டுப் போகும் என்று கேட்கின்றனர். இங்கே இந்தப் பழைய சம்மந்தங்களை
மறக்க வேண்டி உள்ளது. ஆத்மா தேகத்திலிருந்து தனியாக ஆகி விடும் போது பந்தனங்கள் முடிந்து போகும்.
இச்சமயம் நீங்கள் அறிவீர்கள், அனைவருக்காகவும் மரணம் காத்திருக்கிறது. மேலும் இந்த பந்தனங்கள்
உள்ளன என்றால் அவை விகாரி பந்தனங்கள். இப்போது குழந்தைகள் நிர்விகாரி சம்மந்தத்தை விரும்புகின்றனர்.
நிர்விகாரி சம்மந்தத்தில் இருந்தோம். பிறகு விகாரி சம்மந்தத்தில் வந்தோம். மீண்டும் நமக்கு நிர்விகாரி
சம்மந்தம் இருக்கும். குழந்தைகள் அறிவார்கள், நாம் அசுர பந்தனத்தில் இருந்து விடுபடுவதற்கான புருஷார்த்தம்
செய்து கொண்டிருக்கிறோம். ஒரு பாபாவிடம் நினைவு மூல6ம் இணைய வைக்கப் படுகின்றது. அந்தப் பக்கம்
இருப்பது ஓர் இராவணன். இந்தப் பக்கம் ஓர் இராமர். இவ்விஷயங்களை உலகம் அறிந்திருக்கவில்லை. இராம
ராஜ்யம் வேண்டும் எனச் சொல்லவும் செய்கின்றனர். ஆனால் முழு உலகமும் இராவண இராஜ்யத்தில்
உள்ளது. இதை யாரும் புரிந்து கொள்வதில்லை. இராம ராஜ்யத்திலோ தூய்மை, சுகம், சாந்தி இருந்தது. அது
இப்போது இல்லை. ஆனால் என்ன சொல்கின்றனரோ, அதை உணர்வதில்லை. பாடவும் படுகின்றதுலிஇந்த
ஆத்மாக்கள் அனைவரும் சீதைகள். ஒரு சீதையின் விஷயம் இல்லை. ஓர் அர்ஜுனனின் விஷயமும்
கிடையாது. ஒரு திரௌபதியின் விஷயமும் கிடையாது. இதுவோ அநேகரின் விஷயமாகும். உதாரணமாக
ஒருவருக்கு விளக்கம் தரப்படுகின்றது. உங்களுக்கும் சொல்லப் படுகின்றதுலிநீங்கள் அனைவரும் அர்ஜுனன்
போன்றவர்கள். நீங்கள் சொல்வீர்கள், அர்ஜுனனோ இந்த பாகீரதம் (பிரம்ô பாபா) தான்.. பாபா சொல்கிறார் லி
நான் சாதாரண வயோதிகர் சரீரமாகிய இந்த ரதத்தை எடுத்துக் கொள்கிறேன். அவர்கள் பிறகு சித்திரங்களில்
குதிரை வண்டியைக் காட்டியுள்ளனர். இது அஞ்ஞானம் எனச் சொல்லப் படுகின்றது. குழந்தைகள் புரிந்து
கொண்டுள்ளனர், இந்த சாஸ்திரங்கள் முதலிய என்னவெல்லாம் உள்ளனவோ, அவை அனைத்தும் பக்தி
மார்க்கத்தினுடையவை. இவ்விஷயங்களை யாரும் புரிந்து கொள்ள முடியாதுலி 7 நாள் புரிந்து கொள்வதற்கான
கோர்ஸ் எடுத்துக் கொள்ளாத வரை. பக்தி தனிப்பட்டது. ஞானம், பக்தி, வைராக்கியம் எனச் சொல்கின்றனர்.
உண்மையில் சந்நியாசிகளின் வைராக்கியம் ஒன்றும் உண்மையானதல்ல. அவர்களோ காட்டுக்குச் சென்று
விட்டுப் பிறகு நகரத்தினுள் வந்து இருந்து கொண்டு பெரியலிபெரிய மாளிகைகள் முதலியவற்றை
உருவாக்குகின்றனர். வீடுலிவாசலை விட்டு விட்டோம் என்று வெறுமனே சொல்கின்றனர். உங்களுடையது
முழுப் பழைய உலகத்தின் வைராக்கியம். யதார்த்தமான விஷயம் இது தான். அது எல்லைக்குட்பட்ட விஷயம்.
அதனால் அது ஹடயோகம், எல்லைக்குட்பட்ட வைராக்கியம் எனச் சொல்லப் படுகின்றது.
(2/4)
31.08.2016
குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், இந்தப் பழைய உலகம் இப்போது அழியப் போகிறது. அதனால்
கண்டிப்பாக இதன் மீது வைராக்கியம் வர வேண்டும். புத்தியும் சொல்கிறது, புது வீடு உருவாகிறது என்றால்
பழைய வீடு இடிக்கப்படுகின்றது. நீங்கள் அறிவீர்கள், இப்போது ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
கலியுகத்திற்குப் பின் சத்யுகம் மீண்டும் நிச்சயமாக வரும். இது புருஷோத்தம யுகம் எனச் சொல்லப்படுகின்றது.
புருஷோத்தம மாதமும் உள்ளது. உங்களுடையது புருஷோத்தம யுகம். புருஷோத்தம மாதத்தில் தானலிபுண்ணியம்
முதலியவற்றைச் செய்கின்றனர். நீங்கள் இந்தப் புருஷோத்தம யுகத்தில் அனைத்தையும் ஸ்வாஹா (அர்ப்பணம்)
செய்து விடுகிறீர்கள். நீங்கள் அறிவீர்கள், இந்த முழு உலகமும் ஸ்வாஹா ஆகப் போகிறது. ஆக, முழு
உலகமும் முழுமையாக ஸ்வாஹா ஆவதற்கு முன்பாக நம்மை நாம் ஏன் ஸ்வாஹா செய்யக் கூடாது?
அதனால் உங்களுக்கு எவ்வளவு புண்ணியம் கிடைக்கும்! அது எல்லைக்குட் பட்ட புருஷோத்தம மாதம்.
இதுவோ எல்லையற்ற விஷயம். புருஷோத்தம மாதத்தில் அதிகம் கதைகளைக் கேட்பார்கள். விரத நியமங்களைக்
கடைப்பிடிப்பார்கள். உங்களுடையதோ மிகப் பெரிய விரதம். உங்களுக்கு வீடு, குழந்தைலிகுட்டிகள் இருந்தாலும்
கூட மனதால் மோகத்தை விட்டு விட்டீர்கள். நீங்கள் இறந்தால் உலகம் இறந்து விட்டது போலதான். நீங்கள்
அறிவீர்கள், இவை அனைத்தும் அழிந்து போகும். நாம் பாபாவுடையவர்களாக ஆகியிருக்கிறோம் லி புருஷோத்தம்
ஆவதற்காக. அனைத்து புருஷ், அதாவது மனிதர்களுக்குள் உத்தம புருஷ் இந்த லட்சுமிலிநாராயணர் முன்னால்
நின்று கொண்டுள்ளனர். இவர்களை விட உத்தமமானவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. லட்சுமிலிநாராயணர்
உலகத்தின் எஜமானர்களாக இருந்தனர். அவர்களைப் போல் புருஷோத்தமர்களாக ஆவதற்காக நீங்கள்
வந்திருக்கிறீர்கள்.. மனிதர்கள் அனைவருமே சத்கதி அடைகின்றனர். மனிதர்களின் ஆத்மா புருஷோத்தமர்களாக
ஆகி விடுகின்றது என்றால் பிறகு அது வசிப்பதற்கான இருப்பிடமும் கூட அது போல் உத்தமமானதாக
இருக்க வேண்டும். எப்படி குடியரசுத் தலைவர் அனைவரைக் காட்டிலும் உயர்ந்த பதவியில் இருக்கிறார்
என்றால் அவர் வசிப்பதற்காக ராஷ்டிரபதி பவன் கிடைத்துள்ளது. எவ்வளவு பெரிய மாளிகை, தோட்டம்
எல்லாம் உள்ளது! இது இங்கே உள்ள விஷயம். இராமராஜ்யத்தைப் பற்றியோ நீங்கள் அறிவீர்கள். நீங்கள்
சத்யுகத்தின் புருஷோத்தமர்களாக ஆகிறீர்கள். பிறகு இந்தக் கலியுகத்தில் புருஷோத்தமர்களாக இருக்க மாட்டார்கள்.
நீங்கள் சத்யுகப் புருஷோத்தமர்களாக ஆவதற்காகப் புருஷார்த்தம் செய்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அறிவீர்கள்,
நமது மாளிகை எப்படி உருவாகியிருக்கும்! நாளை (சத்யுகம்) இராம ராஜ்யம் இருக்கும். நீங்கள் ராமராஜ்யத்தில்
புருஷோத்தமர்களாக இருப்பீர்கள். நீங்கள் சவால் விடுகிறீர்கள், நாங்கள் இராவண இராஜ்யத்தை மாற்றி இராம
இராஜ்யத்தை ஸ்தாபனை செய்வோம். இப்போது சவால் விட்டிருக்கிறீர்கள் என்றால் ஒருவர் மற்றவரை
புருஷோத்தமர்களாக ஆக்க வேண்டும்லி 21 பிறவிகளுக்காக. தேவதைகளின் மகிமை பாடுகின்றனர், சர்வகுண
சம்பன்ன...... அஹிம்சா பரமோ தேவிலிதேவதா தர்மம். நீங்கள் அறிவீர்கள், வேறு எந்த மனிதருக்கும் தெரியாது.
நீங்கள் அடுத்த ஜென்மத்தில் புருஷோத்தமர்களாகிறீர்கள். பிறகு இந்த இராவண இராஜ்யத்தில் யாருமே
இருக்க மாட்டார்கள். இப்போது உங்களுக்கு முழு ஞானமும் உள்ளது. இப்போது இராவண இராஜ்யமே
அழிந்துவிடப் போகிறது. இப்போதோ சமயத்தைப் பற்றியும் எந்த ஒரு நம்பிக்கையும் கிடையாது. அகால
மரணம் நடந்து விடுகிறது. யாருடனாவது விரோதம் ஏற்பட்டால் உடனே அவர்களை அழித்து விடுகின்றனர்.
உங்களையோ யாராலும் அழிக்க முடியாது. நீங்கள் அவிநாசி புருஷோத்தமர்கள். இவர்கள் விநாசி, அதுவும்
இராவண இராஜ்யத்தில். இவர்களுக்கு உங்களுடைய தெய்வீக இராஜ்யத்தைப் பற்றித் தெரியாது. நீங்கள்
அறிவீர்கள், நாம் நம்முடைய தெய்விக சுயராஜ்யத்தை ஸ்ரீமத் படி ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம்.
யாருக்குப் பூஜை நடைபெறுகிறதோ, அவர்கள் நிச்சயமாக நல்ல காரியம் செய்து விட்டுச் சென்றுள்ளனர்.
இதை நீங்கள் அறிவீர்கள். பாருங்கள், ஜெகதம்பாவுக்கு எவ்வளவு பூஜைகள் நடைபெறுகின்றன! இப்போது
இவர் ஞானலிஞானேஸவரி. நீங்கள் ஜெகதம்பாவின் குழந்தைகள், ஞானலிஞானேஸ்வரி மற்றும் ராஜலிராஜேஸ்வரி.
இருவரிலும் உத்தமமானவர் யார்? ஞானலிஞானேஸ்வரியிடம் சென்று அநேக விதமான மனதின் ஆசைகளைச்
சொல்கின்றனர். அநேகப் பொருட்களைக் கேட்கின்றனர். ஜெகதம்பாவின் கோவில் மற்றும் லட்சுமிலிநாராயணரின்
கோவிலுக்கிடையில் அதிக வேறுபாடு உள்ளது. ஜெகதம்பாவின் கோவில் மிகவும் சிறியது. சிறிய இடத்தில்
பெரிய கூட்டம் இருப்பது மனிதர்களுக்குப் பிடித்துள்ளது. ஸ்ரீநாத்தின் கோவிலிலும் கூட அதிகக் கூட்டம்
இருக்கும். கூட்டத்தைக் கட்டுப் படுத்துவதற்காக மரக் கம்புகளால் தடுப்பு ஏற்படுத்தி கொள்கினற்னர் கல்கத்தாவில்
காளி கோவில் எவ்வளவு சிறியதாக உள்ளது! உள்ளே (தரையில்) அதிகம் எண்ணெய் மற்றும் தண்ணீர்
உள்ளது. உள்ளே மிகவும் கவனமாகச் செல்ல வேண்டியுள்ளது. அதிகக் கூட்டம் இருக்கும். லட்சுமிலிநாராயணரின்
கோவிலோ மிகப் பெரியதாக உள்ளது. ஜெகதம்பாவுக்கு சிறியதாக இருப்பது ஏன்? ஏழை இல்லையா? ஆக,
கோவிலும் ஏழ்மை நிலையில் உள்ளது. அவர் பணக்காரர் என்றால் கோவிலில் ஒரு போதும் திருவிழா
நடைபெறுவதில்லை. ஜெகதம்பாவின் கோவிலில் அதிகம் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. வெளியிலிருந்து
அதிகமாக மக்கள் வருகின்றனர். மகாலட்சுமியின் கோவிலும் உள்ளது. இதையும் நீங்கள் அறிவீர்கள், இதில்
லட்சுமியும் இருக்கிறார் என்றால் நாராயணரும் இருக்கிறார். அவரிடம் செல்வம் மட்டும் கேட்கின்றனர். ஏனென்றால்
(3/4)
31.08.2016
அவர் தனவான் ஆகியிருக்கிறார் இல்லையா? இங்கே இருப்பதோ அவிநாசி ஞான ரத்தினங்கள். செல்வத்திற்காக
லட்சுமியிடம் செல்கின்றனர். மற்றப்படி அநேக ஆசைகளை வைத்துக் கொண்டு ஜெகதம்பாவிடம் செல்கின்றனர்.
நீங்கள் ஜெகதம்பாவின் குழந்தைகள். அனைவரின் மனதின் ஆசைகளையும் 21 பிறவிகளுக்கு நீங்கள்
நிறைவேற்றுகிறீர்கள். ஒரே ஒரு மகாமந்திரத்தினால் அனைத்து மன ஆசைகளும் 21 பிறவிகளுக்கு நிறைவேறிக்
கொண்டிருக்கின்றன. வேறு யாரெல்லாம் மந்திரம் முதலியவற்றைக் கொடுக்கின்றனரோ, அவற்றில் அர்த்தம்
எதுவும் இருக்காது. பாபா புரிய வைக்கிறார், இந்த மந்திரமும் கூட உங்களுக்கு ஏன் கொடுக்கிறேன்? ஏனென்றால்
நீங்கள் தூய்மை இழந்தவர்களாக இருக்கிறீர்கள். என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். அப்போது தான்
தூய்மையாவீர்கள். இதை ஆத்மாக்களுக்கு ஒரு தந்தையைத் தவிர யாராலும் சொல்ல முடியாது. இதனால்
தெளிவாகிறது இந்த சகஜ இராஜயோகம் ஒரு தந்தை மட்டுமே கற்பிக்கிறார். மந்திரமும் அவரே தருகிறார்.
5000 ஆண்டுகளுக்கு முன்பும் மந்திரம் கொடுத்திருந்தார். இந்த நினைவு வந்துள்ளது. இப்போது நீங்கள்
முன்னிலையில் அமர்ந்திருக்கிறீர்கள். கிறிஸ்து இருந்து சென்றுள்ளார். அவருடைய பைபிளைப் படித்துக் கொண்டே
இருக்கின்றனர். அவர் என்ன செய்து விட்டுச் சென்றுள்ளார்? கிறிஸ்து தர்மத்தை ஸ்தாபனை செய்து விட்டு
சென்று விட்டர்ர் என்பதை நீங்கள் அறிவீர்கள், சிவபாபா என்ன செய்து விட்டுச் சென்றிருக்கிறார் என்று.
கிருஷ்ணர் என்ன செய்து விட்டுச் சென்றார்? கிருஷ்ணரோ சத்யுகத்தின் இளவரசராக இருந்தார். அவர் தாம்
பிறகு நாராயணராக ஆனார். பிறகு புனர்ஜென்மம் எடுத்தே வந்துள்ளார். சிவபாபாவும் ஏதோ செய்து விட்டுச்
சென்றுள்ளார். அதனால் தான் அவருக்கு இவ்வளவு பூஜை முதலியன நடைபெறுகின்றன. இப்போது நீங்கள்
அறிவீர்கள், ராஜயோகம் கற்பித்து விட்டுச் சென்றுள்ளார், பாரதத்தை சொர்க்கமாக ஆக்கி விட்டுச் சென்றுள்ளார்.
அந்த சொர்க்கத்தின் முதல் நம்பர் எஜமானராக ஆவர் ஆவதில்லை. எஜமானராக கிருஷ்ணர் தான் ஆனார்.
நிச்சயமாக கிருஷ்ணரின் ஆத்மாவுக்குக் கற்பித்தார், நீங்கள் புரிந்து கொண்டு விட்டீர்கள். கிருஷ்ணரின்
வம்சாவளியாக நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். இராஜாலிராணியை தாய்லிதந்தை என்றும் உணவளிக்கும் வள்ளல்
என்றும் சொல்கின்றனர். இராஜஸ்தானிலும் கூட இராஜாவை உணவளிக்கும் வள்ளல் எனச் சொல்கின்றனர்.
இராஜாக்களுக்கு எவ்வளவு மரியாதை உள்ளது! முன்பு அனைத்துப் புகார்களும் இராஜாவிடம் வந்தன. தர்பார்
கூட்டப் பட்டது. ஏதாவது தவறு செய்திருந்தால் மிகவும் பச்சாத்தாபப் பட்டனர். தற்சமயமோ சிறைப்பறவைகள்
அநேகர் உள்ளனர். அடிக்கடி சிறைக்குச் செல்கின்றனர். இப்போது குழந்தைகள் நீங்கள் கர்ப்ப ஜெயிலுக்குள்
செல்ல மாட்டீர்கள். நீங்களோ கர்ப்ப மாளிகையில் வர வேண்டும். அதனால் பாபாவை நினைவு செய்யுங்கள்.
அப்போது விகர்மங்கள் விநாசமாகும். பிறகு ஒரு போதும் கர்ப்ப ஜெயிலில் போக மாட்டீர்கள். அங்கே பாவம்
நடைபெறுவதில்லை. அனைவரும் கர்ப்ப மாளிகையில் இருப்பார்கள். குறைந்த புருஷர்த்தத்தின் காரணத்தால்
தான் குறைந்த பதவி பெறுவார்கள். உயர்ந்த பதவி அடைகிறவர்களுக்கு சுகமும் அதிகம் இருக்கும். இங்கோ
வெறும் 5 ஆண்டுகளுக்கு மட்டும் கவர்னர், பிரசிடென்ட் ஆகியோரை நியமிக்கின்றனர். நீங்கள் புரிய வைக்க
முடியும்லிபாரதம் தான் தெய்விக ராஜஸ்தானாக ஆயிற்று. இப்போதோ ராஜஸ்தானும் இல்லை, ராஜாலிராணியும்
இல்லை. முன்பு யாராவது அரசாங்கத்திற்குப் பணம் கொடுத்தார்கள் என்றால் மகாராஜாலிமகாராணி என்ற டைட்டில்
கிடைத்து வந்தது. இங்கே உங்களுடையதோ படிப்பு. இராஜாலிராணியாக ஒரு போதும் படிப்பினால் ஆவதில்லை.
உங்களுடைய நோக்கம்லிகுறிக்கோள், இந்தப் படிப்பினால் நீங்கள் உலகத்தின் மகாராஜாலிமகாராணி ஆகிறீர்கள்.
இராஜா ராணியும் கூட இல்லை. இராஜாலிராணியின் டைட்டில் திரேதாயுகத்தில் இருந்து ஆரம்பமாகின்றது.
நீங்கள் இப்போது ஞானலிஞானேஸ்வரி ஆகிறீர்கள். பிறகு இராஜலிராஜேஸ்வரி ஆவீர்கள். யார் ஆக்குவார்?
ஈஸ்வரன். எப்படி? ராஜயோகம் மற்றும் ஞானத்தின் மூலம். இராஜ்யத்திற்காக பாபாவை நினைவு செய்ய
வேண்டும். பாபா உங்களை சொர்க்கத்தின் அதகாரி ஆக்குகிறார். இதுவோ மிகவும் சுலபம் இல்லையா?
சொர்க்கத்தை ஸ்தாபனை செய்பவர் தான் காட்ஃபாதர். சொர்க்கத்திலோ சொர்க்கத்தை ஸ்தாபனை செய்ய
மாட்டார். நிச்சயமாக அவர்களுக்கு சங்கமயுகத்தில் பதவி கிடைக்கிறது. அதனால் இது அழகான, கல்யாண்காரி
சங்கமயுகம் என்று சொல்லப் படுகிறது. பாபா குழந்தைகளுக்கு எவ்வளவு நன்மை செய்கிறார்! சொர்க்கத்திற்கே
அதிகாரி ஆக்குகிறார். சொல்லவும் செய்கின்றனர், பரமபிதா பரமாத்மா புது உலகைப் படைக்கிறார். ஆனால்
அதில் யார் இராஜ்யம் செய்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. இராம இராஜ்யம் எனச் சொல்லப்படுவது எது
என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அவர்களோ இராம இராஜ்யத்திற்கு லட்சம் வருடங்கள் கொடுத்து
விட்டுள்ளனர். கலியுகத்திற்கு 40 ஆயிரம் வருடங்கள் கொடுத்து விட்டுள்ளனர். பாபா சொல்கிறார்லிநான் வருவது
சங்கமயுகத்தில் தான். வந்து பிரம்மா மூலம் விஷ்ணுபுரியின் ஸ்தாபனை செய்கிறேன். சத்திய நாராயணனின்
கதையும் இது தான். அவர்கள் சாஸ்திரங்களின் கதைகளைப் படித்துக் கொண்டே இருக்கின்றனர். ஆனால்
அதனால் எந்த ஒரு இராஜ்யமும் கிடைக்காது. மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
மரம் நிச்சமாகப் பழையதாக ஆகும். வளர்ச்சி அடைந்துலிஅடைந்து பழையதாக ஆகி விடும். சத்யுகத்தில்
நீங்கள் லட்சுமிலிநாராயண் சர்வகுண சம்பன்னமாக......... ஆகிறீர்கள். பிறகு கலைகள் குறைந்து கொண்டே செல்கின்றன.
(4/4)
31.08.2016
ஸ்தாபனை ஆகும் போது தான் புதிய மரம் என்று சொல்லப்படுகின்றது. புது வீடு கட்டப்படுகின்றது என்றால்
புதியது எனச் சொல்வார்கள். நீங்களும் சத்யுகத்தில் வருவீர்களானால் புது இராஜதானி இருக்கும். பிறகு
கலைகள் குறைந்து கொண்டே போகும். ஸ்தாபனை இங்கே நடைபெறுகின்றது. இந்த அற்புதமான விஷயங்கள்
யாருடைய புத்தியிலும் இல்லை. ஆக, பாபா புரிய வைத்துள்ளார்லிஅனைத்து ஆத்மாக்களுக்காகவும் இது
புருஷோத்தமர்களாக ஆவதற்கான யுகம் ஆகும். ஜீவன்முக்தி நிலையில் இருப்பவர் புருஷோத்தமர்கள் எனச்
சொல்லப் படுகின்றார். ஜீவன் பந்தனத்தில் இருப்பவர் புருஷோத்தமர்கள் எனச் சொல்லப்படுவதில்லை. இச்சமயம்
அனைவரும் ஜீவன் பந்தனத்தில் உள்ளனர். பாபா வந்து அனைவரையும் ஜீவன்முக்த் ஆக்குகிறார். நீங்கள்
அரைக்கல்பம் ஜீவன் முக்த் நிலையில் இருப்பீர்கள். பிறகு ஜீவன் பந்தன நிலை. இதை நீங்கள் புரிந்து
கொள்கிறீர்கள். உங்களின் விரத நியமம் என்ன? பாபா வந்து விரதம் இருக்கச் செய்துள்ளார். உணவுலி
பானத்தின் விஷயம் கிடையாது. அனைத்தையும் செய்யுங்கள். முக்கியமானது, பாபாவை நினைவு செய்யுங்கள்
மற்றும் தூய்மையாக ஆகுங்கள். புருஷோத்தம மாதத்தில் முக்கியமாக, பவித்திரமாகவும் இருப்பார்கள். உண்மையில்
இந்தப் புருஷோத்தம யுகத்திற்கு மதிப்பு உள்ளது என்றால் உங்களுக்கு எவ்வளவு குμ, எவ்வளவு நஷா
இருக்க வேண்டும்! இப்போது உங்களால் எந்த ஒரு பாவ கர்மமும் நடைபெறக் கூடாது. ஏனென்றால் நீங்கள்
புருஷோத்தமர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும்
தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம் :
1) இந்தப் புருஷோத்தம யுகத்தில் ஜீவன்முக்த் (சொர்க்கவாசி) ஆவதற்காக புண்ணிய கர்மம்
செய்ய வேண்டும். தூய்மையாக அவசியம் ஆக வேண்டும். வீடுலிவாசல் முதலிய அனைத்தும்
இருந்தாலும் மனதால் மோகத்தை அகற்றிவிட வேண்டும்.
2) ஸ்ரீமத் படி தன்னுடைய உடல்லிமனம்லிசெல்வத்தால் தெய்விக ராஜ்யத்தை ஸ்தாபனை செய்ய
வேண்டும். மற்றவர்களைப் புருஷோத்தமர்களாக ஆக்குவதற்கான சேவை செய்ய வேண்டும்.
வரதானம் : அனைத்து ரூபங்களிலும், அனைத்து சம்மந்தங்களிலும் தன்னுடைய
அனைத்தையும் பாபாவுக்கு முன் அர்ப்பணம் செய்யக் கூடிய உண்மையான சிநேகி ஆகுக.
யாரிடம் அதிக அன்பு உள்ளதோ, அந்த அன்பிற்காக அனைவரிடம் இருந்தும் விலகி, அனைத்தையும்
அவருக்கு முன் அர்ப்பணம் செய்வார்கள். எப்படி பாபாவுக்குக் குழந்தைகளிடம் அன்பு உள்ளது, அதனால்
சதா காலத்தின் சுகத்தின் (சொர்க்க) பிராப்தியை அன்பான குழந்தைகளுக்கு செய்விக்கிறார். மற்ற அனைவரையும்
முக்தி தாமத்தில் அமரச் செய்கிறார். அது போல் குழந்தைகளின் அன்பிற்கான நிரூபணம் அனைத்து ரூபங்களாலும்
அனைத்து சம்மந்தங்களாலும் தன்னுடைய அனைத்தையும் பாபாவுக்கு முன் அர்ப்பணம் செய்வதாகும். எங்கே
அன்பு உள்ளதோ, அங்கே யோகம் இருக்கும். மேலும் யோகம் இருக்குமானால் சகயோகம் (ஒத்துழைப்பு)
இருக்கும். ஒரு கஜானாவைக் கூட மன்மத் படி வீணாக்க மாட்டார்கள்.
சுலோகன் : சாகார கர்மத்தில் (சரீர மூலம் சேவையில்) பிரம்மா பாபாவையும்
அசரீரி ஆவதில் நிராகார் தந்தையையும் பின்பற்றுங்கள்
(1/4)
01
.09.2016 ஓம் சாந்தி காலை முரளி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! தத்துவங்களையும் சேர்த்து அனைத்து மனிதர்களையும் மாற்றக்
கூடிய பல்கலைக்கழகம் இது ஒன்றுதான் ஆகும், இங்கிருந்துதான் அனைவருக்கும் சத்கதி
கிடைக்கின்றது.
கேள்வி: தந்தையின் மீது நிச்சயம் இருந்தாலும் எந்த ஒரு வழியை உடனடியாக நடைமுறைப்படுத்த
வேண்டும்?
பதில்: 1. தந்தை வந்துள்ளார் என்ற நிச்சயம் ஏற்பட்டுள்ளது என்றால் தந்தையின் முதலாவது
அறிவுரை இந்தக் கண்களால் பார்க்கும் அனைத்தையும் மறந்து விடுங்கள் என்பதாகும். என்னுடைய வழிப்படி
மட்டும் நடந்து செல்லுங்கள். இந்த அறிவுரை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். 2. நீங்கள் எல்லைக்கப்
பாற்பட்ட தந்தையுடையவராக ஆகியுள்ளீர்கள் எனும்போது தூய்மையற்றவர்களுடன் உங்களுடைய கொடுக்கல்
வாங்கல் இருக்கக் கூடாது. நிச்சய புத்தியுள்ள குழந்தைகளுக்கு ஒருபோதும் எந்த விஷயத்திலும் சந்தேகம்
வர முடியாது.
ஓம் சாந்தி. இது வீட்டுக்கு வீடாகவும் இருக்கிறது, மேலும் பல்கலைக்கழகமாகவும் உள்ளது. இதுவே
இறைத் தந்தையின் உலகப் பல்கலைக்கழகம் எனப்படுகிறது. ஏனென்றால் முழு உலகத்தின் மனிதர்களுக்கு
சத்கதி ஏற்படுகிறது. இது உண்மையான பல்கலைக்கழகமாகும். வீட்டுக்கு வீடாகவும் உள்ளது. தாய் தந்தையரின்
முன்பாக அமர்ந்திருக்கின்றனர், பிறகு இது பல்கலைக்கழகமாகவும் உள்ளது. ஆன்மீகத் தந்தை அமர்ந்திருக்கிறார்.
இது ஆன்மீக ஞானம் ஆகும், இது ஆன்மீகத் தந்தையின் மூலம் கிடைக்கிறது. ஆன்மீக ஞானத்தை
ஆன்மீகத் தந்தையைத் தவிர வேறு எந்த மனிதரும் கொடுக்க முடியாது. அவர்தான் ஞானக்கடல் என
சொல்லப்படுகிறார், மேலும் ஞானத்தின் மூலம்தான் சத்கதி ஏற்படுகிறது, ஆகையால் அவர் ஞானக்கடல்,
அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல் ஒரு தந்தைதான் ஆவார். தந்தையின் மூலம் முழு உலகின்
மனிதர்கள் மட்டுமென்ன, 5 தத்துவங்களாலான அனைத்து பொருட்களுமே சதோபிரதானமாகி விடுகின்றன.
அனைவருக்கும் சத்கதி ஏற்படுகிறது. இந்த விஷயங்கள் மிகவும் புரிந்துக் கொள்ள வேண்டியவை ஆகும்.
இப்போது அனைவருக்கும் சத்கதி ஏற்பட வேண்டியுள்ளது. பழைய உலகம் மற்றும் உலகில் இருக்கும்
அனைவருமே மாறி விடுவார்கள். இங்கே பார்க்கக் கூடிய அனைத்துமே மாறி புதியதாக ஆகவுள்ளது.
பாடவும் படுகிறது லி இங்கே பொய்யான மாயை, பொய்யான உடல் . . . இது பொய்யான கண்டமாக ஆகி
விடுகிறது. பாரதம் உண்மையான கண்டமாக இருந்தது, இப்போது பொய்யான கண்டமாக உள்ளது. படைப்பவர்
மற்றும் படைப்பைக் குறித்து மனிதர்கள் சொல்லும் அனைத்தும் பொய்யாகும். இப்போது நீங்கள் தந்தையின்
மூலம் தெரிந்து கொள்கிறீர்கள் லி பகவானுடைய மகா வாக்கியம். பகவான் ஒரு தந்தை அல்லவா. அவர்
நிராகாரமாக இருப்பவர், உண்மையில் அனைத்து ஆத்மாக்களுமே நிராகாரிகள், பிறகு இங்கே வந்து சாகார
ரூபத்தை எடுக்கின்றனர். அங்கே ஆகார உடல் இருக்காது. ஆத்மாக்கள் மூலவதனம் அல்லது பிரம்ம
மகாதத்துவத்தில் வசிக்கின்றன. அது ஆத்மாக்களாகிய நம்முடைய வீடு, பிரம்ம மகாதத்துவம். இந்த
ஆகாயம் ஒரு தத்துவம் ஆகும், இங்கே சாகாரமான நடிப்பு நடக்கிறது. உலகின் வரலாறு புவியியல் மீண்டும்
மீண்டும் நடக்கிறது. மீண்டும் நடக்கிறது என சொல்கின்றனர், ஆனால் இதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதும்
இல்லை. தங்க யுகம், வெள்ளி யுகம், . . பிறகு என்ன? மீண்டும் தங்கயுகம் கண்டிப்பாக வரும். சங்கமயுகம்
ஒன்றுதான். சத்யுகம், திரேதா அல்லது திரேதா மற்றும் துவாபரத்தின் சங்கமம் என சொல்லப்படுவதில்லை,
அது தவறாகி விடும். தந்தை சொல்கிறார் லி நான் கல்பம் தோறும் கல்பத்தின் சங்கமயுகத்தில் வருகிறேன்.
தூய்மையற்றவராகும் போதுதான் என்னை அழைக்கவும் செய்கின்றனர். நீங்கள் எங்களை தூய்மையாக்குவதற்காக
வாருங்கள் என சொல்கின்றனர். தூய்மையானவர்கள் சத்யுகத்தில்தான் இருப்பார்கள். இப்போது இருப்பது
சங்கமயுகம், இது கல்யாணகாரி (நன்மை நிறைந்த) சங்கமயுகம் எனப்படுகிறது. ஆத்மா மற்றும் பரமாத்மாவின்
சந்திப்பின் சங்கமம், இது கும்பம் என்றும் சொல்லப்படுகிறது. அவர்கள் பிறகு நதிகளின் சங்கமத்தைக்
காட்டுகின்றனர். இரண்டு நதிகள் உள்ளன, பிறகு மூன்றாவதாக குப்த நதி என்றும் சொல்கின்றனர். இதுவும்
கூட பொய்யாகும். குப்தமான நதி என்று இருக்க முடியுமா என்ன? அறிவியல் வல்லுனர்கள் கூட இதை
ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் அம்பு எய்தினால் கங்கை வந்தது, இவையனைத்தும் பொய் ஞானம், பக்தி,
வைராக்கியம் என பாடப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டுள்ளனர், ஆனால் அர்த்தம்
எதுவும் தெரியாது. முதன் முதலாக உள்ளது ஞானம் லி பகல், சுகம், பிறகு பக்தி லி இரவு, துக்கம். பிரம்மாவின்
பகல், பிரம்மாவின் இரவு. இப்போது ஒருவர் மட்டும் இருக்க முடியாது, பலர் இருப்பார்கள் அல்லவா. அரைக்
கல்ப காலம் பகலாக இருக்கும், பிறகு இரவும் கூட அரை கல்பம் இருக்கும். பிறகு முழு பழைய உலகின் மீது
வைராக்கியம் உண்டாகிறது.
(2/4)
01.09.2016
தந்தை சொல்கிறார் லி தேகத்துடன் சேர்த்து நீங்கள் இந்த கண்களால் பார்க்கும் அனைத்தையும் ஞானத்தின்
மூலம் மறக்க வேண்டும். வேலை, தொழில் முதலானவைகளைச் செய்ய வேண்டும். குழந்தைகளைக் கவனிக்க
வேண்டும். ஆனால் புத்தியின் தொடர்பை ஒருவருடன் இணைக்க வேண்டும். அரைக் கல்பம் நீங்கள்
இராவணனின் வழியில் நடக்கிறீர்கள். இப்போது தந்தையுடையவராய் ஆகி இருக்கிறீர்கள் என்றால் எது
செய்தாலும் தந்தையின் (அறிவுரை) வழிப்படி செய்யுங்கள். உங்களுடைய கொடுக்கல் வாங்கல் இதுவரை
தூய்மையற்றவர்களுடன் நடந்து வந்தது, அதன் விளைவு என்ன ஆனது? நாளுக்கு நாள் தூய்மையற்றவர்
களாகத்தான் ஆகி வந்தீர்கள், ஏனென்றால் பக்தி மார்க்கமே இறங்கும் கலையின் மார்க்கமாகும். சதோபிரதானம்,
சதோ, ரஜோ, தமோவில் வர வேண்டியுள்ளது. கண்டிப்பாக இறங்கவே வேண்டும். இதிலிருந்து யாரும் விடுபட
முடியாது. லட்சுமி நாராயணரின் 84 பிறவிகள் குறித்தும் சொல்லியிருக்கிறேன் அல்லவா. ஆங்கில வார்த்தைகள்
மிக நன்றாக உள்ளன. கோல்டன் ஏஜ் (தங்கயுகம்). . . துரு படிகிறது, பிறகு இந்த சமயம் வந்து (அயர்ன் ஏஜ்)
இரும்பு யுகத்தவராக ஆகியுள்ளீர்கள். தங்க யுகத்தில் புதிய உலகம் இருந்தது, புதிய பாரதம் இருந்தது. இந்த
லட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருந்தது. நேற்றைய விசயமாகும். சாஸ்திரங்களில் இலட்சக்கணக்கான வருடங்கள்
என எழுதப்பட்டுள்ளது. இப்போது தந்தை கேட்கிறார் லி உங்களின் சாஸ்திரங்கள் சரியானவையா அல்லது நான்
சரியா? உலகின் ஆல்மைட்டி அத்தாரிட்டி (சர்வசக்திவான்) என தந்தை சொல்லப்படுகிறார். வேத சாஸ்திரங்கள்
அதிகமாக படிப்பவர்கள் அத்தாரிட்டி எனப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் பக்தி மார்க்கத்தின் அத்தாரிட்டிகள்.
ஞானத்தைக் குறித்து என்னை பாடுகின்றனர் லி நீங்கள் ஞானக்கடல், நாங்கள் அல்ல. மனிதர்கள் அனைவரும்
பக்திக் கடலில் மூழ்கியுள்ளனர். சத்யுகத்தில் யாரும் விகாரத்தில் செல்வதில்லை. கலியுகத்தில் மனிதர்கள்
முதல்லிஇடைலிகடைசி துக்கம் நிறைந்தவர்களாக ஆகியபடி இருக்கின்றனர். தந்தை கல்பத்திற்கு முன்பும் கூட
இப்படி புரியவைத்திருந்தார், இப்போது மீண்டும் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். கல்பத்திற்கு முன்பும் கூட
எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிடமிருந்து ஆஸ்தி எடுத்திருந்தோம், இப்போது மீண்டும் படித்து அடைந்து
கொண்டிருக்கிறோம் என குழந்தைகள் புரிந்து கொள்கின்றனர். சமயம் மிகவும் குறைவாக உள்ளது. இந்த
உலகம் வினாசமாகி விடும், ஆகையால் எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிடமிருந்து முழுமையான ஆஸ்தியை
எடுக்க வேண்டும். அவர் தந்தை, ஆசிரியர், குருவாகவும் உள்ளார். பரம தந்தை, பரம ஆசிரியரும் கூட.
உலகின் வரலாறு புவியியல் எப்படி திரும்பத் திரும்ப நடக்கிறது என்ற முழுமையான ஞானத்தைக் கொடுக்கிறார்.
இதை வேறு யாரும் புரிய வைக்க முடியாது. 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு போல இவர் அதே கீதையின்
பகவான் ஆவார், கிருஷ்ணர் அல்ல என குழந்தைகள் இப்போது புரிந்து கொள்கின்றனர். மனிதர்கள் பகவான்
என சொல்லப்பட முடியாது. பகவான் மறுபிறவிகள் எடுக்காதவர். இதை தெய்வீக பிறவி என சொல்கிறார்.
இல்லாவிட்டால் நிராகாரமாக (தேகமற்றவராக) இருக்கும் நான் எப்படி பேசுவேன்? நான் கண்டிப்பாக வந்து
தூய்மையானவர்களாக ஆக்க வேண்டியுள்ளது எனும்போது யுக்தியை கூறவேண்டியுள்ளது. ஆத்மாக்களாகிய
நாம் அமரர்கள் என நீங்கள் அறிவீர்கள். இராவண இராஜ்யத்தில் நீங்கள் அனைவரும் தேக அபிமானம்
உள்ளவர்களாக ஆகிக் கிடக்கிறீர்கள். சத்யுகத்தில் ஆத்ம அபிமானிகளாகி இருப்பார்கள். மற்றபடி படைப்பவராகிய
பரமாத்மா மற்றும் அவருடைய படைப்பைப் பற்றி அங்கும் கூட யாருக்கும் தெரியாது. அங்கும் கூட நாம்
மீண்டும் இப்படி விழ வேண்டியிருக்கும் என தெரிந்து விட்டால் இராஜ்யத்தின் குμயே இருக்காது, ஆகையால்
இந்த ஞானம் அங்கே மறைந்து போய் விடும் என தந்தை சொல்கிறார், உங்களுடைய சத்கதி ஏற்பட்டுவிடும்
போது ஞானத்திற்கான அவசியம் இருக்காது. ஞானத்திற்கான அவசியமே துர்க்கதியில்தான் தேவைப்படும்.
இந்த சமயம் அனைவருமே துர்க்கதியில் இருக்கின்றனர், அனைவரும் காமச் சிதையில் அமர்ந்து எரிந்து
இறந்து போய் விட்டனர். தந்தை சொல்கிறார் லி என் குழந்தைகளே, சரீரத்தின் மூலம் நடிப்பை நடிக்கும்
ஆத்மாக்கள் காமச் சிதையில் அமர்ந்து தமோபிரதானமாகிக் கிடக்கின்றனர். நாங்கள் பதிதமாக (தூய்மை
யற்றவர்களாக) ஆகி விட்டோம் என அழைக்கவும் செய்கின்றனர். பதிதமாக ஆவதும் காமச் சிதையின்
மூலமேயாகும். கோபத்தினாலோ அல்லது பேராசையாலோ பதிதமாக ஆவது கிடையாது. சாது சன்னியாசிகள்
தூய்மையாக இருக்கின்றனர், தேவதைகள் தூய்மையாக இருக்கின்றனர், ஆகையால் தூய்மையற்ற மனிதர்கள்
சென்று தலை வணங்குகின்றனர். நீங்கள் விகாரமற்றவர், நாங்கள் விகாரிகள் என பாடவும் செய்கின்றனர்.
நிர்விகாரி (விகாரமற்ற) உலகம், விகாரி உலகம் என பாடப்படுகிறது. பாரதம்தான் நிர்விகாரி உலகமாக இருந்தது.
இப்போது விதமானதாக உள்ளது. பாரதத்துடன் முழு உலகமுமே விஷம் நிறைந்ததாக உள்ளது. நிர்விகாரமான
உலகத்தில் இன்றிலிருந்து 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஒரே தர்மம்தான் இருந்தது, தூய்மையாய்
இருந்தபோது அமைதி, செல்வ வளம் என மூன்றும் இருந்தன. தூய்மை முதன்மையானது. இப்போது
தூய்மை இல்லை, ஆகவே அமைதி, செல்வ வளமும் கூட இல்லை.
ஞானக் கடல், சுகக் கடல், அன்புக்கடல் ஒரு தந்தையே ஆவார். உங்களைக்கூட இப்படி அன்பானவர்களாக
ஆக்குகிறார். இந்த லட்சுமி நாராயணரின் இராஜ்யத்தில் அனைவரும் அன்பானவர்கள் ஆவர். மனிதர்கள்,
விலங்குகள் என அனைத்துமே அன்பானவை. புலி, ஆடு இரண்டும் ஒற்றுமையாய் நீர் குடிக்கும். இது ஒரு
01.09.2016
(3/4)
உதாரணமாகும். அங்கே அழுக்காக்கக் கூடிய பொருள் இருப்பதில்லை. இங்கே நோய்கள், கொசுக்கள் முதலானவை
நிறைய உள்ளன. அங்கே இப்படிப்பட்ட எதுவும் இருக்காது. பணக்கார மனிதர்களிடம் ஃபர்னிச்சர்கள் (இருக்கைகள்
முதலியன) கூட முதல் தரமானதாக இருக்கும். ஏழைகளின் ஃபர்னிச்சர்கள் சாதாரணமாக இருக்கும். பாரதம்
இப்போது ஏழையாக உள்ளது, எவ்வளவு குப்பையாக ஆகி விட்டுள்ளது. சத்யுகத்தில் எவ்வளவு சுத்தமாக
இருக்கும். தங்கத்தாலான மாளிகைகள் முதலானவை எவ்வளவு முதல் தரமாக இருக்கும். கிருஷ்ணரோடு
எத்தனை அழகிய பசுக்களைக் காட்டியுள்ளனர். கிருஷ்ணபுரியில் பசுக்கள் கூட இருக்குமல்லவா ! அங்குள்ள
பொருட்கள் எவ்வளவு முதல் தரமாக இருக்கின்றன. சொர்க்கம் என்றால் பின் என்ன என நினைக்கிறீர்கள்!
இந்த பழைய சீச்சீ உலகத்தில் மிகவும் குப்பையாக உள்ளது. இவை அனைத்தும் இந்த ஞான யக்ஞத்தில்
அர்ப்பணமாகி விடும். எப்படி எப்படியெல்லாம் அணுகுண்டுகளை தயாரித்துக் கொண்டிருக்கின்றனர்.
அணுகுண்டை வீசினால் உடனே நெருப்பு வெளிப்படும். இன்றைய நாட்களில் அளவற்ற அழிவடைந்து
விடுமாறு நுண்ணிய வியாதி உண்டாக்கும் கிருமிகளைப் போட்டு வினாசம் செய்கின்றனர். மருத்துவம் பார்ப்பதற்
காக மருத்துவ மனை முதலானவை இருக்காது. தந்தை சொல்கிறார் லி குழந்தைகளுக்கு எந்த கஷ்டமும்
ஏற்படக்கூடாது, ஆகையால் இயற்கையின் சீற்றங்கள், அடை மழை என பாடப்பட்டுள்ளது. குழந்தைகள்
வினாசத்தின் காட்சிகளைக்கூட பார்த்திருக்கின்றனர். வினாசம் கண்டிப்பாக ஆக வேண்டியுள்ளது என புத்தியும்
சொல்கிறது. வினாசத்தின் நேரிடை காட்சி தெரியட்டும், பிறகு பார்க்கலாம் என சிலர் சொல்கின்றனர், நல்லது,
நம்பிக்கை இல்லையா, அது உங்கள் விருப்பம் என சொல்லுங்கள். நாங்கள் ஆத்மாவின் காட்சியைப் பார்த்தால்
நம்புவோம் என சிலர் சொல்வார்கள். நல்லது, ஆத்மா புள்ளியாக உள்ளது. பார்த்து விட்டால் மட்டும் என்ன
ஆகப்போகிறது? இதன் மூலம் சத்கதி ஏற்படுமா என்ன? பரமாத்மா அகண்ட ஜோதி சொரூபமாக இருப்பவர்,
ஆயிரம் சூரியனை விடவும் பிரகாசமானவர் என சொல்கின்றனர். ஆனால் அப்படி இல்லை. நிறுத்துங்கள்,
என்னால் தாங்க முடியவில்லை என அர்ஜுனன் சொன்னதாக கீதையில் எழுதியுள்ளது. இப்படிப்பட்ட விசயங்கள்
எதுவும் இல்லை. தந்தையை யாராவது பார்த்து என்னால் (பிரகாசமான ஒளியை) காண சகித்துக் கொள்ள
முடியவில்லை என சொல்வார்களா என்ன, அப்படியெல்லாம் எதுவுமில்லை. ஆத்மா எப்படி உள்ளதோ பரமபிதா
பரமாத்மா தந்தையும் அப்படித்தான் இருப்பார். அவர் மட்டும் ஞானக்கடலாக இருக்கிறார். உங்களுக்குள்ளும்
ஞானம் இருக்கிறது. தந்தைதான் வந்து படிப்பிக்கிறார், வேறு எந்த விசயமும் இல்லை. யார் யார் எந்த
பாவனையில் நினைக்கின்றனரோ அந்த பாவனையை நிறைவேற்றி வைக்கிறேன். அதுவும் கூட நாடகத்தில்
பதிவாகியுள்ளது. மற்றபடி பகவான் யாருக்கும் கிடைப்பதில்லை. மீரா காட்சியைப் பார்த்ததில் எவ்வளவு குμ
அடைந்திருந்தார். அடுத்த பிறவியில் கூட பக்தையாக ஆகியிருக்கக் கூடும். வைகுண்டத்திற் கென்னவோ
செல்ல முடியாது. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் வைகுண்டம் செல்வதற்காக ஏற்பாடுகள் செய்து
கொண்டிருக்கிறீர்கள். நாம் வைகுண்டத்திற்கு, கிருஷ்ணபுரிக்கு எஜமானாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என
அறிவீர்கள். இங்கோ, அனைவருமே நரகத்தின் எஜமானாக உள்ளனர். வரலாறுலிபுவியியல் திரும்பவும்
நடக்கும் அல்லவா. நாம் நம்முடைய இராஜ்ய பாக்கியத்தை மீண்டும் எடுத்துக் கொண்டிருக்கிறோம் என
குழந்தைகளுக்குத் தெரியும். இது இராஜயோக பலமாகும். தோள் பலத்தின் சண்டை பலமுறை, பல பிறவிகள்
நடந்தன. யோகபலத்தின் மூலம் உங்களுடைய ஏறும் கலை ஏற்படுகிறது. சொர்க்கத்தின் இராஜ்யம் ஸ்தாபனை
ஆகிக் கொண்டிருக்கிறது என அறிவீர்கள். யார் கல்பத்திற்கு முன்பாக எப்படி முயற்சி செய்திருப்பார்களோ,
அப்படியே செய்வார்கள். நீங்கள் மனமுடைந்து போய்விடக் கூடாது. யார் உறுதியான நிச்சயபுத்தியுள்ளவர்களோ,
அவர்களுக்கு ஒருபோதும் சந்தேகம் வர வாய்ப்பில்லை. சந்தேக புத்தி உள்ளவர்களாகவும் கண்டிப்பாக
இருக்கின்றனர். ஆச்சர்யப்படும்படியாக கேட்டு, பிறருக்கும் சொல்லி, பின் (பாபாவை விட்டு) ஓடிப்போனவர்களாக
ஆகி விடுகின்றனர் என பாபா சொல்லியிருக்கிறார். ஆஹா மாயா, நீ இவர்களை வெற்றி கொண்டு விடுகிறாய்.
மாயை மிகவும் பலசாலியாக உள்ளது. நல்ல நல்ல முதல்தரமான சேவை செய்யக் கூடிய, செண்டரை நடத்தக்
கூடியவர்களைக் கூட மாயை அடித்துப் போட்டு விடுகிறது. பாபா திருமணம் செய்து கொண்டு முகத்தைக்
கருப்பாக்கி விட்டேன், காமக் கோடரியால் நான் தோல்வி அடைந்து விட்டேன் என எழுதுகின்றனர். பாபா
இப்போது உங்கள் முன்னால் வரத் தகுதியற்றவனாய் ஆகி விட்டேன். பிறகு, பாபா நேரில் வரட்டுமா என
கேட்டு எழுதுகின்றனர். முகத்தைக் கருப்பாக்கிக் கொண்டாயிற்று, இப்போது நீ இங்கே வரமுடியாது என பாபா
எழுதுகிறார். இங்கே வந்து என்ன செய்வாய். ஆனாலும் கூட அங்கேயே இருந்து முயற்சி செய். ஒரு
முறை விழுந்தது விழுந்ததுதான். இராஜ்ய பதவி அடைய முடியும் என்பதல்ல. ஏறினால் ஒரேயடியாக
வைகுண்ட ரசம், விழுந்தால் ஒரேயடியாக சண்டாளர். . . எலும்புகள் எல்லாம் உடைந்து விடும் என்று
சொல்லப்படுகிறது அல்லவா. 5 ஆவது மாடியில் இருந்து விழுகின்றனர், பின்னர் ஒரு சிலர் உண்மையை
எழுதுகின்றனர். ஒரு சிலரோ சொல்வதே இல்லை. இந்திரபிரஸ்தத்தின் தேவதைகளின் உதாரணம் உள்ளதல்லவா.
இது முற்றிலும் ஞானத்தின் விஷயமாகும். இந்த சபையில் தூய்மையற்ற யாரும் அமருவதற்கு அனுமதி
கிடையாது. ஆனால் சில சூழ்நிலையில் அமர வைக்க வேண்டியுள்ளது. தூய்மையற்றவர்கள்தான் வருவார்கள்
01.09.2016
(4/4)
அல்லவா. இப்போது பாருங்கள் எவ்வளவு திரௌபதிகள் கூப்பிடுகின்றனர், பாபா எங்களை துகிலுரிவதிலிருந்து
காப்பாற்றுங்கள் என கதறுகின்றனர். பந்தனத்திலிருப்பவர்களின் நடிப்பும் நடக்கிறது. காமேசு (காமம் நிறைந்தவர்),
குரோதேசு (குரோதம் நிறைந்தவர்) கூட இருக்கின்றனர் அல்லவா. பெரிய பிரச்சினைகள் உண்டாகின்றன.
பாபாவிடம் செய்திகள் வருகின்றன. குழந்தைகளே இதன் மீது வெற்றி கொள்ளுங்கள் என எல்லைக்கப்பாற்பட்ட
தந்தை சொல்கிறார். இப்போது தூய்மையாய் இருந்து, என்னை நினைவு செய்தீர்கள் என்றால் உலகின்
எஜமான் ஆவீர்கள் என்பது உறுதி. யாரோ தூண்டுதல் கொடுத்து எங்களை இந்த அணு ஆயுதங்களை
செய்விக்கிறார்கள் என செய்தித்தாள்களில் தாமே போடுகின்றனர். இதன் மூலம் அவர்களுடைய குலமே
நாசமாகும். ஆனால் என்ன செய்வது, நாடகத்தில் பதிவாகியுள்ளது, நாளுக்கு நாள் உருவாக்கியபடி இருக்கின்றனர்.
நேரம் அதிகம் இல்லையல்லவா. நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு
தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம் :
1. சத்யுகத்தின் அன்பான இராஜ்யத்தில் செல்வதற்காக மிக மிக அன்பானவராக ஆக வேண்டும்.
இராஜ்ய பதவிக்காக கண்டிப்பாக தூய்மை அடைய வேண்டும். அகையால் காமம் எனும்
மிகப் பெரிய எதிரியின் மீது வெற்றி கொள்ள வேண்டும்.
2. இந்த பழைய உலகத்தின் மீது எல்லையற்ற வைராக்கியம் உள்ளவராக ஆவதற்காக
தேகத்துடன் சேர்த்து இந்த கண்களால் காணும் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாலும்
பாராமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு காலடியிலும் தந்தையிடம் வழி (அறிவுரை) கேட்டு
நடக்க வேண்டும்.
வரதானம் : பேச்சின் மூலம் ஞான ரத்தினங்களின் தானம் செய்யக்
கூடிய மாஸ்டர் ஞானம் நிறந்தவர் ஆகுக.
வார்த்தைகள் மூலம் ஞான ரத்தினங்களின் தானத்தைக் கொடுப்பவர்களுக்கு மாஸ்டர் ஞானம்
நிறைந்தவர் என்ற வரதானம் பிராப்தி ஆகிறது. அவர்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் மதிப்பு
மிக்கதாக ஆகிறது. அவர்களது ஒவ்வொரு சொல்லையும் கேட்பதற்காக தாகத்துடன் இருப்பார்கள். அவர்களின்
ஒவ்வொரு வார்த்தையிலும் சாரம் நிறைந்திருக்கும். அவர்களுக்கு விசே'மான குμ பிராப்தி ஆகிறது.
அவர்களிடம் (ஞான) பொக்கிஷம் நிறைந்திருக்கும், ஆகையால் அவர்கள் எப்போதும் திருப்தி மற்றும்
மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்களுடைய பேச்சு தாக்கம் (பிரபாவம்) மிக்கதாக இருக்கும். வார்த்தைகளால்
ஞான தானத்தை செய்வதன் மூலம் பேசும்போது அதிக குணங்கள் வெளி வரும்.
சுலோகன் : சுயராஜ்யத்தின் எஜமான் ஆகிவிட்டீர்கள்
என்றால் ஆஸ்திக்கு அதிகாரம் கிடைத்து விடும்.
02
.09.16 காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! தனது உண்மையிலும் உண்மையான சார்ட் வைக்கும் போது
மனநிலை நன்றாக இருக்கும், சார்ட் வைப்பதன் மூலம் நன்மை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
கேள்வி: எந்த நினைவானது பழைய உலகிலிருந்து எளிதாகவே தூரமாக்கி விடும்?
பதில்: நாம் கல்ப கல்பமாக தந்தையிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தி அடைகிறோம், இப்போது
மீண்டும் பெறுவதற்காக சிவபாபாவின் மடியில் வந்திருக்கிறோம். பாபா நம்மை தத்தெடுத்திருக்கின்றார்,
நாம் உண்மையிலும் உண்மையான பிராமணர்களாக ஆகியிருக்கிறோம், சிவபாபா நமக்கு கீதை கூறிக்
கொண்டிருக்கின்றார் என்ற நினைவு இருந்தால் இது பழைய உலகிலிருந்து விடுபடச் செயது விடும்.
ஓம் சாந்தி. குழந்தைகளாகிய நீங்கள் இங்கு சிவபாபாவின் நினைவில் அமர்ந்திருக்கிறீர்கள், அவர்
மீண்டும் நம்மை சுகதாமத்திற்கு எஜமானர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார் என்பதை அறிவீர்கள். ஆக
குழந்தைகளின் புத்தியில் எவ்வளவு குμ இருக்க வேண்டும்! இங்கு அமர்ந்திருக்கும் போது குழந்தைகளுக்கு
பொக்கிஷம் கிடைக்கிறது அல்லவா! எந்த கல்லூரியிலும் அல்லது பல்கலைக்கழகத்திலும் யாருடைய
புத்தியிலும் இந்த விசயங்கள் இருப்பது கிடையாது. பாபா நம்மை சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆக்கிக்
கொண்டிருக்கின்றார் என்பதை நீங்கள் மட்டுமே அறிவீர்கள். இந்த குμ இருக்க வேண்டும் அல்லவா!
இந்த நேரத்தில் மற்ற அனைத்து எண்ணங்களையும் நீக்கி விட்டு ஒரே ஒரு தந்தையை மட்டுமே
நினைவு செய்ய வேண்டும். இங்கு அமரும் போது நாம் இப்போது சுகதாமத்திற்கு எஜமானர்களாக ஆகிக்
கொண்டிருக்கிறோம் என்ற போதை புத்தியில் இருக்க வேண்டும். சுகம் மற்றும் அமைதிக்கான ஆஸ்தியை
நாம் கல்ப கல்பமாக அடைகிறோம். மனிதர்கள் எதையும் அறியவில்லை. கல்பத்திற்கு முன்பும் நிறைய
மனிதர்கள் அஞ்ஞான உறக்கத்தில் கும்பகர்ணன் போன்று தூங்கி அழிந்து போய் விட்டனர். மீண்டும்
(ஈஸ்வரிய தர்மத்திற்கு) அவ்வாறே நிகழும். தந்தை நம்மை தத்தெடுத்திருக்கின்றார் அல்லது நாம் சிவபாபாவின்
தர்ம மடியில் வந்திருக்கிறோம் என்பதை குழந்தைகள் அறிவீர்கள். அவர் ஆதி சநாதன தேவி தேவதா
தர்மத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கின்றார். இப்போது நாம் பிராமணர்களாக இருக்கிறோம். நாம்
உண்மையிலும் உண்மையான கீதையின் பாடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நாம் பாபாவிடமிருந்து
மீண்டும் இராஜயோகம் மற்றும் ஞான பலத்தின் மூலம் ஆஸ்தி அடைகிறோம். இப்படிப்பட்ட எண்ணங்கள்
உள்ளுக்குள் வர வேண்டும் அல்லவா! தந்தையும் வந்து குμக்கான விசயங்கள் கூறுகிறார் அல்லவா!
குழந்தைகள் காமச் சிதையில் அமர்ந்து கருப்பாகி பஸ்மமாகி (எரிந்து சாம்பலாகி) விட்டனர், அதனால்
தான் அமரலோகத்திலிருந்து மரணலோகத்திற்கு வருகிறேன். பிறகு மரணலோகத்திலிருந்து அமரலோகத்திற்குச்
செல்கிறோம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். தந்தை கூறுகின்றார் லி நான் மரணலோகத்திற்குச் செல்கிறேன்,
அங்கு அனைவருக்கும் மரணம் ஏற்பட்டு விட்டது, அவர்களை மீண்டும் அமரலோகத்திற்கு அழைத்துச்
செல்கிறேன். சாஸ்திரங்களில் என்னென்னவோ எழுதி வைத்து விட்டனர்! அவர் சர்வசக்தி வாய்ந்தவர்,
அவர் என்ன விரும்பினாலும் செய்து விட முடியும். என்பது போன்று ஆனால் ஹே பதீத பாவனனே!
வாருங்கள், வந்து நம்மை தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மை ஆக்குங்கள் என்று தான் அவர்
அழைக்கப்படுகின்றார், துக்கம் நீக்கி சுகம் கொடுங்கள் என்பதை குழந்தைகள் அறிவீர்கள். இதில்
மாயாஜாலத்திற்கான விசயம் எதுவும் கிடையாது. முள்ளிலிருந்து மலர் ஆக்குவதற்காகவே தந்தை வருகின்றார்.
நாம் தான் சுகதாமத்தின் தேவதைகளாக இருந்தோம், சதோ பிரதானமாக இருந்தோம் என்பதை
நீங்கள் அறிவீர்கள். ஒவ்வொருவரும் சதோபிரதானத்திலிருந்து தமோபிரதானத்திற்கு வந்தே ஆக வேண்டும்.
குழந்தைகள் இங்கு அமர்ந்திருக்கும் பொழுது போதை மேலும் அதிகரிக்க வேண்டும். நினைவு வர
வேண்டும். தந்தையைத் தான் முழு உலகமும் நினைவு செய்கிறது. ஹே விடுவிக்கக் கூடியவரே (லி
பரேட்டர்), வழிகாட்டி, ஹே பதீத பாவனனே ! வாருங்கள். எப்போது இராவண இராஜ்யமோ அப்போது
தான் அழைக்கின்றனர். சத்யுகத்தில் அழைப்பதே கிடையாது. இந்த விசயங்கள் புரிந்து கொள்வதற்கு
மிகவும் எளிய விசயமாகும். இதை கூறியது யார்? தந்தையின் மகிமையும் செய்வார்கள், ஆசிரியர்,
சத்குருவின் மகிமையும் செய்வார்கள் லி மூவரும் ஒருவர் தான். இது உங்களது புத்தியில் இருக்கிறது. இவர்
தந்தை, ஆசிரியர், சத்குருவாகவும் இருக்கின்றார். தூய்மையற்றவர்களை தூய்மை ஆக்குவது தான் சிவபாபாவின்
தொழிலாகும். தூய்மையை இழந்தவர்கள் அவசியம் துக்கமாக இருப்பார்கள். சதோபிரதானமானவர்கள்
சுகமாகவும், தமோபிரதானமானவர்கள் துக்கமானவர்களாகவும் இருப்பார்கள். இந்த தேவதைகளின் சுபாவம்
எவ்வளவு சதோபிரதானமாக இருக்கிறது! இங்கு மனிதர்களின் சுபாவம் கலியுக, தமோபிரதானமானது
(2/4)
02.09.2016
ஆகும். ஆம், மனிதர்கள் வரிசைக்கிரமமாக நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் இருக்கின்றனர். இவர்கள்
கெட்டவர்கள், இன்னார் இவ்வாறு இருக்கின்றனர் என்று சத்யுகத்தில் ஒருபோதும் கூறமாட்டார்கள். அங்கு
எந்த கெட்ட இலட்சணங்களின் அறிகுறியே இருக்காது. அது தெய்வீக வம்சமாகும். ஆம், செல்வந்தர்
மற்றும் ஏழைகள் இருப்பார்கள். மற்றபடி நல்லவர் மற்றும் கெட்டவர் என்ற வேறுபாடு அங்கு இருக்காது.
அனைவரும் சுகமாக இருப்பார்கள். துக்கத்திற்கான விசயம் கிடையாது, பெயரே சுகதாமம் ஆகும். ஆக
குழந்தைகள் தந்தையிடமிருந்து முழு ஆஸ்தி அடைவதற்கான முயற்சி செய்ய வேண்டும். தனது சித்திரம்
மற்றும் லெட்சுமி நாராயணன் சித்திரத்தையும் வைத்துக் கொள்ளுங்கள். இவர்களுக்கு கற்றுக் கொடுப்பவர்
யார்? என்று கேட்பார்கள். இது பகவானின் மகாவாக்கியம் அல்லவா! பகவானுக்கு தனக்கென்று சரீரம்
கிடையாது. அவர் வந்து லோனாக எடுக்கின்றார். பகீரதன் (பாக்ய ரதம்) என்றும் பாடப்பட்டிருக்கிறது
எனில் அவசியம் ரதத்தில் வந்திருக்க வேண்டும். காளையின் மீது வரமாட்டார். சிவன் மற்றும் சங்கரை
ஒன்றாக ஆக்கி விட்டனர். அதனால் தான் காளை வாகனத்தைக் கொடுத்து விட்டனர். ஆக தந்தை
கூறுகின்றார் லி உங்களுக்கு எவ்வளவு குμ ஏற்பட வேண்டும்! நாம் தந்தையினுடையவராக ஆகிவிட்டோம்.
நான் உங்களுடையவன் என்று தந்தையும் கூறுகின்றார். பதவி அடையும் குμ தந்தையிடம் கிடையாது.
ஆசிரியர் ஆசிரியர் தான், அவர் கற்பிக்க வேண்டும். தந்தை கூறுகின்றார் லி குழந்தைகளே! நான் சுகக்
கடலானவன். நான் உங்களை தத்தெடுத்தபடியால் இப்போது நீங்கள் அதீந்திரிய சுகம் அடைகிறீர்கள்.
ஒவ்வொரு விதத்திலும் தத்தெடுப்பு என்பது நடைபெறுகிறது. ஆண்கள் கன்னியாவை தத்தெடுக்கின்றனர்.
இவர் எனது கணவன் என்று அவள் நினைக்கிறாள். சிவபாபா நம்மை தத்தெடுத்திருக்கின்றார் என்பதை
இப்போது நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். உலகத்தினர் இந்த விசயங்களை புரிந்துக் கொள்வது கிடையாது.
அவர்களது அந்த தத்தெடுப்பு ஒருவருக்கொருவர் காமத்தில் செல்வதற்கான தத்தெடுப்பாகும். யாராவது
அரசர் குழந்தைளைத் தத்தெடுக்கின்றார் என்று வைத்துக் கொள்ளுங்கள், சுகத்திற்காக தத்தெடுக்கின்றனர்,
ஆனால் அது அல்ப கால சுகமாகும். சந்நியாசிகளும் தத்தெடுக்கின்றனர் அல்லவா! இவர் என்னுடைய
குரு என்று அவர்கள் கூறுவர். இவர்கள் எனது சிஷ்யர்கள் என்று அவர் கூறுவார். பலவித தத்தெடுப்பு
நடைபெறுகிறது! உலகாயத தந்தை குழந்தைகளை தத்தெடுக்கின்றார். அவர்களுக்கு சுகம் கொடுக்கின்றார்,
பிறகு திருமணம் செய்து வைப்பபதன் மூலம் துக்கத்திற்கான ஆஸ்தியை கொடுத்து விடுகின்றார். குருவின்
(சிவபாபா) தத்தெடுப்பு எவ்வளவு முதல் தரமானதாக இருக்கிறது! இது ஈஸ்வரீய தத்தெடுப்பாகும், ஆத்மாக்களை
தன்னுடையவராக ஆக்கும் தத்தெடுப்பாகும். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் அனைத்து தத்தெடுப்புகளைப்
பற்றி அறிந்து கொண்டீர்கள். சந்நியாசிகளாக இருந்தாலும் ஹே பதீத பாவனனே வாருங்கள், வந்து
நம்மை தத்தெடுத்து தூய்மையாக்குங்கள் என்று பாடுகின்றனர். அனைவரும் சகோதரர்கள். ஆனால் அவர்
வந்து தன்னுடையவர்களாக ஆக்க வேண்டும் அல்லவா! பாபா, நாம் துக்கமானவர்களாக ஆகிவிட்டோம்
என்று கூறுகின்றனர். இராவண இராஜ்யத்தின் பொருளையும் புரிந்து கொள்வது கிடையாது. உருவ
பொம்மை உருவாக்கி எரித்துக் கொண்டே இருக்கின்றனர். யாராவது துக்கம் கொடுக்கின்றனர் எனில்
இவர் மீது வழக்கு போட வேண்டும் என்று நினைப்பர். ஆனால் இவர் எப்போதிலிருந்து எதிரியாக
ஆனார்? இந்த எதிரி இறப்பாரா? இல்லையா? இந்த எதிரி பற்றி உங்களுக்குத் தெரியும். அவர் மீது
வெற்றியடைவதற்காக நீங்கள் தத்தெடுக்கப்பபட்டிருக்கிறீர்கள். விநாசம் ஆகிவிடும், அணுகுண்டும்
தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள். இந்த ஞான யக்ஞத்தின் மூலம்
தான் விநாச நெருப்பு ஏற்பட்டிருக்கிறது. இராவணன் மீது வெற்றியடைந்து பிறகு புது உலகில் இராஜ்யம்
செய்வோம் என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள். மற்ற அனைத்தும் பொம்மை விளையாட்டாகும்.
இராவணனின் பொம்மை அதிக செலவு ஏற்படுத்துகிறது. மனிதர்கள் அதிக செல்வத்தை தவறாக
செலவழிக்கின்றனர். இரவு பகல் வித்தியாசம் இருக்கிறது. அவர்கள் அலைந்து துக்கமானவர்களாக, ஏமாற்றம்
அடைந்து கொண்டே இருக்கின்றனர். ஆனால் நாம் இப்போது ஸ்ரீமத் படி நடந்து, சத்யுக சுயராஜ்யத்தை
அடைந்து கொண்டிருக்கிறோம். உயர்ந்ததிலும் உயர்ந்த சத்யுகத்தை ஸ்தாபனை செய்யக் கூடிய சிவபாபா
நம்மை உயர்ந்த தேவதைகளாக, உலகிற்கு எஜமானர்களாக ஆக்குகின்றார். ஸ்ரீ ஸ்ரீ சிவபாபா நம்மை ஸ்ரீ
ஆக ஆக்குகின்றார். ஸ்ரீ ஸ்ரீ என்று ஒரே ஒருவர் தான் கூறப்படுகின்றார். தேவதைகள் ஸ்ரீ என்று
அழைக்கப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள் மறுபிறவிகளில் வருகின்றனர் அல்லவா! உண்மையில் விகாரி
அரசர்களையும் ஸ்ரீ என்று கூற முடியாது.
இப்போது உங்களது புத்தி எவ்வளவு விசாலமானதாக (சக்திசாலி) ஆகவேண்டும். நாம் இந்த
படிப்பின் மூலம் இரட்டை கிரீடதாரிகளாக ஆகிறோம் என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள். நாம் தான்
இரட்டை கிரீடதாரிகளாக இருந்தோம், இப்போது ஒரு கிரீடமும் கூட கிடையாது. தூய்மை இல்லை
(3/4)
02.09.2016
அல்லவா! இங்கு யாருக்கும் ஒளிக்கிரீடம் கொடுக்க முடியாது. இந்த சித்திரங்களில் எங்கு எந்த நிலையில்
நீங்கள் தபஸ்யா செய்து கொண்டிருக்கிறீர்களோ அதில் ஒளிக்கிரீடம் கொடுக்கக் கூடாது. நீங்கள் இரட்டை
கிரீடதாரிகளாக எதிர்காலத்தில் ஆக வேண்டும். நாம் பாபாவிடமிருந்து இரட்டை கிரீடதாரி மகாராஜா,
மகாராணி ஆவதற்காக வந்திருக்கிறோம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இந்த குμ
இருக்க வேண்டும். சிவபாபாவை நினைவு செய்யும் போது தூய்மை இல்லாத நிலையிலிருந்து தூய்மையாகி
சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆகிவிடுவீர்கள். இதில் கஷ்டப்படுவதற்கான விசயம் எதுவும் கிடையாது.
இங்கு நீங்கள் மாணவர்களாக அமர்ந்திருக்கிறீர்கள். அங்கு வெளியில் உற்றார், உறவினர்களிடம் செல்கின்ற
பொழுது மாணவ வாழ்க்கையை மறந்து விடுகிறீர்கள். பிறகு உற்றார், உறவினர்களின் நினைவு வந்து
விடுகிறது. மாயையின் அழுத்தம் இருக்கிறது அல்லவா! மருத்துவமனையில் இருந்தாலும் படிப்பது நல்லதாகும்.
வெளியில் சென்று வருவதன் மூலம் கெட்ட தொடர்பின் மூலம் கெட்டு விடுகின்றனர். இங்கிருந்து
வெளியில் சென்றதும் மாணவ வாழ்க்கையின் போதை மறைந்து விடுகிறது. படிப்பு கற்பிக்கும்
பிராமணிகளுக்கும் இங்கு எந்த அளவு போதை இருக்குமோ அந்த அளவு அங்கு வெளியில் இருப்பது
கிடையாது. இது தலைமை நிலையம், மதுவனமாகும். மாணவர்கள் ஆசிரியரின் எதிரில் இருப்பர். எந்த
தொழிலும் கிடையாது. இரவு பகல் வித்தியாசம் இருக்கிறது. சிலர் முழு நாளும் சிவபாபாவை நினைவு
செய்வதே கிடையாது. சிவபாபாவிற்கு உதவியாளர்களாக ஆவது கிடையாது. சிவபாபாவின் குழந்தைகளாக
ஆகியிருக்கிறீர்கள் எனில் சேவை செய்யுங்கள். ஒருவேளை சேவை செய்யவில்லையெனில் அவர்கள்
பக்குவமற்ற குழந்தைகள் ஆவர். பாபா புரிய வைக்கின்றார் அல்லவா! என்னை நினைவு செய்யுங்கள்
என்று கூறுவது இவரது கடமையாகும். பின்பற்றினால் அதிக நன்மை ஏற்படும். விகார சம்மந்தங்கள்
மிகவும் கீழானது. அதை விட்டுக் கொண்டே செல்லுங்கள், அவர்களிடம் சகவாசம் வைத்துக் கொள்ளாதீர்கள்.
தந்தை புரிய வைக்கின்றார், ஆனால் அதிர்ஷ்டம் இருக்க வேண்டும் அல்லவா! சார்ட் வையுங்கள், இதன்
மூலமும் அதிக நன்மை ஏற்படும் என்று பாபா கூறுகின்றார். ஒரு மணி நேரம் நினைவில் இருப்பதும்
சிலருக்கு கடினமாக இருக்கிறது. 8 மணி நேரம் கடைசியில் அடைவீர்கள். கர்மயோகிகளாக இருக்கிறீர்கள்
அல்லவா! சிலருக்கு அவ்வபோது ஆர்வம் ஏற்படும் போது சார்ட் வைக்கின்றனர். இது நல்லதாகும். எந்த
அளவிற்கு நினைவு செய்வீர்களோ நன்மையே ஆகும். கடைசி நேரத்தில் யார் ஹரியை நினைக்கிறார்களோ
....... என்றும் பாடப்பட்டிருக்கிறது. அடிக்கடி என்பதன் பொருள் என்ன? யார் நல்ல முறையில் நினைவு
செய்யவில்லையோ அதாவது அவர்களுடைய ஜென்ம ஜென்மங்களுக்கான எவ்வளவு சுமைகள்
இருக்கின்றனவோ அவை மீண்டும் மீண்டும் பிறவியைக் கொடுத்து சாட்சாத்காரம் செய்வித்து தண்டனை
கொடுக்கும். எவ்வாறு காசியில் பலியாகின்ற போது உடனேயே பாவங்களின் சாட்சாத்காரம் ஏற்பட்டு
விடுகிறது. நான் பாவங்களின் தண்டனை அனுபவிக்கிறேன் என்று உணருவார்கள். அதிக தண்டனை
அடையக் கூடியவர்கள் இருக்கிறார்கள். பாபாவின் சேவையில் யார் தடை போடுகிறார்களோ அவர்கள்
தண்டனை அடைவதற்கு தகுதியானவர்கள் ஆவர். தந்தையின் சேவையில் தடை போடுகின்றனர். தந்தையின்
வலது கரமாக தர்மராஜர் இருக்கின்றார். தந்தை கூறுகின்றார் லி தனக்குள்ளேயே உறுதிமொழி எடுத்துக்
கொள்ளுங்கள், ஏனெனில் தந்தையின் நினைவின் மூலம் தான் நீங்கள் தூய்மை அடைவீர்கள்.
இல்லையெனில் ஆகமாட்டீர்கள். தந்தை உறுதிமொழி எடுக்க வைக்கின்றார், செய்வது செய்யாதது உங்களது
விருப்பமாகும். யார் செய்கிறார்களோ அவர்கள் அதன் பலனை அடைவார்கள். பலர் உறுதிமொழியும்
செய்கின்றனர், இருப்பினும் கெட்ட காரியங்கள் செய்து கொண்டே இருக்கின்றனர். எனக்கு ஒருவரைத்
தவிர வேறு யாரும் கிடையாது என்று பக்தி மார்க்கத்திலும் பாடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ஆத்மா
ஏன் அவ்வாறு கூறி வந்தது? என்ற விசயம் இப்போது புத்தியில் வருகிறது. எனக்கு ஒரே ஒரு கிரீதரன்
கோபால் ...... என்று முழு நாளும் பாடிக் கொண்டே இருக்கின்றனர். சங்கமத்தில் தந்தை வரும் போது
தான் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்வார், கிருஷ்ணபுரி செல்வதற்காக நீங்கள் படிக்கிறீர்கள் அல்லவா!
இளவரசர்களுக்காக தனி கல்லூரி இருக்கிறது, அங்கு இளவரசர், இளவரசி படிப்பர். அது எல்லைக்குட்பட்ட
விசயமாகும். சில நேரங்களில் வியாதி வந்து விடுகிறது, சில நேரம் இறந்து விடுகின்றனர். இது இளவரசர்,
இளவரசி ஆவதற்கான இறை தந்தையின் பல்கலைக்கழகமாகும். இராஜயோகம் அல்லவா! நீங்கள் நரனிலி
ருந்து நாராயணனாக ஆகிறீர்கள். நீங்கள் தந்தையிடம் ஆஸ்தி அடைந்து இளவரசர், இளவரசியாக
ஆகிறீர்கள். தந்தை எவ்வளவு போதைக்கான விசயத்தை அமர்ந்து கூறுகின்றார். நினைவில் வைத்துக்
கொள்ள வேண்டும் அல்லவா! சிலர் இங்கிருந்து வெளியில் சென்றதும் வலையில் மாட்டிக் கொள்கின்றனர்.
தந்தையை வரிசைக்கிரமமாக நினைவு செய்கின்றனர். யார் அதிகமாக நினைவு செய்வார்களோ அவர்கள்
மற்றவர்களையும் அதிகம் நினைவு செய்ய வைப்பார்கள். பலருக்கு எப்படி நன்மை செய்வது? என்பது
(4/4)
02.09.2016
புத்தியில் இருக்க வேண்டும். வெளியில் உள்ளவர்கள் பிரஜைகளுக்கு வேலைக்காரர்களாகவும், இங்கிருப்பவர்
கள் இராஜாக்களுக்கு வேலைக்காரர்களாக ஆவார்கள். நாள் செல்ல செல்ல அனைத்தும் சாட்சாத்காரம்
ஏற்படும். நான் முழுமையான முயற்சி செய்யவில்லை என்று நீங்களும் உணர்வீர்கள், அதிக அற்புதங்களைக்
காண்பீர்கள். யார் நன்றாக படிக்கிறார்களோ அவர்கள் நவாப் (எஜமானர்) ஆவார்கள். சென்டர்களில்
கண்காட்சிக்கான படங்களை கொடுக்கிறேன் எனில் குழந்தைகளுக்கு கற்பித்து புத்திசாலிகளாக ஆக்க
வேண்டும் என்று தந்தை எவ்வளவு முறை கூறிக் கொண்டே இருக்கிறார். அப்போது தான் பி.கு சேவை
செய்ய கற்றிருக்கிறார்கள் என்பதை பாபா புரிந்து கொள்வார். சேவை செய்தால் உயர்ந்த பதவி அடைவீர்கள்,
அதனால் தான் கண்காட்சிக்கான படங்களை உருவாக்குவதற்காக பாபா வலியுறுத்திக் கூறுகின்றார். இந்த
சித்திரங்களை உருவாக்குவது மிகவும் பொதுவான விசயமாகும். தைரியம் வைத்து கண்காட்சிக்கான
சித்திரங்களை உருவாக்குவதில் உதவி செய்தால் புரிய வைப்பதில் குழந்தைகளுக்கு எளிதாகி விடும்.
ஆசிரியர்கள், மேனேஜர்கள் மிகவும் குளிர்ச்சியாக இருக்கின்றனர் என்பதை பாபா புரிந்திருக்கிறார். சில
பிராமணிகள் மேனேஜர்களாக ஆகிவிடும் போது தேக அபிமானம் வந்து விடுகிறது. தன்னைத் தான்
அதிபுத்திசாலி என்று நினைக்கின்றனர். நான் மிகவும் நன்றாக நடந்து கொள்கிறேன், (அவர்களைப் பற்றி)
மற்றவர்களிடம் கேட்டால் 10 விசயங்களை கூறுவர். மாயை மிகப் பெரிய சங்கடத்தில் ஆழ்த்தி விடுகிறது.
குழந்தைகள் சேவை, சேவை என்று இருக்க வேண்டும். தந்தை கருணை உள்ளமுடையவராக, துக்கம்
நீக்கி சுகம் கொடுப்பவர் எனில் குழந்தைகளும் அப்படி ஆக வேண்டும். தந்தையின் அறிமுகம் கொடுத்தால்
போதும். என் ஒருவனை நினைவு செய்தால் நரகவாசியிலருந்து சொர்க்கவாசியாக ஆகிவிடுவீர்கள் என்று
தந்தை கூறுகின்றார். எவ்வளவு எளிதாக இருக்கிறது! என்னை நினைவு செய்தால் தூய்மை அற்றவரிலி
ருந்து தூய்மையானவர்களாகி நீங்கள் சாந்திôமம், சுகதாமத்திற்கு வந்து விடுவீர்கள் என்று தந்தை கூறுகின்றார்.
நிச்சயம் இருக்கிறது எனில் ஒரேயடியாக எழுதி வாங்கி விட வேண்டும். பிரம்மா குமார், குமாரிகள்
சிவபாபாவிடமிருந்து ஆஸ்தி அடைகின்றனர் என்று எழுதவும் செய்கின்றனர். ஆக அப்படிப்பட்ட தந்தையை
அவசியம் நினைவு செய்ய வேண்டும். பாதுகாப்பில் வந்து விட வேண்டும். நீங்கள் தந்தையின் பாதுகாப்பில்
வந்து விட்டீர்கள் அல்லவா, அதாவது மடியில் வந்து விட்டீர்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய்
தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) தந்தைக்கு சமமாக கருணையுள்ளம் உடையவராக, துக்கம் நீக்கி சுகம் கொடுப்பவராக ஆக
வேண்டும்.
2) கெட்ட சகவாசத்திலிருந்து தன்னை மிகவும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஒரே ஒரு
தந்தையை மட்டுமே பின்பற்ற வேண்டும். பலருக்கு நன்மை செய்யும் சேவை செய்ய வேண்டும்.
ஒருபோதும் அகங்காரத்தில் வந்து அதிபுத்திசாலி என்று எண்ணி விடக் கூடாது.
வரதானம்: செயலின் மூலம் குணங்களை தானம் செய்யக் கூடிய டபுள் லைட் ஃபரிஸ்தா ஆகுக.
எந்த குழந்தைகள் செயலின் மூலம் குணங்களை தானம் செய்கிறார்களோ அவர்களது நடத்தை
மற்றும் முகம் இரண்டும் ஃபரிஸ்தா போன்று தென்படும். அவர்கள் டபுள் லைட் அதாவது பிரகாசமாக
மற்றும் இலேசான நிலையின் அனுபவம் செய்வார்கள். அவர்களுக்கு எந்த சுமையின் அனுபவமும்
ஏற்படாது. ஒவ்வொரு காரியத்திலும் உதவியை ஏதோ ஒரு சக்தி நடத்திக் கொண்டிருக்கிறது என்பது
போன்ற அனுபவம் ஏற்படும். ஒவ்வொரு காரியத்தின் மூலம் மகாதானியாக ஆகின்ற காரணத்தினால்
அவர்களுக்கு அனைவரின் ஆசிர்வாதம் அல்லது அனைவரின் வராதானமும் கிடைக்கின்ற அனுபவம்
ஏற்படும்.
சுலோகன்: சேவையில் வெற்றி நட்சத்திரமாக ஆகுங்கள், பலவீனமாக அல்ல.
(1/4)
03
.09.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! தற்போது நீங்கள் அமர லோக யாத்திரையில் இருக்கிறீர்கள்.
இது உங்களது புத்தி மூலமான ஆன்மீக யாத்திரை, இதனை உண்மையிலும் உண்மையான
பிராமணர்களாகிய நீங்கள் தான் செய்ய முடியும்.
கேள்வி: உங்களிடையே எம்மாதிரியான உரையாடலை செய்வது சுபமான சம்மேளனம் (மாநாடு)
ஆகும்?
பதில்: உங்களுக்கு நீங்களே பேசிக் கொள்ளுங்கள், ஆத்மாக்களாகிய நாம் இப்பொழுது இந்த பழைய
அழுக்கான சீ, சீ சரீரத்தை விட்டு விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கிறோம். இந்த உடல் எந்த வேலைக்கும்
உதவாதது, இப்பொழுது பாபாவுடன் கூடவே செல்வோம். உங்களிடையே சந்திக்கும்பொழுது இம்மாதிரியான
உரையாடலை செய்யுங்கள், சேவையை அதிகரிப்பது எப்படி, அனைவருக்கும் நன்மை எந்த முறையில்
செய்வது, அனைவருக்கும் எவ்வாறு வழியைக் காண்பிப்பது....... இதுவே சுபமான சம்மேளனம் ஆகும்.
பாடல் : உள்ளத்தின் ஆதாரம் உடைந்து விடலாகாது......
ஓம் சாந்தி! இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள், அனைத்து சென்டர்களையும் சார்ந்த
பிரம்மா வழி வந்த சர்வோத்தம பிராமண குல பூஷணர்கள் தங்களது குலத்தை அறிவீர்களா, பொதுவாக எந்த
குலத்தைச் சார்ந்தவர்களோ அவர்கள் தங்களது குலத்தை அறிவார்கள். தாழ்ந்த குலத்தைச் சார்ந்தவர்களாயினும்
சரி, உயர்ந்த குலத்தைச் சார்ந்தவர்களாயினும் சரி, ஒவ்வொருவரும் தத்தம் குலத்தை அறிவார்கள். மேலும்
இந்த குலம் நல்லது என்றும் நினைக்கிறார்கள். குலம் என்றாலும் சரி, ஜாதி என்றாலும் சரி, உலகத்தில்
குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு எவரும் அறிவதில்லை, (சங்கமயுக) பிராமணர்களது குலமே மிக
உத்தமமானது. பிராமணர்களாகிய உங்களது குலத்தையே முதல் குலம் என்று சொல்வோம். பிராமண குலம்
என்றால் ஈஸ்வரிய (பகவானின் குலம்) முதலாவது நிராகாரமான குலம், பிறகு தான் இந்த பௌதீக (சாகார)
உலகம் ! சூட்சும வதனத்திலோ குலம் என்பதோ கிடையாது. இந்த சாகார உலகத்தில் உங்களது பிராமண
குலம் உயர்ந்ததிலும் உயர்ந்தது ! பிராமணர்களாகிய உங்களிடையே நீங்கள் சகோதர, சகோதரிகள் ! சகோதரன்
சகோதரி ஆன காரணத்தினால் விகாரத்தில் செல்ல முடியாது. இது தூய்மையாக இருப்பதற்கான மிகவும்
உன்னதமான யுக்தி (வழி) என்பதை உங்கள் அனுபவத்திலிருந்து கூற முடியும். ஒவ்வொருவரும்
கூறுகின்றனர்லிநாம் பிரம்மா குமார், குமாரிகள் ! சிவ வம்சத்தினராகவோ அனைவரும் உள்ளனர். பிறகு
சாகாரத்தில் வரும்பொழுது பிரஜாபிதா பிரம்மாவின் பெயர் இருக்கின்ற காரணத்தினால் சகோதரன், சகோதரி
ஆகிவிடுகிறீர்கள். பிரஜாபிதா பிரம்மா இருக்கின்றார் என்றால் நிச்சயமாக அவரே படைப்பவர், தத்து எடுத்துக்
கொள்கிறார். நீங்கள் (குக வம்சாவழி) பிறப்பின் வழி வம்சத்தினர் அல்ல. வாயின் மூலம் ஞானம் கேட்டு பிறவி
எடுத்த வம்சத்தினர், (முக வம்சாவழி) ஆக மனிதர்கள் குக வம்சாவளி முக வம்சாவழியினுடைய அர்த்தத்தை
அறிவதில்லை. முக வம்சாவழி என்றால் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள். குக வம்சாவழி என்றால், சரீரத்தின்
மூலமாக பிறப்பு எடுப்பவர்கள். உங்களது இந்த பிறவி அலௌகீகமானது. தந்தையை லௌகீக், அலௌகீக்,
பரலௌகீக் என்று கூறப்படுகிறது. பிரஜாபிதா பிரம்மா அலௌகீக தந்தை என்று அழைக்கப்படுகிறார். லௌகீக
தந்தையோ அனைவருக்கும் உண்டு. அது பொதுவானது. பரலௌகீக தந்தையும் அனைவருக்குமானவர். பக்தி
மார்க்கத்தில் ஏ பகவான், ஹே பரம்பிதா என்று கூறி வருகின்றனர். ஆனால் இந்த தந்தையை (பிரஜாபிதா
பிரம்மா) எவரும் அழைப்பதில்லை. இந்த பாபா பிராமணர் குழந்தைகளினுடையவர் ஆவார். அந்த இருவரையும்
அனைவரும் அறிவர். மற்றபடி பிரம்மா என வரும்பொழுது குழப்பம் அடைகின்றனர். ஏனெனில் பிரம்மாவோ
சூட்சும வதனத்தில் இருப்பவர். இங்கே அப்படி காண்பிப்பதில்லை. படங்களில் பிரம்மாவை தாடி, மீசையோடு
காண்பிக்கின்றார்கள். ஏனெனில், பிரஜாபிதா பிரம்மா இந்த சிருஷ்டியில் இருப்பவர். சூட்சும வதனத்திலோ
பிரஜைகளைப் படைக்க முடியாது. இதுவும் எவருடைய புத்தியிலும் வருவதில்லை. இந்த விசயங்கள்
அனைத்தையும் தந்தை புரிய வைக்கிறார். இந்த ஆன்மீக யாத்திரை கூட மிகவும் புகழ் வாய்ந்தது. ஆன்மீக
யாத்திரை என்றால், அங்கிருந்து மீண்டும் திரும்ப வர முடியாது. (அதாவது சங்கமயுகத்திலிருந்து மூல வதனம்
சென்ற பிறகு மீண்டும் சங்கமயுகத்திற்குத் திரும்ப முடியாது) பிற யாத்திரைகளோ பல பிறவிகளாக செய்து
வருகின்றனர். மேலும் போய் விட்டு திரும்பியும் விடுகின்றனர். அது உலகீய யாத்திரை, இந்த உங்களது
யாத்திரை ஆன்மீக யாத்திரை. இந்த ஆன்மீக யாத்திரை செய்வதால் நீங்கள் இந்த மரண உலகத்திற்குத்
திரும்புவதில்லை. பாபா உங்களுக்கு அமர லோகத்தின் (சத்யுகம்) யாத்திரையை கற்றுக் கொடுக்கின்றார்.
அவர்கள் காஷ்மீர் அருகிலுள்ள அமர்நாத்திற்கு யாத்திரையாக செல்கிறார்கள். அது அமரலோகம் கிடையாது.
அமர லோகம் ஆத்மாக்களுடையது. அடுத்தது, மனிதர்களுக்குரியது. அதனை சொர்க்கம் அதாவது அமரலோகம்
(2/4)
03.09.2016
என்று கூற முடியும். ஆத்மாக்களுடைய உலகம் நிர்வாண தாமம் மற்றபடி அமரலோகம், சத்யுகம், மற்றும்
மரண உலகம் கலியுகம், மேலும் நிர்வாண தாமம் அமைதி உலகம் ஆகும். அங்கு ஆத்மாக்கள் வசிக்கின்றன.
பாபா கூறுகிறார் : லி நீங்கள் அமரபுரிக்கான யாத்திரையில் உள்ளீர்கள். கால்நடையாகச் செல்வது அந்த சரீர
யாத்திரையாகும். இது ஆன்மீக யாத்திரை, கற்பிப்பது ஒரே ஆன்மீக தந்தையாவார். மேலும் ஒரே ஒருமுறை
வந்து கற்பிக்கிறார். அது பல பிறவிகளுக்கானது. ஆனால் இது மரண லோகத்தின் கடைசி யாத்திரையாகும்.
இதனை பிராமண குல பூஷனர்களாகிய நீங்கள் தான் அறிவீர்கள். ஆன்மீக யாத்திரை அதாவது நினைவில்
இருப்பது ! இறுதி நேரத்தில் புத்தியின் நிலை எப்படியோ அப்படியே எதிர்கால கதியும் (நிலை) அமையும்.
என்று பாடப்படுகிறது. பாபாவினுடைய வீடு உங்களுக்கு நினைவில் வருகிறது. தற்பொழுது நாடகம் முடிவடைந்து
விட்டது என்பதை அறிகிறீர்கள். இந்த பழைய ஆடை �%
TAMIL MURLI 22 TO 28 AUGUST - 2016
http://j.mp/TAMIL2-27-08-16
22
.08.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! தினந்தோறும் ஆத்மாவாகிய நான் எவ்வளவு சுத்தமாக
மாற்றியிருக்கிறேன் என்று தன்னைத் தானே கேளுங்கள். எவ்வளவு சுத்தமாக மாறுகிறோமோ
அவ்வளவு குμ இருக்கும், சேவை செய்வதற்கான ஊக்கம் வரும்.
கேள்வி : வைரம் போன்று உயர்ந்தவர்களாக மாறுவதற்கு என்ன முயற்சி வேண்டும்?
பதில்: ஆத்ம உணர்வு அடையுங்கள். உடலில் சிறிது கூட பற்று இருக்கக்கூடாது. கவலையில் இருந்து
விடுபட்டு ஒரு தந்தையின் நினைவில் இருங்கள். இந்த உயர்ந்த முயற்சியே வைரம் போன்று மாற்றி விடும்.
ஒரு வேளை தேக உணர்வு இருக்கின்றது என்றால், நிலை காயாக இருக்கின்றது. பாபாவிடமிருந்து தொலைவில்
இருக்கின்றீர்கள் என புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் இந்த உடலைப் பாதுகாக்க வேண்டும். ஏனென்றால் இந்த
உடலில் இருந்து கொண்டு தான் கர்மாதீத நிலையை அடைய வேண்டும்.
பாட்டு : முகத்தைப் பார்த்துக் கொள் மனிதா......
ஓம் சாந்தி. யாருக்கு யோக பலத்தினால் பாவங்கள் நீங்குகின்றதோ அவருக்கு மகிழ்ச்சியின் அளவு
அதிகரிக்கிறது என பாபா குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். தனது நிலையை குழந்தைகளாகிய நீங்களே
புரிந்து கொள்ள முடியும். நிலை நன்றாக இருக்கும் பொழுது சேவையின் ஆர்வம் மிகவும் நன்றாக இருக்கின்றது.
எவ்வளவுக்கெவ்வளவு சுத்தமாகிக் கொண்டே போகிறீர்களோ அவ்வளவு மற்றவர்களைக் கூட சுத்தமாக
மற்றும் யோகியாக மாற்ற ஊக்கம் வரும். ஏனென்றால், நீங்கள் இராஜயோகி மற்றும் இராஜரிμ ஆவீர்கள்.
ஹடயோகி ரிμகள் (இயற்கை) தத்துவத்தை பகவான் என்கிறார்கள். இராஜயோகி ரிμகள் பகவானை தந்தை
என்று ஏற்றுக்கொள்கிறார்கள். தத்துவத்தை நினைவு செய்வதால் அவர்களின் பாவம் எதுவும் விலகாது.
தத்துவத்துடன் தொடர்பு கொள்வதால் எந்த பலமும் கிடைக்காது. எந்த தர்மத்தினரும் யோகத்தை அறியவில்லை.
எவ்வளவு தந்தையை நினைவு செய்கின்றனரோ அவ்வளவு மகிழ்ச்சி கிடைக்கும். தன்னைத்தானே சோதிக்க
வேண்டும். குழந்தைகள் கூட ஒருவர் மற்றவரின் நிலையையும், தனது நிலையையும் தெரிந்து கொள்ள
முடியும். தனக்கு உடலின் மீது எந்த பற்றும் இல்லையா என பார்த்துக் கொள்ள வேண்டும். தேக உணர்வு
இருக்கின்றது என்றால், காயாக இருக்கின்றோம், பாபாவை விட்டு மிக தொலைவில் இருக்கின்றோம் என
புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளே! இப்பொழுது வைரம் போன்று மாற வேண்டும் என பாபா
கட்டளையிடுகின்றார். பாபா ஆத்ம உணர்வு உடையவராக மாற்றுகின்றார். பாபாவிற்கு தேக உணர்வு கிடையாது.
தேக உணர்வு குழந்தைகளுக்குத் தான் ஏற்படுகின்றது. பாபாவின் நினைவினால் நீங்கள் ஆத்ம
உணர்வுடையவராக மாறுகின்றீர்கள். நாம் எவ்வளவு நேரம் பாபாவை நினைக்கின்றோம் என தனக்குத் தானே
சோதியுங்கள். எவ்வளவு நினைக்கின்றீர்களோ அவ்வளவு மகிழ்ச்சியின் அளவு அதிகரிக்கும். மேலும் தன்னை
தகுதி உடையவராக மாற்றிக் கொள்ளலாம். சில குழந்தைகள் கர்மாதீத் நிலையை அடைந்து விட்டனர் என்றும்
நினைக்க வேண்டாம். அப்படி இல்லை. ரேஸ் நடந்து கொண்டு இருக்கின்றது. ரேஸ் முடியும் பொழுது ரிசல்ட்
முடிவாக வெளிவரும். பிறகு வினாசம் கூட ஆரம்பமாகி விடும். அது வரை கர்மாதீத நிலையை அடையும்
வரை இந்த ஒத்திகை நடந்து கொண்டேயிருக்கும். நாம் யாருக்கும் துன்பம் கொடுக்க முடியாது. கடைசியில்
தான் அனைவருக்கும் தெரிய வரும். இப்பொழுது இன்னும் சிறிது நேரம் இருக்கின்றது. இனிமையான
குழந்தைகளே! இன்னும் சிறிது நேரம் இருக்கின்றது என இந்த தாதாவும் கூறுகின்றார். இச்சமயம் ஒருவர்
கூட கர்மாதீத நிலையை அடைய முடியாது. நோய் போன்றவை ஏற்படுகின்றது என்றால், அதற்கு கர்ம போகம்
என்று கூறப்படுகின்றது. அனுபவிப்பதைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை. அது உள்ளுக்ளுள் நோயாக
இருக்கின்றது. இப்பொழுது ஏக்ரச நிலையை (ஒரே ரசனையில்) யாரும் அடையவில்லை. எவ்வளவு முயற்சி
செய்கின்றார்களோ அவ்வளவு வீண் எண்ணங்கள், புயல் நிறைய வருகின்றது. எனவே குழந்தைகள் எவ்வளவு
மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். உலகிற்கே அதிபதியாகின்றோம் என்றால் சாதாரண விசயமா என்ன? மனிதர்கள்
பணக்காரர்களாக இருக்கின்றார்கள். பெரிய பெரிய பங்களா இருக்கின்றது என்றால் மகிழ்ச்சி இருக்கின்றது
ஏனென்றால் சுகம் நிறைய இருக்கின்றது, இப்பொழுது கூட நீங்கள் பாபாவிடமிருந்து அளவற்ற சுகத்தை
அடைகின்றீர்கள். பாபாவிடமிருந்து நாம் இராஜ்யத்தை அடைகிறோம் என அறிகிறீர்கள். செல்வத்தில் இருக்கும்
பொழுது எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறதோ அவ்வளவு அமைதியில் ஏற்படுவது இல்லை. சந்நியாசி வீடு
வாசலைத் துறந்து காட்டில் வசித்தனர். ஒரு போதும் கையில் பணத்தை வைத்துக் கொள்வதில்லை. வெறும்
உணவு மட்டும் எடுத்துக் கொண்டனர். இப்பொழுது எவ்வளவு பணக்காரர்களாக ஆகிவிட்டனர். அனைவருக்கும்
நிறைய பணத்தின் கவலை இருக்கின்றது. உண்மையில் இராஜாவிற்கு பிரஜைகளைப் பற்றிய கவலை இருக்கின்றது.
ஆகவே போர்க் கருவிகளை வைத்திருக்கிறார்கள். சத்யுகத்திலோ போர் போன்ற விஷயம் எதுவும் இல்லை.
இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு நாம் நம்முடைய இராஜ்யத்திற்குப் போகிறோம் என்ற மகிழ்ச்சி
22.08.2016
(2/4)
இருக்கின்றது. அங்கே பயப்படுவதற்கான விஷயம் எதுவும் இல்லை. வரி போன்ற விஷயமும் கிடையாது.
இந்த உடலைப் பற்றிய கவலை இங்கே தான் இருக்கின்றது. கவலையில் இருந்து விடுவியுங்கள் சுவாமி......
என்று இங்கே தான் பாடப்படுகிறது. கவலையில் இருந்து விடுபடுவதற்கு இப்பொழுது நாம் எவ்வளவு முயற்சி
செய்ய வேண்டும் என அறிகிறீர்கள். பிறகு 21 பிறவிகளுக்கு எந்த கவலையும் இல்லை. பாபாவை நினைவு
செய்தால் நீங்கள் மிகவும் உறுதியாக இருக்கலாம். இராமாயண கதை கூட உங்களைப் பற்றியதே! நீங்கள் தான்
மாகாவீர் ஆகிறீர்கள். எங்களை இராவணன் அசைக்க முடியாது என்று ஆத்மா கூறுகின்றது. அந்த நிலை
கடைசியில் வரும். இப்பொழுது யார் வேண்டுமானாலும் ஆடிவிட நேரிடலாம் கவலையும் இருக்கும். உலகத்தில்
சண்டை நடக்கும் பொழுது இப்பொழுது நேரம் வந்து விட்டது என்று புரிந்து கொள்வார்கள். எவ்வளவு
பாபாவை நினைப்பதற்கு முயற்சி செய்கிறீர்களோ அவ்வளவு நன்மை நடக்கும். முயற்சி செய்வதற்கு இப்பொழுது
நேரம் இருக்கின்றது. பிறகு வினாசம் கோலாகலமாக நடக்கும். இப்பொழுது சரீரத்தின் மீது பற்று
இருக்கின்றதல்லவா? சரீரத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் என பாபாவே கூறுகின்றார். கடைசி சரீரம், இதில்
தான் முயற்சி செய்து கர்மாதீத் நிலையை அடைய வேண்டும். உயிரோடு இருப்பீர்கள். பாபாவை நினைவு
செய்து கொண்டே இருப்பீர்கள். குழந்தைகளே! உயிரோடு இருங்கள் என பாபா புரிய வைக்கின்றார். எவ்வளவு
உயிரோடு இருக்கின்றீர்களோ அவ்வளவு பாபாவை நினைவு செய்து ஆஸ்தியை அடையலாம். இப்பொழுது
உங்களுக்கு சொத்து கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. சரீரத்தை நோயற்றதாக ஆரோக்கியமாக வையுங்கள்.
கவனக் குறைவாக இருக்காதீர்கள். உணவு விஷயத்தில் கவனமாக இருந்தால் எதுவும் நடக்காது. ஒரே
மாதிரியான நடத்தை இருந்தால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். இது விலைமதிப்பற்ற உடல் ஆகும்.
இதில் முயற்சி செய்து தேவி தேவதையாக மாறுகின்றீர்கள் என்றால் இந்த நேரத்தினுடைய தியாகம் ஆகும்.
மகிழ்ச்சி இருக்க வேண்டும். எவ்வளவு பாபா மற்றும் ஆஸ்தியை நினைக்கின்றீர்களோ அவ்வளவு நாராயணன்
ஆகப்போகின்றேன் என்ற பெருமிதம் இருக்கும். பாபாவின் நினைவினால் தான் நீங்கள் உயர்ந்ததிலும் உயர்ந்த
பதவி பெறுவீர்கள். நாம் எவ்வளவு மகிழ்சியில் இருக்கின்றோம், எவ்வளவு கவலையில் இருக்கின்றோம்
என்று பாருங்கள். ஏழைகளுக்கு இன்னும் மகிழ்ச்சி இருக்க வேண்டும். பணக்காரர்களுக்கு பணத்தின் கவலை
இருக்கின்றது. உங்களில் கூட குமாரிகளுக்கு எந்த கவலையும் இல்லை. ஆம், சிலருடைய நண்பர்கள்,
உறவினர்கள் ஏழையாக இருக்கின்றார்கள் என்றால் கவனம் வைக்க வேண்டியிருக்கின்றது. எழுப்பியும் விட
வேண்டும். ஒரு வேளை எழவில்லை என்றால் எதுவரை உதவி செய்து கொண்டே இருப்பீர்கள். நீங்களே
சேவையாளராக ஆகுங்கள் அல்லது மனைவியை ஆன்மீக சேவையில் அளியுங்கள் என்று பாபா கூறுகின்றார்
அல்லவா? நீங்கள் பாபாவின் உதவியாளர் ஆவீர்கள். உதவி அனைவருக்கும் வேண்டும் அல்லவா? தனியாக
பாபா என்ன செய்வார். எவ்வளவு பேருக்கு மந்திரம் அளிப்பார். நான் உங்களுக்கு கொடுக்கின்றேன். பிறகு
நீங்கள் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும். நாற்று நட வேண்டும். எவ்வளவு முடியுமோ உதவியாளராகுங்கள்.
மந்திரத்தை அளித்துக் கொண்டே செல்லுங்கள் என குழந்தைகளுக்கு பாபா கூறிக் கொண்டே இருக்கின்றார்.
உங்களுடைய சாஸ்திரங்களில் கூட அனைவருக்கும் செய்தி அளிக்கப்பட்டது என்று இருக்கின்றது. அதாவது,
தந்தை வந்தார், ஆஸ்தியை அடைய வேண்டும் என்றால், தந்தையை நினையுங்கள். மனிதர்களை நினைக்காதீர்கள்.
தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைத்தால் உங்களுடைய விகர்மங்கள் அழிந்து போகும்.
மேலும் ஆஸ்தியும் கிடைக்கும், கீதையை நிறைய கேட்கிறார்கள், கூறுகிறார்கள். அதில் பிரசித்தமான வார்த்தை
மன்மனாபவ ஆகும். பாபாவை நினைத்தால் முக்தியை பெறலாம் சந்நியாசிகள் கூட இதை விரும்புவார்கள்.
மத்தியாஜி பவ என்றால் ஜீவன் முக்தி. குழந்தைகள் பாபாவினுடையவர் ஆகின்றீர்கள் என்றால் பாபா,
குழந்தைகளே! உங்களுடைய ஆத்மா அழுக்காக இருக்கின்றது. அழுக்கானவர் போக முடியாது என்று கூறுகின்றார்.
இது புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். பாரதவாசிகளாகிய நீங்கள் சதோபிரதானமாக இருந்தீர்கள்,
தமோபிரதானமாக ஆகிவிட்டீர்கள். இப்போது மீண்டும் சதோபிரதானம் ஆகவேண்டும் என்றால், முயற்சி
செய்தால் உயர்ந்த பதவி அடையலாம் என பாபா கூறுகின்றார். பல பிறவிகளாக பக்தி செய்து வந்துள்ளீர்கள்.
முதன் முதலில் தூய்மையான பக்தி ஆரம்பமாகியது என அறிகிறீர்கள். இப்பொழுது எவ்வளவு கலப்படமான
பக்தியாக இருக்கின்றது. சரீரங்களுக்கு பூஜை நடக்கின்றது. அதுவும் பூத பூஜை ஆகும். இருப்பினும் தேவதைகள்
தூய்மையானவர்கள் ஆவர். ஆனால் இச்சமயத்திலோ அனைவரும் அழுக்காக இருக்கின்றனர். எனவே
பூஜையும் தமோபிரதானமாக ஆகியிருக்கின்றது. இப்பொழுது பாபாவை நினைக்க வேண்டும். பக்தியின்
வார்த்தைகள் எதையும் கூற வேண்டாம். ஐயோ இராமா! என்பதும் பக்தியின் வார்த்தை ஆகும். இவ்வாறு
யாரும் அழைக்கக்கூடாது. இதில் எதுவும் உச்சரிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஓம்சாந்தி கூட அடிக்கடி
கூற வேண்டியதில்லை. அமைதி என்றால் நான் ஆத்மா சாந்த சொரூபம். அதே சொரூபமாக இருக்கின்றது.
இதில் பேசக்கூடிய விஷயம் எதுவும் இல்லை. வேறு யாராவது மனிதர்களுக்கு ஓம் சாந்தி என்று கூறினால்
அவர்கள் பொருள் எதையும் புரிந்து கொள்வதில்லை. அவர்களோ ஓம் என்பதற்கு மிகப் பெரிய மகிமைகளைச்
செய்கிறார்கள். நீங்கள் பொருளைப் புரிந்து கொள்கிறீர்கள். பிறகு ஓம் சாந்தி என்று கூறுவது கூட வீண் ஆகும்.
22.08.2016
(3/4)
ஆம், ஒருவர் மற்றவரிடம் சிவபாபாவின் நினைவில் இருக்கிறீரா என்று கேட்கலாம். எப்படி நான் கூட
குழந்தையிடம் யாருடைய அலங்காரம் செய்கிறாய் என்று கேட்கிறேன். சிவபாபாவின் ரதத்தை என்று கூறுகிறார்.
இது சிவபாபாவின் ரதம் அல்லவா? உசேனின் ரதம் இருக்கின்றது அல்லவா? குதிரையை அலங்காரம்
செய்கிறார்கள். குதிரையின் பொருளைப் புரிந்து கொள்ளவில்லை. தர்மத்தை ஸ்தாபனை செய்யக்கூடியவர்கள்
யார் வருகிறார்களோ அவர்களுடைய ஆத்மா தூய்மையாக இருக்கின்றது. பழைய பதீத ஆத்மா தர்மத்தை
ஸ்தாபனை செய்ய முடியாது. நீங்கள் தர்மத்தை ஸ்தாபனை செய்வதில்லை. சிவபாபா உங்கள் மூலமாக
செய்கிறார். உங்களை பவித்திரமாக மாற்றுகின்றார். அவர்கள் பக்தி மார்க்கத்தில் மிகவும் அலங்காரம் செய்கிறார்கள்.
இங்கே அலங்காரத்தை விரும்புவதில்லை. பாபா எவ்வளவு நிர்அகங்காரியாக இருக்கின்றார். நான் பல பிறவிகளின்
கடைசியிலும் கடைசியில் வருகின்றேன் என அவரே கூறுகின்றார். முதலில் சத்யுகத்தில் ஸ்ரீநாராயணன்
இருப்பார். ஸ்ரீ லட்சுமிக்கும் முன்பு ஸ்ரீ நாராயணன் வருவார். அவர் பெரியவராக இருப்பார் அல்லவா?
ஆகவே கிருஷ்ணரின் பெயர் பாடப்பட்டிருக்கின்றது. நாராயணரை விட அதிகமாக கிருஷ்ணருக்கு மகிமை
செய்கிறார்கள். கிருஷ்ணருடைய பிறந்த தினத்தையும் கொண்டாடுகிறார்கள். நாராயணருடைய பிறந்த நாளைக்
கொண்டாடுவதில்லை. கிருஷ்ணர் தான் நாராயணன் ஆகிறார் என்பது தெரியவில்லை. முதன் முதலில்
சிவஜெயந்தி, பிறகு கிருஷ்ண ஜெயந்தி, பிறகு இராமருடையது...... சிவன் கூடவே கீதையின் ஜன்மமும்
ஏற்படுகின்றது. பல பிறவிகளில் கடைசி பிறவியில் சிவபாபா வருகின்றார். வயதான அனுபவி ரதத்தில் தான்
வருகின்றார். எவ்வளவு நன்றாக புரியவைக்கப்பட்டு இருக்கின்றது. இருப்பினும். சிலருடைய புத்தியில்
ஏறுவதில்லை.
இந்த ஞானம் மறைந்து போய் விடுகின்றது என பாபா கூறுகின்றார். நான் வந்து கூறும் பொழுது தான்
நீங்களும் கேட்க முடியும். நாம் எதிர் காலத்தில் துல்லியமாக இவ்வாறு (தேவி தேவதா) மாறுவோம் என
குழந்தைகள் இப்பொழுது அறிகிறீர்கள். பாபா 2லி3 விதமாக சாட்சாத்காரம் அடைந்து இருக்கின்றார். இவ்வாறு
மாறுவேன், கிரீடம் உடையவராக மாறுவேன், தலைப்பாகை உடையவராக மாறுவேன். 2லி4 இராஜ்யத்தின்
பிறவிகளின் காட்சி கிடைத்திருக்கின்றது. இந்த விஷயங்களை உலகத்தில் வேறு யாரும் புரிந்து கொள்ள
முடியாது என இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்ள முடியும். நல்ல கர்மம் செய்தால் நல்ல பிறவி கிடைக்கும்
என நீங்கள் நினைக்கலாம். ஆம், இப்பொழுது நீங்கள் முயற்சியை எதிர்காலத்திற்காக செய்து கொண்டு
இருக்கின்றீர்கள். நரனிலிருந்து நாராயணன் ஆவதற்காக! நாம் இந்த பதவியை பெறுவோம் என நீங்கள்
அறிகிறீர்கள். யார் கர்மாதீத் நிலையை அடைய முயற்சி செய்து கொண்டு இருக்கின்றார்களோ அவர்களுக்கு
இந்த மகிழ்ச்சி அதிகமாக இருக்கும். பாபா நாங்கள் மம்மா பாபாவைப் பின்பற்றுவோம், அப்போது தான்
சிம்மாசனத்தில் அமர முடியும் என கூறுகின்றார்கள். எவ்வளவு நாம் சேவை செய்கின்றோம், மேலும், எவ்வளவு
மகிழ்ச்சியில் இருக்கின்றோம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். யார் முதலில் தான் மகிழ்ச்சியில்
இருப்பாரோ அவரே பிறரையும் மகிழ்ச்சியில் கொண்டு வருவார்கள். உள்ளே ஏதாவது தீயவை இருந்தால்
மனதை அரித்துக் கொண்டே இருக்கும். பாபா எங்களுக்குள் கோபம் இருக்கின்றது, இந்த பூதம் எங்களுக்குள்
இருக்கின்றது என சிலர் கூறுகின்றார்கள். கவலையின் விஷயம் ஆகிவிட்டதல்லவா? பூதத்தை உள்ளே
இருக்க விடக் கூடாது. ஏன் கோபப்பட வேண்டும். அன்போடு புரிய வைக்க வேண்டும். பாபா யார் மீதும்
கோபப்பட மாட்டார். சிவபாபாவின் மகிமை இருக்கின்றதல்லவா? நிறைய வீணான பொய்யான மகிமைகளைக்
கூட செய்கிறார்கள். நான் என்ன செய்கிறேன். எப்படி மருத்துவரிடம் எங்களிடம் நோயை விரட்டுங்கள்
என்கிறார்களோ அதுபோல அழுக்கிலிருந்து என்னை தூய்மையாக்குங்கள் என்று கூறுகின்றார்கள். அவர்கள்
மருந்து கொடுத்து ஊசி போடுகிறார்கள். அதுவே அவர்களுடைய வேலையாகும். பெரிய விஷயம் கிடையாது.
சேவைக்காகப் படிக்கிறார்கள். நிறைய படிக்கிறார்கள் என்றால் நிறைய சம்பாதிக்கின்றார்கள். பாபாவிற்கு எதையும்
சம்பாதிக்க வேண்டியது இல்லை. அவருக்கு சம்பாதிக்க வைக்க வேண்டும். என்னை நீங்கள் அழிவற்ற சர்ஜன்
என்று கூட கூறுகிறீர்கள். இப்படி அதிகமாக மகிமை செய்திருக்கிறீர்கள் என்று பாபா கூறுகின்றார். பதீத
பாவனரை யாரும் சர்ஜன் என்று கூற முடியாது. இது வெறும் மகிமையாகும். என்னை நினைத்தால்
உங்களுடைய விகர்மம் அழியும் என்று மட்டும் பாபா கூறுகின்றார். அவ்வளவு தான்! என்னுடைய நடிப்பே
உங்களுக்குப் புரிய வைப்பது தான். அதாவது என்னை மட்டும் நினையுங்கள். எவ்வளவு நினைக்கிறீர்களோ
அவ்வளவு உயர்ந்த பதவி பெறுவீர்கள். இதுவே இராஜயோகத்தின் ஞானம் ஆகும். யார் கீதையை
படித்திருக்கின்றார்களோ அவர்களுக்குப் புரிய வைப்பது எளிதாக இருக்கின்றது. நீங்கள் பூஜைக்குரிய
இராஜாக்களுக்கு இராஜா ஆகிறீர்கள். பிறகு பூஜாரி ஆகிறீர்கள். நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். நீங்கள்
உலகத்தைத் தூய்மையாக மாற்றுகின்றீர்கள். எவ்வளவு பெரிய பதவி. கலியுக மலையைத் திருப்புவதற்காக
நீங்கள் அனைவரும் விரல் கொடுக்கின்றீர்கள். மற்றபடி மலை எதுவும் கிடையாது. புது உலகம் வரவேண்டும்.
ஆகவே நிச்சயம் இராஜயோகத்தைக் கற்க வேண்டும் என இப்பொழுது நீங்கள் அறிகிறீர்கள். பாபா தான்
வந்து கற்பிக்கிறார். சதோபிரதானம் ஆகவேண்டும். யார் போன கல்பத்தில் மாறினார்களோ அவர்களுக்குப்
22.08.2016
(4/4)
புரிய வைக்கும் பொழுது சரியான விஷயத்தை கூறுகிறார்கள் என தோன்றும். உண்மையில் பாபா மன்மனா
பவ என கூறினார். வார்த்தை சமஸ்கிருதம் ஆகும். பாபா இந்தியில் என்னை நினையுங்கள் என கூறினார்.
நாம் எவ்வளவு உயர்ந்த தர்மம், உயர்ந்த கர்மம் செய்பவர் என்று இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள்.
எனவே தான் 16 கலைகள்...... என பாடப்பட்டு இருக்கின்றது. இப்போது மீண்டும் இவ்வாறு மாற வேண்டும்.
எவ்வளவு நாம் சதோபிரதானமாக தூய்மையாக மாறியிருக்கிறோம், எவ்வளவு நரகவாசிகளை சொர்க்கவாசிகளாக
மாற்றும் சேவை செய்திருக்கின்றோம் என தன்னையே பார்த்துக் கொள்ள வேண்டும்.நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை
வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம் :
1. பாபாவிற்கு சமமாக நிர்அகங்காரியாக வேண்டும். இந்த சரீரத்தை கவனித்துக் கொண்டே
சிவபாபாவையும் நினைக்க வேண்டும். ஆன்மீக சேவையில் பாபாவிற்கு உதவியாளர் ஆக
வேண்டும்.
2. உள்ளுக்குள் எந்த ஒரு பூதமும் இருக்க விடக் கூடாது. ஒருபோதும் யார் மீதும் கோபப்
படக்கூடாது. அனைவரிடமும் மிகவும் அன்போடு நடக்க வேண்டும். தாய் தந்தையைப்
பின்பற்றி சிம்மாசனத்தில் அமரக்கூடியவர் ஆக வேண்டும்.
வரதானம் : ஒவ்வொரு எண்ணம், நேரம், வார்த்தை மற்றும் செயல் மூலமாக ஈஸ்வரிய சேவை
செய்யக்கூடிய சம்பூர்ண நன்றியுடையவர் (உண்மையானவர்) ஆகுக.
யார் ஒவ்வொரு பொருளையும் முழுமையாக பாதுகாக்கிறார்களோ அவர்களுக்கு சம்பூர்ண நன்றி உடையவர்
என்று கூறப்படுகின்றது. எந்த ஒரு பொருளும் வீணாவதற்கு விடமாட்டார்கள். பிறந்ததிலிருந்து எண்ணம்,
நேரம் மற்றும் செயல் அனைத்தும் ஈஸ்வரிய சேவைக்கானதாகவே இருக்கும். ஈஸ்வரிய சேவைக்குப் பதிலாக
எங்காவது எண்ணம் அல்லது நேரம் போகிறது, வீண் பேச்சு அல்லது உடல் முலமாக வீண் செயல்
நடக்கின்றது என்றால், அவர்களை சம்பூர்ண நன்றி உடையவர்கள் என்று கூறமாட்டார்கள். ஒரு நொடியோ
அல்லது ஒரு பைசாவோ வீணாகி விட்டது என்றால் என்ன பெரிய விஷயம் என்பது கிடையாது. இல்லை
சம்பூர்ண நன்றி உடையவர் என்றால், அனைத்தையும் பயன்படுத்தக் கூடியவர்கள் ஆவர்.
சுலோகன் : ஸ்ரீமத்தை யதார்த்தமாகப் புரிந்து கொண்டு அதன்படி
ஒவ்வொரு அடியும் நடப்பதில் தான் வெற்றி அடங்கி இருக்கின்றது.
(1/4)
23
.08.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! தேகத்துடன் சேர்த்து, தேகத்தின் அனைத்து தர்மங்களை மறந்து
தன்னை ஆத்மா என்று உணருங்கள்.அப்பொழுது எல்லா துக்கங்களும் நீங்கிப் போகும் என்ற
இதே செய்தியை எல்லோருக்கும் கொடுங்கள்.
கேள்வி: குழந்தைகளாகிய நீங்கள் எந்த விஷயத்தில் (ஃபாலோ ஃபாதர்) தந்தையைப் பின்பற்ற
வேண்டும்?
பதில்: எப்படி இந்த பிரம்மா தனது அனைத்தையும் இறைவனுக்காக அர்ப்பணம் செய்தார். முழுமையாக
டிரஸ்டி ஆனார். அதே போல டிரஸ்டி ஆகி இருங்கள். ஒரு பொழுதும் தப்பும் தவறுமாக செலவு செய்து, பாவ
ஆத்மாக்களுக்கு கொடுக்காதீர்கள். தங்களுடைய அனைத்தையும் ஈசுவரிய சேவையில் ஈடுபடுத்துங்கள்.
முழுமையாக டிரஸ்டி ஆகுங்கள். தந்தையின் ஸ்ரீமத்படி நடந்து கொண்டே இருங்கள். எந்த குழந்தை, எந்த
அளவிற்கு, ஸ்ரீமத் படி நடக்கிறது என்று தந்தை பார்க்கிறார்.
பாடல்: அன்பின் கடல் நீ....
ஓம் சாந்தி. குழந்தைகள் பாட்டு கேட்டீர்கள். பாபா நாங்கள் எங்கிருந்து வந்தோம். எப்பொழுது வந்தோம்.
பிறகு திரும்பிச் செல்வதற்கான வழி எப்படி மறந்தோம் என்கிறார்கள். இந்த நாடகத்தை காதுகளில் புரிய
வையுங்கள். நாங்கள் யார்? எங்கிருந்து வந்தோம். பிறகு எங்கே சென்று விட்டோம்? ஒரு ஞானத்தின்
துளியாவது கொடுத்து விடுங்கள். ஏனெனில் ஞானக் கடல் ஆவார் அல்லவா? ஆத்மாக்களாகிய நாம் எங்கு
இருப்பவர்கள், என்பதை இப்பொழுது குழந்தைகள் அறிந்துள்ளார்கள். பிறகு தந்தை மற்றும் தங்களது சொர்க்கத்தை
எப்படி மறந்தார்கள். மேலும் எப்படி வந்து இங்கு துக்கமுற்றார்கள் லி இந்த இரகசியத்தைக் காதுகளில்
கூறுங்கள். இப்பொழுது தந்தை ஞானக் கடலும் ஆவார். தூய்மையின் கடலும் ஆவார். அன்பின் கடலும்
ஆவார். அமைதியின், சுகம் மற்றும் செல்வத்தின் கடலும் ஆவார். இப்பொழுது எல்லையில்லாத தந்தை
மூலமாக இந்த எல்லா விஷயங்களையும் புரிய வைக்கிறார். ஆரம்பத்தில் எங்கிருந்து வந்தோம். பின் நாம் வழி
மறந்து துக்கமுடையவர்களாக ஆகும் வகையில் இடையில் என்ன நடந்தது? பிறகு பாபா எங்களுக்கு வழி
கூறுங்கள் என்று இப்பொழுது தந்தையிடம் கூறுகிறார்கள். நாங்கள் எங்களுடைய சுகதாமம் மற்றும்
சாந்திதாமத்திற்கு போகலாம். நீங்கள் ஆதியில் யாராக இருந்தீர்கள் மற்றும் இடையில் என்ன ஆயிற்று என்பதை
தந்தை தான் வந்து கூறுகிறார். பக்தி மார்க்கம் எப்படி ஆரம்பமாகியது? கடைசியில் என்ன ஆனது .இந்த
முதல், இடை, கடை பற்றிய இரகசியம், இப்பொழுது புத்தியில் பதிந்துள்ளது. இது நாடகம் அல்லவா? இதை
மனிதர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் நடிகர்கள் ஆவார்கள். ஆத்மாக்களாகிய நாம்
நிராகாரி சாந்திதாமத்திலிருந்து இங்கு டாக்கி தாமத்திற்கு வருகிறோம் என்பதை அறிந்துள்ளார்கள். மூலவதனம்,
சூட்சுமவதனம் பிறகு இது ஸ்தூல வதனமாகும். பிறகு மூலவதனத்திலிருந்து ஆத்மாக்கள் சரீரம் தரித்து தமது
பாகத்தை நடிக்க டாக்கி (பேசும்) தாமத்திற்கு வருகிறார்கள். ஆத்மாவினுடைய இருப்பிடம் சாந்தி தாமம்
ஆகும். இந்த விஷயங்கள் உலகத்தில் யாருக்குமே தெரியாது. இதை ஞானக்கடலான தந்தை தான் வந்து புரிய
வைத்துள்ளார். இப்பொழுது புரிய வைத்துக் கொண்டிருக்கிறார் லி பரலௌகீக பரமபிதா பரமாத்மாவிற்கு தான்
ஞானக்கடல் என்று கூறப்படுகிறது. மனிதர்களுக்குக் கூற முடியாது. இந்த மகிமை ஒரு தந்தைக்கு மட்டுமே
பாடப்படுகிறது. அவர் பற்றி வேறு யாருக்கும் தெரியாது. இப்பொழுது விநாசத்தின் நேரமாகும். விநாச காலத்தில்
ஐரோப்பியவாசிகளின் அன்பில்லாத புத்தி என்று பாடப்பட்டுள்ளது. இப்பொழுது தந்தை என் ஒருவனை
நினைவு செய் என்று உங்களுடைய புத்தி யோகத்தை தன்னுடன் இணைத்துள்ளார். நான் முகம்மதியன்!
நான் இந்து! நான் பௌத்தியன்.. .. .. இவை எல்லாம் தேகத்தின் தர்மங்களாகும் .ஆத்மாவோ ஆத்மா தான்!
தேகத்தின் அனைத்து தர்மங்களையும் விடுத்து தன்னை ஆத்மா என்று புரிந்து தந்தையாகிய என்னை
நினைவு செய்தீர்கள் என்றால், பதீத நிலையிலிருந்து பாவனமாக ஆகி விடுவீர்கள் என்று தந்தை புரிய
வைக்கிறார். இந்த தேகத்தைக் கூட மறந்து விடுங்கள் என்று தந்தை கூறுகிறார். இது எல்லோருக்காகவும்
தந்தையின் செய்தியாகும். தேகத்துடன் சேர்த்து தேகத்தின் அனைத்து சம்பந்தங்களையும் மறந்து விடுங்கள்.
நான் ஆத்மா ஆவேன். சகோதரர்களாகிய நம் அனைவரின் தந்தை ஒருவரே ஆவார். இந்த பிரம்மா கூட
நான் ஆத்மா என்று தான் கூறுவார். எனவே அனைவரும் சகோதர சகோதரர்கள் ஆகிறார்கள். இச்சமயத்தில்
எல்லா சகோதர சகோதரர்களும் பதீதமாக துக்கமுடையவர்களாக இருக்கிறார்கள். எல்லோரும் காமச் சிதையில்
ஏறி சாம்பலாகி விட்டுள்ளார்கள். துவாபர ஆரம்பத்தில் இராவண இராஜ்யம் ஆரம்பமாகும் பொழுது பின்னர்
நீங்கள் வாம மார்க்கத்தில் செல்கிறீர்கள். அப்பொழுது தான் பிறகு மற்ற தர்மங்கள் ஆரம்பமாகின்றன. பாதி
காலம் நீங்கள் துய்மையாக இருக்கிறீர்கள் .பின்னர் பாதியில் நீங்கள் பதீதமாக ஆகிறீர்கள். 21 பிறவிகள்
பாரதத்தில் தான் பாடப்படுகிறது. 21 குலத்திற்கு உத்தாரம்.. .. .. செய்பவளே குமாரி ஆவார். குமாரிக்கு மதிப்பு
23.08.2016
(2/4)
இருக்கிறது. நீங்கள் பாரதத்திற்கு மட்டுமென்ன முழு உலகத்திற்கு உத்தாரம் (முன்னேற்றிக்) செய்து
கொண்டிருக்கிறீர்கள். ஆத்மாக்களாகிய நாம் அனைவரும் சிவபாபாவின் குழந்தைகள் ஆவோம் என்பதை
நீங்கள் அறிந்துள்ளீர்கள். எனவே குமாரர்கள் தான் ஆகிறீர்கள். பிரஜாபிதா பிரம்மாவின் மக்கள் ஆகும்
பொழுது சகோதரன் சகோதரி ஆகிறீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த ஞானம் உள்ளது. ஆத்மாக்களாகிய
நாம் அனைவரும் சகோதர சகோதரர்கள் ஆவோம். அனைவரும் தந்தையை ஹே பதீத பாவனரே! வாருங்கள்
என்று அழைக்கிறார்கள். இங்கு இராவண இராஜ்யத்திலிருந்து, துக்கத்திலிருந்து எங்களை விடுவியுங்கள்
(லிபரேட் செய்யுங்கள்). பிறகு எங்களுக்கு (கைடு) வழிகாட்டியாகி எங்களை திரும்ப அழைத்துச் செல்லுங்கள்.
எங்களுடைய துக்கத்தை நீக்குங்கள் மற்றும் சுகம் கொடுங்கள். உண்மையில் பாபா வந்து விட்டுள்ளார்
என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். எங்களை இந்த கலியுக இராவண இராஜ்யத்திலிருந்து விடுவித்து
கூட அழைத்து செல்வார். அனைத்து ஆத்மாக்களும் பதீதமாக உள்ளார்கள் என்பதை தந்தை அறிந்துள்ளார்.
எனவே சரீரம் கூட பதீதமாக உள்ளது. ஆத்மாவைத் தான் பாவனமாக ஆக்கி நிர்வாண தாமத்திற்கு அழைத்துச்
செல்கிறார். கடந்த காலத்திலிருந்து நிகழ்காலம் பிறகு வருங்காலம் ஆகும். ஆதி, மத்தியம், இறுதி. பிறகு ஆதி,
சத்யுக ஆதி, கலியுக இறுதி, பின் வருங்காலத்தில் சத்யுகம் ஆகும். இதுவோ சுலபம் தானே இல்லையா?
நல்லது, நடுவில் என்ன ஆயிற்று? நாம் எப்படி விழுந்தோம்? நாம் பாவன தேவதைகளாக இருந்தோம். பிறகு
பாவன நிலையிலிருந்து பதீதமாக எப்படி ஆனோம். இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். இராவண இராஜ்யம்
ஆரம்பமாகும் பொழுது நீங்கள் பதீதமாக ஆகிறீர்கள் என்று தந்தை புரிய வைக்கிறார். இப்பொழுது மீண்டும்
உங்களை வருங்கால தேவதையாக ஆக்க வந்துள்ளேன். இதில் கடினம் என்ற எந்த விஷயமும் கிடையாது.
உங்களை இந்த விகார கடலிலிருந்து அப்பால் அழைத்துச் செல்கிறேன் என்று தந்தை கூறுகிறார். எனது
படகை .. .. .. (கரையேற்று) என்று பாடவும் செய்கிறார்கள். அனைவரும் ஒரு தந்தையை அழைக்கிறார்கள்.
மூழ்கி விட்டுள்ள எங்களுடைய படகை பாற்கடலில் எடுத்துச் செல்லுங்கள். அவரை படகோட்டி, தோட்டக்காரன்
என்றும் கூறுகிறார்கள். இப்பொழுது முட்களின் காட்டில் இருக்கிறார்கள். எங்களை மீண்டும் மலர்களின்
தோட்டத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். தேவதைகள் மலர்கள் ஆவார்கள் ! இப்பொழுது எல்லோருமே
முட்களாக இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் துக்கம் தான் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். தேவதைகள்
ஒரு பொழுதும் யாருக்கும் துக்கம் கொடுப்பதில்லை. அங்கோ சுகமே சுகமாக இருக்கும். அவர்களோ பாடுவது
மட்டுமே. நீங்கள் இங்கு நடைமுறையில் கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். பாபா நாங்கள் எங்கிருந்து மறந்தோம்
என்று கூறுகிறார்கள் அல்லவா? இந்த சிருஷ்டி சக்கரத்தை நாங்கள் எப்படி மறந்தோம்? சத்யுக திரேதாவில்
இது தெரியாது. ஏனெனில், அங்கோ நாம் சுகமுடையவர்களாக இருந்தோம். பிறகு துக்கமுடையவர்களாக
எப்பொழுது ஆனோம். இராவண இராஜ்யம் ஆரம்பமாகும் பொழுது. பாரதவாசிகள் இராவணனை எரித்துக்
கொண்டே இருக்கிறார்கள். எது வரை? அவர் அழியும் வரையும். பிறகு சத்யுகத்தில் ஒவ்வொரு வருடமும்
எரிப்பார்களா என்ன? இது பக்தி மார்க்கமாகும். இப்பொழுது இராவண இராஜ்யம் முடியப் போகிறது. பக்தி
மார்க்கத்தில் இராவணனை ஒவ்வொரு வருடமும் எரிக்கிறார்கள். ஆனால் இறப்பதே இல்லை .இப்பொழுது
இராவணன் உங்கள் முன்னால் இறந்து விட்டது போலவே. இராவண இராஜ்யம் இப்பொழுது முடியப் போகிறது
என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். 5 பூதங்களின் தலை வெட்டப்படுகிறது. முதன் முதலில் காமத்தின்
தலையை வெட்டுகிறீர்கள். காமம் தான் மகா எதிரி ஆகும். இந்த 5 பூதங்கள் மீது வெற்றி அடையும் பொழுது
தான் நீங்கள் உலகத்தின் மீது வெற்றி அடைவீர்கள் என்று தந்தை கூறுகிறார். நாங்கள் பதீதமானவர்கள்
என்று மனிதர்கள் தாங்களே கூறுகிறார்கள். எனவே பதீதர்களை பாவனமாக ஆக்க வாருங்கள் என்று
அழைக்கிறார்கள். ஹே பாபா.. .. படகோட்டி, கருணையுள்ளம் கொண்ட பாபா வாருங்கள் என்று ஆத்மா
அழைக்கிறது. நான் கல்ப கல்பமாக வருகிறேன் என்று தந்தை கூறுகிறார். எப்படி வருகிறேன் என்பது
யாருக்கும் தெரியாது. பகவான் வந்து இராஜயோகம் கற்பித்தார் என்பது கீதையிலும் இருக்கிறது. ஆனால்
பகவான் யார், எப்பொழுது வந்தார் என்பது யாருக்கும் தெரியாது. கீதையை குறையுள்ளதாக ஆக்கி விட்டுள்ளார்கள்.
கிருஷ்ணரை துவாபரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்கள். துவாபரத்திற்குப் பின்னரோ உலகம் இன்னுமே பதீதமாக
ஆகிறது. எனவே துவாபரத்தில் கிருஷ்ணர் வந்து என்ன செய்தார். மனிதர்களோ ஒன்றுமே புரியாமல்
உள்ளார்கள். முற்றிலுமே நேர்மையற்றவர் களாக இருக்கிறார்கள். சத்யுகத்தில் தூய்மையுடனும், நேர்மையுடனும்
இருப்பார்கள். நீங்கள் இப்பொழுது நேர்மையற்ற நிலையிலிருந்து நேர்மையுடையவராக ஆகிறீர்கள். நீங்கள்
தான் சம்பூர்ண நிர்விகாரி, பூஜைக்குரியவர் களாக இருந்தீர்கள் என்று தந்தை புரிய வைக்கிறார். நீங்கள் தான்
இப்பொழுது விகாரி பூசாரி ஆகி உள்ளீர்கள். நீங்களே பூஜைக்குரியவர்.. .. .. முதலில் நீங்கள் 21 பிறவிகள்
வரை பூஜைக்குரியவராக இருந்தீர்கள். பிறகு பூசாரியாகி உள்ளீர்கள். சத்யுகத்தில் 8 பிறவிகள். பின் திரேதாவில்
12 பிறவிகள் எடுக்கிறீர்கள். நீங்கள் எப்படி பதீதமாக ஆனீர்கள். எப்பொழுதிலிருந்து விழுந்தீர்கள் என்பதை
தந்தை தான் கூறுகிறார்.இந்த சிருஷ்டியின் சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. முழு உலகத்தின் சரித்திரம்,
பூகோளம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. முழு உலகத்தின் சரித்திரம், பூகோளம், முதல் இடை கடை பற்றிய
23.08.2016
(3/4)
இரகசியத்தை குழந்தைகளுக்கு தந்தை வந்து புரிய வைக்கிறார். எல்லோரும் ஒன்று போல புரிந்து கொள்ள
மாட்டார்கள். வரிசைக்கிரமமாகப் புரிந்து கொள்வார்கள். நான் வந்து சாம்ராஜ்யத்தை ஸ்தாபனை செய்கிறேன்
என்று தந்தை கூறுகிறார். இப்பொழுது நீங்கள் சர்வகுண சம்பன்னராக ஆக வேண்டும். அதுவரையும் சத்யுகத்திற்குப்
போக முடியாது. இங்கு தான் ஆக வேண்டி உள்ளது. பிறகு வருங்காலத்தில் போய் நீங்கள் ஆட்சி புரிவீர்கள்.
அதற்கிடையே எல்லாமே விநாசம் ஆகி விடும். விநாசத்தைக் கூட அவசியம் பார்ப்பீர்கள். நீங்கள் நடைமுறையில்
(பிராக்டிகலாக) உங்கள் பாகத்தை நடிப்பீர்கள். இனி முன்னால் என்ன ஆகப்போகிறது என்பது உங்களுக்கு
தெரிய வருமா என்ன? முந்தைய கல்பத்தில் என்ன நடந்ததோ அதுவே நடக்கும்.
ஸ்தாபனை மற்றும் விநாசமாகும் என்று உங்களுக்கு மொத்தமாகக் கூறப்படுகிறது. விநாசம் எப்படி
ஆகும்? அதுவோ ஆகும் பொழுது பார்ப்பீர்கள். திவ்ய திருஷ்டி மூலமாக விநாசத்தையோ பார்த்துள்ளீர்கள்.
இனி முன்னால் போகும் பொழுது பிராக்டிகலாகவும் பார்ப்பீர்கள். ஸ்தாபனையின் சாட்சாத்காரம் கூட திவ்ய
திருஷ்டி மூலமாக பார்த்துள்ளீர்கள். பின் பிராக்டிகலாகவும் பார்ப்பீர்கள். மற்றபடி அதிகமாக தியானத்தில் செல்வது
கூட சரியில்லை. பிறகு வைகுண்டத்திற்கு போய் நடனமாட முற்பட்டு விடுகிறார்கள். ஞானமும் இல்லை,
யோகமும் இல்லை இரண்டும் இல்லாதவர்களாக ஆகி விடுகிறார்கள். தியானத்தில் செல்வதற்கான எந்த அவசியம்
கூட கிடையாது. இதுவோ போக் மட்டும் வைக்கப்படுகிறது. பிராமணர்களாகிய நீங்கள் அங்கு செல்கிறீர்கள்
.தேவதைகள் மற்றும் பிராமணர்களின் சபை கூடுகிறது. இங்கு நீங்கள் பிறந்த வீட்டில் அமர்ந்துள்ளீர்கள். பிறகு
உங்களை விஷ்ணுபுரி செல்வதற்கு லாயக்காக ஆக்கப்படுகிறது. கன்னிகைக்கு நிச்சயதார்த்தம் செய்யும் பொழுது
அவருக்கு புரிய வைக்கப்படுகிறது லி புகுந்த வீட்டில் எப்படி நடக்க வேண்டும். எல்லோரிடமும் அன்புடன்
நடக்க வேண்டும். சண்டை போடக் கூடாது. இதுவும் முற்றிலும் அவ்வாறே ஆகும். நீங்கள் சர்வகுண
சம்பன்ன.. .. இங்கு ஆக வேண்டும் என்று தந்தை கூறுகிறார். சொர்க்கத்தில் இந்த சண்டை சச்சரவுகள்
ஆகியவை இருக்காது.இப்பொழுது நீங்கள் விஷ்ணுபுரியான புகுந்த வீட்டிற்குச் செல்கிறீர்கள். அங்கு இருப்பவர்கள்
மகான் வைஷ்ணவர்கள் ஆவார்கள். அவர்களை போல வைஷ்ணவர்கள் சிருஷ்டியில் இருப்பதில்லை. வைஷ்ணவ
தேவதைகள் விகாரத்தில் போவார்களா என்ன? விகாரம் ஹிம்சை ஆகும். அஹிம்சா பரமோ தேவி தேவதா
தர்மம் என்று கூறப்படுகிறது. நாம் பிறந்த வீட்டில் அமர்ந்துள்ளோம் என்பது உங்களுக்குத் தெரியும். இப்பொழுது
நாம் விஷ்ணுபுரிக்குச் செல்ல வேண்டும். அங்கு நிறைய சுகம் இருக்கும் என்பதை அறிந்துள்ளீர்கள். திருமணத்திற்கு
முன்பு கன்னிகை கிழிந்த ஆடையை அணிகிறாள். அதற்கு வனவாசம் என்பார்கள். உங்களிடம் கூட இப்பொழுது
என்ன இருக்கிறது? எதுவுமே இல்லை. இதுவோ மண்பாண்டங்களின் உடைசல்கள் போல. இங்கு உங்களுக்கு
எந்த ஒரு நகை ஆகியவைகள் அணிய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இல்லறத்தில் இருக்க
வேண்டும். திருமணம் ஆகியவற்றிற்கு செல்ல வேண்டும் என்றால் நகைகள் ஆகியவை கூட தாராளமாக
அணியுங்கள் என்று கூறுகிறார். தடை கிடையாது. இல்லை என்றால், இவர்கள் நகை அணிவதில்லை, விதவை
என்பார்கள். பெயர் கெட்டு விடும். அதனால் பாபா கூறுகிறார் பெயர் கெடுக்கக் கூடாது. எது வேண்டுமானாலும்
அணியுங்கள். தங்களை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள். எங்கு வேண்டுமானாலும்
செல்லுங்கள். இந்த மந்திரத்தை நினைவில் கொள்ளுங்கள். நாம் நினைவில் இருக்கிறோமா என்று சோதித்து
பாருங்கள். இங்கு நாம் பாபாவின் உத்திரவு படி செல்கிறோம். அவர்களுடனும் கடமையை நிறைவேற்ற
வேண்டும்.. ஆனால் கைகள் காரியம் செய்து கொண்டிருக்க, மனம் நினைவு செய்து கொண்டிருக்க வேண்டும்.
அப்பொழுது இவர்கள் உறுதியானவர்கள் என்று நினைக்கலாம். நகைகள் ஆகியவை அணிந்து கொண்டு
தாராளமாக திருமணத்திற்கு செல்லுங்கள்.சேர்ந்து இருங்கள். ஆனால் மகாவீரர் ஆக வேண்டும்.
சந்நியாசிகளினுடைய விஷயத்தையும் காண்பிக்கிறார்கள் அல்லவா? குரு வேசியிடம் அனுப்பி விட்டார். பாம்பிடம்
அனுப்பி விட்டார். யார் தைரியத்துடன் தேர்ச்சி அடைந்து காண்பிக்கிறார்களோ அவர்களுக்கு மகாவீர் என்று
கூறப்படுகிறது. தந்தையின் நினைவில் இருந்தீர்கள் என்றால் பின்னர் எந்த ஒரு கர்ம இந்திரியமும் சஞ்சலப்படாது.
தந்தையை மறந்தீர்கள் என்றால் கர்ம இந்திரியங்கள் சஞ்சலப்படும். உலகத்திற்கு நீங்கள் அதிபதி ஆகிறீர்கள்.இது
குறைவான விஷயமா என்ன?சந்நியாசிகள் இந்த விஷயங்களை முற்றிலும் அறியாமல் உள்ளார்கள். சாஸ்திரங்களில்
ஒரு சில விஷயங்கள் இருக்கிறது என்றாலும் கூட குறையுள்ளதாக ஆக்கி விட்டுள்ளார்கள். பகவான் கூறுகிறார்
லி நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறேன். உயிருள்ளவரையும் ஞான அமிருதம் பருகிக் கொண்டே
இருப்போம். கேட்டுக் கொண்டே இருப்போம். இராஜதானி ஸ்தாபனை ஆகி விடும். ஒரு தந்தையை நினைவு
செய்யுங்கள். தெய்வீக லட்சணங்களை கற்றுக் கொள்ளுங்கள் என்று குழந்தைகளுக்கு அடிக்கடி அறிவுரை
அளிக்கப்படுகிறது. எந்த ஒரு விகர்மம் கூட ஆகாதிருக்கட்டும். இதுவோ அசுரர்களின் காரியமாகும். நீங்கள்
இப்பொழுது தேவதை ஆகிறீர்கள். எனவே தெய்வீக குணங்களைத் தாரணை செய்ய வேண்டும். காமத்தின்
முள் எல்லாவற்றையும் விட பெரிய முள்ளாகும். பழக்கம் ஏற்பட்டு விட்டுள்ளது என்றால் அடிக்கடி விழுந்து
விடுகிறார்கள். மாயை ஓங்கி அறைந்து மூர்ச்சை அடையச் செய்து விடுகிறது. அப்பொழுது தான் ஆச்சரியப்படும்
வகையில் கேட்டார்கள், (பிறருக்கு) கூறினார்கள்..... என்று பாடப்படுகிறது. இப்பொழுது நீங்கள் ஒரு
23.08.2016
(4/4)
தந்தையினுடையவராக ஆகி உள்ளீர்கள். இவை எல்லாமே இறைவனால் கொடுக்கப்பட்டது என்று கூறவும்
செய்கிறீர்கள். எனவே நீங்கள் டிரஸ்டியாகி விடுகிறீர்கள். இவை எல்லாமே அவருடையது. நாம் அவரது
ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். நமக்கு எல்லாமே அர்ப்பணம் செய்து நமது ஸ்ரீமத்படி எப்படி நடக்கிறார்கள்
என்பதை தந்தையும் பார்க்கிறார்.எந்த ஒரு தப்பும் தவறுமான செலவு செய்து பாவ ஆத்மாக்களுக்கு ஒன்றும்
கொடுப்பதில்லையே? ஆரம்பத்தில் இவர் (பிரம்மா) கூட டிரஸ்டியாகி காண்பித்தார் அல்லவா? எல்லாமே
இறைவனுக்கு அர்ப்பணம் செய்து சுயம் டிரஸ்டியாகி விட்டார். அவ்வளவே! யாருக்கும் எதுவுமே கொடுக்கவில்லை.
இறைவனின் பொருட்டு செய்தார். எனவே இறைவனின் காரியத்தில் தான் ஈடுபட வேண்டும். சரீர நிர்வாகம்
கூட ஆகிக் கொண்டு இருந்தது அல்லவா? எதெல்லாம் இருந்ததோ எல்லாமே சேவையில் ஈடுபடுத்தி
விட்டார். இவரைப் பார்த்து பின்னர் மற்றவர்களும் அவ்வாறே செய்தார்கள். பட்டி அமைக்கப்பட்டு விட்டது.பட்டி
ஆகாமல் இருந்திருந்தால் இத்தனை குழந்தைகள் எப்படி சேவைக்காக சாமர்த்தியம் உடையவர்களாக ஆகி
இருக்க முடியும்? பாகிஸ்தானிலும் கற்றுக் கொண்டார்கள். பிறகு இங்கு வந்து கற்றுக் கொண்டார்கள். புரிய
வைப்பதற்கு லாயக்காக ஆன பிறகு தான் வெளியில் வந்தார்கள். இப்பொழுதோ பாருங்கள் எவ்வளவு
கண்காட்சிகள் ஆகியவை நடத்திக் கொண்டே இருக்கிறார்கள்.மிகப் பெரியவர்களுக்கு அழைப்பு கொடுக்கிறார்கள்.
இந்த ஞான யக்ஞத்தில் தடைகள் கூட அநேகவிதமாக ஏற்படும் .தடைகளுக்கு பயப்படக் கூடாது. அபலைகள்
மீது எவ்வளவு கொடுமைகள் ஆகின்றன. யோக பலத்தில் இருந்து அவர்களுக்கு புரிய வையுங்கள் என்று
தந்தை கூறுகிறார். பகவான் தந்தைக்குக் கூட குழந்தைகள் ஆகி பிறகு தந்தையை மறந்து விடுகிறீர்கள்.
மாயையினுடையவராக ஆகி விடுகிறீர்கள். இது கூட வெற்றி தோல்வியின் குஷ்தி ஆகும். ஆனால் குத்துச்
சண்டை போல ஆகும். மாயை குத்து விடும் பொழுது மூர்ச்சை அடைந்து விடுகிறார்கள். மாயையிடம் ஒரு
பொழுதும் தோற்று விடக் கூடாது என்று தந்தை கூறுகிறார். தூய்மையாக இருந்தீர்கள் என்றால் உலகிற்கு
அதிபதி ஆகி விடுவீர்கள். எவ்வளவு பெரிய வருவாய் இது! முழுமையாக முயற்சி செய்யவில்லை என்றால்
போய் தாச தாசியாக ஆகி விடுவீர்கள். இராஜதானி முழுவதும் இங்கேயே ஸ்தாபனை ஆகி கொண்டிருக்கிறது
.நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட
செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும்
காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. உயிருள்ளவரையும் ஞான அமிருதம் பருகிக் கொண்டே இருக்க வேண்டும். மகாவீரர் ஆகி
மாயையின் குத்துச் சண்டையில் வெற்றி அடைபவராக வேண்டும். எல்லோருடனும் உறவை
பேணிக்காப்பதோடு இதயத்தை ஒரு தந்தையிடம் வைக்க வேண்டும்.
2. தடைகளுக்கு பயப்படக் கூடாது. சேவையில் தன்னுடைய அனைத்தையும் பயனுள்ளதாக
ஆக்க வேண்டும். ஈசுவர அர்ப்பணம் செய்து டிரஸ்டியாகி இருக்க வேண்டும். எதையுமே
தப்பும் தவறுமான காரியத்தில் ஈடுபடுத்தக் கூடாது.
வரதானம்: ஒரு நொடியில் அனைத்து பலவீனங்களிலிருந்தும் முக்தி அடைந்து
மரியாதா புருஷோத்தமர் ஆகக் கூடிய சதா சிநேகி ஆவீர்களாக.
எப்படி சிநேகம் உடையவர் சிநேகத்தில் வந்து தங்களது அனைத்தையும் தியாகம் அல்லது அர்பபணம்
செய்து விடுகிறார்கள். சிநேகம் உடையவருக்கு எதையுமே அர்ப்பணம் செய்வதற்காக சிந்திக்க வேண்டி
இருக்காது. எனவே என்னவெல்லாம் மரியாதைகள் அல்லது நியமங்கள் கேட்கிறீர்களோ அவற்றை
நடைமுறையில் எடுத்து வருவதற்கான அல்லது அனைத்து பலவீனங்களிலிருந்து விடுதலை பெறுவதற்கான
சுலபமான யுக்தியாவது (வழிமுறை) லி சதா ஒரு தந்தையின் சிநேகி ஆகுங்கள். யாருடைய சிநேகியாக
இருக்கிறீர்களோ, அவருடைய தொடர்பில் (ஸங்) இருந்தீர்கள் என்றால் ஆன்மீகத்தினுடைய (ரங்) சாயம்
இடப்பட்டு விடும் மற்றும் ஒரு நொடியில் மரியாதா புருஷோத்தமராகி விடுவீர்கள். ஏனெனில் சிநேகிக்கு
தந்தையின் சகயோகம் (ஒத்துழைப்பு) இயல்பாகவே கிடைத்து விடுகிறது.
சுலோகன்: நிச்சயத்தின் அஸ்திவாரம் உறுதியாக இருந்தது என்றால்,
சம்பூர்ண நிலை வரை வந்தடைவது நிச்சயிக்கப்பட்டதாக இருக்கும்.
(1/4)
24
.08.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா , மதுபன்
இனிமையான குழந்தைகளே! தந்தை மற்றும் தாதாவின் கதையும் கூட ஆச்சரியமானது. தந்தை
எப்போது தாதாவுக்குள் பிரவேசமாகிறாரோ, அப்போது பிரம்மாகுமார்லிகுமாரிகளாகிய நீங்கள்
ஆஸ்திக்கு அதிகாரி ஆகிறீர்கள்.
கேள்வி : நிச்சயிக்கப்பட்ட டிராமா பற்றி அறிந்திருந்த போதிலும் குழந்தைகள் நீங்கள் எந்த ஒரு
இலட்சியத்தை அவசியம் மேற்கொள்ள வேண்டும்?
பதில் : புருஷார்த்தம் செய்து தாவிச் செல்வதற்கான இலட்சியம். அதாவது விநாசத்திற்கு முன் பாபாவின்
நினைவில் இருந்து, கர்மாதீத் ஆவதற்கான இலட்சியம் அவசியம் மேற்கொள்ள வேண்டும். கர்மாதீத் என்றால்
அயர்ன் ஏஜ்டில் இருந்து கோல்டன் ஏஜ்டாக (இராவண புரியில் இருந்து தேவதைகள் இராஜ்யத்தவராக)
ஆவது. புருஷார்த்தம் செய்வதற்கு இன்னும் கொஞ்சம் சமயமே உள்ளது. அதனால் விநாசத்திற்கு முன் தனது
நிலைப்பாட்டை ஆடாத, அசையாததாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
ஓம் சாந்தி. ஓம் சாந்தி. இந்த இரண்டையும் யார் சொல்கிறார்கள்? ஒருவர் பாபா, இன்னொருவர் தாதா.
கதை சொல்கின்றனர் இல்லையா லி ஒரு ராஜா இருந்தார், ஒரு ராணி இருந்தார் என்று? இப்போது இது புதிய
விஷயம். ஒரு பாபா, ஒரு தாதா என்று நீங்கள் சொல்வீர்கள். 5000 ஆண்டுகளுக்கு முன்பும் கூட சிவபாபாவும்
இருந்தார், இன்னொருவர் பிரம்மா தாதாவும் இருந்தார். இப்போது சிவனுடைய குழந்தைகளோ அனைவரும்
தான். அனைத்து ஆத்மாக்களும் ஒரு தந்தையின் குழந்தைகள். அவரோ இருக்கவே செய்கிறார். பிரம்மாவின்
குழந்தைகள் பிராமணர்களும் இருந்தனர். பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் பிரம்மாகுமார்லிகுமாரிகள் இருந்தனர்.
அவர்களுக்கு யார் படிப்பு சொல்லித் தந்தார்? சிவபாபா. பிரஜாபிதா பிரம்மாவுக்கு இந்த பிரம்மாகுமார்லிகுமாரிகளாகிய
ஏராளமான குழந்தைகள் உள்ளனர் இல்லையா? பிரம்மாகுமார்லிகுமாரிகள் நிச்சயமாக நாம் சிவபாபாவின்
குழந்தைகளாகவும் இருக்கிறோம், பேரக் குழந்தைகளாகவும் இருக்கிறோம் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர்..
குழந்தைகளாகவோ இருக்கத்தான் செய்கிறோம், இப்போது பேரக்குழந்தைகள் ஆகியிருக்கிறோம். பிரம்மா
மூலம் தாத்தாவிடமிருந்து ஆஸ்தி பெற வேண்டும். இப்போது உங்களுக்குத் தாத்தாவிடம் இருந்து ஆஸ்தி
கிடைக்கின்றது. அவரை சிவபாபா எனச் சொல்கின்றனர். ஆனால் பிரம்மாகுமார்லிகுமாரிகளாக இருக்கும் காரணத்தால்
அவரை நாம் தாத்தா எனச் சொல்கிறோம். ஆஸ்தி தாத்தாவினுடையது. பிரம்மா தாதாவினுடையது அல்ல.
வைகுண்டவாசி ஆவதற்கான ஆஸ்தி அந்த தந்தையிடமிருந்து கிடைக்கின்றது. அரைக்கல்பத்திற்கு ஆஸ்தி
பெறுகிறீர்கள். பிறகு உங்களுக்கு சாபம் கிடைக்கிறதுலிஇராவணனிடமிருந்து. கீழே இறங்கிக் கொண்டே வருகிறீர்கள்.
கிரகச்சாரி அமர்ந்து விட்டதாக ஆகிறது. இப்போது குழந்தைகள் நீங்கள் புரிந்து கொண்டீர்கள் லி நமது
கிரகச்சாரி ராகுவின் தசா முடிந்து விட்டது. ராகுவின் தசா அனைத்திலும் தீயது. உயர்ந்ததிலும் உயர்ந்த
பிரகஸ்பதியின் தசா (குருபார்வை), பிறகு ராகுவின் தசா (பார்வை) அமர்ந்து விட்டதால் 5 விகாரங்களின்
காரணத்தால் நாம் கருப்பாகி விட்டோம். இப்போது பாபா சொல்கிறார், தானம் கொடுத்தால் கிரகணம் விட்டுப்
போகும் என்று. இது உங்களுடைய விஷயம் தான். அவர்கள் பிறகு சூரியலிசந்திரனின் கிரகணம் எனப் புரிந்து
கொண்டுள்ளனர். கிரகணம் பிடித்தால் தானம் வேண்டுகின்றனர். இங்கே பாபா உங்களுக்குச் சொல்கின்றார், 5
விகாரங்களை தானம் கொடுத்தால் கிரகச்சாரம் இறங்கி விடும். இந்த விகாரங்களினால் தான் நீங்கள் பாவாத்மா
ஆகியிருக்கிறீர்கள். முக்கியமானது தேக அபிமானம். முதலில் அது போல் சதோபிரதானமாக இருந்தீர்கள்.
பிறகு சதோ ரஜோ தமோ ஆகியிருக்கிறீர்கள். 84 பிறவிகள் எடுத்திருக்கிறீர்கள். இதுவோ பக்கா நிச்சயம்,
அதாவது தேவதைகள் தாம் 84 பிறவிகளை எடுக்கின்றனர். முதலில் அவர்கள் தான் தந்தையோடு சந்திக்க
வேண்டும். பாடப்படவும் செய்கிறதுலிஆத்மாக்களும் பரமாத்மாவும் நீண்ட காலமாகப் பிரிந்து இருந்து விட்டனர்........
பாபா சொல்கிறார், முதல்லிமுதலில் உங்களை சத்யுகத்திற்கு அனுப்பியிருந்தேன். பிறகு இப்போது நீங்கள் தான்
வந்து சந்தித்திருக்கிறீர்கள். முன்போ வெறுமனே பாடிக் கொண்டிருந்தீர்கள். அதனுடைய யதார்த்த அர்த்தத்தை
இப்போது பாபா அமர்ந்து புரிய வைக்கிறார். அனைத்து வேதலிசாஸ்திரங்கள், ஜபம், தபம், சுலோகங்கள் முதலிய
அனைத்தினுடைய சாரத்தை அமர்ந்து புரிய வைக்கிறார். சக்கரத்தை புரிந்து கொள்வது முற்றிலும் சுலபமானது.
இப்போது கலியுகம் மற்றும் சத்யுகத்தின் சங்கமம். யுத்தமும் முன்னால் நின்று கொண்டுள்ளது. இதுவும்
உங்களுக்கு நிச்சயம் உள்ளது லி சத்யுகத்தின் ஸ்தாபனை நடைபெறுகின்றது. கலியுகத்தில் எவ்வளவு பேர்
உள்ளனரோ, அவர்கள் அனைவரின் சரீரங்களும் அழிந்து போகும். மற்றப்படி ஆத்மாக்கள் தூய்மையாகி
கணக்குலிவழக்கை முடித்து விட்டுச் செல்வார்கள். இது அனைவருடைய கயாமத் (விசாரணை மற்றும் தீர்ப்பு)
சமயமாகும். ஆத்மாக்கள் சரீரத்தை விட்டுச் சென்று விடுவார்கள். இது உங்களுடைய புத்தியில் இப்போது
உள்ளது. எது வரை நாம் கர்மாதீத் நிலையை அடைகிறோமோ, அது வரை சங்கமயுகத்தில் இருக்கிறோம். ஒரு
பக்கம் கோடிக்கணக்கான மனிதர்கள், மற்றொரு பக்கம் நீங்கள் கொஞ்சம் பேர். உங்களிலும் கூட எத்தனைப்
(2/4)
24.08.2016
பேர் நிச்சயபுத்தி உள்ளவர்களாக ஆகிக் கொண்டே செல்கின்றனர்? நிச்சயபுத்தி உள்ளவர்கள் வெற்றி
அடைவார்கள், பிறகு போய் விஷ்ணுவின் கழுத்து மாலை ஆவார்கள். ஒன்று ருத்திராட்ச மாலை, மற்றது
ருண்ட மாலை. அந்த ருண்ட மாலையில் சின்னச் சின்ன உருவம் உள்ளது. இது அடையாளமாகும்.
ஆத்மாக்களாகிய நாம் தான் வந்து மீண்டும் பாபாவின் கழுத்து மாலையின் மணிகளாக ஆவோம். பிறகு
இங்கே நம்பர்வார் வருவோம். மாலை 8 மணிகளால் ஆனதும் உள்ளது, 108 மணிகளால் ஆனதும் உள்ளது,
16108 மணிகளால் ஆனதும் உள்ளது. இப்போது 16 ஆயிரமா அல்லது 5லி10 ஆயிரமா என்ற கணக்கு எதுவும்
வெளிப்படுத்தப்படுவதில்லை. இந்த மாலைகள் பாடப் படுகின்றன. பாபா சொல்கிறார், இதையெல்லாம் நீங்கள்
ஏன் சிந்தனை செய்கிறீர்கள்? எவ்வளவு ராஜாக்கள் கல்பத்துக்கு முன் சத்யுகலிதிரேதாயுகத்தில் ஆகியிருந்தார்களோ,
அவ்வளவு தான் ஆவார்கள். 100 பேர் ஆவார்களா, அல்லது 2லி3 நூறு ஆவார்களா என்று கேட்கக் கூடாது.
பாபா சொல்கிறார் லி நீங்கள் எவ்வளவு அருகில் வந்து கொண்டே இருப்பீர்களோ, அப்போது அப்போது
இவை அனைத்தையும் புரிந்து கொள்வீர்கள். இன்று நாம் இங்கே இருக்கிறோம். நாளை விநாசம் ஆகும்.
பிறகு சத்யுகத்தில் கொஞ்சம் தேவிலிதேவதைகள் இருப்பார்கள். பிறகு எண்ணிக்கை அதிகமாகும். சத்யுகத்தின்
அறிகுறியும் காணப்படுகின்றது. மற்றப்படி இலட்சக் கணக்கில் போய் இருப்பார்கள். பிறகு இலட்சம் பேர்களோ
அல்லது 9லி10 லட்சம் இருக்கலாம். மிகச் சரியாகச் சொல்ல முடியாது. ஆம், நீங்கள் எப்போது சரியாக சம்பூர்ணம்
ஆவதற்குத் தகுதி உள்ளவர்களாக ஆகிறீர்களோ, அப்போது உங்களுக்கு இன்னும் அதிகமாக சாட்சாத்காரங்கள்
ஆகி விடும். இப்போதோ இன்னும் நிறைய புரிந்துக் கொள்ள சமயம் உள்ளது. அதிக சாட்சாத்காரம் செய்து
கொண்டே இருப்பீர்கள். யுத்தத்திற்கான ஏற்பாடுகளும் அதிகமாக நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.
எல்லாப் பொருட்களும் விலை அதிகமாகிக் கொண்டே போகும். வெளிநாடுகளிலும் இப்போது வரிகள்
முதலியவற்றை அதிகம் போட்டுக் கொண்டே இருப்பார்கள். மிக அதிகமாக விலைவாசிகள் ஏறி, பிறகு ஒரேயடியாக
மலிவாகி விடும். சத்யுகத்தில் எந்த ஒரு பொருளுக்கும் விலை இருக்காது. சுரங்கங்கள் அனைத்தும் நிரம்பி
விடும். புது உலகத்தில் மேன்மை / செழிப்பு அதிகம் இருக்கும். லட்சுமிலிநாராயணரிடம் அதிக செல்வங்கள்
இருந்தன இல்லையா? ஸ்ரீநாத் கோவிலில் மூர்த்திகளுக்கு முன்னிலையிலும் எவ்வளவு ஆடம்பரமாக போக்
வைக்கின்றனர்! அங்கே அதிகமான உணவுப் பொருள்கள் தயார் செய்கின்றனர், சாப்பிட்டுக் கொண்டே
இருக்கின்றனர். நாங்கள் தேவதைகளுக்கு போக் படைக்கிறோம் எனச் சொல்வார்கள். தேவதைகளுக்கு போக்
படைக்கவில்லை என்றால் அவர்கள் கோபமடைவார்கள் என்றும் சொல்வார்கள். இப்போது இதில் கோபம்
கொள்வதற்கான விஷயமோ கிடையாது. நீங்கள் யார் மீதும் கோபம் கொள்வது கிடையாது. டிராமாவின்
அனுசாரம் இந்த விநாசம் நடைபெற்றாக வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். கலியுகத்திலிருந்து
மாறி சத்யுகம் வரும். இந்த டிராமாவைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் லி அதாவது டிராமாவின் அனுசாரம்
இப்போது புதிய சக்கரம் தொடங்க வேண்டும். நீங்களும் கூட டிராமாவின் வசமாகி இருக்கிறீர்கள். டிராமா
அனுசாரம் பாபாவும் வந்து விட்டார். டிராமாவில் ஒரு நிமிடம் கூட மேலேலிகீழே இருக்காது. எப்படி பாபா
வந்தார், நீங்கள் பார்த்தீர்கள், கல்பத்திற்குப் பிறகும் கூட அப்படியே நடைபெறும். சாஸ்திரங்களிலோ கல்பத்தின்
ஆயுள் மிக நீண்டதாக எழுதி விட்டனர். இப்போது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது, நிச்சயமாக
விநாசம் முன்னால் நின்று கொண்டுள்ளது. இப்போது நீங்கள் வேகமாக முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறீர்கள்.
நீங்கள் அறிவீர்கள், பாபாவை நினைவு செய்து நாம் கர்மாதீத் நிலையை அவசியம் அடைய வேண்டும்.
அதாவது அயர்ன் ஏஜிலிருந்து (கலியுக நரகத்திலிருந்து) கோல்டன் ஏஜ் ஆக வேண்டும். இப்போது புருஷார்த்தம்
செய்யவில்லை என்றால் பதவி கீழானதாக ஆகி விடும். ஹே ஆத்மாக்களே, இப்போது நீங்கள் தூய்மையற்றவராகி
விட்டீர்கள். இதையும் அறிவீர்கள், அநேக விதமானவர்கள் வருவார்கள். வேறு தர்மத்தில் மாறிப் போனவர்களும்
வெளியேறி இங்கே வந்து கொண்டே இருப்பார்கள். வந்து தங்களின் புருஷார்த்தத்தைச் செய்து கொண்டே
இருப்பார்கள் லி தந்தையிடம் ஆஸ்தி பெறுவதற்காக. பிராமண தர்மத்தில் வந்து பிறகு தேவதா தர்மத்தில்
வருவார்கள். பிராமண தர்மத்தில் வரவில்லை என்றால் பிறகு தேவதா தர்மத்தில் எப்படி வருவார்கள்? பிராமணர்கள்
நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போவார்கள். விநாசம் முன்னால் வந்து விட்டது என்பதைப் பார்ப்பார்கள்,
இதையோ சரியாகவே சொல்கிறார்கள். பிறகு பிராமணர்கள் அதிகமாகிக் கொண்டே செல்வார்கள். பிராமணர்களின்
மரம் வளர்ச்சி அடைந்து முழுமை பெற்று விடும். பிறகு திரும்பிச் செல்வீர்கள். தேவதைகளின் மரம் பெரியதாக
ஆகும்.
இப்போது நீங்கள் சங்கமயுகத்தில் இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். இந்த சங்கமயுகம் கல்யாண்காரி
யுகம் எனச் சொல்லப் படுகின்றது. சங்கமயுகத்திற்குத் தான் பாடல் உள்ளது லி கங்கை மற்றும் கடலின்
சந்திப்பைக் காட்டுகின்றனர். அவை அனைத்தும் பக்தி மார்க்கத்தினுடையவை. இவர்கள் ஞானக் கடல் மற்றும்
ஞானக்கடலில் இருந்து வெளிப்பட்டுள்ள ஞான கங்கைகள். ஞானக்கடலில் இருந்து பதீத பாவன் என்ற சொல்
வருகிறது. பதீத பாவனி கங்கை என்று அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். பிறகு கங்கையில் குளித்தே
(3/4)
24.08.2016
வந்துள்ளனர். இந்த உலகமோ சத்யுகத்தில் தொடங்கி நடந்து வந்துள்ளது. தற்சமயமோ நதிகளும் கூட
எங்கெங்கோ (நில பரப்பை) மூழ்கடித்து விடுகின்றது. இயற்கையும் கூட தமோபிரதானம், கடலும் தமோப்ரதானம்
ஆகி விட்டுள்ளது. கடல் கொஞ்சம் கொந்தளித்தால் போதும், அனைத்தையும் அழித்து விடும். சத்யுகத்தில்
நாம் கொஞ்சம் பேர் மட்டுமே பாரதத்தில் இருப்போம் லி யமுனை நதிக்கரையில். டெல்லி தேவதைகள்
வசிப்பிடமாக இருந்தது. மீண்டும் ஆகப் போகிறது. சத்யுகத்தில் கொஞ்சம் ஜீவாத்மாக்கள் இருப்பார்கள். பிறகு
கொஞ்சம் லி கொஞ்சமாக வந்து கொண்டிருப்பார்கள். இப்போது கலியுகத்தின் கடைசி. எவ்வளவு ஏராளமான
மனிதர்கள் ஆகி விட்டனர்! எல்லையற்ற நாடகம். இதை நல்லபடியாகப் புரிந்து கொள்ள வேண்டும். சிலர்
தங்களை நடிகர் எனப் புரிந்து கொண்டிருக்கவும் செய்கின்றனர். ஆனால் கல்பம் 5000 ஆண்டுகளினுடையது.
இது யாருக்குமே தெரியாது. எங்கே 84 பிறவிகள், எங்கே 84 லட்சம்! இப்போது நீங்கள் ஒளிப் பிரகாசத்தில்
இருக்கிறீர்கள். உங்களுக்கு பாபாவிடம் இருந்து ஆஸ்தி கிடைக்கின்றது. பாபா சொல்கிறார் லி மன்மனாபவ.
தந்தையை நினைவு செய்ய வேண்டும். சிவபகவான் வாக்கு. கிருஷ்ணர் ஞானக்கடல் அல்ல. பகவானின்
மகிமைக்கும் தேவதைகளின் மகிமைக்கும் இடையில் மிகுந்த வேறுபாடு உள்ளது. பாபா புதிய படைப்பினைப்
படைக்கிறார். அந்தப் படைப்பாகிய தேவதைகளின் மகிமை லி சர்வகுண சம்பன்ன.......... இப்போது நீங்கள் அது
போல் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். பாபாவின் மகிமைக்கும் அவர்களின் மகிமைக்கும் இடையில் இரவுலிபகலுக்குள்ள
வேறுபாடு உள்ளது. இது இராஜயோகம் அல்லவா? பாடவும் படுகிறது லி பகவான் இராஜயோகம் கற்பிக்கிறார்.
அவர் நிராகார், ஆகவே நிச்சயமாக நிராகாரில் (அசரீரியில்) இருந்து சாகாரில் (சரீரத்தில்) வர வேண்டியுள்ளது.
எவ்வளவு மகிமை அவருக்கு, அவர் வந்தே ஆக வேண்டியுள்ளது, அவருடைய பிறவி தெய்விகமானது,
அலௌகிகமானது. ஆனால் அவரது திவ்ய ஜென்மம் பாடப் படவில்லை. இதுவும் குழந்தைகளுக்குப் புரிய
வைக்கப் படுகிறது லி ஒருவர் அலௌகிகத் தந்தை, மற்றவர் பரலௌகிகத் தந்தை. அவரைத் தான் பகவான்
எனச் சொல்லி நினைவு செய்கின்றனர். மேலும் மூன்றாமவர் அலௌகிகத் தந்தை. இவர் பிறகு அதிசயமான
தந்தை. அந்தத் தந்தை தத்தெடுக்கிறார் என்றால் இடையில் இந்த அலௌகிகத் தந்தை வந்து விடுகிறார்.
பிரஜாபிதா பிரம்மாவுக்கு எவ்வளவு ஏராளமான குழந்தைகள்! சிவபாபா வந்து பிரம்மா மூலம் உங்களைத்
தம்முடையவர்களாக ஆக்குகிறார். லௌகிக் தந்தைக்கோ 8லி10 குழந்தைகள் இருக்கலாம். நல்லது, சிவபாபா
பரலௌகிகத் தந்தையாகவும் இருக்கிறார். அவருக்கோ அநேகக் குழந்தைகள். அனைத்து ஆத்மாக்களும்
சொல்கின்றனர் லி நாம் அனைவரும் சகோதரர்கள். இப்போது சங்கமயுகத்தில் பிறகு அலௌகிகத் தந்தை
கிடைக்கிறார். இந்த ஞானம் உங்களுக்கு அங்கே (சத்யுகத்தில்) இருக்காது. எப்போது தந்தை வந்து புது
சிருஷ்டியைப் படைக்கிறாரோ, அப்போது தான் பிரஜாபிதா பிரம்மா தந்தை கிடைக்கிறார். ஆக, இது அலௌகிக
ஜென்மம் ஆகிறது இல்லையா? இதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. இவர் லௌகிக், அவர் பரலௌகிக்
மற்றும் இவர் சங்கமயுக அலௌகிகத் தந்தை. லௌகிகத் தந்தையரோ சத்யுகத்தில் தொடங்கி இருந்தே
வந்துள்ளனர். பரலௌகிகத் தந்தையை அங்கே யாரும் நினைவு செய்வதில்லை. அங்கே இருப்பது ஒரே
தந்தை. ஹே பகவானே, ஹே பரமாத்மா எனச் சொல்லி நினைவு செய்வதில்லை. பிறகு துவாபர யுகத்தில் பக்தி
மார்க்கம் ஆரம்பமாகும் போது இரண்டு தந்தையர் உள்ளனர். சங்கமயுகத்தில் மூன்று தந்தையர். பிரஜாபிதா
பிரம்மாவும் இப்போது கிடைக்கிறார். இப்போது நீங்கள் அவருடையவர்களாக ஆகியிருக்கிறீர்கள். நீங்கள்
அறிவீர்கள், இவர் அலௌகிகத் தந்தை. இப்போது நீங்கள் இந்த விஷயங்களை நன்றாக அறிந்து கொண்டீர்கள்.
மேலும் நினைவு செய்கிறீர்கள். தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள். சத்யுகத்தில்
நினைவு செய்வதற்கான அவசியமே இருக்காது. துக்கத்தில் பரலௌகிகத் தந்தையை அனைவரும் நினைவு
செய்கின்றனர். இதுவோ புரிந்து கொள்வதற்கு முற்றிலும் சுலபமான விஷயம். சத்யுகலிதிரேதாவில் ஒரு தந்தை
இருக்கிறார். துவாபரயுகத்தில் இரண்டு தந்தையர் உள்ளனர். இச்சமயம் நீங்கள் அலௌகிகத் தந்தையின்
குழந்தைகளாக ஆகியிருக்கிறீர்கள். அவர் மூலம் நீங்கள் ஆஸ்தி பெறுகிறீர்கள். குழந்தைகள் நீங்கள் தான்
பிராமணர் ஆகிறீர்கள், பிறகு தேவதை ஆகிறீர்கள். விநாசமும் நீங்கள் தான் பார்க்கப் போகிறீர்கள். அதை
இந்தக் கண்களால் பார்ப்பீர்கள், வெடிகுண்டுகளைப் போடுவார்கள். மனிதர்களோ இறந்து விடுவார்கள் இல்லையா?
ஜப்பானிலும் வெடிகுண்டு போட்டார்கள். எப்படி மனிதர்கள் இறந்தார்கள் என்பதைப் பார்த்தோம் இல்லையா?
இப்போது இங்கே சண்டைகள் நடைபெற்றுக் கொண்டே உள்ளன. அவர்களே சொல்கின்றனர், நாங்கள்
சலிப்படைந்து விட்டோம் என்று. 10லி10 ஆண்டுகள் வரை கூட சண்டை நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.
வெடிகுண்டுகளாலோ ஒரு விநாடியிலேயே அனைத்தும் அழிந்து போகும். தீப்பொறி எழுமானால் நகரமே
அழிந்து போகும். இவையோ வெடிகுண்டுகள். நெருப்பும் பற்றிக் கொள்ளப் போகிறது. குழந்தைகள் நீங்கள்
அறிவீர்கள், பாபா வந்திருப்பதே ஸ்தாபனை மற்றும் விநாசம் செய்விப்பதற்காக. ஆகவே நிச்சயமாக இவை
அனைத்தும் நடைபெறும். புருஷார்த்தம் செய்வதற்கு இது தான் சமயம். மாயா அடிக்கடி உங்கள் புத்தியோகத்தைத்
துண்டித்து விடுகின்றது. இன்னும் நீங்கள் எதுவரை அசையாத, உறுதியானவர்களாக ஆகியிருக்கிறீர்கள்?
மாயாவின் புயல்கள் அதிகம் வருவதாகச் சொல்கின்றனர். சிலரோ நாள் முழுவதிலும் அரை மணி நேரம் கூட
(4/4)
24.08.2016
நினைவு செய்வதில்லை. பாபா சொல்கிறார் லி நீங்கள் கர்மயோகிகள். 8 மணி நேரமோ இந்த சேவை செய்வீர்கள்.
8 மணி நேரம் நினைவு செய்ய முடிகின்ற அளவு புருஷார்த்தம் செய்ய வேண்டும். நினைவு செய்து
கொண்டே இருப்பதால் விகர்மங்கள் விநாசமாகிக் கொண்டே போகும். இது தான் யோக அக்னி எனச்
சொல்லப் படுகின்றது. இது தான் செய்ய வேண்டிய முயற்சியாகும். இல்லற விவகாரங்களில் இருந்து கொண்டே
நினைவு மட்டும் செய்ய வேண்டும். இதையும் பாபா சொல்கிறார் லி யார் இல்லறத்தை விட்டு விட்டார்களோ,
குழந்தை ஆகியிருக்கிறார்களோ, அவர்கள் கூட இவ்வளவு நினைவு செய்வதில்லை. வீட்டில் வசிப்பவர்கள்
இன்னும் அதிகமாக நினைவு செய்கின்றனர். அர்ஜுனன் மற்றும் காட்டுவாசி பற்றிய உதாரணமும் சொல்கின்றனர்
இல்லையா? பாபாவை நினைவு செய்வது மற்றும் சக்கரத்தைப் புரிந்து கொள்வதில் முயற்சி தேவைப் படுகின்றது.
மகாபாரத யுத்தமும் நிச்சயமாக நடைபெறும். சத்யுகத்தில் நடைபெறாது. ஆக, குழந்தைகளாகிய நீங்கள்
பார்வையற்றவர்களுக்கு ஊன்றுகோலாகவும் ஆக வேண்டும். அனைவருக்கும் வழி சொல்ல வேண்டும்லிதந்தையை
நினைவு செய்யுங்கள், சக்கரத்தை நினைவு செய்யுங்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும்
தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம் :
1) குறைந்தது 8 மணி நேரமாவது நினைவில் இருப்பதற்கான புருஷார்த்தம் செய்ய வேண்டும்.
தனது நிலையை ஆடாத, அசையாததாக வைத்திருப்பதற்காக நினைவின் அப்பியாசத்தை
அதிகரிக்க வேண்டும். கவனக்குறைவாக இருந்துவிடக் கூடாது.
2) இந்த டிராமா முற்றிலும் மிகச்சரியாக உருவாக்கப் பட்டுள்ளது. அதனால் யார் மீதும்
கோபப்படக் கூடாது. நிச்சயபுத்தி உள்ளவராக ஆக வேண்டும்.
வரதானம் : சிநேகி (தந்தைக்கு அன்பானவராக) ஆவதற்கான ஆழமான ரகசியத்தைப் புரிந்து
அனைவரையும் திருப்திப் படுத்தக் கூடிய ராஜ்யுக்த், யோகயுக்த் ஆகுக.
எந்தக் குழந்தைகள் ஒரு சர்வ சக்திவான் தந்தையின் அன்புக்குரியவராகி (சிநேகி) இருக்கின்றனரோ,
அவர்கள் அனைத்து ஆத்மாக்களுக்கும் அன்பானவர்களாக தாமாகவே ஆகி விடுவர். இந்த ஆழமான
ரகசியத்தை யார் புரிந்து கொள்கின்றனரோ, அவர்கள் ராஜ்யுக்த் (ஞானத்தின் இரகசியத்தை புரிந்தவர்களாக),
யோகயுக்த் (மிகச்சரியாக நினைவில் மூழ்கியிருப்பவர்களாக) மற்றும் திவ்ய குணங்களால் யுக்தியுக்த் (காரியங்களை
பாபாரிவரும்பியபடி செய்பவர்களாக) ஆகி விடுகின்றனர். அத்தகைய ராஜ்யுக்த் ஆத்மா அனைத்து
ஆத்மாக்களையும் சகஜமாகவே திருப்திப் படுத்தி விடுவார்கள். யார் இந்த ரகசியத்தை அறிந்து கொள்ளவில்லையோ,
அவர்கள் சில நேரம் மற்றவர்களைக் கோபப் படுத்துகின்றனர் மற்றும் சில நேரம் தாங்களே கோபத்தில்
உள்ளனர். அதனால் சதா சிநேகியின் இரகசியத்தை அறிந்து கொண்டு ராஜ்யுக்த் ஆகுங்கள்.
சுலோகன் : யார் நிமித்தமாக (கருவி) உள்ளனரோ, அவர்கள் பொறுப்புகளை
நிறைவேற்றிக் கொண்டும் கூட சதா இலேசாக இருப்பார்கள்.
(1/4)
25
.08,2016, காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! உங்களை பாவங்கள் நிறைந்த உலகத்திலிருந்து வெளிக்
கொண்டு வந்து அமைதியின் உலகத்திற்கு அழைத்துச் செல்வதற்காக தந்தை வந்துள்ளார்.
தந்தையின் மூலம் உங்களுக்கு சுகம் அமைதி எனும் இரண்டு பரிசுகள் கிடைக்கின்றன.
கேள்வி: முழு உலகில் உண்மையிலும் உண்மையான (நன்ஸ்) கன்னியா ஸ்திரீகள் நீங்கள், உண்மையான
நன்ஸ் என யாரை சொல்லலாம்?
பதில்: யாருடைய புத்தியில் ஒருவருடைய நினைவு இருக்குமோ அவர்கள் உண்மையான கன்னியர்
(நன்ஸ்) ஆவார்கள் அதாவது நன் பட் ஒன் (ஒருவரைத் தவிர வேறு யாருமில்லை). அவர்கள் தங்களை
நன்ஸ் என சொல்லிக் கொள்ளலாம், ஆனால் அவர்களுடைய புத்தியில் ஒரு கிறிஸ்து மட்டுமல்ல, கிறிஸ்துவைக்
கூட இறைவனின் குழந்தை என சொல்வார்கள், எனவே அவர்களுடைய புத்தியில் இருவர் இருக்கின்றனர்
மற்றும் உங்களின் புத்தியில் ஒரு தந்தை இருக்கிறார், ஆகையால் நீங்கள் உண்மையிலும் உண்மையான
நன்ஸ் ஆக இருக்கிறீர்கள். தூய்மையாய் இருக்க வேண்டும் என்பது தந்தையின் கட்டளையாகும்.
பாடல்: இந்த பாவம் நிறைந்த உலகிலிருந்து. . .
ஓம் சாந்தி. இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள். யார்
கேட்டது? ஆத்மாக்கள். ஆத்மாவை பரமாத்மா என சொல்ல முடியாது. மனிதர்களை பகவான் என சொல்ல
முடியாது. நல்லது, இப்போது நீங்கள் பிராமணர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் இப்போது தேவதைகள் என
சொல்லப்படுவதில்லை. பிரம்மாவையும் கூட தேவதா என சொல்லப்பட முடியாது. பிரம்மா தேவதாய நமஹ.
. . விஷ்ணு தேவதாய நமஹ. . . என்றென்னவோ சொல்கின்றனர், ஆனால் பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும்
இடையே நிறைய வித்தியாசம் உள்ளது. விஷ்ணு தேவதா எனப்படுகிறார், பிரம்மாவை தேவதா என சொல்ல
முடியாது ஏனென்றால் அவர் பிராமணர்களின் தந்தை. பிராமணர்களை தேவதைகள் என சொல்லப்பட முடியாது.
இப்போது இந்த விஷயங்களை மனிதர்கள் யாரும் மனிதர்களுக்குப் புரிய வைக்க முடியாது, பகவான் தான்
புரிய வைக்கிறார். மனிதர்கள் குருட்டு நம்பிக்கையால் என்ன தோன்றுகிறதோ அதனை சொல்லி விடுகின்றனர்.
ஆன்மீகத் தந்தை குழந்தைகளாகிய நம்மை கற்பித்துக் கொண்டிருக்கிறார் என இப்போது குழந்தைகளாகிய
நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். தன்னை ஆத்மா என புரிந்து கொள்ள வேண்டும். நான் ஆத்மா இந்த சரீரத்தை
எடுக்கிறேன். நான் ஆத்மா 84 பிறவிகளை எடுத்திருக்கிறேன். எப்படி எப்படி கர்மங்கள் செய்கின்றனரோ
அப்படிப்பட்ட சரீரம் கிடைக்கிறது. சரீரத்திலிருந்து ஆத்மா பிரிந்து சென்று விட்டால் பிறகு (அவருடைய)
சரீரத்தின் மீது அன்பு இருக்காது. ஆத்மாவின் மீது அன்பு இருக்கும். ஆத்மாவிடம் கூட அது சரீரத்தில்
இருக்கும்போது தான் அன்பு இருக்கும். பித்ருக்களை மனிதர்கள் அழைக்கின்றனர், அவர்களுடைய சரீரம்
அழிந்து விட்டது என்றாலும் கூட அவருடைய ஆத்மாவை நினைவு செய்கின்றனர், ஆகையால்
பிராமணர்களுக்குள் வரவழைக்கின்றனர். இன்னாருடைய ஆத்மாவே வாருங்கள், வந்து இந்த உணவைச்
சாப்பிடுங்கள் என அழைக்கின்றனர். இது ஆத்மாவின் மீது மோகம் இருப்பது போல ஆகிறது. ஆனால்
முன்னர் சரீரத்தின் மீது மோகம் இருந்தது, அந்த சரீரம் நினைவுக்கு வந்து கொண்டிருந்தது. நாம் ஆத்மாவை
அழைக்கிறோம் என புரிந்து கொள்வதில்லை. ஆத்மாதான் அனைத்தும் செய்கிறது. ஆத்மாவில் நல்ல மற்றும்
கெட்ட சம்ஸ்காரங்கள் இருக்கின்றன. முதன் முதலாக தேக அபிமானம் இருக்கும், பிறகு அதற்குப் பின்னால்
மற்ற விகாரங்கள் வருகின்றன. அனைத்தையும் சேர்த்து விகாரிகள் என சொல்லப்படுகின்றனர். யாருக்குள்
இந்த விகாரங்கள் இல்லையோ அவர்கள் நிர்விகாரிகள் (விகாரமற்றவர்கள்) என சொல்லப்படுகின்றனர். பாரதத்தில்
தேவி தேவதைகள் இருந்தபோது அவர்களுக்குள் தெய்வீக குணங்கள் இருந்தன என்பதை புரிந்து கொள்கிறீர்கள்.
இந்த லட்சுமி நாராயணரின் தர்மமே தேவி தேவதா தர்மம் ஆகும். இது கிறிஸ்தவ தர்மத்தில் ஆண் அல்லது
பெண் என அனைவருமே கிறிஸ்தவர்கள் என்பது போல ஆகும். இவர்களும் தேவி தேவதைகள் என
சொல்லப்படுகின்றனர். ராஜா, ராணி, பிரஜைகள் என அனைவருமே தேவி தேவதா தர்மத்தவர்கள் ஆவர்.
இது மிகவும் உயர்வான சுகத்தைக் கொடுக்கக் கூடிய தர்மம் ஆகும். குழந்தைகள் பாடலையும் கேட்டீர்கள்,
பாபா எனக்கு சுகம்லிஅமைதி கிடைக்கக் கூடிய இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என ஆத்மா சொன்னது.
அது சுகதாமம் மற்றும் சாந்திதாமம் ஆகும். இங்கே மிகவும் அமைதியற்ற நிலை உள்ளது. சத்யுகத்தில்
அமைதியற்ற நிலை இருக்காது. பாபாவைத் தவிர யாரும் அமைதியின் உலகத்திற்கு அழைத்துச் செல்ல
முடியாது என ஆத்மாவுக்குத் தெரியும். தந்தை சொல்கிறார் லி முக்தி மற்றும் ஜீவன் முக்தி எனும் இந்த
இரண்டு பரிசுகளை ஒவ்வொரு கல்பத்திலும் கொண்டு வருகிறேன். ஆனால் நீங்கள் மறந்து விடுகிறீர்கள்,
நாடகத்தின்படி மறக்கத்தான் வேண்டியுள்ளது. அனைவரும் மறந்து விடும்போது நான் வருவேன். இப்போது
(2/4)
25.08.2016
நீங்கள் பிராமணர்களாக ஆகியுள்ளீர்கள், நாம் 84 பிறவிகள் எடுத்திருக்கிறோம் என்ற நிச்சயம் உங்களுக்கு
இருக்கிறது. யார் முழுமையான ஞானம் எடுக்கவிலையோ அவர்கள் முதலில் புதிய உலகில் கூட வர
மாட்டார்கள். திரேதா அல்லது திரேதாவின் இறுதியில் வருவார்கள். அனைத்தும் முயற்சியில் அடங்கியுள்ளது.
சத்யுகத்தில் சுகம் இருந்தது, இந்த லட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருந்தது. நல்லது, இவர்களின் முந்தைய
பிறவியில் யாராக இருந்தனர் என்பது யாருக்கும் தெரியாது. முந்தைய பிறவியில் இவர்கள் பிராமணர்களாக
இருந்தனர். அதற்கும் முன்பு சூத்திரர்களாக இருந்தனர். வர்ணங்கள் குறித்து நீங்கள் நல்ல விதமாகப் புரிய
வைக்க முடியும்.
நாம் 21 பிறவிகளுக்கு அமைதியை அடைவோம் என இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். பாபா
நமக்கு அதற்கான வழியை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். நாம் இப்போது தூய்மையற்றவர்களாக
இருக்கிறோம். ஆகையால் அமைதியற்றவர்களாக, துக்கம் மிக்கவர்களாக இருக்கிறோம். எங்கே அமைதி
இருக்குமோ அதனை சுகம்லிசாந்தி என்போம். ஆக இப்போது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் முதல்லிஇடைலி
கடைசியின் ஞானம் உள்ளது. சத்யுகத்தில் பாரதம் எவ்வளவு சுகம் மிக்கதாக இருந்தது, துக்கமோ, அமைதி
யின்மையோ பெயரளவிலும் இருக்கவில்லை என புரிந்து கொள்கிறீர்கள். இப்போது நீங்கள் சொர்க்கத்திற்குச்
செல்வதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். இப்போது நீங்கள் ஈஸ்வரிய சம்பிரதாயத்தவர்களாக
ஆகியுள்ளீர்கள், அவர்கள் அசுர சம்பிரதாயத்தவர்கள். பாவாத்மா என சொல்கின்றனர் அல்லவா. ஆத்மாக்கள்
பல, பரமாத்மா ஒருவர் ஆவார். அனைவரும் சகோதரர்கள், அனைவருமே பரமாத்மாவாக ஆக முடியாது.
இந்த சிறிய விஷயம் கூட மனிதர்களின் புத்தியில் இல்லை. இந்த முழு உலகமுமே எல்லைக்கப்பாற்பட்ட
தீவாக உள்ளது. அவை சிறிய சிறிய தீவுகளாக இருக்கின்றன. இந்த எல்லைக்கப்பாற்பட்ட தீவில் இராவணனின்
இராஜ்யம் உள்ளது. இந்த விஷயங்களை மனிதர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் வெறும் கதைகளை
சொல்லிக் கொண்டிருந்தனர். கதையை ஞானம் என்று சொல்வதில்லை. அதன் மூலம் மனிதர்கள் சத்கதியை
அடைய முடியாது. ஞானத்தின் மூலம் சத்கதி கிடைக்கிறது. ஞானத்தைக் கொடுப்பவர் ஒரு தந்தை, வேறு
யாரும் கிடையாது. பகவான் தான் வந்து பக்தர்களை காப்பாற்றுகிறார். மனிதர்கள் மனிதர்களை பாதுகாக்க
முடியாது. சிவபாபா அனைத்து குழந்தைகளுக்கும் ஆஸ்தி கொடுக்கிறார். அவர் தந்தையாகவும், ஆசிரியாராகவும்,
சத்குருவாகவும் இருக்கிறார். வக்கீல், நீதிபதியாகவும் இருக்கிறார், ஏனென்றால் தண்டனையில் இருந்து விடுவிக்கக்
கூடியவராக இருக்கிறார். சத்யுகத்தில் யாரும் சிறைச்சாலைக்குச் செல்ல மாட்டார்கள். தந்தை அனைவரையும்
சிறையிலிருந்து விடுவிக்கிறார். குழந்தைகளின் அனைத்திலும் உயர்ந்த மனவிருப்பங்கள் அனைத்தும்
நிறைவேறுகின்றன. இராவணனின் மூலம் அசுத்தமான விருப்பங்கள் நிறைவேறுகின்றன. தந்தையின் மூலம்
சுத்தமான விருப்பங்கள் நிறைவேறுகின்றன. சுத்தமான விருப்பங்கள் நிறைவேறுவதன் மூலம் நீங்கள் சதா
சுகம் நிறைந்தவர்களாக ஆகி விடுகிறீர்கள். அசுத்தமான விருப்பம் என்றால் தூய்மையற்ற விகாரமிக்கவராக
ஆவது. தூய்மையாய் இருப்பவர்கள் பிரம்மச்சாரிகள் எனப்படுகின்றனர். நீங்களும் கூட தூய்மையாய் இருக்க
வேண்டும். தூய்மை அடைந்து தூய்மையான உலகின் எஜமானாக ஆக வேண்டும். தூய்மையற்றவரிலிருந்து
தூய்மையானவர்களாக ஒரு தந்தைதான் ஆக்குகிறார். சாது லி சன்னியாசிகள் விகாரத்தின் மூலம் பிறக்கின்றனர்,
தேவதைகள் குறித்து அப்படி சொல்வதில்லை. அங்கே விகாரங்கள் இருப்பதே இல்லை. அது தூய்மையான
உலகம் ஆகும். லட்சுமி நாராயணர் முழுமையான விகாரமற்றவர்களாக இருந்தனர், பாரதம் தூய்மையாக
இருந்தது. இதனை இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். சத்யுகத்தில் தூய்மை இருந்தபோது அமைதியும்
செல்வ வளமும் இருந்தது, அனைவரும் சுகம் மிக்கவர்களாக இருந்தனர். இராவண இராஜ்யம் தொடங்கிய
போது கீழே இறங்கியபடி வந்தனர். இப்போது எதற்கும் பயனற்றவர்களாகி இருக்கின்றனர். முற்றிலுமாக
சோழிகளாக (மதிப்பற்றவர்களாக) ஆகி விட்டனர். இப்போது மீண்டும் வைரத்திற்குச் சமமாக தந்தையின் மூலம்
ஆகிறீர்கள். தமது தர்மத்தைப் பற்றியே யாருக்கும் தெரியவில்லை. பாவங்கள் செய்தபடி இருக்கின்றனர்.
அங்கே பாவத்தின் பெயரே கிடையாது. நீங்கள் தேவி தேவதா தர்மத்தின் பெயர் பெற்றவர்கள், தேவதைகளின்
அளவற்ற சித்திரங்கள் உள்ளன. மற்ற தர்மங்களில் பார்த்தால் ஒரே படம்தான் இருக்கும், கிறிஸ்தவர்களிடம்
ஒரே கிறிஸ்துவின் படம் மட்டும்தான் இருக்கும். பௌத்த தர்மத்தவர்களிடம் ஒரு புத்தருடையது மட்டும்
இருக்கும். கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவைத்தான் நினைவு செய்கின்றனர். அவர்கள் நன்ஸ் என சொல்லப்படுகின்றனர்.
நன்ஸ் என்றால் ஒரு கிறிஸ்துவைத் தவிர யாருமில்லை. ஆகையால் நன் பட் கிறைஸ்ட் (கிறிஸ்து), என
சொல்கின்றனர், பிரம்மச்சாரிகளாக இருக்கின்றனர். நீங்களும் கூட நன்ஸ் ஆக உள்ளீர்கள். நீங்கள் தம்முடைய
இல்லற விஷயங்களில் இருந்தபடி நன்ஸ் ஆகிறீர்கள். ஒரு தந்தையை மட்டுமே நினைவு செய்கிறீர்கள்.
ஒருவரைத் தவிர யாருமில்லை, ஒரு சிவபாபாவைத் தவிர வேறு யாருமில்லை. இருந்தாலும் அவர்களுடைய
புத்தியில் இருவர் வந்து விடுகின்றனர். கிறிஸ்துவைப் பற்றியும் கூட அவர் கடவுளின் குழந்தையாக இருந்தார்
என புரிந்து கொள்வார்கள். ஆனால் அவர்களுக்கு இறைவனைப் பற்றிய ஞானம் இல்லை. குழந்தைகளாகிய
25.08.2016
(3/4)
உங்களுக்கு அந்த ஞானம் இருக்கிறது. முழு உலகிலும் இறைவனைப் பற்றிய ஞானம் உள்ளவர்கள் யாருமில்லை.
பரமாத்மா எங்கே இருக்கிறார், எப்போது வருகிறார், அவருடைய நடிப்பு என்ன நடக்கிறது, இது எதுவும்
தெரியாது. பகவான் அனைத்தும் அறிந்தவர் என சொல்கின்றனர். அவர் நம்முடைய மனதின் அனைத்து
விஷயங்களையும் அறிந்தவர் என புரிந்து கொள்கின்றனர்.தந்தை சொல்கிறார் லி எனக்குத் தெரியாது,
ஒவ்வொருவருடைய மனதிலும் என்ன இருக்கிறது என தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு
என்ன இருக்கிறது. நான் வருவதே தூய்மையற்றவர்களை தூய்மையாக்குவதற்காகும். யாராவது தூய்மையாக
இல்லாவிட்டால், பொய் சொல்கின்றனர் என்றால் தனக்குத் தானே நஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர்
தேவதைகளின் சபையில் அசுரர்கள் சென்று அமர்ந்தனர் என பாடப்பட்டுள்ளது. அங்கே அமிர்தம் கொடுக்கப்பட்டுக்
கொண்டிருந்தது, யாரோ விகாரத்தில் சென்றுவிட்டு பிறகு அதனை மறைத்து வந்து அமர்கின்றனர் என்றால்
அவர்கள் அசுரர்கள்தானே. தனது பதவியை தானே கீழானதாக ஆக்கிக் கொள்கின்றனர். ஒவ்வொருவரும்
தம்முடைய முயற்சியை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நமக்கே சத்ய நாசத்தைத்தான் செய்து கொள்கின்றனர்.
பலரும் மறைத்து வந்து உட்கார்ந்து விடுகின்றனர். நாங்கள் விகாரத்தில் செல்வதே இல்லை என சொல்கின்றனர்,
ஆனால் விகாரத்தில் சென்றபடி இருப்பார்கள். இது தம்மைத் தாமே ஏமாற்றுவதாகும். தனக்கே சத்ய நாசத்தைச்
செய்து கொள்கின்றனர். பரமபிதா பரமாத்மாவின் வலது கரமாக விளங்கும் தர்மராஜாவிடம் சென்று பொய்
சொன்னார்கள் என்றால் தானே தண்டனைக்கு ஆளாகின்றனர். நிறைய செண்டர்களில் கூட இப்படிப்பட்டவர்கள்
பலர் இருக்கின்றனர். பாபா முதல் முறையாக டில்லி சென்றபோது ஒருவர் தினம்தோறும் வந்து கொண்டிருந்தார்,
அவர் விகாரத்தில் சென்றபடி இருந்தார். தூய்மையாக இருக்க முடியாவிட்டால் ஏன் வருகிறீர்கள் என
கேட்கப்பட்டது. வராவிட்டால் நிர்விகாரியாக எப்படி ஆவேன் என்றார். தூய்மை நல்லதாக இருக்கிறது, ஆனால்
அப்படி இருக்கவும் முடியவில்லை. கடைசியில் எப்படியாவது சுதாரித்துக் கொள்வேன். வராமல் இருந்து
விட்டேன் என்றால் படகு மூழ்கி விடும். வேறு எந்த வழியும் இல்லை ஆகையால் நான் இங்கே
வரவேண்டியிருக்கிறது.
நீங்கள் வாயுமண்டலத்தை கெடுக்கிறீர்கள் என தந்தை புரிய வைக்கிறார், எதுவரை இப்படி வந்து
கொண்டிருப்பீர்கள். தூய்மையாய் இருப்பவர்களுக்கு தூய்மையற்றவர்கள் மீது வெறுப்பு ஏற்படுகிறது. பாபா
இவர்கள் கையால் சமைக்கும் உணவும் கூட நன்றாக இருப்பதில்லை என சொல்கின்றனர். தந்தை யுக்தியும்
சொல்லிக் கொடுத்திருக்கிறார், உண்பதில், அருந்துவதில் பிரச்சினை ஏற்படுகிறது, அதற்காக வேலையை விட்டு
விடுவோம் என்பதல்ல, யுக்தியுடன் நடந்து கொள்ள வேண்டியுள்ளது. யாருக்காவது புரிய வைத்தால் தூய்மையாக
எப்படி இருப்பது, இதை ஒரு போதும் கேள்விப்பட்டதே இல்லை, என கோபித்துக் கொள்கின்றனர். சன்னியாசிகள்
கூட தூய்மையாக இருக்க முடிவதில்லை. வீடு வாசலை விட்டுப் போனால் அப்போது தூய்மையாக இருக்க
முடிகிறது. ஆனால் இங்கே பதித பாவன பரமபிதா பரமாத்மா கற்பிக்கிறார் என யாருக்கும் தெரியாது. ஏற்றுக்
கொள்வதில்லை, ஆகையால் எதிர்க்கின்றனர். சிவபாபா பிரம்மாவின் உடலில் வருகிறார் என எந்த
சாஸ்திரத்திலாவது காட்டுங்கள் பார்ப்போம். நான் ஒரு சாதாரண முதியவரின் உடலில் வருகிறேன், அவருக்கு
தனது பிறவிகள் பற்றித் தெரியாது என்பது கீதையில் எழுதப்பட்டுள்ளது. இது எழுதப்பட்டுள்ளது, பிறகு
பரமபிதா எப்படி மனிதரின் உடலில் வருவார் என ஏன் கேட்கிறீர்கள்? தூய்மையற்ற உடலில்தான் வந்து
வழி காட்டுவார் அல்லவா. முன்னர் கூட வந்திருக்கிறார் மேலும் என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என
சொல்லியிருக்கிறார். அவர்தான் பரமதாமத்தில் வசிக்கிறார், மற்றும் என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என
சொல்கிறார். என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என சொல்வதற்கு கிருஷ்ணரின் உடல் மூலவதனத்தில்
இருக்காது. ஒரு பரமபிதா பரமாத்மாதான் சாதாரண உடலில் பிரவேசம் செய்து குழந்தைகளாகிய உங்களுக்கு
சொல்கிறார் லி என்னை மட்டும் நினைவு செய்தீர்கள் என்றால் இந்த யோக அக்கினியின் மூலம் உங்களின்
பாவங்கள் அழிந்து போகும், ஆகையால் தான் என்னை பதித பாவனர் என சொல்கின்றனர். பதித பாவனர்
கண்டிப்பாக ஆத்மாக்களுடையவராக இருப்பார் அல்லவா. ஆத்மா தான் தூய்மை இழக்கிறது
தந்தை சொல்கிறார் லி நீங்கள் தூய்மையான ஆத்மாவாக 16 கலைகளும் நிரம்பியவராக இருந்தீர்கள்.
இப்போது கலைகளே இல்லை, முற்றிலும் தூய்மையற்றவர்களாக ஆகியுள்ளீர்கள். நான் கல்பம் தோறும் வந்து
உங்களுக்குப் புரிய வைக்கிறேன். காமச்சிதையில் அமர்ந்து கருப்பாக ஆகியுள்ள உங்களை ஞானச்சிதையில்
அமர்த்தி தூய்மையாக்குகிறேன். பாரதத்தில் தூய்மையான இல்லறம் இருந்தது, இப்போது தூய்மையற்ற இல்லற
மார்க்கமாக உள்ளது. யாருக்கும் அமைதி இல்லை. இருவருமே (கணவன் லி மனைவி) ஞானச்சிதையில்
அமருங்கள் என இப்போது தந்தை சொல்கிறார். அனைத்து ஆத்மாக்களுக்கும் தமது கர்மங்களுக்குத்
தகுந்தாற்போல் சரீரம் கிடைக்கிறது. அடுத்த பிறவியிலும் அவர்களே கணவன் லி மனைவியாக ஒருவரோடு
ஒருவர் சந்திப்பார்கள் என்பதல்ல. இல்லை, அந்த அளவு பந்தயத்தில் ஓட முடியாது. இது படிப்பின் விஷயம்
அல்லவா. அஞ்ஞான காலத்தில் நடக்கலாம், பரஸ்பரம் மிகுந்த அன்பு இருந்தது என்றால் அவர்களின் மன
25.08.2016
(4/4)
விருப்பம் நிறைவேறக் கூடும், அதுவோ தூய்மையில்லாத விகார மார்க்கமாகும். கணவருடன் சேர்ந்து மனைவியும்
சிதையில் அமர்கிறார். அடுத்த பிறவியிலும் சென்று அவரை சந்திக்கிறார். ஆனால் அடுத்த பிறவியில்
அவர்களுக்கு எதுவும் தெரியாது. நீங்களும் கூட பாபாவுடன் சேர்ந்து ஞானச் சிதையில் அமர்கிறீர்கள். இந்த
சீச்சீ (அசுத்தமான) சரீரத்தை விட்டு சென்று விடுவீர்கள். உங்களுக்கு இப்போது தெரியும், அவர்களுக்கு நாம்
முந்தைய பிறவியில் இப்படி துணையாக இருந்தோம் என தெரியாது. உங்களுக்கும் கூட பிறகு அங்கே இந்த
விஷயங்கள் நினைவில் இருக்காது. இப்போது உங்களுடைய புத்தியில் லட்சியம் குறிக்கோள் உள்ளது. மம்மா,
பாபா இருவரும் லட்சுமி, நாராயணராக ஆகப் போகிறார்கள். விஷ்ணு தேவதா ஆவார். பிரஜாபிதா பிரம்மாவை
தேவதா என சொல்ல முடியாது. பிரம்மாவே தேவதா ஆகிறார். பிரம்மாவிலிருந்து விஷ்ணு, விஷ்ணுவிலிருந்து
பிரம்மாவாக எப்படி ஆகிறார் என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொண்டீர்கள். அமைதி சொர்க்கத்தில்
மட்டுமே இருக்கும் என இப்போது நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். யாராவது இறந்து விட்டால் சொர்க்கத்திற்குச்
சென்று விட்டார் அதாவது அமைதிக்குச் சென்று விட்டார் என சொல்கின்றனர். அசாந்தியில் தூய்மையற்றவராக
இருக்கின்றனர். எனினும் தன்னை ஆத்மா என புரிந்து கொண்டு தந்தையை நினைவு செய்தால் பாவகர்மங்கள்
அழியும் என தந்தை சொல்கிறார். மற்றவை விரிவாகப் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
தந்தை ஞானம் நிறைந்தவர் என்பதால் உங்களையும் தன்னைப் போலவே ஞானம் நிறைந்தவர்களாக ஆக்குவார்.
நினைவின் யாத்திரையின் மூலம் நீங்கள் சதோபிரதானமாக ஆகிறீர்கள், இது ஆத்மாக்களின் ஓட்டப் பந்தயம்
ஆகும். யார் அதிகமாக நினைவு செய்வார்களோ அவர்கள் விரைவாக ஆவார்கள். இது யோகம் மற்றும்
படிப்பின் ஓட்டப் பந்தயம் ஆகும். பள்ளிக் கூடத்திலும் ஓட்டப் பந்தயம் நடக்கிறது அல்லவா. நிறைய
மாணவர்கள் இருப்பார்கள், அவர்களில் யார் முதலாவதாக வருகின்றனரோ அவர்களுக்கு கல்வி உதவித்
தொகை (ஸ்காலர்μப்) கிடைக்கிறது. ஒரே படிப்பு லட்சக்கணக்கானவர்களுக்கான, கோடிக்கணக்கானவர் களுக்கான
தாக இருந்தால் பள்ளிகள் கூட அவ்வளவு இருக்குமல்லவா. இப்போது நீங்கள் இந்தப் படிப்பை படிக்க
வேண்டும். அனைவருக்கும் வழி காட்டுங்கள். பார்வை அற்றவர்களுக்கு ஊன்றுகோலாகுங்கள். வீடுதோறும்
செய்தியைக் கொண்டு சேர்க்க வேண்டும். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை
வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம் :
1. இப்போது அசுத்தமான ஆசைகளை தியாகம் செய்து சுத்தமான விருப்பங்களை வைக்க
வேண்டும். தூய்மையடைந்து தூய்மையான உலகின் எஜமானர் ஆக வேண்டும். . . என்பதே
அனைத்திலும் சுத்தமான விருப்பம் ஆகும். எந்த தப்பையும் மறைத்து தன்னைத் தானே
ஏமாற்றிக் கொள்ளக் கூடாது. தர்மராஜா தந்தையிடம் எப்போதும் உண்மையானவராக இருக்க
வேண்டும்.
2. ஞானச் சிதையில் அமர்ந்து இந்த படிப்பில் ஓட்டப் பந்தயம் (போட்டி) செய்து எதிர்கால புதிய
உலகில் உயர்பதவியை அடைய வேண்டும். யோக அக்கினியின் மூலம் பாவகர்மங்களின்
கணக்கை பஸ்மம் செய்ய வேண்டும்.
வரதானம் : சுயமரியாதையில் நிலைத்திருந்து தேக அபிமானத்திற்கு
முடிவு கட்டக் கூடிய வெற்றி மூர்த்தி ஆகுக.
எந்த குழந்தைகள் சுயமரியாதையில் நிலைத்திருக்கின்றனரோ அவர்கள்தான் தந்தையின் அனைத்து
கட்டளைகளையும் நிறைவேற்ற முடியும். சுயமரியாதை பல விதமான தேக அபிமானங்களுக்கு முடிவு கட்டி
விடுகிறது. ஆனால் சுய மரியாதையில் சுயம் எனும் வார்த்தை மறந்து விடும்போது மானம்லிமரியாதையில்
வந்து விட்டீர்கள் என்றால் அந்த ஒரு வார்த்தையின் தவறு ஏற்படுவதன் மூலம் பல தவறுகள் ஏற்படத்
தொடங்கும். அதனால் உழைப்பு அதிகமாகவும் உடனடி பலன் குறைவாகவும் கிடைக்கும். ஆனால் எப்போதும்
சுயமரியாதையில் நிலைத்திருந்தீர்கள் என்றால் முயற்சி மற்றும் சேவையில் சகஜமாகவே வெற்றி மூர்த்தி ஆகி
விடுவீர்கள்.
சுலோகன் : தபஸ்யா (தீவிர முயற்சி மற்றும் நினைவு) செய்ய வேண்டும் என்றால்
நேரத்தை மிச்சப்படுத்துங்கள் (சேமியுங்கள்), சாக்கு போக்கு சொல்லாதீர்கள்.
தாதி பிரகாஷ்மணியின் விலை மதிக்க முடியாத பிரேரணைகள் (ஊக்க உரைகள்)
(விசேஷமாக நினைவு நாளை முன்னிட்டு)
1. ஈஸ்வரிய நியமங்கள் மற்றும் மரியாதைகள் நம் வாழ்க்கையின் உண்மையான அலங்காரங்கள் ஆகும்.
இவற்றை தம் வாழ்க்கையில் தாரணை செய்து எப்போதும் முன்னேற்றத்தை அடைந்தபடி இருக்க வேண்டும்.
2. நாம் பகவானின் கண்ணின் மணிகள் என்ற போதையை எப்போதும் (நினைவில்) வைத்துக்கொள்ளுங்கள்.
பகவானின் கண்களுக்குள் மறைந்திருந்தீர்கள் என்றால் மாயையின் புயல் வெள்ளம் தன் நிலையை அசைக்க
முடியாது.
3. நம் அனைவரின் மனம் கவர்ந்த (அன்பிற்குரிய), மற்றும் வழிகாட்டி ஒரு பாபாவே ஆவார்,
அவருடனேயே மனதின் கொடுக்கல் வாங்கலைச் செய்ய வேண்டும். ஒருபோதும் தேகதாரியை நண்பராக்கிக்
கொண்டு அவருடன் வீண் சிந்தனை மற்றும் பர (மற்றவர்கள் பற்றிய) சிந்தனை செய்யக் கூடாது.
4. முகத்தில் ஒருபோதும் துக்கத்தின் அறி குறி வெறுப்பின் சின்னம் தென்படக்கூடாது. எப்போதும்
குμயுடன் இருங்கள், குμயை பரப்பியபடி செல்லுங்கள். தம்முடைய செண்டரின் சுற்றுச் சூழலை குμயின்
அதிர்ஷ்டம் மிக்கதாக ஆக்குங்கள், அது அனைவரையும் குμயின் அதிர்ஷ்டம் மிக்கவராக ஆக்கும்.
5. எந்த அளவு அந்தர்முகி (உள் நோக்கு முகமுள்ளவர்) ஆகி மனதில் மௌனத்தை தாரணை
செய்வீர்களோ அந்த அளவு இருப்பிடத்தின் வாயுமண்டலம் ஒளி மற்றும் சக்தி நிறைந்ததாக ஆகும், மேலும்
அங்கு வரக்கூடியவர்களுக்கு அதன் தாக்கம் ஏற்படும், இதுவே சூட்சுமமான சகாஷ் (ஒளி & சக்தி) கொடுக்கக்
கூடிய சேவையாகும்.
6. எந்த காரணத்தாலும் என்னுடையது, உன்னுடையதில் வந்து பரஸ்பரம் கருத்து வேறுபாடு கொள்ளக்
கூடாது. பரஸ்பர பகைமை தான் சேவைகளில் அனைத்தையும் விட பெரிய தடை ஆகும், இந்த தடையிலிருந்து
இப்போது விடுபடுங்கள் மற்றும் விடுபட வையுங்கள்.
7. ஒருவர் மற்றவரின் கருத்துக்களுக்கு மரியாதை கொடுத்து அனைவரின் பேச்சுக்கும் செவி கொடுத்து
கேளுங்கள், பின்னர் தீர்மானியுங்கள். அப்போது இரண்டு வழிகள் உண்டாகாது. சிறியவர்கள், பெரியவர்கள்
என அனைவருக்கும் கண்டிப்பாக மரியாதை கொடுங்கள்.
8. இப்போது பாபாவின் அனைத்து குழந்தைகளும் திருப்தியின் சுரங்கமாக ஆகுங்கள், அதன் மூலம்
அனைவரும் உங்களைப் பார்த்து திருப்தி அடைவார்கள். எப்போதும் திருப்தியாக இருங்கள் மற்றும் பிறரையும்
திருப்திப் படுத்துங்கள்.
9. நான்கு மந்திரங்களை எப்போதும் நினைவில் வைக்க வேண்டும் லி ஒன்று ஒருபோதும் கவனக்குறைவாக
ஆகக் கூடாது, எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். இரண்டாவது யாரிடமும் வெறுப்பு காட்டாமல்
அனைவருக்காகவும் சுப பாவனை வைக்க வேண்டும். மூன்றாவது யாரிடமும் பொறாமை கொள்ளக் கூடாது,
முன்னேற்றத்தின் பந்தயத்தில் முன்னே போக வேண்டும். நான்காவது ஒரு போதும் எந்த மனிதர், பொருள்
மற்றும் வசதிகளின் தாக்கத்திலும் போய் விடக் கூடாது, எப்போதும் ஒரு பாபாவின் தாக்கத்தில்தான் (நினைவில்
மூழ்கியவராக) இருக்க வேண்டும்.
10. நாம் அனைவரும் ராயலான தந்தையின் ராயல் குழந்தைகள், எப்போதும் நமக்குள் ராயல் தன்மை
மற்றும் தூய்மையின் சம்ஸ்காரத்தை நிரப்பிக் கொள்ள வேண்டும், அடிமைத் தன்மையின் சம்ஸ்காரங்களிலிருந்து
விடுபட்டிருக்க வேண்டும். சத்தியத்தை ஒருபோதும் கைவிடக் கூடாது. ஓம் சாந்தி.
(1/4)
26
.08.2016 காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! தந்தை இனிமையிலும் இனிமையான சாக்ரீனாக இருக்கின்றார்,
ஆகையால் அனைத்து விசயங்களையும் விட்டு விட்டு அந்த தந்தையை நினைவு செய்தால்
(நீங்களும்) இனிமையான சாக்ரீனாக ஆகி விடுவீர்கள்.
கேள்வி: நீங்கள் தந்தையிடத்தில் ஸ்ரீமத் பெற்று தனக்குள் எந்த சம்ஸ்காரத்தை நிறைத்துக்
கொண்டிருக்கிறீர்கள்?
பதில்: எதிர்காலத்தில் அமைச்சர்களின்றி முழு உலகையும் இராஜ்யம் செய்யும் சன்ஸ்காரம். நீங்கள் இங்கு
வந்திருப்பதே எதிர்காலத்தில் இராஜ்யம் நடத்துவதற்கான ஸ்ரீமத் பெறுவதற்காக! தந்தை உங்களுக்கு அரை
கல்பம் வரை யாரிடத்திலும் ஆலோசனை பெற வேண்டிய அவசியமேற்படாதவாறு ஸ்ரீமத் கொடுக்கின்றார்.
யாருடைய புத்தி பலவீனமாக இருக்கிறதோ அவர்கள் தான் ஆலோசனை பெற வேண்டியிருக்கும்.
பாட்டு: நீங்கள் தான் தாயாக .........
ஓம் சாந்தி. இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் பாட்டு கேட்டீர்கள். இனிமையிலும்
இனிமையான ஆன்மீகக் குழந்தைகளே! என்று கூறியது யார்? கண்டிப்பாக ஆன்மீகத் தந்தை தான் அவ்வாறு
கூற முடியும். இனிமையிலும் இனியமை, ஆன்மீக குழந்தைகள் இப்போது எதிரில் அமர்ந்திருக்கிறீர்கள்.
மேலும் மிக அன்பாக தந்தை புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார். அனைவருக்கும் சுகம், சாந்தி கொடுக்கக்
கூடியவர் அல்லது அனைவரையும் துக்கத்திலிருந்து விடுவிக்கக் கூடியவர் உலகில் ஆன்மீக தந்தையைத்
தவிர வேறு யாருமில்லை என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள். அதனால் தான் துக்கத்தின் போது
தந்தையை எல்லோரும் நினைவு செய்து கொண்டிருக்கின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் எதிரில் அமர்ந்திருக்
கிறீர்கள். பாபா நம்மை சுகதாமத்திற்குத் தகுதியானவர்களாக ஆக்கிக் கொண்டிருக்கின்றார் என்பதை அறிவீர்கள்.
சதா காலத்திற்கும் சுகதாமத்திற்கு எஜமானர்களாக ஆக்கக் கூடிய தந்தையின் எதிரில் வந்திருக்கிறீர்கள். எதிரில்
கேட்பதற்கும், தூரத்தில் இருந்து கேட்பதற்கும் அதிக வித்தியாசம் இருப்பதை நீங்கள் புரிந்திருக்கிறீர்கள்.
மதுவனத்தில் எதிரில் வருகிறீர்கள், மதுவனம் மிகவும் பிரபலமானது. மதுவனம், பிருந்தாவனத்தில் அவர்கள்
கிருஷ்ணரின் சித்திரத்தைக் காண்பித்திருக்கின்றனர். ஆனால் கிருஷ்ணர் கிடையவே கிடையாது. இங்கு நிராகார
தந்தை குழந்தைகளாகிய உங்களை சந்திக்கின்றார். நீங்கள் உங்களை அடிக்கடி ஆத்மா என்ற நிச்சயம் செய்து
கொள்ள வேண்டும். நான் ஆத்மா, தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைந்து கொண்டிருக்கிறேன். முழு கல்பத்திலும்
இந்த ஒரே ஒரு சமயத்தில் தான் வருகின்றார். இது கல்பத்தின் மங்களகரமான சங்கமயுகமாகும். இதற்கு
புருஷோத்தம் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சங்கமயுகத்தில் தான் அனைத்து மனிதர்களும்
உத்தமமானவர்களாக ஆகின்றனர். இப்போது அனைத்து மனித ஆத்மாக்களும் தமோ பிரதானமாக
இருக்கின்றனர், பிறகு சதோ பிரதானமாக ஆகின்றனர். சதோ பிரதானமாக இருக்கும் போது மனிதர்கள்
உத்தமானவர்களாக இருக்கின்றனர். தமோ பிரதானமாக ஆவதனால் மனிதர்கள் கீழானவர்களாக ஆகிவிடுகின்றனர்.
ஆக ஆத்மாக்களுக்கு தந்தை எதிரில் அமர்ந்து புரிய வைக்கின்றார். முழு நடிப்பும் ஆத்மா தான் நடிக்கிறதே
தவிர சரீரம் அல்ல. ஆத்மா மற்றும் சரீரம் இரண்டும் சேர்ந்து விடும் போது தான் நடிப்பு நடிக்கிறது.
ஆத்மாக்களாகிய நாம் உண்மையில் நிராகார உலகம் அல்லது சாந்திதாமத்தில் வசிக்கக் கூடியவர்கள் என்பது
உங்களது புத்தியில் வந்து விட்டது, இது யாருக்கும் தெரியாது. சுயமும் புரிந்து கொள்வது கிடையாது, புரிய
வைக்கவும் முடியாது. உங்களது புத்தி பூட்டு இப்போது திறக்கப்பட்டு விட்டது. உண்மையில் ஆத்மாக்கள்
பரந்தாமத்தில் வசித்தன என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள். அது நிராகார உலகமாகும். இது சாகார
உலகமாகும். இங்கு நாம் அனைவரும் ஆத்மாக்கள், பாகத்தை ஏற்று நடிக்கும் நடிகர்கள். முதன் முதலில் நாம்
தான் நடிக்க வருகிறோம். பிறகு வரிசைக்கிரமமாக வந்து கொண்டிருப்பர். அனைத்து நடிகர்களும் ஒன்றாக
வந்து விடமாட்டார்கள். வித விதமான நடிகர்கள் வந்து கொண்டிருப்பர். எப்போது நாடகம் முடிவடைகிறதோ
அப்போது தான் அனைவரும் ஒன்றாகச் சேருவர். இப்போது உங்களுக்கு அறிமுகம் கிடைத்து விட்டது,
உண்மையில் ஆத்மா சாந்திதாமத்தில் வசிக்கக் கூடியது, இங்கு நடிப்பதற்காக வருகிறது. தந்தை முழு நேரமும்
நடிக்க வருவது கிடையாது. நாம் தான் நடிப்பு நடித்து நடித்து தமோ பிரதானமாக ஆகிவிடுகிறோம். இப்போது
குழந்தைகளாகிய உங்களுக்கு எதிரில் இருந்து கேட்கும் போது மிகுந்த போதை ஏற்படுகிறது. இந்த அளவு
போதை முரளி படிக்கும் போது ஏற்படுவது கிடையாது. இங்கு எதிரில் இருக்கிறீர்கள் அல்லவா! ஆக முதல்
ஆதி சநாதன தேவி தேவதா தர்மத்தைச் சார்ந்தவர்கள் தான் வருகின்றனர். பாரதம் தேவ தேவதைகள்
வாழ்ந்த பூமியாக இருந்தது, இப்போது கிடையாது என்பதை நீங்கள் அறிவீர்கள். சித்திரங்களைப் பார்க்கிறீர்கள்
எனில் அவசியம் இருந்திருக்கின்றனர். முதன் முதலில் நாம் தேவி தேவதைகளாக இருந்தோம், தனது
பாகத்தை நினைவு செய்வீர்களா? அல்லது மறந்து விடுவீர்களா? தந்தை கூறுகின்றார் லி நீங்கள் இந்த பாகம்
(2/4)
26.08.2016
நடித்திருந்தீர்கள், இது நாடகம் ஆகும். புது உலகம் பிறகு பழையதாக ஆகிறது. முதன் முதலில் மேலிருந்து
ஆத்மாக்கள் வரும் போது அது தங்கயுகத்தில் தான் வருகிறது. இந்த அனைத்து விசயங்களும் இப்போது
உங்களது புத்தியில் இருக்கிறது. சத்யுக ஆரம்பத்தில் நடிப்பு நடிப்பதற்காக நீங்கள் தான் வந்திருந்தீர்கள்.
நீங்கள் உலகிற்கு எஜமானர் மகாராஜா, மகாராணிகளாக இருந்தீர்கள். உங்களது இராஜ்யம் இருந்தது. இப்போது
இராஜ்யம் கிடையாது. நாம் எப்படி இராஜ்யம் செய்வது? என்பதை இப்போது கற்றுக் கொண்டிருக்கிறீர்கள்.
அங்கு அமைச்சர்கள் இருக்கமாட்டார்கள். ஆலோசனை கொடுப்பவர்கள் அவசியமில்லை. அவர்கள் ஸ்ரீமத்
மூலம் சிரேஷ்டத்திலும் சிரேஷ்டமானவர்களாக ஆகிவிடுகின்றனர், பிறகு அவர்கள் மற்றவர்களிடமிருந்து
ஆலோசனை பெற வேண்டிய அவசியமிருக்காது. ஒருவேளை யாரிடத்திலாவது ஆலோசனை பெற்றால் இவர்களது
புத்தி பலவீனமாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இப்போது பெறக் கூடிய ஸ்ரீமத் சத்யுகத்திலும்
நிலைத்து இருக்கும். இப்போது உங்களது ஆத்மா புத்துணர்வு அடைந்துக் கொண்டிருக்கிறது. இப்போது
குழந்தைகளாகிய நீங்கள் ஆத்ம அபிமானிகளாக ஆக வேண்டும். சாந்திதாமத்திலிருந்து வந்து இங்கு நீங்கள்
பேசுபவர்களாக ஆகிவிட்டீர்கள். பேசாமல் காரியம் செய்ய முடியாது. இது மிகவும் புரிந்து கொள்ள வேண்டிய
விசயமாகும். எவ்வாறு தந்தையிடம் முழு ஞானம் இருக்கிறதோ, அதே போன்று இப்போது உங்களது ஆத்மா
விலும் ஞானம் இருக்கிறது. நாம் ஒரு சரீரத்தை விடுத்து, சம்ஸ்காரத்தின் படி மறுபிறவி எடுக்கிறோம் என்று
ஆத்மா கூறுகிறது. மறுபிறப்பும் அவசியம் இருக்கிறது. ஆத்மாவிற்கு என்ன பாகம் கிடைத்திருக்கிறதோ அது
நடித்துக் கொண்டே இருக்கிறது, சம்ஸ்காரத்தின் படி மற்றொன்றை எடுக்கிறது. ஆத்மாவின் தூய்மையின் தரம்
(அளவு) நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது. தூய்மையின்மை என்ற வார்த்தை துவாபர யுகத்திற்குப்
பிறகு பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் சிறிது வித்தியாசம் அவசியம் இருக்கவே செய்யும். நீங்கள் புது
கட்டடம் கட்டுங்கள், ஒரு மாதத்திற்குப் பிறகு அவசியம் சிறதாவது வித்தியாசம் ஏற்படும்.
பாபா நமக்கு ஆஸ்தி கொடுக்கின்றார் என்பதை இப்போது நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். நான் வந்திருப்பதே
குழந்தைகளாகிய உங்களுக்கு ஆஸ்தி கொடுப்பதற்காக என்று தந்தை கூறுகின்றார். எந்த அளவிற்கு யார்
முயற்சி செய்கிறார்களோ அந்த அளவிற்கு பதவி அடைவார்கள். தந்தையிடம் எந்த வேறுபாடும் கிடையாது.
நான் ஆத்மாக்களுக்கு கற்பிக்கிறேன் என்பதை தந்தை அறிவார். ஒவ்வொரு ஆத்மாவும் அவரவர்களுக்காக
முயற்சி செய்கின்றன. ஆண், பெண் என்ற பார்வை இங்கு கிடையாது. குழந்தைகள் நீங்கள் அனைவரும்
எல்லையற்ற தந்தையிடம் ஆஸ்தியடைந்து கொண்டிருக்கிறீர்கள். அனைத்து ஆத்மாக்களும் சகோதரர்கள்,
அவர்களுக்கு தந்தை கற்பிக்கின்றார், ஆஸ்தி கொடுக்கின்றார். தந்தை தான் ஆன்மீக குழந்தைகளிடத்தில்
உரையாடல் செய்கின்றார் லி ஹே, செல்லமான, இனிமையான, அன்பான குழந்தைகளே! நீங்கள் அதிக காலம்
நடிப்பு நடித்து இப்போது ஆஸ்தி அடைவதற்காக மீண்டும் வந்து சந்திக்கின்றீர்கள். இதுவும் நாடகத்தில்
பதிவாகியிருக்கிறது. ஆரம்பத்திலிருந்து (நடிப்பின்) பாகம் பதிவாகியிருக்கிறது. நடிகர்களாகிய நீங்கள் நடிப்பு
நடித்துக் கொண்டே இருக்கிறீர்கள். ஆத்மா அழிவற்றது, இதில் அழிவற்ற பாகம் பதிவாகியிருக்கிறது. சரீரம்
மாறிக் கொண்டே இருக்கும். மற்றபடி ஆத்மாவானது தூய்மையான நிலையிலிருந்து அசுத்தமாக மாறுகிறது.
சத்யுகத்தில் தூய்மையாக இருக்கிறது. இது அசுத்தமான உலகம் என்று கூறப்படுகிறது. இப்போது சுகதாமம்
ஸ்தாபனை ஆகிறது. மற்ற அனைத்து ஆத்மாக்களும் முக்திதாமத்தில் இருக்கும். இப்போது இந்த எல்லையற்ற
நாடகம் முடிவடையும் நிலையில் இருக்கிறது. அனைத்து ஆத்மாக்களும் கொசுக்களைப் போன்று செல்வார்கள்.
இந்த நேரத்தில் தூய்மையே இல்லாத உலகில் எந்த ஆத்மா வந்தாலும் அதற்கு என்ன மதிப்பு இருக்கும்!
யார் முதன் முதலில் புது உலகில் வருகிறார்களோ அவர்களுக்குத் தான் மதிப்பு இருக்கும். புது உலகம்
இருந்தது, அது இப்போது பழையதாக ஆகிவிட்டது. புது உலகில் தேவதைகள் இருந்தனர், அங்கு துக்கத்தின்
பெயர் கிடையாது. இங்கு அளவற்ற துக்கம் இருக்கிறது. தந்தை வந்து துக்கம் நிறைந்த பழைய உலகிலிருந்து
விடுவிக்கின்றார். இந்த பழைய உலகம் அவசியம் மாற வேண்டும். எவ்வாறு பகலுக்குப் பின் இரவு, இரவிற்குப்
பின் பகல் வருகிறதோ அது போன்று! நாம் சத்யுகத்திற்கு எஜமானர்களாக ஆவோம் என்பதை நீங்கள்
புரிந்திருக்கிறீர்கள், ஆக நாம் ஏன் ஆத்மா என்று நிச்சம் செய்து தந்தையை நினைவு செய்யக் கூடாது!
சிறிதாவது முயற்சி செய்ய வேண்டும். இராஜ்யம் அடைவது எளிய விசயம் கிடையாது, தந்தையை நினைவு
செய்ய வேண்டும். மாயையின் அதிசயம் என்னவெனில் அடிக்கடி உங்களை மறக்க வைத்து விடுகிறது.
இதற்கு உபாயம் உருவாக்க வேண்டும். என்னுடையவர் ஆவதன் மூலம் நினைவு நிலையாக இருக்கும்
என்பது கிடையாது. மற்றபடி என்ன முயற்சி செய்வீர்கள்? எதுவரை வாழ்வீர்களோ அதுவரை முயற்சி செய்ய
வேண்டும். ஞான அமிர்தம் பருகிக் கொண்டே இருக்க வேண்டும். இது நமது கடைசிப் பிறப்பு என்பதையும்
புரிந்திருக்கிறீர்கள். இந்த சரீர உணர்வை நீக்கி ஆத்ம அபிமானியாக ஆக வேண்டும். இல்லற விவகாரத்திலும்
இருக்க வேண்டும், அவசியம் முயற்சி செய்ய வேண்டும். தன்னை ஆத்மா என்று நிச்சயம் செய்து தந்தையை
நினைவு செய்தால் போதும். தாயும் நீயே, தந்தையும் நீயே ........ இவை அனைத்தும் பக்தி மார்கத்தின் மகிமை
ஆகும். நீங்கள் ஒரே ஒரு தந்தையை மட்டுமே நினைவு செய்ய வேண்டும். நான் ஒருவன் தான் சாக்ரீனாக
(3/4)
26.08.2016
இருக்கிறேன், நீங்களும் மற்ற அனைத்து விசயங்களையும் விடுத்து மிக இனிமையான சாக்ரீனாக ஆகிவிடுங்கள்.
இப்போது உங்களது ஆத்மா தமோபிரதானமாக இருக்கிறது, அதை சதோபிரதானமாக ஆக்குவதற்கு நினைவு
யாத்திரையில் இருங்கள். தந்தையிடமிருந்து சுகத்தின் ஆஸ்தி அடையுங்கள் என்பதை மட்டுமே அனைவருக்கும்
கூறுங்கள். சத்யுகத்தில் தான் சுகம் இருக்கும். சுகதாமத்தை ஸ்தாபனை செய்யக் கூடியவர் தந்தை, தந்தையை
நினைவு செய்வது மிகவும் எளிது. ஆனால் மாயையின் எதிர்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆகையால் முயற்சி
செய்து என்னை நினைவு செய்தால் கறைகள் நீங்கி விடும். விநாடியில் ஜீவன்முக்தி என்று பாடப்பட்டிருக்கிறது.
இந்த நாடகத்தில் ஒவ்வொருவரும் அவரவர்களது பாகத்தை திரும்பவும் நடித்தே ஆக வேண்டும்.
இந்த நாடகத்தில் அனைவரையும் விட மிக அதிக பாகம் நம்முடையது ஆகும். அனைவரையும் விட அதிக
சுகம் நமக்குத் தான் கிடைக்கும். உங்களது தேவி தேவதா தர்மம் அதிக சுகம் கொடுக்கக் கூடியது என்று
தந்தை கூறுகின்றார். மற்ற அனைவரும் கணக்கு வழக்குகளை முடித்துக் கொண்டு சாந்திதாமத்திற்குச் சென்று
விடுவார்கள். விரிவான விளக்கத்தில் நாம் ஏன் செல்ல வேண்டும்? அனைவரையும் திரும்பி அழைத்துச்
செல்லத் தான் தந்தை வந்திருக்கின்றார். கொசுக்களைப் போன்று அனைவரையும் அழைத்துச் செல்வார். சரீரம்
அழிந்து விடும். மற்றபடி ஆத்மா அழிவற்றது, அது கணக்கு வழக்குகளை முடித்துக் கொண்டு சென்று விடும்.
ஆத்மாவை நெருப்பில் போடுவதன் மூலம் தூய்மையாக ஆகிவிடும் என்பது கிடையாது. ஆத்மா நினைவு
என்ற யோகாவின் மூலம் தான் தூய்மையாக ஆக வேண்டும். இது யோக அக்னியாகும். சீதை நெருப்பிலி
ருந்து வெளி வந்தார் என்று அவர்கள் நாடகத்தை உருவாக்கி விட்டனர். எந்த ஒருவரும் நெருப்பிலிருந்து
வெளிப்பட முடியாது. சீதைகளாகிய நீங்கள் அனைவரும் இந்த நேரத்தில் தூய்மையின்றி இருக்கிறீர்கள்,
இராவண இராஜ்யத்தில் இருக்கிறீர்கள் என்பதை தந்தை புரிய வைக்கின்றார். இப்போது ஒரு தந்தையின்
நினைவின் மூலம் நீங்கள் தூய்மை ஆக வேண்டும். இராமர் ஒரே ஒருவர் தான். அக்னி என்ற வார்த்தையைக்
கேட்டதும் நெருப்பிலிருந்து வெளிப்பட்டார் என்று நினைக்கின்றனர். யோக அக்னி எங்கு இருக்கிறது! அந்த
நெருப்பு எங்கு இருக்கிறது! ஆத்மா பரமாத்மாவிடம் யோகா வைத்துக் கொள்வதன் மூலம் தான் தூய்மையற்ற
நிலையிலிருந்து தூய்மையாக ஆக முடியும். இரவு பகல் வித்தியாசம் இருக்கிறது. ஆத்மாக்கள் அனைவரும்
சீதைகள் ஆகும். இராவணனின் சிறையில் சோகவனத்தில் இருக்கிறது. இங்கிருக்கும் சுகம் காக்கை எச்சத்திற்குச்
சமமானது. சொர்கத்தின் சுகம் அளவற்றது. ஆக குழந்தைகள் ஞான இரத்தினங்களினால் பையை நிறைத்துக்
கொள்ள வேண்டும். எந்த வகையான சந்தேகமும் வரக் கூடாது. தேக அபிமானம் வருவதன் மூலம் பிறகு
பல வகையான கேள்விகள் எழுகின்றன. பிறகு தந்தை என்ன காரியம் கொடுக்கிறாரோ அதை செய்வது
கிடையாது. மூல விசயம் நாம் தூய்மையின்மையிலிருந்து தூய்மையாக ஆவது. மற்ற எந்த சங்கல்பமும்
எழுப்ப வேண்டிய அவசியம் கிடையாது. இது பதீத உலகம், அது தூய்மையான உலகமாகும். தூய்மை
ஆவது தான் முக்கிய விசயம். யார் தூய்மையாக ஆக்க முடியும்? என்று எதுவும் தெரியாது. நீங்கள் தூய்மை
யற்றவர்களாக இருக்கிறீர்கள் என்று கூறினால் கோபித்துக் கொள்வார்கள். தன்னை விகாரி என்று யாரும்
புரிந்து கொள்வது கிடையாது. இராமர்லிசீதை, லெட்சுமிலிநாராயணன் போன்றவர்களுக்கும் குழந்தைகள் இருந்தனர்
என்று கூறுவர். அங்கும் குழந்தைகள் பிறக்கின்றனர், ஆனால் அது விகாரமற்ற உலகம் என்று கூறப்படுகிறது
என்பதை மறந்து விட்டனர். அது சிவாலயமாகும்.
தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு யுக்திகளைக் கூறிக் கொண்டே இருக்கின்றார். இவர்
தந்தை, ஆசிரியர், குருவாக இருக்கின்றார், அனைவருக்கும் சத்கதி கொடுக்கின்றார். உலகில் ஒரு குரு இறந்து
விட்டால் பிறகு குழந்தைகளுக்கு சிம்மாசனம் கொடுத்து விடுவர். அவர்கள் எப்படி சத்கதிக்கு கொண்டு
செல்வார்கள்.? அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல் ஒரே ஒருவர் தான் ஆவார். இராவண இராஜ்யத்தில்
துர்கதி இருக்கிறது, இராம இராஜ்யத்தில் சத்கதி இருக்கிறது. தந்தை அனைவரையும் தூய்மையானவர்களாக
ஆக்கி அழைத்து செல்கிறார், பிறகு யாரும் உடனேயே பதீதமாக ஆகிவிடுவது கிடையாது, வரிசைக்கிரமமாக
இறங்குகின்றனர். சதோ பிரதானத்திலிருந்து சதோ, ரஜோ, தமோ ........ உங்களது புத்தியில் 84 பிறவிச் சக்கரம்
இருக்கிறது. நீங்கள் இப்போது கலங்கரை விளக்குப் போன்று இருக்கிறீர்கள். இந்த சக்கரம் எப்படி சுழல்கிறது?
என்பதை ஞானத்தின் மூலம் நீங்கள் அறிந்து கொண்டீர்கள். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் மற்ற
அனைவருக்கும் வழி கூற வேண்டும். நீங்கள் அனைவரும் சேனைகள். நீங்கள் விமான ஓட்டிகளாக (பைலட்)
இருக்கிறீர்கள், வழி கூறக் கூடியவர்கள். இப்போது சாந்திதாமம், சுகதாமத்தை நினைவு செய்யுங்கள் என்று
அனைவருக்கும் கூறுங்கள். கலியுக துக்கதாமத்தை மறந்து விடுங்கள். நாம் உங்களுங்கு மிக நல்ல வழி
கூறுகின்றோம் லி பதீத பாவன் ஒரே ஒரு நிராகார தந்தை ஆவார். அவரை நினைவு செய்வதன் மூலம் நீங்கள்
தூய்மையாகிவிடுவீர்கள். உங்களது ஆத்மாவில் படிந்திருக்கும் கறைகள் நீங்கி விடும். பகவானின் மகாவாக்கியம்
மன்மனாபவ. சிவபகவானின் மகாவாக்கியம் லி விநாச காலத்தில் விபரீத புத்தியுடையவர்கள் அழிந்து விடுவார்கள்,
மேலும் விநாச காலத்தில் பரம்பிதா பரமாத்மாவின் மீது அன்பான புத்தியுடையவர்கள் வெற்றி அடைவார்கள்.
(4/4)
26.08.2016
நீங்கள் எந்த அளவு அன்பான புத்தியுடையவர்களாக ஆகிறீர்களோ அந்த அளவு உயர்ந்த பதவி அடைவீர்கள்.
தேக அபிமானத்தில் வருவதன் மூலம் அந்த அளவிற்கு உயர்ந்த பதவி அடைய முடியாது. நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய்
தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) ஞான இரத்தினங்களினால் தனது (புத்தி) பையை நிறைத்துக் கொள்ள வேண்டும். எந்த
வகையான சந்தேகமும் எழுப்பக் கூடாது. எவ்வளவு முடியுமோ தந்தையை நினைவு செய்யும்
முயற்சி செய்து தூய்மையானவர்களாக ஆக வேண்டும். மற்றபடி கேள்விகளில் செல்லக்
கூடாது.
2) ஒரு தந்தையிடத்தில் உண்மையான அன்பு வைத்து தந்தைக்குச் சமம் இனிமையான
சாக்ரீனாக ஆக வேண்டும்.
வரதானம்: ஞானம் என்ற லைட், மைட் (ஒளி, சக்தி) மூலம் பலவீன சம்ஸ்காரங்களை
அழிக்கக் கூடிய சக்தி நிறைந்தவர் ஆகுக.
ஞானத்தின் மூலம் தனது பலவீன சம்ஸ்காரங்களை அறிந்து கொள்கிறீர்கள். மேலும் அதைப் பற்றி புரிய
வைக்கப்படுகின்ற போது அந்த சம்ஸ்காரம் சிறிது காலத்திற்காக உள்ளுக்குள்ளேயே அடைக்கப்பட்டு விடுகிறது.
ஆனால் பலவீன சம்ஸ்காரங்களை அழிப்பதற்காக லைட் மற்றும் மைட்டின் அதிகப்படியான வேகம் (சக்தி)
தேவைப்படுகிறது. இதற்கு மாஸ்டர் சர்வசக்திவான், மாஸ்டர் ஞானம் நிறைந்தவர் என்பதன் கூடவே செக்கிங்
மாஸ்டர் (சோதிப்பவர்) ஆகுங்கள். ஞானத்தின் மூலம் தனக்குள் சக்திகளை நிறைத்துக் கொள்ளுங்கள், சிந்தனை
சக்தியை அதிகப்படுத்துங்கள், அப்போது சக்தி நிறைந்தவர்களாக ஆகிவிடுவீர்கள்.
சுலோகன்: எங்கு அனைத்து பிராப்திகளும் (பலன்களும் பெறப்பட்டு) இருக்கிறதோ
அங்கு மகிழ்ச்சி இருக்கும்.
(1/4)
27
.08.2016 காலை வகுப்பு ஓம்சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! சுகம் கொடுக்கக் கூடிய பாபாவை மிகலிமிக அன்போடு நினைவு
செய்யுங்கள், நினைக்காமல் அன்பு ஏற்பட முடியாது.
கேள்வி:லி பாபா குழந்தைகளுக்கு தினம்லிதினம் நினைவின் பயிற்சி செய்வதற்கு ஏன் சைய்கை
செய்கின்றார்?
பதில்: ஏனென்றால் நினைவால் தான் ஆத்மா பாவனம் ஆகும். நினைவால் தான் ஆத்மா முழு ஆஸ்தி
அடைய முடியும்.ஆத்மாவின் அனைத்து பந்தனங்களும் நீங்கிவிடும். விகர்மங்களிருந்து முக்தி அடைந்து
விடுவீர்கள். தண்டனையிருந்து விடுபட்டு விடுவீர்கள். எந்தளவு பாபாவை நினைக்கின்றீர்களோ அந்தளவு
மகிழ்ச்சி இருக்கும். இலட்சியம் (அடைய வேண்டிய நிலை) மிக சமீபத்தில் அனுபவம் ஆகும். ஒருபோதும்
களைத்துப் போக மாட்டீர்கள், எல்லையற்ற சுகம் அடைவீர்கள், எனவே நினைவின் பயிற்சி அவசியம் செய்ய
வேண்டும்.
பாட்டு:லி குழந்தைப் பருவத்தை மறந்து விடக் கூடாது....
ஓம்சாந்தி! இனிமையிலும்லிஇனிமையான ஆன்மீகக் குழந்தைகள் பாட்டின் வரியின் பொருளைப் புரிந்து
கொண்டீர்களா? நீங்கள் இப்பொழுது உயிருடன் எல்லையற்ற பாபாவின் குழந்தைகள் ஆகி விட்டீர்கள். முழு
கல்பத்திலும் எல்லைக்கு உட்பட்ட தந்தையின் குழந்தைகளாக இருந்தீர்கள். சத்தியயுகத்தில் கூட எல்லைக்கு
உட்பட்ட தந்தைக்கு குழந்தையாக இருந்தீர்கள். இப்பொழுது பிராமண குழந்தைகள் நீங்கள் மட்டும் எல்லையற்ற
தந்தைக்கு உடையவர்களாக ஆகியுள்ளீர்கள். எல்லையற்ற தந்தையிடமிருந்து தான் எல்லையற்ற ஆஸ்தி
கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். பாபாவை விட்டு விட்டால் எல்லையற்ற ஆஸ்தி
கிடைக்காது. நீங்கள் என்ன தான் புரிய வைத்தாலும் எளிதில் யாரும் திருப்தி அடைவதில்லை. மனிதர்கள்
செல்வத்தை அதிகம் விரும்புகின்றார்கள். செல்வம் இல்லாமல் சுகம் கிடைக்க முடியாது. செல்வமும் வேண்டும்,
அமைதியும் வேண்டும், நோயற்ற உடலும் வேண்டும்! குழந்தைகளாகிய நீங்கள் உலகத்தில் இன்று என்ன
நடக்கின்றது, நாளை என்ன ஆகப்போகின்றது என்பதை குழந்தைகள் நீங்களே அறிவீர்கள். வினாசமோ
எதிரிலேயே உள்ளது. வேறு எவரது புத்தியிலும் இந்த விஷயம் இல்லை. வினாசம் எதிரிலேயே உள்ளது
என்பதை தெரிந்திருந்தாலும் என்ன செய்ய வேண்டும் என்பதை அறியவில்லை. குழந்தைகள் நீங்கள் புரிந்து
கொண்டீர்கள், எப்பொழுது வேண்டுமானாலும் போர் ஆரம்பம் ஆகலாம், சிறு தீப்பொறி, பயங்கர சத்தத்தோடு
வெடிக்கலாம். அதிக நேரம் பிடிக்காது. முன்னால் கூட சின்ன விஷயத்திற்காக எவ்வளவு பெரிய சண்டை
ஏற்பட்டது. பழைய உலகம் அழிந்து கொண்டே இருக்கின்றது அதனால் இப்பொழுது சீக்கிரமாக பாபாவிடமிருந்து
ஆஸ்தியை அடைய வேண்டும். பாபாவை சதா நினைத்துக் கொண்டே இருந்தால் மிகவும் புன்சிரித்தவாறு
இருப்பீர்கள். தேகலிஅபிமானத்தில் வரும்போது அந்த மகிழ்ச்சி மறைந்து போகிறது. ஆத்மா அபிமானி ஆகின்றீர்கள்
என்றால் பாபாவை நினைக்கின்றீர்கள்! தேகலி அபிமானத்தில் வருவதால் பாபாவை மறந்து துக்கத்தில் வருகிறீர்கள்.
எந்தளவு பாபாவை நினைவு செய்வீர்களோ, அந்தளவு எல்லையற்ற தந்தையிடமிருந்து சுகத்தை அடைவீர்கள்.
இங்கே நீங்கள் இலட்சுமிலிநாராயணன் ஆவதற்காகவே வந்துள்ளீர்கள். இராஜாலிஇராணி மற்றும் பிரஜைகளின்
வேலைக்காரர்கள் என்று மிகுந்த வித்தியாசம் உள்ளதல்லவா? இப்பொழுது செய்யும் புருஷார்த்தம் கல்பலிகல்பமாக
நிரந்தரமாகி விடுகிறது. நாம் எவ்வளவு புருஷார்த்தம் செய்து உள்ளோம் என்றுலி கடைசியில் அனைவருக்கும்
சாட்சாத்காரம் ஆகும். அதனால் தன்னுடைய நிலையை இப்பொழுது கூட (ú4ôதித்து) பாருங்கள் என்று பாபா
கூறுகின்றார். இனிமையிலும், இனிமையான பாபா, அவரிடம் இருந்து தான் சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைக்கின்றது,
அவரை நாம் எவ்வளவு நினைவு செய்கிறோம்! பாபாவின் நினைவு தான் உங்களின் ஆதாரமாகும். எந்தளவு
பாபாவை நினைக்கின்றீர்களோ அந்தளவு மகிழ்ச்சி ஏற்படும். இப்பொழுது மிகவும் சமீபத்தில் வந்துவிட்டோம்
என்று புரிந்து கொள்வீர்கள். சிலர் இலட்சியம் இன்னும் துôரம் உள்ளதோ தெரியவில்லையே என களைத்துப்
போய் விடுகின்றார்கள், அடைந்தால் தான் முயற்சிக்கான வெற்றியும் கிடைக்கும். பகவான் என்று யாரை
அழைப்பது என்று இதைக்கூட உலகத்தில் உள்ளவர்கள் அறியவில்லை. ஹே பகவான் என்று கூறுகின்றார்கள்,
பின்பு கல்லிலும், முள்ளிலும் இருக்கின்றார் என்றும் கூட கூறுகின்றார்கள். இப்பொழுது பாபாவுடையவராக
ஆகி விட்டோம் என்று குழந்தைகள் நீங்கள் அறிகிறீர்கள். இப்பொழுது பாபாவின் வழிப்படி நடக்க வேண்டும்.
அயல்நாட்டில் இருந்தாலும் அங்கிருந்து கொண்டே பாபாவை நினைக்க வேண்டும். உங்களுக்கு ஸ்ரீமத்
கிடைத்துள்ளது. ஆத்மாவை பாபாவின் நினைவைத் தவிர தமோபிரதானத்தில் இருந்து சதோபிரமானமாக
ஆக்க முடியுயாது. இதைத் தவிர வேறு வழியே கிடையாது. பாபா, நாங்கள் உங்களிடம் இருந்த முழு
ஆஸ்தியை அடைந்தே தீருவோம் என்றுலி நீங்கள் கூறுகின்றீர்கள். நம்முடைய பாபா எப்படி ஆஸ்தி அடைந்தாரோ,
(2/4)
28.08.2016
அதுபோல நாம் கூட புருஷார்த்தம் செய்து அந்த பீடத்தில் அவசியம் அமர வேண்டும். மம்மா பாபா
இராஜலிஇராஜேஸ்வர், இராஜலிஇராஜேஸ்வரி ஆகின்றார்கள், அதுபோல் நாமும் கூட ஆக வேண்டும். பரீட்சை
என்பது அனைவருக்கும் ஒன்று தான். உங்களுக்கு மிகவும் குறைவாக கற்றுக் கொடுக்கப்படுகின்றது, பாபாவை
மட்டும் நினைவு செய்யுங்கள்! இதற்குத் தான் சகஜ இராஜயோக சக்தி என்று சொல்லப்படுகின்றது. யோகத்தால்
நிறைய சக்தி கிடைக்கின்றது என்று நீங்கள் அறிவீர்கள். நாம் ஏதாவது பாவ கர்மம் செய்தால் தண்டனை
அதிகம் கிடைக்கும், பதவியும் குறைந்துவிடும். நினைவில் தான் மாயா தடை போடுகின்றது.
நாம் பாவன உலகத்திற்குப் போய் கொண்டு இருக்கின்றோம் என்று தெரிந்து கொண்டீர்கள். பிராமணர்கள்
யார் ஆகின்றார்களோ அவர்களே நிமித்தமாகின்றார்கள். பிரம்மாவின் வாய் மூலமாக பிராமணர்கள் ஆகாமல்
நீங்கள் பாபாவிடம் ஆஸ்தியை அடைய முடியாது. பாபா குழந்தைகளைப் படைப்பதே ஆஸ்தியைக் கொடுப்பதற்காக
தான். நாம் சிவபாபாவின் குழந்தைகள் ஆகி விட்டோம். அவர் குழந்தைகளைப் படைத்ததே ஆஸ்தியைக்
கொடுப்பதற்காகத் தான்! உடலில் உள்ளவர்களுக்கே ஆஸ்தியை கொடுப்பார். ஆத்மாக்களோ மேலே வசிக்கின்றன.
அங்கே ஆஸ்தியின் பலன் என்ற பேச்சுக்கு இடமே இல்லை. இப்பொழுது நீங்கள் முயற்சி செய்து பலனை
அடைந்து கொண்டு இருக்கின்றீர்கள், இது உலகத்திற்கு தெரியாது. இப்பொழுது நேரம் நெருங்கி வந்து
கொண்டு இருக்கின்றது. எச்சரிக்கை விடுக்கிறார்கள், அவர்கள் அப்படி செய்தால், நாங்கள் ஒரேயடியாக உயரே
அனுப்பி விடுவோம் என்கின்றார்கள். அவ்வாறு உலகத்திலிருந்தே மேலே அனுப்ப தயார் செய்து கொண்டு
இருக்கின்றார்கள். தயாரித்த அணுகுண்டுகளையெல்லாம் சும்மா வைத்துக் கொண்டு இருக்க மாட்டார்கள்.
அதிகமாக தயார் செய்துக் கொண்டிருக்கிறார்கள். பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சியின் போது பாக்கிஸ்தான், இந்துஸ்தான்
என்று இருந்ததா என்ன? வெளிநாட்டவரின் யுத்தம் என்று எழுதப்பட்டுள்ளது. பாண்டவர்கள் மற்றும்
கௌரவர்களின் சண்டை அல்ல. வெளிநாட்டவர்கள் சமமாகப் போராடுகின்றார்கள். அணுகுண்டு தாயராகி
விட்டன.. இப்பொழுது பாபா நமக்கு கட்டளையிடுகின்றார் என்னை நினைவு செய்யுங்கள், இல்லையென்றால்,
பின்னால் மிகவும் அழ வேண்டியிருக்கும். பரீட்சையில் தோல்வி அடைந்து விட்டால் கோபத்தில் போய்
தற்கொலை செய்து கொள்கின்றார்கள். இங்கே கோபப்படுவதற்கான விஷயமே இல்லை. சிறிது நாட்கள் கழித்து
உங்களுக்கு நிறைய சாட்சாத்காரம் ஆகும். என்னலிஎன்ன, எப்படியெல்லாம் நாம் ஆகப் போகின்றோம் என்பதும்
தெரிந்துவிடும். பாபாவின் கடமை நம்மை புருஷார்தம் செய்விப்பது! குழந்தைகளே! காரியங்கள் செய்யும்
போது பாபாவை மறந்து போய் விடுகின்றீர்கள் அல்லது நேரம் கிடைக்கவில்லை என்றால் நன்கு அமர்ந்து
செய்யுங்கள். நினைவில் ஸ்திரமாக அமர்ந்து, பாபாவை நினைவு செய்யுங்கள். உங்களிடையே நீங்கள் சந்திக்கும்
போதும் நாம் பாபாவை நினைவு செய்ய முயற்சி செய்யுங்கள். இணைந்து அமர்ந்தால் பாபவை நன்றாக
நினைக்க முடியும், உதவி கிடைக்கும். பாபாவை நினைப்பது தான் முக்கியமான விஷயம் ஆகும். எங்கேயும்
போகுவதற்கான அவசியம் இல்லை. இங்கே வந்தாலும் சரி, வாராமல் போனாலும் சரி. வெளிநாட்டிற்கு
யாராவது போக வேண்டி வந்தால் இங்கே வர முடியாது. அங்கேயும் கூட ஒரு பாபாவை நினைவு செய்யுங்கள்.
பாபாவின் நினைவால் தான் நீங்கள் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானம் ஆக முடியும். ஒரு பாபாவை
மட்டும் நினைவு செய்யுங்கள்லிபாபாவை நினைவு செய்யுங்கள் என்று பாபா கூறுகின்றார். மன்மனாபவ என்று
பாபா கூறுகின்றார். என்னை நினைவு செய்தீர்களானால் உலகத்திற்கு எஜமானன் ஆகலாம் என்கின்றார்.
நினைவு தான் முக்கியமான விஷயமாகும். எங்கேயும் செல்லத்தேவையில்லை, வீட்டில் இருந்தாலும் ஒரு
பாபாவை நினைவு செய்யுங்கள். துôய்மை ஆகவில்லை என்றால், பாபாவை நினைவு செய்ய முடியாது.
அனைவருமே வந்து வகுப்பிற்கு வந்து படிப்பார்களா என்ன? மந்திரம் கிடைத்து விட்டது, எங்கே
வேண்டுமானாலும் (வேலைக்கு) போங்கள். சதோபிரதானம் ஆவதற்காக பாபா பாதை கூறிவிட்டார். இன்னும்
நீங்கள் சென்டருக்கு வந்தால் புதியலிபுதிய விஷயங்களைக் கேட்கலாம். சில நேரங்களில் ஏதாவது காரணத்தால்
வர முடியவில்லை மழை பொழிகின்றது, தடையுத்தரவு ஏற்படுகின்றது என்றால் பரவாயில்லை, எவரும்
வெளியிலேயே வர முடியவில்லை என்றால் என்ன செய்ய முடியும்? பரவாயில்லை, என்று பாபா கூறுகின்றார்.
எங்கிருந்தாலும் என்னை நினைவு செய்யுங்கள் என்று பாபா கூறுகின்றார், நடக்கும் போதும்லிவரும்போதும்,
போகும் போதும் என்னை நினைவு செய்யுங்கள் என்று பாபா கூறுகின்றார். பாபாவை நினைவு செய்வதன்
மூலம் பாவ கர்மங்கள் அழியும் மேலும் தேவதை ஆகலாம் என்று மற்றவர்களுக்கும் கூறுங்கள். இரண்டே
வார்த்தை தான்.
குழந்தைப்பருவத்தை மறக்க வேண்டாம் என்று பாபா கூறுகின்றார், பாபாவை மறந்தால்லி இன்று சிரிக்கலாம்
நாளை அழ வேண்டி வரும். பாபாவிடமிருந்து முழு ஆஸ்தி அடைய வேண்டும். சொர்க்கத்திற்குப் போவதற்கு
யாருக்கு அதிர்ஷ்டம் இருக்கின்றதோ அவர்கள் அவசியம் போவார்கள், என்று நிறைய பேர் கூறுகின்றார்கள்.
அதை புருஷார்த்தம் (முயற்சி) என்றே கூற முடியாது. உயர்ந்த பதவி அடைவதற்காக மனிதர்கள் முயற்சி
செய்கின்றார்கள். இப்பொழுது பாபாவிடமிருந்து உயர்ந்த பதவி கிடைக்கின்றது என்றால், நாம் ஏன் தவறு
(3/4)
28.08.2016
செய்ய வேண்டும்? பள்ளியில் யார் படிக்கவில்லை என்றால், எழுதலிபடித்தவர்கள் முன்னால் சுமை துôக்க
வேண்டி வரும். பாபாவை முழுமையாக நினைக்கவில்லை என்றால் பிரஜைகளுக்கு கூட வேலைக்காரர்களாக
ஆவீர்கள். இதில் மகிழ்ச்சி அடைய வேண்டுமா என்ன! அதனால் பாபா புரிய வைக்கின்றார்லி
இனிமையிலும்லிஇனிமையான குழந்தைகள்! பாபா முன்னால் வந்து புத்துணர்ச்சி அடைந்து செல்கின்றீர்கள். சில
பந்தனத்தில் உள்ள பெண்கள் இருக்கின்றார்கள், பரவாயில்லை, வீட்டில் அமர்ந்தே பாபாவை நினைவு செய்து
வாருங்கள். உங்களுக்கு எளிதாக புரிய வைக்கின்றார்! மரணம் எதிரிலேயே நின்று கொண்டு இருக்கின்றது,
திடீரென்று யுத்தம் ஆரம்பம் ஆகிவிடும். சிறிது பிரச்சனை செய்தாலும் நாங்கள் அப்படி (சண்டை) ஆரம்பித்து
விடுவோம் என்று ஒருவருக்கொருவர் கூறிக் கொள்கின்றார்கள். முதலிலேயே கூறிவிடுகிறார்கள், அணுகுண்டுடின்
கர்வம் அதிகமாக உள்ளது. பாபா புரிய வைக்கின்றார்லி குழந்தைகள் யோக பலத்தில் இன்னும் திறமை
ஆகவில்லை ஆனால் போர் ஏற்பட்டு விட்டது என்று அப்படி ஆகிவிடக்கூடாது. ஆனால் நாடகப்படி
அவ்வாறு ஆகாது. ஆகையால் குழந்தைகள் முழு ஆஸ்தி அடையவில்லை, எனவே போர் ஆரம்பித்தாலும்
நின்று போய்விடும். ஏனென்றால், இப்பொழுது இன்னும் இராஜதானி ஸ்தாபனை ஆகவில்லை, சற்று நேரம்
வேண்டும். புருஷார்த்தம் செய்வித்துக் கொண்டு இருக்கின்றார், எந்த நேரம் வேண்டுமானாலும் என்ன
வேண்டுமானாலும் நடக்கலாம்! பஸ் மோதி கீழே விழுகின்றது, ஆகாயவிமானம், மூலமாக விபத்து, இரயில்
வண்டிகள் மோதிக் கொள்கின்றன, எத்தனை பேர் மரணம், மிகவும் எளிதாக நடக்கின்றது, பூகம்பம் வருகின்றது.
அனைத்தையும் விட அதிக வேலை பூகம்பம் தான் செய்யும். ஆனால் வினாசத்திற்கு முன்னால் பாபாவிடம்
இருந்து முழு ஆஸ்தியை அடைய வேண்டும். ஆகையால் மிகவும் அன்போடு பாபாவை நினைவு செய்ய
வேண்டும். பாபா, உங்களைத் தவிர வேறு யாரும் எங்களுக்கு இல்லை. பாபாவை மட்டும் நினைவு செய்து
வாருங்கள். சின்னலிசின்ன குழந்தைகளுக்கு புரிய வைப்பது போல் எவ்வளவு எளிதாக புரிய வைக்கின்றார்
மேலும் எந்த கஷ்டமும் கொடுக்கவில்லை, என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என்கின்றார். நீங்கள் காமச்
சிதையில் அமர்ந்து எரிந்து விட்டீர்கள், இப்பொழுது ஞானச்சிதையில் அமர்ந்து துôய்மை ஆகுங்கள்! உங்களிடம்
கேட்பார்கள், உங்களுடைய நோக்கம் என்ன? என்று, நீங்கள் கூறுங்கள், அனைவருக்கும் தந்தையாக உள்ளவர்
வந்து கூறுகின்றார், என்னை நினைவு செய்யுங்கள் உங்களுடைய பாவகர்மங்கள் எல்லாம் வினாசம் ஆகும்
மேலும் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானம் ஆகிவிடலாம் என்று கூறுங்கள். அனைவருக்கும் ஒரே பாபா
தான் சத்கதியைத் தரக்கூடிய வள்ளல் ஒரே தந்தை தான் ஆவார். பாபாவை மட்டும் நினைவு செய்யுங்கள்லி
உங்கள் ஆத்மாவில் உள்ள துரு நீங்கி விடும் என்று பாபா கூறுகின்றார். இந்தளவு செய்தியை அனைவருக்கும்
தர முடியுமல்லவா? முதலில் நாம் நினைத்தால் தானே, பிறகு மற்றவர்களுக்கு நினைவு செலுத்த முடியும்.
மற்றவர்களுக்கு ஆர்வத்தோடு சொல்ல வேண்டும்,. இல்லையென்றால் உள்ளத்திலிருந்து எழாது. எங்கிருந்தாலும்,
எவ்வளவு முடிகின்றதோ அவ்வளவு பாபாவை நினைவு செய்யுங்கள். உணவுலிஇருப்பிடத்திற்கு சிறிது கஷ்டம்
இருக்கலாம்! ஆனாலும் வீட்டில் தானே இருக்க வேண்டும். வீட்டில் இருந்து கொண்டே பாபாவை நினைவு
செய்யுங்கள். யாரை சந்தித்தாலும், மரணம் எதிரிலே உள்ளது எனும் ஞானத்தைக் கொடுங்கள்.
நீங்கள் அனைவரும் தமோபிரதானம் பதீதர்கள் ஆகிவிட்டீர்கள், இப்பொழுது என்னை நினைவு
செய்யுங்கள் மேலும் துôய்மை ஆகுங்கள். ஆத்மா தான் பதீதமாகியுள்ளது, சத்தியயுகத்தில் ஆத்மா பாவனமாக
இருக்கும். பாபாவின் நினைவின் மூலமே ஆத்மா பாவனம் ஆகவேண்டும், வேறு வழி இல்லை! இந்த
செய்தியை அனைவருக்கும் கொடுத்துக் கொண்டே சென்றால் கூட நிறைய பேருக்கு நன்மை செய்வீர்கள்.
வேண்டும் வேறு எந்த கஷ்டமும் பாபா கொடுக்கவில்லை. புருஷோத்தம மாதத்தில் அனைவரிலும் புருúôத்தமர்
யார்? என்று புரிய வைக்க வேண்டும். சத்யுகத்தில் தான் இலட்சுமிலிநாராயணன் புருஷோத்தமராக இருந்தார்கள்.
பாபா தான் இவர்களை புருஷோத்தமராக ஆக்கக் கூடியவர், அதாவது சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யக்
கூடியவர். அனைத்து ஆத்மாக்களையும் பாவனம் ஆக்குவது பதீதலிபாவனன் பாபா தான். பாபா தான்
அனைவரையும் உத்தமான புருஷர்களாக ஆக்குபவர் தந்தை. பூஜிக்கத் தகுதி வாய்ந்த நிலையில் யார்
இருந்தார்களோ, அவர்கள் தான் பூஜாரி ஆகவும் ஆகின்றார்கள். இராவண ராஜ்யத்தில் நாம் பூஜாரி ஆகியுள்ளோர்
இராம இராஜ்யத்தில் பூஜிக்கத் தக்கவர்களாக இருந்தோம். இப்பொழுது இராவண இராஜ்யத்தின் கடைசி நேரம்.
நாம் பூஜாரியிலிருந்து பூஜிக்கத் தகுந்த நிலை அடைகின்றோம். பாபாவை நினைப்பதற்கான வழியை
மற்றவர்களுக்கும் கூறவேண்டும். வயோதிகர்களும் இந்த சேவையை செய்ய வேண்டும். நண்பர்கள்லி
உறவினர்களுக்கும் கூட பாபாவின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். கூறுங்கள், சிவபாபா
கூறுகின்றார்: பாபாவை நினைவு செய்தீர்கள் என்றால் நீங்கள் சொர்க்கத்திற்கு எஜமானன் ஆகிவிடுவீர்கள்.
நிராகார சிவபாபா அனைவருக்கும் சத்கதியை கொடுக்கக் கூடிய வள்ளல் ஆவார், அனைத்து ஆத்மாக்களுக்கும்
கூறுகின்றார் என்னை நினைவு செய்வீர்கள் என்றால் சதோபிரதானம் ஆகிவிடலாம் என்கின்றார். இதை புரிய
வைப்பது எளிது தானே! வயோதிக தாய்மார்கள் கூட இந்த சேவை செய்ய முடியும். இது தான் முக்கியமான
விஷயம். கல்யாணம், காட்சிகள் எங்கும் போங்கள், அவர்களின் காதுகளிலும் இந்த விஷயத்தை கூறுங்கள்.
28.08.2016
(4/4)
கீதையின் பகவான் கூறுகின்றார்லி என்னை நினைவு செய்யுங்கள் என்று, இந்த விஷயத்தை அனைவரும்
விரும்புவார்கள். அதிகம் பேசுவதற்கு தேவையில்லை. பாபா கூறுகின்றார்லிஎன்னை நினைவு செய்யுங்கள் என்ற
இந்த செய்தியை மட்டும் கூறுங்கள்.
நல்லது! பகவான் பிரேரணை கொடுக்கின்றார் என்று புரிந்து கொள்ளுங்கள், கனவிலும் காட்சி
தெரியும். அவர் பேசுவது கேட்கின்றதுலி என்னை நினைவு செய்தால் சதோபிரதானம் ஆகலாம் என்று பாபா
கூறுகின்றார். நீங்களும் தனக்குத் தான் இதே சிந்தனை செய்தீர்கள் என்றால் படகு அக்க்ரை சேர்ந்து விடும்.
நாம் இப்பொழுது நடைமுறையில் பாபாவின் குழந்தைகள் ஆகி உள்ளோம், மேலும் அவரிடமிருந்து இருபத்தோரு
ஜென்மத்திற்கு ஆஸ்தியை அடைந்து கொண்டு இருக்கின்றோம் என்றால், மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமல்லவா!
பாபாவை மறப்பதால் தான் கஷ்டங்கள் வருகின்றன. பாபா மிகவும் எளிதாக எடுத்துக் கூறுகின்றார்லி என்னை
நினைவு செய்யுங்கள் என்கின்றார் மற்றவர்களும் இவர்கள் பாதை முற்றிலும் சரியானது என்று புரிந்து
கொள்வார்கள். இந்த பாதையை யாராலும் சொல்ல முடியாது. வீட்டிலிருந்து வெளியே கூட வர முடியாத
நேரம் வரும். பாபாவை நினைத்துக்கொண்டே உடலை விட்டு விடுவீர்கள். கடைசி நேரத்தில் பாபாவை யார்
நினைக்கின்றார்களோலி அவர் நாராயணன் ஆத்மாவின் உடலில் இறங்குகின்றது. அவர் தான் பின்பு இலட்சுமிலி
நாராயணன் குலத்தில் வருவீர்கள். இராஜ பதவியை அடைவீர்கள். பாபாவை மட்டும் அன்போடு நினைவு
செய்யுங்கள். பாபாவின் நினைவு இல்லாது அன்பு எப்படி செலுத்துவது? சுகம் கிடைத்தால் தான் நினைவு
செய்யப்படுகிறது! துக்கம் தருவவோர் மீதுஅன்பு செலுத்தப்படுவதில்லை. நான் உங்களை சொர்க்கத்திற்கு
எஜமானன் ஆக ஆக்குகின்றேன் ஆகையால் என்னை அன்போடு நினைவு செய்யுங்கள் என்று பாபா
கூறுகின்றார். பாபாவின் வழிப்படி நடக்க வேண்டுமல்லவா! நல்லதுலி
இனிமையிலும்லிஇனிமையான குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்புலி நினைவுகள். ஆன்மீக
தந்தை கூறுகின்றார் ஆன்மீக குழந்தைகளுக்கு நமஸ்தே.
தாரனைக்கான முக்கிய சாரம்:லி
1) படிப்பில் ஒரு போதும் தவறு செய்யக் கூடாது, யுத்தத்திற்கு முன்னால் பாபாவிடமிருந்து முழு
ஆஸ்தியை அடைய வேண்டும்.
2) ஸ்ரீமத்படி பாபாவை மிகவும் அன்போடு நினைவு செய்யவேண்டும்.
வரதானம்:லி முழு விருக்ஷ்த்தின் ஞானத்தை புத்தியில் வைத்து, தபஸ்யா செய்யக் கூடிய
உண்மையான தபஸ்வி அதாவது சேவாதாரி ஆகுக
பக்தி மார்க்கத்தில் தபஸ்வி மரத்திற்கு அடியில் அமர்ந்து தபஸ்யா செய்வது போல் காட்டியுள்ளார்கள்.
இதற்குக் கூடஇரகசியம் உள்ளது. குழந்தைகளாகி நீங்கள் கல்பகவிருக்ஷ் மரத்தின் வேர்தான் உங்கள் இருப்பிடம்
ஆகும். மரத்தின் அடியில் அமர்ந்தால் முழு மரத்தின் ஞானம் உங்கள் புத்தியில் தானாகவே வரும். ஆகையால்
முழு விருக்ஷ்த்தின் ஞானத்தை புத்தியில் வைத்து சாட்சியாகி இந்த மரத்தைப் பாருங்கள். அப்பொழுது
போதை, குμயை ஏற்படுத்தும் மேலும் அதனால் பேட்ரி சார்ஜ் ஆகிவிடும். பின்பு சேவை செய்து கொண்டு
இருந்தாலும் கூடவே தபஸ்யாவும் செய்ய முடியும்.
சுலோகன்:லி உடல் நோய் என்பது ஒரு பெரிய விஷயம் இல்லை ! ஆனால் மனம் ஒரு போதும்
நோயாளி ஆகி விடக்கூடாது.
(1/4)
28
.08.2016 காலை முரளி ஓம் சாந்தி ''அவ்யக்த பாப்தாதா''
ரிவைஸ் 08.11.1981 மதுபன்
'' இடைவெளியை நிறைவு செய்வதற்கான சாதனம்
'துரித தானம் மகாபுண்ணியம்' ''
இன்று பாப்தாதா வதனத்தில் அதிகாலை நேரத்தில் பாப்தாதா இருவர்களுக்கும் இடையே நடந்த
ஆன்மீக உரையாடலின் கதையை சித்திரங்களுடன் கூறுகிறார். கதை கேட்பதில் அனைவருக்கும் ஆர்வம்
இருக்கும் இல்லையா? இன்றைய கதையாக என்ன இருந்தது? பிரம்மா பாபா வதனத்தின் தோட்டத்தில்
சுற்றி நடந்து வந்து கொண்டிருந்தார். நடந்து வந்து கொண்டிருக்கும்பொழுதே அவருடைய எதிரில் யார்
இருந்தார்கள்? தந்தையின் எதிரில் எப்பொழுதும் யார் இருக்கிறார்கள்? இதை அனைவரும் நல்ல முறையில்
தெரிந்திருக்கிறீர்கள் தான் இல்லையா? தந்தை குழந்தைகளின் மாலையை நினைவு செய்து கொண்டிருந்தார்.
எந்த மாலை? குணமாலை. அப்படி பிரம்மா பாபா குணத்தின் மாலையை நினைவு செய்து கொண்டிருந்தார்.
சிவபாபா பிரம்மாவிடம் கேட்டார். 'என்ன ஜபித்துக் கொண்டிருக்கிறீர்கள்?' பிரம்மா பாபா கூறினார் லி 'எது
உங்களுடைய வேலையாக இருக்கிறதோ அதுவே என்னுடைய வேலை'. குழந்தைகளின் குணமாலையைப்
பார்த்துக் கொண்டிருந்தோம். என்னென்ன பார்த்தீர்கள் என்று சிவபாபா கேட்டார். என்ன பார்த்திருப்பார்?
சில குழந்தைகளுக்கு நெக்லெஸ் அளவிற்கு மட்டுமான மாலை இருந்தது, மேலும் சில குழந்தைகளினுடையது
கால் வரை நீளமான மாலையாக இருந்தது. சில குழந்தைகளின் அனேக முத்துக்களின் மாலையாக இருந்தது.
சில குழந்தைகளோ மாலைகளினால் அந்த அளவு அலங்கரிக்கப்பட்டிருந்தார்கள், மாலையே அவர்களுடைய
ஆடையாக ஆகிவிட்டது.
பிரம்மா பாபா விதவிதமான குணமாலைகளினால் அலங்கரிக்கப்பட்ட குழந்தைகளைப் பார்த்து பார்த்து
மகிழ்ச்சி அடைந்து கொண்டிருந்தார். நீங்கள் ஒவ்வொருவரும் தன்னுடைய குணமாலையைத் தெரிந்திரு
க்கிறீர்களா? எவ்வளவு அலங்கரிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்ற இந்த தன்னுடைய சித்திரத்தை பார்க்கிறீர்களா?
பிரம்மா பாபா சித்திர ரேகையாகி சித்திரங்களின் கோடு போட்டுக் கொண்டிருந்தார் அதாவது சித்திரத்தில்
அதிர்ஷ்டத்தின் ரேகைகளை இழுத்துக் கொண்டிருந்தார். நீங்களும் உங்களுடைய சித்திரம் அதாவது
எதிர்காலத்தின் உருவத்தை நீங்களே வரைய முடியும் தான் இல்லையா. புகைப்படம் எடுக்க முடியும் தான்
இல்லையா? தன்னுடைய மற்றும் மற்றவர்களின் புகைப்படத்தை எடுக்கத் தெரியுமா? தன்னுடைய புகைப்படத்தை
எடுக்கத் தெரியுமா? அப்படி இன்று வதனத்தில் அனைவரின் புகைப்படமும் இருந்தது. எவ்வளவு பெரிய
கேமராவாக இருக்கும்? உங்கள் அனைவரின் மட்டுமல்ல, அனைத்து பிராமணர்களின் புகைப்படம் இருந்தது.
மாலைகளின் அலங்காரத்தைப் பார்த்து சில குழந்தைகளின் விசேஷமாக என்ன பார்த்தோம் லி ஒவ்வொரு
குணத்தை வைரங்களின் ரூபத்தில் வகை வகையான ரூபத்தின் கோடுகளை மற்றும் வண்ணமுடையவர்களாக
இருந்தார்கள். முக்கியமாக நான்கு விதமான வண்ணம் இருந்தன. அதில் முக்கிய நான்கு பாடங்களின் நான்கு
வண்ணங்கள் இருந்தன. பாடத்தைத் தெரிந்திருக்கிறீர்கள் இல்லையா? ஞானம் லி யோகா லி தாரணை மற்றும்
சேவை.
ஞான சொரூபத்தின் அடையாளமாக எந்த வண்ணம் இருக்கும்? ஞான சொரூபத்தின் அடையாளம் லி
பொன் நிறம். அதாவது மெல்லிய பொன் நிறம் இருக்கும் காரணத்தினால் அந்த ஒரே ஒரு வைரம் மூலம்
அனைத்து வண்ணங்களும் தென்பட்டன. ஒரே ஒரு வைரத்திலிருந்து விதவிதமான வர்ணங்களின் கிரணங்கள்
மாதிரி ஜெôலிப்பு தென்பட்டது. தூரத்திலிருந்து சூரியன் பிரகாசமாக இருப்பது போல் அனுபவம் ஆகும்,
மேலும் இது அதையும் விட அழகான சூரியன் ஏனென்றால், அனைத்து வர்ணங்களின் கிரணங்கள்
தூரத்திலிருந்தே மிகத் தெளிவாகத் தென்பட்டன. அந்த சித்திரம் கண் எதிரில் வருகிறது தான் இல்லையா?
வைரம் எப்படி மின்னிக் கொண்டிருக்கிறது.
நினைவின் அடையாளம் லி இதுவோ சுலபமானது தான் இல்லையா? நினைவில் இங்கேயும் அமருகிறீர்கள்
என்றால் என்ன செய்கிறீர்கள்? சிகப்பு வண்ணம். ஆனால் இந்த சிகப்பு வண்ணத்திலும் பொன் வண்ணம்
கலந்திருந்தது, எனவே உங்களுடைய இந்த உலகத்தில் அந்த வண்ணம் இல்லை. சொல்வதற்கோ சிகப்பு
வண்ணம் என்று தான் சொல்வோம்.
தாரணையின் அடையாளம் லி வெண்ணிறம். ஆனால் வெண்ணிறத்திலும் எப்படி சந்திரனின் ஒளியின்
இடையில் மெல்லிய நீல நிறத்தை கலக்குங்கள் அல்லது வெள்ளியின் நிறத்தில் மெல்லிய மஞ்சள் நிறத்தை
சேர்த்துக்கொள்ளுங்கள். பார்ப்பதற்கு சந்திரன் மாதிரி தான் தென்படும் ஆனால் லேசாக மென்மையான நீல
நிறம் இருக்கும் காரணத்தினால் அதனுடைய மினு மினுப்பு இன்னும் அழகாக ஆகிவிடும். இங்கே அந்த
(2/4)
28.08.2016
வண்ணத்தை உருவாக்க முடியாது. ஏனென்றால், அது பிரகாசமாக மின்னும் வண்ணம். எவ்வளவு தான்
முயற்சி செய்தாலும் ஆனால் சூட்சும வதனத்தின் வண்ணம் இங்கே எப்படி வர முடியும்?
சேவையின் அடையாளம் லி பச்சை நிறம். சேவையில் நாலாபுறங்களிலும் பசுமையாக்கி விடுகிறீர்கள்
இல்லையா? முட்களின் காடுகளை மலர்களின் தோட்டம் ஆக்கிவிடுகிறீர்கள்.
நான்கு வண்ணங்கள் எவை என்று இப்பொழுது கேட்டீர்களா? இந்த நான்கு வண்ணங்களின்
வைரங்களினால் அலங்கரிக்கப்பட்ட மாலைகள் அனைவரின் கழுத்தில் இருந்தது. இது வேறு வேறு அளவு
மற்றும் மின்னுதலில் வித்தியாசம் இருந்தது. சிலருக்கு ஞான சொரூபத்தின் மாலை இருந்தது, சிலருக்கு
நினைவு சொரூபத்தின் மாலை இருந்தது. மேலும் சிலருக்கு நான்கு மாலைகளுமே கொஞ்சம் கொஞ்சம்
வித்தியாசத்தில் இருந்தன. யாருக்கு நான்கு வண்ணங்களினால் ஆன அனேக மாலைகள் இருந்தனவோ அது
பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருந்திருக்கும். பாப்தாதா அனைவரது ரிசல்ட்டையும் மாலைகளின் ரூபத்தில்
பார்த்துக்கொண்டிருந்தார். தூரத்திலிருந்தே வைரம் மாதிரி மின்னிக் கொண்டிருந்தார்கள். எப்படி, சின்ன சின்ன
பல்புகளின் லைட் மாதிரி தென்பட்டது. இப்பொழுது இந்த சித்திரங்கள் மூலமாக ரிசல்ட்டைப் பார்த்து பிரம்மா
பாபா கூறினார் லி 'நேரத்தின் வேகத்திற்கு ஏற்றபடி அனைத்து குழந்தைகளின் அலங்காரம் முடிவடைந்ததா?'
ஏனென்றால் ரிசல்ட்டில் வேற்றுமை இருந்தது. அப்படியானால் இந்த வேற்றுமையை எப்படி சம்பன்னம்
ஆக்குவது? குழந்தைகளோ மிக அதிகமாக கடினமாக முயற்சி செய்கிறார்கள். ஞானம் நிறைந்தவராகவோ
ஆகிவிட்டீர்கள். என்ன வித்தியாசம் இருந்தது என்று இப்பொழுது கூறுங்கள், அதில் சிலருக்கு நெக்லஸ்,
சிலருக்கு கால் வரை நீளமான மாலைகள், அதுவும் அனேக மாலைகள் இருந்தன. கேட்பதும் ஒன்று தான்,
மற்றவர்களுக்கு கூறுவதும் ஒன்று தான், அனைவருக்கும் ஒரே ஒரு விதி தான். மேலும் உருவாக்குபவரும்
ஒரே ஒருவர் தான், சட்டமும் ஒன்று தான், வேறு என்ன வித்தியாசம் இருந்து விட்டது. எண்ணமும் ஒன்று,
உலகமும் ஒன்று. பிறகு ஏன் வித்தியாசம்?
பிரம்மா பாபாவிற்கு குழந்தைகள் மேல் இன்று மிகுந்த அன்பு வந்து கொண்டிருக்கிறது. அனைத்து
சித்திரங்களையும் சம்பன்னம் ஆக்குவதற்காக இப்பொழுதே அனைவரையும் மாலைகளினால் அலங்கரித்து
விட வேண்டும் என்று தீவிரமான ஊக்கம் வந்து கொண்டிருந்தது. தந்தையோ அலங்கரித்தும் விடலாம்.
ஆனால் தாரணை செய்வதற்கான சக்தியும் வேண்டும் இல்லையா? அதைப் பாதுகாப்பதற்கான சக்தியும் வேண்டும்
இல்லையா? பிரம்மா பாபா என்ன விஷயம் என்று சிவபாபாவிடம் கேட்டார். குழந்தைகள் உடன் செல்வதற்காக
முழுமையாக அலங்கரிக்கப்பட்டவர்களாக ஏன் ஆவதில்லை? அலங்கரிக்கப்பட்டவர்கள் தான் உடன் செல்வார்கள்.
அதற்குக் காரணமாக என்ன வெளிப்பட்டது? இடைவெளியோ சின்னஞ் சிறியது தான் என்று சிவபாபா
கூறினார். அனைவருமே யோசிக்கத் தான் செய்கிறார்கள். ஆனால் சிலர் என்ன யோசிக்கிறார்களோ அதை
ஒரே நேரத்தில் செய்து விடுகிறார்கள். அதாவது யோசிப்பது மற்றும் செய்வது சேர்ந்தே இருக்கிறது. அந்த
மாதிரியானவர்கள் சம்பன்னம் ஆகிவிடுகிறார்கள். ஆனால் சிலர் என்ன யோசிக்கிறார்களோ அதை செய்யவும்
செய்கிறார்கள் ஆனால் யோசிப்பது மற்றும் செய்வதற்கு இடையில் இடைவெளி இருந்து விடுகிறது. மிக
நன்றாக யோசிக்கிறார்கள். ஆனால் கொஞ்ச காலத்திற்கு பிறகு தான் செய்கிறார்கள். அதே நேரம் செய்வதில்லை.
எனவே எண்ணத்தில் அந்த நேரம் எந்தவொரு தீவிரம், ஊக்கம் உற்சாகம் இருந்ததோ அது காலமானதின்
காரணமாக சதவிகிதத்தில் குறைந்து விடுகிறது. எப்படி சூடான அப்பொழுது தயாரிக்கப்பட்ட பொருளின்
அனுபவம் மற்றும் ஆறிப்போன ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்ட பொருளின் அனுபவத்தில் வித்தியாசம்
இருக்கிறது தான் இல்லையா? புத்தம் புது பொருளின் சக்தி, கொஞ்ச நேரம் வைக்கப்பட்ட பொருளின் சக்தியில்
வித்தியாசம் ஏற்பட்டு விடுகிறது. இடையில் நேரம் கிடைக்கும் காரணத்தினால் மற்றவர்களுக்குக் கூறுவதினால்
அனைவரின் சதவிகிதம் குறைந்து விடுகிறது. எப்படி புதிய பொருளின் வைட்டமின்களின் வித்தியாசம்
ஏற்பட்டு விடுகிறது. இன்னொன்று வாய்ப்பு இருக்கும் காரணத்தினால் பிரச்சனைகள் என்ற தடைகளும் வந்து
விடுகின்றன. எனவே யோசிப்பது மற்றும் செய்வது சேர்ந்தே இருக்கட்டும். இதைத் தான் 'துரித தானம்
மகாபுண்ணியம்' என்று கூறுவது. இல்லை என்றால் மகாபுண்ணியத்திற்குப் பதிலாக புண்ணியம் என்று மட்டும்
ஆகிவிடும். அப்படி வித்தியாசம் ஏற்பட்டு விட்டது தான் இல்லையா. மகாபுண்ணியத்தின் பிராப்தி மேலும்
புண்ணியத்தின் பிராப்தியில் வேற்றுமை வந்து விடுகிறது. என்ன காரணம் என்று புரிந்து கொண்டீர்களா?
சிறிய காரணம் தான். செய்யவும் செய்கிறீர்கள் ஆனால் இப்பொழுது செய்வதற்குப் பதிலாக எப்பொழுதாவது
செய்கிறீர்கள். எனவே அதிகம் உழைக்க வேண்டியதாக இருக்கிறது. எனவே பிரம்மா பாபா குழந்தைகளிடம்
இப்பொழுது இந்த காரணத்திற்கு நிவாரணம் செய்யுங்கள் என்று கூறினார். இன்றைய கதையை கேட்டீர்களா?
இரண்டு தந்தைகளின் இடையே நடந்த கதை. இப்பொழுது என்ன செய்வீர்கள்? நிவாரணம் செய்யுங்கள்.
நிவாரணம் செய்வது தான் நிர்மானம் (படைப்பு) செய்வதாக ஆகிவிடும். அப்படி தன்னிலும் நவநிர்மாணம்
மற்றும் உலகத்திலும் நவநிர்மாணம். நல்லது.
(3/4)
28.08.2016
அந்த மாதிரி எப்பொழுதும் அலங்கரிக்கப்பட்ட, யோசிப்பதையும் மற்றும் செய்வதையும் (இடைவெளி
யில்லாது) சமமாக ஆக்கக்கூடிய, தந்தைக்குச் சமமாக எப்பொழுதும் துரித தானம் செய்யும் மகாபுண்ணிய
ஆத்மாக்களுக்கு, இரண்டு தந்தைகளின் நல்விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய, அந்த மாதிரி சம்பன்ன
ஆத்மாக்களுக்கு, அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.
டீச்சர்களுடன் சந்திப்பு லி
சேவாதாரி அமிர்தவேளையிலிருந்து இரவு வரையிலும் சேவையின் மேடையில் இருக்க வேண்டும்.
ஒருவேளை ஓய்வு எடுக்கிறீர்கள் என்றாலும் மேடையில் இருக்கட்டும். மேடையில் தான் தூங்கும் பங்கை
செய்கிறீர்கள் இல்லையா? எப்படி தூங்குகிறார் என்று அனைவரின் பார்வை செல்லும். இந்த முறையில்
சேவாதாரி என்றால் 24 மணி நேரங்களிலும் தன்னுடைய பங்கைச் செய்பவர். எனவே ஒவ்வொரு அடி,
ஒவ்வொரு விநாடி நீங்கள் முழு உலகிற்கு எதிரில் இருக்கிறீர்கள். சேவாதாரி கதாநாயக பாத்திரம் என்று
புரிந்து கொண்டு நடக்க வேண்டும். சென்டரில் அமர்ந்திருக்கவில்லை, ஆனால் மேடையில் இருக்கிறீர்கள்.
உலகின் மேடையில் இருக்கிறீர்கள். அப்படி இந்த அளவு கவனம் இருக்கும் காரணத்தினால் ஒவ்வொரு
எண்ணம் மற்றும் காரியம் இயல்பாகவே உயர்ந்ததாக இருக்கும் இல்லையா. இயற்கையான கவனம் இருக்கும்.
கவனம் கொடுக்க வேண்டியதாக இருக்காது. ஆனால் ஏற்கனவே இருக்கும். ஏனென்றால் மேடையில்
இருக்கிறீர்கள் இல்லையா? மேலும் எப்பொழுதும் தன்னை பூஜைக்குரிய ஆத்மா என்று புரிந்து கொண்டீர்கள்
என்றால் பூஜைக்குரிய ஆத்மா என்றால் தூய்மையான ஆத்மா. ஒவ்வொரு கல்பத்திலும் பூஜைக்குரியவர்.
பூஜைக்குரியவர் என்று புரிந்து கொள்வதினால் எண்ணம் மற்றும் கனவும் எப்பொழுதும் தூய்மையாக இருக்கும்.
அந்த மாதிரி போதை இருக்கிறதா? பொதுவாக பெரும்பான்மையான சேவாதாரிகள் குமாரிகள். குமாரிகள்
இரட்டை குமாரிகள் ஆகி விட்டார்கள். பிரம்மா குமாரியாகவும் ஆகியிருக்கிறார்கள் மற்றும் குமாரியாகவும்
இருக்கிறார்கள். அப்படி எவ்வளவு மகானாக ஆகிவிட்டீர்கள். குமாரிகளுக்கு இப்பொழுது 84லிவது இறுதி
ஜென்மத்திலும் பாத பூஜை நடக்கிறது. அந்த அளவு தூய்மையாக ஆகியிருந்திருக்கிறீர்கள். அதனால் தான்
இந்த அளவு பூஜை நடக்கிறது. குமாரிகளை ஒருபொழுதும் தலைவணங்க விட மாட்டோம். குமாரிகளின்
சரணங்களில் அனைவரும் தலை வணங்குவார்கள். கால் பாதங்களைக் கழுவிக் குடிக்கிறார்கள். அப்படியானால்
அவர் எந்த குமாரிகள்? பிரம்மா குமாரிகள் தான் இல்லையா. அப்படி சேவாதாரிகள் நீங்கள் அந்த மாதிரி
உயர்ந்த ஆத்மாக்கள். யாருடைய பூஜை நடந்து கொண்டிருக்கிறது? உங்களுடைய பூஜை தான். பாடலும்
இருக்கிறது இல்லையா? ஒவ்வொரு வீட்டிலும் பூஜை நடக்கிறது. பூஜைக்குரியவராக ஆகுறீர்கள். எனவே
எங்களுடைய பூஜை நடக்கிறது என்று கூறுங்கள். பாப்தாதாவையும் பாருங்கள், நமஸ்காரம் செய்கிறார் இல்லையா.
எனவே அந்த அளவு பூஜைக்குரியவராக இருந்தீர்கள் என்றால் தான் தந்தையும் நமஸ்காரம் செய்கிறார்.
இதே நினைவு சொரூபத்தில் இருப்பதினால் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும். தன்னுடைய மற்றும்
சேவையின் அனைத்து தடைகளும் அழிந்து விடும். இந்த நினைவில் அனைவரின் விசேஷங்கள்
நிரம்பியிருக்கிறது. நல்லது.
பார்ட்டிகளுடன் அவ்யக்த பாப்தாதாவின் சந்திப்பு :
1. வாழ்க்கையின் அனேக பிரச்சனைகளுக்கான தீர்வு லி தீர்த்த ஸ்தானத்தின் நினைவு
பாக்கியத்தை உருவாக்குபவரின் பூமியில் வந்து சேர்வது என்ற இதுவும் மிகப்பெரிய பாக்கியம்.
இதுவொன்றும் ஏதோ காலியான ஸ்தானம் இல்லை, மகான் தீர்த்த ஸ்தானம். பக்தி மார்க்கத்தில் பொதுவாக
தீர்த்த ஸ்தானத்திற்குச் செல்வதினால் பாவம் அழிந்து விடுகிறது என்று நம்புகிறார்கள், ஆனால் எப்பொழுது
ஆகிறது, எப்படி ஆகிறது என்று தெரிந்திருக்கவில்லை. இந்த நேரம் நீங்கள் குழந்தைகள் இந்த மகான் தீர்த்த
ஸ்தானத்திற்கு வருவதினால் புண்ணிய ஆத்மா ஆகி விடுகிறோம் என்று அனுபவம் செய்கிறீர்கள். இந்த
தீர்த்த ஸ்தானத்தின் நினைவு வாழ்க்கையின் அனேக பிரச்சனைகளிலிருந்து கடந்து செல்ல வைத்து விடுகிறது.
இந்த நினைவு கூட ஒரு தாயத்தின் காரியம் செய்கிறது. எப்பொழுதெல்லாம் நினைவு செய்கிறீர்களோ அப்பொழுது
இங்கே உள்ளே சூழ்நிலையின் அமைதி மற்றும் சுகம் உங்கள் வாழ்க்கையில் வெளிப்பட்டு விடுகிறது.
அப்படி புண்ணிய ஆத்மா ஆகிவிட்டீர்கள் இல்லையா? இந்த பூமியில் வருவது கூட பாக்கியத்தின் அடையாளம்,
எனவே நீங்கள் மிகுந்த பாக்கியம் நிறைந்தவர்கள். இப்பொழுது பாக்கியசாலியாகவோ ஆகிவிட்டீர்கள். ஆனால்
சௌபாக்கியசாலி ஆவது மற்றும் பதமாபதம் பாக்கியசாலி ஆவது என்பது உங்கள் கையில் இருக்கிறது.
தந்தையோ பாக்கியசாலி ஆக்கிவிட்டார், இதே பாக்கியம் அவ்வப்பொழுது சகயோகம் கொடுத்துக் கொண்டே
இருக்கும். ஏதாவது விஷயம் என்றால் புத்தியால் மதுபன்னிற்கு வந்து சேர்ந்து விடுங்கள். பிறகு சுகம் மற்றும்
சாந்தியின் ஊஞ்சலில் ஆடும் அனுபவம் செய்வீர்கள். நல்லது.
(4/4)
28.08.2016
2. சுயதரிசன சக்கரதாரியின் அடையாளம் லி வெற்றி சொரூபம்
அனைவரும் தன்னை சுயதரிசன சக்கரதாரி என்று நினைக்கிறீர்களா? தந்தைக்கு எவ்வளவு மகிமை
இருக்கிறதோ அதே மகிமையின் சொரூபமாக ஆகியிருக்கிறீர்களா? எப்படி தந்தையின் ஒவ்வொரு காரியத்தையும்
சரித்திரத்தின் ரூபத்தில் இன்று வரை மகிமை பாடப்படுகிறது. அதே போல் உங்களுடைய ஒவ்வொரு காரியமும்
சரித்திரத்திற்குச் சமமாக நடந்து கொண்டிருக்கிறதா? அந்த மாதிரி சரித்திரவானாக (ஒழுக்கமானவர்)
ஆகியிருக்கிறீர்களா? எப்பொழுதாவது சாதாரண காரியம் நடப்பதில்லையே? யார் தந்தைக்குச் சமமாக சுயதரிசன
சக்கரதாரி ஆகியிருக்கிறார்களோ அவர்கள் மூலம் ஒருபொழுதும் சாதாரண காரியம் நடக்க முடியாது. என்ன
காரியம் செய்தாலும் அதில் வெற்றி அடங்கியிருக்கும். வெற்றி கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்ற இந்த
எண்ணமும் எழ முடியாது. வெற்றி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது என்ற நிச்சயம் இருக்கும். சுயதரிசன
சக்கரதாரி மாயாவை வென்றவராக இருப்பார். மாயாவை வென்றவராக இருக்கும் காரணத்தினால் வெற்றி
அடைபவராக இருப்பார். மேலும் யார் வெற்றி அடைபவராக இருப்பாரோ அவர் எப்பொழுதும் ஒவ்வொரு
அடியிலும் பதமாபதம்பதியாக இருப்பார். அந்த மாதிரி உங்களை பதமாபதம்பதி என்று அனுபவம் செய்கிறீர்களா?
21 ஜென்மங்கள் வரை இருக்கும் அளவிற்கு வருமானத்தை சேமித்து விட்டீர்களா? சூரிய வம்சத்தினர்
என்றால் 21 ஜென்மங்களுக்கு சேமிப்பு செய்பவர். எனவே எப்பொழுதும் ஒவ்வொரு விநாடியிலும் சேமித்துக்
கொண்டே இருங்கள். நல்லது.
3. சைத்தன்ய தீபாவளியின் தீபங்களின் கடமை லி இருளை ஒளிமயமாக ஆக்குவது
தன்னை எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும் தீபம் என்று நினைக்கிறீர்களா? நீங்கள் உலகின் தீபம்,
அழியாத தீபம் ஆவீர்கள். அதன் ஞாபகார்த்தமாகத் தான் இன்று வரையிலும் தீபாவளி கொண்டாடப்படுகிறது.
அப்படியானால் நான் தீபாவளியின் தீபம் என்ற இந்த நிச்சயம் மற்றும் போதை இருக்கிறதா? இதுவரையிலும்
உங்களுடைய மாலையை எவ்வளவு ஜபித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஏன் ஜபிக்கிறார்கள்? ஏனென்றால்
இருளை ஒளிமயமாக ஆக்குபவர்களாக ஆகியிருக்கிறீர்கள். தன்னை அந்த மாதிரி எப்பொழுதும் சுடர் விட்டுக்
கொண்டிருக்கும் தீபம் என்று அந்த மாதிரி அனுபவம் செய்யுங்கள். அணைந்து அணைந்து எரிபவர் அல்ல.
எவ்வளவு தான் புயல் வந்தாலும் ஆனால் எப்பொழுதும் ஒரே சீரான, இடைவிடாது ஜோதிக்கு சமமாக எரிந்து
கொண்டிருக்கும் தீபம். அந்த மாதிரி தீபங்களை உலகமும் வணங்குகிறது. மேலும் தந்தையும் அந்த மாதிரி
தீபங்களுடன் இருக்கிறார். அணைந்து அணைந்து எரிந்து கொண்டிருப்பவர்களுடன் இருப்பதில்லை. தந்தை
மாதிரி எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும் ஜோதி, அகண்ட ஜோதி, அமர ஜோதி அந்த மாதிரி குழந்தைகளும்
எப்பொழுதும் அமர ஜோதி. அமர ஜோதி ரூபத்திலும் உங்களுடைய நினைவுச் சின்னம் இருக்கிறது.
சைத்தன்யத்தில் அமர்ந்து கொண்டே தன்னுடைய அனைத்து ஜட நினைவுச் சின்னங்களைப் பார்த்துக்
கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அந்த மாதிரி உயர்ந்த ஆத்மாக்கள். நல்லது.
வரதானம் : உள்நோக்கு பார்வை உடையவராகி தன்னுடைய நேரம் மற்றும் எண்ணங்களின்
சேமிப்பு செய்யும் தடைகளை வென்றவர் ஆகுக.
ஏதாவது புதிய சக்திசாலியான கண்டுபிடிப்பை செய்கிறார்கள் என்றால் பூமிக்கு அடியில் செய்வார்கள்.
நீங்களும் எந்தளவு உள்நோக்குப்பார்வை உடையவராக அதாவது பூமிக்கு அடியில் இருப்பீர்களோ அந்த
அளவு வாயுமண்டலத்திலிருந்து பாதுகாப்பு ஆகிவிடும், சிந்தனை சக்தி அதிகரிக்கும். மேலும் மாயாவின்
தடைகளிலிருந்தும் பாதுகாப்பாகி விடுவீர்கள். வெளிமுகமாக வந்தும் உள்நோக்குமுகம், சிரித்த முகம்,
ஆகர்ஷணம் (ஈர்ப்பு) செய்பவராக இருங்கள், காரியம் செய்து கொண்டும் இந்த பயிற்சியை செய்தீர்கள்
என்றால் நேரம் மிச்சமாகி விடும். மேலும் வெற்றியும் அதிகமாக அனுபவம் செய்வீர்கள்.
சுலோகன்: நோயைக் கண்டு பயப்படாதீர்கள், அதற்கு மருந்து என்ற
பழத்தை உண்ணக் கொடுத்து விடை கொடுங்கள்.
TAMIL MURLI 15 TO 21 AUGUST - 2016
15
.08.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! உயிரை பாதுகாக்கக்கூடிய பிரானேஷ்வர் பாபா குழந்தைகளாகிய
உங்களுக்கு ஞானத்தின் இனிமையான முரளி கூறி உயிரைக் காப்பாற்றுவதற்காக
வந்திருக்கிறார்.
கேள்வி: எந்த ஒரு நிச்சயம் அதிர்ஷ்டசாலி குழந்தைகளுக்குத் தான் இருக்கிறது?
பதில்: நம்முடைய உயர்ந்த அதிர்ஷ்டத்தை ஏற்படுத்துவதற்காக சுயம் பாபா வந்திருக்கின்றார். பாபாவிட
மிருந்து நமக்கு பக்தியின் பலன் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. மாயை துண்டித்துள்ள சிறகுகளைக்
கொடுப்பதற்காகவும், தன்னுடன் திரும்ப அழைத்துச் செல்வதற்காகவும் பாபா வந்துள்ளார். இந்த நிச்சயம்
அதிர்ஷ்டசாலி குழந்தைகளுக்குத் தான் இருக்கின்றது.
பாட்டு : இன்று யார் வந்தது அதிகாலையில்......
ஓம்சாந்தி. அதிகாலையில் யார் வந்து முரளியை வாசிக்கிறார்கள். உலகம் முற்றிலும் காரிருளில் மூழ்கியிருக்
கின்றது. இப்பொழுது நீங்கள் ஞானக்கடல் பதீத பாவனர் பிரானேஷ்வர் பாபாவிடமிருந்து முரளியை கேட்டுக்
கொண்டு இருக்கின்றீர்கள். அவரே உயிரை பாதுகாக்கக்கூடிய ஈஸ்வர் ஆவார். ஈஸ்வரா இந்த துக்கத்திலிருந்து
காப்பாற்றுங்கள் என கூறுகிறார்கள் அல்லவா? அவர்கள் எல்லைக்கு உட்பட்ட உதவியைக் கேட்கிறார்கள்.
இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு எல்லையில்லாத உதவி கிடைக்கின்றது. ஏனென்றால் எல்லையற்ற
தந்தையல்லவா? ஆத்மா குப்தமாக (மறைவாக) இருக்கின்றது. பாபாவும் குப்தமாக இருக்கின்றார். என நீங்கள்
அறிகிறீர்கள். குழந்தைகளின் உடல் பிரத்யக்ஷமாக இருக்கும் பொழுது பாபாவும் பிரத்யக்ஷமாக இருக்கின்றார்.
ஆத்மா குப்தமாக இருக்கும் பொழுது பாபாவும் குப்தமாக இருக்கின்றார். நமக்கு எல்லையற்ற ஆஸ்தியைக்
கொடுப்பதற்காக பாபா வந்திருக்கிறார் என நீங்கள் அறிகிறீர்கள். அவருடைய ஸ்ரீமத் ஆகும். அனைத்து
சாஸ்திரங்களுக்கும் தாயான கீதை பிரசித்தமானது. ஆனால் அதில் பெயரை மட்டும் மாற்றி விட்டனர். ஸ்ரீமத்
பகவான் வாக்கு என நீங்கள் இப்பொழுது அறிகிறீர்கள் அல்லவா? கீழானவர்களை உயர்ந்தவராக மாற்றக்கூடியவர்
ஒரே ஒரு தந்தை என புரிந்து கொண்டீர்கள். அவரே நரனிலிருந்து நாராயணராக மாற்றுகின்றார். கதை கூட
சத்திய நாராயணன் கதையாகும். அமரக்கதை என்று பாடப்படுகின்றது. அமரபுரிக்கு அதிபதியாவதற்கு மற்றும்
நரனிலிருந்து நாராயணன் ஆவதற்குமாகும். விஷயம் ஒன்று தான். இது மரண உலகமாக இருக்கின்றது.
பாரதம் தான் அமர புரியாக இருந்தது. இது யாருக்கும் தெரியவில்லை. இங்கே கூட அமரர் பாபா பாரதவாசி
களுக்குக் கூறினார். ஒரு பார்வதி அல்லது ஒரு திரௌபதி கிடையாது. இதை நிறைய குழந்தைகள் கேட்டுக்
கொண்டு இருக்கின்றார்கள். சிவபாபா பிரம்மா மூலமாகக் கூறுகின்றார். நான் பிரம்மா மூலமாக இனிமையிலும்
இனிமையான குழந்தைகளுக்கு பாபா கூறுகின்றார். குழந்தைகள் நிச்சயமாக ஆத்ம அபிமானியாக மாற வேண்டும்
என பாபா கூறுகின்றார். பாபா தான் மாற்ற முடியும். உலகில் ஆத்ம ஞானம் உடைய மனிதர் ஒருவர் கூட
கிடையாது. ஆத்மாவின் ஞானமே இல்லை என்றால், பரம்பிதா பரமாத்மாவின் ஞானம் எப்படியிருக்கும்?
ஆத்மாவிலிருந்து பரமாத்மா என கூறுகிறார்கள். எவ்வளவு பெரிய தவறில் முழு உலகமும் மாட்டிக் கொண்டிருக்
கின்றது. இச்சமயம் மனிதர்களின் புத்தி எதற்கும் பயன்படவில்லை. தன்னுடைய அழிவிற்காக ஏற்பாடு செய்து
கொண்டு இருக்கின்றார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு இது ஒன்றும் புது விஷயம் இல்லை. நாடகத்தின்
படி அவர்களின் நடிப்பு இருக்கின்றது. நாடகத்தின் பந்தனத்தில் கட்டப்பட்டு இருக்கின்றனர். இன்று உலகில்
நிறைய சண்டை சச்சரவுகள் நடக்கின்றன. இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு வினாசகாலத்தில் பாபாவிடம்
அன்பான புத்தியுள்ளது. பாபாவிடம் விபரீத புத்தி உடையவர்களுக்கு அழிவு என்று பாடப்பட்டிருக்கின்றது.
இப்பொழுது இந்த உலகத்தை மாற்ற வேண்டும். உண்மையில் மகாபாரதப் போர் நடந்தது, பாபா இராஜயோகத்தைக்
கற்பித்தார் என அறிகிறீர்கள். சாஸ்திரங்களில் மொத்தமாக அழிந்ததாக எழுதப்பட்டிருக்கின்றது. ஆனால் மொத்தமாக
அழிவு நடக்காது. அப்படி என்றால் பிரளயம் ஆகிவிடும். மனிதர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். 5 தத்துவங்கள்
மட்டும் இருக்கும். இது போன்று நடக்காது. பிரளயம் நடந்து விட்டால் பிறகு மனிதர்கள் எங்கிருந்து வருவர்?
கிருஷ்ணர் கட்டைவிரலை சப்பிக் கொண்டு ஆல இலையில் வந்ததாகக் காண்பிக்கின்றனர். குழந்தை இப்படி
எவ்வாறு (நீரில்) வரமுடியும். சாஸ்திரங்களில் இது போன்ற விஷயங்களை எழுதி விட்டனர். கேட்கவே
வேண்டாம் ! இப்போது குமாரிகளாகிய உங்கள் மூலமாக இந்த வித்வான்கள், பீஷ்ம பிதா போன்றோர்களுக்கு
ஞான அம்பு போட வேண்டும். அவர்களும் இன்னும் போகப்போக வருவார்கள். எவ்வளவுக் கெவ்வளவு
நீங்கள் சேவையில் வேகம் கொடுக்கிறீர்களோ, பாபாவின் அறிமுகத்தை அனைவருக்கும் கொடுத்துக்
கொண்டேயிருக்கிறீர்களோ அவ்வளவு உங்களின் பிரபாவம் ஏற்படும். ஆம் தடைகளும் ஏற்படும் அசுர
சம்பிரதாயத்தின் இந்த ஞான யக்ஞத்தில் நிறைய தடைகள் வருகின்றன என்றும் பாடப்பட்டுள்ளது. நீங்கள்
கற்றுத் தர முடியாது. ஞானம் மற்றும் யோகத்தை பாபா தான் கற்பித்துக் கொண்டு இருக்கின்றார். சத்கதி
15.08.2016
(2/4)
அளிக்கும் வள்ளல் ஒரே ஒரு பாபா ஆவார். அவரே அழுக்கானவர்களை தூய்மையாக மாற்றுகின்றார். எனவே
நிச்சயம் அழுக்கானவர்களுக்குத் தான் ஞானம் கொடுப்பார் இல்லையா! பாபாவை சர்வவியாபி என்று ஏற்றுக்கொள்ள
முடியுமா? நாம் தங்கபுத்தி உள்ளவராகி தங்க உலகத்திற்கு அதிபதியாக மாறுகின்றோம் என குழந்தைகள்
புரிந்து கொள்கிறீர்கள். மனிதர்கள் எத்தனை கோவில்களைக் கட்டியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யார்?
என்ன செய்துவிட்டு போனார்கள்? பொருளை புரிந்து கொள்ளவில்லை. பாரஸ்நாத் கோவில் கூட இருக்கின்றது.
பாரதமே பாரஸ் புரியாக இருந்தது. தங்கம், வைரம், வைடூரியங்களின் மாளிகை இருந்தது. நேற்றைய விஷயமாகும்.
அவர்கள் ஒரு சத்யுகத்திற்கு மட்டும் லட்சக்கணக்கான வருடங்கள் என்று கூறிவிட்டனர். முழு நாடகமே 5000
வருடங்கள் தான் என்று பாபா கூறுகின்றார். ஆகவே தான் இன்று பாரதம் இப்படி ஆகியிருக்கின்றது.
நேற்றைய பாரதம் எப்படி இருந்தது என கூறப்படுகிறது. லட்சக்கணக்கான வருடங்கள் என்றால் யாருக்கும்
நினைவு இருக்காது. குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது நினைவு வந்திருக்கிறது. 5000 வருடத்தின்
விஷயங்களை அறிகிறீர்கள். யோகத்தில் அமருங்கள் என பாபா கூறுகின்றார். தன்னை ஆத்மா என உணர்ந்து
தந்தையை நினையுங்கள். இது ஞானம் அல்லவா ! அவர்களோ ஹடயோகிகள் ஆவர். கால் மீது கால் போட்டு
அமர்கின்றனர். என்னென்ன செய்கின்றனர். தாய்மார்களாகிய நீங்கள் அவ்வாறு செய்ய முடியாது. உட்காரவும்
முடியாது. எவ்வளவு நிறைய படங்கள் பக்தி மார்க்கத்தில் உள்ளன. இனிமையான குழந்தைகளே ! நீங்கள்
இதையெல்லாம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என பாபா கூறுகின்றார். பள்ளிக்கூடத்தில் மாணவர்கள்
முறைப்படி உட்காருகிறார்கள். பாபா அதையும் கூறவில்லை எப்படி வேண்டுமோ அப்படி அமருங்கள். உட்கார்ந்து
களைத்து போய்விட்டால், சரி படுத்துக் கொள்ளுங்கள். பாபா எந்த விஷயத்தையும் தடுக்கவில்லை. இது
முற்றிலும் எளிதாகப் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். இதில் கஷ்டப்படக்கூடிய விஷயம் எதுவும்
இல்லை. எவ்வளவு தான் நோயாக இருந்தாலும், கேட்டுக் கொண்டே சிவபாபாவின் நினைவில் இருந்து
கொண்டே உயிர் உடலை விட்டுப் போக நேரிடலாம். கங்கை நீர் வாயில்..... அப்போது உயிர் உடலிலிருந்து
போகட்டும் என பாடப் படுகிறதல்லவா? அது அனைத்தும் பக்தி மார்கத்தின் விஷயமாகும். இது உண்மையில்
ஞான அமிர்தத்தின் விஷயம் ஆகும். உண்மையில் உயிர் இப்படித்தான் உடலில் இருந்து போக வேண்டும்
என நீங்கள் அறிகிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் வருகிறீர்கள் என்றால், என்னை விட்டு விட்டுப் போகிறீர்கள்.
நானோ குழந்தைகளாகிய உங்களை உடன் அழைத்துச் செல்கிறேன் என பாபா கூறுகின்றார். குழந்தைகளாகிய
உங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக நான் வந்திருக்கின்றேன். உங்களுக்கு உங்கள் வீட்டைப்
பற்றியும் தெரியவில்û, ஆத்மா பற்றியும் தெரியவில்லை. மாயா முற்றிலும் சிறகுகளை துண்டித்து விட்டிருக்கிறது.
இதனால் ஆத்மா பறக்க முடியவில்லை. ஏனென்றால், தமோபிரதானமாக இருக்கின்றது. எது வரை சதோபிர
தானமாக ஆகவில்லையோ அது வரை சாந்தி தாமத்திற்கு எப்படிப் போக முடியும். நாடகத்தின் படி அனைவரும்
தமோபிரதானமாகத்தான் வேண்டும் என்றும் அறிகிறீர்கள். இச்சமயம் முழு மரமும் இற்றுப் போய்விட்டது.
இங்கே யாருக்கும் சதோபிரதான நிலை என்று கூற முடியாது. இங்கே ஆத்மா தூய்மையாகிவிட்டால் இங்கேயே
இருக்க முடியாது. ஒரேயடியாக ஓடிப் போய்விடும். அனைவரும் முக்திக்காக பக்தி செய்கிறார்கள். ஆனால்
யாரும் திரும்பப் போக முடியாது. சட்டம் இல்லை. பாபா இந்த ரகசியங்கள் அனைத்தையும் தாரணை
செய்வதற்காக புரிய வைக்கின்றார். இருப்பினும் முக்கியமான விஷயம் பாபாவை நினைத்தல், சுயதர்ஷன
சக்கரதாரி ஆகுதல் ஆகும். விதையை நினைவு செய்வதால் முழு மரமும் புத்தியில் நினைவிற்கு வந்துவிடும்.
நீங்கள் ஒரு நொடியில் அனைத்தையும் தெரிந்துகொள்கிறீர்கள். மனித சிருஷ்டியின் விதை ரூபம் ஒரு
தந்தையே என்பது யாருக்கும் தெரியவில்லை. கிருஷ்ணர் பகவான் கிடையாது. கிருஷ்ணரை சியாம் சுந்தர்
என்கிறார்கள். ஏதோ நாகப்பாம்பு தீண்டியது, அதனால் கருப்பாகி விட்டார் என்பது கிடையாது. காமச்சிதையில்
அமருவதால் மனிதர்கள் கருப்பாகின்றனர். இராமரையும் கருப்பாக காட்டுகின்றனர். சரி அவரை எது தீண்டியது,
கருப்பாகிவிட்டார். எதையும் புரிந்து கொள்ளவில்லை. இருப்பினும் யாருடைய அதிர்ஷ்டத்தில் இருக்கிறதோ,
நிச்சயம் இருக்கின்றதோ அவர்கள் பாபாவிடமிருந்து நிச்சயம் ஆஸ்தியை அடைவார்கள் ! நிச்சயம் இல்லை
என்றால் ஒரு போதும் புரிந்து கொள்ள மாட்டார்கள். அதிர்ஷ்டத்தில் இல்லை என்றால் என்ன முயற்சி
செய்வார்கள்? அதிஷ்டத்தில் இல்லை என்றால் அவர்கள் அமர்ந்து இருந்தாலும் எதுவும் புரியாதது போன்ளே
இருக்கும். எல்லையற்ற ஆஸ்தியை வழங்குவதற்காக பாபா வந்திருக்கிறார் என்ற நிச்சயம் கூட இருக்கும். ஒரு
புது மனிதன் மருத்துவ கல்லூரியில் சென்று அமர்ந்தால் என்ன புரியும், எதுவும் புரியாது. இங்கும் அவ்வாறு
வந்து அமருகின்றார்கள். இந்த அழிவற்ற ஞானம் ஒரு போதும் அழிவதில்லை. பிறகு அவர்கள் வந்து என்ன
செய்வார்கள்? இராஜதானி உருவாகின்றது என்றால் வேலைக்காரர்கள், பிரஜைகள், பிரஜைகளுக்கும்
வேலைக்காரர்கள் அனைவரும் வேண்டும் அல்லவா? இன்னும் போகப்போக சிறிது படிக்க முயற்சி செய்வார்கள்.
ஆனால் கஷ்டமாக இருக்கும் அச்சமயம் நிறைய சண்டைகள் நடக்கும். ஒவ்வொரு நாளும் புயல் அதிகரித்துக்
கொண்டே போகிறது. இத்தனை சென்டர்கள் இருக்கின்றது. பலர் வந்து நன்கு புரிந்தும் கொள்கிறார்கள்.
பிரம்மா மூலமாக ஸ்தாபனை என்றும் எழுதப்பட்டிருக்கின்றது. அழிவும் ஏற்படத்தான் வேண்டும். பிறப்பதே
15.08.2016
(3/4)
குறையட்டும் என்கிறார்கள். ஆனால் மரத்தின் வளர்ச்சி நடந்து கொண்டேயிருக்கும். எதுவரை பாபா இருக்கிறாரோ
அது வரை அனைத்து தர்மத்தின் ஆத்மாக்களும் இங்கே வந்து தான் ஆகவேண்டும். எப்பொழுது போகக்கூடிய
நேரம் வந்துவிடுமோ அப்போது ஆத்மாக்கள் வருவது நின்றுவிடும். இப்போதோ அனைவரும் வந்து தான்
ஆக வேண்டும். ஆனால் இந்த விஷயங்களை யாரும் புரிந்து கொள்ளவில்லை. பக்தர்களின் ரட்ஷகன்
பகவான் என்று கூறுகிறார்கள். நிச்சயம் பக்தர்களுக்கு ஆபத்து வருகிறது. இராவண இராஜ்யத்தில் முற்றிலும்
அனைவரும் பாவாத்மா ஆகியிருக்கின்றார்கள். கலியுக கடைசியில் இராவண இராஜ்யமாக இருக்கின்றது.
சத்யுக ஆரம்பத்தில் இராம இராஜ்யமாக இருக்கிறது. இச்சமயம் அனைவரும் அசுர இராவண சம்பிரதாயத்தினர்
அல்லவா? இன்னார் சொர்க்க வாசி ஆகிவிட்டார் என்கிறார்கள். அதன் பொருள் இது நரகம் அல்லவா !
சொர்க்கவாசி ஆகிவிட்டார் என்றால் நல்ல பெயராகும். அப்படியென்றால் இங்கே என்னவாக இருந்தனர்.
நிச்சயம் நரகவாசியாக இருந்தனர். நாம் நரகவாசியாக இருக்கின்றோம் என்பதையும் புரிந்து கொள்ளவில்லை.
இப்பொழுது பாபாதான் வந்து சொர்க்கவாசியாக மாற்றுகின்றார் என்று நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். சொர்க்கத்தின்
இறை தந்தை என்று பாடப்பட்டுள்ளது. அவரே வந்து சொர்க்கத்தை உருவாக்குகின்றார். பதீத பாவனர் சீதா
ராம், நாங்கள் அழுக்காக இருக்கின்றோம். தூய்மையாக மாற்றக்கூடியவர் தாங்களே என்று அனைவரும் பாடு
கின்றார்கள். அவர்கள் அனைவரும் பக்தி மார்க்கத்தின் சீதைகள் ஆவர். பாபா இராமர் ஆவார். யாருக்காவது
நேரடியாக சொன்னால் ஏற்றுக் கொள்வதில்லை. இராமரை அழைக்கிறார்கள். இப்பொழுது குழந்தைகளாகிய
உங்களுக்கு பாபா மூன்றாவது கண்ணைக் கொடுத்திருக்கின்றார். நீங்கள் தனி உலகத்தைச் சார்ந்தவர்கள்
ஆகிவிட்டீர்கள்.
இப்பொழுது அனைவரும் தமோபிரதானமாக நிச்சயம் ஆகவேண்டும். அப்பொழுது தான் பாபா வந்து
சதோபிரதானமாக மாற்றுவார் என பாபா புரிய வைக்கின்றார். பாபா எவ்வளவு நன்றாகப் புரிய வைக்கின்றார்.
குழந்தைகளாகிய நீங்கள் தங்களின் சேவை செய்தாலும் கூட தந்தையை நினைக்க வேண்டும் என்ற ஒரு
விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தூய்மையாவதற்கு வேறு எந்த வழியும் கூறமுடியாது.
அனைவருக்கும் ஆன்மீக சர்ஜன் ஒருவரே அவரே வந்து ஆத்மாக்களுக்கு ஊசி போடுகின்றார். ஏனென்றால்,
ஆத்மா தான் அழுக்காகியிருக்கின்றது. பாபாவிற்கு அழிவற்ற சர்ஜன் என கூறப்படுகிறது. ஆத்மா அழிவற்றது.
பரமாத்மா பாபாவும் அழிவற்றவர். இப்பொழுது ஆத்மா தூய்மையிலிருந்து அழுக்காகியிருக்கிறது. அதற்கு ஊசி
போட வேண்டும். குழந்தைகளே ! தன்னை ஆத்மா என்று நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். தங்களுடைய
தந்தையை நினையுங்கள் என பாபா கூறுகின்றார். புத்தியோகத்தை மேலே கொண்டு சென்றால், இனிமையான
உலகத்திற்குச் சென்றுவிடலாம். நாம் இப்போது நம்முடைய இனிமையான அமைதியான இல்லத்திற்குப் போக
வேண்டும் என உங்களுடைய புத்தியில் இருக்கின்றது. நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்குத் தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை
வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம் :
1. ஞானம் மற்றும் யோகத்தினால் புத்தியை தங்கமாக மாற்ற வேண்டும். எவ்வளவு தான்
நோயாக இருந்தாலும், துன்பமாக இருந்தாலும் அப்போதும் ஒரு தந்தையின் நினைவு
இருக்கட்டும்.
2. தங்களின் உயர்ந்த அதிஷ்டத்தை உருவாக்கிக் கொள்ள முழுமையான நிச்சயபுத்தி
உடையவராக வேண்டும். புத்தி யோகத்தை தங்களின் இனிமையான இல்லத்தோடு இணைக்க
வேண்டும்.
வரதானம் : எண்ணம், விருத்தி மற்றும் நினைவில் இருந்து வீணானவைகளை நீக்கிவிடக் கூடிய
உண்மையான பிராமணர் சம்பூர்ண தூய்மையானவர் ஆகுக !
தங்களின் எண்ணம், விருத்தி மற்றும் நினைவை சோதியுங்கள் லி ஏதாவது தவறு நடந்து விட்டது,
பச்சாதாபப்பட்டீர், மன்னிப்பு கேட்டீர், விடுபட்டாயிற்று என்று இல்லையா? எவ்வளவு தான் மன்னிப்பு கேட்டாலும்
செய்த பாவம் அல்லது வீண்கர்மத்தின் அடையாளம் அழிவதில்லை. பதிவேடு சுத்தமாக தெளிவாக இருக்காது.
இப்படிப்பட்ட பழக்கத்தை தன்னுடையதாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். ஆனால் நான் சம்பூர்ண பவித்திர பிராமணன்
15.08.2016
(4/4)
என்பது நினைவில் இருக்கட்டும். அசுத்தமானது எண்ணம், விருத்தி அல்லது நினைவிலும் தொட முடியாது.
இதற்காக ஒவ்வொரு அடியிலும் எச்சரிக்கையோடு இருங்கள்.
சுலோகன் : பாபாவின் துணையில் இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டால்
ஒரு போதும் மனச் சோர்வு ஏற்படாது.
(1/4)
16
.08.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! விசால புத்தி உடையவராக ஆகி, பெரியவர்களின்
அபிப்ராயங்களைப் பெற்று, அநேக ஆத்மாக்களுக்கு நன்மை செய்யுங்கள். அவர்களிடம்
மண்டபம் ஆகியவை வாங்கி, நிறைய கண்காட்சிகளை ஏற்பாடு செய்யுங்கள்.
கேள்வி: இப்பொழுது உங்களுக்கு வந்துள்ள எந்த ஒரு ஸ்மிருதியை (எண்ணம்) நினைவு செய்து
கொண்டே இருந்தீர்கள் என்றால் ஒரு பொழுதும் துக்கம் அடைய மாட்டீர்கள்?
பதில்: நாம் பூஜைக்குரிய இராஜாவாக இருந்தோம். பிறகு ஏழையாக ஆனோம் என்பது இப்பொழுது
நினைவிற்கு வந்துள்ளது. இப்பொழுது மீண்டும் பாபா நம்மை இராஜாவாக ஆக்கிக் கொண்டிருக்கிறார். பாபா
இப்பொழுது நமக்கு முழு உலகத்தின் செய்தியைக் கூறுகிறார். நாம் உலகத்தின் சரித்திரம் மற்றும் பூகோளத்தை
அறிந்து விட்டுள்ளோம். இதே ஸ்மிருதிகளை நினைவு செய்துக் கொண்டே இருந்தீர்கள் என்றால், ஒரு
பொழுதும் தங்களை துக்கமானவர்களாக நினைக்க மாட்டீர்கள். எப்பொழுதும் குμயாக இருப்பீர்கள்.
பாடல்: கண்ணில்லாதவர்க்கு வழி கூறுங்கள் பிரபுவே..
ஓம் சாந்தி. இனிமையிலும் இனிமையான அருமையான ஆன்மீகக் குழந்தைகள் பாட்டைக் கேட்டீர்கள்.
தந்தையை சந்திப்பது அல்லது தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெறுவது மிகவும் சுலபம் என்பதை குழந்தைகள்
புரிந்துள்ளார்கள். தந்தையிடமிருந்து ஒரு நொடியில் ஜீவன் முக்தியின் ஆஸ்தி கிடைக்கிறது. ஜீவன் முக்தி
என்றால் சுகம், சாந்தி, செல்வம் ஆகியவற்றின் ஆஸ்தி. இப்பொழுது ஜீவன் முக்தி மற்றும் ஜீவன் பந்தனம்
என்ற இரு வார்த்தைகள் உள்ளன. இச்சமயம் பக்தி மார்க்கம் மற்றும் இராவண இராஜ்யத்தின் காரணமாக
எல்லோரும் ஜீவன் பந்தனத்தில் உள்ளார்கள் என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். தந்தை வந்து பந்தனத்
திலிருந்து விடுவிக்கிறார். ஆஸ்தி அளிக்கிறார். எப்படி பையன் பிறந்த உடனேயே வாரிசு பிறந்து விட்டான்
என்று தாய், தந்தை, நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் புரிந்து கொண்டு விடுகிறார்கள். எப்படி இது புரிந்து
கொள்வது சுலபமோ, அதே போல அதுவும் சுலபம் ஆகும். பாபா முந்தைய கல்பத்தைப் போல நீங்கள்
எங்களுக்கு வந்து கிடைத்துள்ளீர்கள் என்று குழந்தைகள் கூறுகிறார்கள். உங்கள் மூலமாகத் தான் சுலபமாக
ஆஸ்தி பெறுவதற்கான வழி கிடைத்துள்ளது. புதிய சிருஷ்டியின் படைப்புக்கர்த்தா பகவான் தான் ஆவார்
என்பதையோ ஒவ்வொவரும் அறிந்துள்ளார்கள். அவர் நம்மை அலைவதிலிருந்து காப்பாற்றுகிறார். நேற்றைக்கு
பக்தி செய்து கொண்டிருந்தோம். இன்றைக்கு தந்தையிடமிருந்து எளிய ஞானம் மற்றும் இராஜயோகத்தின் வழி
கிடைத்துள்ளது. இரண்டு தந்தை இருக்கிறார்கள் என்று நாங்கள் பி.கே. மூலமாக கேட்டோம் என்று குழந்தைகள்
தங்கள் அனுபவத்தைக் கூறுகிறார்கள். இரண்டு தந்தை இருக்கிறார்கள் என்பதை உங்களைத் தவிர வேறு
யாரும் வாயால் கூற முடியாது. உங்களுடைய ஒவ்வொரு விஷயமும் அதிசயமானதாகும். யார் இந்த
இடத்தைச் சேர்ந்தவர்களோ அவர்களுக்கு சட்டென்று நினைவிற்கு வந்து விடும். இப்பொழுது நினைவிற்கு
வருகிறது. ஆம், நினைவிற்கு கொண்டு வந்தவர்களைக் கூட மாயை ஏதாவதொரு நேரத்தில் பலமாக ஓங்கி
அறைந்து மறக்க வைத்து விடுகிறது. இதில் குழந்தைகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தந்தை
நினைவூட்டியே இருக்கிறார். தூய்மையின் கங்கணம் கூட முழுமையாக கட்ட வேண்டும். ரட்சாபந்தன் பற்றிய
இரகசியம் என்ன என்பதையும் இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். யார் இந்த உறுதியை எடுக்குமாறு
செய்வித்தது? காமமோ மகா எதிரி ஆகும். நான் ஒரு பொழுதும் பதீதமாக ஆக மாட்டேன் என்று என்னிடம்
உறுதி எடுங்கள். மேலும் என்னை நினைவு செய்துக் கொண்டே இருந்தீர்கள் என்றால், அரை கல்பத்தின்
பாவங்கள் எரிந்து முடிந்து போய் விடும். தந்தை உத்தரவாதம் அளிக்கிறார். ஆனால் இதுவோ குழந்தைகள்
புரிந்து கொண்டும் இருக்கிறார்கள் லி தந்தை உத்திரவாதம் அளிக்கிறார். இந்த விஷயம் சரி தானே? பொற்கொல்லன்
கூட நான் பழைய நகையை புதியதாக ஆக்குவேன் என்று உத்தவரவாதம் என்ன கொடுப்பார்? அவருடைய
வேலையே இது தான். நெருப்பில் போடுவதால் அவசியம் அது உண்மையான தங்கமாக ஆகியே விடும்.
எனவே ஆத்மாவில் கூட துரு படிந்துள்ளது என்று தந்தை புரிய வைக்கிறார். எப்படி சதோ ரஜோ தமோவில்
வருகிறீர்கள்? இது மிகவும் சுலபமானதாகும். படங்கள் கூட எதற்காக அமைக்கப்பட்டுள்ளன என்றால், அதன்
மூலம் சுலபமாகப் புரிய வைக்க முடியும். பல்கலைக்கழகம் கல்லூரிகள் ஆகிய இடங்களில் கூட அநேக
விதமான வரைபடங்கள் இருக்கும் அல்லவா? உங்களுடையதும் இது வரைபடம் ஆகும். நீங்கள் நல்ல
முறையில் எவரொருவருக்கும் புரிய வைக்கலாம். ஞானக் கடல் பதீத பாவன தந்தை தான் வந்து இந்த
வழியைக் கூறுகிறார். வேறு யாருமே பதீதர்களை பாவனமாக ஆக்க முடியாது. கண்ணில்லாத துக்கமுடைய
மனிதர்களாக இருக்கிறார்கள். முதல் இரண்டு யுகங்களில் துக்கம் இருப்பதில்லை என்பதை குழந்தைகளாகிய
நீங்கள் அறிந்துள்ளீர்கள். பக்தியும் இருப்பதில்லை. அது இருப்பதே சொர்க்கமாக ! பாரதத்தினுடைய இந்த
நேரத்தின் மனிதர்கள் மற்றும் பாரதத்தினுடைய பழைமையான மனிதர்களுக்கிடையே வேற்றுமை உள்ளது
16.08.2016
(2/4)
அல்லவா? ஆனால் இதை வேறு யாரும் புரிந்து கொள்வதில்லை. எவ்வளவு பூஜை நடக்கிறது. எவ்வளவுக்
கெவ்வளவு யார் செல்வந்தராக இருக்கிறார்களோ அந்த அளவிற்கு தேவி தேவதைகளுக்கு நல்ல நகைகள்
அணிவிக்கிறார்கள். பாபா சுயம் அனுபவம் உடையவர் ஆவார். மும்பையில் இருக்கும் இலட்சுமி நாராயணரின்
கோவிலின் டிரஸ்டி இலட்சுமி நாராயணருக்காக வைரங்களின் மாலை தயார் செய்வித்திருந்தார். பாபாவிற்கு
அந்த டிரஸ்டியின் பெயர் கூட நினைவிருக்கிறது. முதலில் சிவ பாபாவின் கோவில் கட்டினார். பின் நன்றாக
அலங்காரம் செய்தார். பிறகு தேவதைகளினுடையதை அமைத்தார். ஆக, இலட்சுமி நாராயணர் ஆகியோருக்கும்
எவ்வளவு நகைகள் அணிவித்தார். அச்சமயம் எவ்வளவு செல்வம் இருந்திருக்கக் கூடும். கஜினி முகம்மது
எவ்வளவு ஒட்டகங்களில் நிரப்பிக் கொண்டு சென்று விட்டார் . பாரதத்தில் எவ்வளவு ஏராளமான செல்வம்
இருந்தது. இப்பொழுது நீங்கள் சரியான முறையில் புரிந்துள்ளீர்கள். நமது பாரதம் என்னவாக இருந்தது. நமது
பாரதத்தில் குபேரரின் கஜானா இருந்தது. வைரம் வைடூரியங்களின் கோவில்கள் அமைத்துக் கொண்டிருந்தனர்.
இப்பொழுது அந்த பொருட்கள் இல்லை. எல்லாமே கொள்ளையடித்துக் கொண்டு போய் விட்டார்கள். இப்பொழுதோ
என்ன நிலைமை ஆகிவிட்டது.
நீங்கள் தான் பூஜிக்கத்தக்க செல்வந்தர்களாக இருந்தீர்கள். பிறகு நீங்களே 84 பிறவிகள் எடுத்து முழுமையாக
ஏழையாகி உள்ளீர்கள். இப்பேர்ப்பட்ட விஷயங்களை அடிக்கடி நினைவு செய்ய வேண்டும். அப்பொழுது ஒரு
பொழுதும் நீங்கள் தங்களை துக்கமுடையவர்களாக நினைக்க மாட்டீர்கள். நாம் பாபாவிடம் என்ன எடுத்துக்
கொண்டிருக்கிறோம் என்று மனதில் நினைத்துக் கொண்டே இருப்பீர்கள். பாபா வந்து நமக்கு முழு உலகத்தின்
சமாச்சாரத்தைக் கூறுகிறார். இந்த உலகத்தின் சரித்திரம் பூகோளம் பற்றி யாருக்குமே தெரியாது. முதலில் ஒரு
தர்மம், ஒரு இராஜ்யம், ஒரே வழி, ஒரு பாஷை இருந்தன என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். எல்லோரும்
சுகமுடையவர்களாக இருந்தார்கள். பின்னால் இது போல தங்களுக்குள் சண்டையிட முற்பட்டார்கள் மற்றும்
பாரதம் துண்டு துண்டாக ஆகியது. முதலில் அவ்வாறு இருக்கவில்லை. அங்கு எந்த ஒரு துக்கமும் இருக்க
வில்லை. நோய் நொடியின் பெயர் அடையாளமே இருக்கவில்லை. அதன் பெயரே சொர்க்கம் என்பதாகும்.
உங்களுக்கு தங்களது நினைவு வந்து விட்டுள்ளது. உண்மையில் கல்ப கல்பமாக நமக்கு மறதி ஆகிறது.
பிறகு ஸ்மிருதியில் வருகிறது. படைப்பவர் மற்றும் படைப்பை மறந்து விட்டது தான் முதலில் ஏற்பட்ட ஒரே
தவறாகும். இப்பொழுது நீங்கள் முதல், இடை, கடையை அறிந்துள்ளீர்கள். சத்யுகத்தில் கூட இந்த ஞானம்
இருக்காது. பின் பரம்பரையாக எப்படி நடக்க முடியும். இச்சமயத்தில் முக்கியமாக ராஜாக்கள் தான் இருப்பார்கள்.
ரிμ முனிவர்கள் இருப்பார்களா என்ன? அவர்கள் துவாபரத்திலிருந்து வருகிறார்கள். அவர்கள் இராஜாக்களின்
ஆதாரத்தில் நடக்கிறார்கள். எங்களுக்கு படைப்பவர் மற்றும் படைப்பு பற்றி தெரியாது என்று கூறுகிறார்கள்.
சுயம் இந்த இராஜாக்களுக்குக் கூட தெரியாது. இந்த உலகத்தில் யாருக்குமே இந்த ஞானம் பற்றித் தெரியாது.
இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அறிவாளியாகி உள்ளீர்கள். இலட்சுமி நாராயணரின் கோவிலை அமைப்பவர்
களுக்கு நீங்கள் எழுதலாம். இத்தனை இலட்சக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து கோவில் கட்டியுள்ளீர்கள்.
ஆனால் அவர்களது வாழ்க்கைச் சரித்திரம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இவர்கள் இராஜ்யத்தை எப்படி
அடைந்தார்கள்? பிறகு எங்கு சென்று விட்டார்கள்? இப்பொழுது எங்கே இருக்கிறார்கள்? நாங்கள் உங்களுக்கு
எல்லா இரகசியங்களையும் கூற முடியும், இது போல அவர்களுக்கு நீங்கள் எழுதலாம். குழந்தைகளாகிய
நீங்களோ ஒவ்வொருவருடைய வாழ்க்கை சரித்திரத்தையும் அறிந்துள்ளீர்கள். எனவே ஏன் எழுதக் கூடாது?
பனாரஸில் சிவனின் கோவில் எவ்வளவு பெரியதாக உள்ளது. அங்கு கூட (டிரஸ்டிகள்) தர்மகர்த்தாக்கள்
இருப்பார்கள். அது போல பெரியவர்களுக்குப் புரிய வைப்பதற்கான முயற்சி செய்ய வேண்டும். பெரிய
மனிதர்கள் புரிந்து கொண்டு விட்டார்கள் என்றால், அவர்களுடைய சப்தம் நிறைய ஆகி விடும். ஏழைகள்
சட்டென்று கேட்டுக் கொண்டு விடுகிறார்கள். பெரியவர்களினுடைய உதவியைப் பெற வேண்டும்.
அபிப்பிராயங்கள் கூட பெரியவர்களினுடையதை எழுதுமாறு செய்விக்க வேண்டும். ஏனெனில், அவர்களுடைய
குரல் கூட உதவி செய்யும். உண்மையில் அவர்கள் எவ்வளவு வேண்டுமோ, அந்த அளவிற்கு சப்தம் செய்வ
தில்லை (விளம்பரப்படுத்துவது இல்லை). நீங்கள் ஜனாதிபதிக்குக் கூட புரிய வைக்கிறீர்கள். நன்றாக உள்ளது
என்று கூறவும் செய்கிறார்கள். முதல் மந்திரி, ஆளுனர் ஆகியோர் திறந்து வைக்கிறார்கள். இந்த பி.கே.க்களோ
இறைவனை சந்திப்பதற்கான மிகவும் நல்ல சுலபமான வழியைக் கூறுகிறார்கள் என்று எழுதுகிறார்கள். ஆனால்
இறைவன் என்றால் என்ன பொருள் லி இது எதுவுமே புரியாமல் இருக்கிறார்கள். அந்த நேரத்தில் மட்டும் வழி
மிகவும் நன்றாக உள்ளது என்று கூறுகிறார்கள். அமைதி கிடைப்பதற்கான வழி நன்றாக உள்ளது. ஆனால்
அவர்களோ புரியாமல் உள்ளார்கள்.
பாபா மிக பெரியவர்களுக்கு புரிய வைப்பதற்காகக் கூட கூறுகிறார். மிகப் பெரிய மனிதர்களிடமிருந்து
பெரியப் பெரிய பிரசித்தமான மண்டபங்களை வாங்கிக் கொள்ளுங்கள். நாங்கள் அனைத்து மனிதர்களின்
நன்மைக்காக இந்த கண்காட்சியை எப்பொழுதிற்குமாக வைக்க விரும்புகிறோம் என்று கூறுங்கள். விளம்பரம்
16.08.2016
(3/4)
மட்டுமே செய்தால் போதும். இது போல 50 அல்லது 100 மண்டபங்கள் எடுக்க வேண்டும். பாரதமோ மிகப்
பெரியதாகும் அல்லவா? ஒவ்வொரு நகரத்திலும் 10லி12 மண்டபங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். இத்தனை
மண்டபங்களில் கண்காட்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்று பத்திரிக்கைகளில் வெளிப்பட வேண்டும்.
யாருக்குப் புரிந்து கொள்ள வேண்டும் என்று இருக்கிறதோ அவர்கள் வந்து புரிந்து கொள்ளட்டும். பின்
எத்தனை பேருக்கு நன்மை ஆகி விடும். குழந்தைகள் மிகவுமே பரந்த புத்தி உடையவர்களாக ஆக வேண்டும்.
குழந்தைகள் சேவை செய்ய வேண்டும் அல்லவா? கண்காட்சிகளை மிகவும் விமரிசையாக செய்யுங்கள் என்று
தந்தை எல்லா குழந்தைகளுக்கும் கூறுகிறார். பாபா ஏற்பாடு செய்வித்துக் கொண்டிருக்கிறார். குழந்தைகள்
முயற்சி செய்ய வேண்டும். இவை எல்லாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும். பகவான்
வருகிறார். பிரஜாபிதா பிரம்மா மூலமாக பிரஜைகளைப் படைக்கிறார். எனவே அவசியம் எவ்வளவு பிராமணர்களைப்
படைத்திருக்கக் கூடும். இப்பொழுது மீண்டும் படைத்துக் கொண்டிருக்கிறார். எத்தனை பிராமணர்கள், பிராமணிகள்
இருக்கிறார்கள். பாபா இந்த பிராமண தர்மத்தை சங்கமத்தில் படைக்கிறார். நீங்கள் நடைமுறையில் பார்த்துக்
கொண்டிருக்கிறீர்கள் மற்றும் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். இந்த விஷயங்கள் எந்த சாஸ்திரங்களிலும் இல்லை.
பதீத உலகத்தை பாவனமாக ஆக்க வேண்டி வரும் பொழுதே தந்தை வருகிறார் என்பதை குழந்தைகளாகிய
நீங்கள் புரிந்துள்ளீர்கள். பரமாத்மா பிரஜாபிதா பிரம்மா மூலமாகத் தான் படைப்பை படைக்கிறார் என்பதையும்
அறிந்துள்ளீர்கள். ஆனால் எப்பொழுது படைக்கிறார் என்பதை புரியாமல் உள்ளார்கள். ஏதோ புது படைப்பை
படைத்திருக்கக் கூடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். பிரம்மாவையோ சூட்சுமவதனத்தில் இருப்பதாக
நினைக்கிறார்கள். பிரஜாபிதா பிரம்மாவோ இங்கே இருக்கிறார் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள்.
நீங்கள் சூட்சுமவதனத்தில் செல்கிறீர்கள். தூய்மையாக ஆகி பின்னர் ஃபரிஷ்தா ஆகி விடுகிறீர்கள். சாட்சாத்காரம்
(காட்சி பார்த்தல்) செய்கிறார்கள். அங்கு (மூவி) அசைவுகளின் செயல்கள் நடக்கிறது என்று குழந்தைகள் வந்து
கூறுகிறார்கள். அது இருப்பதே மூவி வர்ல்ட் (சலனங்களின் உலகம்). நீங்கள் ஊமை திரைப்படம் கூட
பார்த்திருக்கிறீர்கள். இப்பொழுது நடைமுறையில் எல்லா விஷயங்களையும் நீங்கள் அறிந்து விட்டுள்ளீர்கள்.
மூலவதனம் என்பது அமைதியான உலகம். அங்கு ஆத்மாக்கள் இருப்பார்கள். சூட்சுமவதனத்தில் சூட்சும
சரீரம் கூட இருக்கிறது. எனவே அவசியம் ஏதோ பாஷை கூட இருக்கும். ஆத்மாக்களாகிய நம்முடைய இடம்
சாந்திதாமம் ஆகும் என்பது குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் உள்ளது. பிறகு இருப்பது சூட்சுமவதனம்.
அங்கு பிரம்மா, விஷ்ணு, சங்கரன் இருக்கிறார்கள். மேலும் இது கலியுகம் மற்றும் சத்யுகத்தின் சங்கமம் ஆகும்.
இங்கு தந்தை வருகிறார். இங்கிருந்து பிராமணர்களாகிய நீங்கள் செல்கிறீர்கள். பிறந்த வீடு மற்றும் புகுந்த
வீடு உள்ளது அல்லவா? இங்கு இருவருமே உங்களுடைய பிறந்த வீட்டினர் ஆவார்கள். பாப்தாதா இருவரும்
குழந்தைகளை மலராக ஆக்குவதற்காக உழைக்கிறார்கள். முகம்மதியர்கள் கூட கார்டன் ஆஃப் அல்லா என்று
கூறுகிறார்கள். கராச்சியில் ஒரு பயில்வான் இருந்தார். அவர் வந்து முன்னால் நிற்பார். பார்த்தபடியே விழுந்து
விடுவார். விசாரிக்கும் பொழுது நான் குதாவின் தோட்டத்திற்கு சென்றேன். குதா மலர் கொடுத்தார் என்று
கூறுவார். இப்பொழுது அவருக்கு ஞானமோ இருக்கவில்லை. தோட்டம் என்று எதற்குக் கூறப்படுகிறது என்பதை
இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். இது முட்களின் வீடு மற்றும் அது மலர்களின் தோட்டமாகும். உங்கள்
புத்தியில் முழு இரகசியம் உள்ளது. சத்யுகம் என்றால் என்ன? கலியுகம் என்றால் என்ன? உங்களுக்கு மிகுந்த
குμ இருக்க வேண்டும். முழு சக்கரம் உங்கள் புத்தியில் உள்ளது. இது பற்றிய விஸ்தாரமோ நிறைய
உள்ளது. உங்கள் புத்தியில் எவ்வளவு சுருக்கமாகப் பதிந்துள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் படைப்பவரான
தந்தை மூலமாக படைப்பவர் மற்றும் படைப்பை அறிந்துள்ளீர்கள். பிரம்மாவைப் படைப்பவர் என்று கூற
மாட்டார்கள். படைப்பவர் ஒருவர் தான். பலியாவது கூட ஒருவரிடம் தான்.. முதன் முதல் படைப்பு
பிரம்மாவினுடையது. பிறகு கிருஷ்ணரினுடையது என்று கூறுவார்கள். பிரம்மாவோ இருக்கிறார். பிராமணர்கள்
கூட அவசியம் வேண்டும். பாண்டவர்களை பிராமணர் என்று நினைக்க மாட்டார்கள். பிரம்மா மூலமாக
பிராமணர் வேண்டும். இது ஆன்மீக வேள்வி ஆகும். இதற்கு ஸ்பிரிச்சுவல் நாலேஜ் (ஆன்மீக ஞானம்) என்று
கூறப்படுகிறது. ஆத்மாவிற்கு அதே தந்தை ஞானம் அளிப்பார். நமக்கு மனிதர்கள் கற்பிப்பதில்லை என்பதை
நீங்கள் அறிந்துள்ளீர்கள். அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தை கற்பிக்கிறார். பிரம்மா மூலமாக ஸ்தாபனை
என்றும் கூறுகிறார்கள். கிருஷ்ணர் என்று கூறுவார்களா என்ன? அவரோ இருக்கவும் முடியாது. பிரம்மா
மூலமாக ஸ்தாபனை யார் செய்விக்கிறார்? கிருஷ்ணரா? இல்லை பரமபிதா பரமாத்மா. விஷ்ணு மூலமாக
பாலனை. பிரம்மா மற்றும் விஷ்ணுவின் பாகம் எவ்வளவு இருக்கிறது. பிரம்மா முக வம்சாவளி தான் பிறகு
போய் விஷ்ணுபுரியின் தேவதை ஆகிறார்கள். பிரம்மாவே விஷ்ணு, விஷ்ணுவே பிரம்மா. இதுவும்
குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டுள்ளது. பிரம்மாவே விஷ்ணு ஆவதற்கு ஒரு நொடி. விஷ்ணுவே பிரம்மா
ஆவதில் 84 பிறவிகள். எவ்வளவு அதிசயமான விஷயங்கள்! யாருமே புரிந்துக் கொள்ள முடியாமல் இருக்கிறார்கள்.
இது எல்லையில்லாத விஷயங்கள் ஆகும். எல்லையில்லாத தந்தையிடமிருந்து எல்லையில்லாத படிப்பை
படித்து, எல்லையில்லாத இராஜ்யத்தைப் பெற வேண்டும். சிருஷ்டிச் சக்கரத்தை அறிந்து கொள்ள வேண்டும்.
16.08.2016
(4/4)
ஆத்மா தான் சரீரத்தின் மூலமாக அறிந்து கொள்கிறது. அப்படியின்றி சரீரம் ஆத்மா மூலமாக ஞானம்
எடுக்கிறது என்பதல்ல. இல்லை. ஆத்மா ஞானம் எடுக்கிறது. உங்களுக்கு எவ்வளவு குμ இருக்கிறது.
இது உள்ளூர மறைமுகமான குμ இருக்க வேண்டும். படைப்பினுடைய சம்ஸ்காரம் ஆத்மாவில் உள்ளது.
துக்கம் கூட ஆத்மாவிற்குத்தான் ஏற்படுகிறது. எனது ஆத்மாவை துக்கப்படுத்தாதீர்கள் என்று கூறுகிறார்கள்.
குழந்தைகளுக்கு இப்பொழுது எவ்வளவு தெளிவு கிடைத்துக் கொண்டிருக்கிறது. உங்களுக்கு குμ இருக்கிறது.
கடலிலிருந்து புத்துணர்வு பெற்று மேகங்கள் ஒன்று சேர்ந்து மழை பொழிய வேண்டும். தங்களுக்குள் ஒன்று
சேர்ந்து கண்காட்சி ஆகியவற்றை தயார் செய்வதில் உதவி செய்யுங்கள். ஆர்வம் இருக்க வேண்டும். சேவை,
சேவை மற்றும் சேவை. நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட
குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை
வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. தந்தை மூலமாகக் கிடைத்திருக்கும் ஞானத்தை நினைவு செய்து அளவற்ற குμயில் இருக்க
வேண்டும். பரந்த புத்தியுடையவராக ஆகி அமர்க்களமாக சேவை செய்ய வேண்டும்.
2. தந்தை மூலமாக கிடைத்திருக்கும் ஸ்மிருதிகளை (நினைவு) மறக்கக் கூடாது. தந்தையிடம்
தூய்மையாக இருப்பதற்காக கொடுத்திருக்கும் வாக்குறுதியை முழுமையாகக் கடைப்பிடிக்க
வேண்டும்.
வரதானம்: செய்வது மற்றும் சொல்வது லி இந்த இரண்டையும் சமானமாக ஆக்கி
தரமான சேவை செய்யக் கூடிய உண்மையான சேவாதாரி ஆவீர்களாக.
முதலில் செய்ய வேண்டும். பிறகு சொல்ல வேண்டும் என்பது எப்பொழுதும் கவனத்தில் இருக்க
வேண்டும். கூறுவது சுலபமாக இருக்கும். செய்வதில் உழைப்பு உள்ளது. உழைப்பினுடைய பலன் நல்லதாக
இருக்கும். ஆனால் மற்றவர்களுக்குக் கூறுகிறீர்கள் சுயம் செய்வது இல்லை என்றால் சேவையுடன் கூடவே
டிஸ்சர்வீஸ் கூட பிரத்யட்சம் ஆகிறது. எப்படி அமிர்தத்தில் விஷத்தின் ஒரு துளி பட்டவுடன் முழு அமிருதமுமே
விஷமாகி விடுகிறது. அதே போல எவ்வளவு தான் சேவை செய்தாலும் கூட ஒரு சிறிய தவறு, சேவையை
முடித்து விடுகிறது. எனவே முதலில் தங்கள் மீது கவனம் கொடுத்தீர்கள் என்றால், அப்பொழுது தான்
உண்மையான சேவாதாரி என்று கூறுவார்கள்.
சுலோகன்: வேற்றுமையில் ஒற்றுமையைக் கொண்டு வருவது, கெட்டுப் போனதை
சரி செய்வது லி இவை அனைத்தையும் விட பெரிய விசேஷத் தன்மையாகும்.
(1/4)
17
.08.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! தந்தை வந்துள்ளார். அனைவரின் வாழ்க்கையை துக்கத்திலிருந்து
விடுவித்து, சொர்க்கத்தின் ஆஸ்தி தருவதற்காக. இச்சமயம் அனைவருக்கும் முக்தி மற்றும்
ஜீவன்முக்தி கிடைக்கின்றது.
கேள்வி : குழந்தைகள் நீங்கள் இப்போது எந்த ஒரு கன்றை (நாற்றை) எந்த விதிப்படி நட்டுக்
கொண்டிருக்கிறீர்கள்?
பதில்: நாம் இப்போது தெய்வீகப் பூக்களின் கன்றை நட்டுக் கொண்டிருக்கிறோம். யார் பிராமண குலத்தைச்
சேர்ந்தவர்களாக இருப்பார்களோ, அவர்கள் இந்தக் கன்றில் வந்து கொண்டே இருப்பார்கள். இது தேவதா
தர்மத்தின் கன்று. இதில் மனிதர்கள் தேவதையாக ஆகின்றனர். இந்தக் கன்று ஸ்ரீமத்தின் ஆதாரத்தில் நடப்
படுகின்றது. பாபாவை நினைவு செய்வதன் மூலம் இரும்பு யுக ஆத்மா பொன் யுக ஆத்மாவாக மாறி
விடுகின்றது.
பாடல் : போலாநாத்தை விடவும் தனிப்பட்டவர் வேறு யாரும் கிடையாது..........
ஓம் சாந்தி. சிவபகவான் வாக்கு: தந்தையை இது போல் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் குழந்தை
களுக்குப் புரிய வைக்கப் படுகின்றதுலி சிவன் தான் பகவான். ஆக, குழந்தைகளிடம் சிவபகவானின் வாக்கு.
சிவனை சுப்ரீம் (மிக மேலான) ஆத்மா என்றும் சொல்கின்றனர். இப்போது சிவனுடைய அறிமுகம் குழந்தை
களுக்கு நன்கு புரிய வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் புரிய வைக்கப்படுகின்றதுலி அனைவருக்கும் சத்கதி அளிப்பவர்
சிவன். அவரை ஈஸ்வரன், பகவான், பிரபு என்றும் சொல்கின்றனர். அநேகப் பெயர்கள் வைத்துள்ளனர்.
சிவனை அந்தர்யாமி (மனிதர் மனதில் உள்ளதை அறிபவர்) என்றும் சொல்கின்றனர். உண்மையில் அந்தர்யாமி
என்று சொல்வதும் தவறாகும். அந்தர்யாமி என்றால் அனைவரின் மனதுக்குள் இருப்பதை அறிந்திருப்பவர்.
சிவபாபா சொல்கிறார், நான் யாருடைய மனதையும் அறிந்து கொள்வதில்லை. நானோ உங்களுடைய தந்தை.
நான் வருவதே அதுவும் கல்பலிகல்பமாக, கல்பத்தின் சங்கமயுகத்தில். இப்போது எனது பெயர் சிவன். பரம
ஆத்மா எனச் சொல்கின்றனர். உங்களுக்கும் ஆத்மா உள்ளது இல்லையா? ஆனால் உங்களுக்கு சரீரத்தின்
மீது பெயர் வைக்கப்படுகின்றது. ஆத்மாவின் பெயர் ஆத்மா தான். இப்போது பரமபிதா பரமாத்மாவுக்கும்
பெயர் வேண்டும் இல்லையா? அவருடைய பெயரே சிவன் தான். அவர் நிராகார். அவருக்கு சரீரத்தின் பெயர்
கிடையாது. இவர் ஆத்மா, ஆனால் அவர் பரம ஆத்மா அதாவது பரமாத்மா. ஆக, பாபா புரிய வைக்கிறார்,
எனது பெயர் சிவன். ஆத்மாவின் மீது சிவன் எனப் பெயரிடப் படுகின்றது. அவருடைய ஒரே பெயர் சிவன்
என்பது தான். பரமலிமிக மேலானவராக இருக்கும் காரணத்தால் பரம ஆத்மா சிவன் என்று சொல்லப்படுகிறார்.
வெறுமனே ஈஸ்வரன் அல்லது பிரபு என்று சொன்னால் அது பெயராகாது. பாபா சொல்கிறார்லி நான் சுப்ரீம்
úஸால் (மிக மேலான ஆத்மா). ஆனால் பெயரோ வேண்டும் இல்லையா? அதனால் டிராமாவின் திட்டப்படி
பெயர் சிவன் என வைக்கப்பட்டுள்ளது. அவர் அனைத்தையும் கடந்து அப்பால் வசிக்கக் கூடிய பரம ஆத்மா.
அவர் அனைவரைக் காட்டிலும் உயர்ந்தவரிலும் உயர்ந்தவரும் கூட. அனைவரைக் காட்டிலும் விலகியவராகவும்
அன்பானவராகவும் இருக்கிறார். அந்தப் பரம ஆத்மா இந்த சரீரத்தின் மூலம் சொல்கிறார், சிவ தந்தையாகிய
என்னை நினைவு செய்யுங்கள். காட் ஃபாதர் (இறைத் தந்தை) எனச் சொல்கின்றனர் இல்லையா? தந்தையின்
பெயர் சிவன். அந்த மனிதர்கள் காட் ஃபாதர் சிவன் எனச் சொல்வதில்லை. அவரது பெயர் சிவன் என்பதை
அவர்கள் அறிந்து கொள்ளவே இல்லை. சிவஜெயந்தியும் கொண்டாடுகின்றனர் லி எல்லா இடங்களிலும் லிங்கத்தைப்
பூஜிக்கின்றனர். லிங்கத்தின் பெயரே சிவன் தான். அவர் ஞானக்கடல் என்பதால் சிவாச்சாரியார் ஆகி விட்டார்.
சிவாச்சாரியார் வாக்கு. ஆக, பக்தி மார்க்கத்தில் அநேகப் பெயர்கள் வைத்துள்ள காரணத்தால் குழப்பி விட்டுள்ளனர்.
எல்லையற்ற தந்தை அமர்ந்து புரிய வைக்கிறார்லிஆத்மாக்களாகிய உங்கள் அனைவருக்கும் அவரவருக்கென
சரீரம் கிடைத்துள்ளது, பார்ட்டை நடிப்பதற்காக. சிவபாபாவும் வந்து ஸ்ரீமத் அல்லது அறிவுரை தருகிறார்.
அதனால் ஸ்ரீமத் பகவான் வாக்கு எனச் சொல்லப்படுகின்றது. வித்தியாசம் ஆகி விடுகின்றது இல்லையா?
சிவனுக்கோ அனைவருமே குழந்தைகள் தான். இப்போது கிருஷ்ணரை பிரஜாபிதா எனச் சொல்ல முடியாது.
பிரஜாபிதா என்று பிரம்மா மட்டுமே சொல்லப் படுகிறார். ஒருவர் சிவபாபா, பிறகு பிரஜாபிதா பிரம்மா. சிவபாபா
படைப்பைப் படைப்பவர். அவரிடமிருந்து தான் ஆஸ்தி கிடைக்கின்றது. அவர் தான் வந்து ஞானம் தருகிறார்.
ஞானக்கடல், அவருடைய ஆஸ்தி சொர்க்கம். அனைவருக்கும் ஜீவன்முக்தி தருபவர் பாபா தான். ஜீவன்முக்தி
என்ற ஒரு சொல் தான் அனைவருக்கும் பொருந்துகிறது. அனைவரின் வாழ்க்கையையும் துக்கத்தில் இருந்து
விடுவிக்கிறார். பிறகு புரிய வைக்கிறார்லிமுதலில் நீங்கள் தான் ஜீவன் முக்தியில் வருகிறீர்கள். இது உங்களுடைய
பார்ட். முதலில் கிறிஸ்து முதலானவர்கள் ஐரோப்பாவின் பக்கம் சென்று விட்டனர். இங்கே நீங்கள் பாரதத்தில்
(2/4)
17.08.2016
தான் வருகிறீர்கள். பாரதத்தில் தான் பகவான் பகவதியின் (தேவதைகளின்) இராஜ்யம் இருந்தது. பகவதி
ஸ்ரீலட்சுமி, பகவான் ஸ்ரீநாராயணர் எனச் சொல்கின்றனர். ஆனால் பகவான் எனச் சொல்ல முடியாது. அது
ஆதி சநாதன தேவிலிவேதா தர்மம், அது இப்போது மறைந்து விட்டுள்ளது. தேவதைகளின் சித்திரங்கள்
உள்ளன. ஆனால் அவர்களுக்கு இந்த சத்யுகத்தின் ஆஸ்தியை யார் கொடுத்தது? அதை யாரும் அறிந்து
கொள்ளவில்லை. நீங்கள் இப்போது அறிந்து கொண்டிருக்கிறீர்கள், பாரதத்தில் தேவிலிதேவதைகள் மூலம் தான்
உலகத்தின் சரித்திரலிபூகோளம் ஆரம்பமாகின்றது. முதல்லிமுதலில் தேவிலிதேவதா தர்மத்தினர் வருகின்றனர்.
பாபா புரிய வைக்கிறார், அவர்களுக்கு இந்த பிராலப்தம் (பலன்) கிடைத்துள்ளது. நிச்சயமாக முந்தைய ஜென்மத்தில்
அப்படிப்பட்ட புருஷார்த்தம் செய்துள்ளனர். சிருஷ்டியோ நடந்து கொண்டே இருக்கிறது இல்லையா? பாடப்
பட்டுள்ளது லி பாபா வந்து பிராமண், தேவதா மற்றும் சத்திரிய தர்மங்களை ஸ்தாபனை செய்கிறார். பாபா
இச்சமயம் பிராமணர்களுக்கு அமர்ந்து படிப்பு சொல்லித் தருகிறார். நீங்கள் முதலில் சூத்திரர்களாக இருந்தீர்கள்,
பிறகு சூத்திரரில் இருந்து பிராமண், பிரம்மா முகவம்சாவளி ஆகியிருக்கிறீர்கள். அவர் பாபா. இவர் தாதா. எது
வரை பிரம்மா வாய்வழி வம்சத்தினர் ஆகவில்லையோ, அது வரை ஆத்மா பாபாவிடம் இருந்து ஆஸ்தி பெற
முடியாது. பிரம்மாவை ஆடம் என்றும் சொல்கின்றனர். பிரம்மா சரஸ்வதி ஆதம் மற்றும் பீபி........ இவர்களோ
அனைவரின் தாய்லிதந்தை ஆகின்றனர். மனிதர்கள் அனைவரைக் காட்டிலும் பிரஜாபிதா பிரம்மா பெரியவர்
எனச் சொல்வார்கள். பிராமண தர்மம், பிறகு அதிலிருந்து தேவதாதர்மம், பிறகு தேவதா தர்மத்திலிருந்து
இரண்டாவது, மூன்றாவது தர்மங்கள்.
குழந்தைகளுக்குச் சொல்லப்படுகிறது லி சிவபாபாவை நினைவு செய்யுங்கள். ஈஸ்வரனை அல்லது
பரமாத்மாவை நினைவு செய்யுங்கள் எனச் சொல்லக் கூடாது. அவர் தந்தை ஆவார். உங்களுக்குப் புரிய
வைக்கப்பட்டுள்ளது, ஆத்மாவும் புள்ளி, பரம ஆத்மாவும் ஒரு புள்ளி. இந்தப் புள்ளியின் பெயர் ஆத்மா.
அந்தப் புள்ளியின் பெயர் பரம ஆத்மா, சிவன். சிவனுடைய கோவிலும் கூட மிகவும் புகழ் பெற்றதாகும். நாம்
ஆத்மா என்பதைக் குழந்தைகள் புரிந்துக் கொள்ள வேண்டும். ஒரு சரீரத்தை விட்டு வேறொன்றை எடுத்துக்
கொள்கிறோம். பல விதமான பார்ட் நடிக்கிறோம். சிவபாபாவும் கூட பார்ட் நடித்தாக வேண்டும். பகவானே,
வந்து எங்களை விடுவியுங்கள், தூய்மையற்றதிலிருந்து தூய்மையாக்குங்கள் என அழைக்கின்றனர். இது
யாருக்கும் தெரியாதுலிசிவபாபா தான் தூய்மையை இழந்தவர்களை தூய்மையானவர்களாக ஆக்குபவர். ஞானக்கடல்,
அன்பின் கடல். அவர் அமர்ந்து ஞானம் தருகிறார் லி இந்த சிருஷ்டிச் சக்கரம் எப்படிச் சுற்றுகிறது? முக்கியமான
சித்திரங்கள் இரண்டு லி கல்ப விருட்சம் மற்றும் சிருஷ்டிச் சக்கரம். சக்கரத்தில் முள்ளும் காட்டப்பட்டுள்ளது.
அதிலிருந்து தெரிய வருகிறதுலிஇன்னும் எவ்வளவு சமயம் உள்ளது? என்று கலியுகத்தில் எவ்வளவு ஏராளமான
மனிதர்கள் உள்ளனர்! சத்யுகத்தில் மிகக் குறைவாக இருப்பார்கள். பிறகு அதிகமாகும். இந்த ஞானம் முழுவதும்
உங்கள் புத்தியில் வந்து விட்டது. அதனால் சுயதரிசனச் சக்கரமும் கூட உங்களுக்குத் தரப் பட்டுள்ளது.
சங்கும் கூட உங்களுடையது. இது வாயினால் ஞானம் சொல்வதற்கான விசயமாகும். ஞானம் என்ற சங்கை
ஒலிக்கிறீர்கள். பாபா புரிய வைக்கிறார் லி ஹே ஆத்மா, தன்னுடைய தந்தையை நினைவு செய். பாடப் படவும்
செய்கிறது, தலால் (தரகர்) ரூபத்தில் எப்போது சத்குரு கிடைத்தாரோ...... பாபா தாமே இவருக்குள் அமர்ந்து
ஆத்மாக்களாகிய உங்களுக்கு நிச்சயதார்த்தம் செய்விக்கிறார். உங்களுக்கும் கற்றுத் தருகிறார். நீங்களும் தரகராக
ஆகிறீர்கள். இவரும் (பிரம்மா) சொல்கிறார், சிவபாபாவை நினைவு செய்யுங்கள். சிவபாபா பிரம்மா மூலம்
சொல்கிறார், தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். நீங்களும் சொல்கிறீர்கள் லி சிவபாபாவை நினைவு
செய்வீர்களானால் விகர்மங்கள் விநாசமாகும். அலஃப் லி தந்தையை நினைவு செய்வதன் மூலம் இந்த இராஜ்யம்
கிடைக்கும். அவர்களுடைய ஆத்மா பிறகு 84 பிறவிகளை எடுக்க வேண்டியதிருக்கும். உங்களுக்கு சுயதரிசனச்
சக்கரம் பற்றித் தெரிந்து விட்டது. எப்படி நாம் 84 பிறவிகளை எடுக்கிறோம்? ஜெகத் அம்பா, ஜெகத்தின்
(உலகத்தின்) தாய் ஆகிறார். ஆகவே நிச்சயமாக ஜெகத்பிதாவும் வேண்டும். இவர்கள் கணவன்லிமனைவி
என்பதல்ல. பிரம்மாவின் புதல்வி சரஸ்வதி ஆவார். பிரம்மாவுக்கு அனைவரும் குழந்தைகள். பிரம்மாவுக்கு
மனைவி கிடையாது. பிரம்மாவின் மகள் சரஸ்வதி என்பது பாடப் படுகின்றது. அவரைத் தான் ஜெகத் அம்பா
என்றும் பிரம்மாவை ஜெகத் பிதா என்றும் சொல்கின்றனர். சரஸ்வதி முக்கியமானவர். அதனால் பராமரிப்பதற்காக
அவர் நியமிக்கப் பட்டுள்ளார். அவருடைய பார்ட்டே அப்படித் தான். இப்போது நீங்கள் அறிவீர்கள், சிவபாபா
இந்த பிரம்மா மூலம் நமக்கு ஞானம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் தாய்லிதந்தை, நாங்கள் உங்களுடைய
குழந்தைகள்......... இந்த மகிமை அவருக்குப் (சிவபாபாவிற்குப்) பாடப்படுகின்றது. அவர் தந்தை. தாயோ கிடையாது.
சிவபாபா இல்லையா? ஆக, தந்தை வந்து இவருக்குள் பிரவேசமாகி, இவர் மூலமாகக் குழந்தைகளைத்
தத்தெடுக்கிறார். ஆனால் ஆணாக இருப்பதால் மாதாவுக்குக் கலசம் தரப் பட்டுள்ளது. அவர்கள் (உலகத்தார்)லி
கடலைக் கடைந்தார், கலசம் வெளிப்பட்டது, அதை லட்சுமிக்குக் கொடுத்தார் என்பதாக காட்டிவிட்டனர்.
அதுவும் தவறாகும். கலசத்தை மாதாவின் தலையில் வைக்கின்றார். ஞானலிஞானேஸ்வரி ஜெகதம்பா ஆவார்.
(3/4)
17.08.2016
சிவபாபா பிரம்மா மூலம் ஞானம் தருகிறார் என்றால் நீங்களும் கூட ஞானலிஞானேஸ்வரி ஆகி விட்டீர்கள்
இல்லையா? பிறகு ராஜலிராஜேஸ்வரி ஆவீர்கள். நீங்கள் சொல்வீர்கள், நாங்கள் ராஜரிμகள். ரிμ என்ற சொல்
தூய்மையைக் குறிப்பதாகும். உண்மையிலும் உண்மையான ராஜரிμகள் நீங்கள் தான். அவர்கள் ஹடயோகிகள்.
நீங்கள் இராஜ்யத்திற்காக விகாரங்களை சந்நியாசம் செய்கிறீர்கள். இப்போது நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள்.
இது கும்பம் (சங்கமம்) ஆகும். நீங்கள் ஞான ஸ்நானம் செய்து கொண்டிருக்கிறீர்கள். மேலும் யோகத்தையும்
கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். இந்த சிருஷ்டிச் சக்கரம் எப்படிச் சுற்றுகிறது? பாபா ஞானம் நிறைந்தவர். நீங்களும்
கூட மாஸ்டர் ஞானம் நிறைந்தவர்கள். இராஜதானி ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. இதில் நம்பர்வார்
பாஸ் ஆகின்றனர். இராமருக்கு அம்பு ஏன் கொடுக்கப் பட்டுள்ளது? இதுவும் தெரியாது. இது புரிய வைப்பதற்காகக்
கொடுக்கப் படுகின்றது. இல்லையென்றால் அம்பெய்வதோ இம்சையின் சித்திரம் என மனிதர்கள் புரிந்து
கொள்வார்கள். எப்படி தேவிகளுக்கும் கூட இம்சையின் பாணம் முதலிய ஆயுதங்களைக் கொடுத்து விடுகின்றனர்.
இச்சமயம் சத்திரியர்கள் அனைவரும் யுத்த மைதானத்தில் உள்ளனர் என்பது புரிய வைக்கப் படுகின்றது.
ஆனால் உங்களுடைய யுத்தம் மாயாவுடன். நினைவில் முழுமையாக இல்லாத காரணத்தால் மாயா இராவணனை
வெற்றி கொள்ள முடியாது. இது உங்களுடைய யுத்த ஸ்தலம். யுத்தத்தில் ஸ்திரமாக இருப்பவரின் பெயர்
யுதிஷ்டிரர் என வைக்கப்பட்டுள்ளது. இப்படிலிஇப்படி பெயர்களை அமர்ந்து உருவாக்கியுள்ளனர். யுதிஷ்டிரர்
மற்றும் திருதராஷ்டிரரைக் காட்டுகின்றனர். அவர் பாண்டவர்களுடையவராக இருந்தார், இவர் கௌரவர்
களுடையவராக இருந்தார். இந்தக் கதைகள் அனைத்தையும் அமர்ந்து உருவாக்கியுள்ளனர். அந்த மாதிரிப்
பெயரே கிடையாது.
இந்த உங்களுடைய படிப்பு எவ்வளவு எளிமையானது! அதில் யார் எவ்வளவு அதிகம் படிக்கிறார்களோ,
அவ்வளவு உயர்ந்த பதவி பெறுகின்றனர். இங்கேயும் கூட நீங்கள் எந்தளவு யோகம் செய்கிறீர்களோ, மற்றும்
படிக்கிறீர்களோ, அந்தளவு உயர்ந்த பதவி பெறுவீர்கள். இதில் அதிக கவனம் இருக்க வேண்டும். பரீட்சையில்
பாஸாகவில்லை என்றால் பணம் வீணாகி விடுகின்றது. இதிலும் கூட நன்றாக கவனம் செலுத்திப் படிக்க
வேண்டும். நீங்கள் இறைவனின் மாணவர்கள். உங்களுக்கோ பெரிய பல்கலைக்கழகம் இருக்க வேண்டும்.
பிரம்மாகுமாரீஸ் காட்லி யுனிவர்சிட்டி. நீங்கள் முழு உலகத்திற்கும் முதல்லிஇடைலிகடை பற்றிய ஞானம் கொடுத்துக்
கொண்டிருக்கிறீர்கள். அதனால் நீங்கள் காட் ஃபாதர்லி யுனிவர்சிட்டி என்று எழுதி வைக்க முடியும். பாபா
அமர்ந்து கற்றுத் தருகிறார் லி எவ்வளவு உயர்ந்ததிலும் உயர்ந்த பதவியை நீங்கள் பெறுகிறீர்கள்! இது
மிகப்பெரிய படிப்பாகும். குழந்தைகள் யுக்தியுடன் புரிய வைக்க வேண்டும். நீங்கள் காட் ஃபாதர்லி யுனிவர்சிட்டி
என்று எழுதுகிறீர்கள். ஏனென்றால் உலகத்தின் சரித்திரலிபூகோளம் எப்படி மீண்டும் போலவே நடக்கிறது,
இந்தச் சக்கரம் எப்படிச் சுற்றுகிறது என்பதைப் புரிய வைப்பீர்கள். அதனால் அந்த மனிதர்களும் புரிந்து
கொள்வார்கள், இது காட்லி யுனிவர்சிட்டி என்பது சரி தான் என்று. யுனிவர்ஸ் என்றால் முழு உலகத்திற்கும்
ஞானம் இங்கே கிடைக்கின்றது. பாரதம் ஆரம்பத்தில் என்னவாக இருந்தது, நீங்கள் எப்படி எஜமானர்
ஆனீர்கள், இதில் புத்தி மிகவும் தூய்மையானதாக இருக்க வேண்டும். உங்களுடைய புத்திக்கு இப்போது
ஞானம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. சிங்கத்தின் பால் தங்கப் பாத்திரத்தில்....... இதில் தங்கம் போன்ற தூய்மையான
(கோல்டன் ஏஜ்டு) புத்தி வேண்டும். பாபாவை நினைவு செய்வதன் மூலம் உங்களுடைய புத்தி கோல்டன்
ஏஜாக மாறி விடுகின்றது. நினைவு செய்யவில்லை என்றால் அயர்ன் ஏஜாக ஆகி விடும். அடிக்கடி பாபாவை
மறந்து விடுகின்றனர். இந்த முயற்சியில் நேரம் பிடிக்கின்றது, கல்பத்திற்கு முன் போல் யார் பிராமண
குலத்தவர்களோ, அவர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். மலர் செடிகளின் கன்று நடப்பட்டுக் கொண்டே
இருக்கும். கல்பத்திற்கு முன் போல் நீங்கள் மனிதரை தேவதை ஆக்குவதற்கான கன்றை நட்டுக் கொண்டிருக்
கிறீர்கள். இது தேவதா தர்மத்தின் கன்று. அந்த மனிதர்களோ வனத்தில் மரக்கன்றைத் தான் நடுகின்றனர்,
வனத்தை விரிவாக்குவதற்காக. இல்லையென்றால் விறகு அல்லது மரக்கட்டை கிடைக்காது. மிருகங்களும்
வசிக்க முடியாது. இங்கே நீங்கள் தேவதா தர்மத்தின் கன்றை நட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் பாபாவின்
வழிமுறைப்படி தெய்விகப் பூக்களின் கன்றை நட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நாம் எந்த ஒரு விழா முதலிய
எதையும் கொண்டாடுவதில்லை. இவையோ புரிந்து கொள்வதற்கான விசயங்களாகும். நல்லது.
. இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும்
தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம் :
1) உயர்ந்ததிலும் உயர்ந்த பதவி பெறுவதற்காக படிப்பின் மீது முழு கவனம் செலுத்த வேண்டும்.
இந்த போர்க்களத்தில் மாயாவை வெற்றி கொண்டு கர்மாதீத் நிலையை அடைய வேண்டும்.
(4/4)
17.08.2016
2) தனது புத்தியை சத்திய யுகத்திற்காக தூய்மையானதாக ஆக்குவதற்கு பாபாவின் நினைவில்
இருக்க வேண்டும். தெய்விகப் பூக்களின் கன்றை நட வேண்டும். சொர்க்கத்தின் ஸ்தாபனை
செய்ய வேண்டும்.
வரதானம் : அசரீரி நிலையின் பயிற்சி மூலம் நான் என்பதை
முடித்துவிடக் கூடிய அகங்காரமற்றவர்களாக ஆகுக !
நிகழ்காலத்தில் அனைத்திலும் நுட்பமான, அழகான கயிறுலிஇந்த நான் என்பது தான். இந்த நான் என்ற
சொல்லே தேக அபிமானத்திற்கு அப்பால் கொண்டு செல்வதாகவும் உள்ளது என்றால் தேக அபிமானத்தில்
கொண்டுவரக் கூடியதாகவும் உள்ளது. எப்போது நான் என்பது தலைகீழான (எதிர்மறை) ரூபத்தில் வருகிறதோ,
அப்போது பாபாவுக்கு அன்பானவராக ஆவதற்கு பதிலாக யாராவது ஆத்மாவின், பெயர்லிமரியாதைலிகௌரவம்
இவற்றிற்குப் பிரியமானவராக ஆக்கி விடுகின்றது. இந்த பந்தனத்தில் இருந்து விடுபடுவதற்கு நிரந்தர நிராகாரி
(அசரீரி) ஸ்திதியில் நிலைத்திருந்து சாகாரத்தில் (சரீரத்திற்கு) வாருங்கள் லி இந்த பயிற்சியை இயற்கையான
இயல்பாக ஆக்கி விடுவீர்களானால் அகங்காரமற்றவர்களாக ஆகி விடுவீர்கள்.
சுலோகன் : யாராவது ஒருவரின் நல்ல அல்லது கெட்ட விசயத்தைக் கேட்டு,
எண்ணத்தில் கூட வெறுப்புணர்வு வருவதும் கூட பரமத் (பிறர் வழிப்படி நடப்பது) ஆகும்.
(1/4)
18
.08.2016, காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! பாப்தாதாவின் அன்பு நினைவுகளை பெற வேண்டும் என்றால்
சேவை செய்யத் தகுந்தவராக ஆகுங்கள், புத்தியில் ஞானம் நிறைந்திருந்தது என்றால்
மழையாகப் பொழியுங்கள்.
கேள்வி: எந்த ஒரு போதை, (ஞானம்) நிறைந்திருக்கும் மேகங்களைக் கூட பொழிய விடாமல் ஓட
வைத்து விடும்?
பதில்: ஒருவேளை வீணான தேக அபிமானத்தின் போதை வந்தது என்றால், (ஞானம்) நிறைந்திருக்கும்
மேகங்கள் கூட பறந்து சென்று விடும். பொழிந்தாலும் கூட சேவைக்குப் பதிலாக எதிர் சேவை (டிஸ் லி சர்வீஸ்)
நடந்து விடும். பாபாவிடம் அன்பு இல்லை என்றாலும், அவருடன் நினைவின் தொடர்பு இல்லாவிட்டாலும்
ஞானம் இருந்தும் காலியாக இருப்பது போல்தான் ஆகும். இப்படிப்பட்ட காலியான மேகங்கள் பலருக்கு எப்படி
நன்மை செய்யும்?
ஓம் சாந்தி. கொஞ்சம் மேகங்கள் மீதி இருக்கின்றன. மழை குறையும்போது கடலுக்கு மேலே மேகங்கள்
குறைந்து, குளிர்ந்து விடுவது போல, இங்கும் கூட குளிர்ந்து போய் விடுகின்றனர். புத்துணர்ச்சி அடைந்து
சென்று ஞான மழையாய் பொழிகின்றவர்களை மேகங்கள் என சொல்லலாம். மழை பொழியவில்லை என்றால்
மேகங்கள் என சொல்ல மாட்டார்கள். இது ஞான மேகமாகும். அவை நீராலான மேகங்கள் ஆகும். சீஸன்
(பாப்தாதாவை சந்திக்க) வரும்போது ஞானத்தின் மேகங்கள் வருகின்றன. புத்துணர்வு அடைந்து சென்று
மற்றவர்களுக்கும் புத்துணர்வு கொடுக்கின்றன. மேகங்களும் வரிசைக்கிரமமாக இருக்கின்றன. சில
மேகங்களோ மிகவும் நன்றாகப் பொழிகின்றன. மேகங்களின் வேலையே நன்றாகப் பொழிந்து காய்ந்து கிடக்கும்
தாவரங்களை புத்துணர்வு அடையச் செய்வதாகும். யாருக்குள் முழுமையான ஞானம் உள்ளதோ அவர்கள்
மறைந்து இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு பாபாவின் அனுமதி கூட தேவையில்லை. மேகங்களாகவே
இருக்கின்றனர். இங்கு வருவதே நிரப்பிக் கொண்டு போய் பொழிவதற்காக ஆகும். எங்கு பார்த்தாலும் காய்ந்த
(வரண்ட) நிலம்தான் உள்ளது, எனவே அங்கு சென்று பசுமையாக ஆக்க வேண்டும். மகாரதி குழந்தைகள்
அனைத்து செண்டர்களையும் நல்ல விதமாக அறிவார்கள். எந்த செண்டர் குளிர்ந்து போய் கிடக்கிறது? எந்த
செண்டரின் குழந்தைகளுக்கு அதிகமாக புயல் காற்றுகள் வருகின்றன? சேவை செய்யக்கூடிய மகாரதி
குழந்தைகளுக்கு நன்றாகத் தெரியும். சேவை செய்யும் குழந்தைகளுக்கு அன்பு நினைவுகள் கொடுங்கள் என
பாபாவும் எப்போதும் சொல்கிறார். நல்ல நல்ல மேகங்கள் சேவைக்குச் செல்லும். கண்காட்சிகளிலும் அனைவருமே
ஒரே மாதிரியாக புரிந்து கொள்வதில்லை. முக்கியமான விசயமே இதுதானாகும் லி கீதையின் பகவான் பரமபிதா
பரமாத்மா ஆவார் சாகாரமான ஸ்ரீகிருஷ்ணர் அல்ல. புரிய வைப்பதற்கு மிக நல்ல நடத்தை தேவை.
அனைவருக்கும் சென்று விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் என முழு நாளும் இதே சிந்தனையில் இருக்க
வேண்டும். அனைவரும் அடர்ந்த காரிருளில் கிடக்கின்றனர். அனைவருக்கும் அன்புடன் புரிய வைத்தபடி
இருங்கள் லி இரண்டு தந்தையர் இருக்கின்றனர். ஒருவர் எல்லைக்குட்பட்டவர், மற்றவர் எல்லைக்கப்பாற்பட்டவர்.
எல்லைக்கப்பாற்பட்ட தந்தையைத்தான் பதித பாவனர் என்று சொல்கின்றனர். இப்போது குழந்தைகளாகிய
உங்களுக்கு புத்தி கிடைத்துள்ளது. உலகில் உள்ள மனிதர்கள் பார்ப்பதற்கு என்னவோ மிகவும் பகட்டு
மிக்கவர்களாக இருக்கின்றனர், ஆனால் கல்புத்தியாக உள்ளனர். பெயர் பெற்ற இந்த சாதுக்கள் முதலானவர்களையும்
கூட நான்தான் முன்னேற்ற வேண்டியுள்ளது என தந்தை தாமே சொல்கிறார். அவர்களுக்கும் கூட படைப்பவர்
மற்றும் படைப்பைப் பற்றி தெரியாது. சத்யுகத்தில் இருந்து இந்த ஞானம் மறைந்து விடுகிறது. ஆனால் இது
யாருக்கும் தெரியாது. சாஸ்திரங்களில் இந்த ஞானம் கிடையாது. அதன் மூலம் யாருக்கும் சத்கதி கிடைக்காது,
கீதைக்கு எவ்வளவு மதிப்பு உள்ளது, ஆனால் அது பக்தி மார்க்கமாகும். தந்தை பதித பாவனர், அவர்
அமர்ந்து இராஜயோகம் கற்பிக்க்கிறார். ஆக கண்டிப்பாக இராஜ்யம் செய்வதற்காக புதிய உலகம் தேவைப்படுகிறது.
தந்தைதான் வந்து இராஜயோகத்தை கற்பிப்பார். யாருக்கு கல்பத்திற்கு முன்பு புரிய வைக்கப் பட்டிருக்குமோ
அவர்களுக்குத்தான் இப்போது புரிய வைப்போம், மீண்டும் புரிந்து கொள்வார்கள் என்பதும் கூட உங்களுக்கு
இப்போது தெரிந்துள்ளது. இந்த சண்டை அது அல்ல. எப்போதும் வழக்கமாக ஏற்படும் சண்டை போலத்தான்
ஆகும். 8லி10 வருடங்கள் நடந்து பிறகு நின்று போய்விடும். நாடகத்தின்படி உருவாகியுள்ள அணுகுண்டுகள்
எதுவும் அப்படியே வைப்பதற்கானவை அல்ல. தூய்மையற்ற மனிதர்களின் மரணம் ஏற்படாதவரை சத்யுகம்
வராது. அமைதி எப்படி ஏற்படும் என்பதையும் கூட புரிய வைக்க வேண்டும். அமைதியை ஸ்தாபனை
செய்வது மற்றும் சிரேஷ்டாச்சாரி (உயர்வான) உலகத்தை உருவாக்குவது என்பது ஒரு தந்தையின் வேலைதான்
ஆகும். மற்ற தொடர்புகளை புத்தியிலிருந்து நீக்கி ஒருவரின் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
தேகத்துடன் சேர்த்து கண்ணால் காணக்கூடிய அனைத்திலிருந்தும் நீக்க வேண்டும். இப்போது நாம் திரும்பிச்
(2/4)
18.08.2016
செல்ல வேண்டும், ஆகையால் வீட்டைத்தான் நினைவு செய்ய வேண்டும். இது மரணலோகம் என இப்போது
நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நாம் அமரலோகத்திற்குச் செல்வதற்காக அமரகதையை கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
தேவதைகள் தெய்வீக குணமுள்ள மனிதர்கள் என சொல்லப்படுகின்றனர். இங்கே ஒருவர் கூட இருக்க
முடியாது. கிருஷ்ணர் குறித்து கூட எவ்வளவு இழிவாக எழுதி விட்டுள்ளனர். புத்தியில் எதுவும் வருவதில்லை.
இப்போது குழந்தைகளாகிய நீங்கள் நல்ல விதமாக முயற்சி செய்ய வேண்டும், தெய்வீக குணங்களை
தாரணை செய்ய வேண்டும். தெய்வீக குணம் என எதற்கு சொல்லப்படுகிறது என்பதும் கூட புரிய வைக்கப்
படுகிறது. முழுமையான விகாரமற்றவராக கண்டிப்பாக ஆக வேண்டும். இது முக்கியமான முதன்மையான
குணமாகும். அங்கும் இங்கும் என எங்கே பார்த்தாலும் தூய்மையானவர் முன் தலை வணங்குகின்றனர்.
சத்யுகத்தில் தூய்மையாகத்தான் இருப்பார்கள், ஆகவே அங்கே கோவில் இருப்பதில்லை. பிறகு பூஜாரிகள்
ஆகும்போது கோவில்களை கட்டுகின்றனர், தூய்மையாய் இருந்தவர்களே தூய்மையற்றவராக ஆகின்றனர்.
இது பல பிறவிகளின் கடைசி பிறவியாகும்.. இந்த பழைய உலகத்தை, பழைய சரீரத்தையும் கூட மறந்து போக
வேண்டும். இந்த பழைய உலகம் இப்போது அழிய வேண்டியுள்ளது. இது முடிந்து போவதில் தாமதம் எதுவும்
ஆகாது. இந்த பழைய உலகம், செல்வம், சொத்துக்கள் அனைத்தும் போயே போய்விட்டது. கொஞ்ச நாட்கள்
மீதி உள்ளது. இந்த பழைய உலகம் அழியப்போகிறது என உலகில் யாருக்கும் தெரியாது. நீங்கள் சொல்கிறீர்கள்,
ஆனால் நம்பிக்கை இருக்க வேண்டுமே. பகவானுடைய மகா வாக்கியம் என எப்போது புரிந்து கொள்கிறார்களோ
அப்போது புத்தியில் பதியும்.
தன்னை ஆத்மா என புரிந்து கொண்டு தந்தையான என்னை நினைவு செய்யுங்கள் என தந்தை
குழந்தைகளாகிய உங்களுக்கு கூறுகிறார். எல்லைக்கப்பாற்பட்ட தந்தை நமக்கு இராஜயோகம் கற்பிக்கிறார் என
குழந்தைகளுக்குத் தெரியும். அவர் அனைத்து ஆத்மாக்களின் தந்தை ஆவார். அனைவரும் சகோதரர்கள்
ஆவர். சொர்க்கத்தில் அனைத்து சகோதரர்களும் சுகம் மிக்கவர்களாக இருந்தனர், நரகத்தில் அனைத்து
சகோதரர்களும் துக்கம் மிக்கவர்களாக இருக்கின்றனர். அனைத்து ஆத்மாக்களும் நரகவாசிகள் ஆவர். அனைத்து
ஆத்மாக்களுமே நரகவாசிகளாக உள்ளனர். ஆத்மா மட்டும் இருக்காது அல்லவா. சரீரமும் தேவை அல்லவா.
இப்போது குழந்தைகளாகிய நீங்கள் ஆத்ம அபிமானி ஆக வேண்டும். இதில்தான் உழைக்க வேண்டியுள்ளது.
சித்தி வீடு போல அல்ல. முதலில் பரமபிதா பரமாத்மா நம்மை படிப்பிக்கிறார் என்ற நிச்சயம் ஏற்படும்போது
இந்த நிலை உறுதியாக ஆகும். சிவபாபா வருவதே இந்த சரீரத்தின் மூலம் படிப்பிப்பதற்காகும். நாமும்
சரீரத்தின் மூலம் கேட்கிறோம், தாரணை செய்கிறோம். சம்ஸ்காரங்களை அனுசரித்துத்தான் ஒரு சரீரத்தை
விட்டு மற்றொன்றை தாரணை செய்கிறோம். பாபா சண்டை செய்பவர்களின் உதாரணத்தை சொல்வது போல
ஆகும். சண்டை போடும் சம்ஸ்காரத்தை எடுத்துச் சென்றால் பிறகு அப்படிப்பட்டவர்களாகத்தான் (மறுபிறவியில்)
வருவார்கள். நிராகாரமான எல்லைக்கப்பாற்பட்ட தந்தைக்குள் என்ன சம்ஸ்காரங்கள் உள்ளன என இப்போது
தந்தையின் சம்ஸ்காரங்கள் பற்றியும் உங்களுக்குத் தெரியும். அவர் மனித சிருஷ்டியின் விதை ரூபம் ஆவார்.
பதித பாவனர், ஞானக் கடல் ஆவார். அவர்தான் வந்து தூய்மையாக்குவார். என்னை மட்டும் நினைவு
செய்தீர்கள் என்றால் உங்களின் பிறவி பிறவிகளின் பாவ கர்மங்கள் அழிந்து போகும் என தந்தை சொல்கிறார்.
இல்லாவிட்டால் அதிக தண்டனைகளை அனுபவிக்க வேண்டியிருக்கும். பதவி எதுவும் கிடைக்காது.
பாபா நமக்கு சகஜமான வழியைச் சொல்லிக் கொடுக்கிறார் என இப்போது குழந்தைகள் அறிவீர்கள்.
மன்மனாபவ என சொல்கிறார். இந்த வார்த்தையும் கீதையில் இருக்கிறது, ஆனால் இதன் அர்த்தத்தை புரிந்து
கொள்வதில்லை. என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என தந்தை சொல்கிறார். தேகத்துடன் சேர்த்து தேகத்தின்
அனைத்து தர்மங்களையும் விடுத்து தன்னை ஆத்மா என புரிந்து பரமபிதா பரமாத்மாவாகிய என்னை
நினைவு செய்யுங்கள். நினைவுதான் யோக அக்னி எனப்படுகிறது. யோகம் என்பது பொதுவான வார்த்தை
ஆகும். கீதையிலும் உள்ளது, ஆனால் கிருஷ்ணரின் பெயரைப் போட்டுவிட்டதால் மட்டுமே அடர்ந்த காரிருளாக
ஆக்கி விட்டனர். இப்போது நீங்கள் எடுத்துக் கூறினால், இவையெல்லாம் உங்கள் கற்பனை என்று சொல்லி
விடுகின்றனர். கொஞ்சமும் தெரிவதில்லை. அவர்கள் ஆஸ்தியை எடுத்துத்தான் ஆக வேண்டும். இவர்
எல்லைக்கப்பாற்பட்ட தந்தை, தந்தையாகவும் இருக்கிறார், ஆசிரியராகவும் இருக்கிறார், சத்குருவாகவும் இருக்கிறார்,
அவர் நம்மைப் படிப்பிக்கிறார் என முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உறுதியான நம்பிக்கை தேவை.
புதிய மனிதர்களுக்கு நம்பிக்கை ஏற்படுவது என்பது நடக்காத ஒன்று. ஒரு சில புதிய புதியவர்கள்
புத்திசாலிகளாகவும் இருக்கின்றனர், புரிந்து கொள்கின்றனர். சிலரோ இங்கே வரவே விரும்புவதில்லை, கொஞ்சமும்
புரிந்து கொள்வதில்லை. கொஞ்சமும் புத்தியில் வருவதில்லை. இவ்வளவு அளவற்ற பி.கு.க்கள் (பிரம்மா
குமார்லிகுமாரிகள்) இருக்கின்றனர், கண்டிப்பாக இவர்களுக்கு தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைத்திருக்கும். அது
குடும்பமாக ஆகிவிட்டது. பெயரும் பிரஜாபிதா பிரம்மாகுமார் லி பிரம்மாகுமாரி என எழுதப்பட்டுள்ளது எனும்போது
குடும்பம் என்றாகிவிட்டது அல்லவா. பிரஜாபிதா பிரம்மாவின் குடும்பம் எவ்வளவு பெரியது, ஆனால் இந்த
18.08.2016
(3/4)
விஷயம் யாருடைய புத்தியிலும் வர வாய்ப்பில்லை. உங்களுடைய இலட்சியம் குறிக்கோள் என்ன? என
யாராவது கேட்டால் சொல்லுங்கள் லி வெளியே பெயர்ப்பலகையில் பிரஜாபிதா பிரம்மாகுமார் குமாரிகள் என
போடப்பட்டுள்ளது எனும்போது குடும்பம் என்றாகிவிட்டது. தாத்தாவிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது. பிரஜாபிதா
பிரம்மாவின் வாய் மூலம் சிவபாபா படைப்பை படைக்கிறார். எனவே இவர் படைப்பவர் ஆகிறார், சொர்க்கத்தைப்
படைக்கிறார் எனும்போது கண்டிப்பாக குழந்தைகளுக்கு சொர்க்கத்தின் ஆஸ்தியை கொடுப்பார். ஆக இது
குடும்பமாகி விட்டதல்லவா. தந்தை, குழந்தைகள் மற்றும் தாத்தா ஆகியோர் உள்ளனர். பிரம்மாவும் இருக்கிறார்,
சிவனும் இருக்கிறார். அவர் படைப்பவர் ஆவார். நிராகாரமானவர் எனும்போது குழந்தைகளுக்கு ஆஸ்தியை
எப்படி கொடுப்பார்? பிரம்மாவின் மூலம் ஆஸ்தியை கொடுக்கிறார். இதை நல்ல விதமாக புரிய வைக்க
வேண்டும். இது உங்களுடைய தந்தையின் வீடு என சொல்லுங்கள். இதை ருத்ர ஞான யக்ஞம் என
சொல்கிறோம். நாங்கள் பிராமணர்கள், தந்தையைத் தவிர இராஜயோகத்தை வேறு யாராலும் கற்பிக்க முடியாது.
கீதையிலும் உள்ளதல்லவா லி மன்மனாபவ அதாவது (மாமேகம்) என்னை மட்டும் நினைவு செய்யுங்கள்.
ஆக, நாங்கள் அந்த ஒரு தந்தையைத்தான் நினைவு செய்கிறோம். பாபா நீங்கள் வந்தீர்கள் என்றால் நாங்கள்
பலியாகி விடுவோம், நாங்கள் உங்களுடையவர் ஆவோம் என பக்தி மார்க்கத்தில் பாடுகின்றனர். ஆத்மாக்களாகிய
நாங்கள் இந்த தேகத்தை விட்டு விட்டு உங்களுடன் சென்று விடுவோம். உங்களுடையவர்களாக ஆகுவோம்
எனும்போது உங்களுடன் கூட செல்வோம். நிச்சயதார்த்தம் செய்தால் மணமகன் உடன் அழைத்துச் செல்வார்
அல்லவா. இந்த சிவனாகிய மணமகனும் சொல்கிறார் லி நான் உங்களை இந்த துக்கத்திலிருந்து விடுவித்து
சுகதாமத்திற்கு அழைத்துச் செல்வேன். பிறகு அவரவருடைய முயற்சிக்குத் தகுந்தாற்போல சென்று இராஜ்யம்
செய்வோம், யார் எவ்வளவு ஞான செல்வத்தை தாரணை செய்கின்றனரோ அந்த அளவு உயர்ந்த பதவியை
அடைவார்கள். சின்ன சின்ன குமாரிகள் கூட சேவை செய்து கொண்டிருக்கின்றனர். அவர்கள்தான் பெரிய
பெரிய வித்வான்கள், பண்டிதர்கள் முதலானவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். ஆர்வம் இருக்க வேண்டும்.
குத்துச் சண்டை நடக்கும்போது இவர்களுடன் நாம் சண்டையிடுவோம் என பெரிய பெரிய சவால்கள் விடுகின்றனர்.
சேவை செய்யத்தக்க குழந்தைகள் ஓய்ந்து தூங்கக் கூடாது. ஓய்வு தவிர்க்க வேண்டிய ஒன்றாகும். தம்மை
மகாரதி என புரிந்து கொண்டிருப்பவர்கள் சுகமாக தூங்கக் கூடாது. சேவையில் சுற்றிக் கொண்டிருக்க வேண்டும்.
இன்றைய நாட்களில் பாபா கண்காட்சிகள் நிறைய நடத்திக் கொண்டிருக்கிறார். பெரிய பெரியவர்களுக்கு
அழைப்பிதழ் அனுப்புங்கள். இப்போதில்லாவிட்டாலும் பின்னர் வருவார்கள். சாது சன்னியாசிகள், மஹாத்மாக்கள்
யாராயினும் எழுப்பியபடி இருங்கள், ஆனால் அவர்களுடன் பேசுவதற்கு மகாரதிகள் தேவைப்படுகிறார்கள்.
யாருக்கு தந்தையிடம் நினைவின் தொடர்பு இல்லையோ, அன்பில்லையோ அவர்கள் காலி மேகங்கள்
போன்றவர்கள். அவர்கள் என்ன செய்வார்கள்? படித்தவர்களின் முன்னால் படிக்காதவர்கள் மூட்டை தூக்குவார்கள்
என்பதையும் அறிவீர்கள். நாம் எதுவரை படித்திருக்கிறோம் என அனைவருமே தன்னைப் பற்றி புரிந்து
கொள்ள முடியும். சேவை செய்து காட்டுவேன் எனக் கூற வேண்டும். மேகம் நிரம்பியிருந்தும் பொழியவில்லை
என்றால் அந்த மேகத்தால் என்ன லாபம்? ஒவ்வொருவருக்கும் தன்னைப் பற்றி புரிந்திருக்க வேண்டும்.
வீணான தேக அபிமானத்தின் போதையில் இருந்தால் எப்போதும் உயர்ந்த பதவியே அடைய முடியாமல்
இழந்து விடுவீர்கள். பாபாவுக்கு சேவையின் ஆர்வம் எவ்வளவு இருக்கிறது. எங்களுக்கு ஹால் கொடுங்கள்,
அங்கே நாங்கள் இந்த ஆன்மீக சேவை செய்து மனிதர்களை தேவதைகளாக ஆக்குவோம் என அரசாங்கத்திற்குப்
புரிய வைக்க வேண்டும். தந்தை வந்ததே இராஜயோகம் கற்பிப்பதற்காக, ஆனால் யுக்தி யுக்தமாக புரிய
வைக்க வேண்டும். சொற்பொழிவு செய்யவே தெரியாதவர்கள் புரிய வைக்க முடியாது. சேவை செய்பவர்கள்
பதவியை அடைய முடியும். இந்த ஞானம் இல்லாமல் பாரதத்தின் மற்றும் உலகின் நன்மை ஏற்பட முடியாது.
படிப்பு முக்கியமானது. இந்த லட்சுமி நாராயணர் கூட படிப்பின் மூலமே உயர் பதவியை அடைந்தனர்
அல்லவா. முந்தின பிறவியில் இராஜயோகம் கற்றனர். நாமும் கூட இப்போது இங்கே படித்துக் கொண்டிருக்கிறோம்.
நாங்கள் இந்த பரீட்சை எழுதி பின் சென்று இன்னாராக ஆகப் போகிறோம் என பள்ளியில் மாணவர்களும்
புரிந்து கொள்கின்றனர். உங்களுக்கு கிடைக்கும் இந்த ஞானம் இந்த உலகிற்கானதல்ல. நீங்களும் எதிர்காலத்தின்
21 பிறவிகளுக்கான பலனை உருவாக்குவதற்காக படிக்கிறீர்கள். அவர்கள் இந்த பிறவியின் சுகத்திற்காகப்
படிக்கின்றனர். எனவே அதையும் படிக்க வேண்டும், கூடவே இந்த படிப்பையும் கற்றுக் கொள்ள வேண்டும்,
இதில் பயப்பட வேண்டிய விசயம் ஏதுமில்லை. ஆன்மீக ஞானத்தை ஏன் எடுக்கக் கூடாது? படங்களை
எடுத்துச் சென்று புரிய வைக்க வேண்டும். ஞானம் அனைவருக்கும் மிக அவசியமாகும் என சொல்லுங்கள்.
ஆனால் குழந்தைகள் எழுந்து நிற்பதில்லை (தயாராவதில்லை). வேலைச் சுமையில் சிக்கிக் கொண்டுள்ளனர்.
பந்தனத்திலிருந்து விடுபட்டவர் என்றால் பிறகு சேவையில் ஈடுபட்டு விடவேண்டும். அனைவரும் ஸ்ரீமத்படி
நடப்பவர்களாக இல்லை. இடையில் மாயை அடி கொடுத்து விடுகிறது. சில குழந்தைகளுக்கு மிகவும் ஆர்வம்
இருக்கிறது, ஆனால் நாம் சென்று பலருக்கும் நன்மை செய்வோம் என்ற போதை ஏறுவதில்லை. பாபாவும்
இந்த இளமைப்பருவத்தில் ஏமாற்றத்தை ஏன் அடைய வேண்டும் என புரிந்து கொள்வார். நாங்கள் பாரதத்தை
18.08.2016
(4/4)
முன்னேற்ற வேண்டும் என சொல்ல முடியும். உண்மையான சேவை செய்து மனிதர்களை தேவதைகள்
ஆக்க வேண்டும். பாபாவுக்கு ஆச்சரியம் ஏற்படுகிறது, போதை ஏறுவதில்லை ஆகையால் ரஜோ புத்தி என
பாபா சொல்கிறார். மிக நல்ல வாய்ப்புள்ளது. பலரும் ஞானத்தின் கர்வம் மிக்கவர்களாக உள்ளனர் ஆனால்
எதிர் சேவை (டிஸ்லிசர்வீஸ்) நிறைய செய்கின்றனர். அவர்களுக்கும் பாபாவுக்கும் மட்டுமே இது தெரியும். (இது
வெல்லத்துக்குத் தெரியும், வெல்லப் பைக்குத் தெரியும்) ராகுவின் கிரகாச்சாரம் பிடித்து விடுகிறது. பிருஹஸ்பதி
தசை (குரு பார்வை) இறங்கி ராகுவின் தசை அமர்ந்து விடுகிறது. அவ்வப்போது பாருங்கள் நன்றாக நடந்து
கொண்டிருக்கின்றனர், அப்போது பாருங்கள் கிரகாச்சாரம் பிடித்து விடுகிறது, விழுந்து விடுகின்றனர். குழந்தை
களுக்கு நிறைய தைரியம் இருக்க வேண்டும். சபதம் எடுக்க வேண்டும். நாங்கள் இந்த பாரதத்தை சொர்க்க
வாசியாக ஆக்கிவிட்டுத்தான் ஓய்வோம். உங்களின் தர்மம் நரகவாசிகளை சொர்க்கவாசிகளாக ஆக்குவதாகும்.
பிரஷ்டாச்சாரிகளை (கீழானவர்களை) சிரேஷ்டாச்சாரிகளாக (உயர்வானவர்களாக) ஆக்க வேண்டும். பாபா நன்றாக
போதையை ஏற்றுகிறார், ஆனால் குழந்தைகளுக்குள் வரிசைக்கிரமமாகத்தான் போதை ஏறுகிறது. நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு
தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம் :
1. பந்தனத்திலிருந்து விடுபட்டவர் ஆகி பாரதத்திற்கு உண்மையான சேவை செய்ய வேண்டும்.
ஆன்மீக சேவை செய்து மனிதர்களை தேவதைகள் ஆக்க வேண்டும். ஞானத்தின் கர்வத்தில்
வரக்கூடாது. ஆன்மீக போதையில் இருக்க வேண்டும்.
2. நிச்சய புத்தியுள்ளவராகி முதலில் தன் நிலையை உறுதியாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
தேகத்துடன் சேர்த்து கண்ணால் பார்க்கக் கூடிய அனைத்தையும் மறந்து ஒரு தந்தையுடன்
தொடர்பை ஈடுபடுத்த வேண்டும்.
வரதானம் : சுயநலமற்ற சேவையின் மூலம் உலக இராஜ்யத்தை பலனாக அடையக் கூடிய
உலகத்திற்கு நன்மை செய்யக் கூடியவர் மற்றும் இரக்க மனமுள்ளவர் ஆகுக !
சுயநலமற்ற சேவாதாரிகளுக்கு நான் இவ்வளவு செய்தேன், எனக்கு இதன் மூலம் கொஞ்சம் மரியாதை,
கௌரவம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் வர முடியாது, இதுவும் கேட்டும், பெறுவது போல்தான்
ஆகும். வள்ளலின் குழந்தைகளுக்கு, பெற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் கூட அவர்கள் வள்ளல்
அல்ல. இப்படி பெறுவதும் கூட தருபவர்களுக்கு முன்னால் அழகாக இருக்காது. எப்போது இந்த எண்ணம்
முடிந்து போகுமோ அப்போது உலக மஹாராஜன் என்னும் அந்தஸ்து (உயர் பதவி) பிராப்தி ஆகும். இப்படிப்பட்ட
சுயநலமற்ற சேவாதாரி, எல்லைக்கப்பாற்பட்ட வைராக்கியமுள்ளவர்தான் உலக நன்மையாளராகவும் இரக்க
மனமுள்ளவராகவும் ஆகிறார்.
சுலோகன் : தனது தவறை பிறர் மீது போடுவதும் கூட பரசிந்தனையே ஆகும்.
(1/4)
19
.08.2016 காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! நினைவில் இருப்பதன் மூலம் நல்ல திசை (சத்குருவின் பார்வை)
அமர்கிறது இப்போது உங்களுக்கு குரு திசை நடைபெறுகிறது, ஆகையால் நீங்கள் முன்னேறும்
கலையில் இருக்கிறீர்கள்.
கேள்வி: நினைவில் முழு கவனம் செலுத்தவில்லையெனில் அதன் பலன் என்னவாக இருக்கும்?
நிரந்தரமாக நினைவில் இருப்பதற்கான யுக்தி என்ன?
பதில்: நினைவின் மீது முழு கவனம் செலுத்தவில்லையெனில் நாளடைவில் மாயை பிரவேசம் ஆகிவிடும்,
கீழே விழுந்து விடுவர். 2) தேக அபிமானமுடையவர்களாகி பல தவறுகள் செய்து கொண்டே இருப்பர். மாயை
தவறான காரியங்களைச் செய்வித்துக் கொண்டே இருக்கும். தூய்மை இழக்கச் செய்துவிடும். நிரந்தரமாக
நினைவில் இருப்பதற்கு வாயில் கூழாங்கல்லைப் (வாய்ப்பூட்டு) போட்டுக் கொள்ளுங்கள், கோபப்படாதீர்கள்,
தேகம் உட்பட அனைத்தையும் மறந்து, நான் ஆத்மா, பரமாத்மாவின் குழந்தை என்ற பயிற்சி செய்யுங்கள்.
யோக பலத்தினால் என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை நினைவில் வையுங்கள்.
பாட்டு: ஓம் நமச் சிவாய .......
ஓம்சாந்தி. இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் தங்களது ஆன்மீகத் தந்தையாகிய
சிவபாபா வின் மகிமை கேட்டீர்கள். எப்போது பாவம் அதிகரிக்கிறதோ அதாவது மனிதர்கள் பாவ ஆத்மாக்களாக
ஆகிவிடுகிறார்களோ அப்போது தான் அனைவரையும் தூய்மையாக்குகின்ற தந்தை வருகின்றார், வந்து
தூய்மையற்றவர்களை தூய்மை ஆக்குகிறார். அந்த எல்லையற்ற தந்தைக்குத் தான் மகிமை இருக்கிறது, அவர்
விருட்சபதி என்றும் அழைக்கப்படுகின்றார். இந்த நேரத்தில் எல்லையற்ற தந்தையின் மூலம் எல்லையற்ற
திசை, குரு திசை உங்களுக்கு (நன்மை) நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பொதுவாக மற்றும் குறிப்பாக
இரண்டு வார்த்தைகள் இருக்கும் அல்லவா! இதற்கான பொருளும் இங்கு தான் நிரூபணம் ஆகிறிது. குரு
திசையின் மூலம் குறிப்பாக பாரதம் ஜீவன்முக்தி உடையதாக ஆகிவிடுகிறது, அதாவது தனது சுய இராஜ்ய
பதவியை அடைகிறது, ஏனெனில் எந்த சத்திய தந்தையை சத்தியமானவர் என்று கூறுகிறார்களோ அவர்
வந்து நம்மை நரனிலிருந்து நாராயணனாக ஆக்குகின்றார். மற்றவர்கள் அனைவரும் வரிசைக் கிரமமாக
அவரவர்களது தர்மத்திற்கான பிரிவில் (செக்சன்) சென்று அமருவார்கள் மற்றும் வருவதும் வரிசைக் கிரமமாக
வருவார்கள். கலியுகத்தின் கடைசி வரை வந்து கொண்டே இருக்கின்றனர். ஒவ்வொரு ஆத்மாவிற்கும் அவரவது
தர்மத்தில் அவரவர்களுக்கென்று பாகம் கிடைத்திருக்கிறது. இராஜ்யத்தில் இராஜாவிலிருந்து பிரஜை வரைக்கும்
அனைவருக்கும் அவரவர்களுக்கான பாகம் கிடைத்திருக்கிறது. நாடகம் என்றாலே இராஜாவிலிருந்து பிரஜை
வரைக்கும் ஆகும். அனைவரும் அவரவர்களது பாகம் நடிக்க வேண்டும். இப்போது நமக்கு குரு திசை
நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை குழந்தைகள் அறிவீர்கள். ஒரே ஒரு நாள் மட்டுமே அமர்கிறது
என்பது கிடையாது. உங்களுக்கு குரு திசை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்போது நீங்கள் முன்னேறும்
கலையில் இருக்கிறீர்கள். எந்த அளவு நினைவு செய்வீர்களோ அந்த அளவு முன்னேற்றம் ஆகும். நினைக்க
மறந்து விடுவதால் மாயையின் தடைகள் வருகின்றன. நினைவின் மூலம் நல்ல திசை வந்து விடுகிறது. நல்ல
முறையில் நினைவு செய்யவில்லையெனில் அவசியம் கீழே விழுவார்கள். பிறகு அவர்கள் மூலம் ஏதாவது
தவறுகள் நிகழும். நாடகப்படி அனைத்து தர்மத்தினர்களும் ஒருவருக்குப் பின்னால் நடிப்பு நடிப்பதற்காக
வருகின்றனர் என்பதை பாபா புரிய வைத்திருக்கின்றார். சொர்கத்தின் திசை அதாவது ஜீவன்முக்தி அடைவதற்கான
குரு பார்வை இப்போது நம் மீது ஏற்பட்டிருக்கிறது என்பதை குழந்தைகள் அறிவீர்கள். இந்த நாடகச் சக்கரம்
எவ்வாறு சுழல்கிறது? என்பதையும் விரிவாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். இந்த சிருஷ்டிச் சக்கரம் குறிப்பாக
பாரதத்திற்காகத் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. தந்தையும் பாரதத்தில் தான் வருகின்றார். ஆச்சரியத்துடன்
கேட்பர், கூறுவர் பிறகு சென்று விடுவர் ........ என்றும் பாடப்பட்டிருக்கிறது. நாளடைவில் மாயை பிரவேசம்
ஆகின்ற காரணத்தினால் கீழே விழுந்து விடுவர். யோகா மீது முழு கவனம் கொடுப்பது கிடையாது, பிறகு
தந்தை வந்து சஞ்சீவினி மூலிகை கொடுக்கின்றார், அதாவது மயக்கத்தைப் போக்கக் கூடிய மூலிகையாகும்.
நீங்கள் தான் ஹனுமானாகவும் இருக்கிறீர்கள். இராவணனை விரட்ட இந்த மூலிகையை முகரச் செய்வதற்காகக்
கொடுக்கிறேன் என்ற தந்தை புரிய வைத்திருக்கின்றார். தந்தை உங்களுக்கு அனைத்து சத்தியமான
விசயங்களையும் கூறுகின்றார். சத்தியமானவர் ஒரே ஒரு தந்தை ஆவார், அவர் வந்து உங்களுக்கு சத்திய
நாராயணன் கதை கூறி சத்திய யுகத்தை ஸ்தாபனை செய்கின்றார். இவர் சத்தியமானவர் என்று அழைக்கப்
படுகின்றார், சத்தியத்தை கூறக் கூடியவர். நீங்கள் சாஸ்திரங்களை ஏற்றுக் கொள்வீர்களா? என்று உங்களிடம்
கேட்கின்றனர். ஆம், நாங்கள் ஏன் சாஸ்திரங்களை ஏற்றுக் கொள்ளமாட்டோமா என்ன ! இவை அனைத்தும்
(2/4)
19.08.2016
பக்தி மார்கத்தின் சாஸ்திரங்கள் ஆகும் என்பதை அறிவீர்கள். இதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று
கூறுங்கள். ஞானம் மற்றும் பக்தி இரண்டு விசயங்களாகும். ஞானம் கிடைத்து விடும் போது பிறகு பக்திக்கு
என்ன அவசியம் இருக்கிறது? பக்தி என்றால் கீழே இறங்கும் கலையாகும். ஞானம் என்றால் முன்னேறும்
கலையாகும். இந்த நேரத்தில் பக்தி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்போது நமக்கு ஞானம் கிடைத்திருக்கிறது,
இதன் மூலம் சத்கதி கிடைக்கிறது. பக்தர்களை பாதுகாக்கக் கூடியவர் ஒரே ஒரு பகவான் ஆவார். பாதுகாப்பது
என்றால் எதிரியிடமிருந்து பாதுகாப்பதாகும் அல்லவா! நான் வந்து உங்களை இராவணனிடமிருந்து உங்களை
பாதுகாக்கிறேன் என்று தந்தை கூறுகின்றார். இராவணனிடமிருந்து எப்படியெல்லாம் பாதுகாப்பு கிடைக்கிறது!
என்பதை பார்க்கிறீர்கள் அல்லவா! இந்த இராவணனின் மீது வெற்றி அடைய வேண்டும். இனிமையான
குழந்தைகளே! இந்த இராவணன் உங்களை தமோபிரதானமாக ஆக்கி விட்டது என்று தந்தை புரிய வைக்கின்றார்.
சத்யுகமானது சதோ பிரதானம், சொர்க்கம் என்று கூறப்படுகிறது. பிறகு கலைகள் குறைய ஆரம்பித்து விடுகிறது.
கடைசியில் எப்போது முற்றிலும் தேக அபிமானத்தில் வந்து விடுடூர்களோ அப்போது தூய்மையை இழந்து
விடுகிறீர்கள். புது கட்டடம் உருவாக்கப்படுகிறது. சில மாதங்களுக்குப் பிறகு அதாவது 6 மாதத்திற்குப் பிறகு
சிறிது கலைகள் குறைந்து விடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கட்டிடத்திற்கு சுண்ணாம்பு பூசப்படுகிறது. கலைகள்
குறைந்து விடுகிறது அல்லவா! புதியதிலிருந்து பழையது, பழையதிலிருந்து பிறகு புதியதாக ஆகிவிடுகிறது,
இவ்வாறு ஆரம்பத்திலிருந்து ஒவ்வொரு விசயத்திற்கும் நடைபெற்று வருகிறது. இந்த கட்டடம் 100, 150
ஆண்டு காலம் வரை இருக்கும் என்று கூறுவர். புது உலகம் தான் சத்யுகம் என்று கூறப்படுகிறது என்று
தந்தை புரிய வைக்கின்றார். பிறகு திரேதாவை 25 சதவிகிதம் குறைந்து விட்டது என்று கூறலாம். ஏனெனில்
சிறிது பழையதாக ஆகிவிடுகிறது. அது சந்திரவம்சமாகும். அதற்கு சத்ரியனின் அடையாளம் கொடுக்கின்றனர்,
ஏனெனில் புது உலகிற்கு தகுதியானவர்களாக ஆகவில்லை, அதனால் தான் குறைந்த பதவி ஏற்பட்டு விட்டது.
கிருஷ்ணபுரிக்குச் செல்ல வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். இராமபுரிக்கு செல்ல வேண்டும்
என்று ஒருபோதும் கூறுவது கிடையாது. அனைவரும் கிருஷ்ணபுரி தான் கூறுகின்றனர். பிருந்தாவனம்
செல்லுங்கள், இராதா கோவிந்தன் என்று பஜனை செய்யுங்கள் ........ என்றும் பாடுகின்றனர் அல்லவா! பிருந்தாவனத்
திற்கான விசயமாகும். அயோத்தியாவிற்காக கூறுப்படுவது கிடையாது. அனைவருக்கும் ஸ்ரீகிருஷ்ணர் மீது
மிகுந்த அன்பு இருக்கிறது. கிருஷ்ணரை மிக அன்பாக நினைவு செய்கின்றனர். கிருஷ்ணரைப் பார்த்ததும்
இவரைப் போன்று கணவர் கிடைக்க வேண்டும், இவர் போன்ற குழந்தை வேண்டும், இவர் போன்ற சகோதரன்
வேண்டும் என்று கூறுகின்றனர். புத்திசாலி சகோதர சகோதரிகள் கிருஷ்ணரின் மூர்த்தியை எதிரில் வைத்ததும்
இவர் போன்று குழந்தை வேண்டும் என்று நினைப்பர். கிருஷ்ணரின் அன்பில் பலர் இருக்கின்றனர் அல்லவா!
அனைவரும் கிருஷ்ணபுரியை விரும்புகின்றனர். இப்போது கம்சபுரியாக, இராவணபுரியாக இருக்கிறது.
கிருஷ்ணபுரிக்கு மிகுந்த மகத்துவம் இருக்கிறது. கிருஷ்ணரை அனைவரும் நினைவு செய்கின்றனர். அதனால்
தான் தந்தை கூறுகின்றார் லி நீங்கள் அதிக காலம் நினைவு செய்து வந்தீர்கள். இப்போது கிருஷ்ணபுரி
செல்வதற்கான முயற்சி செய்யுங்கள், அவரது வம்சத்தில் வந்து விடுங்கள். சூரியவம்சத்தில் 8 வம்சம் இருக்கிறது
எனில் அந்த அளவிற்கு முயற்சி செய்யுங்கள், அதாவது இராஜ்யத்தில் வந்து இராஜகுமாரருடன் ஊஞ்சல்
ஆட வேண்டும். இது புரிந்து கொள்ள வேண்டிய விசயம் அல்லவா! தந்தை கூறுகின்றார் லி குழந்தைகளே!
எவ்வளவு முடியுமோ மன்மனாபவ, இந்த நிலையில் இருங்கள். நினைவில் இல்லாததால் தான் கீழே விழுந்து
விடுகிறீர்கள். ஞானம் ஒருபோதும் கீழே விழு வைப்பது கிடையாது. நினைவில் இருப்பது கிடையாது, அதனால்
தான் கீழே விழுந்து விடுகிறீர்கள். இதைப் பற்றி தான் அல்லா, அலாவுதீன், ஹாத்மதாயி போன்ற நாடகங்களையும்
உருவாக்கியிருக்கின்றனர். நினைவில் இருப்பதற்காகவே வாயில் கூழாங்கற்களை போட்டுக் கொள்கின்றனர்.
யாருக்காவது கோபம் வந்து விட்டால் பேசி விடுகின்றார், அதனால் தான் வாயில் ஏதாவது போட்டுக் கொள்ளுங்கள்
என்று கூறுவர். பேசவேயில்லை எனில் கோபம் வராது. ஒருபோதும், யார் மீதும் கோபப்படக் கூடாது என்று
தந்தை கூறுகின்றார். ஆனால் இந்த விசயங்களை முழுமையாக புரிந்து கொள்ளாததால் சாஸ்திரங்களில் வேறு
விதமாக எழுதி விட்டனர். தந்தை யதார்த்தமாக அமர்ந்து புரிய வைக்கின்றார். தந்தை எப்போது வருகின்றாரோ
அப்போது தான் வந்து புரிய வைக்க முடியும். யார் வாழ்ந்திருந்து சென்றிருக்கிறார்களோ அவர்களுக்குத் தான்
மகிமை பாடப்படுகிறது. தாகூர், ஜான்சி ராணி போன்றவர்கள் வாழ்ந்து சென்றிருப்பதால் அதை நாடகமாக
உருவாக்குகின்றனர். நல்லது, சிவனும் இருந்து சென்றிருப்பதால் தான் சிவஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது
அல்லவா! ஆனால் சிவன் எப்போது வந்தார்? வந்து என்ன செய்தார்? என்பது தெரியாது. அவர் முழு
சிருஷ்டிக்கும் தந்தை ஆவார். அவர் வந்து அனைவருக்கும் அவசியம் சத்கதி கொடுத்திருக்க வேண்டும்.
இஸ்லாமி, பௌத்தர் போன்று யாரெல்லாம் தர்மத்தை ஸ்தாபனை செய்து விட்டு சென்றிருக்கிறார்களோ
அவர்களுக்கு ஜெயந்தி கொண்டாடுகின்றனர். அனைவருக்கும் தேதி, நாள் இருக்கிறது, இவரைப் (சிவபாபா)
பற்றி யாருக்கும் தெரியாது. கிறிஸ்து பிறப்பதற்கு இத்தனை ஆண்டுகளுக்கு முன்பு பாரதம் சொர்க்கமாக
இருந்தது என்று கூறவும் செய்கின்றனர். சுவஸ்திகா வரைகின்ற போது அதில் முழு 4 பாகமாக செய்கின்றனர்.
(3/4)
19.08.2016
4 யுகங்களாகும். ஆயுள் குறைவாகவோ, அதிகமாக இருக்க முடியாது. ஜெகந்நாத் புரியில் அண்டா நிறைய
சாதம் படைக்கின்றனர், அதை 4 பாகங்களாக பிரித்து விடுகின்றனர். பக்தி மார்க்கத்தில் இவ்வாறு ஒழுங்கு
முறை இல்லாமல் ஆக்கி விட்டனர் என்று தந்தை கூறுகின்றார். தேக சகிதமாக இவை அனைத்தையும்
மறந்து விடுங்கள் என்று இப்போது தந்தை கூறுகின்றார். நான் ஆத்மா, பரம்பிதா பரமாத்மாவின் குழந்தை
என்ற பயிற்சி செய்யுங்கள். பாபா சொர்க்கத்தை படைப்பவர் எனில் அவசியம் அவர் நம்மை சொர்க்கத்திற்கு
அனுப்பி வைத்திருக்கக் கூடும். நரகத்திற்கு அனுப்பி வைத்திருக்கமாட்டார். தந்தை யாரையும் நரகத்திற்கு
அனுப்பி வைப்பது கிடையாது. முதன் முதலில் அனைவரும் சுகம் அனுபவிக்கின்றனர். முதலில் சுகம், பிறகு
துக்கம். தந்தை அனைவரின் துக்கத்தைப் போக்கி சுகம் கொடுப்பவர் அல்லவா! ஆத்மா முதலில் சுகம், பிறகு
துக்கத்தை அனுபவிக்கிறது. நாம் முதலில் சதோ பிரதானமாக, பிறகு சதோ, ரஜோ, தமோவில் வருகிறோம்
என்று விவேகம் கூறுகிறது. அயல்நாட்டினர் புத்திசாலிகள் என்று மனிதர்களும் புரிந்திருக்கின்றனர். அங்கு
அணு ஆயுதங்களை அந்த அளவிற்கு தயாரிக்கின்றனர், அதாவது உடனேயே அழிந்து விடுவர். எவ்வாறு
இன்றைய நாட்களில் பிணத்தை கரண்ட் மூலம் உடனேயே எரித்து விடுகின்றனரோ, அவ்வாறு அணுகுண்டு
போடுவதன் மூலம் நெருப்பு பற்றிக் கொள்கிறது, மனிதர்கள் உடனேயே அழிந்து விடுவர். காடு தீ பற்றி எரிய
வேண்டும். அந்த அளவிற்கு புயல் வருகிறது அதாவது ஊர் முழுவதும் அழிந்து விடுகிறது. பிறகு
பாதுகாப்பதற்கான எந்த ஏற்பாடும் அந்த நேரத்தில் செய்ய முடியாது. விநாசம் ஏற்பட்டே ஆக வேண்டும்.
பழைய உலகம் அழிய வேண்டும். கீதையிலும் வர்ணிக்கப்பட்டிருக்கிறது. ஐரோப்பியர்கள் யாருக்கும் தெரியாத
அளவிற்கு அணுகுண்டுகளை ஏவுவார்கள். கல்பத்திற்கு முன்பும் விநாசம் ஏற்பட்டிருந்தது, இப்போதும் ஆகப்
போகிறது என்பதை குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள். நீங்களும் முந்தைய கல்பத்தைப் போன்று படித்துக்
கொண்டிருக்கிறீர்கள். சிறிது சிறிதாக மரம் வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கும். வளர்ச்சி அடைந்து அடைந்து
பிறகு ஸ்தாபனை ஆகிவிடும். மாயையின் புயல்கள் மிகவும் நல்ல நல்ல குழந்தைகளையும் கீழே தள்ளி
விடுகிறது. யோகாவில் முழுமையாக இல்லையெனில் மாயை தடைகளை உருவாக்குகிறது. தந்தையின்
குழந்தையாக ஆகி, தூய்மைக்கான உறுதிமொழி எடுத்துக் கொண்டு, பிறகு விகாரத்தில் விழுந்து விட்டால்
பெயர் கெடுத்து விடுவீர்கள். பிறகு மிகவும் ஜோராக அடி விழுகிறது. இந்த காமத்திடம் ஒருபோதும் அடி
வாங்கி விடக் கூடாது என்று தந்தை கூறுகின்றார். இங்கு ரத்த நதி பாயும் என்பதை குழந்தைகள் அறிவீர்கள்.
சத்யுகத்தில் பாலாறு ஓடும். அது புது உலகம், இது பழைய உலகமாகும். கலியுகத்தில் பாருங்கள் என்ன
இருக்கிறது! புது உலகின் மேன்மையை (செழிப்பை) பாருங்கள்! இங்கு இருப்பது அதற்கு ஈடாகாது. குழந்தைகள்
சாட்சாத்காரத்தின் போது சென்று பார்த்து விட்டு வருகின்றனர். சூட்சுமவதனத்தில் சூபீரஸ் (அமுதம்) குடித்தனர்,
இது செய்தனர், அது செய்தனர் போன்ற சாட்சாத்காரம் ஏற்பட்டது. நாம் மூலவதனத்திற்குச் செல்கிறோம்
என்று கூறுகின்றனர். பாபா வைகுண்டத்திற்கு அனுப்பி வைத்து விடுவார். இது போன்ற ஆரம்ப கால சாட்சாத்
காரமும் நாடகத்தில் பதிவாகியிருக்கிறது. இதனால் எந்த லாபமும் கிடையாது. பல குழந்தைகள் சூட்சும
வதனத்திற்கு சென்றவர், சூபீரஸ் (அமுதம்) போன்றவைகளை குடித்தனர், இன்று கிடையாது. நல்ல நல்ல
முதல்தரமான குழந்தைகள் காணாமல் போய் விட்டனர். அதிகமாக காட்சி பார்த்தவர்களும் சென்று திருமணம்
செய்து கொண்டனர். மாயை எப்படியெல்லாம் இருக்கிறது லி ஆச்சரியமாக இருக்கிறது. அதிர்ஷ்டம் எப்படி
தலை கீழாக ஆகிவிடுகிறது! பலர் நல்ல நல்ல பாகங்கள் நடித்திருக்கின்றனர். கஷ்டமான நேரத்தில் அதிக
உதவிகளும் செய்திருக்கின்றனர். இருப்பினும் இன்று கிடையாது. அதனால் தான் தந்தை கூறுகின்றார் லி
மாயையே! நீ மிகவும் வலிமையுடையதாக இருக்கிறாய். மாயையிடம் நீங்கள் யுத்தம் செய்கிறீர்கள். இது தான்
யோக பலத்தின் யுத்தம் என்ற கூறப்படுகிறது. யோக பலத்தின் மூலம் என்ன பலன் கிடைக்கும்? என்பது
யாருக்கும் தெரியாது. பாரதத்தின் பழமையான யோகா என்று மட்டுமே கூறுகின்றனர். இனிமையிலும்
இனிமையான குழந்தைகளுக்கு யோகா பற்றி புரிய வைக்கப்படுகிறது லி பழமையான இராஜயோகா என்று
கூறப்பட்டிருக்கிறது. தத்துவ ஞானிகள் யாராக இருந்தாலும் யாரிடத்திலும் ஆன்மீக ஞானம் கிடையாது.
ஆன்மீகத் தந்தை தான் ஞானக் கடல் ஆவார். அவரைத்தான் சிவாய நமஹ ! என்று பாடுகின்றனர். அவரது
மகிமைதான் பாடப்பட்டிருக்கிறது. தந்தை வந்து உங்களுக்கு எவ்வளவு ஞானத்தைப் புரிய வைக்கின்றார்! இது
தான் ஞானத்தின் மூன்றாவது கண் என்று கூறப்படுகிறது, தன்னை திரிகாலதர்சி என்ற கூறக் கூடிய சக்தி
வேறு யாரிடத்திலும் கிடையாது. திரிகாலதர்சிகளாக பிராமணர்கள் தான் ஆகின்றனர், அந்த பிராமணர்களின்
மூலம் யக்ஞத்தை படைத்திருக்கின்றார். ருத்ர ஞான யக்ஞம் அல்லவா! ருத்ரன் என்ற சிவனையும் கூறுகின்றனர்.
பல பெயர்கள் வைத்து விட்டனர். ஒவ்வொரு தேசத்திலும் வெவ்வேறு பெயர்கள் பல வைத்திருக்கின்றனர்.
ஒரு தந்தைக்குத் தவிர வேறு யாருக்கும் இந்த அளவிற்கு பெயர்கள் கிடையாது. இவரை பபுல்நாத் (முட்களை
மலராக ஆக்கக் கூடியவர்) என்றும் கூறுகின்றனர். யாரிடம் முட்கள் இருக்கிறதோ அவர்கள் தான் பபுல் (முள்
போன்றவர்) என்று அழைக்கப்படுகின்றனர். பாபா முட்களை மலர்களாக ஆக்கக் கூடியவர் ஆவார். அதனால்
தான் அவருக்கு பபூல்நாத் என்று பெயர் வைத்திருக்கின்றனர். மும்பையில் அவருக்கு அதிகமாக திருவிழா
(4/4)
19.08.2016
நடைபெறுகிறது. அர்த்தம் எதையும் புரிந்து கொள்வது கிடையாது. அவரது சரியான பெயர் சிவன் என்பதை
தந்தை அமர்ந்து புரிய வைக்கின்றார். வியாபாரிகளும் பிந்துவை சிவன் என்று கூறி விடுகின்றனர். ஒன்றையொன்று
எண்ணும் போது, 10 வருகின்ற பொழுது சிவா என்று கூறுவர். தந்தையும் கூறுகின்றார் லி நான் பிந்துவாக,
நட்சத்திரமாக இருக்கிறேன். பலர் இவ்வாறு இரண்டு திலகமும் வைத்துக் கொள்கின்றனர். தாய் மற்றம் தந்தை.
ஞான சூரியன் மற்றும் ஞான சந்திரனின் அடையாளமாகும். அவர்கள் சரியான அர்த்தத்தை அறிந்து
கொள்ளவில்லை. ஆக பாபா யோகாவைப் பற்றி புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார். யோகா எவ்வளவு
பிரபலமாக இருக்கிறது! இப்போது குழந்தைகளாகிய நீங்கள் யோகா என்ற வார்த்தையை விட்டு விடுங்கள்,
நினைவு செய்யுங்கள். தந்தை கூறுகின்றார் லி யோகா என்ற வார்த்தையின் மூலம் புரிந்து கொள்ளமாட்டார்கள்,
நினைவு என்பதன் மூலம் புரிந்து கொள்வர். தந்தையை அதிகமாக நினைவு செய்ய வேண்டும். அவர்
நாயகன் என்றம் கூறப்படுகின்றார். பட்டத்து ராணிகளாக ஆக்குகின்றார் அல்லவா! உலக இராஜ்யத்திற்கான
ஆஸ்தியை தந்தை கொடுக்கின்றார். சத்யுகத்தில் ஒரே ஒரு தந்தை தான் இருப்பார். பக்தியில் இரண்டு
தந்தைகள் இருப்பர், மற்றும் ஞான மார்க்கத்தில் இப்போது உங்களுக்கு மூன்று தந்தைகள் உள்ளனர். எவ்வளவு
ஆச்சரியமான விசயமாகும்! நீங்கள் அர்தத்துடன் அறிவீர்கள் லி சத்யுகத்தில் அனைவரும் சுகமாக இருப்பர்.
அதனால் தான் பரலௌகீகத் தந்தையை அறியவில்லை. இப்போது நீங்கள் மூன்று தந்தையை அறிவீர்கள்.
புரிந்துக் கொள்வதற்கு எவ்வளவு எளிய விசயமாகும்! நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய்
தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) நினைவில் இருப்பதற்காக வாயினால் எதுவும் பேசக் கூடாது. வாயில் கூழாங் கற்களை
போட்டுக் கொண்டால் கோபம் அழிந்து விடும். யாரிடமும் கோபித்து கொள்ளக் கூடாது.
2) இந்த துக்கதாமம் இப்போது தீ பற்றி எரியப் போகிறது, ஆகையால் இதை மறந்து புது
உலகை நினைவு செய்ய வேண்டும். தந்தையிடம் செய்த தூய்மைக்கான உறுதிமொழியில்
உறுதியாக இருக்க வேண்டும்.
வரதானம்: கட்டளைப்படி நடப்பதன் மூலம் அனைத்து
ஆசைகளையும் அழிக்கக் கூடிய மாயை புரூஃப் ஆகுக.
அமிர்தவேளையிலிருந்து இரவு வரைக்குமான தினச்சரியங்களில் என்ன கட்டளை கிடைத்திருக்கிறதோ
அதன் படி தனது மனநிலை, பார்வை, எண்ணம், நினைவு சேவை மற்றும் சம்மந்தங்கள் இருக்கிறதா? என்று
சோதனை செய்யுங்கள். யார் ஒவ்வொரு எண்ணத்திலும், ஒவ்வொரு அடியிலும் கட்டளைப்படி நடக்கிறார்களோ
அவர்களது அனைத்து ஆசைகளும் அழிந்து போய் விடும். ஒருவேளை உள்ளுக்குள் முயற்சி அல்லது
வெற்றிக்காக ஆசை இருந்தாலும் அவசியம் ஏதோ ஒரு கட்டளையை கடைபிடிக்கவில்லை என்பதாகும். ஆக
எப்போதெல்லாம் குழப்பம் வருகிறதோ அப்போது நாலாபுறமும் சோதனை செய்யுங்கள் லி இதன் மூலம்
தானாகவே மாயா புரூஃப் ஆகிவிடுவீர்கள்.
சுலோகன்: தனது சூட்சும (மிகச் சிறிய) பலவீனங்களை சிந்தனை செய்து
அதனை அழித்து விடுவது தான் சுய சிந்தனை ஆகும்.
(1/4)
20
.08.2016 காலைவகுப்பு ஓம்சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! உங்கள் அதிர்ஷடத்தை விழிக்கச் செய்ய பாபா வந்துள்ளார்,
பாவனமானால் தான் அதிர்ஷடம் விழிப்படையும்.
கேள்வி: குழந்தைகளின் அதிர்ஷ்டம் விழித்துள்ளது என்றால் அவர்களின் அடையாளம் என்ன?
பதில்:லி அவர்கள் சுகத்தின் தேவதையாக இருப்பார்கள். அவர்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து
சுகத்தின் ஆஸ்தியை பெற்று அனைவருக்கும் சுகத்தினைக் கொடுப்பார்கள். அவர்கள் ஒருபோதும் மற்றவர்களுக்கு
துக்கம் கொடுக்க மாட்டார்கள். அவர்கள் வியாசரின் உண்மையிலும் உண்மையான சுகதேவர்கள். 2) அவர்கள்
ஐந்து விகாரத்தினை சன்யாசம் செய்வது உண்மையிலும்லிஉண்மையான இராஜயோகி, இராஜரிμ என்று
அழைக்கப்படுகின்றனர். 3) அவர்களின் மனநிலை ஒருநிலையாக இருக்கும், அவர்கள் எந்த விஷயத்திற்காகவும்
அழ மாட்டார்கள். அவர்களைத் தான் மோகத்தை வென்றவர்கள் என்று கூறலாம்.
பாட்டு:லி அதிர்ஷ்டத்தை விழிக்கச் செய்து வந்துள்ளேன்.....
ஓம்சாந்தி. பாடலின் ஒரு வரியைக் கேட்டவுடன் இனிமையிலும்லி இனிமையான குழந்தைகளுக்கு
மெய்சிலிர்ப்பு ஏற்பட வேண்டும். இது பொதுவான பாடல் தான், ஆனால் இந்த பாடலின் சாரத்தை யாரும்
அறியவில்லை. பாபா தான் வந்து ஒவ்வொரு பாடலின், சாஸ்த்திரத்தின் அர்த்தத்தை புரிய வைக்கின்றார்.
இனிமையிலும்லி இனிமையான குழந்தைகள் கூட இந்த கலியுகத்தில் அனைவரின் அதிர்ஷ்டம் உறங்கி
உள்ளது என்பதை தெரிந்து கொண்டீர்கள். சத்தியயுகத்தில் அனைவரின் அதிர்ஷ்டம் விழிப்படைந்திருக்கும்.
உறங்கிக் கொண்டிருக்கும் அதிர்ஷ்டத்தை விழிக்கச் செய்யக் கூடியவர், மேலும் வழி காட்டக் கூடியவர்,
அதாவது அதிர்ஷ்டத்தை உருவாக்கக் கூடியவர் ஒரு பாபா தான். அவர் தான் வந்து குழந்தைகளின்
அதிர்ஷ்டத்தை விழிக்கச் செய்கின்றார். உலகத்தில் எப்படி குழந்தைகள் பிறந்தவுடன் அதிர்ஷ்டம் விழித்து
விடுகின்றது. குழந்தைகள் பிறந்தவுடன் நாங்கள் வாரிசுகள் என்பது புரிந்து விடுகின்றது. இது நிச்சயிக்கப்பட்ட
எல்லையற்ற விஷயம் ஆகும். கல்பலிகல்பமாக நம்முடைய அதிர்ஷ்டம் விழிக்கின்றது பின்பு உறங்கி விடுகின்றது.
பாவனம் ஆகின்றீர்கள் என்றால், அதிர்ஷ்டம் விழித்துக் கொள்கின்றது என்று அர்த்தமாகும். பாவன கிரஹஸ்த
ஆசிரமம் என்று கூறப்படுகின்றது. ஆசிரமம் என்ற சொல்லே துôய்மையைக் குறிக்கின்றது. பவித்திர கிரஹஸ்த
ஆசிரமம் ஆகும், அதற்கு எதிர்மறையாக உள்ளது அபவித்திர பதீத தர்மம் ஆகும், ஆசிரமம் என்று சொல்ல
முடியாது. கிரஹஸ்த தர்மம் என்பது அனைவருக்கும் உள்ளது. மிருகங்களுக்கும் கூட உள்ளது. குழந்தைகளை
அனைவரும் பெற்று எடுக்கின்றார்கள். மிருகங்களுக்கும் கூட கிரஹஸ்த தர்மம் என்று கூறுவார்கள். இப்பொழுது
நாம் சொர்க்கத்தில் பவித்திர கிரஹஸ்த ஆசிரமமாக இருந்தது என்பதை குழந்தைகள் நீங்கள் அறிந்து
கொண்டீர்கள். அவர்கள் தேவிலிதேவதைகளாக இருந்தார்கள். அவர்களைத் தான் சர்வகுண சம்பன்ன என்று
புகழ்பாடப் படுகின்றது, நீங்கள் உங்களையே பாடிக் கொண்டு இருந்தீர்கள். இப்பொழுது நாம் மனித நிலையிலி
ருந்து தேவதையாக மீண்டும் ஆகிக் கொண்டு இருக்கின்றோம் என்று நீங்கள் அறிந்து கொண்டீர்கள்.
தேவிலிதேவதைகளின் தர்மமாக இருந்தது. பின்பு பிரம்மாலிவிஷ்ணுலிசங்கரர் கூட தேவதை என்று கூறுகின்றார்கள்.
பிரம்மா தேவதாய நமஹ! விஷ்ணு தேவதாய நமஹ! சிவனுக்காக பரமாத்மாய நமஹ! என்று கூறுகின்றார்கள்
வித்தியாசம் ஏற்படுகின்றது அல்லவா? சிவனையும், மேலும் சங்கரையும் ஒன்று என்று கூற முடியாது. கல்
புத்தியாக இருந்த நீங்கள் பாரஸ் புத்தியாக ஆகிக் கொண்டிருக்கின்றீர்கள். தேவதைகளை கல் புத்தி என்று கூற
முடியாது. பின்பு நாடகத்தின் படி இராவண இராஜ்யம் வரும் போது அவர்களும் கூட ஏணிப்படியில் கீழே
இறங்க வேண்டி உள்ளது. பாரஸ் புத்தியிலிருந்து கல் புத்தி ஆக வேண்டும். அனைவரையும் விட புத்திசாலி
யாக ஆக்கக் கூடியவர் ஒரு சிவபாபா தான். உங்களை பாரஸ் புத்தி ஆக்குகின்றார். நீங்கள் இங்கே பாரஸ்
புத்தி ஆக வந்துள்ளீர்கள். பாரஸ்நாத்துக்குக் கூட கோவில் உள்ளன. அவர் தான் புத்திசாலிக்கெல்லாம்,
புத்திசாலி ஆவார். இந்த ஞானம் குழந்தைகளின் புத்திக்கு டானிக் ஆகும். புத்தி எவ்வளவு மாறுகின்றது.
தீயதைப் பார்க்காதீர்கள்! என்று பாடப்படுகின்றது இதற்கு குரங்கைக் காட்டுகின்றார்கள். மனிதர்கள் தான்
குரங்குக்கு சமமாக ஆகி விட்டார்கள். வனக்குரங்கையும் மனிதனோடு ஒப்பிடுகின்றார்கள். இதைத்தான் முட்கள்
நிறைந்த காடு என்று சொல்லப்படுகின்றது. ஒருவருக்கு ஒருவர் எப்படி துக்கம் கொடுக்கின்றார்கள். இப்பொழுது
குழந்தைகள் உங்களது புத்திக்கு டானிக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. எல்லையற்ற தந்தை டானிக் கொடுத்துக்
கொண்டு இருக்கின்றார். இதை படிப்பு என்று கூறலாம், இதை ஞான அமிர்தம் என்றும் கூறுகின்றார்கள். இது
தண்ணீர் ஒன்றும் இல்லை. தற்காலத்தில் அனைத்து விஷயங்களையும் அமிர்தம் என்று கூறுகின்றார்கள்.
கங்கை நீரைக் கூட அமிர்தம் என்று கூறுகின்றார்கள். தேவதைகளின் கால்களைக் கழுவி அதை குடிக்கின்றார்கள்,
தண்ணீரை தேவதை முன்னால் வைக்கின்றார்கள் அதைத் கூட அமிர்தத்தின் அஞ்சலி என்று நினைக்கின்றார்கள்.
அஞ்சலியைப் பெறக் கூடியவர்களை பதீதலிபாவனமாக ஆக்கக் கூடியவர் என்று கூற முடியாது. கங்கை நீரை
(2/4)
20.08.2016
பதீதலிபாவனி என்று கூறுகின்றார்கள். மனிதர்கள் இறந்து விட்டால் அவர்கள் வாயில் கங்கை நீரை ஊற்ற
வேண்டும் என்று கூறுகின்றார்கள். அர்ச்சுனன் அம்பை எய்தார் அதிலிருந்து வெளிப்பட்ட அமிர்த ஜலத்தை
அனைவருக்கும் கொடுத்தார் என்று கூறப்படுகின்றது. குழந்தைகள் உங்களுக்கு யாரும் இங்கு அம்பு எதுவும்
எய்யவில்லை. ஒரு கிராமத்தில் அம்புகளால் தான் சண்டை போடுவார்கள். அங்குள்ள இராஜாவை அவர்கள்
ஈஸ்வரரின் அவதாரம் என்று கூறுவார்கள். இவர்கள் அனைவரும் பக்தி மார்க்கத்தின் குருக்கள் என்று பாபா
கூறுகின்றார். உண்மையிலும்லிஉண்மையான சத்குரு ஒருவர்தான். அனைவருக்கும் சத்கதியைத் தரும் வள்ளல்
ஒருவர் தான். அவர் தான் அனைவரையும் அழைத்துச் செல்லக் கூடியவர். பாபாவைத் தவிர வேறு யாரும்
அழைத்துச் செல்ல முடியாது. பிரம்மத்தில் யாரும் ஐக்கியம் ஆக முடியாது. இந்த நாடகம் உருவாக்கப்பட்டது.
இந்த சக்கரம் அழியாதது சுற்றிக் கொண்டிருக்கின்றது. உலகத்தின் சரித்திரலி பூகோளம் எப்படி திரும்பிச்
சுற்றுகின்றது என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்து கொண்டீர்கள். மனிதர்கள் என்றால் ஆத்மாக்கள் தன்னுடைய
தந்தையின் படைப்பைக் கூட அறியவில்லை, அவரைத் தான் ஹே கடவுளே! தந்தையே! என்று
நினைக்கின்றார்கள். எல்லைக்குட்பட்ட தந்தையை ஒருபோதும் இறை தந்தை என்று கூற முடியாது. இறை
தந்தை என்ற வார்த்தையை மிகவும் மரியாதையோடு கூறுகின்றார்கள். அவரைத்தான் பதீதலிபாவனர் என்று
கூறுகின்றார்கள், துக்கத்தை நீக்கி சுகத்தைக் கொடுக்கக் கூடியவர் என்று கூறுகின்றார்கள். ஒரு புறம் துக்கத்தை
நீக்கி, சுகத்தைக் கொடுப்பவர் என்று கூறுகின்றார்கள், இன்னொரு புறம் குழந்தை இறந்து விட்டால் ஈஸ்வரர்
தான் சுகம்லிதுக்கம் கொடுக்கின்றார் என்று கூறுகின்றார்கள். ஈஸ்வரன் நம்முடைய குழந்தையை எடுத்துக்
கொண்டார் என்று சொல்கின்றார்கள், இது என்ன செயல்! ஈஸ்வரனை நிந்தனை செய்கின்றோம் அல்லவா!
ஈஸ்வரன் தான் குழந்தையைக் கொடுத்தார் என்று சொல்கின்றார்கள் பின்பு திருப்பி அவரே எடுத்துக் கொண்டார்
என்றால், ஏன் அழுகின்றார்கள்? ஈஸ்வரனிடம் போய்விட்டது அல்லவா! சத்திய யுகத்தில் யாரும் ஒரு போதும்
அழுவதில்லை. அழுவதற்கு எந்த அவசியமும் இல்லை என்று பாபா புரிய வைக்கின்றார். ஆத்மாவுக்கு தனது
கணக்குலி வழக்குப்படி போய் நடிக்க வேண்டியுள்ளது. ஞானம் இல்லாத காரணத்தால் மனிதர்கள் எவ்வளவு
அழுகின்றார்கள். பைத்தியம் போல் ஆகின்றார்கள், அம்மா இறந்தாலும் அல்வா சாப்பிடுங்கள் ! அப்பா இறந்தாலும்
அல்வா சாப்பிடுங்கள்! என்று பாபா புரிய வைக்கின்றார், நஷ்டமோகா ஆக வேண்டும். நமக்கு ஒரு சிவபாபாவைத்
தவிர வேறு யாரும் இல்லை, இப்படிப்பட்ட ஸ்திதி (நிலை) குழந்தைகளுக்கு இருக்க வேண்டும். மோகத்தை
வென்ற இராஜா கதையைக் கேட்டிருப்பீர்கள். சத்தியயுகத்தில் ஒரு போதும் துக்கம் என்ற விஷயமே இருக்காது.
ஒரு போதும் அகால மரணம் ஏற்படாது. இப்பொழுது நாம் காலன் மீது வெற்றி அடைகின்றோம் என்பதை
குழந்தைகள் அறிவீர்கள். பாபாவை மகாகாலன் என்றும் கூட கூறுவார்கள், அவர் தான் காலனுக்கு எல்லாம்
காலனாக இருக்கின்றார். நீங்கள் காலன் மீது வெற்றி அடைய வேண்டும் அதாவது காலன் ஒரு போதும்
பிடிக்காது. காலன் ஆத்மாவையோ, உடலையோ பிடிக்க முடியாது, ஆத்மா ஒரு உடலை விட்டு இன்னொரு
உடலை எடுக்கின்றது. அதைத் தான் காலன் பிடித்து விட்டது என்று சொல்கின்றார்கள், மற்றபடி காலன் என்ற
விஷயம் வேறு இல்லை. மனிதர்கள் கூறுகின்றார்கள், அச்சுதம், கேசவம் (அச்சுதம், கேசவம் என்று
மகிமைபாடுகிறார்கள்) ஆனால் அர்த்தம் ஒன்றுமே புரிந்து கொள்வதில்லை. இந்த ஐந்து விகாரங்கள் உங்களை
எவ்வளவு கெடுத்து விட்டது என்று பாபா புரிய வைக்கின்றார். இந்த நேரம் யாரும் பாபாவை அறியவில்லை,
அதனால் தான் இந்த உலகை அனாதை உலகம் என்று கூறப்படுகின்றது. தங்களுக்குள் எத்தனை சண்டை
போட்டுக் கொள்கின்றார்கள். முழு உலகம் பாபாவின் வீடு அல்லவா! பாபா முழு உலக குழந்தைகளையும்
பதீததர்களிலிருந்து பாவனம் ஆக்குவதற்காக வந்துள்ளார். அரைக்கல்பம் முற்றிலும் பாவன உலகமாக இருந்தது.
இராம இராஜா, இராம பிரஜா என்று பாடுகின்றார்கள் என்றால், அங்கே அதர்மம் என்ற விஷயம் எப்படி
இருக்க முடியும்? அங்கே ஆடும், புலியும் ஒரே ஓடையில் ஓடும் நீரைக் குடித்தது என்று பாடப்படுகின்றது.
பிறகு அங்கே இராவணன் எங்கிருந்து வருவார்? வெளியில் உள்ளவர்கள் இதையெல்லாம் கேட்டு
சிரிக்கின்றார்கள், புரிந்து கொள்வதில்லை. பாபா வந்து ஞானம் கொடுக்கின்றார், இது பதீத உலகம் இல்லையா?
இப்பொழுது ப்ரேரணையில் பதீதர்களை பாவனம் ஆக்க முடியுமா என்ன! பதீத பாவனரே வாருங்கள் என்று
அழைக்கின்றார்கள் என்றால், அவசியம் பாரதத்தில் தான் வந்திருப்பார். இப்பொழுது கூட நான் ஞானக்கடல்
வந்துள்ளேன் என்று கூறுகின்றார்லி உங்களை தனக்குச் சமமாக மாஸ்டர் ஞானக் கடல் ஆக்குகின்றார். பாபாவைத்
தான் உண்மையிலும்லிலி உண்மையான வியாசர் என்று கூறப்படுகின்றது. அதனால் அவர் வியாச தேவர் மற்றும்
நீங்கள் அவரது குழந்தைகள் சுகதேவன், நீங்கள் இப்பொழுது சுகதேவதை ஆகின்றீர்கள். சிவனின் குழந்தைகள்
ஆகின்றீர்கள். அவரின் உண்மையான பெயர் சிவன். ஆத்மாவையும் தெரிந்து கொள்ள வேண்டும், வியாசர்,
சிவாச்சாரி இடமிருந்து சுகம் என்ற ஆஸ்தியை எடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள். வியாசரின் குழந்தைகள்
நீங்கள்! ஆனால் நீங்கள் குழப்பம் அடையக் கூடாது ஆகையால் தான் சிவனின் குழந்தைகள் என்று
கூறுகின்றோம். அவருடைய உண்மையான பெயர் சிவன். ஆத்மாவை அறிந்து கொள்ள வேண்டும்,
பரமாத்மாவையும் அறிந்து கொள்ள வேண்டும். அவர் தான் பதீதமானவர்களை வந்து பாவனம் ஆவதற்கான
(3/4)
20.08.2016
வழியைக் கூறுகின்றார். நான் ஆத்மாக்களாகிய உங்களுக்கு தந்தையாக உள்ளேன் என்று கூறுகின்றார். நான்
கட்டை விரல் போல் உள்ளேன் என்று கூறுகின்றனர். இவ்வளவு பெரியவராக இருந்தால் இங்கே உட்கார
முடியாது. அவர் மிகவும் சூட்சமமாக இருக்கின்றார். ஆத்மாவைப் பார்பதற்காகலி டாக்டர்களும் தலை உடைத்துக்
கொள்கின்றார்கள். ஆனால் பார்க்க முடிவதில்லை. ஆத்மாவை உணர வேண்டும். இப்பொழுது நீங்கள் ஆத்மாவை
உணர்ந்தீர்களா? என்று பாபா கேட்கின்றார். இவ்வளவு சிறிய ஆத்மாவில் அழியாத நடிப்பு பதிவாக்கப்பட்டுள்ளது.
ரிக்கார்டு போல் பதிவாக்கப்பட்டுள்ளது. முதலில் நீங்கள் தேக அபிமானத்தில் இருந்தீர்கள், இப்பொழுது நீங்கள்
ஆத்மா அபிமானி ஆகிவிட்டீர்கள். நம்முடைய ஆத்மா 84 ஜென்மம் எப்படி எடுக்கின்றது என்று நீங்கள்
அறிவீர்கள். அதற்கு முடிவே கிடையாது. இந்த நாடகம் எப்பொழுது இருந்து ஆரம்பம் ஆனது என்று சிலர்
கேட்கின்றார்கள். ஆனால் இது அனாதி, இது ஒருபோதும் அழிவதே இல்லை. இதைத்தான் ஏற்கனவே
உருவாக்கப்பட்ட அழியாத உலக நாடகம் என்று கூறப்படுகின்றது. உலகத்தைக் கூட நீங்கள் அறிவீர்கள்.
படிக்காத குழந்தைகளுக்கு எப்படி கல்வி புகட்டப்படுகின்றது. அது போல பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு
கற்பிக்கின்றார். ஆத்மாதான் இந்த உடல் மூலமாக படிக்கின்றது. இது கல் புத்திக்கான உணவு. புத்திக்கு அறிவு
கிடைக்கின்றது. குழந்தைகளுக்காகத் தான் பாபா இந்த படங்களை உருவாக்கியுள்ளார். மிகவும் எளிதாக
உள்ளது. திரிமூர்த்தி பிரம்மா, விஷ்ணு, சங்கரர், இப்பொழுது பிரம்மாவை திரிமூர்த்தி என்று ஏன் சொல்லப்படுகின்றது!
தேவ்லிதேவ் மகாதேவ்! என்று புகழ் பாடுகின்றார்கள். ஒருவருக்கு மேல் ஒருவரை புகழ்பாடுகின்றனர். ஆனால்
அர்த்தம் ஒன்றும் புரிந்து கொள்வதில்லை. இப்பொழுது பிரம்மா எப்படி இருக்க முடியும், பிரம்மாவை பிரஜாபிதா
என்று கூறுகின்றார்கள். அப்படியென்றால், சூட்சும லோகத்தில் தேவதை எப்படி இருக்க முடியும்? பிரஜாபிதா
இங்கே தானே வேண்டும். இந்த விஷயங்கள் எந்த சாஸ்த்திரத்திலும் கிடையாது. நான் இந்த உடலில்
பிரவேசம் செய்து இவர் மூலமாக புரிய வைக்கின்றேன், இவரை என்னுடைய ரதமாக ஆக்குகின்றேன்.
இவரின் அநேக ஜென்மத்தின் கடைசியில் நான் வருகின்றேன் என்று பாபா கூறுகின்றார். இவர் கூட ஐந்து
விகாரத்தை தியாகம் செய்கின்றார். சன்யாசம் செய்பவர்களை யோகி, ரிμ என்று கூறப்படுகின்றது. இப்பொழுது
நீங்கள் இராஜரிμயாக உள்ளீர்கள். நீங்கள் உறுதிமொழி கொடுக்கின்றீர்கள். உலகில் உள்ள சன்யாசிகள் வீட்டை
விட்டுச் செல்கின்றார்கள். இங்கே ஆண்லிபெண் இருவரும் ஒன்றாக இருக்கின்றார்கள். நாங்கள் ஒரு போதும்
விகாரத்தில் போக மாட்டோம் என்று கூறுகின்றார்கள். விகாரம் தான் முக்கியமான விஷயமாகும். சிவபாபா
புதிய உலகத்தைப் படைக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் புதியதைப் படைக்கின்றார். அவர்
விதை ரூபமாக இருக்கின்றார் சத்லிசித்லிஆனந்தக்கடல், ஞானக்கடலாக இருக்கின்றார். ஸ்தாபனை, பாலனை,
வினாச காரியங்களை எப்படி செய்கின்றார் லி பாபா தான் அறிவார். இந்த விஷயங்களை மனிதர்கள் அறிய
மாட்டார்கள். குழந்தைகள் நீங்கள் இப்பொழுது இந்த அனைத்து வியங்களையும் அறிந்து கொண்டீர்கள்.
ஆகையால் அனைவருக்கும் புரிய வைக்க முடியும். நல்லது.
இனிமையிலும்லிஇனிமையான செல்லமான குழந்தைகளுக்கு தாய்லிதந்தை பாப்தாதாவின்
அன்புலிநினைவுகள் மேலும் காலை வணக்கங்கள். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) ஒவ்வொருவரின் கணக்குலிவழக்கும் தனித்னியானது, ஆகையால் யார் சரீரம் விட்டாலும்
அழக் கூடாது. முழுமையாக மோகத்தை அழிக்க வேண்டும். நமக்கு ஒரு பாபாவைத் தவிர
வேறு யாரும் இல்லை என்பது புத்தியில் இருக்க வேண்டும்.
2) ஐந்து விகாரம் புத்தியை கெடுத்து விடுகின்றது , ஆதலால் அதனை தியாகம் செய்ய (நீக்கி
விட) வேண்டும். சுகதேவதையாகி அனைவருக்கும் சுகம் கொடுக்க வேண்டும். யாருக்கும்
துக்கம் கொடுக்கக்கூடாது
20.08.2016
(4/4)
வரதானம்: அனைத்து ஆத்மாக்களின் பதீத எண்ணங்களைஅதாவது உள்உணர்வுகளை பஸ்பம்
செய்யக்கூடிய மாஸ்டர் ஞான சூரியன் பவ.
சூரியன் எப்படி தன்னுடைய கிரணங்களால் குப்பைகள், அழுக்கான பூச்சிகளை பஸ்பம் செய்து விடுகின்றதோ.
அது போல நீங்கள் மாஸ்டர் ஞான சூரியனாகி எந்த ஒரு பதீத ஆத்மாவைப் பார்த்தீர்களென்றாலும் அவர்களின்
பதீத எண்ணங்கள், பதீத உள் உணர்வுகள் மற்றும் பார்வை பஸ்பம் ஆகிவிடும். பதீதலி பாவனி ஆத்மா மீது
பதீத எண்ணங்கள் போர் செய்ய முடியாது. பதீத ஆத்மாக்கள் பதீதலிபாவனிகளிடம் பலி ஆகிவிடுவார்கள்.
இதற்காக சக்தி விளக்காக (மைட் ஹவுஸ்) அதாவது ஞான சூரியன் என்ற நிலையில் சதா இருக்க வேண்டும்.
சுலோகன்: தன்னை தாரணை சொரூபத்தால் யோகி வாழ்க்கையில்
பிராபவத்தை ஏற்படுத்துவது தான்லி மிகப் பெரிய சேவை ஆகும்.
(1/4)
21
.08.2016 காலை முரளி ஓம் சாந்தி ''அவ்யக்த பாப்தாதா''
ரிவைஸ் 06.11.1981 மதுபன்
'' விசேஷ யுகத்தின் விசேஷ பலன் ''
இன்று விஷ்வ கல்யாணகாரி (உலகிற்கு நன்மை செய்யும்) தந்தை தன்னுடைய உலக நன்மை
காரியத்தின் ஆதாரமூர்த்தி (ஆதாரமான) குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இதே ஆதாரமூர்த்திகள்
தான் உலகத்தை மாற்றம் செய்யும் விசேஷ ஆத்மாக்கள். அந்த மாதிரியான விசேஷ ஆத்மாக்களை பாப்தாதாவும்
எப்பொழுதும் விசேஷ பார்வையோடு பார்க்கிறார். ஒவ்வொரு விசேஷ ஆத்மாவின் விசேஷமும் எப்பொழுதும்
பாப்தாதாவிடம் எதிரில் தெளிவாக இருக்கிறது. ஒவ்வொரு குழந்தையும் மகான், புண்ணிய ஆத்மா ஆவார்.
புருஷோத்தமர் என்றால் தேவ ஆத்மா. உலக மாற்ற காரியத்திற்குப் பொறுப்பான ஆத்மாக்கள். நீங்கள்
ஒவ்வொருவரும் தன்னை அந்த மாதிரி புரிந்து நடந்து கொள்கிறீர்களா? என்னவாக இருந்தேன், மேலும்
இப்பொழுது என்னவாக ஆகிவிட்டேன் என்ற இந்த மிகப் பெரிய வித்தியாசம் எப்பொழுதும் எதிரில் இருக்கிறதா?
இந்த வித்தியாசம் மகாமந்திரத்தின் சொரூபமாக இயல்பாகவே ஆக்கிவிடுகிறது. அந்த மாதிரி அனுபவம்
செய்கிறீர்களா? எப்படி தந்தையின் எதிரில் ஒவ்வொரு குழந்தையும் எப்பொழுதும் விசேஷ ஆத்மாவின்
ரூபத்தில் இருக்கிறார், அதே போல் நீங்கள் அனைவரும் தன்னுடைய விசேஷத்தை மற்றும் அனைவரின்
விசேஷத்தையும் எப்பொழுதும் பார்க்கிறீர்களா? எப்பொழுதும் சேற்றிலிருக்கும் தாமரையை பார்க்கிறீர்களா அல்லது
சேறு மற்றும் தாமரை இரண்டையும் பார்க்கிறீர்களா? சங்கமயுகம் விசேஷ யுகம் மேலும் இதே விசேஷ
யுகத்தில் விசேஷ ஆத்மாக்கள் உங்கள் அனைவருக்கும் விசேஷ பங்கு இருக்கிறது. ஏனென்றால் நீங்கள்
அனைவரும் பாப்தாதாவின் சகயோகிகள் ! விசேஷ ஆத்மாக்கள் செய்யும் காரியம் என்ன? தன்னுடைய
விசேஷம் மூலமாக விசேஷ காரியத்தில் இருப்பது அதாவது தன்னுடைய விசேஷத்தை மனதில் மட்டும்
அல்லது வாய் மூலம் வர்ணனை மட்டும் செய்வதல்ல, ஆனால் விசேஷத்தின் மூலமாக ஏதாவது விசேஷ
காரியம் செய்து காண்பிப்பது. எந்த அளவு தன்னுடைய விசேஷத்தை எண்ணம், சொல் மற்றும் செயலில்
சேவையில் ஈடுபடுத்துவீர்களோ அந்த அளவு அதே விசேஷம் வளர்ச்சியை அடைந்து கொண்டே இருக்கும்.
சேவையில் ஈடுபடுத்துவது என்றால், ஒரு விதையிலிருந்து அனேக பழங்களை உருவாக்குவது. தந்தை
மூலமாக இந்த வாழ்க்கையில் பிறப்புரிமையின் ரூபத்தில் எனக்கு என்ன விசேஷம் கிடைத்திருக்கிறதோ
அதை விதை ரூபத்தில் மட்டும் வைத்திருக்கிறேனா மேலும் விதையை சேவையின் நிலத்தில் போட்டு
விஸ்தரிப்பை அடைந்திருக்கிறேனா? அதாவது தன்னுடைய சொரூபம் மற்றும் சேவையின் சித்தி சொரூபத்தை
அனுபவம் செய்திருக்கிறேனா? பாப்தாதாவோ அனைத்து குழந்தைகளின் விசேஷத்தின் எதிர்காலத்தின் ரேகையை
பிறந்தவுடனேயே போட்டு விட்டார். பிறந்ததிலிருந்தே ஒவ்வொரு குழந்தையின் நெற்றியில் விசேஷத்தின்
அதிர்ஷ்ட நட்சத்திரம் மின்னிக் கொண்டு தான் இருக்கிறது. எந்தவொரு குழந்தையும் இந்த அதிர்ஷ்டத்திலிருந்து
வஞ்சிக்கப்படவில்லை. நீங்கள் அதிர்ஷ்டத்தை எழுப்பிவிட்டுத் தான் வந்திருக்கிறீர்கள். பிறகு வேற்றுமை ஏன்
ஏற்பட்டு விடுகிறது? சிலர் இந்த வரதானம் என்ற விதையை, அதிர்ஷ்டத்தின் விதையை மற்றும் பிறப்புரிமை
என்ற விதையை விஸ்தாரத்தில் கொண்டு வருகிறார்கள், சிலர் விதையை காரியத்தில் கொண்டு வராத
காரணத்தினால் சக்தியற்ற விதையாக ஆக்கி விடுகிறார்கள் என்று ஏற்கனவே கூறியிருந்தோம். எப்படி விதையை
சரியான நேரத்தில் காரியத்தில் கொண்டு வரவில்லை என்றால் பலன் என்ற பழம் கொடுக்கும் விதையாக அது
ஆவதில்லை. பிறகு சிலர் என்ன செய்கிறார்கள்? விதையை சேவை என்ற நிலத்தில் போடவும் செய்கிறார்கள்.
ஆனால் பழம் தருவதற்கு முன்பே மரத்தைப் பார்த்து நான் விதையை காரியத்தில் ஈடுபடுத்தி விட்டேன்
என்று அதிலேயே குμ அடைந்து விடுகிறார்கள். இதனுடைய ரிசல்ட் (முடிவு) எப்படி இருக்கும்? மரம்
வளர்ந்து விடுகிறது, கிளைகள், சிறு கிளைகள் உருவாகின்றன, ஆனால் மரம் மட்டும் வளர்கிறது, பழம் (பலன்)
தருவதில்லை. பார்ப்பதற்கு மரம் மிக அழகாக இருக்கும். ஆனால் பழம் தருவதில்லை. அதாவது என்ன
விசேஷம் பிறப்புரிமையின் ரூபத்தில் கிடைத்திருக்கிறதோ அதிலிருந்து அவரே வெற்றி என்ற ரூபத்தின்
பழத்தை அடைவதில்லை, மேலும் மற்றவர்களையும் அந்த விசேஷத்தின் மூலமாக வெற்றி சொரூபமாக ஆக்க
முடிவதில்லை. விசேஷம் என்ற விதையின் மிக உயர்ந்த பழம் 'திருப்தி'. எனவே இன்றைய நாட்களில்
பக்தர்கள் சந்தோμமாலிவின் பூஜையை அதிகம் செய்கிறார்கள். அப்படி திருப்தியாக இருக்க வேண்டும் மற்றும்
அனைவரையும் திருப்திப் படுத்த வேண்டும் என்ற இது தான் விசேஷ யுகத்தின் விசேஷ பலனாகும்.
அனேக குழந்தைகள் அந்த மாதிரி பழம் (பலன்) கொடுப்பவர்களாக ஆவதில்லை. மரத்தை வளர
வைத்து அதாவது சேவையை விஸ்தாரம் செய்து விடுகிறார்கள். ஆனால் திருப்தி என்ற பழம் தராத மரம்
என்ன பிரயோஜனம்? எனவே விசேஷத்தின் வரதானம் விதைக்கு அனைத்து சக்திகளின் நீரை ஊற்றினீர்கள்
என்றால், பழம் தருவதாக ஆகிவிடும். இல்லை என்றால் நன்றாக வளர்ந்திருக்கும் மரமும் அவ்வப்பொழுது
(2/4)
21.08.2016
வரும் புயலினால் ஆடி ஆடி சில நேரம் சில கிளை, சில நேரம் வேறு கிளை என ஒடிந்து கொண்டே
இருக்கும். பிறகு என்னவாகும்? மரம் இருக்கும், ஆனால் காய்ந்து போன மரமாக இருக்கும். ஒரு பக்கம்
காய்ந்த மரம் லி அதில் முன்னேறிச் செல்வதற்கான ஊக்கம், உற்சாகம், குμ, ஆன்மீக போதை என்ற
எந்தவொரு பசுமையும் இல்லை, விதையிலும் பசுமை இல்லை, மரத்திலும் பசுமை இல்லை. இப்பொழுது
விசேஷ ஆத்மாக்களின் சம்மந்தம் மற்றும் தொடர்பில் எப்பொழுதும் இருக்கிறீர்கள். ஏனென்றால் பிராமண
பரிவாரம், என்றால், விசேஷ ஆத்மாக்களின் பரிவாரம். அப்படி பரிவாரத்தின் தொடர்பில் வந்து கொண்டே
ஒவ்வொருவரின் விசேஷத்தையும் பாருங்கள். விசேஷத்தை பார்ப்பதற்கான பார்வையை வையுங்கள் அதாவது,
விசேஷமான கண்ணாடியை அணியுங்கள். இன்றைய நாட்களில் கண்ணாடி அணியும் நாகரீகம் இருக்கிறது,
மேலும் கட்டாயமும் இருக்கிறது. எனவே விசேஷத்தைப் பார்க்கும் கண்ணாடி அணிந்தீர்கள் என்றால், வேறு
எதுவும் தென்படாது. எப்படி அறிவியல் சாதனங்கள் மூலமாக சிகப்பு கண்ணாடி அணிந்தீர்கள் என்றால்,
பச்சையானதும் சிகப்பாக தென்பட முடியும். எனவே இந்த விசேஷத்தின் பார்வை மூலமாக விசேஷத்தை
மட்டும் பாருங்கள். சேற்றைப் பார்க்காமல் தாமரையைப் பாருங்கள். மேலும் ஒவ்வொருவரின் விசேஷம்
மூலமாக உலக மாற்றத்தின் காரியத்தில் நான் விசேஷ காரியம் செய்வதற்கு பொறுப்பாளர் ஆகிவிடுவேன்.
அப்படி ஒரு விஷயம் தன்னுடைய விசேஷத்தை காரியத்தில் கொண்டு வாருங்கள். விஸ்தாரம் செய்து பலன்
அளிப்பதாக ஆக்குங்கள், இன்னொரு விஷயம் அனைவரிலும் விசேஷத்தையே பாருங்கள். மூன்றாவது விஷயம்,
லி அனைவரின் அந்த விசேஷங்களை காரியத்தில் கொண்டு வாருங்கள். நான்காவது விசேஷம், விசேஷ
யுகத்தின் விசேஷ ஆத்மாக்கள் நீங்கள் ! எனவே எப்பொழுதும் விசேஷ எண்ணம் சொல் மற்றும் செயல்
செய்ய வேண்டும். பிறகு என்னவாகும்? விசேஷ நேரம் கிடைத்து விடும். ஏனென்றால், விசேஷம் என்று
புரிந்து கொள்ளாத காரணத்தினால் தன் மூலமாக தனக்கே வரும் தடை மற்றும் கூடவே தொடர்பில் வருவதினால்
வந்திருக்கும் தடைகளில் அதிக நேரம் செல்கிறது, ஏனென்றால், தன்னுடைய பலஹீனம், மற்றவர்களின்
பலஹீனம் இவருடைய கதை மற்றும் கீர்த்தனை இரண்டும் மிக நீளமாக இருக்கும். எப்படி உங்களுடைய
வாழ்க்கையின் ஞாபகார்த்த கதையான 'இராமாயணத்தை' பார்த்தீர்கள் என்றால், கதை மற்றும் கீர்த்தனை
இரண்டுமே மிக சுவாரஸ்யமானதாக மற்றும் நீளமாக இருக்கும். ஆனால் அதில் என்ன இருக்கிறது?
விசேஷத்தைப் பார்க்காமல் பொறாமையில் வந்ததினால் எவ்வளவு நீளமான கீர்த்தனை மற்றும் கதை ஆகிவிட்டது.
அப்படி விசேஷத்தை பார்க்காததினால் லட்சுமி நாராயணனின் கதைக்குப் பதிலாக இராமரின் கதை ஆகிவிடுகிறது.
மேலும் இதே கதை கீர்த்தனையில் தன்னுடைய, சேவையின் நேரத்தை வீணாக இழக்கிறீர்கள். இன்னும்
மகிழ்ச்சியூட்டும் விஷயம் செய்கிறீர்கள், தனியாக மட்டும் கீர்த்தனை கதை செய்வதில்லை. ஆனால் கீர்த்தன்
மண்டலியையும் தயார் செய்கிறீர்கள் லி எனவே இந்த வீணான கீர்த்தனை கதையிலிருந்து நேரம் மிச்சப்
படுத்துவதின் காரணமாக விசேஷ நேரமும் கிடைத்து விடுகிறது என்று கூறியிருந்தோம். அப்படி என்ன
செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று புரிந்து கொண்டீர்களா? எப்படி இன்றைய உலகத்தில்
யாருக்காவது பக்தியின் பலனை அடையுங்கள், சகஜ இராஜயோகி ஆகுங்கள் என்று கூறினீர்கள் என்றால்,
எதில் அதிக ஆர்வம் வைக்கிறார்கள்? பக்தியின் கதை கீர்த்தனையில் அதிக ஆர்வம் வைக்கிறார்கள் தான்
இல்லையா? மனதை மகிழச்செய்யும் விஷயம் என்று நினைக்கிறார்கள். அதே போல சில விசேஷ ஆத்மாக்கள்
கூட இராம கதையின் மண்டலியில் அல்லது கீர்த்தன் மண்டலியில் மிக மனமகிழ்விற்கான விஷயம் இருக்கிறது
என்று நினைக்கிறார்கள். அந்த மாதிரி நேரத்தில் அந்த ஆத்மாக்களிடம் இந்த கீர்த்தனை செய்வதை விடுங்கள்,
அமைதியாக இருங்கள் என்று கூறினீர்கள் என்றால், ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் சம்ஸ்காரம்
உருவாகியிருக்கிறது இல்லையா? இப்பொழுது இந்த கீர்த்தன் மண்டலியை முடிவு கட்டுங்கள். புரிந்ததா?
விசேஷ ஆத்மாக்களின் சபையில் அமர்ந்திருக்கிறீர்கள் இல்லையா? மேலும் குரூப்பும் விசேஷமானது.
இருவர்களுமே ஆசனத்தில் அமர்ந்திருப்பவர்கள். ஒன்று பிரவேசம் செய்த ஆசனம், இன்னொன்று இராஜ
சிம்மாசனம். அது இராஜ்யத்தின் சாவி கிடைப்பதற்கான ஆசனம் (கல்கத்தா). மேலும் இது இராஜ்யம்
செய்வதற்கான ஆசனம் (டெல்லி). அப்படி இரண்டுமே ஆசனம் ஆகிவிட்டது இல்லையா. அப்படி இரண்டிற்கும்
விசேஷம் இருக்கிறது இல்லையா? சாவி கிடைக்கவில்லை என்றால், இராஜ்ஜியமும் செய்ய முடியாது. எனவே
விசேஷத்தை மறக்கக்கூடாது. நல்லது.
அந்த மாதிரி எப்பொழுதும் விசேஷத்தைப் பார்க்கும், விசேஷத்தை காரியத்தில் ஈடுபடுத்தும் விசேஷ
நேரத்தை சேவையில் ஈடுபடுத்தி சேவையின் பிரத்யக்ஷ பலன் என்ற பழத்தை அருந்தும் எப்பொழுதும்
திருப்தியான ஆத்மாவிற்கு, எப்பொழுது திருப்தியின் கிரணங்கள் மூலமாக அனைவரையும் திருப்தி படுத்தும்,
அந்த மாதிரி விசேஷ ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.
(3/4)
21.08.2016
பார்ட்டிகளுடன் சந்திப்பு லி
1) சப்தத்திலிருந்து விலகிச் செல்வதற்கான முறையை தெரிந்திருக்கிறீர்களா? அசரீரி ஆவது என்றால்
சப்தத்திலிருந்து விலகிச் சென்று விடுவது. உடல் இருக்கிறது என்றால் சப்தம் இருக்கிறது. உடலிலிருந்து
விலகி விட்டீர்கள் என்றால் அமைதி. அமைதியின் சக்தி எந்தளவு மகானாக இருக்கிறது என்ற இதன்
அனுபவிகள் தான் நீங்கள் இல்லையா? அமைதியின் சக்தி மூலமாக உலகின் படைப்பை செய்து
கொண்டிருக்கிறீர்கள். அறிவியலின் சக்தி மூலம் விநாஷம் மற்றும் அமைதியின் சக்தி மூலம் ஸ்தாபனை. நான்
என்னுடைய அமைதியின் சக்தி மூலமாக ஸ்தாபனையின் காரியம் செய்து கொண்டிருக்கிறேன் என்று
நினைக்கிறீர்களா? நான் தான் ஸ்தாபனை காரியத்திற்கு பொறுப்பாளராக இருக்கிறேன் என்றால் நீங்கள் அமைதி
ரூபத்தில் நிலைத்திருந்தால் தான் ஸ்தாபனையின் காரியம் செய்ய முடியும். ஒருவேளை நீங்களே குழப்பத்தில்
வருகிறீர்கள் என்றால் ஸ்தாபனை காரியம் வெற்றி அடைய முடியாது. உலகில் அனைத்தையும் விட மிக
விருப்பமான ஒன்று அமைதி. இதற்காக பெரிய பெரிய மகாநாடுகளைக் கூட்டுகிறார்கள். அனைவரின் லட்சியமே
அமைதியைப் பெறுவது. இது தான் அனைத்தையும் விட பிரியமானது மற்றும் சக்திசாலியான ஒன்றாகும்.
மேலும் நீங்கள் அமைதியோ என்னுடைய இயற்கையான குணம் என்று நினைக்கிறீர்கள். எவ்வளவு சப்தத்தில்
வருவது சுலபமாக இருக்கிறதோ அந்த அளவே ஒரு நொடியில் சப்தத்தை விட்டு விலகிச் செல்ல வேண்டும்.
இதற்கான பயிற்சி இருக்கிறதா? அமைதி சக்தியின் அனுபவியா? எப்படிப்பட்ட அமைதியற்ற ஆத்மாவிற்கும்
சாந்த சொரூபம் ஆகி சாந்தியின் கிரணங்கள் கொடுத்தீர்கள் என்றால், அசாந்தியானவரும் சாந்தியாகிவிடுவார்.
சாந்தி சொரூபத்தில் இருப்பது என்றால் அனைவருக்கும் சாந்தியின் கிரணங்களைக் கொடுப்பது. பக்தர்கள்
சாந்தி தேவா என்று கூறி நினைவு செய்கிறார்கள் தான் இல்லையா? தேவன் என்றால் கொடுப்பவர். எப்படி
சாந்தியின் வள்ளல் என்று தந்தையின் மகிமை இருக்கிறது. அதே போன்று நீங்களும் சாந்தி தேவா ஆவீர்கள்.
இது தான் அனைத்தையும் விட மிகப்பெரிய மகாதானம் ஆகும். எங்கு அமைதி இருக்குமோ அங்கு
அனைத்து விஷயங்களும் இருக்கும். அப்படி நீங்கள் அனைவரும் சாந்தி தேவா, அமைதியற்ற சூழ்நிலையில்
இருந்து கொண்டே தானும் சாந்த சொரூபம் மற்றும் அனைவரையும் சாந்தமாக்கக்கூடியவர்கள். எது பாப்தாதாவின்
காரியமோ அதுவே குழந்தைகளின் காரியம் ஆகும். பாப்தாதா அமைதியற்ற ஆத்மாக்களுக்கும் அமைதி
கொடுக்கிறார் என்றால் குழந்தைகளுக்கும் ஃபாலோ ஃபாதர் செய்ய வேண்டும். பிராமணர்களின் தொழிலே
இது தான். நல்லது.
2) பிராமணர்களின் விசேஷ காரியம் லி ஞான சூரியனாகி முழு உலகிற்கும்
அனைத்து சக்திகளின் கிரணங்களைக் கொடுப்பது லி
அனைவரும் உலகிற்கு நன்மை செய்பவராகி உலகிற்கு அனைத்து சக்திகளின் கிரணங்களைக்
கொடுக்கிறீர்களா? நீங்கள் மாஸ்டர் ஞான சூரியன் தான் இல்லையா? அப்படி சூரியன் என்ன செய்கிறது?
தன்னுடைய கிரணங்கள் மூலமாக உலகை ஒளிமயமாக ஆக்குகிறது. நீங்கள் அனைவரும் கூட மாஸ்டர் ஞான
சூரியனாகி அனைத்து சக்திகளின் கிரணங்களை உலகிற்குக் கொடுத்துக் கொண்டே இருக்கிறீர்களா? முழு
நாளில் இந்த சேவைக்காக எத்தனை மணி நேரம் கொடுக்கிறீர்கள். பிராமண வாழ்க்கையில் விசேஷ காரியமே
இது தான். மற்றவை ஒரு காரணத்திற்காக செய்யப்படுபவை. பிராமண வாழ்க்கை மற்றும் ஜென்மம்
கிடைத்திருப்பதே உலக நன்மை காரியம் செய்வதற்காக. அப்படியானால் எப்பொழுதும் இந்தக் காரியத்தில்
பிஸியாக இருக்கிறீர்களா? யார் இந்தக் காரியத்தில் முழுமையாக ஈடுபட்டிருக்கிறார்களோ அவர்கள் எப்பொழுதும்
தடையற்றவர்களாக இருப்பார்கள். எப்பொழுது புத்தி ஒரு காரியமும் செய்யாமல் வீணாக இருக்கிறதோ அப்பொழுது
தடை வருகிறது. எப்பொழுதும் பிஸியாக இருந்தீர்கள் என்றால், நீங்களே தடையற்றவராக மற்றும்
மற்றவர்களுக்காகவும் விக்ன விநாஷக் (தடைகளை அழிப்பவராக) இருப்பீர்கள். விக்ன விநாஷக்கிடம்
ஒருபொழுதும் விக்னம் அதாவது தடை வர முடியாது. நல்லது.
3) சங்கம யுகத்தில் பிராமணர்களின் விசேஷ ஸ்தானம் பாப்தாதாவின் இதய சிம்மாசனம்
லி
அனைவரும் தன்னை பாப்தாதாவின் இதயசிம்மாசனதாரி என்று அனுபவம் செய்கிறீர்களா? அந்த
மாதிரி சிரேஷ்ட ஸ்தானம் ஒருபொழுதும் கிடைக்காது. சத்யுகத்தில் வைரம் பதித்த தங்க சிம்மாசனம்
கிடைக்கும், ஆனால் இதய சிம்மாசனம் கிடைக்காது. அப்படி பிராமணர்கள் நீங்கள் அனைவரையும் விட
உயர்ந்தவர்கள் மற்றும் உங்களுடைய சிரேஷ்ட ஸ்தானம் இதய சிம்மாசனம். எனவே பிராமணர்களை
உயர்ந்ததிலும் உயர்ந்த ஸ்தானமான உச்சங்குடிமியை காண்பித்திருக்கிறார்கள். நான் இதயசிம்மாசனதாரி என்று
அந்த அளவு போதை இருக்கிறதா? கிரீடமும் இருக்கிறது, ஆசனமும் இருக்கிறது, திலகமும் இடப்பட்டிருக்கிறது.
அப்படியானால் எப்பொழுதும் கிரீடம் அணிந்த, திலகமிட்ட, ஆசனத்தில் அமர்ந்திருப்பவராக இருக்கிறீர்களா?
(4/4)
21.08.2016
நினைவு உள்ளவராக ஆகுங்கள் என்ற அழியாத திலகம் இடப்பட்டு இருக்கிறது தான் இல்லையா? முழுக்
கல்பத்தில் என்னை மாதிரி வேறு யாருமே இல்லை என்ற இந்த போதையிலேயே இருங்கள். இந்த நினைவு
தான் எப்பொழுதும் போதையில் வைக்கும். மேலும் குμயில் ஆடிக்கொண்டே இருப்பீர்கள்.
4) ஆன்மீக சேவாதாரியின் கடமையே லி லைட் ஹவுஸாகி
அனைவருக்கும் லைட் கொடுப்பது லி
எப்பொழுதும் தன்னை லைட் ஹவுஸ் என்று நினைக்கிறீர்களா? லைட் ஹவுஸ் என்றால் ஜோதியின்
வீடு. அந்த அளவு அளவற்ற ஜோதி அதாவது லைட் இருக்க வேண்டும். அதன் காரணமாக உலகின் லைட்
ஹவுஸாகி எப்பொழுதும் லைட்டை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். லைட் ஹவுஸில் எப்பொழுதும்
லைட் இருக்கவே இருக்கும். அதனால் தான் லைட் கொடுக்க முடிகிறது. ஒருவேளை லைட் ஹவுஸ் அதுவே
லைட் இன்றி இருக்கிறது என்றால் மற்றவருக்கு எப்படி கொடுக்க முடியும்? ஹவுஸில் (வீட்டில்) அனைத்து
சாதனங்களும் ஒன்றாக இருக்கும். அப்படி இங்கேயும் லைட் ஹவுஸ் என்றால் எப்பொழுதும் லைட் சேமிப்பாகி
இருக்க வேண்டும், லைட் ஹவுஸ் ஆகி லைட் கொடுப்பது தான் பிராமணர்களின் தொழில் ஆகும். உண்மையான
ஆன்மீக சேவாதாரிகள் மகாதானி அதாவது லைட் ஹவுஸ் ஆக இருப்பார்கள். வள்ளலின் குழந்தைகள்
வள்ளலாக இருப்பார்கள். பெறுபவர்களாக மட்டுமின்றி கொடுப்பவர்களாகவும் இருப்பார்கள். எவ்வளவு
கொடுப்பீர்களோ அந்த அளவு இயல்பாகவே அதிகரித்துக்கொண்டே இருக்கும். அதிகரிப்பதற்கான வழி
கொடுப்பது.
5) அனைத்து வரதானங்களினால் நிரம்பியவர் ஆவதற்கான காலம் சங்கமயுகம் லி
இந்த உயர்ந்த காலத்தின் மகத்துவத்தை மற்றும் காலத்தின் வரதானத்தை தெரிந்திருக்கிறீர்கள் தான்
இல்லையா. முழுக் கல்பத்தில் வரதானி காலம் எது? (சங்கமயுகம்). அப்படியானால் இந்த வரதானி காலத்தில்
தன்னை வரதானங்களினால் நிரம்பியவராக ஆக்கியிருக்கிறீர்களா? ஏனென்றால் உருவாக்குபவர் மூலமாக
வரதானங்களின் களஞ்சியம் நிரம்பியும் இருக்கிறது. மேலும் திறந்ததாகவும் இருக்கிறது என்றும் தெரிந்திருக்
கிறீர்கள். யார் எவ்வளவு விரும்புகிறீர்களோ அந்த அளவு தன்னை அனைத்தும் நிரம்பியவராக ஆக்க
முடியும். அந்த மாதிரி நிரம்பியவராக ஆக்கியிருக்கிறீர்களா? சிறிதளவு பொக்கிஷம் அந்த சிறிதளவிலேயே
திருப்தி ஆகாதீர்கள். பெறுவது என்றால் சிறிதளவு அல்ல முழுமையாகப் பெற வேண்டும். யார் அதிகாரி
ஆத்மாக்களாக இருப்பார்களோ அவர்கள் சிறிதளவில் குμ அடைய மாட்டார்கள். ஆக வேண்டும் என்றால்
நம்பர் ஒன் ஆக வேண்டும், பெற வேண்டும் என்றால், முழுமையாகப் பெற வேண்டும். அதே போலவே
லட்சியம் மற்றும் லட்சணம் இரண்டும் சமமாக இருக்கட்டும்.
எப்பொழுதும் ஒவ்வொரு விஷயத்தின் சமநிலை மூலமாகத் தான் தந்தை மூலமாகவும் பிற அனைவர்
மூலமாகவும் ஆசீர்வாதம் கிடைத்துக் கொண்டே இருக்கும் மற்றும் ஆனந்தம் நிறைந்த வாழ்க்கை உருவாகி
விடும். பேலன்ஸ் (சமநிலை) வைத்து பிளஸிங் (ஆசீர்வாதம்) பெறுவது மற்றும் பிளஸிங் கொடுப்பது என்ற
இந்த முக்கியமான பரிசை மதுபன்னிலிருந்து பெற்றுச் செல்ல வேண்டும். இது தான் இங்கே உள்ள புத்துணர்வு.
நல்லது லி ஓம் சாந்தி.
வரதானம்: மன்மனாபவ என்ற விதி மூலமாக மனரசனையின் நிலையை அனுபவம் செய்யும்
மற்றும் செய்விக்கும் அனைத்து பந்தனங்களிலிருந்தும் விடுபட்டவர் ஆகுக.
எந்தக் குழந்தைகள் இரும்புச் சங்கிலிகள் மற்றும் மெல்லிய நூல்களின் பந்தனத்தைத் துண்டித்து
பந்தனமற்ற நிலையில் இருக்கிறார்களோ அவர்கள் கலியுகத்தின் ஸ்தூல பொருட்களின் மீதுள்ள ஆர்வம்
மற்றும் பற்றுதலிலிருந்து விடுபட்டு விடுகிறார்கள். அவர்களை தேக அபிமானம் மற்றும் தேகத்தின் பழைய
உலகின் எந்த ஒரு பொருளும் சிறிதளவு கூட கவர்ந்திழுப்பதில்லை. எப்பொழுது எந்தவொரு இந்திரியத்தின்
சுவையில் அதாவது அழியும் சுவையின் பக்கம் ஈர்ப்பு இல்லையோ அப்பொழுது ஆன்மீக அதீந்திரிய சுகம்
மற்றும் மனரசனையின் நிலையின் அனுபவம் ஆகிறது. இதற்காக நிரந்தரமான மன்மனாபவ என்ற நிலை
வேண்டும்.
சுலோகன் : எந்த சேவையில் அனைவரின் ஆசீர்வாதங்களுடன் குμயின்
அனுபவம் ஆகிறதோ அது தான் உண்மையான சேவை.
TAMIL MURLI 08 TO 14 AUGUST - 2016
08.
08.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! எண்ணம், சொல், செயலில் யாருக்கும் துக்கம் அளிக்கக் கூடாது.
ஒரு போதும் யார் மீதும் கோபப்படக் கூடாது. அன்பு மிகவும் இனிமையான ஒரு விஷயம்
ஆகும். அன்பினால் யாரை வேண்டுமானாலும் வசப்படுத்த முடியும்.
கேள்வி : பாபா குழந்தைகளுக்கு இரட்டை கிரீடம் தரிக்கும் உலகத்திற்கே அதிபதியாக மாற அல்லது
மிகவும் உயர்ந்தவர்களாக மாறுவதற்கு என்ன வழி கூறுகின்றார்?
பதில் : தெய்வீக குணங்களைக் கடைபிடித்து, மிக மிக இனிமையாக மாறுங்கள். ஒருவருக்கொருவர்
சகோதரன் சகோதரன் மற்றும் சகோதரி சகோதரி என்ற பார்வையில் பாருங்கள். தங்களுடைய முயற்சியினால்
தங்களுக்கு ராஜ திலகத்தை அளியுங்கள். 2. சுயம் ஈஸ்வர் பாபா உங்களுக்கு கற்பித்துக் கொண்டிருக்கின்றார்
என்றால் படிப்பில் ரெகுலராக இருங்கள், எவ்வளவு படிக்கிறீர்களோ படிக்க வைக்கிறீர்களோ அவ்வளவு
உங்களுடைய பழக்க வழக்கங்கள் சீராகும். அவ்வளவு உயர்ந்தவர்களாக மாறுவீர்கள்.
ஓம் சாந்தி. இனிமையிலும் இனிமையான செல்லமான குழந்தைகளே, இப்போது நாம் நரகத்தின் கரையை
விட்டு விட்டு முன்னேறிப் போய்க் கொண்டிருக்கிறோம் என அறிகிறீர்கள். இடையில் இந்த புருஷோத்தம
சங்கமயுகம் முற்றிலும் தனிப்பட்டது. கடலின் நடுவில் உங்களுடைய படகு இருக்கிறது. நீங்கள் சத்யுகத்திலும்
இல்லை. கலியுகத்திலும் இல்லை. நீங்கள் புருஷோத்தம சங்கமயுக சர்வோத்தம பிராமணர் ஆவீர்கள். சங்கமயுகம்
பிராமணர்களுடையதாகும். பிராமணர்கள் குடுமிக்குச் சமமானவர்கள். இது பிராமணர்களுடைய மிகச் சிறிய
யுகம் ஆகும். இது ஒரே பிறவியின் யுகமாக இருக்கிறது. இது உங்களுடைய மகிழ்ச்சியின் யுகம் ஆகும்.
அதுவும் எந்த விசயத்தில்? பகவான் நம்மை கற்க வைக்கின்றார். இப்படிப்பட்ட மாணவர்களுக்கு எவ்வளவுக்
கெவ்வளவு மகிழ்ச்சி இருக்கும். உங்களுக்கு இப்போது முழு சக்கரத்தின் ஞானமும் புத்தியில் இருக்கிறது.
இப்போது நாம் பிராமணராகவும் பிறகு நாம் தேவதையாகவும் மாறுவோம். முதலில் நமது வீடு ஸ்வீட்
ஹோமிற்குச் செல்வோம். பிறகு புது உலகில் நாம் பிராமணர்கள் தான் சுயதரிசன சக்கரதாரி. நாம் தான் இந்த
குட்டிக்கரண விளையாட்டு விளையாடுகிறோம். இந்த விராட ரூபத்தையும் பிராமணர்களாகிய நீங்கள் தான்
அறிகிறீர்கள். புத்தியில் முழு நாளும் இந்த விசயங்களை நினைவு செய்துக் கொண்டிருக்க வேண்டும்.
இது உங்களுடைய மிக மிக அன்பு நிறைந்த குடும்பம் ஆகும். நீங்கள் ஒவ்வொருவரும் மிக மிக
அன்புடையவராக இருக்க வேண்டும். பாபாவும் இனிமையாக இருக்கிறார். குழந்தைகளாகிய உங்களையும்
அன்பாக மாற்றுகிறார். ஒரு போதும் யார் மீதும் கோபப்படக் கூடாது. எண்ணம், சொல், செயலில் யாருக்கும்
துக்கம் கொடுக்கக் கூடாது. பாபா ஒரு போதும் யாருக்கும் துக்கம் கொடுப்பதில்லை. எவ்வளவு பாபாவை
நினைக்கிறீர்களோ அவ்வளவு இனிமையாக மாறிக் கொண்டே இருப்பீர்கள். அவ்வளவு தான். இந்த நினைவினால்
தான் படகு கரை சேரும். இதுவே நினைவு யாத்திரை யாகும். நினைவு செய்து செய்து சாந்திதாம் வழியாக சுக
தாமத்திற்குப் போக வேண்டும். பாபா வந்திருப்பதே குழந்தைகளை சதா சுகமுடையவராக மாற்றுவதற்காக
ஆகும். பூதங்களை விரட்டுவதற்கான யுக்தியை பாபா தெரிவிக்கின்றார். என்னை நினைவு செய்தால் இந்த
பூதங்கள் வெளியேறிப் போய்விடும். யாரிடமாவது பூதம் இருந்தால் இங்கேயே என்னிடம் விட்டு விட்டு
செல்லுங்கள். பாபா, வந்து எங்களுடைய பூதங்களை வெளியேற்றி அழுக்கிலிருந்து தூய்மையாக்குங்கள் என்று
கூறுகிறீர்கள். எனவே பாபா எவ்வளவு மிருதுவாக மாற்றுகிறார். பாபா மற்றும் தாதா இருவரும் சேர்ந்து
குழந்தைகளாகிய உங்களை அலங்காரம் செய்கின்றனர். அவர் எல்லைக்குட்பட்ட தந்தை ஆவார். இவர்
எல்லைக்கப்பாற்பட்ட தந்தை ஆவார். எனவே குழந்தைகள் மிகவும் அன்போடு நடக்க வேண்டும். மேலும்
நடத்த வேண்டும். அனைத்து விகாரங்களிலும் தானமாகக் கொடுக்க வேண்டும். தானம் அளித்தால் கிரகணம்
விலகிப் போகும். இதில் எந்த சாக்கு போக்கு விசயமும் கிடையாது. அன்பினால் நீங்கள் யாரை வேண்டுமானாலும்
வசப்படுத்தலாம். அன்போடு புரிய வையுங்கள். அன்பு மிகவும் இனிமையான விசயம் ஆகும். சிங்கத்தை,
யானையை...... விலங்குகளைக் கூட மனிதர்கள் அன்பினால் வசப்படுத்துகிறார்கள். இருப்பினும் அவர்களோ
அசுர மனிதர்கள். நீங்களோ இப்போது தேவதையாக மாறிக் கொண்டிருக்கிறீர்கள். எனவே தெய்வீக குணங்களைக்
கடைப்பிடித்து மிக மிக இனிமையாக மாற வேண்டும். ஒருவருக்கொருவர் சகோதரன் சகோதரன் மற்றும்
சகோதரன் சகோதரி என்ற பார்வையோடு பாருங்கள். ஆத்மா, ஆத்மாவிற்கு ஒரு போதும் துக்கம் கொடுக்க
முடியாது. இனிமையான குழந்தைகளே ! நான் உங்களுக்கு சொர்க்கத்தின் இராஜ்ய பாகத்தை அளிக்க
வந்திருக்கிறேன் என பாபா கூறுகின்றார். இப்போது உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை என்னிடமிருந்து
அடையுங்கள். நான் உங்களை டபுள் கிரீடம் உடைய உலகத்திற்கே அதிபதியாக மாற்ற வந்திருக்கிறேன்.
08.08.2016
(2/4)
ஆனால் நீங்கள் உழைக்க வேண்டும். நான் யார் மீதும் கிரீடம் வைக்க மாட்டேன். நீங்கள் உங்களுடைய
முயற்சியினால் தான் தனக்கு இராஜ திலகத்தை வைத்துக் கொள்ள வேண்டும். பாபா முயற்சிக்கான வழியைத்
தெரிவிக்கிறார். அதாவது இவ்வாறு உலகத்திற்கே அதிபதியாக டபுள் கிரீடம் உடையவராக தன்னை மாற்றிக்
கொள்ளலாம். படிப்பின் மீது முழு கவனம் வைக்க வேண்டும். ஒரு போதும் படிப்பை விட்டு விடக் கூடாது.
ஏதாவது ஒரு காரணத்தினால் கோபித்துக் கொண்டு படிப்பை விட்டு விட்டால் மிக மிக நஷ்டம் ஏற்படும்.
லாபம் மற்றும் நஷ்டத்தை பார்த்துக் கொண்டே இருங்கள். நீங்கள் ஈஸ்வரிய பல்கலைக் கழகத்தின் மாணவர்கள்.
ஈஸ்வரன், தந்தையிடம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். படித்து பூஜைக்குரிய தேவதையாக மாறிக் கொண்டிருக்
கிறீர்கள். எனவே மாணவர்கள் கூட இவ்வாறு ரெகுலராக மாற வேண்டும், மாணவ வாழ்க்கையே உயர்ந்த
வாழ்க்கை. எவ்வளவு படிக்கிறீர்களோ, படிக்க வைக்கிறீர்களோ, பழக்க வழக்கங்களை திருத்திக் கொள்கிறீர்களோ
அவ்வளவு உயர்ந்தவர் ஆவீர்கள்.
இனிமையான குழந்தைகளே ! இப்போது உங்களுடையது திரும்பும் பயணம் ஆகும். எப்படி சத்யுகத்தில்
இருந்து திரேதா, துவாபர், கலியுகம் வரை கீழே இறங்கி வந்தீர்களோ அவ்வாறே இப்போது நீங்கள்
கலியுகத்திலிருந்து மேலே சத்யுகம் வரை போக வேண்டும். திரேதாயுகம் வரை வந்து விட்டால் இந்த
கர்மேந்திரியங்களின் சஞ்சலம் முடிந்து போகும். ஆகவே எவ்வளவு பாபாவை நினைக்கிறீர்களோ அவ்வளவு
ஆத்மாக்களாகிய உங்களிடமிருந்து ரஜோ தமோவின் துரு நீங்கிக் கொண்டே இருக்கும். மேலும் எவ்வளவு
துரு நீங்குகிறதோ அவ்வளவு பாபா காந்தத்தின் கவர்ச்சி அதிகரிக்கும். கவர்ச்சி ஏற்படவில்லை என்றால்,
நிச்சயம் துரு பிடித்திருக்கிறது. ஒரேயடியாக துருவை நீக்கி உண்மையான தங்கமாக மாற வேண்டும். அதுவே
கடைசி கர்மாதீத் நிலையாகும்.
முக்கியமான விஷயம் ஆத்ம உணர்வு அடையுங்கள் என இனிமையான குழந்தைகளுக்கு பாபா புரிய
வைக்கின்றார். தேகம் உட்பட தேகத்தின் அனைத்து உறவுகளையும் விட்டு விட்டு என்னை மட்டும் நினையுங்கள்,
நிச்சயம் தூய்மையாக வேண்டும். குமாரி தூய்மையாக இருக்கும் போது அனைவரும் அவர்களுக்கு தலை
வணங்குகிறார்கள். திருமணம் செய்த பிறகு பூஜாரி ஆக வேண்டியிருக்கிறது. அனைவர் முன்பும் தலை குனிய
வேண்டியிருக்கிறது. குமாரி முதலில் தாய் வீட்டில் இருக்கும் போது அவ்வளவு நிறைய உறவுகளை
நினைப்பதில்லை. திருமணத்திற்கு பிறகு தேகத்தின் உறவுகள் கூட அதிகமாகிறது. பிறகு கணவர் குழந்தைகள்
மீது மோகம் அதிகரிக்கிறது. மாமியார் மாமனார் அனைவரையும் நினைவில் வந்துக் கொண்டே இருப்பார்கள்.
முதலில் தாய் தந்தையின் மீது மட்டும் பற்று இருக்கிறது. இங்கேயோ அந்த உறவுகள் அனைத்தையும் மறக்க
வேண்டியிருக்கிறது. ஏனென்றால், இவர் ஒருவரே உங்களுடைய உண்மையிலும் உண்மையான தாய் தந்தை
அல்லவா ! இதுவே ஈஸ்வரிய உறவாகும். தாயும் நீயே, தந்தையும் நீயே..... என பாடுகிறார்கள். இந்த தாய்
தந்தையோ உங்களை உலகத்திற்கே அதிபதியாக்குகின்றார். ஆகவே, எல்லையற்ற தந்தையாகிய என்னை
நிரந்தரமாக நினையுங்கள். மேலும் மனிதர்கள் மீது எந்த பற்றும் வைக்காதீர்கள் என பாபா கூறுகின்றார். இந்த
எல்லையற்ற தந்தை உங்களை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறார். அந்த இனிமையான தந்தையை
மிகவும் அன்போடு நினைவு செய்துக் கொண்டே சுய தரிசன சக்கரத்தையும் சுழற்றுங்கள். இந்த நினைவின்
பலத்தினால் உங்களுடைய ஆத்மா தங்கமாகி சொர்க்கத்திற்கு அதிபதியாகிறீர்கள். சொர்க்கத்தின் பெயரைக்
கேட்டதும் மனம் மகிழ்ச்சி அடைகிறது. யார் நிரந்தரமாக நினைவு செய்கிறார்களோ மேலும் மற்றவர்களை
நினைவு செய்ய வைக்கிறார்களோ அவர்களே உயர்ந்த பதவி அடைவார்கள். இந்த முயற்சி செய்து செய்து
கடைசியில் உங்களுக்கு அந்த நிலை வந்து விடும். இந்த உலகமே பழையதாக இருக்கிறது. உடலும்
பழையதாக இருக்கிறது. தேகம் உட்பட தேகத்தின் அனைத்து உறவுகளும் பழையதாக இருக்கின்றது. அவை
அனைத்திலிருந்தும் புத்தியோகத்தை விலக்கி ஒரு பாபாவின் சங்கத்தில் இணைக்க வேண்டும். கடைசி காலத்தில்
கூட அந்த ஒரு தந்தையின் நினைவிருக்க வேண்டும். வேறு எந்த உறவினரின் நினைவிருந்தால், பிறகு
கடைசியில் அவர்கள் நினைவிற்கு வருவர். மேலும் பதவியும் குறைந்து போகும். கடைசி காலத்தில் யார்
எல்லையற்ற தந்தையை நினைக்கிறார்களோ அவர்களே நரனிலிருந்து நாராயணன் ஆவார்கள். பாபாவின்
நினைவிலிருந்தால் பிறகு சிவாலயம் தொலைவில் இல்லை.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளே ! எல்லையற்ற
தந்தையிடம் புத்துணர்வு அடைவதற்காக வருகிறீர்கள். ஏனென்றால் எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற
உலகத்தின் ராஜ்ஜிய பதவி கிடைக்கிறது என குழந்தைகள் அறிகிறீர்கள். இதை ஒரு போதும் மறக்கக் கூடாது.
இது எப்போதும் நினைவிருந்தால் குழந்தைகளுக்கு அளவற்ற மகிழ்ச்சி கிடைக்கும். இந்த பேட்ஜை போகும்
போதும் வரும் போதும் அடிக்கடி பார்த்துக் கொண்டே இருங்கள். ஒரேயடியாக இதயத்தோடு இணைத்து
விடுங்கள். ஆஹா, ஸ்ரீமத்தால் நாம் இவ்வாறு மாறிக் கொண்டிருக்கிறோம். அவ்வளவு தான் பேட்ஜை பார்த்து
அவரிடம் அன்பு செய்துக் கொண்டே இருங்கள். பாபா, பாபா ! என்று சொல்லிக் கொண்டே இருங்கள்.
08.08.2016
(3/4)
எப்போதும் நினைவிருக்கும். நாம் பாபா மூலமாக இவ்வாறு மாறிக் கொண்டே இருக்கிறோம்.
இனிமையான குழந்தைகளே ! மிகவும் விசால புத்தி உடையவராக இருக்க வேண்டும். முழு நாளும்
சேவையின் எண்ணங்கள் வந்துக் கொண்டே இருக்க வேண்டும். யார் சேவை இல்லாமல் இருக்க முடியாதோ
அப்படிப்பட்ட குழந்தைகள் பாபாவிற்கு வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் முழு உலககையும் முற்றுகை இட
வேண்டும். அதாவது அழுக்கான உலகை தூய்மையாக்க வேண்டும். முழு உலகத்தையும் துக்க தாமத்திலிருந்து
சுக தாமமாக மாற்ற வேண்டும். டீச்சருக்கு கூட படிக்க வைப்பதில் ஆனந்தம் வருகிறது அல்லவா ! இப்போது
நீங்களோ மிக உயர்ந்த ஆசிரியராக இருக்கிறீர்கள். நல்ல ஆசிரியர் என்றால், அவர் நிறைய பேரை தனக்குச்
சமமாக மாற்றுவார். ஒரு போதும் களைப்படைவதில்லை. ஈஸ்வரிய சேவையில் மிகவும் மகிழ்ச்சி இருக்கிறது.
பாபாவின் உதவியும் கிடைக்கிறது. இது மிகப் பெரிய எல்லையற்ற வியாபாரம் ஆகும். வியாபாரிகள் தான்
பணக்காரர்கள் ஆகிறார்கள். அவர்கள் இந்த ஞான மார்க்கத்தில் மிகவும் உற்சாகத்தில் துள்ளுகிறார்கள். பாபாவும்
கூட எல்லையற்ற வியாபாரி அல்லவா? வியாபாரம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஆனால் இதில் மிகவும்
துணிவைப் பின்பற்ற வேண்டும். புதுப் புது குழந்தைகள் பழையவர்களை விட முயற்சியில் முன்னேறிப் போக
முடியும். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட அதிர்ஷ்டம் இருக்கிறது என்றால், முயற்சி கூட ஒவ்வொருவரும்
தனித்தனியாக செய்ய வேண்டும். தன்னை முழுமையாக சோதித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு சோதித்துக்
கொள்பவர்கள் ஒரேயடியாக இரவு பகல் முயற்சியில் ஈடுபடுவார்கள். நாங்கள் எங்கள் நேரத்தை ஏன் வீணாக்க
வேண்டும் என்று கூறுவார்கள். எவ்வளவு முடியுமோ நேரத்தை பாதுகாப்பார்கள். தனக்குத் தானே உறுதியாக
உறுதி மொழி எடுக்கிறார்கள். நாங்கள் பாபாவை ஒரு போதும் மறக்க மாட்டோம். ஸ்காலர்μப் அடைந்தே
தீருவோம். இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு உதவியும் கிடைக்கிறது. இப்படிப்பட்ட புதுப் புது முயற்சி செய்யும்
குழந்தைகளை நீங்கள் பார்ப்பீர்கள். சாட்சாத்காரம் செய்துக் கொண்டே இருப்பார்கள். எப்படி ஆரம்பத்தில்
நடந்ததோ அவ்வாறு கடைசியிலும் பார்ப்பார்கள். எவ்வளவு அருகாமையில் போகிறீர்களோ அவ்வளவு
மகிழ்ச்சியில் ஆடிக் கொண்டே இருப்பார்கள். அங்கே ரத்த ஆற்றின் விளையாட்டு கூட நடந்துக் கொண்டே
இருக்கும்.
குழந்தைகளாகிய உங்களின் ஈஸ்வரிய பந்தயம் நடந்துக் கொண்டிருக்கிறது. எவ்வளவு முன்னால்
ஓடிக் கொண்டிருக்கிறீர்களோ அவ்வளவு புது உலகத்தின் காட்சிகள் கூட அருகாமையில் வந்துக் கொண்டிருக்கும்.
மகிழ்ச்சி அதிகரித்துக் கொண்டிருக்கும். யாருக்கு காட்சிகள் நெருக்கத்தில் தெரியவில்லையோ அவர்களுக்கு
மகிழ்ச்சியும் ஏற்படாது. இப்போது கலியுக உலகத்தின் மீது வைராக்கியமும் சத்யுக புது உலகத்தில் மிகவும்
அன்பும் இருக்க வேண்டும். சிவபாபா நினைவிருந்தால் சொர்க்கத்தின் ஆஸ்தியும் நினைவு வரும். சொர்க்கத்தின்
ஆஸ்தி நினைவு வந்தால் சிவபாபாவும் நினைவிற்கு வருவார். இப்போது சொர்க்கத்தின் பக்கம் சென்று
கொண்டிருக்கிறோம் என குழந்தைகள் அறிகிறீர்கள். கால் நரகத்தின் பக்கமும் தலை சொர்க்கத்தின் பக்கமும்
இருக்கிறது. இப்போது சிறியவர் பெரியவர் அனைவருக்கும் வயோதிக நிலையாகும். பாபாவிற்கு எப்போதும்
இந்த பெருமிதம் இருக்கிறது. ஆஹா ! நான் சென்று இந்த பாலகன் கிருஷ்ணன் ஆவேன், அதற்காக
முன்னதாகவே பரிசுகளையும் அனுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். யாருக்கு முழுமையாக நிச்சயம் இருக்கிறதோ
அந்த கோபிகைகள் பரிசுகளை அனுப்புகிறார்கள். அவர்களுக்கு அதிந்தீரிய சுகம் கிடைக்கிறது. நாம் தான்
அமர உலகத்தில் தேவதையாவோம். போன கல்பத்திலும் நாங்களே மாறினோம். பிறகு 84 பிறவிகளை
எடுத்தோம். இந்த குட்டிக் கரண விளையாட்டு நினைவிருந்தால் ஆஹா, சௌபாக்கியம் ! எப்போதும் அளவற்ற
குμயில் இருங்கள். மிகப் பெரிய லாட்டரி கிடைத்திருக்கிறது. 5000 வருடங்களுக்கு முன்பு கூட நாம் இராஜ்ய
பாக்கியத்தை அடைந்தோம். பிறகு நாளை பெறுவோம் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. போன கல்பத்தில்
எப்படி பிறவி எடுத்தோமோ அப்படியே எடுப்போம். அவர்களே நம்முடைய தாய் தந்தையாக இருப்பார்கள்.
யார் கிருஷ்ணரின் தந்தையாக இருந்தாரோ அவரே மீண்டும் ஆவார். இப்படியெல்லாம் யார் முழு நாளும்
சிந்தித்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் மிகவும் ரமணீகத்தன்மையில் இருப்பார்கள். விசார சாகர மந்தனம்
(ஞான சிந்தனை) செய்யவில்லை என்றால் ஆரோக்கியமற்றவராக இருப்பது போலாகும். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை
வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம் :
1. ஈஸ்வரிய சேவையில் ஒரு போதும் களைப்படையக் கூடாது. நல்ல டீச்சராகி, பிறரை தனக்குச்
சமமாக மாற்றக் கூடிய சேவை செய்ய வேண்டும்.
08.08.2016
(4/4)
2. நினைவின் பலத்தால் ஆத்மாவை தங்கமாக மாற்ற வேண்டும். எந்த தேகதாரி மீதும் பற்று
இருக்கக் கூடாது.
வரதானம் : குறைவான வார்த்தைகள் மூலமாக ஞானத்தின் அனைத்து ரகசியங்களையும்
தெளிவுபடுத்தக் கூடிய யதார்த்த மற்றும் சக்திசாலி ஆகுக.
எந்த ஒரு பொருளும் எவ்வளவு அதிகமாக சக்திசாலியாக இருக்கிறதோ அவ்வளவு அதனுடைய அளவு
குறைவாக இருக்கிறது. அவ்வாறே தாங்கள் தங்களின் நிர்வாண் (தேகத்தைக் கடந்த) நிலையில் இருந்து
பேசும் போது வார்த்தைகள் குறைவாகவும், ஆனால் யதார்த்தமானதாகவும் சக்திசாலியாகவும் இருக்கும். ஒரு
வார்த்தையில் ஆயிரம் வார்த்தைகளின் ரகசியம் அடங்கி இருக்கும். இதனால் வீண் வார்த்தைகள் தானாகவே
முடிந்து போகும். ஒரு வார்த்தையினால் ஞானத்தின் அனைத்து ரகசியங்களையும் தெளிவு படுத்த முடியும்.
விஸ்தாரம் முடிந்து போகும்.
சுலோகன் : மனதால் 'பாபா' என்று கூறுவதன் பொருள்
மகிழ்ச்சி மற்றும் சக்தியை அடைவதாகும்.
(1/4)
09.
08.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! இதுவரை படித்த அனைத்தையும் மறந்து ஒரு
தந்தையை நினைவு செய்யுங்கள்.
கேள்வி: பாரதத்தில் சத்யுக சுயராஜ்யத்தின் ஸ்தாபனை செய்ய வேண்டும் என்றால் எந்த
ஒரு பலம் வேண்டும்?
பதில்: தூய்மையின் பலம். நீங்கள் சர்வ சக்திவான் தந்தையுடன் யோகம் செய்து தூய்மை ஆகிறீர்கள்.
இந்த தூய்மையின் பலத்தினால் தான் சத்யுக சுயராஜ்யத்தின் ஸ்தாபனை ஆகிறது. இதில் சண்டை ஆகிய
எந்த விஷயமும் கிடையாது. ஞானம் மற்றும் யோக பலமே பாவன உலகத்தின் அதிபதியாக ஆக்கி
விடுகிறது. இதே பலத்தினால் ஒரு வழியின் (சத்யுக) ஸ்தாபனை ஆகி விடுகிறது.
பாடல்: கடைசியில் அந்த நாளும் வந்தது இன்று ...
ஓம் சாந்தி. குழந்தைகள் பாட்டு கேட்டீர்கள். இந்த பாடல் ஒன்றும் நம்மால் அமைக்கப்பட்டது கிடையாது.
எப்படி மற்ற வேதங்கள் மற்றும் சாஸ்திரங்களின் சாரம் புரிய வைக்கப்படுகிறதோ. அதே போல ஏற்கனவே
அமைக்கப்பட்டுள்ள இப்பாடல்களின் சாரத்தையும் புரிய வைக்கிறார் படகோட்டி அல்லது தோட்டக்காரன்
அல்லது சத்கதி அளிக்கும் வள்ளல் ஒரே ஒரு தந்தை, என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். ஜீவன்
முக்திக்காக பக்தி செய்கிறார்கள். ஆனால் ஜீவன் முக்தி அல்லது சத்கதி அளிக்கும் வள்ளல் ஒரு பகவான்
ஆவார். அதன் பொருளை குழந்தைகள் தான் புரிந்து கொள்ள முடியும். மனிதர்கள் புரியாமல் உள்ளார்கள்.
சத்கதி என்றால், துக்கத்திலிருந்து விடுவித்து சாந்தியின் பிராப்தி செய்விக்கப்படுவது. இங்கு இலட்சுமி நாராயணரின்
இராஜ்யம் இருக்கும் பொழுது, இங்கு தூய்மை, சுகம், சாந்தி இருந்தது என்பதை பாரதவாசி குழந்தைகள்
அறிந்துள்ளார்கள். இராதை கிருஷ்ணரின் இராஜ்யம் என்று கூற முடியாது. உண்மையில் இராதை தாய்மார்களின்
இனத்தவர் ஆவார். அவரை அதிகமாக அன்பு செய்ய வேண்டும். பிறகும் கிருஷ்ணரை மிகவும் அன்பு
செய்கிறார்கள். ஊஞ்சலில் ஊஞ்சலாட்டுகிறார்கள். கிருஷ்ணரின் ஜன்மாஷ்டமி கூட கொண்டாடுகிறார்கள்.
இராதைக்கு ஜெயந்தி கொண்டாடுவதில்லை. உண்மையில் இருவருக்குமே கொண்டாட வேண்டும். ஒன்றுமே
புரிந்து கொள்வதில்லை. அவர்களுடைய வாழ்க்கை சரித்திரமோ யாருக்குமே தெரியாது. தந்தை வந்து தன்னுடைய
மற்றும் அனைவரின் வாழ்க்கை சரித்திரத்தைக் கூறுகிறார். சிவ பரமாத்மா நமஹ என்று மனிதர்கள் கூறவும்
செய்கிறார்கள். ஆனால் அவரது வாழ்க்கை சரித்திரம் பற்றி தெரியாது. மனிதனுடைய வாழ்க்கை சரித்திரத்திற்கு
சரித்திரம், பூகோளம் என்று கூறப்படுகிறது. உலகத்தின் சரித்திரம், பூகோளம் பாடப்படுகிறது அல்லவா?
எத்தனை தாலுக்காக்களில் ஆட்சி புரிந்து கொண்டிருந்தார்கள். எவ்வளவு பூமி மீது ஆட்சி புரிந்து
கொண்டிருந்தார்கள். எப்படி ஆட்சி புரிந்தார்கள், பின் அவர்கள் எங்கு சென்றார்கள்.. இந்த விஷயங்கள்
யாருக்குமே தெரியாது. குழந்தைகளாகிய உங்களுக்கு நல்ல முறையில் புரிய வைக்கப்படுகிறது. படைப்பவர்
மற்றும் படைப்பினுடைய ஞானத்தை குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். உண்மையில் இது கலியுகத்தின்
கடைசி மற்றும் சத்யுகத்தின் ஆரம்பம் ஆகும் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரிந்து விட்டுள்ளது.
சங்கமத்தில் தான் பரமபிதா பரமாத்மா வந்து மனிதர்களை பதீத நிலையிலிருந்து பாவன தேவதையாக
ஆக்குகிறார். உத்தம புருஷர்கள் அல்லது புருஷோத்தமராக ஆக்குகிறார். ஏனெனில், இச்சமயத்தில் மனிதர்கள்
உத்தமமாக இல்லை. தாழ்ந்தவர்களாக இருக்கிறார்கள். உயர்ந்த தரம், நடுத்தரம் தாழ்ந்த தரம் லி சதோ, ரஜோ,
தமோ ஆகிறார்கள். யார் நல்ல முறையில் ஞானம் கேட்கிறார்களோ அவர்களை சதோ குணம் உடையவர்கள்
என்று கூறுவார்கள். யார் கொஞ்சமாக கேட்கிறார்களோ அவர்களை ரஜோ குணமுடையவர்கள் என்று கூறுவார்கள்.
யார் கேட்பதே இல்லையோ, அவர்களை தமோ குணமுடையவர்கள் என்று கூறுவார்கள். படிப்பில் கூட
அவ்வாறே ஆகிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு சதோபிரதான படிப்பு வேண்டும். எனவே சதோபிரதானமான
இலட்சுமி நாராயணர் ஆவதற்கான ஞானம் உங்களுக்கு அளிக்கப்படுகிறது. நரனிலிருந்து நாராயணர், நாரியிலிருந்து
இலட்சுமி ஆக வேண்டும். கீதைக்காகக் கூட நீங்கள் இது உண்மையான கீதை என்று கூறுகிறீர்கள். இது
உண்மையான கீதா பாடசாலை, அதாவது சத்திய நாராயணர் ஆவதற்கான கதை, அல்லது உண்மையான அமர
கதை, உண்மையான மூன்றாவது கண்ணின் கதை என்று நீங்கள் எழுதலாம். படங்களோ எல்லாமே உங்களிடம்
உள்ளது. இவற்றில் முழு ஞானம் உள்ளது. பிரஜாபிதா பிரம்மா குமார் குமாரிகளாகிய நாங்கள் பாரதத்தை
சதோபிரதானமான சொர்க்கமாக ஆக்கியே விடுவோம் என்று குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது உறுதி
எடுக்கிறீர்கள். நீங்கள் இந்த செய்தியைத் தெரியப்படுத்த வேண்டும். காந்தியடிகள் கூட பாவன இராஜ்யத்தை
விரும்பினார். எனவே அவசியம் இப்பொழுது பதீத இராஜ்யம் ஆகும். சுயம் நாம் பதீதமாக இருக்கிறோம்
என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. இராவணன் என்பது 5 விகாரமாகும். இராம இராஜ்யம்
09.08.2016
(2/4)
வேண்டும் என்று கூறுகிறார்கள் என்றால், அவசியம் அசுர சம்பிரதாயம் ஆகிறார்கள் அல்லவா? ஆனால் இது
யாருடைய புத்தியிலும் வருவதில்லை. எவ்வளவு பெரிய பெரிய குருமார்கள் கூட இந்த அளவிற்குப் புரிந்து
கொள்வதில்லை. நாங்கள் ஸ்ரீமத் படி பிரம்மா மூலமாக 5 வருடங்களுக்கு முன்னது போலவே தெய்வீக
இராஜ்யத்தை ஸ்தாபனை செய்வோம் என்று குழந்தைகளாகிய நீங்கள் அறிவிப்பு விடுக்கிறீர்கள். இது புருஷோத்தம
சங்கம யுகமாகும். இப்பொழுது தாழ்ந்த புருஷர்களிலிருந்து சதோபிரதான புருஷோத்தமராக ஆகிறீர்கள். மரியாதா
புருஷோத்தமர், ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தினர் தான் ஆவார்கள். இப்பொழுது ஒரே ஒரு தேவி
தேவதா தர்மத்தின் ஸ்தாபனை ஆகிறது. பிறகு வேறு தர்மங்கள் இருக்கவே இருக்காது. சத்யுகத்தில் ஒரு
தர்மம், ஒரே ஒரு இராஜ்யம் இருந்தது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் நிரூபித்து புரிய வைக்கிறீர்கள்.
திரேதாவில் சூரிய வம்சத்திலிருந்து மாறி, சந்திர வம்சத்திற்குச் செல்கிறார்கள் என்றாலும் கூட, மொழி ஒன்றாகத்
தான் இருக்கும். இப்பொழுதோ பாரதத்தில் அநேக மொழிகள் உள்ளன. நம்முடைய இராஜ்யத்தில் ஒரே ஒரு
மொழி இருந்தது என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். தற்சமயத்திலோ நிறைய பார்த்துக் கொண்டே
இருப்பீர்கள். எப்படி பிரயாணம் செய்து பக்கத்தில் வந்துக் கொண்டே இருக்கும் பொழுது இப்பொழுது நம்முடைய
வீடு வந்து விட்டது என்று தங்களது தேசத்தின் பக்கம் பார்த்து குμ அடைகிறார்கள். அவ்வளவு தான் !
இப்பொழுதே போய் சந்திக்கப் போகிறோம் என ஆனந்தப்படுவர். அதுபோன்று உங்களுக்குக் கூட உங்களது
இராஜதானியின் காட்சி (சாட்சாத்காரம்) தெரிந்துக் கொண்டே இருக்கும். தங்களுடைய முயற்சியினுடைய
சாட்சாத்காரம் கூட ஆகும். பாபா முயற்சி செய்யுங்கள் என்று நமக்கு எவ்வளவு சொல்கிறார் என்பதைப்
பார்ப்பார்கள். இல்லையென்றால், ஐயோ ! ஐயோ ! என்பார்கள் மற்றும் பதவியும் குறைந்து போய் விடும்.
யோகத்தின் யாத்திரைப் பற்றி எல்லோருக்கும் கூறிக் கொண்டே இருங்கள். புரிய வைப்பதோ மிகவும் சுலபமாகும்.
ஏணிப்படி எவ்வளவு சுலபமானதாக உள்ளது. யார் தாமதமாக வருகிறார்களோ அவர்களுக்கு நாளுக்கு நாள்
சுலபமான ஞானம் கிடைக்கிறது. ஒரு வாரம் புரிந்து கொண்ட உடனேயே சுலபமாகப் புரிந்து கொண்டு
விடுவார்கள். படங்கள் அது போல தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் மிகச் சரியான விளக்க உரை உள்ளது. 84
பிறவிகளின் சக்கரம் முற்றிலும் சரியாக உள்ளது. இது பாரதவாசிகளுக்காக உள்ளது. குழந்தைகளாகிய உங்கள்
புத்தியில் முழு ஞானம் உள்ளது. பதீத பாவனர், சத்கதி தாதா, சிவபாபாவின் வழிப் படி நாம் மீண்டும் சகஜ
ராஜயோக பலத்தினாலே நம்முடைய உடல், மனம் பொருளாலே பாரதத்தை சொர்க்கமாக ஆக்குகிறோம்
என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். மற்றவர்களுடைய எதையும் நாம் பயன்படுத்துவது இல்லை. தங்களுடைய
உடல், மனம், பொருளால் சேவை செய்கிறோம். யார் எவ்வளவு செய்கிறார்களோ அவர்கள் தங்களது வருங்காலத்
திற்காக அமைக்கிறார்கள். நீங்கள் தான் வீட்டின் உறுப்பினர்கள் ஆவீர்கள். உங்கள் மூலமாகத் தான் பாபா
சத்யுக சுயராஜ்யத்தை ஸ்தாபனை செய்வித்துக் கொண்டிருக்கிறார். செலவு கூட நீங்கள் தான் செய்வீர்கள்.
உங்களது செலவு ஒன்றும் அதிகமாக இல்லை. நீங்கள் சிவபாபாவை நினைவு மட்டும் செய்ய வேண்டும்.
கன்னியர்கள் என்ன செலவு செய்ய வேண்டியுள்ளது. அவர்களிடம் ஏதாவது இருக்கிறதா என்ன? பாபா
குழந்தைகளிடம் என்ன கட்டணம் வாங்குவார்? எதுவும் கிடையாது. பள்ளிக் கூடங்களிலோ முதலில்
கட்டணத்தின் விஷயம் பேசுகிறார்கள். அங்கு கல்விக்காக எவ்வளவு செலவாகிறது. இங்கோ சிவபாபா குழந்தை
களிடம் எப்படி பைசா வாங்குவார். சிவபாபா பைசா வாங்குவதற்கு தனக்கென்று வீடு அமைக்க வேண்டி
இருக்கிறதா என்ன? குழந்தைகளாகிய நீங்கள் வருங்காலத்தில் சொர்க்கத்திற்குச் சென்று வைரம் வைடூரியங்களின்
அரண்மனை அமைக்க வேண்டியுள்ளது. எனவே நீங்கள் இங்கு என்ன செய்கிறீர்களோ அதற்கான பலன்
வருங்காலத்தில் உங்களுக்கு மாளிகையாக கிடைத்து விடுகிறது. இது மிகவுமே புரிந்து கொள்ள வேண்டிய
விஷயங்கள் ஆகும். எந்த அளவு யார் உடல், மனம், பொருளால் சேவை செய்வார்களோ அவர்கள் அங்கு
அதற்கேற்றபடி அடைவார்கள். கல்லூரி அல்லது ஆஸ்பத்திரி கட்டுகிறார்கள். 10 இலட்சம், 20 இலட்சம்
செலவிட வேண்டி வருகிறது. இங்கோ அவ்வளவு செலவு ஏற்படுவதில்லை. சிறிய வீட்டில் ஆன்மீகக் கல்லூரி
அல்லது ஆஸ்பத்திரி அமைக்கிறார்கள். பாண்டவர்களின் ஆதி தலைவன் யாராக இருந்தார்? அவர்களோ
கிருஷ்ணரின் பெயரை எழுதி விட்டுள்ளார்கள். உண்மையில் நிராகார பகவான் ஆவார். உங்களுக்கு ஸ்ரீமத்
அளிப்பவர் பகவான் ஆவார். மற்றபடி எல்லோரும் இராவண இராஜ்யத்தில் இராவணனின் வழிப்படி உள்ளார்கள்.
இராவணினுடைய வழிப்படி எவ்வளவு அசுத்தமாக ஆகி விட்டுள்ளார்கள். இப்பொழுது இதே படைப்பு பழையதாக,
பின்னர் அதுவே புதியதாக ஆகிறது. சிருஷ்டியில் பாரதம் தான் இருந்தது. பாரதம் புதியது, பாரதம் பழையது
என்று கூறுவார்கள். புதிய பாரதமோ சொர்க்கமாக இருந்தது. பிறகு பாரதம் பழையதாக ஆகும் பொழுது
நரகமாகும். இதற்கு பயங்கரமான நரகம் என்று கூறப்படுகிறது. மனிதர்களினுடையதே விஷயமாகும். இங்கு
சுகத்தின் பெயர் அடையாளமே இல்லை. இது ஏதாவது சுகமா என்ன? சந்நியாசிகள் கூட இச்சமயத்தின்
சுகத்தை காக்கை எச்சிலுக்கு சமம் என்கிறார்கள். எனவே அவர்கள் இல்லறத்தை விட்டு விடுகிறார்கள்.
அவர்கள் சொர்க்கம் அல்லது சத்யுகத்தின் ஸ்தாபனை செய்ய முடியாது. கிருஷ்ணபுரியோ பரமாத்மா தான்
ஸ்தாபனை செய்கிறார். ஸ்ரீகிருஷ்ணரின் ஆத்மா மற்றும் சரீரம் இரண்டும் சதோபிரதானமாக இருந்தது. எனவே
09.08.2016
(3/4)
கிருஷ்ணரை மிகவும் அன்பு செய்கிறார்கள். ஏனெனில் தூய்மையானவர் அல்லவா? சிறிய குழந்தை பிரம்ம
ஞானிக்கு சமம் என்று பாடவும் படுகிறது. சிறிய குழந்தைகளுக்கு விகாரங்கள் பற்றி தெரிந்திருப்பதில்லை.
சந்நியாசிகளுக்கோ பிறகும் தெரியும். குழந்தையோ பிறவியிலேயே மகாத்மா ஆகும். குழந்தைகளுக்கோ
தூய்மையான மலர் என்று கூறப்படுகிறது. ஸ்ரீகிருஷ்ணர் முதல் நம்பர் மலராவார். சொர்க்கமான புது உலகத்தின்
முதல் இளவரசராவார். ஜன்மம் எடுத்த உடன் முதல் இளவரசர் என்று கூறுவார்கள். ஸ்ரீகிருஷ்ணர் போன்ற
குழந்தை கிடைக்க வேண்டும் என்று கிருஷ்ணரை எல்லோரும் நினைவு செய்கிறார்கள். எப்படி ஆக வேண்டுமோ,
அப்படியே ஆகுங்கள் என்று இப்பொழுது தந்தை கூறுகிறார். ஒரே ஒரு கிருஷ்ணர் மட்டும் ஆகிறாரா என்ன?
பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் எத்தனை பேர் ஆகிறார்கள்? இரண்டாவது, மூன்றாவது என்று ஆகிறார்கள் அல்லவா?
எனவே இங்கு கூட பரம்பரை உள்ளது. தந்தைக்குப் பின்னால் மற்றவர் சிம்மாசனத்தில் அமருவார். எப்படி
வம்சம் இருக்கிறது, அதேப் போல இது வம்சமாகும். உங்களுடைய தொடர்பே கிறிஸ்த்தவர்களுடன் உள்ளது.
கிருஷ்ணர் மற்றும் கிறித்தவர் லி இருவருடையதும் ஒரே ராசி ஆகும். கொடுக்கல் வாங்கல் கூட தங்களுக்குள்
நிறைய நடக்கிறது. பாரதத்திலிருந்து அவர்கள் எவ்வளவு செல்வத்தை எடுத்துச் சென்றுள்ளார்கள். இப்பொழுது
மீண்டும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ரிடர்ன் சர்விஸ் செய்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஐரோப்பியவாசிகள்
தங்களுக்குள் சண்டையிட்டு முடிந்து போய் விடுவார்கள். இதுப் பற்றிக் கதை கூட உள்ளது. இரண்டு பூனைகள்
சண்டையிட்டன, நடுவில் குரங்கு வெண்ணெயை சாப்பிட்டுச் சென்று விட்டது. இந்த விஷயம் தற்போதையதாகும்.
அவர்கள் தங்களுக்குள் சண்டையிடுவார்கள். மேலும் இராஜ்ய பாக்கியம் உங்களுக்கு கிடைக்கப் போகிறது.
இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு மிக ஆழமான ஞானம் உள்ளது. நாம் அனைவரும் பிரம்மா குமார்
குமாரிகள் ஆவோம் என்பது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. அப்படியின்றி நாம் குஜராத்தி
ஆவோம், நாம் வங்காளத்தினர் ஆவோம் என்பதல்ல. அப்படி கிடையாது. இந்த கருத்து வேற்றுமை கூட
நீங்கிப் போய் விடவேண்டும். நாம் ஒரு தந்தையின் குழந்தைகள் ஆவோம். பிரம்மா மூலமாக சிவபாபாவின்
ஸ்ரீமத்படி ஞானம் மற்றும் யோக பலத்தினாலே மீண்டும் நாம் நமது சுய ராஜ்யத்தை ஸ்தாபனை செய்து
கொண்டிருக்கிறோம். யோக பலத்தினால் தான் நாம் பாவனம் ஆகிறோம். தந்தை சர்வ சக்திவான் ஆவார்.
அவரிடமிருந்து பலம் கிடைக்கிறது. நீங்கள் உலக அரசாட்சி பெறுகிறீர்கள். இதில் சண்டை ஆகிய எதுவுமே
நீங்கள் செய்வதில்லை. முழுமையாக தூய்மையின் பலம் ஆகும். வந்து பதீத நிலையிலிருந்து பாவனமாக
ஆக்குங்கள் என்று கூறவும் செய்கிறார்கள். எனவே நினைவினுடையதே பலம் ஆகும். அப்படியின்றி அங்கு
சிக்கலான வேலைகளில் போய் விட்டு எல்லாவற்றையும் மறந்து விடுவதல்ல. இங்கு நேரிடையாக ஞானக்கடலின்
அலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நதிகளிலோ அந்த அலைகள் இருப்பதில்லை. கடலினுடைய
ஒரே ஒரு அலை கூட எவ்வளவு தீமையை ஏற்படுத்தி விடுகிறது. பூகம்பம் ஏற்படும் பொழுது கடல் கூட
பொங்கி எழும். கடலை வறண்டதாக ஆக்கி நிலங்கள் வாங்கி உள்ளார்கள். அந்த பூமியை பிறகு எவ்வளவு
விலைக்கு விற்கிறார்கள் ! இந்த மும்பையே இருக்காது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இதற்கு முன்பு
இந்த பாம்பே இருந்ததா என்ன? சிறிய ஒரு கிராமமாக இருந்தது. இந்த தாய்மார்கள் கள்ளம் கபடமற்றவர்கள்
ஆவார்கள். அந்த அளவிற்கு எழுத படிக்கத் தெரியாது. இங்கோ படித்தது அனைத்தையும் மறக்க வேண்டும்.
நீங்கள் எதுவுமே படிக்கவில்லை என்றால் நல்லது. படித்திருக்கும் மனிதர்கள் புரிந்து கொள்ளும் நேரத்தில்
எவ்வளவு கேள்விகள் கேட்கிறார்கள். இங்கோ தந்தையை நினைவு மட்டும் செய்ய வேண்டும். அவ்வளவே
! எந்த ஒரு தேகதாரி மனிதனை நினைவு செய்ய வேண்டிய விஷயம் கிடையாது. ஒரே ஒரு எல்லையில்லாத
தந்தைக்குக் தான் மகிமை உள்ளது. உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஒரு பகவான் ஆவார். பிறகு இரண்டாவது
நம்பரில் பிரம்மா இருக்கிறார். அவரை விட உயர்ந்தவர் வேறு யாரும் இருப்பதில்லை. இவரை விட உயர்ந்தவர்
வேறு யாரும் இருப்பதில்லை. இவரை விட பெரியவர் வேறு யாருமே கிடையாது. ஆனால் எவ்வளவு
சாதாரணமாக நடக்கிறார் பாருங்கள். எப்படி சாதாரண முறையில் குழந்தைகளுடன் அமருகிறார். டிரெயினில்
போகிறார். இவர் யார் என்பது யாருக்குத் தெரிகிறது. பகவான் வந்து ஞானம் அளிக்கிறார் என்றால், அவசியம்
பிரவேசம் செய்து ஞானம் அளிப்பார் அல்லவா? ஒரு வேளை கிருஷ்ணராக இருந்தார் என்றால் ஒரே கூட்டம்
கூடிப் போய் விட்டிருக்கும். பின் படிப்பிக்கக் கூட முடியாது. தரிசனம் மட்டுமே செய்து கொண்டிருப்பார்கள்.
இங்கோ தந்தை மறைமுகமாக சாதாரண வேடத்தில் வந்து குழந்தைகளுக்கு கற்பிக்கிறார்.
நீங்கள் யாருக்குமே தெரியாத (மறைவான) சேனை ஆவீர்கள். ஆத்மாக்களாகிய நாம் மீண்டும் நமது
இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இந்த பழைய
சரீரத்தை விட்டு விட்டு புதிய தூய்மையான உடலைத் தரிப்பீர்கள். இப்பொழுது அசுர சம்பிரதாயமாக உள்ளது.
பிறகு தெய்வீக சம்பிரதாயமாக ஆகி விடும். நாம் புது உலகத்தில் தெய்வீக உடலைத் தரித்து ஆட்சி புரிவேன்
என்று ஆத்மா கூறுகிறது. ஆத்மா ஆண் ஆகும். உடல் இயற்கை ஆகும். ஆத்மா எப்பொழுதும் ஆண்
ஆகும். மற்றபடி சரீர கணக்கு வழக்குப் படி ஆண் உடல் அல்லது பெண் உடல் கிடைக்கிறது. ஆனால் நான்
அவினாμ ஆத்மா ஆவேன். இந்த சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. கலியுகத்தின் விநாசம் கூட
09.08.2016
(4/4)
அவசியம் ஆகும். விநாசத்தின் அறிகுறிகள் கூட முன்னால் பார்க்கிறீர்கள். அதே மகாபாரதப் போர் ஆகும்.
எனவே அவசியம் பகவான் கூட இருப்பார். எந்த ரூபத்தில், எந்த உடலில் என்பது குழந்தைகளாகிய
உங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. நான் முற்றிலும் சாதாரண உடலில் வருகிறேன் என்றும்
கூறுகிறார். நான் கிருஷ்ணரின் உடலில் வருவது இல்லை. இவரே முழுமையாக 84 பிறவிகள் எடுக்கிறார்.
நான் இவருடைய அநேக பிறவிகளின் கடைசி பிறவியிலும் கடைசியில் வருகிறேன் என்று கூறவும் செய்கிறார்.
84 பிறவிகள் சூரிய வம்சத்தின் குடும்பத்தார் தான் எடுக்கிறார்கள். அவர்களே முதல் நம்பரில் வருவார்கள்.
சாகாரி விருட்சம் மற்றும் நிராகாரி விருட்சம் லி இரண்டு பற்றிய முழு ஞானம் உங்களுக்கு உள்ளது.
மூலவதனத்திலிருந்து வரிசைக்கிரமமாக ஆத்மாக்கள் வருகிறார்கள். முதன் முதலில் தேவி தேவதா தர்மத்தின்
ஆத்மாக்கள் வருகிறார்கள். பிறகு வரிசைக்கிரமமாக மற்ற தர்மத்தினர் வருகிறார்கள். படங்களின் விளக்கமோ
மிகவும் உயர்ந்ததாக உள்ளது. குழந்தைகள் புரிய வைக்க வேண்டும். குமாரிகள் முன்னிலையில் இருக்க
வேண்டும். ஒரு சில பெண் குழந்தைகள் இப்பேர்ப்பட்ட விஷயங்களைப் புரிய வைத்தார்கள் என்றால் அற்புதமாகி
விடும் அல்லவா? எவ்வளவு பெயரை வெளிப்படுத்துவார்கள். லௌகீக பெயர் மற்றும் அலௌகீக பெயர்
இரண்டையும் புகழடையச் செய்து விடுவார்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட
செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும்
காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. சங்கம யுகத்தில் சிறந்த செயல்கள் செய்து புருஷோத்தமர் ஆக வேண்டும். தாழ்ந்தவராக
ஆகி விடும் வகையில் அப்பேர்ப்பட்ட எந்த செயலையும் செய்யக் கூடாது.
2. மறைமுகமான ரூபத்தில் தந்தைக்கு உதவி செய்பவராக ஆகி பாரதத்தை சொர்க்கமாக ஆக்கும்
சேவை செய்ய வேண்டும். தங்களுடையதே உடல், மனம், பொருள் மூலமாக பாரதத்தை
சொர்க்கமாக ஆக்க வேண்டும். நினைவு மற்றும் தூய்மையின் பலத்தை சேமிப்பு செய்ய
வேண்டும்.
வரதானம்: சிறந்த உள்ளுணர்வு மூலமாக இல்லறத்தை முன்னேற்றத்திற்கான
சாதனமாக ஆக்கிக் கொள்ளக் கூடிய சதா சக்திசாலி ஆவீர்களாக.
(பிரவிருத்தி) இல்லறத்தில் முதலில் (விருத்தி) உள்ளுணர்வு மூலமாக தூய்மையாகவோ அல்லது
தூய்மையற்றவராகவோ ஆகிறீர்கள். உள்ளுணர்வை எப்பொழுதும் ஒரு தந்தையுடன் இணைத்து விட்டீர்கள்
என்றால், ஒரு தந்தையைத் தவிர வேறு யாருமில்லை என்ற அப்பேர்ப்பட்ட உயர்ந்த உள்ளுணர்வு இருந்தது
என்றால் இல்லறம் முன்னேற்றத்திற்கான சாதனமாக ஆகி விடும். உள்ளுணர்வு உயர்ந்ததாகவும் மற்றும்
சிறந்ததாகவும் இருந்தது என்றால் சஞ்சலப்பட முடியாது. இப்பேர்ப்பட்ட சிறந்த உள்ளுணர்வு மூலமாக
முன்னேற்றம் செய்தபடியே கதி, சத்கதியை சுலபமாகவே அடைந்து விடுவீர்கள். பிறகு எல்லா (கம்ப்ளெயின்ட்)
புகார்களும் (கம்ப்ளீட்) முடிந்து போய் விடும்.
சுலோகன்: ஒரு வேளை தூய்மை கனவு அளவிலும் கூட ஆடிப் போகிறது என்றால்,
நிச்சயத்தின் அஸ்திவாரம் பக்குவமாக இல்லை என்பதாகும் !
(1/4)
10.
08.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! தனக்குத் தானே உறுதி எடுத்துக் கொள்ளுங்கள், நான் மிகலிமிக
இனிமையாக ஆக வேண்டும். அனைவரையும் சுகத்தின், அன்பின் பார்வையுடன் பார்க்க
வேண்டும். யாருடைய பெயர்லிவடிவத்திலும் சிக்கிக் கொள்ளக் கூடாது.
கேள்வி : யோகத்தின் சித்தி (பலன்) எது? பக்கா யோகியின் அடையாளம் சொல்லுங்கள்.
பதில் : அனைத்துக் கர்மேந்திரியங்களும் முற்றிலும் சாந்தமாக, குளிர்ந்ததாக ஆகி விடும் லி இது தான்
யோகத்தின் சித்தியாகும். யாருடைய கர்மேந்திரியங்கள் ஒரு சிறிதும் சஞ்சலமடையாமல் உள்ளனவோ, அவர்
தான் பக்கா யோகி ஆவார். அணுவளவும் எந்த ஒரு தேகதாரி மீதும் கண்கள் மூழ்கி விடாதிருக்க வேண்டும்.
இனிமையான குழந்தைகளே, இப்போது நீங்கள் இளைஞர் கிடையாது. உங்களுக்கு இப்போது வானப்ரஸ்த
நிலை.
பாடல் : விழித்தெழுங்கள் பிரியதரிசினிகளே, விழித்தெழுங்கள்.........
ஓம் சாந்தி. இனிமையிலும் இனிமையான ஆன்மிகக் குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள். இதனுடைய
அர்த்தத்தைப் பற்றி மனதில் விசார் சாகர் மந்தன் செய்ய வேண்டும். மேலும் குμயில் இருக்க வேண்டும்.
ஏனென்றால் இவை புது உலகத்திற்கான புது விசயங்கள். இந்தப் புது விசயங்களை இப்போது கேட்க
வேண்டும். குழந்தைகள் இப்போது அறிவார்கள், புது உலகை ஸ்தாபனை செய்பவர் ஒன்றும் மனிதராக
இருக்க முடியாது. நீங்கள் இந்த விசயங்களைக் கேட்கும் போது புரிந்துக் கொள்கிறீர்கள், இவையோ 5000
ஆண்டுகளுக்கு முன்பும் கூட நடந்த இருந்த பழைய விசயங்கள், அவை மீண்டும் புதிதாகச் சொல்லப்
படுகின்றன. ஆக, பழையது புதியதாகவும் புதியது பழையதாகவும் ஆகி விடுகின்றது. இப்போது நீங்கள்
அறிவீர்கள், 5000 ஆண்டுகளுக்கு முந்தைய அதே விசயங்களை பாபா புதியதாக ஆக்கிச் சொல்கிறார். விசயம்
அதே தான். எதற்காகச் சொல்கிறார்? புது உலகத்தின் ஆஸ்தியைப் பெறுவதற்காக. இதில் ஞான நாட்டியம்
ஆட வேண்டியுள்ளது. பக்தியிலும் கூட அநேகர் நாட்டியமாடுகின்றனர். நாலாபுறமும் சுற்றி வந்து
நாட்டியமாடுகின்றனர். ஞானத்தின் நாட்டியமோ முற்றிலும் சுலபமானதாகும். அதில் கர்மேந்திரியங்கள் அதிகமாக
செயல்படுகின்றன. முயற்சி செய்ய வேண்டியுள்ளது. இதுவோ உள்ளுக்கள் மட்டும் ஞான நாட்டியம்
நடைபெறுகின்றது. சிருஷ்டிச் சக்கரம் எப்படிச் சுற்றுகிறது லி அந்த ஞானம் புத்தியில் உள்ளது. இதில் எந்த ஒரு
கஷ்டமும் இல்லை. ஆம், நினைவில் முயற்சி தேவைப் படுகிறது. குழந்தைகளில் அநேகர் ஃபெயிலாகி
விடுகின்றனர். எங்கேயாவது கீழே விழுந்து விடுகின்றனர். அனைத்திலும் முக்கிய விசயம் லி பெயர்லிவடிவங்களில்
சிக்கிக் கொள்ளக் கூடாது. ஆண்லிபெண் காமவசமாகி பெயர்லிவடிவங்களில் சிக்கிக் கொள்கின்றனர் இல்லையா?
கோபம், பெயர்லிவடிவங்களில் சிக்க வைப்பதில்லை. முதல்லிமுதலில் இதில் மிகவும் கவனமாக இருக்க
வேண்டும்லிஎந்த ஒருவரின் பெயர்லிவடிவத்திலும் சிக்கக் கூடாது. தன்னை ஆத்மா என உணர வேண்டும். நாம்
ஆத்மா அசரீரியாக வந்தோம், அசரீரி ஆகிச் செல்ல வேண்டும். இந்த சரீரத்தின் உணர்வை விட வேண்டும்.
இந்தப் பெயர்லிவடிவத்தில் சிக்குவதென்பது மிகவும் கெட்ட நோயாகும். பாபா குழந்தைகளுக்கு எச்சரிக்கை
தருகிறார். ஒரு சிலர் இவ்விசயத்தைப் புரிந்துக் கொள்வதில்லை. பெயர்லிவடிவத்தில் சிக்கியிருக்கிறீர்கள் என்று
பாபா வீணாகச் சொல்கிறார் என்று அவர்கள் சொல்கின்றனர். ஆனால் இது மறைமுகமான நோயாகும். அதனால்
நாயகன் நாயகிகளை, அல்லது தந்தை குழந்தைகளை எழுப்புகிறார். குழந்தைகளே, எழுந்திருங்கள், இப்போது
மீண்டும் கலியுகத்திற்குப் பிறகு சத்யுகம் வரப் போகிறது. பாபா ஜோதியைப் பிரகாசிக்கச் செய்வதற்காக வந்துள்ளார்.
மனிதர்கள் இறந்து விட்டால் அவர்களின் ஜோதியை ஏற்றி வைக்கின்றனர். பிறகு தீபத்தை அணைந்து
விடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்கின்றனர். ஆத்மா இருளில் இருந்துவிடக் கூடாது. உண்மையில் இவை
அனைத்தும் பக்தி மார்க்கத்தின் விசயங்கள். ஆத்மாவோ ஒரு விநாடியில் சென்று விடுகிறது. அநேக மனிதர்கள்
ஜோதியையும் கூட பகவான் என ஏற்றுக் கொண்டுள்ளனர். பிரம்மத்தைப் பெரிய ஜோதி எனச் சொல்கின்றனர்.
பிரம்ம சமாஜத்தினருக்குக் கோவில் உள்ளது. அங்கே இரவும் பகலும் ஜோதி ஏற்றி வைக்கின்றனர். எவ்வளவு
செலவு ஆகின்றது! நெய் தவறாகச் செலவாகிறது. அங்கே அதை இட வேண்டிய தேவை கிடையாது. நினைவு
நெய்யின் வேலையைச் செய்கிறது. நினைவு என்பது நெய் போன்றது. ஆக, இனிமையிலும் இனிமையான
குழந்தைகள் இதைப் புரிந்து கொண்டுள்ளனர். புதிய விசயமாக இருப்பதன் காரணத்தால் தான் சண்டை
நடைபெறுகின்றது. பாபா சொல்கிறார், நான் வருவது, இனிமையான குழந்தைகளிடம். பாரதத்தில் தான் வருகிறேன்.
ஒருவருக்கு தான் பிறந்த தேசம் பிரியமானதாக இருக்குமல்லவா? மீண்டும் நான் எனது பாரத தேசத்தில் தான்
வருகிறேன். கீதையில் கிருஷ்ணரின் பெயர் இல்லாதிருந்தால் மனிதர்கள் அனைவரும் சிவபாபாவை ஏற்றுக்
கொண்டிருப்பார்கள். சிவாலயத்திற்கு எவ்வளவு பேர் செல்கின்றனர்! பெரியதிலும் பெரிய கோவிலாக சோமநாதர்
(2/4)
10.08.2016
கோவில் இருந்தது. இப்போதோ எவ்வளவு ஏராளமான கோவில்கள் உருவாகியுள்ளன! எல்லையற்ற தந்தையை
ஏற்றுக் கொண்டது போல் கிருஷ்ணரை இந்த அளவுக்கு அனைவரும் ஏற்றுக் கொள்வதில்லை. ஆக, இந்தச்
சமயம் இவரைப் போôன்ற பிரியமான பொருள் உங்களுக்கு வேறெதுவும் இல்லை. இதில் பிரம்மாவிற்கு
மகிமை எதுவும் கிடையாது. இதுவோ நிராகாரின் மகிமை, அவர் எதையும் அனுபவிக்காதவர். எல்லையற்ற
தந்தை சொர்க்கத்தைப் படைப்பவர் என்றால் அவரிடமிருந்து சொர்க்கத்தின் ஆஸ்தி பெறுவதற்கான புருஷார்த்தம்
செய்ய வேண்டும் இல்லையா?
இன்றுலிநாளை எனச் சொல்லியே காலன் ஒரு நாள் விழுங்கி விடுவான். சமயம் இன்னும் கொஞ்சம் தான்
பாக்கி உள்ளது. பாபாவிடமிருந்து ஆஸ்தியையோ பெற்றுக் கொள்ளுங்கள். எப்போது கருத்தை (ஆராய்வை)
எழுதுகின்றனரோ, அப்போது புரிய வைக்கவும் வேண்டும். அவர் எல்லையற்ற தந்தை என நிச்சயம் செய்கிறீர்கள்
என்றால் தந்தையிடமிருந்து ஆஸ்தி பெறுவதற்கான முயற்சி செய்யுங்கள். இல்லையென்றால் வெளியில்
சென்றதுமே மறந்து விடுவீர்கள். பாபாவோ கல்யாண்காரி (நன்மை செய்பவர்) இல்லையா? பாபா சொல்கிறார்,
இந்த யோகத்தினால் தான் உங்களுடைய அனைத்து துக்கங்களும் விலகிப் போகும். பெண்குழந்தைகள்
வீட்டிலும் கூட, இப்போது அனைத்து துக்கங்களையும் போக்கக் கூடியவராகிய எல்லையற்ற தந்தையை
நினைவு செய்வதால் தான் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆவீர்கள் என்று புரிய வைத்துக் கொண்டே
இருக்க வேண்டும். தூய்மையாகவோ அவசியம் இருக்க வேண்டும். தூய்மையின் விசயம் முக்கியமானதாகும்.
எவ்வளவுக்கெவ்வளவு நினைவில் அதிகமாக இருப்பீர்களோ, அந்த அளவுக்கு இந்திரியங்களும் சாந்தமாகி
விடும். யோகத்தின் சித்தி (குறிக்கோள்) முழுமையாகாத வரை இந்திரியங்களும் கூட சாந்தமாகாது. ஒவ்வொருவரும்
தன்னை சோதிக்க வேண்டும்லிகாமவிகாரம் என்னை ஏமாற்றாமல் உள்ளதா? நான் பக்கா யோகியாக இருக்கிறேன்
என்றால் எந்த ஒரு சஞ்சலமும் இருக்கக் கூடாது. இது வானப்ரஸ்த நிலை போலத்தான்லிஇதில் பாபாவை
நினைவு செய்து கொண்டே இருக்க வேண்டும். பாபா குழந்தைகள் அனைவருக்குமே புரிய வைக்கிறார்.
எப்போது நீங்கள் நல்ல யோகியாக ஆகிறீர்களோ, கண்கள் எங்கும் சிக்கிக் கொள்ளாமல் இருக்குமானால் பிறகு
உங்கள் இந்திரியங்கள் சாந்தமாகி விடும். இது அனைவரையும் ஏமாற்றக் கூடியது என்பது முக்கியமாகும்.
யோகத்தில் மனநிலையும் நல்லபடியாக உறுதியாகி விடும். பிறகு நாம் இளமையிலேயே வானப்ரஸ்த நிலையை
அடைந்து விட்டோம் என அனுபவம் ஆகும். பாபா சொல்கிறார்லிகாமம் மகாசத்ரு. ஆக, தன்னைச் சோதித்துக்
கொண்டே இருங்கள். எவ்வளவு நினைவில் இருக்கிறீர்களோ, அவ்வளவு கர்மேந்திரியங்கள் சாந்தமாகிக்
கொண்டே செல்லும். மேலும் மிக இனிமையான சுபாவம் அமைந்து விடும். நான் முதலில் எவ்வளவு
கடுமையாக இருந்தேன், இப்போது எவ்வளவு இனிமையானவனாக மாறி விட்டேன் என்பது அனுபவமாகும்.
பாபா அன்பின் கடல் இல்லையா, அதனால் குழந்தைகளும் அது போல் ஆக வேண்டும். ஆகவே பாபா
சொல்கிறார், அனைவரிடமும் அன்பின் பார்வை இருக்க வேண்டும். யாருக்காவது துக்கம் கொடுப்பீர்களானால்
துக்கமடைந்தே இறந்து விடுவீர்கள். அதனால் மிகவும் இனிமையானவராக ஆக வேண்டும்.
பாபா சொல்கிறார் லி நான் ரூப்லிபஸந்த் (யோகி மற்றும் ஞானி) இல்லையா? பாபாவிடமிருந்து எவ்வளவு
விலை மதிக்க முடியாத ஞான ரத்தினங்கள் கிடைக்கின்றன! அவற்றால் நீங்கள் (புத்தி என்ற) பையை நிரப்பிக்
கொள்கிறீர்கள். அந்த மனிதர்கள் சங்கருக்கு முன் போய்க் கேட்கின்றனர்லிபையை நிரப்புங்கள் என்று. சங்கர்
பையை நிரப்புகிறவர் இல்லை என்பது அவர்களுக்குத் தெரியாது. இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்,
ஞானக்கடலான பாபா குழந்தைகளாகிய நமது பையை ஞான ரத்தினங்களால் நிரப்புகிறார். நீங்களும் ரூப்லிபஸந்த்
(யோகி மற்றும் ஞானிகள்). ஒவ்வொருவரின் ஆத்மாவும் ரூப்லிபஸந்த். தன்னைத் தான் பார்த்துக் கொண்டே
இருங்கள்லிநாம் எவ்வளவு ஞான ரத்தினங்களை தாரணை செய்து, ஞான நாட்டியம் ஆடுகிறோம், அல்லது
ஞான ரத்தினங்களை தானம் செய்கிறோம்? அனைத்திலும் நல்ல ரத்தினம் மன்மனாபவ என்பது. தந்தையை
நினைவு செய்வதன் மூலம் தந்தையின் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். எப்படி பாபாவிடம் ஞானம் நிறைந்துள்ளதோ,
அது போல் பாபா அமர்ந்து குழந்தைகளைத் தமக்குச் சமமாக ஆக்குகிறார். குருமார்களும் தங்களுக்குச்
சமமாக ஆக்குகின்றனர். இவர் எல்லையற்ற தந்தை, இவருடைய ரூபம் புள்ளி. உங்களுடைய வடிவமும்
புள்ளி தான். உங்களைத் தமக்குச் சமமாக ஞானக்கடலாக ஆக்குகிறார். எவ்வளவு தாரணை செய்கிறார்களோ,
செய்விக்கிறார்களோ....... அவர்கள் நமக்கு உயர்ந்த பதவி என்று புரிந்து கொள்வார்கள். அநேகருக்கு நன்மை
செய்பவராக ஆவீர்களானால் அநேகரின் ஆசீர்வாதம் கிடைக்கும். பாபாவும் தினந்தோறும் சேவை செய்கிறார்
இல்லையா? இந்த குல்ஜார் குழந்தை எவ்வளவு இனிமையாகப் புரிய வைக்கிறது! அனைவருக்கும் பிடித்திருக்கிறது.
இப்படிப்பட்ட பிராமணி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என மனம் எண்ணுகிறது. இப்போது ஒரு
பிராமணி எல்லா இடங்களுக்குமோ செல்ல இயலாது. பிறகும் பாபா சொல்கிறார், தான் நன்றாகப் புரிய வைப்பதாக
யார் நினைக்கிறார்களோ, அவர்கள் ஆல்ரவுண்டு சேவை செய்ய வேண்டும். தானாகவே ஆர்வம் வர வேண்டும்.
நான் சென்டர்களைச் சுற்றி வருவேன்........ நான் அநேகருக்கு நன்மை செய்ய முடியும், எனது நல்ல நறுமணம்
(3/4)
10.08.2016
பரவுகிறது என யார் புரிந்து கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் 10லி15 தினங்கள் சென்று சென்டர்களைச் சுற்றி
விட்டு வருவேன் என்ற ஆர்வம் கொள்ள வேண்டும்.. ஒருவரைப் பார்த்துப் பிறகு மற்றவர்களும் கற்றுக்
கொள்வார்கள். யார் செய்வார்களோ, அவர்கள் அடைவார்கள். இந்த சேவை மிகவும் நன்மை செய்யக் கூடியது.
நீங்கள் மனிதர்களுக்கு உயிர்தானம் கொடுக்கிறீர்கள். இது மிகவும் உத்தமத்திலும் உத்தமமான காரியம்.
பணியில் இருப்பவர்களும் யுக்தியுடன் நேரம் ஒதுக்கி சேவைக்காகச் செல்ல முடியும். சேவையில் ஈடுபாடு
உள்ளவர்கள் மீது பாபா அன்பு செலுத்தவும் செய்வார். பாலனையும் செய்வார். யாருக்கு சேவையில் ஆர்வம்
உள்ளதோ. அவர்கள் சேவை இல்லாமல் இருக்க முடியாது. பாபா உதவியும் செய்கிறார் இல்லையா? குழந்தைகள்
மிகவும் இரக்க மனம் உள்ளவர்களாக ஆக வேண்டும். பாவம், அவர்களின் உலகத்தார் வாழ்க்கை மிகவும்
துக்கம் நிறைந்தது. நீங்கள் உயிர் தானம் கொடுக்கிறீர்கள். யாருக்காவது அவிநாசி ஞான ரத்தினங்களின் தானம்
கொடுப்பதைப் போன்ற சர்வோத்தம ஞான தானம் வேறெதுவும் கிடையாது. மிகவும் கருணை உள்ளம்
கொண்டவராக ஆக வேண்டும். பிராமணி பலவீனமாக இருக்கும் காரணத்தினால் சேவை மந்தமாக ஆகி
விடுகிறது. அதனால் நல்ல டீச்சர் வேண்டும் எனக் கேட்கின்றனர். எப்போதெல்லாம் சிந்தனை வருகிறதோ,
அப்போது சேவைக்காகச் சென்று விட வேண்டும். பாபா, எந்த சென்டர் மந்தமாக உள்ளது, நான் போயச்
சுற்றிவிட்டு வர வேண்டும். கண்காட்சிக்கான சித்திரங்களும் உள்ளன. சித்திரங்களை வைத்துப் புரிய வைப்பதால்
மிக நன்றாகப் புரிந்து கொள்வார்கள். நாம் சேவையை எப்படி அதிகப் படுத்துவது என்பது பற்றிச் சிந்தனை
செய்ய வேண்டும். பாபாவும் அனைவரின் வாழ்க்கையை வைரம் போன்றதாக ஆக்குகிறார். குழந்தைகள்
நீங்களும் கூட சேவை செய்ய வேண்டும். வந்தே மாதரம் எனப் பாடப் பட்டுள்ளது. ஆனால் அர்த்தத்தைப்
புரிந்து கொள்ளவில்லை. பதீத் மனிதர்களின் அல்லது (வசித்த) பூமி முதலியவற்றின் வந்தனை ஒரு போதும்
செய்ய்ப் படுவதில்லை. இதுவோ 5 தத்துவங்களால் உருவாக்கப் பட்ட சரீரம் என்றால் சரீரத்திற்குப் பூஜை
செய்வதென்பது பூதத்தின் பூஜை ஆகின்றது. சிவபாபாவுக்கோ சரீரம் கிடையாது. அவருக்கு செய்ய்ப் படும்
பூஜை அனைத்திலும் உத்தமமானது. மற்றவை மத்திமம் (இடைப்பட்டது). தற்சமயமோ மனிதர்களுக்கும்
கூடப் பூஜை செய்து கொண்டே இருக்கின்றனர். அவர்கள் தூய்மையற்றவர்கள் மகான் ஆத்மாக்களோ, தேவதைகள்
ஆவர். சந்நியாசிகளைக் காட்டிலும் அவர்கள் அதிகத் தூய்மையானவர்கள்.
இப்போது குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், நாம் தேவதை ஆகிக் கொண்டிருக்கிறோம். பாபா நமக்கு
இந்த அவிநாசி ஞான ரத்தினங்களை தானம் செய்வதற்குக் கற்றுத் தருகிறார். இதைப் போன்ற உயர்ந்த தானம்
வேறு எதுவும் கிடையாது. ஒரு தந்தையை மட்டுமே நினைவு செய்ய வேண்டும். சிவன் மற்றும்
லட்சுமிலிநாராயணரின் சித்திரங்களோ இருக்கின்றன. ஒவ்வொருவரும் அவர்களின் வீட்டில் வைத்திருந்தால்
நினைவிருக்கும். சிவபாபா நம்மை இந்த லட்சுமிலிநாராயணர் போல ஆக்கிக் கொண்டிருக்கிறார். இச்சமயம்
நீங்கள் அது போல் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். சொர்க்கத்தைப் படைப்பவர் சிவபாபா. சத்யுகத்திலோ ஆஸ்தி
தர மாட்டார். இந்தக் கடைசிப் பிறவியில் சிவபாபா சொல்கிறார், என்னை நினைவு செய்வீர்களானால் நீங்கள்
இது போல் ஆவீர்கள். மற்ற அனைத்து விசயங்களையும் விட்டுவிட்டு சேவை மற்றும் சேவை தான்
முக்கியம். பாபாவை நினைவு செய்து கொண்டே இருங்கள் லி இதுவும் கூடப் பெரிய சேவை செய்வதாகும்.
தத்துவங்கள் முதலிய அனைத்தும் தூய்மையாகி விடும். யோகத்தின் மகிமை மிகப் பெரியதாகும். உலகத்தில்
யோக ஆசிரமங்களோ அநேகம் உள்ளன. ஆனால் அவை அனைத்தும் சரீர சம்மந்தமான ஹடயோகங்கள்.
உங்களுடையது இராஜயோகமாகும். இதனால் உங்கள் துன்பங்கள் விலகிப் போய் விடும். அந்த அநேக
விதமான ஹடயோகம் முதலியவற்றால் ஏணிப்படியில் இறங்கியே வந்திருக்கிறீர்கள். முக்கியமான விசயம்
நினைவினுடையதாகும். பார்க்க வேண்டும், நமது மனம் எங்காவது விகாரத்தின் பக்கம் போகாமல் இருக்கிறதா?
விகாரிகள் தான் (பதீத்) தூய்மையற்றவர்கள் எனச் சொல்லப் படுகின்றனர். அதாவது சோழி போன்றவர்கள்.
விகாரத்தில் விழுவதால் தனக்குத் தானே நஷ்டம் ஏற்படுத்திக் கொள்கின்றனர். யார் செய்கிறார்களோ, அவர்கள்
பலன் அடைவார்கள். பாபா பார்த்தாலும் சரி, பார்க்கவில்லை என்றாலும் சரி. தன்னைத் தான் சோதிக்க
வேண்டும் லி நாம் பாபாவின் சேவை செய்கிறோமா? நமக்குள் ஏதேனும் அவகுணம் இல்லாதிருக்கிறதா?
இருந்தால் வெளியேற்றி விட வேண்டும். தன்னிடமிருந்து அவகுணங்களை வெளியேற்றுவதற்காக பாபா
நிறைய யுக்தி சொல்லிப் புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார். நிர்குணம் என்பதன் அர்த்தமும் கூட
யாருக்கும் புரியவில்லை. நிர்குண பாலகர்களின் (குழந்தைகளின்) மண்டலி (சபை) என்ன செய்ய முடியும்,
அவர்களிடம் எந்த ஒரு குணமும் இல்லாத போது? அர்த்தம் இல்லாமல் என்ன வருகிறதோ, அதைச் சொல்லி
விடுகின்றனர். அநேக வழிமுறைகள் உள்ளன இல்லையா? உங்களுக்கு ஒரே வழிமுறை கிடைக்கிறது. இதனால்
உங்களுக்கோ அளவற்ற குμ இருக்க வேண்டும். பாபா இதை மட்டும் சொல்கிறார் லி என்னை நினைவு
செய்யுங்கள் மற்றும் தாமரை மலருக்குச் சமமாக ஆகுங்கள். மனம்லிசொல்லிசெயலால் தூய்மையாகுங்கள். குழந்தைகள்
நீங்கள் அறிவீர்கள், பிராமணர்களாகிய நாம் ஸ்ரீமத் படி நம்முடைய உடல்லிமனம்லிசெல்வத்தினால் தங்களுக்கும்
முழு உலகத்திற்கும் சேவை செய்து கொண்டிருக்கிறோம். பாபா பாரதத்தில் தான் வருவார் இல்லையா?
(4/4)
10.08.2016
பாண்டவர்கள் நீங்கள் பாரதத்தை சொர்க்கமாக ஆக்குகிற சேவை செய்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள்
தங்களுடைய காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறீர்கள். கடைசியில் வெற்றி பாண்டவர்களுக்குத் தான் கிடைக்கப்
போகிறது. இதில் சண்டையின் விசயம் கிடையாது. நீங்கள் இரட்டை அஹிம்சையாளர்கள். விகாரத்திலும்
செல்வதில்லை, துப்பாக்கியால் சுடுவதும் இல்லை. வன்முறையினால் யாரும் உலகின் மீது இராஜ்யம் (அரசாட்சி)
செய்ய இயலாது. பாபா புரிய வைத்துள்ளார்லிஅந்த இருவரும் (கிறிஸ்தவர்கள்) தங்களுக்குள் ஒன்று பட்டால்
உலகின் மீது இராஜ்யம் செய்ய முடியும். ஆனால் டிராமாவில் அது போல் இல்லை. கிறிஸ்தவர்கள் தான்
கிருஷ்ணபுரியை அபகரித்துள்ளனர். முதலில் பாரதம் கிருஷ்ணரின் புரியாகத் (இராஜ்யமாகத்) தான் இருந்தது
இல்லையா? அவர்கள் சண்டையிட்டு இராஜ்யத்தை அடைந்தனர், நிறைய செல்வத்தை அள்ளிச் சென்றனர்.
இப்போது மீண்டும் செல்வம் திரும்பி வந்து கொண்டிருக்கிறது. மேலும் நீங்கள் மீண்டும் உலகத்தின் எஜமானர்
ஆகி விடுகிறீர்கள். பாபா எவ்வளவு யுக்திகள் சொல்கிறார்! அவர்கள் தான் உங்கள் இராஜ்யத்தை அபகரித்துக்
கொண்டனர். பிறகு அவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றனர். உலகத்தின் அதிபதியாக நீங்கள்
ஆகிறீர்கள். எவ்வளவு பெரிய இராஜ்யம்! முயற்சி இதில் மட்டுமே உள்ளதுலிநினைவு செய்து கொண்டே
இருங்கள், தங்களின் ஆஸ்தியைப் பெறுங்கள். இதில் சலிப்படையக் கூடாது. நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும்
தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம் :
1) மற்ற அனைத்து விசயங்களையும் விட்டுவிட்டு ஞான தானம் செய்ய வேண்டும். ரூப்லிபஸந்த்
(யோகிலிஞானி) ஆக வேண்டும். தன்னுடைய அவகுணங்களை நீக்குவதற்கான முயற்சி செய்ய
வேண்டும். மற்றவர்களைப் பார்க்கக் கூடாது.
2) தன்னுடைய சுபாவத்தை மிக இனிமையானதாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
அனைவரிடத்தும் அன்பு நிறைந்த பார்வை வைக்க வேண்டும். யாருக்கும் துக்கம் கொடுக்கக்
கூடாது. கர்மேந்திரியங்களை வென்றவராக ஆக வேண்டும்.
வரதானம் : களைத்துப் போன மற்றும் தவித்துக் கொண்டிருக்கும் ஆத்மாக்களுக்கு சித்தி
(வெற்றி) தரக்கூடிய கடவுளின் சேவாதாரி ஆகுக !
ஆத்மாக்களுக்கு நீண்ட காலமாக நிர்வாண் (சப்தத்திற்கு அப்பாற் பட்ட) முக்தி தாமம் செல்ல வேண்டும்
என்ற இச்சை அல்லது ஆசை உள்ளது. இதற்காகத் தான் அநேகப் பிறவிகளாக அநேக விதமான சாதனைகள்
செய்துலிசெய்தே களைத்துப் போயுள்ளனர். இப்போது ஒவ்வொருவரும் சித்தியை விரும்புகின்றனர். சாதனையை
அல்ல. சித்தி என்றால் சத்கதி லி ஆக, அத்தகைய தவித்துக் கொண்டிருக்கும், களைத்துப் போன, தாகத்தில்
இருக்கும் ஆத்மாக்களின் தாகத்தைத் தணிப்பதற்காக சிரேஷ்ட ஆத்மாக்களாகிய நீங்கள் தங்களின் அமைதியின்
சக்தி மற்றும் சர்வ சக்திகளால் ஒரு விநாடியில் விருப்பத்தை நிறைவேற்றுங்கள் அப்போது கடவுளின் சேவாதாரிகள்
எனச் சொல்வார்கள்.
சுலோகன் : பலவீனமான சம்ஸ்காரம் தான் மாயா என்ற திருடன் வருவதற்கான வாசல்.
இப்போது அந்த வாசலை மூடி விடுங்கள்.
(1/4)
11.
08.2016, காலை முரü ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! நாங்கள் எங்களுடைய யோக பலத்தின் மூலமாகவே பாரதத்தை
சொர்க்கமாக ஆக்குவோம், அங்கே ஒரு தர்மம், ஒரு இராஜ்யம் இருக்கும் என நீங்கள்
உத்திரவாதம் கொடுக்கின்றீர்கள்.
கேள்வி: மாயையின் எந்த தடையிலிருந்து பாதுகாப்பாக இருக்கும் குழந்தைகள் மிக நல்ல
அதிசயத்தை செய்ய முடியும்?
பதில்: மாயையின் மிகப் பெரிய தடை என்னவென்றால் தேக அபிமானத்தில் கொண்டு வந்து ஒருவர்
மற்றவரின் பெயர் உருவத்தில் சிக்க வைப்பது ஆகும். எந்த குழந்தைகள் இந்த தடையில் இருந்து பாதுகாப்பாக
இருக்கின்றனரோ, மாயையின் (ஜாலவலையில்) பிடியில் இருந்து தப்பிக்கின்றனரோ அவர்கள் மிகவும் அதிசயம்
செய்து காட்டுகின்றனர். அவர்களின் புத்தியில் சேவைக்கான புதிய புதிய சிந்தனைகள் ஓடிக் கொண்டே
இருக்கும். ஆத்மலிஅபிமானி ஆகும்போது சேவையில் முன்னேற்றம் ஏற்படும்.
ஓம் சாந்தி. தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஸ்ரீமத் (உயர்ந்த வழி) கொடுப்பதற்காக வந்திருக்கிறார்.
மிகக் குறைந்த சமயத்திற்குள் நாடகத்தின் திட்டப்படி அனைத்து காரியங்களும் நடந்தாக வேண்டும் என்பதை
குழந்தைகள் அறிவார்கள். நாம் இராவணபுரியை கிருஷ்ணபுரியாக ஆக்குகிறோம். இப்போது தந்தையும் குப்தமாக
(மறைமுகமாக) இருக்கிறார் எனும்போது படிப்பும் கூட குப்தமாக உள்ளது. செண்டர்கள் நிறைய உள்ளன.
சிறிய பெரிய கிராமங்களில் செண்டர்கள் உள்ளன மற்றும் குழந்தைகளும் நிறைய பேர் உள்ளனர். மேலும்
நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருப்பார்கள். நாங்கள் இந்த பாரத பூமியை சொர்க்கமாக்கி விட்டுத்தான்
ஓய்வோம் என புத்தகங்களிலும் எழுதுகின்றனர். உங்களுக்கு இந்த பாரத பூமி மிகவும் பிடித்தமானது
ஏனென்றால் இந்த பாரதமே சொர்க்கமாக இருந்தது. அதற்கு 5000 ஆயிரம் வருடங்கள் ஆகின்றன. பாரதம்
மிகவும் கௌரவம் (புகழ்) மிக்கதாக இருந்தது. பிரம்மா முக வம்சாவளி குழந்தைகளாகிய உங்களுக்குத்தான்
இந்த ஞானம் உள்ளது. இந்த பாரதத்தை ஸ்ரீமத்படி சொர்க்கமாக ஆக்க வேண்டியுள்ளது. அனைவருக்கும்
வழி காட்ட வேண்டும், வேறு எந்த பிரச்னைக்குரிய விசயமும் இங்கே கிடையாது. இந்த படங்களைப்
போடுவதன் மூலம் செய்தித்தாள்களில் என்ன விளம்பரத்தை கொடுக்கலாம் என தங்களுக்குள் அமர்ந்து
ஆலோசிக்க வேண்டும். தங்களுக்குள் இது குறித்து கலந்துரையாடல் செய்ய வேண்டும் லி அந்த மனிதர்கள்
தங்களுக்குள் அமர்ந்து பாரதத்தை எப்படி முன்னேற்றலாம் என ஆலோசனை செய்வது போல. இந்த
கொள்கை வேறுபாடுகள் அதிகமாகிவிட்டது மற்றும் பாரதத்தில் எப்படி சுகம் அமைதியின் ஸ்தாபனை ஏற்படுவது
அதனை நமக்குள் கலந்தாலோசித்து சரிப்படுத்த வேண்டும். அப்படி நீங்களும் கூட ஆன்மீக பாண்டவ
அரசாங்கமாக இருக்கிறீர்கள், இது பெரிய ஈஸ்வரிய அரசாங்கமாகும். பதித பாவன தந்தைதான் தூய்மையான
குழந்தைகளை தூய்மையாக்கி தூய்மையான உலகின் எஜமானாக ஆக்குகிறார். இந்த ரகசியத்தை குழந்தைகளாகிய
நீங்கள் அறிவீர்கள். ஆதி சனாதன தேவி தேவதா தர்மமே முக்கியமானதாகும். இது ருத்ர ஞான யக்ஞமாகும்.
ருத்ரன் என சிவபாபா சொல்லப்படுகிறார். இப்போது தந்தை உங்களை விழிப்படைய செய்திருக்கிறார், நீங்கள்
மற்றவர்களை விழிப்படையச் செய்ய வேண்டும். நாடகத்தின் திட்டப்படி நீங்கள் விழிப்புணர்வூட்டிக்
கொண்டிருக்கிறீர்கள். இதுவரை யார் யார் எப்படி எப்படி முயற்சி செய்திருக்கின்றனரோ அவ்வளவுதான்
கல்பத்திற்கு முன்பும் கூட செய்திருக்கின்றனர். உங்களுடையது ஆன்மீக யுத்தமாகும். சில சமயம் மாயையின்
தாக்கம், சில சமயம் ஈஸ்வரனுடையது. சில சமயம் சேவை நன்றாக வேகத்துடன் நடக்கிறது. சில சமயம்
பல குழந்தைகளுக்குள் மாயையின் தடைகள் உண்டாகிறது. மாயை ஒரேயடியாக மயக்கமடையச் செய்து
விடுகிறது. சண்டைக்கான மைதானமாக உள்ளது அல்லவா. மாயை ராமனின் குழந்தைகளை மயக்கமடையச்
செய்து விடுகிறது. லவலிகுசாவின் கதையும் உள்ளது அல்லவா. ராமனின் இரண்டு குழந்தைகளைக் காட்டியுள்ளனர்.
இங்கேயோ பாபாவுக்கு அளவற்ற குழந்தைகள் உள்ளனர். இந்த சமயத்தில் அனைத்து மனிதர்களும்
கும்பகர்ணனின் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். பரமபிதா பரமாத்மா குழந்தைகளுக்கு ஆஸ்தியைக் கொடுப்பதற்
காக வந்துள்ளார் என்பதும் கூட அவர்களுக்குத் தெரியாது. தந்தை பாரதத்தில்தான் வருகிறார். இந்த விசயத்தை
முற்றிலுமாக மறந்து விட்டுள்ளனர். பாரதவாசிகள்தான் சொர்க்கத்தின் எஜமானர்களாக இருந்தனர். இதில் எந்த
சந்தேகமும் கிடையாது. பரமபிதா பரமாத்மாவின் பிறப்பும் இங்கேதான் ஏற்படுகிறது, ஆகையால் சிவஜெயந்தியை
பாரதத்தில் கொண்டாடுகின்றனர். எனவே கண்டிப்பாக அவர் வந்து ஏதாவது செய்திருப்பார். கண்டிப்பாக
தந்தை வந்து சொர்க்கத்தை ஸ்தாபனை செய்திருப்பார் என புத்தியும் சொல்கிறது. தூண்டுதலின் மூலம்
ஸ்தாபனை செய்ய மாட்டார். இங்கே குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கப்படுகிறது. நினைவின்
(2/4)
11.08.2016
யாத்திரை கற்பிக்கப்படுகிறது. சங்கரன் சூட்சும வதனத்தில் இருக்கிறார். நாடகத்தின்படி வினாசம் ஆகவே
வேண்டும். மகாபாரதச் சண்டையில் ஆயுதங்கள் முதலானவை பயன்படுத்தப்பட்டன என பாடப்பட்டுள்ளது.
நடந்து முடிந்தவை அனைத்தும் பிறகு மீண்டும் நடக்கும். நாங்கள் யோகபலத்தின் மூலம் சொர்க்கத்தின்
ஸ்தாபனை செய்வோம், அங்கே ஒரு தர்மம் இருக்கும் என நீங்கள் உத்திரவாதம் கொடுக்கிறீர்கள். எனில்
மற்ற அனைத்து தர்மங்களும் எங்கே இருக்கும்? கண்டிப்பாக வினாசமாகிவிடும். இது புரிந்து கொள்ளக்கூடிய
விசயமாகும். பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை, விஷ்ணுவின் மூலம் பாலனை என பாடப்பட்டுள்ளது சரியே.
ஆனால் சங்கரனை சிவனுடன் சேர்த்துவிட்டனர், இது தவறாகும். சிவலிசங்கரன் என கூறி விடுகின்றனர்,
ஏனென்றால் சங்கரனுக்கு எந்த வேலையும் கிடையாது என்பதால் சிவனுடன் சேர்த்துவிட்டனர். ஆனால்
எனக்கு நிறைய வேலைகள் செய்ய வேண்டியுள்ளது என சிவபாபா சொல்கிறார். அனைவரையும் தூய்மையாக்க
வேண்டும். நான் இந்த பிரம்மாவின் உடலில் பிரவேசம் செய்து இந்த சரீரமுடையவர் மூலம் ஸ்தாபனையின்
காரியம் செய்விக்கிறேன். சங்கரனின் நடிப்பு எதுவும் கிடையாது. சிவனின் பூஜை நடக்கிறது. சிவன்தான்
நன்மை செய்பவர், பையை நிரப்பக்கூடியவர். சிவ பரமாத்மாய நமஹ என சொல்கின்றனர் அல்லவா. இந்த
பிரம்மாவும் பிரஜாபிதாவாக இருக்கிறார். பிரம்மாவே விஷ்ணு, விஷ்ணுவே பிரம்மா லி இவை மிகவும் ஆழமான
விசயங்களாகும். இதனை குழந்தைகளாகிய நீங்கள் மட்டுமே அறிவீர்கள். புத்திசாலி குழந்தைகளின் புத்தியில்
ஞானம் சட்டென புரிந்து விடுகிறது. பதித பாவன தந்தை எப்போது வருவார் என்பது மனிதர்களுக்கு
கொஞ்சமும் புரிவதில்லை. இப்போது கலியுகத்தின் முடிவுக்காலமாக இருக்கிறது. ஒருவேளை கலியுகம் முடிய
இன்னும் 40 ஆயிரம் வருடங்கள் உள்ளன என்றால் இன்னும் எவ்வளவுதான் தூய்மையற்றவர்களாகிக்
கொண்டே செல்வார்கள். எவ்வளவு துக்கத்தைப் பொறுத்துக் கொள்வது? கலியுகத்தில் சுகம் இருக்காது. எதுவும்
தெரியாததால், பாவம் அவர்கள் அடர்ந்த காரிருளில் மூழ்கியுள்ளனர்.
சேவையை எப்படி விருத்தியடைய வைக்கலாம் என குழந்தைகளாகிய நீங்கள் தங்களுக்குள் கலந்து
ஆலோசனை செய்ய வேண்டும். தந்தை திட்டங்களை சொன்னபடி இருக்கிறார், பிறகு குழந்தைகள் தங்களுக்குள்
சந்திக்க வேண்டும். படங்களை வைத்து நல்ல விதமாகப் புரிய வைக்க வேண்டும். இந்த படங்களும்
நாடகத்தின்படி உருவாகியபடி இருக்கின்றன. என்னென்ன சமயம் கடந்து சென்று கொண்டிருக்கிறதோ அது
மீண்டும் மீண்டும் அதே போல நாடகமாக நடந்தபடி இருக்கிறது. குழந்தைகளின் நிலையோ சில நேரம்
மேலே, சில நேரம் கீழே என மாறியபடி இருக்கிறது. பாபாவும் சாட்சியாகிப் பார்க்கிறார். அவ்வப்போது
குழந்தைகளின் மீது கிரகச்சாரம் ஏற்பட்டு விடுகிறது, அதனை நீக்குவதற்கான முயற்சிகளை செய்வித்தபடி
இருக்கிறார். தந்தையை நினைவு செய்யுங்கள் என அடிக்கடி கூறுகிறார். ஆனால் தேக அபிமானத்தில் வந்து
விடுகின்றனர், ஆகையால் கீழான நிலையை அடைகின்றனர். இதில் ஆத்ம அபிமானி ஆக வேண்டும்.
ஆனால் குழந்தைகளுக்குள் தேக அபிமானம் நிறைய உள்ளது. நீங்கள் ஆத்ம அபிமானியாக இருந்தீர்கள்
என்றால் தந்தையின் நினைவும் இருக்கும், சேவையும் முன்னேறியபடி இருக்கும். யார் உயர்பதவி பெற
வேண்டியவர்களோ அவர்கள் எப்போதும் சேவையில் ஈடுபட்டிருப்பார்கள். அதிர்ஷ்டத்தில் இல்லை என்றால்
முயற்சியும் செய்ய மாட்டார்கள். பாபா எனக்கு தாரணையே ஏற்படவில்லை, புத்தியில் பதியவில்லை என
தாங்களே சொல்கின்றனர். தாரணை ஆகவில்லை என்றால் குμயும் இருக்காது. தாரணை செய்பவர்களுக்கு
குμயும் இருக்கும். சிவபாபா வந்து விட்டுள்ளார் என புரிந்து கொள்வார்கள். குழந்தைகளே நீங்கள் நல்ல
விதமாகப் புரிந்துக் கொண்டு பிறகு மற்றவர்களுக்கும் புரிய வையுங்கள். சிலர் சேவையில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
முயற்சி செய்தபடி இருக்கின்றனர். கடந்து முடிந்த வினாடிகள் அனைத்தும் அப்படியே நாடகத்தில்
பதிவாகியுள்ளன, அவை அப்படியே மீண்டும் மீண்டும் நடக்கும் என குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள்.
வெளியில் சொற்பொழிவு செய்யும்போது பலவிதமான மனிதர்கள் வருகின்றனர் என குழந்தைகளுக்குத்தான்
புரிய வைக்கப்படுகிறது. அனைவரும் வேத சாஸ்திரங்கள், கீதை முதலானவை குறித்துதான் சொற்பொழிவாற்று
கின்றனர் என குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள், அவர்களுக்கு இங்கே ஈஸ்வரன் வந்து தன்னுடைய
மற்றும் படைப்பின் முதல், இடை, கடைசியின் ரகசியத்தைப் புரிய வைக்கிறார் என தெரியாது. பரமாத்மா யார்
என படங்களில் எவ்வளவு நல்ல விதமாக காட்டப்பட்டுள்ளது. இந்த விசயங்களை புரொஜக்டரின் மூலம் புரிய
வைக்க முடியாது. கண்காட்சிகளில் படங்களும் முன்னால் வைக்கப்பட்டுள்ளன, நீங்கள் புரிய வைத்து விட்டு
கேட்கலாம் லி இப்போது சொல்லுங்கள், கீதையின் பகவான் யார்? ஞானக்கடல் யார்? தூய்மை, சுகம், அமைதியின்
கடல், விடுவிப்பவர், வழிகாட்டி யார்? என்று. கிருஷ்ணரைச் சொல்ல முடியாது. பரமாத்மாவின் மகிமை
தனிப்பட்டதாகும். முதலில் எழுத வைக்க வேண்டும், விசாரிக்க வேண்டும், அனைவரிடமும் கையொப்பமும்
பெற வேண்டும்.
(ஹாலில் பறவைகள் சண்டையிட்டுக் கொள்கின்றன) இந்த சமயத்தில் முழு உலகிலும் வெறும் சண்டை
சச்சரவுகள்தான் நடக்கின்றன. மனிதர்களிடமிருக்கும் 5 விகாரங்கள் பாடப்படுகின்றன. விலங்குகளின் விசயம்
11.08.2016
(3/4)
இல்லை. விஷமான உலகம், நிர்விகார உலகம் என்பது மனிதர்கள் குறித்து பாடப்பட்டுள்ளது. கலியுகத்தில்
இருப்பது அசுர சம்பிரதாயம், சத்யுகத்தில் இருப்பது தெய்வீக சம்பிரதாயம். நாம்தான் அசுர சம்பிரதாயம் என
கொஞ்சமும் புரிந்து கொள்ள முடியாத அளவு மனிதர்களின் புத்தி தமோபிரதானமாக இருக்கிறது.
தேவதைகளுக்கு முன்பாகச் சென்று பாடவும் செய்கின்றனர் லி நாங்கள்தான் கீழான பாவிகள், குணங்களற்ற
எங்களிடம் எந்த குணமும் இல்லை. நீங்கள் அவர்களுக்கு நிரூபித்து புரிய வைக்க முடியும். ஏணிப்படத்தில்
மிகவும் தெளிவாக உள்ளது. எப்படி ஏறும் கலை மற்றும் இறங்கும் கலை ஏற்படும் என காட்டப்பட்டுள்ளது.
பாரதவாசிகளுக்கு ஏணிப்படிகளின் படம் மிக முக்கியமானதாகும். இது அனைத்தையும் விட நல்ல சாதனம்.
இந்த படத்தை வைத்து நன்றாகப் புரிய வைக்க முடியும். 84 பிறவிகளை முடித்துக் கொண்டு பிறகு முதல்
பிறவி எடுக்க வேண்டும், பிறகு இறங்கும் கலையிலிருந்து மீண்டும் ஏறும் கலையில் செல்ல வேண்டும்.
அனைவருக்கும் எப்படி வழி காட்டலாம் என அனைவருக்குள்ளும் சிந்தனை ஓட வேண்டும். சிந்தனை
செய்யாவிட்டால் எப்படி சேவை செய்ய முடியும்? படங்களை வைத்து புரிய வைப்பது மிகவும் சகஜமாக
இருக்கும். சத்யுகத்திற்குப் பிறகு ஏணியில் இறங்கத்தான் வேண்டும். நாம் இப்போது இட மாற்றல் (டிரான்ஸ்ஃபர்)
ஆகிக் கொண்டிருக்கிறோம் என குழந்தைகளுக்குத் தெரியும். ஆனால் நேராக சத்யுகத்திற்குச் செல்வதில்லை.
முதலில் சாந்தி தாமத்திற்குச் செல்ல வேண்டும். நாம் நடிகர்கள் என நீங்கள் அறிவீர்கள். மற்றபடி உங்களிலும்
கூட தன்னை இந்த நாடகத்தின் நடிகர் என புரிந்து கொள்வதில் வரிசைக்கிரமமாக உள்ளனர். நாம் எழுதவும்
செய்கிறோம் லி அனைத்து மனிதர்களுமே இந்த எல்லைக்கப்பாற்பட்ட நாடகத்தின் நடிகர்களாக இருந்தும்
நாடகத்தின் முக்கிய நடிகர்கள், இயக்குநர் மற்றும் நாடகத்தின் முதல், இடை, கடைசி பற்றி அறிவதில்லை.
ஆக அவர்கள் புரியாதவர்களாக உள்ளனர். இதை எழுதுவதில் ஏதும் பிரச்சினை இல்லை. ஒரு காதில் கேட்டு
இன்னொரு காதில் விட்டு விடக்கூடாது. சேவை, சேவை மற்றும் சேவை. குழந்தைகளின் மீது சில சமயங்களில்
கிரகச்சாரம் ஏற்பட்டு விடுகிறது என பாபாவுக்குத் தெரியும். கிரகச்சாரம் ஏற்படும் போது எவ்வளவு நஷ்டம்
ஏற்பட்டு விடுகிறது, அதை தந்தை அறிவார். செல்வந்தர்கள் ஏழைகளாகி விடுகின்றனர். காரணம் இருக்கிறது
அல்லவா. பலருக்கு பாபா புரியவும் வைக்கிறார் லி குழந்தைகளே, பெயர் உருவத்தில் ஒருபோதும் மாட்டக்
கூடாது. இல்லை என்றால் மாயை மூக்கைப் பிடித்து படுகுழியில் விழ வைக்கக் கூடியதாக உள்ளது. மாயை
மிகவும் அடி கொடுத்து விடும். இங்கே பிரியதர்ஷன் லி பிரியதர்μனியாக ஆகி விடக் கூடாது. சிலர் விகாரத்திற்காக
பிரியதர்ஷன் லி பிரியதர்μனியாக ஆகின்றனர், சிலர் வெறும் உருவத்தின் மீது பலியாகின்றனர். செண்டர்களில்
கூட இப்படி மாயையின் தடைகள் உண்டாகின்றன என நீங்கள் அறிவீர்கள், ஒருவர் மற்றவரின் பெயர்
உருவத்தில் மாட்டிக் கொள்கின்றனர். மாதர்கள் மாதர்களின் பெயர் உருவத்தில், கன்யாக்கள் கன்யாக்களின்
பெயர் உருவத்தில் மாட்டிக் கொள்ளும் அளவு மாயை பலம் வாய்ந்ததாக உள்ளது. முயற்சி செய்தபடியே
இருந்தபோதும், மாயை ஒரேயடியாக பிடித்துக் கொள்கிறது, ஆகையால் பாபா எச்சரிக்கை கொடுக்கிறார் லி
குழந்தைகளே, மாயை மிகவும் சிக்க வைக்கப் பார்க்கும், ஆனால் நீங்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது. தேக
அபிமானத்தில் வரக்கூடாது. தன்னை ஆத்மா என புரிந்து தந்தையை நினைவு செய்ய வேண்டும். மாயையின்
ஏமாற்ற வலையிலிருந்து தப்பிக்க வேண்டும். குழந்தைகளாகிய உங்களை மணம் வீசும் மலர்களாக ஆக்க
வந்துள்ளார், உங்களுக்கு எந்த விசயத்திலும் சந்தேகம் எழக் கூடாது. மனதில் சந்தேகம் வந்தது என்றால்
நல்ல விதமாக சேவை செய்ய முடியாது. உள்ளுக்குள் ஏமாற்றம் அடைந்தபடி இருப்பீர்கள். தைரியம் வைக்க
வேண்டும். நேரம் மிகவும் குறைவாக உள்ளது. பாபாவின் முரளியைக் கேட்டீர்கள் என்றால் உற்சாகத்தில்
வருவீர்கள். ஆத்மபிரகாஷ் குழந்தை சரியான முறையில் படங்களின் மீது கவனம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
பம்பாய்காரர்களுக்கும் கூட புத்தியில் வர வேண்டும். முக்கியமான படத்தை முதலில் உருவாக்க வேண்டும்.
சோதனை செய்ய வேண்டும், பாபா எப்படி படங்களால் முன்னேற்றம் காண வேண்டும் என வழி கொடுத்தபடி
இருக்கிறார். ஏணிப்படிகளின் படத்தை விமான நிலையத்தில் வைப்பதற்காக ஏதாவது யுக்தியை உருவாக்க
வேண்டும். இந்தப் படத்தைப் பார்த்து அனைவரும் குμயடைவார்கள். கடைசியில் நமக்கு வழி கொடுப்பவர்
யார் என புரிந்து கொள்வார்கள். ஆக, குழந்தைகளுக்கு மிகவும் போதை ஏற வேண்டும். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு
தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
11.08.2016
(4/4)
ôரணைக்கான முக்கிய சாரம் :
1. குழந்தைகளாகிய நீங்கள் யுத்த மைதானத்தில் இருக்கிறீர்கள், மாயை இராவணனோடு
உங்களுடைய யுத்தம் நடக்கிறது. மாயை மிகவும் தடைகளை ஏற்படுத்துகிறது. குழந்தைகள்
மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
2. அனைவரும் தம்முடைய முன்னேற்றத்தைக் குறித்து சிந்திக்க வேண்டும். படங்களை வைத்து
எப்படி புரிய வைப்பது, சேவையை எப்படி அதிகரிப்பது, படங்களில் மனிதர்கள் சகஜமாக
புரிந்து கொள்ளும்படியாக என்ன போடலாம் (வரையலாம்) என சிந்திக்க வேண்டும்.
வரதானம் : புத்தியின் அன்பை ஒரு பிரியதர்ஷனிடம் ஈடுபடுத்தி எப்போதும் அவருக்கு
முன்பாக இருக்கும் அனுபவம் செய்யக் கூடிய வெற்றி ரத்தினம் ஆகுக.
அன்பான புத்தி அதாவது புத்தியின் ஈடுபாட்டை ஒரு பிரியதர்ஷனிடம் வைத்திருக்க வேண்டும்.
யாருக்கு ஒருவரிடம் அன்பு உள்ளதோ அவர்களின் அன்பு வேறு எந்த மனிதர்களுடனோ அல்லது வசதி
வாய்ப்புகளுடனோ ஏற்பட முடியாது. யார் எப்போதும் பாப்தாதாவை தன் எதிரில் இருக்கும் அனுபவத்தைச்
செய்வார்களோ, அவர்களுக்கு மனதால் கூட உயர்ந்த வழி(ஸ்ரீமத்)க்கு விரோதமான வீண் எண்ணங்கள்
அல்லது தீய எண்ணங்கள் வர வாய்ப்பில்லை. உங்களிடம்தான் உண்பேன், உங்களுடன்தான் அமர்வேன். .
. உங்களுடன்தான் அனைத்து சம்மந்தங்களையும் வைப்பேன். . . இந்த வார்த்தைகள்தான் அவர்களின்
வாயிலிருந்தும் மனதிலிருந்தும் வெளிப்படும். இப்படிப்பட்ட அன்பான புத்தியாக உள்ளவர்கள்தான் வெற்றி
ரத்தினம் ஆகின்றனர்.
சுலோகன் : வேண்டும்லிவேண்டும் என்ற எண்ணம் வருவதும்
கூட ராயல் ரூபத்தின் வேண்டுதல் ஆகும்.
(1/4)
12.
08.2016 காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா ,மதுபன்
இனிமையான குழந்தைகளே! இப்போது இந்த எல்லையற்ற பழைய உலகம் விநாசம் ஆகப்
போகிறது, புது உலகம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது, ஆகையால் புது உலகம்
செல்வதற்காக தூய்மையாகுங்கள்.
கேள்வி: பரமாத்மாவைப் பற்றி குழந்தைகளாகிய நீங்கள் எந்த ஒரு ஆச்சரியமான விசயத்தை
அறிந்திருக்கிறீர்கள், அது மனிதர்களின் அறிவுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது?
பதில்: ஆத்மா எவ்வாறு ஜோதி புள்ளியாக இருக்கிறதோ அதே போன்று பரமாத்மாவும் மிக சூட்சும
ஜோதி புள்ளியாக இருக்கின்றார் என்று நீங்கள் கூறுகிறீர்கள். இந்த விசயம் மனிதர்களின் அறிவுக்கு அப்பாற்
பட்டதாகும். சில குழந்தைகளும் கூட இதில் குழப்பமடைந்து விடுகின்றனர். பாபா கூறுகின்றார் லி குழந்தைகளே!
குழப்பமடையாதீர்கள். ஒருவேளை சிறிய ரூபம் நினைவிற்கு வரவில்லையெனில் பெரிய ரூபத்தில் நினைவு
செய்யுங்கள். அவசியம் நினைவு செய்ய வேண்டும்.
பாட்டு: இரவு பயணிகளே களைப்படையாதீர்கள் .........
ஓம்சாந்தி. ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை வந்து புரிய வைக்கின்றார், ஆகையால்
குழந்தைகள் ஆத்ம அபிமானியாகி அமர வேண்டும். இவ்வாறு வேறு எந்த இடத்திலும் புரிய வைப்பது
கிடையாது. எந்த சாதுவோ அல்லது சந்நியாசியோ ஆத்ம அபிமானியாகி அமருங்கள் என்று புரிய வைப்பது
கிடையாது. இதை ஒரே ஒரு தந்தை தான் புரிய வைக்கின்றார், வேறு யாருக்கும் கூறுவதற்கு வரவே வராது.
இந்த யுக்தியை யாரும் கூற முடியாது. குழந்தைகளாகிய நீங்களும் கூட நான் ஆத்மா என்பதை புரிந்திருக்கிறீர்கள்.
ஆத்மா தான் ஒரு சரீரத்தை விடுத்து மற்றொன்றை எடுக்கிறது. வக்கீலாகவும், டாக்டராகவும் ஆகிறது. ஆத்மா
தான் இப்போது தூய்மையற்றதாக ஆகியிருக்கிறது, பிறகு தூய்மை ஆகிவிடும். ஆத்மாவில் ஞான தாரணை
ஏற்படுகிறது. தந்தை நிராகாராக, ஞானக் கடலாக இருக்கின்றார் எனில் அவசியம் வந்து ஞானம் கூறுவார்
அல்லவா! பதீத பாவன் எனில் அவசியம் வந்து தூய்மையாக்குவார் அல்லவா! அவர் சுப்ரீம் பரம்பிதா
பரமாத்மா ஆவார். நான் உங்களது தந்தை சுப்ரீம் ஆக இருக்கிறேன், ஞானம் நிறைந்தவனாக இருக்கிறேன்.
எனக்கென்று சரீரம் கிடையாது. இந்த அனைத்து ஞானத்தையும் உங்களது ஆத்மா தாரணை செய்கிறது எனில்
நீங்கள் ஆத்ம அபிமானியாக ஆக வேண்டும். தேக அபிமானத்தில் வரக் கூடாது, வேறு எந்த இடத்திலும்
கேட்பவர் மற்றும் கூறுபவர் ஆத்மா அபிமானியாக இருப்பார்கள் என்பது கிடையாது. தந்தை நிராகாராக
இருக்கின்றார். அவர் வந்து உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். மற்ற அனைத்து மனிதர்களும் தேக
அபிமானத்தில் இருக்கின்றனர். இந்த லெட்சுமி நாராயணனும் ஆத்ம அபிமானியாக இருந்தனர் எனக் கூறலாம்,
இருப்பினும் தேக அபிமானம் இருக்கிறது அல்லவா! இந்த ஞானம் பரம்பிதா பரமாத்மா வந்து தான் கொடுக்கின்றார்.
ஆத்மாவானது தாரணை செய்ய வேண்டும். ஆத்மாவைத் தான் தூய்மையற்றதிலிருந்து தூய்மை ஆவதற்கான
யுக்தி கூறுகின்றார். இப்போது முழு உலகமும் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது, மீண்டும் எழுச்சி செய்ய
வருகின்றார். இதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். வீழ்ச்சி என்றால் அழிவு, எழுச்சி என்றால் படைப்பு.
ஸ்தாபனை மற்றும் விநாசம். எதை ஸ்தாபனை செய்கிறார்? புது உலகை, சொர்க்கத்தின் ஸ்தாபனை மற்றும்
பழைய உலகம், நரகத்தை விநாசம் செய்கிறார். விநாசம் மற்றம் படைப்பு. கலியுகம் என்றால் பழைய உலகம்,
இது அவசியம் விநாசம் ஆக வேண்டும். விநாசத்தின் அடையாளம் தான் இந்த மகாபார யுத்தமாகும்.
மகாபாரதத்தின் உதாரணம் மகாபாரத சாஸ்திரத்தில் காண்பிக்கின்றனர். தந்தை பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை
செய்கிறார். அவசியம் புது உலகைத் தான் செய்வார் அல்லவா! இது எல்லையற்ற விநாசம் மற்றும் எல்லையற்ற
ஸ்தாபனை ஆகும். தந்தை தான் குழந்தைகளுக்காக புது கட்டடம் கட்டுவார். பிறகு பழையதை அவசியம்
அழித்து விடுவார். பாபா இப்போது புது உலகை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கின்றார் என்பதை நீங்கள்
புரிந்திருக்கிறீர்கள். தமோபிரதானத்திலிருந்து மீண்டும் சதோபிரதானம் ஆக்குவதற்காக நம்மை தயார்படுத்திக்
கொண்டிருக்கின்றார். விநாசத்திற்காக மகாபாரத யுத்தம் பிரபலமானது. இது அதே நேரம் என்று பாபா கூறுகின்றார்.
மகாபாரத நேரத்தில் அதே நட்சத்திரங்கள் வந்து தங்களுக்குள் சந்தித்து கொள்கிறது. இந்த ஏணியிலும்
பாரதத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சிக்கான உயர்ந்த கதை என்று எழுதப்பட்டிருக்கிறது. இந்த வாக்கியத்தில்
கல்ப கல்பம் என்ற வார்த்தையும் எழுதப்பட வேண்டும். ஆரம்பத்திலிருந்து கடைசி வரை மனிதர்கள் 84
பிறவிகள் எடுக்கின்றனர். இதுவும் உங்களது புத்தியில் இருக்கிறது. மனிதர்களின் புத்தியானது முற்றிலும்
காட்ரேஜ் பூட்டினால் பூட்டப்பட்டிருக்கிறது. இந்த விசயங்களை மனிதர்கள் தான் அறிந்து கொள்ள வேண்டும்.
நடிப்பு நடிப்பதற்காக ஆத்மாக்கள் இங்கு சரீரத்தை தாரணை செய்கிறது. ஆக நாடகத்தின் முதல், இடை,
(2/4)
12.08.2016
கடையின் படைப்பவர், டைரக்டர், முக்கிய நடிகர் போன்றவற்றை அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா!
இப்போது நீங்கள் நாடகத்தின் முதல், இடை, கடை, யார் யார் நடிக்கின்றனர்? போன்ற முழு நாடகத்தையும்,
ஆரம்பம் முதல் கடைசி வரை அறிந்து கொண்டீர்கள். தந்தையின் மூலம் இந்த முழு ஞானமும் கிடைத்துக்
கொண்டிருக்கிறது. சிருஷ்டிச் சக்கரம் எவ்வாறு சுழல்கிறது? இது தான் ஆன்மீக ஞானம் என்று கூறப்படுகிறது.
உலகாய ஞானத்தை தத்துவ ஞானம் என்று கூறப்படுகிறது. ஆன்மீக ஞானம் தான் ஞானம் என்று கூறப்படுகிறது.
இப்போது இந்த அனைத்து விசயங்களும் குழந்தைகளின் புத்தியில் பதியும்படி புரிய வைக்கப்பட்டிருக்கிறது.
இப்போது 84 பிறவிக்கான நாடகம் முடிவடைகிறது என்பதை குழந்தைகள் அறிவீர்கள். இப்போது நாம்
திரும்பிச் செல்கிறோம், ஆனால் தூய்மையற்றவர்கள் யாரும் திரும்பி செல்ல முடியாது. இல்லையெனில் இந்த
அளவிற்கு ஜபம், தவம், தீர்த்த யாத்திரை ஏன் செய்கின்றனர்? தூய்மை ஆவதற்காகவே கங்கையில் குளிக்க
செல்கின்றனர். ஆனால் அதன் மூலம் யாரும் தூய்மை ஆகிவிட முடியாது. ஆகையால் யாரும் திரும்பிச்
செல்ல முடியாது. இன்னார் அனைத்தையும் கடந்து நிர்வாண்தாமத்திற்குச் சென்று விட்டார், ஜோதி ஜோதியுடன்
கலந்து விட்டார் என்று கட்டுக் கதை கூறுகின்றனர். யாரும் திரும்பிச் செல்வது கிடையாது என்று தந்தை
புரிய வைத்திருக்கின்றார். அனைத்து நடிகர்களும் இங்கேயே இருக்கின்றனர். இப்போது நாடகம் முடிவடைகிறது,
ஆகையால் அனைவரும் மேடையில் நின்றுக் கொண்டிருக்கின்றனர். இப்போது அனைவரும் இங்கு வந்து
விட்டனர். பௌத்தர், கிறிஸ்து போன்றவர்கள் எங்கு இருக்கின்றனர்? என்பது மனிதர்களுக்கு தெரியாது. மேருந்து
வந்த அனைத்து ஆத்மாக்களும் இங்கு இந்த நேரத்தில் தமோபிரதானமாக இருக்கின்றனர் என்பதை
நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக கல்பத்திற்கு முன்பும் ஆகியிருந்தீர்கள்.
தந்தை வந்து தான் ஸ்தாபனை, விநாசம் செய்விக்கின்றார். இந்த ஞானம் இராஜாவிற்கெல்லாம் இராஜாவாக
ஆக்கக் கூடியது என்றும் கூறுகின்றார். நான் உங்களை இராஜாவிற்கெல்லாம் இராஜாவாக ஆக்குகிறேன் என்று
இந்த எல்லையற்ற தந்தை கூறியிருக்கின்றார். கிருஷ்ணர் ஸ்தாபனை செய்விப்பது கிடையாது. படைப்பவர்
தந்தை ஆவார். எப்போது இந்த உலகம் தூய்மை இழந்துவிடுகிறதோ அப்போது தான் நீங்கள் என்னை
அழைக்கிறீர்கள் என்று தந்தை வந்து புரிய வைக்கின்றார். நான் புது உலகை படைக்கிறேன் என்பது கிடையாது.
பிரளயம் ஏற்பட்டது என்று காண்பிக்கின்றனர், இவை அனைத்தும் தவறாகும். பதீத பாவனனே வாருங்கள்
என்று மனிதர்கள் அழைக்கின்றனர் எனில் அவசியம் அழுக்கான உலகில் வருவார் அல்லவா! தந்தை வந்து
தான் கிருஷ்ணபுரியின் சாட்சாத்காரம் செய்விக்கின்றார். கிருஷ்ணர் கடலில் ஆல இலையின் மீது வந்ததாக
காண்பிக்கின்றனர்...... இது சரியான விசயமாகும். புது உலகில் முதலில் கிருஷ்ணர் தான் வருவார். கடலில்
அல்ல, கர்ப மாளிகையில் வருவார். காலி விரல் வாயில் வைத்துக் கொண்டு, மிக ஓய்வாக கர்ப மாளிகையில்
இருப்பார். சத்யுகத்தில் அனைத்து குழந்தைகளும் கர்ப மாளிகையில் இருப்பர். கர்ப மாளிகையின் விசயத்தைத்
தான் அவர்கள் கடலில் இலையின் மீது அமர்ந்திருப்பதாக காண்பித்து விட்டனர். அவை அனைத்தும் பக்தி
மார்க்கத்தின் விசயமாகும். தந்தை இந்த அனைத்து சாஸ்திரங்களின் சாரத்தை அமர்ந்து புரிய வைக்கின்றார்.
இங்கு கர்ப சிறையில் இருப்பதால் தான் எங்களை வெளியேற்றுங்கள், நாம் இனி பாவம் செய்யமாட்டோம்
என்று கூறுகிறது. ஆனால் இராவணனின் இராஜ்யத்தில் பாவம் ஏற்படவே செய்கிறது. மீண்டும் பாவம் செய்ய
ஆரம்பித்து விடுகிறது. நீங்கள் அரைக் கல்பத்திற்கு சிறைப் பறவையாக ஆகிவிடுகிறீர்கள். திருடர்களைத் தான்
சிறைப் பறவைகள் என்று கூறுகிறோம். வெளியில் வந்தாலும் மீண்டும் திருடிக் கொண்டே இருப்பார்கள்,
சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும். அதனால் தான் சிறைப் பறவை என்று கூறுகிறோம். இது இராவண
இராஜ்யம் என்று தந்தை புரிய வைக்கின்றார். அங்கு இந்த விசயங்களே கிடையாது. அதுவோ இராம
இராஜ்யமாகும். அங்கு கர்ப சிறையும் இருக்காது, அந்த சிறையும் இருக்காது. இங்கு எத்தனை மனிதர்கள்
சிறையில் இருக்கின்றனர்! கர்ப சிறையும் இருக்கிறது, அந்த சிறையும் இருக்கிறது. இரண்டு சிறைகள் உள்ளன.
கலியுகத்தின் கடைசி அல்லவா!
நீங்கள் இப்போது படைப்பின் காரியம் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று தந்தை புரிய வைக்கின்றார்.
எழுச்சி மற்றும் வீழ்ச்சி, ஒவ்வொரு கல்பத்திலும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. எழுச்சி மற்றும் வீழ்ச்சி
உலகில் ஏற்படுகிறது. அதிலும் முக்கிய பங்கு பாரதத்தில் இருக்கிறது. ஆத்மா பரமாத்மாவைப் பிரிந்து வெகு
காலம் ஆகிவிட்டது ...... என்று பாடிக் கொண்டே இருக்கின்றனர். ஆக அதற்கும் கணக்கு வேண்டும் அல்லவா!
எந்த ஆத்மாக்கள் வெகு காலமாக பிரிந்திருக்கின்றன? முதன் முதலில் நடிப்பு நடிப்பதற்காக தேவி தேவதா
தர்மத்தைச் சார்ந்த ஆத்மாக்கள் வருகின்றன. இப்போது அந்த தேவதைகள் கிடையாது, யார் இராஜ்யம்
செய்து விட்டு சென்றார்களோ அவர்களது சிலைகள் தான் அடையாளமாக இருக்கின்றன. இராஜ்யம் அழிந்து
விட்டது. சொர்க்கம் அழிந்து விட்டது, பிறகு நரகம் ஏற்படுகிறது, மீண்டும் நரகம் அழிந்து சொர்க்கம் ஏற்படும்.
ஆக புது உலக படைப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது மற்றும் நரகம் அழிந்து விடும். படைப்பதற்கு குழந்தைகள்
தேவை அல்லவா! வசிக்கக் கூடியவர்களும் நீங்கள் தான். முதலில் நீங்கள் தெய்வீக குணங்களுடைய
(3/4)
12.08.2016
தேவதைகளாக ஆக வேண்டும். மனிதனிலிருந்து தேவதை ........ என்றும் பாடப்பட்டிருக்கிறது. மனிதர்கள்
அசுத்தமானவர்களாக இருக்கின்றனர் அல்லவா! பகவானின் மகாவாக்கியம் லி இல்லறத்தில் இருந்தாலும் தாமரை
மலர் போன்று தூய்மையானவர்களாக ஆக வேண்டும். இந்த மரண உலகின் கடைசிப் பிறவியில் நாம்
தூய்மையாக இருக்கிறோம். இந்த விகாரங்களை வெல்வதன் மூலம் நீங்கள் உலகிற்கு எஜமானர்களாக ஆவீர்கள்
என்று தந்தை கூறுகின்றார். குழந்தைகள் கேட்கவும் செய்கிறீர்கள், மேலும் மற்றவர்களுக்குப் புரிய வைக்கவும்
செய்கிறீர்கள் லி இந்த பழைய உலகின் விநாசம் எதிரிலேயே இருக்கிறது. இது அதே மகாபாரத யுத்தமாகும்.
காமம் மிகப் பெரிய எதிரி, ஆகையால் உறுதிமொழி செய்யுங்கள். நாம் இப்போது தூய்மையாக ஆகிறோம்
என்பதை நீங்கள் இப்போது புரிந்திருக்கிறீர்கள். இந்த பழைய உலகம் அவசியம் விநாசம் ஆகிவிடும், அதற்கு
முன்பாக அவசியம் தூய்மையாக ஆக வேண்டும். விநாசம் ஏற்படும், பிறகு கேட்கவே கோட்காதீர்கள் லி ஐயோ
ஐயோ என்ற நிலை ஏற்படும், கடுமையான மரணம் அதிகம் நிகழும். உங்களால் பார்க்கவும் முடியாது.
யாருக்காவது அறுவை சிகிச்சை நடைபெறும் போது பலவீனமானவர்களால் அங்கு நிற்க முடியாது, கீழே
மயங்கி விழுந்து விடுவர். அதனால் தான் டாக்டர்கள் குடும்பத்தினர்களை அனுமதிப்பது கிடையாது. இது
எவ்வளவு பெரிய அறுவை சிகிச்சையாக இருக்கும்! ஒருவரை ஒருவர் கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.
இது மிகவும் அசுத்தமான உலகமாகும். முட்கள் நிறைந்த காடாகும். சத்யுகம் மலர்கள் நிறைந்த பூந்தோட்டம்
என்று கூறப்படுகிறது. தேவதைகள் சைத்தன்ய மலர்கள் அல்லவா! சொர்க்கத்தில் மலர்கள் நிறைந்த பூந்தோட்டம்
இருக்கும் என்று மனிதர்கள் நினைக்கின்றனர், என்ன கேட்கிறார்களோ அதை கூறிவிடுகின்றனர். அல்லாவின்
பூந்தோட்டம் என்று கூறுகின்றனர் அல்லவா! பிறகு தியானத்தின் போதும் பூந்தோட்டம் பார்பார்கள். அல்லா
கைகளில் மலர் கொடுத்தார். புத்தியில் அல்லாவின் பூந்தோட்டம் இருக்கிறது. பக்தி மார்க்கத்தில் சாட்சாத்காரம்
செய்வதற்காகவே பக்தி செய்கின்றனர். சாட்சாத்காரம் ஏற்பட்டு விட்டால் சர்வவியாபி அல்லவா! என்று கூறுவர்.
எது கடந்து முடிந்ததோ அது மீண்டும் நடைபெறும். குழந்தைகள் எந்த நிலையில், எப்படி வந்தீர்களோ அதே
நிலையில் மீண்டும் கல்பத்திற்குப் பிறகு வருவார்கள். நாடகத்தை சிலர் நல்ல முறையில் புரிந்திருக்கின்றனர்,
பாபாவிடம் சிலர் வருகின்ற போது முன்பு எப்போதாவது வந்திருக்கிறீர்களா? என்று பாபா கேட்பார். ஆம் பாபா,
உங்களை கல்பத்திற்கு முன்பும் சந்தித்திருந்தோம், உங்களிடம் ஆஸ்தியடைய வந்திருந்தோம் என்று கூறுவர்.
என்ன பதவி அடைந்திருந்தீர்கள்? என்று தந்தை கேட்பார். பாபா, மம்மா என்று கூறுகிறீர்கள் எனில் அவசியம்
அவர்களது வம்சத்தில் வருவீர்கள். உயர்ந்த பதவி அடையுமளவிற்கு முயற்சி செய்யுங்கள் என்று பாபா
கூறுகின்றார். இந்த அனைத்து விசயங்களும் உங்களது புத்தியில் இருக்கிறது. யுத்தமும் நடைபெறும், நரகமும்
விநாசம் ஆகியே தீரும். உங்களிடம் மிகவும் முதல் தரமான சித்திரங்கள் உள்ளன. இரண்டு (பூமி) உருண்டை
உள்ள சித்திரமும் அச்சடிக்க வேண்டும். இதில் மிகவும் தெளிவாக இருக்கிறது. சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது,
நரகத்தை எட்டி உதைக்கிறார். உங்களது முகமும் சொர்க்கத்தின் பக்கம் இருக்கிறது, இது முற்றிலும் சரியான
விசயமாகும். இப்போது நாம் வீட்டிற்குச் செல்ல வேண்டும், ஆகையால் வீட்டை மட்டுமே நினைவு செய்ய
வேண்டும் என்பதை அறிவீர்கள். பழைய உலகை மறக்க வேண்டும், இது தான் எல்லையற்ற வைராக்கியம்
என்று கூறப்படுகிறது. பழைய உலகை விட்டு விட்டு நாம் பாபாவிடம் செல்கிறோம். நினைவு யாத்திரையின்
மூலம் தான் செல்வீர்கள். முக்கியமானது நினைவிற்கான விசயமாகும். நினைவின் மூலம் அனைத்தும் செய்கிறீர்கள்
அல்லவா! இப்போது தந்தை வந்து யதார்த்தமான விசயங்களைப் புரிய வைக்கின்றார் லி என்னை நினைவு
செய்யுங்கள். இது கலப்படமற்ற நினைவு அதுவும் அர்த்தத்துடன் கூடியதாகும். சிவபாபாவும் புள்ளியாக
இருக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். தன்னையும் ஆத்மா புள்ளி என்று புரிந்து கொள்ள வேண்டும்,
தந்தையையும் புள்ளி என்று புரிந்து கொள்ள வேண்டும். புதிய விசயத்தைப் பார்த்து மறந்து விடுகிறீர்கள்.
தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு பிறகு தந்தையை மற்றும் தனது வீட்டை நினைவு செய்ய
வேண்டும். நல்லது, புள்ளி சிறியதாக இருக்கும், வீடு பெரிதாக இருக்கும் அல்லவா! வீட்டை நினைவு
செய்யுங்கள். பாபாவும் அங்கு தான் இருக்கிறார். எங்கு பாபா இருக்கிறாரோ அங்கு நாம் செல்வோம். புள்ளி
நினைவிற்கு வருவது கிடையாது, வீடு நினைவிற்கு வருகிறது அல்லவா! அது சாந்திதாமம், அது சுகதாமம்
ஆகும். இது துக்கதாமம் ஆகும். இப்போது நீங்கள் வரிசைக்கிரமமான முயற்சியின் படி படித்துக் கொண்டிருக்
கிறீர்கள், பிறகு சுகதாமத்திற்கு வந்து விடுவீர்கள். தந்தையின் குழந்தை எனில் அவசியம் சொர்க்கத்தின்
இராஜ்யம் தேவை. கல்பத்திற்கு முன்பும் சிவபாபா வந்திருந்தார், சொர்க்க இராஜ்யம் கொடுத்திருந்தார். நீங்கள்
மறந்து விட்டீர்கள். இப்போது உங்களுக்குக் கொடுப்பதற்காக நான் மீண்டும் வந்திருக்கிறேன் என்று தந்தை
கூறுகின்றார். எத்தனை முறை நீங்கள் இராஜ்யம் அடைந்தீர்கள்? மற்றும் இழந்தீர்கள்? எண்ணற்ற முறை
ஆஸ்தி அடைந்திருக்கிறீர்கள், இருப்பினும் இப்படிப்பட்ட தந்தையை ஏன் மறந்து விடுகிறீர்கள்? மாயையின்
புயல்களில் அதிக யுத்தம் நடைபெறுகிறது, அதனால் தான் நாடகத்திலும் காண்பிக்கிறீர்கள் லி மாயை அந்தப்
பக்கம் இழுக்கிறது, பிரபு இந்த பக்கம் இழுக்கிறார். ஞானத்தில் தடைகள் ஏற்படுவது கிடையாது. நினைவில்
எற்படுகிறது. இதில் தான் முயற்சி இருக்கிறது. மகாரதி ஆகுங்கள் என்று இப்போது தந்தை கூறுகின்றார். இந்த
(4/4)
12.08.2016
பழைய உலகம் எரிந்து போய் விடும். இந்த யக்ஞத்தில் முழு பழைய உலகமும் சுவாஹா (பலி பொருளாக)
ஆகியே தீர வேண்டும், ஆக மகாவீராக ஆக வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் உறுதியான, ஆடாத,
அசைக்க முடியாத இராஜ்யம் அடைய வேண்டும். எவ்வளவு தான் புயல்கள் வந்தாலும், மாயை ஒன்றும்
செய்ய முடியாத அளவிற்கு உங்களது புத்தித் தொடர்பு தந்தையிடம் இருக்க வேண்டும். இது உங்களது
கடைசி மனநிலையாகும். மாற்றல் ஏற்படும் போது, பள்ளிகளில் தேர்வு கடைசியில் இருக்கும். உங்களது
மாலையும் கடைசியில் உருவாகும். இன்னார் இந்த நிலை அடைவார், இன்னார் இவ்வாறு ஆவார் என்று
உங்களுக்கு அதிக சாட்சாத்காரம் கிடைக்கும். இவர் தாசியாக ஆவார் ........ இவ்வாறு கூறுவீர்கள். கடைசியில்
ஒன்றும் செய்ய முடியாது, பட்சாதாபம் அடைய வேண்டியிருக்கும். இவ்வாறு நான் செய்து விட்டேன், ஸ்ரீமத்
படி ஏன் நடக்கவில்லை? ஆனால் அந்த நேரத்தில் ஒன்றும் செய்ய முடியாது. இவ்வாறு அதிகம் பட்சாதாபம்
அடைய வேண்டியிருக்கும். மனிதர்கள் யாரையாவது கொலை செய்து விட்டு பிறகு பட்சாதாபம் அடைகின்றனர்.
ஆனால் கொலை நடந்து விட்டது, பிறகு என்ன செய்ய முடியும்? அதனால் தான் தவறுகள் செய்யாதீர்கள், சுய
முயற்சி செய்து கொண்டே இருங்கள் என்று தந்தை கூறுகின்றார். நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய்
தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) 84 பிறவிகளுக்காக நாடகம் இப்போது முடிவடைகிறது, திரும்பி வீட்டிற்கு செல்ல வேண்டும்,
ஆகையால் ஆத்ம அபிமானியாகி பாவனம் ஆக வேண்டும். தேக அபிமானத்தை நீக்க
வேண்டும்.
2) அர்தத்துடன் தன்னை ஆத்மா புள்ளி என்று புரிந்து கொண்டு புள்ளியான தந்தையின்
கலப்படமற்ற நினைவில் இருக்க வேண்டும். மகாவீர் ஆகி தனது மன நிலையை ஆடாது,
அசையாது ஆக்கிக் கொள்ள வேண்டும்.
வரதானம்: சதா ஞான சூரியனின் எதிரில் இருக்கக் கூடிய
உள்நோக்கு முகமுடையவர், சுயமரியாதை உடையவர் ஆகுக !
எவ்வாறு சூரியனை எதிரில் பார்த்ததும் சூரியனின் கிரணங்கள் அவசியம் நம் மீது விழும். அதே
போன்று எந்த குழந்தைகள் ஞான சூரியனாகிய தந்தையின் எதிரில் சதா இருக்கிறார்களோ அவர்கள் ஞான
சூரியனின் அனைத்து குணங்களின் கிரணங்களை தனக்குள் அனுபவம் செய்வார்கள். அவர்களது முகத்தில்
உள்நோக்கு முகத்தின் ஜெôலிப்பு மற்றும் சங்கமயுகத்தின் அல்லது எதிர்கால அனைத்து மரியாதைகளின்
பிரகாசம் தென்படும். அதற்கு இது தான் கடைசி நேரம் என்ற நினைவு சதா இருக்க வேண்டும். எந்த
நேரத்திலும் இந்த சரீரம் அழிந்து போகலாம், ஆகையால் சதா அன்பான புத்தியுடையவராகி ஞான சூரியனின்
எதிரில் இருந்து உள்நோக்கு முகம் அல்லது சுயமரியாதையின் அனுபவத்தில் இருக்க வேண்டும்.
சுலோகன்: சதா பறக்கும் கலையில் பறப்பது தான்
குழப்பங்களின் மலையைக் கடந்து செல்வதாகும்.
(1/4)
13.
08.2016 காலைவகுப்பு ஓம்சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! கேள்விப்படுகின்ற விஷயங்களை நம்பவேண்டாம், யாராவது
தவறாகப் பேசினால் ஒரு காதில் கேட்டு இன்னொரு காதின் வழியே விட்டு விடுங்கள்.
கேள்வி: ஞானத்தின் குμயில் எந்தக் குழந்தைகள் இருப்பார்கள், அவர்களின் அடையாளம் என்ன?
பதில்:லி அவர்கள் பழைய கர்மத்தின் கணக்கை அதே குμயில் இணைத்துக் கொண்டே செல்வார்கள்.
ஞானத்தின் குμயில் துக்கத்தின், வேதனை, கவலைகள் என்ற உலகத்தையே மறந்து விடுவார்கள். புத்தியில்
இப்பொழுது மகிழ்ச்சியான உலகத்திற்குப் போய்க் கொண்டிருக்கின்றோம் என்ற எண்ணம் மட்டுமே இருக்கும்.
இராவணன் சாபத்தால் துக்கம் தந்தான். துக்கமான கவலையான உலகத்திலிருந்து நீக்கி மகிழ்ச்சியான உலகத்திற்கு
அழைத்துச் செல்ல இப்பொழுது பாபா வந்துள்ளார். .
பாட்டு:லி உன்னை அடைந்து நாங்கள்
ஓம் சாந்தி. இனிமையிலும்லிஇனிமையான குழந்தைகள் பாட்டைக் கேட்டனர், குழந்தைகளுக்கு அவசியம்
மெய்சிலிர்ப்பு ஏற்பட்டு இருக்க வேண்டும். ஏனென்றால் குμயைப் போன்ற சத்துணவு வேறு எதுவும் இல்லை
என்று பாடப்படுகின்றது. இப்பொழுது அனைத்து ஆன்மீகக் குழந்தைகளுக்கும் எல்லையற்ற தந்தை கிடைத்து
விட்டார். எல்லையற்ற தந்தை என்பவர் ஒருவர் தான் இருக்க முடியும் ! மேலும் குழந்தைகள் அறிவீர்கள்
எப்பொழுது மற்றவர்களும் குழந்தைகளாக ஆகின்றார்களோ, அவர்களுக்கும் கூட மெய் சிலிர்ப்பு ஏற்படும்.
நம்முடைய இராஜ்யம் இருந்தது, பின்பு இராஜ்யத்தை இழந்து விட்டோம் என்று நீங்கள் அறிவீர்கள்.
பாரதவாசிகளுக்கு இது சந்தோஷமான செய்திதானே ! ஆனால் எப்பொழுது இதை நன்றாகக் கேட்டு, புரிந்து
கொள்கின்றார்களோ அப்பொழுது முற்றிலும் இது சந்தோஷமான விஷயமாகும், கல்பலிகல்பமாக பாபா வருகின்றார்.
பாபாவின் ஜென்மம் கூட இங்கே தான் ஏற்பட்டதாகக் கூறுகின்றார்கள். இந்த நேரத்தின் நினைவுச் சின்னம்
தான் நாம் கொண்டாடுகின்ற இந்த பண்டிகைகளெல்லாம். பாபா வந்து மிகவும் எளிதான வழியினைக் கூறுகின்றார்.
இன்று மனிதர்களுக்கு அநேக விதமான கவலைகள் உள்ளன. இங்கே ஞானம் கேட்டதின் மகிழ்ச்சியில்,
அந்த கவலை, துக்கம் எல்லாம் மறைந்து விடுகின்றது. நோயாளிகளுக்கு எப்படி நோய் குணம் ஆகிவிட்டால்
மகிழ்ச்சி ஏற்படுகின்றது ! நோய் வந்தால் மற்ற விஷயங்கள் எல்லாம் மறந்து விடுகின்றது. தாய்வீடு, மாமியார்
வீடு, நண்பர்கள், உறவினர்கள் இவையெல்லாம் மகிழ்ச்சியில் வருகின்றது. நாம் அனைவரும் உலகத்திற்கு
எஜமானனாக இருந்தோம் பின்பு இராவணன் சாபம் கொடுத்து விட்டான் என்பது உங்கள் அனைவருக்கும்
தெரியும். இது கவலை துக்கம் கொண்ட உலகம். பிறகு நாளைக்கு குμயான உலகம் வருகின்றது. குμயான
உலகத்தை நினைவு செய்தால் கவலை, துக்கம் அனைத்தும் மறந்துவிடும். இது தமோபிரதானமான உலகம்,
பல்வேறுலிவிதமான கர்மபோகம் உள்ளது. பெண்களுக்குக் கூட எத்தனை கொடுமைகள் நடக்கின்றன. அநேக
விதமான தடைகள் வருகின்றன. இது தடைகள், கர்மத்தின் கணக்கு அனுபவிக்க வேண்டியுள்ளதாக உள்ளது.
இன்னும் சிறிது காலமே உள்ளது. இன்னும் சில நாட்கள் தான் உள்ளன என்று பாபா தைரியம் கொடுக்கின்றார்.
கல்பத்திற்கு முன்னால் கூட இவ்வாறு நடந்தது. கர்மத்தின் கணக்குலிவழக்குகளை முடிக்க வேண்டும். இவைகளை
மகிழ்ச்சியோடு முடித்துக் கொண்டே இருங்கள். பாபா மேலும் ஆஸ்தியை மட்டும் நினைத்துக்கொண்டே
இருங்கள். எந்த தவறான காரியமும் செய்யாதீர்கள். இல்லையென்றால் மேலும் தண்டனை ஏற்படும், பதவியும்
குறைந்து விடும். பாபா ஒருவரை மட்டும் தான் நினைவு செய்வது குழந்தைகளின் கடமையாகும். பாபாவை
நினைவு செய்தால் உங்கள் பாவகர்மம் வினாசம் ஆகும் என்று பாபா கூறுகின்றார். கணக்குலிவழக்கு முடிந்து
விடும். இன்னும் குறைந்த நேரம் தான் உள்ளது, கணக்குலிவழக்கு முடித்துக் கொண்டே போங்கள், ஏனென்றால்
நீங்கள் குருடர்களுக்கு வழிகாட்டியாக உள்ளீர்கள். நீங்களும் நினைவு செய்யுங்கள் மேலும் மற்றவர்களுக்கும்
கூட வழி சொல்லுங்கள். தடைகள் அநேகம் வரும். பாபாவை நினைவு செய்யுங்கள் என்று எவ்வளவு
முடிகின்றதோ இதை மற்றவர்களுக்குப் புரிய வைய்யுங்கள். மன்மனாபவ என்ற வார்த்தையே மிகவும் புகழ்பெற்றது.
மன்மனாபவ என்றால் ஹே ஆத்மாக்களே ! நிரந்தரமாக என்னை நினைவு செய்தால் உங்களுடைய பழைய
பாவகர்மங்கள் பஸ்பம் ஆகிவிடும். இதில் குழப்பம் அடைவதற்கான விஷயமேயில்லை. பாபாவை மட்டும்
நினைத்தால் போதும் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானம் ஆகி விடுவோம். நாம் 84 ஜென்ம சக்கரம்
சுற்றி வந்து விட்டோம் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள். சக்கரம் சுற்றிக் கொண்டே வந்து விட்டது,
மேலும் சுற்றும். இது பழைய உலகம், பழைய உடல் இதை மறந்து விடுங்கள். இது ஆத்மாக்களுக்கு
எல்லையற்ற சன்நியாசம் ஆகும். அவர்கள் எல்லைக்குற்பட்டதை சன்நியாசம் செய்கின்றார்கள். வீடு,வாசலை
விட்டுச் செல்கின்றார்கள். நாடகத்தில் அவர்களின் நடிப்பு அது. மீண்டும் இவ்வாறே நடக்கும். ஒவ்வொருலிவினாடி
எது கடந்ததோ அது மீண்டும் நாடகத்தில் திரும்பி நடக்கும். சாஸ்த்திரங்கள் எல்லாம் பக்திமார்க்க புத்தகங்கள்.
(2/4)
13.08.2016
பக்திக்குப் பின்னர் தான் ஞானம் ஆகும். இந்த ஏணிப்படி படத்தை வைத்து மற்றவர்களுக்கு தெளிவாக,
எளிதாக புரிய வைக்க முடியும். முக்கியமான படங்களை நீங்கள் உங்கள் வீட்டில் கூட வைத்துக் கொள்ளலாம்.
த்ரிமூர்த்தி படம் மிகவும் தெளிவானது. மேலே சிவனும் கூட இருக்கின்றார். பிரம்மா, விஷ்ணு, சங்கரர் கூட
இருக்கின்றார். சூட்சுமவதனவாசிகள் மற்றும் உயர்ந்ததிலும், உயர்ந்த பகவான் இருக்கின்றார். பாபா எங்கே
இருக்கின்றாரோ அங்கே தான் ஆத்மாக்களாகிய நம்முடைய இடம் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள்.
அதை நிர்வாண்தாமம் என்று சொன்னாலும் சரி, சாந்திதாமம் என்று சொன்னாலும் சரி, இரண்டும் ஒன்று தான்.
சாந்திதாமம் என்றால் சரிதான் அதாவது நிர்வாண்தாமம் என்றால், சப்தத்திற்கு அப்பாற்பட்ட இடம் என்பதாகும்,
என்றால் அது சாந்திதாமம் ஆகிவிட்டது அல்லவா? அது சாந்திதாமம் மற்றும் சுக தாமம் மேலும் சாந்தி
சம்பந்திதாமம் ஆகும். பிறகு துக்கம் மேலும் அசாந்திதாமம் ஆகிவிடுகின்றது. சுகதாமம் என்றால் எல்லையற்ற
பொக்கிஷங்கள் நிறைந்திருக்கும். இன்று என்னவாக உள்ளது, நாளை என்னவாக ஆகும். இன்று கலியுகத்தின்
முடிவில் உள்ளது. நாளைக்கு சத்தியயுகத்தின் ஆரம்பம் ஏற்படும். இரவு பகல் வித்தியாசம் உள்ளது அல்லவா?
பிரம்மா, பிரம்மாவின் வாய் மூலமாக வந்த பிராமணர்களின் பகல் மேலும் பிறகு இரவு வரும் கூறப்படுகின்றது.
பகலில் தேவதைகள் இருந்தார்கள், இரவில் சூத்திரர்கள் இருந்தார்கள், நடுவில் நீங்கள் பிராமணர்கள்
இருக்கின்றீர்கள். இந்த சங்கமயுகத்தைப் பற்றி யாருக்கும் தெரியாது. மனிதர்கள் முற்றிலும் ஆழ்ந்த இருளிலி
ல் உள்ளார்கள். அவர்களைஆழ்ந்த ஒளியில் கொண்டு வருவது உங்கள் கடமை ஆகும். இப்பொழுது உங்கள்
மகாபாரத யுத்தம் நடக்க இருக்கின்றது. பாடப்பட்டு இருக்கின்றதுலி வினாச காலத்தில் விபரீத புத்தியாக
இருப்பார்கள். வினாச காலத்தில் அன்பு புத்தி உள்வர்கள் வெற்றி அடைகின்றார்கள் என்று கூறப்படுகின்றது.
பாபா மீண்டும் நமக்கு இராஜ்யத்தைக் கொடுக்க வந்துள்ளார் என்று நீங்கள் அறிந்துள்ளீர்கள். அந்த இராஜ்யத்தை
யாராலும் பிடுங்க முடியாது. இராவணனின் பிரவேசம் துவாபரயுகத்தில் ஏற்படுகின்றது. இராவணன் தான்
நம்முடைய இராஜ்யத்தைப் பிடுங்கி விட்டார். அவர் தான் நம்முடைய எதிரி என்பது புரிந்தது, ஏனென்றால்,
எதிரியின் சிலையைத் தான் எரிப்பார்கள். இவர் தான் மிகப் பழைய எதிரி! இராவண இராஜ்யம் என்று
கூறுகின்றார்கள், ஆனால் யார் புத்தியிலும் இதைப் புரிந்து கொள்ளவில்லை. இதை ஆழ்ந்த இருள் என்று
சொல்லலாம் அல்லவா ! எல்லையற்ற தந்தைதான் ஞானக்கடலாக இருக்கின்றார். அவரைத் தான் ஞானத்தின்
வள்ளல், தெய்வீகக் கண்ணை வழங்கும் வள்ளல் என்று கூறப்படுகின்றது. இப்பொழுது உங்களுக்கு மூன்றாவது
கண் கிடைத்துள்ளது. முன்னால் நீங்கள் ஒன்றுமே அறியவில்லை. அனால் இப்பொழுது நீங்கள் அனைத்தையுமே
அறிந்து கொண்டீர்கள். பாபா ஞானக்கடல் என்றால், ஞானத்தைத் தானே புரிய வைப்பார். ஞானம் கூறாமல்
வெற்றி எப்படி கிடைக்கும்? பாபா ஞானம் கூறுவதை நீங்கள் பார்க்கின்றீர்கள், இந்த ஞானத்தால் தான் அரை
கல்பம் சத்கதி கிடைக்கின்றது. பக்திமார்க்கம் தான் அரைகல்பம் நடக்கின்றது. ஞானத்தால் சத்கதி சங்கமயுகத்தில்
தான் கிடைக்கின்றது. எந்த விஷயத்தையும் குழந்தைகள் நீங்கள் மறைக்க முடியாது. பாபா கூறுகின்றார்லி எந்த
தவறு செய்தாலும் பாபாவுக்குக் கூறிவிடுங்கள் என்கிறார். சிலர் தீய கர்மங்களைச் செய்கின்றார்கள் என்பதை
பாபா அறிவார். இராவண இராஜ்யம் தானே! மாயா அறை கொடுத்து விடுகின்றது, ஆனால் அதிகமாக
மறைக்கின்றார்கள். எதாவது தவறு ஏற்பட்டால் உடனே கூறிவிடுங்கள், அப்பொழுது தான் உங்களுக்கு
எதிர்காலத்திற்காகன வழி கிடைக்கும். இல்லை என்றால் அது வளர்ந்து கொண்டே போகும். காமம் மகா எதிரி.
பாபாவிற்குக் கடிதம் எழுதுகின்றார்கள்லி பாபா மாயா மிகவும் எதிர்ப்பு செய்கின்றது. மாயாவிடம் இருந்து
தப்பிக்குமளவு எவரது யோகம் நிரந்தரமாக உள்ளது ! தேக அபிமானம் அதிகமாக வருகின்றது. மாயாவிடம்
அதிக பேர் அறை வாங்குகின்றார்கள். பாபாவிற்கு அனைத்து இடத்தில் இருந்தும் செய்திகள் வருகின்றன
அல்லவா! செய்தித்தாளில் கூட தவறாக எத்தனை எழுதுகின்றார்கள். தற்பொழுது மனிதர்கள் எவ்வளவு
வேண்டுமானாலும் விஷயங்களை உருவாக்கலாம். ஏனென்றால், தமோபிரதானம் அல்லவா ! வியாசர்
ரஜோகுணத்தில் இருக்கும் போதே என்னலிஎன்ன விஷயங்களை உட்கார்ந்து எழுதி விட்டார். அதனால் பாபா
புரிய வைக்கின்றார் கேட்கப்பட்ட விஷயங்கள் மீது நம்பிக்கை வைத்து கெட்டுப் போகாதீர்கள். இவர் இப்படி
செய்தார், அவர் அப்படி செய்தார் என்றால், புத்தி அங்குதான் போகுமல்லவா? இது தமோபிரதான உலகம்
என்று புரிந்து கொள்வதே இல்லை. மாயை உங்களை விழ வைப்பதற்கு முயற்சி செய்யும். யாராவது பொய்யான
விஷயங்களைக் கூறினால், ஒரு காதில் வாங்கி இன்னொரு காதில் விட்டு விடுங்கள். இந்த செய்தியினை
மற்றவர்களுக்கும் கூறுங்கள். நான் செய்தியைக் கொண்டு வருகின்றேன் என்று பாபா கூறுகின்றார். இப்பொழுது
ஹேலி ஆத்மாக்களே ! ஸ்ரீமத்படி நடங்கள். என்னுடைய செய்தியைக் கேளுங்கள். நிரந்தரமாக என்னை
மட்டும் நினையுங்கள். யார் நினைவு செய்கின்றார்களோ, அவர்கள் தான் தங்களுக்கு நன்மை செய்து
கொள்கின்றார்கள். நினைவு ஆத்மா செய்கின்றது, தவறையும் ஆத்மா தான் செய்கின்றது. இப்பொழுது
பாபாவிடம் இருந்து ஸ்ரீமத் கிடைக்கின்றது, இதில் ஆசீர்வாதம், கருணை இவைகளை ஒன்றும் கேட்க
வேண்டியதில்லை. பாபாவை மட்டும் நினைக்க வேண்டும். வேறு எந்த விஷயத்தையும் கேட்க வேண்டிய
அவசிமில்லை. சிருஷ்டிச் சக்கரம் எப்படி சுழல்கின்றதுலிஎன்பதை அறிந்து கொண்டீர்கள். இதில் குழப்பமான
(3/4)
13.08.2016
விஷயம் எதுவுமில்லை. ஆழ்ந்த இருளிலில் தான் பாபா வருகின்றார், ஆகையால் தான் சிவராத்திரி
கொண்டாடுகின்றார்கள். கிருஷ்ணருக்குக் கூட பிறந்த நேரத்தை இரவில் தான் கொண்டாடுகின்றார்கள்.
பூரிலிபால்பாயாசம் இவைகளை கோவில்களில் இரவில் தான் செய்கின்றார்கள். இப்பொழுது சிவனுக்காக நாம்
என்ன செய்ய முடியும்? அவரோ நிராகாரமாக இருக்கின்றார் ! யாருக்கும் தெரியவும் தெரியாது, பாபா எந்த
நேரத்தில் வருகின்றார் மற்றும் எப்படி செல்கின்றார். எப்பொழுதும் நிரந்தரமாக இருப்பதில்லை. வருவார் பிறகு
போய்விடுவார். இப்பொழுது நாம் அனைவரும் சிவபாபாவின் பேரன்,பேத்திகள் என்பதையும் தெரிந்து
கொண்டோம். ஆஸ்தி அவரிடம் தான் கிடைக்கின்றது. பிரம்மாவுக்கும் கூட ஆஸ்தி அவரிடமிருந்து தான்
கிடைக்கின்றது. இவரும் கூட மனிதர் தானே ! சத்கதியில் முதல் நெம்பர் ஸ்ரீகிருஷ்ணரே ஆவார். இவர்
அனைவருக்கும் மிகவும் அன்பானவர், ஏனென்றால் சதோபிரதான குழந்தை அல்லவா? கொஞ்சம் பெரியவர்
ஆனதும் சதோ என்று கூறப்படுகின்றது, பின்பு ரஜோ, தமோ நிலை அடைகின்றார். ஸ்ரீகிருஷ்ணர்லி இராதை
தான் பெரியவர் ஆனதும் இலட்சுமிலிநாராயணன் ஆகின்றார்கள், பாபா (முன்பு) யாருக்கெல்லாம் ஞானம்
கொடுத்தாரோ, அவர்களுக்குத் தான் கொடுக்கின்றார். பாரதத்தில் தான் தேவிலிதேவதைகள் வாழ்ந்தார்கள்
அதனால் தான் பாரதத்தில் கோவில்கள் அதிகமாக உள்ளன. கிருஸ்தவ சர்ச்சில் ஏசுகிறிஸ்துவை மட்டும் தான்
பார்க்கின்றார்கள். தேவதைகளுக்கு எத்தனை ஆயிரம் கோவில்கள் உள்ளன. பாபா வந்துள்ளார் மனிதர்களை
தேவதை ஆக்குகின்றார் அதாவது பாரதத்தை சொர்க்கமாக ஆக்குகின்றார். நாமும் பாபாவுடன் வந்துள்ளோம்.
பக்திமார்க்கத்தில் தேவதைகளின் கோவிலில் மூர்த்திகளுக்கு என்று எவ்வளவு செலவு செய்கின்றார்கள். உற்பத்தி
செய்து, அதை பாலனை செய்து, பின்பு அதை அழிக்கவும் செய்கின்றார்கள். 9 நாட்களுக்குள் அதை தண்ணீரில்
மூழ்கச் செய்துவிடுகின்றார்கள். அதில் மிகவும் அன்பு வைக்கின்றார்கள். நவராத்திரி நாட்களில் கல்கத்தாவில்
மிகவும் கோலாகலமாக கொண்டாடுகின்றார்கள். இந்த விஷயங்கள் அனைத்தும் இப்பொழுது அற்புதமாகத்
தோன்றுகின்றது. நாம் கூட முன்னால் இவ்வாறு செய்து இருக்கின்றோம். கோடிக் கணக்கான பணம் செலவு
செய்து இருக்கின்றோம். எத்தனை மூட நம்பிக்கைகள் உள்ளன. இராமாயணத்தை எவ்வளவு நேசிக்கின்றார்கள்.
விஷயங்களைக் கேட்டு கண்ணில் கண்ணீர் விடுகின்றார்கள். இவை அனைத்தும் பக்திமார்க்கத்தின் விஷயங்கள்,
இதனால் எந்த பலனும் இல்லை. பாபா இப்பொழுது நம்மை எவ்வளவு புத்திசாலி ஆக ஆக்குகின்றார்.
அதனால் கேட்டவை அனைத்தையும் இங்கேயே மறந்து விடாதீர்கள். அனைத்து விஷயங்களை நினையுங்கள்.
முழுமையாகப் புத்துணர்ச்சியுடன் செல்லுங்கள். தன்னை ஆத்மா என்று நினைத்து தேகம், தேக சம்மந்தப்பட்ட
அனைத்தையும் எதையெல்லாம் பார்க்கின்றீர்களோ அனைத்னையும் மறந்து விடுங்கள். இது அனைத்தும்
சுடுகாடாக உள்ளது. டெல்லியில் பிர்லா கோவிலில் பாரதம் ஃபரிஸ்தானமாக (சொர்க்கமாக) இருந்தது, அதை
தர்மராஜர் ஸ்தாபனை செய்தார்லிஎன்று எழுதப்பட்டுள்ளது. இப்பொழுது இந்த உலகம் சுடுகாடாக ஆகப் போகின்றது
என்று நீங்கள் குழந்தைகள் புரிந்து கொண்டீர்கள்.
நீங்கள் அனைவரும் காமம் என்ற சிதையில் அமர்ந்து எரிந்து போய்விட்டீர்கள் என்று பாபா கூறுகின்றார்.
கோபத்தை சிதை என்று சொல்வதில்லை. காமத்தைதான் சிதை என்று சொல்லப்படுகின்றது. அதில் கூட
அதிகமான போதை, குறைந்த போதை என்று உள்ளது. குழந்தைகளுக்கு பாபா வந்து புரிய வைக்கின்றார்.
வீட்டில் யாராவது சொல்படி கேட்காத குழந்தைகள் இருக்கின்றார்கள் என்றால், சொல்வார்கள் இல்லையாலி
இவன் என்ன தந்தையின் கவுரவத்தை கெடுக்க வந்துள்ளானே என்பார்கள். பாபாவின் கௌவரம் போய்
விடுகின்றது அல்லவா? எல்லையற்ற தந்தைக் கூட கூறுகின்றார்லி நீங்கள் கருப்பு முகம் ஆகினால் பிராமண
குலம் தேவதை ஆகக் கூடியவர்களின் பெயரை களங்கப் படுத்துகின்றீர்கள். நாம் துôய்மையின் சக்தியால் தான்
பாரதத்தை மீண்டும் சிரேஷ்டாச்சாரி தேவதையை உருவாக்குகின்றோம் என்று நீங்கள் அறிந்து கொண்டீர்கள்.
உங்களுக்கு இது பொதுவான விஷயம் ஆகும். மகாபாரத யுத்தம் கூட முன்னால் நின்றிருப்பதை பார்க்கின்றீர்கள்,
இதற்குப் பிறகு தான் சொர்க்கத்தின் கதவு திறக்கும். சாஸ்த்திரத்தில் கூட மகாபாரத யுத்தம் காட்டப்பட்டுள்ளது.
அதன் பிறகு என்ன ஆகும் என்று காட்டவில்லை. பிரளயம் ஏற்பட்டது என்று கூறுகின்றார்கள். இப்பொழுது
கிருஷ்ணரை ஒரு பக்கம் தாயின் கர்ப்பத்தில் பிறந்ததாகக் காட்டுகின்றார்கள், இன்னொரு பக்கம் ஆலிலையில்
கட்டை விரலை சூப்பிக் கொண்டே எழுந்தருளியதாகக் காட்டுகின்றார்கள், ஒன்றுமே புரிந்து கொள்வதில்லை.
அவர் அங்கே கர்ப்ப மாளிகையில் மிகவும் ஓய்வாக இருக்கின்றார். மற்றபடி அவர் ஆலிலையில் வர முடியுமா,
இது இயலாத காரியம் ஆகும். இவை அனைத்தும் நாடகத்தில் உருவாக்கப்பட்டுள்ளதை, நீங்கள் அறிவீர்கள்.
கல்பலிகல்பமாக இப்படித் தான் நடக்கின்றது. இப்பொழுது குழந்தைகள் நீங்கள் தனக்கு நன்மை செய்ய
வேண்டும் மேலும் மற்றவர்களுக்கும் கூட நன்மை செய்ய வேண்டும். இது தான் முக்கியமான விஷயம்
ஆகும். பாபா தான் சொர்க்கத்தின் படைப்பாளர் ஆகும். அவரைத் தான் சொர்க்கத்தைப் படைக்கும் தந்தை
கடவுள் என்று கூறுகின்றார்கள். அதனால் நாம் குழந்தைகள் சொர்க்கத்தின் எஜமானன் ஆக வேண்டுமல்லவா?
சிவ ஜெயந்தி கூட பாரதத்தில் தானே கொண்டாடுகின்றார்கள் என்றால், அவசியம் பாரதத்திற்கு ஏதோ
13.08.2016
(4/4)
கொடுத்திருக்கின்றார் என்று அர்த்தமாகின்றது. இப்பொழுது உங்களுக்கு சொர்க்கத்தின் இராஜ்யத்தை
வழங்குகின்றார் அல்லவா ! பாபா தான் சத்கதி தாதாவாக (வள்ளல்) இருக்கின்றார். ஞானக்கடல், பாபா தான்
வந்து கொடுக்கின்றார். இப்பொழுது பாபா உங்களுக்கு ஞானம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். ஐயாயிர
வருடத்திற்குப் பிறகு இங்கு தான் வருவார். யாரெல்லாம் இந்த பிராமணகுலத்தில் இருக்கின்றார்களோ அவர்கள்
தான் அங்கே வருவார்கள் என்பது குழந்தைகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நல்லதுலி ஓம்சாந்தி.
இனிமையிலும்லிஇனிமையான செல்லமான குழந்தைகளுக்கு, தாய்லிதந்தை பாப்தாதாவின் அன்புலிநினைவுகள்
மேலும் காலை வணக்கங்கள். ஆன்மீகத் தந்தையின் ஆன்மீக குழந்தைகளுக்கு நமஸ்தே !
தாரணைக்காக முக்கிய சாரம்:லி
1) ஸ்ரீமத்படி தனக்கும், பிறருக்கும் நன்மை செய்ய வேண்டும் . மற்றவர்கள் தவறான விஷயங்கள்
கூறினால் கேட்டும்லிகேட்காமல் இருக்க வேண்டும். அதில் தன்னை கெடுத்துக் கொள்ளக்
கூடாது.
2) தேவதை ஆகக் கூடியவர்கள் பிராமண குலத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு போதும் அவப்பெயரை
உண்டாக்கக் கூடாதுலி இதில் கவனம் இருக்க வேண்டும். ஒருபோதும் தவறான காரியம்
செய்யக் கூடாது. பழைய கணக்குலிவழக்கை முடிக்க வேண்டும்.
வரதானம்:லி விடுபட்ட நிலையின் பயிற்சியின் மூலமாக பரிஸ்தா ரூபத்தை சாட்சாத்காரம்
செய்விக்கக் கூடிய நிரந்தர சகஜயோகி பவ !
எந்த ஒரு ஆடையும் அணிந்து கொள்வதும் அல்லது அணிந்து கொள்ளாமல் இருப்பதும்
நம்விருப்பம் அது போல இந்த உடல் என்ற ஆடையை அணிந்து கொள்ளும் அனுபவம் இருக்க வேண்டும்.
இந்த உடல் என்ற ஆடையை தேவையான போது அணிந்து கொண்டு, காரியம் செய்து முடித்தவுடன்
ஆடையில் இருந்து விடுபட்டு விட வேண்டும். உடல் மற்றும் ஆத்மா இரண்டும் விடுபட்ட நிலையில்
நடக்கும் போதும்லிசுற்றும் போதும் அனுபவம் செய்ய வேண்டும் அப்பொழுது தான் நிரந்தர சகஜயோகி என்று
கூறுவார்கள் அவ்வாறு விடுபட்ட நிலையில் இருக்கக் கூடிய குழந்தைகளின் மூலமாக அநேக ஆத்மாக்களுக்கு
பரிஸ்தா ரூபம் மற்றும் எதிர்கால இராஜ்ய பதவியின் சாட்சாத்காரம் . ஆகும். கடைசியில் இந்த சேவையில்
தான் பிரபாவம் ஏற்படும்.
சுலோகன்:லி சங்கமயுகத்தில் ஒரு வினாடியை வீணாக்குவது என்றால்,
ஒரு வருடம் வீணாக்குவதற்குச் சமமாகும்.
(1/4)
14.
08.2016 காலை முரளி ஓம் சாந்தி ''அவ்யக்த பாப்தாதா''
ரிவைஸ் 03.11.1981 மதுபன்
'' யுத்தம் செய்பவராக இன்றி இதயசிம்மாசனதாரி ஆகுங்கள் ''
இன்று தூரதேசத்தில் இருக்கும் பரதேசி (இன்னொரு தேசத்தைச் சேர்ந்த) தந்தை தன்னுடைய
குழந்தைகளை சந்திப்பதற்காக வந்திருக்கிறார். குழந்தைகளுக்கும் சுயதேசத்தின் நினைவு ஊட்டுவதற்காக
மற்றும் சக்திசாலியாகி உடன் அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கிறார். சுயதேசம் நினைவில் வந்து
விட்டதில்லையா? இது மாற்றான் தேசம் மற்றும் மாற்றானின் இராஜ்யம். இதில் அனைத்தும் பழையது தான்
தென்படுகிறது. நபர்களைப் பாருங்கள் மற்றும் பொருட்களைப் பாருங்கள் அனைத்தும் என்னவாக தென்படுகின்றன?
அனைத்தும் இத்துப்போய்விட்டன. நாலாபுறங்களிலும் இருள் சூழ்ந்திருக்கிறது. அந்த மாதிரி தேசத்தில் நீங்கள்
அனைவரும் பந்தனத்தில் கட்டப்பட்ட, பந்தனம் நிறைந்த ஆத்மாக்களாக ஆகிவிட்டீர்கள், அந்த நேரம்
தந்தை வந்து சுயரூபம் மற்றும் சுயதேசத்தின் நினைவூட்டி, பந்தனத்திலிருந்து விடுபட்டவராக ஆக்கி
சுயதேசத்திற்கு அழைத்துச் செல்கிறார். கூடவே சுயராஜ்ஜியத்தின் அதிகாரியாக ஆக்குகிறார். அப்படி அனைத்து
குழந்தைகளும் தன்னுடைய சுயதேசத்திற்குச் செல்வதற்கு தயாராக இருக்கிறீர்களா? அல்லது எப்படி நீங்கள்
ஒரு நாடகத்தை காண்பிக்கிறீர்கள் லி சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்று விரும்பிய போதிலும் வெகு
சிலர் தான் தயார் ஆகிறார்கள். அந்த மாதிரியே பல விஷயங்களை உருவாக்கி 'போகலாம் லி போகலாம்' என்று
கூறுபவர்களே இல்லையே? கணக்கு வழக்கை முடித்து விட்டீர்களா அல்லது இப்பொழுது இன்னும் கொஞ்சம்
மிச்சம் இருக்கிறதா? தன்னுடைய கணக்கு வழக்கை முடித்ததின் நிறைவு விழாவை கொண்டாடி விட்டீர்களா
அல்லது இது வரையிலும் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டே இருக்கிறீர்களா? இறுதியில் இந்த
நிறைவு விழாவை கொண்டாடுவோம் என்று அப்படி நினைக்கவில்லையே? நிறைவு விழாவை இப்பொழுதிலிருந்தே
கொண்டாடினீர்கள் என்றால் தான் இறுதியில் சம்பூர்ண நிலையின் விழாவைக் கொண்டாடுவீர்கள். இந்த
பழைய கணக்கு வழக்கை முடிக்க வேண்டும். அதை இப்பொழுது செய்வதினால் வெகுகாலத்திற்கு பந்தனம்
அற்றவராக, வெகுகாலத்தின் ஜீவன்முக்தியின் பதவியை அடைபவராக ஆக முடியும். இல்லை என்றால் இறுதி
வரையிலும் யுத்தம் செய்யக்கூடிய யுத்த வீரனாகவே இருந்து விடுவீர்கள். யார் இறுதி வரை யுத்த வீரனின்
வாழ்க்கையில் இருக்கிறார்களோ அவருடைய பிராப்தி என்னவாக இருக்கும்? யுத்த வாழ்க்கையோ குழந்தைப்
பருவத்தின் வாழ்க்கை. இப்பொழுதோ சுயராஜ்ஜிய அதிகாரி ஆகிவிட்டீர்கள். நினைவின் திலகமிட்டு தந்தையின்
இதயசிம்மாசனதாரி ஆகிவிட்டீர்கள். இதயசிம்மாசனத்தில் இருப்பவர் யுத்தம் செய்பவராக இருப்பாரா என்ன?
யுத்தத்தின் பலனாக சிம்மாசனம் மற்றும் கிரீடம் கிடைத்து விட்டது. இந்த தற்சமயத்து பலன் மற்றும்
பிரத்யக்ஷ பலன் இன்னும் பிராப்தி ஆகவில்லையா? சங்கமயுகத்தின் பலனை அடைந்து விட்டீர்களா அல்லது
இனி தான் அடைய வேண்டுமா? என்ன பாடல் பாடுகிறீர்கள்? என்ன அடைய வேண்டுமோ அதை அடைந்து
விட்டோம் என்றா அல்லது அடைய வேண்டும் என்றா பாடுகிறீர்கள். எப்பொழுது நிகழ் காலத்துடன் எதிர்காலத்தின்
சம்மந்தம் இருக்கிறது என்றால், எதிர்கால பலன் 2500 வருடங்களென்ன, தற்சமயத்து பிராப்தி இறுதி நேரத்தின்
5, 6 மாதங்கள் இருக்குமா அல்லது 5 நாட்கள் இருக்குமா அல்லது 5 மணி நேரம் இருக்குமா அல்லது
சங்கமயுகத்தின் நீண்ட காலம் இருக்குமா? ஒருவேளை சங்கமயுகத்தின் பிராப்தி நீண்ட காலம் இருக்கவில்லை
என்றால், எதிர்காலத்தின் பிராப்தி நீண்ட காலம் எப்படி இருக்கும். அங்கே உள்ள 2500 வருடங்கள் இங்கே
உள்ள 25 வருடங்களிலும் இருக்காது. நேரடியாக தந்தையின் குழந்தையாகி சதா காலத்திற்கு ஆஸ்தி
அடையவில்லை என்றால் என்ன தான் அடைந்திருக்கிறீர்கள்? அனைத்து பொக்கிஷங்களின் அதிபதி அவருடைய
குழந்தையாகி கஜானாக்களினால் நிரம்பியவர் ஆகவில்லை என்றால் எஜமானனின் குழந்தையாகி என்ன
செய்தீர்கள்?
'வெற்றி எனது பிறப்புரிமை ஆகும்' என்று கூறிக்கொண்டே எப்பொழுதும் வெற்றியை அனுபவம்
செய்யவில்லை என்றால் பிறப்புரிமை உடையவராகி என்ன செய்தீர்கள்? பாக்கியத்தை உருவாக்கும் இரண்டு
தந்தைகளின் குழந்தையாகி இருந்தும் நிரந்தரமாக பல கோடி மடங்கு பாக்கியசாலி ஆகவில்லை என்றால்,
இரண்டு தந்தைகளின் குழந்தைகயாகி என்ன செய்தீர்கள்? உயர்ந்த கர்மங்களின் மற்றும் உயர்ந்த சரித்திரத்தை
உருவாக்குவதற்காக சகஜவிதியை வரமளிப்பவராகி தந்தை கொடுத்திருக்கிறார் இருந்தும் சித்தி (வெற்றி) சொரூபம்
ஆகவில்லை என்றால் என்ன செய்தீர்கள்?
(2/4)
14.08.2016
யுத்தம் செய்வது, கடினமாக உழைப்பது, மெது மெதுவாக நிதானமாக செல்வது லி இது தான் விருப்பமா
என்ன? யுத்த மைதானம் பிடித்திருக்கிறதா என்ன? இதய சிம்மாசனம் பிடித்திருக்கவில்லையா என்ன?
ஒருவேளை சிம்மாசனம் தான் விருப்பம் என்றால் சிம்மாசனதாரியிடம் மாயா வர முடியாது. சிம்மாசனத்திலிருந்து
இறங்கி யுத்த மைதானத்தில் சென்று விடுகிறீர்கள். அப்பொழுது தான் கடின உழைப்பு செய்ய வேண்டியதாக
இருக்கிறது. எப்படி அனேக குழந்தைகள் இப்படியும் இருக்கிறார்கள், அவர்களால் சண்டை சச்சரவு செய்யாமல்
இருக்கவே முடியாது. மேலும் யாரும் கிடைக்கவில்லை என்றால் கூட தன்னோடே ஏதாவது சச்சரவு செய்து
கொண்டே இருப்பார். யுத்தம் செய்யும் சம்ஸ்காரம் இராஜ சிம்மாசனத்திலிருந்து விடுவித்து யுத்த
மைதானத்திலிருந்து அழைத்துச் செல்கிறது. இப்பொழுது யுத்தம் செய்யும் சம்ஸ்காரத்தை முழுமையாக அழித்து
விடுங்கள். இராஜ்யம் செய்யும் சம்ஸ்காரத்தைக் கடைபிடியுங்கள், பிராப்தியின் பலனை அனுபவிப்பவராக ஆகுங்கள்.
அப்பொழுது தான் எதிர்காலத்தில் வெகு காலத்திற்கான பிராப்தியின் பலனை அனுபவிப்பவராகவும் ஆவீர்கள்.
இறுதி வரையிலும் யுத்தம் செய்யும் வாழ்க்கையே இருக்கிறது என்றால் என்னவாக ஆவீர்கள்? சந்திர
வம்சியாக ஆக வேண்டியது இருக்கும்.
சூரிய வம்சியின் அடையாளம் லி எப்பொழுதும் குμயோடு நடனமாடிக் கொண்டிருப்பவர். எப்பொழுதும்
அதீந்திரிய சுகத்தின் ஊஞ்சலில் ஊஞ்சலாடுபவர். சந்திர வம்சத்து இராமரை ஒருபொழுதும் ஊஞ்சலில் வைத்து
ஆட்ட மாட்டார்கள். நடனமாடியதாக காண்பிக்கவில்லை. யுத்தம் செய்வதின் வில் அம்பைத் தான்
காண்பித்திருக்கிறார்கள். பிற்காலத்து இராஜ்ய பாக்கியம் கிடைக்கும். பாதி நேரத்து இராஜ்ஜியம் வெகு காலமாகவோ
ஆனது இல்லை இல்லையா? எனவே எப்பொழுதும் ஊஞ்சலில் ஆடிக்கொண்டே இருங்கள். அனைவருடன்
சம்ஸ்காரத்தை இணைக்கும் நடனத்தை ஆடிக் கொண்டே இருங்கள், குμயில் நடனமாடிக் கொண்டே இருங்கள்.
இதைத் தான் சங்கமயுகத்தின் பிராப்தியின் பலன் சொரூபம். முயற்சி செய்பவர் என்ற இந்த வார்த்தையும்
எதுவரை இருக்கும்?
இந்த நேரம் முயற்சி செய்பவர் அடுத்த நேரம் பிராப்தியின் பலன் பெறுபவர். சங்கமயுக்ததின் முயற்சி
செய்பவர், சத்யுகத்தின் பிராப்தியின் பலனை அனுபவிப்பவர் என்றல்ல. சங்கமயுகத்தின் பிராப்தியின் பலனை
அனுபவிப்பவர் ஆக வேண்டும். இந்த நேரம் விதையை விதையுங்கள். அடுத்த நேரம் பழத்தை அருந்துங்கள்.
எப்பொழுது அறிவியலைச் சேர்ந்தவர்களும் ஒவ்வொரு காரியத்தின் பிராப்தியின் (பலன்) வேகத்தை
அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அமைதியின் சக்தி உள்ளவர்கள் தன்னுடைய வேகத்தை
அவர்களையும் விட அதிகமாக தீவிர படுத்துவார்கள் தான் இல்லையா? அல்லது ஒரு ஜென்மத்தில் செய்ய
வேண்டும் மற்றும் அடுத்த ஜென்மத்தில் அடைய வேண்டும் என்று அப்படியா? அவர்கள் ஒலியின் வேகத்தை
விட அதி வேகமாக செல்ல விரும்புகிறார்கள். ஒவ்வொரு காரியத்தையும் ஒரு விநாடியின் வேகத்தை விட
அதிகப்படுத்த விரும்புகிறார்கள். இந்த அளவு முழு உலகத்தின் விநாஷத்தை அவ்வளவு குறைந்த நேரத்தில்
செய்வதற்காகத் தயாராகி விட்டீர்களா? அப்படி ஸ்தாபனையின் காரியத்தில் பொறுப்பாளர் ஆகியிருக்கும்
ஆத்மாக்கள் ஒரு நொடியில் செய்ய வேண்டும், ஒரு நொடியில் அடைய வேண்டும், என்று அந்த மாதிரி
அதிவேகத்தின் அனுபவியாக இருக்க மாட்டீர்களா? இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? என்று புரிந்ததா?
பிரத்யக்ஷ பலன் என்ற பழத்தை அருந்துங்கள். பிரத்யக்ஷ பலன் என்ற பழம் பிடிக்கவில்லையா? கடினமாக
உழைக்கக்கூடிய பழம் பிடித்திருக்கிறதா? கடின உழைப்பின் காய்ந்த பழத்தை அருந்தி அந்த மாதிரி
பலஹீனமானவர் ஆகிவிட்டீர்கள். கண்ணில்லாத, புத்தியில்லாத, சிரேஷ்ட காரியம் செய்யாதவராக ஆகிவிட்டீர்கள்.
இப்பொழுதோ புதிய பிரத்யக்ஷ பலன் என்ற பழத்தை அருந்துங்கள். கடின உழைப்பை (பாபா மீதான)
அன்பாக மாற்றி விடுங்கள். நல்லது.
அந்த மாதிரி எப்பொழுதும் இராஜ வம்சத்தின் சம்ஸ்காரம் உள்ளவர்களுக்கு, எப்பொழுதும் அனைத்து
பொக்கிஷங்களின் அதிகாரி அதாவது குழந்தையாக இருப்பவரிலிருந்து எஜமானன், எப்பொழுதும் சங்கமயுகத்தின்
பிராப்தியின் பலனை அனுபவிக்கும் சம்ஸ்காரம் உள்ளவர்களுக்கு, பிரத்யக்ஷ பலன் என்ற பழத்தை அருந்துபவர்
களுக்கு, அந்த மாதிரி எப்பொழுதும் பிராப்தி சொரூபமான, எப்பொழுதும் அனைத்து பந்தனத்திலிருந்தும்
விடுபட்ட, சங்கமயுகத்து ஜீவன்முக்த், அந்த மாதிரி ஆசனம், கிரீடம் அணிந்த குழந்தைகளுக்கு பாப்தாதாவின்
அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.
பார்ட்டிகளுடன் தனிப்பட்ட சந்திப்பு லி
1) எப்பொழுதும் ஆன்மீக போதையில் நிலைத்திருக்கிறீர்களா? ஆன்மீக போதை என்றால் ஆத்ம
அபிமானி ஆவது. எப்பொழுதும் காரியங்கள் செய்து கொண்டே ஆத்மாவைப் பார்ப்பது, உணர்வது, இது தான்
ஆன்மீக போதை. ஆன்மீக போதையில் எப்பொழுதும் அனைத்து பிராப்தியின் அனுபவம் சுலபமாகவே
இருக்கும். எப்படி ஸ்தூல போதை உள்ளவர்களும் தன்னை பிராப்தி நிறைந்தவர் என்று நினைக்கிறார்கள்,
(3/4)
14.08.2016
அதே போன்று இந்த ஆன்மீக போதையில் இருப்பவர் அனைத்து பிராப்திகளின் சொரூபம் ஆகிவிடுகிறார்.
இந்த போதையில் இருப்பதினால் அனைத்து விதமான துக்கங்களும் விலகிவிடுகின்றன. துக்கம் மற்றும்
அமைதியின்மைக்கு விடை கொடுக்கப்பட்டுவிடுகிறது. எப்பொழுது சதா காலத்திற்காக சுகமளிக்கும் வள்ளலின்,
சாந்தி அளிக்கும் வள்ளலின் குழந்தைகள் ஆகிவிட்டீர்கள் என்றால் துக்கங்களும், அசாந்திக்கு விடை
கொடுத்துவிட்டீர்கள் தான் இல்லையா. அசாந்தியின் பெயர், அடையாளமே இல்லை. அமைதிக் கடலின்
குழந்தைகள் அமைதியற்றவராக எப்படி ஆக முடியும். ஆன்மீக போதை என்றால் துக்கம் மற்றும் அமைதியின்மை
முடிவடைந்தது. அதற்கான விடை கொடுக்கும் விழாவைக் கொண்டாடி விட்டீர்களா? ஏனென்றால்,
தூய்மையின்மை மூலம் துக்கம் மற்றும் அமைதியின்மை உருவாகிறது. எங்கு தூய்மையின்மை இல்லையோ
அங்கு துக்கம் அமைதியின்மை எங்கிருந்து வந்தது. பதீத பாவனன் தந்தையின் குழந்தைகள் மாஸ்டர் பதீத
பாவனன் ஆகிவிட்டீர்கள். யார் மற்றவர்களை தூய்மையில்லாதவர்களில் இருந்து தூய்மையாக ஆக்குபவராக
இருப்பாரோ அவரே தூய்மையானவராகத் தான் இருப்பார் இல்லையா? யார் தூய்மையான பவித்ர ஆத்மாக்களாக
இருப்பாரோ அவர்களிடம் அமைதி மற்றும் சுகம் இயல்பாகவே இருக்கும். அப்படி நீங்கள் தூய்மையான
ஆத்மாக்கள், சிரேஷ்ட ஆத்மாக்கள், விசேஷ ஆத்மாக்கள் ஆவீர்கள். உலகத்தில் நீங்கள் மகான் ஆத்மாக்கள்,
ஏனென்றால் தந்தையின் குழந்தையாக ஆகிவிட்டீர்கள். அனைத்தையும் விட மிகப்பெரிய மகான் தன்மை
தூய்மை ஆவது ! எனவே இந்த மகான் நிலையின் எதிரில் அனைவரும் தலைவணங்குவார்கள். அந்த ஜட
விக்கிரகங்கள் யாருடையவை? இப்பொழுது கோயிலுக்குச் சென்றீர்கள் என்றால், என்ன நினைப்பீர்கள்? யாருக்கு
பூஜை நடந்து கொண்டிருக்கிறது. இது என்னுடைய ஜட விக்கிரகம் என்று நினைவில் வருகிறது. அப்படி
தன்னை மகான் ஆத்மா, என்று புரிந்து நடந்து கொள்ளுங்கள். நீங்கள் அந்த மாதிரி தெய்வீகக் கண்ணாடி
ஆகுங்கள். அதில் அனேக ஆத்மாக்களுக்கு அவர்களுடைய உண்மையான முகம் தென்படட்டும்.
2) எப்பொழுதும் ஏறும் கலையில் சென்று கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் ஒவ்வொரு அடியிலும்
முன்னேறும் கலையின் அனுபவிகள். எண்ணம், சொல், செயல், உறவு மற்றும் தொடர்பு அனைத்திலும்
எப்பொழுதும் ஏறும் கலை ! ஏனென்றால், இப்பொழுது நடக்கும் நேரமே ஏறும் கலைக்கானது, வேறு எந்த
யுகமும் முன்னேறும் கலைக்கானது அல்ல. சங்கம யுகம் முன்னேறும் கலைக்கான யுகம். எனவே எப்படி
நேரமோ அப்படியே அனுபவம் இருக்க வேண்டும். ஒரு விநாடி கடந்து சென்றது. அதற்குப் பிறகு ஒரு
விநாடி வந்தது என்றால் ஏறும் கலை. அந்த மாதிரி இல்லை என்றால் இரண்டு மாதங்களுக்கு முன்பு எப்படி
இருந்தீர்களோ அப்படியே இப்பொழுதும் இருக்கிறீர்கள். ஒவ்வொரு நேரமும் பரிவர்த்தனை, ஆனால்
பரிவர்த்தனை (மாற்றம்) கூட முன்னேறும் கலைக்கானது. எந்த ஒரு விஷயத்திலும் நிற்பவர் அல்ல. ஏறும்
கலையில் செல்பவர்கள் நிற்பதில்லை, அவர்கள் எப்பொழுதும் மற்றவர்களையும் ஏறும் கலையில் அழைத்துச்
செல்வார்கள்.
வரதானம் : சிந்தனைசக்தி மூலமாக சக்திசாலியாகி தடைகளின் பாதிப்பை
அகற்றக்கூடிய அனைத்து கவர்ச்சிகளிலிருந்தும் விடுபட்டவர் ஆகுக.
தற்சமயம் சிந்தனை சக்தி மூலமாக ஆத்மாவில் அனைத்து சக்திகளையும் நிரப்புவதற்கான அவசியம்
இருக்கிறது. இதற்காக உள்நோக்கு பார்வை உடையவராகி ஒவ்வொரு ஞானத் துளியையும் சிந்தித்து கடைந்தெடுத்
தீர்கள் என்றால் வெண்ணெய் வெளியாகும்.மேலும் அவர் சக்திசாலி ஆகிவிடுவார். அந்த மாதிரியான சக்திசாலி
ஆத்மாக்கள் அதீந்திரிய சுகத்தின் பிராப்தியின் அனுபவம் செய்கிறார்கள். அவர்களை அற்ப காலத்தின் எந்தவொரு
பொருளும் தன் பக்கம் ஈர்க்க முடியாது. அவருடைய மூழ்கியிருக்கும் நிலை மூலமாக ஆன்மீகத்தின்
சக்திசாலியான நிலை என்ன உருவாகிறதோ அதன் மூலம் தடைகளின் பாதிப்பு அகன்று விடுகிறது.
சுலோகன்: பிராமண உலகத்தில் அனைவரது மரியாதையையும்
பெறுபவரே சிம்மாசனதாரி ஆகிறார்.
கேள்வி: யார் எப்பொழுதும் பறக்கும் பறவையாக இருப்பாரோ அவருடைய அடையாளமாக என்ன
இருக்கும்?
பதில்: அவர் சக்கரவர்த்தியாக இருப்பார். ஆல்ரவுண்ட் (அனைத்து வித சேவையிலும்) பங்கை செய்பவர்கள்.
ஏறும் கலை உள்ளவர்கள் அந்த மாதிரி பந்தனமற்றவர்களாக இருப்பார்கள். எங்கே சேவை நடந்தாலும்
அங்கே வந்து சேர்ந்து விடுவார்கள். மேலும் அனைத்து விதமான சேவையில் வெற்றி அடைபவர்களாக
ஆகிவிடுவார்கள். எப்படி தந்தை ஆல்ரவுண்ட் பங்கை செய்வபராக இருக்கிறார், தோழனாகவும் ஆக முடியும்
என்றால் தந்தையாகவும் ஆக முடியும், அதே போல் ஏறும் கலை உள்ளவர்கள் எந்த நேரம் எந்த சேவையின்
அவசியம் இருக்கிறதோ அதில் முழுமையாகப் பங்கேற்று செய்ய முடியும், இதைத் தான் 'ஆல்ரவுண்ட்
பறக்கும் பறவை' என்ற கூறுவது. நல்லது.
(4/4)
14.08.2016
கேள்வி : சாகார பிரம்மாவின் அனேக புஜங்கள் (கைகள்) ஏன் பிரசித்தி ஆகியிருக்கிறார்கள்? இது
யாருடைய நினைவுச் சின்னம்?
பதில்: இது குழந்தைகளாகிய உங்களின் சகயோகி சொரூபத்தின் நினைவு சின்னமாகும். எப்படி
உடலின் விசேஷ காரியம் செய்வது புஜங்களாகும். அதே போல் பாப்தாதாவின் காரியத்தில் சேவை செய்வோர்
நீங்கள், அனைத்து குழந்தைகளும் பொறுப்பாளர் ரூபத்தில் இருக்கிறீர்கள். எந்தக் குழந்தைகள் எப்பொழுதும்
யதார்த்த ரூபத்தில் துணையை வைத்து நடந்து கொள்ளும் துணைவர்களாக இருக்கிறார்கள் மற்றும் உதவியாளராக
இருக்கிறார்கள் என்றால் இவர்களைத் தான் வலது கரம் என்று சொல்வது !
கேள்வி : வலது கரத்தின் விசேஷம் என்ன?
பதில் லி வலது கரம் எப்பொழுதும் தூய்மையாக அதாவது சுத்தமாக மற்றும் உயர்ந்ததாக இருக்கும்.
ஏதாவது உயர்ந்த மற்றும் தூய்மையான காரியம் வலது கரம் மூலமாகத் தான் செய்யப்படுகிறது. அதே
போன்று பாப்தாதாவின் சகயோகி வலது கரம் எப்பொழுதும் வார்த்தையில், செயலில் மற்றும் தொடர்பில்
உன்னதமாக மற்றும் சுத்தமாக அதாவது தூய்மையாக இருக்கிறார்கள்.
2) எப்படி கரங்கள் மூலமாக காரியத்தை செய்விக்கும் சக்தி ஆத்மா, கரங்கள் காரியம் செய்பவைகள்
மற்றும் ஆத்மா செய்விப்பவர், அது போலவே வலது கரமாக இருக்கும் சகயோகிகள் எப்பொழுதும் தன்னுடைய
செய்விப்பவர் தந்தையை நினைவில் வைத்துக் கொண்டே செய்யும் கருவியாக ஆகிறார்கள். தன்னை
செய்விப்பவர் என்று நினைப்பதில்லை, எனவே அவருடைய ஒவ்வொரு காரியத்தில் விலகியிருக்கும் நிலை,
அகங்காரமற்ற நிலை மற்றும் பணிவின் புதுஉலக படைப்பின் சிறப்புக்கள் நிரம்பியதாக இருக்கும்.
3) விசேஷமாக வலது கரம் சக்திசாலியாக இருக்கும். வலதுகர சகயோகி ஆத்மா எப்பொழுதும் உலக
நன்மை, உலக மாற்றத்தின் காரியத்தின் பொறுப்பின் சுமையை சுலபமாகவே எடுக்க முடியும்.
4) அவருடைய காரியத்தின் வேகம் அதிகமாக இருக்கும். அவர் ஒவ்வொரு பாடத்தையும் தாரணையில்
மற்றும் நடைமுறை சொரூபத்தில் கொண்டு வருவதில் தீவிர முயற்சி செய்பவராக இருப்பார் மேலும் எப்பொழுதும்
எவரெடியாக இருப்பார்.
கேள்வி : இடது கரம் சகயோகி புஜங்களின் அடையாளங்கள் என்னவாக இருக்கும்?
பதில்: அவர்களிடம் சுத்தத்தின் கூடவே சுத்தமின்மை அதாவது எண்ணம், சொல் மற்றும் செயலில்
சில நேரம் ஏதாவது அசுத்தம் வந்து விடுகிறது, அதாவது சம்பூர்ண சுத்தமானவர்களாக இருப்பதில்லை
2) அவர்களுடைய முயற்சி செய்வதின் வேகம் குறைவாக இருக்கும். செய்யலாம், யோசிக்கலாம்
ஆனால் லெஃப்ட் (இடது) அதாவது லேட்லிஆக (தாமதமாக) செய்வார்கள். உடன் இருப்பார்கள், காரியம்
செய்வார்கள், ஆனால் முழுமையான பொறுப்பை எடுப்பதில் தைரியம் காட்ட மாட்டார்கள். எப்பொழுதும்
உற்சாகம், துணிச்சல் வைப்பார்கள், ஆனால் ஆதாரமற்றவர்களாக இருக்க மாட்டார்கள்.
3) அவர்களுடைய நிலை வெகு நேரம் வக்கீல் அதாவது லாயரைப் போன்று இருக்கும். சட்டங்களை
அதிகம் யோசிப்பார்கள், ஆனால் குறைவான லாபத்தை அடைவார்கள். அவரே அவருக்கு நீதிபதி ஆக
முடியாது. ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் கூட இறுதி தீர்ப்பிற்காக நீதிபதியின் அவசியத்தை அனுபவம்
செய்வார்கள். இப்பொழுது நான் வலது கரமா அல்லது இடது கரமா? என்று நீங்கள் உங்களையே சோதனை
செய்யுங்கள்.
கேள்வி : அனைத்து குழந்தைகளின் இதயத்தில் உலக மாற்றத்தின் நல்ல எண்ணங்கள்
இருக்கின்றன, அந்த எண்ணங்கள் எப்பொழுது நிறைவேறும் ?
பதில்: எப்பொழுது தன்னை சம்பூர்ணமாக பரிவர்த்தனை (மாற்றம்) செய்வார்களோ அப்பொழுது தான்
! எந்த அளவு தன்னுடைய பரிவர்த்தனையில் குறைவு இருக்குமோ அந்த அளவே உலக மாற்ற காரியத்தின்
வேகத்திலும் குறைவு இருக்கும். தன்னுடைய மாற்றத்தின் மூலமாகத் தான் நேரத்தின் மாற்றத்தை செய்ய
முடியும். தன்னை பார்த்தீர்கள் என்றால், நேரத்தைப் பற்றி இயல்பாகவே தெரிய வந்து விடும். ஏனென்றால்,
பரிவர்த்தனைக்கான நேரத்தின் கடிகாரம் நீங்கள். உலகத்தின் அதாவது அனைத்து ஆத்மாக்களின் கவனம்
இப்பொழுது பொறுப்பாளர் ஆகியிருக்கும் நேரத்தின் கடிகாரம் உங்கள் மேல் இருக்கிறது. இப்பொழுது
இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது என்று பார்ப்பார்கள்.
08.
08.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! எண்ணம், சொல், செயலில் யாருக்கும் துக்கம் அளிக்கக் கூடாது.
ஒரு போதும் யார் மீதும் கோபப்படக் கூடாது. அன்பு மிகவும் இனிமையான ஒரு விஷயம்
ஆகும். அன்பினால் யாரை வேண்டுமானாலும் வசப்படுத்த முடியும்.
கேள்வி : பாபா குழந்தைகளுக்கு இரட்டை கிரீடம் தரிக்கும் உலகத்திற்கே அதிபதியாக மாற அல்லது
மிகவும் உயர்ந்தவர்களாக மாறுவதற்கு என்ன வழி கூறுகின்றார்?
பதில் : தெய்வீக குணங்களைக் கடைபிடித்து, மிக மிக இனிமையாக மாறுங்கள். ஒருவருக்கொருவர்
சகோதரன் சகோதரன் மற்றும் சகோதரி சகோதரி என்ற பார்வையில் பாருங்கள். தங்களுடைய முயற்சியினால்
தங்களுக்கு ராஜ திலகத்தை அளியுங்கள். 2. சுயம் ஈஸ்வர் பாபா உங்களுக்கு கற்பித்துக் கொண்டிருக்கின்றார்
என்றால் படிப்பில் ரெகுலராக இருங்கள், எவ்வளவு படிக்கிறீர்களோ படிக்க வைக்கிறீர்களோ அவ்வளவு
உங்களுடைய பழக்க வழக்கங்கள் சீராகும். அவ்வளவு உயர்ந்தவர்களாக மாறுவீர்கள்.
ஓம் சாந்தி. இனிமையிலும் இனிமையான செல்லமான குழந்தைகளே, இப்போது நாம் நரகத்தின் கரையை
விட்டு விட்டு முன்னேறிப் போய்க் கொண்டிருக்கிறோம் என அறிகிறீர்கள். இடையில் இந்த புருஷோத்தம
சங்கமயுகம் முற்றிலும் தனிப்பட்டது. கடலின் நடுவில் உங்களுடைய படகு இருக்கிறது. நீங்கள் சத்யுகத்திலும்
இல்லை. கலியுகத்திலும் இல்லை. நீங்கள் புருஷோத்தம சங்கமயுக சர்வோத்தம பிராமணர் ஆவீர்கள். சங்கமயுகம்
பிராமணர்களுடையதாகும். பிராமணர்கள் குடுமிக்குச் சமமானவர்கள். இது பிராமணர்களுடைய மிகச் சிறிய
யுகம் ஆகும். இது ஒரே பிறவியின் யுகமாக இருக்கிறது. இது உங்களுடைய மகிழ்ச்சியின் யுகம் ஆகும்.
அதுவும் எந்த விசயத்தில்? பகவான் நம்மை கற்க வைக்கின்றார். இப்படிப்பட்ட மாணவர்களுக்கு எவ்வளவுக்
கெவ்வளவு மகிழ்ச்சி இருக்கும். உங்களுக்கு இப்போது முழு சக்கரத்தின் ஞானமும் புத்தியில் இருக்கிறது.
இப்போது நாம் பிராமணராகவும் பிறகு நாம் தேவதையாகவும் மாறுவோம். முதலில் நமது வீடு ஸ்வீட்
ஹோமிற்குச் செல்வோம். பிறகு புது உலகில் நாம் பிராமணர்கள் தான் சுயதரிசன சக்கரதாரி. நாம் தான் இந்த
குட்டிக்கரண விளையாட்டு விளையாடுகிறோம். இந்த விராட ரூபத்தையும் பிராமணர்களாகிய நீங்கள் தான்
அறிகிறீர்கள். புத்தியில் முழு நாளும் இந்த விசயங்களை நினைவு செய்துக் கொண்டிருக்க வேண்டும்.
இது உங்களுடைய மிக மிக அன்பு நிறைந்த குடும்பம் ஆகும். நீங்கள் ஒவ்வொருவரும் மிக மிக
அன்புடையவராக இருக்க வேண்டும். பாபாவும் இனிமையாக இருக்கிறார். குழந்தைகளாகிய உங்களையும்
அன்பாக மாற்றுகிறார். ஒரு போதும் யார் மீதும் கோபப்படக் கூடாது. எண்ணம், சொல், செயலில் யாருக்கும்
துக்கம் கொடுக்கக் கூடாது. பாபா ஒரு போதும் யாருக்கும் துக்கம் கொடுப்பதில்லை. எவ்வளவு பாபாவை
நினைக்கிறீர்களோ அவ்வளவு இனிமையாக மாறிக் கொண்டே இருப்பீர்கள். அவ்வளவு தான். இந்த நினைவினால்
தான் படகு கரை சேரும். இதுவே நினைவு யாத்திரை யாகும். நினைவு செய்து செய்து சாந்திதாம் வழியாக சுக
தாமத்திற்குப் போக வேண்டும். பாபா வந்திருப்பதே குழந்தைகளை சதா சுகமுடையவராக மாற்றுவதற்காக
ஆகும். பூதங்களை விரட்டுவதற்கான யுக்தியை பாபா தெரிவிக்கின்றார். என்னை நினைவு செய்தால் இந்த
பூதங்கள் வெளியேறிப் போய்விடும். யாரிடமாவது பூதம் இருந்தால் இங்கேயே என்னிடம் விட்டு விட்டு
செல்லுங்கள். பாபா, வந்து எங்களுடைய பூதங்களை வெளியேற்றி அழுக்கிலிருந்து தூய்மையாக்குங்கள் என்று
கூறுகிறீர்கள். எனவே பாபா எவ்வளவு மிருதுவாக மாற்றுகிறார். பாபா மற்றும் தாதா இருவரும் சேர்ந்து
குழந்தைகளாகிய உங்களை அலங்காரம் செய்கின்றனர். அவர் எல்லைக்குட்பட்ட தந்தை ஆவார். இவர்
எல்லைக்கப்பாற்பட்ட தந்தை ஆவார். எனவே குழந்தைகள் மிகவும் அன்போடு நடக்க வேண்டும். மேலும்
நடத்த வேண்டும். அனைத்து விகாரங்களிலும் தானமாகக் கொடுக்க வேண்டும். தானம் அளித்தால் கிரகணம்
விலகிப் போகும். இதில் எந்த சாக்கு போக்கு விசயமும் கிடையாது. அன்பினால் நீங்கள் யாரை வேண்டுமானாலும்
வசப்படுத்தலாம். அன்போடு புரிய வையுங்கள். அன்பு மிகவும் இனிமையான விசயம் ஆகும். சிங்கத்தை,
யானையை...... விலங்குகளைக் கூட மனிதர்கள் அன்பினால் வசப்படுத்துகிறார்கள். இருப்பினும் அவர்களோ
அசுர மனிதர்கள். நீங்களோ இப்போது தேவதையாக மாறிக் கொண்டிருக்கிறீர்கள். எனவே தெய்வீக குணங்களைக்
கடைப்பிடித்து மிக மிக இனிமையாக மாற வேண்டும். ஒருவருக்கொருவர் சகோதரன் சகோதரன் மற்றும்
சகோதரன் சகோதரி என்ற பார்வையோடு பாருங்கள். ஆத்மா, ஆத்மாவிற்கு ஒரு போதும் துக்கம் கொடுக்க
முடியாது. இனிமையான குழந்தைகளே ! நான் உங்களுக்கு சொர்க்கத்தின் இராஜ்ய பாகத்தை அளிக்க
வந்திருக்கிறேன் என பாபா கூறுகின்றார். இப்போது உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை என்னிடமிருந்து
அடையுங்கள். நான் உங்களை டபுள் கிரீடம் உடைய உலகத்திற்கே அதிபதியாக மாற்ற வந்திருக்கிறேன்.
08.08.2016
(2/4)
ஆனால் நீங்கள் உழைக்க வேண்டும். நான் யார் மீதும் கிரீடம் வைக்க மாட்டேன். நீங்கள் உங்களுடைய
முயற்சியினால் தான் தனக்கு இராஜ திலகத்தை வைத்துக் கொள்ள வேண்டும். பாபா முயற்சிக்கான வழியைத்
தெரிவிக்கிறார். அதாவது இவ்வாறு உலகத்திற்கே அதிபதியாக டபுள் கிரீடம் உடையவராக தன்னை மாற்றிக்
கொள்ளலாம். படிப்பின் மீது முழு கவனம் வைக்க வேண்டும். ஒரு போதும் படிப்பை விட்டு விடக் கூடாது.
ஏதாவது ஒரு காரணத்தினால் கோபித்துக் கொண்டு படிப்பை விட்டு விட்டால் மிக மிக நஷ்டம் ஏற்படும்.
லாபம் மற்றும் நஷ்டத்தை பார்த்துக் கொண்டே இருங்கள். நீங்கள் ஈஸ்வரிய பல்கலைக் கழகத்தின் மாணவர்கள்.
ஈஸ்வரன், தந்தையிடம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். படித்து பூஜைக்குரிய தேவதையாக மாறிக் கொண்டிருக்
கிறீர்கள். எனவே மாணவர்கள் கூட இவ்வாறு ரெகுலராக மாற வேண்டும், மாணவ வாழ்க்கையே உயர்ந்த
வாழ்க்கை. எவ்வளவு படிக்கிறீர்களோ, படிக்க வைக்கிறீர்களோ, பழக்க வழக்கங்களை திருத்திக் கொள்கிறீர்களோ
அவ்வளவு உயர்ந்தவர் ஆவீர்கள்.
இனிமையான குழந்தைகளே ! இப்போது உங்களுடையது திரும்பும் பயணம் ஆகும். எப்படி சத்யுகத்தில்
இருந்து திரேதா, துவாபர், கலியுகம் வரை கீழே இறங்கி வந்தீர்களோ அவ்வாறே இப்போது நீங்கள்
கலியுகத்திலிருந்து மேலே சத்யுகம் வரை போக வேண்டும். திரேதாயுகம் வரை வந்து விட்டால் இந்த
கர்மேந்திரியங்களின் சஞ்சலம் முடிந்து போகும். ஆகவே எவ்வளவு பாபாவை நினைக்கிறீர்களோ அவ்வளவு
ஆத்மாக்களாகிய உங்களிடமிருந்து ரஜோ தமோவின் துரு நீங்கிக் கொண்டே இருக்கும். மேலும் எவ்வளவு
துரு நீங்குகிறதோ அவ்வளவு பாபா காந்தத்தின் கவர்ச்சி அதிகரிக்கும். கவர்ச்சி ஏற்படவில்லை என்றால்,
நிச்சயம் துரு பிடித்திருக்கிறது. ஒரேயடியாக துருவை நீக்கி உண்மையான தங்கமாக மாற வேண்டும். அதுவே
கடைசி கர்மாதீத் நிலையாகும்.
முக்கியமான விஷயம் ஆத்ம உணர்வு அடையுங்கள் என இனிமையான குழந்தைகளுக்கு பாபா புரிய
வைக்கின்றார். தேகம் உட்பட தேகத்தின் அனைத்து உறவுகளையும் விட்டு விட்டு என்னை மட்டும் நினையுங்கள்,
நிச்சயம் தூய்மையாக வேண்டும். குமாரி தூய்மையாக இருக்கும் போது அனைவரும் அவர்களுக்கு தலை
வணங்குகிறார்கள். திருமணம் செய்த பிறகு பூஜாரி ஆக வேண்டியிருக்கிறது. அனைவர் முன்பும் தலை குனிய
வேண்டியிருக்கிறது. குமாரி முதலில் தாய் வீட்டில் இருக்கும் போது அவ்வளவு நிறைய உறவுகளை
நினைப்பதில்லை. திருமணத்திற்கு பிறகு தேகத்தின் உறவுகள் கூட அதிகமாகிறது. பிறகு கணவர் குழந்தைகள்
மீது மோகம் அதிகரிக்கிறது. மாமியார் மாமனார் அனைவரையும் நினைவில் வந்துக் கொண்டே இருப்பார்கள்.
முதலில் தாய் தந்தையின் மீது மட்டும் பற்று இருக்கிறது. இங்கேயோ அந்த உறவுகள் அனைத்தையும் மறக்க
வேண்டியிருக்கிறது. ஏனென்றால், இவர் ஒருவரே உங்களுடைய உண்மையிலும் உண்மையான தாய் தந்தை
அல்லவா ! இதுவே ஈஸ்வரிய உறவாகும். தாயும் நீயே, தந்தையும் நீயே..... என பாடுகிறார்கள். இந்த தாய்
தந்தையோ உங்களை உலகத்திற்கே அதிபதியாக்குகின்றார். ஆகவே, எல்லையற்ற தந்தையாகிய என்னை
நிரந்தரமாக நினையுங்கள். மேலும் மனிதர்கள் மீது எந்த பற்றும் வைக்காதீர்கள் என பாபா கூறுகின்றார். இந்த
எல்லையற்ற தந்தை உங்களை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறார். அந்த இனிமையான தந்தையை
மிகவும் அன்போடு நினைவு செய்துக் கொண்டே சுய தரிசன சக்கரத்தையும் சுழற்றுங்கள். இந்த நினைவின்
பலத்தினால் உங்களுடைய ஆத்மா தங்கமாகி சொர்க்கத்திற்கு அதிபதியாகிறீர்கள். சொர்க்கத்தின் பெயரைக்
கேட்டதும் மனம் மகிழ்ச்சி அடைகிறது. யார் நிரந்தரமாக நினைவு செய்கிறார்களோ மேலும் மற்றவர்களை
நினைவு செய்ய வைக்கிறார்களோ அவர்களே உயர்ந்த பதவி அடைவார்கள். இந்த முயற்சி செய்து செய்து
கடைசியில் உங்களுக்கு அந்த நிலை வந்து விடும். இந்த உலகமே பழையதாக இருக்கிறது. உடலும்
பழையதாக இருக்கிறது. தேகம் உட்பட தேகத்தின் அனைத்து உறவுகளும் பழையதாக இருக்கின்றது. அவை
அனைத்திலிருந்தும் புத்தியோகத்தை விலக்கி ஒரு பாபாவின் சங்கத்தில் இணைக்க வேண்டும். கடைசி காலத்தில்
கூட அந்த ஒரு தந்தையின் நினைவிருக்க வேண்டும். வேறு எந்த உறவினரின் நினைவிருந்தால், பிறகு
கடைசியில் அவர்கள் நினைவிற்கு வருவர். மேலும் பதவியும் குறைந்து போகும். கடைசி காலத்தில் யார்
எல்லையற்ற தந்தையை நினைக்கிறார்களோ அவர்களே நரனிலிருந்து நாராயணன் ஆவார்கள். பாபாவின்
நினைவிலிருந்தால் பிறகு சிவாலயம் தொலைவில் இல்லை.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளே ! எல்லையற்ற
தந்தையிடம் புத்துணர்வு அடைவதற்காக வருகிறீர்கள். ஏனென்றால் எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற
உலகத்தின் ராஜ்ஜிய பதவி கிடைக்கிறது என குழந்தைகள் அறிகிறீர்கள். இதை ஒரு போதும் மறக்கக் கூடாது.
இது எப்போதும் நினைவிருந்தால் குழந்தைகளுக்கு அளவற்ற மகிழ்ச்சி கிடைக்கும். இந்த பேட்ஜை போகும்
போதும் வரும் போதும் அடிக்கடி பார்த்துக் கொண்டே இருங்கள். ஒரேயடியாக இதயத்தோடு இணைத்து
விடுங்கள். ஆஹா, ஸ்ரீமத்தால் நாம் இவ்வாறு மாறிக் கொண்டிருக்கிறோம். அவ்வளவு தான் பேட்ஜை பார்த்து
அவரிடம் அன்பு செய்துக் கொண்டே இருங்கள். பாபா, பாபா ! என்று சொல்லிக் கொண்டே இருங்கள்.
08.08.2016
(3/4)
எப்போதும் நினைவிருக்கும். நாம் பாபா மூலமாக இவ்வாறு மாறிக் கொண்டே இருக்கிறோம்.
இனிமையான குழந்தைகளே ! மிகவும் விசால புத்தி உடையவராக இருக்க வேண்டும். முழு நாளும்
சேவையின் எண்ணங்கள் வந்துக் கொண்டே இருக்க வேண்டும். யார் சேவை இல்லாமல் இருக்க முடியாதோ
அப்படிப்பட்ட குழந்தைகள் பாபாவிற்கு வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் முழு உலககையும் முற்றுகை இட
வேண்டும். அதாவது அழுக்கான உலகை தூய்மையாக்க வேண்டும். முழு உலகத்தையும் துக்க தாமத்திலிருந்து
சுக தாமமாக மாற்ற வேண்டும். டீச்சருக்கு கூட படிக்க வைப்பதில் ஆனந்தம் வருகிறது அல்லவா ! இப்போது
நீங்களோ மிக உயர்ந்த ஆசிரியராக இருக்கிறீர்கள். நல்ல ஆசிரியர் என்றால், அவர் நிறைய பேரை தனக்குச்
சமமாக மாற்றுவார். ஒரு போதும் களைப்படைவதில்லை. ஈஸ்வரிய சேவையில் மிகவும் மகிழ்ச்சி இருக்கிறது.
பாபாவின் உதவியும் கிடைக்கிறது. இது மிகப் பெரிய எல்லையற்ற வியாபாரம் ஆகும். வியாபாரிகள் தான்
பணக்காரர்கள் ஆகிறார்கள். அவர்கள் இந்த ஞான மார்க்கத்தில் மிகவும் உற்சாகத்தில் துள்ளுகிறார்கள். பாபாவும்
கூட எல்லையற்ற வியாபாரி அல்லவா? வியாபாரம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஆனால் இதில் மிகவும்
துணிவைப் பின்பற்ற வேண்டும். புதுப் புது குழந்தைகள் பழையவர்களை விட முயற்சியில் முன்னேறிப் போக
முடியும். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட அதிர்ஷ்டம் இருக்கிறது என்றால், முயற்சி கூட ஒவ்வொருவரும்
தனித்தனியாக செய்ய வேண்டும். தன்னை முழுமையாக சோதித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு சோதித்துக்
கொள்பவர்கள் ஒரேயடியாக இரவு பகல் முயற்சியில் ஈடுபடுவார்கள். நாங்கள் எங்கள் நேரத்தை ஏன் வீணாக்க
வேண்டும் என்று கூறுவார்கள். எவ்வளவு முடியுமோ நேரத்தை பாதுகாப்பார்கள். தனக்குத் தானே உறுதியாக
உறுதி மொழி எடுக்கிறார்கள். நாங்கள் பாபாவை ஒரு போதும் மறக்க மாட்டோம். ஸ்காலர்μப் அடைந்தே
தீருவோம். இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு உதவியும் கிடைக்கிறது. இப்படிப்பட்ட புதுப் புது முயற்சி செய்யும்
குழந்தைகளை நீங்கள் பார்ப்பீர்கள். சாட்சாத்காரம் செய்துக் கொண்டே இருப்பார்கள். எப்படி ஆரம்பத்தில்
நடந்ததோ அவ்வாறு கடைசியிலும் பார்ப்பார்கள். எவ்வளவு அருகாமையில் போகிறீர்களோ அவ்வளவு
மகிழ்ச்சியில் ஆடிக் கொண்டே இருப்பார்கள். அங்கே ரத்த ஆற்றின் விளையாட்டு கூட நடந்துக் கொண்டே
இருக்கும்.
குழந்தைகளாகிய உங்களின் ஈஸ்வரிய பந்தயம் நடந்துக் கொண்டிருக்கிறது. எவ்வளவு முன்னால்
ஓடிக் கொண்டிருக்கிறீர்களோ அவ்வளவு புது உலகத்தின் காட்சிகள் கூட அருகாமையில் வந்துக் கொண்டிருக்கும்.
மகிழ்ச்சி அதிகரித்துக் கொண்டிருக்கும். யாருக்கு காட்சிகள் நெருக்கத்தில் தெரியவில்லையோ அவர்களுக்கு
மகிழ்ச்சியும் ஏற்படாது. இப்போது கலியுக உலகத்தின் மீது வைராக்கியமும் சத்யுக புது உலகத்தில் மிகவும்
அன்பும் இருக்க வேண்டும். சிவபாபா நினைவிருந்தால் சொர்க்கத்தின் ஆஸ்தியும் நினைவு வரும். சொர்க்கத்தின்
ஆஸ்தி நினைவு வந்தால் சிவபாபாவும் நினைவிற்கு வருவார். இப்போது சொர்க்கத்தின் பக்கம் சென்று
கொண்டிருக்கிறோம் என குழந்தைகள் அறிகிறீர்கள். கால் நரகத்தின் பக்கமும் தலை சொர்க்கத்தின் பக்கமும்
இருக்கிறது. இப்போது சிறியவர் பெரியவர் அனைவருக்கும் வயோதிக நிலையாகும். பாபாவிற்கு எப்போதும்
இந்த பெருமிதம் இருக்கிறது. ஆஹா ! நான் சென்று இந்த பாலகன் கிருஷ்ணன் ஆவேன், அதற்காக
முன்னதாகவே பரிசுகளையும் அனுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். யாருக்கு முழுமையாக நிச்சயம் இருக்கிறதோ
அந்த கோபிகைகள் பரிசுகளை அனுப்புகிறார்கள். அவர்களுக்கு அதிந்தீரிய சுகம் கிடைக்கிறது. நாம் தான்
அமர உலகத்தில் தேவதையாவோம். போன கல்பத்திலும் நாங்களே மாறினோம். பிறகு 84 பிறவிகளை
எடுத்தோம். இந்த குட்டிக் கரண விளையாட்டு நினைவிருந்தால் ஆஹா, சௌபாக்கியம் ! எப்போதும் அளவற்ற
குμயில் இருங்கள். மிகப் பெரிய லாட்டரி கிடைத்திருக்கிறது. 5000 வருடங்களுக்கு முன்பு கூட நாம் இராஜ்ய
பாக்கியத்தை அடைந்தோம். பிறகு நாளை பெறுவோம் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. போன கல்பத்தில்
எப்படி பிறவி எடுத்தோமோ அப்படியே எடுப்போம். அவர்களே நம்முடைய தாய் தந்தையாக இருப்பார்கள்.
யார் கிருஷ்ணரின் தந்தையாக இருந்தாரோ அவரே மீண்டும் ஆவார். இப்படியெல்லாம் யார் முழு நாளும்
சிந்தித்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் மிகவும் ரமணீகத்தன்மையில் இருப்பார்கள். விசார சாகர மந்தனம்
(ஞான சிந்தனை) செய்யவில்லை என்றால் ஆரோக்கியமற்றவராக இருப்பது போலாகும். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை
வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம் :
1. ஈஸ்வரிய சேவையில் ஒரு போதும் களைப்படையக் கூடாது. நல்ல டீச்சராகி, பிறரை தனக்குச்
சமமாக மாற்றக் கூடிய சேவை செய்ய வேண்டும்.
08.08.2016
(4/4)
2. நினைவின் பலத்தால் ஆத்மாவை தங்கமாக மாற்ற வேண்டும். எந்த தேகதாரி மீதும் பற்று
இருக்கக் கூடாது.
வரதானம் : குறைவான வார்த்தைகள் மூலமாக ஞானத்தின் அனைத்து ரகசியங்களையும்
தெளிவுபடுத்தக் கூடிய யதார்த்த மற்றும் சக்திசாலி ஆகுக.
எந்த ஒரு பொருளும் எவ்வளவு அதிகமாக சக்திசாலியாக இருக்கிறதோ அவ்வளவு அதனுடைய அளவு
குறைவாக இருக்கிறது. அவ்வாறே தாங்கள் தங்களின் நிர்வாண் (தேகத்தைக் கடந்த) நிலையில் இருந்து
பேசும் போது வார்த்தைகள் குறைவாகவும், ஆனால் யதார்த்தமானதாகவும் சக்திசாலியாகவும் இருக்கும். ஒரு
வார்த்தையில் ஆயிரம் வார்த்தைகளின் ரகசியம் அடங்கி இருக்கும். இதனால் வீண் வார்த்தைகள் தானாகவே
முடிந்து போகும். ஒரு வார்த்தையினால் ஞானத்தின் அனைத்து ரகசியங்களையும் தெளிவு படுத்த முடியும்.
விஸ்தாரம் முடிந்து போகும்.
சுலோகன் : மனதால் 'பாபா' என்று கூறுவதன் பொருள்
மகிழ்ச்சி மற்றும் சக்தியை அடைவதாகும்.
(1/4)
09.
08.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! இதுவரை படித்த அனைத்தையும் மறந்து ஒரு
தந்தையை நினைவு செய்யுங்கள்.
கேள்வி: பாரதத்தில் சத்யுக சுயராஜ்யத்தின் ஸ்தாபனை செய்ய வேண்டும் என்றால் எந்த
ஒரு பலம் வேண்டும்?
பதில்: தூய்மையின் பலம். நீங்கள் சர்வ சக்திவான் தந்தையுடன் யோகம் செய்து தூய்மை ஆகிறீர்கள்.
இந்த தூய்மையின் பலத்தினால் தான் சத்யுக சுயராஜ்யத்தின் ஸ்தாபனை ஆகிறது. இதில் சண்டை ஆகிய
எந்த விஷயமும் கிடையாது. ஞானம் மற்றும் யோக பலமே பாவன உலகத்தின் அதிபதியாக ஆக்கி
விடுகிறது. இதே பலத்தினால் ஒரு வழியின் (சத்யுக) ஸ்தாபனை ஆகி விடுகிறது.
பாடல்: கடைசியில் அந்த நாளும் வந்தது இன்று ...
ஓம் சாந்தி. குழந்தைகள் பாட்டு கேட்டீர்கள். இந்த பாடல் ஒன்றும் நம்மால் அமைக்கப்பட்டது கிடையாது.
எப்படி மற்ற வேதங்கள் மற்றும் சாஸ்திரங்களின் சாரம் புரிய வைக்கப்படுகிறதோ. அதே போல ஏற்கனவே
அமைக்கப்பட்டுள்ள இப்பாடல்களின் சாரத்தையும் புரிய வைக்கிறார் படகோட்டி அல்லது தோட்டக்காரன்
அல்லது சத்கதி அளிக்கும் வள்ளல் ஒரே ஒரு தந்தை, என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். ஜீவன்
முக்திக்காக பக்தி செய்கிறார்கள். ஆனால் ஜீவன் முக்தி அல்லது சத்கதி அளிக்கும் வள்ளல் ஒரு பகவான்
ஆவார். அதன் பொருளை குழந்தைகள் தான் புரிந்து கொள்ள முடியும். மனிதர்கள் புரியாமல் உள்ளார்கள்.
சத்கதி என்றால், துக்கத்திலிருந்து விடுவித்து சாந்தியின் பிராப்தி செய்விக்கப்படுவது. இங்கு இலட்சுமி நாராயணரின்
இராஜ்யம் இருக்கும் பொழுது, இங்கு தூய்மை, சுகம், சாந்தி இருந்தது என்பதை பாரதவாசி குழந்தைகள்
அறிந்துள்ளார்கள். இராதை கிருஷ்ணரின் இராஜ்யம் என்று கூற முடியாது. உண்மையில் இராதை தாய்மார்களின்
இனத்தவர் ஆவார். அவரை அதிகமாக அன்பு செய்ய வேண்டும். பிறகும் கிருஷ்ணரை மிகவும் அன்பு
செய்கிறார்கள். ஊஞ்சலில் ஊஞ்சலாட்டுகிறார்கள். கிருஷ்ணரின் ஜன்மாஷ்டமி கூட கொண்டாடுகிறார்கள்.
இராதைக்கு ஜெயந்தி கொண்டாடுவதில்லை. உண்மையில் இருவருக்குமே கொண்டாட வேண்டும். ஒன்றுமே
புரிந்து கொள்வதில்லை. அவர்களுடைய வாழ்க்கை சரித்திரமோ யாருக்குமே தெரியாது. தந்தை வந்து தன்னுடைய
மற்றும் அனைவரின் வாழ்க்கை சரித்திரத்தைக் கூறுகிறார். சிவ பரமாத்மா நமஹ என்று மனிதர்கள் கூறவும்
செய்கிறார்கள். ஆனால் அவரது வாழ்க்கை சரித்திரம் பற்றி தெரியாது. மனிதனுடைய வாழ்க்கை சரித்திரத்திற்கு
சரித்திரம், பூகோளம் என்று கூறப்படுகிறது. உலகத்தின் சரித்திரம், பூகோளம் பாடப்படுகிறது அல்லவா?
எத்தனை தாலுக்காக்களில் ஆட்சி புரிந்து கொண்டிருந்தார்கள். எவ்வளவு பூமி மீது ஆட்சி புரிந்து
கொண்டிருந்தார்கள். எப்படி ஆட்சி புரிந்தார்கள், பின் அவர்கள் எங்கு சென்றார்கள்.. இந்த விஷயங்கள்
யாருக்குமே தெரியாது. குழந்தைகளாகிய உங்களுக்கு நல்ல முறையில் புரிய வைக்கப்படுகிறது. படைப்பவர்
மற்றும் படைப்பினுடைய ஞானத்தை குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். உண்மையில் இது கலியுகத்தின்
கடைசி மற்றும் சத்யுகத்தின் ஆரம்பம் ஆகும் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரிந்து விட்டுள்ளது.
சங்கமத்தில் தான் பரமபிதா பரமாத்மா வந்து மனிதர்களை பதீத நிலையிலிருந்து பாவன தேவதையாக
ஆக்குகிறார். உத்தம புருஷர்கள் அல்லது புருஷோத்தமராக ஆக்குகிறார். ஏனெனில், இச்சமயத்தில் மனிதர்கள்
உத்தமமாக இல்லை. தாழ்ந்தவர்களாக இருக்கிறார்கள். உயர்ந்த தரம், நடுத்தரம் தாழ்ந்த தரம் லி சதோ, ரஜோ,
தமோ ஆகிறார்கள். யார் நல்ல முறையில் ஞானம் கேட்கிறார்களோ அவர்களை சதோ குணம் உடையவர்கள்
என்று கூறுவார்கள். யார் கொஞ்சமாக கேட்கிறார்களோ அவர்களை ரஜோ குணமுடையவர்கள் என்று கூறுவார்கள்.
யார் கேட்பதே இல்லையோ, அவர்களை தமோ குணமுடையவர்கள் என்று கூறுவார்கள். படிப்பில் கூட
அவ்வாறே ஆகிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு சதோபிரதான படிப்பு வேண்டும். எனவே சதோபிரதானமான
இலட்சுமி நாராயணர் ஆவதற்கான ஞானம் உங்களுக்கு அளிக்கப்படுகிறது. நரனிலிருந்து நாராயணர், நாரியிலிருந்து
இலட்சுமி ஆக வேண்டும். கீதைக்காகக் கூட நீங்கள் இது உண்மையான கீதை என்று கூறுகிறீர்கள். இது
உண்மையான கீதா பாடசாலை, அதாவது சத்திய நாராயணர் ஆவதற்கான கதை, அல்லது உண்மையான அமர
கதை, உண்மையான மூன்றாவது கண்ணின் கதை என்று நீங்கள் எழுதலாம். படங்களோ எல்லாமே உங்களிடம்
உள்ளது. இவற்றில் முழு ஞானம் உள்ளது. பிரஜாபிதா பிரம்மா குமார் குமாரிகளாகிய நாங்கள் பாரதத்தை
சதோபிரதானமான சொர்க்கமாக ஆக்கியே விடுவோம் என்று குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது உறுதி
எடுக்கிறீர்கள். நீங்கள் இந்த செய்தியைத் தெரியப்படுத்த வேண்டும். காந்தியடிகள் கூட பாவன இராஜ்யத்தை
விரும்பினார். எனவே அவசியம் இப்பொழுது பதீத இராஜ்யம் ஆகும். சுயம் நாம் பதீதமாக இருக்கிறோம்
என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. இராவணன் என்பது 5 விகாரமாகும். இராம இராஜ்யம்
09.08.2016
(2/4)
வேண்டும் என்று கூறுகிறார்கள் என்றால், அவசியம் அசுர சம்பிரதாயம் ஆகிறார்கள் அல்லவா? ஆனால் இது
யாருடைய புத்தியிலும் வருவதில்லை. எவ்வளவு பெரிய பெரிய குருமார்கள் கூட இந்த அளவிற்குப் புரிந்து
கொள்வதில்லை. நாங்கள் ஸ்ரீமத் படி பிரம்மா மூலமாக 5 வருடங்களுக்கு முன்னது போலவே தெய்வீக
இராஜ்யத்தை ஸ்தாபனை செய்வோம் என்று குழந்தைகளாகிய நீங்கள் அறிவிப்பு விடுக்கிறீர்கள். இது புருஷோத்தம
சங்கம யுகமாகும். இப்பொழுது தாழ்ந்த புருஷர்களிலிருந்து சதோபிரதான புருஷோத்தமராக ஆகிறீர்கள். மரியாதா
புருஷோத்தமர், ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தினர் தான் ஆவார்கள். இப்பொழுது ஒரே ஒரு தேவி
தேவதா தர்மத்தின் ஸ்தாபனை ஆகிறது. பிறகு வேறு தர்மங்கள் இருக்கவே இருக்காது. சத்யுகத்தில் ஒரு
தர்மம், ஒரே ஒரு இராஜ்யம் இருந்தது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் நிரூபித்து புரிய வைக்கிறீர்கள்.
திரேதாவில் சூரிய வம்சத்திலிருந்து மாறி, சந்திர வம்சத்திற்குச் செல்கிறார்கள் என்றாலும் கூட, மொழி ஒன்றாகத்
தான் இருக்கும். இப்பொழுதோ பாரதத்தில் அநேக மொழிகள் உள்ளன. நம்முடைய இராஜ்யத்தில் ஒரே ஒரு
மொழி இருந்தது என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். தற்சமயத்திலோ நிறைய பார்த்துக் கொண்டே
இருப்பீர்கள். எப்படி பிரயாணம் செய்து பக்கத்தில் வந்துக் கொண்டே இருக்கும் பொழுது இப்பொழுது நம்முடைய
வீடு வந்து விட்டது என்று தங்களது தேசத்தின் பக்கம் பார்த்து குμ அடைகிறார்கள். அவ்வளவு தான் !
இப்பொழுதே போய் சந்திக்கப் போகிறோம் என ஆனந்தப்படுவர். அதுபோன்று உங்களுக்குக் கூட உங்களது
இராஜதானியின் காட்சி (சாட்சாத்காரம்) தெரிந்துக் கொண்டே இருக்கும். தங்களுடைய முயற்சியினுடைய
சாட்சாத்காரம் கூட ஆகும். பாபா முயற்சி செய்யுங்கள் என்று நமக்கு எவ்வளவு சொல்கிறார் என்பதைப்
பார்ப்பார்கள். இல்லையென்றால், ஐயோ ! ஐயோ ! என்பார்கள் மற்றும் பதவியும் குறைந்து போய் விடும்.
யோகத்தின் யாத்திரைப் பற்றி எல்லோருக்கும் கூறிக் கொண்டே இருங்கள். புரிய வைப்பதோ மிகவும் சுலபமாகும்.
ஏணிப்படி எவ்வளவு சுலபமானதாக உள்ளது. யார் தாமதமாக வருகிறார்களோ அவர்களுக்கு நாளுக்கு நாள்
சுலபமான ஞானம் கிடைக்கிறது. ஒரு வாரம் புரிந்து கொண்ட உடனேயே சுலபமாகப் புரிந்து கொண்டு
விடுவார்கள். படங்கள் அது போல தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் மிகச் சரியான விளக்க உரை உள்ளது. 84
பிறவிகளின் சக்கரம் முற்றிலும் சரியாக உள்ளது. இது பாரதவாசிகளுக்காக உள்ளது. குழந்தைகளாகிய உங்கள்
புத்தியில் முழு ஞானம் உள்ளது. பதீத பாவனர், சத்கதி தாதா, சிவபாபாவின் வழிப் படி நாம் மீண்டும் சகஜ
ராஜயோக பலத்தினாலே நம்முடைய உடல், மனம் பொருளாலே பாரதத்தை சொர்க்கமாக ஆக்குகிறோம்
என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். மற்றவர்களுடைய எதையும் நாம் பயன்படுத்துவது இல்லை. தங்களுடைய
உடல், மனம், பொருளால் சேவை செய்கிறோம். யார் எவ்வளவு செய்கிறார்களோ அவர்கள் தங்களது வருங்காலத்
திற்காக அமைக்கிறார்கள். நீங்கள் தான் வீட்டின் உறுப்பினர்கள் ஆவீர்கள். உங்கள் மூலமாகத் தான் பாபா
சத்யுக சுயராஜ்யத்தை ஸ்தாபனை செய்வித்துக் கொண்டிருக்கிறார். செலவு கூட நீங்கள் தான் செய்வீர்கள்.
உங்களது செலவு ஒன்றும் அதிகமாக இல்லை. நீங்கள் சிவபாபாவை நினைவு மட்டும் செய்ய வேண்டும்.
கன்னியர்கள் என்ன செலவு செய்ய வேண்டியுள்ளது. அவர்களிடம் ஏதாவது இருக்கிறதா என்ன? பாபா
குழந்தைகளிடம் என்ன கட்டணம் வாங்குவார்? எதுவும் கிடையாது. பள்ளிக் கூடங்களிலோ முதலில்
கட்டணத்தின் விஷயம் பேசுகிறார்கள். அங்கு கல்விக்காக எவ்வளவு செலவாகிறது. இங்கோ சிவபாபா குழந்தை
களிடம் எப்படி பைசா வாங்குவார். சிவபாபா பைசா வாங்குவதற்கு தனக்கென்று வீடு அமைக்க வேண்டி
இருக்கிறதா என்ன? குழந்தைகளாகிய நீங்கள் வருங்காலத்தில் சொர்க்கத்திற்குச் சென்று வைரம் வைடூரியங்களின்
அரண்மனை அமைக்க வேண்டியுள்ளது. எனவே நீங்கள் இங்கு என்ன செய்கிறீர்களோ அதற்கான பலன்
வருங்காலத்தில் உங்களுக்கு மாளிகையாக கிடைத்து விடுகிறது. இது மிகவுமே புரிந்து கொள்ள வேண்டிய
விஷயங்கள் ஆகும். எந்த அளவு யார் உடல், மனம், பொருளால் சேவை செய்வார்களோ அவர்கள் அங்கு
அதற்கேற்றபடி அடைவார்கள். கல்லூரி அல்லது ஆஸ்பத்திரி கட்டுகிறார்கள். 10 இலட்சம், 20 இலட்சம்
செலவிட வேண்டி வருகிறது. இங்கோ அவ்வளவு செலவு ஏற்படுவதில்லை. சிறிய வீட்டில் ஆன்மீகக் கல்லூரி
அல்லது ஆஸ்பத்திரி அமைக்கிறார்கள். பாண்டவர்களின் ஆதி தலைவன் யாராக இருந்தார்? அவர்களோ
கிருஷ்ணரின் பெயரை எழுதி விட்டுள்ளார்கள். உண்மையில் நிராகார பகவான் ஆவார். உங்களுக்கு ஸ்ரீமத்
அளிப்பவர் பகவான் ஆவார். மற்றபடி எல்லோரும் இராவண இராஜ்யத்தில் இராவணனின் வழிப்படி உள்ளார்கள்.
இராவணினுடைய வழிப்படி எவ்வளவு அசுத்தமாக ஆகி விட்டுள்ளார்கள். இப்பொழுது இதே படைப்பு பழையதாக,
பின்னர் அதுவே புதியதாக ஆகிறது. சிருஷ்டியில் பாரதம் தான் இருந்தது. பாரதம் புதியது, பாரதம் பழையது
என்று கூறுவார்கள். புதிய பாரதமோ சொர்க்கமாக இருந்தது. பிறகு பாரதம் பழையதாக ஆகும் பொழுது
நரகமாகும். இதற்கு பயங்கரமான நரகம் என்று கூறப்படுகிறது. மனிதர்களினுடையதே விஷயமாகும். இங்கு
சுகத்தின் பெயர் அடையாளமே இல்லை. இது ஏதாவது சுகமா என்ன? சந்நியாசிகள் கூட இச்சமயத்தின்
சுகத்தை காக்கை எச்சிலுக்கு சமம் என்கிறார்கள். எனவே அவர்கள் இல்லறத்தை விட்டு விடுகிறார்கள்.
அவர்கள் சொர்க்கம் அல்லது சத்யுகத்தின் ஸ்தாபனை செய்ய முடியாது. கிருஷ்ணபுரியோ பரமாத்மா தான்
ஸ்தாபனை செய்கிறார். ஸ்ரீகிருஷ்ணரின் ஆத்மா மற்றும் சரீரம் இரண்டும் சதோபிரதானமாக இருந்தது. எனவே
09.08.2016
(3/4)
கிருஷ்ணரை மிகவும் அன்பு செய்கிறார்கள். ஏனெனில் தூய்மையானவர் அல்லவா? சிறிய குழந்தை பிரம்ம
ஞானிக்கு சமம் என்று பாடவும் படுகிறது. சிறிய குழந்தைகளுக்கு விகாரங்கள் பற்றி தெரிந்திருப்பதில்லை.
சந்நியாசிகளுக்கோ பிறகும் தெரியும். குழந்தையோ பிறவியிலேயே மகாத்மா ஆகும். குழந்தைகளுக்கோ
தூய்மையான மலர் என்று கூறப்படுகிறது. ஸ்ரீகிருஷ்ணர் முதல் நம்பர் மலராவார். சொர்க்கமான புது உலகத்தின்
முதல் இளவரசராவார். ஜன்மம் எடுத்த உடன் முதல் இளவரசர் என்று கூறுவார்கள். ஸ்ரீகிருஷ்ணர் போன்ற
குழந்தை கிடைக்க வேண்டும் என்று கிருஷ்ணரை எல்லோரும் நினைவு செய்கிறார்கள். எப்படி ஆக வேண்டுமோ,
அப்படியே ஆகுங்கள் என்று இப்பொழுது தந்தை கூறுகிறார். ஒரே ஒரு கிருஷ்ணர் மட்டும் ஆகிறாரா என்ன?
பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் எத்தனை பேர் ஆகிறார்கள்? இரண்டாவது, மூன்றாவது என்று ஆகிறார்கள் அல்லவா?
எனவே இங்கு கூட பரம்பரை உள்ளது. தந்தைக்குப் பின்னால் மற்றவர் சிம்மாசனத்தில் அமருவார். எப்படி
வம்சம் இருக்கிறது, அதேப் போல இது வம்சமாகும். உங்களுடைய தொடர்பே கிறிஸ்த்தவர்களுடன் உள்ளது.
கிருஷ்ணர் மற்றும் கிறித்தவர் லி இருவருடையதும் ஒரே ராசி ஆகும். கொடுக்கல் வாங்கல் கூட தங்களுக்குள்
நிறைய நடக்கிறது. பாரதத்திலிருந்து அவர்கள் எவ்வளவு செல்வத்தை எடுத்துச் சென்றுள்ளார்கள். இப்பொழுது
மீண்டும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ரிடர்ன் சர்விஸ் செய்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஐரோப்பியவாசிகள்
தங்களுக்குள் சண்டையிட்டு முடிந்து போய் விடுவார்கள். இதுப் பற்றிக் கதை கூட உள்ளது. இரண்டு பூனைகள்
சண்டையிட்டன, நடுவில் குரங்கு வெண்ணெயை சாப்பிட்டுச் சென்று விட்டது. இந்த விஷயம் தற்போதையதாகும்.
அவர்கள் தங்களுக்குள் சண்டையிடுவார்கள். மேலும் இராஜ்ய பாக்கியம் உங்களுக்கு கிடைக்கப் போகிறது.
இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு மிக ஆழமான ஞானம் உள்ளது. நாம் அனைவரும் பிரம்மா குமார்
குமாரிகள் ஆவோம் என்பது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. அப்படியின்றி நாம் குஜராத்தி
ஆவோம், நாம் வங்காளத்தினர் ஆவோம் என்பதல்ல. அப்படி கிடையாது. இந்த கருத்து வேற்றுமை கூட
நீங்கிப் போய் விடவேண்டும். நாம் ஒரு தந்தையின் குழந்தைகள் ஆவோம். பிரம்மா மூலமாக சிவபாபாவின்
ஸ்ரீமத்படி ஞானம் மற்றும் யோக பலத்தினாலே மீண்டும் நாம் நமது சுய ராஜ்யத்தை ஸ்தாபனை செய்து
கொண்டிருக்கிறோம். யோக பலத்தினால் தான் நாம் பாவனம் ஆகிறோம். தந்தை சர்வ சக்திவான் ஆவார்.
அவரிடமிருந்து பலம் கிடைக்கிறது. நீங்கள் உலக அரசாட்சி பெறுகிறீர்கள். இதில் சண்டை ஆகிய எதுவுமே
நீங்கள் செய்வதில்லை. முழுமையாக தூய்மையின் பலம் ஆகும். வந்து பதீத நிலையிலிருந்து பாவனமாக
ஆக்குங்கள் என்று கூறவும் செய்கிறார்கள். எனவே நினைவினுடையதே பலம் ஆகும். அப்படியின்றி அங்கு
சிக்கலான வேலைகளில் போய் விட்டு எல்லாவற்றையும் மறந்து விடுவதல்ல. இங்கு நேரிடையாக ஞானக்கடலின்
அலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நதிகளிலோ அந்த அலைகள் இருப்பதில்லை. கடலினுடைய
ஒரே ஒரு அலை கூட எவ்வளவு தீமையை ஏற்படுத்தி விடுகிறது. பூகம்பம் ஏற்படும் பொழுது கடல் கூட
பொங்கி எழும். கடலை வறண்டதாக ஆக்கி நிலங்கள் வாங்கி உள்ளார்கள். அந்த பூமியை பிறகு எவ்வளவு
விலைக்கு விற்கிறார்கள் ! இந்த மும்பையே இருக்காது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இதற்கு முன்பு
இந்த பாம்பே இருந்ததா என்ன? சிறிய ஒரு கிராமமாக இருந்தது. இந்த தாய்மார்கள் கள்ளம் கபடமற்றவர்கள்
ஆவார்கள். அந்த அளவிற்கு எழுத படிக்கத் தெரியாது. இங்கோ படித்தது அனைத்தையும் மறக்க வேண்டும்.
நீங்கள் எதுவுமே படிக்கவில்லை என்றால் நல்லது. படித்திருக்கும் மனிதர்கள் புரிந்து கொள்ளும் நேரத்தில்
எவ்வளவு கேள்விகள் கேட்கிறார்கள். இங்கோ தந்தையை நினைவு மட்டும் செய்ய வேண்டும். அவ்வளவே
! எந்த ஒரு தேகதாரி மனிதனை நினைவு செய்ய வேண்டிய விஷயம் கிடையாது. ஒரே ஒரு எல்லையில்லாத
தந்தைக்குக் தான் மகிமை உள்ளது. உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஒரு பகவான் ஆவார். பிறகு இரண்டாவது
நம்பரில் பிரம்மா இருக்கிறார். அவரை விட உயர்ந்தவர் வேறு யாரும் இருப்பதில்லை. இவரை விட உயர்ந்தவர்
வேறு யாரும் இருப்பதில்லை. இவரை விட பெரியவர் வேறு யாருமே கிடையாது. ஆனால் எவ்வளவு
சாதாரணமாக நடக்கிறார் பாருங்கள். எப்படி சாதாரண முறையில் குழந்தைகளுடன் அமருகிறார். டிரெயினில்
போகிறார். இவர் யார் என்பது யாருக்குத் தெரிகிறது. பகவான் வந்து ஞானம் அளிக்கிறார் என்றால், அவசியம்
பிரவேசம் செய்து ஞானம் அளிப்பார் அல்லவா? ஒரு வேளை கிருஷ்ணராக இருந்தார் என்றால் ஒரே கூட்டம்
கூடிப் போய் விட்டிருக்கும். பின் படிப்பிக்கக் கூட முடியாது. தரிசனம் மட்டுமே செய்து கொண்டிருப்பார்கள்.
இங்கோ தந்தை மறைமுகமாக சாதாரண வேடத்தில் வந்து குழந்தைகளுக்கு கற்பிக்கிறார்.
நீங்கள் யாருக்குமே தெரியாத (மறைவான) சேனை ஆவீர்கள். ஆத்மாக்களாகிய நாம் மீண்டும் நமது
இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இந்த பழைய
சரீரத்தை விட்டு விட்டு புதிய தூய்மையான உடலைத் தரிப்பீர்கள். இப்பொழுது அசுர சம்பிரதாயமாக உள்ளது.
பிறகு தெய்வீக சம்பிரதாயமாக ஆகி விடும். நாம் புது உலகத்தில் தெய்வீக உடலைத் தரித்து ஆட்சி புரிவேன்
என்று ஆத்மா கூறுகிறது. ஆத்மா ஆண் ஆகும். உடல் இயற்கை ஆகும். ஆத்மா எப்பொழுதும் ஆண்
ஆகும். மற்றபடி சரீர கணக்கு வழக்குப் படி ஆண் உடல் அல்லது பெண் உடல் கிடைக்கிறது. ஆனால் நான்
அவினாμ ஆத்மா ஆவேன். இந்த சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. கலியுகத்தின் விநாசம் கூட
09.08.2016
(4/4)
அவசியம் ஆகும். விநாசத்தின் அறிகுறிகள் கூட முன்னால் பார்க்கிறீர்கள். அதே மகாபாரதப் போர் ஆகும்.
எனவே அவசியம் பகவான் கூட இருப்பார். எந்த ரூபத்தில், எந்த உடலில் என்பது குழந்தைகளாகிய
உங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. நான் முற்றிலும் சாதாரண உடலில் வருகிறேன் என்றும்
கூறுகிறார். நான் கிருஷ்ணரின் உடலில் வருவது இல்லை. இவரே முழுமையாக 84 பிறவிகள் எடுக்கிறார்.
நான் இவருடைய அநேக பிறவிகளின் கடைசி பிறவியிலும் கடைசியில் வருகிறேன் என்று கூறவும் செய்கிறார்.
84 பிறவிகள் சூரிய வம்சத்தின் குடும்பத்தார் தான் எடுக்கிறார்கள். அவர்களே முதல் நம்பரில் வருவார்கள்.
சாகாரி விருட்சம் மற்றும் நிராகாரி விருட்சம் லி இரண்டு பற்றிய முழு ஞானம் உங்களுக்கு உள்ளது.
மூலவதனத்திலிருந்து வரிசைக்கிரமமாக ஆத்மாக்கள் வருகிறார்கள். முதன் முதலில் தேவி தேவதா தர்மத்தின்
ஆத்மாக்கள் வருகிறார்கள். பிறகு வரிசைக்கிரமமாக மற்ற தர்மத்தினர் வருகிறார்கள். படங்களின் விளக்கமோ
மிகவும் உயர்ந்ததாக உள்ளது. குழந்தைகள் புரிய வைக்க வேண்டும். குமாரிகள் முன்னிலையில் இருக்க
வேண்டும். ஒரு சில பெண் குழந்தைகள் இப்பேர்ப்பட்ட விஷயங்களைப் புரிய வைத்தார்கள் என்றால் அற்புதமாகி
விடும் அல்லவா? எவ்வளவு பெயரை வெளிப்படுத்துவார்கள். லௌகீக பெயர் மற்றும் அலௌகீக பெயர்
இரண்டையும் புகழடையச் செய்து விடுவார்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட
செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும்
காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. சங்கம யுகத்தில் சிறந்த செயல்கள் செய்து புருஷோத்தமர் ஆக வேண்டும். தாழ்ந்தவராக
ஆகி விடும் வகையில் அப்பேர்ப்பட்ட எந்த செயலையும் செய்யக் கூடாது.
2. மறைமுகமான ரூபத்தில் தந்தைக்கு உதவி செய்பவராக ஆகி பாரதத்தை சொர்க்கமாக ஆக்கும்
சேவை செய்ய வேண்டும். தங்களுடையதே உடல், மனம், பொருள் மூலமாக பாரதத்தை
சொர்க்கமாக ஆக்க வேண்டும். நினைவு மற்றும் தூய்மையின் பலத்தை சேமிப்பு செய்ய
வேண்டும்.
வரதானம்: சிறந்த உள்ளுணர்வு மூலமாக இல்லறத்தை முன்னேற்றத்திற்கான
சாதனமாக ஆக்கிக் கொள்ளக் கூடிய சதா சக்திசாலி ஆவீர்களாக.
(பிரவிருத்தி) இல்லறத்தில் முதலில் (விருத்தி) உள்ளுணர்வு மூலமாக தூய்மையாகவோ அல்லது
தூய்மையற்றவராகவோ ஆகிறீர்கள். உள்ளுணர்வை எப்பொழுதும் ஒரு தந்தையுடன் இணைத்து விட்டீர்கள்
என்றால், ஒரு தந்தையைத் தவிர வேறு யாருமில்லை என்ற அப்பேர்ப்பட்ட உயர்ந்த உள்ளுணர்வு இருந்தது
என்றால் இல்லறம் முன்னேற்றத்திற்கான சாதனமாக ஆகி விடும். உள்ளுணர்வு உயர்ந்ததாகவும் மற்றும்
சிறந்ததாகவும் இருந்தது என்றால் சஞ்சலப்பட முடியாது. இப்பேர்ப்பட்ட சிறந்த உள்ளுணர்வு மூலமாக
முன்னேற்றம் செய்தபடியே கதி, சத்கதியை சுலபமாகவே அடைந்து விடுவீர்கள். பிறகு எல்லா (கம்ப்ளெயின்ட்)
புகார்களும் (கம்ப்ளீட்) முடிந்து போய் விடும்.
சுலோகன்: ஒரு வேளை தூய்மை கனவு அளவிலும் கூட ஆடிப் போகிறது என்றால்,
நிச்சயத்தின் அஸ்திவாரம் பக்குவமாக இல்லை என்பதாகும் !
(1/4)
10.
08.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! தனக்குத் தானே உறுதி எடுத்துக் கொள்ளுங்கள், நான் மிகலிமிக
இனிமையாக ஆக வேண்டும். அனைவரையும் சுகத்தின், அன்பின் பார்வையுடன் பார்க்க
வேண்டும். யாருடைய பெயர்லிவடிவத்திலும் சிக்கிக் கொள்ளக் கூடாது.
கேள்வி : யோகத்தின் சித்தி (பலன்) எது? பக்கா யோகியின் அடையாளம் சொல்லுங்கள்.
பதில் : அனைத்துக் கர்மேந்திரியங்களும் முற்றிலும் சாந்தமாக, குளிர்ந்ததாக ஆகி விடும் லி இது தான்
யோகத்தின் சித்தியாகும். யாருடைய கர்மேந்திரியங்கள் ஒரு சிறிதும் சஞ்சலமடையாமல் உள்ளனவோ, அவர்
தான் பக்கா யோகி ஆவார். அணுவளவும் எந்த ஒரு தேகதாரி மீதும் கண்கள் மூழ்கி விடாதிருக்க வேண்டும்.
இனிமையான குழந்தைகளே, இப்போது நீங்கள் இளைஞர் கிடையாது. உங்களுக்கு இப்போது வானப்ரஸ்த
நிலை.
பாடல் : விழித்தெழுங்கள் பிரியதரிசினிகளே, விழித்தெழுங்கள்.........
ஓம் சாந்தி. இனிமையிலும் இனிமையான ஆன்மிகக் குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள். இதனுடைய
அர்த்தத்தைப் பற்றி மனதில் விசார் சாகர் மந்தன் செய்ய வேண்டும். மேலும் குμயில் இருக்க வேண்டும்.
ஏனென்றால் இவை புது உலகத்திற்கான புது விசயங்கள். இந்தப் புது விசயங்களை இப்போது கேட்க
வேண்டும். குழந்தைகள் இப்போது அறிவார்கள், புது உலகை ஸ்தாபனை செய்பவர் ஒன்றும் மனிதராக
இருக்க முடியாது. நீங்கள் இந்த விசயங்களைக் கேட்கும் போது புரிந்துக் கொள்கிறீர்கள், இவையோ 5000
ஆண்டுகளுக்கு முன்பும் கூட நடந்த இருந்த பழைய விசயங்கள், அவை மீண்டும் புதிதாகச் சொல்லப்
படுகின்றன. ஆக, பழையது புதியதாகவும் புதியது பழையதாகவும் ஆகி விடுகின்றது. இப்போது நீங்கள்
அறிவீர்கள், 5000 ஆண்டுகளுக்கு முந்தைய அதே விசயங்களை பாபா புதியதாக ஆக்கிச் சொல்கிறார். விசயம்
அதே தான். எதற்காகச் சொல்கிறார்? புது உலகத்தின் ஆஸ்தியைப் பெறுவதற்காக. இதில் ஞான நாட்டியம்
ஆட வேண்டியுள்ளது. பக்தியிலும் கூட அநேகர் நாட்டியமாடுகின்றனர். நாலாபுறமும் சுற்றி வந்து
நாட்டியமாடுகின்றனர். ஞானத்தின் நாட்டியமோ முற்றிலும் சுலபமானதாகும். அதில் கர்மேந்திரியங்கள் அதிகமாக
செயல்படுகின்றன. முயற்சி செய்ய வேண்டியுள்ளது. இதுவோ உள்ளுக்கள் மட்டும் ஞான நாட்டியம்
நடைபெறுகின்றது. சிருஷ்டிச் சக்கரம் எப்படிச் சுற்றுகிறது லி அந்த ஞானம் புத்தியில் உள்ளது. இதில் எந்த ஒரு
கஷ்டமும் இல்லை. ஆம், நினைவில் முயற்சி தேவைப் படுகிறது. குழந்தைகளில் அநேகர் ஃபெயிலாகி
விடுகின்றனர். எங்கேயாவது கீழே விழுந்து விடுகின்றனர். அனைத்திலும் முக்கிய விசயம் லி பெயர்லிவடிவங்களில்
சிக்கிக் கொள்ளக் கூடாது. ஆண்லிபெண் காமவசமாகி பெயர்லிவடிவங்களில் சிக்கிக் கொள்கின்றனர் இல்லையா?
கோபம், பெயர்லிவடிவங்களில் சிக்க வைப்பதில்லை. முதல்லிமுதலில் இதில் மிகவும் கவனமாக இருக்க
வேண்டும்லிஎந்த ஒருவரின் பெயர்லிவடிவத்திலும் சிக்கக் கூடாது. தன்னை ஆத்மா என உணர வேண்டும். நாம்
ஆத்மா அசரீரியாக வந்தோம், அசரீரி ஆகிச் செல்ல வேண்டும். இந்த சரீரத்தின் உணர்வை விட வேண்டும்.
இந்தப் பெயர்லிவடிவத்தில் சிக்குவதென்பது மிகவும் கெட்ட நோயாகும். பாபா குழந்தைகளுக்கு எச்சரிக்கை
தருகிறார். ஒரு சிலர் இவ்விசயத்தைப் புரிந்துக் கொள்வதில்லை. பெயர்லிவடிவத்தில் சிக்கியிருக்கிறீர்கள் என்று
பாபா வீணாகச் சொல்கிறார் என்று அவர்கள் சொல்கின்றனர். ஆனால் இது மறைமுகமான நோயாகும். அதனால்
நாயகன் நாயகிகளை, அல்லது தந்தை குழந்தைகளை எழுப்புகிறார். குழந்தைகளே, எழுந்திருங்கள், இப்போது
மீண்டும் கலியுகத்திற்குப் பிறகு சத்யுகம் வரப் போகிறது. பாபா ஜோதியைப் பிரகாசிக்கச் செய்வதற்காக வந்துள்ளார்.
மனிதர்கள் இறந்து விட்டால் அவர்களின் ஜோதியை ஏற்றி வைக்கின்றனர். பிறகு தீபத்தை அணைந்து
விடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்கின்றனர். ஆத்மா இருளில் இருந்துவிடக் கூடாது. உண்மையில் இவை
அனைத்தும் பக்தி மார்க்கத்தின் விசயங்கள். ஆத்மாவோ ஒரு விநாடியில் சென்று விடுகிறது. அநேக மனிதர்கள்
ஜோதியையும் கூட பகவான் என ஏற்றுக் கொண்டுள்ளனர். பிரம்மத்தைப் பெரிய ஜோதி எனச் சொல்கின்றனர்.
பிரம்ம சமாஜத்தினருக்குக் கோவில் உள்ளது. அங்கே இரவும் பகலும் ஜோதி ஏற்றி வைக்கின்றனர். எவ்வளவு
செலவு ஆகின்றது! நெய் தவறாகச் செலவாகிறது. அங்கே அதை இட வேண்டிய தேவை கிடையாது. நினைவு
நெய்யின் வேலையைச் செய்கிறது. நினைவு என்பது நெய் போன்றது. ஆக, இனிமையிலும் இனிமையான
குழந்தைகள் இதைப் புரிந்து கொண்டுள்ளனர். புதிய விசயமாக இருப்பதன் காரணத்தால் தான் சண்டை
நடைபெறுகின்றது. பாபா சொல்கிறார், நான் வருவது, இனிமையான குழந்தைகளிடம். பாரதத்தில் தான் வருகிறேன்.
ஒருவருக்கு தான் பிறந்த தேசம் பிரியமானதாக இருக்குமல்லவா? மீண்டும் நான் எனது பாரத தேசத்தில் தான்
வருகிறேன். கீதையில் கிருஷ்ணரின் பெயர் இல்லாதிருந்தால் மனிதர்கள் அனைவரும் சிவபாபாவை ஏற்றுக்
கொண்டிருப்பார்கள். சிவாலயத்திற்கு எவ்வளவு பேர் செல்கின்றனர்! பெரியதிலும் பெரிய கோவிலாக சோமநாதர்
(2/4)
10.08.2016
கோவில் இருந்தது. இப்போதோ எவ்வளவு ஏராளமான கோவில்கள் உருவாகியுள்ளன! எல்லையற்ற தந்தையை
ஏற்றுக் கொண்டது போல் கிருஷ்ணரை இந்த அளவுக்கு அனைவரும் ஏற்றுக் கொள்வதில்லை. ஆக, இந்தச்
சமயம் இவரைப் போôன்ற பிரியமான பொருள் உங்களுக்கு வேறெதுவும் இல்லை. இதில் பிரம்மாவிற்கு
மகிமை எதுவும் கிடையாது. இதுவோ நிராகாரின் மகிமை, அவர் எதையும் அனுபவிக்காதவர். எல்லையற்ற
தந்தை சொர்க்கத்தைப் படைப்பவர் என்றால் அவரிடமிருந்து சொர்க்கத்தின் ஆஸ்தி பெறுவதற்கான புருஷார்த்தம்
செய்ய வேண்டும் இல்லையா?
இன்றுலிநாளை எனச் சொல்லியே காலன் ஒரு நாள் விழுங்கி விடுவான். சமயம் இன்னும் கொஞ்சம் தான்
பாக்கி உள்ளது. பாபாவிடமிருந்து ஆஸ்தியையோ பெற்றுக் கொள்ளுங்கள். எப்போது கருத்தை (ஆராய்வை)
எழுதுகின்றனரோ, அப்போது புரிய வைக்கவும் வேண்டும். அவர் எல்லையற்ற தந்தை என நிச்சயம் செய்கிறீர்கள்
என்றால் தந்தையிடமிருந்து ஆஸ்தி பெறுவதற்கான முயற்சி செய்யுங்கள். இல்லையென்றால் வெளியில்
சென்றதுமே மறந்து விடுவீர்கள். பாபாவோ கல்யாண்காரி (நன்மை செய்பவர்) இல்லையா? பாபா சொல்கிறார்,
இந்த யோகத்தினால் தான் உங்களுடைய அனைத்து துக்கங்களும் விலகிப் போகும். பெண்குழந்தைகள்
வீட்டிலும் கூட, இப்போது அனைத்து துக்கங்களையும் போக்கக் கூடியவராகிய எல்லையற்ற தந்தையை
நினைவு செய்வதால் தான் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆவீர்கள் என்று புரிய வைத்துக் கொண்டே
இருக்க வேண்டும். தூய்மையாகவோ அவசியம் இருக்க வேண்டும். தூய்மையின் விசயம் முக்கியமானதாகும்.
எவ்வளவுக்கெவ்வளவு நினைவில் அதிகமாக இருப்பீர்களோ, அந்த அளவுக்கு இந்திரியங்களும் சாந்தமாகி
விடும். யோகத்தின் சித்தி (குறிக்கோள்) முழுமையாகாத வரை இந்திரியங்களும் கூட சாந்தமாகாது. ஒவ்வொருவரும்
தன்னை சோதிக்க வேண்டும்லிகாமவிகாரம் என்னை ஏமாற்றாமல் உள்ளதா? நான் பக்கா யோகியாக இருக்கிறேன்
என்றால் எந்த ஒரு சஞ்சலமும் இருக்கக் கூடாது. இது வானப்ரஸ்த நிலை போலத்தான்லிஇதில் பாபாவை
நினைவு செய்து கொண்டே இருக்க வேண்டும். பாபா குழந்தைகள் அனைவருக்குமே புரிய வைக்கிறார்.
எப்போது நீங்கள் நல்ல யோகியாக ஆகிறீர்களோ, கண்கள் எங்கும் சிக்கிக் கொள்ளாமல் இருக்குமானால் பிறகு
உங்கள் இந்திரியங்கள் சாந்தமாகி விடும். இது அனைவரையும் ஏமாற்றக் கூடியது என்பது முக்கியமாகும்.
யோகத்தில் மனநிலையும் நல்லபடியாக உறுதியாகி விடும். பிறகு நாம் இளமையிலேயே வானப்ரஸ்த நிலையை
அடைந்து விட்டோம் என அனுபவம் ஆகும். பாபா சொல்கிறார்லிகாமம் மகாசத்ரு. ஆக, தன்னைச் சோதித்துக்
கொண்டே இருங்கள். எவ்வளவு நினைவில் இருக்கிறீர்களோ, அவ்வளவு கர்மேந்திரியங்கள் சாந்தமாகிக்
கொண்டே செல்லும். மேலும் மிக இனிமையான சுபாவம் அமைந்து விடும். நான் முதலில் எவ்வளவு
கடுமையாக இருந்தேன், இப்போது எவ்வளவு இனிமையானவனாக மாறி விட்டேன் என்பது அனுபவமாகும்.
பாபா அன்பின் கடல் இல்லையா, அதனால் குழந்தைகளும் அது போல் ஆக வேண்டும். ஆகவே பாபா
சொல்கிறார், அனைவரிடமும் அன்பின் பார்வை இருக்க வேண்டும். யாருக்காவது துக்கம் கொடுப்பீர்களானால்
துக்கமடைந்தே இறந்து விடுவீர்கள். அதனால் மிகவும் இனிமையானவராக ஆக வேண்டும்.
பாபா சொல்கிறார் லி நான் ரூப்லிபஸந்த் (யோகி மற்றும் ஞானி) இல்லையா? பாபாவிடமிருந்து எவ்வளவு
விலை மதிக்க முடியாத ஞான ரத்தினங்கள் கிடைக்கின்றன! அவற்றால் நீங்கள் (புத்தி என்ற) பையை நிரப்பிக்
கொள்கிறீர்கள். அந்த மனிதர்கள் சங்கருக்கு முன் போய்க் கேட்கின்றனர்லிபையை நிரப்புங்கள் என்று. சங்கர்
பையை நிரப்புகிறவர் இல்லை என்பது அவர்களுக்குத் தெரியாது. இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்,
ஞானக்கடலான பாபா குழந்தைகளாகிய நமது பையை ஞான ரத்தினங்களால் நிரப்புகிறார். நீங்களும் ரூப்லிபஸந்த்
(யோகி மற்றும் ஞானிகள்). ஒவ்வொருவரின் ஆத்மாவும் ரூப்லிபஸந்த். தன்னைத் தான் பார்த்துக் கொண்டே
இருங்கள்லிநாம் எவ்வளவு ஞான ரத்தினங்களை தாரணை செய்து, ஞான நாட்டியம் ஆடுகிறோம், அல்லது
ஞான ரத்தினங்களை தானம் செய்கிறோம்? அனைத்திலும் நல்ல ரத்தினம் மன்மனாபவ என்பது. தந்தையை
நினைவு செய்வதன் மூலம் தந்தையின் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். எப்படி பாபாவிடம் ஞானம் நிறைந்துள்ளதோ,
அது போல் பாபா அமர்ந்து குழந்தைகளைத் தமக்குச் சமமாக ஆக்குகிறார். குருமார்களும் தங்களுக்குச்
சமமாக ஆக்குகின்றனர். இவர் எல்லையற்ற தந்தை, இவருடைய ரூபம் புள்ளி. உங்களுடைய வடிவமும்
புள்ளி தான். உங்களைத் தமக்குச் சமமாக ஞானக்கடலாக ஆக்குகிறார். எவ்வளவு தாரணை செய்கிறார்களோ,
செய்விக்கிறார்களோ....... அவர்கள் நமக்கு உயர்ந்த பதவி என்று புரிந்து கொள்வார்கள். அநேகருக்கு நன்மை
செய்பவராக ஆவீர்களானால் அநேகரின் ஆசீர்வாதம் கிடைக்கும். பாபாவும் தினந்தோறும் சேவை செய்கிறார்
இல்லையா? இந்த குல்ஜார் குழந்தை எவ்வளவு இனிமையாகப் புரிய வைக்கிறது! அனைவருக்கும் பிடித்திருக்கிறது.
இப்படிப்பட்ட பிராமணி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என மனம் எண்ணுகிறது. இப்போது ஒரு
பிராமணி எல்லா இடங்களுக்குமோ செல்ல இயலாது. பிறகும் பாபா சொல்கிறார், தான் நன்றாகப் புரிய வைப்பதாக
யார் நினைக்கிறார்களோ, அவர்கள் ஆல்ரவுண்டு சேவை செய்ய வேண்டும். தானாகவே ஆர்வம் வர வேண்டும்.
நான் சென்டர்களைச் சுற்றி வருவேன்........ நான் அநேகருக்கு நன்மை செய்ய முடியும், எனது நல்ல நறுமணம்
(3/4)
10.08.2016
பரவுகிறது என யார் புரிந்து கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் 10லி15 தினங்கள் சென்று சென்டர்களைச் சுற்றி
விட்டு வருவேன் என்ற ஆர்வம் கொள்ள வேண்டும்.. ஒருவரைப் பார்த்துப் பிறகு மற்றவர்களும் கற்றுக்
கொள்வார்கள். யார் செய்வார்களோ, அவர்கள் அடைவார்கள். இந்த சேவை மிகவும் நன்மை செய்யக் கூடியது.
நீங்கள் மனிதர்களுக்கு உயிர்தானம் கொடுக்கிறீர்கள். இது மிகவும் உத்தமத்திலும் உத்தமமான காரியம்.
பணியில் இருப்பவர்களும் யுக்தியுடன் நேரம் ஒதுக்கி சேவைக்காகச் செல்ல முடியும். சேவையில் ஈடுபாடு
உள்ளவர்கள் மீது பாபா அன்பு செலுத்தவும் செய்வார். பாலனையும் செய்வார். யாருக்கு சேவையில் ஆர்வம்
உள்ளதோ. அவர்கள் சேவை இல்லாமல் இருக்க முடியாது. பாபா உதவியும் செய்கிறார் இல்லையா? குழந்தைகள்
மிகவும் இரக்க மனம் உள்ளவர்களாக ஆக வேண்டும். பாவம், அவர்களின் உலகத்தார் வாழ்க்கை மிகவும்
துக்கம் நிறைந்தது. நீங்கள் உயிர் தானம் கொடுக்கிறீர்கள். யாருக்காவது அவிநாசி ஞான ரத்தினங்களின் தானம்
கொடுப்பதைப் போன்ற சர்வோத்தம ஞான தானம் வேறெதுவும் கிடையாது. மிகவும் கருணை உள்ளம்
கொண்டவராக ஆக வேண்டும். பிராமணி பலவீனமாக இருக்கும் காரணத்தினால் சேவை மந்தமாக ஆகி
விடுகிறது. அதனால் நல்ல டீச்சர் வேண்டும் எனக் கேட்கின்றனர். எப்போதெல்லாம் சிந்தனை வருகிறதோ,
அப்போது சேவைக்காகச் சென்று விட வேண்டும். பாபா, எந்த சென்டர் மந்தமாக உள்ளது, நான் போயச்
சுற்றிவிட்டு வர வேண்டும். கண்காட்சிக்கான சித்திரங்களும் உள்ளன. சித்திரங்களை வைத்துப் புரிய வைப்பதால்
மிக நன்றாகப் புரிந்து கொள்வார்கள். நாம் சேவையை எப்படி அதிகப் படுத்துவது என்பது பற்றிச் சிந்தனை
செய்ய வேண்டும். பாபாவும் அனைவரின் வாழ்க்கையை வைரம் போன்றதாக ஆக்குகிறார். குழந்தைகள்
நீங்களும் கூட சேவை செய்ய வேண்டும். வந்தே மாதரம் எனப் பாடப் பட்டுள்ளது. ஆனால் அர்த்தத்தைப்
புரிந்து கொள்ளவில்லை. பதீத் மனிதர்களின் அல்லது (வசித்த) பூமி முதலியவற்றின் வந்தனை ஒரு போதும்
செய்ய்ப் படுவதில்லை. இதுவோ 5 தத்துவங்களால் உருவாக்கப் பட்ட சரீரம் என்றால் சரீரத்திற்குப் பூஜை
செய்வதென்பது பூதத்தின் பூஜை ஆகின்றது. சிவபாபாவுக்கோ சரீரம் கிடையாது. அவருக்கு செய்ய்ப் படும்
பூஜை அனைத்திலும் உத்தமமானது. மற்றவை மத்திமம் (இடைப்பட்டது). தற்சமயமோ மனிதர்களுக்கும்
கூடப் பூஜை செய்து கொண்டே இருக்கின்றனர். அவர்கள் தூய்மையற்றவர்கள் மகான் ஆத்மாக்களோ, தேவதைகள்
ஆவர். சந்நியாசிகளைக் காட்டிலும் அவர்கள் அதிகத் தூய்மையானவர்கள்.
இப்போது குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், நாம் தேவதை ஆகிக் கொண்டிருக்கிறோம். பாபா நமக்கு
இந்த அவிநாசி ஞான ரத்தினங்களை தானம் செய்வதற்குக் கற்றுத் தருகிறார். இதைப் போன்ற உயர்ந்த தானம்
வேறு எதுவும் கிடையாது. ஒரு தந்தையை மட்டுமே நினைவு செய்ய வேண்டும். சிவன் மற்றும்
லட்சுமிலிநாராயணரின் சித்திரங்களோ இருக்கின்றன. ஒவ்வொருவரும் அவர்களின் வீட்டில் வைத்திருந்தால்
நினைவிருக்கும். சிவபாபா நம்மை இந்த லட்சுமிலிநாராயணர் போல ஆக்கிக் கொண்டிருக்கிறார். இச்சமயம்
நீங்கள் அது போல் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். சொர்க்கத்தைப் படைப்பவர் சிவபாபா. சத்யுகத்திலோ ஆஸ்தி
தர மாட்டார். இந்தக் கடைசிப் பிறவியில் சிவபாபா சொல்கிறார், என்னை நினைவு செய்வீர்களானால் நீங்கள்
இது போல் ஆவீர்கள். மற்ற அனைத்து விசயங்களையும் விட்டுவிட்டு சேவை மற்றும் சேவை தான்
முக்கியம். பாபாவை நினைவு செய்து கொண்டே இருங்கள் லி இதுவும் கூடப் பெரிய சேவை செய்வதாகும்.
தத்துவங்கள் முதலிய அனைத்தும் தூய்மையாகி விடும். யோகத்தின் மகிமை மிகப் பெரியதாகும். உலகத்தில்
யோக ஆசிரமங்களோ அநேகம் உள்ளன. ஆனால் அவை அனைத்தும் சரீர சம்மந்தமான ஹடயோகங்கள்.
உங்களுடையது இராஜயோகமாகும். இதனால் உங்கள் துன்பங்கள் விலகிப் போய் விடும். அந்த அநேக
விதமான ஹடயோகம் முதலியவற்றால் ஏணிப்படியில் இறங்கியே வந்திருக்கிறீர்கள். முக்கியமான விசயம்
நினைவினுடையதாகும். பார்க்க வேண்டும், நமது மனம் எங்காவது விகாரத்தின் பக்கம் போகாமல் இருக்கிறதா?
விகாரிகள் தான் (பதீத்) தூய்மையற்றவர்கள் எனச் சொல்லப் படுகின்றனர். அதாவது சோழி போன்றவர்கள்.
விகாரத்தில் விழுவதால் தனக்குத் தானே நஷ்டம் ஏற்படுத்திக் கொள்கின்றனர். யார் செய்கிறார்களோ, அவர்கள்
பலன் அடைவார்கள். பாபா பார்த்தாலும் சரி, பார்க்கவில்லை என்றாலும் சரி. தன்னைத் தான் சோதிக்க
வேண்டும் லி நாம் பாபாவின் சேவை செய்கிறோமா? நமக்குள் ஏதேனும் அவகுணம் இல்லாதிருக்கிறதா?
இருந்தால் வெளியேற்றி விட வேண்டும். தன்னிடமிருந்து அவகுணங்களை வெளியேற்றுவதற்காக பாபா
நிறைய யுக்தி சொல்லிப் புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார். நிர்குணம் என்பதன் அர்த்தமும் கூட
யாருக்கும் புரியவில்லை. நிர்குண பாலகர்களின் (குழந்தைகளின்) மண்டலி (சபை) என்ன செய்ய முடியும்,
அவர்களிடம் எந்த ஒரு குணமும் இல்லாத போது? அர்த்தம் இல்லாமல் என்ன வருகிறதோ, அதைச் சொல்லி
விடுகின்றனர். அநேக வழிமுறைகள் உள்ளன இல்லையா? உங்களுக்கு ஒரே வழிமுறை கிடைக்கிறது. இதனால்
உங்களுக்கோ அளவற்ற குμ இருக்க வேண்டும். பாபா இதை மட்டும் சொல்கிறார் லி என்னை நினைவு
செய்யுங்கள் மற்றும் தாமரை மலருக்குச் சமமாக ஆகுங்கள். மனம்லிசொல்லிசெயலால் தூய்மையாகுங்கள். குழந்தைகள்
நீங்கள் அறிவீர்கள், பிராமணர்களாகிய நாம் ஸ்ரீமத் படி நம்முடைய உடல்லிமனம்லிசெல்வத்தினால் தங்களுக்கும்
முழு உலகத்திற்கும் சேவை செய்து கொண்டிருக்கிறோம். பாபா பாரதத்தில் தான் வருவார் இல்லையா?
(4/4)
10.08.2016
பாண்டவர்கள் நீங்கள் பாரதத்தை சொர்க்கமாக ஆக்குகிற சேவை செய்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள்
தங்களுடைய காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறீர்கள். கடைசியில் வெற்றி பாண்டவர்களுக்குத் தான் கிடைக்கப்
போகிறது. இதில் சண்டையின் விசயம் கிடையாது. நீங்கள் இரட்டை அஹிம்சையாளர்கள். விகாரத்திலும்
செல்வதில்லை, துப்பாக்கியால் சுடுவதும் இல்லை. வன்முறையினால் யாரும் உலகின் மீது இராஜ்யம் (அரசாட்சி)
செய்ய இயலாது. பாபா புரிய வைத்துள்ளார்லிஅந்த இருவரும் (கிறிஸ்தவர்கள்) தங்களுக்குள் ஒன்று பட்டால்
உலகின் மீது இராஜ்யம் செய்ய முடியும். ஆனால் டிராமாவில் அது போல் இல்லை. கிறிஸ்தவர்கள் தான்
கிருஷ்ணபுரியை அபகரித்துள்ளனர். முதலில் பாரதம் கிருஷ்ணரின் புரியாகத் (இராஜ்யமாகத்) தான் இருந்தது
இல்லையா? அவர்கள் சண்டையிட்டு இராஜ்யத்தை அடைந்தனர், நிறைய செல்வத்தை அள்ளிச் சென்றனர்.
இப்போது மீண்டும் செல்வம் திரும்பி வந்து கொண்டிருக்கிறது. மேலும் நீங்கள் மீண்டும் உலகத்தின் எஜமானர்
ஆகி விடுகிறீர்கள். பாபா எவ்வளவு யுக்திகள் சொல்கிறார்! அவர்கள் தான் உங்கள் இராஜ்யத்தை அபகரித்துக்
கொண்டனர். பிறகு அவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றனர். உலகத்தின் அதிபதியாக நீங்கள்
ஆகிறீர்கள். எவ்வளவு பெரிய இராஜ்யம்! முயற்சி இதில் மட்டுமே உள்ளதுலிநினைவு செய்து கொண்டே
இருங்கள், தங்களின் ஆஸ்தியைப் பெறுங்கள். இதில் சலிப்படையக் கூடாது. நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும்
தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம் :
1) மற்ற அனைத்து விசயங்களையும் விட்டுவிட்டு ஞான தானம் செய்ய வேண்டும். ரூப்லிபஸந்த்
(யோகிலிஞானி) ஆக வேண்டும். தன்னுடைய அவகுணங்களை நீக்குவதற்கான முயற்சி செய்ய
வேண்டும். மற்றவர்களைப் பார்க்கக் கூடாது.
2) தன்னுடைய சுபாவத்தை மிக இனிமையானதாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
அனைவரிடத்தும் அன்பு நிறைந்த பார்வை வைக்க வேண்டும். யாருக்கும் துக்கம் கொடுக்கக்
கூடாது. கர்மேந்திரியங்களை வென்றவராக ஆக வேண்டும்.
வரதானம் : களைத்துப் போன மற்றும் தவித்துக் கொண்டிருக்கும் ஆத்மாக்களுக்கு சித்தி
(வெற்றி) தரக்கூடிய கடவுளின் சேவாதாரி ஆகுக !
ஆத்மாக்களுக்கு நீண்ட காலமாக நிர்வாண் (சப்தத்திற்கு அப்பாற் பட்ட) முக்தி தாமம் செல்ல வேண்டும்
என்ற இச்சை அல்லது ஆசை உள்ளது. இதற்காகத் தான் அநேகப் பிறவிகளாக அநேக விதமான சாதனைகள்
செய்துலிசெய்தே களைத்துப் போயுள்ளனர். இப்போது ஒவ்வொருவரும் சித்தியை விரும்புகின்றனர். சாதனையை
அல்ல. சித்தி என்றால் சத்கதி லி ஆக, அத்தகைய தவித்துக் கொண்டிருக்கும், களைத்துப் போன, தாகத்தில்
இருக்கும் ஆத்மாக்களின் தாகத்தைத் தணிப்பதற்காக சிரேஷ்ட ஆத்மாக்களாகிய நீங்கள் தங்களின் அமைதியின்
சக்தி மற்றும் சர்வ சக்திகளால் ஒரு விநாடியில் விருப்பத்தை நிறைவேற்றுங்கள் அப்போது கடவுளின் சேவாதாரிகள்
எனச் சொல்வார்கள்.
சுலோகன் : பலவீனமான சம்ஸ்காரம் தான் மாயா என்ற திருடன் வருவதற்கான வாசல்.
இப்போது அந்த வாசலை மூடி விடுங்கள்.
(1/4)
11.
08.2016, காலை முரü ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! நாங்கள் எங்களுடைய யோக பலத்தின் மூலமாகவே பாரதத்தை
சொர்க்கமாக ஆக்குவோம், அங்கே ஒரு தர்மம், ஒரு இராஜ்யம் இருக்கும் என நீங்கள்
உத்திரவாதம் கொடுக்கின்றீர்கள்.
கேள்வி: மாயையின் எந்த தடையிலிருந்து பாதுகாப்பாக இருக்கும் குழந்தைகள் மிக நல்ல
அதிசயத்தை செய்ய முடியும்?
பதில்: மாயையின் மிகப் பெரிய தடை என்னவென்றால் தேக அபிமானத்தில் கொண்டு வந்து ஒருவர்
மற்றவரின் பெயர் உருவத்தில் சிக்க வைப்பது ஆகும். எந்த குழந்தைகள் இந்த தடையில் இருந்து பாதுகாப்பாக
இருக்கின்றனரோ, மாயையின் (ஜாலவலையில்) பிடியில் இருந்து தப்பிக்கின்றனரோ அவர்கள் மிகவும் அதிசயம்
செய்து காட்டுகின்றனர். அவர்களின் புத்தியில் சேவைக்கான புதிய புதிய சிந்தனைகள் ஓடிக் கொண்டே
இருக்கும். ஆத்மலிஅபிமானி ஆகும்போது சேவையில் முன்னேற்றம் ஏற்படும்.
ஓம் சாந்தி. தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஸ்ரீமத் (உயர்ந்த வழி) கொடுப்பதற்காக வந்திருக்கிறார்.
மிகக் குறைந்த சமயத்திற்குள் நாடகத்தின் திட்டப்படி அனைத்து காரியங்களும் நடந்தாக வேண்டும் என்பதை
குழந்தைகள் அறிவார்கள். நாம் இராவணபுரியை கிருஷ்ணபுரியாக ஆக்குகிறோம். இப்போது தந்தையும் குப்தமாக
(மறைமுகமாக) இருக்கிறார் எனும்போது படிப்பும் கூட குப்தமாக உள்ளது. செண்டர்கள் நிறைய உள்ளன.
சிறிய பெரிய கிராமங்களில் செண்டர்கள் உள்ளன மற்றும் குழந்தைகளும் நிறைய பேர் உள்ளனர். மேலும்
நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருப்பார்கள். நாங்கள் இந்த பாரத பூமியை சொர்க்கமாக்கி விட்டுத்தான்
ஓய்வோம் என புத்தகங்களிலும் எழுதுகின்றனர். உங்களுக்கு இந்த பாரத பூமி மிகவும் பிடித்தமானது
ஏனென்றால் இந்த பாரதமே சொர்க்கமாக இருந்தது. அதற்கு 5000 ஆயிரம் வருடங்கள் ஆகின்றன. பாரதம்
மிகவும் கௌரவம் (புகழ்) மிக்கதாக இருந்தது. பிரம்மா முக வம்சாவளி குழந்தைகளாகிய உங்களுக்குத்தான்
இந்த ஞானம் உள்ளது. இந்த பாரதத்தை ஸ்ரீமத்படி சொர்க்கமாக ஆக்க வேண்டியுள்ளது. அனைவருக்கும்
வழி காட்ட வேண்டும், வேறு எந்த பிரச்னைக்குரிய விசயமும் இங்கே கிடையாது. இந்த படங்களைப்
போடுவதன் மூலம் செய்தித்தாள்களில் என்ன விளம்பரத்தை கொடுக்கலாம் என தங்களுக்குள் அமர்ந்து
ஆலோசிக்க வேண்டும். தங்களுக்குள் இது குறித்து கலந்துரையாடல் செய்ய வேண்டும் லி அந்த மனிதர்கள்
தங்களுக்குள் அமர்ந்து பாரதத்தை எப்படி முன்னேற்றலாம் என ஆலோசனை செய்வது போல. இந்த
கொள்கை வேறுபாடுகள் அதிகமாகிவிட்டது மற்றும் பாரதத்தில் எப்படி சுகம் அமைதியின் ஸ்தாபனை ஏற்படுவது
அதனை நமக்குள் கலந்தாலோசித்து சரிப்படுத்த வேண்டும். அப்படி நீங்களும் கூட ஆன்மீக பாண்டவ
அரசாங்கமாக இருக்கிறீர்கள், இது பெரிய ஈஸ்வரிய அரசாங்கமாகும். பதித பாவன தந்தைதான் தூய்மையான
குழந்தைகளை தூய்மையாக்கி தூய்மையான உலகின் எஜமானாக ஆக்குகிறார். இந்த ரகசியத்தை குழந்தைகளாகிய
நீங்கள் அறிவீர்கள். ஆதி சனாதன தேவி தேவதா தர்மமே முக்கியமானதாகும். இது ருத்ர ஞான யக்ஞமாகும்.
ருத்ரன் என சிவபாபா சொல்லப்படுகிறார். இப்போது தந்தை உங்களை விழிப்படைய செய்திருக்கிறார், நீங்கள்
மற்றவர்களை விழிப்படையச் செய்ய வேண்டும். நாடகத்தின் திட்டப்படி நீங்கள் விழிப்புணர்வூட்டிக்
கொண்டிருக்கிறீர்கள். இதுவரை யார் யார் எப்படி எப்படி முயற்சி செய்திருக்கின்றனரோ அவ்வளவுதான்
கல்பத்திற்கு முன்பும் கூட செய்திருக்கின்றனர். உங்களுடையது ஆன்மீக யுத்தமாகும். சில சமயம் மாயையின்
தாக்கம், சில சமயம் ஈஸ்வரனுடையது. சில சமயம் சேவை நன்றாக வேகத்துடன் நடக்கிறது. சில சமயம்
பல குழந்தைகளுக்குள் மாயையின் தடைகள் உண்டாகிறது. மாயை ஒரேயடியாக மயக்கமடையச் செய்து
விடுகிறது. சண்டைக்கான மைதானமாக உள்ளது அல்லவா. மாயை ராமனின் குழந்தைகளை மயக்கமடையச்
செய்து விடுகிறது. லவலிகுசாவின் கதையும் உள்ளது அல்லவா. ராமனின் இரண்டு குழந்தைகளைக் காட்டியுள்ளனர்.
இங்கேயோ பாபாவுக்கு அளவற்ற குழந்தைகள் உள்ளனர். இந்த சமயத்தில் அனைத்து மனிதர்களும்
கும்பகர்ணனின் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். பரமபிதா பரமாத்மா குழந்தைகளுக்கு ஆஸ்தியைக் கொடுப்பதற்
காக வந்துள்ளார் என்பதும் கூட அவர்களுக்குத் தெரியாது. தந்தை பாரதத்தில்தான் வருகிறார். இந்த விசயத்தை
முற்றிலுமாக மறந்து விட்டுள்ளனர். பாரதவாசிகள்தான் சொர்க்கத்தின் எஜமானர்களாக இருந்தனர். இதில் எந்த
சந்தேகமும் கிடையாது. பரமபிதா பரமாத்மாவின் பிறப்பும் இங்கேதான் ஏற்படுகிறது, ஆகையால் சிவஜெயந்தியை
பாரதத்தில் கொண்டாடுகின்றனர். எனவே கண்டிப்பாக அவர் வந்து ஏதாவது செய்திருப்பார். கண்டிப்பாக
தந்தை வந்து சொர்க்கத்தை ஸ்தாபனை செய்திருப்பார் என புத்தியும் சொல்கிறது. தூண்டுதலின் மூலம்
ஸ்தாபனை செய்ய மாட்டார். இங்கே குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கப்படுகிறது. நினைவின்
(2/4)
11.08.2016
யாத்திரை கற்பிக்கப்படுகிறது. சங்கரன் சூட்சும வதனத்தில் இருக்கிறார். நாடகத்தின்படி வினாசம் ஆகவே
வேண்டும். மகாபாரதச் சண்டையில் ஆயுதங்கள் முதலானவை பயன்படுத்தப்பட்டன என பாடப்பட்டுள்ளது.
நடந்து முடிந்தவை அனைத்தும் பிறகு மீண்டும் நடக்கும். நாங்கள் யோகபலத்தின் மூலம் சொர்க்கத்தின்
ஸ்தாபனை செய்வோம், அங்கே ஒரு தர்மம் இருக்கும் என நீங்கள் உத்திரவாதம் கொடுக்கிறீர்கள். எனில்
மற்ற அனைத்து தர்மங்களும் எங்கே இருக்கும்? கண்டிப்பாக வினாசமாகிவிடும். இது புரிந்து கொள்ளக்கூடிய
விசயமாகும். பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை, விஷ்ணுவின் மூலம் பாலனை என பாடப்பட்டுள்ளது சரியே.
ஆனால் சங்கரனை சிவனுடன் சேர்த்துவிட்டனர், இது தவறாகும். சிவலிசங்கரன் என கூறி விடுகின்றனர்,
ஏனென்றால் சங்கரனுக்கு எந்த வேலையும் கிடையாது என்பதால் சிவனுடன் சேர்த்துவிட்டனர். ஆனால்
எனக்கு நிறைய வேலைகள் செய்ய வேண்டியுள்ளது என சிவபாபா சொல்கிறார். அனைவரையும் தூய்மையாக்க
வேண்டும். நான் இந்த பிரம்மாவின் உடலில் பிரவேசம் செய்து இந்த சரீரமுடையவர் மூலம் ஸ்தாபனையின்
காரியம் செய்விக்கிறேன். சங்கரனின் நடிப்பு எதுவும் கிடையாது. சிவனின் பூஜை நடக்கிறது. சிவன்தான்
நன்மை செய்பவர், பையை நிரப்பக்கூடியவர். சிவ பரமாத்மாய நமஹ என சொல்கின்றனர் அல்லவா. இந்த
பிரம்மாவும் பிரஜாபிதாவாக இருக்கிறார். பிரம்மாவே விஷ்ணு, விஷ்ணுவே பிரம்மா லி இவை மிகவும் ஆழமான
விசயங்களாகும். இதனை குழந்தைகளாகிய நீங்கள் மட்டுமே அறிவீர்கள். புத்திசாலி குழந்தைகளின் புத்தியில்
ஞானம் சட்டென புரிந்து விடுகிறது. பதித பாவன தந்தை எப்போது வருவார் என்பது மனிதர்களுக்கு
கொஞ்சமும் புரிவதில்லை. இப்போது கலியுகத்தின் முடிவுக்காலமாக இருக்கிறது. ஒருவேளை கலியுகம் முடிய
இன்னும் 40 ஆயிரம் வருடங்கள் உள்ளன என்றால் இன்னும் எவ்வளவுதான் தூய்மையற்றவர்களாகிக்
கொண்டே செல்வார்கள். எவ்வளவு துக்கத்தைப் பொறுத்துக் கொள்வது? கலியுகத்தில் சுகம் இருக்காது. எதுவும்
தெரியாததால், பாவம் அவர்கள் அடர்ந்த காரிருளில் மூழ்கியுள்ளனர்.
சேவையை எப்படி விருத்தியடைய வைக்கலாம் என குழந்தைகளாகிய நீங்கள் தங்களுக்குள் கலந்து
ஆலோசனை செய்ய வேண்டும். தந்தை திட்டங்களை சொன்னபடி இருக்கிறார், பிறகு குழந்தைகள் தங்களுக்குள்
சந்திக்க வேண்டும். படங்களை வைத்து நல்ல விதமாகப் புரிய வைக்க வேண்டும். இந்த படங்களும்
நாடகத்தின்படி உருவாகியபடி இருக்கின்றன. என்னென்ன சமயம் கடந்து சென்று கொண்டிருக்கிறதோ அது
மீண்டும் மீண்டும் அதே போல நாடகமாக நடந்தபடி இருக்கிறது. குழந்தைகளின் நிலையோ சில நேரம்
மேலே, சில நேரம் கீழே என மாறியபடி இருக்கிறது. பாபாவும் சாட்சியாகிப் பார்க்கிறார். அவ்வப்போது
குழந்தைகளின் மீது கிரகச்சாரம் ஏற்பட்டு விடுகிறது, அதனை நீக்குவதற்கான முயற்சிகளை செய்வித்தபடி
இருக்கிறார். தந்தையை நினைவு செய்யுங்கள் என அடிக்கடி கூறுகிறார். ஆனால் தேக அபிமானத்தில் வந்து
விடுகின்றனர், ஆகையால் கீழான நிலையை அடைகின்றனர். இதில் ஆத்ம அபிமானி ஆக வேண்டும்.
ஆனால் குழந்தைகளுக்குள் தேக அபிமானம் நிறைய உள்ளது. நீங்கள் ஆத்ம அபிமானியாக இருந்தீர்கள்
என்றால் தந்தையின் நினைவும் இருக்கும், சேவையும் முன்னேறியபடி இருக்கும். யார் உயர்பதவி பெற
வேண்டியவர்களோ அவர்கள் எப்போதும் சேவையில் ஈடுபட்டிருப்பார்கள். அதிர்ஷ்டத்தில் இல்லை என்றால்
முயற்சியும் செய்ய மாட்டார்கள். பாபா எனக்கு தாரணையே ஏற்படவில்லை, புத்தியில் பதியவில்லை என
தாங்களே சொல்கின்றனர். தாரணை ஆகவில்லை என்றால் குμயும் இருக்காது. தாரணை செய்பவர்களுக்கு
குμயும் இருக்கும். சிவபாபா வந்து விட்டுள்ளார் என புரிந்து கொள்வார்கள். குழந்தைகளே நீங்கள் நல்ல
விதமாகப் புரிந்துக் கொண்டு பிறகு மற்றவர்களுக்கும் புரிய வையுங்கள். சிலர் சேவையில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
முயற்சி செய்தபடி இருக்கின்றனர். கடந்து முடிந்த வினாடிகள் அனைத்தும் அப்படியே நாடகத்தில்
பதிவாகியுள்ளன, அவை அப்படியே மீண்டும் மீண்டும் நடக்கும் என குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள்.
வெளியில் சொற்பொழிவு செய்யும்போது பலவிதமான மனிதர்கள் வருகின்றனர் என குழந்தைகளுக்குத்தான்
புரிய வைக்கப்படுகிறது. அனைவரும் வேத சாஸ்திரங்கள், கீதை முதலானவை குறித்துதான் சொற்பொழிவாற்று
கின்றனர் என குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள், அவர்களுக்கு இங்கே ஈஸ்வரன் வந்து தன்னுடைய
மற்றும் படைப்பின் முதல், இடை, கடைசியின் ரகசியத்தைப் புரிய வைக்கிறார் என தெரியாது. பரமாத்மா யார்
என படங்களில் எவ்வளவு நல்ல விதமாக காட்டப்பட்டுள்ளது. இந்த விசயங்களை புரொஜக்டரின் மூலம் புரிய
வைக்க முடியாது. கண்காட்சிகளில் படங்களும் முன்னால் வைக்கப்பட்டுள்ளன, நீங்கள் புரிய வைத்து விட்டு
கேட்கலாம் லி இப்போது சொல்லுங்கள், கீதையின் பகவான் யார்? ஞானக்கடல் யார்? தூய்மை, சுகம், அமைதியின்
கடல், விடுவிப்பவர், வழிகாட்டி யார்? என்று. கிருஷ்ணரைச் சொல்ல முடியாது. பரமாத்மாவின் மகிமை
தனிப்பட்டதாகும். முதலில் எழுத வைக்க வேண்டும், விசாரிக்க வேண்டும், அனைவரிடமும் கையொப்பமும்
பெற வேண்டும்.
(ஹாலில் பறவைகள் சண்டையிட்டுக் கொள்கின்றன) இந்த சமயத்தில் முழு உலகிலும் வெறும் சண்டை
சச்சரவுகள்தான் நடக்கின்றன. மனிதர்களிடமிருக்கும் 5 விகாரங்கள் பாடப்படுகின்றன. விலங்குகளின் விசயம்
11.08.2016
(3/4)
இல்லை. விஷமான உலகம், நிர்விகார உலகம் என்பது மனிதர்கள் குறித்து பாடப்பட்டுள்ளது. கலியுகத்தில்
இருப்பது அசுர சம்பிரதாயம், சத்யுகத்தில் இருப்பது தெய்வீக சம்பிரதாயம். நாம்தான் அசுர சம்பிரதாயம் என
கொஞ்சமும் புரிந்து கொள்ள முடியாத அளவு மனிதர்களின் புத்தி தமோபிரதானமாக இருக்கிறது.
தேவதைகளுக்கு முன்பாகச் சென்று பாடவும் செய்கின்றனர் லி நாங்கள்தான் கீழான பாவிகள், குணங்களற்ற
எங்களிடம் எந்த குணமும் இல்லை. நீங்கள் அவர்களுக்கு நிரூபித்து புரிய வைக்க முடியும். ஏணிப்படத்தில்
மிகவும் தெளிவாக உள்ளது. எப்படி ஏறும் கலை மற்றும் இறங்கும் கலை ஏற்படும் என காட்டப்பட்டுள்ளது.
பாரதவாசிகளுக்கு ஏணிப்படிகளின் படம் மிக முக்கியமானதாகும். இது அனைத்தையும் விட நல்ல சாதனம்.
இந்த படத்தை வைத்து நன்றாகப் புரிய வைக்க முடியும். 84 பிறவிகளை முடித்துக் கொண்டு பிறகு முதல்
பிறவி எடுக்க வேண்டும், பிறகு இறங்கும் கலையிலிருந்து மீண்டும் ஏறும் கலையில் செல்ல வேண்டும்.
அனைவருக்கும் எப்படி வழி காட்டலாம் என அனைவருக்குள்ளும் சிந்தனை ஓட வேண்டும். சிந்தனை
செய்யாவிட்டால் எப்படி சேவை செய்ய முடியும்? படங்களை வைத்து புரிய வைப்பது மிகவும் சகஜமாக
இருக்கும். சத்யுகத்திற்குப் பிறகு ஏணியில் இறங்கத்தான் வேண்டும். நாம் இப்போது இட மாற்றல் (டிரான்ஸ்ஃபர்)
ஆகிக் கொண்டிருக்கிறோம் என குழந்தைகளுக்குத் தெரியும். ஆனால் நேராக சத்யுகத்திற்குச் செல்வதில்லை.
முதலில் சாந்தி தாமத்திற்குச் செல்ல வேண்டும். நாம் நடிகர்கள் என நீங்கள் அறிவீர்கள். மற்றபடி உங்களிலும்
கூட தன்னை இந்த நாடகத்தின் நடிகர் என புரிந்து கொள்வதில் வரிசைக்கிரமமாக உள்ளனர். நாம் எழுதவும்
செய்கிறோம் லி அனைத்து மனிதர்களுமே இந்த எல்லைக்கப்பாற்பட்ட நாடகத்தின் நடிகர்களாக இருந்தும்
நாடகத்தின் முக்கிய நடிகர்கள், இயக்குநர் மற்றும் நாடகத்தின் முதல், இடை, கடைசி பற்றி அறிவதில்லை.
ஆக அவர்கள் புரியாதவர்களாக உள்ளனர். இதை எழுதுவதில் ஏதும் பிரச்சினை இல்லை. ஒரு காதில் கேட்டு
இன்னொரு காதில் விட்டு விடக்கூடாது. சேவை, சேவை மற்றும் சேவை. குழந்தைகளின் மீது சில சமயங்களில்
கிரகச்சாரம் ஏற்பட்டு விடுகிறது என பாபாவுக்குத் தெரியும். கிரகச்சாரம் ஏற்படும் போது எவ்வளவு நஷ்டம்
ஏற்பட்டு விடுகிறது, அதை தந்தை அறிவார். செல்வந்தர்கள் ஏழைகளாகி விடுகின்றனர். காரணம் இருக்கிறது
அல்லவா. பலருக்கு பாபா புரியவும் வைக்கிறார் லி குழந்தைகளே, பெயர் உருவத்தில் ஒருபோதும் மாட்டக்
கூடாது. இல்லை என்றால் மாயை மூக்கைப் பிடித்து படுகுழியில் விழ வைக்கக் கூடியதாக உள்ளது. மாயை
மிகவும் அடி கொடுத்து விடும். இங்கே பிரியதர்ஷன் லி பிரியதர்μனியாக ஆகி விடக் கூடாது. சிலர் விகாரத்திற்காக
பிரியதர்ஷன் லி பிரியதர்μனியாக ஆகின்றனர், சிலர் வெறும் உருவத்தின் மீது பலியாகின்றனர். செண்டர்களில்
கூட இப்படி மாயையின் தடைகள் உண்டாகின்றன என நீங்கள் அறிவீர்கள், ஒருவர் மற்றவரின் பெயர்
உருவத்தில் மாட்டிக் கொள்கின்றனர். மாதர்கள் மாதர்களின் பெயர் உருவத்தில், கன்யாக்கள் கன்யாக்களின்
பெயர் உருவத்தில் மாட்டிக் கொள்ளும் அளவு மாயை பலம் வாய்ந்ததாக உள்ளது. முயற்சி செய்தபடியே
இருந்தபோதும், மாயை ஒரேயடியாக பிடித்துக் கொள்கிறது, ஆகையால் பாபா எச்சரிக்கை கொடுக்கிறார் லி
குழந்தைகளே, மாயை மிகவும் சிக்க வைக்கப் பார்க்கும், ஆனால் நீங்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது. தேக
அபிமானத்தில் வரக்கூடாது. தன்னை ஆத்மா என புரிந்து தந்தையை நினைவு செய்ய வேண்டும். மாயையின்
ஏமாற்ற வலையிலிருந்து தப்பிக்க வேண்டும். குழந்தைகளாகிய உங்களை மணம் வீசும் மலர்களாக ஆக்க
வந்துள்ளார், உங்களுக்கு எந்த விசயத்திலும் சந்தேகம் எழக் கூடாது. மனதில் சந்தேகம் வந்தது என்றால்
நல்ல விதமாக சேவை செய்ய முடியாது. உள்ளுக்குள் ஏமாற்றம் அடைந்தபடி இருப்பீர்கள். தைரியம் வைக்க
வேண்டும். நேரம் மிகவும் குறைவாக உள்ளது. பாபாவின் முரளியைக் கேட்டீர்கள் என்றால் உற்சாகத்தில்
வருவீர்கள். ஆத்மபிரகாஷ் குழந்தை சரியான முறையில் படங்களின் மீது கவனம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
பம்பாய்காரர்களுக்கும் கூட புத்தியில் வர வேண்டும். முக்கியமான படத்தை முதலில் உருவாக்க வேண்டும்.
சோதனை செய்ய வேண்டும், பாபா எப்படி படங்களால் முன்னேற்றம் காண வேண்டும் என வழி கொடுத்தபடி
இருக்கிறார். ஏணிப்படிகளின் படத்தை விமான நிலையத்தில் வைப்பதற்காக ஏதாவது யுக்தியை உருவாக்க
வேண்டும். இந்தப் படத்தைப் பார்த்து அனைவரும் குμயடைவார்கள். கடைசியில் நமக்கு வழி கொடுப்பவர்
யார் என புரிந்து கொள்வார்கள். ஆக, குழந்தைகளுக்கு மிகவும் போதை ஏற வேண்டும். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு
தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
11.08.2016
(4/4)
ôரணைக்கான முக்கிய சாரம் :
1. குழந்தைகளாகிய நீங்கள் யுத்த மைதானத்தில் இருக்கிறீர்கள், மாயை இராவணனோடு
உங்களுடைய யுத்தம் நடக்கிறது. மாயை மிகவும் தடைகளை ஏற்படுத்துகிறது. குழந்தைகள்
மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
2. அனைவரும் தம்முடைய முன்னேற்றத்தைக் குறித்து சிந்திக்க வேண்டும். படங்களை வைத்து
எப்படி புரிய வைப்பது, சேவையை எப்படி அதிகரிப்பது, படங்களில் மனிதர்கள் சகஜமாக
புரிந்து கொள்ளும்படியாக என்ன போடலாம் (வரையலாம்) என சிந்திக்க வேண்டும்.
வரதானம் : புத்தியின் அன்பை ஒரு பிரியதர்ஷனிடம் ஈடுபடுத்தி எப்போதும் அவருக்கு
முன்பாக இருக்கும் அனுபவம் செய்யக் கூடிய வெற்றி ரத்தினம் ஆகுக.
அன்பான புத்தி அதாவது புத்தியின் ஈடுபாட்டை ஒரு பிரியதர்ஷனிடம் வைத்திருக்க வேண்டும்.
யாருக்கு ஒருவரிடம் அன்பு உள்ளதோ அவர்களின் அன்பு வேறு எந்த மனிதர்களுடனோ அல்லது வசதி
வாய்ப்புகளுடனோ ஏற்பட முடியாது. யார் எப்போதும் பாப்தாதாவை தன் எதிரில் இருக்கும் அனுபவத்தைச்
செய்வார்களோ, அவர்களுக்கு மனதால் கூட உயர்ந்த வழி(ஸ்ரீமத்)க்கு விரோதமான வீண் எண்ணங்கள்
அல்லது தீய எண்ணங்கள் வர வாய்ப்பில்லை. உங்களிடம்தான் உண்பேன், உங்களுடன்தான் அமர்வேன். .
. உங்களுடன்தான் அனைத்து சம்மந்தங்களையும் வைப்பேன். . . இந்த வார்த்தைகள்தான் அவர்களின்
வாயிலிருந்தும் மனதிலிருந்தும் வெளிப்படும். இப்படிப்பட்ட அன்பான புத்தியாக உள்ளவர்கள்தான் வெற்றி
ரத்தினம் ஆகின்றனர்.
சுலோகன் : வேண்டும்லிவேண்டும் என்ற எண்ணம் வருவதும்
கூட ராயல் ரூபத்தின் வேண்டுதல் ஆகும்.
(1/4)
12.
08.2016 காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா ,மதுபன்
இனிமையான குழந்தைகளே! இப்போது இந்த எல்லையற்ற பழைய உலகம் விநாசம் ஆகப்
போகிறது, புது உலகம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது, ஆகையால் புது உலகம்
செல்வதற்காக தூய்மையாகுங்கள்.
கேள்வி: பரமாத்மாவைப் பற்றி குழந்தைகளாகிய நீங்கள் எந்த ஒரு ஆச்சரியமான விசயத்தை
அறிந்திருக்கிறீர்கள், அது மனிதர்களின் அறிவுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது?
பதில்: ஆத்மா எவ்வாறு ஜோதி புள்ளியாக இருக்கிறதோ அதே போன்று பரமாத்மாவும் மிக சூட்சும
ஜோதி புள்ளியாக இருக்கின்றார் என்று நீங்கள் கூறுகிறீர்கள். இந்த விசயம் மனிதர்களின் அறிவுக்கு அப்பாற்
பட்டதாகும். சில குழந்தைகளும் கூட இதில் குழப்பமடைந்து விடுகின்றனர். பாபா கூறுகின்றார் லி குழந்தைகளே!
குழப்பமடையாதீர்கள். ஒருவேளை சிறிய ரூபம் நினைவிற்கு வரவில்லையெனில் பெரிய ரூபத்தில் நினைவு
செய்யுங்கள். அவசியம் நினைவு செய்ய வேண்டும்.
பாட்டு: இரவு பயணிகளே களைப்படையாதீர்கள் .........
ஓம்சாந்தி. ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை வந்து புரிய வைக்கின்றார், ஆகையால்
குழந்தைகள் ஆத்ம அபிமானியாகி அமர வேண்டும். இவ்வாறு வேறு எந்த இடத்திலும் புரிய வைப்பது
கிடையாது. எந்த சாதுவோ அல்லது சந்நியாசியோ ஆத்ம அபிமானியாகி அமருங்கள் என்று புரிய வைப்பது
கிடையாது. இதை ஒரே ஒரு தந்தை தான் புரிய வைக்கின்றார், வேறு யாருக்கும் கூறுவதற்கு வரவே வராது.
இந்த யுக்தியை யாரும் கூற முடியாது. குழந்தைகளாகிய நீங்களும் கூட நான் ஆத்மா என்பதை புரிந்திருக்கிறீர்கள்.
ஆத்மா தான் ஒரு சரீரத்தை விடுத்து மற்றொன்றை எடுக்கிறது. வக்கீலாகவும், டாக்டராகவும் ஆகிறது. ஆத்மா
தான் இப்போது தூய்மையற்றதாக ஆகியிருக்கிறது, பிறகு தூய்மை ஆகிவிடும். ஆத்மாவில் ஞான தாரணை
ஏற்படுகிறது. தந்தை நிராகாராக, ஞானக் கடலாக இருக்கின்றார் எனில் அவசியம் வந்து ஞானம் கூறுவார்
அல்லவா! பதீத பாவன் எனில் அவசியம் வந்து தூய்மையாக்குவார் அல்லவா! அவர் சுப்ரீம் பரம்பிதா
பரமாத்மா ஆவார். நான் உங்களது தந்தை சுப்ரீம் ஆக இருக்கிறேன், ஞானம் நிறைந்தவனாக இருக்கிறேன்.
எனக்கென்று சரீரம் கிடையாது. இந்த அனைத்து ஞானத்தையும் உங்களது ஆத்மா தாரணை செய்கிறது எனில்
நீங்கள் ஆத்ம அபிமானியாக ஆக வேண்டும். தேக அபிமானத்தில் வரக் கூடாது, வேறு எந்த இடத்திலும்
கேட்பவர் மற்றும் கூறுபவர் ஆத்மா அபிமானியாக இருப்பார்கள் என்பது கிடையாது. தந்தை நிராகாராக
இருக்கின்றார். அவர் வந்து உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். மற்ற அனைத்து மனிதர்களும் தேக
அபிமானத்தில் இருக்கின்றனர். இந்த லெட்சுமி நாராயணனும் ஆத்ம அபிமானியாக இருந்தனர் எனக் கூறலாம்,
இருப்பினும் தேக அபிமானம் இருக்கிறது அல்லவா! இந்த ஞானம் பரம்பிதா பரமாத்மா வந்து தான் கொடுக்கின்றார்.
ஆத்மாவானது தாரணை செய்ய வேண்டும். ஆத்மாவைத் தான் தூய்மையற்றதிலிருந்து தூய்மை ஆவதற்கான
யுக்தி கூறுகின்றார். இப்போது முழு உலகமும் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது, மீண்டும் எழுச்சி செய்ய
வருகின்றார். இதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். வீழ்ச்சி என்றால் அழிவு, எழுச்சி என்றால் படைப்பு.
ஸ்தாபனை மற்றும் விநாசம். எதை ஸ்தாபனை செய்கிறார்? புது உலகை, சொர்க்கத்தின் ஸ்தாபனை மற்றும்
பழைய உலகம், நரகத்தை விநாசம் செய்கிறார். விநாசம் மற்றம் படைப்பு. கலியுகம் என்றால் பழைய உலகம்,
இது அவசியம் விநாசம் ஆக வேண்டும். விநாசத்தின் அடையாளம் தான் இந்த மகாபார யுத்தமாகும்.
மகாபாரதத்தின் உதாரணம் மகாபாரத சாஸ்திரத்தில் காண்பிக்கின்றனர். தந்தை பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை
செய்கிறார். அவசியம் புது உலகைத் தான் செய்வார் அல்லவா! இது எல்லையற்ற விநாசம் மற்றும் எல்லையற்ற
ஸ்தாபனை ஆகும். தந்தை தான் குழந்தைகளுக்காக புது கட்டடம் கட்டுவார். பிறகு பழையதை அவசியம்
அழித்து விடுவார். பாபா இப்போது புது உலகை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கின்றார் என்பதை நீங்கள்
புரிந்திருக்கிறீர்கள். தமோபிரதானத்திலிருந்து மீண்டும் சதோபிரதானம் ஆக்குவதற்காக நம்மை தயார்படுத்திக்
கொண்டிருக்கின்றார். விநாசத்திற்காக மகாபாரத யுத்தம் பிரபலமானது. இது அதே நேரம் என்று பாபா கூறுகின்றார்.
மகாபாரத நேரத்தில் அதே நட்சத்திரங்கள் வந்து தங்களுக்குள் சந்தித்து கொள்கிறது. இந்த ஏணியிலும்
பாரதத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சிக்கான உயர்ந்த கதை என்று எழுதப்பட்டிருக்கிறது. இந்த வாக்கியத்தில்
கல்ப கல்பம் என்ற வார்த்தையும் எழுதப்பட வேண்டும். ஆரம்பத்திலிருந்து கடைசி வரை மனிதர்கள் 84
பிறவிகள் எடுக்கின்றனர். இதுவும் உங்களது புத்தியில் இருக்கிறது. மனிதர்களின் புத்தியானது முற்றிலும்
காட்ரேஜ் பூட்டினால் பூட்டப்பட்டிருக்கிறது. இந்த விசயங்களை மனிதர்கள் தான் அறிந்து கொள்ள வேண்டும்.
நடிப்பு நடிப்பதற்காக ஆத்மாக்கள் இங்கு சரீரத்தை தாரணை செய்கிறது. ஆக நாடகத்தின் முதல், இடை,
(2/4)
12.08.2016
கடையின் படைப்பவர், டைரக்டர், முக்கிய நடிகர் போன்றவற்றை அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா!
இப்போது நீங்கள் நாடகத்தின் முதல், இடை, கடை, யார் யார் நடிக்கின்றனர்? போன்ற முழு நாடகத்தையும்,
ஆரம்பம் முதல் கடைசி வரை அறிந்து கொண்டீர்கள். தந்தையின் மூலம் இந்த முழு ஞானமும் கிடைத்துக்
கொண்டிருக்கிறது. சிருஷ்டிச் சக்கரம் எவ்வாறு சுழல்கிறது? இது தான் ஆன்மீக ஞானம் என்று கூறப்படுகிறது.
உலகாய ஞானத்தை தத்துவ ஞானம் என்று கூறப்படுகிறது. ஆன்மீக ஞானம் தான் ஞானம் என்று கூறப்படுகிறது.
இப்போது இந்த அனைத்து விசயங்களும் குழந்தைகளின் புத்தியில் பதியும்படி புரிய வைக்கப்பட்டிருக்கிறது.
இப்போது 84 பிறவிக்கான நாடகம் முடிவடைகிறது என்பதை குழந்தைகள் அறிவீர்கள். இப்போது நாம்
திரும்பிச் செல்கிறோம், ஆனால் தூய்மையற்றவர்கள் யாரும் திரும்பி செல்ல முடியாது. இல்லையெனில் இந்த
அளவிற்கு ஜபம், தவம், தீர்த்த யாத்திரை ஏன் செய்கின்றனர்? தூய்மை ஆவதற்காகவே கங்கையில் குளிக்க
செல்கின்றனர். ஆனால் அதன் மூலம் யாரும் தூய்மை ஆகிவிட முடியாது. ஆகையால் யாரும் திரும்பிச்
செல்ல முடியாது. இன்னார் அனைத்தையும் கடந்து நிர்வாண்தாமத்திற்குச் சென்று விட்டார், ஜோதி ஜோதியுடன்
கலந்து விட்டார் என்று கட்டுக் கதை கூறுகின்றனர். யாரும் திரும்பிச் செல்வது கிடையாது என்று தந்தை
புரிய வைத்திருக்கின்றார். அனைத்து நடிகர்களும் இங்கேயே இருக்கின்றனர். இப்போது நாடகம் முடிவடைகிறது,
ஆகையால் அனைவரும் மேடையில் நின்றுக் கொண்டிருக்கின்றனர். இப்போது அனைவரும் இங்கு வந்து
விட்டனர். பௌத்தர், கிறிஸ்து போன்றவர்கள் எங்கு இருக்கின்றனர்? என்பது மனிதர்களுக்கு தெரியாது. மேருந்து
வந்த அனைத்து ஆத்மாக்களும் இங்கு இந்த நேரத்தில் தமோபிரதானமாக இருக்கின்றனர் என்பதை
நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக கல்பத்திற்கு முன்பும் ஆகியிருந்தீர்கள்.
தந்தை வந்து தான் ஸ்தாபனை, விநாசம் செய்விக்கின்றார். இந்த ஞானம் இராஜாவிற்கெல்லாம் இராஜாவாக
ஆக்கக் கூடியது என்றும் கூறுகின்றார். நான் உங்களை இராஜாவிற்கெல்லாம் இராஜாவாக ஆக்குகிறேன் என்று
இந்த எல்லையற்ற தந்தை கூறியிருக்கின்றார். கிருஷ்ணர் ஸ்தாபனை செய்விப்பது கிடையாது. படைப்பவர்
தந்தை ஆவார். எப்போது இந்த உலகம் தூய்மை இழந்துவிடுகிறதோ அப்போது தான் நீங்கள் என்னை
அழைக்கிறீர்கள் என்று தந்தை வந்து புரிய வைக்கின்றார். நான் புது உலகை படைக்கிறேன் என்பது கிடையாது.
பிரளயம் ஏற்பட்டது என்று காண்பிக்கின்றனர், இவை அனைத்தும் தவறாகும். பதீத பாவனனே வாருங்கள்
என்று மனிதர்கள் அழைக்கின்றனர் எனில் அவசியம் அழுக்கான உலகில் வருவார் அல்லவா! தந்தை வந்து
தான் கிருஷ்ணபுரியின் சாட்சாத்காரம் செய்விக்கின்றார். கிருஷ்ணர் கடலில் ஆல இலையின் மீது வந்ததாக
காண்பிக்கின்றனர்...... இது சரியான விசயமாகும். புது உலகில் முதலில் கிருஷ்ணர் தான் வருவார். கடலில்
அல்ல, கர்ப மாளிகையில் வருவார். காலி விரல் வாயில் வைத்துக் கொண்டு, மிக ஓய்வாக கர்ப மாளிகையில்
இருப்பார். சத்யுகத்தில் அனைத்து குழந்தைகளும் கர்ப மாளிகையில் இருப்பர். கர்ப மாளிகையின் விசயத்தைத்
தான் அவர்கள் கடலில் இலையின் மீது அமர்ந்திருப்பதாக காண்பித்து விட்டனர். அவை அனைத்தும் பக்தி
மார்க்கத்தின் விசயமாகும். தந்தை இந்த அனைத்து சாஸ்திரங்களின் சாரத்தை அமர்ந்து புரிய வைக்கின்றார்.
இங்கு கர்ப சிறையில் இருப்பதால் தான் எங்களை வெளியேற்றுங்கள், நாம் இனி பாவம் செய்யமாட்டோம்
என்று கூறுகிறது. ஆனால் இராவணனின் இராஜ்யத்தில் பாவம் ஏற்படவே செய்கிறது. மீண்டும் பாவம் செய்ய
ஆரம்பித்து விடுகிறது. நீங்கள் அரைக் கல்பத்திற்கு சிறைப் பறவையாக ஆகிவிடுகிறீர்கள். திருடர்களைத் தான்
சிறைப் பறவைகள் என்று கூறுகிறோம். வெளியில் வந்தாலும் மீண்டும் திருடிக் கொண்டே இருப்பார்கள்,
சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும். அதனால் தான் சிறைப் பறவை என்று கூறுகிறோம். இது இராவண
இராஜ்யம் என்று தந்தை புரிய வைக்கின்றார். அங்கு இந்த விசயங்களே கிடையாது. அதுவோ இராம
இராஜ்யமாகும். அங்கு கர்ப சிறையும் இருக்காது, அந்த சிறையும் இருக்காது. இங்கு எத்தனை மனிதர்கள்
சிறையில் இருக்கின்றனர்! கர்ப சிறையும் இருக்கிறது, அந்த சிறையும் இருக்கிறது. இரண்டு சிறைகள் உள்ளன.
கலியுகத்தின் கடைசி அல்லவா!
நீங்கள் இப்போது படைப்பின் காரியம் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று தந்தை புரிய வைக்கின்றார்.
எழுச்சி மற்றும் வீழ்ச்சி, ஒவ்வொரு கல்பத்திலும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. எழுச்சி மற்றும் வீழ்ச்சி
உலகில் ஏற்படுகிறது. அதிலும் முக்கிய பங்கு பாரதத்தில் இருக்கிறது. ஆத்மா பரமாத்மாவைப் பிரிந்து வெகு
காலம் ஆகிவிட்டது ...... என்று பாடிக் கொண்டே இருக்கின்றனர். ஆக அதற்கும் கணக்கு வேண்டும் அல்லவா!
எந்த ஆத்மாக்கள் வெகு காலமாக பிரிந்திருக்கின்றன? முதன் முதலில் நடிப்பு நடிப்பதற்காக தேவி தேவதா
தர்மத்தைச் சார்ந்த ஆத்மாக்கள் வருகின்றன. இப்போது அந்த தேவதைகள் கிடையாது, யார் இராஜ்யம்
செய்து விட்டு சென்றார்களோ அவர்களது சிலைகள் தான் அடையாளமாக இருக்கின்றன. இராஜ்யம் அழிந்து
விட்டது. சொர்க்கம் அழிந்து விட்டது, பிறகு நரகம் ஏற்படுகிறது, மீண்டும் நரகம் அழிந்து சொர்க்கம் ஏற்படும்.
ஆக புது உலக படைப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது மற்றும் நரகம் அழிந்து விடும். படைப்பதற்கு குழந்தைகள்
தேவை அல்லவா! வசிக்கக் கூடியவர்களும் நீங்கள் தான். முதலில் நீங்கள் தெய்வீக குணங்களுடைய
(3/4)
12.08.2016
தேவதைகளாக ஆக வேண்டும். மனிதனிலிருந்து தேவதை ........ என்றும் பாடப்பட்டிருக்கிறது. மனிதர்கள்
அசுத்தமானவர்களாக இருக்கின்றனர் அல்லவா! பகவானின் மகாவாக்கியம் லி இல்லறத்தில் இருந்தாலும் தாமரை
மலர் போன்று தூய்மையானவர்களாக ஆக வேண்டும். இந்த மரண உலகின் கடைசிப் பிறவியில் நாம்
தூய்மையாக இருக்கிறோம். இந்த விகாரங்களை வெல்வதன் மூலம் நீங்கள் உலகிற்கு எஜமானர்களாக ஆவீர்கள்
என்று தந்தை கூறுகின்றார். குழந்தைகள் கேட்கவும் செய்கிறீர்கள், மேலும் மற்றவர்களுக்குப் புரிய வைக்கவும்
செய்கிறீர்கள் லி இந்த பழைய உலகின் விநாசம் எதிரிலேயே இருக்கிறது. இது அதே மகாபாரத யுத்தமாகும்.
காமம் மிகப் பெரிய எதிரி, ஆகையால் உறுதிமொழி செய்யுங்கள். நாம் இப்போது தூய்மையாக ஆகிறோம்
என்பதை நீங்கள் இப்போது புரிந்திருக்கிறீர்கள். இந்த பழைய உலகம் அவசியம் விநாசம் ஆகிவிடும், அதற்கு
முன்பாக அவசியம் தூய்மையாக ஆக வேண்டும். விநாசம் ஏற்படும், பிறகு கேட்கவே கோட்காதீர்கள் லி ஐயோ
ஐயோ என்ற நிலை ஏற்படும், கடுமையான மரணம் அதிகம் நிகழும். உங்களால் பார்க்கவும் முடியாது.
யாருக்காவது அறுவை சிகிச்சை நடைபெறும் போது பலவீனமானவர்களால் அங்கு நிற்க முடியாது, கீழே
மயங்கி விழுந்து விடுவர். அதனால் தான் டாக்டர்கள் குடும்பத்தினர்களை அனுமதிப்பது கிடையாது. இது
எவ்வளவு பெரிய அறுவை சிகிச்சையாக இருக்கும்! ஒருவரை ஒருவர் கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.
இது மிகவும் அசுத்தமான உலகமாகும். முட்கள் நிறைந்த காடாகும். சத்யுகம் மலர்கள் நிறைந்த பூந்தோட்டம்
என்று கூறப்படுகிறது. தேவதைகள் சைத்தன்ய மலர்கள் அல்லவா! சொர்க்கத்தில் மலர்கள் நிறைந்த பூந்தோட்டம்
இருக்கும் என்று மனிதர்கள் நினைக்கின்றனர், என்ன கேட்கிறார்களோ அதை கூறிவிடுகின்றனர். அல்லாவின்
பூந்தோட்டம் என்று கூறுகின்றனர் அல்லவா! பிறகு தியானத்தின் போதும் பூந்தோட்டம் பார்பார்கள். அல்லா
கைகளில் மலர் கொடுத்தார். புத்தியில் அல்லாவின் பூந்தோட்டம் இருக்கிறது. பக்தி மார்க்கத்தில் சாட்சாத்காரம்
செய்வதற்காகவே பக்தி செய்கின்றனர். சாட்சாத்காரம் ஏற்பட்டு விட்டால் சர்வவியாபி அல்லவா! என்று கூறுவர்.
எது கடந்து முடிந்ததோ அது மீண்டும் நடைபெறும். குழந்தைகள் எந்த நிலையில், எப்படி வந்தீர்களோ அதே
நிலையில் மீண்டும் கல்பத்திற்குப் பிறகு வருவார்கள். நாடகத்தை சிலர் நல்ல முறையில் புரிந்திருக்கின்றனர்,
பாபாவிடம் சிலர் வருகின்ற போது முன்பு எப்போதாவது வந்திருக்கிறீர்களா? என்று பாபா கேட்பார். ஆம் பாபா,
உங்களை கல்பத்திற்கு முன்பும் சந்தித்திருந்தோம், உங்களிடம் ஆஸ்தியடைய வந்திருந்தோம் என்று கூறுவர்.
என்ன பதவி அடைந்திருந்தீர்கள்? என்று தந்தை கேட்பார். பாபா, மம்மா என்று கூறுகிறீர்கள் எனில் அவசியம்
அவர்களது வம்சத்தில் வருவீர்கள். உயர்ந்த பதவி அடையுமளவிற்கு முயற்சி செய்யுங்கள் என்று பாபா
கூறுகின்றார். இந்த அனைத்து விசயங்களும் உங்களது புத்தியில் இருக்கிறது. யுத்தமும் நடைபெறும், நரகமும்
விநாசம் ஆகியே தீரும். உங்களிடம் மிகவும் முதல் தரமான சித்திரங்கள் உள்ளன. இரண்டு (பூமி) உருண்டை
உள்ள சித்திரமும் அச்சடிக்க வேண்டும். இதில் மிகவும் தெளிவாக இருக்கிறது. சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது,
நரகத்தை எட்டி உதைக்கிறார். உங்களது முகமும் சொர்க்கத்தின் பக்கம் இருக்கிறது, இது முற்றிலும் சரியான
விசயமாகும். இப்போது நாம் வீட்டிற்குச் செல்ல வேண்டும், ஆகையால் வீட்டை மட்டுமே நினைவு செய்ய
வேண்டும் என்பதை அறிவீர்கள். பழைய உலகை மறக்க வேண்டும், இது தான் எல்லையற்ற வைராக்கியம்
என்று கூறப்படுகிறது. பழைய உலகை விட்டு விட்டு நாம் பாபாவிடம் செல்கிறோம். நினைவு யாத்திரையின்
மூலம் தான் செல்வீர்கள். முக்கியமானது நினைவிற்கான விசயமாகும். நினைவின் மூலம் அனைத்தும் செய்கிறீர்கள்
அல்லவா! இப்போது தந்தை வந்து யதார்த்தமான விசயங்களைப் புரிய வைக்கின்றார் லி என்னை நினைவு
செய்யுங்கள். இது கலப்படமற்ற நினைவு அதுவும் அர்த்தத்துடன் கூடியதாகும். சிவபாபாவும் புள்ளியாக
இருக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். தன்னையும் ஆத்மா புள்ளி என்று புரிந்து கொள்ள வேண்டும்,
தந்தையையும் புள்ளி என்று புரிந்து கொள்ள வேண்டும். புதிய விசயத்தைப் பார்த்து மறந்து விடுகிறீர்கள்.
தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு பிறகு தந்தையை மற்றும் தனது வீட்டை நினைவு செய்ய
வேண்டும். நல்லது, புள்ளி சிறியதாக இருக்கும், வீடு பெரிதாக இருக்கும் அல்லவா! வீட்டை நினைவு
செய்யுங்கள். பாபாவும் அங்கு தான் இருக்கிறார். எங்கு பாபா இருக்கிறாரோ அங்கு நாம் செல்வோம். புள்ளி
நினைவிற்கு வருவது கிடையாது, வீடு நினைவிற்கு வருகிறது அல்லவா! அது சாந்திதாமம், அது சுகதாமம்
ஆகும். இது துக்கதாமம் ஆகும். இப்போது நீங்கள் வரிசைக்கிரமமான முயற்சியின் படி படித்துக் கொண்டிருக்
கிறீர்கள், பிறகு சுகதாமத்திற்கு வந்து விடுவீர்கள். தந்தையின் குழந்தை எனில் அவசியம் சொர்க்கத்தின்
இராஜ்யம் தேவை. கல்பத்திற்கு முன்பும் சிவபாபா வந்திருந்தார், சொர்க்க இராஜ்யம் கொடுத்திருந்தார். நீங்கள்
மறந்து விட்டீர்கள். இப்போது உங்களுக்குக் கொடுப்பதற்காக நான் மீண்டும் வந்திருக்கிறேன் என்று தந்தை
கூறுகின்றார். எத்தனை முறை நீங்கள் இராஜ்யம் அடைந்தீர்கள்? மற்றும் இழந்தீர்கள்? எண்ணற்ற முறை
ஆஸ்தி அடைந்திருக்கிறீர்கள், இருப்பினும் இப்படிப்பட்ட தந்தையை ஏன் மறந்து விடுகிறீர்கள்? மாயையின்
புயல்களில் அதிக யுத்தம் நடைபெறுகிறது, அதனால் தான் நாடகத்திலும் காண்பிக்கிறீர்கள் லி மாயை அந்தப்
பக்கம் இழுக்கிறது, பிரபு இந்த பக்கம் இழுக்கிறார். ஞானத்தில் தடைகள் ஏற்படுவது கிடையாது. நினைவில்
எற்படுகிறது. இதில் தான் முயற்சி இருக்கிறது. மகாரதி ஆகுங்கள் என்று இப்போது தந்தை கூறுகின்றார். இந்த
(4/4)
12.08.2016
பழைய உலகம் எரிந்து போய் விடும். இந்த யக்ஞத்தில் முழு பழைய உலகமும் சுவாஹா (பலி பொருளாக)
ஆகியே தீர வேண்டும், ஆக மகாவீராக ஆக வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் உறுதியான, ஆடாத,
அசைக்க முடியாத இராஜ்யம் அடைய வேண்டும். எவ்வளவு தான் புயல்கள் வந்தாலும், மாயை ஒன்றும்
செய்ய முடியாத அளவிற்கு உங்களது புத்தித் தொடர்பு தந்தையிடம் இருக்க வேண்டும். இது உங்களது
கடைசி மனநிலையாகும். மாற்றல் ஏற்படும் போது, பள்ளிகளில் தேர்வு கடைசியில் இருக்கும். உங்களது
மாலையும் கடைசியில் உருவாகும். இன்னார் இந்த நிலை அடைவார், இன்னார் இவ்வாறு ஆவார் என்று
உங்களுக்கு அதிக சாட்சாத்காரம் கிடைக்கும். இவர் தாசியாக ஆவார் ........ இவ்வாறு கூறுவீர்கள். கடைசியில்
ஒன்றும் செய்ய முடியாது, பட்சாதாபம் அடைய வேண்டியிருக்கும். இவ்வாறு நான் செய்து விட்டேன், ஸ்ரீமத்
படி ஏன் நடக்கவில்லை? ஆனால் அந்த நேரத்தில் ஒன்றும் செய்ய முடியாது. இவ்வாறு அதிகம் பட்சாதாபம்
அடைய வேண்டியிருக்கும். மனிதர்கள் யாரையாவது கொலை செய்து விட்டு பிறகு பட்சாதாபம் அடைகின்றனர்.
ஆனால் கொலை நடந்து விட்டது, பிறகு என்ன செய்ய முடியும்? அதனால் தான் தவறுகள் செய்யாதீர்கள், சுய
முயற்சி செய்து கொண்டே இருங்கள் என்று தந்தை கூறுகின்றார். நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய்
தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) 84 பிறவிகளுக்காக நாடகம் இப்போது முடிவடைகிறது, திரும்பி வீட்டிற்கு செல்ல வேண்டும்,
ஆகையால் ஆத்ம அபிமானியாகி பாவனம் ஆக வேண்டும். தேக அபிமானத்தை நீக்க
வேண்டும்.
2) அர்தத்துடன் தன்னை ஆத்மா புள்ளி என்று புரிந்து கொண்டு புள்ளியான தந்தையின்
கலப்படமற்ற நினைவில் இருக்க வேண்டும். மகாவீர் ஆகி தனது மன நிலையை ஆடாது,
அசையாது ஆக்கிக் கொள்ள வேண்டும்.
வரதானம்: சதா ஞான சூரியனின் எதிரில் இருக்கக் கூடிய
உள்நோக்கு முகமுடையவர், சுயமரியாதை உடையவர் ஆகுக !
எவ்வாறு சூரியனை எதிரில் பார்த்ததும் சூரியனின் கிரணங்கள் அவசியம் நம் மீது விழும். அதே
போன்று எந்த குழந்தைகள் ஞான சூரியனாகிய தந்தையின் எதிரில் சதா இருக்கிறார்களோ அவர்கள் ஞான
சூரியனின் அனைத்து குணங்களின் கிரணங்களை தனக்குள் அனுபவம் செய்வார்கள். அவர்களது முகத்தில்
உள்நோக்கு முகத்தின் ஜெôலிப்பு மற்றும் சங்கமயுகத்தின் அல்லது எதிர்கால அனைத்து மரியாதைகளின்
பிரகாசம் தென்படும். அதற்கு இது தான் கடைசி நேரம் என்ற நினைவு சதா இருக்க வேண்டும். எந்த
நேரத்திலும் இந்த சரீரம் அழிந்து போகலாம், ஆகையால் சதா அன்பான புத்தியுடையவராகி ஞான சூரியனின்
எதிரில் இருந்து உள்நோக்கு முகம் அல்லது சுயமரியாதையின் அனுபவத்தில் இருக்க வேண்டும்.
சுலோகன்: சதா பறக்கும் கலையில் பறப்பது தான்
குழப்பங்களின் மலையைக் கடந்து செல்வதாகும்.
(1/4)
13.
08.2016 காலைவகுப்பு ஓம்சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! கேள்விப்படுகின்ற விஷயங்களை நம்பவேண்டாம், யாராவது
தவறாகப் பேசினால் ஒரு காதில் கேட்டு இன்னொரு காதின் வழியே விட்டு விடுங்கள்.
கேள்வி: ஞானத்தின் குμயில் எந்தக் குழந்தைகள் இருப்பார்கள், அவர்களின் அடையாளம் என்ன?
பதில்:லி அவர்கள் பழைய கர்மத்தின் கணக்கை அதே குμயில் இணைத்துக் கொண்டே செல்வார்கள்.
ஞானத்தின் குμயில் துக்கத்தின், வேதனை, கவலைகள் என்ற உலகத்தையே மறந்து விடுவார்கள். புத்தியில்
இப்பொழுது மகிழ்ச்சியான உலகத்திற்குப் போய்க் கொண்டிருக்கின்றோம் என்ற எண்ணம் மட்டுமே இருக்கும்.
இராவணன் சாபத்தால் துக்கம் தந்தான். துக்கமான கவலையான உலகத்திலிருந்து நீக்கி மகிழ்ச்சியான உலகத்திற்கு
அழைத்துச் செல்ல இப்பொழுது பாபா வந்துள்ளார். .
பாட்டு:லி உன்னை அடைந்து நாங்கள்
ஓம் சாந்தி. இனிமையிலும்லிஇனிமையான குழந்தைகள் பாட்டைக் கேட்டனர், குழந்தைகளுக்கு அவசியம்
மெய்சிலிர்ப்பு ஏற்பட்டு இருக்க வேண்டும். ஏனென்றால் குμயைப் போன்ற சத்துணவு வேறு எதுவும் இல்லை
என்று பாடப்படுகின்றது. இப்பொழுது அனைத்து ஆன்மீகக் குழந்தைகளுக்கும் எல்லையற்ற தந்தை கிடைத்து
விட்டார். எல்லையற்ற தந்தை என்பவர் ஒருவர் தான் இருக்க முடியும் ! மேலும் குழந்தைகள் அறிவீர்கள்
எப்பொழுது மற்றவர்களும் குழந்தைகளாக ஆகின்றார்களோ, அவர்களுக்கும் கூட மெய் சிலிர்ப்பு ஏற்படும்.
நம்முடைய இராஜ்யம் இருந்தது, பின்பு இராஜ்யத்தை இழந்து விட்டோம் என்று நீங்கள் அறிவீர்கள்.
பாரதவாசிகளுக்கு இது சந்தோஷமான செய்திதானே ! ஆனால் எப்பொழுது இதை நன்றாகக் கேட்டு, புரிந்து
கொள்கின்றார்களோ அப்பொழுது முற்றிலும் இது சந்தோஷமான விஷயமாகும், கல்பலிகல்பமாக பாபா வருகின்றார்.
பாபாவின் ஜென்மம் கூட இங்கே தான் ஏற்பட்டதாகக் கூறுகின்றார்கள். இந்த நேரத்தின் நினைவுச் சின்னம்
தான் நாம் கொண்டாடுகின்ற இந்த பண்டிகைகளெல்லாம். பாபா வந்து மிகவும் எளிதான வழியினைக் கூறுகின்றார்.
இன்று மனிதர்களுக்கு அநேக விதமான கவலைகள் உள்ளன. இங்கே ஞானம் கேட்டதின் மகிழ்ச்சியில்,
அந்த கவலை, துக்கம் எல்லாம் மறைந்து விடுகின்றது. நோயாளிகளுக்கு எப்படி நோய் குணம் ஆகிவிட்டால்
மகிழ்ச்சி ஏற்படுகின்றது ! நோய் வந்தால் மற்ற விஷயங்கள் எல்லாம் மறந்து விடுகின்றது. தாய்வீடு, மாமியார்
வீடு, நண்பர்கள், உறவினர்கள் இவையெல்லாம் மகிழ்ச்சியில் வருகின்றது. நாம் அனைவரும் உலகத்திற்கு
எஜமானனாக இருந்தோம் பின்பு இராவணன் சாபம் கொடுத்து விட்டான் என்பது உங்கள் அனைவருக்கும்
தெரியும். இது கவலை துக்கம் கொண்ட உலகம். பிறகு நாளைக்கு குμயான உலகம் வருகின்றது. குμயான
உலகத்தை நினைவு செய்தால் கவலை, துக்கம் அனைத்தும் மறந்துவிடும். இது தமோபிரதானமான உலகம்,
பல்வேறுலிவிதமான கர்மபோகம் உள்ளது. பெண்களுக்குக் கூட எத்தனை கொடுமைகள் நடக்கின்றன. அநேக
விதமான தடைகள் வருகின்றன. இது தடைகள், கர்மத்தின் கணக்கு அனுபவிக்க வேண்டியுள்ளதாக உள்ளது.
இன்னும் சிறிது காலமே உள்ளது. இன்னும் சில நாட்கள் தான் உள்ளன என்று பாபா தைரியம் கொடுக்கின்றார்.
கல்பத்திற்கு முன்னால் கூட இவ்வாறு நடந்தது. கர்மத்தின் கணக்குலிவழக்குகளை முடிக்க வேண்டும். இவைகளை
மகிழ்ச்சியோடு முடித்துக் கொண்டே இருங்கள். பாபா மேலும் ஆஸ்தியை மட்டும் நினைத்துக்கொண்டே
இருங்கள். எந்த தவறான காரியமும் செய்யாதீர்கள். இல்லையென்றால் மேலும் தண்டனை ஏற்படும், பதவியும்
குறைந்து விடும். பாபா ஒருவரை மட்டும் தான் நினைவு செய்வது குழந்தைகளின் கடமையாகும். பாபாவை
நினைவு செய்தால் உங்கள் பாவகர்மம் வினாசம் ஆகும் என்று பாபா கூறுகின்றார். கணக்குலிவழக்கு முடிந்து
விடும். இன்னும் குறைந்த நேரம் தான் உள்ளது, கணக்குலிவழக்கு முடித்துக் கொண்டே போங்கள், ஏனென்றால்
நீங்கள் குருடர்களுக்கு வழிகாட்டியாக உள்ளீர்கள். நீங்களும் நினைவு செய்யுங்கள் மேலும் மற்றவர்களுக்கும்
கூட வழி சொல்லுங்கள். தடைகள் அநேகம் வரும். பாபாவை நினைவு செய்யுங்கள் என்று எவ்வளவு
முடிகின்றதோ இதை மற்றவர்களுக்குப் புரிய வைய்யுங்கள். மன்மனாபவ என்ற வார்த்தையே மிகவும் புகழ்பெற்றது.
மன்மனாபவ என்றால் ஹே ஆத்மாக்களே ! நிரந்தரமாக என்னை நினைவு செய்தால் உங்களுடைய பழைய
பாவகர்மங்கள் பஸ்பம் ஆகிவிடும். இதில் குழப்பம் அடைவதற்கான விஷயமேயில்லை. பாபாவை மட்டும்
நினைத்தால் போதும் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானம் ஆகி விடுவோம். நாம் 84 ஜென்ம சக்கரம்
சுற்றி வந்து விட்டோம் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள். சக்கரம் சுற்றிக் கொண்டே வந்து விட்டது,
மேலும் சுற்றும். இது பழைய உலகம், பழைய உடல் இதை மறந்து விடுங்கள். இது ஆத்மாக்களுக்கு
எல்லையற்ற சன்நியாசம் ஆகும். அவர்கள் எல்லைக்குற்பட்டதை சன்நியாசம் செய்கின்றார்கள். வீடு,வாசலை
விட்டுச் செல்கின்றார்கள். நாடகத்தில் அவர்களின் நடிப்பு அது. மீண்டும் இவ்வாறே நடக்கும். ஒவ்வொருலிவினாடி
எது கடந்ததோ அது மீண்டும் நாடகத்தில் திரும்பி நடக்கும். சாஸ்த்திரங்கள் எல்லாம் பக்திமார்க்க புத்தகங்கள்.
(2/4)
13.08.2016
பக்திக்குப் பின்னர் தான் ஞானம் ஆகும். இந்த ஏணிப்படி படத்தை வைத்து மற்றவர்களுக்கு தெளிவாக,
எளிதாக புரிய வைக்க முடியும். முக்கியமான படங்களை நீங்கள் உங்கள் வீட்டில் கூட வைத்துக் கொள்ளலாம்.
த்ரிமூர்த்தி படம் மிகவும் தெளிவானது. மேலே சிவனும் கூட இருக்கின்றார். பிரம்மா, விஷ்ணு, சங்கரர் கூட
இருக்கின்றார். சூட்சுமவதனவாசிகள் மற்றும் உயர்ந்ததிலும், உயர்ந்த பகவான் இருக்கின்றார். பாபா எங்கே
இருக்கின்றாரோ அங்கே தான் ஆத்மாக்களாகிய நம்முடைய இடம் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள்.
அதை நிர்வாண்தாமம் என்று சொன்னாலும் சரி, சாந்திதாமம் என்று சொன்னாலும் சரி, இரண்டும் ஒன்று தான்.
சாந்திதாமம் என்றால் சரிதான் அதாவது நிர்வாண்தாமம் என்றால், சப்தத்திற்கு அப்பாற்பட்ட இடம் என்பதாகும்,
என்றால் அது சாந்திதாமம் ஆகிவிட்டது அல்லவா? அது சாந்திதாமம் மற்றும் சுக தாமம் மேலும் சாந்தி
சம்பந்திதாமம் ஆகும். பிறகு துக்கம் மேலும் அசாந்திதாமம் ஆகிவிடுகின்றது. சுகதாமம் என்றால் எல்லையற்ற
பொக்கிஷங்கள் நிறைந்திருக்கும். இன்று என்னவாக உள்ளது, நாளை என்னவாக ஆகும். இன்று கலியுகத்தின்
முடிவில் உள்ளது. நாளைக்கு சத்தியயுகத்தின் ஆரம்பம் ஏற்படும். இரவு பகல் வித்தியாசம் உள்ளது அல்லவா?
பிரம்மா, பிரம்மாவின் வாய் மூலமாக வந்த பிராமணர்களின் பகல் மேலும் பிறகு இரவு வரும் கூறப்படுகின்றது.
பகலில் தேவதைகள் இருந்தார்கள், இரவில் சூத்திரர்கள் இருந்தார்கள், நடுவில் நீங்கள் பிராமணர்கள்
இருக்கின்றீர்கள். இந்த சங்கமயுகத்தைப் பற்றி யாருக்கும் தெரியாது. மனிதர்கள் முற்றிலும் ஆழ்ந்த இருளிலி
ல் உள்ளார்கள். அவர்களைஆழ்ந்த ஒளியில் கொண்டு வருவது உங்கள் கடமை ஆகும். இப்பொழுது உங்கள்
மகாபாரத யுத்தம் நடக்க இருக்கின்றது. பாடப்பட்டு இருக்கின்றதுலி வினாச காலத்தில் விபரீத புத்தியாக
இருப்பார்கள். வினாச காலத்தில் அன்பு புத்தி உள்வர்கள் வெற்றி அடைகின்றார்கள் என்று கூறப்படுகின்றது.
பாபா மீண்டும் நமக்கு இராஜ்யத்தைக் கொடுக்க வந்துள்ளார் என்று நீங்கள் அறிந்துள்ளீர்கள். அந்த இராஜ்யத்தை
யாராலும் பிடுங்க முடியாது. இராவணனின் பிரவேசம் துவாபரயுகத்தில் ஏற்படுகின்றது. இராவணன் தான்
நம்முடைய இராஜ்யத்தைப் பிடுங்கி விட்டார். அவர் தான் நம்முடைய எதிரி என்பது புரிந்தது, ஏனென்றால்,
எதிரியின் சிலையைத் தான் எரிப்பார்கள். இவர் தான் மிகப் பழைய எதிரி! இராவண இராஜ்யம் என்று
கூறுகின்றார்கள், ஆனால் யார் புத்தியிலும் இதைப் புரிந்து கொள்ளவில்லை. இதை ஆழ்ந்த இருள் என்று
சொல்லலாம் அல்லவா ! எல்லையற்ற தந்தைதான் ஞானக்கடலாக இருக்கின்றார். அவரைத் தான் ஞானத்தின்
வள்ளல், தெய்வீகக் கண்ணை வழங்கும் வள்ளல் என்று கூறப்படுகின்றது. இப்பொழுது உங்களுக்கு மூன்றாவது
கண் கிடைத்துள்ளது. முன்னால் நீங்கள் ஒன்றுமே அறியவில்லை. அனால் இப்பொழுது நீங்கள் அனைத்தையுமே
அறிந்து கொண்டீர்கள். பாபா ஞானக்கடல் என்றால், ஞானத்தைத் தானே புரிய வைப்பார். ஞானம் கூறாமல்
வெற்றி எப்படி கிடைக்கும்? பாபா ஞானம் கூறுவதை நீங்கள் பார்க்கின்றீர்கள், இந்த ஞானத்தால் தான் அரை
கல்பம் சத்கதி கிடைக்கின்றது. பக்திமார்க்கம் தான் அரைகல்பம் நடக்கின்றது. ஞானத்தால் சத்கதி சங்கமயுகத்தில்
தான் கிடைக்கின்றது. எந்த விஷயத்தையும் குழந்தைகள் நீங்கள் மறைக்க முடியாது. பாபா கூறுகின்றார்லி எந்த
தவறு செய்தாலும் பாபாவுக்குக் கூறிவிடுங்கள் என்கிறார். சிலர் தீய கர்மங்களைச் செய்கின்றார்கள் என்பதை
பாபா அறிவார். இராவண இராஜ்யம் தானே! மாயா அறை கொடுத்து விடுகின்றது, ஆனால் அதிகமாக
மறைக்கின்றார்கள். எதாவது தவறு ஏற்பட்டால் உடனே கூறிவிடுங்கள், அப்பொழுது தான் உங்களுக்கு
எதிர்காலத்திற்காகன வழி கிடைக்கும். இல்லை என்றால் அது வளர்ந்து கொண்டே போகும். காமம் மகா எதிரி.
பாபாவிற்குக் கடிதம் எழுதுகின்றார்கள்லி பாபா மாயா மிகவும் எதிர்ப்பு செய்கின்றது. மாயாவிடம் இருந்து
தப்பிக்குமளவு எவரது யோகம் நிரந்தரமாக உள்ளது ! தேக அபிமானம் அதிகமாக வருகின்றது. மாயாவிடம்
அதிக பேர் அறை வாங்குகின்றார்கள். பாபாவிற்கு அனைத்து இடத்தில் இருந்தும் செய்திகள் வருகின்றன
அல்லவா! செய்தித்தாளில் கூட தவறாக எத்தனை எழுதுகின்றார்கள். தற்பொழுது மனிதர்கள் எவ்வளவு
வேண்டுமானாலும் விஷயங்களை உருவாக்கலாம். ஏனென்றால், தமோபிரதானம் அல்லவா ! வியாசர்
ரஜோகுணத்தில் இருக்கும் போதே என்னலிஎன்ன விஷயங்களை உட்கார்ந்து எழுதி விட்டார். அதனால் பாபா
புரிய வைக்கின்றார் கேட்கப்பட்ட விஷயங்கள் மீது நம்பிக்கை வைத்து கெட்டுப் போகாதீர்கள். இவர் இப்படி
செய்தார், அவர் அப்படி செய்தார் என்றால், புத்தி அங்குதான் போகுமல்லவா? இது தமோபிரதான உலகம்
என்று புரிந்து கொள்வதே இல்லை. மாயை உங்களை விழ வைப்பதற்கு முயற்சி செய்யும். யாராவது பொய்யான
விஷயங்களைக் கூறினால், ஒரு காதில் வாங்கி இன்னொரு காதில் விட்டு விடுங்கள். இந்த செய்தியினை
மற்றவர்களுக்கும் கூறுங்கள். நான் செய்தியைக் கொண்டு வருகின்றேன் என்று பாபா கூறுகின்றார். இப்பொழுது
ஹேலி ஆத்மாக்களே ! ஸ்ரீமத்படி நடங்கள். என்னுடைய செய்தியைக் கேளுங்கள். நிரந்தரமாக என்னை
மட்டும் நினையுங்கள். யார் நினைவு செய்கின்றார்களோ, அவர்கள் தான் தங்களுக்கு நன்மை செய்து
கொள்கின்றார்கள். நினைவு ஆத்மா செய்கின்றது, தவறையும் ஆத்மா தான் செய்கின்றது. இப்பொழுது
பாபாவிடம் இருந்து ஸ்ரீமத் கிடைக்கின்றது, இதில் ஆசீர்வாதம், கருணை இவைகளை ஒன்றும் கேட்க
வேண்டியதில்லை. பாபாவை மட்டும் நினைக்க வேண்டும். வேறு எந்த விஷயத்தையும் கேட்க வேண்டிய
அவசிமில்லை. சிருஷ்டிச் சக்கரம் எப்படி சுழல்கின்றதுலிஎன்பதை அறிந்து கொண்டீர்கள். இதில் குழப்பமான
(3/4)
13.08.2016
விஷயம் எதுவுமில்லை. ஆழ்ந்த இருளிலில் தான் பாபா வருகின்றார், ஆகையால் தான் சிவராத்திரி
கொண்டாடுகின்றார்கள். கிருஷ்ணருக்குக் கூட பிறந்த நேரத்தை இரவில் தான் கொண்டாடுகின்றார்கள்.
பூரிலிபால்பாயாசம் இவைகளை கோவில்களில் இரவில் தான் செய்கின்றார்கள். இப்பொழுது சிவனுக்காக நாம்
என்ன செய்ய முடியும்? அவரோ நிராகாரமாக இருக்கின்றார் ! யாருக்கும் தெரியவும் தெரியாது, பாபா எந்த
நேரத்தில் வருகின்றார் மற்றும் எப்படி செல்கின்றார். எப்பொழுதும் நிரந்தரமாக இருப்பதில்லை. வருவார் பிறகு
போய்விடுவார். இப்பொழுது நாம் அனைவரும் சிவபாபாவின் பேரன்,பேத்திகள் என்பதையும் தெரிந்து
கொண்டோம். ஆஸ்தி அவரிடம் தான் கிடைக்கின்றது. பிரம்மாவுக்கும் கூட ஆஸ்தி அவரிடமிருந்து தான்
கிடைக்கின்றது. இவரும் கூட மனிதர் தானே ! சத்கதியில் முதல் நெம்பர் ஸ்ரீகிருஷ்ணரே ஆவார். இவர்
அனைவருக்கும் மிகவும் அன்பானவர், ஏனென்றால் சதோபிரதான குழந்தை அல்லவா? கொஞ்சம் பெரியவர்
ஆனதும் சதோ என்று கூறப்படுகின்றது, பின்பு ரஜோ, தமோ நிலை அடைகின்றார். ஸ்ரீகிருஷ்ணர்லி இராதை
தான் பெரியவர் ஆனதும் இலட்சுமிலிநாராயணன் ஆகின்றார்கள், பாபா (முன்பு) யாருக்கெல்லாம் ஞானம்
கொடுத்தாரோ, அவர்களுக்குத் தான் கொடுக்கின்றார். பாரதத்தில் தான் தேவிலிதேவதைகள் வாழ்ந்தார்கள்
அதனால் தான் பாரதத்தில் கோவில்கள் அதிகமாக உள்ளன. கிருஸ்தவ சர்ச்சில் ஏசுகிறிஸ்துவை மட்டும் தான்
பார்க்கின்றார்கள். தேவதைகளுக்கு எத்தனை ஆயிரம் கோவில்கள் உள்ளன. பாபா வந்துள்ளார் மனிதர்களை
தேவதை ஆக்குகின்றார் அதாவது பாரதத்தை சொர்க்கமாக ஆக்குகின்றார். நாமும் பாபாவுடன் வந்துள்ளோம்.
பக்திமார்க்கத்தில் தேவதைகளின் கோவிலில் மூர்த்திகளுக்கு என்று எவ்வளவு செலவு செய்கின்றார்கள். உற்பத்தி
செய்து, அதை பாலனை செய்து, பின்பு அதை அழிக்கவும் செய்கின்றார்கள். 9 நாட்களுக்குள் அதை தண்ணீரில்
மூழ்கச் செய்துவிடுகின்றார்கள். அதில் மிகவும் அன்பு வைக்கின்றார்கள். நவராத்திரி நாட்களில் கல்கத்தாவில்
மிகவும் கோலாகலமாக கொண்டாடுகின்றார்கள். இந்த விஷயங்கள் அனைத்தும் இப்பொழுது அற்புதமாகத்
தோன்றுகின்றது. நாம் கூட முன்னால் இவ்வாறு செய்து இருக்கின்றோம். கோடிக் கணக்கான பணம் செலவு
செய்து இருக்கின்றோம். எத்தனை மூட நம்பிக்கைகள் உள்ளன. இராமாயணத்தை எவ்வளவு நேசிக்கின்றார்கள்.
விஷயங்களைக் கேட்டு கண்ணில் கண்ணீர் விடுகின்றார்கள். இவை அனைத்தும் பக்திமார்க்கத்தின் விஷயங்கள்,
இதனால் எந்த பலனும் இல்லை. பாபா இப்பொழுது நம்மை எவ்வளவு புத்திசாலி ஆக ஆக்குகின்றார்.
அதனால் கேட்டவை அனைத்தையும் இங்கேயே மறந்து விடாதீர்கள். அனைத்து விஷயங்களை நினையுங்கள்.
முழுமையாகப் புத்துணர்ச்சியுடன் செல்லுங்கள். தன்னை ஆத்மா என்று நினைத்து தேகம், தேக சம்மந்தப்பட்ட
அனைத்தையும் எதையெல்லாம் பார்க்கின்றீர்களோ அனைத்னையும் மறந்து விடுங்கள். இது அனைத்தும்
சுடுகாடாக உள்ளது. டெல்லியில் பிர்லா கோவிலில் பாரதம் ஃபரிஸ்தானமாக (சொர்க்கமாக) இருந்தது, அதை
தர்மராஜர் ஸ்தாபனை செய்தார்லிஎன்று எழுதப்பட்டுள்ளது. இப்பொழுது இந்த உலகம் சுடுகாடாக ஆகப் போகின்றது
என்று நீங்கள் குழந்தைகள் புரிந்து கொண்டீர்கள்.
நீங்கள் அனைவரும் காமம் என்ற சிதையில் அமர்ந்து எரிந்து போய்விட்டீர்கள் என்று பாபா கூறுகின்றார்.
கோபத்தை சிதை என்று சொல்வதில்லை. காமத்தைதான் சிதை என்று சொல்லப்படுகின்றது. அதில் கூட
அதிகமான போதை, குறைந்த போதை என்று உள்ளது. குழந்தைகளுக்கு பாபா வந்து புரிய வைக்கின்றார்.
வீட்டில் யாராவது சொல்படி கேட்காத குழந்தைகள் இருக்கின்றார்கள் என்றால், சொல்வார்கள் இல்லையாலி
இவன் என்ன தந்தையின் கவுரவத்தை கெடுக்க வந்துள்ளானே என்பார்கள். பாபாவின் கௌவரம் போய்
விடுகின்றது அல்லவா? எல்லையற்ற தந்தைக் கூட கூறுகின்றார்லி நீங்கள் கருப்பு முகம் ஆகினால் பிராமண
குலம் தேவதை ஆகக் கூடியவர்களின் பெயரை களங்கப் படுத்துகின்றீர்கள். நாம் துôய்மையின் சக்தியால் தான்
பாரதத்தை மீண்டும் சிரேஷ்டாச்சாரி தேவதையை உருவாக்குகின்றோம் என்று நீங்கள் அறிந்து கொண்டீர்கள்.
உங்களுக்கு இது பொதுவான விஷயம் ஆகும். மகாபாரத யுத்தம் கூட முன்னால் நின்றிருப்பதை பார்க்கின்றீர்கள்,
இதற்குப் பிறகு தான் சொர்க்கத்தின் கதவு திறக்கும். சாஸ்த்திரத்தில் கூட மகாபாரத யுத்தம் காட்டப்பட்டுள்ளது.
அதன் பிறகு என்ன ஆகும் என்று காட்டவில்லை. பிரளயம் ஏற்பட்டது என்று கூறுகின்றார்கள். இப்பொழுது
கிருஷ்ணரை ஒரு பக்கம் தாயின் கர்ப்பத்தில் பிறந்ததாகக் காட்டுகின்றார்கள், இன்னொரு பக்கம் ஆலிலையில்
கட்டை விரலை சூப்பிக் கொண்டே எழுந்தருளியதாகக் காட்டுகின்றார்கள், ஒன்றுமே புரிந்து கொள்வதில்லை.
அவர் அங்கே கர்ப்ப மாளிகையில் மிகவும் ஓய்வாக இருக்கின்றார். மற்றபடி அவர் ஆலிலையில் வர முடியுமா,
இது இயலாத காரியம் ஆகும். இவை அனைத்தும் நாடகத்தில் உருவாக்கப்பட்டுள்ளதை, நீங்கள் அறிவீர்கள்.
கல்பலிகல்பமாக இப்படித் தான் நடக்கின்றது. இப்பொழுது குழந்தைகள் நீங்கள் தனக்கு நன்மை செய்ய
வேண்டும் மேலும் மற்றவர்களுக்கும் கூட நன்மை செய்ய வேண்டும். இது தான் முக்கியமான விஷயம்
ஆகும். பாபா தான் சொர்க்கத்தின் படைப்பாளர் ஆகும். அவரைத் தான் சொர்க்கத்தைப் படைக்கும் தந்தை
கடவுள் என்று கூறுகின்றார்கள். அதனால் நாம் குழந்தைகள் சொர்க்கத்தின் எஜமானன் ஆக வேண்டுமல்லவா?
சிவ ஜெயந்தி கூட பாரதத்தில் தானே கொண்டாடுகின்றார்கள் என்றால், அவசியம் பாரதத்திற்கு ஏதோ
13.08.2016
(4/4)
கொடுத்திருக்கின்றார் என்று அர்த்தமாகின்றது. இப்பொழுது உங்களுக்கு சொர்க்கத்தின் இராஜ்யத்தை
வழங்குகின்றார் அல்லவா ! பாபா தான் சத்கதி தாதாவாக (வள்ளல்) இருக்கின்றார். ஞானக்கடல், பாபா தான்
வந்து கொடுக்கின்றார். இப்பொழுது பாபா உங்களுக்கு ஞானம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். ஐயாயிர
வருடத்திற்குப் பிறகு இங்கு தான் வருவார். யாரெல்லாம் இந்த பிராமணகுலத்தில் இருக்கின்றார்களோ அவர்கள்
தான் அங்கே வருவார்கள் என்பது குழந்தைகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நல்லதுலி ஓம்சாந்தி.
இனிமையிலும்லிஇனிமையான செல்லமான குழந்தைகளுக்கு, தாய்லிதந்தை பாப்தாதாவின் அன்புலிநினைவுகள்
மேலும் காலை வணக்கங்கள். ஆன்மீகத் தந்தையின் ஆன்மீக குழந்தைகளுக்கு நமஸ்தே !
தாரணைக்காக முக்கிய சாரம்:லி
1) ஸ்ரீமத்படி தனக்கும், பிறருக்கும் நன்மை செய்ய வேண்டும் . மற்றவர்கள் தவறான விஷயங்கள்
கூறினால் கேட்டும்லிகேட்காமல் இருக்க வேண்டும். அதில் தன்னை கெடுத்துக் கொள்ளக்
கூடாது.
2) தேவதை ஆகக் கூடியவர்கள் பிராமண குலத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு போதும் அவப்பெயரை
உண்டாக்கக் கூடாதுலி இதில் கவனம் இருக்க வேண்டும். ஒருபோதும் தவறான காரியம்
செய்யக் கூடாது. பழைய கணக்குலிவழக்கை முடிக்க வேண்டும்.
வரதானம்:லி விடுபட்ட நிலையின் பயிற்சியின் மூலமாக பரிஸ்தா ரூபத்தை சாட்சாத்காரம்
செய்விக்கக் கூடிய நிரந்தர சகஜயோகி பவ !
எந்த ஒரு ஆடையும் அணிந்து கொள்வதும் அல்லது அணிந்து கொள்ளாமல் இருப்பதும்
நம்விருப்பம் அது போல இந்த உடல் என்ற ஆடையை அணிந்து கொள்ளும் அனுபவம் இருக்க வேண்டும்.
இந்த உடல் என்ற ஆடையை தேவையான போது அணிந்து கொண்டு, காரியம் செய்து முடித்தவுடன்
ஆடையில் இருந்து விடுபட்டு விட வேண்டும். உடல் மற்றும் ஆத்மா இரண்டும் விடுபட்ட நிலையில்
நடக்கும் போதும்லிசுற்றும் போதும் அனுபவம் செய்ய வேண்டும் அப்பொழுது தான் நிரந்தர சகஜயோகி என்று
கூறுவார்கள் அவ்வாறு விடுபட்ட நிலையில் இருக்கக் கூடிய குழந்தைகளின் மூலமாக அநேக ஆத்மாக்களுக்கு
பரிஸ்தா ரூபம் மற்றும் எதிர்கால இராஜ்ய பதவியின் சாட்சாத்காரம் . ஆகும். கடைசியில் இந்த சேவையில்
தான் பிரபாவம் ஏற்படும்.
சுலோகன்:லி சங்கமயுகத்தில் ஒரு வினாடியை வீணாக்குவது என்றால்,
ஒரு வருடம் வீணாக்குவதற்குச் சமமாகும்.
(1/4)
14.
08.2016 காலை முரளி ஓம் சாந்தி ''அவ்யக்த பாப்தாதா''
ரிவைஸ் 03.11.1981 மதுபன்
'' யுத்தம் செய்பவராக இன்றி இதயசிம்மாசனதாரி ஆகுங்கள் ''
இன்று தூரதேசத்தில் இருக்கும் பரதேசி (இன்னொரு தேசத்தைச் சேர்ந்த) தந்தை தன்னுடைய
குழந்தைகளை சந்திப்பதற்காக வந்திருக்கிறார். குழந்தைகளுக்கும் சுயதேசத்தின் நினைவு ஊட்டுவதற்காக
மற்றும் சக்திசாலியாகி உடன் அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கிறார். சுயதேசம் நினைவில் வந்து
விட்டதில்லையா? இது மாற்றான் தேசம் மற்றும் மாற்றானின் இராஜ்யம். இதில் அனைத்தும் பழையது தான்
தென்படுகிறது. நபர்களைப் பாருங்கள் மற்றும் பொருட்களைப் பாருங்கள் அனைத்தும் என்னவாக தென்படுகின்றன?
அனைத்தும் இத்துப்போய்விட்டன. நாலாபுறங்களிலும் இருள் சூழ்ந்திருக்கிறது. அந்த மாதிரி தேசத்தில் நீங்கள்
அனைவரும் பந்தனத்தில் கட்டப்பட்ட, பந்தனம் நிறைந்த ஆத்மாக்களாக ஆகிவிட்டீர்கள், அந்த நேரம்
தந்தை வந்து சுயரூபம் மற்றும் சுயதேசத்தின் நினைவூட்டி, பந்தனத்திலிருந்து விடுபட்டவராக ஆக்கி
சுயதேசத்திற்கு அழைத்துச் செல்கிறார். கூடவே சுயராஜ்ஜியத்தின் அதிகாரியாக ஆக்குகிறார். அப்படி அனைத்து
குழந்தைகளும் தன்னுடைய சுயதேசத்திற்குச் செல்வதற்கு தயாராக இருக்கிறீர்களா? அல்லது எப்படி நீங்கள்
ஒரு நாடகத்தை காண்பிக்கிறீர்கள் லி சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்று விரும்பிய போதிலும் வெகு
சிலர் தான் தயார் ஆகிறார்கள். அந்த மாதிரியே பல விஷயங்களை உருவாக்கி 'போகலாம் லி போகலாம்' என்று
கூறுபவர்களே இல்லையே? கணக்கு வழக்கை முடித்து விட்டீர்களா அல்லது இப்பொழுது இன்னும் கொஞ்சம்
மிச்சம் இருக்கிறதா? தன்னுடைய கணக்கு வழக்கை முடித்ததின் நிறைவு விழாவை கொண்டாடி விட்டீர்களா
அல்லது இது வரையிலும் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டே இருக்கிறீர்களா? இறுதியில் இந்த
நிறைவு விழாவை கொண்டாடுவோம் என்று அப்படி நினைக்கவில்லையே? நிறைவு விழாவை இப்பொழுதிலிருந்தே
கொண்டாடினீர்கள் என்றால் தான் இறுதியில் சம்பூர்ண நிலையின் விழாவைக் கொண்டாடுவீர்கள். இந்த
பழைய கணக்கு வழக்கை முடிக்க வேண்டும். அதை இப்பொழுது செய்வதினால் வெகுகாலத்திற்கு பந்தனம்
அற்றவராக, வெகுகாலத்தின் ஜீவன்முக்தியின் பதவியை அடைபவராக ஆக முடியும். இல்லை என்றால் இறுதி
வரையிலும் யுத்தம் செய்யக்கூடிய யுத்த வீரனாகவே இருந்து விடுவீர்கள். யார் இறுதி வரை யுத்த வீரனின்
வாழ்க்கையில் இருக்கிறார்களோ அவருடைய பிராப்தி என்னவாக இருக்கும்? யுத்த வாழ்க்கையோ குழந்தைப்
பருவத்தின் வாழ்க்கை. இப்பொழுதோ சுயராஜ்ஜிய அதிகாரி ஆகிவிட்டீர்கள். நினைவின் திலகமிட்டு தந்தையின்
இதயசிம்மாசனதாரி ஆகிவிட்டீர்கள். இதயசிம்மாசனத்தில் இருப்பவர் யுத்தம் செய்பவராக இருப்பாரா என்ன?
யுத்தத்தின் பலனாக சிம்மாசனம் மற்றும் கிரீடம் கிடைத்து விட்டது. இந்த தற்சமயத்து பலன் மற்றும்
பிரத்யக்ஷ பலன் இன்னும் பிராப்தி ஆகவில்லையா? சங்கமயுகத்தின் பலனை அடைந்து விட்டீர்களா அல்லது
இனி தான் அடைய வேண்டுமா? என்ன பாடல் பாடுகிறீர்கள்? என்ன அடைய வேண்டுமோ அதை அடைந்து
விட்டோம் என்றா அல்லது அடைய வேண்டும் என்றா பாடுகிறீர்கள். எப்பொழுது நிகழ் காலத்துடன் எதிர்காலத்தின்
சம்மந்தம் இருக்கிறது என்றால், எதிர்கால பலன் 2500 வருடங்களென்ன, தற்சமயத்து பிராப்தி இறுதி நேரத்தின்
5, 6 மாதங்கள் இருக்குமா அல்லது 5 நாட்கள் இருக்குமா அல்லது 5 மணி நேரம் இருக்குமா அல்லது
சங்கமயுகத்தின் நீண்ட காலம் இருக்குமா? ஒருவேளை சங்கமயுகத்தின் பிராப்தி நீண்ட காலம் இருக்கவில்லை
என்றால், எதிர்காலத்தின் பிராப்தி நீண்ட காலம் எப்படி இருக்கும். அங்கே உள்ள 2500 வருடங்கள் இங்கே
உள்ள 25 வருடங்களிலும் இருக்காது. நேரடியாக தந்தையின் குழந்தையாகி சதா காலத்திற்கு ஆஸ்தி
அடையவில்லை என்றால் என்ன தான் அடைந்திருக்கிறீர்கள்? அனைத்து பொக்கிஷங்களின் அதிபதி அவருடைய
குழந்தையாகி கஜானாக்களினால் நிரம்பியவர் ஆகவில்லை என்றால் எஜமானனின் குழந்தையாகி என்ன
செய்தீர்கள்?
'வெற்றி எனது பிறப்புரிமை ஆகும்' என்று கூறிக்கொண்டே எப்பொழுதும் வெற்றியை அனுபவம்
செய்யவில்லை என்றால் பிறப்புரிமை உடையவராகி என்ன செய்தீர்கள்? பாக்கியத்தை உருவாக்கும் இரண்டு
தந்தைகளின் குழந்தையாகி இருந்தும் நிரந்தரமாக பல கோடி மடங்கு பாக்கியசாலி ஆகவில்லை என்றால்,
இரண்டு தந்தைகளின் குழந்தைகயாகி என்ன செய்தீர்கள்? உயர்ந்த கர்மங்களின் மற்றும் உயர்ந்த சரித்திரத்தை
உருவாக்குவதற்காக சகஜவிதியை வரமளிப்பவராகி தந்தை கொடுத்திருக்கிறார் இருந்தும் சித்தி (வெற்றி) சொரூபம்
ஆகவில்லை என்றால் என்ன செய்தீர்கள்?
(2/4)
14.08.2016
யுத்தம் செய்வது, கடினமாக உழைப்பது, மெது மெதுவாக நிதானமாக செல்வது லி இது தான் விருப்பமா
என்ன? யுத்த மைதானம் பிடித்திருக்கிறதா என்ன? இதய சிம்மாசனம் பிடித்திருக்கவில்லையா என்ன?
ஒருவேளை சிம்மாசனம் தான் விருப்பம் என்றால் சிம்மாசனதாரியிடம் மாயா வர முடியாது. சிம்மாசனத்திலிருந்து
இறங்கி யுத்த மைதானத்தில் சென்று விடுகிறீர்கள். அப்பொழுது தான் கடின உழைப்பு செய்ய வேண்டியதாக
இருக்கிறது. எப்படி அனேக குழந்தைகள் இப்படியும் இருக்கிறார்கள், அவர்களால் சண்டை சச்சரவு செய்யாமல்
இருக்கவே முடியாது. மேலும் யாரும் கிடைக்கவில்லை என்றால் கூட தன்னோடே ஏதாவது சச்சரவு செய்து
கொண்டே இருப்பார். யுத்தம் செய்யும் சம்ஸ்காரம் இராஜ சிம்மாசனத்திலிருந்து விடுவித்து யுத்த
மைதானத்திலிருந்து அழைத்துச் செல்கிறது. இப்பொழுது யுத்தம் செய்யும் சம்ஸ்காரத்தை முழுமையாக அழித்து
விடுங்கள். இராஜ்யம் செய்யும் சம்ஸ்காரத்தைக் கடைபிடியுங்கள், பிராப்தியின் பலனை அனுபவிப்பவராக ஆகுங்கள்.
அப்பொழுது தான் எதிர்காலத்தில் வெகு காலத்திற்கான பிராப்தியின் பலனை அனுபவிப்பவராகவும் ஆவீர்கள்.
இறுதி வரையிலும் யுத்தம் செய்யும் வாழ்க்கையே இருக்கிறது என்றால் என்னவாக ஆவீர்கள்? சந்திர
வம்சியாக ஆக வேண்டியது இருக்கும்.
சூரிய வம்சியின் அடையாளம் லி எப்பொழுதும் குμயோடு நடனமாடிக் கொண்டிருப்பவர். எப்பொழுதும்
அதீந்திரிய சுகத்தின் ஊஞ்சலில் ஊஞ்சலாடுபவர். சந்திர வம்சத்து இராமரை ஒருபொழுதும் ஊஞ்சலில் வைத்து
ஆட்ட மாட்டார்கள். நடனமாடியதாக காண்பிக்கவில்லை. யுத்தம் செய்வதின் வில் அம்பைத் தான்
காண்பித்திருக்கிறார்கள். பிற்காலத்து இராஜ்ய பாக்கியம் கிடைக்கும். பாதி நேரத்து இராஜ்ஜியம் வெகு காலமாகவோ
ஆனது இல்லை இல்லையா? எனவே எப்பொழுதும் ஊஞ்சலில் ஆடிக்கொண்டே இருங்கள். அனைவருடன்
சம்ஸ்காரத்தை இணைக்கும் நடனத்தை ஆடிக் கொண்டே இருங்கள், குμயில் நடனமாடிக் கொண்டே இருங்கள்.
இதைத் தான் சங்கமயுகத்தின் பிராப்தியின் பலன் சொரூபம். முயற்சி செய்பவர் என்ற இந்த வார்த்தையும்
எதுவரை இருக்கும்?
இந்த நேரம் முயற்சி செய்பவர் அடுத்த நேரம் பிராப்தியின் பலன் பெறுபவர். சங்கமயுக்ததின் முயற்சி
செய்பவர், சத்யுகத்தின் பிராப்தியின் பலனை அனுபவிப்பவர் என்றல்ல. சங்கமயுகத்தின் பிராப்தியின் பலனை
அனுபவிப்பவர் ஆக வேண்டும். இந்த நேரம் விதையை விதையுங்கள். அடுத்த நேரம் பழத்தை அருந்துங்கள்.
எப்பொழுது அறிவியலைச் சேர்ந்தவர்களும் ஒவ்வொரு காரியத்தின் பிராப்தியின் (பலன்) வேகத்தை
அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அமைதியின் சக்தி உள்ளவர்கள் தன்னுடைய வேகத்தை
அவர்களையும் விட அதிகமாக தீவிர படுத்துவார்கள் தான் இல்லையா? அல்லது ஒரு ஜென்மத்தில் செய்ய
வேண்டும் மற்றும் அடுத்த ஜென்மத்தில் அடைய வேண்டும் என்று அப்படியா? அவர்கள் ஒலியின் வேகத்தை
விட அதி வேகமாக செல்ல விரும்புகிறார்கள். ஒவ்வொரு காரியத்தையும் ஒரு விநாடியின் வேகத்தை விட
அதிகப்படுத்த விரும்புகிறார்கள். இந்த அளவு முழு உலகத்தின் விநாஷத்தை அவ்வளவு குறைந்த நேரத்தில்
செய்வதற்காகத் தயாராகி விட்டீர்களா? அப்படி ஸ்தாபனையின் காரியத்தில் பொறுப்பாளர் ஆகியிருக்கும்
ஆத்மாக்கள் ஒரு நொடியில் செய்ய வேண்டும், ஒரு நொடியில் அடைய வேண்டும், என்று அந்த மாதிரி
அதிவேகத்தின் அனுபவியாக இருக்க மாட்டீர்களா? இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? என்று புரிந்ததா?
பிரத்யக்ஷ பலன் என்ற பழத்தை அருந்துங்கள். பிரத்யக்ஷ பலன் என்ற பழம் பிடிக்கவில்லையா? கடினமாக
உழைக்கக்கூடிய பழம் பிடித்திருக்கிறதா? கடின உழைப்பின் காய்ந்த பழத்தை அருந்தி அந்த மாதிரி
பலஹீனமானவர் ஆகிவிட்டீர்கள். கண்ணில்லாத, புத்தியில்லாத, சிரேஷ்ட காரியம் செய்யாதவராக ஆகிவிட்டீர்கள்.
இப்பொழுதோ புதிய பிரத்யக்ஷ பலன் என்ற பழத்தை அருந்துங்கள். கடின உழைப்பை (பாபா மீதான)
அன்பாக மாற்றி விடுங்கள். நல்லது.
அந்த மாதிரி எப்பொழுதும் இராஜ வம்சத்தின் சம்ஸ்காரம் உள்ளவர்களுக்கு, எப்பொழுதும் அனைத்து
பொக்கிஷங்களின் அதிகாரி அதாவது குழந்தையாக இருப்பவரிலிருந்து எஜமானன், எப்பொழுதும் சங்கமயுகத்தின்
பிராப்தியின் பலனை அனுபவிக்கும் சம்ஸ்காரம் உள்ளவர்களுக்கு, பிரத்யக்ஷ பலன் என்ற பழத்தை அருந்துபவர்
களுக்கு, அந்த மாதிரி எப்பொழுதும் பிராப்தி சொரூபமான, எப்பொழுதும் அனைத்து பந்தனத்திலிருந்தும்
விடுபட்ட, சங்கமயுகத்து ஜீவன்முக்த், அந்த மாதிரி ஆசனம், கிரீடம் அணிந்த குழந்தைகளுக்கு பாப்தாதாவின்
அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.
பார்ட்டிகளுடன் தனிப்பட்ட சந்திப்பு லி
1) எப்பொழுதும் ஆன்மீக போதையில் நிலைத்திருக்கிறீர்களா? ஆன்மீக போதை என்றால் ஆத்ம
அபிமானி ஆவது. எப்பொழுதும் காரியங்கள் செய்து கொண்டே ஆத்மாவைப் பார்ப்பது, உணர்வது, இது தான்
ஆன்மீக போதை. ஆன்மீக போதையில் எப்பொழுதும் அனைத்து பிராப்தியின் அனுபவம் சுலபமாகவே
இருக்கும். எப்படி ஸ்தூல போதை உள்ளவர்களும் தன்னை பிராப்தி நிறைந்தவர் என்று நினைக்கிறார்கள்,
(3/4)
14.08.2016
அதே போன்று இந்த ஆன்மீக போதையில் இருப்பவர் அனைத்து பிராப்திகளின் சொரூபம் ஆகிவிடுகிறார்.
இந்த போதையில் இருப்பதினால் அனைத்து விதமான துக்கங்களும் விலகிவிடுகின்றன. துக்கம் மற்றும்
அமைதியின்மைக்கு விடை கொடுக்கப்பட்டுவிடுகிறது. எப்பொழுது சதா காலத்திற்காக சுகமளிக்கும் வள்ளலின்,
சாந்தி அளிக்கும் வள்ளலின் குழந்தைகள் ஆகிவிட்டீர்கள் என்றால் துக்கங்களும், அசாந்திக்கு விடை
கொடுத்துவிட்டீர்கள் தான் இல்லையா. அசாந்தியின் பெயர், அடையாளமே இல்லை. அமைதிக் கடலின்
குழந்தைகள் அமைதியற்றவராக எப்படி ஆக முடியும். ஆன்மீக போதை என்றால் துக்கம் மற்றும் அமைதியின்மை
முடிவடைந்தது. அதற்கான விடை கொடுக்கும் விழாவைக் கொண்டாடி விட்டீர்களா? ஏனென்றால்,
தூய்மையின்மை மூலம் துக்கம் மற்றும் அமைதியின்மை உருவாகிறது. எங்கு தூய்மையின்மை இல்லையோ
அங்கு துக்கம் அமைதியின்மை எங்கிருந்து வந்தது. பதீத பாவனன் தந்தையின் குழந்தைகள் மாஸ்டர் பதீத
பாவனன் ஆகிவிட்டீர்கள். யார் மற்றவர்களை தூய்மையில்லாதவர்களில் இருந்து தூய்மையாக ஆக்குபவராக
இருப்பாரோ அவரே தூய்மையானவராகத் தான் இருப்பார் இல்லையா? யார் தூய்மையான பவித்ர ஆத்மாக்களாக
இருப்பாரோ அவர்களிடம் அமைதி மற்றும் சுகம் இயல்பாகவே இருக்கும். அப்படி நீங்கள் தூய்மையான
ஆத்மாக்கள், சிரேஷ்ட ஆத்மாக்கள், விசேஷ ஆத்மாக்கள் ஆவீர்கள். உலகத்தில் நீங்கள் மகான் ஆத்மாக்கள்,
ஏனென்றால் தந்தையின் குழந்தையாக ஆகிவிட்டீர்கள். அனைத்தையும் விட மிகப்பெரிய மகான் தன்மை
தூய்மை ஆவது ! எனவே இந்த மகான் நிலையின் எதிரில் அனைவரும் தலைவணங்குவார்கள். அந்த ஜட
விக்கிரகங்கள் யாருடையவை? இப்பொழுது கோயிலுக்குச் சென்றீர்கள் என்றால், என்ன நினைப்பீர்கள்? யாருக்கு
பூஜை நடந்து கொண்டிருக்கிறது. இது என்னுடைய ஜட விக்கிரகம் என்று நினைவில் வருகிறது. அப்படி
தன்னை மகான் ஆத்மா, என்று புரிந்து நடந்து கொள்ளுங்கள். நீங்கள் அந்த மாதிரி தெய்வீகக் கண்ணாடி
ஆகுங்கள். அதில் அனேக ஆத்மாக்களுக்கு அவர்களுடைய உண்மையான முகம் தென்படட்டும்.
2) எப்பொழுதும் ஏறும் கலையில் சென்று கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் ஒவ்வொரு அடியிலும்
முன்னேறும் கலையின் அனுபவிகள். எண்ணம், சொல், செயல், உறவு மற்றும் தொடர்பு அனைத்திலும்
எப்பொழுதும் ஏறும் கலை ! ஏனென்றால், இப்பொழுது நடக்கும் நேரமே ஏறும் கலைக்கானது, வேறு எந்த
யுகமும் முன்னேறும் கலைக்கானது அல்ல. சங்கம யுகம் முன்னேறும் கலைக்கான யுகம். எனவே எப்படி
நேரமோ அப்படியே அனுபவம் இருக்க வேண்டும். ஒரு விநாடி கடந்து சென்றது. அதற்குப் பிறகு ஒரு
விநாடி வந்தது என்றால் ஏறும் கலை. அந்த மாதிரி இல்லை என்றால் இரண்டு மாதங்களுக்கு முன்பு எப்படி
இருந்தீர்களோ அப்படியே இப்பொழுதும் இருக்கிறீர்கள். ஒவ்வொரு நேரமும் பரிவர்த்தனை, ஆனால்
பரிவர்த்தனை (மாற்றம்) கூட முன்னேறும் கலைக்கானது. எந்த ஒரு விஷயத்திலும் நிற்பவர் அல்ல. ஏறும்
கலையில் செல்பவர்கள் நிற்பதில்லை, அவர்கள் எப்பொழுதும் மற்றவர்களையும் ஏறும் கலையில் அழைத்துச்
செல்வார்கள்.
வரதானம் : சிந்தனைசக்தி மூலமாக சக்திசாலியாகி தடைகளின் பாதிப்பை
அகற்றக்கூடிய அனைத்து கவர்ச்சிகளிலிருந்தும் விடுபட்டவர் ஆகுக.
தற்சமயம் சிந்தனை சக்தி மூலமாக ஆத்மாவில் அனைத்து சக்திகளையும் நிரப்புவதற்கான அவசியம்
இருக்கிறது. இதற்காக உள்நோக்கு பார்வை உடையவராகி ஒவ்வொரு ஞானத் துளியையும் சிந்தித்து கடைந்தெடுத்
தீர்கள் என்றால் வெண்ணெய் வெளியாகும்.மேலும் அவர் சக்திசாலி ஆகிவிடுவார். அந்த மாதிரியான சக்திசாலி
ஆத்மாக்கள் அதீந்திரிய சுகத்தின் பிராப்தியின் அனுபவம் செய்கிறார்கள். அவர்களை அற்ப காலத்தின் எந்தவொரு
பொருளும் தன் பக்கம் ஈர்க்க முடியாது. அவருடைய மூழ்கியிருக்கும் நிலை மூலமாக ஆன்மீகத்தின்
சக்திசாலியான நிலை என்ன உருவாகிறதோ அதன் மூலம் தடைகளின் பாதிப்பு அகன்று விடுகிறது.
சுலோகன்: பிராமண உலகத்தில் அனைவரது மரியாதையையும்
பெறுபவரே சிம்மாசனதாரி ஆகிறார்.
கேள்வி: யார் எப்பொழுதும் பறக்கும் பறவையாக இருப்பாரோ அவருடைய அடையாளமாக என்ன
இருக்கும்?
பதில்: அவர் சக்கரவர்த்தியாக இருப்பார். ஆல்ரவுண்ட் (அனைத்து வித சேவையிலும்) பங்கை செய்பவர்கள்.
ஏறும் கலை உள்ளவர்கள் அந்த மாதிரி பந்தனமற்றவர்களாக இருப்பார்கள். எங்கே சேவை நடந்தாலும்
அங்கே வந்து சேர்ந்து விடுவார்கள். மேலும் அனைத்து விதமான சேவையில் வெற்றி அடைபவர்களாக
ஆகிவிடுவார்கள். எப்படி தந்தை ஆல்ரவுண்ட் பங்கை செய்வபராக இருக்கிறார், தோழனாகவும் ஆக முடியும்
என்றால் தந்தையாகவும் ஆக முடியும், அதே போல் ஏறும் கலை உள்ளவர்கள் எந்த நேரம் எந்த சேவையின்
அவசியம் இருக்கிறதோ அதில் முழுமையாகப் பங்கேற்று செய்ய முடியும், இதைத் தான் 'ஆல்ரவுண்ட்
பறக்கும் பறவை' என்ற கூறுவது. நல்லது.
(4/4)
14.08.2016
கேள்வி : சாகார பிரம்மாவின் அனேக புஜங்கள் (கைகள்) ஏன் பிரசித்தி ஆகியிருக்கிறார்கள்? இது
யாருடைய நினைவுச் சின்னம்?
பதில்: இது குழந்தைகளாகிய உங்களின் சகயோகி சொரூபத்தின் நினைவு சின்னமாகும். எப்படி
உடலின் விசேஷ காரியம் செய்வது புஜங்களாகும். அதே போல் பாப்தாதாவின் காரியத்தில் சேவை செய்வோர்
நீங்கள், அனைத்து குழந்தைகளும் பொறுப்பாளர் ரூபத்தில் இருக்கிறீர்கள். எந்தக் குழந்தைகள் எப்பொழுதும்
யதார்த்த ரூபத்தில் துணையை வைத்து நடந்து கொள்ளும் துணைவர்களாக இருக்கிறார்கள் மற்றும் உதவியாளராக
இருக்கிறார்கள் என்றால் இவர்களைத் தான் வலது கரம் என்று சொல்வது !
கேள்வி : வலது கரத்தின் விசேஷம் என்ன?
பதில் லி வலது கரம் எப்பொழுதும் தூய்மையாக அதாவது சுத்தமாக மற்றும் உயர்ந்ததாக இருக்கும்.
ஏதாவது உயர்ந்த மற்றும் தூய்மையான காரியம் வலது கரம் மூலமாகத் தான் செய்யப்படுகிறது. அதே
போன்று பாப்தாதாவின் சகயோகி வலது கரம் எப்பொழுதும் வார்த்தையில், செயலில் மற்றும் தொடர்பில்
உன்னதமாக மற்றும் சுத்தமாக அதாவது தூய்மையாக இருக்கிறார்கள்.
2) எப்படி கரங்கள் மூலமாக காரியத்தை செய்விக்கும் சக்தி ஆத்மா, கரங்கள் காரியம் செய்பவைகள்
மற்றும் ஆத்மா செய்விப்பவர், அது போலவே வலது கரமாக இருக்கும் சகயோகிகள் எப்பொழுதும் தன்னுடைய
செய்விப்பவர் தந்தையை நினைவில் வைத்துக் கொண்டே செய்யும் கருவியாக ஆகிறார்கள். தன்னை
செய்விப்பவர் என்று நினைப்பதில்லை, எனவே அவருடைய ஒவ்வொரு காரியத்தில் விலகியிருக்கும் நிலை,
அகங்காரமற்ற நிலை மற்றும் பணிவின் புதுஉலக படைப்பின் சிறப்புக்கள் நிரம்பியதாக இருக்கும்.
3) விசேஷமாக வலது கரம் சக்திசாலியாக இருக்கும். வலதுகர சகயோகி ஆத்மா எப்பொழுதும் உலக
நன்மை, உலக மாற்றத்தின் காரியத்தின் பொறுப்பின் சுமையை சுலபமாகவே எடுக்க முடியும்.
4) அவருடைய காரியத்தின் வேகம் அதிகமாக இருக்கும். அவர் ஒவ்வொரு பாடத்தையும் தாரணையில்
மற்றும் நடைமுறை சொரூபத்தில் கொண்டு வருவதில் தீவிர முயற்சி செய்பவராக இருப்பார் மேலும் எப்பொழுதும்
எவரெடியாக இருப்பார்.
கேள்வி : இடது கரம் சகயோகி புஜங்களின் அடையாளங்கள் என்னவாக இருக்கும்?
பதில்: அவர்களிடம் சுத்தத்தின் கூடவே சுத்தமின்மை அதாவது எண்ணம், சொல் மற்றும் செயலில்
சில நேரம் ஏதாவது அசுத்தம் வந்து விடுகிறது, அதாவது சம்பூர்ண சுத்தமானவர்களாக இருப்பதில்லை
2) அவர்களுடைய முயற்சி செய்வதின் வேகம் குறைவாக இருக்கும். செய்யலாம், யோசிக்கலாம்
ஆனால் லெஃப்ட் (இடது) அதாவது லேட்லிஆக (தாமதமாக) செய்வார்கள். உடன் இருப்பார்கள், காரியம்
செய்வார்கள், ஆனால் முழுமையான பொறுப்பை எடுப்பதில் தைரியம் காட்ட மாட்டார்கள். எப்பொழுதும்
உற்சாகம், துணிச்சல் வைப்பார்கள், ஆனால் ஆதாரமற்றவர்களாக இருக்க மாட்டார்கள்.
3) அவர்களுடைய நிலை வெகு நேரம் வக்கீல் அதாவது லாயரைப் போன்று இருக்கும். சட்டங்களை
அதிகம் யோசிப்பார்கள், ஆனால் குறைவான லாபத்தை அடைவார்கள். அவரே அவருக்கு நீதிபதி ஆக
முடியாது. ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் கூட இறுதி தீர்ப்பிற்காக நீதிபதியின் அவசியத்தை அனுபவம்
செய்வார்கள். இப்பொழுது நான் வலது கரமா அல்லது இடது கரமா? என்று நீங்கள் உங்களையே சோதனை
செய்யுங்கள்.
கேள்வி : அனைத்து குழந்தைகளின் இதயத்தில் உலக மாற்றத்தின் நல்ல எண்ணங்கள்
இருக்கின்றன, அந்த எண்ணங்கள் எப்பொழுது நிறைவேறும் ?
பதில்: எப்பொழுது தன்னை சம்பூர்ணமாக பரிவர்த்தனை (மாற்றம்) செய்வார்களோ அப்பொழுது தான்
! எந்த அளவு தன்னுடைய பரிவர்த்தனையில் குறைவு இருக்குமோ அந்த அளவே உலக மாற்ற காரியத்தின்
வேகத்திலும் குறைவு இருக்கும். தன்னுடைய மாற்றத்தின் மூலமாகத் தான் நேரத்தின் மாற்றத்தை செய்ய
முடியும். தன்னை பார்த்தீர்கள் என்றால், நேரத்தைப் பற்றி இயல்பாகவே தெரிய வந்து விடும். ஏனென்றால்,
பரிவர்த்தனைக்கான நேரத்தின் கடிகாரம் நீங்கள். உலகத்தின் அதாவது அனைத்து ஆத்மாக்களின் கவனம்
இப்பொழுது பொறுப்பாளர் ஆகியிருக்கும் நேரத்தின் கடிகாரம் உங்கள் மேல் இருக்கிறது. இப்பொழுது
இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது என்று பார்ப்பார்கள்.
TAMIL MURLI 01 TO 07 AUGUST - 2016
01
08.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே ! எல்லா விஷயங்களிலும் சகித்துக் கொள்வோர் ஆகுங்கள்,
இகழ்லிபுகழ், வெற்றிதோல்வி அனைத்திலும் சமமாக இருங்கள். கேள்விபட்ட விஷயங்களில்
(வதந்தி) நம்பிக்கை வைக்காதீர்கள்.
கேள்வி :ஆத்மா எப்போதும் ஏறும் கலையில் முன்னேறிக் கொண்டே இருப்பதற்கு எளிய வழி
கூறுங்கள்?
பதில்: ஒரு பாபாவிடம் மட்டுமே கேளுங்கள். மற்றவர்களிடம் கேட்காதீர்கள். வீணான பரசிந்தனையில்,
வெளி விஷயங்களில் தங்களின் நேரத்தை வீணாக்காமல் இருந்தால் ஆத்மா எப்போதும் ஏறும் கலையில்
இருக்கும். இல்லாத பொல்லாத விஷயங்களைக் கேட்பதால், அதன் மீது நம்பிக்கை வைப்பதால் நல்ல குழந்தைகள்
கூட விழுந்து விடுகிறார்கள். ஆகவே மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஓம் சாந்தி. இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்கு உண்மையில் நாம் அரை கல்பமாக இராவண
இராஜ்யம் ஆரம்பமானதிலிருந்து தந்தையை நினைத்தோம் என்பது இப்போது நினைவிற்கு வருகிறது.
முழுமையாக அரை கல்பமாக நினைத்தனர் என்பதும் கிடையாது. எப்போதேல்லாம் துக்கம் அதிகரித்ததோ
அப்போது நினைவு செய்தனர். பக்தி மார்க்கத்திலிருந்து நாம் இறங்கிக் கொண்டே வந்தோம் என்பது இப்போது
உங்களுக்குத் தெரிகிறது. நாடகத்தின் ரகசியம் புத்தியில் இருக்கிறது. வாயிலிருந்து எதுவும் சொல்ல வேண்டியது
இல்லை. நாம் அவருடையவராகி விட்டோம். ஆகவே அதிகமாக ஞானத்தின் அவசியம் இல்லை. பாபா
வினுடையவராகி விட்டோம் என்றால், பாபாவின் சொத்துக்கு அதிகாரி ஆகிவிட்டோம். எதுவும் கர்மேந்திரியங்
களினால் செய்ய வேண்டியது இல்லை. பக்தி மார்க்கத்தில் பகவானை சந்திப்பதற்காக எவ்வளவு யாகம்லிதவம்லி
தானம்லிபுண்ணியம் செய்கிறார்கள். எங்கு சென்றாலும் எல்லா இடங்களிலும் தீர்த்த ஸ்தலங்கள் கோவில்கள்
போன்றவை இருக்கின்றன. முழு பாரதத்தின் தீர்த்த ஸ்தலங்கள் கோவில்களைச் சுற்றி வருகிற எந்த மனிதரும்
இருக்க முடியாது அப்படி சுற்றி வந்தாலும் எதுவும் கிடைக்காது. அங்கே சேகண்டி, பெரியமணி என்று
எவ்வளவு அதிகம் சத்தம் கூச்சல் உள்ளது. இங்கே அம்மாதிரி விஷயம் எதுவும் இல்லை. பாட்டு பாடவோ,
கைகள் தட்ட வேண்டிய அவசியமோ இல்லை. மனிதர்கள் எதையெல்லாம் செய்யவில்லை. அளவற்ற கர்ம
காண்டம் இருக்கிறது. இங்கேயோ குழந்தைகளாகிய நீங்கள் நினைவு மட்டும் செய்ய வேண்டும். வேறு
எதுவும் இல்லை. வீட்டிலிருந்தாலும் எல்லாவற்றையும் செய்தாலும் தந்தையை மட்டும் நினைக்க வேண்டும்.
இப்போது நாம் தேவதைகளாகிக் கொண்டிருக்கிறோம் என நீங்கள் அறிகிறீர்கள். இங்கே தெய்வீக குணங்களை
தாரணை செய்ய வேண்டும். உணவு வகைகள் கூட தூய்மையாக இருக்க வேண்டும். 36 வகையான உணவுகள்
அங்கே கிடைக்கும், இங்கே சாதாரணமாக இருக்க வேண்டும். உயர்ந்ததாகவும் வேண்டாம். மிகத் தாழ்ந்ததாகவும்
வேண்டாம். அனைத்து விஷயங்களிலும் பொறுமை வேண்டும். இகழ்லிபுகழ், வெற்றிலிதோல்வி, வெயில்லிகுளிர்
அனைத்தையும் பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. நேரமே அவ்வாறு இருக்கிறது. தண்ணீர் கிடைக்காது,
இது, அது கிடைக்காது, சூரியன் கூட தன்னுடைய வெப்பத்தைக் காண்பிக்கும். ஒவ்வொரு பொருளும்
தமோபிரதானமாக வேண்டும். இந்த சிருஷ்டியை தமோபிரதானமாகத்தான் வேண்டும். தத்துவங்களும்
தமோபிரதானமாக வேண்டும். எனவே இவை துக்கத்தை அளிக்கின்றன. இகழ், புகழில் கூட போகக் கூடாது.
பலர் இருக்கிறார்கள், யாராவது தவறுதலாக யாருக்காவது ஏதாவது சொல்லி விட்டால் உடனே சீரழிந்து
போகிறார்கள். ஏனென்றால், தற்போது விஷயங்களைத் திரிப்பது நிறைய இருக்கிறது அல்லவா? யாரோ ஏதோ
சொன்னார்கள்லிஇவர்களுக்கு தேக உணர்வு இருக்கிறது, வெளி பகட்டு நிறைய இருக்கிறது, யாரோ இதை
சொல்லி விட்டார், அவ்வளவு தான் காய்ச்சல் அதிகமாகி விடுகிறது என உங்களுக்காக பாபா கூறுகின்றார்.
தூக்கம் கூட போய்விடுகிறது. அரை கல்பமாக மனிதர்கள் இவ்வாறு இருக்கிறார்கள். சிலருக்கு உடனடியாக
காய்ச்சலை வர வழைத்து விடுகின்றனர். உடனடியாக வெளிறிப் போகச் செய்கின்றனர். எனவே இது போன்ற
வீண் விஷயங்களைக் கேட்காதீர்கள் என பாபா கூறுகின்றார். பாபா ஒரு போதும் யாரையும் நிந்திப்பது இல்லை.
பாபா புரிய வைப்பதற்காகக் கூறுகின்றார். இல்லாத பொல்லாத விஷயங்களை ஒருவருக்கொருவர் கூறிக் கொள்வதால்
நல்ல குழந்தைகள் கூட கெட்டுப் போகிறார்கள். துரோகி ஆகி வீணான விஷயங்களை ஒருவர் மற்றவருக்கு
சொல்வார்கள். பக்தி மார்க்கத்தில் கூட எப்படிப்பட்ட கதைகளை எல்லாம் உருவாக்கி இருக்கிறார்கள். இப்போது
உங்களுக்கு ஞானம் கிடைத்திருக்கிறது என்றால், ஒரு போதும் ஓ, ராம் அல்லது ஐயோ கடவுளே ! என்று கூற
முடியாது. இந்த வார்த்தைகள் கூட பக்தி மார்க்கத்தினுடையதாகும். உங்களுடைய வாயிலிருந்து இது போன்ற
வார்த்தைகள் வரக் கூடாது.
இனிமையான செல்ல குழந்தைகளே ! ஆத்ம உணர்வுடையவராகுங்கள் என்று பாபா கூறுகின்றார்.
எவ்வளவு அன்போடு புரிய வைக்கின்றார். யாருடைய விஷயத்தையும் கேட்காதீர்கள், வீணாக பர சிந்தனை
01.08.2016
(2/4)
செய்யாதீர்கள். நாம் ஆத்மா என்பதை உறுதி படுத்திக் கொள்ளுங்கள். ஆத்மா அழிவற்றது. உடல் அழியக்
கூடியது. ஆத்மா தான் சம்ஸ்காரத்தை ஏற்றுக் கொள்கிறது. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் ஆத்ம
உணர்வுடையவராக வேண்டும். துவாபர யுகத்திலிருந்து இராவண இராஜ்யத்தில் நீங்கள் தேக உணர்வுடையவரா
கிறீர்கள். ஆகையால் இப்போது ஆத்மா உணர்வுடையவராகுவதில் உழைக்க வேண்டியிருக்கிறது. நமக்கு
எல்லையற்ற தந்தை கிடைத்திருக்கிறார். அடிக்கடி புத்தியில் இது வர வேண்டும். கல்ப கல்பமாக பாபா சொத்து
கொடுக்கின்றார். இப்போது அவருடைய வழிப்படி நடக்க வேண்டும். தாயும் நீயே, தந்தையும் நீயே...... என்று
அவருக்காக தான் பாடப்பட்டிருக்கின்றது. அவர் அனைத்து உறவுகளிலும் சுகத்தை அளிப்பவர். அவருக்குள்
அனைத்து இனிப்பும் இருக்கிறது. மற்ற நட்பு, உறவுகள் போன்றவை துக்கதை அளிக்கக் கூடியதாகும்.
ஒரேயொரு தந்தையே அனைவருக்கும் சுகத்தை அளிப்பவர் ஆவார். தன்னை ஆத்மா என்று உணர்ந்து
தந்தையாகிய என்னை நினையுங்கள் என்று மிக எளிய வழியில் கூறுகின்றார். இது ஒன்றும் புதிய விஷயம்
இல்லை என பாபா கூறுகின்றார். ஒவ்வொரு 5000 வருடத்திற்குப் பிறகும் நாம் இப்படிப்பட்ட தந்தையிடம்
வருகின்றோம், இவர் யாரோ சாது, சன்னியாசி கிடையாது என நீங்கள் அறிகிறீர்கள். நீங்கள் சாது சன்னியாசி
போன்றோரிடம் இல்லை. மற்றபடி இல்லற மார்க்கத்தில் உறவுகளுடன் சீராகப் பராமரிக்க வேண்டும் என்று
பாபா கூறுகின்றார். இல்லை என்றால் மேலும் பூசல்கள் தான் ஏற்படும். யுக்தியோடு செல்லுங்கள். அன்போடு
ஒவ்வொருவருக்கும் புரிய வைக்க வேண்டும். பாருங்கள், இப்போது அழிவின் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த அசுர உலகம் முடியப் போகிறது. இப்போது தேவதையாக வேண்டும். இங்கே தெய்வீக குணத்தைக்
கடைபிடிக்க வேண்டும். அன்போடு புரிய வைக்க வேண்டும். தேவதைகள் வெங்காயம், பூண்டு போன்றவைகளை
சாப்பிடுவதில்லை. நாம் கூட மனிதனிலிருந்து தேவதையாகிறோம் என்றால் இவ்வாறு எப்படி சாப்பிட முடியும்.
இதை விட்டு விடுங்கள் என உங்களுக்கும் ஆலோசனை வழங்குகிறார். இது போன்ற பொருட்களை நாம்
சாப்பிடுவதில்லை. இப்போது உங்களுக்கு எல்லையற்ற தந்தை தெய்வீக குணங்களைக் கற்பிப்பவர் கிடைத்
திருக்கிறார் என்றால், அனைத்து குணங்களிலும் நிறைந்தவர்..... இங்கே தான் மாற வேண்டும். இங்கே மாறும்
போது தான் எதிர் காலத்தில் புது உலகம் வரும். இரவிற்குப் பிறகு பகல் வருவது போல இது நடக்கிறது.
இப்போது இரவின் முடிவில் தெய்வீக குணங்களை தாரணை செய்தால் பிறகு காலை வந்து விடும். தங்களைத்
தாங்களே ஒவ்வொருவரும் சோதித்துக் கொள்ள வேண்டும். பாபாவிற்கு அனைத்தும் தெரியும் என்று இருக்கக்
கூடாது. நீங்கள் உங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள். டீச்சர் அனைத்தையும் அறிவார் என மாணவர்கள் ஒரு
போதும் கூறுவதில்லை. தேர்வு நாட்கள் நெருங்குகிறது என்றால் நாம் எவ்வளவு தேர்ச்சி பெறுவோம். எந்த
பாடத்தில் நாம் மந்தமாக இருக்கிறோம் என குழந்தைகளே அறிவார்கள். மதிப்பெண்கள் குறைவாகப் பெறுவார்கள்
பிறகு அனைத்தும் சேர்த்து தேர்ச்சி அடைகிறார்கள். இதைப் புரிந்து கொள்கிறார்கள் என்றால், இதிலும் கூட
தங்களை சோதித்துக் கொள்கிறார்கள். தங்களுக்குள் என்ன குறை இருக்கிறது? நான் மிகவும் இனிமையாக
மாறி இருக்கிறேனா? ஆத்மாக்களாகிய நம் அனைவருக்கும் தந்தை பரம்பிதா பரமாத்மா என அன்போடு
அனைவருக்கும் புரிய வைக்க வேண்டும். மனிதர்களின் விஷயம் அல்ல. நாம் நிராகாரரை பகவான் என்கிறோம்.
பகவான் படைப்பவர் ஒருவரே, பிற அனைவரும் படைப்புகள் ! படைப்புகளிடமிருந்து யாருக்கும் சொத்து
கிடைக்காது. சட்டம் இல்லை. இப்போது அனைத்து படைப்பிற்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல் ஒருவர் தான்
படைப்பவர் தந்தையாவார். படைப்பிற்குள் சாது சன்னியாசி அனைவரும் வந்து விடுவர். அனைவரும் ஆத்மாக்கள்
தான் இல்லையா ? ஆம், மனிதர்கள் நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் இருக்கிறார்கள். பதவியும் உயர்ந்ததாக
தாழ்ந்ததாக இருக்கிறது. சன்னியாசிகளிலும் வரிசைக் கிரமம் இருக்கிறது. சிலரைப் பாருங்கள், பிச்சை எடுத்துக்
கொண்டிருக்கிறார்கள். சிலரிடமோ அனைவரும் காலில் விழுகின்றனர். குழந்தைகளாகிய நீங்களும் உயர்ந்தவர்கள்
ஆக வேண்டும். மிகவும் இனிமையாக மாறுங்கள். ஒரு போதும் கோபத்தோடு பேசக் கூடாது. எவ்வளவு
முடியுமோ அன்போடு வேலையை வாங்குங்கள். குழந்தைகள் மிகவும் துன்புறுத்துகிறார்கள், இன்றைய குழந்தைகள்
இப்படி இருக்கிறார்கள் என கூறுகிறார்கள், அன்போடு அவர்களுக்குப் புரிய வையுங்கள். கிருஷ்ணர் அமர்க்களம்
செய்தார் என்று அவரை கயிற்றால் கட்டி வைத்தனர் என காண்பிக்கிறார்கள். எவ்வளவு முடியுமோ அன்போடு
புரிய வைக்க வேண்டும். அல்லது லேசான தண்டனை. பாவம், அறியாதவர்கள். நேரமும் இவ்வாறு இருக்கிறது.
வெளி சங்க தோஷம் மிகவும் மோசமாக இருக்கிறது. நீங்கள் சிலை போன்றவைகளை வைக்க வேண்டிய
அவசியம் இல்லை என எல்லையற்ற தந்தை கூறுகின்றார். எதுவும் கடினமாக உழைக்க வேண்டியதில்லை.
சிவனுடைய சித்திரம் கூட ஏன் வைக்க வேண்டும்? அவர் உங்களுடைய தந்தை அல்லவா? வீட்டில்
குழந்தைகள் தந்தையின் சித்திரத்தை ஏன் வைக்கிறார்கள்? தந்தையோ அழைத்ததும் ஆஜர் ஆவார் அல்லவா.
நான் இப்போது அழைத்த உடன் ஆஜர் ஆகிறேன் இல்லையா ! பிறகு சித்திரங்களின் அவசியம் இல்லை.
நான் குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றேன். பாப்தாதாவைப் பாருங்கள் என்கின்றார். இப்போது பாபா நிராகாரராக
இருக்கிறார். அவரைப் பார்க்க முடியாது. புத்தியினால் புரிந்துக் கொள்ள முடியும். நான் இவருக்குள் பிரவேசமாகி
உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கிறேன் என பாபா கூறுகிறார். இல்லை என்றால் எப்படி வருவேன். கிருஷ்ணரின்
01.08.2016
(3/4)
உடலில் எப்படி வர முடியும். சன்னியாசிகளுக்குள் கூட வர முடியாது. யார் முதல் நம்பரில் இருந்தாரோ
அவருக்குள் நான் வருகிறேன். அவரே இப்போது கடைசி நம்பரில் இருக்கிறார். நீங்களும் இப்போது படித்து
பிறகு முதல் நம்பரில் போக வேண்டும். படிக்க வைக்கக் கூடியவர் ஒருவரே ஆவார். அவருக்கு ஞானக் கடல்
என்று பெயர். உங்களுக்கு ஞானம் மிகவும் நன்றாக கிடைக்கிறது. சாந்தி தாமம் நம்முடைய வீடு, சுகதாமம்
நம்முடைய இராஜ்யம் என நீங்கள் அறிகிறீர்கள். துக்க தாமம் இராவணனின் இராஜ்யம் ஆகும். இனிமையிலும்
இனிமையான குழந்தைகளே ! உங்களுடைய வீடு சாந்திதாமத்தை நினையுங்கள் ! சுகதாமத்தை நினையுங்கள்!
என பாபா கூறுகின்றார். துக்க தாமத்தின் பந்தனத்தை மறந்துக் கொண்டே செல்லுங்கள். இவ்வாறு வேறு
யாரும் கூற முடியாது. அவர்கள் போகவும் முடியாது. நாடகத்திற்கு இடையில் யாரும் திரும்பிச் செல்ல
முடியாது. இன்னார் ஜோதியோடு ஜோதியாக கலந்து விட்டனர், அல்லது நிர்வாண தாமத்திற்குச் சென்று
விட்டனர் என்று கூறுகிறார்கள். ஒருவர் கூட போக முடியாது. அனைவருக்கும் தந்தை மற்றும் அதிபதி
ஒரேயொரு பரம்பிதா பரமாத்மா, அவர் அனைத்து மணப்பெண்களுக்கும் ஒரு மணவாளன் ஆவார். அந்த
உலகியல் பிரிய தர்ஷன் பிரிய தர்μனிகள் ஒருவரை ஒருவர் நினைக்கிறார்கள் என்றால், புத்தியில் சித்திரம்
தோன்றுகிறது. பிறகு ஒருவரை ஒருவர் நினைத்துக் கொண்டே இருப்பார்கள். சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.
நினைத்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களோ ஒரு பிறவியின் பிரிய தர்ஷன், பிரிய தர்μனி. நீங்களோ பல
பிறவிகளாக பிரிய தர்ஷனனின் பிரிய தர்μனிகள். நீங்கள் வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை. ஒரு
தந்தையை மட்டும் நினையுங்கள். அந்த பிரிய தர்ஷன் பிரிய தர்ஷனிக்கு முன்பு சித்திரம் வருகிறது. அவர்களைப்
பார்த்து பார்த்தே வேலை கூட நின்று போய்விடுகிறது. பிறகு அவர்களின் முகம் காணாமல் போகிறது. பிறகு
வேலையை செய்கின்றனர். இதிலோ அவ்வாறு இல்லை. ஆத்மாவும் புள்ளியாக இருக்கிறது. பரமாத்மாவும்
புள்ளியாக இருக்கிறார். தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைக்க வேண்டும். இதில் தான்
உழைப்பு இருக்கிறது. வேறு யாரும் இவ்வாறு பயிற்சி செய்வதில்லை. ஆத்ம ஞானம் கிடைத்திருக்கிறது
என்றால், ஆத்மாவைப் புரிந்துக் கொண்டீர்கள். மற்றபடி இருப்பது பரமாத்மா. அதுவும் உங்களுக்குத் தெரியும்.
பாபா வந்து இங்கே(புருவ மத்தியில்) அமர்கிறார். இவருடைய இடமும் இங்கே இருக்கிறது. ஆத்மா எங்கிருந்து
வேண்டுமானாலும் சென்று விடுகிறது. தெரிவதில்லை. அதனுடைய முக்கிய இடம் புருவ மத்தியாகும். நானும்
பிந்தியாக இருக்கிறேன். இவருக்குள் வந்து அமர்கிறேன் என பாபா கூறுகின்றார். உங்களுக்கு தெரியவே
தெரியாது. பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு வந்து கூறுகின்றார். உங்களுக்கு என்ன கூறுகின்றாரோ அதை
நானும் கேட்கிறேன். முற்றிலும் சரியான விளக்கம் ஆகும். தெய்வீக தர்மத்தைச் சார்ந்தவர்கள் யாரோ அவர்கள்
உடனே புரிந்துக் கொள்வார்கள். இந்த ராஜ்ஜியம் ஸ்தாபனையாகிக் கொண்டிருக்கிறது. முதலில் ஸ்தாபனை,
பிறகு வினாசம் கூட நடக்கும். வேறு எந்த தர்ம ஸ்தாபனையாளர்களும் இவ்வாறு செய்வது கிடையாது.
அவர்கள் தங்களது தர்மத்தை ஸ்தாபனை செய்கிறார்கள். பிறகு வளாச்சி அடைகிறது. இங்கேயோ யார்
எவ்வளவுக்கு எவ்வளவு முயற்சி செய்கிறார்களோ அவ்வளவு எதிர்காலத்தில் உயர்ந்த பதவி பெறுகிறார்கள்.
நீங்கள் எதிர் காலத்தில் 21 பிறவிகளுக்கு சொத்தை அடைகிறீர்கள் என்றால், எவ்வளவு முயற்சி செய்ய
வேண்டும். மேலும் மிகவும் எளிதாகும். யோகமும் மிகவும் எளிது. இதன் மூலம் உங்களுடைய விகர்மம்
அழிகிறது.
நான் உத்திரவாதம் அளிக்கிறேன். கல்ப கல்பமாக நானே வந்து குழந்தைகளாகிய உங்களை தூய்மையாக
மாற்றுகிறேன் என பாபா கூறகிறார். அங்கே அழுக்கானவர்கள் ஒருவரும் கிடையாது. ஞானம் கூட எவ்வளவு
எளிதாக இருக்கிறது. 84 பிறவிகளின் சக்கரம் எப்படி சுழல்கிறது. அந்த ஞானம் கூட புத்தியில் இருக்கிறது.
நாம் 84ன் சக்கரத்தில் சுழன்று வந்துள்ளோம். இதில் நிச்சயம் இருக்க வேண்டும். நிச்சயத்தில் தான் வெற்றி
இருக்கிறது. 84 பிறவிகள் எடுக்கிறோமா என தெரியாது? அல்லது சிறிது குறைவோ என்று இருக்கக் கூடாது.
இதுவோ மிகவும் எளிதான விளக்கம் ஆகும். இந்த படங்கள் அனைத்தும் திவ்ய திருஷ்டியில் பாபா
உருவாக்கினார் என்பது குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டிருக்கிறது. திருத்தமும் செய்யப்பட்டிருக்கிறது.
ஆரம்பத்தில் பனாரஸில் தனிமையில் இருந்த போது இது போன்ற சக்கரம் சுவற்றில் வரைந்தார். இது என்ன
என்பது எதுவும் புரிய வில்லை. மகிழ்ச்சி ஏற்பட்டது. காட்சிகள் கிடைத்ததும் பறந்து சென்று விட்டார். இது
என்ன நடக்கிறது. எதுவும் புரிய வில்லை. எந்த படம் முதலில் உருவாக்கப்பட்டதோ அதை மாற்றி புதிது
புதிதாக உருவாக்கி வந்தனர் என நீங்கள் அறிகிறீர்கள். இப்போது புது புது படங்கள் போன கல்பத்தை
போலவே உருவாக்கப்பட்டுக் கொண்டு வருகிறது. ஏணிபடத்தைப் பாருங்கள் எவ்வளவு நன்றாக இருக்கிறது.
இதைப் புரிய வைப்பது எளிதாகும். தாமதமாக வருபவர்களுக்கு மேலும் எளிதாகப் புரிய வைக்கப்படுகிறது.
இப்போது புதியதாக யார் வந்தாலும் 7 நாட்களில் முழு ஞானமும் புரிந்துக் கொள்கிறன்றனர். பழையவர்களை
விட முன்னேறி போய் கொண்டிருக்கினறனர். சிலர் முதலிலேயே வந்திருந்தால் நன்றாக இருக்கும் என்கின்றனர்.
அட, இந்த கவலை கூட வேண்டாம். முன்பே வந்து, பிறகு ஓடிப் போய் இருந்தால்? தாமதமாக வருபவர்களுக்கும்
கூட எளிதாக சிம்மாசனம் கிடைக்கிறது. முதலில் யார் இருந்தனரோ அவர்கள் இப்போது இல்லை. அழிந்து
01.08.2016
(4/4)
விட்டனர். கடைசியில் யார் தேர்ச்சி அடைந்தனர் என ரிசல்ட் தெரிய வரும். புதிது புதிதாக வருகிறார்கள்.
உடனே இந்த சேவையில் ஈடுபடுகிறார்கள். பழையவர்கள் இவ்வளவு செய்வதில்லை. புத்தம் புது குழந்தைகள்
சேவையின் மூலம் மனதில் இடம் பிடிக்கின்றனர். பழையவர்கள் எத்தனையோ பேர் போய் விட்டனர்.
ஆகவே யாரை மிக உயர்ந்த பிராமண குல பூசணர்கள் என்று கூறுகின்றோமோ அவர்களில் ஒரு சிலர்
முதலில் ஆச்சரியப் படக் கூடிய வகையில் கேட்கின்றனர். பிறகு ஓடி விடுகின்றனர் என பாபா கூறுகின்றார்.
எது பாடப்பட்டிருக்கிறதோ அது இப்போது நடைமுறையில் நடந்துக் கொண்டிருக்கிறது. நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை
வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம் :
1. தனக்கு தானே சோதித்துக் கொள்ள வேண்டும். நான் மிக மிக இனிமையாக இருக்கிறேனா
என பாருங்கள்? எனக்குள் என்னென்ன குறை இருக்கிறது? அனைத்து தெய்வீக குணங்களும்
தாரணை ஆகியிருக்கிறதா! தங்களுடைய நடத்தை தேவதைகளைப் போன்று மாற வேண்டும்.
அசுர உணவுகளை தியாகம் செய்ய வேண்டும்.
2. எந்த ஒரு வீணான விஷயங்களையும் கேட்கக் கூடாது, மேலும் பேசக் கூடாது.
பொறுமையாக இருக்க வேண்டும்.
வரதானம் : ஒவ்வொரு எண்ணம் மற்றும் செயலில் சித்தி அதாவது
வெற்றி அடையக் கூடிய சம்பூரண மூர்த்தி ஆகுக !
எப்போது சக்திசாலி எண்ணங்களை படைக்கிறீர்களோ அப்போது சங்கல்பங்களின் வெற்றி (சித்தி) கிடைக்கும்.
யார் அதிகமான எண்ணங்களைப் படைக்கிறார்களோ அவர்கள் அதை பாலனை செய்ய முடிவதில்லை. ஆகவே
எவ்வளவு படைப்பு அதிகமாக வருகிறதோ அவ்வளவு சக்தியற்றதாக இருக்கிறது. ஆகவே முதலில் வீணான
படைப்புகளை முடியுங்கள். அப்போது வெற்றி கிடைக்கும். மேலும் செயல்களில் வெற்றி அடைவதற்கான வழி,
காரியத்தை செய்வதற்கு முன்பாக முதல், இடை, இறுதியை தெரிந்துக் கொண்டு பிறகு காரியத்தை செய்யுங்கள்.
இதில் தான் சம்பூரண மூர்த்தி ஆகலாம்.
சுலோகன் : நேரத்திற்கு துக்கம் மற்றும் ஏமாற்றத்திலிருந்து தப்பித்து
வெற்றி அடைபவரே ஞானி (புத்திசாலி) ஆவார்.
(1/4)
02
08.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்வதில் உங்களுடைய
சம்பாத்தியமும் இருக்கிறது. ஆரோக்கியமும் இருக்கிறது. நீங்கள் அமரராக ஆகி விடுகிறீர்கள்.
கேள்வி: இதயத்தைத் தூய்மையாக ஆக்குவதற்கான சுலபமான யுக்தி யாது?
பதில்: எங்கு இருந்தாலும் டிரஸ்டியாகி இருங்கள். நாம் சிவபாபாவின் பண்டக சாலையிலிருந்து உணவு
உட்கொள்கிறோம் என்று எப்பொழுதும் நினையுங்கள். சிவபாபாவின் பண்டாராவிலிருந்து உணவு உட்கொள்பவர்
களின் இதயம் தூய்மை ஆகிக் கொண்டே போகிறது. இல்லறத்தில் இருக்கையிலும் ஸ்ரீமத்படி, டைரக்ஷன்
படி டிரஸ்டியாகி வாழ்கிறார்கள் என்றால், அதுவும் சிவபாபாவின் பண்டாரா ஆகும். மனதினால் சமர்ப்பணம்
ஆனவர்கள்.
ஓம் சாந்தி. ஜன்ம ஜன்மாந்திரமாக, அரைகல்பமாக குழந்தைகள் சத்சங்கம் சென்றுள்ளீர்கள். சாது சந்நியாசி,
பண்டிதர்கள் ஆகிய எல்லா மனிதர்களின் சத்சங்கம் நடக்கிறது. ஆனால் இது எந்த ஒரு மனிதனுடைய
சத்சங்கம் கிடையாது. இதற்கு ஆன்மீக சத்சங்கம் என்று கூறப்படுகிறது. சுப்ரீம் ஆத்மா, ஆத்மாக்களுடன்
ஆன்மீக உரையாடல், அதாவது சத்சங்கம் நிகழ்த்துகிறார். இங்கு நீங்கள் எந்த ஒரு மனிதரிடமும் கேட்பதில்லை.
தேவதைகளிடமும் கேட்பதில்லை. நீங்கள் பகவானின் மகா வாக்கியங்களை கேட்கிறீர்கள். பகவானுக்கு
இப்பொழுதும் நிராகாரமானவர் என்று கூறப்படுகிறது. மேலும், பகவான் வருவதே குழந்தைகளை பகவான்
பகவதியாக ஆக்குவதற்கான கல்வியை கற்பிப்பதற்காக ஆகும். பகவான் மற்றும் பகவதியின் பதவியை
பகவானைத் தவிர வேறு யாரும் அளிக்க முடியாது. ஒவ்வொரு கல்பத்திலும் சங்கமயுகம் வரும் பொழுது
நிராகார பகவான் வந்து நமக்கு ஞானம் அளிக்கிறார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
இது கூட நீங்கள் மட்டுமே புரிந்துள்ளீர்கள். வேறு யாரும் புரிந்து கொள்வது கடினம். சிவபாபா அவசியம்
வருகிறார். ஆனால் அவருக்குப் பதிலாக கிருஷ்ணரை கீதையின் பகவான் என்று கூறி விட்டுள்ளார்கள்.
எனவே அவசியம் அவர்கள் புத்தியில் மனித உடல் தான் வரக் கூடும். நீங்கள் தான் தெய்வீக குணங்கள்
உடையவர்களாக இருந்தீர்கள் மற்றும் இப்பொழுது அசுர குணங்கள் உடையவர்களாக ஆகி உள்ளீர்கள்.
மீண்டும் இப்பொழுது தெய்வீக குணங்கள் உடையவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். தெய்வீக குணங்கள்
உடையவர்களுக்கு ஈஸ்வரிய சம்பிரதாயம் என்றும் அசுர குணங்கள் உடையவர்களுக்கு அசுர சம்பிரதாயம்
என்றும் கூறப்படுகிறது. இப்பொழுது நிராகார தந்தை நிராகார சம்பிரதாயம் அதாவது ஆத்மாக்களுக்கு கற்பிக்கிறார்.
எனவே ஈஸ்வரிய சம்பிரதாயம் அல்லது ஆன்மீக சம்பிரதாயம் என்று கூறப்படுகிறது. அவர்களுக்கு ஆன்மீகத்
தந்தை வந்து கற்பிக்கிறார். இப்பொழுது நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்களாக ஆகிறீர்கள். நாம் ஆத்மா
ஆவோம். தந்தை நமக்கு கற்பிக்கிறார். என்னை நினைவு செய்தீர்கள் என்றால், உங்களுடைய விகர்மங்கள்
(பாவம்) விநாசம் ஆகும் என்று கூறுகிறார். ஆத்மாக்களுக்குத் தான் கற்பிக்கிறார். அவர் தான் ஞானம்
நிறைந்தவர் ஆவார். மேலும் ரிμ முனிவர்கள் ஆகியோரோ எல்லோருமே தெரியவில்லை, அறியவில்லை
(நேதி நேதி) என்று கூறிச் சென்று விட்டார்கள். அதாவது எங்களுக்கு ஆத்மா பற்றித் தெரியாது. ஞானக்
கடல் நேரிடையாக வராதவரை ஞானத்தை எவ்வாறு புரிய வைக்க முடியும். இது நல்ல முறையில் புரிந்து
கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும். நமக்கு எந்த ஒரு மனிதரும் கற்பிப்பதில்லை. நமக்கு தந்தை வந்து
கற்பிக்கிறார். அவர் எல்லையில்லாத தந்தை, நிராகாரமானவர் ஆவார். ஒவ்வொருவருக்கும் சாகார தந்தை
மற்றும் நிராகார தந்தை இருவரும் இருக்கிறார்கள் என்பதும் குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டுள்ளது.
ஒருவர் ஆன்மீக தந்தை மற்றும் மற்றொருவர் சரீரத்தின் தந்தை. ஆன்மீகத் தந்தை தான் வந்து ஆத்மாக்களை
பாவனமாக ஆக்குகிறார். நாம் பாவனமாக இருந்தோம். பதீதமாக ஆனோம். மீண்டும் பதீத நிலையிலிருந்து
பாவனமாக எப்படி ஆகிறோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். படம் கூட முன்னால் உள்ளது. அடிக்கடி
சக்கரப் படத்திற்கு முன்னால் சென்று அமர்ந்தீர்கள் என்றால், நாம் இப்பொழுது சங்கமயுகத்தில் அமர்ந்துள்ளோம்
மற்றும் பிற அனைவரும் தங்களை கலியுகத்தில் இருப்பதாக நினைக்கிறார்கள் என்று புத்தியில் முழு ஞானம்
வந்து விடும் என்று பாபா ஆலோசனை அளிக்கிறார். கலியுகத்திற்கு கோரமான இருள் என்று கூறப்படுகிறது.
இப்பொழுது நீங்கள் சங்கமத்தில் உள்ளீர்கள். இப்பொழுது உங்களுக்கு வெளிச்சம் (ஞானம்) உள்ளது. சத்யுகத்தில்
பின் உங்களுக்கு இந்த ஞானம் கிடைப்பதில்லை. தந்தை வரும் பொழுது தான் பட்ட பகல் போன்று
வெளிச்சம் ஆகி விடுகிறது. இந்த சங்கமயுகமே கல்யாணகாரி யுகம் ஆகும். இது போன்ற யுகம் வேறு
எதுவும் இருப்பதே இல்லை. இப்பொழுது தான் தந்தை வருகிறார். சத்யுகத்தை கல்யாணகாரி நன்மை உடையது
என்று கூறமாட்டார்கள். அங்கு யாருக்கும் நன்மை ஆவதில்லை. நன்மை சங்கமத்தில் தான் ஏற்படுகிறது.
சத்யுகத்திலோ நன்மையாகவே இருக்கும். சங்கமத்தில் கலியுகத்தை சத்யுகமாக, கல்யாணகாரியாக ஆக்குகிறார்.
எனவே இப்பொழுது உங்களுக்கு எவ்வளவு நன்மை ஆகிறது என்பதைப் பாருங்கள். தந்தை மற்றும் ஆஸ்தியை
02.08.2016
(2/4)
நினைவு செய்வதால் மட்டுமே எவ்வளவு உங்களுக்கு சம்பாத்தியம் ஆகிறது. சம்பாத்தியத்திற்கு சம்பாத்தியமும்
இருக்கிறது மற்றும் ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமும் இருக்கிறது. உங்கள் வாழ்க்கை அமர வாழ்க்கையாகி
விடுகிறது. உங்களுக்கு ஒரு பொழுதும் அகால மரணம் ஏற்படுவதில்லை. எனவே குழந்தைகளுக்கு எவ்வளவு
குμ இருக்க வேண்டும். ஏனெனில் உங்கள் புத்தியில் முழு ஞானம் உள்ளது. இங்கு குழந்தைகளாகிய
நீங்கள் வருகிறீர்கள் என்றால் முயற்சி செய்து மியூசியத்தில் படங்கள் மீது புரிய வைப்பதற்கான தகுதி
உடையவர்களாக ஆக வேண்டும். தங்களை லாயக்காக ஆக்குவதற்கு 7லி8 நாட்கள் அமர்ந்து கற்றுக் கொள்ளுங்கள்.
அப்பியாசம் ஆகி விட்டது என்றால் சேவையில் ஓட வேண்டும். சேவை செய்து பிறகு திரும்பி வர
வேண்டும். இதை கற்றுக் கொள்வது மிகவுமே சுலபமாகும். படங்களை முன்னால் பார்க்கும் பொழுதே நாம்
சங்கமத்தில் அமர்ந்துள்ளோம் என்பது புத்தியில் வந்து விடுகிறது. இன்றைய உலகத்தில் நிறைய மனிதர்கள்
இருக்கிறார்கள். நாளைக்கு மிகவும் குறைவாக இருப்பார்கள். இத்தனை பேர் அனைவரும் திரும்பிப் போக
வேண்டி உள்ளது. இப்பொழுது தந்தை தானும் வந்துள்ளார். குழந்தைகள் மீது எவ்வளவு மதிப்பு வைக்கிறார்.
தூர தேசத்தில் இருப்பவர் அந்நிய தேசத்தில் வந்துள்ளார்.. இராவணனினுடைய தேசம் அந்நிய தேசம் ஆகும்
அல்லவா? இராமரின் தேசத்திலோ ஒரு பொழுதும் இராவணன் வர முடியாது. இது பற்றி ஒரு கதை அல்லது
கட்டுக்கதை கூட கூறுகிறார்கள். என்னவெல்லாம் கட்டுக் கதைகள் கூறுகிறார்களோ அவை எல்லாமே கதைகள்
ஆகும். கதைகளில் எந்த ஒரு சாரமும் கிடையாது. கட்டுக்கதைகளில் (நாவல்கள்) கூட எந்த ஒரு சாரமும்
கிடையாது. நாவல்கள் கூட எவ்வளவு ஏராளமாக விற்கப்படுகின்றன. நாவல்கள் மட்டுமே விற்பவர்கள் கூட
இலட்சாதிபதி ஆகி விடுகிறார்கள். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுடைய பரிபாலனை தந்தையின்
கையில் உள்ளது. உங்களிடமே உண்பேன், அதாவது உங்களுடைய பண்டாராவிலிருந்து உண்பேன்.. அவ்வளவே.
உங்களுடைய முழு பாலனையும் இங்கிருந்து தான் ஆகிறது. யார் சமர்ப்பணமாகி விடுகிறார்களோ அவர்களுடைய
பரிபாலனையோ ஆகி விடுகிறது.ஆனால் யார் மனதால் கூட இவை எல்லாமே இறைவனுடையது,
(தந்தையினுடையது) நான் டிரஸ்டி அக இருக்கிறேன், நாங்கள் ஸ்ரீமத் படி தான் நடந்து எல்லா செலவும்
செய்கிறோம் என்று இப்படி யார் நினைக்கிறார்களோ அவர்களும் சிவபாபாவின் பண்டாராவிலிருந்து சாப்பிடு
கிறார்கள். சிவபாபாவின் பண்டாராவிலிருந்து சாப்பிடுவதால் இதயம் தூய்மை ஆகிறது. அப்படியின்றி அவர்கள்
சிவபாபாவின் பண்டாராவிலிருந்து சாப்பிடுவதில்லை என்பதல்ல. தந்தையின் கட்டளைப் படி நடப்பவர்கள்
தந்தையின் பண்டாராவிலிருந்து சாப்பிடுவது போலவே ஆகும். எந்த பண்டாராவிலிருந்து சாப்பிட்டார்களோ
அந்த பண்டாரா நிரம்பியதாக இருக்கும். கஷ்டம், துக்கம் நீங்கிப் போய் விடும். அதற்கு பிறகு நீங்கள் ஒரு
பொழுதும் அகால மரணம் அடைய மாட்டீர்கள். இச்சமயத்தில் தான் சிவபாபா வருகிறார். அவருடைய
மகிமையும் பாடப்பட்டுள்ளது. சிவஜெயந்தி கூட கொண்டாடுகிறார்கள். ஆனால் அவரது பண்டாரா எப்படி
இருக்கும் என்பது யாருக்குமே தெரியாது. பாபா கூட உண்மையில் வருகிறார் அல்லவா? குழந்தைகள்
யாரெல்லாம் வருகிறார்களோ அவர்களுக்கு சிவபாபாவின் பண்டாராவிலிருந்து உணவு கிடைக்கிறது. நல்லது.
ஆண்கள் சமர்ப்பணம் ஆகிறார்கள் என்றால் சரி தான். ஒரு வேளை அவர்கள் சமர்ப்பணம் ஆவதில்லை
என்றால் தாய்மார்கள் என்ன செய்வது? ஏனெனில் சம்பாத்தியம் கணவனினுடையது. அவரோ சமர்ப்பணம்
ஆவதில்லை. அவர் சம்பாதித்தால் தானே மனைவி சாப்பிட முடியும்? ஆம். ஜோடியாக சமர்ப்பணம் ஆனார்கள்
என்றால் பின் சிவபாபாவின் பண்டாராவிலிருந்து பாலனை கிடைக்க முடியும். இதை தந்தை குழந்தைகளுக்கு
நல்ல முறையில் புரிய வைக்கிறார். கர்மாதீத் நிலை ஆகும் வரையும் நாம் தந்தையிடம் அமர்ந்துள்ளோம்
என்பதை புத்தியிலிருத்த வேண்டும். நாளுக்கு நாள் நாம் நமது சுயராஜ்யத்திற்கு நெருங்கி வந்து கொண்டே
போகிறோம். காலம் கழிந்து கொண்டே போகிறது. நீங்கள் நெருங்கி வந்துக் கொண்டே இருக்கிறீர்கள். சத்யுகத்தின்
முதல் வருடம் வருவதற்கு இப்பொழுது எத்தனை வருடங்கள் உள்ளன என்று கூறுவீர்கள்? இப்பொழுது
எவ்வளவு நெருக்கத்தில் வந்து விட்டுள்ளீர்கள்? குழந்தைகளே இப்பொழுது உங்களுடைய 84ன் சக்கரம்
முடிவடைகிறது என்று தந்தை கூறுகிறார். நீங்கள் இப்பொழுது 84 பிறவிகளின் சக்கரத்தை அறிந்துள்ளீர்கள்.
சக்கரத்தைப் பார்த்த உடனேயே நாம் இப்பொழுது சங்கமத்தில் உள்ளோம் என்று கூறுவீர்கள். இந்த பக்கம்
இருப்பது கலியுகம். அந்த பக்கம் இருப்பது சத்யுகம். நாளைக்கு நாம் நமது சுகதாமத்தில் இருப்போம்.
உலகத்திற்குத் தெரியாது. அவர்களோ முற்றிலும் காரிருளில் இருக்கிறார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு
மிகுந்த குμ இருக்க வேண்டும். எல்லையில்லாத தந்தையிடமிருந்து நாம் 21 பிறவிகளுக்கு சம்பாத்தியம்
பெறுகிறோம். சதா சுகத்தின் ஆஸ்தியைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்ற இந்த குμ இருக்கிறது.
சொர்க்கவாசி ஆவது என்பது உங்களுடைய அதிர்ஷ்டத்தில் தான் இருக்கிறது. சொர்க்கம் ஒரு அதிசயமான
பொருளாகும். எப்படி உலகில் 7 அதிசயங்களைக் காண்பிக்கிறார்கள் ! இதுவோ எல்லாவற்றையும் விட பெரிய
அதிசயம் ஆகும். அதிசயமான சொர்க்கத்தின் படங்கள் கூட உள்ளன. இந்த இலட்சுமி நாராயணர் சொர்க்கத்தின்
அதிபதியாக இருந்தார்கள். எனவே பாபா எழுதியிருந்தார் லி மேலே சூர்ய வம்சத்தினருடையதை எழுதுங்கள்.
கீழே சந்திர வம்சத்தினருடையதை எழுதுங்கள். அப்பொழுது அரைகல்பம் முடிந்து போய் விடும். சூரிய
02.08.2016
(3/4)
வம்சம் சந்திர வம்சம் 1250 வருடங்கள். பின் இலட்சக்கணக்கான வருடங்களின் விஷயமே இல்லாமல் போய்
விடும். அங்கு புஜ பல சண்டைகளில் எவ்வளவு செலவு ஆகிறது. இங்கு ஆரம்ப முதல் கடைசி வரை எந்த
செலவும் ஆவதில்லை. இதுவோ தந்தை மற்றும் குழந்தைகளின் கணக்கு ஆகும். செலவின் விஷயமே
கிடையாது. இங்கு குழந்தைகள் வந்து புத்துணர்வு (ரிஃப்ரெஷ்) பெற வேண்டும். அதற்காக வீடுகள் ஆகியவை
கட்டுகிறார்கள். குழந்தைகளினுடையதே பைசா ஆகும். அது கூட எவ்வளவோ நாட்கள் கடந்து போய் விட்டன.
இனி மீதம் கொஞ்சம் நாட்கள் தான் உள்ளன. செலவு எதுவும் கிடையாது. நீங்கள் ஒரு பைசா செலவின்றி
ஜீவன் முக்தி அடைகிறீர்கள். இதில் உழைப்பின் விஷயம் மட்டுமே உள்ளது. பகவானையோ எல்லா பக்தர்களும்
நினைவு செய்கிறார்கள். ஆனால் பகவான் யார் என்பதை அறியாமல் உள்ளார்கள். பகவானைத் தெரியாத
காரணத்தினால் நிறைய பேரை பகவான் என்று ஏற்றுக் கொண்டு விடுகிறார்கள். இப்பொழுது குழந்தைகளாகிய
நீங்கள் உண்மையான தந்தையின் அறிமுகம் கொடுக்க வேண்டும். பெரியப் பெரிய படங்களை முக்கியமான
இடங்களில் வையுங்கள் என்று பாபா எவ்வளவு முறை புரிய வைத்துள்ளார். எப்படி விமான நிலையம்
உள்ளது. அவர்கள் நம்மிடம் என்ன வாங்குவார்கள்? இவை எல்லாமே மனிதர்களின் நன்மைக்காக உள்ளது
என்பதை அவர்களுக்குப் புரிய வையுங்கள். இவற்றைப் புரிந்து கொள்வதால் தான் மனிதர்கள் தந்தையிடமிருந்து
ஆஸ்தி பெற்று உலகத்தின் அதிபதி ஆக முடியும். டில்லி முக்கியமானது. டில்லி தலைநகரம் ஆகும் அல்லவா?
அங்கு எல்லோரும் ஒன்று சேருகிறார்கள். அங்கு, தலைநகரத்தில் அது போன்ற பெரிய பெரிய படங்கள்
இருக்க வேண்டும். முக்கியமாக இருப்பதே திரிமூர்த்தி, காலச்சக்கரம் மற்றும் கல்ப விருட்சம். இந்த ஏணிப்படியோ
அற்புதமானது. இதில் விநாசம் ஆகியவை பற்றிக் கூட நல்ல முறையில் எழுதப்பட்டுள்ளது. மேலும் பதீத
பாவனர் பரமபிதா பரமாத்மா ஆவாரா இல்லை தண்ணீரின் கங்கையா? நீங்கள் முடிவெடுங்கள். இறைவன்
எங்கும் நிறைந்தவரா? இல்லை ஒரே ஒரு நிராகார பரமபிதா பரமாத்மாவா என்று பிரம்மா குமார் குமாரிகள்
கேட்கிறார்கள். தந்தையிடமிருந்தோ குழந்தைகளுக்கு ஆஸ்தி கிடைக்கிறது. இந்த படங்கள் தான் முக்கியமானவை.
திரிமூர்த்தியின் படம் கூட மிக மிக மதிப்பு வாய்ந்ததாகும். பிரம்மா மூலமாக விஷ்ணுபுரியின் ஸ்தாபனை
ஆகிறது. பிறகு அவரே பாலனையும் செய்வார். எல்லையில்லாத பாபா சொர்க்கத்திற்கு அதிபதியாக ஆக்குவதற்காக
நமக்கு கற்பிக்கிறார் என்ற அளவற்ற குμ குழந்தைகளுக்கு இருக்க வேண்டும். பாபா வந்து சொர்க்கத்தின்
ஸ்தாபனை மற்றும் நரகத்தின் விநாசம் செய்விக்கிறார். எனவே மகா பாரத போர் கூட கூடவே இருக்கிறது.
ஒவ்வொரு 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகும் இந்த சக்கரம் சுற்றுகிறது. தந்தை கூட கல்ப கல்பமாக
கல்பத்தின் சங்கமயுகத்தில் வருகிறார். கீதையில் அவர்கள் பிறகு யுகே லி யுகே என்று எழுதி விட்டுள்ளார்கள்.
அது கூட 5 யுகங்கள் ஆகும். அப்படியானால் 5 முறை வரட்டுமே ! பிறகு 24 அவதாரங்கள், இன்னின்ன
அவதாரம் என்று ஏன் எழுதி விட்டுள்ளார்கள்? மனிதர்கள் எவ்வளவு யக்ஞம், தவம், தீர்த்த யாத்திரை
ஆகியவைகளை மேற்கொள்கிறார்கள். இவை எல்லாமே பகவானை அடைவதற்கான வழிகள் என்று
நினைக்கிறார்கள். ஆனால் பகவானிடமோ யாருமே போக முடியாது. அரைகல்பம் எவ்வளவு தலையிலடித்துக்
கொண்டார்கள். ஜன்ம ஜன்மாந்திரமாக சுற்றி வந்தார்கள். இது இது செய்தார்கள் .... பிறகும் தந்தை கிடைக்கவில்லை.
இப்பொழுது தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு நெருக்கத்தில் இருக்கிறார். உங்களிடம்
உரையாடுகிறார். உங்களுக்குப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். கல்ப கல்பமாக மிகச் சரியாக நாம் இவ்வாறே
சந்திக்கிறோம் என்று நீங்கள் புரிந்துள்ளீர்கள். எது நடந்து முடிந்ததோ கல்ப கல்பமாக அவ்வாறே ஆகும்.
அதே தாதா வைர வியாபாரி இருப்பார். பின் அவருக்குள் தான் பாபா பிரவேசம் செய்வார். பிறகு அதே
குழந்தைகள் வந்து தந்தையினுடையவராக ஆவார்கள். மேலும் மீண்டும் சொர்க்கத்தின் ஆஸ்தி பெறுவார்கள்.
இது குழந்தைகளாகிய உங்களுடன் தந்தையினுடைய அனாதி அவினாμ பாகம் கல்ப கல்பமாக இப்படியே
திரும்பத் திரும்ப நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட
செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும்
காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. இது கல்யாணகாரி சங்கமயுகம் ஆகும். இதில் ஒவ்வொரு விஷயத்திலும் நன்மை உள்ளது.
சம்பாத்தியமே சம்பாத்தியம் ஆகும். தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்து 21
பிறவிகளுக்கு வாழ்க்கையை அமர வாழ்க்கையாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
2. இல்லறத்தில் இருந்தபடியே மனம் புத்தியினால் சமர்ப்பணமாக வேண்டும். ஸ்ரீமத் படி செலவு
செய்ய வேண்டும். முழுமையாக டிரஸ்டியாகி இருக்க வேண்டும். சிவபாபாவின் பண்டாரா
நிரம்பியுள்ளது. கஷ்டம் துக்கம் தூர போய் விடும்.
02.08.2016
(4/4)
வரதானம்: துண்டிப்பது, வளைப்பது மற்றும் இணைப்பது (தோட்னா, மோட்னா,
ஜோட்னா) லி இந்த 3 வார்த்தைகளின் நினைவு மூலமாக எப்பொழுதும் வெற்றி அடைபவர்
ஆவீராக.
முழு படிப்பு மற்றும் அறிவுரைகளின் சாரம் இந்த 3 வார்த்தைகளாகும். (1) கர்ம பந்தனத்தை துண்டிக்க
வேண்டும் (2) தங்களுடைய சுபாவம் சம்ஸ்காரத்தை வளைக்க வேண்டும் (3) ஒரு தந்தையிடம் சர்வ
சம்பந்தத்தை இணைக்க வேண்டும். இதே மூன்று வார்த்தைகள் முழுமையான வெற்றியை அடைபவராக
ஆக்கி விடும். இதற்காக எதெல்லாம் அழியக் கூடிய பொருட்களை இந்த கண்களால் பார்க்கிறீர்களோ அவை
எல்லாமே அழிந்து போய் விட்டுள்ளது என்ற இதே நினைவு எப்பொழுதும் இருக்கட்டும். அவற்றை
பார்க்கையிலும் தங்களது புதிய சம்பந்தம், புதிய படைப்பை பார்த்துக் கொண்டே இருந்தீர்கள் என்றால் ஒரு
பொழுதும் தோல்வி ஏற்பட முடியாது.
சுலோகன்: எப்பொழுதும் தூய்மையாகவும் தெளிவாகவும் (க்ளீன் மற்றும் க்ளியர்)
இருப்பதே யோகியின் அடையாளம் ஆகும்.
(1/4)
03
08.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! பிறரைப் பற்றிய (வீணான) சிந்தனையை விட்டு தனக்கு நன்மை
செய்யுங்கள். நீங்கள் தங்கம் போல் ஆகி மற்றவர்களுக்கு வழி சொல்லுங்கள்.
கேள்வி : அசரீரி ஆவதற்கான பயிற்சியை யார் சதா செய்து கொண்டே இருக்கின்றனரோ,
அவர்களின் அடையாளங்களைச் சொல்லுங்கள்.
பதில் : அவர்கள் வலுக்கட்டாயமாகத் தங்களின் கர்மேந்திரியங்களை வசப்படுத்துவதில்லை. ஆனால்
அவர்களின் கர்மேந்திரியங்கள் தாமாகவே குளிர்ந்து விடுகின்றன. நாம் ஆத்மாக்கள் சகோதரலிசகோதரர்கள்.
இந்த நினைவு தானாகவே அமைந்து விடுகின்றது. தேக அபிமானம் விடுபட்டுக் கொண்டே செல்கின்றது.
பெயர்லிவடிவத்தின் நஷா முடிந்து கொண்டே செல்கின்றது. மற்றவர்களின் நினைவு வருவதில்லை.
பாடல் : நீ அன்புக் கடலாக இருக்கிறாய்........
ஓம் சாந்தி. இவர் ஒன்றும் அனபின் கடலாக மட்டும் இல்லை, ஞானக்கடலாகவும் உள்ளார். ஞானம்
மற்றும் அஞ்ஞானம். ஞானம் பகல் என்றும் அஞ்ஞானம் இரவு என்றும் சொல்லப் படுகின்றது. ஞானம் என்ற
சொல் தான் நல்லது. அஞ்ஞானம் என்ற சொல் கெட்டது. அரைக்கல்பம் ஞானத்தின் பிராலப்தம் (பயன்).
அரைக்கல்பம் அஞ்ஞானத்தின் பிராலப்தம். அஞ்ஞானத்தின் பிராலப்தம் துக்கமாகும். ஞானத்தின் பிராலப்தம்
சுகம். இதுவோ மிகவும் சுலபமாகப் புரிந்து கொள்வதற்கான விஷயங்களாகும். ஞானத்தினுடையது பகல்.
அஞ்ஞானம் என்பது இரவு. இதுவும் யாருக்கும் தெரியாது. ஞானம் எனச் சொல்லப் படுவது எது, அஞ்ஞானம்
எனச் சொல்லப்படுவது எது லி இவை எல்லையற்ற விஷயங்களாகும். ஞானம் என்பதென்ன, பக்தி என்பதென்ன
என்று நீங்கள் அனைவருக்கும் புரிய வைக்கிறீர்கள். ஞானத்தினால் நீங்கள் பூஜைக்குரியவராக ஆகிக் கொண்டிருக்
கிறீர்கள். பூஜைக்குரிவர்களாக ஆகி விட்டீôகள் என்றால் என்னென்ன கோவில்கள் முதலானவை உள்ளன
மற்றும் பூஜைக்கான சாதனங்கள் எவை என அறிந்து கொண்டு விடுகிறீர்கள். இவையனைத்தும் நினைவுச்
சின்னங்கள் என்பதை அறிந்து கொள்கிறீர்கள். யார் பூஜை செய்வதற்குச் செல்கின்றனரோ, அவர்கள் அறிந்து
கொள்ளவில்லை. பூஜை என்பது பக்தி எனச் சொல்லப்படும். பக்தியின் பலனைக் கொடுப்பதற்காக பகவான்
பக்தர்களோடு சந்திக்க வேண்டியுள்ளது. அதுவும் பகவானே வந்து பூஜாரியில் இருந்து பூஜைக்குரியவர்களாக
ஆக்குகிறார். பூஜைக்குரியவர்கள் சத்யுகத்திலும் பூஜாரிகள் கலியுகத்திலும் உள்ளனர். குழந்தைகள் நீங்கள்
அறிவீர்கள், இன்று இருப்பது என்ன, நாளை என்னவாகும் என்று. விநாசமோ நிச்சயமாக நடக்கப் போகிறது.
எந்த நேரம் வேண்டுமானாலும் நடக்கலாம். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அநேக
இயற்கை ஆபத்துகள் நடைபெறும் என்று பாடப் பட்டும் உள்ளது. இதையோ எழுதி வைக்க வேண்டும் லி
உள்நாட்டு யுத்தம் மற்றும் இயற்கை ஆபத்துகள் லி அவற்றை ஒன்றும் ஈஸ்வரிய ஆபத்துகள் எனச் சொல்ல
மாட்டார்கள். இதுவோ டிராமாவில் விதிக்கப்பட்டுள்ளது. அதில் இயற்கைச் சேதங்கள் அனைத்தும் வரவிருக்கின்றன.
விநாசமாவதில் அவை உதவி செய்யும். ஏவுகணைகளால் வெடிகுண்டு மழை பொழியும். பட்டினியால் இறந்து
போவார்கள். நிலநடுக்கம் முதலியன வரப் போகின்றன. இவற்றின் மூலமாகத் தான் விநாசம் நடைபெற
இருக்கின்றது. இல்லையென்றால் சத்யுகத்தில் இவ்வளவு கொஞ்சம் மனிதர்கள் எப்படி இருப்பார்கள்? நிச்சயமாக
அனைவரும் ஒன்றாக அழிந்து விடுவார்கள். குழந்தைகள் நன்றாக அறிவார்கள், இந்த ஆடைகள் (சரீரம்)
அனைத்தும் சுத்தம் செய்யப் படும். இது எல்லையற்ற பெரிய இயக்கம். அசுத்தத் துணியை சுத்தம் செய்ததாகப்
பாடப் படுகின்றது. இந்தத் துணிகளின் விசயம் கிடையாது. இது சரீரத்தின் விசயம். ஆத்மாக்களை யோக
பலத்தினால் சுத்தம் செய்ய வேண்டும். இச்சமயம் 5 தத்துவங்கள் தமோபிரதானமாக உள்ளன என்றால்
சரீரமும் அது போல் உருவாகின்றது. பதீத பாவனர் பாபா வந்து தூய்மைப்படுத்துகிறார். மற்ற அனைத்தும்
அழிந்து போகின்றன. எப்படி தூய்மை ஆகின்றனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். மிகவும் சுலபமான வழி
சொல்கிறார். ஆனால் மனிதர்களோ எதையும் புரிந்து கொள்ளவில்லை. எங்கெங்கே பக்தி, யக்ஞம் முதலியன
நடைபெறுகின்றதோ, அங்கே சென்று புரிய வைக்க வேண்டும் லி யாருக்கு நீங்கள் பக்தி செய்கிறீர்களோ,
அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்வதால்தான் நீங்கள் தேவதை ஆக முடியும். அவர்கள்
எப்படி ஜீவன்முக்தி அடைந்தார்கள் என்பதை வந்து புரிந்துக் கொள்ளுங்கள். கோவில்களில் அமர்ந்து வாழ்க்கை
வரலாற்றைப் புரிய வைப்பதால் நன்றாகப் புரிந்து கொள்வார்கள்.
நீங்களும் பாபாவிடமிருந்து இப்போது வாழ்க்கை வரலாற்றைக் கேட்கிறீர்கள். குழந்தைகள் உங்களுக்கு
எவ்வளவு ஞானம் கிடைக்கின்றது! பரமபிதா பரமாத்மாவின் வாழ்க்கை வரலாற்றை யாருமே அறிந்து
கொள்ளவில்லை. சர்வவியாபி எனச் சொல்வதால் வாழ்க்கை வரலாறு ஆகி விடாது. குழந்தைகள் நீங்கள்
இப்போது பரமபிதா பரமாத்மாவின் வாழ்க்கை வரலாற்றை அறிவீர்கள். அதாவது முதல்லிஇடைலிகடை பற்றி
(2/4)
03.08.2016
அறிவீர்கள். இந்தச் சமயத்தை ஆரம்பம் எனச் சொல்வார்கள். இந்தச் சமயத்தில் தான் பாபா வந்து தூய்மை
யற்றவர்களை தூய்மையாக்குகிறார். பிறகு கல்பத்தின் மத்தியில் (துவாபரயுகம்) பக்தியின் பாகம் நடைபெறுகின்றது.
பாபா சொல்கிறார், இந்த சமயத்தில் தான் நான் வந்து ஸ்தாபனை செய்கிறேன், மற்றும் செய்விக்கிறேன்.
செய்பவர்லிசெய்விப்பவராக இருக்கிறேன். பிரேரணையை (தூண்டுதல்) செய்தல் எனச் சொல்ல மாட்டார்கள்.
பாபா வந்து அவருடைய கர்மேந்திரியங்கள் மூலமாகச் செய்கிறார். இதில் பிரேரணையின் விஷயம் கிடையாது.
செய்பவர்லிசெய்விப்பவர் என்றால் நிச்சயமாக நேரில் இருந்து தான் செய்விப்பார். பிரேரணையினால் எதுவுமே
நடைபெற முடியாது. ஆத்மா, சரீரம் இல்லாமல் எதையும் செய்ய இயலாது. அநேகர் சொல்கின்றனர், ஈஸ்வரன்
தான் அனைத்தையும் செய்கிறார் என்று. பாபா, நீங்கள் பிரேரணை செய்யுங்கள், என்னுடைய கணவரின் புத்தி
சரியாகிவிட வேண்டும் என்கின்றனர். பாபா சொல்கிறார் லி இதில் பிரேரணையின் விஷயமோ எதுவும் கிடையாது.
பிறகு சிவஜெயந்தி ஏன் கொண்டாடப்படுகின்றது? பிரேரணை மூலம் காரியம் நடைபெறும் என்றால் பிறகு
அவர் வந்தது எதற்காக? ஒன்று, ஈஸ்வரன் என்பவர் என்ன பொருளாக உள்ளார்? இது அவர்களுக்குத்
தெரியாது. ஈஸ்வரனின் பிரேரணையினால் அனைத்தும் நடைபெறுகின்றது என்று மட்டும் சொல்லி விடுகின்றனர்.
நிராகார் (சரீரமற்ற) பகவான் பிரேரணையினால் என்ன செய்வார்? அவரோ செய்பவர்லி செய்விப்பவராக உள்ளார்.
அவர் வந்து வழி சொல்கிறார். கர்மேந்திரியங்கள் மூலம் முரளி சொல்கிறார். கர்மேந்திரியங்களின் ஆதாரத்தை
எடுக்காத வரை எப்படி முரளி சொல்ல முடியும்? ஞானக்கடல் என்றால் சொல்வதற்கு வாய் வேண்டும்
இல்லையா? இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு முழு உலகத்தின் முதல்லிஇடைலிகடை பற்றித் தெரியும்.
முழு ஞானமும் கிடைத்துள்ளது. ஞானம் இல்லாமல் கதி (முக்தி, ஜீவன் முக்தி) இல்லை எனப் புரிந்து
கொண்டுள்ளனர். ஞானத்தை யார் கொடுப்பது? அஞ்ஞான மார்க்கம் மற்றும் ஞான மார்க்கத்திற்கிடையில்
வேறுபாட்டையோ பார்த்திருக்கிறீர்கள் இல்லையா? விஞ்ஞானம் என்றும் சொல்கின்றனர். அஞ்ஞானம் என்பது
இருள். மற்றப்படி ஞானம் மற்றும் விஞ்ஞானத்தை நாம் முக்திலிஜீவன்முக்தி என்றும் சொல்லலாம். உங்களுக்கு
இப்போது தூய்மை அடைவதற்கான ஞானம் கிடைக்கின்றது. நீங்கள் சுயதரிசனச் சக்கரதாரி ஆகிறீர்கள்.
யாராவது கேட்டால் வியப்படைவார்கள். ஆத்மா ஞானத்தைப் பெற்றுக் கொள்கிறது என்றால் ஆத்மா நிச்சயமாக
சம்ஸ்காரத்தை எடுத்துச் செல்லும் இல்லையா எனக் கேட்பார்கள். மனிதரில் இருந்து தேவதை ஆகிறீர்கள்
என்றால் ஞானம் இருக்க வேண்டும். ஆனால் பாபா புரிய வைக்கிறார், பயனை (பிராலப்தம்) அடைவதற்காகவே
இந்த முயற்சி. பயன் கிடைத்து விட்டதென்றால் பிறகு ஞானத்திற்கு என்ன தேவை உள்ளது? சத்யுகம்
என்பதே குழந்தைகளாகிய உங்களுக்குக் கிடைக்கின்ற பலன் இந்த விசயங்களைக் கேட்டாலே வியப்படைவார்கள்.
இந்த ஞானம் பரம்பரையாக ஏன் நடைபெறுவதில்லை? பாபா சொல்கிறார், இது மறைந்து விடுகின்றது. பகல்
வந்து விட்டால் பிறகு அஞ்ஞானமோ (இருள்) கிடையாது. அதனால் ஞானத்தின் தேவை அங்கே கிடையாது.
இவை கூட புரிந்து கொள்வதற்கும், புரிய வைப்பதற்காகவும் உள்ள விசயங்களாகும். சட்டென்று யாராலும்
புரிய வைக்க முடியாது. சிவபாபா பாரதத்தில் தான் வருகிறார். குழந்தைகளுக்காகப் பரிசு கொண்டு வருகிறார்,
பக்தியின் பலனைக் கொடுப்பதற்காக. இந்த விநாசமும் நிச்சயமாக நடைபெறப் போகின்றது. அதற்கான அறிகுறிகள்
காணப்படுகின்றன. நீங்கள் கேட்டுக் கொண்டே இருப்பீர்கள் லி தீப்பொறி எழுகிறது என்றால் ஓரிரு மணிக்குள்
முழுக் கட்டடமும் எரிந்து சாம்பலாகி விடும். இது ஒன்றும் புது விசயம் கிடையாது. விநாசமோ நிச்சயமாக
நடைபெறப் போகிறது. சத்யுகத்தில் இருப்பவர்கள் கொஞ்சம் மனிதர்கள், உயர்ந்தவர்கள். ஆக, உயர்ந்தவராக
ஆவதில் எவ்வளவு முயற்சி செய்ய வேண்டி உள்ளது! மாயா மூக்கை ஒரேயடியாகப் பிடித்து விடுகிறது. இது
போல் கீழே விழுகிறவர்களுக்கு அதிகக் காயம் ஏற்பட்டு விடுகின்றது. பிறகு அதிக நேரம் பிடிக்கின்றது.
பெரியதிலும் பெரிய காயம் காம விகாரத்தினுடையது. அதனால் காமம் மகாசத்ரு எனச் சொல்லப்படுகின்றது.
இது தான் தூய்மையை இழக்கச் செய்வது, ஆக்குவது. விகாரத்தினால் தான் சண்டை நடைபெறுகின்றது.
விகாரத்திற்காக விடுவதில்லை என்றால் இதைவிட பாத்திரங்களைத் துலக்குவது நல்லது என்று நிச்சயமாகச்
சொல்வார்கள். கூட்டிப் பெருக்கும் வேலை செய்தாலும் தூய்மையாக இருப்போம். இதில் அதிக தைரியம்
வேண்டும். யாராவது பாபாவிடம் அடைக்கலமாக வருகிறார்கள் என்றால் பிறகு மாயாவும் சண்டையிடத்
தொடங்குகிறது. 5 விகாரங்களின் நோய் இன்னும் அதிகமாகக் கொந்தளிக்கின்றது. முதலிலோ பக்கா நிச்சய
புத்தி வேண்டும். உயிருடன் இருந்து கொண்டே இறந்து விட்டனர். இங்கிருந்து நங்கூரம் எடுக்கப்பட்டு
விட்டது. கலியுக விகாரங்களின் கரையிலிருந்து (கட்டுப்பாட்டிலிருந்து) நீங்கள் விடுபட்டு விட்டீர்கள். இப்போது
நாம் யாத்திரையில் போய்க் கொண்டிருக்கிறோம் லி நாம் அசரீரியாகி நம் வீட்டுக்குச் செல்கிறோம். ஆத்மாவுக்கு
இந்த ஞானம் உள்ளதுலிநாம் ஒரு சரீரம் விட்டு வேறொன்றில் செல்வோம். நாம் இல்லற விவகாரங்களில்
இருந்து கொண்டே தாமரை மலருக்குச் சமமாகப் தூய்மையாகி யாத்திரையில் உள்ளோம். புத்தியில் நினைவிருக்க
வேண்டுமலி இதுவோ சுடுகாடு. பிறகு நாம் சுகதாமம் செல்வோம். நமக்கு பாபா ஆஸ்தி தருவதற்கான யுக்தி
சொல்லிக் கொண்டிருக்கிறார். தூய்மையாவதற்காக நாம் யோகத்தில் இருக்கிறோம். நினைவினால் தான் விகர்மங்கள்
விநாசமாகும். அப்போது ஆத்மா சரீரத்தை விடும். இந்த யாத்திரை எவ்வளவு அற்புதமானது! பாபாவை
(3/4)
03.08.2016
நினைவு செய்யுங்கள், தங்களின் இராஜதானியை நினைவு செய்யுங்கள், போதும். இவ்வளவு சுலபமான விஷயம்
கூட நினைவிருப்பதில்லை. அலஃப்லிதந்தையை நினைவு செய்யுங்கள், போதும். ஆனால் மாயா அதையும்
நினைவு செய்ய விடுவதில்லை, முயற்சி செய்ய வேண்டியுள்ளது. ஆத்மாவுக்கு ஞானம் கிடைத்துள்ளது லி
நம்முடைய பாபா வந்து விட்டார். ஆத்மா படிக்கின்றது இல்லையா? ஆத்மா சரீரத்தின் மூலம் பிறவி
எடுக்கின்றது. ஆத்மா சகோதரலிசகோதரன் ஆகும். தேக அபிமானத்தில் வருவதால் பிறகு அநேக சம்மந்தங்கள்
ஆகி விடுகின்றன. இங்கே நீங்கள் சகோதரலிசகோதரிகளாக ஆகியிருக்கிறீர்கள். தங்களுக்குள் சகோதரலி
சகோதரர்களாகவும் இருக்கிறீர்கள். சகோதரலிசகோதரிகளாகவும் இருக்கிறீர்கள். இல்லற மார்க்கம் இல்லையா?
இருவருக்குமே ஆஸ்தி வேண்டும். ஆத்மா தான் முயற்சி செய்கிறது. தேக அபிமானம் இருக்கக் கூடாது.
சரீரமே இல்லை என்றால் எதன் மூலம் விகாரத்தில் செல்வீர்கள்? நாம் ஆத்மா, பாபாவிடம் செல்ல வேண்டும்.
எவ்வளவு யோகி ஆகிக் கொண்டே செல்கிறோமோ, கர்மேந்திரியங்கள் சாந்தமாகிக் கொண்டே செல்லும். தேக
அபிமானத்தில் வருவதால் கர்மேந்திரியங்கள் சஞ்சலமடைகின்றன. ஆத்மா அறிந்துள்ளது, நமக்குப் பிராப்தி
(நன்மை) ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. சரீரத்திலிருந்து விலகிக் கொண்டே செல்வீர்களானால் கர்மேந்திரியங்கள்
சாந்தமாகிக் கொண்டே செல்லும். சந்நியாசிகள் மருந்து உட்கொண்டு கர்மேந்திரியங்களை சாந்தப் படுத்துகின்றனர்.
அதுவோ ஹடயோகம் ஆகிறது இல்லையா? நீங்களோ நினைவு மூலம் காரியமாற்ற வேண்டும். யோகபலத்தினால்
நீங்கள் கர்மேந்திரியங்களை வசப்படுத்த முடியாதா என்ன? ஆத்ம அபிமானி ஆகிக் கொண்டே செல்வீர்களானால்
அந்த அளவுக்குக் கர்மேந்திரியங்கள் சாந்தமாகிக் கொண்டே செல்லும். மிகுந்த முயற்சி செய்ய வேண்டியுள்ளது.
இதனால் கிடைக்கும் பலன் மிக உயர்ந்தது இல்லையா? பாபா சொல்கிறார், யோபலத்தினால் நீங்கள் உலகின்
எஜமானர் ஆகிறீர்கள். கர்மேந்திரியங்கள் மீது வெற்றி கொள்கிறீர்கள். அதனால் பாரதத்தின் யோகம் புகழ்
பெற்றதாக உள்ளது. நீங்கள் மனிதரில் இருந்து தேவதையாக, தூய்மையற்றதிலிருந்து தூய்மையானவர்களாக
ஆகிறீர்கள். பிரஜைகளும் கூட அங்கே சொர்க்கவாசியாகத் தானே இருக்கிறார்கள்! யோகபலத்தினால் நீங்கள்
சொர்க்கவாசி ஆகிறீர்கள். தேக பலத்தால் ஆக முடியாது. முயற்சி ஒன்றும் அதிகம் இல்லை. குமாரிகளுக்கோ
முயற்சியே தேவை இல்லை என்பது போலத் தான். அவர்கள் சுதந்திரமாக உள்ளனர். விகாரத்தில் சென்றால்
பெரிய பஞ்சாயத்தாக ஆகி விடுகின்றது. குமாரியாக இருப்பது நல்லது. இல்லையென்றால் பிறகு அதர் குமாரி
என்ற பெயர் ஆகி விடும். யுகலாகக் கூட ஏன் ஆக வேண்டும்? இதிலும் கூட பெயர் வடிவத்தின் நஷா ஏறி
விடுகின்றது. இதுவும் கூட மூர்க்கத்தனம் ஆகும். யுகல் (தம்பதி) ஆன பிறகு பவித்திரமாக இருப்பதற்காக மிக
நல்ல தைரியம் வேண்டும். ஞானத்தின் முதிர்ச்சி வேண்டும். அநேகர் தைரியம் வைக்கின்றனர். ஆனால்
நெருப்பின் ஜுவாலை வந்து விடுமானால் விளையாட்டு முடிந்து போகும். அதனால் பாபா சொல்கிறார்,
குமாரிகள் பிறகும் கூட நல்லவர்கள். அதர் குமாரி ஆவதற்கான சிந்தனை கூட ஏன் வைக்க வேண்டும்?
குமாரிகளுக்கு நல்ல பெயர் உள்ளது. பால பிரம்மச்சாரியாக உள்ளனர். பால பிரம்மச்சாரியாக இருப்பது நல்லது.
அதனால் சக்தி இருக்கும். மற்ற யாருடைய நினைவும் வராது. மற்றப்படி தைரியம் இருந்தால் ஆகிக் காட்டுங்கள்.
ஆனால் முயற்சி தேவதைப் படுகின்றது. இருவராக ஆகி விடுகின்றனர் இல்லையா? குமாரி என்றால் தனியாக
உள்ளனர். இருவர் என்றால் வேற்றுமை வந்து விடுகின்றது. முடிந்த வரை குமாரியாக இருப்பதே நல்லதாகும்.
குமாரி சேவைக்காக வெளியில் வர முடியும். பந்தனத்தில் வருவதால் பந்தனம் அதிகமாகி விடும். அந்த
மாதிரி புத்தியைச் சிக்க வைக்கிற அளவுக்கு வலையை ஏன் பின்னிக் கொள்ள வேண்டும்? அத்தகைய
வலையில் சிக்கிக் கொள்வது சரியல்ல. குமாரிகளுக்கோ மிக நல்லது. குமாரிகள் நல்ல பெயரையும் வெளிப்படுத்தி
யுள்ளனர். கன்னையா (கிருஷ்ணன்) என்ற பெயர் பாடப்படுகின்றது இல்லையா? குமாரியாக இருப்பது மிக
நல்லது. இவர்களுக்கு மிகவும் சுலபம். மாணவ வாழ்க்கை தூய்மையான வாழ்க்கையாகவும் உள்ளது. புத்தியும்
புத்துணர்ச்சியுடன் இருகக்கும். குமார்கள் பீஷ்ம பிதாமகர் போல் ஆக வேண்டும். கல்பத்திற்கு முன்பும் கூட
அது போல் இருந்துள்ளனர். அதனால் தான் தில்வாடா கோவிலில் நினைவுச் சின்னம் உருவாகியுள்ளது.
இப்போது தந்தை குழந்தைகளுக்குக் கட்டளையிடுகிறார் லி என்னை நினைவு செய்யுங்கள். மற்ற அனைத்து
விசயங்களையும் விட்டுவிட்டு நீங்கள் உங்கள் நன்மையைச் செய்து கொள்ளுங்கள். மறதியால் தவறு ஏற்பட்டு
விடுகிறது, குழந்தைகள் கீழே விழுந்து விடுகின்றனர். நீங்கள் வீண் சிந்தனையை விட்டு தங்களின் நன்மையைச்
செய்து கொள்ளுங்கள். மற்றச் சிந்தனைகளில் செல்லவே வேண்டாம். நீங்கள் தங்கம் போல் ஆகி விடுங்கள்.
மற்றவர்களுக்கும் வழி சொல்லுங்கள். சதோபிரதானம் ஆவதற்கு ஒரே உபாயமே உள்ளது. தூய்மையாகாமல்
முக்திதாமம் செல்ல இயலாது. உபாயம் ஒன்று மட்டுமே உள்ளது. பிறகு அந்த் மதி úஸா கதி ஆகி விடும்.
மற்றவர்கள் பற்றி வீணானவற்றைப் பேசுவதை விட்டு விடுங்கள். இல்லையென்றால் தனக்குத் தான் நஷ்டம்
செய்து கொள்வீர்கள். பாபா சாபம் ஒன்றும் தருவதில்லை. ஸ்ரீமத் படி நடக்கவில்லை என்றால் தனக்குத்
தானே சாபம் இட்டுக் கொள்கின்றனர். நல்லது.
(4/4)
03.08.2016
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும்
தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம் :
1) நிச்சயபுத்தி உள்ளவராகி உயிருடன் இருந்து கொண்டே இந்தப் பழைய உலகத்தில் இருந்து
தனது நங்கூரத்தை எடுத்து விட வேண்டும். பாபாவின் ஒவ்வொரு கட்டளையையும் பின்பற்றி
தனக்குத் தான் நன்மை செய்து கொள்ள வேண்டும்.
2) மற்றவர்கள் பற்றிய சிந்தனையை விட்டு தனது புத்தியைத் தூய்மையான தங்கமாக ஆக்கிக்
கொள்ள வேண்டும். மற்றவர் பற்றிய வீண் பேச்சுகளில் தனது நேரத்தை வீணாக்கக் கூடாது.
யோகபலத்தினால் தன்னுடைய கர்மேந்திரியங்களை சாந்தமானதாக, குளிர்ந்ததாக ஆக்கிக்
கொள்ள வேண்டும்.
வரதானம் : ஆன்மீக போதை மற்றும் அடைய வேண்டிய இலக்கின் நினைவு மூலம்
அனைத்துக் கர்மேந்திரியங்களையும் கட்டளைப்படி நடத்தக் கூடிய
கிரீடம் மற்றும் சிம்மாசனத்திற்கு உரியவர் ஆகுக.
சங்கமயுகத்தில் பாப்தாதாவிடமிருந்து அனைத்துக் குழந்தைகளுக்கும் கிரீடம் மற்றும் சிம்மாசனம்
கிடைத்துள்ளது. தூய்மையின் கிரீடமும் உள்ளது என்றால் பொறுப்புகளின் கிரீடமும் உள்ளது. அழியாத
ஆசனமும் உள்ளதென்றால் மன சிம்மாசனதாரியாகவும் இருக்கிறீர்கள். அத்தகைய இரட்டைக் கிரீடம் மற்றும்
சிம்மாசனத்திற்கு உரியவராக ஆகிறீர்கள் என்றால் நஷா மற்றும் இலக்கு தானாகவே நினைவிருக்கும். பிறகு
இந்தக் கர்மேந்திரியங்கள், இதோ வந்தேன்(கட்டளையிடுங்கள்) எதிரில் நிற்கும் என்று. யார் கிரீடம் மற்றும்
ஆசனத்தை விட்டு விடுகிறார்களோ, அவர்களின் கட்டளையை எந்த ஒரு வேலையாளும் (கர்மேந்திரியம்)
ஏற்று நடக்காது.
சுலோகன் : பலவீனமான சங்கல்பங்கள் தான் மகிழ்ச்சி நிறைந்தவராக ஆக்குவதற்கு
பதில் கேள்விகள் நிறைந்தவராக ஆக்கி விடுகின்றது.
(1/4)
04
08.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! நீங்கள் உண்மையிலும் உண்மையான இராஜரிμகள்,
இராஜயோகிகளாக இருக்கிறீர்கள், நீங்கள் இராஜ்யத்தை அடைவதற்காக கண்டிப்பாக
தூய்மையடைய வேண்டும்.
கேள்வி: எந்த ஒரு கவனம் இராஜ்யத்திற்கு தகுதி வாய்ந்தவர்களாக ஆக்குகிறது?
பதில்: படிப்பின் மீது முழுமையிலும் முழுமையான கவனம் இருந்தது என்றால் இராஜ்யம் கிடைத்து
விடும். தந்தை சொல்வதை நல்ல விதமாக கேட்டு தாரணை செய்யுங்கள். தந்தை சொன்னார், குழந்தைகள்
கேட்டார்கள் என்றால் இராஜ்யம் கிடைத்து விடுகிறது. கேட்கும்போது கொட்டாவி விட்டாலோ, சோம்பல்
முறித்தாலோ, புத்தி அலைந்தாலோ இராஜ்யத்தை இழந்து விடுவீர்கள். ஆகையால் படிப்பின் மீது முழுமையிலும்
முழுமையான கவனத்தைக் கொடுங்கள்.
பாடல்: நாம் அந்த வழியில் நடக்க வேண்டும். . .
ஓம் சாந்தி. ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்குப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். இன்று
குழந்தைகளுக்கு ஹடயோகம் மற்றும் இராஜயோகம் குறித்து புரிய வைக்கிறார். அவர்கள் சொல்லிக் கொடுப்பவை
அனைத்தும் ஹடயோகம், ஏனென்றால் அவர்கள் கர்ம சன்னியாசிகள் என குழந்தைகளுக்குத் தெரியும்.
உண்மையில் பார்க்கப் போனால் இல்லறவாசிகளுக்கு ஹடயோகம் கர்ம சன்னியாசம் கற்பிக்கக் கூடாது. அது
துறவற மார்க்கம் ஆகும். அந்த தர்மமே தனியானதாகும். உங்களுடையது தேவி தேவதா தர்மமாகும். அந்த
தேவி தேவதைகள் இராஜயோகத்தின் மூலமே இராஜ்யத்தை அடைந்தனர். இப்போது நீங்கள் இராஜரிμகளாக
இருக்கிறீர்கள். யார் தூய்மையாய் இருக்கின்றனரோ அவர்கள் ரிμ எனப்படுகின்றனர். இப்போது நீங்கள்
தூய்மையாய் இருக்கிறீர்கள். தூய்மையாய் இல்லாவிட்டால் அவர்களை ரிμ என சொல்ல முடியாது. நீங்கள்
இராஜ்யத்தை அடைவதற்காக தூய்மையடைகிறீர்கள். அவர்கள் ஒன்றும் இராஜ்யத்தை அடைவதற்காக
தூய்மையடைவதில்லை. தூய்மையான உலகில் நமக்கு தூய்மையான இராஜ்யம் இருந்தது என நீங்கள்
அறிவீர்கள். பாரதத்தில்தான் 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தேவி தேவதைகளின் பூஜைக்குரிய தூய்மையான
இல்லற மார்க்கம் இருந்தது. இப்போது பூஜாரிகளாக தூய்மையற்றவர்களாக ஆகி விட்டனர். தூய்மையற்றவர்களாக
எப்படி ஆனார்கள்? 84 பிறவிகளின் கணக்கு அல்லவா. சகஜ இராஜயோகத்தை கற்பித்துக் கொண்டிருக்கும்
தந்தைதான் உங்களுக்கு 84 பிறவிகளின் கணக்கை கூறுகிறார். மற்ற தர்மத்தைப் பற்றி சன்னியாசி தர்மத்தவர்
களுக்கு என்ன தெரியும்? இது தேவி தேவதைகளின் பழமையான தர்மமாகும். அது பின்னால் வரக்கூடிய
தர்மமாகும். யார் வாழ்ந்திருந்து சென்றனரோ அவர்களைப் பற்றி சன்னியாசிகள் புரிந்து கொள்ள முடியாது.
யார் பின்னால் வரக் கூடியவர்களோ அவர்களுக்கு புரிய வைத்தபடி செல்கின்றனர். ஹடயோகம் பலவிதமானது
என நீங்கள் அறிவீர்கள். துவாபரத்திலிருந்து பக்தி மார்க்கத்துடன் ஹடயோகமும் தொடங்குகிறது. இப்போது
இராஜயோகம் உள்ளது. அந்த ஹடயோகத்தை பிறவி பிறவிகளாக கற்றபடி வந்தனர். இராஜயோகத்தை நீங்கள்
ஒரு பிறவியில்தான் கற்கிறீர்கள். அவர்கள் பிறவி பிறவிகளாக மறுபிறவிகள் அடைந்து ஹடயோகம் கற்கத்தான்
வேண்டும். நீங்கள் இராஜயோகம் கற்பதற்காக மறுபிறவி எடுக்க வேண்டியதில்லை. இந்த இராஜயோகத்தை
நீங்கள் சங்கமயுகத்தில் மட்டும்தான் கற்கிறீர்கள். இராஜ்யம் கிடைத்து விட்டது, சொர்க்கமாகி விட்டது எனும்போது
மற்ற அனைத்து தர்மங்களும் முடிந்து விடுகின்றன. நீங்கள் இராஜரிμகளாக இருக்கிறீர்கள். ராதா கிருஷ்ணர்
கூட தூய்மையானவர்கள் அல்லவா. கிருஷ்ணரை மஹாத்மா எனவும் சொல்கின்றனர். மஹாத்மாக்கள் தூய்மையாய்
இருப்பார்கள். நீங்களும் கூட இப்போது மஹாத்மா மற்றும் ராஜரிμகளாக இருக்கிறீர்கள். மஹாத்மா என்றால்
தூய்மையானவர்கள், மஹான் ஆத்மா. இந்த விசயங்கள் எந்த சாஸ்திரங்களிலும் இல்லை. சாஸ்திரங்கள்
பிற்பாடு உருவாகின்றன. கதைகளைப் போல அமர்ந்து எழுதுகின்றனர்.நடந்து முடிந்ததை அமர்ந்து விளையாட்டாக
உருவாக்குகின்றனர். உண்மை எதுவும் இல்லை. இப்போது தந்தை குழந்தைகளை நடைமுறையில் படிக்க
வைக்கிறார். அவருடைய வரலாறு பிறகு உருவாக்கினர். யாதவர்கள், கௌரவர்கள், பாண்டவர்கள் இருந்தனர்,
கண்டிப்பாக சங்கமயுகத்தில் இருப்பார்கள். சங்கமயுகத்தின் வரலாற்றை அமர்ந்து உருவாக்கினார்கள். பண்டிகைகளும்
அனைத்தும் சங்கமயுகத்தினுடையவையாகும். ராக்கி கட்டுவதும் கூட தூய்மை குறித்த விசயமே ஆகும்.
பின்னாளில் அது நினைவார்த்தமாக ஆகிறது. இங்கே தந்தையும் கூட அனைவரையும் தூய்மையாக்கி சபதம்
ஏற்கச் செய்கிறார். சீக்கியர்கள் கங்கணம் கட்டுகின்றனர், அதுவும் கூட தூய்மையின் அடையாளம் ஆகும்.
இந்துக்கள் பூணூல் போடுகின்றனர், அதுவும் கூட தூய்மையின் அடையாளம் ஆகும். ஆனால் தூய்மையாக
இருப்பதில்லை. ராக்கி கட்டிக் கொள்கின்றனர், ஆனால் தூய்மையாய் இருப்பதில்லை. முன்னாளில் பிராமணர்கள்
ராக்கி கட்டிக் கொண்டிருந்தனர். இப்போது சகோதரி சகோதரனுக்கு கட்டுகிறார், அவர் பணம் கொடுக்கிறார்.
இவையனைத்தும் இப்போது ஃபாஷன் (பகட்டு) ஆகியுள்ளது. உண்மையில் இது தூய்மையின் விசயமாகும்.
(2/4)
04.08.2016
தந்தை சொல்கிறார் லி குழந்தைகளே, காமம் மிகப் பெரிய எதிரி ஆகும். அந்த பிராமணர்கள் யாரும் இப்படி
புரிய வைப்பதில்லை. இப்போது எல்லைக்கப்பாற்பட்ட தந்தை சொல்கிறார் லி குழந்தைகளே, நாங்கள் தூய்மையாய்
இருப்போம் என உறுதி மொழி கொடுங்கள். ஒரு போதும் விகாரத்தில் செல்ல மாட்டோம். வந்து தூய்மை
யற்றவரிலிருந்து தூய்மையாக்குங்கள் என அழைக்கவும் செய்கிறீர்கள். சத்ய, திரேதா யுகங்களில் அழைப்பதில்லை.
அது இராம இராஜ்யமாக உள்ளது. இது இராவண இராஜ்யம். இராமஇராஜ்யத்தில் 5 விகாரங்கள் இருப்பதில்லை.
ராஜா ராணி போல பிரஜைகள்.... நாம் பாபாவிடமிருந்து சொர்க்கத்தின் இராஜ்யத்தை எடுத்துக் கொண்டிருக்கிறோம்
என குழந்தைகளாகிய நீங்கள் இப்போது அறிவீர்கள். இந்த நரகத்திலிருந்து கண்டிப்பாக போக வேண்டும்.
தூய்மையாக்கி சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல தந்தை வந்துள்ளார். பிறகு நாம் ஏன் தூய்மையாகக்
கூடாது? அவர்களின் ஹடயோகம் பல விதமாக உள்ளது. ஜெய்ப்பூர் மியூசியத்தில் (அருங்காட்சியகத்தில்)
சென்று எத்தனை விதமான ஹடயோகிகள் உள்ளனர் என பாருங்கள். அதன் மூலம் எதுவும் நடப்பதில்லை.
ஏணியில் இறங்கியபடிதான் செல்கின்றனர்.
பாரதம் தூய்மையற்றதாக ஆகும்போது, இராவண இராஜ்யம் ஏற்படும்போது பூமி ஆடத் தொடங்குகிறது
என தந்தை புரிய வைத்திருக்கிறார். தங்கத்தாலான மாளிகைகள் முதலான அனைத்துமே கீழே சென்றுவிடும்.
மாளிகை முதலானவைகளை யாரும் திருடவில்லை. அவர்கள் கோவில்களை மட்டும் கொள்ளை அடித்தனர்.
கொஞ்சம் ஆபரணங்கள், தங்கம் முதலானவைகளை எடுத்துச் சென்றனர். ஆபரணங்களின் மீது அனைவரையும்
விட அதிக ஆர்வம் உங்களுக்குத்தான் உள்ளது. நீங்கள் சொர்க்கத்திற்கு வரும்போதே ஆபரணங்களை
அணிகிறீர்கள், இராஜ்யம் செய்கிறீர்கள். மற்ற தர்மத்தவர்கள் வரும்போதே இராஜ்யம் செய்வதில்லை. நீங்கள்
எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிடமிருந்து சொர்க்கத்தின் இராஜ்யத்தின் ஆஸ்தி எடுக்கிறீர்கள். ஆக இதை
தந்தை அமர்ந்து புரிய வைக்கிறார், கீதையைப் படித்து சொல்வதில்லை. கீதையில் எழுதப்பட்டுள்ள அனைத்தையும்
நான் கூறவில்லை, மனிதர்கள் நான் சொன்ன மஹாவாக்கியங்களை பிற்பாடு அமர்ந்து சாஸ்திரங்களாக உருவாக்கி
யுள்ளனர். நான் சொன்னவற்றை நீங்கள்தான் கேட்டு பிறகு சென்று இராஜ்யம் செய்தீர்கள். அங்கே இந்த
ஞானம் இருக்காது. இங்கேயோ தந்தை ஆசிரியராகி கற்க வைக்கிறார். தந்தை இந்தியில்தான் புரிய வைக்கிறார்.
இங்கே அனைவரும் இந்தி இந்தி என்றபடி இருக்கின்றனர். அது அவர்களின் மொழியாகும். உண்மையில்
பழமையான மொழி இந்திதான் ஆகும். சம்ஸ்கிருதம் அல்ல. இந்த சம்ஸ்கிருதம் சங்கராச்சாரியாருக்குப் பிறகு
வெளிப்பட்டது. யார் வருகின்றனரோ அவர்கள் தங்கள் மொழியை நடத்துகின்றனர். மற்றபடி பாபா கீதையை
சம்ஸ்கிருத மொழியில் சொல்லவில்லை. இல்லை. குருநானக்லிகிற்கு அவரது கிரந்தம் உள்ளது. அவர் சீக்கிய
தர்மம் ஸ்தாபனை செய்தார், அவரையும் கூட அவதாரம் என ஏற்கின்றனர். அந்த மதத்தில் இராஜாக்களும்
இருக்கின்றனர். சன்னியாசிகளின் இராஜ்யம் கிடையாது. புத்தர், கிறிஸ்து முதலானவர்கள் முதலில் இல்லறத்தில்
இருந்தனர் என பாபா புரிய வைத்திருக்கிறார். இப்போது இல்லறத்தவர், தூய்மையற்ற ஆத்மா, தர்மத்தை
ஸ்தாபனை செய்ய முடியாது. அவர்களுக்குள் தூய்மையான ஆத்மா பிரவேசமாகி தர்மத்தை ஸ்தாபனை
செய்தது. மற்ற வித விதமான தர்மங்கள் உள்ளன. வந்து தம்முடைய சிறிய மடங்களை, சிறு தர்மங்களை
ஸ்தாபனை செய்கின்றனர். கல்ப மரத்திலும் கூட காட்டப்பட்டுள்ளது அல்லவா. ஆக, ஹடயோகம் மற்றும்
இராஜயோகத்திற்கிடையில் மிகவும் வித்தியாசம் உள்ளதல்லவா. இந்த விசயங்கள் புரிந்து கொள்ள வேண்டிய
வையாகும். யாருக்கு புரியவில்லையோ அவர்கள் கொட்டாவி விட்டபடி, சோம்பல் முறித்தபடி இருப்பார்கள்.
இங்கே உங்களுக்கு பொக்கிஷம் கிடைக்கிறது. மிகப் பெரிய வருமானமாகும். நீங்கள் இரத்தினங்களால் பையை
நிரப்பிக் கொள்கிறீர்கள். ஆக, இந்த கண்களை திறந்து வைத்துக் கொண்டு கேட்க வேண்டும். தூங்கி விழுந்தீர்கள்
என்றால், புத்தி வெளியில் அலைந்து கொண்டிருந்தது என்றால், அவர்கள் இராஜ்யத்தை அடைய முடியாது.
நீங்கள் இராஜரிμகள் ஆவீர்கள். இராஜ்யத்தை அடையக் கூடியவர்கள். தந்தை இராஜ்யத்தை ஸ்தாபனை
செய்கிறார். ஸ்ரீ கிருஷ்ணர் செய்வதில்லை. கிருஷ்ணர் தந்தையிடம் ஆஸ்தியைப் பெறுகிறார். இப்போது
உங்களுடைய தந்தை நிராகாரராக இருக்கிறார், அவரிடமிருந்து உலக இராஜ்யத்தின் ஆஸ்தியை பெற்றுக்
கொண்டிருக்கிறீர்கள். எவ்வளவு செல்வந்தர்களாக நீங்கள் ஆகிறீர்கள். இங்கே ஒரே தந்தை வந்து இராஜயோகம்
கற்பிக்கிறார். எனினும் சுற்றுங்கள், திரியுங்கள், உண்ணுங்கள், குடியுங்கள், தந்தையை நினைவு மட்டும் செய்யுங்கள்.
செல்வந்தர்கள் கண்டிப்பாக நன்றாக அனுபவிப்பார்கள். அவர்கள் தம்முடைய வருமானத்தின் பலனை
அனுபவிக்கின்றனர். பனியாரம் சாப்பிடுங்கள் அல்லது ரொட்டி சாப்பிடுங்கள். தந்தையை நினைவு செய்யுங்கள்.
என்ன வேண்டுமானாலும் சாப்பிடுங்கள். பணம் பிறகு எதற்குத்தான் இருக்கிறது. பாபா ஏதும் தடை விதிப்பதில்லை.
தந்தையிடம் நினைவின் தொடர்பை மட்டும் ஈடுபடுத்த வேண்டும். இந்த இராஜ்யத்தை ஸ்தாபனை செய்வதில்
செலவு ஏதும் கிடையாது. அந்த சண்டை முதலானவைகளில் எவ்வளவு செலவாகிறது. ஆகாய விமானத்திற்காக
(போருக்காக) எவ்வளவு செலவு செய்யப்படுகிறது. அது கீழே விழுந்து விட்டால் ஒரேயடியாக அனைத்தும்
அழிந்து போய் விடுகின்றது. எவ்வளவு நஷ்டம் ஏற்படுகிறது. ஆக நடந்து சுற்றியபடி தந்தையை நினைவு
04.08.2016
(3/4)
செய்யுங்கள் என தந்தை சொல்கிறார். சுயதரிசன சக்கரத்தை சுற்றியபடி இருங்கள். நாம் 84 பிறவிகளை
முடித்துள்ளோம். இப்போது வதனத்தை நோக்கிச் செல்வோம். வீட்டுக்குச் சென்று பிறகு வந்து இராஜ்யம்
செய்வோம்! நீங்கள் நடிகர்கள் அல்லவா! அந்த சினிமா 2 1/2 மணி நேரம் நடக்கிறது. இந்த எல்லைக்கப்பாற்பட்ட
நாடகம் 5 ஆயிரம் வருடங்கள் நடக்கிறது, இதனை மனிதர்கள்தான் அறிந்து கொள்ள முடியும். இந்த உலகம்
முள் நிறைந்த காடாக உள்ளது. பெரியதிலும் பெரியதான முள் விகாரத்தினுடையது, அது முதல், இடை,
கடைசி வரை துக்கம் தருகிறது. இரண்டாம் நம்பர் முள் கோபமாகும். அதனுடைய அடையாளமாகிய இந்த
மகாபாரதச் சண்டையைப் பாருங்கள். ஏதாவது விசயத்தில் கோபம் வந்தது என்றால் குண்டு போடத் தொடங்கி
விடுவார்கள். இப்போது உருவாக்கக் கூடிய அணுகுண்டுகள் பற்றி கேட்கவே வேண்டாம். சத்யுகத்தில் எந்த
சண்டையும் நடப்பதில்லை. சங்கமயுகத்தில்தான் இந்த மகாபாரதச் சண்டையை காட்டியுள்ளனர். ஆனால்
தேவதைகள் அஹிம்சையாளர்கள். நீங்கள் யோகபலத்தின் மூலம் உலகின் எஜமானர் ஆகிறீர்கள். இது அமைதியின்
சக்தியாகும், இதில் நீங்கள் பேச வேண்டிய அவசியமில்லை. நினைவின் பலத்தின் மூலம் நீங்கள் பாபாவிடமிருந்து
உலகின் இராஜ்யத்தை எடுக்கிறீர்கள். வித்தியாசத்தைப் பாருங்கள் எவ்வளவு உள்ளது. அறிவியலின் பலத்தின்
மூலம் வினாசம் ஆகிறது. அதே அறிவியலின் மூலம் சத்யுகத்தில் நீங்கள் சுகத்தைப் பார்ப்பீர்கள். அறிவியலின்
மூலம் கண்டுபிடிப்புகள் செய்கின்றனர், அதனை சுகத்திற்காக செய்கின்றனர். இவர்களும் வந்து கொஞ்சம்
ஞானத்தை எடுப்பார்கள். கண்காட்சிகளில் அனைவரும் வருகின்றனர். மேலும் செல்லச் செல்ல அனைவரும்
வருவார்கள். உங்களின் இந்த அமைதி சக்தியின் ஓசை எழப் போகிறது.
நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள் லி கீதையின் பகவான் யார்? இப்படி வேறு யாரும் கேட்க முடியாது.
எங்கே இந்த கேள்வியை கேட்கிறீர்களோ அங்கே அதனுடன் (சம்மந்தப்பட்ட) படத்தையும் கொடுங்கள்.
கீதையின் பகவான் பரமபிதா பரமாத்மாவா அல்லது 84 பிறவிகளை எடுக்கும் ஸ்ரீ கிருஷ்ணரா? தூய்மை
யற்றவர்களை தூய்மையாக்குபவர் தந்தைதான் ஆவார். கிருஷ்ணரின் ஆத்மா 84 பிறவிகள் எடுத்து
கருப்பாகியுள்ளது. அவருக்குப் (பிரம்மாவிற்குப்) புரிய வைக்கிறார் லி நீ 84 பிறவிகள் எடுத்திருக்கிறாய். உன்னுடைய
பிறவிகளைப் பற்றி உனக்கு தெரியாது. நாம் 84 பிறவிகள் எப்படி எடுக்கிறோம் என்பது நடிகர்களுக்குத்
தெரிந்திருக்க வேண்டும் அல்லவா. சன்னியாசிகளின் தர்மமே தனியானது. பாரதவாசிகளுக்கு தம்முடைய
தர்மத்தைப் பற்றி தெரியாத காரணத்தால் வேறு வேறு தர்மங்களில் சென்றபடி இருக்கின்றனர். ஏதாவது
குருவின் ஆசீர்வாதத்தின் மூலம் யாருக்காவது பணம் கிடைத்தது என்றால் அவர் பின்னால் சென்று விழுவார்கள்.
பிறகு திவாலாகி விட்டால் தன்னுடைய தலைவிதி என புலம்புவார்கள். ஆண் குழந்தை பிறந்தால் மிகவும்
குμயடைவார்கள். நல்லது, 10லி12 நாட்களுக்குப் பிறகு குழந்தை இறந்து விட்டால் ஈஸ்வரனின் செயல்
என்பார்கள். இவர்களைப் பிழைக்க வைப்பது என்பது என்னுடைய கைகளில் இல்லை. பாபா இப்படிப்பட்ட
பல உதாரணங்களைப் பார்த்திருக்கிறார். இப்படிப்பட்டவர்கள் நிறைய பேர் உள்ளனர். இங்கே தந்தை
அமர்ந்திருக்கிறார். இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, இப்போது தூய்மையாகுங்கள் என தந்தை
குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். மிகப் பெரிய மகாபாரதச் சண்டை ஏற்பட்ட போது திரௌபதி கூப்பிட்டார்
லி பாபா என்னை இந்த துச்சாதனன் துகிலுரிந்து கொண்டிருக்கிறான், என்னை இவனிடமிருந்து காப்பாற்றுங்கள்.
5 ஆயிரம் வருடங்களின் விசயம் இது. இந்த விசயத்தில்தான் இந்த அபலைகள் மீது கொடுமைகள்
இழைக்கப்படுகின்றன. பல பெண்களும் கூட விகாரமின்றி இருக்க முடியாதவர்களாக உள்ளனர். அவர்களுக்கும்
கூட சூர்ப்பனகை, புத்னா என பெயரிடப்பட்டுள்ளது. யார் விஷத்திற்காக கஷ்டங்களைக் கொடுக்கின்றனரோ
அவர்கள் தான் கம்சன், ஜராசந்தன், சிசுபாலன்... இவர்கள் அனைவரும் வினாசத்தை அடையவே வேண்டியிருக்கும்.
இந்த சமயம் அசுரத்தனமான இராவண இராஜ்யம் உள்ளது, பிறகு ஈஸ்வரிய இராஜ்யம் ஏற்படும். 84 பிறவிகளை
எப்படி எடுக்கிறோம் என இந்த முழு சக்கரத்தையும் நீங்கள் தெரிந்து கொண்டுவிட்டீர்கள். விகாரத்தில்
செல்லும்போது இது மறந்து விடுகிறது. விகாரத்தில் செல்பவர்களின் முகமே வெளிறிப் போய்விடுகிறது.
தாமே உணர்கின்றனர் லி நாம் என்ன காரியம் செய்து விட்டோம். தந்தை சொல்கிறார் லி குழந்தைகளே, இந்த
விஷமான சாக்கடையில் சென்று விடாதீர்கள். இது உங்களுக்கு முதல், இடை, கடை வரை துக்கம் தரக்கூடியதாகும்.
இதில் விழாதீர்கள். நாங்கள் ஒருபோதும் விகாரத்தில் செல்ல மாட்டோம் என உறுதி மொழி எடுங்கள்.
பகவானுடைய மகா வாக்கியம் லி காமம் மிகப் பெரிய எதிரியாகும். அனைத்து படங்களிலும் முதலில் இதனை
எழுதுங்கள் லி ஞானக்கடல், பதித பாவனர், ஞானத்தை வழங்கும் வள்ளலாகிய சிவ பகவானுடைய மகா
வாக்கியம். பிறகு கிருஷ்ணரின் பெயர் மறைந்து விடும். நமக்கு கீதையின் பகவான் அமர்ந்து இதனை
தெரிவிக்கிறார். அந்த ஞானத்தைத்தான் நாம் பெறுகிறோம். பகவான்தான் வந்து புதிய உலகத்தை ஸ்தாபிக்கிறார்
மற்றும் பழைய உலகம் வினாசம் ஆகிறது. ருத்ர ஞான யக்ஞம் அல்லவா. சிவபாபா என்பது அசலாகும்.
ருத்ரபாபா என சொல்ல மாட்டார்கள். பம்பாயில் பபூல்நாத்தின் கோவிலும் இருக்கிறது. இப்போது பபூல்
என்பது முள்ளை குறிப்பிடுவதாகும். பபூல்நாத் எனும் பெயரை ஏன் வைத்தனர்? இதனை யாரும் புரிந்து
கொள்வதில்லை. படம் சிவபாபாவுடையதே ஆகும். மற்றபடி பல பெயர்களை வைத்துவிட்டுள்ளனர். சிவபாபாதான்
04.08.2016
(4/4)
வந்து முள் நிறைந்த காட்டினை மலர்கள் நிறைந்த தோட்டமாக ஆக்குகிறார். அவர்தான் உங்களுடைய பாபா
(தந்தை) ஆவார். அவருடைய பெயர் சிவன் என்பதாகும். சிவபரமாத்மாய நமஹ, பிராமண தேவி தேவதாய
நமஹ: வார்த்தைகள் முற்றிலும் தெளிவாக உள்ளன. இப்போது அந்த பரமபிதா பரமாத்மா அமர்ந்து இந்த
ரதத்தின் மூலம் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். லௌகிக தந்தை குழந்தைகளைப் பார்த்து குழந்தைகளே
நம்முடைய குலத்திற்கு களங்கம் விளைவிக்காதீர்கள், எந்த கெட்ட காரியமும் செய்யாதீர்கள் என சொல்வது
போல இந்த பாபாவும் கூட சொல்கிறார் லி குழந்தைகளே விகாரத்தில் ஒருபோதும் செல்லக் கூடாது. தூய்மை
யடையாமல் சொர்க்கத்தில் உயர் பதவியை அடைய முடியாது. மிக உயர்ந்த வருமானத்தை நீங்கள் சம்பாதித்துக்
கொண்டிருக்கிறீர்கள். மற்ற அனைவரும் இழந்து கொண்டிருக்கின்றனர். சிலரிடம் கோடிகள் இருக்கலாம். பெரிய
பெரிய மாளிகைகள் கட்டிக் கொண்டிருக்கின்றனர். இலட்சக்கணக்கான பணத்தை செலவு செய்து
கொண்டிருக்கின்றனர். அவையனைத்தும் நேரம், பணம், வீணடிப்பது ஆகும் என நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள்.
இவை உதவப் போவதில்லை. அனைத்தும் அழிந்து விடும். 10லி12 ஆயிரம் வருடங்கள் இருக்கும் என
அவர்கள் புரிந்து கொள்கின்றனர். மரணம் முன்னால் தலை மீது அமர்ந்திருக்கிறது என குழந்தைகளாகிய
நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள். கொஞ்ச காலத்திற்குள் இந்த நில நடுக்கம் முதலானவற்றால் அனைத்தும் மண்ணுடன்
மண்ணாகப் போகின்றன. நில நடுக்கம் முதலானவற்றால் எண்ணற்றவர்கள் இறந்து போவார்கள். இப்போது
வினாசம் ஆகத்தான் போகிறது. வினாசத்தின் காட்சியும், ஸ்தாபனையின் காட்சியும் பார்த்திருக்கிறீர்கள். அதனையே
பிறகு இந்த கண்களால் பார்க்கப் போகிறீர்கள். பக்தி மார்க்கத்தில் எவ்வளவு ஏதேதோ செய்கின்றனர், ஆனால்
யாரும் வைகுண்டத்திற்குச் செல்ல முடியாது. ஞானம் இன்றி சத்கதி ஏற்பட முடியாது. இவையனைத்தும் பக்தி
மார்க்கத்தில் விளையாட்டு பொம்மைகள் ஆகும். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு
தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. குலத்திற்கு களங்கம் விளைவிக்கும் எந்த கெட்ட செயலையும் செய்யக் கூடாது.
தூய்மையடைவதற்கான உறுதி மொழியை தனக்குத் தானே எடுக்க வேண்டும்.
2. தனது நேரம், பணம், எதையும் வீணாக்கக் கூடாது. மலர்கள் நிறைந்த தோட்டத்திற்குச்
செல்வதற்காக முட்களை (தன்னிடமிருந்து) நீக்க வேண்டும்.
வரதானம் : முழுமை (சம்பூர்ண) நிலை மற்றும் அந்தஸ்தின் நினைவின் மூலம்
எப்போதும் உயர்ந்த காரியங்களை செய்யக் கூடிய தந்தைக்குச் சமமானவர் ஆகுக.
நான் எல்லா நேரத்திலும், ஒவ்வொரு வினாடியிலும், அனைத்து கர்மங்களை செய்தபடியும், நாடக
மேடையில் இருக்கிறேன் என்ற நினைவு எப்போதும் இருந்தது என்றால் அனைத்து கர்மங்களின் மீதும்
கவனம் இருக்கின்ற காரணத்தால் முழுமை நிலைக்கு அருகாமையில் வந்து விடுவீர்கள். அத்துடன் தற்போதைய
மற்றும் எதிர்காலத்தின் அந்தஸ்தின் நினைவும் இருப்பதன் மூலம் அனைத்து காரியங்களும் உயர்வானதாக
ஆகும். இந்த இரண்டு நினைவுகளே தந்தைக்குச் சமமாக ஆக்கக் கூடியது. சமமான தன்மையில் வருவதன்
மூலம் ஒருவர் மற்றவரின் மனதின் சங்கல்பங்களை எளிதாகவே பற்றிக் கொள்வார்கள். இதற்காக சங்கல்பங்களை
கட்டுப்படுத்தும் சக்தி மட்டும் தேவை. தனது எண்ணங்களின் கலப்படம் இருக்கக் கூடாது.
சுலோகன் : பொறாமை மற்றும் அப்பிராப்தி (எதையும் அடையாத தன்மை) யின் காரணம்
ஆசைகள் ஆகும், எங்கே அனைத்து பிராப்திகள் உள்ளனவோ அங்கே மகிழ்ச்சி இருக்கும்.
(1/4)
05
08.2016 காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! பாபாவின் வலது கரமாக ஆக வேண்டுமெனில் ஒவ்வொரு
விசயத்திலும் நேர்மையானவர்களாக ஆகுங்கள், சதா சிரேஷ்ட காரியங்களை செய்யுங்கள்.
கேள்வி: எந்த சம்ஸ்காரம் சேவையில் அதிக தடை ஏற்படுத்துகிறது?
பதில்: கருத்து வேறுபாடு லி சுபாவங்களின் காரணத்தினால் தங்களுக்குள் ஏற்படக் கூடிய பிரிவினைக்கான
சம்ஸ்காரம் சேவையில் அதிக தடைகளை ஏற்படுத்துகிறது. இரண்டு கருத்துகளினால் அதிக நஷ்டம் ஏற்படுகிறது.
கோபம் என்ற பூதம் பகவானையும் எதிர்கொள்ள தாமதிப்பது கிடையாது, அதனால் தான் பாபா கூறுகின்றார் லி
இனிமையான குழந்தைகளே! அதுபோன்ற ஏதாவது சம்ஸ்காரம் இருந்தால் அதை நீக்கி விடுங்கள்.
பாட்டு: அதிர்ஷ்டத்தை எழுப்பி வந்துள்ளேன் ........
ஓம் சாந்தி. இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் பாட்டு கேட்டீர்கள். ஆன்மீகக் குழந்தைகள்
என்றால் பரமாத்மாவாகிய சிவனின் குழந்தைகளாகிய ஆத்மாக்கள் சரீரம் என்ற கர்மேந்திரியங்களின் மூலம்
பாட்டு கேட்டீர்கள். இப்போது குழந்தைகள் ஆத்ம அபிமானிகளாக ஆக வேண்டும். அதிக உழைப்பும்
இருக்கிறது. அடிக்கடி தன்னை ஆத்மா என்று புரிந்துக் கொண்டு தந்தையை நினைவு செய்ய வேண்டும். இது
குப்தமான முயற்சியாகும். தந்தையும் குப்தமானவர் எனில் முயற்சியும் குப்தமாக செய்விக்கின்றார். தந்தை
சுயம் வந்து கூறுகின்றார் லி குழந்தைகளே! என்னை நினைவு செய்தால் 5 ஆயிரம் ஆண்டிற்கு முன்பு போல்
மீண்டும் சதோபிரதானமாக ஆவீர்கள். நாம் சதோபிரதானமாக இருந்தோம், பிறகு மீண்டும் நாமே இப்போது
சதோபிரதானமாக ஆகிறோம் என்பதை குழந்தைகள் புரிந்திருக்கிறீர்கள். அவசியம் சதோபிரதானமாக ஆக
வேண்டும். எந்த அதிர்ஷ்டத்தை இழந்தீர்களோ அதை மீண்டும் அடைவதற்கான முயற்சியை செய்விக்கக்
கூடியவர் ஒரே ஒரு சர்வசக்திவான் தந்தை ஆவார் என்பது பாடலிலும் இருக்கிறது. ஏனெனில் அனைவரையும்
தூய்மை ஆக்குகிறார் அல்லவா! தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார் லி ஹே ஆன்மீக குழந்தைகளே!
இப்போது அதிர்ஷ்டத்தை உருவாக்கிக் கொள்ள வந்திருக்கிறீர்கள். மாணவ வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை
உருவாக்கிக் கொள்ள செல்கின்றனர் அல்லவா! அவர்கள் சிறு குழந்தைகளாக இருப்பர். நீங்கள் சிறியவர்கள்
கிடையாது, நீங்கள் பெரியவர், வயதானவர்கள். அதிர்ஷ்டத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். ஆம் சிலர்
மிக வயதானவர்களாகவும் இருக்கின்றனர். வயோதிக நிலையை விட இளமையில் படிப்பது மிகவும் நல்லதாகும்,
இளையவர்களின் புத்தி மிக நன்றாக இருக்கும். இது அனைவருக்கும் மிக எளிதானதாகும். உங்களது சரீரம்
பெரியது அல்லவா! இவர்கள் குழந்தைகள், அந்த அளவிற்கு புரிந்துக் கொள்ள முடியாது. ஏனெனில்
கர்மேந்திரியங்கள் சிறியதாகும். புகழ்லிஇகழ், துக்கம்லிசுகம் போன்ற விசயங்களை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள்.
ஆத்மா பிந்துவாக இருக்கிறது. சரீரம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஆத்மா ஒரே மாதிரியாக இருக்கிறது.
ஒருபோதும் சிறியதாக, பெரியதாக ஆவது கிடையாது. அந்த ஆத்மாவின் புத்திக்காக தந்தை (கஸ்தூரி
போன்ற) பரிசு கொடுத்துக் கொண்டிருக்கின்றார், ஏனெனில் புத்தி இப்போது முற்றிலும் தமோபிரதானமாக ஆகி
விட்டது. அது இப்போது தூய்மையானதாக ஆகிக் கொண்டிருக்கிறது. இந்த சித்திரங்கள் புரிய வைப்பதற்கு
உங்களுக்கு அதிக பயனுள்ளதாக இருக்கிறது. பக்தி மார்க்கத்தில் தேவதைகளின் முன் சென்று தலை
வணங்குகின்றனர், பூஜை செய்கின்றனர். முன்பு நீங்களும் குருட்டு நம்பிக்கையுடன் சென்று வந்தீர்கள். சிவன்
கோயிலுக்கு சென்றீர்கள், இவர் சிவபாபா என்பது உங்களுக்குத் தெரியாமல் இருந்தது பாபாவிடமிருந்து
ஆஸ்தி அவசியம் கிடைத்திருக்கிறது, அதனால் தான் அவரது மகிமை பாடப்படுகிறது. யாராவது நல்ல
காரியங்கள் செய்து விட்டு செல்கின்றனர் எனில் அவரது மகிமை பாடப்படும். சிவபாபாவின் ஸ்டாம்ப் உருவாக்க
வேண்டும். சிவபாபா கீதை ஞானம் அளிப்பவர் ....... இந்த ஸ்டாம்ப் எளிதாக உருவாக்கப்படும். அந்த தந்தை
அனைவருக்கும் சுகம் கொடுக்கக் கூடியவர். நான் உங்களை சுகதாமத்திற்கு எஜமானர்களாக ஆக்கக் கூடியவன்
என்று தந்தை கூறுகின்றார். தேகமற்ற சிவபாபாவிடம் நாம் வந்திருக்கிறோம் என்பதை வயோதிகர்களும்
புரிந்து கொள்கின்றனர். அவர் இந்த தேகத்தில் பிரவேசமாகியிருக்கின்றார். நிராகாரமானவரைத் தான் சித்திரமற்றவர்
(அசரீரி) என்று கூறப்படுகின்றார். நாம் சிவபாபாவிடம் செல்கிறோம், அவர் இந்த சரீரத்தை தற்காலிகமாக
எடுத்திருக்கின்றார் என்பது புத்தியில் இருக்கிறது. தூய்மை இழந்தவர்களை தூய்மையானவர்களாக்கி, முக்தி,
ஜீவன் முக்தி கொடுக்கின்றார். அதாவது சாந்திதாமம், சுகதாமத்தில் வசிக்கக் கூடியவர்களாக ஆக்குகின்றார்.
மனிதர்கள் அமைதிக்காகவே முயற்சி செய்கின்றனர். பகவான் கிடைத்து விட்டால் அமைதி கிடைத்து விடும்,
சுகத்திற்கான முயற்சி செய்வது கிடையாது. தந்தையின் கூடவே வீட்டிற்குச் செல்ல வேண்டும், பகவானை
சந்திக்க வேண்டும், அவ்வளவு தான். இந்த நேரத்தில் அனைவரும் முக்தியை விரும்புகின்றவர்களாக
(2/4)
05.08.2016
இருக்கின்றனர். ஜீவன்முக்தி அடையக் கூடியவர்கள் பிராமணர்களாகிய நீங்கள் மட்டுமே. மற்ற அனைவரும்
முக்திக்கான விரும்பம் வைத்திருக்கின்றனர். ஜீவன்முக்திக்கான வழி கூறக்கூடியவர் யாரும் கிடையாது. சந்நியாசி
போன்றவர்களிடம் சென்று அமைதி கேட்கின்றனர். மன அமைதி எப்படி கிடைக்கும்? என்று கேட்கின்றனர்.
வழி கூறக் கூடிய அனைவருமே முக்திக்கு செல்லக் கூடியவர்கள் தான். மோட்சம் என்றால் என்ன? என்பது
கூட புத்தியில் வருவது கிடையாது. களைப்படைந்து விட்டதால் முக்திக்குச் சென்றால் நல்லது என்று களைப்புடன்
கூறுகின்றனர். உண்மையில் முக்திதாமம் என்பது ஆத்மாக்கள் வசிக்கும் இடமாகும். நாம் புது உலகிற்கான
இராஜ்ய பாக்கியத்தை அடைகிறோம் என்பதை இத்தனை சென்டர்களிலும் இருக்கும் குழந்தைகள் அனைவரும்
அறிந்திருக்கிறீர்கள். பாபா நமக்கு புது உலகின் இராஜ்யத்தைக் கொடுக்கின்றார். எங்கு கொடுப்பார்? புது உலகில்
கொடுப்பாரா? அல்லது பழைய உலகில் கொடுப்பாரா? நான் சங்கமத்தில் வருகிறேன் என்று தந்தை கூறுகின்றார்.
நான் சத்யுகத்திலோ அல்லது கலியுகத்திலோ வருவது கிடையாது. இரண்டிற்கும் நடுவில் வருகிறேன். தந்தை
அனைவருக்கும் சத்கதி கொடுப்பார் அல்லவா! துர்கதியில் விட்டு விட்டு சென்று விடுவார் என்பது கிடையாது.
சத்கதி மற்றும் துர்கதி இரண்டும் ஒன்றாக இருக்க முடியாது. இந்த பழைய உலகம் விநாசம் ஆகிவிடும்
என்பதை குழந்தைகள் அறிவீர்கள். ஆகையால் இதன் மீது அன்பு செலுத்தாதீர்கள். இப்போது நாம் சங்கமத்தில்
இருக்கிறோம் என்று புத்தி கூறுகிறது. இந்த உலகம் மாறப் போகிறது. இப்போது தந்தை வந்திருக்கின்றார்,
நான் கல்ப கல்பத்தின் சங்கமத்தில் வருகிறேன் என்று தந்தை கூறுகின்றார். உங்களை துக்கத்திலிருந்து
விடுவித்து ஹரியின் வாசலுக்கு அழைத்துச் செல்கிறேன். இது ஞான விசயமாகும். ஹரிதுவார், கிருஷ்ண
துவார் என்றால் கிருஷ்ணபுரி என்று கூறப்படுகிறது. நல்லது, இவருக்குப் பிறகு லெட்சுமனனை ஊஞ்சலில்
அமர்த்தி விட்டனர். முதலில் ஹரிதுவார் வரும். சத்யுகம் தான் ஹரிதுவார் என்று கூறப்படுகிறது. பிறகு இராம்,
லெட்சுமன் போன்றவர்களைக் காண்பிக்கின்றனர். அந்த மாதிரி எந்த விசயமும் கிடையாது. அது உருவாக்கப்பட்ட
விசயங்களாகும். இராமருக்கு எத்தனையோ சகோதரர்களைக் கொடுத்து விட்டனர்! 4 சகோதரர்கள் இருக்க
மாட்டார்கள். இங்கு தான் 4லி8 சகோதரர்கள் இருக்கின்றனர். ஒருபுறம் ஈஸ்வரிய குழந்தைகள், மற்றொருபுறம்
அசுர குழந்தைகள்.
சிவபாபா பிரம்மாவின் உடலில் வந்திருக்கிறார் என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள். சிவன் பாபா,
பிரம்மா தாதா ஆவார். பிரஜாபிதா ஆவார். அவர் ஆத்மாக்களுக்குப் பிதா, அநாதியானவர், (ஆதி, அந்தமில்லாதவர்)
இந்த நேரத்தில் பிராமணர்களைப் படைக்கின்றார். சிவபாபா சாலிகிராமங்களைப் படைக்கின்றார் என்பது கிடையாது.
சாலிகிராமங்கள் அழிவற்றவைகளாக இருக்கவே செய்கின்றன. தந்தை வந்து தூய்மையானவர்களாக ஆக்குகின்றார்,
அவ்வளவு தான். எதுவரை ஆத்மா தூய்மையாக ஆகவில்லையோ அதுவரை சரீரம் எவ்வாறு தூய்மையாக
ஆக முடியும்! ஆத்மாக்களாகிய நாம் தூய்மையாக இருந்த போது சதோபிரதானமாக இருந்தோம். இப்போது
அசுத்தமாக, தமோபிரதானமாக இருக்கிறோம், மீண்டும் சதோபிரதானமாக ஆவது எப்படி? இது எளிதாக
புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகும். இந்த நேரத்தில் கறை படிந்ததன் மூலம் நீங்கள் தூய்மையற்றவர்களாக,
தமோபிரதானமாக ஆகிவிட்டீர்கள். இப்போது மீண்டும் சதோபிரதானமாக ஆக வேண்டும். கணக்கு வழக்குகளை
முடித்துக் கொண்டு அனைவரும் சாந்திதாமம் அல்லது சுகதாமத்திற்கு வருவீர்கள். ஆத்மாக்கள் எப்படி
வருகின்றன? என்பதையும் கிறிஸ்தவர்கள் மரத்தில் விளக்கு எரிய விட்டு கொண்டாடுகின்றனர். இவை
அனைத்தும் தர்மத்தின் தனித் தனியாக கிளைகள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அங்கிருந்து ஆத்மாக்கள்
முதன் முதலில் எப்படி கீழே இறங்குகின்றன? என்ற ஞானம் உங்களுக்குக் கிடைத்து விட்டது. ஆத்மாக்களாகிய
நமது வீடு சாந்திதாமம் ஆகும். இப்போது சங்கமமாகும். அங்கிருந்து அனைத்து ஆத்மாக்களும் வந்து விடும்,
பிறகு அனைவரும் செல்வோம். பிரளம் ஏற்படாது. பாபாவிடத்தில் மீண்டும் அதிர்ஷ்டம் உருவாக்கிக் கொண்டும்
மீண்டும் சுய இராஜ்யத்தை அடைவதற்காக வந்திருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இது பெயரளவிற்கு
சொல்வதுடன் இருந்து விடுவது கிடையாது. நினைவின் மூலம் தான் ஆஸ்தி கிடைக்கும். தேகம், தேக
சகிதமாக அனைத்து உற்றார், உறவினர்களையும் மறந்து விடுங்கள் என்று தந்தை கூறுகின்றார். சித்திரம்
(சாகாரம்) மற்றும் விசித்திரம் (நிராகார்) அல்லவா! யாரை பார்க்க முடியாதோ அவர் தான் விசித்திரம் என்று
கூறப்படுகின்றார். இது மிகவும் ஆழமான விசயமாகும். ஆத்மா எவ்வளவு சிறிதாக இருக்கிறது! அது அடிக்கடி
நடிப்பு நடிக்க வேண்டியிருக்கிறது, வேறு யாருடைய புத்தியிலும் இப்படிப்பட்ட விசயங்கள் கிடையாது. முதன்
முதலில் நான் ஆத்மா, அவர் நமது தந்தை என்பதை புத்தியில் அமர வைக்க வேண்டும். அவரைத் தான்
பதீத பாவன், ஹே பகவான் என்று கூறி நினைவு செய்கின்றனர். வேறு எந்த இடத்திற்கும் செல்ல வேண்டிய
அவசியம் கிடையாது. ஆக நினைவும் ஒரே ஒருவரைத் தான் செய்ய வேண்டும் அல்லவா! பகவானை
நினைவு செய்கின்றனர் எனில் அவசியம் அவரிடமிருந்து ஏதோ அடைந்திருக்க வேண்டும். பிறகு ஏன் வீதி
வீதியாக சென்று ஏமாற்றம் அடைகிறீர்கள்? பகவான் பரந்தாமத்திலிருந்து வர வேண்டியிருக்கிறது அல்லவா!
நாம் செல்ல முடியாது, ஏனெனில் தூய்மையற்றவர்களாக இருக்கிறோம். தூய்மை இல்லாதவர்கள் அங்கு
செல்ல முடியாது. இப்போது நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள். பக்தி மார்க்கத்தின் பாகம் எவ்வளவு ஆச்சரியமானதாக
(3/4)
05.08.2016
இருக்கிறது! ஒரே ஒரு பகவானைத் தான் ஹே ஈஸ்வரனே!, ஹே பரம்பிதா, ஓ இறை தந்தையே என்று
நினைவு செய்கின்றனர். அவர் ஒரே ஒருவர் தான் எனும் போது பிறகு ஏன் வேறு பக்கம் சென்று ஏமாற்றம்
அடைகிறீர்கள்? அந்த ஒருவர் மேலே இருக்கிறார். ஆனால் இவை அனைத்தும் பதிவாகியிருக்கிறது. நாடகப்படி
எல்லையற்ற புத்தியற்றவர்களாக ஆகி பக்தி செய்கின்றனர். இப்போது நீங்கள் எல்லையற்ற புத்திசாலிகளாக
ஆகிறீர்கள். ஸ்ரீமத் படி நடப்பவர்கள் தான் புத்திசாலிகளாக ஆகின்றனர். அவர்கள் மறைந்து இருக்க முடியாது.
அவர்கள் எப்போதும் சிரேஷ்ட காரியம் மட்டுமே செய்வர். நான் துக்கத்தை நீக்கி சுகம் கொடுக்கக் கூடியவன்
எனில் குழந்தைகளும் எவ்வளவு இனிமையானவர்களாக ஆக வேண்டும் என்று தந்தை கூறுகின்றார்! தந்தையின்
வலது கரமாக ஆக வேண்டும். இப்படிப்பட்ட குழந்தைகள் தான் தந்தைக்கு பிரியமானவர்கள். வலது கரம்
அல்லவா! இடது கைகளினால் அந்த அளவிற்கு காரியம் செய்ய முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
ஏனெனில் வலது கரம் எப்போதும் சரியான காரியம் மட்டுமே செய்யும். அதனால் தான் இந்த வலது கையை
மட்டுமே சுப காரியங்களில் பயன்படுத்துகின்றனர். பூஜை எப்போதும் வலது கைளால் செய்வர். ஒவ்வொரு
விசயத்திலும் நன்னெறியுடையவர்களாக, நேர்மையானவர்களாக ஆகுங்கள் என்று தந்தை கூறுகின்றார். தந்தை
கிடைத்து விட்டார் எனில் குμ ஏற்பட வேண்டும்.
தந்தை கூறுகின்றார் லி என்னை நினைவு செய்தால் இறுதிக் கால நிலை நல்ல நிலையாக ஆகிவிடும்.
நல்ல வழி அல்லது நல்ல நிலை ஏற்படுத்தும் வழி ஒரே ஒருவருடையது ஆகும். அதனால் தான் ஈஸ்வரனின்
வழி தனிப்பட்டது என்று பாடப்பட்டிருக்கிறது. அவரே பதீத பாவன் ஆவார். மனிதர்களை தூய்மை ஆக்கி
துர்கதியிலிருந்து சத்கதிக்கு எப்படி அழைத்துச் செல்வது என்பதை அவர் அறிவார். பக்தி மார்க்கத்தில்
எவ்வளவோ தீவிர முயற்சி செய்கின்றனர்! ஆனால் சத்கதி ஏற்படுவது கிடையாது. பலன் எதுவும் கிடைப்பது
கிடையாது. சத்கதி கொடுக்கக் கூடியவர் ஒரே ஒரு தந்தை ஆவார். பக்தியில் யார், எந்த பாவனையுடன் பூஜை
செய்கிறார்களோ அவர்களுக்கு அந்த பலனை கொடுக்கக் கூடியவர் நான் ஒருவனே. அதுவும் நாடகத்தில்
பதிவாகியிருக்கிறது லி அவர்களது முயற்சியின் படி தானாகவே அவர்களுக்கு கிடைத்து விடும். இப்போது
குழந்தைகளும் தனது முயற்சியின் மூலம் தூய்மையாக ஆக வேண்டும். தந்தை கூறுகின்றார் லி இனிமையிலும்
இனிமையான தந்தையை நினைவு செய்யுங்கள். அவர் தான் சர்வசக்திவானாக இருக்கின்றார், எவ்வளவு
உயர்வானவர்களாக ஆக்குகின்றார்! நீங்கள் அனைத்தையும் அறிந்து கொண்டீர்கள், மீண்டும் தந்தையிடமிருந்து
ஆஸ்தி அடைந்து கொண்டிருக்கிறீர்கள். படைப்பவர் மற்றும் படைப்பின் ஞானம் உங்களது புத்தியில் இருக்கிறது.
இந்த ஞானம் நம்மிடத்தில் இல்லாமல் இருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். யாகம், தவம் போன்றவைகள்
செய்வது, சாஸ்திரம் போன்றவைகளை கேட்பது லி இவைகள் சாஸ்திரங்களின் ஞானமாகும். அது பக்தி என்று
கூறப்படுகிறது. அதில் இலட்சியம் எதுவும் கிடையாது. படிப்பில் இலட்சியம் இருக்கும். ஏதாவது ஒரு வகையான
ஞானம் இருக்கும். தூய்மை இல்லாமலிருந்து தூய்மை ஆவதற்கான ஞானம் பதீத பாவன் தந்தை
கொடுத்திருக்கின்றார். சிருஷ்டியின் முதல், இடை, கடையின் ஞானம் தந்தை கொடுத்திருக்கின்றார். இந்த
சிருஷ்டிச் சக்கரம் எவ்வாறு சுழல்கிறது? இதில் அனைவரும் நடிகர்கள் ஆவர். இது அழிவற்ற, ஏற்கெனவே
உருவாக்கப்பட்ட நாடகமாகும். இந்த எல்லையற்ற ஞானம் அவசியம் இருக்க வேண்டும்.
இப்போது நாம் காரிருளிலிருந்து நீங்கி வெளிச்சத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை
குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் இப்போது தேவதைகளாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். ஆதி
சநாதன தேவி தேவதா தர்மத்தைத் தான் இந்து தர்மம் என்று கூறிவிட்டனர் என்பதையும் புரிய வைக்க
வேண்டும். சிறிது சிறிதாக இந்த விசயத்தை புரிந்து கொண்டு விடுவர். குழந்தைகள் எழுந்து நிற்க வேண்டும்.
இதற்கு நிறைய குழந்தைகள் தேவை. டெல்லியில் மாநாடு நடத்த வேண்டியிருக்கும். பரிஸ்தான் என்று
டெல்லி தான் கூறப்படுகிறது. இது தான் யமுனை நதிக்கரையில் இருந்தது, டெல்லி தலைநகரமாகும். பலரது
ஒத்துழைப்பு இருக்கிறது. தேவதைகளின் தலைநகரமாகவும் இது இருந்தது. டெல்லியில் மிகப் பெரிய மாநாடு
நடத்த வேண்டும். ஆனால் மாயை செய்ய விடுவது கிடையாது. பல தடைகளை ஏற்படுத்துகிறது. இன்றைய
நாட்களில் கருத்து வேறுபாடு மற்றும் எண்ணங்களின் வேறுபாடுகள் அதிகம் எற்பட்டு விட்டது அல்லவா!
குழந்தைகள் தங்களுக்குள் ஒன்றாக சேர்ந்து சேவையில் ஈடுபட வேண்டும். அவர்களும் தங்களுக்குள்
சேர்ந்து இருக்கவில்லையெனில் இராஜ்யமே இல்லாமல் போய் விடுகிறது. இரண்டு பிரிவினர்களாக ஆகிவிடும்
போது ஜனாதிபதியையும் நீக்கி விடுகின்றனர். கருத்து வேறுபாடு அதிக நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. பிறகு
பகவானை எதிர்கொள்ளவும் கூட தாமதிப்பது கிடையாது. அதிக நஷ்டம் அடைகின்றனர். கோபம் என்ற பூதம்
வந்து விட்டால் பிறகு கேட்கவே கேட்காதீர்கள், அதனால் தான் பாபா கூறுகின்றார் லி அவரவர்களுக்குத்
தெரியும், பகவானுக்குத் தெரியும். தந்தை குழந்தைகளுக்கு சிருஷ்டியின் முதல், இடை, கடையின் ஞானம்
கூறிக் கொண்டிருக்கின்றார். தாரணை செய்வது, செய்யாதது அவரவர்களது முயற்சியில் இருக்கிறது. யார்
மீதாவது பாபா ஆசீர்வாதம் செய்வார் அல்லது கருணை காட்டுவார் என்பது கிடையாது. இதில் கருணை
(4/4)
05.08.2016
கேட்பதற்கான விசயம் கிடையாது. ஒருவேளை தூண்டுதலின் மூலம் ஞானம் மற்றும் யோகா கற்பிப்பார் எனில்
பிறகு ஏன் நான் இந்த அசுத்த உலகிற்கு வர வேண்டும்? என்று ந்தை கேட்கின்றார். தூண்டுதல், ஆசீர்வாதம்
இது போன்ற வார்த்தைகள் பக்தி மார்க்கத்தினுடையது. இங்கு முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது.
தூண்டுதலுக்கான விசயம் கிடையாது. உங்களுக்கு ஒன்றாக 3 இன்ஜின் கிடைத்திருக்கிறது. அங்கு தந்தை
தனியாகவும், ஆசிரியர் தனியாகவும், கடைசியில் குருவும் இருப்பார்கள். இங்கு இந்த மூவரும் சேர்ந்திருக்கின்றனர்.
தந்தை கூறுகின்றார் லி நான் உங்களை பூஜைக்குரியவர்களாக ஆக்குகிறேன். நீங்கள் மீண்டும் பூஜாரிகளாக
ஆகிவிடுவீர்கள். மிகவும் யுக்தியாக புரிய வைக்க வேண்டும். கேட்டு யாரும் மயக்க மடைந்து விடக் கூடாது.
முதல் முக்கிய விசயம் இரண்டு தந்தைக்கானது. பகவான் தந்தை ஆவார், அவரது பிறப்பை சிவஜெயந்தியாக
இங்கு கொண்டாடுகின்றனர். அவசியம் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆக்கியிருக்க வேண்டும். பாரதம் தான்
சொர்க்கமாக இருந்தது. இப்போது நரகம் விநாசமாவதற்காக மகாபாரத யுத்தம் எதிரிலேயே இருக்கிறது. தந்தை
அவசியம் புது உலகை ஸ்தாபனை செய்யக் கூடியவர் ஆவார். தந்தையின் ஸ்ரீமத்தின் ஆதாரத்தில் நாம்
கூறுகிறோம் லி பாரதத்தை நாங்கள் தூய்மையாக ஆக்கியே தீருவோம். நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய்
தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) தந்தை எவ்வாறு துக்கம் நீக்கி சுகம் கொடுக்கிறாரோ அதே போன்று பாபாவிற்குச் சமமாக
வேண்டும். மிக இனிமையானவர்களாக ஆக வேண்டும். சதா சுப காரியங்கள் செய்து வலது
கரமாக ஆகிவிட வேண்டும்.
2) ஒருபோதும் கருத்து வேறுபாடு உடையவர்களாக ஆக்கி விடக் கூடாது. கருத்து மற்றும்
எண்ணங்களில் வேறுபாடு லி வந்து ஒருவரையொருவர் எதிர்த்துக் கொள்ளக் கூடாது. கோபம்
என்ற பூதத்தை நீக்கி விட வேண்டும்.
வரதானம்: நிமித்தமாக இருக்கின்ற ஆத்மாக்களின் மூலம் கர்மயோகி ஆவதற்கான வரதானத்தை
பலனாக அடையக் கூடிய மாஸ்டர் (வரதாதா) வரமளிக்கும் வள்ளல் ஆகுக !
எந்த ஒரு பொருளையும் உருவமாக (ஸ்தூலமாக) பார்க்கின்ற போது அதை உடனேயே ஏற்றுக் கொண்டு
விடுவர். ஆகையால் நிமித்தமாக இருக்கக் கூடிய சிரேஷ்ட ஆத்மாக்கள் தங்களது சேவை, தியாகம், அன்பு,
அனைவருக்கும் ஒத்துழைப்பு போன்ற நடைமுறை காரியத்தைப் பார்த்து என்ன தூண்டுதல் ஒருவருக்கு
கிடைக்கிறதோ அதுவே வரதானமாக ஆகிவிடும். எப்போது நிமித்தமாக இருக்கும் ஆத்மாக்கள் காரியங்கள்
செய்கின்ற போது இந்த குணங்களை தாரணை செய்திருப்பதை பார்த்து விடுகிறார்களோ அப்போது எளிதாக
கர்மயோகி ஆவதற்கான வரதானம் கிடைத்து விடும். யார் இந்த வரதானத்தை பலனாக அடைந்து
கொண்டிருக்கிறார்களோ அவர்கள் சுயம் மாஸ்டர் வரதாதா ஆகிவிடுவர்.
சுலோகன்: பெயரின் (புகழின்) ஆதாரத்தில் சேவை செய்வது என்றால்
உயர்ந்த பதவி அடைவதில் பெயரை பின்னுக்கு (புறம்) தள்ளி விடுகிறீர்கள்.
(1/4)
06
08.2016 காலை வகுப்பு ஓம்சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! நீங்கள் தங்கள் யோக பலத்தால்இந்த பழைய உலகத்தை மாற்றி
புதிய உலகமாக ஆக்குகிறீர்கள், நீங்கள் இந்த ஆன்மீக சேவைக்காக எழுந்தருளியுள்ளீர்கள்.
கேள்வி: நேர்மையான, உண்மையான புருஷார்த்தி குழந்தைகளின் அடையாளம் என்ன?
பதில்: நேர்மையான குழந்தைகள் ஒருபோதும் தன்னுடைய தவறை மறைக்க மாட்டார்கள். உடனடியாக
பாபாவிற்குக் கூறிவிடுவார்கள் .அவர்கள் மிகவும் அகங்காரம் (நிரகங்காரி) இல்லாதிருப்பார்கள். நான் என்ன
கர்மம் செய்கின்றேனோ என்ற சுலோகம் அவர்கள் புத்தியில் இருக்கும். 2) அவர்கள் மற்றவர்கள் சேவையில்
கலங்கப்படுத்துவதை வர்ணிக்க மாட்டார்கள். அவர்கள் மற்றவர்களின் அவகுணங்களைப் பார்த்து தன்னுடைய
புத்தியை கெடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
பாட்டு:லி பொறுமையாக இரு மனிதா....
ஓம்சாந்தி. இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை பொறுமையாக இருங்கள்
என்கின்றார். லௌகீக தந்தை கூட தைரியம் கொடுக்கின்றார் அல்லவா? யாருக்காவது நோய் வந்து விட்டால்
நாம் ஆறுதல் கூறுகின்றோம். உங்களுடைய நோயின், இந்த துக்கமான நாட்கள் மாறி சுகமான நாட்கள் வரும்.
அது ஸ்தூல தந்தை ஸ்தூலத்தில் தைரியம் தருகின்றார். இப்பொழுது இவர் எல்லையற்ற தந்தை, குழந்தைகளுக்கு
எல்லையற்ற தைரியம் கொடுக்கின்றார். குழந்தைகளே! உங்களுடைய சுகமயமான நாட்கள் வந்து
கொண்டிருக்கின்றன. இன்னும் சிறிது நாட்கள் தான் இருக்கின்றது என்கின்றார். இப்பொழுது நீங்கள் பாபாவின்
மடியில் இருந்து கொண்டு மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். நீங்கள் கூட சிவ சக்திகள் தானே!
சிவபாபாவின் சிவசக்திகள் மீண்டும் வெளிப்பட்டுவிட்டார்கள். இவர்கள் (கோபியர்கள்) கூட ஆத்மாகக்கள்
தான். இவர்கள் அனைவரும் சிவனிடம் இருந்து சக்திகளைப் பெறுகின்றார்கள். நீங்களும் கூட சக்தியை
அடைகின்றீர்கள். இதில் கிருபை, ஆசீர்வாதம் என்ற விஷயமே இல்லை என்று பாபா புரிய வைக்கின்றார்.
நினைவில் இருந்து சக்திகளை எடுத்துக் கொண்டே இருங்கள். நினைவால் தான் பாவ கர்மங்கள் வினாசம்
ஆகும் மற்றும் நீங்கள் சக்திசாலி ஆகிக் கொண்டே இருப்பீர்கள். பழைய உலகத்தைத் திருப்பி புதிய உலகமாக
ஆக்கும் நீங்கள் சிவனின் சக்தி சேனைகள் உங்களிடம் அந்தளவு சர்வ சக்திகள் இருக்கின்றது. யோக
பலத்தால் நீங்கள் இந்த பழைய உலகத்தை மாற்றுகின்றீர்கள் என்பதைப் புரிந்து கொண்டீர்கள். மனிதர்கள் ஒரு
விரலை துôக்கி காட்டி சைகையால் அல்லவான இறைவனை நினையுங்கள் என்கின்றார்கள். இப்பொழுது
குழந்தைகள் நீங்கள் புரிந்து கொண்டீர்கள்லி பாபாவின் நினைவால் கல்லால் ஆன இந்த மலை, அதாவது
பழைய உலகம் மாறி விடுகின்றது. இப்பொழுது நாம் பரிஸ்தான் (சொர்க்கம்) ஸ்தாபனை செய்து கொண்டு
இருக்கின்றோம். பாபா குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார்லி கண்காட்சிகளில் நன்றாக சேவை செய்யுங்கள்,
முயற்சி செய்யுங்கள், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அமர்ந்து கற்றுக் கொள்ளுங்கள். மிகவும் எளிதான
விஷயம். குழந்தைகளுக்கு ஒவ்வொரு விதமான கல்வி கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொருவருக்கும்
கர்ம கணக்கு உள்ளது. கன்னியாக்களின் கணக்கு நன்றாக உள்ளது. யாருக்கு திருமணம் ஆகியுள்ளதோ
அவர்கள் கூறுகின்றார்கள்லி இந்த நேரத்தில் நாங்கள் கன்னியர்களாக இருந்திருந்தால் இந்த வலைகளில்
இருந்தெல்லாம் விடுபட்டு இருப்போம், சுதந்திரப் பறவைகளாக இருப்போம் என்கின்றார்கள். கன்னியர்கள்
என்றாலே சுதந்திரப் பறவைகள். ஆனால் தீயவர்களின் தொடர்பால் நஷ்டம் ஏற்பட்டு விடுகின்றது. பெண்களுக்கு
கணவன், குழந்தைகள் என்று எவ்வளவு பந்தன வலைகள் உள்ளன, இதில் பழக்கலிவழக்கங்கள் என்ற
வலைகள் எவ்வளவு உள்ளன. கன்னியர்களுக்கு எந்த பந்தனமும் இல்லை. இப்பொழுது பம்பாயில் கூட
கன்யர்கள் தயார் ஆகின்றார்கள். நாங்கள் எங்கள் பகுதியை நாங்களே கவனித்துக் கொள்கின்றோம் என்று
கூறுகின்றார்கள். அனைவரும் தன்னுடைய தொகுதிக்காக எத்தனை முயற்சி செய்கின்றார்கள். எங்களுடையது
குஜராத், எங்களுடையது உ,பி. என்று கூறுகின்றார்கள். நீங்கள் இப்பொழுது தன்னுடைய சுயராஜ்யத்தை
அடைந்து கொண்டு இருக்கின்றீர்கள், இதில் நான் இந்த தொகுதியைச் சேர்ந்தவன், நான் இந்த தொகுதியைச்
சேர்ந்தவன் என்பதும் இருக்கக் கூடாது. நீங்கள் யாரிடமும் பொறாமை படக்கூடாது. மற்றவர்களின் அவ
குணங்களைப் பார்த்து உங்கள் புத்தியை கெடுத்துக் கொள்ளக் கூடாது. நான் எத்தனை ஆத்மாக்களுக்கு,
சகோதரலிசகோதரிகளுக்கு சுகமான பாதை காட்டியுள்ளேன் என்று தன்னைத் தான் பாருங்கள். பாப்தாதாவின்
மனதில் அமரவில்லை என்றால் சிம்மாசனத்தில் அமர முடியாது. சில குழந்தைகளுக்கு சேவையில் நல்ல
ஆர்வம் உள்ளது என்று பாப்தாதா அறிவார். கொஞ்சம் கூட தேக அபிமானம் இருக்கக் கூடாது. சிலர் மிகவும்
அகங்காரத்துடனிருக்கின்றார்கள். எப்பொழுதும் மற்றவர்களுடைய அவகுணங்களையே பார்க்கின்றார்கள். இவர்கள்
இப்படிச் செய்கின்றார்கள், இப்படிப் பட்டவர்கள் என்று கூறாமல் நீங்கள் உங்கள் சேவையை செய்யுங்கள்.
பிராமண குழந்தைகளின் கடமை, சேவையில் ஈடுபடுவது. பாபா உட்கார்ந்து இருக்கின்றார், பாபாவிடம் அனைத்து
(2/4)
06.08.2016
செய்திகளும் வருகின்றன. ஒவ்வொருவரின் நிலயையும் பாபா அறிவார். சேவை செய்வதைப் பார்த்து மகிமையும்
கூட செய்கின்றார். குழந்தைகளுக்கு சேவையில் ஆர்வம் வர வேண்டும். ஒவ்வொருவருக்கும் இந்த ஆன்மீக
சேவையால்லி நன்மை செய்ய வேண்டும். உலகியல் தொழில் ஜென்மலிஜென்மமாக செய்து விட்டீர்கள். இந்தத்
தொழிலை அபூர்வகமாக யாராவது தான் செய்ய முடியம். பாபா சேவையின் விதியை மிகவும் சுலபமான
முறையில் புரிய வைக்கின்றார். ஒருபோதும் மற்றவர்களை நிந்தனை செய்யக் கூடாது. அவ்வாறு நிறைய பேர்
செய்கின்றார்கள். நல்லலிநல்ல மகாரதிகளைக் கூட மாயா மூக்கைப் பிடிக்கின்றது. பாபாவை நினைக்கவில்லை
என்றால் மாயா மூக்கைப் பிடித்து விடும். பாபா கூட கூறுகின்றார் அல்லவாலி நான் சாதாரண உடலில்
வந்ததைப் பார்த்து என்னை யாரும் அறிந்து கொள்வதில்லை. இப்படிலிஇப்படி செய்ய வேண்டும் என்று
பாபாவுக்கே வழி கூறுகின்றார்கள். நிலமை அப்படி உள்ளது, பாபா சிறிது மாற்றி செய்தாலும் விரோதி ஆகி
விடுகின்றார்கள். பாபாவுக்கே தன்னுடைய வழியை எழுதி அனுப்பு கின்றார்கள். பழமொழி உள்ளது அல்லவாலி
எலிகள் சிறைக் கூண்டில் (எலிகளுக்கு ஒரு மஞ்சள் துண்டு கிடைத்து விட்டால் அந்த மளிகைக் கடைக்கே
தானே முதலாளி என்று நினைக்குமாம்) நாம் சேவையில் களங்கம் செய்து கொண்டு இருக்கின்றோம் என்று
புரிந்து கொள்வதில்லை. தவறுகள் என்பதை அநேகம் பேர் செய்கின்றனர். சில நேரம் ஸ்திதி மேலும்லிகீழும்
ஆகிக் கொண்டு தான் வருகின்றது. ஒவ்வொரு வரும் தன்டைய நிலையைப் பாருங்கள். நாணயமான குழந்தைகள்
தன்னுடைய நிலையை உடனே கூறுகின்றார்கள். சிலர் தன்னுடைய தவறுகளை மறைத்து விடுகின்றார்கள்,
இதில் அகங்காரம் இல்லாத நிலை வேண்டும். சேவையை அதிகரிப்பதில் ஈடுபட வேண்டும். நாம் என்ன
கர்மம் செய்கின்றோமோ அதைப் பார்த்து மற்றவர்களும் செய்வார்கள்லி இதை சதா நாம் கவனம் வைக்க
வேண்டும். நான் யாரையாவது நிந்தனை செய்தால் மற்றவர்களும் செய்வார்கள். இது நிறைய பேருக்கு
தெரிவதில்லை. நீங்கள் உங்கள் சேவையில் ஈடுபடுங்கள் என்று பாபா புரிய வைக்கின்றார். இல்லை என்றால்
வருத்தப்படுவீர்கள். எதிரிகள் கூட அதிகம் ஆகின்றார்கள்.
நீங்கள் இப்பொழுது சூத்திரனிலிருந்து மாறி பிரம்மா கமலவாய் மூலமாக வந்த பிராமணனாக
ஆகியுள்ளீர்கள். யாரிடம் ஐந்து விகாரங்கள் இருக்கின்றதோ, அவர்கள் அசுர சம்பிரதாயம், நீங்கள் இப்பொழுது
தெய்வீக சம்பரதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆகிவிட்டீர்கள். நீங்கள் தேவதை ஆவதற்காக விகாரங்களின் மீது
வெற்றி அடைந்து கொண்டிருக்கின்றீர்கள். இங்கு தேவதைகள் இல்லை. சத்திய யுகத்தில் தான் தேவதைகள்
இருப்பார்கள். நீங்கள் இப்பொழுது தெய்வீக சம்பிரதாயத்தினராக ஆகிக் கொண்டு இருக்கின்றீர்கள்.
குழந்தைகளான உங்களுக்கு இப்பொழுது புரிய வைப்பதற்காக வாய்ப்பு கிடைத்துள்ளது. கண்காட்சிகளில்
புரிய வைய்யுங்கள். கண்காட்சிகளில், விழாவில் ஒவ்வொருவரின் நாடி தெரிந்து விடுகின்றது. ப்ரொஜக்டரில்
யாருக்கும் புரிய வைக்க முடியாது. நேரில் புரிய வைத்தால் தான் புரிய வைக்க முடியும். கண்காட்சி வைப்பது
என்பது நல்ல விஷயம், அதில் எழுதக் கூட முடியும். கண்காட்சியில் சேவை செய்ய ஆர்வம் இருக்க
வேண்டும். தினந்தோறும் படித்தால் தான் போதை ஏறும். பந்தனத்தில் இருக்கக் கூடியவர்கள் என்றால்,
வீட்டில் இருந்து கொண்டே பாபாவை நினைத்தீர்களானால் பாவகர்மம் வினாசம் ஆகும். வீட்டில் உட்கார்ந்து
கூட நினைவு செய்வது நல்லது. ஆனால் நினைவு செய்வது என்பது லி குழந்தைகளுக்காக மிகவும் கடினமான
விஷயம் ஆகி விட்டது. பாபாவிடமிருந்து 21 ஜென்மத்திற்கு ஆஸ்தி கிடைக்கின்றது ஆனால் அவரை
நினைப்பதில்லை. நல்லலிநல்ல சொற்பொழிவு செய்யக் கூடிய மகாரதிகள் கூட பாபாவை நினைப்பதில்லை.
அதிகாலையில் எழுந்திருப்பதில்லை, எழுந்தாலும் உட்கார்ந்து துôங்கி விழுகின்றார்கள். நினைப்பதற்காக காலை
நேரம் தான் மிகவும் நல்லது. பக்தி மார்க்கத்தில் கூட அதிகாலை எழுந்து நினைக்கின்றார்கள். இருப்பினும்
அவர்களுக்கு அது இறங்கும் கலை ஆகும். இங்கே என்னவோ ஏறும் விஷயமாக உள்ளது. மாயா எத்தனை
தடைகள் போடுகின்றன. அதிகாலையில் எழுந்து பாபாவை நினைக்கவில்லை என்றால், தாரனை எப்படி
ஏற்படும், பாவ கர்மங்கள் எப்படி அழியும். மற்றபடி முரளி படிப்பதுலி என்பது சிறிய குழந்தை கூட கற்றுக்
கொண்டு புரிய வைக்க முடியும். இந்த படிப்பு பெரியவர்களுக்கானது. இது எத்தனை பெரிய பல்கலைக்கழகம்.
நமக்கு கற்பிக்கக் கூடியவர் யார்? இந்த போதை குழந்தைகளுக்கு இருப்பதில்லை. மாயா யாரையாவது ஏமாற்றி
விட்டது என்றால், நாம் அதை பார்க்காமல் சேவையில் ஈடுபட வேண்டும். பாபாவிடம் அனைத்து செய்திகளும்
வந்து கொண்டே தான் இருக்கின்றது. சிலர் தேக அபிமானத்தில் வந்து இவர்கள் இப்படி செய்கின்றார்கள்,
அவர்கள் இப்படி செய்கின்றார்கள் என்று மற்றவர்களை நிந்தனை செய்து கொண்டு நேரத்தை வீணாக்குகின்றார்கள்.
உங்களுக்கு இரவு, பகல் ஈடுபாடு இருக்க வேண்டும். உங்களுடைய தொழிலே இது தான். இது சிவபாபா, இது
பிரம்மா பாபா என்று தினந்தோறும் கண்காட்சியில் புரிய வைய்யுங்கள். கல்பத்திற்கு முன்னால் கூட பிரஜா பிதா
பிரம்மாவின் புகழ் பாடப்பட்டுள்ளது. பிரஜாபிதா பிரம்மா மூலமாகத் தான் மனித சிருஷ்டி படைக்கபடுகின்றது.
மனிதர்களே இல்லை என்று கூற முடியாது, மனித சிருஷ்டியை படைக்கின்றார்கள் என்றால், முள்ளை மலராக
ஆக்குகின்றார். பிரம்மா மூலமாக சிருஷ்டியை படைக்கின்றார் என்றால், மேலே சிருஷ்டியைப் படைப்பாரா?
(3/4)
06.08.2016
இங்கு தான் பிரம்மா இருக்க வேண்டும் அல்லவா? எவ்வளவு தெளிவாகப் புரிய வைக்கின்றார்.
பாபா கூறுகின்றார்லி நான் அநேக ஜென்மங்களின் கடைசி ஜென்மத்தில் பிரவேசம் செய்து மனிதனை
தேவதை ஆக்குகின்றேன். தொழில் ஆகிய காரியங்களிலிருந்து சிறிது நேரம் ஒதுக்கி இதில் ஈடுபட வேண்டும்.
நேரம் கிடைக்கவில்லை என்று கூறக் கூடாது. நோய் வந்து விட்டால் பின்பு எனக்கு நேரம் இல்லை என்று
சொல்ல முடியுமா? முயற்சி செய்ய வேண்டும். பிரேரணையால் ஒன்றும் செய்ய முடியாது. பகவானுக்கே
பிரேரணை மூலமாக காரியம் செய்ய முடியாது எனும் போது மற்றவர்களால் எப்படி முடியும்? பகவானால்
என்ன செய்ய முடியாது என்று நினைக்கின்றார்கள். இறந்தவர்களையும் உயிர்பிக்க முடியும் என்று
நினைக்கின்றார்கள். அட! பகவானுக்கு நீங்கள் கூறுகின்றீர்கள் லி ஹே! பதீதலிபாவனரே, வந்து எங்களை பதீத
நிலையிலிருந்து பாவனம் ஆக்குங்கள், மற்றபடி வேறு ஒன்றும் தேவை இல்லை என்று அழைக்கின்றீர்கள்.
நீங்கள் வந்து இறந்தவர்களை உயிர்ப்பியுங்கள் என்றா அழைக்கின்றீர்கள்? அவர் இருப்பதே பதீதலிபாவனராக
பாரதம் பாவனமாக இருந்தது. பாபா கூறுகின்றார்லி நான் கல்பலிகல்பம் வந்து உங்களை பாவனம் ஆக்குகின்றேன்.
மாயா வந்து மீண்டும் பதீதமாக ஆக்குகின்றது. இப்பொழுது நான் மீண்டும் வந்து பாவனம் ஆக்குகின்றேன்.
எவ்வளவு சகஜமான விஷயங்களைக் கூறுகின்றார். யுனானி மருத்துவர்கள் பெரியலிபெரிய நோயைக் கூட
வேர்லிஇலைகள் மூலமாக சரி செய்து விடுகின்றார், பின்பு அவர்கள் மகிமை கூட ஏற்படுகின்றது. யாருக்காவது
குழந்தையோ அல்லது செல்வமோ கிடைத்தால் குருவின் கருணையால் கிடைத்தது என்கின்றார்கள். நல்லது
குழந்தை இறந்து விட்டால் தலைவிதி என்கின்றார்கள். இந்த அனைத்து விஷயங்களும் குழந்தைகளாகிய
நீங்கள் அறிவீர்கள். சன்னியாசிகள் துôய்மையாக இருக்கின்றார்கள் என்றால், அவர்களுக்கு மதிப்பு ஏற்படுகின்றது.
ஆனால் அவர்கள் ஹடயோகிகள், அவர்களால் இராஜயோகம் கற்பிக்க முடியாது. அவர்கள் சன்யாசிகள், நாம்
இல்லறத்தைச் சேர்ந்தவர்கள், பிறகு நாம் தன்னை பின்பற்றுபவர்கள் என்று எப்படி கூற முடியும்? பாபா
கூறுகின்றார்லி குழந்தைகள் முழுமையாகப் பின்பற்ற வேண்டும் லி மன்மனாபவ! என்னை நினைத்தீர்கள்
என்றால் நீங்கள் துôய்மை அடைந்து விடுவீர்கள் மற்றும் என்னுடன் செல்லலாம். நான் முழு துôய்மையாக
இருக்கின்றேன். மனிதர்கள் பதீதர்களாக ஆக்குகின்றார்கள், பாபா வந்து பாவனம் ஆக்குகின்றார். அவர்
துôய்மை, சாந்தி, சுகக் கடலாக இருக்கின்றார். உங்களையும் அவ்வாறு ஆக்கிக் கொண்டு இருக்கின்றார். நீங்கள்
யோக பலத்தால் ஆத்மாவை துôய்மை ஆக்குகின்றீர்கள். நமக்கு முதல் தரமான உடல் கிடைக்கும் என்று
நீங்கள் அறிவீர்கள். மனிதர்களுக்கு நடைமுறையில் தேவதை ஆக்க வேண்டும். தேவதைகளைப் போல்
ஆடைகளை அணிந்து கொண்டால் போதாது, முழுமையாக தன் மீது கவனம் செலுத்த வேண்டும்.
தேகலிஅபிமானம் வரக் கூடாது. பாபா நாங்கள் உங்களிடம் ஆஸ்தியை அடைந்தே தான் தீருவோம். நீங்கள்
கூட நாங்கள் பாரதத்தை சிரேஷ்டாச்சாரியாக ஆக்கியே தீருவோம் என்று கூறுகின்றீர்கள். நம்பிக்கை உள்ளவர்கள்
தானே கூறுவார்கள் அல்லவா? சிலர் இவ்வளவு குறைந்த காலத்தில் எப்படி செய்ய முடியும் என்று கேட்கின்றார்கள்.
உண்மையில் ஒருபோதும் இவ்வாறு சந்தேகம் வரக் கூடாது. சந்தேகம் வந்தால் சேவையில் பின்தங்கி
விடுவார்கள். நேரம் மிகவும் குறைவாக உள்ளது. எவ்வளவு முடிகின்றதோ நன்றாக புருஷார்த்தம் செய்ய
வேண்டும். சிறிது யுத்தம் மற்றும் எங்கேயாவது போராட்டம் நடந்தால் பின்பு பாருங்கள் எவ்வளவு முயற்சி
செய்ய வேண்டியுள்ளது. புரிந்து கொள்வீர்கள் இல்லையா? நாம் நினைவில் முழுமையாக இருக்கவில்லை
என்றால், அந்த நேரம் கூட்டத்தில் ஒன்றும் செய்ய முடியாது. அந்த நேரத்தில் மிகவும் ஆபத்துகள் வரும்
ஆகையால் பாபா கூறுகின்றார் முடிந்தளவு விடுபட்டதை நிரப்புங்கள். ஏனென்றால் இது ஆத்மாக்களின்
பந்தயம் ஆகும். பாபா எவ்வளவு நல்லவிதமாகப் புரிய வைக்கின்றார். அடையாளக்குறி வரை செல்வது
என்றால், பாபாவின் வீட்டிற்கு சென்று பின்பு புதிய உலகத்திற்கு வர வேண்டும். மிகவும் சிறந்த பந்தயம் இது.
பாபா கூறுகின்றார்லி என்னை தொட்டுவிட்டு அதாவது பரந்தாமத்திற்குச் சென்று பின்பு வர வேண்டும். யோகத்தில்
யார் மூழ்கி இருக்கின்றார்களோ அவர்கள் முதன்லிமுதலில் வருவார்கள். முக்திதாமத்திற்குச் செல்ல வேண்டும்
என்று விரும்புகின்றார்கள். அதனால் பாபா கூறுகின்றார்லி என்னை நினைத்தால் சென்று விடலாம். முக்திதாமம்
அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் மீண்டும் நடிப்பதற்காக வருவீர்கள். மோட்சம் யாருக்கும் கிடைக்காது.
ஈஸ்வரிய பூளோகலிசரித்திரத்தில் மோட்சம் என்ற வார்த்தையே இல்லை. ஒரு வினாடியில் உங்களுக்கு ஜீவன்
முக்தி கிடைக்கின்றது, மற்ற அனைவரும் முக்திக்குப் போய் விடுவார்கள். இராவண இராஜ்யத்திலிருந்து முக்தி
அவசியம் கிடைக்க வேண்டும், யார் புருஷார்த்தம் செய்கின்றார்களோ அவர்கள் உயர்ந்த பதவி அடைவார்கள்.
குழந்தைகள் மிகவும் இனிமையாக இருக்க வேண்டும். சுபாவம் மிகவும் இனிமையாக இருக்க வேண்டும்.
கோபம் கொள்ளக் கூடாது, துர்வாச முனிவரின் பெயர் தெரியுமல்லவா? இந்த இராஜ ரிμகளிலிலும் சிலர்
இப்படி உள்ளார்கள். சதா தன்னுடைய மனதில் கையை வைத்து பார்க்க வேண்டும் நான் என்ன செய்கின்றேன்!
இந்த நிலையில் இருந்தால், எனக்கு என்ன பதவி கிடைக்கும்! சேவை செய்யவில்லை என்றால், தனக்குச்
சமம் ஆக்கவில்லை என்றால், என்ன பதவி கிடைக்கும். சிறிது கிடைத்தவுடனேயே மகிழ்ச்சி அடையக்
06.08.2016
(4/4)
கூடாது. பாபா கூறுகின்றார்லி குழந்தைகளுக்கு முழு இராஜ்யத்தைக் கொடுப்பதற்கு நான் வந்துள்ளேன் என்கின்றார்.
அதனால் நம்பிக்கை வைத்து செய்து காட்ட வேண்டும். சொல்வதால் மட்டும் ஒன்றும் செய்ய முடியாது. பாபா
சேவையில் எலும்பு தேய சேவை செய்ய வேண்டும். செய்யவும் செய்கின்றார்கள். ஆனால் சிலநேரம் தேக
அபிமானம் வந்தவுடன் போதையில் வந்து விழுந்து விடுகின்றார்கள். மாயா கூட பயில்வான் குறைந்தவனல்ல.
பாபாவின் ஸ்ரீமத்படி நடக்கவில்லை என்றால் மாயா யுத்தம் செய்கின்றது, அதனால் பாபாவிடம் இருந்து
விடுதலைப் பத்திரம் கொடுக்கச் செய்து விடுகின்றது. பாபா சுகதாமத்திற்கு எஜமானன் ஆக்குகின்றார் என்றால்,
தன் மீது இரக்கப்பட வேண்டும். பாபாவின் வழி மிகவும் எளிதாக உள்ளது. மாயாவின் புயல் மிகவும் வரும்,
ஆனால் மஹாவீர் ஆக வேண்டும். நல்லது!
இனிமையிலும் இனிமையான செல்லமான குழந்தைகளுக்கு தாய் தந்தையின்
அன்பு வணக்கங்கள், மேலும் காலை வணக்கம்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீக தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:லி
1) சேவையில் ஆர்வம் வைத்து தனக்கும் மற்றும் மற்றவர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும்.
மற்றவர்கள் சேவையில் களங்கம் செய்தால் வர்ணனை செய்யக் கூடாது. மற்றவர்களின்
சிந்தனையில் தன்னுடைய நேரத்தை வீணாக்கக் கூடாது.
2) நாணயமாக மற்றும் அகங்காரமற்றவராகி சேவையில் முன்னேற வேண்டும். அதிகாலையில்
எழுந்து பாபாவை மிகவும் அன்போடு நினைவவு செய்ய வேண்டும். சொல்வதும்,செய்வதும்
சமமாக இருக்க வேண்டும்.
வரதானம்:லி ஞானம்லியோகத்தின் சக்திசாலி கிரணங்கள் மூலமாக பழைய சம்ஸ்காரம் என்ற
பூச்சிகளை எரிக்கக் கூடியமாஸ்டர் ஞான சூரியன் ஆகுக.
எப்படிப்பட்ட பதீதமான சூழ்நிலையையும் மாற்றுவதற்காகவும்,அதாவது பழைய சம்ஸ்காரம் என்ற பூச்சிகளை
எரிப்பதற்காகவும் நான் மாஸ்டர் ஞானசூரியன் என்ற நினைவு இருக்க வேண்டும். சூரியனின் கடமை ஒளியைக்
கொடுப்பது மற்றும் பூச்சிகளை அழிப்பதாகும். அதனால் ஞானலியோக சக்தியின் மூலமாக அதாவது சிரேஷ்ட
செயல் மூலமாக இந்தக் கடமையை செய்து கொண்டிருங்கள். சக்தி குறைவாக இருந்தால் ஞானம் ஒளியை
மட்டும் கொடுக்கும். ஆனால் பழைய சம்ஸ்காரம் என்ற பூச்சிகளை அழிக்க முடியாது ஆகையால் யோக
தபஸ்யா மூலமாக சக்திசாலி ஆகுங்கள்.
சுலேகன்: சுபபாவனை, சுபஆசை என்ற சிரேஷ்ட எண்ணம்
தான் சேமிப்புக் கணக்கை அதிகரிக்கின்றது.
07
08.2016 காலை முரளி ஓம் சாந்தி ''அவ்யக்த பாப்தாதா''
ரிவைஸ் 01.11.1981 மதுபன்
'' சேவையின் வெற்றிக்கான சாவி ''
இன்று பாப்தாதா குழந்தைகளை எந்த ரூபத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறார்? இன்று உலக சேவாதாரி
தந்தை தன்னுடைய சேவாதாரி குழந்தைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார் அதாவது தன்னுடைய இறை
சேவாதாரி குழந்தைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார். யார் இறை சேவாதாரியாக இருக்கிறாரோ அவருக்கு
எப்பொழுதும் இயல்பாகவே தந்தை மற்றும் சேவை இரண்டும் சேர்ந்தே நினைவில் இருக்கிறது. பொதுவாகவே
இன்றைய உலகத்தில் கூட யாராவது ஒருவருடைய காரியத்தை செய்யவில்லை மற்றும் உதவி செய்பவராக
ஆகவில்லை என்றால் பகவானின் பெயரால் இந்தக் காரியம் செய்யுங்கள் என்று கூறுவார்கள். ஏனென்றால்
பகவானின் பெயரால் உதவி கிடைத்து விடும் மற்றும் வெற்றியும் கிடைத்து விடும் என்று நினைக்கிறார்கள்.
ஏதாவது சம்பவமற்ற காரியம் மற்றம் நம்பிக்கையிழந்த விஷயம் இருக்கிறது என்றாலும் 'பகவானின் பெயரை
கூறுங்கள் காரியம் நடந்து விடும்' என்று கூறுகிறார்கள். இதன் மூலம் என்ன நிரூபணம் ஆகிறது? சம்பவமற்றது
சம்பவமாக அல்லது நம்பிக்கையிழந்த நிலையிலிருந்து நம்பிக்கைக்குரிய காரியத்தை தந்தை வந்து செய்தார்.
அதனால் தான் இன்று வரையிலும் இந்த பழமொழி நடைமுறையில் இருக்கிறது. ஆனால் நீங்கள் அனைவருமோ
இறைவனின் சேவாதாரிகள் தான். நீங்கள் பகவானின் பெயரை மட்டும் சொல்பவர்கள் அல்ல ஆனால் பகவானின்
துணைவர்களாகி உயர்ந்த காரியம் செய்பவர்கள். அப்படி இறை சேவாதாரி குழந்தைகளின் ஒவ்வொரு
காரியத்திலும் வெற்றி நிச்சயிக்கப்பட்டது. இறை சேவாதாரிகள் செய்யும் காரியத்தில் எந்த அசம்பவ விஷயம்
கிடையாது. அனைத்தும் சம்பவம் மற்றும் சுலபமானது. இறை சேவாதாரி குழந்தைகளுக்கு உலக மாற்றத்தின்
காரியம் கடினமாக அனுபவம் ஆகிறதா? ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது என்று அனுபவம் ஆகிறது தான்
இல்லையா? எப்பொழுதுமே இதையோ அனேக தடவைகள் செய்திருக்கிறோம் என்ற இந்த அனுபவம் தான்
செய்கிறீர்கள். எதுவும் புதிய விஷயமாக அனுபவம் ஆவதில்லை. ஆகுமா, ஆகாதா, எப்படி ஆகும் என்ற
இந்த கேள்வியே எழுவதில்லை. ஏனென்றால் தந்தையின் துணைவர்களாக இருக்கிறீர்கள். எப்பொழுது இன்று
வரையிலும் பகவானின் பெயரை எடுப்பதினால் மட்டும் காரியம் நடந்தேறி விடுகிறது என்றால் உடன் காரியம்
செய்யும் குழந்தைகளின் ஒவ்வொரு காரியத்திலும் வெற்றி நிச்சயிக்கப்பட்டது. எனவே பாப்தாதா குழந்தைகளை
எப்பொழுதும் வெற்றி அடைபவர்கள் என்று கூறுகிறார். வெற்றி நட்சத்திரங்கள் தன்னுடைய வெற்றி மூலமாக
உலகை ஒளிமயமாக ஆக்குபவர்கள். தன்னை எப்பொழுதுமே அந்த மாதிரி வெற்றி அடைபவர் என்று
அனுபவம் செய்கிறீர்களா? ஒருவேளை நடைமுறையில் எப்பொழுதாவது வெற்றி கிடைக்காமல் அல்லது கடினம்
அனுபவம் ஆகிறது என்றால் அதற்கான காரணம் சேவாதாரியாக மட்டும் ஆகிறீர்கள். இறைவனின் சேவாதாரியாக
ஆவதில்லை. இறைவனை சேவையிலிருந்து பிரித்து விடுகிறீர்கள். எனவே தனியாக இருக்கும் காரணத்தினால்
சுலபமானது கூட கடினம் ஆகிவிடுகிறது மற்றும் வெற்றியின் லட்சியம் மிக தூரமாக தென்படுகிறது. ஆனால்
பெயரே இறைவனின் சேவாதாரிகள் என்றால் இணைந்திருப்பவரை தனியாக பிரிக்காதீர்கள். ஆனால் தனியாக
பிரித்து விடுகிறீர்கள். எப்பொழுதும் இந்த பெயர் நினைவிருக்கிறது என்றால் சேவையில் இயல்பாகவே இறை
மந்திரம் நிரம்பியதாக இருக்கும். சேவைக் களத்தில் தனக்காக மற்றும் சேவைக்காக விதவிதமான தடைகள்
என்ன வருகின்றனவோ அதற்கான காரணமும் கூட தன்னை சேவாதாரி என்று மட்டும் நினைக்கிறீர்கள்
என்பது தான். ஆனால் ஈஸ்வரிய சேவாதாரி, சேவை மட்டும் இல்லை ஆனால் இறைவனின் சேவை என்ற
இந்த நினைவு மூலம் நினைவு மற்றும் சேவை இயல்பாகவே இணைந்ததாக ஆகிவிடுகிறது. நினைவு மற்றும்
சேவை எப்பொழுதும் சமநிலையில் இருக்கிறது. எங்கு சமநிலை இருக்கிறதோ அங்கு சுயம் அவரே எப்பொழுதும்
ஆனந்தம் நிறைந்த மற்றும் மற்றவர்களுக்காக எப்பொழுதும் பிலஸ்ஸிங்க்ஸ் அதாவது கருணை நிறைந்த
பார்வை சுலபமாகவே இருக்கிறது. இவர் மேல் கருணை செய்யுங்கள் என்று யோசிப்பதற்கான அவசியமே
இருக்காது. கருணை நிறைந்தவராகத் தான் இருக்கிறார். எப்பொழுதும் செய்யும் வேலையே தான் கிருபை
செய்வது. அந்த மாதிரி அனாதி சம்ஸ்காரம் சொரூபமாக ஆகியிருக்கிறதா? எது விசேஷ சம்ஸ்காரமாக
இருக்குமோ அது இயல்பாகவே காரியம் செய்து கொண்டே இருக்கும். யோசித்து செய்ய மாட்டார்கள் ஆனால்
இயல்பாகவே நடந்து விடும். என்னுடைய சம்ஸ்காரம் அந்த மாதிரியானது எனவே அப்படி நடந்தே விட்டது
என்று அடிக்கடி கூறுகிறீர்கள். என்னுடைய நோக்கம் அல்ல, என்னுடைய லட்சியம் அல்ல ஆனால் ஆகிவிட்டது.
ஏன்? சம்ஸ்காரம். அந்த மாதிரி கூறுகிறீர்கள் தான் இல்லையா. நான் கோபப்படவில்லை ஆனால் நான் பேசும்
சம்ஸ்காரமே அந்த மாதிரி என்று அநேகர்கள் கூறுகிறார்கள். இதன் மூலம் என்ன நிரூபணம் ஆகிறது? அற்ப
காலத்து சம்ஸ்காரம் கூட இயல்பாகவே பேச்சை மற்றும் காரியத்தை செய்வித்துக் கொண்டே இருக்கிறது.
அப்படியானால் அனாதி ஒரிஜினல் சம்ஸ்காரம் உயர்ந்த ஆத்மாக்கள் உங்களுடையதாக என்ன இருந்தது?
(2/4)
07.08.2016
எப்பொழுதும் சம்பன்னமான மற்றும் வெற்றி அடைந்தவர். எப்பொழுதும் வரம் அளிப்பவர் மற்றும் பெரும்
வள்ளல். அப்படி இந்த சம்ஸ்காரம் நினைவில் இருப்பதினால் இயல்பாகவே அனைவருக்காகவும் கருணை
பார்வை இருக்கிறது.
அற்ப காலத்து சம்ஸ்காரங்களை அனாதி சம்ஸ்காரங்களினால் பரிவர்த்தனை செய்யுங்கள். அப்படி
வரும் விதவிதமான தடைகள் அனாதி சம்ஸ்காரம் வெளிப்படுவதினால் சுலபமாகவே முடிவடைந்து விடும்.
பாப்தாதாவிற்கு இதுவரையிலும் கூட சுயமாற்றம் மற்றும் உலகமாற்றத்தின் சேவையில் குழந்தைகள் செய்யும்
கடின உழைப்பை பார்த்து சகித்துக் கொள்ள முடிவதில்லை. இறைவனின் சேவாதாரிகளாக இருந்தும் கடின
உழைப்பா? எப்படி பெயரைக் கூறியே காரியத்தை செய்விக்கிறார்கள் என்றால் நீங்களோ அதிகாரி ஆவீர்கள்.
உங்களுக்கு கடின உழைப்பு எப்படி இருக்க முடியும்? பிறகு சின்னஞ்சிறு தவறு செய்கிறீர்கள், என்ன தவறு
செய்கிறீர்கள் என்று தெரிந்திருக்கிறீர்களா? நன்றாகவே தெரிந்தும் இருக்கிறீர்கள் பிறகு ஏன் செய்கிறீர்கள்?
கட்டாயத்தில் வந்து விடுகிறீர்கள். பிறகு 'என்னுடைய சம்ஸ்காரம், என்னுடைய சுபாவம்' என்று சிறிய தவறு
செய்கிறீர்கள். அனாதி காலத்திற்கு பதிலாக மத்திய காலம் என்று நினைத்து விடுகிறீர்கள். மத்திய காலத்தின்
சம்ஸ்காரம் மற்றும் சுபாவத்தை என்னுடைய சம்ஸ்காரம், என்னுடைய சுபாவம் என்று புரிந்து கொள்ளும்
இந்த தவறை செய்கிறீர்கள். இது இராவணனின் சுபாவம், உங்களுடையது அல்ல. மாற்றான் பொருளை
தன்னுடையதாக்கும் தவறை செய்கிறீர்கள். என்னுடையது என்று கூறுவதினால் மற்றும் புரிந்து கொள்வதினால்
என்னுடையது என்பதில் வளைந்து கொடுப்பது இயல்பாகவே வந்து விடுகிறது. எனவே விட விரும்பினாலும்
விட முடிவதில்லை. தவறு என்ன என்று புரிந்ததா.
நான் இறைவனின் சேவாதாரி என்பதை எப்பொழுதும் நினைவில் வையுங்கள். நான் செய்தேன்
என்றல்லாமல் இறைவன் என் மூலமாக செய்வித்தார். இந்த ஒரு நினைவு மூலம் சுலபமாகவே அனைத்து
தடைகளின் விதையை நிரந்தரமாக அழித்து விடுங்கள். அனைத்து விதமான தடைகளின் விதை இரண்டு
வார்த்தைகளில் இருக்கிறது. அது என்ன இரண்டு வார்த்தைகள், அந்த வார்த்தைகளிலேயே தடை ரூபம்
வருகிறது. தடை வருவதற்கான வாசலை தெரிந்திருக்கிறீர்களா? அப்படி எல்லோருக்கும் தெரிந்த அந்த
இரண்டு வார்த்தைகள் எவை? விஸ்தாரமோ அதிகமாக இருக்கிறது ஆனால் இரண்டு வார்த்தைகளில் சாரம்
வந்து விடுகிறது. 1) அபிமானம் மற்றும் 2) அவமானம். சேவையின் சேத்திரத்தில் விசேஷமாக தடை இந்த
இரண்டு பாதைகளிலிருந்து வருகிறது. ஒன்றோ 'நான் செய்தேன்', இதில் அபிமானம் மற்றும் என்னையோ
ஏன் முன்னுக்கு வைக்கவில்லை, எனக்கு ஏன் இது கூறப்பட்டது, இது எனக்கு அவமானம் கொடுக்கப்பட்டது
இதே அபிமானம் மற்றும் அவமானத்தின் பாவனை விதவிதமான தடைகளின் ரூபத்தில் வந்து விடுகிறது.
எப்பொழுது நீங்கள் இருப்பதே இறைவனின் சேவாதாரிகள் என்றால், செய்பவர், செய்விப்பவர் தந்தை என்றிருக்கும்
போது அபிமானம் எங்கிருந்து வந்தது? மேலும் அவமானம் எங்கிருந்து ஏற்பட்டது. அப்படி மிகச் சிறிய தவறு
தான் இல்லையா. எனவே இறைவனை விட்டு பிரியாதீர்கள் என்று கூறப்படுகிறது. சேவையிலும் இணைந்த
ரூபத்தை நினைவில் வையுங்கள். இறைவன் மற்றும் இறை சேவை. இதைச் செய்ய தெரியாதா? மிகவும்
சுலபம். கடின உழைப்பிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். புரிந்ததா என்ன செய்ய வேண்டும் என்று. நல்லது.
அந்த மாதிரி எப்பொழுதும் அனாதி சம்ஸ்காரத்தின் நினைவு சொரூபமாக இருக்கும், எப்பொழுதும்
தன்னை ஒரு கருவி என்று மட்டும் உணர்ந்து மேலும் தந்தையை செய்பவர், செய்விப்பவர் என்று அனுபவம்
செய்யும், எப்பொழுதும் சுயம் அனாதி சொரூபத்தில் அதாவது ஆனந்தம் நிறைந்திருக்கும், எந்தவிதமான
தடைகளின் விதையை அழிக்கக்கூடிய சக்தி நிறைந்த ஆத்மாக்களுக்கு, அந்த மாதிரி எப்பொழுதும் தந்தையின்
துணைவனாக இருக்கும் ஈஸ்வரிய சேவாதாரிகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.
அதர் குமாரர்களுடன் (இல்லறத்தில் இருக்கும் சகோதரர்களுடன்) சந்திப்பு லி
அனைவரும் தன்னை தந்தை மேல் அன்பு வைத்திருக்கும் மற்றும் சகயோகி உயர்ந்த ஆத்மாக்கள்
என்று நினைக்கிறீர்கள் தான் இல்லையா? நான் உயர்ந்ததிலும் உயர்ந்த ஆத்மா ஏனென்றால் தந்தையுடன்
என் வாழ்க்கை பங்கை செய்பவன் என்ற இந்த போதை எப்பொழுதும் இருக்கிறதா? முழுச் சக்கரத்திற்குள்
இந்த நேரம் தந்தையுடன் சேர்ந்து தன்னுடைய வாழ்க்கை பங்கை செய்வதற்கான பொறுப்பாளர் ஆகியிருக்கிறீர்கள்.
உயர்ந்ததிலும உயர்ந்த பங்கை செய்வதற்கு பொறுப்பாளர் ஆகியிருக்கிறீர்கள். உயர்ந்ததிலும் உயர்ந்த பகவானுடன்
தன் பங்கை செய்யக்கூடியவர்கள் எவ்வளவு உயர்ந்த ஆத்மாக்களாக ஆகிவிட்டார்கள். உலகத்திலும் யாராவது
05யர்ந்த பதவியில் இருப்பவருடன் சேர்ந்து வேலை செய்கிறார்கள் என்றால் அவர்களுக்கும் எவ்வளவு
போதை இருக்கிறது? பிரதம மந்திரியின் தனிச்செயலாளருக்கும் எவ்வளவு போதை இருக்கிறது. ஆனால்
நீங்கள் யாருடன் இருக்கிறீர்கள்? உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையுடன் இருக்கிறீர்கள். மேலும் பிறகு அதிலேயும்
கூட ஒரு கல்பத்திற்காக இன்றி, அனேக கல்பங்கள் இந்த பங்கை செய்திருக்கிறீர்கள் மேலும் செய்து கொண்டே
(3/4)
07.08.2016
இருப்பீர்கள் என்ற விசேஷமும் இருக்கிறது. இது மாற முடியாது. அந்த மாதிரி போதையில் இருந்தீர்கள்
என்றால் தடையற்றவராக இருப்பீர்கள். ஏதாவது தடையோ வருவதில்லை தான் இல்லையா? சூழ்நிலையின்,
எண்ண அதிர்வலைகளின், தொடர்பில் இருப்பவர்களிடமிருந்து ஏதாவது தடையோ இல்லையே? தாமரை
மலருக்குச் சமமாக இருக்கிறீர்களா? தாமரை மலருக்குச் சமமாக விலகியிருப்பவர் மற்றும் அன்பானவர்.
தந்தையின் அன்பிற்குரியவனாக எவ்வளவு ஆகியிருக்கிறேன் என்ற கணக்கை விலகியிருக்கும் நிலை மூலம்
போட முடியும். ஒருவேளை கொஞ்சம் விலகியிருக்கிறீர்கள், மீதி மாட்டிக்கொள்கிறீர்கள் என்றால் அன்பிற்குரிய
வராகவும் அந்த அளவே ஆகிறீர்கள். யார் எப்பொழுதும் தந்தையின் அன்பிற்குரியவராக இருக்கிறாரோ
அதனுடைய அடையாளம் இயல்பாகவே நினைவில் இருப்பது. மிகப் பிரியமான பொருள் இயல்பாகவே
எப்பொழுதும் நினைவு வரும் இல்லையா. இவரோ ஒவ்வொரு கல்பமும் மிகப் பிரியமானவர். தந்தையின்
குழந்தையாக ஒரு தடவை ஆகவில்லை, ஒவ்வொரு கல்பத்திலும் ஆகியிருக்கிறீர்கள். எனவே அந்த மாதிரி
பிரியமான ஒருவரை எப்படி மறக்க முடியும். எப்பொழுது மறக்கிறீர்கள் என்றால் எப்பொழுது தந்தையையும்
விட அதிகமாக யாராவது ஒரு நபரை அல்லது பொருளை பிரியமானது என்று நினைக்கிறீர்களோ அப்பொழுது
தான். ஒருவேளை தந்தையை எப்பொழுதும் பிரியமானவர் என்று நினைத்தீர்கள் என்றால் மறக்க முடியாது.
நினைவு எப்படி செய்வது என்பதை யோசிக்க வேண்டியதாக இருக்காது, ஆனால் மறப்பது எப்படி என்று
ஆச்சரியமாக இருக்கும். அப்படி உங்களுடைய பெயர் அதர் குமார் ஆனால் பிரம்மா குமார் ஆகத்தான்
இருக்கிறீர்கள். பிரம்மா குமார் வெற்றி அடைபவர்கள் தான் இல்லையா? அதர் குமார் என்றால் அனுபவம்
நிறைந்த குமார். அனைத்தையும் அனுபவம் செய்து விட்டீர்கள். அனுபவி ஒருபொழுதும் ஏமாற்றம் அடைய
மாட்டார். கடந்த காலத்தின் அனுபவியாகவும் இருக்கிறீர்கள். மேலும் நிகழ் காலத்து அனுபவியாகவும்
இருக்கிறீர்கள். ஒவ்வொரு அதர்குமாரும் தன்னுடைய அனுபவங்கள் மூலமாக அனேகர்களுக்கு நன்மை
செய்ய முடியும். இது உலகிற்கே நன்மை செய்யும் குரூப் ஆகும். நல்லது.
மாதர்களுடன் சந்திப்பு லி
இல்லறத்தில் இருந்து கொண்டே ஒரு தந்தையைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற நினைவிலேயே
இருக்கிறீர்கள் தான் இல்லையா. இந்த சோதனை செய்கிறீர்களா? ஏனென்றால் இல்லறத்தின் சூழ்நிலையில்
இருந்து கொண்டே அதனுடைய பாதிப்பு ஏற்படக்கூடாது, எப்பொழுதும் தந்தையின் பிரியமானவராக இருக்க
வேண்டும் என்பதற்காக இந்த விஷயத்தின் சோதனை வேண்டும். ஒரு காரணத்திற்காக மட்டும் இல்லறத்தில்
இருக்கிறீர்கள் இருந்தும் தந்தையின் நினைவில் இருக்க வேண்டும். பரிவாரத்தின் சேவையில் எத்தனை
விதமான சேவை செய்ய வேண்டியதிருந்தாலும் ஆனால் டிரஸ்டி ஆகி செய்ய வேண்டும். டிரஸ்டியாக
இருந்தீர்கள் என்றால் பற்றுதலை வென்றவராக ஆகி விடுவீர்கள். குடும்பஸ்தன் என்ற நிலை இருக்கிறது
என்றால் மோகம் வந்து விடும். தந்தையின் நினைவு வரவில்லை என்றால் மோகம் இருக்கிறது. தந்தையின்
நினைவு மூலம் குடும்பத்தின் ஒவ்வொரு காரியமும் சகஜம் ஆகிவிடும். ஏனென்றால் நினைவின் மூலம் சக்தி
கிடைக்கிறது. அப்படி தந்தையின் நினைவின் குடைநிழலின் கீழே இருக்கிறீர்கள் தான் இல்லையா? குடை
நிழலின் கீழே இருப்பவர் ஒவ்வொரு தடையிலிருந்தும் விடுபட்டு இருப்பார். மாதர்களோ பாப்தாதாவின் மிகப்
பிரியமானவர்கள் ஏனென்றால் மாதர்கள் மிக அதிகமாக சகித்துக் கொண்டிருக்கிறார்கள். தந்தை அந்த மாதிரி
குழந்தைகளுக்கு சகித்துக் கொண்டதின் பலனாக சகயோகம் மற்றும் அன்பு கொடுக்கிறார். எப்பொழுதும்
சுமங்கலியாக இருக்க வேண்டும் இந்த வாழ்க்கையில் எவ்வளவு உயர்ந்த மாங்கல்யம் கிடைத்திருக்கிறது.
எங்கு மாங்கல்யம் இருக்கிறதோ அங்கு பாக்கியமோ இருக்கவே இருக்கிறது. எனவே எப்பொழுதும் சுமங்கலியாக
ஆகுக.
உத்திரபிரதேசம் மற்றும் குஜராத் மண்டலங்களை சேர்ந்தவர்கள் பாப்தாதாவின் எதிரில்
அமர்ந்திருக்கிறார்கள், அவர்களுடைய விசேஷத்தை பாப்தாதா கூறுகிறார் லி
அனைத்து ஸ்தானங்களுக்கும் அதனதன் விசேஷம் இருக்கிறது. உத்திரபிரதேசமும் குறைந்தது அல்ல
என்றால் குஜராத்தும் குறைந்தது அல்ல. யார் தொடக்கத்தில் ஸ்தாபனை காரியத்தில் பொறுப்பாளராக ஆனார்களோ
அவர்களுக்கும் நாடகத்தில் விசேஷ பங்கு இருக்கிறது. இருந்தாலும் தொடக்கத்தில் வந்தவர்களோ இரட்டை
லாட்டரியை பெற்றார்கள் தான் இல்லையா. சாகார பாபா மற்றும் நிராகார பாபா லி இரண்டு லாட்டரி கிடைத்தது
இதுவும் குறைந்த பங்கா என்ன? ஒவ்வொரு கல்பத்தின் சரித்திரத்தின் எப்பொழுதும் உடன் இருப்பதின்
நினைவுச் சின்னம் இதுவும் விசேஷ பாக்கியம்.
இப்பொழுது கூட பாப்தாதா அவ்யக்த ரூபத்தில் அனைத்து பங்கையும் செய்கிறார். ஆனால் சாகாரத்தில்
இருந்தவரோ சாகாரம் தான். சாகார பாபா காலத்தில் வந்தவர்களுக்கு அவர்களுடைய விசேஷம் இருக்கிறது.
இவர்களுக்கு அவர்களுடைய விசேஷம். இவர்கள் அவ்யக்த பாப்தாதாவிடமிருந்து சாகார பாபாவின் அன்பை
(4/4)
07.08.2016
இழுப்பவர்கள். அனேகர்கள் அந்த மாதிரியும் இருக்கிறார்கள் யார் சாகார பாபாவுடன் இருந்தவர்களையும்
விட அதிகமாக இப்பொழுது அனுபவம் செய்கிறார்கள். அப்படி அனைவரும் ஒருவர் இன்னொருவரை விட
முன்னுக்கு இருக்கிறார். நல்லது.
இன்று உத்திரபிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு சேவைக்கான வாய்ப்பு. நதிகளின் கரைகளில் உ.பி.
அதிகமாக இருக்கிறது. யமுனை நதிக்கரையில் ராஜ்ய தலைநகரத்தையும் மற்றும் நடனத்தையும் காண்பிக்கிறார்கள்.
ஆனால் உ.பி லியின் பதீத பாவனி மிகவும் பிரபலமானது, அதாவது உ.பி.யின் சேவை ஸ்தானத்தை காண்பித்திருக்
கிறார்கள். எனவே அந்த மாதிரி யாராவது உ.பிலியிலிருந்து அவசியம் உருவாவார்கள் அவர்கள் அனேகர்களின்
சேவைக்கு பொறுப்பாளர் ஆவார்கள். அந்த மாதிரி யாராவது தயார் ஆகிவிடுவார்கள். எப்படி அமெரிக்கா
விலிருந்து ஒருவர் மூலமாக அனேகர்களின் சேவை நடந்து கொண்டிருக்கிறது. அந்த மாதிரி உ.பிலியிலிருந்தும்
யாராவது ஒருவர் உருவாகிவிடுவார் அந்த ஒருவர் மூலம் அனேகர்களின் சேவை நடந்து விடும். செய்தியோ
பரவும் தான் எப்பொழுது வெளிநாடிலிருந்து செய்தி வருமோ அப்பொழுது அனைவரும் விழித்து விடுவார்கள்.
இப்பொழுது மிகப் பெரிய வி.ஐ.பி யாரும் உருவாகவில்லை. இன்று வரையிலும் யாரெல்லாம் வி.ஐ.பி
உருவாகியிருக்கிறார்களோ அவர்களையும் விட அதிகம் பெயர் பெற்றவர்கள் என்று அந்த வெளிநாட்டினரைத்
தான் கூறுவோம் இல்லையா. அவர் நடைமுறையில் அனேகர்களுக்கு செய்தியை கொண்டு சேர்ப்பதில்
காரணமானவர் ஆகிக்கொண்டிருக்கிறார். பாரதமும் முன்னுக்கு செல்ல முடியும், ஆனால் இப்பொழுதைக்கான
விஷயம். இறுதியில் வெற்றி முழக்கமோ பாரதத்திலே தான் ஏற்படும் இல்லையா. வெளிநாட்டிலிருந்தும்
வெற்றியின் முரசு அடித்து அடித்து பாரதத்தில் வந்து சேருவார்கள் இல்லையா. அவர்களுடைய வாயிலிருந்தும்
நம்முடைய பாரதம் என்பது தான் வெளியாகும். பாரதத்தில் தந்தை வந்திருக்கிறார் என்று தான் கூறுவார்
களேயன்றி ஐ.நாலிவில் தந்தை வந்திருக்கிறார் என்று கூற மாட்டார்கள். பந்தயத்தில் இந்த நேரம் வெளிநாடு
முன்னுக்கு சென்று கொண்டிருக்கிறது இப்பொழுதைக்கான விஷயம் இது, நாளை இன்னொருவரும் மாற
முடியும். ஒருவர் இன்னொருவரைப் பார்த்து இன்னும் முன்னேறிச் செல்வார்கள். இப்பொழுது உ.பிலியிலிருந்து
வி.ஐ.பி யாரையாவது கொண்டு வாருங்கள். பதீத பாவனி யாரையாவது பாவனமாக்கி சூ மந்திரம் போடுங்கள்.
குஜராத் வளர்ச்சி அடைந்ததில் நம்பர் ஒன் ஆகிவிட்டது. வி.ஐ.பிலிக்களும் மேடையில் வந்து விடுவார்கள்.
எல்லைக்கப்பாற்பட்ட சேவை செய்யும் மாதிரி வி.ஐ.பி இருக்க வேண்டும். குஜராத்தைச் சேர்ந்தவருக்கு குஜராத்தில்
செய்தீர்கள், அவரோ சிறிய மைக் ஆகிவிட்டார். நாலாபுறங்களிலும் செய்தீர்கள் என்றால் தான் அவரை பெரிய
மைக் என்று கூறுவோம். நல்லது.
வரதானம் : தன்னுடைய சஞ்சலமான உள் உணர்வை பரிவர்த்தனை செய்து சதோபிரதான
வாயுமண்டலத்தை உருவாக்குவதற்கு பொறுப்பான சிரேஷ்ட ஆத்மா ஆகுக.
எந்தக் குழந்தைகள் தங்களுடைய சஞ்சலமான உள்உணர்வுகளை பரிவர்த்தனை செய்து விடுகிறார்களோ
அவர்கள் தான் சதோபிரதான வாயுமண்டலத்தை உருவாக்க முடியும். ஏனென்றால் உள்உணர்வு மூலம்
வாயுமண்டலம் உருவாகிறது. எப்பொழுது உள்உணர்வில் இவ்வளவு பெரிய காரியத்தின் நினைவு
இருப்பதில்லையோ அப்பொழுது உள்உணர்வும் சஞ்சலமாகிறது. ஒருவேளை ஏதாவது மிக சஞ்சலமான குழந்தை
மிகவும் பிஸியாக இருந்த போதும் தன்னுடைய சஞ்சலத்தன்மையை விடவில்லை என்றால் அவரை கட்டி
வைப்பார்கள். அதே போலவே ஒருவேளை ஞானம் யோகத்தில் பிஸியாக இருந்த போதிலும் உள்உணர்வு
சஞ்சலமாக இருக்கிறது என்றால் ஒரு தந்தையுடன் அனைத்து உறவுகளின் பந்தனத்தில் உள்உணர்வை கட்டி
விட்டீர்கள் என்றால் சஞ்சலத்தன்மை சுலபமாக முடிவடைந்து விடும்.
சுலோகன் : அலட்சியத் தன்மையின் உணர்வை முடிப்பதற்கான
வழி எல்லைக்கப்பாற்பட்ட வைராக்கியம்.
01
08.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே ! எல்லா விஷயங்களிலும் சகித்துக் கொள்வோர் ஆகுங்கள்,
இகழ்லிபுகழ், வெற்றிதோல்வி அனைத்திலும் சமமாக இருங்கள். கேள்விபட்ட விஷயங்களில்
(வதந்தி) நம்பிக்கை வைக்காதீர்கள்.
கேள்வி :ஆத்மா எப்போதும் ஏறும் கலையில் முன்னேறிக் கொண்டே இருப்பதற்கு எளிய வழி
கூறுங்கள்?
பதில்: ஒரு பாபாவிடம் மட்டுமே கேளுங்கள். மற்றவர்களிடம் கேட்காதீர்கள். வீணான பரசிந்தனையில்,
வெளி விஷயங்களில் தங்களின் நேரத்தை வீணாக்காமல் இருந்தால் ஆத்மா எப்போதும் ஏறும் கலையில்
இருக்கும். இல்லாத பொல்லாத விஷயங்களைக் கேட்பதால், அதன் மீது நம்பிக்கை வைப்பதால் நல்ல குழந்தைகள்
கூட விழுந்து விடுகிறார்கள். ஆகவே மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஓம் சாந்தி. இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்கு உண்மையில் நாம் அரை கல்பமாக இராவண
இராஜ்யம் ஆரம்பமானதிலிருந்து தந்தையை நினைத்தோம் என்பது இப்போது நினைவிற்கு வருகிறது.
முழுமையாக அரை கல்பமாக நினைத்தனர் என்பதும் கிடையாது. எப்போதேல்லாம் துக்கம் அதிகரித்ததோ
அப்போது நினைவு செய்தனர். பக்தி மார்க்கத்திலிருந்து நாம் இறங்கிக் கொண்டே வந்தோம் என்பது இப்போது
உங்களுக்குத் தெரிகிறது. நாடகத்தின் ரகசியம் புத்தியில் இருக்கிறது. வாயிலிருந்து எதுவும் சொல்ல வேண்டியது
இல்லை. நாம் அவருடையவராகி விட்டோம். ஆகவே அதிகமாக ஞானத்தின் அவசியம் இல்லை. பாபா
வினுடையவராகி விட்டோம் என்றால், பாபாவின் சொத்துக்கு அதிகாரி ஆகிவிட்டோம். எதுவும் கர்மேந்திரியங்
களினால் செய்ய வேண்டியது இல்லை. பக்தி மார்க்கத்தில் பகவானை சந்திப்பதற்காக எவ்வளவு யாகம்லிதவம்லி
தானம்லிபுண்ணியம் செய்கிறார்கள். எங்கு சென்றாலும் எல்லா இடங்களிலும் தீர்த்த ஸ்தலங்கள் கோவில்கள்
போன்றவை இருக்கின்றன. முழு பாரதத்தின் தீர்த்த ஸ்தலங்கள் கோவில்களைச் சுற்றி வருகிற எந்த மனிதரும்
இருக்க முடியாது அப்படி சுற்றி வந்தாலும் எதுவும் கிடைக்காது. அங்கே சேகண்டி, பெரியமணி என்று
எவ்வளவு அதிகம் சத்தம் கூச்சல் உள்ளது. இங்கே அம்மாதிரி விஷயம் எதுவும் இல்லை. பாட்டு பாடவோ,
கைகள் தட்ட வேண்டிய அவசியமோ இல்லை. மனிதர்கள் எதையெல்லாம் செய்யவில்லை. அளவற்ற கர்ம
காண்டம் இருக்கிறது. இங்கேயோ குழந்தைகளாகிய நீங்கள் நினைவு மட்டும் செய்ய வேண்டும். வேறு
எதுவும் இல்லை. வீட்டிலிருந்தாலும் எல்லாவற்றையும் செய்தாலும் தந்தையை மட்டும் நினைக்க வேண்டும்.
இப்போது நாம் தேவதைகளாகிக் கொண்டிருக்கிறோம் என நீங்கள் அறிகிறீர்கள். இங்கே தெய்வீக குணங்களை
தாரணை செய்ய வேண்டும். உணவு வகைகள் கூட தூய்மையாக இருக்க வேண்டும். 36 வகையான உணவுகள்
அங்கே கிடைக்கும், இங்கே சாதாரணமாக இருக்க வேண்டும். உயர்ந்ததாகவும் வேண்டாம். மிகத் தாழ்ந்ததாகவும்
வேண்டாம். அனைத்து விஷயங்களிலும் பொறுமை வேண்டும். இகழ்லிபுகழ், வெற்றிலிதோல்வி, வெயில்லிகுளிர்
அனைத்தையும் பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. நேரமே அவ்வாறு இருக்கிறது. தண்ணீர் கிடைக்காது,
இது, அது கிடைக்காது, சூரியன் கூட தன்னுடைய வெப்பத்தைக் காண்பிக்கும். ஒவ்வொரு பொருளும்
தமோபிரதானமாக வேண்டும். இந்த சிருஷ்டியை தமோபிரதானமாகத்தான் வேண்டும். தத்துவங்களும்
தமோபிரதானமாக வேண்டும். எனவே இவை துக்கத்தை அளிக்கின்றன. இகழ், புகழில் கூட போகக் கூடாது.
பலர் இருக்கிறார்கள், யாராவது தவறுதலாக யாருக்காவது ஏதாவது சொல்லி விட்டால் உடனே சீரழிந்து
போகிறார்கள். ஏனென்றால், தற்போது விஷயங்களைத் திரிப்பது நிறைய இருக்கிறது அல்லவா? யாரோ ஏதோ
சொன்னார்கள்லிஇவர்களுக்கு தேக உணர்வு இருக்கிறது, வெளி பகட்டு நிறைய இருக்கிறது, யாரோ இதை
சொல்லி விட்டார், அவ்வளவு தான் காய்ச்சல் அதிகமாகி விடுகிறது என உங்களுக்காக பாபா கூறுகின்றார்.
தூக்கம் கூட போய்விடுகிறது. அரை கல்பமாக மனிதர்கள் இவ்வாறு இருக்கிறார்கள். சிலருக்கு உடனடியாக
காய்ச்சலை வர வழைத்து விடுகின்றனர். உடனடியாக வெளிறிப் போகச் செய்கின்றனர். எனவே இது போன்ற
வீண் விஷயங்களைக் கேட்காதீர்கள் என பாபா கூறுகின்றார். பாபா ஒரு போதும் யாரையும் நிந்திப்பது இல்லை.
பாபா புரிய வைப்பதற்காகக் கூறுகின்றார். இல்லாத பொல்லாத விஷயங்களை ஒருவருக்கொருவர் கூறிக் கொள்வதால்
நல்ல குழந்தைகள் கூட கெட்டுப் போகிறார்கள். துரோகி ஆகி வீணான விஷயங்களை ஒருவர் மற்றவருக்கு
சொல்வார்கள். பக்தி மார்க்கத்தில் கூட எப்படிப்பட்ட கதைகளை எல்லாம் உருவாக்கி இருக்கிறார்கள். இப்போது
உங்களுக்கு ஞானம் கிடைத்திருக்கிறது என்றால், ஒரு போதும் ஓ, ராம் அல்லது ஐயோ கடவுளே ! என்று கூற
முடியாது. இந்த வார்த்தைகள் கூட பக்தி மார்க்கத்தினுடையதாகும். உங்களுடைய வாயிலிருந்து இது போன்ற
வார்த்தைகள் வரக் கூடாது.
இனிமையான செல்ல குழந்தைகளே ! ஆத்ம உணர்வுடையவராகுங்கள் என்று பாபா கூறுகின்றார்.
எவ்வளவு அன்போடு புரிய வைக்கின்றார். யாருடைய விஷயத்தையும் கேட்காதீர்கள், வீணாக பர சிந்தனை
01.08.2016
(2/4)
செய்யாதீர்கள். நாம் ஆத்மா என்பதை உறுதி படுத்திக் கொள்ளுங்கள். ஆத்மா அழிவற்றது. உடல் அழியக்
கூடியது. ஆத்மா தான் சம்ஸ்காரத்தை ஏற்றுக் கொள்கிறது. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் ஆத்ம
உணர்வுடையவராக வேண்டும். துவாபர யுகத்திலிருந்து இராவண இராஜ்யத்தில் நீங்கள் தேக உணர்வுடையவரா
கிறீர்கள். ஆகையால் இப்போது ஆத்மா உணர்வுடையவராகுவதில் உழைக்க வேண்டியிருக்கிறது. நமக்கு
எல்லையற்ற தந்தை கிடைத்திருக்கிறார். அடிக்கடி புத்தியில் இது வர வேண்டும். கல்ப கல்பமாக பாபா சொத்து
கொடுக்கின்றார். இப்போது அவருடைய வழிப்படி நடக்க வேண்டும். தாயும் நீயே, தந்தையும் நீயே...... என்று
அவருக்காக தான் பாடப்பட்டிருக்கின்றது. அவர் அனைத்து உறவுகளிலும் சுகத்தை அளிப்பவர். அவருக்குள்
அனைத்து இனிப்பும் இருக்கிறது. மற்ற நட்பு, உறவுகள் போன்றவை துக்கதை அளிக்கக் கூடியதாகும்.
ஒரேயொரு தந்தையே அனைவருக்கும் சுகத்தை அளிப்பவர் ஆவார். தன்னை ஆத்மா என்று உணர்ந்து
தந்தையாகிய என்னை நினையுங்கள் என்று மிக எளிய வழியில் கூறுகின்றார். இது ஒன்றும் புதிய விஷயம்
இல்லை என பாபா கூறுகின்றார். ஒவ்வொரு 5000 வருடத்திற்குப் பிறகும் நாம் இப்படிப்பட்ட தந்தையிடம்
வருகின்றோம், இவர் யாரோ சாது, சன்னியாசி கிடையாது என நீங்கள் அறிகிறீர்கள். நீங்கள் சாது சன்னியாசி
போன்றோரிடம் இல்லை. மற்றபடி இல்லற மார்க்கத்தில் உறவுகளுடன் சீராகப் பராமரிக்க வேண்டும் என்று
பாபா கூறுகின்றார். இல்லை என்றால் மேலும் பூசல்கள் தான் ஏற்படும். யுக்தியோடு செல்லுங்கள். அன்போடு
ஒவ்வொருவருக்கும் புரிய வைக்க வேண்டும். பாருங்கள், இப்போது அழிவின் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த அசுர உலகம் முடியப் போகிறது. இப்போது தேவதையாக வேண்டும். இங்கே தெய்வீக குணத்தைக்
கடைபிடிக்க வேண்டும். அன்போடு புரிய வைக்க வேண்டும். தேவதைகள் வெங்காயம், பூண்டு போன்றவைகளை
சாப்பிடுவதில்லை. நாம் கூட மனிதனிலிருந்து தேவதையாகிறோம் என்றால் இவ்வாறு எப்படி சாப்பிட முடியும்.
இதை விட்டு விடுங்கள் என உங்களுக்கும் ஆலோசனை வழங்குகிறார். இது போன்ற பொருட்களை நாம்
சாப்பிடுவதில்லை. இப்போது உங்களுக்கு எல்லையற்ற தந்தை தெய்வீக குணங்களைக் கற்பிப்பவர் கிடைத்
திருக்கிறார் என்றால், அனைத்து குணங்களிலும் நிறைந்தவர்..... இங்கே தான் மாற வேண்டும். இங்கே மாறும்
போது தான் எதிர் காலத்தில் புது உலகம் வரும். இரவிற்குப் பிறகு பகல் வருவது போல இது நடக்கிறது.
இப்போது இரவின் முடிவில் தெய்வீக குணங்களை தாரணை செய்தால் பிறகு காலை வந்து விடும். தங்களைத்
தாங்களே ஒவ்வொருவரும் சோதித்துக் கொள்ள வேண்டும். பாபாவிற்கு அனைத்தும் தெரியும் என்று இருக்கக்
கூடாது. நீங்கள் உங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள். டீச்சர் அனைத்தையும் அறிவார் என மாணவர்கள் ஒரு
போதும் கூறுவதில்லை. தேர்வு நாட்கள் நெருங்குகிறது என்றால் நாம் எவ்வளவு தேர்ச்சி பெறுவோம். எந்த
பாடத்தில் நாம் மந்தமாக இருக்கிறோம் என குழந்தைகளே அறிவார்கள். மதிப்பெண்கள் குறைவாகப் பெறுவார்கள்
பிறகு அனைத்தும் சேர்த்து தேர்ச்சி அடைகிறார்கள். இதைப் புரிந்து கொள்கிறார்கள் என்றால், இதிலும் கூட
தங்களை சோதித்துக் கொள்கிறார்கள். தங்களுக்குள் என்ன குறை இருக்கிறது? நான் மிகவும் இனிமையாக
மாறி இருக்கிறேனா? ஆத்மாக்களாகிய நம் அனைவருக்கும் தந்தை பரம்பிதா பரமாத்மா என அன்போடு
அனைவருக்கும் புரிய வைக்க வேண்டும். மனிதர்களின் விஷயம் அல்ல. நாம் நிராகாரரை பகவான் என்கிறோம்.
பகவான் படைப்பவர் ஒருவரே, பிற அனைவரும் படைப்புகள் ! படைப்புகளிடமிருந்து யாருக்கும் சொத்து
கிடைக்காது. சட்டம் இல்லை. இப்போது அனைத்து படைப்பிற்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல் ஒருவர் தான்
படைப்பவர் தந்தையாவார். படைப்பிற்குள் சாது சன்னியாசி அனைவரும் வந்து விடுவர். அனைவரும் ஆத்மாக்கள்
தான் இல்லையா ? ஆம், மனிதர்கள் நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் இருக்கிறார்கள். பதவியும் உயர்ந்ததாக
தாழ்ந்ததாக இருக்கிறது. சன்னியாசிகளிலும் வரிசைக் கிரமம் இருக்கிறது. சிலரைப் பாருங்கள், பிச்சை எடுத்துக்
கொண்டிருக்கிறார்கள். சிலரிடமோ அனைவரும் காலில் விழுகின்றனர். குழந்தைகளாகிய நீங்களும் உயர்ந்தவர்கள்
ஆக வேண்டும். மிகவும் இனிமையாக மாறுங்கள். ஒரு போதும் கோபத்தோடு பேசக் கூடாது. எவ்வளவு
முடியுமோ அன்போடு வேலையை வாங்குங்கள். குழந்தைகள் மிகவும் துன்புறுத்துகிறார்கள், இன்றைய குழந்தைகள்
இப்படி இருக்கிறார்கள் என கூறுகிறார்கள், அன்போடு அவர்களுக்குப் புரிய வையுங்கள். கிருஷ்ணர் அமர்க்களம்
செய்தார் என்று அவரை கயிற்றால் கட்டி வைத்தனர் என காண்பிக்கிறார்கள். எவ்வளவு முடியுமோ அன்போடு
புரிய வைக்க வேண்டும். அல்லது லேசான தண்டனை. பாவம், அறியாதவர்கள். நேரமும் இவ்வாறு இருக்கிறது.
வெளி சங்க தோஷம் மிகவும் மோசமாக இருக்கிறது. நீங்கள் சிலை போன்றவைகளை வைக்க வேண்டிய
அவசியம் இல்லை என எல்லையற்ற தந்தை கூறுகின்றார். எதுவும் கடினமாக உழைக்க வேண்டியதில்லை.
சிவனுடைய சித்திரம் கூட ஏன் வைக்க வேண்டும்? அவர் உங்களுடைய தந்தை அல்லவா? வீட்டில்
குழந்தைகள் தந்தையின் சித்திரத்தை ஏன் வைக்கிறார்கள்? தந்தையோ அழைத்ததும் ஆஜர் ஆவார் அல்லவா.
நான் இப்போது அழைத்த உடன் ஆஜர் ஆகிறேன் இல்லையா ! பிறகு சித்திரங்களின் அவசியம் இல்லை.
நான் குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றேன். பாப்தாதாவைப் பாருங்கள் என்கின்றார். இப்போது பாபா நிராகாரராக
இருக்கிறார். அவரைப் பார்க்க முடியாது. புத்தியினால் புரிந்துக் கொள்ள முடியும். நான் இவருக்குள் பிரவேசமாகி
உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கிறேன் என பாபா கூறுகிறார். இல்லை என்றால் எப்படி வருவேன். கிருஷ்ணரின்
01.08.2016
(3/4)
உடலில் எப்படி வர முடியும். சன்னியாசிகளுக்குள் கூட வர முடியாது. யார் முதல் நம்பரில் இருந்தாரோ
அவருக்குள் நான் வருகிறேன். அவரே இப்போது கடைசி நம்பரில் இருக்கிறார். நீங்களும் இப்போது படித்து
பிறகு முதல் நம்பரில் போக வேண்டும். படிக்க வைக்கக் கூடியவர் ஒருவரே ஆவார். அவருக்கு ஞானக் கடல்
என்று பெயர். உங்களுக்கு ஞானம் மிகவும் நன்றாக கிடைக்கிறது. சாந்தி தாமம் நம்முடைய வீடு, சுகதாமம்
நம்முடைய இராஜ்யம் என நீங்கள் அறிகிறீர்கள். துக்க தாமம் இராவணனின் இராஜ்யம் ஆகும். இனிமையிலும்
இனிமையான குழந்தைகளே ! உங்களுடைய வீடு சாந்திதாமத்தை நினையுங்கள் ! சுகதாமத்தை நினையுங்கள்!
என பாபா கூறுகின்றார். துக்க தாமத்தின் பந்தனத்தை மறந்துக் கொண்டே செல்லுங்கள். இவ்வாறு வேறு
யாரும் கூற முடியாது. அவர்கள் போகவும் முடியாது. நாடகத்திற்கு இடையில் யாரும் திரும்பிச் செல்ல
முடியாது. இன்னார் ஜோதியோடு ஜோதியாக கலந்து விட்டனர், அல்லது நிர்வாண தாமத்திற்குச் சென்று
விட்டனர் என்று கூறுகிறார்கள். ஒருவர் கூட போக முடியாது. அனைவருக்கும் தந்தை மற்றும் அதிபதி
ஒரேயொரு பரம்பிதா பரமாத்மா, அவர் அனைத்து மணப்பெண்களுக்கும் ஒரு மணவாளன் ஆவார். அந்த
உலகியல் பிரிய தர்ஷன் பிரிய தர்μனிகள் ஒருவரை ஒருவர் நினைக்கிறார்கள் என்றால், புத்தியில் சித்திரம்
தோன்றுகிறது. பிறகு ஒருவரை ஒருவர் நினைத்துக் கொண்டே இருப்பார்கள். சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.
நினைத்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களோ ஒரு பிறவியின் பிரிய தர்ஷன், பிரிய தர்μனி. நீங்களோ பல
பிறவிகளாக பிரிய தர்ஷனனின் பிரிய தர்μனிகள். நீங்கள் வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை. ஒரு
தந்தையை மட்டும் நினையுங்கள். அந்த பிரிய தர்ஷன் பிரிய தர்ஷனிக்கு முன்பு சித்திரம் வருகிறது. அவர்களைப்
பார்த்து பார்த்தே வேலை கூட நின்று போய்விடுகிறது. பிறகு அவர்களின் முகம் காணாமல் போகிறது. பிறகு
வேலையை செய்கின்றனர். இதிலோ அவ்வாறு இல்லை. ஆத்மாவும் புள்ளியாக இருக்கிறது. பரமாத்மாவும்
புள்ளியாக இருக்கிறார். தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைக்க வேண்டும். இதில் தான்
உழைப்பு இருக்கிறது. வேறு யாரும் இவ்வாறு பயிற்சி செய்வதில்லை. ஆத்ம ஞானம் கிடைத்திருக்கிறது
என்றால், ஆத்மாவைப் புரிந்துக் கொண்டீர்கள். மற்றபடி இருப்பது பரமாத்மா. அதுவும் உங்களுக்குத் தெரியும்.
பாபா வந்து இங்கே(புருவ மத்தியில்) அமர்கிறார். இவருடைய இடமும் இங்கே இருக்கிறது. ஆத்மா எங்கிருந்து
வேண்டுமானாலும் சென்று விடுகிறது. தெரிவதில்லை. அதனுடைய முக்கிய இடம் புருவ மத்தியாகும். நானும்
பிந்தியாக இருக்கிறேன். இவருக்குள் வந்து அமர்கிறேன் என பாபா கூறுகின்றார். உங்களுக்கு தெரியவே
தெரியாது. பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு வந்து கூறுகின்றார். உங்களுக்கு என்ன கூறுகின்றாரோ அதை
நானும் கேட்கிறேன். முற்றிலும் சரியான விளக்கம் ஆகும். தெய்வீக தர்மத்தைச் சார்ந்தவர்கள் யாரோ அவர்கள்
உடனே புரிந்துக் கொள்வார்கள். இந்த ராஜ்ஜியம் ஸ்தாபனையாகிக் கொண்டிருக்கிறது. முதலில் ஸ்தாபனை,
பிறகு வினாசம் கூட நடக்கும். வேறு எந்த தர்ம ஸ்தாபனையாளர்களும் இவ்வாறு செய்வது கிடையாது.
அவர்கள் தங்களது தர்மத்தை ஸ்தாபனை செய்கிறார்கள். பிறகு வளாச்சி அடைகிறது. இங்கேயோ யார்
எவ்வளவுக்கு எவ்வளவு முயற்சி செய்கிறார்களோ அவ்வளவு எதிர்காலத்தில் உயர்ந்த பதவி பெறுகிறார்கள்.
நீங்கள் எதிர் காலத்தில் 21 பிறவிகளுக்கு சொத்தை அடைகிறீர்கள் என்றால், எவ்வளவு முயற்சி செய்ய
வேண்டும். மேலும் மிகவும் எளிதாகும். யோகமும் மிகவும் எளிது. இதன் மூலம் உங்களுடைய விகர்மம்
அழிகிறது.
நான் உத்திரவாதம் அளிக்கிறேன். கல்ப கல்பமாக நானே வந்து குழந்தைகளாகிய உங்களை தூய்மையாக
மாற்றுகிறேன் என பாபா கூறகிறார். அங்கே அழுக்கானவர்கள் ஒருவரும் கிடையாது. ஞானம் கூட எவ்வளவு
எளிதாக இருக்கிறது. 84 பிறவிகளின் சக்கரம் எப்படி சுழல்கிறது. அந்த ஞானம் கூட புத்தியில் இருக்கிறது.
நாம் 84ன் சக்கரத்தில் சுழன்று வந்துள்ளோம். இதில் நிச்சயம் இருக்க வேண்டும். நிச்சயத்தில் தான் வெற்றி
இருக்கிறது. 84 பிறவிகள் எடுக்கிறோமா என தெரியாது? அல்லது சிறிது குறைவோ என்று இருக்கக் கூடாது.
இதுவோ மிகவும் எளிதான விளக்கம் ஆகும். இந்த படங்கள் அனைத்தும் திவ்ய திருஷ்டியில் பாபா
உருவாக்கினார் என்பது குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டிருக்கிறது. திருத்தமும் செய்யப்பட்டிருக்கிறது.
ஆரம்பத்தில் பனாரஸில் தனிமையில் இருந்த போது இது போன்ற சக்கரம் சுவற்றில் வரைந்தார். இது என்ன
என்பது எதுவும் புரிய வில்லை. மகிழ்ச்சி ஏற்பட்டது. காட்சிகள் கிடைத்ததும் பறந்து சென்று விட்டார். இது
என்ன நடக்கிறது. எதுவும் புரிய வில்லை. எந்த படம் முதலில் உருவாக்கப்பட்டதோ அதை மாற்றி புதிது
புதிதாக உருவாக்கி வந்தனர் என நீங்கள் அறிகிறீர்கள். இப்போது புது புது படங்கள் போன கல்பத்தை
போலவே உருவாக்கப்பட்டுக் கொண்டு வருகிறது. ஏணிபடத்தைப் பாருங்கள் எவ்வளவு நன்றாக இருக்கிறது.
இதைப் புரிய வைப்பது எளிதாகும். தாமதமாக வருபவர்களுக்கு மேலும் எளிதாகப் புரிய வைக்கப்படுகிறது.
இப்போது புதியதாக யார் வந்தாலும் 7 நாட்களில் முழு ஞானமும் புரிந்துக் கொள்கிறன்றனர். பழையவர்களை
விட முன்னேறி போய் கொண்டிருக்கினறனர். சிலர் முதலிலேயே வந்திருந்தால் நன்றாக இருக்கும் என்கின்றனர்.
அட, இந்த கவலை கூட வேண்டாம். முன்பே வந்து, பிறகு ஓடிப் போய் இருந்தால்? தாமதமாக வருபவர்களுக்கும்
கூட எளிதாக சிம்மாசனம் கிடைக்கிறது. முதலில் யார் இருந்தனரோ அவர்கள் இப்போது இல்லை. அழிந்து
01.08.2016
(4/4)
விட்டனர். கடைசியில் யார் தேர்ச்சி அடைந்தனர் என ரிசல்ட் தெரிய வரும். புதிது புதிதாக வருகிறார்கள்.
உடனே இந்த சேவையில் ஈடுபடுகிறார்கள். பழையவர்கள் இவ்வளவு செய்வதில்லை. புத்தம் புது குழந்தைகள்
சேவையின் மூலம் மனதில் இடம் பிடிக்கின்றனர். பழையவர்கள் எத்தனையோ பேர் போய் விட்டனர்.
ஆகவே யாரை மிக உயர்ந்த பிராமண குல பூசணர்கள் என்று கூறுகின்றோமோ அவர்களில் ஒரு சிலர்
முதலில் ஆச்சரியப் படக் கூடிய வகையில் கேட்கின்றனர். பிறகு ஓடி விடுகின்றனர் என பாபா கூறுகின்றார்.
எது பாடப்பட்டிருக்கிறதோ அது இப்போது நடைமுறையில் நடந்துக் கொண்டிருக்கிறது. நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை
வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம் :
1. தனக்கு தானே சோதித்துக் கொள்ள வேண்டும். நான் மிக மிக இனிமையாக இருக்கிறேனா
என பாருங்கள்? எனக்குள் என்னென்ன குறை இருக்கிறது? அனைத்து தெய்வீக குணங்களும்
தாரணை ஆகியிருக்கிறதா! தங்களுடைய நடத்தை தேவதைகளைப் போன்று மாற வேண்டும்.
அசுர உணவுகளை தியாகம் செய்ய வேண்டும்.
2. எந்த ஒரு வீணான விஷயங்களையும் கேட்கக் கூடாது, மேலும் பேசக் கூடாது.
பொறுமையாக இருக்க வேண்டும்.
வரதானம் : ஒவ்வொரு எண்ணம் மற்றும் செயலில் சித்தி அதாவது
வெற்றி அடையக் கூடிய சம்பூரண மூர்த்தி ஆகுக !
எப்போது சக்திசாலி எண்ணங்களை படைக்கிறீர்களோ அப்போது சங்கல்பங்களின் வெற்றி (சித்தி) கிடைக்கும்.
யார் அதிகமான எண்ணங்களைப் படைக்கிறார்களோ அவர்கள் அதை பாலனை செய்ய முடிவதில்லை. ஆகவே
எவ்வளவு படைப்பு அதிகமாக வருகிறதோ அவ்வளவு சக்தியற்றதாக இருக்கிறது. ஆகவே முதலில் வீணான
படைப்புகளை முடியுங்கள். அப்போது வெற்றி கிடைக்கும். மேலும் செயல்களில் வெற்றி அடைவதற்கான வழி,
காரியத்தை செய்வதற்கு முன்பாக முதல், இடை, இறுதியை தெரிந்துக் கொண்டு பிறகு காரியத்தை செய்யுங்கள்.
இதில் தான் சம்பூரண மூர்த்தி ஆகலாம்.
சுலோகன் : நேரத்திற்கு துக்கம் மற்றும் ஏமாற்றத்திலிருந்து தப்பித்து
வெற்றி அடைபவரே ஞானி (புத்திசாலி) ஆவார்.
(1/4)
02
08.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்வதில் உங்களுடைய
சம்பாத்தியமும் இருக்கிறது. ஆரோக்கியமும் இருக்கிறது. நீங்கள் அமரராக ஆகி விடுகிறீர்கள்.
கேள்வி: இதயத்தைத் தூய்மையாக ஆக்குவதற்கான சுலபமான யுக்தி யாது?
பதில்: எங்கு இருந்தாலும் டிரஸ்டியாகி இருங்கள். நாம் சிவபாபாவின் பண்டக சாலையிலிருந்து உணவு
உட்கொள்கிறோம் என்று எப்பொழுதும் நினையுங்கள். சிவபாபாவின் பண்டாராவிலிருந்து உணவு உட்கொள்பவர்
களின் இதயம் தூய்மை ஆகிக் கொண்டே போகிறது. இல்லறத்தில் இருக்கையிலும் ஸ்ரீமத்படி, டைரக்ஷன்
படி டிரஸ்டியாகி வாழ்கிறார்கள் என்றால், அதுவும் சிவபாபாவின் பண்டாரா ஆகும். மனதினால் சமர்ப்பணம்
ஆனவர்கள்.
ஓம் சாந்தி. ஜன்ம ஜன்மாந்திரமாக, அரைகல்பமாக குழந்தைகள் சத்சங்கம் சென்றுள்ளீர்கள். சாது சந்நியாசி,
பண்டிதர்கள் ஆகிய எல்லா மனிதர்களின் சத்சங்கம் நடக்கிறது. ஆனால் இது எந்த ஒரு மனிதனுடைய
சத்சங்கம் கிடையாது. இதற்கு ஆன்மீக சத்சங்கம் என்று கூறப்படுகிறது. சுப்ரீம் ஆத்மா, ஆத்மாக்களுடன்
ஆன்மீக உரையாடல், அதாவது சத்சங்கம் நிகழ்த்துகிறார். இங்கு நீங்கள் எந்த ஒரு மனிதரிடமும் கேட்பதில்லை.
தேவதைகளிடமும் கேட்பதில்லை. நீங்கள் பகவானின் மகா வாக்கியங்களை கேட்கிறீர்கள். பகவானுக்கு
இப்பொழுதும் நிராகாரமானவர் என்று கூறப்படுகிறது. மேலும், பகவான் வருவதே குழந்தைகளை பகவான்
பகவதியாக ஆக்குவதற்கான கல்வியை கற்பிப்பதற்காக ஆகும். பகவான் மற்றும் பகவதியின் பதவியை
பகவானைத் தவிர வேறு யாரும் அளிக்க முடியாது. ஒவ்வொரு கல்பத்திலும் சங்கமயுகம் வரும் பொழுது
நிராகார பகவான் வந்து நமக்கு ஞானம் அளிக்கிறார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
இது கூட நீங்கள் மட்டுமே புரிந்துள்ளீர்கள். வேறு யாரும் புரிந்து கொள்வது கடினம். சிவபாபா அவசியம்
வருகிறார். ஆனால் அவருக்குப் பதிலாக கிருஷ்ணரை கீதையின் பகவான் என்று கூறி விட்டுள்ளார்கள்.
எனவே அவசியம் அவர்கள் புத்தியில் மனித உடல் தான் வரக் கூடும். நீங்கள் தான் தெய்வீக குணங்கள்
உடையவர்களாக இருந்தீர்கள் மற்றும் இப்பொழுது அசுர குணங்கள் உடையவர்களாக ஆகி உள்ளீர்கள்.
மீண்டும் இப்பொழுது தெய்வீக குணங்கள் உடையவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். தெய்வீக குணங்கள்
உடையவர்களுக்கு ஈஸ்வரிய சம்பிரதாயம் என்றும் அசுர குணங்கள் உடையவர்களுக்கு அசுர சம்பிரதாயம்
என்றும் கூறப்படுகிறது. இப்பொழுது நிராகார தந்தை நிராகார சம்பிரதாயம் அதாவது ஆத்மாக்களுக்கு கற்பிக்கிறார்.
எனவே ஈஸ்வரிய சம்பிரதாயம் அல்லது ஆன்மீக சம்பிரதாயம் என்று கூறப்படுகிறது. அவர்களுக்கு ஆன்மீகத்
தந்தை வந்து கற்பிக்கிறார். இப்பொழுது நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்களாக ஆகிறீர்கள். நாம் ஆத்மா
ஆவோம். தந்தை நமக்கு கற்பிக்கிறார். என்னை நினைவு செய்தீர்கள் என்றால், உங்களுடைய விகர்மங்கள்
(பாவம்) விநாசம் ஆகும் என்று கூறுகிறார். ஆத்மாக்களுக்குத் தான் கற்பிக்கிறார். அவர் தான் ஞானம்
நிறைந்தவர் ஆவார். மேலும் ரிμ முனிவர்கள் ஆகியோரோ எல்லோருமே தெரியவில்லை, அறியவில்லை
(நேதி நேதி) என்று கூறிச் சென்று விட்டார்கள். அதாவது எங்களுக்கு ஆத்மா பற்றித் தெரியாது. ஞானக்
கடல் நேரிடையாக வராதவரை ஞானத்தை எவ்வாறு புரிய வைக்க முடியும். இது நல்ல முறையில் புரிந்து
கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும். நமக்கு எந்த ஒரு மனிதரும் கற்பிப்பதில்லை. நமக்கு தந்தை வந்து
கற்பிக்கிறார். அவர் எல்லையில்லாத தந்தை, நிராகாரமானவர் ஆவார். ஒவ்வொருவருக்கும் சாகார தந்தை
மற்றும் நிராகார தந்தை இருவரும் இருக்கிறார்கள் என்பதும் குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டுள்ளது.
ஒருவர் ஆன்மீக தந்தை மற்றும் மற்றொருவர் சரீரத்தின் தந்தை. ஆன்மீகத் தந்தை தான் வந்து ஆத்மாக்களை
பாவனமாக ஆக்குகிறார். நாம் பாவனமாக இருந்தோம். பதீதமாக ஆனோம். மீண்டும் பதீத நிலையிலிருந்து
பாவனமாக எப்படி ஆகிறோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். படம் கூட முன்னால் உள்ளது. அடிக்கடி
சக்கரப் படத்திற்கு முன்னால் சென்று அமர்ந்தீர்கள் என்றால், நாம் இப்பொழுது சங்கமயுகத்தில் அமர்ந்துள்ளோம்
மற்றும் பிற அனைவரும் தங்களை கலியுகத்தில் இருப்பதாக நினைக்கிறார்கள் என்று புத்தியில் முழு ஞானம்
வந்து விடும் என்று பாபா ஆலோசனை அளிக்கிறார். கலியுகத்திற்கு கோரமான இருள் என்று கூறப்படுகிறது.
இப்பொழுது நீங்கள் சங்கமத்தில் உள்ளீர்கள். இப்பொழுது உங்களுக்கு வெளிச்சம் (ஞானம்) உள்ளது. சத்யுகத்தில்
பின் உங்களுக்கு இந்த ஞானம் கிடைப்பதில்லை. தந்தை வரும் பொழுது தான் பட்ட பகல் போன்று
வெளிச்சம் ஆகி விடுகிறது. இந்த சங்கமயுகமே கல்யாணகாரி யுகம் ஆகும். இது போன்ற யுகம் வேறு
எதுவும் இருப்பதே இல்லை. இப்பொழுது தான் தந்தை வருகிறார். சத்யுகத்தை கல்யாணகாரி நன்மை உடையது
என்று கூறமாட்டார்கள். அங்கு யாருக்கும் நன்மை ஆவதில்லை. நன்மை சங்கமத்தில் தான் ஏற்படுகிறது.
சத்யுகத்திலோ நன்மையாகவே இருக்கும். சங்கமத்தில் கலியுகத்தை சத்யுகமாக, கல்யாணகாரியாக ஆக்குகிறார்.
எனவே இப்பொழுது உங்களுக்கு எவ்வளவு நன்மை ஆகிறது என்பதைப் பாருங்கள். தந்தை மற்றும் ஆஸ்தியை
02.08.2016
(2/4)
நினைவு செய்வதால் மட்டுமே எவ்வளவு உங்களுக்கு சம்பாத்தியம் ஆகிறது. சம்பாத்தியத்திற்கு சம்பாத்தியமும்
இருக்கிறது மற்றும் ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமும் இருக்கிறது. உங்கள் வாழ்க்கை அமர வாழ்க்கையாகி
விடுகிறது. உங்களுக்கு ஒரு பொழுதும் அகால மரணம் ஏற்படுவதில்லை. எனவே குழந்தைகளுக்கு எவ்வளவு
குμ இருக்க வேண்டும். ஏனெனில் உங்கள் புத்தியில் முழு ஞானம் உள்ளது. இங்கு குழந்தைகளாகிய
நீங்கள் வருகிறீர்கள் என்றால் முயற்சி செய்து மியூசியத்தில் படங்கள் மீது புரிய வைப்பதற்கான தகுதி
உடையவர்களாக ஆக வேண்டும். தங்களை லாயக்காக ஆக்குவதற்கு 7லி8 நாட்கள் அமர்ந்து கற்றுக் கொள்ளுங்கள்.
அப்பியாசம் ஆகி விட்டது என்றால் சேவையில் ஓட வேண்டும். சேவை செய்து பிறகு திரும்பி வர
வேண்டும். இதை கற்றுக் கொள்வது மிகவுமே சுலபமாகும். படங்களை முன்னால் பார்க்கும் பொழுதே நாம்
சங்கமத்தில் அமர்ந்துள்ளோம் என்பது புத்தியில் வந்து விடுகிறது. இன்றைய உலகத்தில் நிறைய மனிதர்கள்
இருக்கிறார்கள். நாளைக்கு மிகவும் குறைவாக இருப்பார்கள். இத்தனை பேர் அனைவரும் திரும்பிப் போக
வேண்டி உள்ளது. இப்பொழுது தந்தை தானும் வந்துள்ளார். குழந்தைகள் மீது எவ்வளவு மதிப்பு வைக்கிறார்.
தூர தேசத்தில் இருப்பவர் அந்நிய தேசத்தில் வந்துள்ளார்.. இராவணனினுடைய தேசம் அந்நிய தேசம் ஆகும்
அல்லவா? இராமரின் தேசத்திலோ ஒரு பொழுதும் இராவணன் வர முடியாது. இது பற்றி ஒரு கதை அல்லது
கட்டுக்கதை கூட கூறுகிறார்கள். என்னவெல்லாம் கட்டுக் கதைகள் கூறுகிறார்களோ அவை எல்லாமே கதைகள்
ஆகும். கதைகளில் எந்த ஒரு சாரமும் கிடையாது. கட்டுக்கதைகளில் (நாவல்கள்) கூட எந்த ஒரு சாரமும்
கிடையாது. நாவல்கள் கூட எவ்வளவு ஏராளமாக விற்கப்படுகின்றன. நாவல்கள் மட்டுமே விற்பவர்கள் கூட
இலட்சாதிபதி ஆகி விடுகிறார்கள். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுடைய பரிபாலனை தந்தையின்
கையில் உள்ளது. உங்களிடமே உண்பேன், அதாவது உங்களுடைய பண்டாராவிலிருந்து உண்பேன்.. அவ்வளவே.
உங்களுடைய முழு பாலனையும் இங்கிருந்து தான் ஆகிறது. யார் சமர்ப்பணமாகி விடுகிறார்களோ அவர்களுடைய
பரிபாலனையோ ஆகி விடுகிறது.ஆனால் யார் மனதால் கூட இவை எல்லாமே இறைவனுடையது,
(தந்தையினுடையது) நான் டிரஸ்டி அக இருக்கிறேன், நாங்கள் ஸ்ரீமத் படி தான் நடந்து எல்லா செலவும்
செய்கிறோம் என்று இப்படி யார் நினைக்கிறார்களோ அவர்களும் சிவபாபாவின் பண்டாராவிலிருந்து சாப்பிடு
கிறார்கள். சிவபாபாவின் பண்டாராவிலிருந்து சாப்பிடுவதால் இதயம் தூய்மை ஆகிறது. அப்படியின்றி அவர்கள்
சிவபாபாவின் பண்டாராவிலிருந்து சாப்பிடுவதில்லை என்பதல்ல. தந்தையின் கட்டளைப் படி நடப்பவர்கள்
தந்தையின் பண்டாராவிலிருந்து சாப்பிடுவது போலவே ஆகும். எந்த பண்டாராவிலிருந்து சாப்பிட்டார்களோ
அந்த பண்டாரா நிரம்பியதாக இருக்கும். கஷ்டம், துக்கம் நீங்கிப் போய் விடும். அதற்கு பிறகு நீங்கள் ஒரு
பொழுதும் அகால மரணம் அடைய மாட்டீர்கள். இச்சமயத்தில் தான் சிவபாபா வருகிறார். அவருடைய
மகிமையும் பாடப்பட்டுள்ளது. சிவஜெயந்தி கூட கொண்டாடுகிறார்கள். ஆனால் அவரது பண்டாரா எப்படி
இருக்கும் என்பது யாருக்குமே தெரியாது. பாபா கூட உண்மையில் வருகிறார் அல்லவா? குழந்தைகள்
யாரெல்லாம் வருகிறார்களோ அவர்களுக்கு சிவபாபாவின் பண்டாராவிலிருந்து உணவு கிடைக்கிறது. நல்லது.
ஆண்கள் சமர்ப்பணம் ஆகிறார்கள் என்றால் சரி தான். ஒரு வேளை அவர்கள் சமர்ப்பணம் ஆவதில்லை
என்றால் தாய்மார்கள் என்ன செய்வது? ஏனெனில் சம்பாத்தியம் கணவனினுடையது. அவரோ சமர்ப்பணம்
ஆவதில்லை. அவர் சம்பாதித்தால் தானே மனைவி சாப்பிட முடியும்? ஆம். ஜோடியாக சமர்ப்பணம் ஆனார்கள்
என்றால் பின் சிவபாபாவின் பண்டாராவிலிருந்து பாலனை கிடைக்க முடியும். இதை தந்தை குழந்தைகளுக்கு
நல்ல முறையில் புரிய வைக்கிறார். கர்மாதீத் நிலை ஆகும் வரையும் நாம் தந்தையிடம் அமர்ந்துள்ளோம்
என்பதை புத்தியிலிருத்த வேண்டும். நாளுக்கு நாள் நாம் நமது சுயராஜ்யத்திற்கு நெருங்கி வந்து கொண்டே
போகிறோம். காலம் கழிந்து கொண்டே போகிறது. நீங்கள் நெருங்கி வந்துக் கொண்டே இருக்கிறீர்கள். சத்யுகத்தின்
முதல் வருடம் வருவதற்கு இப்பொழுது எத்தனை வருடங்கள் உள்ளன என்று கூறுவீர்கள்? இப்பொழுது
எவ்வளவு நெருக்கத்தில் வந்து விட்டுள்ளீர்கள்? குழந்தைகளே இப்பொழுது உங்களுடைய 84ன் சக்கரம்
முடிவடைகிறது என்று தந்தை கூறுகிறார். நீங்கள் இப்பொழுது 84 பிறவிகளின் சக்கரத்தை அறிந்துள்ளீர்கள்.
சக்கரத்தைப் பார்த்த உடனேயே நாம் இப்பொழுது சங்கமத்தில் உள்ளோம் என்று கூறுவீர்கள். இந்த பக்கம்
இருப்பது கலியுகம். அந்த பக்கம் இருப்பது சத்யுகம். நாளைக்கு நாம் நமது சுகதாமத்தில் இருப்போம்.
உலகத்திற்குத் தெரியாது. அவர்களோ முற்றிலும் காரிருளில் இருக்கிறார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு
மிகுந்த குμ இருக்க வேண்டும். எல்லையில்லாத தந்தையிடமிருந்து நாம் 21 பிறவிகளுக்கு சம்பாத்தியம்
பெறுகிறோம். சதா சுகத்தின் ஆஸ்தியைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்ற இந்த குμ இருக்கிறது.
சொர்க்கவாசி ஆவது என்பது உங்களுடைய அதிர்ஷ்டத்தில் தான் இருக்கிறது. சொர்க்கம் ஒரு அதிசயமான
பொருளாகும். எப்படி உலகில் 7 அதிசயங்களைக் காண்பிக்கிறார்கள் ! இதுவோ எல்லாவற்றையும் விட பெரிய
அதிசயம் ஆகும். அதிசயமான சொர்க்கத்தின் படங்கள் கூட உள்ளன. இந்த இலட்சுமி நாராயணர் சொர்க்கத்தின்
அதிபதியாக இருந்தார்கள். எனவே பாபா எழுதியிருந்தார் லி மேலே சூர்ய வம்சத்தினருடையதை எழுதுங்கள்.
கீழே சந்திர வம்சத்தினருடையதை எழுதுங்கள். அப்பொழுது அரைகல்பம் முடிந்து போய் விடும். சூரிய
02.08.2016
(3/4)
வம்சம் சந்திர வம்சம் 1250 வருடங்கள். பின் இலட்சக்கணக்கான வருடங்களின் விஷயமே இல்லாமல் போய்
விடும். அங்கு புஜ பல சண்டைகளில் எவ்வளவு செலவு ஆகிறது. இங்கு ஆரம்ப முதல் கடைசி வரை எந்த
செலவும் ஆவதில்லை. இதுவோ தந்தை மற்றும் குழந்தைகளின் கணக்கு ஆகும். செலவின் விஷயமே
கிடையாது. இங்கு குழந்தைகள் வந்து புத்துணர்வு (ரிஃப்ரெஷ்) பெற வேண்டும். அதற்காக வீடுகள் ஆகியவை
கட்டுகிறார்கள். குழந்தைகளினுடையதே பைசா ஆகும். அது கூட எவ்வளவோ நாட்கள் கடந்து போய் விட்டன.
இனி மீதம் கொஞ்சம் நாட்கள் தான் உள்ளன. செலவு எதுவும் கிடையாது. நீங்கள் ஒரு பைசா செலவின்றி
ஜீவன் முக்தி அடைகிறீர்கள். இதில் உழைப்பின் விஷயம் மட்டுமே உள்ளது. பகவானையோ எல்லா பக்தர்களும்
நினைவு செய்கிறார்கள். ஆனால் பகவான் யார் என்பதை அறியாமல் உள்ளார்கள். பகவானைத் தெரியாத
காரணத்தினால் நிறைய பேரை பகவான் என்று ஏற்றுக் கொண்டு விடுகிறார்கள். இப்பொழுது குழந்தைகளாகிய
நீங்கள் உண்மையான தந்தையின் அறிமுகம் கொடுக்க வேண்டும். பெரியப் பெரிய படங்களை முக்கியமான
இடங்களில் வையுங்கள் என்று பாபா எவ்வளவு முறை புரிய வைத்துள்ளார். எப்படி விமான நிலையம்
உள்ளது. அவர்கள் நம்மிடம் என்ன வாங்குவார்கள்? இவை எல்லாமே மனிதர்களின் நன்மைக்காக உள்ளது
என்பதை அவர்களுக்குப் புரிய வையுங்கள். இவற்றைப் புரிந்து கொள்வதால் தான் மனிதர்கள் தந்தையிடமிருந்து
ஆஸ்தி பெற்று உலகத்தின் அதிபதி ஆக முடியும். டில்லி முக்கியமானது. டில்லி தலைநகரம் ஆகும் அல்லவா?
அங்கு எல்லோரும் ஒன்று சேருகிறார்கள். அங்கு, தலைநகரத்தில் அது போன்ற பெரிய பெரிய படங்கள்
இருக்க வேண்டும். முக்கியமாக இருப்பதே திரிமூர்த்தி, காலச்சக்கரம் மற்றும் கல்ப விருட்சம். இந்த ஏணிப்படியோ
அற்புதமானது. இதில் விநாசம் ஆகியவை பற்றிக் கூட நல்ல முறையில் எழுதப்பட்டுள்ளது. மேலும் பதீத
பாவனர் பரமபிதா பரமாத்மா ஆவாரா இல்லை தண்ணீரின் கங்கையா? நீங்கள் முடிவெடுங்கள். இறைவன்
எங்கும் நிறைந்தவரா? இல்லை ஒரே ஒரு நிராகார பரமபிதா பரமாத்மாவா என்று பிரம்மா குமார் குமாரிகள்
கேட்கிறார்கள். தந்தையிடமிருந்தோ குழந்தைகளுக்கு ஆஸ்தி கிடைக்கிறது. இந்த படங்கள் தான் முக்கியமானவை.
திரிமூர்த்தியின் படம் கூட மிக மிக மதிப்பு வாய்ந்ததாகும். பிரம்மா மூலமாக விஷ்ணுபுரியின் ஸ்தாபனை
ஆகிறது. பிறகு அவரே பாலனையும் செய்வார். எல்லையில்லாத பாபா சொர்க்கத்திற்கு அதிபதியாக ஆக்குவதற்காக
நமக்கு கற்பிக்கிறார் என்ற அளவற்ற குμ குழந்தைகளுக்கு இருக்க வேண்டும். பாபா வந்து சொர்க்கத்தின்
ஸ்தாபனை மற்றும் நரகத்தின் விநாசம் செய்விக்கிறார். எனவே மகா பாரத போர் கூட கூடவே இருக்கிறது.
ஒவ்வொரு 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகும் இந்த சக்கரம் சுற்றுகிறது. தந்தை கூட கல்ப கல்பமாக
கல்பத்தின் சங்கமயுகத்தில் வருகிறார். கீதையில் அவர்கள் பிறகு யுகே லி யுகே என்று எழுதி விட்டுள்ளார்கள்.
அது கூட 5 யுகங்கள் ஆகும். அப்படியானால் 5 முறை வரட்டுமே ! பிறகு 24 அவதாரங்கள், இன்னின்ன
அவதாரம் என்று ஏன் எழுதி விட்டுள்ளார்கள்? மனிதர்கள் எவ்வளவு யக்ஞம், தவம், தீர்த்த யாத்திரை
ஆகியவைகளை மேற்கொள்கிறார்கள். இவை எல்லாமே பகவானை அடைவதற்கான வழிகள் என்று
நினைக்கிறார்கள். ஆனால் பகவானிடமோ யாருமே போக முடியாது. அரைகல்பம் எவ்வளவு தலையிலடித்துக்
கொண்டார்கள். ஜன்ம ஜன்மாந்திரமாக சுற்றி வந்தார்கள். இது இது செய்தார்கள் .... பிறகும் தந்தை கிடைக்கவில்லை.
இப்பொழுது தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு நெருக்கத்தில் இருக்கிறார். உங்களிடம்
உரையாடுகிறார். உங்களுக்குப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். கல்ப கல்பமாக மிகச் சரியாக நாம் இவ்வாறே
சந்திக்கிறோம் என்று நீங்கள் புரிந்துள்ளீர்கள். எது நடந்து முடிந்ததோ கல்ப கல்பமாக அவ்வாறே ஆகும்.
அதே தாதா வைர வியாபாரி இருப்பார். பின் அவருக்குள் தான் பாபா பிரவேசம் செய்வார். பிறகு அதே
குழந்தைகள் வந்து தந்தையினுடையவராக ஆவார்கள். மேலும் மீண்டும் சொர்க்கத்தின் ஆஸ்தி பெறுவார்கள்.
இது குழந்தைகளாகிய உங்களுடன் தந்தையினுடைய அனாதி அவினாμ பாகம் கல்ப கல்பமாக இப்படியே
திரும்பத் திரும்ப நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட
செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும்
காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. இது கல்யாணகாரி சங்கமயுகம் ஆகும். இதில் ஒவ்வொரு விஷயத்திலும் நன்மை உள்ளது.
சம்பாத்தியமே சம்பாத்தியம் ஆகும். தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்து 21
பிறவிகளுக்கு வாழ்க்கையை அமர வாழ்க்கையாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
2. இல்லறத்தில் இருந்தபடியே மனம் புத்தியினால் சமர்ப்பணமாக வேண்டும். ஸ்ரீமத் படி செலவு
செய்ய வேண்டும். முழுமையாக டிரஸ்டியாகி இருக்க வேண்டும். சிவபாபாவின் பண்டாரா
நிரம்பியுள்ளது. கஷ்டம் துக்கம் தூர போய் விடும்.
02.08.2016
(4/4)
வரதானம்: துண்டிப்பது, வளைப்பது மற்றும் இணைப்பது (தோட்னா, மோட்னா,
ஜோட்னா) லி இந்த 3 வார்த்தைகளின் நினைவு மூலமாக எப்பொழுதும் வெற்றி அடைபவர்
ஆவீராக.
முழு படிப்பு மற்றும் அறிவுரைகளின் சாரம் இந்த 3 வார்த்தைகளாகும். (1) கர்ம பந்தனத்தை துண்டிக்க
வேண்டும் (2) தங்களுடைய சுபாவம் சம்ஸ்காரத்தை வளைக்க வேண்டும் (3) ஒரு தந்தையிடம் சர்வ
சம்பந்தத்தை இணைக்க வேண்டும். இதே மூன்று வார்த்தைகள் முழுமையான வெற்றியை அடைபவராக
ஆக்கி விடும். இதற்காக எதெல்லாம் அழியக் கூடிய பொருட்களை இந்த கண்களால் பார்க்கிறீர்களோ அவை
எல்லாமே அழிந்து போய் விட்டுள்ளது என்ற இதே நினைவு எப்பொழுதும் இருக்கட்டும். அவற்றை
பார்க்கையிலும் தங்களது புதிய சம்பந்தம், புதிய படைப்பை பார்த்துக் கொண்டே இருந்தீர்கள் என்றால் ஒரு
பொழுதும் தோல்வி ஏற்பட முடியாது.
சுலோகன்: எப்பொழுதும் தூய்மையாகவும் தெளிவாகவும் (க்ளீன் மற்றும் க்ளியர்)
இருப்பதே யோகியின் அடையாளம் ஆகும்.
(1/4)
03
08.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! பிறரைப் பற்றிய (வீணான) சிந்தனையை விட்டு தனக்கு நன்மை
செய்யுங்கள். நீங்கள் தங்கம் போல் ஆகி மற்றவர்களுக்கு வழி சொல்லுங்கள்.
கேள்வி : அசரீரி ஆவதற்கான பயிற்சியை யார் சதா செய்து கொண்டே இருக்கின்றனரோ,
அவர்களின் அடையாளங்களைச் சொல்லுங்கள்.
பதில் : அவர்கள் வலுக்கட்டாயமாகத் தங்களின் கர்மேந்திரியங்களை வசப்படுத்துவதில்லை. ஆனால்
அவர்களின் கர்மேந்திரியங்கள் தாமாகவே குளிர்ந்து விடுகின்றன. நாம் ஆத்மாக்கள் சகோதரலிசகோதரர்கள்.
இந்த நினைவு தானாகவே அமைந்து விடுகின்றது. தேக அபிமானம் விடுபட்டுக் கொண்டே செல்கின்றது.
பெயர்லிவடிவத்தின் நஷா முடிந்து கொண்டே செல்கின்றது. மற்றவர்களின் நினைவு வருவதில்லை.
பாடல் : நீ அன்புக் கடலாக இருக்கிறாய்........
ஓம் சாந்தி. இவர் ஒன்றும் அனபின் கடலாக மட்டும் இல்லை, ஞானக்கடலாகவும் உள்ளார். ஞானம்
மற்றும் அஞ்ஞானம். ஞானம் பகல் என்றும் அஞ்ஞானம் இரவு என்றும் சொல்லப் படுகின்றது. ஞானம் என்ற
சொல் தான் நல்லது. அஞ்ஞானம் என்ற சொல் கெட்டது. அரைக்கல்பம் ஞானத்தின் பிராலப்தம் (பயன்).
அரைக்கல்பம் அஞ்ஞானத்தின் பிராலப்தம். அஞ்ஞானத்தின் பிராலப்தம் துக்கமாகும். ஞானத்தின் பிராலப்தம்
சுகம். இதுவோ மிகவும் சுலபமாகப் புரிந்து கொள்வதற்கான விஷயங்களாகும். ஞானத்தினுடையது பகல்.
அஞ்ஞானம் என்பது இரவு. இதுவும் யாருக்கும் தெரியாது. ஞானம் எனச் சொல்லப் படுவது எது, அஞ்ஞானம்
எனச் சொல்லப்படுவது எது லி இவை எல்லையற்ற விஷயங்களாகும். ஞானம் என்பதென்ன, பக்தி என்பதென்ன
என்று நீங்கள் அனைவருக்கும் புரிய வைக்கிறீர்கள். ஞானத்தினால் நீங்கள் பூஜைக்குரியவராக ஆகிக் கொண்டிருக்
கிறீர்கள். பூஜைக்குரிவர்களாக ஆகி விட்டீôகள் என்றால் என்னென்ன கோவில்கள் முதலானவை உள்ளன
மற்றும் பூஜைக்கான சாதனங்கள் எவை என அறிந்து கொண்டு விடுகிறீர்கள். இவையனைத்தும் நினைவுச்
சின்னங்கள் என்பதை அறிந்து கொள்கிறீர்கள். யார் பூஜை செய்வதற்குச் செல்கின்றனரோ, அவர்கள் அறிந்து
கொள்ளவில்லை. பூஜை என்பது பக்தி எனச் சொல்லப்படும். பக்தியின் பலனைக் கொடுப்பதற்காக பகவான்
பக்தர்களோடு சந்திக்க வேண்டியுள்ளது. அதுவும் பகவானே வந்து பூஜாரியில் இருந்து பூஜைக்குரியவர்களாக
ஆக்குகிறார். பூஜைக்குரியவர்கள் சத்யுகத்திலும் பூஜாரிகள் கலியுகத்திலும் உள்ளனர். குழந்தைகள் நீங்கள்
அறிவீர்கள், இன்று இருப்பது என்ன, நாளை என்னவாகும் என்று. விநாசமோ நிச்சயமாக நடக்கப் போகிறது.
எந்த நேரம் வேண்டுமானாலும் நடக்கலாம். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அநேக
இயற்கை ஆபத்துகள் நடைபெறும் என்று பாடப் பட்டும் உள்ளது. இதையோ எழுதி வைக்க வேண்டும் லி
உள்நாட்டு யுத்தம் மற்றும் இயற்கை ஆபத்துகள் லி அவற்றை ஒன்றும் ஈஸ்வரிய ஆபத்துகள் எனச் சொல்ல
மாட்டார்கள். இதுவோ டிராமாவில் விதிக்கப்பட்டுள்ளது. அதில் இயற்கைச் சேதங்கள் அனைத்தும் வரவிருக்கின்றன.
விநாசமாவதில் அவை உதவி செய்யும். ஏவுகணைகளால் வெடிகுண்டு மழை பொழியும். பட்டினியால் இறந்து
போவார்கள். நிலநடுக்கம் முதலியன வரப் போகின்றன. இவற்றின் மூலமாகத் தான் விநாசம் நடைபெற
இருக்கின்றது. இல்லையென்றால் சத்யுகத்தில் இவ்வளவு கொஞ்சம் மனிதர்கள் எப்படி இருப்பார்கள்? நிச்சயமாக
அனைவரும் ஒன்றாக அழிந்து விடுவார்கள். குழந்தைகள் நன்றாக அறிவார்கள், இந்த ஆடைகள் (சரீரம்)
அனைத்தும் சுத்தம் செய்யப் படும். இது எல்லையற்ற பெரிய இயக்கம். அசுத்தத் துணியை சுத்தம் செய்ததாகப்
பாடப் படுகின்றது. இந்தத் துணிகளின் விசயம் கிடையாது. இது சரீரத்தின் விசயம். ஆத்மாக்களை யோக
பலத்தினால் சுத்தம் செய்ய வேண்டும். இச்சமயம் 5 தத்துவங்கள் தமோபிரதானமாக உள்ளன என்றால்
சரீரமும் அது போல் உருவாகின்றது. பதீத பாவனர் பாபா வந்து தூய்மைப்படுத்துகிறார். மற்ற அனைத்தும்
அழிந்து போகின்றன. எப்படி தூய்மை ஆகின்றனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். மிகவும் சுலபமான வழி
சொல்கிறார். ஆனால் மனிதர்களோ எதையும் புரிந்து கொள்ளவில்லை. எங்கெங்கே பக்தி, யக்ஞம் முதலியன
நடைபெறுகின்றதோ, அங்கே சென்று புரிய வைக்க வேண்டும் லி யாருக்கு நீங்கள் பக்தி செய்கிறீர்களோ,
அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்வதால்தான் நீங்கள் தேவதை ஆக முடியும். அவர்கள்
எப்படி ஜீவன்முக்தி அடைந்தார்கள் என்பதை வந்து புரிந்துக் கொள்ளுங்கள். கோவில்களில் அமர்ந்து வாழ்க்கை
வரலாற்றைப் புரிய வைப்பதால் நன்றாகப் புரிந்து கொள்வார்கள்.
நீங்களும் பாபாவிடமிருந்து இப்போது வாழ்க்கை வரலாற்றைக் கேட்கிறீர்கள். குழந்தைகள் உங்களுக்கு
எவ்வளவு ஞானம் கிடைக்கின்றது! பரமபிதா பரமாத்மாவின் வாழ்க்கை வரலாற்றை யாருமே அறிந்து
கொள்ளவில்லை. சர்வவியாபி எனச் சொல்வதால் வாழ்க்கை வரலாறு ஆகி விடாது. குழந்தைகள் நீங்கள்
இப்போது பரமபிதா பரமாத்மாவின் வாழ்க்கை வரலாற்றை அறிவீர்கள். அதாவது முதல்லிஇடைலிகடை பற்றி
(2/4)
03.08.2016
அறிவீர்கள். இந்தச் சமயத்தை ஆரம்பம் எனச் சொல்வார்கள். இந்தச் சமயத்தில் தான் பாபா வந்து தூய்மை
யற்றவர்களை தூய்மையாக்குகிறார். பிறகு கல்பத்தின் மத்தியில் (துவாபரயுகம்) பக்தியின் பாகம் நடைபெறுகின்றது.
பாபா சொல்கிறார், இந்த சமயத்தில் தான் நான் வந்து ஸ்தாபனை செய்கிறேன், மற்றும் செய்விக்கிறேன்.
செய்பவர்லிசெய்விப்பவராக இருக்கிறேன். பிரேரணையை (தூண்டுதல்) செய்தல் எனச் சொல்ல மாட்டார்கள்.
பாபா வந்து அவருடைய கர்மேந்திரியங்கள் மூலமாகச் செய்கிறார். இதில் பிரேரணையின் விஷயம் கிடையாது.
செய்பவர்லிசெய்விப்பவர் என்றால் நிச்சயமாக நேரில் இருந்து தான் செய்விப்பார். பிரேரணையினால் எதுவுமே
நடைபெற முடியாது. ஆத்மா, சரீரம் இல்லாமல் எதையும் செய்ய இயலாது. அநேகர் சொல்கின்றனர், ஈஸ்வரன்
தான் அனைத்தையும் செய்கிறார் என்று. பாபா, நீங்கள் பிரேரணை செய்யுங்கள், என்னுடைய கணவரின் புத்தி
சரியாகிவிட வேண்டும் என்கின்றனர். பாபா சொல்கிறார் லி இதில் பிரேரணையின் விஷயமோ எதுவும் கிடையாது.
பிறகு சிவஜெயந்தி ஏன் கொண்டாடப்படுகின்றது? பிரேரணை மூலம் காரியம் நடைபெறும் என்றால் பிறகு
அவர் வந்தது எதற்காக? ஒன்று, ஈஸ்வரன் என்பவர் என்ன பொருளாக உள்ளார்? இது அவர்களுக்குத்
தெரியாது. ஈஸ்வரனின் பிரேரணையினால் அனைத்தும் நடைபெறுகின்றது என்று மட்டும் சொல்லி விடுகின்றனர்.
நிராகார் (சரீரமற்ற) பகவான் பிரேரணையினால் என்ன செய்வார்? அவரோ செய்பவர்லி செய்விப்பவராக உள்ளார்.
அவர் வந்து வழி சொல்கிறார். கர்மேந்திரியங்கள் மூலம் முரளி சொல்கிறார். கர்மேந்திரியங்களின் ஆதாரத்தை
எடுக்காத வரை எப்படி முரளி சொல்ல முடியும்? ஞானக்கடல் என்றால் சொல்வதற்கு வாய் வேண்டும்
இல்லையா? இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு முழு உலகத்தின் முதல்லிஇடைலிகடை பற்றித் தெரியும்.
முழு ஞானமும் கிடைத்துள்ளது. ஞானம் இல்லாமல் கதி (முக்தி, ஜீவன் முக்தி) இல்லை எனப் புரிந்து
கொண்டுள்ளனர். ஞானத்தை யார் கொடுப்பது? அஞ்ஞான மார்க்கம் மற்றும் ஞான மார்க்கத்திற்கிடையில்
வேறுபாட்டையோ பார்த்திருக்கிறீர்கள் இல்லையா? விஞ்ஞானம் என்றும் சொல்கின்றனர். அஞ்ஞானம் என்பது
இருள். மற்றப்படி ஞானம் மற்றும் விஞ்ஞானத்தை நாம் முக்திலிஜீவன்முக்தி என்றும் சொல்லலாம். உங்களுக்கு
இப்போது தூய்மை அடைவதற்கான ஞானம் கிடைக்கின்றது. நீங்கள் சுயதரிசனச் சக்கரதாரி ஆகிறீர்கள்.
யாராவது கேட்டால் வியப்படைவார்கள். ஆத்மா ஞானத்தைப் பெற்றுக் கொள்கிறது என்றால் ஆத்மா நிச்சயமாக
சம்ஸ்காரத்தை எடுத்துச் செல்லும் இல்லையா எனக் கேட்பார்கள். மனிதரில் இருந்து தேவதை ஆகிறீர்கள்
என்றால் ஞானம் இருக்க வேண்டும். ஆனால் பாபா புரிய வைக்கிறார், பயனை (பிராலப்தம்) அடைவதற்காகவே
இந்த முயற்சி. பயன் கிடைத்து விட்டதென்றால் பிறகு ஞானத்திற்கு என்ன தேவை உள்ளது? சத்யுகம்
என்பதே குழந்தைகளாகிய உங்களுக்குக் கிடைக்கின்ற பலன் இந்த விசயங்களைக் கேட்டாலே வியப்படைவார்கள்.
இந்த ஞானம் பரம்பரையாக ஏன் நடைபெறுவதில்லை? பாபா சொல்கிறார், இது மறைந்து விடுகின்றது. பகல்
வந்து விட்டால் பிறகு அஞ்ஞானமோ (இருள்) கிடையாது. அதனால் ஞானத்தின் தேவை அங்கே கிடையாது.
இவை கூட புரிந்து கொள்வதற்கும், புரிய வைப்பதற்காகவும் உள்ள விசயங்களாகும். சட்டென்று யாராலும்
புரிய வைக்க முடியாது. சிவபாபா பாரதத்தில் தான் வருகிறார். குழந்தைகளுக்காகப் பரிசு கொண்டு வருகிறார்,
பக்தியின் பலனைக் கொடுப்பதற்காக. இந்த விநாசமும் நிச்சயமாக நடைபெறப் போகின்றது. அதற்கான அறிகுறிகள்
காணப்படுகின்றன. நீங்கள் கேட்டுக் கொண்டே இருப்பீர்கள் லி தீப்பொறி எழுகிறது என்றால் ஓரிரு மணிக்குள்
முழுக் கட்டடமும் எரிந்து சாம்பலாகி விடும். இது ஒன்றும் புது விசயம் கிடையாது. விநாசமோ நிச்சயமாக
நடைபெறப் போகிறது. சத்யுகத்தில் இருப்பவர்கள் கொஞ்சம் மனிதர்கள், உயர்ந்தவர்கள். ஆக, உயர்ந்தவராக
ஆவதில் எவ்வளவு முயற்சி செய்ய வேண்டி உள்ளது! மாயா மூக்கை ஒரேயடியாகப் பிடித்து விடுகிறது. இது
போல் கீழே விழுகிறவர்களுக்கு அதிகக் காயம் ஏற்பட்டு விடுகின்றது. பிறகு அதிக நேரம் பிடிக்கின்றது.
பெரியதிலும் பெரிய காயம் காம விகாரத்தினுடையது. அதனால் காமம் மகாசத்ரு எனச் சொல்லப்படுகின்றது.
இது தான் தூய்மையை இழக்கச் செய்வது, ஆக்குவது. விகாரத்தினால் தான் சண்டை நடைபெறுகின்றது.
விகாரத்திற்காக விடுவதில்லை என்றால் இதைவிட பாத்திரங்களைத் துலக்குவது நல்லது என்று நிச்சயமாகச்
சொல்வார்கள். கூட்டிப் பெருக்கும் வேலை செய்தாலும் தூய்மையாக இருப்போம். இதில் அதிக தைரியம்
வேண்டும். யாராவது பாபாவிடம் அடைக்கலமாக வருகிறார்கள் என்றால் பிறகு மாயாவும் சண்டையிடத்
தொடங்குகிறது. 5 விகாரங்களின் நோய் இன்னும் அதிகமாகக் கொந்தளிக்கின்றது. முதலிலோ பக்கா நிச்சய
புத்தி வேண்டும். உயிருடன் இருந்து கொண்டே இறந்து விட்டனர். இங்கிருந்து நங்கூரம் எடுக்கப்பட்டு
விட்டது. கலியுக விகாரங்களின் கரையிலிருந்து (கட்டுப்பாட்டிலிருந்து) நீங்கள் விடுபட்டு விட்டீர்கள். இப்போது
நாம் யாத்திரையில் போய்க் கொண்டிருக்கிறோம் லி நாம் அசரீரியாகி நம் வீட்டுக்குச் செல்கிறோம். ஆத்மாவுக்கு
இந்த ஞானம் உள்ளதுலிநாம் ஒரு சரீரம் விட்டு வேறொன்றில் செல்வோம். நாம் இல்லற விவகாரங்களில்
இருந்து கொண்டே தாமரை மலருக்குச் சமமாகப் தூய்மையாகி யாத்திரையில் உள்ளோம். புத்தியில் நினைவிருக்க
வேண்டுமலி இதுவோ சுடுகாடு. பிறகு நாம் சுகதாமம் செல்வோம். நமக்கு பாபா ஆஸ்தி தருவதற்கான யுக்தி
சொல்லிக் கொண்டிருக்கிறார். தூய்மையாவதற்காக நாம் யோகத்தில் இருக்கிறோம். நினைவினால் தான் விகர்மங்கள்
விநாசமாகும். அப்போது ஆத்மா சரீரத்தை விடும். இந்த யாத்திரை எவ்வளவு அற்புதமானது! பாபாவை
(3/4)
03.08.2016
நினைவு செய்யுங்கள், தங்களின் இராஜதானியை நினைவு செய்யுங்கள், போதும். இவ்வளவு சுலபமான விஷயம்
கூட நினைவிருப்பதில்லை. அலஃப்லிதந்தையை நினைவு செய்யுங்கள், போதும். ஆனால் மாயா அதையும்
நினைவு செய்ய விடுவதில்லை, முயற்சி செய்ய வேண்டியுள்ளது. ஆத்மாவுக்கு ஞானம் கிடைத்துள்ளது லி
நம்முடைய பாபா வந்து விட்டார். ஆத்மா படிக்கின்றது இல்லையா? ஆத்மா சரீரத்தின் மூலம் பிறவி
எடுக்கின்றது. ஆத்மா சகோதரலிசகோதரன் ஆகும். தேக அபிமானத்தில் வருவதால் பிறகு அநேக சம்மந்தங்கள்
ஆகி விடுகின்றன. இங்கே நீங்கள் சகோதரலிசகோதரிகளாக ஆகியிருக்கிறீர்கள். தங்களுக்குள் சகோதரலி
சகோதரர்களாகவும் இருக்கிறீர்கள். சகோதரலிசகோதரிகளாகவும் இருக்கிறீர்கள். இல்லற மார்க்கம் இல்லையா?
இருவருக்குமே ஆஸ்தி வேண்டும். ஆத்மா தான் முயற்சி செய்கிறது. தேக அபிமானம் இருக்கக் கூடாது.
சரீரமே இல்லை என்றால் எதன் மூலம் விகாரத்தில் செல்வீர்கள்? நாம் ஆத்மா, பாபாவிடம் செல்ல வேண்டும்.
எவ்வளவு யோகி ஆகிக் கொண்டே செல்கிறோமோ, கர்மேந்திரியங்கள் சாந்தமாகிக் கொண்டே செல்லும். தேக
அபிமானத்தில் வருவதால் கர்மேந்திரியங்கள் சஞ்சலமடைகின்றன. ஆத்மா அறிந்துள்ளது, நமக்குப் பிராப்தி
(நன்மை) ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. சரீரத்திலிருந்து விலகிக் கொண்டே செல்வீர்களானால் கர்மேந்திரியங்கள்
சாந்தமாகிக் கொண்டே செல்லும். சந்நியாசிகள் மருந்து உட்கொண்டு கர்மேந்திரியங்களை சாந்தப் படுத்துகின்றனர்.
அதுவோ ஹடயோகம் ஆகிறது இல்லையா? நீங்களோ நினைவு மூலம் காரியமாற்ற வேண்டும். யோகபலத்தினால்
நீங்கள் கர்மேந்திரியங்களை வசப்படுத்த முடியாதா என்ன? ஆத்ம அபிமானி ஆகிக் கொண்டே செல்வீர்களானால்
அந்த அளவுக்குக் கர்மேந்திரியங்கள் சாந்தமாகிக் கொண்டே செல்லும். மிகுந்த முயற்சி செய்ய வேண்டியுள்ளது.
இதனால் கிடைக்கும் பலன் மிக உயர்ந்தது இல்லையா? பாபா சொல்கிறார், யோபலத்தினால் நீங்கள் உலகின்
எஜமானர் ஆகிறீர்கள். கர்மேந்திரியங்கள் மீது வெற்றி கொள்கிறீர்கள். அதனால் பாரதத்தின் யோகம் புகழ்
பெற்றதாக உள்ளது. நீங்கள் மனிதரில் இருந்து தேவதையாக, தூய்மையற்றதிலிருந்து தூய்மையானவர்களாக
ஆகிறீர்கள். பிரஜைகளும் கூட அங்கே சொர்க்கவாசியாகத் தானே இருக்கிறார்கள்! யோகபலத்தினால் நீங்கள்
சொர்க்கவாசி ஆகிறீர்கள். தேக பலத்தால் ஆக முடியாது. முயற்சி ஒன்றும் அதிகம் இல்லை. குமாரிகளுக்கோ
முயற்சியே தேவை இல்லை என்பது போலத் தான். அவர்கள் சுதந்திரமாக உள்ளனர். விகாரத்தில் சென்றால்
பெரிய பஞ்சாயத்தாக ஆகி விடுகின்றது. குமாரியாக இருப்பது நல்லது. இல்லையென்றால் பிறகு அதர் குமாரி
என்ற பெயர் ஆகி விடும். யுகலாகக் கூட ஏன் ஆக வேண்டும்? இதிலும் கூட பெயர் வடிவத்தின் நஷா ஏறி
விடுகின்றது. இதுவும் கூட மூர்க்கத்தனம் ஆகும். யுகல் (தம்பதி) ஆன பிறகு பவித்திரமாக இருப்பதற்காக மிக
நல்ல தைரியம் வேண்டும். ஞானத்தின் முதிர்ச்சி வேண்டும். அநேகர் தைரியம் வைக்கின்றனர். ஆனால்
நெருப்பின் ஜுவாலை வந்து விடுமானால் விளையாட்டு முடிந்து போகும். அதனால் பாபா சொல்கிறார்,
குமாரிகள் பிறகும் கூட நல்லவர்கள். அதர் குமாரி ஆவதற்கான சிந்தனை கூட ஏன் வைக்க வேண்டும்?
குமாரிகளுக்கு நல்ல பெயர் உள்ளது. பால பிரம்மச்சாரியாக உள்ளனர். பால பிரம்மச்சாரியாக இருப்பது நல்லது.
அதனால் சக்தி இருக்கும். மற்ற யாருடைய நினைவும் வராது. மற்றப்படி தைரியம் இருந்தால் ஆகிக் காட்டுங்கள்.
ஆனால் முயற்சி தேவதைப் படுகின்றது. இருவராக ஆகி விடுகின்றனர் இல்லையா? குமாரி என்றால் தனியாக
உள்ளனர். இருவர் என்றால் வேற்றுமை வந்து விடுகின்றது. முடிந்த வரை குமாரியாக இருப்பதே நல்லதாகும்.
குமாரி சேவைக்காக வெளியில் வர முடியும். பந்தனத்தில் வருவதால் பந்தனம் அதிகமாகி விடும். அந்த
மாதிரி புத்தியைச் சிக்க வைக்கிற அளவுக்கு வலையை ஏன் பின்னிக் கொள்ள வேண்டும்? அத்தகைய
வலையில் சிக்கிக் கொள்வது சரியல்ல. குமாரிகளுக்கோ மிக நல்லது. குமாரிகள் நல்ல பெயரையும் வெளிப்படுத்தி
யுள்ளனர். கன்னையா (கிருஷ்ணன்) என்ற பெயர் பாடப்படுகின்றது இல்லையா? குமாரியாக இருப்பது மிக
நல்லது. இவர்களுக்கு மிகவும் சுலபம். மாணவ வாழ்க்கை தூய்மையான வாழ்க்கையாகவும் உள்ளது. புத்தியும்
புத்துணர்ச்சியுடன் இருகக்கும். குமார்கள் பீஷ்ம பிதாமகர் போல் ஆக வேண்டும். கல்பத்திற்கு முன்பும் கூட
அது போல் இருந்துள்ளனர். அதனால் தான் தில்வாடா கோவிலில் நினைவுச் சின்னம் உருவாகியுள்ளது.
இப்போது தந்தை குழந்தைகளுக்குக் கட்டளையிடுகிறார் லி என்னை நினைவு செய்யுங்கள். மற்ற அனைத்து
விசயங்களையும் விட்டுவிட்டு நீங்கள் உங்கள் நன்மையைச் செய்து கொள்ளுங்கள். மறதியால் தவறு ஏற்பட்டு
விடுகிறது, குழந்தைகள் கீழே விழுந்து விடுகின்றனர். நீங்கள் வீண் சிந்தனையை விட்டு தங்களின் நன்மையைச்
செய்து கொள்ளுங்கள். மற்றச் சிந்தனைகளில் செல்லவே வேண்டாம். நீங்கள் தங்கம் போல் ஆகி விடுங்கள்.
மற்றவர்களுக்கும் வழி சொல்லுங்கள். சதோபிரதானம் ஆவதற்கு ஒரே உபாயமே உள்ளது. தூய்மையாகாமல்
முக்திதாமம் செல்ல இயலாது. உபாயம் ஒன்று மட்டுமே உள்ளது. பிறகு அந்த் மதி úஸா கதி ஆகி விடும்.
மற்றவர்கள் பற்றி வீணானவற்றைப் பேசுவதை விட்டு விடுங்கள். இல்லையென்றால் தனக்குத் தான் நஷ்டம்
செய்து கொள்வீர்கள். பாபா சாபம் ஒன்றும் தருவதில்லை. ஸ்ரீமத் படி நடக்கவில்லை என்றால் தனக்குத்
தானே சாபம் இட்டுக் கொள்கின்றனர். நல்லது.
(4/4)
03.08.2016
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும்
தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம் :
1) நிச்சயபுத்தி உள்ளவராகி உயிருடன் இருந்து கொண்டே இந்தப் பழைய உலகத்தில் இருந்து
தனது நங்கூரத்தை எடுத்து விட வேண்டும். பாபாவின் ஒவ்வொரு கட்டளையையும் பின்பற்றி
தனக்குத் தான் நன்மை செய்து கொள்ள வேண்டும்.
2) மற்றவர்கள் பற்றிய சிந்தனையை விட்டு தனது புத்தியைத் தூய்மையான தங்கமாக ஆக்கிக்
கொள்ள வேண்டும். மற்றவர் பற்றிய வீண் பேச்சுகளில் தனது நேரத்தை வீணாக்கக் கூடாது.
யோகபலத்தினால் தன்னுடைய கர்மேந்திரியங்களை சாந்தமானதாக, குளிர்ந்ததாக ஆக்கிக்
கொள்ள வேண்டும்.
வரதானம் : ஆன்மீக போதை மற்றும் அடைய வேண்டிய இலக்கின் நினைவு மூலம்
அனைத்துக் கர்மேந்திரியங்களையும் கட்டளைப்படி நடத்தக் கூடிய
கிரீடம் மற்றும் சிம்மாசனத்திற்கு உரியவர் ஆகுக.
சங்கமயுகத்தில் பாப்தாதாவிடமிருந்து அனைத்துக் குழந்தைகளுக்கும் கிரீடம் மற்றும் சிம்மாசனம்
கிடைத்துள்ளது. தூய்மையின் கிரீடமும் உள்ளது என்றால் பொறுப்புகளின் கிரீடமும் உள்ளது. அழியாத
ஆசனமும் உள்ளதென்றால் மன சிம்மாசனதாரியாகவும் இருக்கிறீர்கள். அத்தகைய இரட்டைக் கிரீடம் மற்றும்
சிம்மாசனத்திற்கு உரியவராக ஆகிறீர்கள் என்றால் நஷா மற்றும் இலக்கு தானாகவே நினைவிருக்கும். பிறகு
இந்தக் கர்மேந்திரியங்கள், இதோ வந்தேன்(கட்டளையிடுங்கள்) எதிரில் நிற்கும் என்று. யார் கிரீடம் மற்றும்
ஆசனத்தை விட்டு விடுகிறார்களோ, அவர்களின் கட்டளையை எந்த ஒரு வேலையாளும் (கர்மேந்திரியம்)
ஏற்று நடக்காது.
சுலோகன் : பலவீனமான சங்கல்பங்கள் தான் மகிழ்ச்சி நிறைந்தவராக ஆக்குவதற்கு
பதில் கேள்விகள் நிறைந்தவராக ஆக்கி விடுகின்றது.
(1/4)
04
08.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! நீங்கள் உண்மையிலும் உண்மையான இராஜரிμகள்,
இராஜயோகிகளாக இருக்கிறீர்கள், நீங்கள் இராஜ்யத்தை அடைவதற்காக கண்டிப்பாக
தூய்மையடைய வேண்டும்.
கேள்வி: எந்த ஒரு கவனம் இராஜ்யத்திற்கு தகுதி வாய்ந்தவர்களாக ஆக்குகிறது?
பதில்: படிப்பின் மீது முழுமையிலும் முழுமையான கவனம் இருந்தது என்றால் இராஜ்யம் கிடைத்து
விடும். தந்தை சொல்வதை நல்ல விதமாக கேட்டு தாரணை செய்யுங்கள். தந்தை சொன்னார், குழந்தைகள்
கேட்டார்கள் என்றால் இராஜ்யம் கிடைத்து விடுகிறது. கேட்கும்போது கொட்டாவி விட்டாலோ, சோம்பல்
முறித்தாலோ, புத்தி அலைந்தாலோ இராஜ்யத்தை இழந்து விடுவீர்கள். ஆகையால் படிப்பின் மீது முழுமையிலும்
முழுமையான கவனத்தைக் கொடுங்கள்.
பாடல்: நாம் அந்த வழியில் நடக்க வேண்டும். . .
ஓம் சாந்தி. ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்குப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். இன்று
குழந்தைகளுக்கு ஹடயோகம் மற்றும் இராஜயோகம் குறித்து புரிய வைக்கிறார். அவர்கள் சொல்லிக் கொடுப்பவை
அனைத்தும் ஹடயோகம், ஏனென்றால் அவர்கள் கர்ம சன்னியாசிகள் என குழந்தைகளுக்குத் தெரியும்.
உண்மையில் பார்க்கப் போனால் இல்லறவாசிகளுக்கு ஹடயோகம் கர்ம சன்னியாசம் கற்பிக்கக் கூடாது. அது
துறவற மார்க்கம் ஆகும். அந்த தர்மமே தனியானதாகும். உங்களுடையது தேவி தேவதா தர்மமாகும். அந்த
தேவி தேவதைகள் இராஜயோகத்தின் மூலமே இராஜ்யத்தை அடைந்தனர். இப்போது நீங்கள் இராஜரிμகளாக
இருக்கிறீர்கள். யார் தூய்மையாய் இருக்கின்றனரோ அவர்கள் ரிμ எனப்படுகின்றனர். இப்போது நீங்கள்
தூய்மையாய் இருக்கிறீர்கள். தூய்மையாய் இல்லாவிட்டால் அவர்களை ரிμ என சொல்ல முடியாது. நீங்கள்
இராஜ்யத்தை அடைவதற்காக தூய்மையடைகிறீர்கள். அவர்கள் ஒன்றும் இராஜ்யத்தை அடைவதற்காக
தூய்மையடைவதில்லை. தூய்மையான உலகில் நமக்கு தூய்மையான இராஜ்யம் இருந்தது என நீங்கள்
அறிவீர்கள். பாரதத்தில்தான் 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தேவி தேவதைகளின் பூஜைக்குரிய தூய்மையான
இல்லற மார்க்கம் இருந்தது. இப்போது பூஜாரிகளாக தூய்மையற்றவர்களாக ஆகி விட்டனர். தூய்மையற்றவர்களாக
எப்படி ஆனார்கள்? 84 பிறவிகளின் கணக்கு அல்லவா. சகஜ இராஜயோகத்தை கற்பித்துக் கொண்டிருக்கும்
தந்தைதான் உங்களுக்கு 84 பிறவிகளின் கணக்கை கூறுகிறார். மற்ற தர்மத்தைப் பற்றி சன்னியாசி தர்மத்தவர்
களுக்கு என்ன தெரியும்? இது தேவி தேவதைகளின் பழமையான தர்மமாகும். அது பின்னால் வரக்கூடிய
தர்மமாகும். யார் வாழ்ந்திருந்து சென்றனரோ அவர்களைப் பற்றி சன்னியாசிகள் புரிந்து கொள்ள முடியாது.
யார் பின்னால் வரக் கூடியவர்களோ அவர்களுக்கு புரிய வைத்தபடி செல்கின்றனர். ஹடயோகம் பலவிதமானது
என நீங்கள் அறிவீர்கள். துவாபரத்திலிருந்து பக்தி மார்க்கத்துடன் ஹடயோகமும் தொடங்குகிறது. இப்போது
இராஜயோகம் உள்ளது. அந்த ஹடயோகத்தை பிறவி பிறவிகளாக கற்றபடி வந்தனர். இராஜயோகத்தை நீங்கள்
ஒரு பிறவியில்தான் கற்கிறீர்கள். அவர்கள் பிறவி பிறவிகளாக மறுபிறவிகள் அடைந்து ஹடயோகம் கற்கத்தான்
வேண்டும். நீங்கள் இராஜயோகம் கற்பதற்காக மறுபிறவி எடுக்க வேண்டியதில்லை. இந்த இராஜயோகத்தை
நீங்கள் சங்கமயுகத்தில் மட்டும்தான் கற்கிறீர்கள். இராஜ்யம் கிடைத்து விட்டது, சொர்க்கமாகி விட்டது எனும்போது
மற்ற அனைத்து தர்மங்களும் முடிந்து விடுகின்றன. நீங்கள் இராஜரிμகளாக இருக்கிறீர்கள். ராதா கிருஷ்ணர்
கூட தூய்மையானவர்கள் அல்லவா. கிருஷ்ணரை மஹாத்மா எனவும் சொல்கின்றனர். மஹாத்மாக்கள் தூய்மையாய்
இருப்பார்கள். நீங்களும் கூட இப்போது மஹாத்மா மற்றும் ராஜரிμகளாக இருக்கிறீர்கள். மஹாத்மா என்றால்
தூய்மையானவர்கள், மஹான் ஆத்மா. இந்த விசயங்கள் எந்த சாஸ்திரங்களிலும் இல்லை. சாஸ்திரங்கள்
பிற்பாடு உருவாகின்றன. கதைகளைப் போல அமர்ந்து எழுதுகின்றனர்.நடந்து முடிந்ததை அமர்ந்து விளையாட்டாக
உருவாக்குகின்றனர். உண்மை எதுவும் இல்லை. இப்போது தந்தை குழந்தைகளை நடைமுறையில் படிக்க
வைக்கிறார். அவருடைய வரலாறு பிறகு உருவாக்கினர். யாதவர்கள், கௌரவர்கள், பாண்டவர்கள் இருந்தனர்,
கண்டிப்பாக சங்கமயுகத்தில் இருப்பார்கள். சங்கமயுகத்தின் வரலாற்றை அமர்ந்து உருவாக்கினார்கள். பண்டிகைகளும்
அனைத்தும் சங்கமயுகத்தினுடையவையாகும். ராக்கி கட்டுவதும் கூட தூய்மை குறித்த விசயமே ஆகும்.
பின்னாளில் அது நினைவார்த்தமாக ஆகிறது. இங்கே தந்தையும் கூட அனைவரையும் தூய்மையாக்கி சபதம்
ஏற்கச் செய்கிறார். சீக்கியர்கள் கங்கணம் கட்டுகின்றனர், அதுவும் கூட தூய்மையின் அடையாளம் ஆகும்.
இந்துக்கள் பூணூல் போடுகின்றனர், அதுவும் கூட தூய்மையின் அடையாளம் ஆகும். ஆனால் தூய்மையாக
இருப்பதில்லை. ராக்கி கட்டிக் கொள்கின்றனர், ஆனால் தூய்மையாய் இருப்பதில்லை. முன்னாளில் பிராமணர்கள்
ராக்கி கட்டிக் கொண்டிருந்தனர். இப்போது சகோதரி சகோதரனுக்கு கட்டுகிறார், அவர் பணம் கொடுக்கிறார்.
இவையனைத்தும் இப்போது ஃபாஷன் (பகட்டு) ஆகியுள்ளது. உண்மையில் இது தூய்மையின் விசயமாகும்.
(2/4)
04.08.2016
தந்தை சொல்கிறார் லி குழந்தைகளே, காமம் மிகப் பெரிய எதிரி ஆகும். அந்த பிராமணர்கள் யாரும் இப்படி
புரிய வைப்பதில்லை. இப்போது எல்லைக்கப்பாற்பட்ட தந்தை சொல்கிறார் லி குழந்தைகளே, நாங்கள் தூய்மையாய்
இருப்போம் என உறுதி மொழி கொடுங்கள். ஒரு போதும் விகாரத்தில் செல்ல மாட்டோம். வந்து தூய்மை
யற்றவரிலிருந்து தூய்மையாக்குங்கள் என அழைக்கவும் செய்கிறீர்கள். சத்ய, திரேதா யுகங்களில் அழைப்பதில்லை.
அது இராம இராஜ்யமாக உள்ளது. இது இராவண இராஜ்யம். இராமஇராஜ்யத்தில் 5 விகாரங்கள் இருப்பதில்லை.
ராஜா ராணி போல பிரஜைகள்.... நாம் பாபாவிடமிருந்து சொர்க்கத்தின் இராஜ்யத்தை எடுத்துக் கொண்டிருக்கிறோம்
என குழந்தைகளாகிய நீங்கள் இப்போது அறிவீர்கள். இந்த நரகத்திலிருந்து கண்டிப்பாக போக வேண்டும்.
தூய்மையாக்கி சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல தந்தை வந்துள்ளார். பிறகு நாம் ஏன் தூய்மையாகக்
கூடாது? அவர்களின் ஹடயோகம் பல விதமாக உள்ளது. ஜெய்ப்பூர் மியூசியத்தில் (அருங்காட்சியகத்தில்)
சென்று எத்தனை விதமான ஹடயோகிகள் உள்ளனர் என பாருங்கள். அதன் மூலம் எதுவும் நடப்பதில்லை.
ஏணியில் இறங்கியபடிதான் செல்கின்றனர்.
பாரதம் தூய்மையற்றதாக ஆகும்போது, இராவண இராஜ்யம் ஏற்படும்போது பூமி ஆடத் தொடங்குகிறது
என தந்தை புரிய வைத்திருக்கிறார். தங்கத்தாலான மாளிகைகள் முதலான அனைத்துமே கீழே சென்றுவிடும்.
மாளிகை முதலானவைகளை யாரும் திருடவில்லை. அவர்கள் கோவில்களை மட்டும் கொள்ளை அடித்தனர்.
கொஞ்சம் ஆபரணங்கள், தங்கம் முதலானவைகளை எடுத்துச் சென்றனர். ஆபரணங்களின் மீது அனைவரையும்
விட அதிக ஆர்வம் உங்களுக்குத்தான் உள்ளது. நீங்கள் சொர்க்கத்திற்கு வரும்போதே ஆபரணங்களை
அணிகிறீர்கள், இராஜ்யம் செய்கிறீர்கள். மற்ற தர்மத்தவர்கள் வரும்போதே இராஜ்யம் செய்வதில்லை. நீங்கள்
எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிடமிருந்து சொர்க்கத்தின் இராஜ்யத்தின் ஆஸ்தி எடுக்கிறீர்கள். ஆக இதை
தந்தை அமர்ந்து புரிய வைக்கிறார், கீதையைப் படித்து சொல்வதில்லை. கீதையில் எழுதப்பட்டுள்ள அனைத்தையும்
நான் கூறவில்லை, மனிதர்கள் நான் சொன்ன மஹாவாக்கியங்களை பிற்பாடு அமர்ந்து சாஸ்திரங்களாக உருவாக்கி
யுள்ளனர். நான் சொன்னவற்றை நீங்கள்தான் கேட்டு பிறகு சென்று இராஜ்யம் செய்தீர்கள். அங்கே இந்த
ஞானம் இருக்காது. இங்கேயோ தந்தை ஆசிரியராகி கற்க வைக்கிறார். தந்தை இந்தியில்தான் புரிய வைக்கிறார்.
இங்கே அனைவரும் இந்தி இந்தி என்றபடி இருக்கின்றனர். அது அவர்களின் மொழியாகும். உண்மையில்
பழமையான மொழி இந்திதான் ஆகும். சம்ஸ்கிருதம் அல்ல. இந்த சம்ஸ்கிருதம் சங்கராச்சாரியாருக்குப் பிறகு
வெளிப்பட்டது. யார் வருகின்றனரோ அவர்கள் தங்கள் மொழியை நடத்துகின்றனர். மற்றபடி பாபா கீதையை
சம்ஸ்கிருத மொழியில் சொல்லவில்லை. இல்லை. குருநானக்லிகிற்கு அவரது கிரந்தம் உள்ளது. அவர் சீக்கிய
தர்மம் ஸ்தாபனை செய்தார், அவரையும் கூட அவதாரம் என ஏற்கின்றனர். அந்த மதத்தில் இராஜாக்களும்
இருக்கின்றனர். சன்னியாசிகளின் இராஜ்யம் கிடையாது. புத்தர், கிறிஸ்து முதலானவர்கள் முதலில் இல்லறத்தில்
இருந்தனர் என பாபா புரிய வைத்திருக்கிறார். இப்போது இல்லறத்தவர், தூய்மையற்ற ஆத்மா, தர்மத்தை
ஸ்தாபனை செய்ய முடியாது. அவர்களுக்குள் தூய்மையான ஆத்மா பிரவேசமாகி தர்மத்தை ஸ்தாபனை
செய்தது. மற்ற வித விதமான தர்மங்கள் உள்ளன. வந்து தம்முடைய சிறிய மடங்களை, சிறு தர்மங்களை
ஸ்தாபனை செய்கின்றனர். கல்ப மரத்திலும் கூட காட்டப்பட்டுள்ளது அல்லவா. ஆக, ஹடயோகம் மற்றும்
இராஜயோகத்திற்கிடையில் மிகவும் வித்தியாசம் உள்ளதல்லவா. இந்த விசயங்கள் புரிந்து கொள்ள வேண்டிய
வையாகும். யாருக்கு புரியவில்லையோ அவர்கள் கொட்டாவி விட்டபடி, சோம்பல் முறித்தபடி இருப்பார்கள்.
இங்கே உங்களுக்கு பொக்கிஷம் கிடைக்கிறது. மிகப் பெரிய வருமானமாகும். நீங்கள் இரத்தினங்களால் பையை
நிரப்பிக் கொள்கிறீர்கள். ஆக, இந்த கண்களை திறந்து வைத்துக் கொண்டு கேட்க வேண்டும். தூங்கி விழுந்தீர்கள்
என்றால், புத்தி வெளியில் அலைந்து கொண்டிருந்தது என்றால், அவர்கள் இராஜ்யத்தை அடைய முடியாது.
நீங்கள் இராஜரிμகள் ஆவீர்கள். இராஜ்யத்தை அடையக் கூடியவர்கள். தந்தை இராஜ்யத்தை ஸ்தாபனை
செய்கிறார். ஸ்ரீ கிருஷ்ணர் செய்வதில்லை. கிருஷ்ணர் தந்தையிடம் ஆஸ்தியைப் பெறுகிறார். இப்போது
உங்களுடைய தந்தை நிராகாரராக இருக்கிறார், அவரிடமிருந்து உலக இராஜ்யத்தின் ஆஸ்தியை பெற்றுக்
கொண்டிருக்கிறீர்கள். எவ்வளவு செல்வந்தர்களாக நீங்கள் ஆகிறீர்கள். இங்கே ஒரே தந்தை வந்து இராஜயோகம்
கற்பிக்கிறார். எனினும் சுற்றுங்கள், திரியுங்கள், உண்ணுங்கள், குடியுங்கள், தந்தையை நினைவு மட்டும் செய்யுங்கள்.
செல்வந்தர்கள் கண்டிப்பாக நன்றாக அனுபவிப்பார்கள். அவர்கள் தம்முடைய வருமானத்தின் பலனை
அனுபவிக்கின்றனர். பனியாரம் சாப்பிடுங்கள் அல்லது ரொட்டி சாப்பிடுங்கள். தந்தையை நினைவு செய்யுங்கள்.
என்ன வேண்டுமானாலும் சாப்பிடுங்கள். பணம் பிறகு எதற்குத்தான் இருக்கிறது. பாபா ஏதும் தடை விதிப்பதில்லை.
தந்தையிடம் நினைவின் தொடர்பை மட்டும் ஈடுபடுத்த வேண்டும். இந்த இராஜ்யத்தை ஸ்தாபனை செய்வதில்
செலவு ஏதும் கிடையாது. அந்த சண்டை முதலானவைகளில் எவ்வளவு செலவாகிறது. ஆகாய விமானத்திற்காக
(போருக்காக) எவ்வளவு செலவு செய்யப்படுகிறது. அது கீழே விழுந்து விட்டால் ஒரேயடியாக அனைத்தும்
அழிந்து போய் விடுகின்றது. எவ்வளவு நஷ்டம் ஏற்படுகிறது. ஆக நடந்து சுற்றியபடி தந்தையை நினைவு
04.08.2016
(3/4)
செய்யுங்கள் என தந்தை சொல்கிறார். சுயதரிசன சக்கரத்தை சுற்றியபடி இருங்கள். நாம் 84 பிறவிகளை
முடித்துள்ளோம். இப்போது வதனத்தை நோக்கிச் செல்வோம். வீட்டுக்குச் சென்று பிறகு வந்து இராஜ்யம்
செய்வோம்! நீங்கள் நடிகர்கள் அல்லவா! அந்த சினிமா 2 1/2 மணி நேரம் நடக்கிறது. இந்த எல்லைக்கப்பாற்பட்ட
நாடகம் 5 ஆயிரம் வருடங்கள் நடக்கிறது, இதனை மனிதர்கள்தான் அறிந்து கொள்ள முடியும். இந்த உலகம்
முள் நிறைந்த காடாக உள்ளது. பெரியதிலும் பெரியதான முள் விகாரத்தினுடையது, அது முதல், இடை,
கடைசி வரை துக்கம் தருகிறது. இரண்டாம் நம்பர் முள் கோபமாகும். அதனுடைய அடையாளமாகிய இந்த
மகாபாரதச் சண்டையைப் பாருங்கள். ஏதாவது விசயத்தில் கோபம் வந்தது என்றால் குண்டு போடத் தொடங்கி
விடுவார்கள். இப்போது உருவாக்கக் கூடிய அணுகுண்டுகள் பற்றி கேட்கவே வேண்டாம். சத்யுகத்தில் எந்த
சண்டையும் நடப்பதில்லை. சங்கமயுகத்தில்தான் இந்த மகாபாரதச் சண்டையை காட்டியுள்ளனர். ஆனால்
தேவதைகள் அஹிம்சையாளர்கள். நீங்கள் யோகபலத்தின் மூலம் உலகின் எஜமானர் ஆகிறீர்கள். இது அமைதியின்
சக்தியாகும், இதில் நீங்கள் பேச வேண்டிய அவசியமில்லை. நினைவின் பலத்தின் மூலம் நீங்கள் பாபாவிடமிருந்து
உலகின் இராஜ்யத்தை எடுக்கிறீர்கள். வித்தியாசத்தைப் பாருங்கள் எவ்வளவு உள்ளது. அறிவியலின் பலத்தின்
மூலம் வினாசம் ஆகிறது. அதே அறிவியலின் மூலம் சத்யுகத்தில் நீங்கள் சுகத்தைப் பார்ப்பீர்கள். அறிவியலின்
மூலம் கண்டுபிடிப்புகள் செய்கின்றனர், அதனை சுகத்திற்காக செய்கின்றனர். இவர்களும் வந்து கொஞ்சம்
ஞானத்தை எடுப்பார்கள். கண்காட்சிகளில் அனைவரும் வருகின்றனர். மேலும் செல்லச் செல்ல அனைவரும்
வருவார்கள். உங்களின் இந்த அமைதி சக்தியின் ஓசை எழப் போகிறது.
நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள் லி கீதையின் பகவான் யார்? இப்படி வேறு யாரும் கேட்க முடியாது.
எங்கே இந்த கேள்வியை கேட்கிறீர்களோ அங்கே அதனுடன் (சம்மந்தப்பட்ட) படத்தையும் கொடுங்கள்.
கீதையின் பகவான் பரமபிதா பரமாத்மாவா அல்லது 84 பிறவிகளை எடுக்கும் ஸ்ரீ கிருஷ்ணரா? தூய்மை
யற்றவர்களை தூய்மையாக்குபவர் தந்தைதான் ஆவார். கிருஷ்ணரின் ஆத்மா 84 பிறவிகள் எடுத்து
கருப்பாகியுள்ளது. அவருக்குப் (பிரம்மாவிற்குப்) புரிய வைக்கிறார் லி நீ 84 பிறவிகள் எடுத்திருக்கிறாய். உன்னுடைய
பிறவிகளைப் பற்றி உனக்கு தெரியாது. நாம் 84 பிறவிகள் எப்படி எடுக்கிறோம் என்பது நடிகர்களுக்குத்
தெரிந்திருக்க வேண்டும் அல்லவா. சன்னியாசிகளின் தர்மமே தனியானது. பாரதவாசிகளுக்கு தம்முடைய
தர்மத்தைப் பற்றி தெரியாத காரணத்தால் வேறு வேறு தர்மங்களில் சென்றபடி இருக்கின்றனர். ஏதாவது
குருவின் ஆசீர்வாதத்தின் மூலம் யாருக்காவது பணம் கிடைத்தது என்றால் அவர் பின்னால் சென்று விழுவார்கள்.
பிறகு திவாலாகி விட்டால் தன்னுடைய தலைவிதி என புலம்புவார்கள். ஆண் குழந்தை பிறந்தால் மிகவும்
குμயடைவார்கள். நல்லது, 10லி12 நாட்களுக்குப் பிறகு குழந்தை இறந்து விட்டால் ஈஸ்வரனின் செயல்
என்பார்கள். இவர்களைப் பிழைக்க வைப்பது என்பது என்னுடைய கைகளில் இல்லை. பாபா இப்படிப்பட்ட
பல உதாரணங்களைப் பார்த்திருக்கிறார். இப்படிப்பட்டவர்கள் நிறைய பேர் உள்ளனர். இங்கே தந்தை
அமர்ந்திருக்கிறார். இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, இப்போது தூய்மையாகுங்கள் என தந்தை
குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். மிகப் பெரிய மகாபாரதச் சண்டை ஏற்பட்ட போது திரௌபதி கூப்பிட்டார்
லி பாபா என்னை இந்த துச்சாதனன் துகிலுரிந்து கொண்டிருக்கிறான், என்னை இவனிடமிருந்து காப்பாற்றுங்கள்.
5 ஆயிரம் வருடங்களின் விசயம் இது. இந்த விசயத்தில்தான் இந்த அபலைகள் மீது கொடுமைகள்
இழைக்கப்படுகின்றன. பல பெண்களும் கூட விகாரமின்றி இருக்க முடியாதவர்களாக உள்ளனர். அவர்களுக்கும்
கூட சூர்ப்பனகை, புத்னா என பெயரிடப்பட்டுள்ளது. யார் விஷத்திற்காக கஷ்டங்களைக் கொடுக்கின்றனரோ
அவர்கள் தான் கம்சன், ஜராசந்தன், சிசுபாலன்... இவர்கள் அனைவரும் வினாசத்தை அடையவே வேண்டியிருக்கும்.
இந்த சமயம் அசுரத்தனமான இராவண இராஜ்யம் உள்ளது, பிறகு ஈஸ்வரிய இராஜ்யம் ஏற்படும். 84 பிறவிகளை
எப்படி எடுக்கிறோம் என இந்த முழு சக்கரத்தையும் நீங்கள் தெரிந்து கொண்டுவிட்டீர்கள். விகாரத்தில்
செல்லும்போது இது மறந்து விடுகிறது. விகாரத்தில் செல்பவர்களின் முகமே வெளிறிப் போய்விடுகிறது.
தாமே உணர்கின்றனர் லி நாம் என்ன காரியம் செய்து விட்டோம். தந்தை சொல்கிறார் லி குழந்தைகளே, இந்த
விஷமான சாக்கடையில் சென்று விடாதீர்கள். இது உங்களுக்கு முதல், இடை, கடை வரை துக்கம் தரக்கூடியதாகும்.
இதில் விழாதீர்கள். நாங்கள் ஒருபோதும் விகாரத்தில் செல்ல மாட்டோம் என உறுதி மொழி எடுங்கள்.
பகவானுடைய மகா வாக்கியம் லி காமம் மிகப் பெரிய எதிரியாகும். அனைத்து படங்களிலும் முதலில் இதனை
எழுதுங்கள் லி ஞானக்கடல், பதித பாவனர், ஞானத்தை வழங்கும் வள்ளலாகிய சிவ பகவானுடைய மகா
வாக்கியம். பிறகு கிருஷ்ணரின் பெயர் மறைந்து விடும். நமக்கு கீதையின் பகவான் அமர்ந்து இதனை
தெரிவிக்கிறார். அந்த ஞானத்தைத்தான் நாம் பெறுகிறோம். பகவான்தான் வந்து புதிய உலகத்தை ஸ்தாபிக்கிறார்
மற்றும் பழைய உலகம் வினாசம் ஆகிறது. ருத்ர ஞான யக்ஞம் அல்லவா. சிவபாபா என்பது அசலாகும்.
ருத்ரபாபா என சொல்ல மாட்டார்கள். பம்பாயில் பபூல்நாத்தின் கோவிலும் இருக்கிறது. இப்போது பபூல்
என்பது முள்ளை குறிப்பிடுவதாகும். பபூல்நாத் எனும் பெயரை ஏன் வைத்தனர்? இதனை யாரும் புரிந்து
கொள்வதில்லை. படம் சிவபாபாவுடையதே ஆகும். மற்றபடி பல பெயர்களை வைத்துவிட்டுள்ளனர். சிவபாபாதான்
04.08.2016
(4/4)
வந்து முள் நிறைந்த காட்டினை மலர்கள் நிறைந்த தோட்டமாக ஆக்குகிறார். அவர்தான் உங்களுடைய பாபா
(தந்தை) ஆவார். அவருடைய பெயர் சிவன் என்பதாகும். சிவபரமாத்மாய நமஹ, பிராமண தேவி தேவதாய
நமஹ: வார்த்தைகள் முற்றிலும் தெளிவாக உள்ளன. இப்போது அந்த பரமபிதா பரமாத்மா அமர்ந்து இந்த
ரதத்தின் மூலம் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். லௌகிக தந்தை குழந்தைகளைப் பார்த்து குழந்தைகளே
நம்முடைய குலத்திற்கு களங்கம் விளைவிக்காதீர்கள், எந்த கெட்ட காரியமும் செய்யாதீர்கள் என சொல்வது
போல இந்த பாபாவும் கூட சொல்கிறார் லி குழந்தைகளே விகாரத்தில் ஒருபோதும் செல்லக் கூடாது. தூய்மை
யடையாமல் சொர்க்கத்தில் உயர் பதவியை அடைய முடியாது. மிக உயர்ந்த வருமானத்தை நீங்கள் சம்பாதித்துக்
கொண்டிருக்கிறீர்கள். மற்ற அனைவரும் இழந்து கொண்டிருக்கின்றனர். சிலரிடம் கோடிகள் இருக்கலாம். பெரிய
பெரிய மாளிகைகள் கட்டிக் கொண்டிருக்கின்றனர். இலட்சக்கணக்கான பணத்தை செலவு செய்து
கொண்டிருக்கின்றனர். அவையனைத்தும் நேரம், பணம், வீணடிப்பது ஆகும் என நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள்.
இவை உதவப் போவதில்லை. அனைத்தும் அழிந்து விடும். 10லி12 ஆயிரம் வருடங்கள் இருக்கும் என
அவர்கள் புரிந்து கொள்கின்றனர். மரணம் முன்னால் தலை மீது அமர்ந்திருக்கிறது என குழந்தைகளாகிய
நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள். கொஞ்ச காலத்திற்குள் இந்த நில நடுக்கம் முதலானவற்றால் அனைத்தும் மண்ணுடன்
மண்ணாகப் போகின்றன. நில நடுக்கம் முதலானவற்றால் எண்ணற்றவர்கள் இறந்து போவார்கள். இப்போது
வினாசம் ஆகத்தான் போகிறது. வினாசத்தின் காட்சியும், ஸ்தாபனையின் காட்சியும் பார்த்திருக்கிறீர்கள். அதனையே
பிறகு இந்த கண்களால் பார்க்கப் போகிறீர்கள். பக்தி மார்க்கத்தில் எவ்வளவு ஏதேதோ செய்கின்றனர், ஆனால்
யாரும் வைகுண்டத்திற்குச் செல்ல முடியாது. ஞானம் இன்றி சத்கதி ஏற்பட முடியாது. இவையனைத்தும் பக்தி
மார்க்கத்தில் விளையாட்டு பொம்மைகள் ஆகும். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு
தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. குலத்திற்கு களங்கம் விளைவிக்கும் எந்த கெட்ட செயலையும் செய்யக் கூடாது.
தூய்மையடைவதற்கான உறுதி மொழியை தனக்குத் தானே எடுக்க வேண்டும்.
2. தனது நேரம், பணம், எதையும் வீணாக்கக் கூடாது. மலர்கள் நிறைந்த தோட்டத்திற்குச்
செல்வதற்காக முட்களை (தன்னிடமிருந்து) நீக்க வேண்டும்.
வரதானம் : முழுமை (சம்பூர்ண) நிலை மற்றும் அந்தஸ்தின் நினைவின் மூலம்
எப்போதும் உயர்ந்த காரியங்களை செய்யக் கூடிய தந்தைக்குச் சமமானவர் ஆகுக.
நான் எல்லா நேரத்திலும், ஒவ்வொரு வினாடியிலும், அனைத்து கர்மங்களை செய்தபடியும், நாடக
மேடையில் இருக்கிறேன் என்ற நினைவு எப்போதும் இருந்தது என்றால் அனைத்து கர்மங்களின் மீதும்
கவனம் இருக்கின்ற காரணத்தால் முழுமை நிலைக்கு அருகாமையில் வந்து விடுவீர்கள். அத்துடன் தற்போதைய
மற்றும் எதிர்காலத்தின் அந்தஸ்தின் நினைவும் இருப்பதன் மூலம் அனைத்து காரியங்களும் உயர்வானதாக
ஆகும். இந்த இரண்டு நினைவுகளே தந்தைக்குச் சமமாக ஆக்கக் கூடியது. சமமான தன்மையில் வருவதன்
மூலம் ஒருவர் மற்றவரின் மனதின் சங்கல்பங்களை எளிதாகவே பற்றிக் கொள்வார்கள். இதற்காக சங்கல்பங்களை
கட்டுப்படுத்தும் சக்தி மட்டும் தேவை. தனது எண்ணங்களின் கலப்படம் இருக்கக் கூடாது.
சுலோகன் : பொறாமை மற்றும் அப்பிராப்தி (எதையும் அடையாத தன்மை) யின் காரணம்
ஆசைகள் ஆகும், எங்கே அனைத்து பிராப்திகள் உள்ளனவோ அங்கே மகிழ்ச்சி இருக்கும்.
(1/4)
05
08.2016 காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! பாபாவின் வலது கரமாக ஆக வேண்டுமெனில் ஒவ்வொரு
விசயத்திலும் நேர்மையானவர்களாக ஆகுங்கள், சதா சிரேஷ்ட காரியங்களை செய்யுங்கள்.
கேள்வி: எந்த சம்ஸ்காரம் சேவையில் அதிக தடை ஏற்படுத்துகிறது?
பதில்: கருத்து வேறுபாடு லி சுபாவங்களின் காரணத்தினால் தங்களுக்குள் ஏற்படக் கூடிய பிரிவினைக்கான
சம்ஸ்காரம் சேவையில் அதிக தடைகளை ஏற்படுத்துகிறது. இரண்டு கருத்துகளினால் அதிக நஷ்டம் ஏற்படுகிறது.
கோபம் என்ற பூதம் பகவானையும் எதிர்கொள்ள தாமதிப்பது கிடையாது, அதனால் தான் பாபா கூறுகின்றார் லி
இனிமையான குழந்தைகளே! அதுபோன்ற ஏதாவது சம்ஸ்காரம் இருந்தால் அதை நீக்கி விடுங்கள்.
பாட்டு: அதிர்ஷ்டத்தை எழுப்பி வந்துள்ளேன் ........
ஓம் சாந்தி. இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் பாட்டு கேட்டீர்கள். ஆன்மீகக் குழந்தைகள்
என்றால் பரமாத்மாவாகிய சிவனின் குழந்தைகளாகிய ஆத்மாக்கள் சரீரம் என்ற கர்மேந்திரியங்களின் மூலம்
பாட்டு கேட்டீர்கள். இப்போது குழந்தைகள் ஆத்ம அபிமானிகளாக ஆக வேண்டும். அதிக உழைப்பும்
இருக்கிறது. அடிக்கடி தன்னை ஆத்மா என்று புரிந்துக் கொண்டு தந்தையை நினைவு செய்ய வேண்டும். இது
குப்தமான முயற்சியாகும். தந்தையும் குப்தமானவர் எனில் முயற்சியும் குப்தமாக செய்விக்கின்றார். தந்தை
சுயம் வந்து கூறுகின்றார் லி குழந்தைகளே! என்னை நினைவு செய்தால் 5 ஆயிரம் ஆண்டிற்கு முன்பு போல்
மீண்டும் சதோபிரதானமாக ஆவீர்கள். நாம் சதோபிரதானமாக இருந்தோம், பிறகு மீண்டும் நாமே இப்போது
சதோபிரதானமாக ஆகிறோம் என்பதை குழந்தைகள் புரிந்திருக்கிறீர்கள். அவசியம் சதோபிரதானமாக ஆக
வேண்டும். எந்த அதிர்ஷ்டத்தை இழந்தீர்களோ அதை மீண்டும் அடைவதற்கான முயற்சியை செய்விக்கக்
கூடியவர் ஒரே ஒரு சர்வசக்திவான் தந்தை ஆவார் என்பது பாடலிலும் இருக்கிறது. ஏனெனில் அனைவரையும்
தூய்மை ஆக்குகிறார் அல்லவா! தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார் லி ஹே ஆன்மீக குழந்தைகளே!
இப்போது அதிர்ஷ்டத்தை உருவாக்கிக் கொள்ள வந்திருக்கிறீர்கள். மாணவ வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை
உருவாக்கிக் கொள்ள செல்கின்றனர் அல்லவா! அவர்கள் சிறு குழந்தைகளாக இருப்பர். நீங்கள் சிறியவர்கள்
கிடையாது, நீங்கள் பெரியவர், வயதானவர்கள். அதிர்ஷ்டத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். ஆம் சிலர்
மிக வயதானவர்களாகவும் இருக்கின்றனர். வயோதிக நிலையை விட இளமையில் படிப்பது மிகவும் நல்லதாகும்,
இளையவர்களின் புத்தி மிக நன்றாக இருக்கும். இது அனைவருக்கும் மிக எளிதானதாகும். உங்களது சரீரம்
பெரியது அல்லவா! இவர்கள் குழந்தைகள், அந்த அளவிற்கு புரிந்துக் கொள்ள முடியாது. ஏனெனில்
கர்மேந்திரியங்கள் சிறியதாகும். புகழ்லிஇகழ், துக்கம்லிசுகம் போன்ற விசயங்களை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள்.
ஆத்மா பிந்துவாக இருக்கிறது. சரீரம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஆத்மா ஒரே மாதிரியாக இருக்கிறது.
ஒருபோதும் சிறியதாக, பெரியதாக ஆவது கிடையாது. அந்த ஆத்மாவின் புத்திக்காக தந்தை (கஸ்தூரி
போன்ற) பரிசு கொடுத்துக் கொண்டிருக்கின்றார், ஏனெனில் புத்தி இப்போது முற்றிலும் தமோபிரதானமாக ஆகி
விட்டது. அது இப்போது தூய்மையானதாக ஆகிக் கொண்டிருக்கிறது. இந்த சித்திரங்கள் புரிய வைப்பதற்கு
உங்களுக்கு அதிக பயனுள்ளதாக இருக்கிறது. பக்தி மார்க்கத்தில் தேவதைகளின் முன் சென்று தலை
வணங்குகின்றனர், பூஜை செய்கின்றனர். முன்பு நீங்களும் குருட்டு நம்பிக்கையுடன் சென்று வந்தீர்கள். சிவன்
கோயிலுக்கு சென்றீர்கள், இவர் சிவபாபா என்பது உங்களுக்குத் தெரியாமல் இருந்தது பாபாவிடமிருந்து
ஆஸ்தி அவசியம் கிடைத்திருக்கிறது, அதனால் தான் அவரது மகிமை பாடப்படுகிறது. யாராவது நல்ல
காரியங்கள் செய்து விட்டு செல்கின்றனர் எனில் அவரது மகிமை பாடப்படும். சிவபாபாவின் ஸ்டாம்ப் உருவாக்க
வேண்டும். சிவபாபா கீதை ஞானம் அளிப்பவர் ....... இந்த ஸ்டாம்ப் எளிதாக உருவாக்கப்படும். அந்த தந்தை
அனைவருக்கும் சுகம் கொடுக்கக் கூடியவர். நான் உங்களை சுகதாமத்திற்கு எஜமானர்களாக ஆக்கக் கூடியவன்
என்று தந்தை கூறுகின்றார். தேகமற்ற சிவபாபாவிடம் நாம் வந்திருக்கிறோம் என்பதை வயோதிகர்களும்
புரிந்து கொள்கின்றனர். அவர் இந்த தேகத்தில் பிரவேசமாகியிருக்கின்றார். நிராகாரமானவரைத் தான் சித்திரமற்றவர்
(அசரீரி) என்று கூறப்படுகின்றார். நாம் சிவபாபாவிடம் செல்கிறோம், அவர் இந்த சரீரத்தை தற்காலிகமாக
எடுத்திருக்கின்றார் என்பது புத்தியில் இருக்கிறது. தூய்மை இழந்தவர்களை தூய்மையானவர்களாக்கி, முக்தி,
ஜீவன் முக்தி கொடுக்கின்றார். அதாவது சாந்திதாமம், சுகதாமத்தில் வசிக்கக் கூடியவர்களாக ஆக்குகின்றார்.
மனிதர்கள் அமைதிக்காகவே முயற்சி செய்கின்றனர். பகவான் கிடைத்து விட்டால் அமைதி கிடைத்து விடும்,
சுகத்திற்கான முயற்சி செய்வது கிடையாது. தந்தையின் கூடவே வீட்டிற்குச் செல்ல வேண்டும், பகவானை
சந்திக்க வேண்டும், அவ்வளவு தான். இந்த நேரத்தில் அனைவரும் முக்தியை விரும்புகின்றவர்களாக
(2/4)
05.08.2016
இருக்கின்றனர். ஜீவன்முக்தி அடையக் கூடியவர்கள் பிராமணர்களாகிய நீங்கள் மட்டுமே. மற்ற அனைவரும்
முக்திக்கான விரும்பம் வைத்திருக்கின்றனர். ஜீவன்முக்திக்கான வழி கூறக்கூடியவர் யாரும் கிடையாது. சந்நியாசி
போன்றவர்களிடம் சென்று அமைதி கேட்கின்றனர். மன அமைதி எப்படி கிடைக்கும்? என்று கேட்கின்றனர்.
வழி கூறக் கூடிய அனைவருமே முக்திக்கு செல்லக் கூடியவர்கள் தான். மோட்சம் என்றால் என்ன? என்பது
கூட புத்தியில் வருவது கிடையாது. களைப்படைந்து விட்டதால் முக்திக்குச் சென்றால் நல்லது என்று களைப்புடன்
கூறுகின்றனர். உண்மையில் முக்திதாமம் என்பது ஆத்மாக்கள் வசிக்கும் இடமாகும். நாம் புது உலகிற்கான
இராஜ்ய பாக்கியத்தை அடைகிறோம் என்பதை இத்தனை சென்டர்களிலும் இருக்கும் குழந்தைகள் அனைவரும்
அறிந்திருக்கிறீர்கள். பாபா நமக்கு புது உலகின் இராஜ்யத்தைக் கொடுக்கின்றார். எங்கு கொடுப்பார்? புது உலகில்
கொடுப்பாரா? அல்லது பழைய உலகில் கொடுப்பாரா? நான் சங்கமத்தில் வருகிறேன் என்று தந்தை கூறுகின்றார்.
நான் சத்யுகத்திலோ அல்லது கலியுகத்திலோ வருவது கிடையாது. இரண்டிற்கும் நடுவில் வருகிறேன். தந்தை
அனைவருக்கும் சத்கதி கொடுப்பார் அல்லவா! துர்கதியில் விட்டு விட்டு சென்று விடுவார் என்பது கிடையாது.
சத்கதி மற்றும் துர்கதி இரண்டும் ஒன்றாக இருக்க முடியாது. இந்த பழைய உலகம் விநாசம் ஆகிவிடும்
என்பதை குழந்தைகள் அறிவீர்கள். ஆகையால் இதன் மீது அன்பு செலுத்தாதீர்கள். இப்போது நாம் சங்கமத்தில்
இருக்கிறோம் என்று புத்தி கூறுகிறது. இந்த உலகம் மாறப் போகிறது. இப்போது தந்தை வந்திருக்கின்றார்,
நான் கல்ப கல்பத்தின் சங்கமத்தில் வருகிறேன் என்று தந்தை கூறுகின்றார். உங்களை துக்கத்திலிருந்து
விடுவித்து ஹரியின் வாசலுக்கு அழைத்துச் செல்கிறேன். இது ஞான விசயமாகும். ஹரிதுவார், கிருஷ்ண
துவார் என்றால் கிருஷ்ணபுரி என்று கூறப்படுகிறது. நல்லது, இவருக்குப் பிறகு லெட்சுமனனை ஊஞ்சலில்
அமர்த்தி விட்டனர். முதலில் ஹரிதுவார் வரும். சத்யுகம் தான் ஹரிதுவார் என்று கூறப்படுகிறது. பிறகு இராம்,
லெட்சுமன் போன்றவர்களைக் காண்பிக்கின்றனர். அந்த மாதிரி எந்த விசயமும் கிடையாது. அது உருவாக்கப்பட்ட
விசயங்களாகும். இராமருக்கு எத்தனையோ சகோதரர்களைக் கொடுத்து விட்டனர்! 4 சகோதரர்கள் இருக்க
மாட்டார்கள். இங்கு தான் 4லி8 சகோதரர்கள் இருக்கின்றனர். ஒருபுறம் ஈஸ்வரிய குழந்தைகள், மற்றொருபுறம்
அசுர குழந்தைகள்.
சிவபாபா பிரம்மாவின் உடலில் வந்திருக்கிறார் என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள். சிவன் பாபா,
பிரம்மா தாதா ஆவார். பிரஜாபிதா ஆவார். அவர் ஆத்மாக்களுக்குப் பிதா, அநாதியானவர், (ஆதி, அந்தமில்லாதவர்)
இந்த நேரத்தில் பிராமணர்களைப் படைக்கின்றார். சிவபாபா சாலிகிராமங்களைப் படைக்கின்றார் என்பது கிடையாது.
சாலிகிராமங்கள் அழிவற்றவைகளாக இருக்கவே செய்கின்றன. தந்தை வந்து தூய்மையானவர்களாக ஆக்குகின்றார்,
அவ்வளவு தான். எதுவரை ஆத்மா தூய்மையாக ஆகவில்லையோ அதுவரை சரீரம் எவ்வாறு தூய்மையாக
ஆக முடியும்! ஆத்மாக்களாகிய நாம் தூய்மையாக இருந்த போது சதோபிரதானமாக இருந்தோம். இப்போது
அசுத்தமாக, தமோபிரதானமாக இருக்கிறோம், மீண்டும் சதோபிரதானமாக ஆவது எப்படி? இது எளிதாக
புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகும். இந்த நேரத்தில் கறை படிந்ததன் மூலம் நீங்கள் தூய்மையற்றவர்களாக,
தமோபிரதானமாக ஆகிவிட்டீர்கள். இப்போது மீண்டும் சதோபிரதானமாக ஆக வேண்டும். கணக்கு வழக்குகளை
முடித்துக் கொண்டு அனைவரும் சாந்திதாமம் அல்லது சுகதாமத்திற்கு வருவீர்கள். ஆத்மாக்கள் எப்படி
வருகின்றன? என்பதையும் கிறிஸ்தவர்கள் மரத்தில் விளக்கு எரிய விட்டு கொண்டாடுகின்றனர். இவை
அனைத்தும் தர்மத்தின் தனித் தனியாக கிளைகள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அங்கிருந்து ஆத்மாக்கள்
முதன் முதலில் எப்படி கீழே இறங்குகின்றன? என்ற ஞானம் உங்களுக்குக் கிடைத்து விட்டது. ஆத்மாக்களாகிய
நமது வீடு சாந்திதாமம் ஆகும். இப்போது சங்கமமாகும். அங்கிருந்து அனைத்து ஆத்மாக்களும் வந்து விடும்,
பிறகு அனைவரும் செல்வோம். பிரளம் ஏற்படாது. பாபாவிடத்தில் மீண்டும் அதிர்ஷ்டம் உருவாக்கிக் கொண்டும்
மீண்டும் சுய இராஜ்யத்தை அடைவதற்காக வந்திருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இது பெயரளவிற்கு
சொல்வதுடன் இருந்து விடுவது கிடையாது. நினைவின் மூலம் தான் ஆஸ்தி கிடைக்கும். தேகம், தேக
சகிதமாக அனைத்து உற்றார், உறவினர்களையும் மறந்து விடுங்கள் என்று தந்தை கூறுகின்றார். சித்திரம்
(சாகாரம்) மற்றும் விசித்திரம் (நிராகார்) அல்லவா! யாரை பார்க்க முடியாதோ அவர் தான் விசித்திரம் என்று
கூறப்படுகின்றார். இது மிகவும் ஆழமான விசயமாகும். ஆத்மா எவ்வளவு சிறிதாக இருக்கிறது! அது அடிக்கடி
நடிப்பு நடிக்க வேண்டியிருக்கிறது, வேறு யாருடைய புத்தியிலும் இப்படிப்பட்ட விசயங்கள் கிடையாது. முதன்
முதலில் நான் ஆத்மா, அவர் நமது தந்தை என்பதை புத்தியில் அமர வைக்க வேண்டும். அவரைத் தான்
பதீத பாவன், ஹே பகவான் என்று கூறி நினைவு செய்கின்றனர். வேறு எந்த இடத்திற்கும் செல்ல வேண்டிய
அவசியம் கிடையாது. ஆக நினைவும் ஒரே ஒருவரைத் தான் செய்ய வேண்டும் அல்லவா! பகவானை
நினைவு செய்கின்றனர் எனில் அவசியம் அவரிடமிருந்து ஏதோ அடைந்திருக்க வேண்டும். பிறகு ஏன் வீதி
வீதியாக சென்று ஏமாற்றம் அடைகிறீர்கள்? பகவான் பரந்தாமத்திலிருந்து வர வேண்டியிருக்கிறது அல்லவா!
நாம் செல்ல முடியாது, ஏனெனில் தூய்மையற்றவர்களாக இருக்கிறோம். தூய்மை இல்லாதவர்கள் அங்கு
செல்ல முடியாது. இப்போது நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள். பக்தி மார்க்கத்தின் பாகம் எவ்வளவு ஆச்சரியமானதாக
(3/4)
05.08.2016
இருக்கிறது! ஒரே ஒரு பகவானைத் தான் ஹே ஈஸ்வரனே!, ஹே பரம்பிதா, ஓ இறை தந்தையே என்று
நினைவு செய்கின்றனர். அவர் ஒரே ஒருவர் தான் எனும் போது பிறகு ஏன் வேறு பக்கம் சென்று ஏமாற்றம்
அடைகிறீர்கள்? அந்த ஒருவர் மேலே இருக்கிறார். ஆனால் இவை அனைத்தும் பதிவாகியிருக்கிறது. நாடகப்படி
எல்லையற்ற புத்தியற்றவர்களாக ஆகி பக்தி செய்கின்றனர். இப்போது நீங்கள் எல்லையற்ற புத்திசாலிகளாக
ஆகிறீர்கள். ஸ்ரீமத் படி நடப்பவர்கள் தான் புத்திசாலிகளாக ஆகின்றனர். அவர்கள் மறைந்து இருக்க முடியாது.
அவர்கள் எப்போதும் சிரேஷ்ட காரியம் மட்டுமே செய்வர். நான் துக்கத்தை நீக்கி சுகம் கொடுக்கக் கூடியவன்
எனில் குழந்தைகளும் எவ்வளவு இனிமையானவர்களாக ஆக வேண்டும் என்று தந்தை கூறுகின்றார்! தந்தையின்
வலது கரமாக ஆக வேண்டும். இப்படிப்பட்ட குழந்தைகள் தான் தந்தைக்கு பிரியமானவர்கள். வலது கரம்
அல்லவா! இடது கைகளினால் அந்த அளவிற்கு காரியம் செய்ய முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
ஏனெனில் வலது கரம் எப்போதும் சரியான காரியம் மட்டுமே செய்யும். அதனால் தான் இந்த வலது கையை
மட்டுமே சுப காரியங்களில் பயன்படுத்துகின்றனர். பூஜை எப்போதும் வலது கைளால் செய்வர். ஒவ்வொரு
விசயத்திலும் நன்னெறியுடையவர்களாக, நேர்மையானவர்களாக ஆகுங்கள் என்று தந்தை கூறுகின்றார். தந்தை
கிடைத்து விட்டார் எனில் குμ ஏற்பட வேண்டும்.
தந்தை கூறுகின்றார் லி என்னை நினைவு செய்தால் இறுதிக் கால நிலை நல்ல நிலையாக ஆகிவிடும்.
நல்ல வழி அல்லது நல்ல நிலை ஏற்படுத்தும் வழி ஒரே ஒருவருடையது ஆகும். அதனால் தான் ஈஸ்வரனின்
வழி தனிப்பட்டது என்று பாடப்பட்டிருக்கிறது. அவரே பதீத பாவன் ஆவார். மனிதர்களை தூய்மை ஆக்கி
துர்கதியிலிருந்து சத்கதிக்கு எப்படி அழைத்துச் செல்வது என்பதை அவர் அறிவார். பக்தி மார்க்கத்தில்
எவ்வளவோ தீவிர முயற்சி செய்கின்றனர்! ஆனால் சத்கதி ஏற்படுவது கிடையாது. பலன் எதுவும் கிடைப்பது
கிடையாது. சத்கதி கொடுக்கக் கூடியவர் ஒரே ஒரு தந்தை ஆவார். பக்தியில் யார், எந்த பாவனையுடன் பூஜை
செய்கிறார்களோ அவர்களுக்கு அந்த பலனை கொடுக்கக் கூடியவர் நான் ஒருவனே. அதுவும் நாடகத்தில்
பதிவாகியிருக்கிறது லி அவர்களது முயற்சியின் படி தானாகவே அவர்களுக்கு கிடைத்து விடும். இப்போது
குழந்தைகளும் தனது முயற்சியின் மூலம் தூய்மையாக ஆக வேண்டும். தந்தை கூறுகின்றார் லி இனிமையிலும்
இனிமையான தந்தையை நினைவு செய்யுங்கள். அவர் தான் சர்வசக்திவானாக இருக்கின்றார், எவ்வளவு
உயர்வானவர்களாக ஆக்குகின்றார்! நீங்கள் அனைத்தையும் அறிந்து கொண்டீர்கள், மீண்டும் தந்தையிடமிருந்து
ஆஸ்தி அடைந்து கொண்டிருக்கிறீர்கள். படைப்பவர் மற்றும் படைப்பின் ஞானம் உங்களது புத்தியில் இருக்கிறது.
இந்த ஞானம் நம்மிடத்தில் இல்லாமல் இருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். யாகம், தவம் போன்றவைகள்
செய்வது, சாஸ்திரம் போன்றவைகளை கேட்பது லி இவைகள் சாஸ்திரங்களின் ஞானமாகும். அது பக்தி என்று
கூறப்படுகிறது. அதில் இலட்சியம் எதுவும் கிடையாது. படிப்பில் இலட்சியம் இருக்கும். ஏதாவது ஒரு வகையான
ஞானம் இருக்கும். தூய்மை இல்லாமலிருந்து தூய்மை ஆவதற்கான ஞானம் பதீத பாவன் தந்தை
கொடுத்திருக்கின்றார். சிருஷ்டியின் முதல், இடை, கடையின் ஞானம் தந்தை கொடுத்திருக்கின்றார். இந்த
சிருஷ்டிச் சக்கரம் எவ்வாறு சுழல்கிறது? இதில் அனைவரும் நடிகர்கள் ஆவர். இது அழிவற்ற, ஏற்கெனவே
உருவாக்கப்பட்ட நாடகமாகும். இந்த எல்லையற்ற ஞானம் அவசியம் இருக்க வேண்டும்.
இப்போது நாம் காரிருளிலிருந்து நீங்கி வெளிச்சத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை
குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் இப்போது தேவதைகளாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். ஆதி
சநாதன தேவி தேவதா தர்மத்தைத் தான் இந்து தர்மம் என்று கூறிவிட்டனர் என்பதையும் புரிய வைக்க
வேண்டும். சிறிது சிறிதாக இந்த விசயத்தை புரிந்து கொண்டு விடுவர். குழந்தைகள் எழுந்து நிற்க வேண்டும்.
இதற்கு நிறைய குழந்தைகள் தேவை. டெல்லியில் மாநாடு நடத்த வேண்டியிருக்கும். பரிஸ்தான் என்று
டெல்லி தான் கூறப்படுகிறது. இது தான் யமுனை நதிக்கரையில் இருந்தது, டெல்லி தலைநகரமாகும். பலரது
ஒத்துழைப்பு இருக்கிறது. தேவதைகளின் தலைநகரமாகவும் இது இருந்தது. டெல்லியில் மிகப் பெரிய மாநாடு
நடத்த வேண்டும். ஆனால் மாயை செய்ய விடுவது கிடையாது. பல தடைகளை ஏற்படுத்துகிறது. இன்றைய
நாட்களில் கருத்து வேறுபாடு மற்றும் எண்ணங்களின் வேறுபாடுகள் அதிகம் எற்பட்டு விட்டது அல்லவா!
குழந்தைகள் தங்களுக்குள் ஒன்றாக சேர்ந்து சேவையில் ஈடுபட வேண்டும். அவர்களும் தங்களுக்குள்
சேர்ந்து இருக்கவில்லையெனில் இராஜ்யமே இல்லாமல் போய் விடுகிறது. இரண்டு பிரிவினர்களாக ஆகிவிடும்
போது ஜனாதிபதியையும் நீக்கி விடுகின்றனர். கருத்து வேறுபாடு அதிக நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. பிறகு
பகவானை எதிர்கொள்ளவும் கூட தாமதிப்பது கிடையாது. அதிக நஷ்டம் அடைகின்றனர். கோபம் என்ற பூதம்
வந்து விட்டால் பிறகு கேட்கவே கேட்காதீர்கள், அதனால் தான் பாபா கூறுகின்றார் லி அவரவர்களுக்குத்
தெரியும், பகவானுக்குத் தெரியும். தந்தை குழந்தைகளுக்கு சிருஷ்டியின் முதல், இடை, கடையின் ஞானம்
கூறிக் கொண்டிருக்கின்றார். தாரணை செய்வது, செய்யாதது அவரவர்களது முயற்சியில் இருக்கிறது. யார்
மீதாவது பாபா ஆசீர்வாதம் செய்வார் அல்லது கருணை காட்டுவார் என்பது கிடையாது. இதில் கருணை
(4/4)
05.08.2016
கேட்பதற்கான விசயம் கிடையாது. ஒருவேளை தூண்டுதலின் மூலம் ஞானம் மற்றும் யோகா கற்பிப்பார் எனில்
பிறகு ஏன் நான் இந்த அசுத்த உலகிற்கு வர வேண்டும்? என்று ந்தை கேட்கின்றார். தூண்டுதல், ஆசீர்வாதம்
இது போன்ற வார்த்தைகள் பக்தி மார்க்கத்தினுடையது. இங்கு முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது.
தூண்டுதலுக்கான விசயம் கிடையாது. உங்களுக்கு ஒன்றாக 3 இன்ஜின் கிடைத்திருக்கிறது. அங்கு தந்தை
தனியாகவும், ஆசிரியர் தனியாகவும், கடைசியில் குருவும் இருப்பார்கள். இங்கு இந்த மூவரும் சேர்ந்திருக்கின்றனர்.
தந்தை கூறுகின்றார் லி நான் உங்களை பூஜைக்குரியவர்களாக ஆக்குகிறேன். நீங்கள் மீண்டும் பூஜாரிகளாக
ஆகிவிடுவீர்கள். மிகவும் யுக்தியாக புரிய வைக்க வேண்டும். கேட்டு யாரும் மயக்க மடைந்து விடக் கூடாது.
முதல் முக்கிய விசயம் இரண்டு தந்தைக்கானது. பகவான் தந்தை ஆவார், அவரது பிறப்பை சிவஜெயந்தியாக
இங்கு கொண்டாடுகின்றனர். அவசியம் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆக்கியிருக்க வேண்டும். பாரதம் தான்
சொர்க்கமாக இருந்தது. இப்போது நரகம் விநாசமாவதற்காக மகாபாரத யுத்தம் எதிரிலேயே இருக்கிறது. தந்தை
அவசியம் புது உலகை ஸ்தாபனை செய்யக் கூடியவர் ஆவார். தந்தையின் ஸ்ரீமத்தின் ஆதாரத்தில் நாம்
கூறுகிறோம் லி பாரதத்தை நாங்கள் தூய்மையாக ஆக்கியே தீருவோம். நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய்
தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) தந்தை எவ்வாறு துக்கம் நீக்கி சுகம் கொடுக்கிறாரோ அதே போன்று பாபாவிற்குச் சமமாக
வேண்டும். மிக இனிமையானவர்களாக ஆக வேண்டும். சதா சுப காரியங்கள் செய்து வலது
கரமாக ஆகிவிட வேண்டும்.
2) ஒருபோதும் கருத்து வேறுபாடு உடையவர்களாக ஆக்கி விடக் கூடாது. கருத்து மற்றும்
எண்ணங்களில் வேறுபாடு லி வந்து ஒருவரையொருவர் எதிர்த்துக் கொள்ளக் கூடாது. கோபம்
என்ற பூதத்தை நீக்கி விட வேண்டும்.
வரதானம்: நிமித்தமாக இருக்கின்ற ஆத்மாக்களின் மூலம் கர்மயோகி ஆவதற்கான வரதானத்தை
பலனாக அடையக் கூடிய மாஸ்டர் (வரதாதா) வரமளிக்கும் வள்ளல் ஆகுக !
எந்த ஒரு பொருளையும் உருவமாக (ஸ்தூலமாக) பார்க்கின்ற போது அதை உடனேயே ஏற்றுக் கொண்டு
விடுவர். ஆகையால் நிமித்தமாக இருக்கக் கூடிய சிரேஷ்ட ஆத்மாக்கள் தங்களது சேவை, தியாகம், அன்பு,
அனைவருக்கும் ஒத்துழைப்பு போன்ற நடைமுறை காரியத்தைப் பார்த்து என்ன தூண்டுதல் ஒருவருக்கு
கிடைக்கிறதோ அதுவே வரதானமாக ஆகிவிடும். எப்போது நிமித்தமாக இருக்கும் ஆத்மாக்கள் காரியங்கள்
செய்கின்ற போது இந்த குணங்களை தாரணை செய்திருப்பதை பார்த்து விடுகிறார்களோ அப்போது எளிதாக
கர்மயோகி ஆவதற்கான வரதானம் கிடைத்து விடும். யார் இந்த வரதானத்தை பலனாக அடைந்து
கொண்டிருக்கிறார்களோ அவர்கள் சுயம் மாஸ்டர் வரதாதா ஆகிவிடுவர்.
சுலோகன்: பெயரின் (புகழின்) ஆதாரத்தில் சேவை செய்வது என்றால்
உயர்ந்த பதவி அடைவதில் பெயரை பின்னுக்கு (புறம்) தள்ளி விடுகிறீர்கள்.
(1/4)
06
08.2016 காலை வகுப்பு ஓம்சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! நீங்கள் தங்கள் யோக பலத்தால்இந்த பழைய உலகத்தை மாற்றி
புதிய உலகமாக ஆக்குகிறீர்கள், நீங்கள் இந்த ஆன்மீக சேவைக்காக எழுந்தருளியுள்ளீர்கள்.
கேள்வி: நேர்மையான, உண்மையான புருஷார்த்தி குழந்தைகளின் அடையாளம் என்ன?
பதில்: நேர்மையான குழந்தைகள் ஒருபோதும் தன்னுடைய தவறை மறைக்க மாட்டார்கள். உடனடியாக
பாபாவிற்குக் கூறிவிடுவார்கள் .அவர்கள் மிகவும் அகங்காரம் (நிரகங்காரி) இல்லாதிருப்பார்கள். நான் என்ன
கர்மம் செய்கின்றேனோ என்ற சுலோகம் அவர்கள் புத்தியில் இருக்கும். 2) அவர்கள் மற்றவர்கள் சேவையில்
கலங்கப்படுத்துவதை வர்ணிக்க மாட்டார்கள். அவர்கள் மற்றவர்களின் அவகுணங்களைப் பார்த்து தன்னுடைய
புத்தியை கெடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
பாட்டு:லி பொறுமையாக இரு மனிதா....
ஓம்சாந்தி. இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை பொறுமையாக இருங்கள்
என்கின்றார். லௌகீக தந்தை கூட தைரியம் கொடுக்கின்றார் அல்லவா? யாருக்காவது நோய் வந்து விட்டால்
நாம் ஆறுதல் கூறுகின்றோம். உங்களுடைய நோயின், இந்த துக்கமான நாட்கள் மாறி சுகமான நாட்கள் வரும்.
அது ஸ்தூல தந்தை ஸ்தூலத்தில் தைரியம் தருகின்றார். இப்பொழுது இவர் எல்லையற்ற தந்தை, குழந்தைகளுக்கு
எல்லையற்ற தைரியம் கொடுக்கின்றார். குழந்தைகளே! உங்களுடைய சுகமயமான நாட்கள் வந்து
கொண்டிருக்கின்றன. இன்னும் சிறிது நாட்கள் தான் இருக்கின்றது என்கின்றார். இப்பொழுது நீங்கள் பாபாவின்
மடியில் இருந்து கொண்டு மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். நீங்கள் கூட சிவ சக்திகள் தானே!
சிவபாபாவின் சிவசக்திகள் மீண்டும் வெளிப்பட்டுவிட்டார்கள். இவர்கள் (கோபியர்கள்) கூட ஆத்மாகக்கள்
தான். இவர்கள் அனைவரும் சிவனிடம் இருந்து சக்திகளைப் பெறுகின்றார்கள். நீங்களும் கூட சக்தியை
அடைகின்றீர்கள். இதில் கிருபை, ஆசீர்வாதம் என்ற விஷயமே இல்லை என்று பாபா புரிய வைக்கின்றார்.
நினைவில் இருந்து சக்திகளை எடுத்துக் கொண்டே இருங்கள். நினைவால் தான் பாவ கர்மங்கள் வினாசம்
ஆகும் மற்றும் நீங்கள் சக்திசாலி ஆகிக் கொண்டே இருப்பீர்கள். பழைய உலகத்தைத் திருப்பி புதிய உலகமாக
ஆக்கும் நீங்கள் சிவனின் சக்தி சேனைகள் உங்களிடம் அந்தளவு சர்வ சக்திகள் இருக்கின்றது. யோக
பலத்தால் நீங்கள் இந்த பழைய உலகத்தை மாற்றுகின்றீர்கள் என்பதைப் புரிந்து கொண்டீர்கள். மனிதர்கள் ஒரு
விரலை துôக்கி காட்டி சைகையால் அல்லவான இறைவனை நினையுங்கள் என்கின்றார்கள். இப்பொழுது
குழந்தைகள் நீங்கள் புரிந்து கொண்டீர்கள்லி பாபாவின் நினைவால் கல்லால் ஆன இந்த மலை, அதாவது
பழைய உலகம் மாறி விடுகின்றது. இப்பொழுது நாம் பரிஸ்தான் (சொர்க்கம்) ஸ்தாபனை செய்து கொண்டு
இருக்கின்றோம். பாபா குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார்லி கண்காட்சிகளில் நன்றாக சேவை செய்யுங்கள்,
முயற்சி செய்யுங்கள், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அமர்ந்து கற்றுக் கொள்ளுங்கள். மிகவும் எளிதான
விஷயம். குழந்தைகளுக்கு ஒவ்வொரு விதமான கல்வி கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொருவருக்கும்
கர்ம கணக்கு உள்ளது. கன்னியாக்களின் கணக்கு நன்றாக உள்ளது. யாருக்கு திருமணம் ஆகியுள்ளதோ
அவர்கள் கூறுகின்றார்கள்லி இந்த நேரத்தில் நாங்கள் கன்னியர்களாக இருந்திருந்தால் இந்த வலைகளில்
இருந்தெல்லாம் விடுபட்டு இருப்போம், சுதந்திரப் பறவைகளாக இருப்போம் என்கின்றார்கள். கன்னியர்கள்
என்றாலே சுதந்திரப் பறவைகள். ஆனால் தீயவர்களின் தொடர்பால் நஷ்டம் ஏற்பட்டு விடுகின்றது. பெண்களுக்கு
கணவன், குழந்தைகள் என்று எவ்வளவு பந்தன வலைகள் உள்ளன, இதில் பழக்கலிவழக்கங்கள் என்ற
வலைகள் எவ்வளவு உள்ளன. கன்னியர்களுக்கு எந்த பந்தனமும் இல்லை. இப்பொழுது பம்பாயில் கூட
கன்யர்கள் தயார் ஆகின்றார்கள். நாங்கள் எங்கள் பகுதியை நாங்களே கவனித்துக் கொள்கின்றோம் என்று
கூறுகின்றார்கள். அனைவரும் தன்னுடைய தொகுதிக்காக எத்தனை முயற்சி செய்கின்றார்கள். எங்களுடையது
குஜராத், எங்களுடையது உ,பி. என்று கூறுகின்றார்கள். நீங்கள் இப்பொழுது தன்னுடைய சுயராஜ்யத்தை
அடைந்து கொண்டு இருக்கின்றீர்கள், இதில் நான் இந்த தொகுதியைச் சேர்ந்தவன், நான் இந்த தொகுதியைச்
சேர்ந்தவன் என்பதும் இருக்கக் கூடாது. நீங்கள் யாரிடமும் பொறாமை படக்கூடாது. மற்றவர்களின் அவ
குணங்களைப் பார்த்து உங்கள் புத்தியை கெடுத்துக் கொள்ளக் கூடாது. நான் எத்தனை ஆத்மாக்களுக்கு,
சகோதரலிசகோதரிகளுக்கு சுகமான பாதை காட்டியுள்ளேன் என்று தன்னைத் தான் பாருங்கள். பாப்தாதாவின்
மனதில் அமரவில்லை என்றால் சிம்மாசனத்தில் அமர முடியாது. சில குழந்தைகளுக்கு சேவையில் நல்ல
ஆர்வம் உள்ளது என்று பாப்தாதா அறிவார். கொஞ்சம் கூட தேக அபிமானம் இருக்கக் கூடாது. சிலர் மிகவும்
அகங்காரத்துடனிருக்கின்றார்கள். எப்பொழுதும் மற்றவர்களுடைய அவகுணங்களையே பார்க்கின்றார்கள். இவர்கள்
இப்படிச் செய்கின்றார்கள், இப்படிப் பட்டவர்கள் என்று கூறாமல் நீங்கள் உங்கள் சேவையை செய்யுங்கள்.
பிராமண குழந்தைகளின் கடமை, சேவையில் ஈடுபடுவது. பாபா உட்கார்ந்து இருக்கின்றார், பாபாவிடம் அனைத்து
(2/4)
06.08.2016
செய்திகளும் வருகின்றன. ஒவ்வொருவரின் நிலயையும் பாபா அறிவார். சேவை செய்வதைப் பார்த்து மகிமையும்
கூட செய்கின்றார். குழந்தைகளுக்கு சேவையில் ஆர்வம் வர வேண்டும். ஒவ்வொருவருக்கும் இந்த ஆன்மீக
சேவையால்லி நன்மை செய்ய வேண்டும். உலகியல் தொழில் ஜென்மலிஜென்மமாக செய்து விட்டீர்கள். இந்தத்
தொழிலை அபூர்வகமாக யாராவது தான் செய்ய முடியம். பாபா சேவையின் விதியை மிகவும் சுலபமான
முறையில் புரிய வைக்கின்றார். ஒருபோதும் மற்றவர்களை நிந்தனை செய்யக் கூடாது. அவ்வாறு நிறைய பேர்
செய்கின்றார்கள். நல்லலிநல்ல மகாரதிகளைக் கூட மாயா மூக்கைப் பிடிக்கின்றது. பாபாவை நினைக்கவில்லை
என்றால் மாயா மூக்கைப் பிடித்து விடும். பாபா கூட கூறுகின்றார் அல்லவாலி நான் சாதாரண உடலில்
வந்ததைப் பார்த்து என்னை யாரும் அறிந்து கொள்வதில்லை. இப்படிலிஇப்படி செய்ய வேண்டும் என்று
பாபாவுக்கே வழி கூறுகின்றார்கள். நிலமை அப்படி உள்ளது, பாபா சிறிது மாற்றி செய்தாலும் விரோதி ஆகி
விடுகின்றார்கள். பாபாவுக்கே தன்னுடைய வழியை எழுதி அனுப்பு கின்றார்கள். பழமொழி உள்ளது அல்லவாலி
எலிகள் சிறைக் கூண்டில் (எலிகளுக்கு ஒரு மஞ்சள் துண்டு கிடைத்து விட்டால் அந்த மளிகைக் கடைக்கே
தானே முதலாளி என்று நினைக்குமாம்) நாம் சேவையில் களங்கம் செய்து கொண்டு இருக்கின்றோம் என்று
புரிந்து கொள்வதில்லை. தவறுகள் என்பதை அநேகம் பேர் செய்கின்றனர். சில நேரம் ஸ்திதி மேலும்லிகீழும்
ஆகிக் கொண்டு தான் வருகின்றது. ஒவ்வொரு வரும் தன்டைய நிலையைப் பாருங்கள். நாணயமான குழந்தைகள்
தன்னுடைய நிலையை உடனே கூறுகின்றார்கள். சிலர் தன்னுடைய தவறுகளை மறைத்து விடுகின்றார்கள்,
இதில் அகங்காரம் இல்லாத நிலை வேண்டும். சேவையை அதிகரிப்பதில் ஈடுபட வேண்டும். நாம் என்ன
கர்மம் செய்கின்றோமோ அதைப் பார்த்து மற்றவர்களும் செய்வார்கள்லி இதை சதா நாம் கவனம் வைக்க
வேண்டும். நான் யாரையாவது நிந்தனை செய்தால் மற்றவர்களும் செய்வார்கள். இது நிறைய பேருக்கு
தெரிவதில்லை. நீங்கள் உங்கள் சேவையில் ஈடுபடுங்கள் என்று பாபா புரிய வைக்கின்றார். இல்லை என்றால்
வருத்தப்படுவீர்கள். எதிரிகள் கூட அதிகம் ஆகின்றார்கள்.
நீங்கள் இப்பொழுது சூத்திரனிலிருந்து மாறி பிரம்மா கமலவாய் மூலமாக வந்த பிராமணனாக
ஆகியுள்ளீர்கள். யாரிடம் ஐந்து விகாரங்கள் இருக்கின்றதோ, அவர்கள் அசுர சம்பிரதாயம், நீங்கள் இப்பொழுது
தெய்வீக சம்பரதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆகிவிட்டீர்கள். நீங்கள் தேவதை ஆவதற்காக விகாரங்களின் மீது
வெற்றி அடைந்து கொண்டிருக்கின்றீர்கள். இங்கு தேவதைகள் இல்லை. சத்திய யுகத்தில் தான் தேவதைகள்
இருப்பார்கள். நீங்கள் இப்பொழுது தெய்வீக சம்பிரதாயத்தினராக ஆகிக் கொண்டு இருக்கின்றீர்கள்.
குழந்தைகளான உங்களுக்கு இப்பொழுது புரிய வைப்பதற்காக வாய்ப்பு கிடைத்துள்ளது. கண்காட்சிகளில்
புரிய வைய்யுங்கள். கண்காட்சிகளில், விழாவில் ஒவ்வொருவரின் நாடி தெரிந்து விடுகின்றது. ப்ரொஜக்டரில்
யாருக்கும் புரிய வைக்க முடியாது. நேரில் புரிய வைத்தால் தான் புரிய வைக்க முடியும். கண்காட்சி வைப்பது
என்பது நல்ல விஷயம், அதில் எழுதக் கூட முடியும். கண்காட்சியில் சேவை செய்ய ஆர்வம் இருக்க
வேண்டும். தினந்தோறும் படித்தால் தான் போதை ஏறும். பந்தனத்தில் இருக்கக் கூடியவர்கள் என்றால்,
வீட்டில் இருந்து கொண்டே பாபாவை நினைத்தீர்களானால் பாவகர்மம் வினாசம் ஆகும். வீட்டில் உட்கார்ந்து
கூட நினைவு செய்வது நல்லது. ஆனால் நினைவு செய்வது என்பது லி குழந்தைகளுக்காக மிகவும் கடினமான
விஷயம் ஆகி விட்டது. பாபாவிடமிருந்து 21 ஜென்மத்திற்கு ஆஸ்தி கிடைக்கின்றது ஆனால் அவரை
நினைப்பதில்லை. நல்லலிநல்ல சொற்பொழிவு செய்யக் கூடிய மகாரதிகள் கூட பாபாவை நினைப்பதில்லை.
அதிகாலையில் எழுந்திருப்பதில்லை, எழுந்தாலும் உட்கார்ந்து துôங்கி விழுகின்றார்கள். நினைப்பதற்காக காலை
நேரம் தான் மிகவும் நல்லது. பக்தி மார்க்கத்தில் கூட அதிகாலை எழுந்து நினைக்கின்றார்கள். இருப்பினும்
அவர்களுக்கு அது இறங்கும் கலை ஆகும். இங்கே என்னவோ ஏறும் விஷயமாக உள்ளது. மாயா எத்தனை
தடைகள் போடுகின்றன. அதிகாலையில் எழுந்து பாபாவை நினைக்கவில்லை என்றால், தாரனை எப்படி
ஏற்படும், பாவ கர்மங்கள் எப்படி அழியும். மற்றபடி முரளி படிப்பதுலி என்பது சிறிய குழந்தை கூட கற்றுக்
கொண்டு புரிய வைக்க முடியும். இந்த படிப்பு பெரியவர்களுக்கானது. இது எத்தனை பெரிய பல்கலைக்கழகம்.
நமக்கு கற்பிக்கக் கூடியவர் யார்? இந்த போதை குழந்தைகளுக்கு இருப்பதில்லை. மாயா யாரையாவது ஏமாற்றி
விட்டது என்றால், நாம் அதை பார்க்காமல் சேவையில் ஈடுபட வேண்டும். பாபாவிடம் அனைத்து செய்திகளும்
வந்து கொண்டே தான் இருக்கின்றது. சிலர் தேக அபிமானத்தில் வந்து இவர்கள் இப்படி செய்கின்றார்கள்,
அவர்கள் இப்படி செய்கின்றார்கள் என்று மற்றவர்களை நிந்தனை செய்து கொண்டு நேரத்தை வீணாக்குகின்றார்கள்.
உங்களுக்கு இரவு, பகல் ஈடுபாடு இருக்க வேண்டும். உங்களுடைய தொழிலே இது தான். இது சிவபாபா, இது
பிரம்மா பாபா என்று தினந்தோறும் கண்காட்சியில் புரிய வைய்யுங்கள். கல்பத்திற்கு முன்னால் கூட பிரஜா பிதா
பிரம்மாவின் புகழ் பாடப்பட்டுள்ளது. பிரஜாபிதா பிரம்மா மூலமாகத் தான் மனித சிருஷ்டி படைக்கபடுகின்றது.
மனிதர்களே இல்லை என்று கூற முடியாது, மனித சிருஷ்டியை படைக்கின்றார்கள் என்றால், முள்ளை மலராக
ஆக்குகின்றார். பிரம்மா மூலமாக சிருஷ்டியை படைக்கின்றார் என்றால், மேலே சிருஷ்டியைப் படைப்பாரா?
(3/4)
06.08.2016
இங்கு தான் பிரம்மா இருக்க வேண்டும் அல்லவா? எவ்வளவு தெளிவாகப் புரிய வைக்கின்றார்.
பாபா கூறுகின்றார்லி நான் அநேக ஜென்மங்களின் கடைசி ஜென்மத்தில் பிரவேசம் செய்து மனிதனை
தேவதை ஆக்குகின்றேன். தொழில் ஆகிய காரியங்களிலிருந்து சிறிது நேரம் ஒதுக்கி இதில் ஈடுபட வேண்டும்.
நேரம் கிடைக்கவில்லை என்று கூறக் கூடாது. நோய் வந்து விட்டால் பின்பு எனக்கு நேரம் இல்லை என்று
சொல்ல முடியுமா? முயற்சி செய்ய வேண்டும். பிரேரணையால் ஒன்றும் செய்ய முடியாது. பகவானுக்கே
பிரேரணை மூலமாக காரியம் செய்ய முடியாது எனும் போது மற்றவர்களால் எப்படி முடியும்? பகவானால்
என்ன செய்ய முடியாது என்று நினைக்கின்றார்கள். இறந்தவர்களையும் உயிர்பிக்க முடியும் என்று
நினைக்கின்றார்கள். அட! பகவானுக்கு நீங்கள் கூறுகின்றீர்கள் லி ஹே! பதீதலிபாவனரே, வந்து எங்களை பதீத
நிலையிலிருந்து பாவனம் ஆக்குங்கள், மற்றபடி வேறு ஒன்றும் தேவை இல்லை என்று அழைக்கின்றீர்கள்.
நீங்கள் வந்து இறந்தவர்களை உயிர்ப்பியுங்கள் என்றா அழைக்கின்றீர்கள்? அவர் இருப்பதே பதீதலிபாவனராக
பாரதம் பாவனமாக இருந்தது. பாபா கூறுகின்றார்லி நான் கல்பலிகல்பம் வந்து உங்களை பாவனம் ஆக்குகின்றேன்.
மாயா வந்து மீண்டும் பதீதமாக ஆக்குகின்றது. இப்பொழுது நான் மீண்டும் வந்து பாவனம் ஆக்குகின்றேன்.
எவ்வளவு சகஜமான விஷயங்களைக் கூறுகின்றார். யுனானி மருத்துவர்கள் பெரியலிபெரிய நோயைக் கூட
வேர்லிஇலைகள் மூலமாக சரி செய்து விடுகின்றார், பின்பு அவர்கள் மகிமை கூட ஏற்படுகின்றது. யாருக்காவது
குழந்தையோ அல்லது செல்வமோ கிடைத்தால் குருவின் கருணையால் கிடைத்தது என்கின்றார்கள். நல்லது
குழந்தை இறந்து விட்டால் தலைவிதி என்கின்றார்கள். இந்த அனைத்து விஷயங்களும் குழந்தைகளாகிய
நீங்கள் அறிவீர்கள். சன்னியாசிகள் துôய்மையாக இருக்கின்றார்கள் என்றால், அவர்களுக்கு மதிப்பு ஏற்படுகின்றது.
ஆனால் அவர்கள் ஹடயோகிகள், அவர்களால் இராஜயோகம் கற்பிக்க முடியாது. அவர்கள் சன்யாசிகள், நாம்
இல்லறத்தைச் சேர்ந்தவர்கள், பிறகு நாம் தன்னை பின்பற்றுபவர்கள் என்று எப்படி கூற முடியும்? பாபா
கூறுகின்றார்லி குழந்தைகள் முழுமையாகப் பின்பற்ற வேண்டும் லி மன்மனாபவ! என்னை நினைத்தீர்கள்
என்றால் நீங்கள் துôய்மை அடைந்து விடுவீர்கள் மற்றும் என்னுடன் செல்லலாம். நான் முழு துôய்மையாக
இருக்கின்றேன். மனிதர்கள் பதீதர்களாக ஆக்குகின்றார்கள், பாபா வந்து பாவனம் ஆக்குகின்றார். அவர்
துôய்மை, சாந்தி, சுகக் கடலாக இருக்கின்றார். உங்களையும் அவ்வாறு ஆக்கிக் கொண்டு இருக்கின்றார். நீங்கள்
யோக பலத்தால் ஆத்மாவை துôய்மை ஆக்குகின்றீர்கள். நமக்கு முதல் தரமான உடல் கிடைக்கும் என்று
நீங்கள் அறிவீர்கள். மனிதர்களுக்கு நடைமுறையில் தேவதை ஆக்க வேண்டும். தேவதைகளைப் போல்
ஆடைகளை அணிந்து கொண்டால் போதாது, முழுமையாக தன் மீது கவனம் செலுத்த வேண்டும்.
தேகலிஅபிமானம் வரக் கூடாது. பாபா நாங்கள் உங்களிடம் ஆஸ்தியை அடைந்தே தான் தீருவோம். நீங்கள்
கூட நாங்கள் பாரதத்தை சிரேஷ்டாச்சாரியாக ஆக்கியே தீருவோம் என்று கூறுகின்றீர்கள். நம்பிக்கை உள்ளவர்கள்
தானே கூறுவார்கள் அல்லவா? சிலர் இவ்வளவு குறைந்த காலத்தில் எப்படி செய்ய முடியும் என்று கேட்கின்றார்கள்.
உண்மையில் ஒருபோதும் இவ்வாறு சந்தேகம் வரக் கூடாது. சந்தேகம் வந்தால் சேவையில் பின்தங்கி
விடுவார்கள். நேரம் மிகவும் குறைவாக உள்ளது. எவ்வளவு முடிகின்றதோ நன்றாக புருஷார்த்தம் செய்ய
வேண்டும். சிறிது யுத்தம் மற்றும் எங்கேயாவது போராட்டம் நடந்தால் பின்பு பாருங்கள் எவ்வளவு முயற்சி
செய்ய வேண்டியுள்ளது. புரிந்து கொள்வீர்கள் இல்லையா? நாம் நினைவில் முழுமையாக இருக்கவில்லை
என்றால், அந்த நேரம் கூட்டத்தில் ஒன்றும் செய்ய முடியாது. அந்த நேரத்தில் மிகவும் ஆபத்துகள் வரும்
ஆகையால் பாபா கூறுகின்றார் முடிந்தளவு விடுபட்டதை நிரப்புங்கள். ஏனென்றால் இது ஆத்மாக்களின்
பந்தயம் ஆகும். பாபா எவ்வளவு நல்லவிதமாகப் புரிய வைக்கின்றார். அடையாளக்குறி வரை செல்வது
என்றால், பாபாவின் வீட்டிற்கு சென்று பின்பு புதிய உலகத்திற்கு வர வேண்டும். மிகவும் சிறந்த பந்தயம் இது.
பாபா கூறுகின்றார்லி என்னை தொட்டுவிட்டு அதாவது பரந்தாமத்திற்குச் சென்று பின்பு வர வேண்டும். யோகத்தில்
யார் மூழ்கி இருக்கின்றார்களோ அவர்கள் முதன்லிமுதலில் வருவார்கள். முக்திதாமத்திற்குச் செல்ல வேண்டும்
என்று விரும்புகின்றார்கள். அதனால் பாபா கூறுகின்றார்லி என்னை நினைத்தால் சென்று விடலாம். முக்திதாமம்
அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் மீண்டும் நடிப்பதற்காக வருவீர்கள். மோட்சம் யாருக்கும் கிடைக்காது.
ஈஸ்வரிய பூளோகலிசரித்திரத்தில் மோட்சம் என்ற வார்த்தையே இல்லை. ஒரு வினாடியில் உங்களுக்கு ஜீவன்
முக்தி கிடைக்கின்றது, மற்ற அனைவரும் முக்திக்குப் போய் விடுவார்கள். இராவண இராஜ்யத்திலிருந்து முக்தி
அவசியம் கிடைக்க வேண்டும், யார் புருஷார்த்தம் செய்கின்றார்களோ அவர்கள் உயர்ந்த பதவி அடைவார்கள்.
குழந்தைகள் மிகவும் இனிமையாக இருக்க வேண்டும். சுபாவம் மிகவும் இனிமையாக இருக்க வேண்டும்.
கோபம் கொள்ளக் கூடாது, துர்வாச முனிவரின் பெயர் தெரியுமல்லவா? இந்த இராஜ ரிμகளிலிலும் சிலர்
இப்படி உள்ளார்கள். சதா தன்னுடைய மனதில் கையை வைத்து பார்க்க வேண்டும் நான் என்ன செய்கின்றேன்!
இந்த நிலையில் இருந்தால், எனக்கு என்ன பதவி கிடைக்கும்! சேவை செய்யவில்லை என்றால், தனக்குச்
சமம் ஆக்கவில்லை என்றால், என்ன பதவி கிடைக்கும். சிறிது கிடைத்தவுடனேயே மகிழ்ச்சி அடையக்
06.08.2016
(4/4)
கூடாது. பாபா கூறுகின்றார்லி குழந்தைகளுக்கு முழு இராஜ்யத்தைக் கொடுப்பதற்கு நான் வந்துள்ளேன் என்கின்றார்.
அதனால் நம்பிக்கை வைத்து செய்து காட்ட வேண்டும். சொல்வதால் மட்டும் ஒன்றும் செய்ய முடியாது. பாபா
சேவையில் எலும்பு தேய சேவை செய்ய வேண்டும். செய்யவும் செய்கின்றார்கள். ஆனால் சிலநேரம் தேக
அபிமானம் வந்தவுடன் போதையில் வந்து விழுந்து விடுகின்றார்கள். மாயா கூட பயில்வான் குறைந்தவனல்ல.
பாபாவின் ஸ்ரீமத்படி நடக்கவில்லை என்றால் மாயா யுத்தம் செய்கின்றது, அதனால் பாபாவிடம் இருந்து
விடுதலைப் பத்திரம் கொடுக்கச் செய்து விடுகின்றது. பாபா சுகதாமத்திற்கு எஜமானன் ஆக்குகின்றார் என்றால்,
தன் மீது இரக்கப்பட வேண்டும். பாபாவின் வழி மிகவும் எளிதாக உள்ளது. மாயாவின் புயல் மிகவும் வரும்,
ஆனால் மஹாவீர் ஆக வேண்டும். நல்லது!
இனிமையிலும் இனிமையான செல்லமான குழந்தைகளுக்கு தாய் தந்தையின்
அன்பு வணக்கங்கள், மேலும் காலை வணக்கம்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீக தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:லி
1) சேவையில் ஆர்வம் வைத்து தனக்கும் மற்றும் மற்றவர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும்.
மற்றவர்கள் சேவையில் களங்கம் செய்தால் வர்ணனை செய்யக் கூடாது. மற்றவர்களின்
சிந்தனையில் தன்னுடைய நேரத்தை வீணாக்கக் கூடாது.
2) நாணயமாக மற்றும் அகங்காரமற்றவராகி சேவையில் முன்னேற வேண்டும். அதிகாலையில்
எழுந்து பாபாவை மிகவும் அன்போடு நினைவவு செய்ய வேண்டும். சொல்வதும்,செய்வதும்
சமமாக இருக்க வேண்டும்.
வரதானம்:லி ஞானம்லியோகத்தின் சக்திசாலி கிரணங்கள் மூலமாக பழைய சம்ஸ்காரம் என்ற
பூச்சிகளை எரிக்கக் கூடியமாஸ்டர் ஞான சூரியன் ஆகுக.
எப்படிப்பட்ட பதீதமான சூழ்நிலையையும் மாற்றுவதற்காகவும்,அதாவது பழைய சம்ஸ்காரம் என்ற பூச்சிகளை
எரிப்பதற்காகவும் நான் மாஸ்டர் ஞானசூரியன் என்ற நினைவு இருக்க வேண்டும். சூரியனின் கடமை ஒளியைக்
கொடுப்பது மற்றும் பூச்சிகளை அழிப்பதாகும். அதனால் ஞானலியோக சக்தியின் மூலமாக அதாவது சிரேஷ்ட
செயல் மூலமாக இந்தக் கடமையை செய்து கொண்டிருங்கள். சக்தி குறைவாக இருந்தால் ஞானம் ஒளியை
மட்டும் கொடுக்கும். ஆனால் பழைய சம்ஸ்காரம் என்ற பூச்சிகளை அழிக்க முடியாது ஆகையால் யோக
தபஸ்யா மூலமாக சக்திசாலி ஆகுங்கள்.
சுலேகன்: சுபபாவனை, சுபஆசை என்ற சிரேஷ்ட எண்ணம்
தான் சேமிப்புக் கணக்கை அதிகரிக்கின்றது.
07
08.2016 காலை முரளி ஓம் சாந்தி ''அவ்யக்த பாப்தாதா''
ரிவைஸ் 01.11.1981 மதுபன்
'' சேவையின் வெற்றிக்கான சாவி ''
இன்று பாப்தாதா குழந்தைகளை எந்த ரூபத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறார்? இன்று உலக சேவாதாரி
தந்தை தன்னுடைய சேவாதாரி குழந்தைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார் அதாவது தன்னுடைய இறை
சேவாதாரி குழந்தைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார். யார் இறை சேவாதாரியாக இருக்கிறாரோ அவருக்கு
எப்பொழுதும் இயல்பாகவே தந்தை மற்றும் சேவை இரண்டும் சேர்ந்தே நினைவில் இருக்கிறது. பொதுவாகவே
இன்றைய உலகத்தில் கூட யாராவது ஒருவருடைய காரியத்தை செய்யவில்லை மற்றும் உதவி செய்பவராக
ஆகவில்லை என்றால் பகவானின் பெயரால் இந்தக் காரியம் செய்யுங்கள் என்று கூறுவார்கள். ஏனென்றால்
பகவானின் பெயரால் உதவி கிடைத்து விடும் மற்றும் வெற்றியும் கிடைத்து விடும் என்று நினைக்கிறார்கள்.
ஏதாவது சம்பவமற்ற காரியம் மற்றம் நம்பிக்கையிழந்த விஷயம் இருக்கிறது என்றாலும் 'பகவானின் பெயரை
கூறுங்கள் காரியம் நடந்து விடும்' என்று கூறுகிறார்கள். இதன் மூலம் என்ன நிரூபணம் ஆகிறது? சம்பவமற்றது
சம்பவமாக அல்லது நம்பிக்கையிழந்த நிலையிலிருந்து நம்பிக்கைக்குரிய காரியத்தை தந்தை வந்து செய்தார்.
அதனால் தான் இன்று வரையிலும் இந்த பழமொழி நடைமுறையில் இருக்கிறது. ஆனால் நீங்கள் அனைவருமோ
இறைவனின் சேவாதாரிகள் தான். நீங்கள் பகவானின் பெயரை மட்டும் சொல்பவர்கள் அல்ல ஆனால் பகவானின்
துணைவர்களாகி உயர்ந்த காரியம் செய்பவர்கள். அப்படி இறை சேவாதாரி குழந்தைகளின் ஒவ்வொரு
காரியத்திலும் வெற்றி நிச்சயிக்கப்பட்டது. இறை சேவாதாரிகள் செய்யும் காரியத்தில் எந்த அசம்பவ விஷயம்
கிடையாது. அனைத்தும் சம்பவம் மற்றும் சுலபமானது. இறை சேவாதாரி குழந்தைகளுக்கு உலக மாற்றத்தின்
காரியம் கடினமாக அனுபவம் ஆகிறதா? ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது என்று அனுபவம் ஆகிறது தான்
இல்லையா? எப்பொழுதுமே இதையோ அனேக தடவைகள் செய்திருக்கிறோம் என்ற இந்த அனுபவம் தான்
செய்கிறீர்கள். எதுவும் புதிய விஷயமாக அனுபவம் ஆவதில்லை. ஆகுமா, ஆகாதா, எப்படி ஆகும் என்ற
இந்த கேள்வியே எழுவதில்லை. ஏனென்றால் தந்தையின் துணைவர்களாக இருக்கிறீர்கள். எப்பொழுது இன்று
வரையிலும் பகவானின் பெயரை எடுப்பதினால் மட்டும் காரியம் நடந்தேறி விடுகிறது என்றால் உடன் காரியம்
செய்யும் குழந்தைகளின் ஒவ்வொரு காரியத்திலும் வெற்றி நிச்சயிக்கப்பட்டது. எனவே பாப்தாதா குழந்தைகளை
எப்பொழுதும் வெற்றி அடைபவர்கள் என்று கூறுகிறார். வெற்றி நட்சத்திரங்கள் தன்னுடைய வெற்றி மூலமாக
உலகை ஒளிமயமாக ஆக்குபவர்கள். தன்னை எப்பொழுதுமே அந்த மாதிரி வெற்றி அடைபவர் என்று
அனுபவம் செய்கிறீர்களா? ஒருவேளை நடைமுறையில் எப்பொழுதாவது வெற்றி கிடைக்காமல் அல்லது கடினம்
அனுபவம் ஆகிறது என்றால் அதற்கான காரணம் சேவாதாரியாக மட்டும் ஆகிறீர்கள். இறைவனின் சேவாதாரியாக
ஆவதில்லை. இறைவனை சேவையிலிருந்து பிரித்து விடுகிறீர்கள். எனவே தனியாக இருக்கும் காரணத்தினால்
சுலபமானது கூட கடினம் ஆகிவிடுகிறது மற்றும் வெற்றியின் லட்சியம் மிக தூரமாக தென்படுகிறது. ஆனால்
பெயரே இறைவனின் சேவாதாரிகள் என்றால் இணைந்திருப்பவரை தனியாக பிரிக்காதீர்கள். ஆனால் தனியாக
பிரித்து விடுகிறீர்கள். எப்பொழுதும் இந்த பெயர் நினைவிருக்கிறது என்றால் சேவையில் இயல்பாகவே இறை
மந்திரம் நிரம்பியதாக இருக்கும். சேவைக் களத்தில் தனக்காக மற்றும் சேவைக்காக விதவிதமான தடைகள்
என்ன வருகின்றனவோ அதற்கான காரணமும் கூட தன்னை சேவாதாரி என்று மட்டும் நினைக்கிறீர்கள்
என்பது தான். ஆனால் ஈஸ்வரிய சேவாதாரி, சேவை மட்டும் இல்லை ஆனால் இறைவனின் சேவை என்ற
இந்த நினைவு மூலம் நினைவு மற்றும் சேவை இயல்பாகவே இணைந்ததாக ஆகிவிடுகிறது. நினைவு மற்றும்
சேவை எப்பொழுதும் சமநிலையில் இருக்கிறது. எங்கு சமநிலை இருக்கிறதோ அங்கு சுயம் அவரே எப்பொழுதும்
ஆனந்தம் நிறைந்த மற்றும் மற்றவர்களுக்காக எப்பொழுதும் பிலஸ்ஸிங்க்ஸ் அதாவது கருணை நிறைந்த
பார்வை சுலபமாகவே இருக்கிறது. இவர் மேல் கருணை செய்யுங்கள் என்று யோசிப்பதற்கான அவசியமே
இருக்காது. கருணை நிறைந்தவராகத் தான் இருக்கிறார். எப்பொழுதும் செய்யும் வேலையே தான் கிருபை
செய்வது. அந்த மாதிரி அனாதி சம்ஸ்காரம் சொரூபமாக ஆகியிருக்கிறதா? எது விசேஷ சம்ஸ்காரமாக
இருக்குமோ அது இயல்பாகவே காரியம் செய்து கொண்டே இருக்கும். யோசித்து செய்ய மாட்டார்கள் ஆனால்
இயல்பாகவே நடந்து விடும். என்னுடைய சம்ஸ்காரம் அந்த மாதிரியானது எனவே அப்படி நடந்தே விட்டது
என்று அடிக்கடி கூறுகிறீர்கள். என்னுடைய நோக்கம் அல்ல, என்னுடைய லட்சியம் அல்ல ஆனால் ஆகிவிட்டது.
ஏன்? சம்ஸ்காரம். அந்த மாதிரி கூறுகிறீர்கள் தான் இல்லையா. நான் கோபப்படவில்லை ஆனால் நான் பேசும்
சம்ஸ்காரமே அந்த மாதிரி என்று அநேகர்கள் கூறுகிறார்கள். இதன் மூலம் என்ன நிரூபணம் ஆகிறது? அற்ப
காலத்து சம்ஸ்காரம் கூட இயல்பாகவே பேச்சை மற்றும் காரியத்தை செய்வித்துக் கொண்டே இருக்கிறது.
அப்படியானால் அனாதி ஒரிஜினல் சம்ஸ்காரம் உயர்ந்த ஆத்மாக்கள் உங்களுடையதாக என்ன இருந்தது?
(2/4)
07.08.2016
எப்பொழுதும் சம்பன்னமான மற்றும் வெற்றி அடைந்தவர். எப்பொழுதும் வரம் அளிப்பவர் மற்றும் பெரும்
வள்ளல். அப்படி இந்த சம்ஸ்காரம் நினைவில் இருப்பதினால் இயல்பாகவே அனைவருக்காகவும் கருணை
பார்வை இருக்கிறது.
அற்ப காலத்து சம்ஸ்காரங்களை அனாதி சம்ஸ்காரங்களினால் பரிவர்த்தனை செய்யுங்கள். அப்படி
வரும் விதவிதமான தடைகள் அனாதி சம்ஸ்காரம் வெளிப்படுவதினால் சுலபமாகவே முடிவடைந்து விடும்.
பாப்தாதாவிற்கு இதுவரையிலும் கூட சுயமாற்றம் மற்றும் உலகமாற்றத்தின் சேவையில் குழந்தைகள் செய்யும்
கடின உழைப்பை பார்த்து சகித்துக் கொள்ள முடிவதில்லை. இறைவனின் சேவாதாரிகளாக இருந்தும் கடின
உழைப்பா? எப்படி பெயரைக் கூறியே காரியத்தை செய்விக்கிறார்கள் என்றால் நீங்களோ அதிகாரி ஆவீர்கள்.
உங்களுக்கு கடின உழைப்பு எப்படி இருக்க முடியும்? பிறகு சின்னஞ்சிறு தவறு செய்கிறீர்கள், என்ன தவறு
செய்கிறீர்கள் என்று தெரிந்திருக்கிறீர்களா? நன்றாகவே தெரிந்தும் இருக்கிறீர்கள் பிறகு ஏன் செய்கிறீர்கள்?
கட்டாயத்தில் வந்து விடுகிறீர்கள். பிறகு 'என்னுடைய சம்ஸ்காரம், என்னுடைய சுபாவம்' என்று சிறிய தவறு
செய்கிறீர்கள். அனாதி காலத்திற்கு பதிலாக மத்திய காலம் என்று நினைத்து விடுகிறீர்கள். மத்திய காலத்தின்
சம்ஸ்காரம் மற்றும் சுபாவத்தை என்னுடைய சம்ஸ்காரம், என்னுடைய சுபாவம் என்று புரிந்து கொள்ளும்
இந்த தவறை செய்கிறீர்கள். இது இராவணனின் சுபாவம், உங்களுடையது அல்ல. மாற்றான் பொருளை
தன்னுடையதாக்கும் தவறை செய்கிறீர்கள். என்னுடையது என்று கூறுவதினால் மற்றும் புரிந்து கொள்வதினால்
என்னுடையது என்பதில் வளைந்து கொடுப்பது இயல்பாகவே வந்து விடுகிறது. எனவே விட விரும்பினாலும்
விட முடிவதில்லை. தவறு என்ன என்று புரிந்ததா.
நான் இறைவனின் சேவாதாரி என்பதை எப்பொழுதும் நினைவில் வையுங்கள். நான் செய்தேன்
என்றல்லாமல் இறைவன் என் மூலமாக செய்வித்தார். இந்த ஒரு நினைவு மூலம் சுலபமாகவே அனைத்து
தடைகளின் விதையை நிரந்தரமாக அழித்து விடுங்கள். அனைத்து விதமான தடைகளின் விதை இரண்டு
வார்த்தைகளில் இருக்கிறது. அது என்ன இரண்டு வார்த்தைகள், அந்த வார்த்தைகளிலேயே தடை ரூபம்
வருகிறது. தடை வருவதற்கான வாசலை தெரிந்திருக்கிறீர்களா? அப்படி எல்லோருக்கும் தெரிந்த அந்த
இரண்டு வார்த்தைகள் எவை? விஸ்தாரமோ அதிகமாக இருக்கிறது ஆனால் இரண்டு வார்த்தைகளில் சாரம்
வந்து விடுகிறது. 1) அபிமானம் மற்றும் 2) அவமானம். சேவையின் சேத்திரத்தில் விசேஷமாக தடை இந்த
இரண்டு பாதைகளிலிருந்து வருகிறது. ஒன்றோ 'நான் செய்தேன்', இதில் அபிமானம் மற்றும் என்னையோ
ஏன் முன்னுக்கு வைக்கவில்லை, எனக்கு ஏன் இது கூறப்பட்டது, இது எனக்கு அவமானம் கொடுக்கப்பட்டது
இதே அபிமானம் மற்றும் அவமானத்தின் பாவனை விதவிதமான தடைகளின் ரூபத்தில் வந்து விடுகிறது.
எப்பொழுது நீங்கள் இருப்பதே இறைவனின் சேவாதாரிகள் என்றால், செய்பவர், செய்விப்பவர் தந்தை என்றிருக்கும்
போது அபிமானம் எங்கிருந்து வந்தது? மேலும் அவமானம் எங்கிருந்து ஏற்பட்டது. அப்படி மிகச் சிறிய தவறு
தான் இல்லையா. எனவே இறைவனை விட்டு பிரியாதீர்கள் என்று கூறப்படுகிறது. சேவையிலும் இணைந்த
ரூபத்தை நினைவில் வையுங்கள். இறைவன் மற்றும் இறை சேவை. இதைச் செய்ய தெரியாதா? மிகவும்
சுலபம். கடின உழைப்பிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். புரிந்ததா என்ன செய்ய வேண்டும் என்று. நல்லது.
அந்த மாதிரி எப்பொழுதும் அனாதி சம்ஸ்காரத்தின் நினைவு சொரூபமாக இருக்கும், எப்பொழுதும்
தன்னை ஒரு கருவி என்று மட்டும் உணர்ந்து மேலும் தந்தையை செய்பவர், செய்விப்பவர் என்று அனுபவம்
செய்யும், எப்பொழுதும் சுயம் அனாதி சொரூபத்தில் அதாவது ஆனந்தம் நிறைந்திருக்கும், எந்தவிதமான
தடைகளின் விதையை அழிக்கக்கூடிய சக்தி நிறைந்த ஆத்மாக்களுக்கு, அந்த மாதிரி எப்பொழுதும் தந்தையின்
துணைவனாக இருக்கும் ஈஸ்வரிய சேவாதாரிகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.
அதர் குமாரர்களுடன் (இல்லறத்தில் இருக்கும் சகோதரர்களுடன்) சந்திப்பு லி
அனைவரும் தன்னை தந்தை மேல் அன்பு வைத்திருக்கும் மற்றும் சகயோகி உயர்ந்த ஆத்மாக்கள்
என்று நினைக்கிறீர்கள் தான் இல்லையா? நான் உயர்ந்ததிலும் உயர்ந்த ஆத்மா ஏனென்றால் தந்தையுடன்
என் வாழ்க்கை பங்கை செய்பவன் என்ற இந்த போதை எப்பொழுதும் இருக்கிறதா? முழுச் சக்கரத்திற்குள்
இந்த நேரம் தந்தையுடன் சேர்ந்து தன்னுடைய வாழ்க்கை பங்கை செய்வதற்கான பொறுப்பாளர் ஆகியிருக்கிறீர்கள்.
உயர்ந்ததிலும உயர்ந்த பங்கை செய்வதற்கு பொறுப்பாளர் ஆகியிருக்கிறீர்கள். உயர்ந்ததிலும் உயர்ந்த பகவானுடன்
தன் பங்கை செய்யக்கூடியவர்கள் எவ்வளவு உயர்ந்த ஆத்மாக்களாக ஆகிவிட்டார்கள். உலகத்திலும் யாராவது
05யர்ந்த பதவியில் இருப்பவருடன் சேர்ந்து வேலை செய்கிறார்கள் என்றால் அவர்களுக்கும் எவ்வளவு
போதை இருக்கிறது? பிரதம மந்திரியின் தனிச்செயலாளருக்கும் எவ்வளவு போதை இருக்கிறது. ஆனால்
நீங்கள் யாருடன் இருக்கிறீர்கள்? உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையுடன் இருக்கிறீர்கள். மேலும் பிறகு அதிலேயும்
கூட ஒரு கல்பத்திற்காக இன்றி, அனேக கல்பங்கள் இந்த பங்கை செய்திருக்கிறீர்கள் மேலும் செய்து கொண்டே
(3/4)
07.08.2016
இருப்பீர்கள் என்ற விசேஷமும் இருக்கிறது. இது மாற முடியாது. அந்த மாதிரி போதையில் இருந்தீர்கள்
என்றால் தடையற்றவராக இருப்பீர்கள். ஏதாவது தடையோ வருவதில்லை தான் இல்லையா? சூழ்நிலையின்,
எண்ண அதிர்வலைகளின், தொடர்பில் இருப்பவர்களிடமிருந்து ஏதாவது தடையோ இல்லையே? தாமரை
மலருக்குச் சமமாக இருக்கிறீர்களா? தாமரை மலருக்குச் சமமாக விலகியிருப்பவர் மற்றும் அன்பானவர்.
தந்தையின் அன்பிற்குரியவனாக எவ்வளவு ஆகியிருக்கிறேன் என்ற கணக்கை விலகியிருக்கும் நிலை மூலம்
போட முடியும். ஒருவேளை கொஞ்சம் விலகியிருக்கிறீர்கள், மீதி மாட்டிக்கொள்கிறீர்கள் என்றால் அன்பிற்குரிய
வராகவும் அந்த அளவே ஆகிறீர்கள். யார் எப்பொழுதும் தந்தையின் அன்பிற்குரியவராக இருக்கிறாரோ
அதனுடைய அடையாளம் இயல்பாகவே நினைவில் இருப்பது. மிகப் பிரியமான பொருள் இயல்பாகவே
எப்பொழுதும் நினைவு வரும் இல்லையா. இவரோ ஒவ்வொரு கல்பமும் மிகப் பிரியமானவர். தந்தையின்
குழந்தையாக ஒரு தடவை ஆகவில்லை, ஒவ்வொரு கல்பத்திலும் ஆகியிருக்கிறீர்கள். எனவே அந்த மாதிரி
பிரியமான ஒருவரை எப்படி மறக்க முடியும். எப்பொழுது மறக்கிறீர்கள் என்றால் எப்பொழுது தந்தையையும்
விட அதிகமாக யாராவது ஒரு நபரை அல்லது பொருளை பிரியமானது என்று நினைக்கிறீர்களோ அப்பொழுது
தான். ஒருவேளை தந்தையை எப்பொழுதும் பிரியமானவர் என்று நினைத்தீர்கள் என்றால் மறக்க முடியாது.
நினைவு எப்படி செய்வது என்பதை யோசிக்க வேண்டியதாக இருக்காது, ஆனால் மறப்பது எப்படி என்று
ஆச்சரியமாக இருக்கும். அப்படி உங்களுடைய பெயர் அதர் குமார் ஆனால் பிரம்மா குமார் ஆகத்தான்
இருக்கிறீர்கள். பிரம்மா குமார் வெற்றி அடைபவர்கள் தான் இல்லையா? அதர் குமார் என்றால் அனுபவம்
நிறைந்த குமார். அனைத்தையும் அனுபவம் செய்து விட்டீர்கள். அனுபவி ஒருபொழுதும் ஏமாற்றம் அடைய
மாட்டார். கடந்த காலத்தின் அனுபவியாகவும் இருக்கிறீர்கள். மேலும் நிகழ் காலத்து அனுபவியாகவும்
இருக்கிறீர்கள். ஒவ்வொரு அதர்குமாரும் தன்னுடைய அனுபவங்கள் மூலமாக அனேகர்களுக்கு நன்மை
செய்ய முடியும். இது உலகிற்கே நன்மை செய்யும் குரூப் ஆகும். நல்லது.
மாதர்களுடன் சந்திப்பு லி
இல்லறத்தில் இருந்து கொண்டே ஒரு தந்தையைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற நினைவிலேயே
இருக்கிறீர்கள் தான் இல்லையா. இந்த சோதனை செய்கிறீர்களா? ஏனென்றால் இல்லறத்தின் சூழ்நிலையில்
இருந்து கொண்டே அதனுடைய பாதிப்பு ஏற்படக்கூடாது, எப்பொழுதும் தந்தையின் பிரியமானவராக இருக்க
வேண்டும் என்பதற்காக இந்த விஷயத்தின் சோதனை வேண்டும். ஒரு காரணத்திற்காக மட்டும் இல்லறத்தில்
இருக்கிறீர்கள் இருந்தும் தந்தையின் நினைவில் இருக்க வேண்டும். பரிவாரத்தின் சேவையில் எத்தனை
விதமான சேவை செய்ய வேண்டியதிருந்தாலும் ஆனால் டிரஸ்டி ஆகி செய்ய வேண்டும். டிரஸ்டியாக
இருந்தீர்கள் என்றால் பற்றுதலை வென்றவராக ஆகி விடுவீர்கள். குடும்பஸ்தன் என்ற நிலை இருக்கிறது
என்றால் மோகம் வந்து விடும். தந்தையின் நினைவு வரவில்லை என்றால் மோகம் இருக்கிறது. தந்தையின்
நினைவு மூலம் குடும்பத்தின் ஒவ்வொரு காரியமும் சகஜம் ஆகிவிடும். ஏனென்றால் நினைவின் மூலம் சக்தி
கிடைக்கிறது. அப்படி தந்தையின் நினைவின் குடைநிழலின் கீழே இருக்கிறீர்கள் தான் இல்லையா? குடை
நிழலின் கீழே இருப்பவர் ஒவ்வொரு தடையிலிருந்தும் விடுபட்டு இருப்பார். மாதர்களோ பாப்தாதாவின் மிகப்
பிரியமானவர்கள் ஏனென்றால் மாதர்கள் மிக அதிகமாக சகித்துக் கொண்டிருக்கிறார்கள். தந்தை அந்த மாதிரி
குழந்தைகளுக்கு சகித்துக் கொண்டதின் பலனாக சகயோகம் மற்றும் அன்பு கொடுக்கிறார். எப்பொழுதும்
சுமங்கலியாக இருக்க வேண்டும் இந்த வாழ்க்கையில் எவ்வளவு உயர்ந்த மாங்கல்யம் கிடைத்திருக்கிறது.
எங்கு மாங்கல்யம் இருக்கிறதோ அங்கு பாக்கியமோ இருக்கவே இருக்கிறது. எனவே எப்பொழுதும் சுமங்கலியாக
ஆகுக.
உத்திரபிரதேசம் மற்றும் குஜராத் மண்டலங்களை சேர்ந்தவர்கள் பாப்தாதாவின் எதிரில்
அமர்ந்திருக்கிறார்கள், அவர்களுடைய விசேஷத்தை பாப்தாதா கூறுகிறார் லி
அனைத்து ஸ்தானங்களுக்கும் அதனதன் விசேஷம் இருக்கிறது. உத்திரபிரதேசமும் குறைந்தது அல்ல
என்றால் குஜராத்தும் குறைந்தது அல்ல. யார் தொடக்கத்தில் ஸ்தாபனை காரியத்தில் பொறுப்பாளராக ஆனார்களோ
அவர்களுக்கும் நாடகத்தில் விசேஷ பங்கு இருக்கிறது. இருந்தாலும் தொடக்கத்தில் வந்தவர்களோ இரட்டை
லாட்டரியை பெற்றார்கள் தான் இல்லையா. சாகார பாபா மற்றும் நிராகார பாபா லி இரண்டு லாட்டரி கிடைத்தது
இதுவும் குறைந்த பங்கா என்ன? ஒவ்வொரு கல்பத்தின் சரித்திரத்தின் எப்பொழுதும் உடன் இருப்பதின்
நினைவுச் சின்னம் இதுவும் விசேஷ பாக்கியம்.
இப்பொழுது கூட பாப்தாதா அவ்யக்த ரூபத்தில் அனைத்து பங்கையும் செய்கிறார். ஆனால் சாகாரத்தில்
இருந்தவரோ சாகாரம் தான். சாகார பாபா காலத்தில் வந்தவர்களுக்கு அவர்களுடைய விசேஷம் இருக்கிறது.
இவர்களுக்கு அவர்களுடைய விசேஷம். இவர்கள் அவ்யக்த பாப்தாதாவிடமிருந்து சாகார பாபாவின் அன்பை
(4/4)
07.08.2016
இழுப்பவர்கள். அனேகர்கள் அந்த மாதிரியும் இருக்கிறார்கள் யார் சாகார பாபாவுடன் இருந்தவர்களையும்
விட அதிகமாக இப்பொழுது அனுபவம் செய்கிறார்கள். அப்படி அனைவரும் ஒருவர் இன்னொருவரை விட
முன்னுக்கு இருக்கிறார். நல்லது.
இன்று உத்திரபிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு சேவைக்கான வாய்ப்பு. நதிகளின் கரைகளில் உ.பி.
அதிகமாக இருக்கிறது. யமுனை நதிக்கரையில் ராஜ்ய தலைநகரத்தையும் மற்றும் நடனத்தையும் காண்பிக்கிறார்கள்.
ஆனால் உ.பி லியின் பதீத பாவனி மிகவும் பிரபலமானது, அதாவது உ.பி.யின் சேவை ஸ்தானத்தை காண்பித்திருக்
கிறார்கள். எனவே அந்த மாதிரி யாராவது உ.பிலியிலிருந்து அவசியம் உருவாவார்கள் அவர்கள் அனேகர்களின்
சேவைக்கு பொறுப்பாளர் ஆவார்கள். அந்த மாதிரி யாராவது தயார் ஆகிவிடுவார்கள். எப்படி அமெரிக்கா
விலிருந்து ஒருவர் மூலமாக அனேகர்களின் சேவை நடந்து கொண்டிருக்கிறது. அந்த மாதிரி உ.பிலியிலிருந்தும்
யாராவது ஒருவர் உருவாகிவிடுவார் அந்த ஒருவர் மூலம் அனேகர்களின் சேவை நடந்து விடும். செய்தியோ
பரவும் தான் எப்பொழுது வெளிநாடிலிருந்து செய்தி வருமோ அப்பொழுது அனைவரும் விழித்து விடுவார்கள்.
இப்பொழுது மிகப் பெரிய வி.ஐ.பி யாரும் உருவாகவில்லை. இன்று வரையிலும் யாரெல்லாம் வி.ஐ.பி
உருவாகியிருக்கிறார்களோ அவர்களையும் விட அதிகம் பெயர் பெற்றவர்கள் என்று அந்த வெளிநாட்டினரைத்
தான் கூறுவோம் இல்லையா. அவர் நடைமுறையில் அனேகர்களுக்கு செய்தியை கொண்டு சேர்ப்பதில்
காரணமானவர் ஆகிக்கொண்டிருக்கிறார். பாரதமும் முன்னுக்கு செல்ல முடியும், ஆனால் இப்பொழுதைக்கான
விஷயம். இறுதியில் வெற்றி முழக்கமோ பாரதத்திலே தான் ஏற்படும் இல்லையா. வெளிநாட்டிலிருந்தும்
வெற்றியின் முரசு அடித்து அடித்து பாரதத்தில் வந்து சேருவார்கள் இல்லையா. அவர்களுடைய வாயிலிருந்தும்
நம்முடைய பாரதம் என்பது தான் வெளியாகும். பாரதத்தில் தந்தை வந்திருக்கிறார் என்று தான் கூறுவார்
களேயன்றி ஐ.நாலிவில் தந்தை வந்திருக்கிறார் என்று கூற மாட்டார்கள். பந்தயத்தில் இந்த நேரம் வெளிநாடு
முன்னுக்கு சென்று கொண்டிருக்கிறது இப்பொழுதைக்கான விஷயம் இது, நாளை இன்னொருவரும் மாற
முடியும். ஒருவர் இன்னொருவரைப் பார்த்து இன்னும் முன்னேறிச் செல்வார்கள். இப்பொழுது உ.பிலியிலிருந்து
வி.ஐ.பி யாரையாவது கொண்டு வாருங்கள். பதீத பாவனி யாரையாவது பாவனமாக்கி சூ மந்திரம் போடுங்கள்.
குஜராத் வளர்ச்சி அடைந்ததில் நம்பர் ஒன் ஆகிவிட்டது. வி.ஐ.பிலிக்களும் மேடையில் வந்து விடுவார்கள்.
எல்லைக்கப்பாற்பட்ட சேவை செய்யும் மாதிரி வி.ஐ.பி இருக்க வேண்டும். குஜராத்தைச் சேர்ந்தவருக்கு குஜராத்தில்
செய்தீர்கள், அவரோ சிறிய மைக் ஆகிவிட்டார். நாலாபுறங்களிலும் செய்தீர்கள் என்றால் தான் அவரை பெரிய
மைக் என்று கூறுவோம். நல்லது.
வரதானம் : தன்னுடைய சஞ்சலமான உள் உணர்வை பரிவர்த்தனை செய்து சதோபிரதான
வாயுமண்டலத்தை உருவாக்குவதற்கு பொறுப்பான சிரேஷ்ட ஆத்மா ஆகுக.
எந்தக் குழந்தைகள் தங்களுடைய சஞ்சலமான உள்உணர்வுகளை பரிவர்த்தனை செய்து விடுகிறார்களோ
அவர்கள் தான் சதோபிரதான வாயுமண்டலத்தை உருவாக்க முடியும். ஏனென்றால் உள்உணர்வு மூலம்
வாயுமண்டலம் உருவாகிறது. எப்பொழுது உள்உணர்வில் இவ்வளவு பெரிய காரியத்தின் நினைவு
இருப்பதில்லையோ அப்பொழுது உள்உணர்வும் சஞ்சலமாகிறது. ஒருவேளை ஏதாவது மிக சஞ்சலமான குழந்தை
மிகவும் பிஸியாக இருந்த போதும் தன்னுடைய சஞ்சலத்தன்மையை விடவில்லை என்றால் அவரை கட்டி
வைப்பார்கள். அதே போலவே ஒருவேளை ஞானம் யோகத்தில் பிஸியாக இருந்த போதிலும் உள்உணர்வு
சஞ்சலமாக இருக்கிறது என்றால் ஒரு தந்தையுடன் அனைத்து உறவுகளின் பந்தனத்தில் உள்உணர்வை கட்டி
விட்டீர்கள் என்றால் சஞ்சலத்தன்மை சுலபமாக முடிவடைந்து விடும்.
சுலோகன் : அலட்சியத் தன்மையின் உணர்வை முடிப்பதற்கான
வழி எல்லைக்கப்பாற்பட்ட வைராக்கியம்.
TAMIL MURLI 25 TO 31 JULY - 2016
25
25.07.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே ! இப்போது நீங்கள் புதிய உலகத்திற்கு செல்ல வேண்டும். இந்த
துக்கத்தின் நாட்கள் நிறைவடைந்துக் கொண்டிருக்கிறது. ஆகையால் பழைய முடிந்து போன
விஷயங்களை மறந்து விடுங்கள்.
கேள்வி : கர்ம யோகி குழந்தைகளாகிய நீங்கள் எந்த பயிற்சியை நிரந்தரமாக செய்ய வேண்டும்?
பதில்: இப்போது சரீர நிர்வாகத்திற்காக தேகத்தில் வரலாம். அவ்வப்போது ஆத்ம உணர்வுடையவராக
வேண்டும். தேகத்தின் நினைவில்லாôமல் கர்மம் செய்ய முடியாது. ஆகவே, தேக உணர்வில் வந்து கர்மம்
செய்தீர்கள். பிறகு ஆத்ம அபிமானி ஆவதற்கு பயிற்சி செய்யுங்கள். இப்படிப்பட்ட பயிற்சியை குழந்தைகளாகிய
உங்களைத் தவிர வேறு யாரும் செய்ய முடியாது.
பாடல் : விழித்தெழுங்கள் மணப்பெண்களே விழித்தெழுங்கள்......
ஓம் சாந்தி. இனிமையிலும் இனிமையான ஆத்மாக்கள் அல்லது குழந்தைகள் இந்த பாடலை கேட்டீர்கள்
என ஆன்மீகத் தந்தை கூறுகின்றார். இதற்கு ஞானத்தின் பாடல் என கூறப்படுகிறது. இந்த பாடல் மிகவும்
நன்றாக இருக்கிறது. ஆத்மாக்களாகிய நீங்கள் இப்போது விழித்தெழுந்து விட்டீர்கள். நாடகத்தின் ரகசியத்தைக்
கூட புரிந்துக் கொண்டீர்கள். பக்தி மார்க்கத்தின் வேடிக்கை பார்த்து முடித்து விட்டீர்கள் அல்லவா? எது
முடிந்து விட்டதோ அது உங்கள் புத்தியில் இருக்கிறது. நீங்கள் உங்களுடைய முடிந்து போன 84 பிறவிகளின்
வரலாற்றை அறிகிறீர்கள். பாபா 84 பிறவிகளின் கதையைக் கூறியிருக்கிறார். அது புது உலகத்திற்கான புது
விஷயங்களாகும். பாபா மூலமாக நீங்கள் புது விஷயங்களைக் கேட்கிறீர்கள். பாபா குழந்தைகளுக்கு தைரியம்
அளிக்கின்றார். குழந்தைகளே, இப்போது புது உலகத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் பழைய விஷயங்களை
மறந்து விடுங்கள். இந்த வேத சாஸ்திரங்கள் போன்ற பக்தி மார்க்கத்தின் விஷயங்கள் அனைத்தும் அழியப்
போகின்றன. அங்கே பக்தி மார்க்கத்தின் அடையாளம் எதுவும் இருக்காது. இங்கேயோ பக்தி மார்க்கத்தின்
பலன் கிடைக்கிறது. குழந்தைகளுக்கு தந்தை வந்து பலனை அளிக்கிறார். தந்தை எப்படி வந்து பக்தியின்
பலனை அளிக்கிறார் என குழந்தைகள் அறிகிறீர்கள். யார் அதிகமாக பக்தியை செய்தார்களோ அவர்களுக்கு
நிச்சயம் அதிகப் பலன் கிடைக்கும். ஞானத்தின் முயற்சி கூட அவர்கள் நிறைய செய்வார்கள். ஆத்மாக்களாகிய
நாம் அதிகமாக பக்தி செய்திருக்கிறோம் என நீங்கள் அறிகிறீர்கள். நிச்சயம் ஞானத்தில் கூட அவர்கள் வேக
மாகச் செல்வார்கள். அப்போது இந்த லஷ்மி நாராயணரைப் போல உயர்ந்த பதவி பெறுவார்கள். இப்போது
ஞானம் மற்றும் யோகத்திற்காக நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். ஆத்ம உணர்வுடையவராக இருக்க வேண்டும்.
பிறகு தேகதாரியாகவும் இருக்க வேண்டும். கர்மம் செய்தாலும் தந்தையை நினைக்க வேண்டும். தேகம்
இல்லாமல் நாம் கர்மம் செய்ய முடியாது. பாபாவை நினைக்க வேண்டும். இது சரியே, ஆனால் தன்னை
ஆத்மா என்று புரிந்துக் கொள்ள வேண்டும். தேகத்தை மறந்து விட்டால் வேலை செய்ய முடியாது. வேலை
செய்யத்தான் வேண்டும். தந்தையின் நினைவில் நிறைய ஆனந்தம் இருக்கிறது. உட்கார்ந்தாலும் எழுந்தாலும்
நடந்தாலும், போனாலும், வந்தாலும் தந்தையை நினையுங்கள். இருப்பினும் வயிற்றுக்கு உணவு வேண்டும்.
ஆத்ம உணர்வுடையவராக இருக்க வேண்டும். குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு யாரும் இந்த
நேரத்தில் ஆத்ம உணர்வுடையவர்களாக இல்லை. தன்னை ஆத்மா என்று ஒரு வேளை புரிந்துக் கொள்ளலாம்.
ஆனாலும் பரமாத்மாவின் அறிமுகம் கிடையாது. நாம் ஆத்மா அழிவற்றவர்கள், இந்த உடல் அழியக் கூடியது
என்று கூட புரிந்திருக்கலாம். ஆனால் இதைப் புரிந்திருப்பதால் விகர்மம் அழியாது. புண்ணிய ஆத்மா பதீத
ஆத்மா என்று கூட கூறுகிறார்கள். நான் ஆத்மா இது என்னுடைய உடல். இதுவோ பொதுவான விஷயமாகும்.
முக்கியமான விஷயம் என்னை நினையுங்கள் என பாபா புரிய வைக்கிறார். சரீர நிர்வாகத்திற்காக தேக
உணர்வில் வர வேண்டும். தேகத்திற்கு உணவு கொடுக்க வேண்டும். தேகம் இல்லாமல் எதுவும் செய்ய
முடியாது. ஒவ்வொரு பிறவியிலும் தங்களின் சரீர நிர்வாகத்திற்கான காரியத்தைச் செய்து வருகிறீர்கள். கர்மம்
செய்தாலும் தன்னுடைய மணவாளனை நினைக்க வேண்டும். அந்த மணவாளனைப் பற்றி யாருக்கும் தெரியாது.
அந்த மணவாளன் அல்லது தந்தையிடமிருந்து நமக்கு சொத்து கிடைக்கிறது. மேலும் அவருடைய நினைவில்
பாவங்கள் அழியும். இதை யாரும் புரிய வைக்க வில்லை. குழந்தைகளாகிய நீங்கள் புது விஷயங்களைக்
கேட்கிறீர்கள். வீட்டிற்குச் செல்வதற்கு நமக்கு வழி கிடைத்து விட்டது என்று புரிந்துக் கொள்கிறீர்கள். நம்முடைய
வீட்டிற்குச் சென்று பிறகு ராஜாங்கத்திற்கு வருவீர்கள். அப்பா புதிய கட்டிடம் கட்டுகிறார் என்றால் நிச்சயமாக
அங்கு சென்று தங்குவோம் என்று இருக்கும் அல்லவா? இப்போது உங்களுக்கு வழி கிடைத்து விட்டது.
இதை வேறு யாரும் அறியவில்லை. எவ்வளவு தான் யாகம், தவம் போன்றவைகள் செய்தாலும், தலையை
உடைத்துக் கொண்டாலும் யாரும் சத்கதியைப் பெற முடியாது. இந்த உலகத்திலிருந்து அந்த உலகத்திற்குச்
செல்ல முடியாது. இதையும் புரிந்துக் கொள்ள வேண்டும். சாஸ்திரங்களில் லட்சக்கணக்கான வருடங்கள் என
எழுதி விட்டனர். ஆகையால் மனிதர்களின் புத்தி வேலை செய்வதில்லை. நேற்றைய விஷயம் என்பதை
25.07.2016
(2/4)
நீங்கள் நன்கு புரிந்துக் கொளள முடியும். பாரதம் சொர்க்கமாக இருந்தது. நாம் ஆதி சனாதன தேவி தேவதா
தர்மத்தினராக இருந்தோம். தேவி தேவதா தர்மம் மிகவும் சுகத்தைக் கொடுக்கக் கூடியதாகும். பாரதத்தைப்
போன்று சுகம் வேறு யாரும் பெற முடியாது. சொர்கத்தில் வேறு தர்மத்தைச் சார்ந்தவர்கள் போக முடியாது.
உங்களைப் போன்று சுகம் வேறு யாருக்கும் கிடைக்காது. எவ்வளவு வேண்டுமானாலும் முயற்சி செய்யட்டும்.
பணத்தை செலவு செய்யட்டும். இருப்பினும் சொர்க்கத்தில் கிடைத்த சுகம் அவர்களுக்குக் கிடைக்காது. சிலருக்கு
ஆரோக்கியம் நன்றாக இருக்கும் செல்வம் இருக்காது. சிலருக்கோ செல்வம் நிறைய இருக்கும். ஆரோக்கியம்
இருக்காது. இதுவே துக்க உலகம் ஆகும். ஆகவே பாபா கூறுகின்றார்லி ஓ, ஆத்மாக்களே ! விழித்தெழுங்கள்......
இப்போது உங்களுக்கு ஞானத்தின் மூன்றாவது கண் கிடைத்திருக்கிறது. எவ்வளவு விழிப்புணர்வு வந்திருக்கிறது.
நீங்கள் முழு உலகின் வரலாறு புவியியலை அறிகிறீர்கள். பாபா எல்லாம் அறிந்தவர் அல்லவா? இதனுடைய
பொருள் அனைவரின் மனதையும் அறிந்திருக்கிறார் என்பதல்ல. இவர் யார் எவ்வளவு புரிய வைக்கின்றார்.
எவ்வளவு தூய்யைமாக இருக்கிறார், எவ்வளவு பாபாவை நினைவு செய்கிறார். இப்படி ஒவ்வொருவரைப்
பற்றியும் நான் ஏன் சிந்திக்க வேண்டும்.... ஆத்மாக்களாகிய நீங்கள் தங்களுடைய பரம்பிதா பரமாத்மாவை
நினைக்க வேண்டும் என்று வழியைக் காண்பிக்கிறேன். இந்த சிருஷ்டி சக்கரத்தைப் புத்தியில் வைக்க வேண்டும்.
ஆத்ம உணர்வுடையவராக நிச்சயம் ஆக வேண்டும். தேக உணர்வுடைய காரணத்தால் உங்களுக்கு இந்த
துர்கதி ஏற்பட்டிருக்கிறது. இப்போது நீங்கள் பாபாவை நினைக்க வேண்டும். வீட்டிலிருந்தாலும் தாமரை மலருக்குச்
சமமாக மாற வேண்டும். நீங்கள் சுய தரிசன சக்கரதாரியாகவும் இருக்கிறீர்கள். தேவதைகளுக்கு சங்கு போன்றவை
கள் கிடையாது. இந்த ஞான சங்கு பிராமணர்களாகிய உங்களுக்குத்தான் ! சீக்கியர்கள் சங்கு ஊதுகிறார்கள்.
மிகப் பெரிய ஒலி எழுப்புகிறார்கள். நீங்கள் கூட இந்த ஞானத்தைக் கொடுக்கிறீர்கள் என்றால், மிகப் பெரிய
அவையில் ஒலி பெருக்கி வைக்கிறீர்கள். இங்கே நீங்கள் ஒலி பெருக்கி வைக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆசிரியர் படிக்க வைக்கிறார் என்றால், ஒலி பெருக்கி வைப்பார்களா என்ன? இங்கே சிவபாபாவை மட்டும்
நினைவு செய்தீர்கள் என்றால், பாவங்கள் அழியும். நான் சர்வ சக்திவான் அல்லவா? நீங்கள் ஒலி பெருக்கி
வைக்கிறீர்கள் என்றால் அதாவது நீண்ட தொலைவிற்கு ஒலியை கேட்கலாம். இன்னும் போகப் போக அதுவும்
பயன்படும். மரணம் எதிரிலேயே இருக்கிறது என்பதை நீங்கள் சொல்ல வேண்டும். இப்போது அனைவரும்
திரும்பப் போக வேண்டும். மகா பாரத போர் கூட எதிரில் நிற்கிறது. மகா பாரத போர் நடந்தது, அழிவு
ஏற்பட்டது என்று கூட கீதையில் எழுதப்பட்டிருக்கிறது. சரி, பிறகு என்ன நடந்தது. பாண்டவர்களும் கரைந்து,
மறைந்தனர். முதலில் வினாசம் நடந்திருந்தால் பாரத கண்டமே காலியாகி இருக்கும், பாரதமோ அழிவற்ற
கண்டம், காலியாகாது என பாபா புரிய வைக்கிறார். பிரளயம் நடட்பபதில்லை என நீங்கள் அறிகிறீர்கள். பாபா
அழிவற்றவர் என்றால் அவருடைய பிறப்பிடமும் அழிவற்ற தாகும். பாபா அனைவருக்கும் சக்ததி வழங்கும்
வள்ளல், சுகம் சாந்தியின் வள்ளல் என்றால், குழந்தைகளுக்கு மகிழ்ச்சி இருக்க வேண்டும். யார் வந்தாலும்
அமைதி வேண்டும் என்கிறார்கள், ஆத்மாவிற்கு இவ்வளவு அமைதி ஏன் நினைவிற்கு வருகிறது. சாந்தி
தாமம் ஆத்மாக்களின் வீடு அல்லவா? வீடு யாருக்கும் நினைவிருக்காதா? வெளி நாட்டில் யாராவது இறந்து
போகிறார்கள் என்றால் அவர்களை அவர்களுடைய பிறந்த பூமிக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என விரும்பு
கிறார்கள். பாரதம் அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளலான துக்கத்தில் இருந்து முக்தி அளிக்கக் கூடிய
சிவபாபாவின் பிறப்பிடம் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தால் அதற்கு நிறைய மதிப்பு கொடுப்பார்கள்.
ஒரே சிவனின் மீது வந்து மலர்களைப் போடுகிறார்கள். இப்போதோ எத்தனை பேர் மீது மலர்களைப் போட்டுக்
கொண்டிருக்கிறார்கள். யார் அனைவருக்கும் சுகம், சாந்தி வழங்குகிறார்களோ அவரின் பெயர் அடையாளத்தை
மறந்து விட்டனர். யார் பாபாவை நன்கு அறிந்திருக்கிறார்களோ அவர்களே சொத்து அடைவதற்கு முயற்சி
செய்கிறார்கள். என்னுடைய பெயரே துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவர் ஆகும். துக்கத்திலிருந்து விடுவித்து
என்ன செய்வார்? சாந்தி தாமத்தில் அமைதியாக இருக்கிறார்கள், சுகதாமத்தில் சுகமாக இருக்கிறார்கள். என்னை
நீங்கள் அறிகிறீர்கள். சாந்திதாமத்தின் இடம் தனியாகும். சுக தாமத்தின் இடம் தனியாகும். இதுவோ துக்க
உலகம் ஆகும். அனைவருக்கும் இந்த சமயம் துக்கமே துக்கமாகும். இப்போது நாம் இவ்வாறு சுகத்திற்குச்
செல்கிறோம். அங்கே 21 பிறவிகளுக்கு எந்த விதமான துக்கமும் இருக்காது என நீங்கள் அறிகிறீர்கள். பெயரே
சுக உலகம் ஆகும். எவ்வளவு இனிமையான பெயர். உங்களுக்கு எந்த துன்பத்தையும் கொடுக்கவில்லை என
பாபா கூறுகின்றார். அப்பாவை மற்றும் ஆஸ்தியை நினைக்க வேண்டும். தன்னை ஆத்மா என உணர
வேண்டும். இந்த ஞானத்தை பாபா உங்களுக்கு கற்பித்துக் கொண்டிருக்கின்றார். சத்யுகத்தில் ஆத்மாவின்
ஞானம் இருக்கிறது. ஆத்மாக்களாகிய நாம் இந்த உடலை விட்டு விட்டு இன்னொரு உடலை எடுப்போம்.
இதற்கு ஆத்ம உணர்வு என்று பெயர். இது ஆன்மீக ஞானம் ஆகும். இதை வேறு யாரும் கொடுக்க முடியாது.
ஆத்ம தந்தை வந்து ஆத்மாவிற்கு ஞானத்தை அளிக்கிறார். ஒவ்வொரு 5000 வருடத்திற்குப் பிறகும் கொடுக்கிறார்.
மனிதர்கள் முற்றிலும் காரிருளில் இருக்கிறார்கள். இப்போது உங்களுக்கு வெளிச்சம் கிடைத்திருக்கிறது. நீங்கள்
அறியாமையின் தூக்கத்திலிருந்து விழித்துள்ளீர்கள். அனைத்து மணப்பெண்களுக்கும் மணவாளன் ஒரு பாபா
25.07.2016
(3/4)
ஆவார். நான் உங்களுடைய தந்தை, மணவாளன், குருவிற்கெல்லாம் குரு, சுப்ரீம் டீச்சர் என பாபா கூறுகின்றார்.
அனைத்து குருக்களுக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல் ஒரேயொரு சத்குரு ஆவார். குழந்தைகளே நான்
அனைவருக்கும் சத்கதி அளிக்கிறேன் என கூறுகின்றார். முக்திக்கு(கதி) பிறகு சத்கதி கிடைக்கிறது.
ஒவ்வொரு ஆத்மாவும் திரும்பப் போக வேண்டும் என பாபா புரிய வைக்கிறார். ஆத்மா தான்
சதோபிரதானமாக, சதோ, ரஜோ, தமோ ஆகிறது. ஒரு சிலருக்கு மிகவும் குறைந்த நடிப்பே ஆகும். வந்தனர்,
சென்றனர். கொசு கூட்டத்தைப் போன்று பிறக்கின்றனர். இறக்கின்றனர் பாபாவிடமிருந்து ஆஸ்தியை
அடைவதில்லை. பாபாவிடமிருந்து தூய்மை, சுகம், சாந்தி என்ற சொத்து எடுக்கப்படுகிறது. பாபா ஆத்மாக்களாகிய
உங்களுக்குப் புரிய வைக்கின்றார். பாபா நிராகாரர் ஆவார். அவரும் இந்த வாய் மூலமாக வந்து புரிய
வைக்கின்றார். சிவபாபாவின் கோவில்கள் கூட மிகவும் உயர்ந்ததிலும் உயந்ததாகக் கட்டுகிறார்கள். தீர்த்த
யாத்திரைகள், மேளாவில் கலந்துக் கொள்ள எவ்வளவு தொலைவு செல்கிறார்கள். மேலே குடிப்பதற்காக யாராவது
ஞான அமிர்தத்தை வைத்திருக்கிறார்களா? எவ்வளவு செலவு செய்கிறார்கள். அரசாங்கம் கூட அவர்களுக்காக
எவ்வளவு ஏற்பாடுகளை செய்ய வேண்டியிருக்கிறது. தொல்லைகள் ஏற்படுகிறது. தீர்த்த யாத்திரைகளுக்கு
சிறிய குழந்தைகளை எப்படி அழைத்து போவார்கள். குழந்தைகளை யாரிடமாவது பார்த்துக் கொள்ளும் படி
விட்டு விட்டுச் செல்கிறார்கள். உடன் அழைத்துப் போவதில்லை. இரண்டும் மூன்று மாதங்கள் யாத்திரை
செய்கிறார்கள். இங்கே நீங்கள் வருகிறீர்கள், நீங்கள் உட்கார்ந்து கேட்க வேண்டும் படிக்க வேண்டும். சிறிய
குழந்தைகள் கேட்க மாட்டார்கள். இங்கே நீங்கள் யோகம் மற்றும் ஞானத்தைக் கற்றுக் கொள்ள வந்துள்ளீர்கள்.
பாபா வந்து ஞானத்தைக் கூறுகிறார் என்றால், எந்த ஒரு சத்தமும் வரக் கூடாது. இல்லை என்றால் கவனம்
சிதறும். அமைதியாக அமர்ந்து கவனம் கொடுத்து கேட்க வேண்டும். யோகா மிகவும் எளிதாகும். ஏதேனும்
வேலையை செய்துக் கொண்டே இருங்கள். புத்தியின் தொடர்பு இருக்கட்டும். பாபாவின் நினைவிருப்பதால்
மிகுந்த வருமானம் கட்டாயம் கிடைக்கிறது. நாம் மிகவும் ஆரோக்கியமாக மாறுவோம் என நீங்கள் அறிகிறீர்கள்.
தனக்குத் தானே பேசிக் கொள்ள வேண்டும். பாபாவின் நினைவிலிருந்து தங்களின் கையினால் உணவை
சமைக்க வேண்டும். கைகளினால் வேலை செய்யுங்கள், கூடவே தங்களின் பாபாவையும் நினையுங்கள்.
உங்களுக்கும் நன்மை நடக்கும். மேலும் நினைவில் இருப்பதால் பொருளும் நன்றாக உருவாகும். உங்களுக்கு
உலகத்தின் இராஜ்ய பதவி கிடைக்கிறது. நீங்கள் இங்கே இலஷ்மி நாராயணன் ஆவதற்காக வந்திருக்கிறீர்கள்.
அனைவரும் நாங்கள் சூரிய வம்சத்தினராவோம் என கூறுகிறார்கள்.
நம்முடைய மம்மா பாபா இந்த நேரத்தில் பிரம்மா சரஸ்வதி என நீங்கள் அறிகிறீர்கள். அடுத்த
பிறவியில் இலஷ்மி நாராயணன் ஆவார்கள். எதிர் காலத்தில் யார் என்ன ஆவர்கள் இப்படி யாருடைய பிறவி
பற்றியும் அறியவில்லை. நேரு என்ன ஆவார் என யாருக்குத் தெரியும். சரி, சிறிது தானம் செய்திருந்தால்
இங்கே நல்ல குலத்தில் பிறவி எடுப்பார். இப்போது உங்களுக்கு முழுமையாகத் தெரிகிறது. இப்போது இவர்
களுடைய பெயர் ஆதி தேவ் பிரம்மா, ஆதி தேவி சரஸ்வதி. அவர்களே சொர்க்கத்திற்கு அதிபதி ஆவார்கள்.
சரி, இவர்களின் குழந்தைகளும் உடன் இருக்கிறார்கள். அவர்களும் நாங்கள் சொர்கத்திற்கு அதிபதி ஆவோம்
என கூறுவார்கள். இதுவோ உறுதி யாகும். சூட்சும வதனத்தில் கூட நீங்கள் பார்க்கிறீர்கள். தேவிகளின்
கோவில்களில் கூட நிறைய திருவிழாக்கள் நடைபெறுகின்றது. இப்போது ஜகதம்பாவோ ஒருவரே ஆவார்.
அவருடைய தோற்றமும் ஒன்றே இருக்க வேண்டும். மம்மாவையும் கூட நீங்கள் பார்க்கிறீர்கள். குழந்தைகாளகிய
உங்களின் தோற்றமும் இருக்கிறது பிறகு அதர் குமாரி என பெயர் வைத்துவிட்டனர். இதுவும் நாமே
மாறுகிறோம் என நீங்கள் அறிகிறீர்கள். நாம் அனைவரும் பிரம்மா குமார்லிகுமாரி ஆவோம். திருமணம்
ஆனவர்களும் நாங்கள் பிரம்மா குமார்லிகுமாரி, ஒரு தந்தையின் குழந்தைகள் என கூறுகிறார்கள். உங்களுடைய
நினைவு சின்னமே ஆகும். நீங்கள் அமர்ந்து இந்த முழு ஞானத்தை அளிக்கிறீர்கள், இந்த தில்வாடா கோவில்
மிக அர்த்தத்துடன் இருக்கிறது. ஆனால் இதை நீங்கள் தான் புரிய வைக்க முடியும். நாம் ஸ்தாபனை செய்துக்
கொண்டிருக்கிறோம், இராஜயோகத்தால் ஸ்ரீமத்படி பாரதத்தை சொர்க்கமாக மாற்றிக் கொண்டிருக்கிறோம் என
நீங்கள் அறிகிறீர்கள்.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை
வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
25.07.2016
(4/4)
தாரணைக்கான முக்கிய சாரம் :
1. ஞானம் மற்றும் யோகத்தின் மீது முழு கவனம் வைக்க வேண்டும். கேட்கும் போது மிகவும்
சாந்தமாக ஒரு முகத்துடன் அமர வேண்டும். கர்மயோகியாகவும் ஆக வேண்டும்.
2. பாபா வீட்டிற்கு வழியை காண்பித்திருக்கிறார் அதை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும்.
சுய தரிசன சக்கரதாரி ஆவதன் கூடவே ஞான சங்கையும் ஊத வேண்டும்.
வரதானம் : பொறுப்புகளை கவனித்துக் கொண்டிருந்தாலும் ஆகாரி மற்றும் நிராகாரி நிலையின்
பயிற்சி மூலமாக சாட்சாத்கார மூர்த்தி ஆகுக !
சாகார ரூபத்தில் இவ்வளவு பெரிய பொறுப்புக்களை பார்த்துக் கொண்டிருந்தாலும் ஆகாரி மற்றும் நிராகாரி
நிலையின் அனுபவத்தை செய்வித்துக் கொண்டே இருப்பதை போன்று அப்பாவைப் பின்பற்றுங்கள். சாகார
ரூபத்தில் ஃபரிஸ்தா நிலையை அனுபவம் செய்யுங்கள். யார் எவ்வளவு தான் அசாந்தி அல்லது குழப்பத்தில்
பயந்து தங்கள் முன் வந்தாலும் தங்களின் ஒரு பார்வை, உள்ளுணர்வு மற்றும் நினைவின் சக்தி அவர்களை
முற்றிலும் சாந்தமாக்கும். உடலின் உணர்வில் வந்தாலும் அவ்யக்த நிலையை அனுபவம் செய்தால் தான்
சாட்சாத்கார மூர்த்தி என்று கூறுவார்கள்.
சுலோகன் : யார் உண்மையான இரக்க மனம் உடையவர்களோ அவர்களுக்கு
தேகம் மற்றும் தேக அபிமானத்தின் கவர்ச்சி ஏற்படாது.
(1/4)
26
26.07.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! நீங்கள் தந்தைக்குச் சமானமாக உண்மையிலும் உண்மையான
(பைகம்பரர்) தூதராக வேண்டும். அனைவருக்கும் வீட்டிற்கு செல்வதற்கான செய்தியை
கொடுக்க வேண்டும்.
கேள்வி: தற்காலத்தில் மனிதர்களின் புத்தி நாள் முழுவதும் எந்த பக்கம் அலைகிறது?
பதில்: நாகரீகத்தின் பக்கம். மனிதர்களை கவருவதற்காக அநேகவிதமான ஃபேஷன் நாகரீக நடைமுறை
களைக் கடைப்பிடிக்கிறார்கள். இந்த நாகரீகத்தை சித்திரங்களிலிருந்து தான் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். பார்வதி
கூட இது போல நாகரீகமாயிருந்தார், தலைமுடி அலங்காரம் செய்து கொண்டிருந்தார் என்று நினைக்கிறார்கள்.
குழந்தைகளாகிய நீங்கள் இந்த பதீத உலகத்தில் ஃபேஷன் செய்யக் கூடாது. நான் உங்களை எப்பேர்ப்பட்ட
உலகிற்கு அழைத்துச் செல்கிறேன் என்றால் அங்கு இயல்பான அழகு இருக்கும். ஃபேஷன் செய்ய வேண்டிய
அவசியம் இருக்காது.
பாடல்: தாயும் நீயே, தந்தையும் நீயே.....
ஓம் சாந்தி. குழந்தைகள் பாட்டைக் கேட்டீர்கள். மகிமை பாடும் பொழுது புத்தி மேலே சென்று
விடுகிறது. ஆத்மா தான் தந்தைக்கு அவரே படகோட்டி ஆவார், பதீத பாவனர் ஆவார் அல்லது உண்மையிலும்
உண்மையான தூதர் ஆவார் என்று கூறுகிறது. தந்தை வந்து ஆத்மாக்களுக்கு செய்தி அளிக்கிறார். மேலும்
அவர்களுக்கு மெஸஞ்ஜர் (தூதர்) அல்லது பைகம்பர் என்று கூறுகிறார்கள். ஒருவர் சிறியவராக அல்லது
பெரியவராக இருப்பார். உண்மையில் அவர்கள் மெúஸஜ் அல்லது செய்தி ஒன்றும் கொடுப்பதில்லை. அப்படி
பொய்யான மகிமை செய்து விட்டுள்ளார்கள். ஒருவரைத் தவிர இந்த மனித சிருஷ்டியில் வேறு யாருக்கும்
மகிமை இல்லை என்பதை குழந்தைகள் புரிந்துள்ளார்கள். எல்லோரையும் விட அதிகமான மகிமை இந்த
இலட்சுமி நாராயணருக்கு உள்ளது. ஏனெனில் இவர்கள் புது உலகத்தின் அதிபதி ஆவார்கள். அதையும்
பாரதவாசி அறிந்துள்ளார்கள். பாரதம் பழமையான தேசமாகும் என்பதை மட்டும் உலகத்தார் அறிந்துள்ளார்கள்.
பாரதத்தில் தான் தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. கிருஷ்ணரைக் கூட கடவுள் என்று கூறி
விடுகிறார்கள். பாரதவாசிகள் இவர்களை பகவான் பகவதி என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த பகவான் பகவதி
சத்யுகத்தில் ஆட்சி புரிகிறார்கள் என்பது யாருக்குமே தெரியாது. பகவான் தேவி தேவதைகளின் இராஜ்யத்தை
ஸ்தாபனை செய்தார். நாம் பகவானின் குழந்தைகள் ஆவோம். எனவே நாம் கூட பகவான் பகவதியாக
இருக்க வேண்டும் என்று புத்தியும் கூறுகிறது. எல்லோரும் பகவானின் குழந்தைகள் என்றால், நாம் கூட
பகவான் பகவதியாக இருக்க வேண்டும். எல்லோரும் ஒருவருடைய குழந்தைகள் ஆவார்கள் அல்லவா?
ஆனால் பகவான் பகவதி என்று கூற முடியாது. அவர்களை தேவி தேவதைகள் என்று கூறுவார்கள். இந்த
எல்லா விஷயங்களையும் தந்தை வந்து புரிய வைக்கிறார். பாரதவாசிகளாகிய நாம் முதலில் புது உலகத்தில்
இருந்தோம் என்று பாரதவாசிகள் கூறுவார்கள். புதிய உலகத்தையோ எல்லோரும் விரும்புகிறார்கள். தேசபிதா
கூட புது உலகம், புதிய இராம இராஜ்யத்தை விரும்பினார். ஆனால் இராம இராஜ்யத்தின் பொருளை முற்றிலுமே
புரியாமல் உள்ளார்கள். தற்காலத்தில் மனிதர்களுக்கு தங்களுடைய அகங்காரம் எவ்வளவு இருக்கிறது!
கலியுகத்தில் இருப்பது கல்புத்தி. சத்யுகத்தில் இருப்பது தங்க புத்தி. ஆனால் இந்த அறிவு யாருக்குமே
இல்லை. பாரதத்தில் தான் சத்யுகத்தில் தங்க புத்தி இருந்தது. இப்பொழுது பாரதத்தில் கலியுகத்தில் கல்புத்தியாக
உள்ளார்கள். மனிதர்கள் இதையே சொர்க்கம் என்று நினைக்கிறார்கள். சொர்க்கத்தில் விமானங்கள் இருந்தன.
பெரிய பெரிய அரண்மனைகள் இருந்தன என்பார்கள். அவை எல்லாமே இப்பொழுதும் உள்ளது. விஞ்ஞானம்
எவ்வளவு முன்னேற்றம் அடைந்துள்ளது. எவ்வளவு சுகம் இருக்கிறது. நாகரீகம் (ஃபேஷன்) ஆகியவை
எவ்வளவு இருக்கிறது. நாள் முழுவதும் புத்தி நாகரீக நடைகளுக்குப் பின்னால் தான் இருக்கிறது. செயற்கையான
அழகுடைன் இருப்பதற்காக தலை முடி அலங்காரத்தை எப்படியெல்லாம் செய்கிறார்கள். எவ்வளவு செலவு
செய்கிறார்கள்! இந்த எல்லா நாகரீகமும் சித்திரங்களிலிருந்து வெளி வந்துள்ளது. பார்வதியை போல நாங்கள்
தலைமுடி அலங்காரம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். இவை எல்லாமே கவருவதற்காகத் தான்
அமைக்கிறார்கள். முன்பெல்லாம் பாரசீகப் பெண்கள் யாராவது தம்மைப் பார்த்து மோகம் கொண்டு விடக்
கூடாது என்பதற்காக முகத்தின் மீது கறுப்பு வலையை அணிந்திருந்தனர். இதற்கு பதீத (துய்மையற்ற)
உலகம் என்றே கூறப்படுகிறது.
தந்தையும் நீயே, தாயும் நீயே! என்று பாடுகிறார்கள். ஆனால் இதை யாருக்குக் கூற வேண்டும்? தாய்
தந்தை என்பவர்கள் யார் என்பது கூடத் தெரியாது. தாய் தந்தையர் அவசியம் ஆஸ்தியை அளித்திருக்கக்
கூடும். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு சுகத்தின் ஆஸ்தி அளித்திருந்தார். பாபா நாங்கள் உங்களைத்
தவிர வேறு யார் கூறுவதையும் கேட்க மாட்டோம் என்று கூறவும் செய்கிறார்கள். சிவபாபாவின் மகிமை
26.07.2016
(2/4)
பாடப்படுகிறது என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். நானே பாவனமாக இருந்தேன், இப்பொழுது
பதீதமாக ஆகியுள்ளேன் என்று சுயம் பிரம்மாவின் ஆத்மா கூட கூறுகிறார். பிரம்மாவின் குழந்தைகள் கூட
அவ்வாறே கூறுவார்கள். பிரம்மா குமார் குமாரிகளாகிய நாங்களே தேவி தேவதைகளாக இருந்து பின்னர் 84
பிறவிகளின் கடைசியில் பதீதமாக ஆகி உள்ளோம். யார் முதல் நம்பரில் பாவனமாக இருந்தாரோ, அவரே
முதல் நம்பர் பதீதமாக ஆகி உள்ளார். எப்படி தந்தையோ, அப்படியே குழந்தைகள். சுயம் இவரும் கூறுகிறார்.
சிவபாபாவும் கூறுகிறார் லி நான் இவருடைய அநேக பிறவிகளின் கடைசியில் வருகிறேன். அவர் தான் முதல்
நம்பரில் பூஜைக்குரிய இலட்சுமி நாராயணரின் பரம்பரையில் இருந்தார். இப்பொழுது இருப்பது சங்கமம்.
நீங்கள் கலியுகத்தில் இருந்தீர்கள். இப்பொழுது சங்கமயுகத்தினராக ஆகி உள்ளீர்கள். தந்தை சங்கமத்தில் தான்
வருகிறார். நாடகப்படி குழந்தைகளும் விருத்தி அடைகிறார்கள். இப்பொழுது குழந்தைகளுக்கு ஞானம்
கிடைத்துள்ளது. நாமே தேவதைகளாக இருந்தோம். பிறகு க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர்களாக ஆனோம்.
முழு சக்கரத்தை நல்ல முறையில் நீங்கள் அறிந்துள்ளீர்கள். இது மிகவும் சுலபமாகும். நாம் 84 பிறவிகள்
எடுத்தோம். அநேகருடைய புத்தியில் இதுவும் பதிவதில்லை. மாணவர்களிடையே வரிசைக்கிரமமாக இருக்கவே
இருப்பார்கள். வலது புறத்திலிருந்து ஆரம்பிக்கிறோம். முதல் தரம், இரண்டாம் தரம் மற்றும் மூன்றாம் தரம்.
பெண் குழந்தைகள், அவர்களே எங்களுடைய புத்தி மூன்றாம் தரமாக உள்ளது என்கிறார்கள். எங்களால்
யாருக்கும் புரிய வைக்க முடிவதில்லை. மனம் மிகவுமே விரும்புகிறது. ஆனால் பேச முடியவில்லை. பாபா
என்ன செய்வது? இது தங்களது கர்மங்களின் கணக்கு வழக்கு ஆகும். நான் உங்களுக்கு கர்மம், அகர்மம்
மற்றும் விகர்மத்தின் கதி பற்றிய ஞானத்தைக் கூறுகிறேன் என்று இப்பொழுது தந்தை கூறுகிறார். கர்மம்
செய்ய வேண்டி உள்ளது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். மூன்றாம் தர புத்தி உடையவர்
களால் இந்த விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியாது. இது இருப்பதே இராவண இராஜ்யமாக. ஆனால்
இது யாருக்குமே தெரியாது. இராவண இராஜ்யத்தில் மனிதர்களோ விகர்மங்கள் (தீயச் செயல்கள்) தான்
செய்கிறார்கள். எனவே கீழே தான் விழுகிறார்கள். துக்கமான உலகத்தில் தான் குருவிடம் செல்கிறார்கள்.
முக்தியில் அழைத்து செல்வார் என்று சத்கதிக்காகத் தான் குருவிடம் செல்கிறார்கள். அது நிர்வாண தாமம்
ஆகும் லி சப்தத்திற்கு அப்பாற்பட்ட இடம். மனிதர்கள் தங்களை வானப்பிரஸ்தி என்று கூறுகிறார்கள். அதுவோ
சொல்லும் அளவிற்கு மட்டும் தான். வானப்பிரஸ்தியர்களின் சபைக் கூட இருக்கிறது. எல்லா சொத்து ஆகிய
வற்றையும் குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு குருவிடம் போய் உட்கார்ந்து கொள்கிறார்கள். உணவு, உடை,
ஆகியவையோ நிச்சயம் குழந்தைகள் தான் வழங்குவார்கள். ஆனால் வானப்பிரஸ்தம் என்பதன் பொருளை
யாருமே புரியாமல் உள்ளார்கள். நாம் நிர்வாணதாமம் செல்ல வேண்டும் என்பது யாருடைய புத்தியிலும்
வருவதில்லை. நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும். அவர்கள் ஒன்றும் வீடு என்று நினைப்பது இல்லை.
அவர்கள் ஜோதி ஜோதியுடன் கலந்து போய் விடுவோம் என்று நினைக்கிறார்கள். நிர்வாணதாமம் இருப்பதற்கான
இடமாகும். முன்பெல்லாம் 60 வருடங்களுக்குப் பிறகு வானபிரஸ்தம் செல்வார்கள். இது ஒரு நியமமாக
இருந்தது. இப்பொழுது கூட இது போல செய்கிறார்கள். சப்தத்திற்கு அப்பாற்பட்ட இடத்திற்கு யாருமே போக
முடியாது என்பதை இப்பொழுது நீங்கள் புரிய வைக்கலாம். இதற்காக ஹே பதீத பாவன பாபா வாருங்கள்!
எங்களை பாவனமாக ஆக்கி வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று தந்தையைத் தான் அழைக்கிறார்கள்.
முக்தி தாமத்தில் ஆத்மாக்களின் வீடு உள்ளது. குழந்தைகளாகிய உங்களுக்கு சத்யுகம் பற்றி கூட புரிய
வைக்கப்பட்டுள்ளது லி அங்கு யார் இருப்பார்கள், எப்படி விருத்தி ஆகிறது, ஜனத்தொகை பற்றி கூட யாருக்கும்
தெரியாது. இராம இராஜ்யத்தில் ஜனத்தொகை எவ்வளவு இருக்கும். குழந்தைகள் ஆகியோர் எப்படி பிறவி
எடுப்பார்கள்? எதுவும் புரியாமல் உள்ளார்கள். நாடகத்தின் சக்கரத்தை யாராவது புரிய வைக்கக் கூடிய வகையில்
எந்த ஒரு வித்துவான், ஆசிரியர் அல்லது பண்டிதர் கூட இல்லை. 84 லட்ச பிறவியின் சக்கரம் எப்படி
இருக்க முடியும்? எவ்வளவு தவறான விஷயங்கள்! முற்றிலுமே நூலுருண்டை சிக்கலாக உள்ளது. தந்தை
கர்மம், அகர்மம், விகர்மம் பற்றிய முழு ரகசியத்தைப் புரிய வைத்துள்ளார் என்பதை இப்பொழுது நீங்கள்
அறிந்துள்ளீர்கள் என்பதை தந்தை புரிய வைக்கிறார். சத்யுகத்தில் உங்களுடைய கர்மம் அகர்மமாக ஆகி
விடுகிறது. அங்கு எந்த ஒரு தீய செயலும் நடப்பதே இல்லை. எனவே கர்மம் அகர்மமாக ஆகி விடுகிறது.
இங்கு மனிதர்கள் என்ன கர்மம் செய்தாலும் அது விகர்மம் ஆகி விடுகிறது.
சிறியவர்கள், பெரியவர்கள் அனைவருக்கும் முழு உலகிற்கும் வானப்பிரஸ்த நிலையாகும் என்பதை
இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். எல்லோரும் (வாணி úஸ பரே) சப்தத்திற்கு அப்பாற்பட்டு
செல்பவர்கள் ஆவார்கள். ஹே பதீத பாவனரே! வாருங்கள். வந்து எங்களை பதீத நிலையிலிருந்து பாவனமாக
ஆக்குங்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் பாவன புது உலகம் இல்லாதவரையும் இங்கு பதீத உலகத்தில்
பாவனமானவர்கள் யாருமே இருக்க முடியாது. இந்த பதீத உலகம் எல்லாமே முடியப் போகிறது. நாம்
மீண்டும் புது உலகத்திற்குச் செல்ல வேண்டும் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். எப்படி செல்வீர்கள். இந்த
முழு ஞானமும் உள்ளது. இது புதிய உலகம். அமரலோகம் அல்லது பாவன உலகத்திற்கான புதிய ஞானமாகும்.
26.07.2016
(3/4)
நீங்கள் இப்பொழுது சங்கமத்தில் அமர்ந்துள்ளீர்கள். மற்ற மனிதர்கள், பிராமணர்களாக இல்லாதோர் அவர்கள்
கலியுகத்தில் இருக்கிறார்கள் என்பதையும் அறிந்துள்ளீர்கள். நாம் அனைவரும் சங்கமத்தில் உள்ளோம்.
சத்யுகத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம். உண்மையில் இது சங்கமயுகமாகும். அதுவோ இருப்பதே சொர்க்கமாக!
அதற்கு சங்கமம் என்று கூறப்படுவதில்லை. சங்கமம் என்பது இப்பொழுது உள்ளது. இந்த சங்கமயுகம் எல்லா
வற்றையும் விட சிறியது ஆகும். இதற்கு லீப் யுகம் என்று கூறப்படுகிறது. இதில் மனிதர்கள் பாவ ஆத்மாவிலிருந்து
தர்ம ஆத்மா ஆகிறார்கள். எனவே இதற்கு தர்மாவு யுகம் என்று கூறப்படுகிறது. கலியுகத்தில் எல்லா மனிதர்களும்
அதர்மத்தினராக இருக்கிறார்கள். அங்கோ எல்லோரும் தர்மாத்மாக்களாக இருப்பார்கள். பக்தி மார்க்கத்தினுடைய
தாக்கம் எவ்வளவு பெரியதாக உள்ளது. கல்லினால் விக்கிரகங்கள் அமைக்கிறார்கள். அவற்றைப் பார்த்தாலே
மனம் மகிழ்ந்து போய் விடும். இது கல்லுக்கு பூஜை ஆகும். சிவனுடைய கோயிலுக்கு பூஜை செய்வதற்காக
எவ்வளவு தூரமான இடங்களுக்கு போகிறார்கள். சிவனுடைய படத்தை வீட்டில் கூட வைக்கலாமே! பிறகு
இவ்வளவு தூர தூரமாகப் போய் ஏன் அலைய வேண்டும்? இந்த ஞானம் இப்பொழுது புத்தியில் வந்துள்ளது.
இப்பொழுது உங்களுடைய கண்கள் திறந்துள்ளன. புத்தியின் கதவு திறந்துள்ளது. தந்தை ஞானம் அளித்துள்ளார்.
பரமபிதா பரமாத்மா இந்த மனித சிருஷ்டியின் விதை ரூபமான ஞானக் கடல், ஞானம் நிறைந்தவராக
இருக்கிறார். ஆத்மா கூட அந்த ஞானத்தை தாரணை செய்கிறது. ஆத்மா தான் ஜனாதிபதி ஆகியோராக
ஆகிறது. மனிதர்களோ தேக அபிமானியாக ஆகி இருக்கும் காரணத்தால் தேகத்திற்குத் தான் மகிமை செய்துக்
கொண்டே இருக்கிறார்கள். ஆத்மா தான் எல்லாமே செய்கிறது என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள்.
ஆத்மாவாகிய நீங்கள் 84 பிறவிகளின் சக்கரம் சுற்றி வந்து முற்றிலுமே துர்க்கதியை அடைந்து விட்டுள்ளீர்கள்.
இப்பொழுது ஆத்மாவாகிய நாம் தந்தையை அடையாளம் கண்டு கொண்டிருக்கிறோம். தந்தையிடமிருந்து
ஆஸ்தி பெற்றுக் கொண்டிருக்கிறோம். ஆத்மா அவசியம் சரீரத்தை தாரணை செய்ய வேண்டி உள்ளது.
சரீரமின்றி ஆத்மாக்கள் எப்படி பேச முடியும்? எப்படி கேட்க முடியும்? நான் நிராகாரமானவன் ஆவேன்
என்று தந்தை கூறுகிறார். நான் கூட சரீரத்தை ஆதாரமாக எடுக்கிறேன். சிவபாபா இந்த பிரம்மா உடலின்
மூலமாக நமக்கு கூறுகிறார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இந்த விஷயங்களை பிரம்மாகுமார் குமாரிகளாகிய
நீங்கள் தான் புரிய வைக்கிறீர்கள். உங்களுக்கு இப்பொழுது ஞானம் கிடைத்துள்ளது. பிரம்மா மூலமாக ஆதி
சனாதன தேவி தேவதா தர்மத்தின் ஸ்தாபனை ஆகிறது. அதே தந்தை இராஜயோகத்தைக் கற்பித்துக்
கொண்டிருக்கிறார். இதில் குழம்ப வேண்டிய அவசியமே இல்லை. சிவபாபா நமக்கு புரிய வைக்கிறார். பின்
நாம் மற்றவர்களுக்குப் புரிய வைக்கிறோம். நமக்கும் கூறுபவர் சிவபாபா தான் ஆவார். நாம் இப்பொழுது
பதீத நிலையிலிருந்து பாவனமாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்று இப்பொழுது நீங்கள் கூறுவீர்கள். இது
இருப்பதே பதீதமான உலகமாக. இராவணனின் இராஜ்யம் அல்லவா? என்று தந்தை புரிய வைக்கிறார்.
இராவணன் பாவ ஆத்மாவாக ஆக்குகிறான். இது வேறு யாருக்கும் தெரியாது. இராவணனினுடைய உருவம்
அமைத்து எரிக்கிறார்கள். ஆனால் எதுவும் புரியாமல் உள்ளார்கள். சீதையை இராவணன் எடுத்துச் சென்றான்,
இப்படி செய்தான்... எத்தனை கதைகளை எழுதி உள்ளார்கள். உட்கார்ந்து கேட்கும் பொழுது அழுது விடுகிறார்கள்.
அவை எல்லாமே கட்டுக் கதைகள். பாபா நமக்கு விகர்மங்களை வென்றவராக (விகர்மாஜீத்) ஆக்குவதற்காக
புரிய வைக்கிறார். என் ஒருவனை மட்டுமே நினைவு செய்யுங்கள் என்று கூறுகிறார். எங்குமே புத்தியை
ஈடுபடுத்தாதீர்கள். சிவபாபா நமக்கு தனது அறிமுகத்தை அளித்துள்ளார். பதீத பாவன தந்தை வந்து தனது
அறிமுகத்தை அளிக்கிறார். நம்மை சொர்க்கத்திற்கு அதிபதியாக ஆக்கிக் கொண்டிருக்கும் அவர் எவ்வளவு
இனிமையான பாபா ஆவார் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட
செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும்
காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. கர்மம், அகர்மம் மற்றும் விகர்மம் பற்றிய கதியை (விளைவு) அறிந்து சிறந்த செயல்களையே
செய்ய வேண்டும். ஞான தானம் செய்து தர்மாத்மா ஆக வேண்டும்.
2. இது வானப்பிரஸ்த நிலையாகும். இந்த கடைசி கணங்களில் பாவனமாக ஆகி பாவன
உலகிற்குச் செல்ல வேண்டும். பாவனம் ஆவதற்கான செய்தியை அனைவருக்கும் அளிக்க
வேண்டும்.
26.07.2016
(4/4)
வரதானம்: பற்றுதலை பற்றற்றதாக மாற்றி விடக் கூடிய சக்தி சொரூபம் ஆவீர்களாக,
சக்தி சொரூபம் ஆக வேண்டும் என்றால் பற்றுதலை பற்றற்றதாக மாற்றி விடுங்கள். தங்களது தேகத்தில்,
சம்பந்தங்களில் ஏதாவது பொருட்களில் எங்காவது பற்றுதல் (ஈர்ப்பு) இருக்கிறது என்றால் மாயை கூட வர
முடியும். மேலும் சக்தி ரூபமாக ஆக முடியாமல் போய் விடும். எனவே முதலில் பற்றற்றவராக ஆகுங்கள்.
அப்பொழுது மாயையின் தடைகளை எதிர் கொள்ள முடியும். தடைகள் வரும் பொழுது கத்துவதற்கு அல்லது
பயப்படுவதற்குப் பதிலாக சக்தி ரூபத்தை தாரணை செய்து கொண்டு விட்டீர்கள் என்றால், தடைகளை வென்றோர்
(விக்கின விநாசகர்) ஆகி விடுவீர்கள்.
சுலோகன்: கருணை என்பது சுயநலமற்றதாகவும் பற்றுதல்களிலிருந்து விடுபட்டதாகவும்
இருக்க வேண்டும், சுயநலத்துடன் கூடியதாக இருக்கக் கூடாது.
(1/4)
27.07.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! இந்த மகாபாரத யுத்தத்தில் பழைய மரம் (சிருஷ்டி) அழிந்து
போகும். அதனால் யுத்தத்திற்கு முன் பாபாவிடம் முழுமையான ஆஸ்தி பெற்றுக் கொள்ளுங்கள்.
கேள்வி : பாபாவுக்கு மாதாக்களின் குழு வேண்டும். ஆனால் அந்தக் குழுவின் விசேஷத்தன்மை
என்னவாக இருக்க வேண்டும்?
பதில் : தேகி அபிமானியாக இருப்பதற்கான முழு முயற்சி செய்கின்ற அப்படிப்பட்ட குழுவாக இருக்க
வேண்டும். நாம் தூய்மையாகி, தூய்மையான உலகத்தை உருவாக்க வேண்டும் என்ற பக்கா நஷா (ஆர்வம்)
அவர்களுக்கு இருக்க வேண்டும். தூய்மையை இழந்து விடக் கூடாது. நஷ்டோமோகா (முற்றிலும் பற்றுதல்
இல்லாத) குழுவாக இருக்க வேண்டும். அப்போது ஏதேனும் அதிசயம் நிகழ்த்திக் காட்டலாம். யார் மீதும்
மோகம் இருக்கக் கூடாது. மோகம் என்ற கயிறு அதிக நஷ்டத்தை ஏற்படுத்தி விடும்.
ஓம் சாந்தி. இனிமையிலும் இனிமையான குழந்தைகள் இதை அறிவார்கள், அதாவது இனிமையான பாபா
நம்மை சொர்க்கவாசி ஆக்குவதற்காக இங்கே வந்துள்ளார். இது குழந்தைகளின் புத்தியில் உள்ளது. ஒவ்வொரு
வருக்கும் இதைப் புரிய வைக்க வேண்டும் லி நாம் ஆத்மா, இந்த நினைவு யாத்திரையினால் தூய்மையாகிறோம்.
எவ்வளவு சகஜமான உபாயம்! தந்தையை நினைவு செய்தால் போதும். குழந்தைகள் அறிவார்கள், பாபா ஒரு
விநாடியில் முக்திலிஜீவன் முக்திக்கான ஆஸ்தி தருகிறார். இப்போது அனைவரும் ஜீவன் பந்தனத்தில் உள்ளனர்.
இராவண இராஜ்யத்தின் கட்டுப்பாட்டில் உள்ளனர். இந்த விஷயத்தை பாபா அறிவார், குழந்தைகள் அறிவார்கள்.
வேறு யாருமே அறியார். குழந்தைகளாகிய உங்களுக்கு நிச்சயம் உள்ளதுலிஎல்லையற்ற தந்தையை நாம்
நினைவு செய்கிறோம் என்றால் ஆத்மாவுக்கு உள்ளுக்குள் மிகுந்த குμ இருக்க வேண்டும். எந்தத் தந்தையை
அரைக்கல்பமாக நினைவு செய்து கொண்டிருந்தோமோ, அந்த தந்தை கிடைத்து விட்டார். துக்கத்தில் தந்தையை
நினைவு செய்து கொண்டே இருக்கின்றனர். நீங்களும் நினைவு செய்தீர்கள். இப்போது நீங்கள் துக்கத்தில்
வந்து நினைவு செய்வதில்லை. யாரை முழு உலகமும் நினைவு செய்கிறதோ, அந்தத் தந்தை வந்துள்ளார்
என்பதை நீங்கள் அறிவீர்கள். பாபா அடிக்கடி புரிய வைத்துள்ளார் லி இங்கே நீங்கள் அமர்ந்திருக்கும் போது
புரிந்து கொள்ளுங்கள் லி நாம் ஆத்மா. பாபா பரந்தாமத்திலிருந்து வந்திருக்கிறார். கல்பலிகல்பமாக தமது வாக்குறுதியின்
படி வருகிறார். பாபாவின் உறுதிமொழி லி நீங்கள் எப்போது அழைக்கிறீர்களோ, மேலும் அரைக்கல்பம் எப்போது
முடிவடைகிறதோ, அப்போது நான் வர வேண்டியுள்ளது. கலியுகத்திற்குப் பிறகு சத்யுகம் வர வேண்டும்
என்றால் நான் வர வேண்டியுள்ளது. இது குழந்தைகளாகிய உங்களுக்கு மட்டும் தான் தெரியும் லி இது சங்கம
யுகம், பாபா வந்து விட்டார். குழந்தைகள் நீங்களும் சேவை செய்கிறீர்கள். ஒவ்வொரு நாளும் அறிமுகம்
கொடுத்துக் கொண்டே செல்கிறீர்கள். பாபாவின் அறிமுகம் அனைவருக்கும் கிடைத்துக் கொண்டே இருக்கிறது.
இங்கே அமர்ந்திருக்கிறீர்கள், அறிந்து கொண்டிருக்கிறீர்கள், எல்லையற்ற பாபா சிவபாபா நமக்கு மீண்டும்
எல்லையற்ற ஆஸ்தி தருவதற்காக வந்துள்ளார். நீங்கள் பாபாலிபாபா என்று சொல்கிறீர்கள் இல்லையா? நாம்
சிவபாபாவிடம் வந்துள்ளோம். சிவபாபாவும் சொல்கிறார், நான் சாதாரண உடலில் வந்திருக்கிறேன், கல்பத்திற்கு
முன்பு போலவே. இதை மறக்கக் கூடாது. மாயா அப்படிப்பட்ட பாபாவை மறக்கும் படியாகச் செய்து விடுகின்றது.
அவரை நினைப்பதன் மூலம் தான் தூய்மை இல்லாத நிலையிலிருந்து தூய்மை ஆக வேண்டியுள்ளது. நீங்கள்
அறிவீர்கள், அனைவருக்கும் சத்கதி அளிப்பவர் ஒரே ஒரு சத்குரு ஆவார். சீக்கியர்களும் பாடுகின்றனர்லிசத்
ஸ்ரீ அகால் என்று. பதீத பாவனர் தான் சத்குரு என்று சொல்லப் படுகிறார். பதீத பாவனா என்று அழைக்கவும்
செய்கின்றனர். ஆத்மா அழைக்கின்றது. இப்போது நீங்கள் அறிவீர்கள், நாம் இங்கே வந்திருக்கிறோம், பாபாவுடன்
நேராகச் சந்திப்பதற்காக. பெரியலிபெரிய மனிதர்கள் ஓருவர் மற்றவருடன் சந்திப்பதற்காகச் செல்கின்றனர்.
அவர்களுக்கு எவ்வளவு மகிமை உள்ளது! மிக விமரிசையாக, ஆடம்பரத்திற்காக குμயின் பேண்டு இசை
முதலியவற்றை இசைக்கின்றனர். இங்கே குப்த வேஷத்தில் வந்திருப்பவர் யார் என்பதை நீங்கள் தான்
அறிவீர்கள். அவர் தூரதேசத்தில் வசிக்கும் பிரயாணி எனச் சொல்லப் படுகிறார்.
நீங்கள் அறிவீர்கள், நாம் ஆத்மாக்கள் பரந்தாமத்தின் நிவாசிகள். இங்கே பயணிகளாகி வந்துள்ளோம்,
பாகத்தை நடிப்பதற்காக. பாபா புரிய வைக்கும் ஒவ்வொரு வார்த்தையும் உலகத்தில் யாருக்குமே தெரியாது.
நீங்கள் பாபாவிடம் கேட்டுக் கொண்டிருக்கிறீôகள். அதை நன்றாக தாரணை செய்ய வேண்டும். பாபா புரிய
வைக்கிறார், நீங்கள் அனைவரும் இந்தக் கர்ம சேத்திரத்தில் பயணிகள். நாம் சாந்திதாமத்தில் வசிப்பவர்கள்.
பிறகு இங்கே டாக்கி (சப்தத்தின்) உலகத்தில் வருகிறோம். நாம் சாந்திதாமத்திலிருந்து வந்த பயணிகள். 84
பிறவிகளின் பாகத்தை இங்கே நடிக்கின்றோம். கடைசியில் இது இறுதி நேரம். ஆக, பாபா வந்துள்ளார் லி
பழைய சிருஷ்டியைப் புதியதாக ஆக்குவதற்காக. இதையும் நீங்கள் அறிவீர்கள். சித்திரமும் தெளிவாக உள்ளது.
சிவபாபா, பிரம்மா மூலம் புது உலகத்தின் ஸ்தாபனை செய்கிறார். கிருஷ்ணர் மூலம், விஷ்ணு மூலம் ஸ்தாபனை
(2/4)
27.07.2016
செய்கிறார் என்பது கிடையாது. பாபா வருவதே பிரம்மா மூலம் சொர்க்கத்தைப் படைப்பதற்காக. பாபா சாதாரண
உடலில் வந்துள்ளார். இந்த உலகமே தூய்மையற்ற உலகம். தூய்மையானவர் ஒருவர் கூடக் கிடையாது.
ஏனெனில் முதல் நம்பரில் உள்ள லட்சுமிலிநாராயணரோ தூய்மையற்றவர் ஆகின்றனர். யார் தூய்மையாக
இருந்தனரோ, அவர்களே முழு அரச பரம்பரையோடு கூடவே தூய்மையற்றவர் ஆகியுள்ளனர். நீங்கள்
அறிவீர்கள், நாம் தெய்வீக தர்மத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தோம். இப்போது அவர்கள் அனைவரும் சூத்திர
தர்மத்தினராக ஆகி விட்டிருக்கிறோம். அமெரிக்கா முதலியவற்றில் பெரியலிபெரிய பணக்காரர்கள் இருக்கலாம்.
ஆனால் சத்யுகத்தின் முன்னால் அமெரிக்கா ஒன்றுமே இல்லை. இவை அனைத்தும் பின்னால் இது போல்
ஆகியிருக்கின்றன. இது அல்ப காலத்தின் பகட்டு. விநாசமோ நடந்தேயாக வேண்டும். குழந்தைகள் உங்களுக்கு
மிக அதிக நஷா இருக்க வேண்டும். நம்மை சொர்க்கத்தின் எஜமானர்களாக ஆக்குபவர் பாபா, அவரைக்
குழந்தைகள் நினைவு செய்வதில்லை என்பது எவ்வளவு பெரிய அதிசயம்! மாயா நினைவு செய்ய விடுவதில்லை.
குழந்தைகள் நீங்கள் இப்போது இது போல் சொல்கிறீர்கள் லி பாபா, மாயா எங்களை நினைவு செய்ய விடுவதில்லை.
அட, பாபா உங்களை 21 பிறவிகளுக்கு சொர்க்கத்தின் எஜமானர்களாக ஆக்குகிறார். அவரை நீங்கள் நினைவு
செய்ய முடியாதா? பிரஜைகளும் கூட சொர்க்கத்தின் எஜமானர்களாக ஆகின்றனர் இல்லையா? அனைவரும்
அங்கே சுகமாக இருப்பார்கள். இப்போதோ அனைவரும் துக்கத்தில் உள்ளனர். பிரதம மந்திரி, ஜனாதிபதி
முதலானவர்களுக்கோ இரவும் பகலும் கவலை இருந்து கொண்டுள்ளது. யுத்தம் முதலியவற்றில் எவ்வளவு
பேர் இறந்து கொண்டே இருக்கின்றனர்! நீங்கள் அறிவீர்கள், மகாபாரத யுத்தமும் கூடப் புகழ் பெற்றதாகும்.
ஆனால் அதில் என்ன நடந்தது என்பது யாருடைய புத்தியிலும் இல்லை. உங்களுக்கு பாபா புத்தியில் பதிய
வைத்துள்ளார். மகாபாரத யுத்தத்தில் அனைவரும் இறந்து போயினர். எவ்வளவு பெரிய மனித சிருஷ்டி!
ஆத்மாக்களின் மரமும் உள்ளது. மரம் முதலில் புதியதாக இருந்தபோது மிகச் சிறியதாக இருந்தது. பிறகு
வளர்ச்சி அடைந்து கொண்டே செல்கிறது. நீங்கள் அறிவீர்கள், முதலில் தெய்விக தர்மம் இருந்தபோது
எவ்வளவு சிறிய மரமாக இருந்தது! ஆதி சநாதன தேவதா தர்மம் இருந்தது. இப்போது எவ்வளவு விதவிதமான
தர்மங்கள் உள்ளன! இந்த மகாபாரத யுத்தத்தின் மூலம் இங்குள்ள அனைத்தும் விநாசமாகி விடும். ஆனால்
இந்த ஞானம் யாரிடமும் இல்லை. இது அதே யுத்தம் தான் என்று அவர்கள் சொல்லலாம். ஆனால் இதனால்
என்ன ஆகப் போகிறது என்பது அவர்களுக்குத் தெரியாது. நீங்கள் இப்போது ஒளியில் இருக்கிறீர்கள். நீங்கள்
அறிவீர்கள், விநாசம் ஆகப் போகிறது, அதனால் மகாபாரத யுத்தத்திற்கு முன் நம்முடைய ஆஸ்தியையோ
அடைந்து கொள்வோம். விஷயமோ மிகவும் சுலபமானது. தூய்மையாகுங்கள், பாபாவை நினைவு செய்யுங்கள்.
அநேகப் பெண் குழந்தைகள் மீது கொடுமைகள் நடைபெறுகின்றன. மாதாக்களாகிய உங்களுக்குள் ஒருவர்
மற்றவரைப் பாதுகாப்பதற்காக உங்களுடைய ஒரு குழு உருவாக வேண்டும். ஆனால் ஆத்ம அபிமானியாக
அவசியம் ஆக வேண்டும். நாம் தூய்மையாக அவசியம் ஆக வேண்டும் லி இந்தப் பக்கா நஷா இருக்க
வேண்டும். அத்தகைய நஷாவில் இருப்பவர்கள் தான் மற்றவர்களுக்குப் புரிய வைக்க முடியும். நாம் பாபாவை
நினைவு செய்ய வேண்டும், தூய்மையானவர்களாக ஆக வேண்டும். நாம் சுயதரிசனச் சக்கரதாரி லி இந்த
நஷாவோ இருக்க வேண்டும். நாம் படைப்பவராகிய தந்தையையும் படைப்பின் சக்கரத்தையும் அறிவோம்.
இப்போது நாம் தந்தையிடமிருந்து புது உலகமாகிய சத்யுகத்தின் ஆஸ்தியைப் பெற வேண்டும். நாம் 84
பிறவிகளை எப்படி எடுக்கின்றோம் என்பதைப் புரிய வைத்துக் கொண்டே இருங்கள். பாபா சொல்கிறார்,
என்னை நினைவு செய்வீர்களானால் உங்களுடைய பாவங்கள் அழிந்து விடும். தூய்மையானவர்களாக அவசியம்
ஆக வேண்டும். பாவனம் என்றால் தூய்மை (புனிதம்). காமம் மிகப்பெரிய விரோதி. நாம் 84 பிறவிகளின்
சக்கரத்தை முடித்து விட்டோம். இப்போது பாபாவிடமிருந்து ஆஸ்தி பெற வேண்டும். பாபா சொல்கிறார்,
என்னை நினைவு செய்வீர்களானால் உங்கள் விகர்மங்கள் விநாசமாகி விடும். இங்கு நீங்கள் வருவதே
புத்துணர்ச்சி பெறுவதற்காக. தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள் லி 21 பிறவிகளுக்கான ஆஸ்தி பெற
வேண்டும். யார் மீதும் மோகத்தின் நாட்டம் இருக்கக் கூடாது. பற்றற்றவராக ஆக வேண்டும். இந்த சரீரத்தின்
மீதும் மோகம் கூடாது. இதுவோ பழைய தோல். ஆனால் இதைப் பராமரிக்க வேண்டும். இதன் மூலம் தான்
படிப்பைப் படிக்க வேண்டியுள்ளது. கஷ்டம் வந்தால் சமாளிக்க வேண்டியுள்ளது. நீங்கள் அறிவீர்கள், இது
பழைய இற்றுப் போன சரீரம். இதற்கு ஏதேனும் ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது. துக்கம் ஆத்மாவுக்கு
ஏற்படுகின்றது. நீங்கள் அறிவீர்கள், இப்போது இந்த சரீரத்தை விட வேண்டும். யோகபலத்தின் மூலம் இதை
பொறுமையுடன் எதிர்கொள்ள வேண்டும். பாபாவை நினைவு செய்து கொண்டே இருக்க வேண்டும். தன்னை
ஆத்மா என உணர்ந்து பாபாவை நினைவு செய்தால் போதும். வேறு எந்த லௌகிக சம்மந்தங்களும் நினைவு
வரக் கூடாது. நான் தேகமல்ல, ஆத்மா. பாபா சொல்கிறார், நான் ஆத்மாக்களாகிய உங்களுக்கு ஆஸ்தி
தருவதற்காக வந்துள்ளேன். ஆத்மா தூய்மையாகி விட்டால் பிறகு சரீரமும் கூட நல்லதாகக் கிடைக்கும்.
நீங்கள் அறிவீர்கள், இப்போது ஆத்மா நாம் தூய்மையாக வேண்டும். நாம் தூய்மையாக இருந்த போது
லட்சுமிலிநாராயணரைப் போல் இருந்தோம். இந்த லட்சுமிலிநாராயணர் 84 பிறவிகளை எடுத்துள்ளனர். சூரியவம்சி
(3/4)
27.07.2016
அரச பரம்பரை முழுவதுமே 84 பிறவிகள் எடுத்துள்ளனர். சந்திரவம்சிகளுக்கு 84 பிறவிகள் எனச் சொல்ல
மாட்டார்கள். ஆம், சூரியவம்சியில் யார் முதல்லிமுதலில் பணியாளர்களாக ஆகியிருப்பார்களோ, அவர்கள் பிறகு
திரேதா யுகத்தில் ஏதாவதொரு பதவி பெறுவார்கள். அவர்களுக்கு 84 பிறவிகள் எனச் சொல்வார்கள். இராஜாலிராணி,
பிரஜைகள், தாசலிதாசிகள் முதலான யாரெல்லாம் சூரியவம்சியில் வருகிறார்களோ, அவர்கள் தான் 84 பிறவிகள்
எடுக்கிறார்கள். இப்படிலிஇப்படி தனக்குத் தான் உரையாடல் செய்ய வேண்டும். நாம் 84 பிறவிகளை ஏன்
எடுக்கிறோம்? விசார் சாகர் மந்தன் செய்ய வேண்டும். எவ்வளவு முடியுமோ, தந்தை மற்றும் ஆஸ்தியை
நினைவு செய்து கொண்டே இருங்கள். நடமாடும் போதும் கூட நாம் பாபாவின் குழந்தைகள் என்பதைப்
புரிந்து கொள்ளுங்கள். யாராவது சந்தித்தால் பாபாவின் அறிமுகம் கொடுக்க வேண்டும். இந்தச் சித்திரங்களில்
முழு ஞானம் உள்ளது. அனைத்தையும் சொல்ல வேண்டும். பாபா பிரம்மாவின் உடலில் வந்துள்ளார். நாம்
அனைவரும் பிரம்மாகுமார்லிகுமாரிகள் இல்லையா? பி.கே.க்களாகிய நம்மை சொர்க்கத்தின் எஜமானர்களாக
ஆக்குவதற்காக பாபா வந்துள்ளார். அனைத்து ஆத்மாக்களின் தந்தை ஒருவர் தான். நாம் பிரம்மாகுமார்லிகுமாரிகள்.
அவரவருடைய அடையாள அட்டையை நீங்கள் காட்ட முடியும். எங்காவது அலுவலகங்களிலும் கூட
அட்டையைக் கொடுங்கள். ஆனால் பி.கே. என்றால் யார் என்று அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. அநேக
விதமான தடைகள் வருகின்றன. அரசாங்கத்திற்கும் கூட புரிய வைக்கப் படுகின்றது லி இது எங்களுடைய
குடும்பம். தாதா மற்றும் பாபா உள்ளனர். தாதா (மூத்த சகோதரர்) மூலம் நாம் ஆஸ்தி பெற்றுக் கொண்டிருக்கிறோம்.
இதை நினைவு வைப்பதால் குμ இருக்க வேண்டும். ஆஸ்தியோ தாத்தாவினுடையது. பேரக் குழந்தைகள்
அதைப் பெறுவதற்கு உரிமை உள்ளது. முழு பாகத்தையும் பங்கிட்டுப் பெற்றுக் கொள்கின்றனர்.
நீங்களும் அறிவீர்கள் லி சிவபாபாவிடமிருந்து பிரம்மா மூலம் நாம் ஆஸ்தி பெறுகிறோம். இதை நினைவு
வைக்க வேண்டும், படிக்க வேண்டும். பிறகு மற்றவர்களுக்குக் கற்றுத் தர வேண்டும். இது தந்தையின்
கடமைலிகுழந்தைகளுக்குப் பாலனை செய்வது. குமார்லிகுமாரி இளமைப் பருவம் அடையாத வரை அவர்களைப்
பராமரிப்பது. குழந்தைகளின் கடமை படிப்பது. தங்களின் கால்களில் நிற்பதற்காகப் படிக்கின்றனர். நீங்கள்
அறிவீர்கள், பாபா நமக்குப் படிப்பு சொல்லித் தந்து கொண்டிருக்கிறார், 21 பிறவிகளுக்காக. பிறகு நாம் நம்முடைய
கால்களில் நின்று கொள்வோம். எவ்வளவு படிக்கிறீர்களோ, அவ்வளவு உயர்ந்த பதவி பெறுவீர்கள். நீங்கள்
தாங்களே சொல்கிறீர்கள், நாங்கள் இங்கே வருவது ஸ்ரீலட்சுமி அல்லது ஸ்ரீநாராயணன் ஆவதற்காக. இது
சத்திய நாராயணனின் கதை இல்லையா? இந்த லட்சுமிலிநாராயணன் எப்படி 84 பிறவிகள் எடுக்கின்றனர்
என்பது பற்றி யாருக்கும் தெரியாது. இராதையின் பக்தர்களாக இருப்பார்களானால் சொல்வார்கள், இராதை
இங்கே நம் முன் உள்ளார் என்று. எங்கே பார்த்தாலும் இராதையே இராதை! கிருஷ்ணரே கிருஷ்ணர்! சிவனே
சிவன்! இந்தக் குழப்பத்தை உருவாக்கி விட்டுள்ளனர். ஈஸ்வரன், இராதை, கிருஷ்ணர் அனைவரும் சர்வவியாபி.
இவை அனைத்தும் ஈஸ்வரனின் ரூபங்கள். பகவான் இந்த ரூபத்தை தாரணை செய்துள்ளார். எங்கே பார்த்தாலும்
நீயே தான்..... எனச் சொல்கின்றனர். முற்றிலும் புத்தியற்றவர்களாக ஆகி விட்டுள்ளனர். இது விகாரி பதித்
உலகம். சத்யுகம் என்பது நிர்விகாரி தூய்மையான உலகம். விகாரமற்ற உலகம் என்பதன் அர்த்தமே சொர்க்கம்
என்பது தான். அங்கே குழந்தைகளோ உள்ளனர் இல்லையா, அவர்கள் எப்படிப் பிறப்பார்கள் எனக் கேட்கின்றனர்.
இதைத் தான் கேள்வியாகக் கேட்பார்கள். குழந்தைகள் பிறக்கவில்லை என்றால் சிருஷ்டி எப்படி விருத்தியாகும்
எனக் கேட்பார்கள். ஒவ்வொரு வருடமும் ஜனத்தொகைக் கணக்கை எடுக்கின்றனர்லிஎவ்வளவு அதிகப்படியான
மனிதர்கள் உருவாகியுள்ளனர்? இவ்வளவு பேர் இறந்து விட்டனர் என்பதைச் சொல்ல மாட்டார்கள். ஆக,
குழந்தைகள் முதலிலோ தங்களுக்கு நன்மை செய்து கொள்ள வேண்டும். நான் ஆத்மா லி முதலிலோ இந்த
நிச்சயம் செய்யுங்கள். பாபாவை நினைவு செய்ய வேண்டும். கடைசிக் காலத்தில் யார் நாராயணனை
நினைக்கிறார்களோ........... இப்போது நாரயணனை நினைப்பது என்று பொய்யாக எழுதியுள்ளனர். கடைசிக் காலத்தில்
சிவபாபாவை நினைக்க வேண்டும்......... அதே கவலையில் யார் இறக்கிறார்களோ, அவர்கள் சொர்க்கத்தின்
நாராயணனாக ஆவார்கள். கடைசிக் காலத்தில் நாராயணன் என்று ஏன் சொல்கிறார்கள்? கிருஷ்ணர் ஞானம்
கொடுத்திருந்தார் என்றால் கிருஷ்ணரை நினைப்போமே என்று புரிந்து கொண்டுள்ளனர். அதனால் கிருஷ்ணரை
நினைவு செய்கின்றனர். நாராயணர் பற்றி யாருக்கும் தெரியாது. கிருஷ்ணருக்கு ஜெயந்தி கொண்டாடுகின்றனர்.
சரி. இராதையின் ஜெயந்தி எங்கே? கிருஷ்ணரின் ஜென்மத்தைக் கொண்டாடுகின்றனர். நாராயணருடையது
எங்கே? உலகத்தின் இராஜாலிராணி லட்சுமிலிநாராயணர் பற்றி யாருக்கும் தெரியாது. பிரஜாபிதா பிரம்மாவின்
முகவம்சாவளி இருப்பார்கள் இல்லையா? அவர்கள் எங்கே சென்றார்கள்? பிராமண் தேவிலிதேவதாய நமஹ
எனச் சொல்கின்றனர். பிரம்மாவுக்கு முகவம்சாவளி இருந்தனர் இல்லையா? பிரம்மா மூலம் சிவபாபா பிராமண
தர்மத்தை ஸ்தாபனை செய்கிறார் என்பதைக் குழந்தைகள் புரிந்து கொண்டுள்ளனர். பிராமண தர்மத்தை
பிரம்மா படைக்கவில்லை. ஆனால் சிவபாபா படைத்தார். இவரோ இப்போது தான் பிரம்மா ஆகியிருக்கிறார்.
நல்லது.
(4/4)
27.07.2016
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும்
தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம் :
1) இந்தப் பழைய சரீரத்தில் வாழ்ந்து கொண்டே படிப்பைப் படித்து 21 பிறவிகளுக்கான
வருமானத்தைச் சம்பாதிக்க வேண்டும். அதனால் இந்த சரீரத்தைப் பராமரிக்க வேண்டும்.
மற்றப்படி இதன் மேல் மோகம் வைக்கக் கூடாது.
2) கடைசிக் காலத்தில் ஒரு சிவபாபாவின் நினைவு மட்டுமே இருக்க வேண்டும்லிஅந்த மாதிரியான
அப்பியாசம் செய்ய வேண்டும். வேறு எந்த ஒரு சிந்தினையிலும் செல்லக் கூடாது. தனக்கு
நன்மை செய்துக் கொள்ள வேண்டும்.
வரதானம் : சப்தத்தைக் கடந்த ஸ்திதியில் நிலைத்திருந்து சர்வ குணங்களையும்
அனுபவம் செய்யக் கூடிய மாஸ்டர் விதை வடிவம் ஆகுக !
எப்படி விதைக்குள் முழு மரமும் அடங்கியுள்ளதோ, அதைப் போல் சப்தத்தைக் கடந்த ஸ்திதியில்
சங்கமயுகத்தின் அனைத்து விசேஷ குணங்களும் அனுபவத்தில் வரும். மாஸ்டர் விதை வடிவம் ஆவது
என்றால் வெறும் சாந்தி மட்டும் இல்லை, ஆனால் சாந்தியோடு கூடவே ஞானம், அதிந்திரிய சுகம், அன்பு,
ஆனந்தம், சக்தி முதலிய அனைத்து முக்கிய குணங்களையும் அனுபவம் செய்ய வேண்டும். இந்த அனுபவம்
தனக்கு மட்டும் ஏற்படுவதில்லை, ஆனால் மற்ற ஆத்மாக்களும் கூட அவர்களின் முகத்தின் மூலம் சர்வ
குணங்களின் அனுபவம் செய்கின்றனர். ஒரு குணத்திலேயே சர்வ குணங்களும் நிறைந்திருக்கும்.
சுலோகன் : நல்லதை மட்டுமே தாரணை செய்யுங்கள், ஆனால்
நல்லதில் பிரபாவம் (வசம்) ஆகி விடாதீர்கள்.
(1/4)
28
28.07.2016, காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! நீங்கள் இங்கே தன்னுடன் சேர்த்து முழு உலகத்தினரையும்
(கல்ப தருவாக) புதியதாக ஆக்குவதற்காக வந்துள்ளீர்கள். நினைவின் மூலம் தான் காய கல்பம்
(எப்போதும் ஆரோக்கியம் நிறைந்த உடல்) உருவாகும்.
கேள்வி: நரகவாசியிலிருந்து சொர்க்கவாசி ஆவதற்கான விதி எது? இப்போது குழந்தைகளாகிய
உங்களுக்கு ஜீவதானம் (வாழ்க்கை தானம்) கிடைக்கிறது, எப்படி?
பதில்: நரகவாசியிலிருந்து சொர்க்கவாசியாக ஆவதற்காக கண்டிப்பாக இறக்க வேண்டும். நான் உங்கள்
அனைவருக்கும் மரணத்தைக் கொடுப்பதற்காக வந்துள்ளேன் என பாபா சொல்கிறார். உங்களுடைய இந்த
தேகத்தை அழித்து மற்ற அனைத்து ஆத்மாக்களையும் அழைத்துச் செல்வேன். இதுவே உண்மையான
வாழ்க்கை தானமாகும் (உயிர் பிச்சை). இதற்காகவே இந்த மகாபாரதச் சண்டையாகும். அதில் அனைத்தும்
வினாசம் ஆகும். பிறகு ஆத்மாக்கள் தூய்மையடைந்து வீடு திரும்பிச் செல்வார்கள். பிறகு சொர்க்கத்திற்கு
வருவார்கள்.
பாடல்: மாதா ஓ மாதா. . .
ஓம் சாந்தி. இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் பாடலின் வரிகளைக் கேட்டீர்கள்.
ஜகதம்பாவின் மகிமையைக் கேட்டீர்கள். ஜகதம்பா இங்கே பாரதத்தில்தான் பாடப்படுகிறார். ஜகதம்பா இருக்கிறார்
என்றால் ஜகத்பிதாவும் கண்டிப்பாக இருப்பார். ஜகதம்பா என சரஸ்வதியைத்தான் சொல்கின்றனர். உண்மையில்
அவருடைய பெயர் ஒன்றுதான் இருக்க வேண்டும். உங்களுடைய பெயரும் ஒன்றுதான் இருக்கிறது அல்லவா.
இரண்டு மூன்று பெயர்கள் இல்லை. இப்போது ஜகதம்பாவை சாகாரத்தில் காட்டுகின்றனர், சரீரதாரியாக உள்ளார்.
ஜகத்பிதாவும் இருக்கிறார், அவர் பிரஜாபிதா என அழைக்கப்படுகிறார். முழு உலகிற்கும் அம்பா இருப்பது
போல் முழு உலகின் பிதாவாக இருக்கிறார். கண்டிப்பாக இருவருமே இங்கே இருப்பார்கள். இருவரின் பெயர்
களும் சொல்லியிருக்கிறேன். இருவரும் பிரஜாபிதா மற்றும் பிரஜாமாதா ஆவர். இப்போது சிவபாபா இன்னொரு
ஜகத்பிதா என சொல்லப்படுகிறார். அவர் அனைவரின் ஆத்மாக்களின் பிதாவாக இருப்பவர், அவர் பெயரே
பரமபிதா பரம ஆத்மா, சிவன் என்பது. வெறும் ஈஸ்வரன் அல்லது பரமாத்மா என சொல்லக்கூடாது. அவருடைய
பெயர், உருவம் என்பது உண்டல்லவா. அவர் இறைத்தந்தை என சொல்லப்படுகிறார். ஒருவர் ஆத்மாக்களின்
தந்தை, மற்றவர் சாகார மனித ஆத்மாக்களின் தந்தை மற்றும் மம்மா. சிவன் ஆத்மாக்களின் பிதா ஆவார்.
அவர் என்னுடைய தந்தை என ஆத்மா சொல்கிறது. பிறகு ஆத்மாவுக்கு இந்த சாகார சரீரம் கிடைக்கும்போது
பிரம்மா பாபா என சொல்கிறோம், அப்போது இரண்டு தந்தையர் என ஆகிவிட்டனர். பதித பாவனா வாருங்கள்
என அனைவருமே கூக்குரலிடுகின்றனர் எனும்போது இரண்டு தந்தையர்கள் ஆகி விடுகின்றனர். சிவபாபா
படைப்பவர் ஆவார். புதிய உலகை படைக்கிறார். ஆக முதலில் பிரம்மாவைப் படைக்க வேண்டும்.
விஷ்ணுவையோ அல்லது சங்கரனையோ ஒருபோதும் பிரஜாபிதா என சொல்வதில்லை. பிரம்மாவைதான்
பிரஜாபிதா என சொல்கிறோம். ஆக சிவபாபா பிரஜாபிதா பிரம்மாவின் மூலம் தத்தெடுக்கிறார். நாங்கள் சிவபாபாவின்
குழந்தைகள் என சொல்கின்றனர். சிவபாபா இவருக்குள் பிரவேசமாகி தத்தெடுத்துள்ளார். அவர்தான் ஆத்மாக்களை
தூய்மைப்படுத்துகிறார், ஆத்மாதான் தூய்மையற்றிருக்கிறது. இதன் காரணமாக சரீரமும் தூய்மையற்றதாக
கிடைக்கிறது. தங்கத்தில் வெள்ளி, தாமிரம், இரும்பு ஆகியவற்றைக் கலக்கின்றனர், அதுபோல் ஆத்மாவுக்குள்ளும்
கலப்படம் ஏற்படுகிறது. உண்மையில் ஆத்மா தூய்மையாக முக்தி தாமத்தில் வசிப்பதாகும், அங்கே சிவபாபாவும்
வசிக்கிறார். இப்போது சிவபாபா, பிரஜாபிதா பிரம்மா லி ஒருவரை தந்தை, இன்னொருவரை தாதா என
சொல்கிறோம். அனைத்து மனிதர்களும் சிவபாபாவின் குழந்தைகள் என நீங்கள் அறிவீர்கள். சிவ வம்சத்தவர்,
பின்னர் பிரம்மாகுமார், குமாரிகள். சிவபாபா மற்றும் பிரம்மா ஒன்றாக இருக்கின்றனர். சிவபாபா இவருக்குள்
வீற்றிருக்கிறார், நம்மை பிராமணர் ஆக்கி மனிதரை தேவதை ஆக்குவதற்காக இராஜயோகம் கற்பிக்கிறார்.
தேவதைகள் சத்யுகத்தில் இருக்கின்றனர். தேவதைகள் பதித பாவனர், ஞானக் கடல் என சொல்லப்படுவதில்லை.
அவர்களை பாபா எனவும் சொல்ல முடியாது. இப்போது நீங்கள் விஷ்ணுபுரியின் எஜமானர்களாக ஆகிக்
கொண்டிருக்கிறீர்கள். விஷ்ணுவின் (இரண்டு இணைந்த) ரூபமே லட்சுமி நாராயணர், இதனை மனிதர்கள்
அறிவதில்லை. பக்தி செய்பவர்களுக்கு இரண்டு தந்தையர் கண்டிப்பாக உண்டு. சத்யுகத்தில் ஒரு தந்தை
இருப்பார். அங்கே ஓ பரமபிதா பரமாத்மா, துக்கத்தை நீக்கி சுகத்தைக் கொடுப்பவரே வாருங்கள் என சொல்வ
தில்லை. அங்கே தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. அவர்கள் ஓ இறைத்தந்தையே, விடுவிப்பவரே
என சொல்ல மாட்டார்கள். அங்கே பதித பாவனரை அழைக்கும்படியாக யாரும் தூய்மையற்றவர்களாக, துக்கம்
மிக்கவர்களாக இருக்க மாட்டார்கள், பாரதத்தில் இன்றிலிருந்து 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தேவி
தேவதைகளின் இராஜ்யம் இருந்தது என நீங்கள் அறிவீர்கள். பின்னர் 1250 வருடங்களுக்குப் பிறகு ராமன்
சீதையின் இராஜ்யம் ஏற்படும். தந்தை உறுதிப்படுத்தி சொல்கிறார் லி சத்யுகம், திரேதா யுகங்களில் நீங்கள் 21
(2/4)
28.07.2016
பிறவிகள் எடுத்தீர்கள். பிராமணர், தேவதைகள், சத்திரியர்கள் . . . என பாரதத்தில்தான் ஆகின்றனர். தந்தை
வந்து பழைய உலகை புதிய உலகமாக ஆக்குகிறார். புதுப்பிக்கிறார். காயா கல்பதரு ஆக்குகிறார். அமரர்களாக
ஆக்குகிறார். தந்தை வந்து குழந்தைகளாகிய உங்களை அமரலோகத்தின் எஜமானர்களாக ஆக்குகிறார். பாரதம்
அமரலோகமாக இருந்தபோது தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. ஏணியில் இறங்கி இறங்கி வந்து
மரணலோகத்தின் எஜமானர்களாக ஆகியுள்ளனர். எங்கள் பாரதம் என சொல்கின்றனர் அல்லவா. ஆக
பிரஜைகளும் கூட எஜமானர் என ஆகிவிட்டனர் அல்லவா. நீங்களும் எங்கள் பாரதம் என சொல்வீர்கள்.
நாம் பாரதத்தின் எஜமானாக இருந்தோம், ஆனால் நரகவாசி. தேவதைகள் நாங்கள் சொர்க்கவாசிகள் என
சொல்வார்கள். நீங்களும் கூட சொர்க்கவாசியாக இருந்தீர்கள், பிறகு 84 பிறவிகள் அனுபவித்து நரகவாசி
ஆகியுள்ளீர்கள். இங்கே பாரதத்தில்தான் சிவபாபா ஜென்மம் எடுக்கிறார். சிவராத்திரியும் சிவஜெயந்தியும்
பாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தியும் கொண்டாடுகின்றனர், அவருடைய காலத்தைப் பற்றியும் சொல்கின்றனர்.
இன்ன சமயத்தில் தாயின் கர்ப்பத்தில் பிறவி ஏற்பட்டது என்று. சத்யுகத்தில் கண்டிப்பாக தாயின் கர்ப்பத்தில்
பிறவி எடுத்திருப்பார். கிருஷ்ண ஜெயந்தி சத்யுகத்தின் புதிய உலகத்தில் ஏற்படுகிறது, பிறகு மறுபிறவிகளில்
வரத் தொடங்கினார். பாபா வெறும் ஒருவருடைய விஷயத்தை மட்டும் கூறவில்லை. கிருஷ்ணபுரியே விஷ்ணுபுரி.
இராஜாக்கள் கீழே இறங்கும்போது இராஜ்யமும் இறங்குகிறது. அதில் ராஜா, ராணி, பிரஜைகள் என அனைவரும்
வந்து விடுகின்றனர். சந்திரவம்சத்தின் இராஜ்யம் இருக்கும்போது சூரிய வம்சத்தின் இராஜ்யம் கடந்து முடிந்து
விட்டது. மாற்றம் அடைந்து சந்திரவம்சத்தினருக்கு கிடைக்கிறது, பிறகு வைஸ்ய வம்சத்தவருக்கு கிடைக்கிறது.
நாம் பிராமண குலத்தவர், உச்சிக் குடுமி போன்றவர்கள் என இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள்.
குடுமிக்கு மேலே (உச்சியில்) இருப்பவர் தந்தை. நாம் முதலில் பிராமணராக இருந்தோம், பிறகு சூத்திரர்களாக
அதாவது பாதமாக (காலடி) ஆகினோம். பாதத்திலிருந்து ஒரேயடியாக குடுமியாக ஆகிறோம். முதலில் சிவபாபா,
பிறகு குடுமி. பாபா உங்களை பிராமணராக ஆக்கினார். இப்போது நீங்கள் சிவபாபாவை பாபா பாபா என
சொல்கிறீர்கள். இந்த கணக்கில் பேரன் பேத்திகளாகி விட்டீர்கள். நாம் அனைவரும் பிரம்மாவின் குழந்தைகள்
பிராமண பிராமணிகள் என நீங்கள் அறிவீர்கள். நாம் அனைவரும் ஒரு தந்தையின் குழந்தைகள். சகோதரன்
லி சகோதரியருடையே குற்றப் பார்வை (தீய நோக்கம்) இருக்க முடியாது. எவ்வளவு அளவற்ற குழந்தைகள்
அனைவரும் பாபா . . . என சொல்கின்றனர். ஆக இவ்வளவு பேர் பொய்யானவர்களாக ஆக முடியாது.
அனைவரின் தந்தை அதே நிராகார சிவன் மற்றும் சாகாரமானவர் பிரஜாபிதா பிரம்மா ஆவார், அவ்வளவுதான்.
ஒரு தந்தையின் குழந்தைகள் சகோதரன் லி சகோதரியாக உள்ளனர். நீங்கள் கண்டிப்பாக தூய்மையானவராக
ஆக வேண்டும். கணவன்லிமனைவி எப்படி தூய்மையாக ஆவது? அதற்காக இந்த யுக்தி நாடகத்தில்
பதிவாகியுள்ளது. இங்கே பிரம்மா குமார் லி குமாரிகள் மட்டுமே உள்ளனர். சூத்திர குமார் லி குமாரி யாரும்
இல்லை. அவர்கள் பதிதர்கள், சூத்திரர்கள், கீழான புத்தியுள்ளவர்கள், ஏனெனில் பாபாவை தெரியாது. ஓ
இறைத் தந்தையே என சொல்கின்றனர். நல்லது. அவருடைய தொழிலைப் பற்றி தெரியுமா? பெயர், ரூபம்,
தேசம், காலத்தைப் பற்றி கூறுங்கள். அவரது வாழ்க்கை வரலாறு பற்றிச் சொல்லுங்கள். தெரியாது என்றால்
நாஸ்திகர்களாகி விட்டனர். படைப்பவர் மற்றும் படைப்பின் முதல், இடை, கடைசியைப் பற்றி தெரியாது. அது
தூய்மையற்ற உலகமாகும். சத்யுகம் தூய்மையான உலகம், கலியுகம் தூய்மையற்ற உலகம் என சொல்லப்படுகிறது.
இந்த சமயம் முற்றிலும் தமோபிரதானமாக உள்ளது, இது கொடுமையான நரகம் எனப்படுகிறது. இதனுடைய
நிலைகளும் மாறுகின்றன. துவாபரத்திலிருந்து நரகமாக ஆகத் தொடங்குகிறது, பிறகு வளர்ச்சியடைகிறது.
பக்தியும் கூட முதலில் சதோபிரதானமாக கலப்படமற்றதாக இருந்தது, பிறகு சதோ, ரஜோ, தமோ ஆகிறது.
நீங்கள் பார்த்திருக்கலாம், மூன்று சாலைகள் சந்திக்குமிடத்தை முச்சந்தி என்பார்கள், அங்கே எண்ணெய்
முதலானதை ஊற்றி தலை வணங்குவார்கள். இப்போது சிவபாபாவின் பூஜை எங்கே, முச்சந்தி பூஜை எங்கே.
இது தமோபிரதான பக்தி என சொல்லப்படுகிறது. நீருக்கும் கூட பூஜை செய்கின்றனர், பதித பாவனி கங்கை
என நிறைய பாடுகின்றனர். இப்போது பதீத பாவனர் யார்? நீரோட்டமுள்ள கங்கை எப்படி பதித பாவனி ஆக
முடியும்? அது நீரல்லவா. தந்தை பதித பாவனர் ஆவார். சிவஜெயந்தியும் பாரதத்தில் கொண்டாடுகின்றனர்
எனும்போது கண்டிப்பாக பாரதத்தில்தான் வந்திருப்பார் லி தூய்மையற்றவர்களை தூய்மையான தேவதையாக
ஆக்குவதற்காக. பிரம்மாவின் தேகத்தில் வந்து மனிதர்களை தேவதைகளாக்குகிறார். இங்கே நீங்கள் வருவதே
தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவராக ஆவதற்கு. உங்களுக்கு எப்படி இரண்டு புஜங்கள் உள்ளனவோ
அது போல அவர்களுக்கும் இரண்டு புஜங்கள்தான் இருக்கும். 4லி8 புஜங்கள் உள்ள மனிதர்கள் யாரும் இருக்க
மாட்டார்கள். அதனை அலங்காரமாகக் காட்டி விட்டுள்ளனர். இல்லறத்தைக் காட்டுவதற்காக சதுர்புஜங்களைக்
காட்டியுள்ளனர். விஷ்ணுபுரி என்பது லட்சுமி நாராயணபுரிக்கு சொல்லப்படுகிறது. வைஷ்ணவர் எனும் வார்த்தை
விஷ்ணுவிலிருந்து வெளிப்பட்டதாகும். தேவதைகள் வைஷ்ணவர்களாக இருந்தனர். வல்லபாச்சாரி
வைஷ்ணவர்கள் சைவ உணவு உண்பவர்கள் ஆவர், அவர்கள் நிர்விகாரிகளாக ஏதும் இருப்பதில்லை.
அவர்களுடைய மாளிகைகள் பெரிது பெரிதாக இருக்கும். வைஷ்ணவர்கள் என்பதன் அர்த்தத்தையே புரிந்து
28.07.2016
(3/4)
கொள்வதில்லை. விஷ்ணுபுரியில் வசிப்பவர்கள் வைஷ்ணவர்கள் எனப்படுகின்றனர். தூய்மையானவர்கள்
வைஷ்ணவர்கள் எனப்படுவார்கள். ராதாலிகிருஷ்ணருக்கு தனி கோவிலும் லட்சுமிலிநாராயணருக்கு தனி கோவிலும்
கட்டி விட்டார்கள். அவர்களுக்குள் என்ன வித்தியாசம் உள்ளது என பாரதவாசிகளுக்கு தெரியவே தெரியாது.
ராதாலிகிருஷ்ணரே லட்சுமிலிநாராயணர் ஆகின்றனர், இது யாருக்கும் தெரியாது. அது குழந்தைப் பருவத்தின்
ரூபம். இது பெரியவர்களின் ரூபம். லட்சுமிலிநாராயணரின் சிறு வயதின் படங்கள் ஏதும் இல்லை.
லட்சுமிலிநாராயணரை சத்யுகத்திலும், ராதாலிகிருஷ்ணரை துவாபரத்திலும் எடுத்துச் சென்று விட்டனர். இப்போது
நீங்கள் படைப்பவராகிய தந்தை மற்றும் படைப்பின் முதல்லிஇடைலிகடைசி பற்றி தெரிந்து கொண்டு விட்டீர்கள்.
பாபா மரத்தின் (கல்ப விருக்ஷம்) இரகசியத்தையும் கூட புரிய வைக்கிறார். நாடகத்தின் இரகசியத்தையும் புரிய
வைக்கிறார். சங்கராச்சாரியார் கலியுகத்தில் வருகிறார் என மரத்தைப் பார்க்கும்போது புரிந்து கொள்வார்கள்.
சன்னியாசிகளின் இராஜ்யம் சத்யுகத்தில் இருக்க முடியாது. அனைவருமே பகவானின் குழந்தைகள் என்றால்
சொர்க்கவாசிகளாக இருக்க வேண்டும். ஆனால் அனைவருமே சொர்க்கவாசிகள் ஆவதில்லை தேவதைகள்
மட்டுமே ஆவார்கள். இப்போது நீங்கள் பிராமண வம்சத்தவர் ஆகியுள்ளீர்கள், பிறகு தேவதைகள் ஆகப்
போகிறீர்கள். கண்டிப்பாக தூய்மையடைய வேண்டும்.
சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவருமே பிரம்மாகுமார்லிகுமாரிகள் என நீங்கள் அறிவீர்கள். பாபா
நாங்கள் உங்களுடைய குழந்தைகள், பிராமணர்கள் என இரு பாலருமே சொல்கின்றனர். இவர்கள் பாப்தாதா
லி ஆதி தேவன் பிரம்மா மற்றும் சிவபாபா. நாம் பிரம்மா பாபா மற்றும் சிவபாபாவின் முன்னால் அமர்ந்திருக்கிறோம்
என நீங்கள் அறிவீர்கள். என்னை நினைவு செய்தீர்கள் என்றால் தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவராக
ஆகி விடுவீர்கள். நாம் சிவபாபாவிடமிருந்து ஆஸ்தியைப் பெறுகிறோம். சிவபாபா நம்முடைய தந்தையுமாக
உள்ளார், பதித பாவனராகவும் உள்ளார், குருவாகவும் உள்ளார். இப்போது இது சங்கமயுகம். தூய்மை
யற்றதிலிருந்து தூய்மை ஆவதற்கான சந்திப்பு. பதித பாவனரின் மூலமே தூய்மையடைகின்றனர். சங்கமயுகத்தில்
நதிகள் மற்றும் கடலின் சந்திப்பு ஏற்படுகிறது. நதிகளின் சந்திப்பு ஏற்படுவதில்லை. இப்போது ஞானக்கடல்
மற்றும் ஆத்மாக்களாகிய உங்களின் சந்திப்பு நடக்கிறது. நீங்கள் ஞானக்கடலிடம் வந்துள்ளீர்கள். ஞான
கங்கையராகிய நீங்கள் ஞானக் கடலிடமிருந்து வெளிப்பட்டுள்ளீர்கள். நீங்கள் ஞான ஸ்நானம் செய்வித்து
தூய்மையாக்குகிறீர்கள், யோகம் கற்றுத்தருகிறீர்கள். சாகரத்தின் (கடலின்) அறிமுகத்தை கொடுத்து நீங்கள்
இங்கே சந்திப்பதற்காக அழைத்து வருகிறீர்கள். இந்த சமயத்தில் நீங்கள் பிராமணர்கள் ஆகும்போது உங்களுக்கு
3 தந்தையர் இருக்கின்றனர். லௌகிக தந்தையும் இருக்கிறார், பிரஜாபிதாவும் இருக்கிறார், பிறகு சிவபாபாவும்
இருக்கிறார். பக்தி மார்க்கத்தில் இரு தந்தையர் இருப்பார்கள். சத்யுகத்தில் ஒரு தந்தை இருப்பார். இவை புரிந்து
கொள்ளக் கூடிய விசயங்களாகும். இப்போது உங்களுடைய ஆத்மா சொல்கிறது லி என்னுடையவர் ஒரு
சிவபாபா, வேறு யாருமில்லை. நண்பர்கள் உறவினர்கள் இருந்தாலும் என்னுடையவர் ஒரு சிவபாபா என்கின்றனர்.
அவருடைய நினைவின் மூலமே தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவராக ஆகவேண்டும். அவர் நம்முடைய
தந்தையும், ஆசிரியரும், சத்குருவுமாக இருக்கிறார் என ஆத்மாவுக்குத் தெரியும். நம்முடைய ஆத்மாவை
தந்தை அழைத்துச் செல்ல வந்துள்ளார். பிரம்மாவின் உடலில் பிரவேசமாகி தூய்மையாக்குகிறார். உங்களை
அழைத்துச் செல்வதற்காக தந்தை வந்துள்ளார். உங்கள் அனைவருக்கும் மரணத்தைக் கொடுப்பதற்காக
வந்துள்ளேன். நரகவாசியிலிருந்து சொர்க்கவாசியாவதற்கு கண்டிப்பாக இறந்து போக வேண்டியுள்ளது அல்லவா.
உங்களுடைய இந்த தேகத்தை அழிக்க வைத்து மற்ற ஆத்மாக்களை அழைத்துச் செல்வேன். உங்களுக்கு
வாழ்க்கை தானம் (உயிர் பிச்சை) கொடுக்கிறேன் என தந்தை சொல்கிறார். இது மகாபாரதச் சண்டை அல்லவா.
அனைவரின் வினாசமும் ஆகப் போகிறது. இல்லாவிட்டால் எப்படி அழைத்துச் செல்வேன். ஆத்மாக்களை
தூய்மையாக்கி வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன். அது சாந்தி தாமம் ஆகும். சத்யுகம் வரும்போது கலியுகம்
கண்டிப்பாக வினாசம் ஆகும். அதற்கான மகாபாரதச் சண்டை புகழ் வாய்ந்ததாகும். அது மூள்வதும் சங்கமயுகத்தில்,
அப்போது நீங்கள் மனிதரிலிருந்து தேவதை ஆகிறீர்கள். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு
தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. ஞானக் கடலில் நீராடி தன்னை தூய்மையாக்கிக் கொள்ள வேண்டும். நண்பர்கள்
உறவினர்களுடைன் இருந்தபடி, என்னுடையவர் ஒரு சிவபாபாவைத் தவிர வேறு யாரும்
இல்லை என்பது புத்தியில் இருக்க வேண்டும்.
28.07.2016
(4/4)
2. விஷ்ணுபுரிக்குச் செல்வதற்காக உறுதியான வைஷ்ணவர்களாக அதாவது தூய்மையானவராக
ஆக வேண்டும். நரகத்தில் வாழ்ந்து கொண்டே இறந்து புத்தியின் தொடர்பை சொர்க்கத்தில்
ஈடுபடுத்த வேண்டும்.
வரதானம் : எப்போதும் (ஈஸ்வரிய) மரியாதைகளின் கோட்டிற்குள் இருப்பதில்
கவனம் செலுத்தக் கூடிய மரியாதா புருஷோத்தமர் ஆகுக.
எந்த குழந்தைகள் தம்மைத் தாமே தந்தை அதாவது இராமனின் உண்மையான சீதை என புரிந்து
கொண்டு எப்போதும் மரியாதைகளின் கோட்டிற்கு உள்ளே இருக்கின்றனரோ அதாவது இந்த ஒரு கவனத்தை
வைக்கின்றனரோ அவர்கள் கவனமிக்கவராகி, தாமாகவே மகிழ்ச்சி மிக்கவராக இருப்பார்கள். ஆக,
அதிகாலையிலிருந்து இரவு வரையிலுமாக கிடைத்திருக்கும் மரியாதைகளின் ஞானத்தை புத்தியில் தெளிவாக
வைத்து தன்னை உண்மையான சீதை என புரிந்து கொண்டு மரியாதைகளின் கோட்டின் உள்ளே இருங்கள்,
அப்போது மரியாதா புருஷோத்தமர் என சொல்லப்படுவீர்கள்.
சுலோகன் : மிக அதிகமாக சேவையில் செல்லாதீர்கள், சேவை மற்றும்
சுய புருஷார்த்தத்தின் சமநிலையை வையுங்கள்.
(1/4)
29
29.07.2016, காலை முரளி ஓம்சாந்தி பாப்தாதா , மதுபன்
இனிமையான குழந்தைகளே! முழு உலகிலும் உங்களைப் போன்ற அதிஷ்டசாலிகள்
யாரும் கிடையாது, நீங்கள் இராஜரிμகள், இராஜ்யத்திற்காக இராஜயோகம்
கற்றுக் கொண்டிருக்கிறீர்கள்.
கேள்வி: நிராகார தந்தையிடம் எந்த சம்ஸ்காரம் இருக்கிறது, அதை குழந்தைகளாகிய நீங்களும்
சங்கமத்தில் தாரணை செய்கிறீர்கள்?
பதில்: நிராகார தந்தையிடம் ஞானத்தின் சன்ஸ்காரம் இருக்கிறது, அவர் உங்களுக்கு ஞானம் கூறி
தூய்மையற்றதிலிருந்து தூய்மையானவராக ஆக்கிவிடுகின்றார். அதனால் தான் அவர் ஞானக் கடல், பதீத
பாவனன் என்று கூறப்படுகின்றார். குழந்தைகளாகிய நீங்களும் இப்போது அந்த சன்ஸ்காரத்தை தாரணை
செய்கிறீர்கள். நமக்கு பகவான் கற்பிக்கின்றார், நாம் அவரிடம் கேட்கின்றோம், கூறுகின்றோம் என்று நீங்கள்
போதையுடன் கூறுகிறீர்கள்.
பாட்டு: கடைசியில் அந்த நாள் வந்து விட்டது ........
ஓம் சாந்தி. இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் இந்த பாட்டைக் கேட்டீர்கள். இந்த
மகிமை யாருடையது? ஒரு தந்தையினுடையது. சிவாய நன்ஹ, உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான் அல்லவா!
அவர் நமது தந்தை என்பதை குழந்தைகள் அறிவீர்கள். நாம் அனைவரும் தந்தை என்று கிடையாது. உலகம்
முழுவதும் சகோதரத்துவம் என்று பாடப்பட்டிருக்கிறது. சந்நியாசிகள் அல்லது வித்வான்கள் கூற்றுப் படி
ஈஸ்வரன் சர்வவியாபி எனில் அது அனைவருமே தந்தை என்றாகிவிடுகிறது. சகோதரர்கள் ஆகின்ற போது
தந்தை என்பது நிரூபணம் ஆகிறது, அவரிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது. அனைவரும் தந்தை எனில் பிறகு
ஆஸ்திக்கான விசயமே கிடையாது. நம் அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தை ஒருவர் தான் என்பதை
குழந்தைகள் அறிவீர்கள், அவர் தான் உலக (ஜகத்) பிதா என்று கூறப்படுகின்றார். உலகில் யார் இருக்கின்றனர்?
அனைவரும் சகோதரர்கள், ஆத்மாக்கள். அனைவருக்கும் இறை தந்தையானவர் ஒரே ஒருவர் தான். அந்த
தந்தையைத் தான் அனைவரும் வழிபடுகின்றனர். ஒரே ஒருவருக்குத் தான் வழிபாடு அல்லது பூஜை
நடைபெற வேண்டும். அது சதோபிரதான பூஜையாகும். ஞானம், பக்தி மற்றும் வைராக்கியம் என்பதும் புரிய
வைக்கப்பட்டிருக்கிறது. சத்கதிக்காக தந்தை ஞானம் கொடுக்கின்றார். ஜீவன்முக்திதாமத்திற்குத் தான் சத்கதி
என்று கூறப்படுகிறது. இதை ஆத்மா புத்தியில் தாரணை செய்ய வேண்டும். நமது வீடு சாந்திதாமம் ஆகும்.
அது முக்திதாமம், நிர்வாணதாமம் என்றும் கூறப்படுகிறது. அனைத்தையும் விட மிக நல்ல பெயர் லி சாந்திதாமம்
ஆகும். இங்கு கர்மேந்திரியங்கள் இருக்கின்ற காரணத்தினால் ஆத்மா பேச்சுக்களில் (டாக்கி) வந்து விட்டது,
பேச வேண்டியிருக்கிறது. சூட்சுமவதனத்தில் சைகைகள் இருக்கும். சைகைகளினால் பேசிக் கொள்வர், சப்தங்கள்
இருக்காது. மூன்று லோகங்களையும் நீங்கள் அறிந்து கொண்டீர்கள். மூலவதனம், சூட்சுமவதனம், ஸ்தூலவதனம்,
புத்தியில் இது நன்றாக அமர்ந்திருக்கிறது. இந்த சிருஷ்டிச் சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது என்று மனித
சிருஷ்டிக்காகத் தான் பாடப்பட்டிருக்கிறது. இது தான் உலக சரித்திர, பூகோளம் என்று கூறப்படுகிறது. இதை
மனிதர்கள் தான் அறிந்து கொள்வார்கள் அல்லவா! உலக சரித்திர, பூகோளத்தை கூறுகின்றனர். உயர்ந்ததிலும்
உயர்ந்தவர் தந்தை ஆவார். உலக சரித்திர, பூகோளம் எவ்வாறு திரும்பவும் நடைபெறுகிறது என்பதை அவர்
மட்டுமே அறிவார். இந்த சக்கரத்தை அறிந்து கொள்வதன் மூலம் நீங்கள் சக்கரவர்த்தி ராஜாவாக ஆகிறீர்கள்.
தேவதைகள் சம்பூர்ண நிர்விகாரிகள் என்று பாடவும் செய்கின்றனர். லெட்சுமி நாராயணனின் சிலை இருக்கிறது
அல்லவா! அவர்கள் சம்பூர்ன நிர்விகாரி என்றும் தன்னை சம்பூர்ண விகாரி என்றும் கூறிக் கொள்கின்றனர்.
சத்யுகத்தில் சம்பூர்ண நிர்விகாரிகள் அதாவது சம்பூர்ண பாவனமாக இருந்தனர். கலியுகத்தில் சம்பூர்ண விகாரிகள்,
முற்றிலும் தூய்மை இழந்தவர்கள். பாரதத்திற்கான விசயமாகும். இதை தந்தை வந்து தான் புத்தியில்
அமர்த்துகின்றார், வேறு யாரும் அறியவில்லை. அவர்கள் சத்யுகத்திற்கு நீண்ட காலம் கொடுத்து விட்டனர்.
இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு சத்யுகம் இருந்தது என்று நினைக்கின்றனர். ஆக யாருடைய புத்தியிலும்
இந்த விசயம் வருவதே கிடையாது.
இப்போது நாம் சம்பூர்ண விகாரியிலிருந்து சம்பூர்ண நிர்விகாரிகளாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பதை
இப்போது குழந்தைகள் அறிவீர்கள். சம்பூர்ண பதீதத்திலிருந்து சம்பூர்ண பாவனமாக ஆக வேண்டும். ஆத்மாவில்
தான் கறை படிந்திருக்கிறது, தங்க யுகத்திலிருந்து இப்போது இரும்பு யுகத்திற்கு வந்து விட்டது என்பதை
தந்தை புரிய வைக்கின்றார். இவ்வாறு ஆத்மாவைத் தான் ஒப்பிடப்படுகிறது. இதை நல்ல முறையில் புரிந்து
கொள்ள வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள், உங்களைப் போன்ற அதிர்ஷ்டசாலி
கள் வேறு யாரும் கிடையாது. இப்போது நீங்கள் இராஜ யோகத்தில் அமர்ந்திருக்கிறீர்கள், நீங்கள் இராஜ
(2/4)
29.07.2016
ரிμயாக இருக்கிறீர்கள். இராஜ்யத்திற்கென ஏதாவது படிப்பு இருக்கிறதா என்ன? வக்கீலாக ஆக்குவார்கள்,
ஆனால் உலகிற்கு மகாராஜாவாக யாரும் யார் ஆக்குவார்கள்? தந்தையைத் தவிர வேறு யாரும் ஆக்க
முடியாது. இங்கு மகாராஜாவாக கிடையாது. சத்யுகத்திற்கு அவசியம் தேவை. அதற்காக அவசியம் வர
வேண்டியிருக்கிறது. எப்போது பக்தி முடிவடைகிறதோ அப்போது நான் வருகிறேன் என்று தந்தை கூறுகின்றார்.
இப்போது பக்தி முடிவடைந்து விட்டது, இதில் வேறு எந்த சந்தேகமும் கிடையாது. எனக்கு தந்தை அமர்ந்து
கற்பிக்கின்றார் என்ற போதை இருக்க வேண்டும். ஆத்மாக்களாகிய நமக்கு நிராகார தந்தை பரம்பிதா பரமாத்மா
சிவன் கற்பிக்கின்றார். சிவனை யாரும் அறியவில்லை. இப்போது பாபா மீண்டும் சொர்க்கத்தின் இராஜ்யத்தை
ஸ்தாபனை செய்து கொண்டிருக்கின்றார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நாம் அவரை மகாராஜா
ஸ்ரீநாராயணன் என்றும், மகாராணி ஸ்ரீலெட்சுமி என்றும் கூறுகிறோம். பக்தி மார்க்கத்தில் சத்திய நாராயணனின்
கதை கூறுகின்றனர். அமரக் கதை மற்றும் மூன்றாம் கண் உருவாக்கும் கதை. தந்தை மூன்றாவது கண்
கொடுக்கின்றார். நரனிலிருந்து நாராயணன் ஆகக் கூடிய கதை கூறப்படுகிறது. எந்த விசயம் கடந்து முடிந்ததோ
அதுவே பிறகு பக்தி மார்க்கத்தில் காரியத்திற்குப் பயன்படுகிறது. பாபா நம்மை சொர்க்கத்திற்கு எஜமானர்களாக
ஆக்குகின்றார் என்பதை இப்போது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். நாம் உரிமையுள்ளவர்கள்.
பகவான் சொர்க்கத்தைப் படைப்பவர் அல்லவா! நாம் பகவானின் குழந்தைகள் எனில் நாம் ஏன் சொர்க்கத்தில்
இல்லாமல் இந்த கலியுகத்தில் இருக்கிறோம்? பரம்பிதா பரமாத்மா புது உலகை படைக்கின்றார். பகவான்
பழைய உலகை படைப்பது கிடையாது. முதலில் புது உலகை படைக்கின்றார். அதன் பிறகு பழையதை
அழித்து விடுவார். நாம் சத்யுகத்திற்கான இராஜ்யத்தை அடைந்து கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள்
அறிவீர்கள். சத்யுகத்தில் யார் இருப்பார்கள்? இந்த லெட்சுமி நாராயணனின் இராஜ்யம் இருக்கும், மற்ற அரசர்களும்
இருப்பார்கள் அல்லவா! அதன் அடையாளம் தான் வெற்றி மாலை ஆகும். இப்போது நாம் வெற்றி மாலையில்
வருவதற்கான முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் என்பதை குழந்தைகள் அறிவீர்கள். மாலை, இதன் பொருளை
உலகில் யாரும் அறியவில்லை, இது ஏன் பூஜிக்கப்படுகிறது? மேலே மலராக இருப்பது யார்? மாலை உருட்டிய
பிறகு மலரை வணங்குகின்றனர், பிறகு மீண்டும் மாலை உருட்டுவர். வெளியில் மனம் சென்று விடக் கூடாது
என்பதற்காக அமர்ந்து மாலை உருட்டுகின்றனர். உள்ளுக்குள் ராம், ராம் என்று உச்சரித்துக் கொண்டே
இருப்பர், அதிக பயிற்சி செய்கின்றனர். இவை அனைத்தும் பக்தி மார்க்கத்தின் விசயமாகும். அதிக பக்தி
செய்பவர்கள் எந்த விகர்மமும் செய்யமாட்டார்கள். இவர் சத்தியமானவர் என்று அதிக பக்தி செய்பவர்களை
நினைப்பர். கோயிலில் மாலை வைத்திருப்பர். மாலை உருட்டிக் கொண்டும் வாயில் ராம், ராம் என்று கூறிக்
கொண்டும் இருப்பர். பக்தியில் பாவம் இருக்காது என்று பலர் நினைக்கின்றனர். தீவிர பக்தியின் மூலம்
மனிதர்கள் முக்தி அடைந்து விடுவர் என்று கூறுகின்றனர். ஆனால் எதுவும் ஏற்படுவது கிடையாது. இது ஒரு
நாடகமாகும். இதில் சதோ பிரதானம், சதோ, ரஜோ, தமோவில் அனைவரும் வந்தே ஆக வேண்டும். திரும்பி
ஒருவரும் சென்று விட முடியாது. எவ்வாறு மேலே இடம் காலியாகி விடுமோ அதே போன்று இங்கும் அதிக
இடம் காலியாகி விடும். டில்லி மற்றும் அதன் அருகாமையில் இனிமையான நீரோடும் நதிக்கரையில் இராஜ்யம்
இருக்கும். கடற்கரையில் இருக்காது. இந்த மும்பை இருக்காது. அது முன்பு மீன் பிடிக்கும் இடமாக இருந்தது.
மீன் பிடிப்பவர்கள் அங்கு வாழ்ந்தனர். இப்போது சமுத்திரத்தை அதிகம் வற்ற வைத்து விட்டனர். மீண்டும்
மீன் பிடிக்கும் இடமாக ஆகிவிடும். சத்யுகத்தில் மும்பை இருக்காது. அங்கு மலைகளும் இருக்காது. எங்கும்
செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. இங்கு மனிதர்கள் களைப்படைவதால் ஓய்வெடுப்பதற்குச் செல்கின்றனர்.
சத்யுகத்தில் களைப்பு ஏற்படுத்தும் எந்த வகையான கஷ்டமும் இருக்காது. நீங்கள் சொர்க்கவாசிகளாக
ஆகிவிடுவீர்கள். துளியளவும் கஷ்டம் இருக்காது. ஆக குழந்தைகள் இப்போது தந்தையின் ஸ்ரீமத் படி நடக்க
வேண்டும்,
தந்தை கூறுகின்றார் லி இனிமையான செல்லக் குழந்தைகளே! சரீர நிர்வாகத்திற்காக தொழில் போன்றவைகள்
செய்ய வேண்டும். பள்ளியில் மாணவர்கள் படித்து விட்டு பிறகு வீட்டிற்குச் சென்றும் படிப்பார்கள். வீட்டு
வேலைகளும் செய்வார்கள். இங்கும் அவ்வாறே இருக்கிறது. இந்த படிப்பில் உங்களுக்கு எந்த கஷ்டமும்
கிடையாது. அந்த படிப்பில் உங்களுக்கு எத்தனையோ பாடங்கள் இருக்கின்றன! இங்கு ஒரே ஒரு படிப்பு
மற்றும் ஒரே ஒரு கருத்து லி மன்மனாபவ. இதன் மூலம் உங்களது பாவங்கள் அழிந்து விடும். பகவானின்
மகாவாக்கியம் அல்லவா! கீதையை பகவான் துவாபர யுகத்தில் கூறியதாக அவர்கள் நினைக்கின்றனர். ஆனால்
துவாபர யுகத்தில் கூறி என்ன செய்வார்? கிருஷ்ணரின் சித்திரத்தில் மிக நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. இந்த
யுத்தம் ஒரு காரண கருவியாகப் பயன்படுகிறது. அனைவரும் இறந்து விடுவார்கள், அப்போது தான் முக்தி,
ஜீவன் முக்திக்கு திரும்பிச் செல்வார்கள். அதுவும் யுத்தத்தில் இறந்து விடமாட்டார்கள். பல வகையான
சீற்றங்கள் ஏற்படும். குழந்தைகளுக்கு எந்த வகையான துக்கமும் ஏற்படக் கூடாது. மனிதர்களுக்கு இதயம்
நின்று விட்டால் அதில் எந்த துக்கமும் ஏற்படுவது கிடையாது, இறப்பு என்றால் இவ்வாறு இருக்க வேண்டும்.
அமர்ந்திருக்கும் போதே இதயம் நின்று விடுகிறது, இறந்து விடுகின்றனர். மருத்துவர் வருவதற்குள் ஆத்மா
(3/4)
29.07.2016
வெளியேறி விடுகிறது. இப்போது அனைவருக்கும் மரணம் ஏற்பட வேண்டும். கடைசியில் இதயக் கோளாறும்
இருக்காது, மருத்துவர்களும் இருக்கமாட்டார்கள். இறுதிச் சடங்கு செய்பவர்களும் இருக்க மாட்டார்கள். எதுவும்
இருக்காது. அனைவரின் உயிரும் உடலிலிருந்து போய் விடும். அடை மழை பெய்யும். மரணம் நிகழ்வதற்கு
தாமதம் எற்படாது. மனிதர்கள் உடனேயே இறந்து விடுமளவிற்கு அணுகுண்டுகளை தயாரிப்பதற்கான முயற்சி
செய்து கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட அணுகுண்டுகளை தயாரித்துக் கொண்டிருக்கின்றனர். அணுகுண்டுகள்
தயாரிப்பதிலும் முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கின்றனர். இது நாடகத்தில் பதிவாகியிருக்கிறது. நாடகம்
ஏற்கெனவே உருவாக்கப்பட்ட விளையாட்டாகும். கல்ப கல்பமாக விநாசம் ஏற்படுகிறது. சத்யுகத்தில் உங்களிடம்
இந்த ஞானம் இருக்காது. தந்தை வந்து தான் ஞானம் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஸ்தாபனை ஆகிவிட்டால்
பிறகு ஞானத்தின் அவசியம் இருக்காது. பிறகு எப்போது இராவண இராஜ்யம் ஆரம்பமாகிறதோ அப்போது
பக்தி ஆரம்பமாகி விடுகிறது. இப்போது பக்தி முடிவடைகிறது, இப்போது நீங்கள் யோக பலத்தின் மூலம்
தூய்மையானவர்களாக ஆக வேண்டும். தூய்மை ஆவதன் மூலம் தான் நீங்கள் சுகமதாமம், சாந்திதாமத்திற்குச்
செல்ல முடியும். சார்ட் வைக்க வேண்டும். நாம் தந்தையை நினைவு செய்து தமோபிரதானத்திலிருந்து சதோ
பிரதானமாக இங்கேயே ஆக வேண்டும் என்பதை புரிந்து கொண்டீர்கள். இவ்வாறு எந்த சாஸ்திரங்களிலும்
எழுதப்படவில்லை. கடைசியில் அந்த நாள் வந்து விட்டது ....... என்ற பாடலையும் கேட்டீர்கள். பாரதவாசிகள்
இராஜாவிற்கெல்லாம் இராஜவாக ஆகின்றனர். இராஜாவிற்கெல்லாம் இராஜா என்றால் மகாராஜா ஆவதாகும்.
பிறகு திரேதாவில் இராஜா, இராணி ஆகின்றனர். பிறகு பூஜ்ய நிலையிலிருந்த மகாராஜா, மகாராணி, துவாபார
யுகத்தில் விகார மார்க்கத்தில் வந்து பூஜாரிகளாக ஆகிவிடுகின்றனர். நீங்களே பூஜிக்கத் தகுந்த நிலையிலிருந்து
பூஜாரிகளாக ஆகிவிடுகிறீர்கள். நான் பூஜாரியாக ஆவது கிடையாது என்று தந்தை கூறுகின்றார். தேவதைகள்
பூஜைக்குரியவர்களாக இருப்பர், நான் ஆவது கிடையாது. பூஜாரியாக ஆவதும் கிடையாது. பாரதவாசிகள்
தேவி தேவதைகளின் கோயில் கட்டி அவர்களை பூஜிக்கின்றனர். முதலில் பூஜைக்குரியவர்களாக இருந்த
லெட்மி நாராயணன், பிறகு பக்தி மார்க்கத்தில் அவர்களே சிவபாபாவின் பூஜாரிகளாக ஆகின்றனர். எந்த
சிவபாபா மகாராஜா, மகாராணியாக ஆக்கினாரோ, அவருக்கு கோயில் கட்டி பூஜை செய்கின்றனர். விகாரிகளாக
உடனேயே யாரும் ஆவது கிடையாது. சிறிது சிறிதாக ஆகின்றனர். அடையாளமாக தேவதைகளை விகார
மார்க்கத்தில் இருப்பதாக காண்பிக்கின்றனர். யார் பூஜைக்குரிய லெட்சுமி நாராயணனாக இருந்தார்களோ, அவர்களே
பிறகு பூஜாரிகளாக ஆகிவிடுகின்றனர். முதன் முதலில் சிவன் கோயில் கட்டினர். அந்த நேரத்தில் பூஜைக்காக
வைரத்தால் ஆன லிங்கம் உருவாக்கினர். பரமாத்மா சிறிய பிந்துவாக இருக்கின்றார் என்பது யாருக்கும்
தெரியாது. பெரிய லிங்கம் கிடையாது என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொண்டீர்கள். அதிக கோயில்கள்
கட்டுவார்கள். இராஜாவைப் பார்த்து பிரஜைகளும் அவ்வாறு செய்வர். முதன் முதலில் சிவபாபாவிற்கு பூஜை
நடைபெறுகிறது. அது தான் கலப்படமற்ற, சதோபிரதான பூஜை என்று கூறப்படுகிறது. பிறகு சதோ, ரஜோ,
தமோவாக ஆகிறது. நீங்கள் ரஜோ, தமோவில் வருகின்ற போது இந்து என்று பெயர் வைத்துக் கொண்டீர்கள்.
உண்மையில் தேவி தேவதைகளாக இருந்தீதர்கள். நீங்கள் உண்மையில் தேவி தேவதா தர்மத்தினர்கள் என்று
தந்தை கூறுகின்றார். ஆனால் நீங்கள் மிகவும் தூய்மையற்றவர்களாக ஆகிவிட்டீர்கள். ஆகையால் தன்னை
தேவதை என்று கூறிக் கொள்ள முடிவது கிடையாது, ஏனெனில் அசுத்தமானவர்களாக இருக்கிறீர்கள். இந்து
என்ற பெயரும் வெகு காலம் கழித்து வைத்துக் கொண்டீர்கள்.
நாம் தான் பூஜைக்குரியவர்களாக இருந்தோம், இப்போது சங்கமயுகத்தில் பூஜைக்குரியவர்களாகவும்
கிடையாது, பூஜாரிகளாகவும் கிடையாது என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொண்டீர்கள். நீங்கள் என்ன
செய்து கொண்டிருக்கிறீர்கள்? ஸ்ரீமத் மூலம் பூஜைக்குரியவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள், மற்றவர்களையும்
ஆக்கிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் பிராமணர்கள், உங்களது ஆத்மா தூய்மையாக ஆகிக் கொண்டிருக்கிறது.
முழு தூய்மையாக ஆகின்ற போது பிறகு இந்த பழைய ஆடையை நீக்க வேண்டியிருக்கும். முற்றிலும் எளிது
என்று தந்தை கூறுகின்றார். வயோதிக தாய்மார்களுக்கு தாரணை ஏற்படுவது கிடையாது. நான் ஆத்மா
என்பதை புரிந்து கொண்டீர்கள், ஆத்மாவில் தான் நல்லது அல்லது கெட்ட சம்ஸ்காரம் இருக்கிறது என்று
தந்தை கூறுகின்றார். ஆத்மா என்ன காரியம் செய்கிறதோ அதை அடுத்த பிறவியில் அனுபவிக்க வேண்டி
யிருக்கும். தந்தையும் ஆத்மாக்களிடம் உரையாடல் செய்கின்றார். தந்தை கூறுகின்றார் லி ஹே குழந்தைகளே!
ஆத்ம அபிமானிகளாக ஆகுங்கள். நிராகார சிவபாபா நிராகார ஆத்மாக்களுக்குக் கற்பிக்கின்றார். நிராகார
பாபாவிடம் ஞான சம்ஸ்காரம் இருக்கிறது. அவருக்கு சரீரம் கிடையவே கிடையாது. ஆக அவர் ஞானக்
கடலாக, பதீத பாவனாக இருக்கின்றார். அவரிடத்தில் அனைத்து குணங்களும் உள்ளன. நான் வந்து குழந்தை
களாகிய உங்களை தூய்மை ஆக்குகிறேன் என்று தந்தை கூறுகின்றார். எவ்வளவு எளிய யுக்தியாகும்! ஒரே
ஒரு வார்த்தை தான் லி மன்மனாபவ, என் ஒருவனை நினைவு செய்யுங்கள். நினைவின் மூலம் தான்
உங்களது விகர்மங்கள் அழிந்து போகும். இப்போது நாம் பிராமணர்களாக இருக்கிறோம், பிறகு சூரியவம்சி,
சந்திரவம்சி, வைஷ்யா, சூத்ரர்களாக ஆவோம் என்பதையும் அறிவீர்கள். நாம் தான் இந்த 84 பிறவிச்
(4/4)
29.07.2016
சக்கரத்தில் வருவோம். மேலிருந்து கீழே இறங்குவோம், பிறகு பாபா வருவார். இந்த சிருஷ்டிச் சக்கரம் சுற்றிக்
கொண்டே இருக்கும். இந்த சிருஷ்டி பழையதாக ஆகின்ற போது புதிதாக்குவதற்காக பாபா வருவார். இது
புத்தியில் பதிகிறது அல்லவா! இந்த சக்கரம் புத்தியில் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இப்போது நீங்கள்
சுயதரிசன சக்கரதாரிகளாக ஆகிறீர்கள். இதன் மூலம் நீங்கள் சென்று சக்கரவர்த்தி இராஜவாக ஆவீர்கள்.
நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய்
தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) ஸ்ரீமத்லிபடி நடந்து பூஜைக்குரியவர்களாக ஆக வேண்டும். ஆத்மாவில் பதிந்திருக்கும் கெட்ட
சம்ஸ்காரத்தை ஞான, யோகத்தின் மூலம் அழித்து விட வேண்டும். சம்பூர்ண நிர்விகாரிகளாக
ஆக வேண்டும்.
2) சரீர நிர்வாகத்திற்காக காரியங்கள் செய்தாலும் படிப்பு படிக்க வேண்டும் மற்றும் கற்றுக்
கொடுக்கவும் வேண்டும். யோக பலத்தின் மூலம் தூய்மையானவராகி இராஜ்ய பதவி அடைய
வேண்டும்.
வரதானம்: புத்தி என்ற கால் மூலம் இந்த ஐந்து தத்துவங்களின் கவர்ச்சிகளிலிருந்து
விலகியிருக்கக் கூடிய ஃபரிஸ்தா சொரூபம் ஆகுக.
ஃபரிஸ்தாவை எப்போதும் பிராகாசமான (ஒளி) உடலுடன் தான் காண்பிப்பர். பிரகாசமான உடலுடையவர்கள்
இந்த தேகம் என்ற நினைவிலிருந்தும் விலகியிருப்பார்கள். அவர்களது புத்தி என்ற கால் இந்த ஐந்து
தத்துவங்களின் கவர்ச்சிகளிலிருந்து விலகி அதாவது உயரத்தில் இருப்பர். இப்படிப்பட்ட பரிஸ்தாக்களை எந்த
ஒரு மாயையோ அல்லது மாயாவியோ தொடவும் முடியாது. ஆனால் இவ்வாறு ஆக வேண்டுமெனில்
எதற்கும் அடிமையாக இருக்கக் கூடாது. சரீரத்திற்கும் அதிகாரியாக இருந்து நடந்து கொள்ள வேண்டும்,
மாயைக்கும் அதிகாரியாக ஆக வேண்டும், லௌகீகம் அல்லது அலௌகீக சம்மந்தங்களுக்கும் அடிமையாக
ஆகிவிடக் கூடாது.
சுலோகன்: உடலை பார்க்கும் பழக்கம் இருந்தால்
ஒளி உடலைப் பாருங்கள், ஒளி ரூபத்தில் நிலைத்திருங்கள்.
(1/4)
30
30.07.2016 காலை வகுப்பு ஓம்சாந்தி பாப்தாதா , மதுபன்
இனிமையான குழந்தைகளே! உங்களுடைய கெட்டுப் போனதை சீர்திருத்தும் அதாவது
அதிர்ஷடசாலியாக ஆக்கக் கூடியவர் ஒரு பாபா தான், அவர் தான் உங்களுக்கு ஞானம்
கொடுத்து அதிர்ஷடசாலியாக ஆக்குகின்றார்.
கேள்வி:லி குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஆன்மீக பட்டியில் அமருவதற்கான ஒரு விதி என்ன?
பதில்:லி ஆன்மீகப் பட்டி என்றால் நினைவு யாத்திரையில் அமரக் கூடியவர்களின் எண்ணம் ஒரு போதும்
இங்கும்லி அங்கும் செல்லக் கூடாது, ஒரு பாபாவை நினைவு செய்ய வேண்டும். உங்கள் புத்தி இங்கும்லிஅங்கும்
செல்கின்றது என்றால் துôங்கி விழுவீர்கள், கொட்டாவி வரும், இதனால் வாயுமண்டலம் கெட்டு விடும்.
தனக்குத் தானே நஷ்டத்தினை உண்டாக்குகின்றீர்கள்.
பாட்டு:லி உள்ளத்தின் உதவியாளனை துண்டித்து விட வேண்டாம்
ஓம் சாந்தி! இனிமையிலும்லிஇனிமையான ஆன்மீகக் குழந்தைகள் பாட்டின் இரண்டு வார்த்தைகளைக்
கேட்டீர்கள். குழந்தைகளுக்கு எச்சரிக்கை கொடுக்கின்றார். இந்த நேரத்தில் கூட பிராமணர்களான உங்களைத்
தவிர அனைவரின் அதிர்ஷ்டம் கெட்டு விட்டது. நீங்களும் கூட இப்பொழுது கெட்டதை சீர்திருத்திக் கொண்டு
இருக்கின்றீர்கள். பாபாவைத் தான் அதிர்ஷ்டத்தை உருவாக்கக் கூடியவர் என்று சொல்லப்படுகின்றது. நீங்கள்
சிவபாபா எவ்வளவு இனிமையானவர் என்று அறிவீர்கள். பாபா என்ற வார்த்தையே மிகவும் இனிமையானது.
பாபாவிடமிருந்து தான் அனைத்து ஆத்மாக்களுக்கும் ஆஸ்தி கிடைக்கின்றது. ஆன்மீகத் தந்தையால் ஆண்
குழந்தைகளுக்கு ஆஸ்தி கிடைக்கின்றது, பெண் குழந்தைகளுக்கு இல்லை. ஆனால் இங்கே ஆண் குழந்தை
களும், பெண் குழந்தைகளும் ஆஸ்திக்கு அதிகாரி ஆகின்றார்கள். பாபா தன்னுடைய குழந்தைகளுக்கு அதாவது
ஆத்மாக்களுக்கு கற்பிக்கின்றார். ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்கள் என்பதை புரிந்து கொண்டீர்கள்.
உண்மையில் இதுதான் சகோதரத்துவம் என்று சொல்லப்படுகின்றது ! ஒரு பகவானின் குழந்தைகள் பின்பு ஏன்
இவ்வளவு சண்டை போடுகின்றார்கள். அனைவரும் தங்களுக்குள் சண்டை போடுகின்றார்கள். அநேக தர்மம்,
அநேக வழி மேலும் முக்கியமான விஷயம் இராவண இராஜ்யத்தில் சண்டை நடக்கின்றது, ஏனென்றால்
விகாரம் அனைவரிடமும் நுழைந்துள்ளது. காம விகாரத்திற்காக எவ்வளவு சண்டை போடுகின்றார்கள் ! அப்படி
அநேக இராஜாக்கள் சண்டை போட்டுள்ளார்கள். காமத்திற்காக அதிக சண்டை போட்டு உள்ளார்கள். எவ்வளவு
சந்தோஷம் அடைகின்றார்கள். யாரிடமாவது மனதைப் பறி கொடுத்து விட்டால் கொலையும் கூட செய்கின்றார்கள்.
காமம் மஹா எதிரி. கோபமுள்ளவரை கோபக்காரன் என்று தான் சொல்கின்றோம். பேராசை உள்ளவரை
பேராசைக்காரன் என்று சொல்கின்றோம். ஆனால் காமம் உள்ளவருக்கு மட்டும் அநேக பெயர் வைத்துள்ளார்கள்.
ஆகையால் தான் அமிர்த்தை விட்டு விஷத்தை ஏன் குடிக்கின்றீர்கள் என்று சொல்கின்றார்கள். சாஸ்த்திரத்தில்
அமிர்தம் என்ற பெயரை வைத்துள்ளார்கள். கடலைக் கடையும் போது அமிர்தம் வெளிப்பட்டது என்று
சொல்கின்றார்கள். இலட்சுமியிடம் தான் கலசம் கொடுத்துள்ளார்கள். எவ்வளவு கதைகள் உள்ளன. இதில் கூட
பெரியதிலும் பெரிய விஷயம். சர்வவியாபி என்ற விஷயம், கீதையின் பகவான் யார் என்ற விஷயம், மேலும்
பதீதலிபாவனர் யார்? கண்காட்சியில் இந்த விஷயங்களின் படங்களை வைத்து புரிய வைக்க வேண்டும். பதீதலி
பாவனன், ஞானக்கடல் மேலும் அதிலிருந்து வெளிப்பட்ட ஞான கங்கைகள் அதாவது தண்ணீரின் நதியா
அல்லது கடலா? எவ்வளவு நல்லலிநல்ல விஷயங்கள் புரிய வைக்கப்படுகின்றது ! .பாபா உட்கார்ந்து புரிய
வைக்கின்றார்லி இனிமையிலும், இனிமையான குழந்தைகளே! உங்களை யார் பாவனம் ஆக்குகின்றார்? கெட்டுப்
போனதை சீர்திருத்தக் கூடியவர் யார்? இந்த பதீதலிபாவனன் எப்பொழுது வருகின்றார்? இந்த விளையாட்டு
எப்படி உருவாகி உள்ளது? யாரும் அறிவதில்லை. பாபாவுக்குத் தான் ஞானக்கடல், கருணைக்கடல், அமைதிக்கடல்
என்று சொல்லப்படுகின்றது. கெட்டுப் போனதை சீர்திருத்தக் கூடியவர் ஒருவர்தான் என்று சொல்லப்படுகின்றது.
இராவணன் தான் நம்மைக் கெடுக்கின்றார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. இந்த விளையாட்டே
வெற்றி, தோல்வியானது. இராவணனைக் கூட நீங்கள் அறிவீர்கள் அவரை ஒவ்வொரு வருடமும் எரிக்கின்றார்கள்.
இவர் பாரதத்தின் எதிரி. பாரதத்தில் தான் ஒவ்வொரு வருடமும் எரிக்கின்றார்கள். அவர்களிடம் போய் நீங்கள்
எப்பொழுதிலிருந்து இதை எரிக்கின்றீர்கள் என்று கேளுங்கள். அவர்கள் காலம்லிகாலமாக, உலகப் படைப்பின்
ஆரம்பத்திலிருந்து செய்கின்றோம் என்று சொல்வார்கள். சாஸ்த்திரத்தில் என்ன எல்லாம் படித்தோமோ அது
தான் உண்மை என்று சொல்லிக் கொண்டு வந்தோம். ஈஸ்வரனை சர்வ வியாபி என்று சொல்வது முக்கியமான
விஷயமாகும். பாபா இது யாருடைய தவறு என்று சொல்வதில்லை. இது நாடகத்தில் பதிவாகியுள்ளது. வெற்றிலி
தோல்வியின் விளையாட்டு. மாயாவிடம் தோல்வியே தோல்வி, மாயாவிடம் வெற்றியே வெற்றி ! மாயாவிடம்
எப்படி தோல்வி அடைகின்றீர்கள் என்பதைப் புரிய வைக்கின்றார். முழு அரைகல்பம் இராவண இராஜ்யம்
நடக்கின்றது. ஒரு வினாடி கூட வித்தியாசம் ஏற்படாது. இராம இராஜ்த்தின் ஸ்தாபனை, இராவண இராஜ்யத்தின்
வினாசம் நடக்கின்றது. தன்னுடைய நேரப்படி சரியாக நடக்கின்றது. சத்தியயுகத்தில் இலங்கை இருப்பதில்லை.
(2/4)
30.07.2016
அது புத்த தர்மத்தின் கண்டம். எழுத படிக்கத் தெரிந்தவர்கள் இலண்டன் இந்தப் பக்கம் உள்ளது, அமெரிக்கர்
இந்தப்பக்கம் உள்ளது என்று தெரிந்துள்ளார்கள். படிப்பால் புத்தியின் பூட்டு திறக்கப்டுகின்றது, ஒளி கிடைக்கின்றது.
இதற்கு ஞானத்தின் மூன்றாவது கண் என்று சொல்லப்படுகின்றது. வயதானவர்கள் நிறைய விஷயங்களைப்
புரிந்து கொள்ள முடியாது. இவர்கள் ஒரே ஒரு விஷயம் தாரணை செய்ய வேண்டும் அது தான் கடைசியில்
உதவும். மனிதர்கள் சாஸ்த்திரம் நிறைய படிக்கின்றார்கள். கடைசியில் ஒன்று சொல்கின்றார்கள் ராம்லிராம் என்று
சொல்லுங்கள். சாஸ்த்திரம் படியுங்கள், வேதம் படியுங்கள் என்று சொல்வதில்லை. கடைசியில் இராமரை நினையுங்கள்
என்று சொல்கின்றார்கள். வாழ்க்கையில் அதிக காலம் எதைப் பற்றி அதிகம் நினைக்கின்றார்களோ அது தான்
கடைசியில் நினைவு வரும். இப்பொழுது அழிவு அனைவருக்கும் வரப் போகின்றது. அனைவரும் யாரை
நினைப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியும். சிலர் சிருஷ்ணரை, சிலர் தன்னுடைய குருவை நினைப்பார்கள்.
தேகத்தை நினைத்தால் விளையாட்டு முடிந்துவிடும். இங்கு ஒரு விஷயம் தான், தன்னை ஆத்மா என்று
நினைத்து பாபாவை நினைவு செய்யுங்கள் என்று உங்களுக்குப் புரிய வைக்கின்றார். நாம் எவ்வளவு நேரம்
நினைக்கின்றோம் என்று சார்ட் வையுங்கள். எவ்வளவு நினைக்கின்றோமோ, அவ்வளவு பாவனம் ஆகிக்
கொண்டே போவீர்கள். கங்கையில் குளிப்பதால் பாவனம் ஆக முடியாது. இது ஆத்மாவின் விஷயம் அல்லவா
! ஆத்மா தான் பதீத், ஆத்மா தான் பாவனம் ஆகின்றது இல்லையா? ஆத்மா ஒரு ஸ்டார் புள்ளி போன்று
உள்ளது என்று பாபா புரிய வைக்கின்றார். இரு புருவங்களுக்கும் மத்தியில் உள்ளது. ஆத்மா ஸ்டார் மிக
சூட்சமமானது என்று சொல்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் தான் இந்த விஷயங்களைப் புரிந்து கொள்ள
முடியும். நான் கல்பலிகல்பம் சங்கமயுகத்தில் தான் வருகின்றேன் என்று பாபா சொல்கின்றார். மற்றவர்கள் கல்பம்
என்ற வார்த்தையை விட்டு யுகம்லியுகம் என்ற வார்த்தையைப் போட்டு விட்டார்கள். அதனால் மனிதர்கள்
எவ்வளவு தவறாகப் புரிந்துள்ளார்கள். கல்பலிகல்பமாக சங்கமயுகத்தில் வருகின்றேன் என்று நான் சொல்கின்றேன்.
ஆழ்ந்த இருள் மேலும் ஆழ்ந்த வெளிச்சம் இரண்டும் நடுவில் சங்கமம். மற்றபடி யுகலியுகமா வருவதற்கு
அவசியம் இல்லை. ஏணிப்படி இறங்கிக் கொண்டே தான் வருகின்றது. எப்பொழுது 84 ஜென்மம் முழுமையாக
நீங்கள் எடுத்து முடிக்கின்றீர்களோ அப்பொழுது நான் வருகின்றேன் என்று பாபா கூறுகின்றார். இந்த ஞானம்
முழு உலகத்திற்கானதாகும். சன்யாசிகள் சொல்லிவிடுகின்றார்கள் இந்த படமெல்லாம் கற்பனையானது என்று.
ஆனால் இதில் கற்பனைக்கான விஷயம் என்பதே இல்லை. இது அனைவருக்கும் புரியவைக்கின்றோம்,
இல்லையென்றால், மனிதர்களுக்கு எப்படித் தெரியும்? அதனால் இந்த படங்கள் எல்லாம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சி அனைத்து தேசத்திலும் அநேக முறை போடப்படுகின்றது. மிகவும் பாரதவாசி குழந்தைகள்தான்
உள்ளார்கள் என்று பாபா சொல்கின்றார். ஆனாலும் அனைவரும் குழந்தைகள் தான். இது அநேக தர்மத்தின்
மரம். நீங்கள் காமம் என்ற சிதையில் உட்கார்ந்ததால் எரிந்து விட்டீர்கள் என்று புரிய வைக்கின்றார். சத்திய
யுகத்தில் யார் முதலில் வருகின்றார்களோ அவர்களே துவாபர யுகத்தில் முதன் முதல் வந்து காம அக்னியில்
எரிகின்றார்கள் அதனால் தான் கருப்பாக ஆகிவிட்டார்கள். இப்பொழுது அனைவருக்கும் சத்கதி ஏற்பட
வேண்டும். நீங்கள் தான் நிமித்தமாக உள்ளீர்கள். உங்களுக்குப் பின்னால் தான் அனைவருக்கும் சத்கதி ஏற்பட
வேண்டும். பாபா எவ்வளவு எளிமையாகப் புரிய வைக்கின்றார். பாபாவை மட்டும் நினைவு செய்யுங்கள் என்று
சொல்கின்றார். ஆத்மா தான் துர்கதியை அடைந்துவிட்டது. ஆத்மா பதீதமாக ஆனதால் உடல் கூட அவ்வாறே
கிடைக்கின்றது. ஆத்மாவை பாவனம் ஆக்குவதற்காக பாபா எளிய வழியைக் கற்றுக்க் கொடுக்கின்றார்.
திரிமூர்த்தி படத்தில் பிரம்மாவின் படத்தைப் பார்த்து மனிதர்கள் ஐயோலிஐயோ ! என்று சொல்கின்றார்கள்.
இவரை பிரம்மா என்று ஏன் சொல்கின்றீர்கள்? பிரம்மாவோ சூட்சுமவாசி தேவதை, அவர் இங்கே எப்படி
வந்தார்? இந்த தாதா புகழ் பெற்றவராக இருந்தார். செய்தித்தாட்களில் எல்லாம் இவர் பெயர் வந்தது, ஒரு
வைர வியாபாரி தன்னை ஸ்ரீகிருஷ்ணன் என்று சொல்கின்றார், எனக்கு 16108 ராணிகள் வேண்டும் என்று
சொல்கின்றார். அவரை விரட்டுவதற்காக போராட்டம் அதிகமானது. இப்பொழுது ஒவ்வொருவருக்கும் எப்படி
புரிய வைப்பது ? இத்தனை மனிதர்கள் உள்ளார்கள். அபுவில் கூட யாராவது வந்தால் உடனே கேட்கின்றார்கள்
நீங்கள் பிரம்மா குமாரிகளிடம் போகின்றீர்களா? அவர்கள் மந்திரம் போடுகின்றார்கள். ஆண்லிபெண் இருவரையும்
சகோதரன்லிசகோதரி ஆக ஆக்குகின்றார்கள். பெரியலிபெரிய விஷயம் கூறி மனதைக் கெடுத்துவிடுகின்றார்கள்.
நீங்கள் என்னை ஞானக்கடல், உலகத்தின் சர்வ சக்திவான் என்று சொல்கின்றீர்கள் அல்லவா என்று பாபா
கேட்கின்றார். உலகின் சர்வசக்திவான் என்றால், வேத சாஸ்த்திரங்கள் அனைத்தையும் அறிந்தவர். பெரிய
பண்டிதர்களைக் கூட சக்தி என்று சொல்கின்றோம். ஏனென்றால், அவர்கள் அனைத்து வேத, சாஸ்த்திரம்
படித்தவர்கள் பனாரஸ் சென்று பட்டத்தை வாங்குகின்றார்கள். மஹாலிமஹோபாத்தியாய, ஸ்ரீ,ஸ்ரீ 108 சரஸ்வதி
என்ற இந்த பட்டம் யாவும் அங்கு தான் கிடைக்கின்றது. யார் மிகவும் புத்திசாலிகளோ அவர்களுக்கு இந்த
பட்டம் கிடைக்கின்றது. சாஸ்த்திரத்தில் ஜனகரைக் கூட எழுதி உள்ளார்கள். யாராவது உண்மையான பிரம்ம
ஞானத்தை சொல்லுங்கள் என்று கேட்கின்றார். இங்கு பிரம்ம ஞானி யாரும் இல்லை. அனைத்தும் இங்குள்ள
விஷயங்கள் தான். கதைகளைப் பெரியதாக்கி விட்டார்கள். சங்கரர்லிபார்வதி கதைகள் கூட எழுதி உள்ளார்கள்.
(3/4)
30.07.2016
எவ்வளவு கதைகள் எழுதி உள்ளார்கள். சங்கரர் அமர்ந்து பார்வதிக்கு கதை சொன்னதாக காட்டுகின்றார்கள்,
உண்மையில் சிவன் தான் சொல்கின்றார். ஆனால் அவர்கள் சங்கரர் பார்வதி பெயரை எழுதி விட்டார்கள்.
பாகவதம் இவை அனைத்தும் இப்பொழுது நடக்கும் விஷயம் தான், பிறகு கதையாக எழுதி விட்டார்கள்.
இராஜாவுக்குப் போய் இந்த ஞானம் சொல்வோம் என்று அவர்கள் எண்ணத்தில் தோன்றியது. இராஜ்ஜாக்களுக்கு
போய் ஞானம் கொடுங்கள் என்று பாபா புரிய வைக்கின்றார். நீங்கள் சூர்ய வம்சத்தைச் சேர்ந்தவர்களாக
இருந்தீர்கள், பிறகு சந்திர வம்சம், வைஷ்ய வம்சம், சூத்திர வம்சம் ஆகின்றீர்கள். உங்களுடைய இராஜதானி
போய் விட்டது. இப்பொழுது மீண்டும் புருஷார்தம் செய்து சூர்யவம்ச இராஜ்யத்தை அடைகின்றீர்கள். இராஜ
யோகத்தைக் கற்றுக் கொடுக்கக் கூடிய பாபா வந்துள்ளார். பின்பு வந்து சுய இராஜ்யத்தை அடையுங்கள்.
இராஜ்ஜாக்களிடம் எத்தனை கடிதங்கள் போகின்றது ஆனால் அவருக்கு கிடைக்கின்றதா என்ன, அவரின்
(பர்ஸனல் செகரட்ரி) தனிச் செயலர் கடிதங்களைப் பார்க்கின்றார்கள், எவ்வளவு கடிதங்களை எரிந்து விடு
கின்றார்கள். முக்கியமான விஷயங்களாக இருந்தால் தான் இராஜாவிற்குக் காட்டுகின்றார்கள். அஷ்டாவக்கிரன்
ஜனகருக்கு ஒரு வினாடியில் ஜீவன்முக்தியின் காட்சியைக் காண வைத்தார் என்று சொல்லப்படுகின்றது.
இப்பொழுது பாபா வந்து எவ்வளவு நல்லவிதமாகப் புரிய வைக்கின்றார். யார் புரிந்து கொள்ளவில்லையோ
அவர்கள் தான் இங்கும், அங்கும் பார்ப்பார்கள். அவர்கள் புத்தியில் உட்காரவில்லை என்று பாபா உடனே
புரிந்து கொள்கின்றார். அனைவரும் நல்லவிதமாக கேட்கின்றார்களா என்று பாபா நாலா புறமும் பார்க்கின்றார்.
இவர்கள் புத்தி எங்கே அலைந்து கொண்டு இருக்கின்றது என்றால், கொட்டாவி விட்டுக் கொண்டே இருப்பார்கள்,
துôங்கி விழுவார்கள் பிறகு உடனே எழுந்து வெளியே போய் விடுவார்கள். ஆரம்பத்தில் இவர்களுக்கு பெரிய
சார்ட் இருந்தது. பெரிய கதை இருக்கும். ஆரம்பத்தில் குழந்தைகள் மிகவும் தியானத்தில் போய் விடுவார்கள்.
இப்பொழுது கூட மந்திரவாதி சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். பரமபிதா பரமாத்மாவை மந்திரவாதி என்று
சொல்கின்றார்கள் அல்லவா? அவர்களுக்கு பாபாவின் மீது மிகவும் அன்பு உள்ளது, அதனால் தான் பார்த்தவுடன்
தியானத்தில் போய் விடுகின்றார்கள் என்று பாபா பார்க்கின்றார். வைகுண்டம் என்பது பாரதவாசிகளுக்கு
மிகவும் பிடிக்கும். அதனால் யாராவது இறந்தால் கூட வைகுண்டவாசி ஆகிவிட்டார், சொர்க்கவாசி ஆகிவிட்டார்
என்று சொல்கின்றார்கள். இப்பொழுது இது நரகமாக உள்ளது. அனைவரும் நரகவாசிகள் ஆகி விட்டார்கள்,
அதனால் தான் யாராவது இறந்தால் சொர்க்கவாசி ஆகி விட்டார் என்று சொல்கின்றார்கள். ஆனால் யாரும்
சொர்க்கத்திற்குப் போவதில்லை. இப்பொழுது நீங்கள் மட்டும் தான் அறிவீர்கள் நாம் தான் சொர்க்கவாசியாக
இருந்தோம், பின்பு 84 ஜென்மம் எடுத்து நரகவாசி ஆகி விட்டோம். இப்பொழுது மீண்டும் பாபா சொர்க்கவாசியாக
ஆக்கிக் கொண்டிருக்கின்றார். சொர்கத்தில் தான் நமது இராஜதானி இருந்தது. இராஜதானியில் அநேக பதவிகள்
இருக்கின்றது. முயற்சி செய்து மனிதனிலிருந்து நாராயணன் ஆக வேண்டும். மம்மாலிபாபா எதிர்காலத்தில்
இலட்சுமிலிநாராணன் ஆகின்றார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொண்டீர்கள். இப்பொழுது புருஷார்த்தம் செய்து
கொண்டு இருக்கின்றீர்கள், ஆகையால் தான் தாய்லிதந்தையைப் பின்பற்றுங்கள் என்று சொல்லப்படுகின்றது.
இவர்கள் எப்படி முயற்சி செய்தார்களோ, அப்படி நீங்களும் செய்யுங்கள். சுயதர்சனலிசக்கரதாரி ஆக வேண்டும்
இது கூட நினைவு இருக்க வேண்டும். நீங்கள் பாபாவை நினைவு செய்யுங்கள், ஆஸ்தியை நினைவு செய்யுங்கள்.
திரிகாலதர்μ ஆகுங்கள். உங்களுக்கு முழு சக்கரத்தின் ஞானம் உள்ளது, இதில் முழ்கியிருங்கள். மற்றவர்களுக்குப்
புரிய வையுங்கள். இந்த சேவையிலேயே ஈடுபட்டு இருந்தால் மற்ற எந்த தொழில்இ வேலை நினைவு வராது.
நல்லது.
னிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய்
தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:லி
1) சத்தியுகத்தில் உயர்ந்த பதவி அடைவதற்காக தாய்லிதந்தையை முழுமையாகப்
பின்பற்றுங்கள்.அவர்கள் சமமாக புருஷார்த்தம் செய்யுங்கள். சேவையில் முழ்கியிருங்கள்.
ஒருமித்த மனதோடு படியுங்கள்.
2) நினைவின் சார்ட்டை உண்மையானதாக வைக்க வேண்டும். தன்னை ஆத்மா என்று
நினைத்து பாபாவை நினைவு செய்யுங்கள், தேகம்லி தேக சம்மந்தப்பட்டவர்களை நினைக்க
வேண்டாம்.
30.07.2016
(4/4)
வரதானம்: சுயநலம் என்ற வார்த்தையின் அர்தத்தை அறிந்து சதா ஒரு ரசனையில்
நிலைத்து இருக்கக் கூடிய சகஜமான புருஷார்த்தி பவ !.
தற்காலத்தில் ஒருவர் பிறரோடு பற்று வைக்கின்றார்கள் என்றால், அதில் அன்பு இல்லை, சுயநலம்
தான் இருக்கின்றது. சுயநலத்தின் காரணத்தால் பற்று வைக்கின்றார், மேலும் பற்றின் காரணத்தால் விடுபட்ட
நிலையில் இருக்க முடிவதில்லை. ஆகையால் சுயநலம் என்ற வார்த்தையின் அர்த்தத்தில் நிலைத்து விடுங்கள்
அப்படி என்றால் முதலில் சுயம் என்ற ரதத்தை ஸ்வாஹா (சமர்ப்பணம்) செய்யுங்கள். இந்த சுயநலம் போய்
விட்டால் விடுபட்ட நிலை ஆகி விடுவீர்கள். இந்த ஒரு சப்தத்தின் அர்த்தத்தை அறிந்து கொண்டால் சதா
ஒருவரின் மேலும் ஒரு ரசனையில் இருக்க முடியும், இது தான் எளிதான புருஷார்த்தம்.
சுலோகன்: பரிஸ்தா ரூபத்தில் இருந்தால், எந்த ஒரு தடைகளும் நம்மைத் தாக்க முடியாது.
(1/5)
31
31.07.2016 காலை முரளி ஓம் சாந்தி ''அவ்யக்த பாப்தாதா''
ரிவைஸ் 29.10.1981 மதுபன்
'' தந்தை மற்றும் குழந்தைகளின் ஆன்மீக சந்திப்பு ''
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார். இந்த ஆன்மீக சந்திப்பை
குழந்தைகள் நீங்கள் மட்டும் தான் செய்ய முடியும். ஒரு தந்தையுடன் ஒரே நேரத்தில் இந்த சந்திப்பை
செய்ய முடியும். நீங்கள் அனைவரும் தீபாவளித் திருவிழாவைக் கொண்டாட வந்திருக்கிறீர்கள். விழாவில்
ஒன்று கொண்டாடுவது, இரண்டாவது ஒருவர் இன்னொருவரை சந்திப்பது, மூன்றாவது ஏதாவது (பரிசு) கொடுப்பது
மற்றும் பெற்றுக் கொள்வது. மேலும் நான்காவது விளையாடுவது. நீங்கள் அனைவரும் கூட இந்த நான்கு
விஷயங்களையுமே செய்திருக்கிறீர்கள். சந்திப்பு விழாவிலோ வந்திருக்கிறீர்கள். ஆனால் கொண்டாடுவது என்றால்,
எப்பொழுதும் அழியாத உற்சாகம் நிரம்பிய, ஊக்கம் நிரம்பிய வாழ்க்கையில் எப்பொழுதும் இருப்பதற்கான திட
எண்ணம் வைப்பது. இந்த ஆன்மீக சந்திப்பு விழாவை கொண்டாடுவது, அழியாத உற்சவத்தைக் கொண்டாடுவது
ஓரிரு நாட்களுக்காக மட்டுமில்லை. ஆனால் சங்கமயுகமே எப்பொழுதும் உற்சவம் அதாவது உற்சாகத்தை
அதிகரிப்பது. அப்படி தீபாவளி கடந்து சென்று விடவில்லை ஆனால் தீப ஒளி வீசிக்கொண்டிருக்கிறது.
நிரந்தரமாக புது வருடம் வந்திருக்கிறது. ஒவ்வொரு நேரமும் உங்களைப் பொருத்தளவில் புதியது. எப்படி
புது வருடத்தில் அதே நாளில் விசேஷமாக புதுப்புது ஆடைகள், புதுப்புது அலங்காரம், புதிய ஊக்கம் மற்றும்
விசேஷ குμக்கான நாள் என்று புரிந்து அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார்கள், இனிப்பு
வழங்குகிறார்கள், அதே போல் ஆன்மீக குழந்தைகள் உங்களைப் பொருத்தளவில் சங்கமயுகத்தின் ஒவ்வொரு
நாளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்கான மற்றும் அனைவருக்கும் எப்பொழுதும் இனிப்பு
வழங்குவதற்கான நாள் ஆகும். அந்த மாதிரி எப்பொழுதும் உற்சாகத்தில் இருங்கள், மேலும் மற்றவர்களுக்கும்
உற்சாகம் கொடுங்கள். எப்பொழுதும் வாயில் இனிமையான வார்த்தைகள் வருவது, என்பது தான் இனிப்பு
வழங்குவது, மேலும் மற்றவர்களுக்கும் இனிமையான வார்த்தைகள் மூலமாக இனிமையான தந்தையின்
நினைவூட்டுவது, சம்மந்தத்தில் கொண்டு வருவது, இது தான் இனிப்பு வழங்குவது. அப்படி எப்பொழுதுமே
வாய் இனித்துக் கொண்டிருக்கிறதா? இனிமையான வார்த்தை என்ற இனிப்பு எப்பொழுதும் உங்கள்
வாயிலிருக்கிறது மற்றும் எப்பொழுதும் மற்றவர்களுக்கும் அருந்தக் கொடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள்.
ஒவ்வொரு நாளும் உயர்ந்த நிலை அதாவது ஒவ்வொரு நாளும் தன்னில் புதுமையை தாரணை செய்து
கொண்டே இருக்கிறீர்கள். ஒரு விநாடி சென்றது மேலும் புதிய நிலை. ஒரு விநாடிக்கு முன்பு என்ன
நிலையாக இருந்ததோ அது இரண்டாவது விநாடியில் முன்னேறும் கலையின் அனுபவத்தின் காரணத்தினால்
எப்பொழுதும் உயர்ந்ததாக மற்றும் புதியதாக இருக்கிறது. அப்படிப்பட்ட நிலையை தாரணை செய்வது என்றால்,
புதிய ஆடையை அணிவது. சத்யுகத்திலோ ஸ்தூலமாக எப்பொழுதும் புதிய ஆடை அணிவீர்கள், உலக
மகாராஜா மற்றும் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அணிந்த ஆடையை அணிய மாட்டீர்கள். இந்த சம்ஸ்காரத்தை
இராஜ்ய அதிகாரி ஆத்மாக்கள் இங்கேயே நிரப்ப வேண்டும். ஒவ்வொரு நேரத்தின் புதிய நிலை மற்றும்
ஒவ்வொரு நேரம் பாப்தாதா மூலமாக ஞானம், யோகா மூலமாக புதிய அலங்காரம் ஆகிக் கொண்டிருக்கிறது.
எப்படி மிக அதிக செல்வம் உடையவர்கள் எப்பொழுதும் புதுப்புது அலங்காரம் செய்வார்கள். அப்படி
அனைவரையும் விட உயர்ந்த சம்பன்னமான தந்தை, உயர்ந்த சம்பன்ன குழந்தைகள் உங்களுக்கு தினசரி
புதிய அலங்காரம் செய்கிறார் இல்லையா? அப்படி தினசரி புதிய வருடம் ஆனது இல்லையா! புதிய ஆடை,
புதிய அலங்காரம், புதிய உற்சவம் அதாவது உற்சாகம் மற்றும் எப்பொழுதுமே வாய் இனித்துக் கொண்டிருப்பது.
நிரந்தரமாகவே வாயில் இனிப்பை அனுபவம் செய்விக்கும் இனிப்பு இருக்கிறது. எனவே தந்தையும் தினசரி
என்ன கூறுகிறார்? (இனிமையிலும் இனிமையான குழந்தைகளே) இது உறுதியாக நினைவில் இருக்கிறது
இல்லையா? தந்தையும் இனிமையிலும் இனிமையான குழந்தைகளே! என்று கூறுகிறார். மேலும் குழந்தைகளும்
என்ன கூறுகிறார்கள்? (இனிமையிலும் இனிமையான பாபா) அப்படியானால் வாயில் என்ன ஆயிற்று?
அப்படி தினசரி புதிய வருடம் ஆகிவிட்டது இல்லையா? புதிய வருடம் என்றால், புதியது என்ன புதிய நேரம்
ஆகிவிட்டது. அப்படி இந்த விதமாக கொண்டாடினீர்களா? அல்லது உற்சவம் சென்று விட்டது, கூடவே
உற்சாகமும் சென்று விட்டதா? அப்படி அற்பகாலத்திற்கு கொண்டாடவில்லையே? இங்கு ஆன்மீக மேளா
(சந்திப்பு) என்றால் அழியாத மேளா, இன்னொரு விஷயம் கொண்டாடுவதின் கூடவே சந்திப்பது. அப்படி
ஆன்மீக சந்திப்பு செய்வது என்றால், தந்தைக்குச் சமமாக ஆவது. இது ஸ்தூலமான சந்திப்பு இல்லை, ஆனால்
குணங்களால் சந்திப்பது, சம்ஸ்காரங்களால் சந்திப்பது. சந்திப்பது என்றால் சமம் ஆவது, எனவே தான் சேர்க்கையின்
பிரபாவம் இருக்கிறது என்ற மகிமை பாடுகிறார்கள். அந்த மாதிரி ஆன்மீக சந்திப்பை செய்தீர்களா? அல்லது
(2/5)
31.06.2016
ஒவ்வொருவருக்கும் கை கொடுத்தீர்கள், மேலும் கட்டி அணைத்தீர்கள் என்பது மட்டும் தானா? குணங்களின்
சந்திப்பு மற்றும் சம்ஸ்காரங்களின் சந்திப்பு, இது நிரந்தரமானது தான் இல்லையா? தினசரி சந்திப்பைக்
கொண்டாடுவது. அப்படி மேளாவில் வந்திருக்கிறீர்கள் என்றால், அந்த மாதிரி சந்திப்பை செய்தீர்களா?
மூன்றாவது விஷயம், வாங்குவது மற்றும் கொடுப்பது. உலகியல் முறையில் கூட ஏதாவது
திருவிழாவிற்குச் செல்கிறீர்கள் என்றால் பணம் கொடுப்பீர்கள், ஏதாவது பொருளை வாங்குவீர்கள். அவசியம்
ஏதாவது வாங்குவார்கள். மேலும் பொருளைப் பெறுவதற்கு முன்பு கொடுப்பதோ இருக்கவே இருக்கிறது.
அப்படி எப்பொழுதுமே எடுக்கிறீர்களா? ஒவ்வொருவரிலும் கூட எப்பொழுதும் ஒவ்வொருவரின் விசேஷம்
மற்றும் குணங்களை எடுக்கத்தான் செய்கிறீர்கள். எப்பொழுதுமே எடுக்கிறீர்கள் தான் இல்லையா? எப்பொழுது
எடுக்கிறீர்கள் என்றால், தனக்குள் தாரணை செய்கிறீர்கள். அப்படி எப்பொழுது விசேஷத்தை தாரணை செய்தீர்கள்
என்றால், அதற்குப் பதிலாக சாதாரண நிலை இயல்பாகவே அகன்று விடுகிறது. குணத்தை தாரணை செய்கிறீர்கள்
என்றால், அந்த குணத்தை தாரணை செய்வதினால் என்ன பலஹீனம் இருந்ததோ அது தானாகவே அகன்று
விடுகிறது. அப்படி இது தான் கொடுப்பதாக ஆனது. அப்படி குஜராத்தை சேர்ந்தவர்கள் எடுத்தார்களா மற்றும்
கொடுத்தார்களா? கொடுப்பது மற்றும் பெறுவதை செய்தீர்களா? இந்த கொடுப்பது மற்றும் எடுப்பது ஒவ்வொரு
நேரமும் நடந்து கொண்டே இருக்கிறது. மேலும் நடந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு விநாடியும்
எடுக்கிறீர்கள் மற்றும் கொடுக்கிறீர்கள். ஏனென்றால், எடுப்பதினால் கொடுப்பதும் அதனோடு சேர்ந்து இருக்கிறது.
அப்படி கொடுப்பதிலும் பரந்த மனமுடையவர்களாக இருக்கிறீர்களா அல்லது கஞ்சனாக இருக்கிறீர்களா? பரந்த
மனமுடையவர் தான் இல்லையா? மேலும் கொடுப்பது கூட என்ன கொடுக்கிறீர்கள். எதனால் கஷ்டப்பட்டுக்
கொண்டு இருக்கிறீர்களோ அதைத் தான் கொடுக்கிறீர்கள்.
எப்பொழுது அனைத்துக் குழந்தைகளும் முற்றிலும் காலியாகி விடுகிறார்களோ அப்பொழுது தான்
தந்தை வருகிறார். உடலின் சக்தியும் இல்லை, மனதின் சக்தியும் இல்லை, பணம் செல்வத்தின் சக்தியும்
இல்லை. உடலின் சக்தியில் காலியாகி இருக்கிறார்கள் லி இதனுடைய நினைவாக சிவனின் ஊர்வலத்தை
எப்படிக் காண்பித்திருக்கிறார்கள்? மேலும் மனதின் சக்தி அழிந்ததின் அடையாளமாக லி 'எப்பொழுதும் கூவி
அழைத்துக் கொண்டிருப்பது' என்பது நினைவாக இருக்கிறது. தினசரி அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள்
இல்லையா? பணம் செல்வத்தின் காலியானதின் அடையாளம் லி இப்பொழுது பாருங்கள் கொஞ்சம் தங்கமும்
இருக்கிறது. அதன் மீது எப்பொழுதும் அரசாங்கத்தின் பார்வை இருக்கிறது. பயந்து பயந்து அணிகிறார்கள்.
ஒருவேளை பணம் இருக்கிறது என்றாலும் அதனுடைய பெயர் என்னவாக இருக்கிறது? 'கருப்பு பணம்'.
பெயரளவில் எவ்வளவு பெரிய செல்வந்தனோ, அந்த அளவு 90 சதவிகிதம் கருப்பு பணம் இருக்கும். அப்படி
பெயரளவில் பணம் இருந்ததா? அல்லது உபயோகத்திற்கானதாக இருந்ததா? அப்படி எப்பொழுது அனைத்து
தரப்பிலிருந்தும் காலியாகி விடுகிறீர்களோ, குசேலரின் காய்ந்த அவல் மட்டும் எப்பொழுது இருந்து விடுகிறதோ,
அப்பொழுது தந்தை வருகிறார். காய்ந்த அவல் சாப்பிடுவதினால் உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் ஆகிவிடும்.
அவல் மட்டும் கொடுக்கிறீர்கள். அதுவும் காய்ந்தது. மேலும் என்ன பெறுகிறீர்கள்? அனைத்து குணங்கள்,
அனைத்து சக்திகள், அனைத்து பொக்கிஷங்கள். 36 விதங்களையும் விட அதிக வகைகள் என்றால் பெறுவதாக
ஆனதா? அல்லது கொடுப்பதாக ஆனதா? காய்ந்த அவல் கூட மண் படிந்ததைக் கொண்டு வருகிறீர்கள்.
மண்ணின் நினைவு தான் இருக்கிறது இல்லையா? இப்பொழுதோ மாறி விட்டீர்கள். ஆனால் எப்பொழுது
தந்தையிடம் வந்தீர்களோ அப்பொழுது மண் பூசப்பட்டவராகத் தான் இருந்தீர்கள். மண்ணை பார்ப்பது,
மண்ணோடு விளையாடுவது மற்றும் வேறு என்ன செய்தீர்கள்? ஆனால் இப்பொழுது இரத்தினங்களோடு
விளையாடுகிறீர்கள். அப்படி கொடுப்பது மற்றும் பெறுவது எப்பொழுதுமே இருந்து கொண்டே இருக்கும்.
கொடுப்பது கூட மண் நிரம்பிய காய்ந்த அவல். இருந்தும் சில குழந்தைகள் மிகுந்த முரண்டு செய்கிறார்கள்.
கொடுத்து விட்டேன் என்று இன்று சொல்வார்கள். ஆனால் குசேலர் மாதிரி அதை இடுப்பில் மறைத்து
வைத்திருப்பார்கள். தந்தையோ எடுக்க முடியும், ஆனால் கொடுப்பவருக்கு புண்ணிய கணக்கு உருவாகுமா?
ஒருவேளை பிடுங்கி எடுத்து விடுகிறோம் என்றால், கொடுத்து எடுப்பது என்பதில் குறை ஏற்பட்டு விடும்.
கொடுப்பது ஒன்று மற்றும் பெறுவது பலமடங்கு. அப்படி சுய இச்சை அதாவது திட எண்ணத்தோடு ஒன்று
கொடுப்பது, பல மடங்கு பெறுவது! எனவே நீங்கள் தான் கொடுக்க வேண்டும் ஏனென்றால் கொடுப்பதில் தான்
நன்மை இருக்கிறது. அப்படி கொடுப்பது, பெறுவது என்றால் என்ன என்று புரிந்து கொண்டீர்களா?
எப்பொழுது அந்த மாதிரி கொண்டாடுவது, சந்திப்பது மற்றும் கொடுக்கல், வாங்கல் ஆகிவிடுகிறது
என்றால் என்ன ஆகிறது? எப்பொழுதும் தந்தையுடன் குμயோடு விளையாடுவது. எப்பொழுதும் அதீந்திரிய
சுகத்தின் ஊஞ்சலில் ஆடுவது. அந்த மாதிரி மேளாவை (சந்திப்பை) கொண்டாடினீர்களா? இந்த ஆன்மீக
மேளாவை எப்பொழுதும் கொண்டாடிக் கொண்டே இருங்கள். மேலும் ஒவ்வொரு நாளும் மேளா தான்.
புரிந்ததா? நல்லது.
(3/5)
31.06.2016
அந்த மாதிரி ஒவ்வொரு விநாடியும் மேளாவை கொண்டாடக்கூடிய, எப்பொழுதும் தன்னுடைய மற்றும்
அனைவரின் வாயை இனிப்பாக்கக்கூடிய, எப்பொழுதும் புதிய உற்சாகம் வைக்கக்கூடிய அதாவது எப்பொழுதும்
உற்சவத்தைக் கொண்டாடக்கூடிய, ஒவ்வொரு விநாடியும் முன்னேறும் கலையின் புதிய நிலை அதாவது புதிய
ஆடை அணிந்த புதிய அலங்காரம் தரித்த, எப்பொழுதும் தந்தையுடன் குμயில் விளையாடக்கூடிய, அந்த
மாதிரி எப்பொழுதும் ஆன்மீக மேளாவைக் கொண்டாடக்கூடிய சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின்
அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.
தம்பதிகளுடன் சந்திப்பு லி
தன்னுடைய விசேஷத்தைத் தெரிந்திருக்கிறீர்களா? இந்த குரூப்பின் விசேஷம் என்ன? இந்த குரூப்
சன்னியாசி, மகாத்மாக்களையும் தலை வணங்க வைப்பவர்கள். சன்னியாசி என்றால் இன்றைய நாட்களில்
மகான் ஆத்மாக்கள். அப்படி இன்றைய நாட்களின் மகாத்மாக்கள் என்று கூறப்படுபவர்களுக்கும் தன்னுடைய
வாழ்க்கை மூலமாக அறிமுகம் கொடுப்பவர்கள் நீங்கள். இதே விசேஷத்தை எப்பொழுதும் நினைவில்
வைத்துக் கொண்டே ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தீர்கள் என்றால் ஒவ்வொரு காரியமும்
சரித்திரமாகிவிடும். எப்படி பிரம்மாவின் ஒவ்வொரு காரியத்தையும் சரித்திரத்தின் ரூபத்தில் வர்ணனை செய்கிறீர்கள்
இல்லையா? இங்கே மதுபன்னில் பிரம்மா பாபாவின் சரித்திர பூமி என்று புரிந்து வருகிறீர்கள் தான் இல்லையா?
பிரம்மா பாபாவின் ஒவ்வொரு காரியம் சரித்திரம் ஆகிவிட்டது. ஏனென்றால், உயர்ந்த காரியமாக இருந்தது,
அந்த மாதிரி இந்த குரூப்பின் விசேஷமானது ஒவ்வொரு காரியத்தையும் சரித்திரத்திற்கு சமமாக ஆக்குபவர்கள்.
ஏனென்றால் இப்பொழுது ஆன்மீகத் தந்தையின் குழந்தைகள், ஆன்மீகமாகி விட்டார்கள். பிரம்மாகுமார்,
குமாரியின் ஆன்மீக உறவு ஏற்பட்டு விட்டது. ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகள் மற்றும் ஆன்மீக
காரியம். ஆன்மீகக் காரியத்தைத் தான் சரித்திரம் என்று கூறுவோம். முழு நாளும் அமிர்தவேளையில்
தொடங்கி இரவு வரையிலும் ஒவ்வொரு காரியமும் சரித்திரமாக இருக்கட்டும், சாதாரணமானதாக இருக்க
வேண்டாம். ஆன்மீகமானதாக இருக்கட்டும். ஆன்மீக வாழ்க்கை உள்ளவர் சாதாரண காரியம் செய்யவே
முடியாது.
அனைவரின் இரண்டு சக்கர வண்டி சரியாகச் சென்று கொண்டிருக்கிறது தான் இல்லையா?
எப்பொழுதாவது ஏதாவது சக்கரம் மேலேயோ, கீழேயோ செல்வதில்லையே! ஒரு சக்கரம் முன்னுக்கு சென்று
கொண்டிருக்கிறது, இன்னொரு சக்கரம் பின்னாலேயே இருந்து விடவில்லையே? உங்கள் அனைவரின்
விசேஷமே ஒருவர் இன்னொருவரை விட முன்னுக்கு இருங்கள், மேலும் ஒருவர் இன்னொருவரை முன்னுக்கு
வைப்பவராகவும் இருக்கிறீர்கள் என்பது தான்! ஒருவர் இன்னொருவரை முன்னுக்கு வைப்பது தான் முன்னால்
இருப்பது. நான் ஆண் மற்றும் அவர் தன்னை சக்தி என்று நினைக்கிறார் என்று அப்படியும் வேண்டாம்.
ஒருவேளை நீங்கள் சக்தி என்றால் அந்த பாண்டவர்களும் குறைந்தவர்கள் அல்ல, சக்திகளும் குறைந்தவர்கள்
அல்ல. இருபாலாருமே தந்தையின் சகயோகிகள்! எனவே பாண்டவர்கள் முன்னுக்கு இருக்கிறார்களா அல்லது
சக்திகள் முன்னுக்கு இருக்கிறார்களா என்ற இதையும் கூற முடியாது. சக்திகளை கேடயம் என்று ஏன்
கூறுகிறோம் என்றால், அவர்கள் தன்னை வெகுகாலமாகத் தாழ்ந்தவர்கள் என்றே நினைத்து வந்திருக்கிறார்கள்.
எனவே போதை ஏறுவதற்காக முன்னுக்கு வைத்திருக்கிறோம். சக்திகளை முன்னுக்கு வைப்பதில் தான்
பாண்டவர்களுக்கு லாபம். சக்திகள் பின்னால் இருக்கிறார்கள் என்றால், உங்களையும் பின்னால் இழுத்து
விடுவார்கள். ஏனென்றால் சக்திகளிடம் கவர்ந்திழுக்கும் சக்தி அதிகமாக இருக்கிறது. எனவே சக்திகளை
முன்னுக்கு வைப்பது தான் நீங்கள் முன்னுக்கு இருப்பதாகும். பொதுவாகவே சக்திகள் பாண்டவர்களின்
கேடயம். பாண்டவர்கள் எங்காவது இந்த மாதிரி சொற்பொழிவு நிகழ்த்தினார்கள் என்றால், தடியடி பெற
வேண்டியதாக இருக்கும். பொதுவாக கீதா பாடசாலை திறக்கிறீர்கள் என்றால் சகோதரியை அனுப்புங்கள் என்று
கூறுகிறீர்கள். மாதா குரு ஆவார், எனவே மாதர்களில் பாவனை சுலபமாக வந்து விடுகிறது. பிரம்மா
பாபாவும் முதுகெலும்பாக இருந்தார். மேலும் சக்திகளை முன்னுக்கு வைத்தார் என்றால் நீங்களும் பிரம்மாவைப்
போன்றவர்கள் தான். எப்படி தந்தை சக்திகளை முன்னுக்கு வைத்தார் என்றால் வெற்றி கிடைத்தது அதே
போல் நீங்களும் சக்திகளை முன்னுக்கு வைத்தீர்கள் என்றால் வெற்றி கிடைத்து விடும்.
இல்லறத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்படுவதில்லையே? எப்பொழுதாவது ஒரு பாத்திரம் இன்னொரு
பாத்திரத்தோடு மோதுவதோ இல்லையே. ஏனென்றால் ஏதாவது சப்தம் எழுகிறது என்றால் என்ன கூறுவார்கள்?
பகவானின் குழந்தைகள் மேலும் பாத்திரம், பாத்திரத்தோடு மோதுகிறது. பொதுவாகவே பாத்திரம் பாத்திரத்தோடு
மோதுகிறது என்றால் அவசியம் சப்தம் எழும். ஆனால் இங்கு சப்தம் எழ முடியாது. ஏன்? ஏனென்றால்
இங்கு இடையில் தந்தை இருக்கிறார். எங்கு இடையில் தந்தை வந்து விட்டாரோ அங்கு சப்தம் இருக்குமா?
எப்பொழுது இடையிலிருந்து தந்தையை அகற்றி விடுகிறீர்களோ அப்பொழுது மோதல் ஏற்படுகிறது, சப்தம்
எழுகிறது. எனவே எப்பொழுதும் தந்தையை உடன் வைத்துக் கொள்ளுங்கள். தந்தை உடன் இருக்கிறார்
(4/5)
31.07.2016
என்றால், ஏதாவது ஒரு விஷயம் நடந்தது என்றாலும் சரியாகி விடும். பொதுவாகவே இரண்டு பேர்களின்
விஷயத்தில் மூன்றாவது நபர் இடையில் வருகிறார் என்றால் விஷயம் முடிந்து விடுகிறது இல்லையா?
அதுபோலவே தந்தையை இடையில் வைத்தீர்கள் என்றால் விஷயம் வளராது, முடிவு ஏற்பட்டு விடும்.
இல்லறத்தில் இருந்து கொண்டே எப்பொழுதும் உடலின் சம்மந்தத்தில் விலகியவராக இருங்கள்,
அப்பொழுது தான் தூய்மையான இல்லற மார்க்கம் என்ற பங்கைச் செய்ய முடியும். நான் ஆண், இவர் பெண்
என்ற இந்த உணர்வுகள் கனவில் கூட வர முடியாது. ஆத்மா சகோதரன் சகோதரன் என்றால், ஆண், பெண்
எங்கிருந்து வந்தார்கள். தம்பதியோ நீங்கள் மற்றும் தந்தை தான் இல்லையா, பிறகு இவர் என்னுடைய
ஜோடி (யுகல்) என்று அப்படி எப்படி கூற முடியும்? இதுவோ ஒரு காரணத்திற்காக சேவைக்காக மட்டும்
இருக்கிறது மற்றபடி இணைந்த ரூபமோ நீங்களும் தந்தையும் தான். இருந்தாலும் தைரியம் வைத்ததற்காக
பாப்தாதா வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார். தைரியத்துடன் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறீர்கள், மேலும்
சென்று கொண்டே இருப்பீர்கள். இந்த தைரியத்திற்கு வாழ்த்துக்கள்!
குமாரர்களுடன் லி
தன்னை எப்பொழுதும் இராஜரிμ என்று நினைக்கிறீர்களா? அதிகாரி மற்றும் ரிμ அதாவது
தபஸ்வி. சுயத்தின் இராஜ்யம் பிராப்தி ஆவதினால் இயல்பாகவே தபஸ்வி ஆகிவிடுகிறார்கள். ஏனென்றால்,
எப்பொழுது சுயத்தின் இராஜ்யம் இருக்கிறது என்றால் சுயத்தை ஆத்மா என்று புரிந்து கொள்வதால் தந்தையின்
குழந்தை ஆவதால், இதுவே தபஸ்யா ஆகிவிடுகிறது. ஆத்மா தந்தையின் குழந்தை ஆனது என்றால் தபஸ்வி
ஆனது. அப்படி இராஜ்யமும் இருக்கிறது மேலும் ரிμயாகவும் இருக்கிறீர்கள். அனைவரும் சுயராஜ்ய
அதிகாரியாக ஆகியிருக்கிறீர்களா? எந்தவொரு கர்மேந்திரியமும் தன் பக்கம் ஈர்க்கக்கூடாது, எப்பொழுதும்
தந்தையின் பக்கம் ஈர்க்க வேண்டும். எந்தவொரு நபர் மற்றும் பொருளின் பக்கம் கவர்ச்சி செல்ல வேண்டாம்.
அந்த மாதிரியான இராஜ்ய அதிகாரி தபஸ்வி குமாராக இருக்கிறீர்களா? முற்றிலும் வெற்றி அடைபவராக
இருக்க வேண்டும். ஏனென்றால், வாயுமண்டலமோ கலியுகம் தான் இல்லையா? மேலும் உடன் இருப்பவர்களும்
அன்னப்பறவை மற்றும் கொக்குகளாக இருக்கிறார்கள். அந்த மாதிரி சூழ்நிலையில் இருந்துகொண்டே சுயராஜ்ஜியம்
உடையவராக இருந்தீர்கள் என்றால் தான் பாதுகாப்பாக இருப்பீர்கள். கொஞ்சம் கூட உலகின் வைப்ரேஷனின்
ஈர்ப்பு இருக்கலாகாது. எந்த புகாரும் இன்றி எப்பொழுதும் முழுமையானவராக இருக்க வேண்டும். குமாரர்களின்
புகார் வருகிறது. ஒருவேளை குமார் வெற்றி அடைபவர் ஆகிவிடுகிறார் என்றால், அனைவரையும் விட மகான்
ஆகிவிடுகிறார் ஏனென்றால் அரசாங்கமும் இளைஞர்களை முன்னேற்றுகிறது. அதிலேயும் குமாரர்கள் அதிகமாக
இருப்பார்கள். குமார் என்ன விரும்புகிறாரோ அதைச் செய்ய முடியும். ஏனென்றால் மிகுந்த சக்தி இருக்கிறது.
ஆனால் சக்தியை வீணாக இழக்கவில்லையே. எண்ணம் மற்றும் கனவில் தந்தையைத் தவிர வேறு யாரும்
இல்லை என்றிருந்தால் தான் நம்பர் ஒன் குமார் என்று கூறுவோம். குமார் தடையற்றவர் ஆகிவிடுகிறார்
என்றால் அனைவரையும் தடையற்றவராக ஆக்க முடியும். குமாரர்களின் பட்டமே விக்ன விநாஷக். எந்த
விதமான விக்னம் அதாவது தடை லி எண்ணம், சொல், செயல் அப்படி எந்த விதமான விக்னத்தின் வசமானவராக
இருக்க வேண்டாம். எனவே தான் குழந்தைகளின் பட்டம் விக்ன விநாஷக். கணேஷ் குழந்தை தான்
இல்லையா. அப்படி உங்களுடைய நினைவாக விக்ன விநாஷக் என்ற பெயர் பிரசித்தி ஆகி இருக்கிறது.
நடைமுறையில் இருந்திருக்கிறீர்கள் அதனால் தான் நினைவுச் சின்னமும் உருவாகியது. விக்ன விநாஷக்
ஆவதினால் இயல்பாகவே மனதின் எண்ணங்கள் மூலமாக சேவை நடந்து கொண்டே இருக்கும்.
வாயுமண்டலமும் தடையற்றதாக ஆகிக்கொண்டே இருக்கும். எப்படி தத்துவங்கள் காரணமாக பருவமும்
மாறுகிறது அதே போல் விக்ன விநாஷக் குழந்தைகள் காரணமாக வாயுமண்டலமும் மாறி விடும். எனவே
நாலாபுறங்களிலும் விக்ன விநாஷக்கின் அலை பரவி விட வேண்டும். நான் வெற்றி அடையும் வாயுமண்டலத்தை
உருவாக்க வேண்டும் என்ற இந்த எண்ணத்தையே எப்பொழுதும் வையுங்கள். எப்படி சூரியன் அதுவே
சக்திசாலியாக இருக்கிறது என்றால் நாலாபுறங்களிலும் தன்னுடைய சக்தி மூலமாக பிரகாசத்தைப் பரப்புகிறது,
அந்த மாதிரியே சக்தி நிறைந்தவராக ஆகுங்கள். குமாரர்களுக்கு அவசியம் ஏதாவது ஒரு வேலை தேவையாக
இருக்கிறது. ஒருவேளை குமார் எந்த வேலையுமின்றி இருக்கிறார் என்றால் பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது.
குமார் பிஸியாக இருக்கிறார் என்றால், அது அவருக்கும் நன்மை, உலகிற்கும் நன்மை! எனவே விக்ன
விநாஷக் ஆகி, வாயுமண்டலத்தை உருவாக்குவதில் பிஸியாக இருங்கள். தன்னுடைய விசேஷத்தை இந்தக்
காரியத்தில் ஈடுபடுத்துங்கள். ஒவ்வொரு குமாரும் அனேகர்களுக்கு சஞ்சீவினி மூலிகை கொடுக்கக்கூடிய
மகாவீர் அதாவது மூர்ச்சையாகி இருப்பவர்களை மீண்டும் உணர்வில் கொண்டு வருபவர்களாக இருக்க
வேண்டும். தன்னுடைய இந்தக் காரியத்தை எப்பொழுதும் நினைவில் வைத்து கொள்ளுங்கள். எப்படி உலகீய
வேலை மறப்பதில்லையோ அதே போல் இந்த ஆன்மீக வேலையும் எப்பொழுதும் நினைவில் இருக்க
வேண்டும். சங்கமயுகத்தில் தந்தை மூலமாக என்னவெல்லாம் பட்டம் கிடைத்திருக்கின்றனவோ அதன் நினைவில்
இருங்கள். பட்டம் நினைவில் வருவதினால் இயல்பாகவே ஞானம் மற்றும் ஞானத்தை வழங்குபவர் இருவர்களின்
நினைவு வந்து விடும். நல்லது.
வரதானம் லி தன்னுடைய சம்பூர்ண சொரூபத்தை ஆவாஹனம் செய்வதின் (வரவழைப்பதின்)
மூலமாக வருவது போவது என்ற சக்கரத்திலிருந்து விடுபடக்கூடிய அதிர்ஷ்ட நட்சத்திரங்கள்
ஆகுக.
இப்பொழுது தன்னுடைய சம்பூர்ண நிலை மற்றும் சம்பூர்ண சொரூபத்தை ஆவாஹனம் செய்யுங்கள்.
பிறகு அதே சொரூபம் எப்பொழுதும் நினைவில் இருக்கும். பின்பு சில நேரம் உயர்ந்த நிலை, சில நேரம்
தாழ்ந்தை நிலையில் வந்து போவதற்கான சக்கரம் சுற்றிக்கொண்டிருக்கிறது, அடிக்கடி நினைவு மற்றும்
நினைவிழந்த நிலையின் சுழற்சியில் வருகிறீர்கள், இந்த சுழற்சியிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். அவர்கள்
பிறப்பு இறப்பின் சக்கரத்திலிருந்து விடுபட விரும்புகிறார்கள், மேலும் நீங்கள் வீணான விஷயங்களிலிருந்து
விடுபட்டு பிரகாசித்துக் கொண்டிருக்கும் அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் ஆகிவிடுகிறீர்கள்.
சுலோகன்: ஏதாவது தடையின் வசம் ஆவது என்றால், வைரத்தில் கரை ஏற்படுத்துவது!
(5/5)
25
25.07.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே ! இப்போது நீங்கள் புதிய உலகத்திற்கு செல்ல வேண்டும். இந்த
துக்கத்தின் நாட்கள் நிறைவடைந்துக் கொண்டிருக்கிறது. ஆகையால் பழைய முடிந்து போன
விஷயங்களை மறந்து விடுங்கள்.
கேள்வி : கர்ம யோகி குழந்தைகளாகிய நீங்கள் எந்த பயிற்சியை நிரந்தரமாக செய்ய வேண்டும்?
பதில்: இப்போது சரீர நிர்வாகத்திற்காக தேகத்தில் வரலாம். அவ்வப்போது ஆத்ம உணர்வுடையவராக
வேண்டும். தேகத்தின் நினைவில்லாôமல் கர்மம் செய்ய முடியாது. ஆகவே, தேக உணர்வில் வந்து கர்மம்
செய்தீர்கள். பிறகு ஆத்ம அபிமானி ஆவதற்கு பயிற்சி செய்யுங்கள். இப்படிப்பட்ட பயிற்சியை குழந்தைகளாகிய
உங்களைத் தவிர வேறு யாரும் செய்ய முடியாது.
பாடல் : விழித்தெழுங்கள் மணப்பெண்களே விழித்தெழுங்கள்......
ஓம் சாந்தி. இனிமையிலும் இனிமையான ஆத்மாக்கள் அல்லது குழந்தைகள் இந்த பாடலை கேட்டீர்கள்
என ஆன்மீகத் தந்தை கூறுகின்றார். இதற்கு ஞானத்தின் பாடல் என கூறப்படுகிறது. இந்த பாடல் மிகவும்
நன்றாக இருக்கிறது. ஆத்மாக்களாகிய நீங்கள் இப்போது விழித்தெழுந்து விட்டீர்கள். நாடகத்தின் ரகசியத்தைக்
கூட புரிந்துக் கொண்டீர்கள். பக்தி மார்க்கத்தின் வேடிக்கை பார்த்து முடித்து விட்டீர்கள் அல்லவா? எது
முடிந்து விட்டதோ அது உங்கள் புத்தியில் இருக்கிறது. நீங்கள் உங்களுடைய முடிந்து போன 84 பிறவிகளின்
வரலாற்றை அறிகிறீர்கள். பாபா 84 பிறவிகளின் கதையைக் கூறியிருக்கிறார். அது புது உலகத்திற்கான புது
விஷயங்களாகும். பாபா மூலமாக நீங்கள் புது விஷயங்களைக் கேட்கிறீர்கள். பாபா குழந்தைகளுக்கு தைரியம்
அளிக்கின்றார். குழந்தைகளே, இப்போது புது உலகத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் பழைய விஷயங்களை
மறந்து விடுங்கள். இந்த வேத சாஸ்திரங்கள் போன்ற பக்தி மார்க்கத்தின் விஷயங்கள் அனைத்தும் அழியப்
போகின்றன. அங்கே பக்தி மார்க்கத்தின் அடையாளம் எதுவும் இருக்காது. இங்கேயோ பக்தி மார்க்கத்தின்
பலன் கிடைக்கிறது. குழந்தைகளுக்கு தந்தை வந்து பலனை அளிக்கிறார். தந்தை எப்படி வந்து பக்தியின்
பலனை அளிக்கிறார் என குழந்தைகள் அறிகிறீர்கள். யார் அதிகமாக பக்தியை செய்தார்களோ அவர்களுக்கு
நிச்சயம் அதிகப் பலன் கிடைக்கும். ஞானத்தின் முயற்சி கூட அவர்கள் நிறைய செய்வார்கள். ஆத்மாக்களாகிய
நாம் அதிகமாக பக்தி செய்திருக்கிறோம் என நீங்கள் அறிகிறீர்கள். நிச்சயம் ஞானத்தில் கூட அவர்கள் வேக
மாகச் செல்வார்கள். அப்போது இந்த லஷ்மி நாராயணரைப் போல உயர்ந்த பதவி பெறுவார்கள். இப்போது
ஞானம் மற்றும் யோகத்திற்காக நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். ஆத்ம உணர்வுடையவராக இருக்க வேண்டும்.
பிறகு தேகதாரியாகவும் இருக்க வேண்டும். கர்மம் செய்தாலும் தந்தையை நினைக்க வேண்டும். தேகம்
இல்லாமல் நாம் கர்மம் செய்ய முடியாது. பாபாவை நினைக்க வேண்டும். இது சரியே, ஆனால் தன்னை
ஆத்மா என்று புரிந்துக் கொள்ள வேண்டும். தேகத்தை மறந்து விட்டால் வேலை செய்ய முடியாது. வேலை
செய்யத்தான் வேண்டும். தந்தையின் நினைவில் நிறைய ஆனந்தம் இருக்கிறது. உட்கார்ந்தாலும் எழுந்தாலும்
நடந்தாலும், போனாலும், வந்தாலும் தந்தையை நினையுங்கள். இருப்பினும் வயிற்றுக்கு உணவு வேண்டும்.
ஆத்ம உணர்வுடையவராக இருக்க வேண்டும். குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு யாரும் இந்த
நேரத்தில் ஆத்ம உணர்வுடையவர்களாக இல்லை. தன்னை ஆத்மா என்று ஒரு வேளை புரிந்துக் கொள்ளலாம்.
ஆனாலும் பரமாத்மாவின் அறிமுகம் கிடையாது. நாம் ஆத்மா அழிவற்றவர்கள், இந்த உடல் அழியக் கூடியது
என்று கூட புரிந்திருக்கலாம். ஆனால் இதைப் புரிந்திருப்பதால் விகர்மம் அழியாது. புண்ணிய ஆத்மா பதீத
ஆத்மா என்று கூட கூறுகிறார்கள். நான் ஆத்மா இது என்னுடைய உடல். இதுவோ பொதுவான விஷயமாகும்.
முக்கியமான விஷயம் என்னை நினையுங்கள் என பாபா புரிய வைக்கிறார். சரீர நிர்வாகத்திற்காக தேக
உணர்வில் வர வேண்டும். தேகத்திற்கு உணவு கொடுக்க வேண்டும். தேகம் இல்லாமல் எதுவும் செய்ய
முடியாது. ஒவ்வொரு பிறவியிலும் தங்களின் சரீர நிர்வாகத்திற்கான காரியத்தைச் செய்து வருகிறீர்கள். கர்மம்
செய்தாலும் தன்னுடைய மணவாளனை நினைக்க வேண்டும். அந்த மணவாளனைப் பற்றி யாருக்கும் தெரியாது.
அந்த மணவாளன் அல்லது தந்தையிடமிருந்து நமக்கு சொத்து கிடைக்கிறது. மேலும் அவருடைய நினைவில்
பாவங்கள் அழியும். இதை யாரும் புரிய வைக்க வில்லை. குழந்தைகளாகிய நீங்கள் புது விஷயங்களைக்
கேட்கிறீர்கள். வீட்டிற்குச் செல்வதற்கு நமக்கு வழி கிடைத்து விட்டது என்று புரிந்துக் கொள்கிறீர்கள். நம்முடைய
வீட்டிற்குச் சென்று பிறகு ராஜாங்கத்திற்கு வருவீர்கள். அப்பா புதிய கட்டிடம் கட்டுகிறார் என்றால் நிச்சயமாக
அங்கு சென்று தங்குவோம் என்று இருக்கும் அல்லவா? இப்போது உங்களுக்கு வழி கிடைத்து விட்டது.
இதை வேறு யாரும் அறியவில்லை. எவ்வளவு தான் யாகம், தவம் போன்றவைகள் செய்தாலும், தலையை
உடைத்துக் கொண்டாலும் யாரும் சத்கதியைப் பெற முடியாது. இந்த உலகத்திலிருந்து அந்த உலகத்திற்குச்
செல்ல முடியாது. இதையும் புரிந்துக் கொள்ள வேண்டும். சாஸ்திரங்களில் லட்சக்கணக்கான வருடங்கள் என
எழுதி விட்டனர். ஆகையால் மனிதர்களின் புத்தி வேலை செய்வதில்லை. நேற்றைய விஷயம் என்பதை
25.07.2016
(2/4)
நீங்கள் நன்கு புரிந்துக் கொளள முடியும். பாரதம் சொர்க்கமாக இருந்தது. நாம் ஆதி சனாதன தேவி தேவதா
தர்மத்தினராக இருந்தோம். தேவி தேவதா தர்மம் மிகவும் சுகத்தைக் கொடுக்கக் கூடியதாகும். பாரதத்தைப்
போன்று சுகம் வேறு யாரும் பெற முடியாது. சொர்கத்தில் வேறு தர்மத்தைச் சார்ந்தவர்கள் போக முடியாது.
உங்களைப் போன்று சுகம் வேறு யாருக்கும் கிடைக்காது. எவ்வளவு வேண்டுமானாலும் முயற்சி செய்யட்டும்.
பணத்தை செலவு செய்யட்டும். இருப்பினும் சொர்க்கத்தில் கிடைத்த சுகம் அவர்களுக்குக் கிடைக்காது. சிலருக்கு
ஆரோக்கியம் நன்றாக இருக்கும் செல்வம் இருக்காது. சிலருக்கோ செல்வம் நிறைய இருக்கும். ஆரோக்கியம்
இருக்காது. இதுவே துக்க உலகம் ஆகும். ஆகவே பாபா கூறுகின்றார்லி ஓ, ஆத்மாக்களே ! விழித்தெழுங்கள்......
இப்போது உங்களுக்கு ஞானத்தின் மூன்றாவது கண் கிடைத்திருக்கிறது. எவ்வளவு விழிப்புணர்வு வந்திருக்கிறது.
நீங்கள் முழு உலகின் வரலாறு புவியியலை அறிகிறீர்கள். பாபா எல்லாம் அறிந்தவர் அல்லவா? இதனுடைய
பொருள் அனைவரின் மனதையும் அறிந்திருக்கிறார் என்பதல்ல. இவர் யார் எவ்வளவு புரிய வைக்கின்றார்.
எவ்வளவு தூய்யைமாக இருக்கிறார், எவ்வளவு பாபாவை நினைவு செய்கிறார். இப்படி ஒவ்வொருவரைப்
பற்றியும் நான் ஏன் சிந்திக்க வேண்டும்.... ஆத்மாக்களாகிய நீங்கள் தங்களுடைய பரம்பிதா பரமாத்மாவை
நினைக்க வேண்டும் என்று வழியைக் காண்பிக்கிறேன். இந்த சிருஷ்டி சக்கரத்தைப் புத்தியில் வைக்க வேண்டும்.
ஆத்ம உணர்வுடையவராக நிச்சயம் ஆக வேண்டும். தேக உணர்வுடைய காரணத்தால் உங்களுக்கு இந்த
துர்கதி ஏற்பட்டிருக்கிறது. இப்போது நீங்கள் பாபாவை நினைக்க வேண்டும். வீட்டிலிருந்தாலும் தாமரை மலருக்குச்
சமமாக மாற வேண்டும். நீங்கள் சுய தரிசன சக்கரதாரியாகவும் இருக்கிறீர்கள். தேவதைகளுக்கு சங்கு போன்றவை
கள் கிடையாது. இந்த ஞான சங்கு பிராமணர்களாகிய உங்களுக்குத்தான் ! சீக்கியர்கள் சங்கு ஊதுகிறார்கள்.
மிகப் பெரிய ஒலி எழுப்புகிறார்கள். நீங்கள் கூட இந்த ஞானத்தைக் கொடுக்கிறீர்கள் என்றால், மிகப் பெரிய
அவையில் ஒலி பெருக்கி வைக்கிறீர்கள். இங்கே நீங்கள் ஒலி பெருக்கி வைக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆசிரியர் படிக்க வைக்கிறார் என்றால், ஒலி பெருக்கி வைப்பார்களா என்ன? இங்கே சிவபாபாவை மட்டும்
நினைவு செய்தீர்கள் என்றால், பாவங்கள் அழியும். நான் சர்வ சக்திவான் அல்லவா? நீங்கள் ஒலி பெருக்கி
வைக்கிறீர்கள் என்றால் அதாவது நீண்ட தொலைவிற்கு ஒலியை கேட்கலாம். இன்னும் போகப் போக அதுவும்
பயன்படும். மரணம் எதிரிலேயே இருக்கிறது என்பதை நீங்கள் சொல்ல வேண்டும். இப்போது அனைவரும்
திரும்பப் போக வேண்டும். மகா பாரத போர் கூட எதிரில் நிற்கிறது. மகா பாரத போர் நடந்தது, அழிவு
ஏற்பட்டது என்று கூட கீதையில் எழுதப்பட்டிருக்கிறது. சரி, பிறகு என்ன நடந்தது. பாண்டவர்களும் கரைந்து,
மறைந்தனர். முதலில் வினாசம் நடந்திருந்தால் பாரத கண்டமே காலியாகி இருக்கும், பாரதமோ அழிவற்ற
கண்டம், காலியாகாது என பாபா புரிய வைக்கிறார். பிரளயம் நடட்பபதில்லை என நீங்கள் அறிகிறீர்கள். பாபா
அழிவற்றவர் என்றால் அவருடைய பிறப்பிடமும் அழிவற்ற தாகும். பாபா அனைவருக்கும் சக்ததி வழங்கும்
வள்ளல், சுகம் சாந்தியின் வள்ளல் என்றால், குழந்தைகளுக்கு மகிழ்ச்சி இருக்க வேண்டும். யார் வந்தாலும்
அமைதி வேண்டும் என்கிறார்கள், ஆத்மாவிற்கு இவ்வளவு அமைதி ஏன் நினைவிற்கு வருகிறது. சாந்தி
தாமம் ஆத்மாக்களின் வீடு அல்லவா? வீடு யாருக்கும் நினைவிருக்காதா? வெளி நாட்டில் யாராவது இறந்து
போகிறார்கள் என்றால் அவர்களை அவர்களுடைய பிறந்த பூமிக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என விரும்பு
கிறார்கள். பாரதம் அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளலான துக்கத்தில் இருந்து முக்தி அளிக்கக் கூடிய
சிவபாபாவின் பிறப்பிடம் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தால் அதற்கு நிறைய மதிப்பு கொடுப்பார்கள்.
ஒரே சிவனின் மீது வந்து மலர்களைப் போடுகிறார்கள். இப்போதோ எத்தனை பேர் மீது மலர்களைப் போட்டுக்
கொண்டிருக்கிறார்கள். யார் அனைவருக்கும் சுகம், சாந்தி வழங்குகிறார்களோ அவரின் பெயர் அடையாளத்தை
மறந்து விட்டனர். யார் பாபாவை நன்கு அறிந்திருக்கிறார்களோ அவர்களே சொத்து அடைவதற்கு முயற்சி
செய்கிறார்கள். என்னுடைய பெயரே துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவர் ஆகும். துக்கத்திலிருந்து விடுவித்து
என்ன செய்வார்? சாந்தி தாமத்தில் அமைதியாக இருக்கிறார்கள், சுகதாமத்தில் சுகமாக இருக்கிறார்கள். என்னை
நீங்கள் அறிகிறீர்கள். சாந்திதாமத்தின் இடம் தனியாகும். சுக தாமத்தின் இடம் தனியாகும். இதுவோ துக்க
உலகம் ஆகும். அனைவருக்கும் இந்த சமயம் துக்கமே துக்கமாகும். இப்போது நாம் இவ்வாறு சுகத்திற்குச்
செல்கிறோம். அங்கே 21 பிறவிகளுக்கு எந்த விதமான துக்கமும் இருக்காது என நீங்கள் அறிகிறீர்கள். பெயரே
சுக உலகம் ஆகும். எவ்வளவு இனிமையான பெயர். உங்களுக்கு எந்த துன்பத்தையும் கொடுக்கவில்லை என
பாபா கூறுகின்றார். அப்பாவை மற்றும் ஆஸ்தியை நினைக்க வேண்டும். தன்னை ஆத்மா என உணர
வேண்டும். இந்த ஞானத்தை பாபா உங்களுக்கு கற்பித்துக் கொண்டிருக்கின்றார். சத்யுகத்தில் ஆத்மாவின்
ஞானம் இருக்கிறது. ஆத்மாக்களாகிய நாம் இந்த உடலை விட்டு விட்டு இன்னொரு உடலை எடுப்போம்.
இதற்கு ஆத்ம உணர்வு என்று பெயர். இது ஆன்மீக ஞானம் ஆகும். இதை வேறு யாரும் கொடுக்க முடியாது.
ஆத்ம தந்தை வந்து ஆத்மாவிற்கு ஞானத்தை அளிக்கிறார். ஒவ்வொரு 5000 வருடத்திற்குப் பிறகும் கொடுக்கிறார்.
மனிதர்கள் முற்றிலும் காரிருளில் இருக்கிறார்கள். இப்போது உங்களுக்கு வெளிச்சம் கிடைத்திருக்கிறது. நீங்கள்
அறியாமையின் தூக்கத்திலிருந்து விழித்துள்ளீர்கள். அனைத்து மணப்பெண்களுக்கும் மணவாளன் ஒரு பாபா
25.07.2016
(3/4)
ஆவார். நான் உங்களுடைய தந்தை, மணவாளன், குருவிற்கெல்லாம் குரு, சுப்ரீம் டீச்சர் என பாபா கூறுகின்றார்.
அனைத்து குருக்களுக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல் ஒரேயொரு சத்குரு ஆவார். குழந்தைகளே நான்
அனைவருக்கும் சத்கதி அளிக்கிறேன் என கூறுகின்றார். முக்திக்கு(கதி) பிறகு சத்கதி கிடைக்கிறது.
ஒவ்வொரு ஆத்மாவும் திரும்பப் போக வேண்டும் என பாபா புரிய வைக்கிறார். ஆத்மா தான்
சதோபிரதானமாக, சதோ, ரஜோ, தமோ ஆகிறது. ஒரு சிலருக்கு மிகவும் குறைந்த நடிப்பே ஆகும். வந்தனர்,
சென்றனர். கொசு கூட்டத்தைப் போன்று பிறக்கின்றனர். இறக்கின்றனர் பாபாவிடமிருந்து ஆஸ்தியை
அடைவதில்லை. பாபாவிடமிருந்து தூய்மை, சுகம், சாந்தி என்ற சொத்து எடுக்கப்படுகிறது. பாபா ஆத்மாக்களாகிய
உங்களுக்குப் புரிய வைக்கின்றார். பாபா நிராகாரர் ஆவார். அவரும் இந்த வாய் மூலமாக வந்து புரிய
வைக்கின்றார். சிவபாபாவின் கோவில்கள் கூட மிகவும் உயர்ந்ததிலும் உயந்ததாகக் கட்டுகிறார்கள். தீர்த்த
யாத்திரைகள், மேளாவில் கலந்துக் கொள்ள எவ்வளவு தொலைவு செல்கிறார்கள். மேலே குடிப்பதற்காக யாராவது
ஞான அமிர்தத்தை வைத்திருக்கிறார்களா? எவ்வளவு செலவு செய்கிறார்கள். அரசாங்கம் கூட அவர்களுக்காக
எவ்வளவு ஏற்பாடுகளை செய்ய வேண்டியிருக்கிறது. தொல்லைகள் ஏற்படுகிறது. தீர்த்த யாத்திரைகளுக்கு
சிறிய குழந்தைகளை எப்படி அழைத்து போவார்கள். குழந்தைகளை யாரிடமாவது பார்த்துக் கொள்ளும் படி
விட்டு விட்டுச் செல்கிறார்கள். உடன் அழைத்துப் போவதில்லை. இரண்டும் மூன்று மாதங்கள் யாத்திரை
செய்கிறார்கள். இங்கே நீங்கள் வருகிறீர்கள், நீங்கள் உட்கார்ந்து கேட்க வேண்டும் படிக்க வேண்டும். சிறிய
குழந்தைகள் கேட்க மாட்டார்கள். இங்கே நீங்கள் யோகம் மற்றும் ஞானத்தைக் கற்றுக் கொள்ள வந்துள்ளீர்கள்.
பாபா வந்து ஞானத்தைக் கூறுகிறார் என்றால், எந்த ஒரு சத்தமும் வரக் கூடாது. இல்லை என்றால் கவனம்
சிதறும். அமைதியாக அமர்ந்து கவனம் கொடுத்து கேட்க வேண்டும். யோகா மிகவும் எளிதாகும். ஏதேனும்
வேலையை செய்துக் கொண்டே இருங்கள். புத்தியின் தொடர்பு இருக்கட்டும். பாபாவின் நினைவிருப்பதால்
மிகுந்த வருமானம் கட்டாயம் கிடைக்கிறது. நாம் மிகவும் ஆரோக்கியமாக மாறுவோம் என நீங்கள் அறிகிறீர்கள்.
தனக்குத் தானே பேசிக் கொள்ள வேண்டும். பாபாவின் நினைவிலிருந்து தங்களின் கையினால் உணவை
சமைக்க வேண்டும். கைகளினால் வேலை செய்யுங்கள், கூடவே தங்களின் பாபாவையும் நினையுங்கள்.
உங்களுக்கும் நன்மை நடக்கும். மேலும் நினைவில் இருப்பதால் பொருளும் நன்றாக உருவாகும். உங்களுக்கு
உலகத்தின் இராஜ்ய பதவி கிடைக்கிறது. நீங்கள் இங்கே இலஷ்மி நாராயணன் ஆவதற்காக வந்திருக்கிறீர்கள்.
அனைவரும் நாங்கள் சூரிய வம்சத்தினராவோம் என கூறுகிறார்கள்.
நம்முடைய மம்மா பாபா இந்த நேரத்தில் பிரம்மா சரஸ்வதி என நீங்கள் அறிகிறீர்கள். அடுத்த
பிறவியில் இலஷ்மி நாராயணன் ஆவார்கள். எதிர் காலத்தில் யார் என்ன ஆவர்கள் இப்படி யாருடைய பிறவி
பற்றியும் அறியவில்லை. நேரு என்ன ஆவார் என யாருக்குத் தெரியும். சரி, சிறிது தானம் செய்திருந்தால்
இங்கே நல்ல குலத்தில் பிறவி எடுப்பார். இப்போது உங்களுக்கு முழுமையாகத் தெரிகிறது. இப்போது இவர்
களுடைய பெயர் ஆதி தேவ் பிரம்மா, ஆதி தேவி சரஸ்வதி. அவர்களே சொர்க்கத்திற்கு அதிபதி ஆவார்கள்.
சரி, இவர்களின் குழந்தைகளும் உடன் இருக்கிறார்கள். அவர்களும் நாங்கள் சொர்கத்திற்கு அதிபதி ஆவோம்
என கூறுவார்கள். இதுவோ உறுதி யாகும். சூட்சும வதனத்தில் கூட நீங்கள் பார்க்கிறீர்கள். தேவிகளின்
கோவில்களில் கூட நிறைய திருவிழாக்கள் நடைபெறுகின்றது. இப்போது ஜகதம்பாவோ ஒருவரே ஆவார்.
அவருடைய தோற்றமும் ஒன்றே இருக்க வேண்டும். மம்மாவையும் கூட நீங்கள் பார்க்கிறீர்கள். குழந்தைகாளகிய
உங்களின் தோற்றமும் இருக்கிறது பிறகு அதர் குமாரி என பெயர் வைத்துவிட்டனர். இதுவும் நாமே
மாறுகிறோம் என நீங்கள் அறிகிறீர்கள். நாம் அனைவரும் பிரம்மா குமார்லிகுமாரி ஆவோம். திருமணம்
ஆனவர்களும் நாங்கள் பிரம்மா குமார்லிகுமாரி, ஒரு தந்தையின் குழந்தைகள் என கூறுகிறார்கள். உங்களுடைய
நினைவு சின்னமே ஆகும். நீங்கள் அமர்ந்து இந்த முழு ஞானத்தை அளிக்கிறீர்கள், இந்த தில்வாடா கோவில்
மிக அர்த்தத்துடன் இருக்கிறது. ஆனால் இதை நீங்கள் தான் புரிய வைக்க முடியும். நாம் ஸ்தாபனை செய்துக்
கொண்டிருக்கிறோம், இராஜயோகத்தால் ஸ்ரீமத்படி பாரதத்தை சொர்க்கமாக மாற்றிக் கொண்டிருக்கிறோம் என
நீங்கள் அறிகிறீர்கள்.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை
வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
25.07.2016
(4/4)
தாரணைக்கான முக்கிய சாரம் :
1. ஞானம் மற்றும் யோகத்தின் மீது முழு கவனம் வைக்க வேண்டும். கேட்கும் போது மிகவும்
சாந்தமாக ஒரு முகத்துடன் அமர வேண்டும். கர்மயோகியாகவும் ஆக வேண்டும்.
2. பாபா வீட்டிற்கு வழியை காண்பித்திருக்கிறார் அதை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும்.
சுய தரிசன சக்கரதாரி ஆவதன் கூடவே ஞான சங்கையும் ஊத வேண்டும்.
வரதானம் : பொறுப்புகளை கவனித்துக் கொண்டிருந்தாலும் ஆகாரி மற்றும் நிராகாரி நிலையின்
பயிற்சி மூலமாக சாட்சாத்கார மூர்த்தி ஆகுக !
சாகார ரூபத்தில் இவ்வளவு பெரிய பொறுப்புக்களை பார்த்துக் கொண்டிருந்தாலும் ஆகாரி மற்றும் நிராகாரி
நிலையின் அனுபவத்தை செய்வித்துக் கொண்டே இருப்பதை போன்று அப்பாவைப் பின்பற்றுங்கள். சாகார
ரூபத்தில் ஃபரிஸ்தா நிலையை அனுபவம் செய்யுங்கள். யார் எவ்வளவு தான் அசாந்தி அல்லது குழப்பத்தில்
பயந்து தங்கள் முன் வந்தாலும் தங்களின் ஒரு பார்வை, உள்ளுணர்வு மற்றும் நினைவின் சக்தி அவர்களை
முற்றிலும் சாந்தமாக்கும். உடலின் உணர்வில் வந்தாலும் அவ்யக்த நிலையை அனுபவம் செய்தால் தான்
சாட்சாத்கார மூர்த்தி என்று கூறுவார்கள்.
சுலோகன் : யார் உண்மையான இரக்க மனம் உடையவர்களோ அவர்களுக்கு
தேகம் மற்றும் தேக அபிமானத்தின் கவர்ச்சி ஏற்படாது.
(1/4)
26
26.07.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! நீங்கள் தந்தைக்குச் சமானமாக உண்மையிலும் உண்மையான
(பைகம்பரர்) தூதராக வேண்டும். அனைவருக்கும் வீட்டிற்கு செல்வதற்கான செய்தியை
கொடுக்க வேண்டும்.
கேள்வி: தற்காலத்தில் மனிதர்களின் புத்தி நாள் முழுவதும் எந்த பக்கம் அலைகிறது?
பதில்: நாகரீகத்தின் பக்கம். மனிதர்களை கவருவதற்காக அநேகவிதமான ஃபேஷன் நாகரீக நடைமுறை
களைக் கடைப்பிடிக்கிறார்கள். இந்த நாகரீகத்தை சித்திரங்களிலிருந்து தான் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். பார்வதி
கூட இது போல நாகரீகமாயிருந்தார், தலைமுடி அலங்காரம் செய்து கொண்டிருந்தார் என்று நினைக்கிறார்கள்.
குழந்தைகளாகிய நீங்கள் இந்த பதீத உலகத்தில் ஃபேஷன் செய்யக் கூடாது. நான் உங்களை எப்பேர்ப்பட்ட
உலகிற்கு அழைத்துச் செல்கிறேன் என்றால் அங்கு இயல்பான அழகு இருக்கும். ஃபேஷன் செய்ய வேண்டிய
அவசியம் இருக்காது.
பாடல்: தாயும் நீயே, தந்தையும் நீயே.....
ஓம் சாந்தி. குழந்தைகள் பாட்டைக் கேட்டீர்கள். மகிமை பாடும் பொழுது புத்தி மேலே சென்று
விடுகிறது. ஆத்மா தான் தந்தைக்கு அவரே படகோட்டி ஆவார், பதீத பாவனர் ஆவார் அல்லது உண்மையிலும்
உண்மையான தூதர் ஆவார் என்று கூறுகிறது. தந்தை வந்து ஆத்மாக்களுக்கு செய்தி அளிக்கிறார். மேலும்
அவர்களுக்கு மெஸஞ்ஜர் (தூதர்) அல்லது பைகம்பர் என்று கூறுகிறார்கள். ஒருவர் சிறியவராக அல்லது
பெரியவராக இருப்பார். உண்மையில் அவர்கள் மெúஸஜ் அல்லது செய்தி ஒன்றும் கொடுப்பதில்லை. அப்படி
பொய்யான மகிமை செய்து விட்டுள்ளார்கள். ஒருவரைத் தவிர இந்த மனித சிருஷ்டியில் வேறு யாருக்கும்
மகிமை இல்லை என்பதை குழந்தைகள் புரிந்துள்ளார்கள். எல்லோரையும் விட அதிகமான மகிமை இந்த
இலட்சுமி நாராயணருக்கு உள்ளது. ஏனெனில் இவர்கள் புது உலகத்தின் அதிபதி ஆவார்கள். அதையும்
பாரதவாசி அறிந்துள்ளார்கள். பாரதம் பழமையான தேசமாகும் என்பதை மட்டும் உலகத்தார் அறிந்துள்ளார்கள்.
பாரதத்தில் தான் தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. கிருஷ்ணரைக் கூட கடவுள் என்று கூறி
விடுகிறார்கள். பாரதவாசிகள் இவர்களை பகவான் பகவதி என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த பகவான் பகவதி
சத்யுகத்தில் ஆட்சி புரிகிறார்கள் என்பது யாருக்குமே தெரியாது. பகவான் தேவி தேவதைகளின் இராஜ்யத்தை
ஸ்தாபனை செய்தார். நாம் பகவானின் குழந்தைகள் ஆவோம். எனவே நாம் கூட பகவான் பகவதியாக
இருக்க வேண்டும் என்று புத்தியும் கூறுகிறது. எல்லோரும் பகவானின் குழந்தைகள் என்றால், நாம் கூட
பகவான் பகவதியாக இருக்க வேண்டும். எல்லோரும் ஒருவருடைய குழந்தைகள் ஆவார்கள் அல்லவா?
ஆனால் பகவான் பகவதி என்று கூற முடியாது. அவர்களை தேவி தேவதைகள் என்று கூறுவார்கள். இந்த
எல்லா விஷயங்களையும் தந்தை வந்து புரிய வைக்கிறார். பாரதவாசிகளாகிய நாம் முதலில் புது உலகத்தில்
இருந்தோம் என்று பாரதவாசிகள் கூறுவார்கள். புதிய உலகத்தையோ எல்லோரும் விரும்புகிறார்கள். தேசபிதா
கூட புது உலகம், புதிய இராம இராஜ்யத்தை விரும்பினார். ஆனால் இராம இராஜ்யத்தின் பொருளை முற்றிலுமே
புரியாமல் உள்ளார்கள். தற்காலத்தில் மனிதர்களுக்கு தங்களுடைய அகங்காரம் எவ்வளவு இருக்கிறது!
கலியுகத்தில் இருப்பது கல்புத்தி. சத்யுகத்தில் இருப்பது தங்க புத்தி. ஆனால் இந்த அறிவு யாருக்குமே
இல்லை. பாரதத்தில் தான் சத்யுகத்தில் தங்க புத்தி இருந்தது. இப்பொழுது பாரதத்தில் கலியுகத்தில் கல்புத்தியாக
உள்ளார்கள். மனிதர்கள் இதையே சொர்க்கம் என்று நினைக்கிறார்கள். சொர்க்கத்தில் விமானங்கள் இருந்தன.
பெரிய பெரிய அரண்மனைகள் இருந்தன என்பார்கள். அவை எல்லாமே இப்பொழுதும் உள்ளது. விஞ்ஞானம்
எவ்வளவு முன்னேற்றம் அடைந்துள்ளது. எவ்வளவு சுகம் இருக்கிறது. நாகரீகம் (ஃபேஷன்) ஆகியவை
எவ்வளவு இருக்கிறது. நாள் முழுவதும் புத்தி நாகரீக நடைகளுக்குப் பின்னால் தான் இருக்கிறது. செயற்கையான
அழகுடைன் இருப்பதற்காக தலை முடி அலங்காரத்தை எப்படியெல்லாம் செய்கிறார்கள். எவ்வளவு செலவு
செய்கிறார்கள்! இந்த எல்லா நாகரீகமும் சித்திரங்களிலிருந்து வெளி வந்துள்ளது. பார்வதியை போல நாங்கள்
தலைமுடி அலங்காரம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். இவை எல்லாமே கவருவதற்காகத் தான்
அமைக்கிறார்கள். முன்பெல்லாம் பாரசீகப் பெண்கள் யாராவது தம்மைப் பார்த்து மோகம் கொண்டு விடக்
கூடாது என்பதற்காக முகத்தின் மீது கறுப்பு வலையை அணிந்திருந்தனர். இதற்கு பதீத (துய்மையற்ற)
உலகம் என்றே கூறப்படுகிறது.
தந்தையும் நீயே, தாயும் நீயே! என்று பாடுகிறார்கள். ஆனால் இதை யாருக்குக் கூற வேண்டும்? தாய்
தந்தை என்பவர்கள் யார் என்பது கூடத் தெரியாது. தாய் தந்தையர் அவசியம் ஆஸ்தியை அளித்திருக்கக்
கூடும். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு சுகத்தின் ஆஸ்தி அளித்திருந்தார். பாபா நாங்கள் உங்களைத்
தவிர வேறு யார் கூறுவதையும் கேட்க மாட்டோம் என்று கூறவும் செய்கிறார்கள். சிவபாபாவின் மகிமை
26.07.2016
(2/4)
பாடப்படுகிறது என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். நானே பாவனமாக இருந்தேன், இப்பொழுது
பதீதமாக ஆகியுள்ளேன் என்று சுயம் பிரம்மாவின் ஆத்மா கூட கூறுகிறார். பிரம்மாவின் குழந்தைகள் கூட
அவ்வாறே கூறுவார்கள். பிரம்மா குமார் குமாரிகளாகிய நாங்களே தேவி தேவதைகளாக இருந்து பின்னர் 84
பிறவிகளின் கடைசியில் பதீதமாக ஆகி உள்ளோம். யார் முதல் நம்பரில் பாவனமாக இருந்தாரோ, அவரே
முதல் நம்பர் பதீதமாக ஆகி உள்ளார். எப்படி தந்தையோ, அப்படியே குழந்தைகள். சுயம் இவரும் கூறுகிறார்.
சிவபாபாவும் கூறுகிறார் லி நான் இவருடைய அநேக பிறவிகளின் கடைசியில் வருகிறேன். அவர் தான் முதல்
நம்பரில் பூஜைக்குரிய இலட்சுமி நாராயணரின் பரம்பரையில் இருந்தார். இப்பொழுது இருப்பது சங்கமம்.
நீங்கள் கலியுகத்தில் இருந்தீர்கள். இப்பொழுது சங்கமயுகத்தினராக ஆகி உள்ளீர்கள். தந்தை சங்கமத்தில் தான்
வருகிறார். நாடகப்படி குழந்தைகளும் விருத்தி அடைகிறார்கள். இப்பொழுது குழந்தைகளுக்கு ஞானம்
கிடைத்துள்ளது. நாமே தேவதைகளாக இருந்தோம். பிறகு க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர்களாக ஆனோம்.
முழு சக்கரத்தை நல்ல முறையில் நீங்கள் அறிந்துள்ளீர்கள். இது மிகவும் சுலபமாகும். நாம் 84 பிறவிகள்
எடுத்தோம். அநேகருடைய புத்தியில் இதுவும் பதிவதில்லை. மாணவர்களிடையே வரிசைக்கிரமமாக இருக்கவே
இருப்பார்கள். வலது புறத்திலிருந்து ஆரம்பிக்கிறோம். முதல் தரம், இரண்டாம் தரம் மற்றும் மூன்றாம் தரம்.
பெண் குழந்தைகள், அவர்களே எங்களுடைய புத்தி மூன்றாம் தரமாக உள்ளது என்கிறார்கள். எங்களால்
யாருக்கும் புரிய வைக்க முடிவதில்லை. மனம் மிகவுமே விரும்புகிறது. ஆனால் பேச முடியவில்லை. பாபா
என்ன செய்வது? இது தங்களது கர்மங்களின் கணக்கு வழக்கு ஆகும். நான் உங்களுக்கு கர்மம், அகர்மம்
மற்றும் விகர்மத்தின் கதி பற்றிய ஞானத்தைக் கூறுகிறேன் என்று இப்பொழுது தந்தை கூறுகிறார். கர்மம்
செய்ய வேண்டி உள்ளது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். மூன்றாம் தர புத்தி உடையவர்
களால் இந்த விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியாது. இது இருப்பதே இராவண இராஜ்யமாக. ஆனால்
இது யாருக்குமே தெரியாது. இராவண இராஜ்யத்தில் மனிதர்களோ விகர்மங்கள் (தீயச் செயல்கள்) தான்
செய்கிறார்கள். எனவே கீழே தான் விழுகிறார்கள். துக்கமான உலகத்தில் தான் குருவிடம் செல்கிறார்கள்.
முக்தியில் அழைத்து செல்வார் என்று சத்கதிக்காகத் தான் குருவிடம் செல்கிறார்கள். அது நிர்வாண தாமம்
ஆகும் லி சப்தத்திற்கு அப்பாற்பட்ட இடம். மனிதர்கள் தங்களை வானப்பிரஸ்தி என்று கூறுகிறார்கள். அதுவோ
சொல்லும் அளவிற்கு மட்டும் தான். வானப்பிரஸ்தியர்களின் சபைக் கூட இருக்கிறது. எல்லா சொத்து ஆகிய
வற்றையும் குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு குருவிடம் போய் உட்கார்ந்து கொள்கிறார்கள். உணவு, உடை,
ஆகியவையோ நிச்சயம் குழந்தைகள் தான் வழங்குவார்கள். ஆனால் வானப்பிரஸ்தம் என்பதன் பொருளை
யாருமே புரியாமல் உள்ளார்கள். நாம் நிர்வாணதாமம் செல்ல வேண்டும் என்பது யாருடைய புத்தியிலும்
வருவதில்லை. நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும். அவர்கள் ஒன்றும் வீடு என்று நினைப்பது இல்லை.
அவர்கள் ஜோதி ஜோதியுடன் கலந்து போய் விடுவோம் என்று நினைக்கிறார்கள். நிர்வாணதாமம் இருப்பதற்கான
இடமாகும். முன்பெல்லாம் 60 வருடங்களுக்குப் பிறகு வானபிரஸ்தம் செல்வார்கள். இது ஒரு நியமமாக
இருந்தது. இப்பொழுது கூட இது போல செய்கிறார்கள். சப்தத்திற்கு அப்பாற்பட்ட இடத்திற்கு யாருமே போக
முடியாது என்பதை இப்பொழுது நீங்கள் புரிய வைக்கலாம். இதற்காக ஹே பதீத பாவன பாபா வாருங்கள்!
எங்களை பாவனமாக ஆக்கி வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று தந்தையைத் தான் அழைக்கிறார்கள்.
முக்தி தாமத்தில் ஆத்மாக்களின் வீடு உள்ளது. குழந்தைகளாகிய உங்களுக்கு சத்யுகம் பற்றி கூட புரிய
வைக்கப்பட்டுள்ளது லி அங்கு யார் இருப்பார்கள், எப்படி விருத்தி ஆகிறது, ஜனத்தொகை பற்றி கூட யாருக்கும்
தெரியாது. இராம இராஜ்யத்தில் ஜனத்தொகை எவ்வளவு இருக்கும். குழந்தைகள் ஆகியோர் எப்படி பிறவி
எடுப்பார்கள்? எதுவும் புரியாமல் உள்ளார்கள். நாடகத்தின் சக்கரத்தை யாராவது புரிய வைக்கக் கூடிய வகையில்
எந்த ஒரு வித்துவான், ஆசிரியர் அல்லது பண்டிதர் கூட இல்லை. 84 லட்ச பிறவியின் சக்கரம் எப்படி
இருக்க முடியும்? எவ்வளவு தவறான விஷயங்கள்! முற்றிலுமே நூலுருண்டை சிக்கலாக உள்ளது. தந்தை
கர்மம், அகர்மம், விகர்மம் பற்றிய முழு ரகசியத்தைப் புரிய வைத்துள்ளார் என்பதை இப்பொழுது நீங்கள்
அறிந்துள்ளீர்கள் என்பதை தந்தை புரிய வைக்கிறார். சத்யுகத்தில் உங்களுடைய கர்மம் அகர்மமாக ஆகி
விடுகிறது. அங்கு எந்த ஒரு தீய செயலும் நடப்பதே இல்லை. எனவே கர்மம் அகர்மமாக ஆகி விடுகிறது.
இங்கு மனிதர்கள் என்ன கர்மம் செய்தாலும் அது விகர்மம் ஆகி விடுகிறது.
சிறியவர்கள், பெரியவர்கள் அனைவருக்கும் முழு உலகிற்கும் வானப்பிரஸ்த நிலையாகும் என்பதை
இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். எல்லோரும் (வாணி úஸ பரே) சப்தத்திற்கு அப்பாற்பட்டு
செல்பவர்கள் ஆவார்கள். ஹே பதீத பாவனரே! வாருங்கள். வந்து எங்களை பதீத நிலையிலிருந்து பாவனமாக
ஆக்குங்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் பாவன புது உலகம் இல்லாதவரையும் இங்கு பதீத உலகத்தில்
பாவனமானவர்கள் யாருமே இருக்க முடியாது. இந்த பதீத உலகம் எல்லாமே முடியப் போகிறது. நாம்
மீண்டும் புது உலகத்திற்குச் செல்ல வேண்டும் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். எப்படி செல்வீர்கள். இந்த
முழு ஞானமும் உள்ளது. இது புதிய உலகம். அமரலோகம் அல்லது பாவன உலகத்திற்கான புதிய ஞானமாகும்.
26.07.2016
(3/4)
நீங்கள் இப்பொழுது சங்கமத்தில் அமர்ந்துள்ளீர்கள். மற்ற மனிதர்கள், பிராமணர்களாக இல்லாதோர் அவர்கள்
கலியுகத்தில் இருக்கிறார்கள் என்பதையும் அறிந்துள்ளீர்கள். நாம் அனைவரும் சங்கமத்தில் உள்ளோம்.
சத்யுகத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம். உண்மையில் இது சங்கமயுகமாகும். அதுவோ இருப்பதே சொர்க்கமாக!
அதற்கு சங்கமம் என்று கூறப்படுவதில்லை. சங்கமம் என்பது இப்பொழுது உள்ளது. இந்த சங்கமயுகம் எல்லா
வற்றையும் விட சிறியது ஆகும். இதற்கு லீப் யுகம் என்று கூறப்படுகிறது. இதில் மனிதர்கள் பாவ ஆத்மாவிலிருந்து
தர்ம ஆத்மா ஆகிறார்கள். எனவே இதற்கு தர்மாவு யுகம் என்று கூறப்படுகிறது. கலியுகத்தில் எல்லா மனிதர்களும்
அதர்மத்தினராக இருக்கிறார்கள். அங்கோ எல்லோரும் தர்மாத்மாக்களாக இருப்பார்கள். பக்தி மார்க்கத்தினுடைய
தாக்கம் எவ்வளவு பெரியதாக உள்ளது. கல்லினால் விக்கிரகங்கள் அமைக்கிறார்கள். அவற்றைப் பார்த்தாலே
மனம் மகிழ்ந்து போய் விடும். இது கல்லுக்கு பூஜை ஆகும். சிவனுடைய கோயிலுக்கு பூஜை செய்வதற்காக
எவ்வளவு தூரமான இடங்களுக்கு போகிறார்கள். சிவனுடைய படத்தை வீட்டில் கூட வைக்கலாமே! பிறகு
இவ்வளவு தூர தூரமாகப் போய் ஏன் அலைய வேண்டும்? இந்த ஞானம் இப்பொழுது புத்தியில் வந்துள்ளது.
இப்பொழுது உங்களுடைய கண்கள் திறந்துள்ளன. புத்தியின் கதவு திறந்துள்ளது. தந்தை ஞானம் அளித்துள்ளார்.
பரமபிதா பரமாத்மா இந்த மனித சிருஷ்டியின் விதை ரூபமான ஞானக் கடல், ஞானம் நிறைந்தவராக
இருக்கிறார். ஆத்மா கூட அந்த ஞானத்தை தாரணை செய்கிறது. ஆத்மா தான் ஜனாதிபதி ஆகியோராக
ஆகிறது. மனிதர்களோ தேக அபிமானியாக ஆகி இருக்கும் காரணத்தால் தேகத்திற்குத் தான் மகிமை செய்துக்
கொண்டே இருக்கிறார்கள். ஆத்மா தான் எல்லாமே செய்கிறது என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள்.
ஆத்மாவாகிய நீங்கள் 84 பிறவிகளின் சக்கரம் சுற்றி வந்து முற்றிலுமே துர்க்கதியை அடைந்து விட்டுள்ளீர்கள்.
இப்பொழுது ஆத்மாவாகிய நாம் தந்தையை அடையாளம் கண்டு கொண்டிருக்கிறோம். தந்தையிடமிருந்து
ஆஸ்தி பெற்றுக் கொண்டிருக்கிறோம். ஆத்மா அவசியம் சரீரத்தை தாரணை செய்ய வேண்டி உள்ளது.
சரீரமின்றி ஆத்மாக்கள் எப்படி பேச முடியும்? எப்படி கேட்க முடியும்? நான் நிராகாரமானவன் ஆவேன்
என்று தந்தை கூறுகிறார். நான் கூட சரீரத்தை ஆதாரமாக எடுக்கிறேன். சிவபாபா இந்த பிரம்மா உடலின்
மூலமாக நமக்கு கூறுகிறார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இந்த விஷயங்களை பிரம்மாகுமார் குமாரிகளாகிய
நீங்கள் தான் புரிய வைக்கிறீர்கள். உங்களுக்கு இப்பொழுது ஞானம் கிடைத்துள்ளது. பிரம்மா மூலமாக ஆதி
சனாதன தேவி தேவதா தர்மத்தின் ஸ்தாபனை ஆகிறது. அதே தந்தை இராஜயோகத்தைக் கற்பித்துக்
கொண்டிருக்கிறார். இதில் குழம்ப வேண்டிய அவசியமே இல்லை. சிவபாபா நமக்கு புரிய வைக்கிறார். பின்
நாம் மற்றவர்களுக்குப் புரிய வைக்கிறோம். நமக்கும் கூறுபவர் சிவபாபா தான் ஆவார். நாம் இப்பொழுது
பதீத நிலையிலிருந்து பாவனமாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்று இப்பொழுது நீங்கள் கூறுவீர்கள். இது
இருப்பதே பதீதமான உலகமாக. இராவணனின் இராஜ்யம் அல்லவா? என்று தந்தை புரிய வைக்கிறார்.
இராவணன் பாவ ஆத்மாவாக ஆக்குகிறான். இது வேறு யாருக்கும் தெரியாது. இராவணனினுடைய உருவம்
அமைத்து எரிக்கிறார்கள். ஆனால் எதுவும் புரியாமல் உள்ளார்கள். சீதையை இராவணன் எடுத்துச் சென்றான்,
இப்படி செய்தான்... எத்தனை கதைகளை எழுதி உள்ளார்கள். உட்கார்ந்து கேட்கும் பொழுது அழுது விடுகிறார்கள்.
அவை எல்லாமே கட்டுக் கதைகள். பாபா நமக்கு விகர்மங்களை வென்றவராக (விகர்மாஜீத்) ஆக்குவதற்காக
புரிய வைக்கிறார். என் ஒருவனை மட்டுமே நினைவு செய்யுங்கள் என்று கூறுகிறார். எங்குமே புத்தியை
ஈடுபடுத்தாதீர்கள். சிவபாபா நமக்கு தனது அறிமுகத்தை அளித்துள்ளார். பதீத பாவன தந்தை வந்து தனது
அறிமுகத்தை அளிக்கிறார். நம்மை சொர்க்கத்திற்கு அதிபதியாக ஆக்கிக் கொண்டிருக்கும் அவர் எவ்வளவு
இனிமையான பாபா ஆவார் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட
செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும்
காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. கர்மம், அகர்மம் மற்றும் விகர்மம் பற்றிய கதியை (விளைவு) அறிந்து சிறந்த செயல்களையே
செய்ய வேண்டும். ஞான தானம் செய்து தர்மாத்மா ஆக வேண்டும்.
2. இது வானப்பிரஸ்த நிலையாகும். இந்த கடைசி கணங்களில் பாவனமாக ஆகி பாவன
உலகிற்குச் செல்ல வேண்டும். பாவனம் ஆவதற்கான செய்தியை அனைவருக்கும் அளிக்க
வேண்டும்.
26.07.2016
(4/4)
வரதானம்: பற்றுதலை பற்றற்றதாக மாற்றி விடக் கூடிய சக்தி சொரூபம் ஆவீர்களாக,
சக்தி சொரூபம் ஆக வேண்டும் என்றால் பற்றுதலை பற்றற்றதாக மாற்றி விடுங்கள். தங்களது தேகத்தில்,
சம்பந்தங்களில் ஏதாவது பொருட்களில் எங்காவது பற்றுதல் (ஈர்ப்பு) இருக்கிறது என்றால் மாயை கூட வர
முடியும். மேலும் சக்தி ரூபமாக ஆக முடியாமல் போய் விடும். எனவே முதலில் பற்றற்றவராக ஆகுங்கள்.
அப்பொழுது மாயையின் தடைகளை எதிர் கொள்ள முடியும். தடைகள் வரும் பொழுது கத்துவதற்கு அல்லது
பயப்படுவதற்குப் பதிலாக சக்தி ரூபத்தை தாரணை செய்து கொண்டு விட்டீர்கள் என்றால், தடைகளை வென்றோர்
(விக்கின விநாசகர்) ஆகி விடுவீர்கள்.
சுலோகன்: கருணை என்பது சுயநலமற்றதாகவும் பற்றுதல்களிலிருந்து விடுபட்டதாகவும்
இருக்க வேண்டும், சுயநலத்துடன் கூடியதாக இருக்கக் கூடாது.
(1/4)
27.07.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! இந்த மகாபாரத யுத்தத்தில் பழைய மரம் (சிருஷ்டி) அழிந்து
போகும். அதனால் யுத்தத்திற்கு முன் பாபாவிடம் முழுமையான ஆஸ்தி பெற்றுக் கொள்ளுங்கள்.
கேள்வி : பாபாவுக்கு மாதாக்களின் குழு வேண்டும். ஆனால் அந்தக் குழுவின் விசேஷத்தன்மை
என்னவாக இருக்க வேண்டும்?
பதில் : தேகி அபிமானியாக இருப்பதற்கான முழு முயற்சி செய்கின்ற அப்படிப்பட்ட குழுவாக இருக்க
வேண்டும். நாம் தூய்மையாகி, தூய்மையான உலகத்தை உருவாக்க வேண்டும் என்ற பக்கா நஷா (ஆர்வம்)
அவர்களுக்கு இருக்க வேண்டும். தூய்மையை இழந்து விடக் கூடாது. நஷ்டோமோகா (முற்றிலும் பற்றுதல்
இல்லாத) குழுவாக இருக்க வேண்டும். அப்போது ஏதேனும் அதிசயம் நிகழ்த்திக் காட்டலாம். யார் மீதும்
மோகம் இருக்கக் கூடாது. மோகம் என்ற கயிறு அதிக நஷ்டத்தை ஏற்படுத்தி விடும்.
ஓம் சாந்தி. இனிமையிலும் இனிமையான குழந்தைகள் இதை அறிவார்கள், அதாவது இனிமையான பாபா
நம்மை சொர்க்கவாசி ஆக்குவதற்காக இங்கே வந்துள்ளார். இது குழந்தைகளின் புத்தியில் உள்ளது. ஒவ்வொரு
வருக்கும் இதைப் புரிய வைக்க வேண்டும் லி நாம் ஆத்மா, இந்த நினைவு யாத்திரையினால் தூய்மையாகிறோம்.
எவ்வளவு சகஜமான உபாயம்! தந்தையை நினைவு செய்தால் போதும். குழந்தைகள் அறிவார்கள், பாபா ஒரு
விநாடியில் முக்திலிஜீவன் முக்திக்கான ஆஸ்தி தருகிறார். இப்போது அனைவரும் ஜீவன் பந்தனத்தில் உள்ளனர்.
இராவண இராஜ்யத்தின் கட்டுப்பாட்டில் உள்ளனர். இந்த விஷயத்தை பாபா அறிவார், குழந்தைகள் அறிவார்கள்.
வேறு யாருமே அறியார். குழந்தைகளாகிய உங்களுக்கு நிச்சயம் உள்ளதுலிஎல்லையற்ற தந்தையை நாம்
நினைவு செய்கிறோம் என்றால் ஆத்மாவுக்கு உள்ளுக்குள் மிகுந்த குμ இருக்க வேண்டும். எந்தத் தந்தையை
அரைக்கல்பமாக நினைவு செய்து கொண்டிருந்தோமோ, அந்த தந்தை கிடைத்து விட்டார். துக்கத்தில் தந்தையை
நினைவு செய்து கொண்டே இருக்கின்றனர். நீங்களும் நினைவு செய்தீர்கள். இப்போது நீங்கள் துக்கத்தில்
வந்து நினைவு செய்வதில்லை. யாரை முழு உலகமும் நினைவு செய்கிறதோ, அந்தத் தந்தை வந்துள்ளார்
என்பதை நீங்கள் அறிவீர்கள். பாபா அடிக்கடி புரிய வைத்துள்ளார் லி இங்கே நீங்கள் அமர்ந்திருக்கும் போது
புரிந்து கொள்ளுங்கள் லி நாம் ஆத்மா. பாபா பரந்தாமத்திலிருந்து வந்திருக்கிறார். கல்பலிகல்பமாக தமது வாக்குறுதியின்
படி வருகிறார். பாபாவின் உறுதிமொழி லி நீங்கள் எப்போது அழைக்கிறீர்களோ, மேலும் அரைக்கல்பம் எப்போது
முடிவடைகிறதோ, அப்போது நான் வர வேண்டியுள்ளது. கலியுகத்திற்குப் பிறகு சத்யுகம் வர வேண்டும்
என்றால் நான் வர வேண்டியுள்ளது. இது குழந்தைகளாகிய உங்களுக்கு மட்டும் தான் தெரியும் லி இது சங்கம
யுகம், பாபா வந்து விட்டார். குழந்தைகள் நீங்களும் சேவை செய்கிறீர்கள். ஒவ்வொரு நாளும் அறிமுகம்
கொடுத்துக் கொண்டே செல்கிறீர்கள். பாபாவின் அறிமுகம் அனைவருக்கும் கிடைத்துக் கொண்டே இருக்கிறது.
இங்கே அமர்ந்திருக்கிறீர்கள், அறிந்து கொண்டிருக்கிறீர்கள், எல்லையற்ற பாபா சிவபாபா நமக்கு மீண்டும்
எல்லையற்ற ஆஸ்தி தருவதற்காக வந்துள்ளார். நீங்கள் பாபாலிபாபா என்று சொல்கிறீர்கள் இல்லையா? நாம்
சிவபாபாவிடம் வந்துள்ளோம். சிவபாபாவும் சொல்கிறார், நான் சாதாரண உடலில் வந்திருக்கிறேன், கல்பத்திற்கு
முன்பு போலவே. இதை மறக்கக் கூடாது. மாயா அப்படிப்பட்ட பாபாவை மறக்கும் படியாகச் செய்து விடுகின்றது.
அவரை நினைப்பதன் மூலம் தான் தூய்மை இல்லாத நிலையிலிருந்து தூய்மை ஆக வேண்டியுள்ளது. நீங்கள்
அறிவீர்கள், அனைவருக்கும் சத்கதி அளிப்பவர் ஒரே ஒரு சத்குரு ஆவார். சீக்கியர்களும் பாடுகின்றனர்லிசத்
ஸ்ரீ அகால் என்று. பதீத பாவனர் தான் சத்குரு என்று சொல்லப் படுகிறார். பதீத பாவனா என்று அழைக்கவும்
செய்கின்றனர். ஆத்மா அழைக்கின்றது. இப்போது நீங்கள் அறிவீர்கள், நாம் இங்கே வந்திருக்கிறோம், பாபாவுடன்
நேராகச் சந்திப்பதற்காக. பெரியலிபெரிய மனிதர்கள் ஓருவர் மற்றவருடன் சந்திப்பதற்காகச் செல்கின்றனர்.
அவர்களுக்கு எவ்வளவு மகிமை உள்ளது! மிக விமரிசையாக, ஆடம்பரத்திற்காக குμயின் பேண்டு இசை
முதலியவற்றை இசைக்கின்றனர். இங்கே குப்த வேஷத்தில் வந்திருப்பவர் யார் என்பதை நீங்கள் தான்
அறிவீர்கள். அவர் தூரதேசத்தில் வசிக்கும் பிரயாணி எனச் சொல்லப் படுகிறார்.
நீங்கள் அறிவீர்கள், நாம் ஆத்மாக்கள் பரந்தாமத்தின் நிவாசிகள். இங்கே பயணிகளாகி வந்துள்ளோம்,
பாகத்தை நடிப்பதற்காக. பாபா புரிய வைக்கும் ஒவ்வொரு வார்த்தையும் உலகத்தில் யாருக்குமே தெரியாது.
நீங்கள் பாபாவிடம் கேட்டுக் கொண்டிருக்கிறீôகள். அதை நன்றாக தாரணை செய்ய வேண்டும். பாபா புரிய
வைக்கிறார், நீங்கள் அனைவரும் இந்தக் கர்ம சேத்திரத்தில் பயணிகள். நாம் சாந்திதாமத்தில் வசிப்பவர்கள்.
பிறகு இங்கே டாக்கி (சப்தத்தின்) உலகத்தில் வருகிறோம். நாம் சாந்திதாமத்திலிருந்து வந்த பயணிகள். 84
பிறவிகளின் பாகத்தை இங்கே நடிக்கின்றோம். கடைசியில் இது இறுதி நேரம். ஆக, பாபா வந்துள்ளார் லி
பழைய சிருஷ்டியைப் புதியதாக ஆக்குவதற்காக. இதையும் நீங்கள் அறிவீர்கள். சித்திரமும் தெளிவாக உள்ளது.
சிவபாபா, பிரம்மா மூலம் புது உலகத்தின் ஸ்தாபனை செய்கிறார். கிருஷ்ணர் மூலம், விஷ்ணு மூலம் ஸ்தாபனை
(2/4)
27.07.2016
செய்கிறார் என்பது கிடையாது. பாபா வருவதே பிரம்மா மூலம் சொர்க்கத்தைப் படைப்பதற்காக. பாபா சாதாரண
உடலில் வந்துள்ளார். இந்த உலகமே தூய்மையற்ற உலகம். தூய்மையானவர் ஒருவர் கூடக் கிடையாது.
ஏனெனில் முதல் நம்பரில் உள்ள லட்சுமிலிநாராயணரோ தூய்மையற்றவர் ஆகின்றனர். யார் தூய்மையாக
இருந்தனரோ, அவர்களே முழு அரச பரம்பரையோடு கூடவே தூய்மையற்றவர் ஆகியுள்ளனர். நீங்கள்
அறிவீர்கள், நாம் தெய்வீக தர்மத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தோம். இப்போது அவர்கள் அனைவரும் சூத்திர
தர்மத்தினராக ஆகி விட்டிருக்கிறோம். அமெரிக்கா முதலியவற்றில் பெரியலிபெரிய பணக்காரர்கள் இருக்கலாம்.
ஆனால் சத்யுகத்தின் முன்னால் அமெரிக்கா ஒன்றுமே இல்லை. இவை அனைத்தும் பின்னால் இது போல்
ஆகியிருக்கின்றன. இது அல்ப காலத்தின் பகட்டு. விநாசமோ நடந்தேயாக வேண்டும். குழந்தைகள் உங்களுக்கு
மிக அதிக நஷா இருக்க வேண்டும். நம்மை சொர்க்கத்தின் எஜமானர்களாக ஆக்குபவர் பாபா, அவரைக்
குழந்தைகள் நினைவு செய்வதில்லை என்பது எவ்வளவு பெரிய அதிசயம்! மாயா நினைவு செய்ய விடுவதில்லை.
குழந்தைகள் நீங்கள் இப்போது இது போல் சொல்கிறீர்கள் லி பாபா, மாயா எங்களை நினைவு செய்ய விடுவதில்லை.
அட, பாபா உங்களை 21 பிறவிகளுக்கு சொர்க்கத்தின் எஜமானர்களாக ஆக்குகிறார். அவரை நீங்கள் நினைவு
செய்ய முடியாதா? பிரஜைகளும் கூட சொர்க்கத்தின் எஜமானர்களாக ஆகின்றனர் இல்லையா? அனைவரும்
அங்கே சுகமாக இருப்பார்கள். இப்போதோ அனைவரும் துக்கத்தில் உள்ளனர். பிரதம மந்திரி, ஜனாதிபதி
முதலானவர்களுக்கோ இரவும் பகலும் கவலை இருந்து கொண்டுள்ளது. யுத்தம் முதலியவற்றில் எவ்வளவு
பேர் இறந்து கொண்டே இருக்கின்றனர்! நீங்கள் அறிவீர்கள், மகாபாரத யுத்தமும் கூடப் புகழ் பெற்றதாகும்.
ஆனால் அதில் என்ன நடந்தது என்பது யாருடைய புத்தியிலும் இல்லை. உங்களுக்கு பாபா புத்தியில் பதிய
வைத்துள்ளார். மகாபாரத யுத்தத்தில் அனைவரும் இறந்து போயினர். எவ்வளவு பெரிய மனித சிருஷ்டி!
ஆத்மாக்களின் மரமும் உள்ளது. மரம் முதலில் புதியதாக இருந்தபோது மிகச் சிறியதாக இருந்தது. பிறகு
வளர்ச்சி அடைந்து கொண்டே செல்கிறது. நீங்கள் அறிவீர்கள், முதலில் தெய்விக தர்மம் இருந்தபோது
எவ்வளவு சிறிய மரமாக இருந்தது! ஆதி சநாதன தேவதா தர்மம் இருந்தது. இப்போது எவ்வளவு விதவிதமான
தர்மங்கள் உள்ளன! இந்த மகாபாரத யுத்தத்தின் மூலம் இங்குள்ள அனைத்தும் விநாசமாகி விடும். ஆனால்
இந்த ஞானம் யாரிடமும் இல்லை. இது அதே யுத்தம் தான் என்று அவர்கள் சொல்லலாம். ஆனால் இதனால்
என்ன ஆகப் போகிறது என்பது அவர்களுக்குத் தெரியாது. நீங்கள் இப்போது ஒளியில் இருக்கிறீர்கள். நீங்கள்
அறிவீர்கள், விநாசம் ஆகப் போகிறது, அதனால் மகாபாரத யுத்தத்திற்கு முன் நம்முடைய ஆஸ்தியையோ
அடைந்து கொள்வோம். விஷயமோ மிகவும் சுலபமானது. தூய்மையாகுங்கள், பாபாவை நினைவு செய்யுங்கள்.
அநேகப் பெண் குழந்தைகள் மீது கொடுமைகள் நடைபெறுகின்றன. மாதாக்களாகிய உங்களுக்குள் ஒருவர்
மற்றவரைப் பாதுகாப்பதற்காக உங்களுடைய ஒரு குழு உருவாக வேண்டும். ஆனால் ஆத்ம அபிமானியாக
அவசியம் ஆக வேண்டும். நாம் தூய்மையாக அவசியம் ஆக வேண்டும் லி இந்தப் பக்கா நஷா இருக்க
வேண்டும். அத்தகைய நஷாவில் இருப்பவர்கள் தான் மற்றவர்களுக்குப் புரிய வைக்க முடியும். நாம் பாபாவை
நினைவு செய்ய வேண்டும், தூய்மையானவர்களாக ஆக வேண்டும். நாம் சுயதரிசனச் சக்கரதாரி லி இந்த
நஷாவோ இருக்க வேண்டும். நாம் படைப்பவராகிய தந்தையையும் படைப்பின் சக்கரத்தையும் அறிவோம்.
இப்போது நாம் தந்தையிடமிருந்து புது உலகமாகிய சத்யுகத்தின் ஆஸ்தியைப் பெற வேண்டும். நாம் 84
பிறவிகளை எப்படி எடுக்கின்றோம் என்பதைப் புரிய வைத்துக் கொண்டே இருங்கள். பாபா சொல்கிறார்,
என்னை நினைவு செய்வீர்களானால் உங்களுடைய பாவங்கள் அழிந்து விடும். தூய்மையானவர்களாக அவசியம்
ஆக வேண்டும். பாவனம் என்றால் தூய்மை (புனிதம்). காமம் மிகப்பெரிய விரோதி. நாம் 84 பிறவிகளின்
சக்கரத்தை முடித்து விட்டோம். இப்போது பாபாவிடமிருந்து ஆஸ்தி பெற வேண்டும். பாபா சொல்கிறார்,
என்னை நினைவு செய்வீர்களானால் உங்கள் விகர்மங்கள் விநாசமாகி விடும். இங்கு நீங்கள் வருவதே
புத்துணர்ச்சி பெறுவதற்காக. தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள் லி 21 பிறவிகளுக்கான ஆஸ்தி பெற
வேண்டும். யார் மீதும் மோகத்தின் நாட்டம் இருக்கக் கூடாது. பற்றற்றவராக ஆக வேண்டும். இந்த சரீரத்தின்
மீதும் மோகம் கூடாது. இதுவோ பழைய தோல். ஆனால் இதைப் பராமரிக்க வேண்டும். இதன் மூலம் தான்
படிப்பைப் படிக்க வேண்டியுள்ளது. கஷ்டம் வந்தால் சமாளிக்க வேண்டியுள்ளது. நீங்கள் அறிவீர்கள், இது
பழைய இற்றுப் போன சரீரம். இதற்கு ஏதேனும் ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது. துக்கம் ஆத்மாவுக்கு
ஏற்படுகின்றது. நீங்கள் அறிவீர்கள், இப்போது இந்த சரீரத்தை விட வேண்டும். யோகபலத்தின் மூலம் இதை
பொறுமையுடன் எதிர்கொள்ள வேண்டும். பாபாவை நினைவு செய்து கொண்டே இருக்க வேண்டும். தன்னை
ஆத்மா என உணர்ந்து பாபாவை நினைவு செய்தால் போதும். வேறு எந்த லௌகிக சம்மந்தங்களும் நினைவு
வரக் கூடாது. நான் தேகமல்ல, ஆத்மா. பாபா சொல்கிறார், நான் ஆத்மாக்களாகிய உங்களுக்கு ஆஸ்தி
தருவதற்காக வந்துள்ளேன். ஆத்மா தூய்மையாகி விட்டால் பிறகு சரீரமும் கூட நல்லதாகக் கிடைக்கும்.
நீங்கள் அறிவீர்கள், இப்போது ஆத்மா நாம் தூய்மையாக வேண்டும். நாம் தூய்மையாக இருந்த போது
லட்சுமிலிநாராயணரைப் போல் இருந்தோம். இந்த லட்சுமிலிநாராயணர் 84 பிறவிகளை எடுத்துள்ளனர். சூரியவம்சி
(3/4)
27.07.2016
அரச பரம்பரை முழுவதுமே 84 பிறவிகள் எடுத்துள்ளனர். சந்திரவம்சிகளுக்கு 84 பிறவிகள் எனச் சொல்ல
மாட்டார்கள். ஆம், சூரியவம்சியில் யார் முதல்லிமுதலில் பணியாளர்களாக ஆகியிருப்பார்களோ, அவர்கள் பிறகு
திரேதா யுகத்தில் ஏதாவதொரு பதவி பெறுவார்கள். அவர்களுக்கு 84 பிறவிகள் எனச் சொல்வார்கள். இராஜாலிராணி,
பிரஜைகள், தாசலிதாசிகள் முதலான யாரெல்லாம் சூரியவம்சியில் வருகிறார்களோ, அவர்கள் தான் 84 பிறவிகள்
எடுக்கிறார்கள். இப்படிலிஇப்படி தனக்குத் தான் உரையாடல் செய்ய வேண்டும். நாம் 84 பிறவிகளை ஏன்
எடுக்கிறோம்? விசார் சாகர் மந்தன் செய்ய வேண்டும். எவ்வளவு முடியுமோ, தந்தை மற்றும் ஆஸ்தியை
நினைவு செய்து கொண்டே இருங்கள். நடமாடும் போதும் கூட நாம் பாபாவின் குழந்தைகள் என்பதைப்
புரிந்து கொள்ளுங்கள். யாராவது சந்தித்தால் பாபாவின் அறிமுகம் கொடுக்க வேண்டும். இந்தச் சித்திரங்களில்
முழு ஞானம் உள்ளது. அனைத்தையும் சொல்ல வேண்டும். பாபா பிரம்மாவின் உடலில் வந்துள்ளார். நாம்
அனைவரும் பிரம்மாகுமார்லிகுமாரிகள் இல்லையா? பி.கே.க்களாகிய நம்மை சொர்க்கத்தின் எஜமானர்களாக
ஆக்குவதற்காக பாபா வந்துள்ளார். அனைத்து ஆத்மாக்களின் தந்தை ஒருவர் தான். நாம் பிரம்மாகுமார்லிகுமாரிகள்.
அவரவருடைய அடையாள அட்டையை நீங்கள் காட்ட முடியும். எங்காவது அலுவலகங்களிலும் கூட
அட்டையைக் கொடுங்கள். ஆனால் பி.கே. என்றால் யார் என்று அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. அநேக
விதமான தடைகள் வருகின்றன. அரசாங்கத்திற்கும் கூட புரிய வைக்கப் படுகின்றது லி இது எங்களுடைய
குடும்பம். தாதா மற்றும் பாபா உள்ளனர். தாதா (மூத்த சகோதரர்) மூலம் நாம் ஆஸ்தி பெற்றுக் கொண்டிருக்கிறோம்.
இதை நினைவு வைப்பதால் குμ இருக்க வேண்டும். ஆஸ்தியோ தாத்தாவினுடையது. பேரக் குழந்தைகள்
அதைப் பெறுவதற்கு உரிமை உள்ளது. முழு பாகத்தையும் பங்கிட்டுப் பெற்றுக் கொள்கின்றனர்.
நீங்களும் அறிவீர்கள் லி சிவபாபாவிடமிருந்து பிரம்மா மூலம் நாம் ஆஸ்தி பெறுகிறோம். இதை நினைவு
வைக்க வேண்டும், படிக்க வேண்டும். பிறகு மற்றவர்களுக்குக் கற்றுத் தர வேண்டும். இது தந்தையின்
கடமைலிகுழந்தைகளுக்குப் பாலனை செய்வது. குமார்லிகுமாரி இளமைப் பருவம் அடையாத வரை அவர்களைப்
பராமரிப்பது. குழந்தைகளின் கடமை படிப்பது. தங்களின் கால்களில் நிற்பதற்காகப் படிக்கின்றனர். நீங்கள்
அறிவீர்கள், பாபா நமக்குப் படிப்பு சொல்லித் தந்து கொண்டிருக்கிறார், 21 பிறவிகளுக்காக. பிறகு நாம் நம்முடைய
கால்களில் நின்று கொள்வோம். எவ்வளவு படிக்கிறீர்களோ, அவ்வளவு உயர்ந்த பதவி பெறுவீர்கள். நீங்கள்
தாங்களே சொல்கிறீர்கள், நாங்கள் இங்கே வருவது ஸ்ரீலட்சுமி அல்லது ஸ்ரீநாராயணன் ஆவதற்காக. இது
சத்திய நாராயணனின் கதை இல்லையா? இந்த லட்சுமிலிநாராயணன் எப்படி 84 பிறவிகள் எடுக்கின்றனர்
என்பது பற்றி யாருக்கும் தெரியாது. இராதையின் பக்தர்களாக இருப்பார்களானால் சொல்வார்கள், இராதை
இங்கே நம் முன் உள்ளார் என்று. எங்கே பார்த்தாலும் இராதையே இராதை! கிருஷ்ணரே கிருஷ்ணர்! சிவனே
சிவன்! இந்தக் குழப்பத்தை உருவாக்கி விட்டுள்ளனர். ஈஸ்வரன், இராதை, கிருஷ்ணர் அனைவரும் சர்வவியாபி.
இவை அனைத்தும் ஈஸ்வரனின் ரூபங்கள். பகவான் இந்த ரூபத்தை தாரணை செய்துள்ளார். எங்கே பார்த்தாலும்
நீயே தான்..... எனச் சொல்கின்றனர். முற்றிலும் புத்தியற்றவர்களாக ஆகி விட்டுள்ளனர். இது விகாரி பதித்
உலகம். சத்யுகம் என்பது நிர்விகாரி தூய்மையான உலகம். விகாரமற்ற உலகம் என்பதன் அர்த்தமே சொர்க்கம்
என்பது தான். அங்கே குழந்தைகளோ உள்ளனர் இல்லையா, அவர்கள் எப்படிப் பிறப்பார்கள் எனக் கேட்கின்றனர்.
இதைத் தான் கேள்வியாகக் கேட்பார்கள். குழந்தைகள் பிறக்கவில்லை என்றால் சிருஷ்டி எப்படி விருத்தியாகும்
எனக் கேட்பார்கள். ஒவ்வொரு வருடமும் ஜனத்தொகைக் கணக்கை எடுக்கின்றனர்லிஎவ்வளவு அதிகப்படியான
மனிதர்கள் உருவாகியுள்ளனர்? இவ்வளவு பேர் இறந்து விட்டனர் என்பதைச் சொல்ல மாட்டார்கள். ஆக,
குழந்தைகள் முதலிலோ தங்களுக்கு நன்மை செய்து கொள்ள வேண்டும். நான் ஆத்மா லி முதலிலோ இந்த
நிச்சயம் செய்யுங்கள். பாபாவை நினைவு செய்ய வேண்டும். கடைசிக் காலத்தில் யார் நாராயணனை
நினைக்கிறார்களோ........... இப்போது நாரயணனை நினைப்பது என்று பொய்யாக எழுதியுள்ளனர். கடைசிக் காலத்தில்
சிவபாபாவை நினைக்க வேண்டும்......... அதே கவலையில் யார் இறக்கிறார்களோ, அவர்கள் சொர்க்கத்தின்
நாராயணனாக ஆவார்கள். கடைசிக் காலத்தில் நாராயணன் என்று ஏன் சொல்கிறார்கள்? கிருஷ்ணர் ஞானம்
கொடுத்திருந்தார் என்றால் கிருஷ்ணரை நினைப்போமே என்று புரிந்து கொண்டுள்ளனர். அதனால் கிருஷ்ணரை
நினைவு செய்கின்றனர். நாராயணர் பற்றி யாருக்கும் தெரியாது. கிருஷ்ணருக்கு ஜெயந்தி கொண்டாடுகின்றனர்.
சரி. இராதையின் ஜெயந்தி எங்கே? கிருஷ்ணரின் ஜென்மத்தைக் கொண்டாடுகின்றனர். நாராயணருடையது
எங்கே? உலகத்தின் இராஜாலிராணி லட்சுமிலிநாராயணர் பற்றி யாருக்கும் தெரியாது. பிரஜாபிதா பிரம்மாவின்
முகவம்சாவளி இருப்பார்கள் இல்லையா? அவர்கள் எங்கே சென்றார்கள்? பிராமண் தேவிலிதேவதாய நமஹ
எனச் சொல்கின்றனர். பிரம்மாவுக்கு முகவம்சாவளி இருந்தனர் இல்லையா? பிரம்மா மூலம் சிவபாபா பிராமண
தர்மத்தை ஸ்தாபனை செய்கிறார் என்பதைக் குழந்தைகள் புரிந்து கொண்டுள்ளனர். பிராமண தர்மத்தை
பிரம்மா படைக்கவில்லை. ஆனால் சிவபாபா படைத்தார். இவரோ இப்போது தான் பிரம்மா ஆகியிருக்கிறார்.
நல்லது.
(4/4)
27.07.2016
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும்
தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம் :
1) இந்தப் பழைய சரீரத்தில் வாழ்ந்து கொண்டே படிப்பைப் படித்து 21 பிறவிகளுக்கான
வருமானத்தைச் சம்பாதிக்க வேண்டும். அதனால் இந்த சரீரத்தைப் பராமரிக்க வேண்டும்.
மற்றப்படி இதன் மேல் மோகம் வைக்கக் கூடாது.
2) கடைசிக் காலத்தில் ஒரு சிவபாபாவின் நினைவு மட்டுமே இருக்க வேண்டும்லிஅந்த மாதிரியான
அப்பியாசம் செய்ய வேண்டும். வேறு எந்த ஒரு சிந்தினையிலும் செல்லக் கூடாது. தனக்கு
நன்மை செய்துக் கொள்ள வேண்டும்.
வரதானம் : சப்தத்தைக் கடந்த ஸ்திதியில் நிலைத்திருந்து சர்வ குணங்களையும்
அனுபவம் செய்யக் கூடிய மாஸ்டர் விதை வடிவம் ஆகுக !
எப்படி விதைக்குள் முழு மரமும் அடங்கியுள்ளதோ, அதைப் போல் சப்தத்தைக் கடந்த ஸ்திதியில்
சங்கமயுகத்தின் அனைத்து விசேஷ குணங்களும் அனுபவத்தில் வரும். மாஸ்டர் விதை வடிவம் ஆவது
என்றால் வெறும் சாந்தி மட்டும் இல்லை, ஆனால் சாந்தியோடு கூடவே ஞானம், அதிந்திரிய சுகம், அன்பு,
ஆனந்தம், சக்தி முதலிய அனைத்து முக்கிய குணங்களையும் அனுபவம் செய்ய வேண்டும். இந்த அனுபவம்
தனக்கு மட்டும் ஏற்படுவதில்லை, ஆனால் மற்ற ஆத்மாக்களும் கூட அவர்களின் முகத்தின் மூலம் சர்வ
குணங்களின் அனுபவம் செய்கின்றனர். ஒரு குணத்திலேயே சர்வ குணங்களும் நிறைந்திருக்கும்.
சுலோகன் : நல்லதை மட்டுமே தாரணை செய்யுங்கள், ஆனால்
நல்லதில் பிரபாவம் (வசம்) ஆகி விடாதீர்கள்.
(1/4)
28
28.07.2016, காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! நீங்கள் இங்கே தன்னுடன் சேர்த்து முழு உலகத்தினரையும்
(கல்ப தருவாக) புதியதாக ஆக்குவதற்காக வந்துள்ளீர்கள். நினைவின் மூலம் தான் காய கல்பம்
(எப்போதும் ஆரோக்கியம் நிறைந்த உடல்) உருவாகும்.
கேள்வி: நரகவாசியிலிருந்து சொர்க்கவாசி ஆவதற்கான விதி எது? இப்போது குழந்தைகளாகிய
உங்களுக்கு ஜீவதானம் (வாழ்க்கை தானம்) கிடைக்கிறது, எப்படி?
பதில்: நரகவாசியிலிருந்து சொர்க்கவாசியாக ஆவதற்காக கண்டிப்பாக இறக்க வேண்டும். நான் உங்கள்
அனைவருக்கும் மரணத்தைக் கொடுப்பதற்காக வந்துள்ளேன் என பாபா சொல்கிறார். உங்களுடைய இந்த
தேகத்தை அழித்து மற்ற அனைத்து ஆத்மாக்களையும் அழைத்துச் செல்வேன். இதுவே உண்மையான
வாழ்க்கை தானமாகும் (உயிர் பிச்சை). இதற்காகவே இந்த மகாபாரதச் சண்டையாகும். அதில் அனைத்தும்
வினாசம் ஆகும். பிறகு ஆத்மாக்கள் தூய்மையடைந்து வீடு திரும்பிச் செல்வார்கள். பிறகு சொர்க்கத்திற்கு
வருவார்கள்.
பாடல்: மாதா ஓ மாதா. . .
ஓம் சாந்தி. இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் பாடலின் வரிகளைக் கேட்டீர்கள்.
ஜகதம்பாவின் மகிமையைக் கேட்டீர்கள். ஜகதம்பா இங்கே பாரதத்தில்தான் பாடப்படுகிறார். ஜகதம்பா இருக்கிறார்
என்றால் ஜகத்பிதாவும் கண்டிப்பாக இருப்பார். ஜகதம்பா என சரஸ்வதியைத்தான் சொல்கின்றனர். உண்மையில்
அவருடைய பெயர் ஒன்றுதான் இருக்க வேண்டும். உங்களுடைய பெயரும் ஒன்றுதான் இருக்கிறது அல்லவா.
இரண்டு மூன்று பெயர்கள் இல்லை. இப்போது ஜகதம்பாவை சாகாரத்தில் காட்டுகின்றனர், சரீரதாரியாக உள்ளார்.
ஜகத்பிதாவும் இருக்கிறார், அவர் பிரஜாபிதா என அழைக்கப்படுகிறார். முழு உலகிற்கும் அம்பா இருப்பது
போல் முழு உலகின் பிதாவாக இருக்கிறார். கண்டிப்பாக இருவருமே இங்கே இருப்பார்கள். இருவரின் பெயர்
களும் சொல்லியிருக்கிறேன். இருவரும் பிரஜாபிதா மற்றும் பிரஜாமாதா ஆவர். இப்போது சிவபாபா இன்னொரு
ஜகத்பிதா என சொல்லப்படுகிறார். அவர் அனைவரின் ஆத்மாக்களின் பிதாவாக இருப்பவர், அவர் பெயரே
பரமபிதா பரம ஆத்மா, சிவன் என்பது. வெறும் ஈஸ்வரன் அல்லது பரமாத்மா என சொல்லக்கூடாது. அவருடைய
பெயர், உருவம் என்பது உண்டல்லவா. அவர் இறைத்தந்தை என சொல்லப்படுகிறார். ஒருவர் ஆத்மாக்களின்
தந்தை, மற்றவர் சாகார மனித ஆத்மாக்களின் தந்தை மற்றும் மம்மா. சிவன் ஆத்மாக்களின் பிதா ஆவார்.
அவர் என்னுடைய தந்தை என ஆத்மா சொல்கிறது. பிறகு ஆத்மாவுக்கு இந்த சாகார சரீரம் கிடைக்கும்போது
பிரம்மா பாபா என சொல்கிறோம், அப்போது இரண்டு தந்தையர் என ஆகிவிட்டனர். பதித பாவனா வாருங்கள்
என அனைவருமே கூக்குரலிடுகின்றனர் எனும்போது இரண்டு தந்தையர்கள் ஆகி விடுகின்றனர். சிவபாபா
படைப்பவர் ஆவார். புதிய உலகை படைக்கிறார். ஆக முதலில் பிரம்மாவைப் படைக்க வேண்டும்.
விஷ்ணுவையோ அல்லது சங்கரனையோ ஒருபோதும் பிரஜாபிதா என சொல்வதில்லை. பிரம்மாவைதான்
பிரஜாபிதா என சொல்கிறோம். ஆக சிவபாபா பிரஜாபிதா பிரம்மாவின் மூலம் தத்தெடுக்கிறார். நாங்கள் சிவபாபாவின்
குழந்தைகள் என சொல்கின்றனர். சிவபாபா இவருக்குள் பிரவேசமாகி தத்தெடுத்துள்ளார். அவர்தான் ஆத்மாக்களை
தூய்மைப்படுத்துகிறார், ஆத்மாதான் தூய்மையற்றிருக்கிறது. இதன் காரணமாக சரீரமும் தூய்மையற்றதாக
கிடைக்கிறது. தங்கத்தில் வெள்ளி, தாமிரம், இரும்பு ஆகியவற்றைக் கலக்கின்றனர், அதுபோல் ஆத்மாவுக்குள்ளும்
கலப்படம் ஏற்படுகிறது. உண்மையில் ஆத்மா தூய்மையாக முக்தி தாமத்தில் வசிப்பதாகும், அங்கே சிவபாபாவும்
வசிக்கிறார். இப்போது சிவபாபா, பிரஜாபிதா பிரம்மா லி ஒருவரை தந்தை, இன்னொருவரை தாதா என
சொல்கிறோம். அனைத்து மனிதர்களும் சிவபாபாவின் குழந்தைகள் என நீங்கள் அறிவீர்கள். சிவ வம்சத்தவர்,
பின்னர் பிரம்மாகுமார், குமாரிகள். சிவபாபா மற்றும் பிரம்மா ஒன்றாக இருக்கின்றனர். சிவபாபா இவருக்குள்
வீற்றிருக்கிறார், நம்மை பிராமணர் ஆக்கி மனிதரை தேவதை ஆக்குவதற்காக இராஜயோகம் கற்பிக்கிறார்.
தேவதைகள் சத்யுகத்தில் இருக்கின்றனர். தேவதைகள் பதித பாவனர், ஞானக் கடல் என சொல்லப்படுவதில்லை.
அவர்களை பாபா எனவும் சொல்ல முடியாது. இப்போது நீங்கள் விஷ்ணுபுரியின் எஜமானர்களாக ஆகிக்
கொண்டிருக்கிறீர்கள். விஷ்ணுவின் (இரண்டு இணைந்த) ரூபமே லட்சுமி நாராயணர், இதனை மனிதர்கள்
அறிவதில்லை. பக்தி செய்பவர்களுக்கு இரண்டு தந்தையர் கண்டிப்பாக உண்டு. சத்யுகத்தில் ஒரு தந்தை
இருப்பார். அங்கே ஓ பரமபிதா பரமாத்மா, துக்கத்தை நீக்கி சுகத்தைக் கொடுப்பவரே வாருங்கள் என சொல்வ
தில்லை. அங்கே தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. அவர்கள் ஓ இறைத்தந்தையே, விடுவிப்பவரே
என சொல்ல மாட்டார்கள். அங்கே பதித பாவனரை அழைக்கும்படியாக யாரும் தூய்மையற்றவர்களாக, துக்கம்
மிக்கவர்களாக இருக்க மாட்டார்கள், பாரதத்தில் இன்றிலிருந்து 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தேவி
தேவதைகளின் இராஜ்யம் இருந்தது என நீங்கள் அறிவீர்கள். பின்னர் 1250 வருடங்களுக்குப் பிறகு ராமன்
சீதையின் இராஜ்யம் ஏற்படும். தந்தை உறுதிப்படுத்தி சொல்கிறார் லி சத்யுகம், திரேதா யுகங்களில் நீங்கள் 21
(2/4)
28.07.2016
பிறவிகள் எடுத்தீர்கள். பிராமணர், தேவதைகள், சத்திரியர்கள் . . . என பாரதத்தில்தான் ஆகின்றனர். தந்தை
வந்து பழைய உலகை புதிய உலகமாக ஆக்குகிறார். புதுப்பிக்கிறார். காயா கல்பதரு ஆக்குகிறார். அமரர்களாக
ஆக்குகிறார். தந்தை வந்து குழந்தைகளாகிய உங்களை அமரலோகத்தின் எஜமானர்களாக ஆக்குகிறார். பாரதம்
அமரலோகமாக இருந்தபோது தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. ஏணியில் இறங்கி இறங்கி வந்து
மரணலோகத்தின் எஜமானர்களாக ஆகியுள்ளனர். எங்கள் பாரதம் என சொல்கின்றனர் அல்லவா. ஆக
பிரஜைகளும் கூட எஜமானர் என ஆகிவிட்டனர் அல்லவா. நீங்களும் எங்கள் பாரதம் என சொல்வீர்கள்.
நாம் பாரதத்தின் எஜமானாக இருந்தோம், ஆனால் நரகவாசி. தேவதைகள் நாங்கள் சொர்க்கவாசிகள் என
சொல்வார்கள். நீங்களும் கூட சொர்க்கவாசியாக இருந்தீர்கள், பிறகு 84 பிறவிகள் அனுபவித்து நரகவாசி
ஆகியுள்ளீர்கள். இங்கே பாரதத்தில்தான் சிவபாபா ஜென்மம் எடுக்கிறார். சிவராத்திரியும் சிவஜெயந்தியும்
பாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தியும் கொண்டாடுகின்றனர், அவருடைய காலத்தைப் பற்றியும் சொல்கின்றனர்.
இன்ன சமயத்தில் தாயின் கர்ப்பத்தில் பிறவி ஏற்பட்டது என்று. சத்யுகத்தில் கண்டிப்பாக தாயின் கர்ப்பத்தில்
பிறவி எடுத்திருப்பார். கிருஷ்ண ஜெயந்தி சத்யுகத்தின் புதிய உலகத்தில் ஏற்படுகிறது, பிறகு மறுபிறவிகளில்
வரத் தொடங்கினார். பாபா வெறும் ஒருவருடைய விஷயத்தை மட்டும் கூறவில்லை. கிருஷ்ணபுரியே விஷ்ணுபுரி.
இராஜாக்கள் கீழே இறங்கும்போது இராஜ்யமும் இறங்குகிறது. அதில் ராஜா, ராணி, பிரஜைகள் என அனைவரும்
வந்து விடுகின்றனர். சந்திரவம்சத்தின் இராஜ்யம் இருக்கும்போது சூரிய வம்சத்தின் இராஜ்யம் கடந்து முடிந்து
விட்டது. மாற்றம் அடைந்து சந்திரவம்சத்தினருக்கு கிடைக்கிறது, பிறகு வைஸ்ய வம்சத்தவருக்கு கிடைக்கிறது.
நாம் பிராமண குலத்தவர், உச்சிக் குடுமி போன்றவர்கள் என இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள்.
குடுமிக்கு மேலே (உச்சியில்) இருப்பவர் தந்தை. நாம் முதலில் பிராமணராக இருந்தோம், பிறகு சூத்திரர்களாக
அதாவது பாதமாக (காலடி) ஆகினோம். பாதத்திலிருந்து ஒரேயடியாக குடுமியாக ஆகிறோம். முதலில் சிவபாபா,
பிறகு குடுமி. பாபா உங்களை பிராமணராக ஆக்கினார். இப்போது நீங்கள் சிவபாபாவை பாபா பாபா என
சொல்கிறீர்கள். இந்த கணக்கில் பேரன் பேத்திகளாகி விட்டீர்கள். நாம் அனைவரும் பிரம்மாவின் குழந்தைகள்
பிராமண பிராமணிகள் என நீங்கள் அறிவீர்கள். நாம் அனைவரும் ஒரு தந்தையின் குழந்தைகள். சகோதரன்
லி சகோதரியருடையே குற்றப் பார்வை (தீய நோக்கம்) இருக்க முடியாது. எவ்வளவு அளவற்ற குழந்தைகள்
அனைவரும் பாபா . . . என சொல்கின்றனர். ஆக இவ்வளவு பேர் பொய்யானவர்களாக ஆக முடியாது.
அனைவரின் தந்தை அதே நிராகார சிவன் மற்றும் சாகாரமானவர் பிரஜாபிதா பிரம்மா ஆவார், அவ்வளவுதான்.
ஒரு தந்தையின் குழந்தைகள் சகோதரன் லி சகோதரியாக உள்ளனர். நீங்கள் கண்டிப்பாக தூய்மையானவராக
ஆக வேண்டும். கணவன்லிமனைவி எப்படி தூய்மையாக ஆவது? அதற்காக இந்த யுக்தி நாடகத்தில்
பதிவாகியுள்ளது. இங்கே பிரம்மா குமார் லி குமாரிகள் மட்டுமே உள்ளனர். சூத்திர குமார் லி குமாரி யாரும்
இல்லை. அவர்கள் பதிதர்கள், சூத்திரர்கள், கீழான புத்தியுள்ளவர்கள், ஏனெனில் பாபாவை தெரியாது. ஓ
இறைத் தந்தையே என சொல்கின்றனர். நல்லது. அவருடைய தொழிலைப் பற்றி தெரியுமா? பெயர், ரூபம்,
தேசம், காலத்தைப் பற்றி கூறுங்கள். அவரது வாழ்க்கை வரலாறு பற்றிச் சொல்லுங்கள். தெரியாது என்றால்
நாஸ்திகர்களாகி விட்டனர். படைப்பவர் மற்றும் படைப்பின் முதல், இடை, கடைசியைப் பற்றி தெரியாது. அது
தூய்மையற்ற உலகமாகும். சத்யுகம் தூய்மையான உலகம், கலியுகம் தூய்மையற்ற உலகம் என சொல்லப்படுகிறது.
இந்த சமயம் முற்றிலும் தமோபிரதானமாக உள்ளது, இது கொடுமையான நரகம் எனப்படுகிறது. இதனுடைய
நிலைகளும் மாறுகின்றன. துவாபரத்திலிருந்து நரகமாக ஆகத் தொடங்குகிறது, பிறகு வளர்ச்சியடைகிறது.
பக்தியும் கூட முதலில் சதோபிரதானமாக கலப்படமற்றதாக இருந்தது, பிறகு சதோ, ரஜோ, தமோ ஆகிறது.
நீங்கள் பார்த்திருக்கலாம், மூன்று சாலைகள் சந்திக்குமிடத்தை முச்சந்தி என்பார்கள், அங்கே எண்ணெய்
முதலானதை ஊற்றி தலை வணங்குவார்கள். இப்போது சிவபாபாவின் பூஜை எங்கே, முச்சந்தி பூஜை எங்கே.
இது தமோபிரதான பக்தி என சொல்லப்படுகிறது. நீருக்கும் கூட பூஜை செய்கின்றனர், பதித பாவனி கங்கை
என நிறைய பாடுகின்றனர். இப்போது பதீத பாவனர் யார்? நீரோட்டமுள்ள கங்கை எப்படி பதித பாவனி ஆக
முடியும்? அது நீரல்லவா. தந்தை பதித பாவனர் ஆவார். சிவஜெயந்தியும் பாரதத்தில் கொண்டாடுகின்றனர்
எனும்போது கண்டிப்பாக பாரதத்தில்தான் வந்திருப்பார் லி தூய்மையற்றவர்களை தூய்மையான தேவதையாக
ஆக்குவதற்காக. பிரம்மாவின் தேகத்தில் வந்து மனிதர்களை தேவதைகளாக்குகிறார். இங்கே நீங்கள் வருவதே
தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவராக ஆவதற்கு. உங்களுக்கு எப்படி இரண்டு புஜங்கள் உள்ளனவோ
அது போல அவர்களுக்கும் இரண்டு புஜங்கள்தான் இருக்கும். 4லி8 புஜங்கள் உள்ள மனிதர்கள் யாரும் இருக்க
மாட்டார்கள். அதனை அலங்காரமாகக் காட்டி விட்டுள்ளனர். இல்லறத்தைக் காட்டுவதற்காக சதுர்புஜங்களைக்
காட்டியுள்ளனர். விஷ்ணுபுரி என்பது லட்சுமி நாராயணபுரிக்கு சொல்லப்படுகிறது. வைஷ்ணவர் எனும் வார்த்தை
விஷ்ணுவிலிருந்து வெளிப்பட்டதாகும். தேவதைகள் வைஷ்ணவர்களாக இருந்தனர். வல்லபாச்சாரி
வைஷ்ணவர்கள் சைவ உணவு உண்பவர்கள் ஆவர், அவர்கள் நிர்விகாரிகளாக ஏதும் இருப்பதில்லை.
அவர்களுடைய மாளிகைகள் பெரிது பெரிதாக இருக்கும். வைஷ்ணவர்கள் என்பதன் அர்த்தத்தையே புரிந்து
28.07.2016
(3/4)
கொள்வதில்லை. விஷ்ணுபுரியில் வசிப்பவர்கள் வைஷ்ணவர்கள் எனப்படுகின்றனர். தூய்மையானவர்கள்
வைஷ்ணவர்கள் எனப்படுவார்கள். ராதாலிகிருஷ்ணருக்கு தனி கோவிலும் லட்சுமிலிநாராயணருக்கு தனி கோவிலும்
கட்டி விட்டார்கள். அவர்களுக்குள் என்ன வித்தியாசம் உள்ளது என பாரதவாசிகளுக்கு தெரியவே தெரியாது.
ராதாலிகிருஷ்ணரே லட்சுமிலிநாராயணர் ஆகின்றனர், இது யாருக்கும் தெரியாது. அது குழந்தைப் பருவத்தின்
ரூபம். இது பெரியவர்களின் ரூபம். லட்சுமிலிநாராயணரின் சிறு வயதின் படங்கள் ஏதும் இல்லை.
லட்சுமிலிநாராயணரை சத்யுகத்திலும், ராதாலிகிருஷ்ணரை துவாபரத்திலும் எடுத்துச் சென்று விட்டனர். இப்போது
நீங்கள் படைப்பவராகிய தந்தை மற்றும் படைப்பின் முதல்லிஇடைலிகடைசி பற்றி தெரிந்து கொண்டு விட்டீர்கள்.
பாபா மரத்தின் (கல்ப விருக்ஷம்) இரகசியத்தையும் கூட புரிய வைக்கிறார். நாடகத்தின் இரகசியத்தையும் புரிய
வைக்கிறார். சங்கராச்சாரியார் கலியுகத்தில் வருகிறார் என மரத்தைப் பார்க்கும்போது புரிந்து கொள்வார்கள்.
சன்னியாசிகளின் இராஜ்யம் சத்யுகத்தில் இருக்க முடியாது. அனைவருமே பகவானின் குழந்தைகள் என்றால்
சொர்க்கவாசிகளாக இருக்க வேண்டும். ஆனால் அனைவருமே சொர்க்கவாசிகள் ஆவதில்லை தேவதைகள்
மட்டுமே ஆவார்கள். இப்போது நீங்கள் பிராமண வம்சத்தவர் ஆகியுள்ளீர்கள், பிறகு தேவதைகள் ஆகப்
போகிறீர்கள். கண்டிப்பாக தூய்மையடைய வேண்டும்.
சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவருமே பிரம்மாகுமார்லிகுமாரிகள் என நீங்கள் அறிவீர்கள். பாபா
நாங்கள் உங்களுடைய குழந்தைகள், பிராமணர்கள் என இரு பாலருமே சொல்கின்றனர். இவர்கள் பாப்தாதா
லி ஆதி தேவன் பிரம்மா மற்றும் சிவபாபா. நாம் பிரம்மா பாபா மற்றும் சிவபாபாவின் முன்னால் அமர்ந்திருக்கிறோம்
என நீங்கள் அறிவீர்கள். என்னை நினைவு செய்தீர்கள் என்றால் தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவராக
ஆகி விடுவீர்கள். நாம் சிவபாபாவிடமிருந்து ஆஸ்தியைப் பெறுகிறோம். சிவபாபா நம்முடைய தந்தையுமாக
உள்ளார், பதித பாவனராகவும் உள்ளார், குருவாகவும் உள்ளார். இப்போது இது சங்கமயுகம். தூய்மை
யற்றதிலிருந்து தூய்மை ஆவதற்கான சந்திப்பு. பதித பாவனரின் மூலமே தூய்மையடைகின்றனர். சங்கமயுகத்தில்
நதிகள் மற்றும் கடலின் சந்திப்பு ஏற்படுகிறது. நதிகளின் சந்திப்பு ஏற்படுவதில்லை. இப்போது ஞானக்கடல்
மற்றும் ஆத்மாக்களாகிய உங்களின் சந்திப்பு நடக்கிறது. நீங்கள் ஞானக்கடலிடம் வந்துள்ளீர்கள். ஞான
கங்கையராகிய நீங்கள் ஞானக் கடலிடமிருந்து வெளிப்பட்டுள்ளீர்கள். நீங்கள் ஞான ஸ்நானம் செய்வித்து
தூய்மையாக்குகிறீர்கள், யோகம் கற்றுத்தருகிறீர்கள். சாகரத்தின் (கடலின்) அறிமுகத்தை கொடுத்து நீங்கள்
இங்கே சந்திப்பதற்காக அழைத்து வருகிறீர்கள். இந்த சமயத்தில் நீங்கள் பிராமணர்கள் ஆகும்போது உங்களுக்கு
3 தந்தையர் இருக்கின்றனர். லௌகிக தந்தையும் இருக்கிறார், பிரஜாபிதாவும் இருக்கிறார், பிறகு சிவபாபாவும்
இருக்கிறார். பக்தி மார்க்கத்தில் இரு தந்தையர் இருப்பார்கள். சத்யுகத்தில் ஒரு தந்தை இருப்பார். இவை புரிந்து
கொள்ளக் கூடிய விசயங்களாகும். இப்போது உங்களுடைய ஆத்மா சொல்கிறது லி என்னுடையவர் ஒரு
சிவபாபா, வேறு யாருமில்லை. நண்பர்கள் உறவினர்கள் இருந்தாலும் என்னுடையவர் ஒரு சிவபாபா என்கின்றனர்.
அவருடைய நினைவின் மூலமே தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவராக ஆகவேண்டும். அவர் நம்முடைய
தந்தையும், ஆசிரியரும், சத்குருவுமாக இருக்கிறார் என ஆத்மாவுக்குத் தெரியும். நம்முடைய ஆத்மாவை
தந்தை அழைத்துச் செல்ல வந்துள்ளார். பிரம்மாவின் உடலில் பிரவேசமாகி தூய்மையாக்குகிறார். உங்களை
அழைத்துச் செல்வதற்காக தந்தை வந்துள்ளார். உங்கள் அனைவருக்கும் மரணத்தைக் கொடுப்பதற்காக
வந்துள்ளேன். நரகவாசியிலிருந்து சொர்க்கவாசியாவதற்கு கண்டிப்பாக இறந்து போக வேண்டியுள்ளது அல்லவா.
உங்களுடைய இந்த தேகத்தை அழிக்க வைத்து மற்ற ஆத்மாக்களை அழைத்துச் செல்வேன். உங்களுக்கு
வாழ்க்கை தானம் (உயிர் பிச்சை) கொடுக்கிறேன் என தந்தை சொல்கிறார். இது மகாபாரதச் சண்டை அல்லவா.
அனைவரின் வினாசமும் ஆகப் போகிறது. இல்லாவிட்டால் எப்படி அழைத்துச் செல்வேன். ஆத்மாக்களை
தூய்மையாக்கி வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன். அது சாந்தி தாமம் ஆகும். சத்யுகம் வரும்போது கலியுகம்
கண்டிப்பாக வினாசம் ஆகும். அதற்கான மகாபாரதச் சண்டை புகழ் வாய்ந்ததாகும். அது மூள்வதும் சங்கமயுகத்தில்,
அப்போது நீங்கள் மனிதரிலிருந்து தேவதை ஆகிறீர்கள். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு
தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. ஞானக் கடலில் நீராடி தன்னை தூய்மையாக்கிக் கொள்ள வேண்டும். நண்பர்கள்
உறவினர்களுடைன் இருந்தபடி, என்னுடையவர் ஒரு சிவபாபாவைத் தவிர வேறு யாரும்
இல்லை என்பது புத்தியில் இருக்க வேண்டும்.
28.07.2016
(4/4)
2. விஷ்ணுபுரிக்குச் செல்வதற்காக உறுதியான வைஷ்ணவர்களாக அதாவது தூய்மையானவராக
ஆக வேண்டும். நரகத்தில் வாழ்ந்து கொண்டே இறந்து புத்தியின் தொடர்பை சொர்க்கத்தில்
ஈடுபடுத்த வேண்டும்.
வரதானம் : எப்போதும் (ஈஸ்வரிய) மரியாதைகளின் கோட்டிற்குள் இருப்பதில்
கவனம் செலுத்தக் கூடிய மரியாதா புருஷோத்தமர் ஆகுக.
எந்த குழந்தைகள் தம்மைத் தாமே தந்தை அதாவது இராமனின் உண்மையான சீதை என புரிந்து
கொண்டு எப்போதும் மரியாதைகளின் கோட்டிற்கு உள்ளே இருக்கின்றனரோ அதாவது இந்த ஒரு கவனத்தை
வைக்கின்றனரோ அவர்கள் கவனமிக்கவராகி, தாமாகவே மகிழ்ச்சி மிக்கவராக இருப்பார்கள். ஆக,
அதிகாலையிலிருந்து இரவு வரையிலுமாக கிடைத்திருக்கும் மரியாதைகளின் ஞானத்தை புத்தியில் தெளிவாக
வைத்து தன்னை உண்மையான சீதை என புரிந்து கொண்டு மரியாதைகளின் கோட்டின் உள்ளே இருங்கள்,
அப்போது மரியாதா புருஷோத்தமர் என சொல்லப்படுவீர்கள்.
சுலோகன் : மிக அதிகமாக சேவையில் செல்லாதீர்கள், சேவை மற்றும்
சுய புருஷார்த்தத்தின் சமநிலையை வையுங்கள்.
(1/4)
29
29.07.2016, காலை முரளி ஓம்சாந்தி பாப்தாதா , மதுபன்
இனிமையான குழந்தைகளே! முழு உலகிலும் உங்களைப் போன்ற அதிஷ்டசாலிகள்
யாரும் கிடையாது, நீங்கள் இராஜரிμகள், இராஜ்யத்திற்காக இராஜயோகம்
கற்றுக் கொண்டிருக்கிறீர்கள்.
கேள்வி: நிராகார தந்தையிடம் எந்த சம்ஸ்காரம் இருக்கிறது, அதை குழந்தைகளாகிய நீங்களும்
சங்கமத்தில் தாரணை செய்கிறீர்கள்?
பதில்: நிராகார தந்தையிடம் ஞானத்தின் சன்ஸ்காரம் இருக்கிறது, அவர் உங்களுக்கு ஞானம் கூறி
தூய்மையற்றதிலிருந்து தூய்மையானவராக ஆக்கிவிடுகின்றார். அதனால் தான் அவர் ஞானக் கடல், பதீத
பாவனன் என்று கூறப்படுகின்றார். குழந்தைகளாகிய நீங்களும் இப்போது அந்த சன்ஸ்காரத்தை தாரணை
செய்கிறீர்கள். நமக்கு பகவான் கற்பிக்கின்றார், நாம் அவரிடம் கேட்கின்றோம், கூறுகின்றோம் என்று நீங்கள்
போதையுடன் கூறுகிறீர்கள்.
பாட்டு: கடைசியில் அந்த நாள் வந்து விட்டது ........
ஓம் சாந்தி. இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் இந்த பாட்டைக் கேட்டீர்கள். இந்த
மகிமை யாருடையது? ஒரு தந்தையினுடையது. சிவாய நன்ஹ, உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான் அல்லவா!
அவர் நமது தந்தை என்பதை குழந்தைகள் அறிவீர்கள். நாம் அனைவரும் தந்தை என்று கிடையாது. உலகம்
முழுவதும் சகோதரத்துவம் என்று பாடப்பட்டிருக்கிறது. சந்நியாசிகள் அல்லது வித்வான்கள் கூற்றுப் படி
ஈஸ்வரன் சர்வவியாபி எனில் அது அனைவருமே தந்தை என்றாகிவிடுகிறது. சகோதரர்கள் ஆகின்ற போது
தந்தை என்பது நிரூபணம் ஆகிறது, அவரிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது. அனைவரும் தந்தை எனில் பிறகு
ஆஸ்திக்கான விசயமே கிடையாது. நம் அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தை ஒருவர் தான் என்பதை
குழந்தைகள் அறிவீர்கள், அவர் தான் உலக (ஜகத்) பிதா என்று கூறப்படுகின்றார். உலகில் யார் இருக்கின்றனர்?
அனைவரும் சகோதரர்கள், ஆத்மாக்கள். அனைவருக்கும் இறை தந்தையானவர் ஒரே ஒருவர் தான். அந்த
தந்தையைத் தான் அனைவரும் வழிபடுகின்றனர். ஒரே ஒருவருக்குத் தான் வழிபாடு அல்லது பூஜை
நடைபெற வேண்டும். அது சதோபிரதான பூஜையாகும். ஞானம், பக்தி மற்றும் வைராக்கியம் என்பதும் புரிய
வைக்கப்பட்டிருக்கிறது. சத்கதிக்காக தந்தை ஞானம் கொடுக்கின்றார். ஜீவன்முக்திதாமத்திற்குத் தான் சத்கதி
என்று கூறப்படுகிறது. இதை ஆத்மா புத்தியில் தாரணை செய்ய வேண்டும். நமது வீடு சாந்திதாமம் ஆகும்.
அது முக்திதாமம், நிர்வாணதாமம் என்றும் கூறப்படுகிறது. அனைத்தையும் விட மிக நல்ல பெயர் லி சாந்திதாமம்
ஆகும். இங்கு கர்மேந்திரியங்கள் இருக்கின்ற காரணத்தினால் ஆத்மா பேச்சுக்களில் (டாக்கி) வந்து விட்டது,
பேச வேண்டியிருக்கிறது. சூட்சுமவதனத்தில் சைகைகள் இருக்கும். சைகைகளினால் பேசிக் கொள்வர், சப்தங்கள்
இருக்காது. மூன்று லோகங்களையும் நீங்கள் அறிந்து கொண்டீர்கள். மூலவதனம், சூட்சுமவதனம், ஸ்தூலவதனம்,
புத்தியில் இது நன்றாக அமர்ந்திருக்கிறது. இந்த சிருஷ்டிச் சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது என்று மனித
சிருஷ்டிக்காகத் தான் பாடப்பட்டிருக்கிறது. இது தான் உலக சரித்திர, பூகோளம் என்று கூறப்படுகிறது. இதை
மனிதர்கள் தான் அறிந்து கொள்வார்கள் அல்லவா! உலக சரித்திர, பூகோளத்தை கூறுகின்றனர். உயர்ந்ததிலும்
உயர்ந்தவர் தந்தை ஆவார். உலக சரித்திர, பூகோளம் எவ்வாறு திரும்பவும் நடைபெறுகிறது என்பதை அவர்
மட்டுமே அறிவார். இந்த சக்கரத்தை அறிந்து கொள்வதன் மூலம் நீங்கள் சக்கரவர்த்தி ராஜாவாக ஆகிறீர்கள்.
தேவதைகள் சம்பூர்ண நிர்விகாரிகள் என்று பாடவும் செய்கின்றனர். லெட்சுமி நாராயணனின் சிலை இருக்கிறது
அல்லவா! அவர்கள் சம்பூர்ன நிர்விகாரி என்றும் தன்னை சம்பூர்ண விகாரி என்றும் கூறிக் கொள்கின்றனர்.
சத்யுகத்தில் சம்பூர்ண நிர்விகாரிகள் அதாவது சம்பூர்ண பாவனமாக இருந்தனர். கலியுகத்தில் சம்பூர்ண விகாரிகள்,
முற்றிலும் தூய்மை இழந்தவர்கள். பாரதத்திற்கான விசயமாகும். இதை தந்தை வந்து தான் புத்தியில்
அமர்த்துகின்றார், வேறு யாரும் அறியவில்லை. அவர்கள் சத்யுகத்திற்கு நீண்ட காலம் கொடுத்து விட்டனர்.
இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு சத்யுகம் இருந்தது என்று நினைக்கின்றனர். ஆக யாருடைய புத்தியிலும்
இந்த விசயம் வருவதே கிடையாது.
இப்போது நாம் சம்பூர்ண விகாரியிலிருந்து சம்பூர்ண நிர்விகாரிகளாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பதை
இப்போது குழந்தைகள் அறிவீர்கள். சம்பூர்ண பதீதத்திலிருந்து சம்பூர்ண பாவனமாக ஆக வேண்டும். ஆத்மாவில்
தான் கறை படிந்திருக்கிறது, தங்க யுகத்திலிருந்து இப்போது இரும்பு யுகத்திற்கு வந்து விட்டது என்பதை
தந்தை புரிய வைக்கின்றார். இவ்வாறு ஆத்மாவைத் தான் ஒப்பிடப்படுகிறது. இதை நல்ல முறையில் புரிந்து
கொள்ள வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள், உங்களைப் போன்ற அதிர்ஷ்டசாலி
கள் வேறு யாரும் கிடையாது. இப்போது நீங்கள் இராஜ யோகத்தில் அமர்ந்திருக்கிறீர்கள், நீங்கள் இராஜ
(2/4)
29.07.2016
ரிμயாக இருக்கிறீர்கள். இராஜ்யத்திற்கென ஏதாவது படிப்பு இருக்கிறதா என்ன? வக்கீலாக ஆக்குவார்கள்,
ஆனால் உலகிற்கு மகாராஜாவாக யாரும் யார் ஆக்குவார்கள்? தந்தையைத் தவிர வேறு யாரும் ஆக்க
முடியாது. இங்கு மகாராஜாவாக கிடையாது. சத்யுகத்திற்கு அவசியம் தேவை. அதற்காக அவசியம் வர
வேண்டியிருக்கிறது. எப்போது பக்தி முடிவடைகிறதோ அப்போது நான் வருகிறேன் என்று தந்தை கூறுகின்றார்.
இப்போது பக்தி முடிவடைந்து விட்டது, இதில் வேறு எந்த சந்தேகமும் கிடையாது. எனக்கு தந்தை அமர்ந்து
கற்பிக்கின்றார் என்ற போதை இருக்க வேண்டும். ஆத்மாக்களாகிய நமக்கு நிராகார தந்தை பரம்பிதா பரமாத்மா
சிவன் கற்பிக்கின்றார். சிவனை யாரும் அறியவில்லை. இப்போது பாபா மீண்டும் சொர்க்கத்தின் இராஜ்யத்தை
ஸ்தாபனை செய்து கொண்டிருக்கின்றார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நாம் அவரை மகாராஜா
ஸ்ரீநாராயணன் என்றும், மகாராணி ஸ்ரீலெட்சுமி என்றும் கூறுகிறோம். பக்தி மார்க்கத்தில் சத்திய நாராயணனின்
கதை கூறுகின்றனர். அமரக் கதை மற்றும் மூன்றாம் கண் உருவாக்கும் கதை. தந்தை மூன்றாவது கண்
கொடுக்கின்றார். நரனிலிருந்து நாராயணன் ஆகக் கூடிய கதை கூறப்படுகிறது. எந்த விசயம் கடந்து முடிந்ததோ
அதுவே பிறகு பக்தி மார்க்கத்தில் காரியத்திற்குப் பயன்படுகிறது. பாபா நம்மை சொர்க்கத்திற்கு எஜமானர்களாக
ஆக்குகின்றார் என்பதை இப்போது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். நாம் உரிமையுள்ளவர்கள்.
பகவான் சொர்க்கத்தைப் படைப்பவர் அல்லவா! நாம் பகவானின் குழந்தைகள் எனில் நாம் ஏன் சொர்க்கத்தில்
இல்லாமல் இந்த கலியுகத்தில் இருக்கிறோம்? பரம்பிதா பரமாத்மா புது உலகை படைக்கின்றார். பகவான்
பழைய உலகை படைப்பது கிடையாது. முதலில் புது உலகை படைக்கின்றார். அதன் பிறகு பழையதை
அழித்து விடுவார். நாம் சத்யுகத்திற்கான இராஜ்யத்தை அடைந்து கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள்
அறிவீர்கள். சத்யுகத்தில் யார் இருப்பார்கள்? இந்த லெட்சுமி நாராயணனின் இராஜ்யம் இருக்கும், மற்ற அரசர்களும்
இருப்பார்கள் அல்லவா! அதன் அடையாளம் தான் வெற்றி மாலை ஆகும். இப்போது நாம் வெற்றி மாலையில்
வருவதற்கான முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் என்பதை குழந்தைகள் அறிவீர்கள். மாலை, இதன் பொருளை
உலகில் யாரும் அறியவில்லை, இது ஏன் பூஜிக்கப்படுகிறது? மேலே மலராக இருப்பது யார்? மாலை உருட்டிய
பிறகு மலரை வணங்குகின்றனர், பிறகு மீண்டும் மாலை உருட்டுவர். வெளியில் மனம் சென்று விடக் கூடாது
என்பதற்காக அமர்ந்து மாலை உருட்டுகின்றனர். உள்ளுக்குள் ராம், ராம் என்று உச்சரித்துக் கொண்டே
இருப்பர், அதிக பயிற்சி செய்கின்றனர். இவை அனைத்தும் பக்தி மார்க்கத்தின் விசயமாகும். அதிக பக்தி
செய்பவர்கள் எந்த விகர்மமும் செய்யமாட்டார்கள். இவர் சத்தியமானவர் என்று அதிக பக்தி செய்பவர்களை
நினைப்பர். கோயிலில் மாலை வைத்திருப்பர். மாலை உருட்டிக் கொண்டும் வாயில் ராம், ராம் என்று கூறிக்
கொண்டும் இருப்பர். பக்தியில் பாவம் இருக்காது என்று பலர் நினைக்கின்றனர். தீவிர பக்தியின் மூலம்
மனிதர்கள் முக்தி அடைந்து விடுவர் என்று கூறுகின்றனர். ஆனால் எதுவும் ஏற்படுவது கிடையாது. இது ஒரு
நாடகமாகும். இதில் சதோ பிரதானம், சதோ, ரஜோ, தமோவில் அனைவரும் வந்தே ஆக வேண்டும். திரும்பி
ஒருவரும் சென்று விட முடியாது. எவ்வாறு மேலே இடம் காலியாகி விடுமோ அதே போன்று இங்கும் அதிக
இடம் காலியாகி விடும். டில்லி மற்றும் அதன் அருகாமையில் இனிமையான நீரோடும் நதிக்கரையில் இராஜ்யம்
இருக்கும். கடற்கரையில் இருக்காது. இந்த மும்பை இருக்காது. அது முன்பு மீன் பிடிக்கும் இடமாக இருந்தது.
மீன் பிடிப்பவர்கள் அங்கு வாழ்ந்தனர். இப்போது சமுத்திரத்தை அதிகம் வற்ற வைத்து விட்டனர். மீண்டும்
மீன் பிடிக்கும் இடமாக ஆகிவிடும். சத்யுகத்தில் மும்பை இருக்காது. அங்கு மலைகளும் இருக்காது. எங்கும்
செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. இங்கு மனிதர்கள் களைப்படைவதால் ஓய்வெடுப்பதற்குச் செல்கின்றனர்.
சத்யுகத்தில் களைப்பு ஏற்படுத்தும் எந்த வகையான கஷ்டமும் இருக்காது. நீங்கள் சொர்க்கவாசிகளாக
ஆகிவிடுவீர்கள். துளியளவும் கஷ்டம் இருக்காது. ஆக குழந்தைகள் இப்போது தந்தையின் ஸ்ரீமத் படி நடக்க
வேண்டும்,
தந்தை கூறுகின்றார் லி இனிமையான செல்லக் குழந்தைகளே! சரீர நிர்வாகத்திற்காக தொழில் போன்றவைகள்
செய்ய வேண்டும். பள்ளியில் மாணவர்கள் படித்து விட்டு பிறகு வீட்டிற்குச் சென்றும் படிப்பார்கள். வீட்டு
வேலைகளும் செய்வார்கள். இங்கும் அவ்வாறே இருக்கிறது. இந்த படிப்பில் உங்களுக்கு எந்த கஷ்டமும்
கிடையாது. அந்த படிப்பில் உங்களுக்கு எத்தனையோ பாடங்கள் இருக்கின்றன! இங்கு ஒரே ஒரு படிப்பு
மற்றும் ஒரே ஒரு கருத்து லி மன்மனாபவ. இதன் மூலம் உங்களது பாவங்கள் அழிந்து விடும். பகவானின்
மகாவாக்கியம் அல்லவா! கீதையை பகவான் துவாபர யுகத்தில் கூறியதாக அவர்கள் நினைக்கின்றனர். ஆனால்
துவாபர யுகத்தில் கூறி என்ன செய்வார்? கிருஷ்ணரின் சித்திரத்தில் மிக நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. இந்த
யுத்தம் ஒரு காரண கருவியாகப் பயன்படுகிறது. அனைவரும் இறந்து விடுவார்கள், அப்போது தான் முக்தி,
ஜீவன் முக்திக்கு திரும்பிச் செல்வார்கள். அதுவும் யுத்தத்தில் இறந்து விடமாட்டார்கள். பல வகையான
சீற்றங்கள் ஏற்படும். குழந்தைகளுக்கு எந்த வகையான துக்கமும் ஏற்படக் கூடாது. மனிதர்களுக்கு இதயம்
நின்று விட்டால் அதில் எந்த துக்கமும் ஏற்படுவது கிடையாது, இறப்பு என்றால் இவ்வாறு இருக்க வேண்டும்.
அமர்ந்திருக்கும் போதே இதயம் நின்று விடுகிறது, இறந்து விடுகின்றனர். மருத்துவர் வருவதற்குள் ஆத்மா
(3/4)
29.07.2016
வெளியேறி விடுகிறது. இப்போது அனைவருக்கும் மரணம் ஏற்பட வேண்டும். கடைசியில் இதயக் கோளாறும்
இருக்காது, மருத்துவர்களும் இருக்கமாட்டார்கள். இறுதிச் சடங்கு செய்பவர்களும் இருக்க மாட்டார்கள். எதுவும்
இருக்காது. அனைவரின் உயிரும் உடலிலிருந்து போய் விடும். அடை மழை பெய்யும். மரணம் நிகழ்வதற்கு
தாமதம் எற்படாது. மனிதர்கள் உடனேயே இறந்து விடுமளவிற்கு அணுகுண்டுகளை தயாரிப்பதற்கான முயற்சி
செய்து கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட அணுகுண்டுகளை தயாரித்துக் கொண்டிருக்கின்றனர். அணுகுண்டுகள்
தயாரிப்பதிலும் முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கின்றனர். இது நாடகத்தில் பதிவாகியிருக்கிறது. நாடகம்
ஏற்கெனவே உருவாக்கப்பட்ட விளையாட்டாகும். கல்ப கல்பமாக விநாசம் ஏற்படுகிறது. சத்யுகத்தில் உங்களிடம்
இந்த ஞானம் இருக்காது. தந்தை வந்து தான் ஞானம் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஸ்தாபனை ஆகிவிட்டால்
பிறகு ஞானத்தின் அவசியம் இருக்காது. பிறகு எப்போது இராவண இராஜ்யம் ஆரம்பமாகிறதோ அப்போது
பக்தி ஆரம்பமாகி விடுகிறது. இப்போது பக்தி முடிவடைகிறது, இப்போது நீங்கள் யோக பலத்தின் மூலம்
தூய்மையானவர்களாக ஆக வேண்டும். தூய்மை ஆவதன் மூலம் தான் நீங்கள் சுகமதாமம், சாந்திதாமத்திற்குச்
செல்ல முடியும். சார்ட் வைக்க வேண்டும். நாம் தந்தையை நினைவு செய்து தமோபிரதானத்திலிருந்து சதோ
பிரதானமாக இங்கேயே ஆக வேண்டும் என்பதை புரிந்து கொண்டீர்கள். இவ்வாறு எந்த சாஸ்திரங்களிலும்
எழுதப்படவில்லை. கடைசியில் அந்த நாள் வந்து விட்டது ....... என்ற பாடலையும் கேட்டீர்கள். பாரதவாசிகள்
இராஜாவிற்கெல்லாம் இராஜவாக ஆகின்றனர். இராஜாவிற்கெல்லாம் இராஜா என்றால் மகாராஜா ஆவதாகும்.
பிறகு திரேதாவில் இராஜா, இராணி ஆகின்றனர். பிறகு பூஜ்ய நிலையிலிருந்த மகாராஜா, மகாராணி, துவாபார
யுகத்தில் விகார மார்க்கத்தில் வந்து பூஜாரிகளாக ஆகிவிடுகின்றனர். நீங்களே பூஜிக்கத் தகுந்த நிலையிலிருந்து
பூஜாரிகளாக ஆகிவிடுகிறீர்கள். நான் பூஜாரியாக ஆவது கிடையாது என்று தந்தை கூறுகின்றார். தேவதைகள்
பூஜைக்குரியவர்களாக இருப்பர், நான் ஆவது கிடையாது. பூஜாரியாக ஆவதும் கிடையாது. பாரதவாசிகள்
தேவி தேவதைகளின் கோயில் கட்டி அவர்களை பூஜிக்கின்றனர். முதலில் பூஜைக்குரியவர்களாக இருந்த
லெட்மி நாராயணன், பிறகு பக்தி மார்க்கத்தில் அவர்களே சிவபாபாவின் பூஜாரிகளாக ஆகின்றனர். எந்த
சிவபாபா மகாராஜா, மகாராணியாக ஆக்கினாரோ, அவருக்கு கோயில் கட்டி பூஜை செய்கின்றனர். விகாரிகளாக
உடனேயே யாரும் ஆவது கிடையாது. சிறிது சிறிதாக ஆகின்றனர். அடையாளமாக தேவதைகளை விகார
மார்க்கத்தில் இருப்பதாக காண்பிக்கின்றனர். யார் பூஜைக்குரிய லெட்சுமி நாராயணனாக இருந்தார்களோ, அவர்களே
பிறகு பூஜாரிகளாக ஆகிவிடுகின்றனர். முதன் முதலில் சிவன் கோயில் கட்டினர். அந்த நேரத்தில் பூஜைக்காக
வைரத்தால் ஆன லிங்கம் உருவாக்கினர். பரமாத்மா சிறிய பிந்துவாக இருக்கின்றார் என்பது யாருக்கும்
தெரியாது. பெரிய லிங்கம் கிடையாது என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொண்டீர்கள். அதிக கோயில்கள்
கட்டுவார்கள். இராஜாவைப் பார்த்து பிரஜைகளும் அவ்வாறு செய்வர். முதன் முதலில் சிவபாபாவிற்கு பூஜை
நடைபெறுகிறது. அது தான் கலப்படமற்ற, சதோபிரதான பூஜை என்று கூறப்படுகிறது. பிறகு சதோ, ரஜோ,
தமோவாக ஆகிறது. நீங்கள் ரஜோ, தமோவில் வருகின்ற போது இந்து என்று பெயர் வைத்துக் கொண்டீர்கள்.
உண்மையில் தேவி தேவதைகளாக இருந்தீதர்கள். நீங்கள் உண்மையில் தேவி தேவதா தர்மத்தினர்கள் என்று
தந்தை கூறுகின்றார். ஆனால் நீங்கள் மிகவும் தூய்மையற்றவர்களாக ஆகிவிட்டீர்கள். ஆகையால் தன்னை
தேவதை என்று கூறிக் கொள்ள முடிவது கிடையாது, ஏனெனில் அசுத்தமானவர்களாக இருக்கிறீர்கள். இந்து
என்ற பெயரும் வெகு காலம் கழித்து வைத்துக் கொண்டீர்கள்.
நாம் தான் பூஜைக்குரியவர்களாக இருந்தோம், இப்போது சங்கமயுகத்தில் பூஜைக்குரியவர்களாகவும்
கிடையாது, பூஜாரிகளாகவும் கிடையாது என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொண்டீர்கள். நீங்கள் என்ன
செய்து கொண்டிருக்கிறீர்கள்? ஸ்ரீமத் மூலம் பூஜைக்குரியவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள், மற்றவர்களையும்
ஆக்கிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் பிராமணர்கள், உங்களது ஆத்மா தூய்மையாக ஆகிக் கொண்டிருக்கிறது.
முழு தூய்மையாக ஆகின்ற போது பிறகு இந்த பழைய ஆடையை நீக்க வேண்டியிருக்கும். முற்றிலும் எளிது
என்று தந்தை கூறுகின்றார். வயோதிக தாய்மார்களுக்கு தாரணை ஏற்படுவது கிடையாது. நான் ஆத்மா
என்பதை புரிந்து கொண்டீர்கள், ஆத்மாவில் தான் நல்லது அல்லது கெட்ட சம்ஸ்காரம் இருக்கிறது என்று
தந்தை கூறுகின்றார். ஆத்மா என்ன காரியம் செய்கிறதோ அதை அடுத்த பிறவியில் அனுபவிக்க வேண்டி
யிருக்கும். தந்தையும் ஆத்மாக்களிடம் உரையாடல் செய்கின்றார். தந்தை கூறுகின்றார் லி ஹே குழந்தைகளே!
ஆத்ம அபிமானிகளாக ஆகுங்கள். நிராகார சிவபாபா நிராகார ஆத்மாக்களுக்குக் கற்பிக்கின்றார். நிராகார
பாபாவிடம் ஞான சம்ஸ்காரம் இருக்கிறது. அவருக்கு சரீரம் கிடையவே கிடையாது. ஆக அவர் ஞானக்
கடலாக, பதீத பாவனாக இருக்கின்றார். அவரிடத்தில் அனைத்து குணங்களும் உள்ளன. நான் வந்து குழந்தை
களாகிய உங்களை தூய்மை ஆக்குகிறேன் என்று தந்தை கூறுகின்றார். எவ்வளவு எளிய யுக்தியாகும்! ஒரே
ஒரு வார்த்தை தான் லி மன்மனாபவ, என் ஒருவனை நினைவு செய்யுங்கள். நினைவின் மூலம் தான்
உங்களது விகர்மங்கள் அழிந்து போகும். இப்போது நாம் பிராமணர்களாக இருக்கிறோம், பிறகு சூரியவம்சி,
சந்திரவம்சி, வைஷ்யா, சூத்ரர்களாக ஆவோம் என்பதையும் அறிவீர்கள். நாம் தான் இந்த 84 பிறவிச்
(4/4)
29.07.2016
சக்கரத்தில் வருவோம். மேலிருந்து கீழே இறங்குவோம், பிறகு பாபா வருவார். இந்த சிருஷ்டிச் சக்கரம் சுற்றிக்
கொண்டே இருக்கும். இந்த சிருஷ்டி பழையதாக ஆகின்ற போது புதிதாக்குவதற்காக பாபா வருவார். இது
புத்தியில் பதிகிறது அல்லவா! இந்த சக்கரம் புத்தியில் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இப்போது நீங்கள்
சுயதரிசன சக்கரதாரிகளாக ஆகிறீர்கள். இதன் மூலம் நீங்கள் சென்று சக்கரவர்த்தி இராஜவாக ஆவீர்கள்.
நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய்
தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) ஸ்ரீமத்லிபடி நடந்து பூஜைக்குரியவர்களாக ஆக வேண்டும். ஆத்மாவில் பதிந்திருக்கும் கெட்ட
சம்ஸ்காரத்தை ஞான, யோகத்தின் மூலம் அழித்து விட வேண்டும். சம்பூர்ண நிர்விகாரிகளாக
ஆக வேண்டும்.
2) சரீர நிர்வாகத்திற்காக காரியங்கள் செய்தாலும் படிப்பு படிக்க வேண்டும் மற்றும் கற்றுக்
கொடுக்கவும் வேண்டும். யோக பலத்தின் மூலம் தூய்மையானவராகி இராஜ்ய பதவி அடைய
வேண்டும்.
வரதானம்: புத்தி என்ற கால் மூலம் இந்த ஐந்து தத்துவங்களின் கவர்ச்சிகளிலிருந்து
விலகியிருக்கக் கூடிய ஃபரிஸ்தா சொரூபம் ஆகுக.
ஃபரிஸ்தாவை எப்போதும் பிராகாசமான (ஒளி) உடலுடன் தான் காண்பிப்பர். பிரகாசமான உடலுடையவர்கள்
இந்த தேகம் என்ற நினைவிலிருந்தும் விலகியிருப்பார்கள். அவர்களது புத்தி என்ற கால் இந்த ஐந்து
தத்துவங்களின் கவர்ச்சிகளிலிருந்து விலகி அதாவது உயரத்தில் இருப்பர். இப்படிப்பட்ட பரிஸ்தாக்களை எந்த
ஒரு மாயையோ அல்லது மாயாவியோ தொடவும் முடியாது. ஆனால் இவ்வாறு ஆக வேண்டுமெனில்
எதற்கும் அடிமையாக இருக்கக் கூடாது. சரீரத்திற்கும் அதிகாரியாக இருந்து நடந்து கொள்ள வேண்டும்,
மாயைக்கும் அதிகாரியாக ஆக வேண்டும், லௌகீகம் அல்லது அலௌகீக சம்மந்தங்களுக்கும் அடிமையாக
ஆகிவிடக் கூடாது.
சுலோகன்: உடலை பார்க்கும் பழக்கம் இருந்தால்
ஒளி உடலைப் பாருங்கள், ஒளி ரூபத்தில் நிலைத்திருங்கள்.
(1/4)
30
30.07.2016 காலை வகுப்பு ஓம்சாந்தி பாப்தாதா , மதுபன்
இனிமையான குழந்தைகளே! உங்களுடைய கெட்டுப் போனதை சீர்திருத்தும் அதாவது
அதிர்ஷடசாலியாக ஆக்கக் கூடியவர் ஒரு பாபா தான், அவர் தான் உங்களுக்கு ஞானம்
கொடுத்து அதிர்ஷடசாலியாக ஆக்குகின்றார்.
கேள்வி:லி குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஆன்மீக பட்டியில் அமருவதற்கான ஒரு விதி என்ன?
பதில்:லி ஆன்மீகப் பட்டி என்றால் நினைவு யாத்திரையில் அமரக் கூடியவர்களின் எண்ணம் ஒரு போதும்
இங்கும்லி அங்கும் செல்லக் கூடாது, ஒரு பாபாவை நினைவு செய்ய வேண்டும். உங்கள் புத்தி இங்கும்லிஅங்கும்
செல்கின்றது என்றால் துôங்கி விழுவீர்கள், கொட்டாவி வரும், இதனால் வாயுமண்டலம் கெட்டு விடும்.
தனக்குத் தானே நஷ்டத்தினை உண்டாக்குகின்றீர்கள்.
பாட்டு:லி உள்ளத்தின் உதவியாளனை துண்டித்து விட வேண்டாம்
ஓம் சாந்தி! இனிமையிலும்லிஇனிமையான ஆன்மீகக் குழந்தைகள் பாட்டின் இரண்டு வார்த்தைகளைக்
கேட்டீர்கள். குழந்தைகளுக்கு எச்சரிக்கை கொடுக்கின்றார். இந்த நேரத்தில் கூட பிராமணர்களான உங்களைத்
தவிர அனைவரின் அதிர்ஷ்டம் கெட்டு விட்டது. நீங்களும் கூட இப்பொழுது கெட்டதை சீர்திருத்திக் கொண்டு
இருக்கின்றீர்கள். பாபாவைத் தான் அதிர்ஷ்டத்தை உருவாக்கக் கூடியவர் என்று சொல்லப்படுகின்றது. நீங்கள்
சிவபாபா எவ்வளவு இனிமையானவர் என்று அறிவீர்கள். பாபா என்ற வார்த்தையே மிகவும் இனிமையானது.
பாபாவிடமிருந்து தான் அனைத்து ஆத்மாக்களுக்கும் ஆஸ்தி கிடைக்கின்றது. ஆன்மீகத் தந்தையால் ஆண்
குழந்தைகளுக்கு ஆஸ்தி கிடைக்கின்றது, பெண் குழந்தைகளுக்கு இல்லை. ஆனால் இங்கே ஆண் குழந்தை
களும், பெண் குழந்தைகளும் ஆஸ்திக்கு அதிகாரி ஆகின்றார்கள். பாபா தன்னுடைய குழந்தைகளுக்கு அதாவது
ஆத்மாக்களுக்கு கற்பிக்கின்றார். ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்கள் என்பதை புரிந்து கொண்டீர்கள்.
உண்மையில் இதுதான் சகோதரத்துவம் என்று சொல்லப்படுகின்றது ! ஒரு பகவானின் குழந்தைகள் பின்பு ஏன்
இவ்வளவு சண்டை போடுகின்றார்கள். அனைவரும் தங்களுக்குள் சண்டை போடுகின்றார்கள். அநேக தர்மம்,
அநேக வழி மேலும் முக்கியமான விஷயம் இராவண இராஜ்யத்தில் சண்டை நடக்கின்றது, ஏனென்றால்
விகாரம் அனைவரிடமும் நுழைந்துள்ளது. காம விகாரத்திற்காக எவ்வளவு சண்டை போடுகின்றார்கள் ! அப்படி
அநேக இராஜாக்கள் சண்டை போட்டுள்ளார்கள். காமத்திற்காக அதிக சண்டை போட்டு உள்ளார்கள். எவ்வளவு
சந்தோஷம் அடைகின்றார்கள். யாரிடமாவது மனதைப் பறி கொடுத்து விட்டால் கொலையும் கூட செய்கின்றார்கள்.
காமம் மஹா எதிரி. கோபமுள்ளவரை கோபக்காரன் என்று தான் சொல்கின்றோம். பேராசை உள்ளவரை
பேராசைக்காரன் என்று சொல்கின்றோம். ஆனால் காமம் உள்ளவருக்கு மட்டும் அநேக பெயர் வைத்துள்ளார்கள்.
ஆகையால் தான் அமிர்த்தை விட்டு விஷத்தை ஏன் குடிக்கின்றீர்கள் என்று சொல்கின்றார்கள். சாஸ்த்திரத்தில்
அமிர்தம் என்ற பெயரை வைத்துள்ளார்கள். கடலைக் கடையும் போது அமிர்தம் வெளிப்பட்டது என்று
சொல்கின்றார்கள். இலட்சுமியிடம் தான் கலசம் கொடுத்துள்ளார்கள். எவ்வளவு கதைகள் உள்ளன. இதில் கூட
பெரியதிலும் பெரிய விஷயம். சர்வவியாபி என்ற விஷயம், கீதையின் பகவான் யார் என்ற விஷயம், மேலும்
பதீதலிபாவனர் யார்? கண்காட்சியில் இந்த விஷயங்களின் படங்களை வைத்து புரிய வைக்க வேண்டும். பதீதலி
பாவனன், ஞானக்கடல் மேலும் அதிலிருந்து வெளிப்பட்ட ஞான கங்கைகள் அதாவது தண்ணீரின் நதியா
அல்லது கடலா? எவ்வளவு நல்லலிநல்ல விஷயங்கள் புரிய வைக்கப்படுகின்றது ! .பாபா உட்கார்ந்து புரிய
வைக்கின்றார்லி இனிமையிலும், இனிமையான குழந்தைகளே! உங்களை யார் பாவனம் ஆக்குகின்றார்? கெட்டுப்
போனதை சீர்திருத்தக் கூடியவர் யார்? இந்த பதீதலிபாவனன் எப்பொழுது வருகின்றார்? இந்த விளையாட்டு
எப்படி உருவாகி உள்ளது? யாரும் அறிவதில்லை. பாபாவுக்குத் தான் ஞானக்கடல், கருணைக்கடல், அமைதிக்கடல்
என்று சொல்லப்படுகின்றது. கெட்டுப் போனதை சீர்திருத்தக் கூடியவர் ஒருவர்தான் என்று சொல்லப்படுகின்றது.
இராவணன் தான் நம்மைக் கெடுக்கின்றார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. இந்த விளையாட்டே
வெற்றி, தோல்வியானது. இராவணனைக் கூட நீங்கள் அறிவீர்கள் அவரை ஒவ்வொரு வருடமும் எரிக்கின்றார்கள்.
இவர் பாரதத்தின் எதிரி. பாரதத்தில் தான் ஒவ்வொரு வருடமும் எரிக்கின்றார்கள். அவர்களிடம் போய் நீங்கள்
எப்பொழுதிலிருந்து இதை எரிக்கின்றீர்கள் என்று கேளுங்கள். அவர்கள் காலம்லிகாலமாக, உலகப் படைப்பின்
ஆரம்பத்திலிருந்து செய்கின்றோம் என்று சொல்வார்கள். சாஸ்த்திரத்தில் என்ன எல்லாம் படித்தோமோ அது
தான் உண்மை என்று சொல்லிக் கொண்டு வந்தோம். ஈஸ்வரனை சர்வ வியாபி என்று சொல்வது முக்கியமான
விஷயமாகும். பாபா இது யாருடைய தவறு என்று சொல்வதில்லை. இது நாடகத்தில் பதிவாகியுள்ளது. வெற்றிலி
தோல்வியின் விளையாட்டு. மாயாவிடம் தோல்வியே தோல்வி, மாயாவிடம் வெற்றியே வெற்றி ! மாயாவிடம்
எப்படி தோல்வி அடைகின்றீர்கள் என்பதைப் புரிய வைக்கின்றார். முழு அரைகல்பம் இராவண இராஜ்யம்
நடக்கின்றது. ஒரு வினாடி கூட வித்தியாசம் ஏற்படாது. இராம இராஜ்த்தின் ஸ்தாபனை, இராவண இராஜ்யத்தின்
வினாசம் நடக்கின்றது. தன்னுடைய நேரப்படி சரியாக நடக்கின்றது. சத்தியயுகத்தில் இலங்கை இருப்பதில்லை.
(2/4)
30.07.2016
அது புத்த தர்மத்தின் கண்டம். எழுத படிக்கத் தெரிந்தவர்கள் இலண்டன் இந்தப் பக்கம் உள்ளது, அமெரிக்கர்
இந்தப்பக்கம் உள்ளது என்று தெரிந்துள்ளார்கள். படிப்பால் புத்தியின் பூட்டு திறக்கப்டுகின்றது, ஒளி கிடைக்கின்றது.
இதற்கு ஞானத்தின் மூன்றாவது கண் என்று சொல்லப்படுகின்றது. வயதானவர்கள் நிறைய விஷயங்களைப்
புரிந்து கொள்ள முடியாது. இவர்கள் ஒரே ஒரு விஷயம் தாரணை செய்ய வேண்டும் அது தான் கடைசியில்
உதவும். மனிதர்கள் சாஸ்த்திரம் நிறைய படிக்கின்றார்கள். கடைசியில் ஒன்று சொல்கின்றார்கள் ராம்லிராம் என்று
சொல்லுங்கள். சாஸ்த்திரம் படியுங்கள், வேதம் படியுங்கள் என்று சொல்வதில்லை. கடைசியில் இராமரை நினையுங்கள்
என்று சொல்கின்றார்கள். வாழ்க்கையில் அதிக காலம் எதைப் பற்றி அதிகம் நினைக்கின்றார்களோ அது தான்
கடைசியில் நினைவு வரும். இப்பொழுது அழிவு அனைவருக்கும் வரப் போகின்றது. அனைவரும் யாரை
நினைப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியும். சிலர் சிருஷ்ணரை, சிலர் தன்னுடைய குருவை நினைப்பார்கள்.
தேகத்தை நினைத்தால் விளையாட்டு முடிந்துவிடும். இங்கு ஒரு விஷயம் தான், தன்னை ஆத்மா என்று
நினைத்து பாபாவை நினைவு செய்யுங்கள் என்று உங்களுக்குப் புரிய வைக்கின்றார். நாம் எவ்வளவு நேரம்
நினைக்கின்றோம் என்று சார்ட் வையுங்கள். எவ்வளவு நினைக்கின்றோமோ, அவ்வளவு பாவனம் ஆகிக்
கொண்டே போவீர்கள். கங்கையில் குளிப்பதால் பாவனம் ஆக முடியாது. இது ஆத்மாவின் விஷயம் அல்லவா
! ஆத்மா தான் பதீத், ஆத்மா தான் பாவனம் ஆகின்றது இல்லையா? ஆத்மா ஒரு ஸ்டார் புள்ளி போன்று
உள்ளது என்று பாபா புரிய வைக்கின்றார். இரு புருவங்களுக்கும் மத்தியில் உள்ளது. ஆத்மா ஸ்டார் மிக
சூட்சமமானது என்று சொல்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் தான் இந்த விஷயங்களைப் புரிந்து கொள்ள
முடியும். நான் கல்பலிகல்பம் சங்கமயுகத்தில் தான் வருகின்றேன் என்று பாபா சொல்கின்றார். மற்றவர்கள் கல்பம்
என்ற வார்த்தையை விட்டு யுகம்லியுகம் என்ற வார்த்தையைப் போட்டு விட்டார்கள். அதனால் மனிதர்கள்
எவ்வளவு தவறாகப் புரிந்துள்ளார்கள். கல்பலிகல்பமாக சங்கமயுகத்தில் வருகின்றேன் என்று நான் சொல்கின்றேன்.
ஆழ்ந்த இருள் மேலும் ஆழ்ந்த வெளிச்சம் இரண்டும் நடுவில் சங்கமம். மற்றபடி யுகலியுகமா வருவதற்கு
அவசியம் இல்லை. ஏணிப்படி இறங்கிக் கொண்டே தான் வருகின்றது. எப்பொழுது 84 ஜென்மம் முழுமையாக
நீங்கள் எடுத்து முடிக்கின்றீர்களோ அப்பொழுது நான் வருகின்றேன் என்று பாபா கூறுகின்றார். இந்த ஞானம்
முழு உலகத்திற்கானதாகும். சன்யாசிகள் சொல்லிவிடுகின்றார்கள் இந்த படமெல்லாம் கற்பனையானது என்று.
ஆனால் இதில் கற்பனைக்கான விஷயம் என்பதே இல்லை. இது அனைவருக்கும் புரியவைக்கின்றோம்,
இல்லையென்றால், மனிதர்களுக்கு எப்படித் தெரியும்? அதனால் இந்த படங்கள் எல்லாம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சி அனைத்து தேசத்திலும் அநேக முறை போடப்படுகின்றது. மிகவும் பாரதவாசி குழந்தைகள்தான்
உள்ளார்கள் என்று பாபா சொல்கின்றார். ஆனாலும் அனைவரும் குழந்தைகள் தான். இது அநேக தர்மத்தின்
மரம். நீங்கள் காமம் என்ற சிதையில் உட்கார்ந்ததால் எரிந்து விட்டீர்கள் என்று புரிய வைக்கின்றார். சத்திய
யுகத்தில் யார் முதலில் வருகின்றார்களோ அவர்களே துவாபர யுகத்தில் முதன் முதல் வந்து காம அக்னியில்
எரிகின்றார்கள் அதனால் தான் கருப்பாக ஆகிவிட்டார்கள். இப்பொழுது அனைவருக்கும் சத்கதி ஏற்பட
வேண்டும். நீங்கள் தான் நிமித்தமாக உள்ளீர்கள். உங்களுக்குப் பின்னால் தான் அனைவருக்கும் சத்கதி ஏற்பட
வேண்டும். பாபா எவ்வளவு எளிமையாகப் புரிய வைக்கின்றார். பாபாவை மட்டும் நினைவு செய்யுங்கள் என்று
சொல்கின்றார். ஆத்மா தான் துர்கதியை அடைந்துவிட்டது. ஆத்மா பதீதமாக ஆனதால் உடல் கூட அவ்வாறே
கிடைக்கின்றது. ஆத்மாவை பாவனம் ஆக்குவதற்காக பாபா எளிய வழியைக் கற்றுக்க் கொடுக்கின்றார்.
திரிமூர்த்தி படத்தில் பிரம்மாவின் படத்தைப் பார்த்து மனிதர்கள் ஐயோலிஐயோ ! என்று சொல்கின்றார்கள்.
இவரை பிரம்மா என்று ஏன் சொல்கின்றீர்கள்? பிரம்மாவோ சூட்சுமவாசி தேவதை, அவர் இங்கே எப்படி
வந்தார்? இந்த தாதா புகழ் பெற்றவராக இருந்தார். செய்தித்தாட்களில் எல்லாம் இவர் பெயர் வந்தது, ஒரு
வைர வியாபாரி தன்னை ஸ்ரீகிருஷ்ணன் என்று சொல்கின்றார், எனக்கு 16108 ராணிகள் வேண்டும் என்று
சொல்கின்றார். அவரை விரட்டுவதற்காக போராட்டம் அதிகமானது. இப்பொழுது ஒவ்வொருவருக்கும் எப்படி
புரிய வைப்பது ? இத்தனை மனிதர்கள் உள்ளார்கள். அபுவில் கூட யாராவது வந்தால் உடனே கேட்கின்றார்கள்
நீங்கள் பிரம்மா குமாரிகளிடம் போகின்றீர்களா? அவர்கள் மந்திரம் போடுகின்றார்கள். ஆண்லிபெண் இருவரையும்
சகோதரன்லிசகோதரி ஆக ஆக்குகின்றார்கள். பெரியலிபெரிய விஷயம் கூறி மனதைக் கெடுத்துவிடுகின்றார்கள்.
நீங்கள் என்னை ஞானக்கடல், உலகத்தின் சர்வ சக்திவான் என்று சொல்கின்றீர்கள் அல்லவா என்று பாபா
கேட்கின்றார். உலகின் சர்வசக்திவான் என்றால், வேத சாஸ்த்திரங்கள் அனைத்தையும் அறிந்தவர். பெரிய
பண்டிதர்களைக் கூட சக்தி என்று சொல்கின்றோம். ஏனென்றால், அவர்கள் அனைத்து வேத, சாஸ்த்திரம்
படித்தவர்கள் பனாரஸ் சென்று பட்டத்தை வாங்குகின்றார்கள். மஹாலிமஹோபாத்தியாய, ஸ்ரீ,ஸ்ரீ 108 சரஸ்வதி
என்ற இந்த பட்டம் யாவும் அங்கு தான் கிடைக்கின்றது. யார் மிகவும் புத்திசாலிகளோ அவர்களுக்கு இந்த
பட்டம் கிடைக்கின்றது. சாஸ்த்திரத்தில் ஜனகரைக் கூட எழுதி உள்ளார்கள். யாராவது உண்மையான பிரம்ம
ஞானத்தை சொல்லுங்கள் என்று கேட்கின்றார். இங்கு பிரம்ம ஞானி யாரும் இல்லை. அனைத்தும் இங்குள்ள
விஷயங்கள் தான். கதைகளைப் பெரியதாக்கி விட்டார்கள். சங்கரர்லிபார்வதி கதைகள் கூட எழுதி உள்ளார்கள்.
(3/4)
30.07.2016
எவ்வளவு கதைகள் எழுதி உள்ளார்கள். சங்கரர் அமர்ந்து பார்வதிக்கு கதை சொன்னதாக காட்டுகின்றார்கள்,
உண்மையில் சிவன் தான் சொல்கின்றார். ஆனால் அவர்கள் சங்கரர் பார்வதி பெயரை எழுதி விட்டார்கள்.
பாகவதம் இவை அனைத்தும் இப்பொழுது நடக்கும் விஷயம் தான், பிறகு கதையாக எழுதி விட்டார்கள்.
இராஜாவுக்குப் போய் இந்த ஞானம் சொல்வோம் என்று அவர்கள் எண்ணத்தில் தோன்றியது. இராஜ்ஜாக்களுக்கு
போய் ஞானம் கொடுங்கள் என்று பாபா புரிய வைக்கின்றார். நீங்கள் சூர்ய வம்சத்தைச் சேர்ந்தவர்களாக
இருந்தீர்கள், பிறகு சந்திர வம்சம், வைஷ்ய வம்சம், சூத்திர வம்சம் ஆகின்றீர்கள். உங்களுடைய இராஜதானி
போய் விட்டது. இப்பொழுது மீண்டும் புருஷார்தம் செய்து சூர்யவம்ச இராஜ்யத்தை அடைகின்றீர்கள். இராஜ
யோகத்தைக் கற்றுக் கொடுக்கக் கூடிய பாபா வந்துள்ளார். பின்பு வந்து சுய இராஜ்யத்தை அடையுங்கள்.
இராஜ்ஜாக்களிடம் எத்தனை கடிதங்கள் போகின்றது ஆனால் அவருக்கு கிடைக்கின்றதா என்ன, அவரின்
(பர்ஸனல் செகரட்ரி) தனிச் செயலர் கடிதங்களைப் பார்க்கின்றார்கள், எவ்வளவு கடிதங்களை எரிந்து விடு
கின்றார்கள். முக்கியமான விஷயங்களாக இருந்தால் தான் இராஜாவிற்குக் காட்டுகின்றார்கள். அஷ்டாவக்கிரன்
ஜனகருக்கு ஒரு வினாடியில் ஜீவன்முக்தியின் காட்சியைக் காண வைத்தார் என்று சொல்லப்படுகின்றது.
இப்பொழுது பாபா வந்து எவ்வளவு நல்லவிதமாகப் புரிய வைக்கின்றார். யார் புரிந்து கொள்ளவில்லையோ
அவர்கள் தான் இங்கும், அங்கும் பார்ப்பார்கள். அவர்கள் புத்தியில் உட்காரவில்லை என்று பாபா உடனே
புரிந்து கொள்கின்றார். அனைவரும் நல்லவிதமாக கேட்கின்றார்களா என்று பாபா நாலா புறமும் பார்க்கின்றார்.
இவர்கள் புத்தி எங்கே அலைந்து கொண்டு இருக்கின்றது என்றால், கொட்டாவி விட்டுக் கொண்டே இருப்பார்கள்,
துôங்கி விழுவார்கள் பிறகு உடனே எழுந்து வெளியே போய் விடுவார்கள். ஆரம்பத்தில் இவர்களுக்கு பெரிய
சார்ட் இருந்தது. பெரிய கதை இருக்கும். ஆரம்பத்தில் குழந்தைகள் மிகவும் தியானத்தில் போய் விடுவார்கள்.
இப்பொழுது கூட மந்திரவாதி சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். பரமபிதா பரமாத்மாவை மந்திரவாதி என்று
சொல்கின்றார்கள் அல்லவா? அவர்களுக்கு பாபாவின் மீது மிகவும் அன்பு உள்ளது, அதனால் தான் பார்த்தவுடன்
தியானத்தில் போய் விடுகின்றார்கள் என்று பாபா பார்க்கின்றார். வைகுண்டம் என்பது பாரதவாசிகளுக்கு
மிகவும் பிடிக்கும். அதனால் யாராவது இறந்தால் கூட வைகுண்டவாசி ஆகிவிட்டார், சொர்க்கவாசி ஆகிவிட்டார்
என்று சொல்கின்றார்கள். இப்பொழுது இது நரகமாக உள்ளது. அனைவரும் நரகவாசிகள் ஆகி விட்டார்கள்,
அதனால் தான் யாராவது இறந்தால் சொர்க்கவாசி ஆகி விட்டார் என்று சொல்கின்றார்கள். ஆனால் யாரும்
சொர்க்கத்திற்குப் போவதில்லை. இப்பொழுது நீங்கள் மட்டும் தான் அறிவீர்கள் நாம் தான் சொர்க்கவாசியாக
இருந்தோம், பின்பு 84 ஜென்மம் எடுத்து நரகவாசி ஆகி விட்டோம். இப்பொழுது மீண்டும் பாபா சொர்க்கவாசியாக
ஆக்கிக் கொண்டிருக்கின்றார். சொர்கத்தில் தான் நமது இராஜதானி இருந்தது. இராஜதானியில் அநேக பதவிகள்
இருக்கின்றது. முயற்சி செய்து மனிதனிலிருந்து நாராயணன் ஆக வேண்டும். மம்மாலிபாபா எதிர்காலத்தில்
இலட்சுமிலிநாராணன் ஆகின்றார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொண்டீர்கள். இப்பொழுது புருஷார்த்தம் செய்து
கொண்டு இருக்கின்றீர்கள், ஆகையால் தான் தாய்லிதந்தையைப் பின்பற்றுங்கள் என்று சொல்லப்படுகின்றது.
இவர்கள் எப்படி முயற்சி செய்தார்களோ, அப்படி நீங்களும் செய்யுங்கள். சுயதர்சனலிசக்கரதாரி ஆக வேண்டும்
இது கூட நினைவு இருக்க வேண்டும். நீங்கள் பாபாவை நினைவு செய்யுங்கள், ஆஸ்தியை நினைவு செய்யுங்கள்.
திரிகாலதர்μ ஆகுங்கள். உங்களுக்கு முழு சக்கரத்தின் ஞானம் உள்ளது, இதில் முழ்கியிருங்கள். மற்றவர்களுக்குப்
புரிய வையுங்கள். இந்த சேவையிலேயே ஈடுபட்டு இருந்தால் மற்ற எந்த தொழில்இ வேலை நினைவு வராது.
நல்லது.
னிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய்
தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:லி
1) சத்தியுகத்தில் உயர்ந்த பதவி அடைவதற்காக தாய்லிதந்தையை முழுமையாகப்
பின்பற்றுங்கள்.அவர்கள் சமமாக புருஷார்த்தம் செய்யுங்கள். சேவையில் முழ்கியிருங்கள்.
ஒருமித்த மனதோடு படியுங்கள்.
2) நினைவின் சார்ட்டை உண்மையானதாக வைக்க வேண்டும். தன்னை ஆத்மா என்று
நினைத்து பாபாவை நினைவு செய்யுங்கள், தேகம்லி தேக சம்மந்தப்பட்டவர்களை நினைக்க
வேண்டாம்.
30.07.2016
(4/4)
வரதானம்: சுயநலம் என்ற வார்த்தையின் அர்தத்தை அறிந்து சதா ஒரு ரசனையில்
நிலைத்து இருக்கக் கூடிய சகஜமான புருஷார்த்தி பவ !.
தற்காலத்தில் ஒருவர் பிறரோடு பற்று வைக்கின்றார்கள் என்றால், அதில் அன்பு இல்லை, சுயநலம்
தான் இருக்கின்றது. சுயநலத்தின் காரணத்தால் பற்று வைக்கின்றார், மேலும் பற்றின் காரணத்தால் விடுபட்ட
நிலையில் இருக்க முடிவதில்லை. ஆகையால் சுயநலம் என்ற வார்த்தையின் அர்த்தத்தில் நிலைத்து விடுங்கள்
அப்படி என்றால் முதலில் சுயம் என்ற ரதத்தை ஸ்வாஹா (சமர்ப்பணம்) செய்யுங்கள். இந்த சுயநலம் போய்
விட்டால் விடுபட்ட நிலை ஆகி விடுவீர்கள். இந்த ஒரு சப்தத்தின் அர்த்தத்தை அறிந்து கொண்டால் சதா
ஒருவரின் மேலும் ஒரு ரசனையில் இருக்க முடியும், இது தான் எளிதான புருஷார்த்தம்.
சுலோகன்: பரிஸ்தா ரூபத்தில் இருந்தால், எந்த ஒரு தடைகளும் நம்மைத் தாக்க முடியாது.
(1/5)
31
31.07.2016 காலை முரளி ஓம் சாந்தி ''அவ்யக்த பாப்தாதா''
ரிவைஸ் 29.10.1981 மதுபன்
'' தந்தை மற்றும் குழந்தைகளின் ஆன்மீக சந்திப்பு ''
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார். இந்த ஆன்மீக சந்திப்பை
குழந்தைகள் நீங்கள் மட்டும் தான் செய்ய முடியும். ஒரு தந்தையுடன் ஒரே நேரத்தில் இந்த சந்திப்பை
செய்ய முடியும். நீங்கள் அனைவரும் தீபாவளித் திருவிழாவைக் கொண்டாட வந்திருக்கிறீர்கள். விழாவில்
ஒன்று கொண்டாடுவது, இரண்டாவது ஒருவர் இன்னொருவரை சந்திப்பது, மூன்றாவது ஏதாவது (பரிசு) கொடுப்பது
மற்றும் பெற்றுக் கொள்வது. மேலும் நான்காவது விளையாடுவது. நீங்கள் அனைவரும் கூட இந்த நான்கு
விஷயங்களையுமே செய்திருக்கிறீர்கள். சந்திப்பு விழாவிலோ வந்திருக்கிறீர்கள். ஆனால் கொண்டாடுவது என்றால்,
எப்பொழுதும் அழியாத உற்சாகம் நிரம்பிய, ஊக்கம் நிரம்பிய வாழ்க்கையில் எப்பொழுதும் இருப்பதற்கான திட
எண்ணம் வைப்பது. இந்த ஆன்மீக சந்திப்பு விழாவை கொண்டாடுவது, அழியாத உற்சவத்தைக் கொண்டாடுவது
ஓரிரு நாட்களுக்காக மட்டுமில்லை. ஆனால் சங்கமயுகமே எப்பொழுதும் உற்சவம் அதாவது உற்சாகத்தை
அதிகரிப்பது. அப்படி தீபாவளி கடந்து சென்று விடவில்லை ஆனால் தீப ஒளி வீசிக்கொண்டிருக்கிறது.
நிரந்தரமாக புது வருடம் வந்திருக்கிறது. ஒவ்வொரு நேரமும் உங்களைப் பொருத்தளவில் புதியது. எப்படி
புது வருடத்தில் அதே நாளில் விசேஷமாக புதுப்புது ஆடைகள், புதுப்புது அலங்காரம், புதிய ஊக்கம் மற்றும்
விசேஷ குμக்கான நாள் என்று புரிந்து அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார்கள், இனிப்பு
வழங்குகிறார்கள், அதே போல் ஆன்மீக குழந்தைகள் உங்களைப் பொருத்தளவில் சங்கமயுகத்தின் ஒவ்வொரு
நாளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்கான மற்றும் அனைவருக்கும் எப்பொழுதும் இனிப்பு
வழங்குவதற்கான நாள் ஆகும். அந்த மாதிரி எப்பொழுதும் உற்சாகத்தில் இருங்கள், மேலும் மற்றவர்களுக்கும்
உற்சாகம் கொடுங்கள். எப்பொழுதும் வாயில் இனிமையான வார்த்தைகள் வருவது, என்பது தான் இனிப்பு
வழங்குவது, மேலும் மற்றவர்களுக்கும் இனிமையான வார்த்தைகள் மூலமாக இனிமையான தந்தையின்
நினைவூட்டுவது, சம்மந்தத்தில் கொண்டு வருவது, இது தான் இனிப்பு வழங்குவது. அப்படி எப்பொழுதுமே
வாய் இனித்துக் கொண்டிருக்கிறதா? இனிமையான வார்த்தை என்ற இனிப்பு எப்பொழுதும் உங்கள்
வாயிலிருக்கிறது மற்றும் எப்பொழுதும் மற்றவர்களுக்கும் அருந்தக் கொடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள்.
ஒவ்வொரு நாளும் உயர்ந்த நிலை அதாவது ஒவ்வொரு நாளும் தன்னில் புதுமையை தாரணை செய்து
கொண்டே இருக்கிறீர்கள். ஒரு விநாடி சென்றது மேலும் புதிய நிலை. ஒரு விநாடிக்கு முன்பு என்ன
நிலையாக இருந்ததோ அது இரண்டாவது விநாடியில் முன்னேறும் கலையின் அனுபவத்தின் காரணத்தினால்
எப்பொழுதும் உயர்ந்ததாக மற்றும் புதியதாக இருக்கிறது. அப்படிப்பட்ட நிலையை தாரணை செய்வது என்றால்,
புதிய ஆடையை அணிவது. சத்யுகத்திலோ ஸ்தூலமாக எப்பொழுதும் புதிய ஆடை அணிவீர்கள், உலக
மகாராஜா மற்றும் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அணிந்த ஆடையை அணிய மாட்டீர்கள். இந்த சம்ஸ்காரத்தை
இராஜ்ய அதிகாரி ஆத்மாக்கள் இங்கேயே நிரப்ப வேண்டும். ஒவ்வொரு நேரத்தின் புதிய நிலை மற்றும்
ஒவ்வொரு நேரம் பாப்தாதா மூலமாக ஞானம், யோகா மூலமாக புதிய அலங்காரம் ஆகிக் கொண்டிருக்கிறது.
எப்படி மிக அதிக செல்வம் உடையவர்கள் எப்பொழுதும் புதுப்புது அலங்காரம் செய்வார்கள். அப்படி
அனைவரையும் விட உயர்ந்த சம்பன்னமான தந்தை, உயர்ந்த சம்பன்ன குழந்தைகள் உங்களுக்கு தினசரி
புதிய அலங்காரம் செய்கிறார் இல்லையா? அப்படி தினசரி புதிய வருடம் ஆனது இல்லையா! புதிய ஆடை,
புதிய அலங்காரம், புதிய உற்சவம் அதாவது உற்சாகம் மற்றும் எப்பொழுதுமே வாய் இனித்துக் கொண்டிருப்பது.
நிரந்தரமாகவே வாயில் இனிப்பை அனுபவம் செய்விக்கும் இனிப்பு இருக்கிறது. எனவே தந்தையும் தினசரி
என்ன கூறுகிறார்? (இனிமையிலும் இனிமையான குழந்தைகளே) இது உறுதியாக நினைவில் இருக்கிறது
இல்லையா? தந்தையும் இனிமையிலும் இனிமையான குழந்தைகளே! என்று கூறுகிறார். மேலும் குழந்தைகளும்
என்ன கூறுகிறார்கள்? (இனிமையிலும் இனிமையான பாபா) அப்படியானால் வாயில் என்ன ஆயிற்று?
அப்படி தினசரி புதிய வருடம் ஆகிவிட்டது இல்லையா? புதிய வருடம் என்றால், புதியது என்ன புதிய நேரம்
ஆகிவிட்டது. அப்படி இந்த விதமாக கொண்டாடினீர்களா? அல்லது உற்சவம் சென்று விட்டது, கூடவே
உற்சாகமும் சென்று விட்டதா? அப்படி அற்பகாலத்திற்கு கொண்டாடவில்லையே? இங்கு ஆன்மீக மேளா
(சந்திப்பு) என்றால் அழியாத மேளா, இன்னொரு விஷயம் கொண்டாடுவதின் கூடவே சந்திப்பது. அப்படி
ஆன்மீக சந்திப்பு செய்வது என்றால், தந்தைக்குச் சமமாக ஆவது. இது ஸ்தூலமான சந்திப்பு இல்லை, ஆனால்
குணங்களால் சந்திப்பது, சம்ஸ்காரங்களால் சந்திப்பது. சந்திப்பது என்றால் சமம் ஆவது, எனவே தான் சேர்க்கையின்
பிரபாவம் இருக்கிறது என்ற மகிமை பாடுகிறார்கள். அந்த மாதிரி ஆன்மீக சந்திப்பை செய்தீர்களா? அல்லது
(2/5)
31.06.2016
ஒவ்வொருவருக்கும் கை கொடுத்தீர்கள், மேலும் கட்டி அணைத்தீர்கள் என்பது மட்டும் தானா? குணங்களின்
சந்திப்பு மற்றும் சம்ஸ்காரங்களின் சந்திப்பு, இது நிரந்தரமானது தான் இல்லையா? தினசரி சந்திப்பைக்
கொண்டாடுவது. அப்படி மேளாவில் வந்திருக்கிறீர்கள் என்றால், அந்த மாதிரி சந்திப்பை செய்தீர்களா?
மூன்றாவது விஷயம், வாங்குவது மற்றும் கொடுப்பது. உலகியல் முறையில் கூட ஏதாவது
திருவிழாவிற்குச் செல்கிறீர்கள் என்றால் பணம் கொடுப்பீர்கள், ஏதாவது பொருளை வாங்குவீர்கள். அவசியம்
ஏதாவது வாங்குவார்கள். மேலும் பொருளைப் பெறுவதற்கு முன்பு கொடுப்பதோ இருக்கவே இருக்கிறது.
அப்படி எப்பொழுதுமே எடுக்கிறீர்களா? ஒவ்வொருவரிலும் கூட எப்பொழுதும் ஒவ்வொருவரின் விசேஷம்
மற்றும் குணங்களை எடுக்கத்தான் செய்கிறீர்கள். எப்பொழுதுமே எடுக்கிறீர்கள் தான் இல்லையா? எப்பொழுது
எடுக்கிறீர்கள் என்றால், தனக்குள் தாரணை செய்கிறீர்கள். அப்படி எப்பொழுது விசேஷத்தை தாரணை செய்தீர்கள்
என்றால், அதற்குப் பதிலாக சாதாரண நிலை இயல்பாகவே அகன்று விடுகிறது. குணத்தை தாரணை செய்கிறீர்கள்
என்றால், அந்த குணத்தை தாரணை செய்வதினால் என்ன பலஹீனம் இருந்ததோ அது தானாகவே அகன்று
விடுகிறது. அப்படி இது தான் கொடுப்பதாக ஆனது. அப்படி குஜராத்தை சேர்ந்தவர்கள் எடுத்தார்களா மற்றும்
கொடுத்தார்களா? கொடுப்பது மற்றும் பெறுவதை செய்தீர்களா? இந்த கொடுப்பது மற்றும் எடுப்பது ஒவ்வொரு
நேரமும் நடந்து கொண்டே இருக்கிறது. மேலும் நடந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு விநாடியும்
எடுக்கிறீர்கள் மற்றும் கொடுக்கிறீர்கள். ஏனென்றால், எடுப்பதினால் கொடுப்பதும் அதனோடு சேர்ந்து இருக்கிறது.
அப்படி கொடுப்பதிலும் பரந்த மனமுடையவர்களாக இருக்கிறீர்களா அல்லது கஞ்சனாக இருக்கிறீர்களா? பரந்த
மனமுடையவர் தான் இல்லையா? மேலும் கொடுப்பது கூட என்ன கொடுக்கிறீர்கள். எதனால் கஷ்டப்பட்டுக்
கொண்டு இருக்கிறீர்களோ அதைத் தான் கொடுக்கிறீர்கள்.
எப்பொழுது அனைத்துக் குழந்தைகளும் முற்றிலும் காலியாகி விடுகிறார்களோ அப்பொழுது தான்
தந்தை வருகிறார். உடலின் சக்தியும் இல்லை, மனதின் சக்தியும் இல்லை, பணம் செல்வத்தின் சக்தியும்
இல்லை. உடலின் சக்தியில் காலியாகி இருக்கிறார்கள் லி இதனுடைய நினைவாக சிவனின் ஊர்வலத்தை
எப்படிக் காண்பித்திருக்கிறார்கள்? மேலும் மனதின் சக்தி அழிந்ததின் அடையாளமாக லி 'எப்பொழுதும் கூவி
அழைத்துக் கொண்டிருப்பது' என்பது நினைவாக இருக்கிறது. தினசரி அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள்
இல்லையா? பணம் செல்வத்தின் காலியானதின் அடையாளம் லி இப்பொழுது பாருங்கள் கொஞ்சம் தங்கமும்
இருக்கிறது. அதன் மீது எப்பொழுதும் அரசாங்கத்தின் பார்வை இருக்கிறது. பயந்து பயந்து அணிகிறார்கள்.
ஒருவேளை பணம் இருக்கிறது என்றாலும் அதனுடைய பெயர் என்னவாக இருக்கிறது? 'கருப்பு பணம்'.
பெயரளவில் எவ்வளவு பெரிய செல்வந்தனோ, அந்த அளவு 90 சதவிகிதம் கருப்பு பணம் இருக்கும். அப்படி
பெயரளவில் பணம் இருந்ததா? அல்லது உபயோகத்திற்கானதாக இருந்ததா? அப்படி எப்பொழுது அனைத்து
தரப்பிலிருந்தும் காலியாகி விடுகிறீர்களோ, குசேலரின் காய்ந்த அவல் மட்டும் எப்பொழுது இருந்து விடுகிறதோ,
அப்பொழுது தந்தை வருகிறார். காய்ந்த அவல் சாப்பிடுவதினால் உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் ஆகிவிடும்.
அவல் மட்டும் கொடுக்கிறீர்கள். அதுவும் காய்ந்தது. மேலும் என்ன பெறுகிறீர்கள்? அனைத்து குணங்கள்,
அனைத்து சக்திகள், அனைத்து பொக்கிஷங்கள். 36 விதங்களையும் விட அதிக வகைகள் என்றால் பெறுவதாக
ஆனதா? அல்லது கொடுப்பதாக ஆனதா? காய்ந்த அவல் கூட மண் படிந்ததைக் கொண்டு வருகிறீர்கள்.
மண்ணின் நினைவு தான் இருக்கிறது இல்லையா? இப்பொழுதோ மாறி விட்டீர்கள். ஆனால் எப்பொழுது
தந்தையிடம் வந்தீர்களோ அப்பொழுது மண் பூசப்பட்டவராகத் தான் இருந்தீர்கள். மண்ணை பார்ப்பது,
மண்ணோடு விளையாடுவது மற்றும் வேறு என்ன செய்தீர்கள்? ஆனால் இப்பொழுது இரத்தினங்களோடு
விளையாடுகிறீர்கள். அப்படி கொடுப்பது மற்றும் பெறுவது எப்பொழுதுமே இருந்து கொண்டே இருக்கும்.
கொடுப்பது கூட மண் நிரம்பிய காய்ந்த அவல். இருந்தும் சில குழந்தைகள் மிகுந்த முரண்டு செய்கிறார்கள்.
கொடுத்து விட்டேன் என்று இன்று சொல்வார்கள். ஆனால் குசேலர் மாதிரி அதை இடுப்பில் மறைத்து
வைத்திருப்பார்கள். தந்தையோ எடுக்க முடியும், ஆனால் கொடுப்பவருக்கு புண்ணிய கணக்கு உருவாகுமா?
ஒருவேளை பிடுங்கி எடுத்து விடுகிறோம் என்றால், கொடுத்து எடுப்பது என்பதில் குறை ஏற்பட்டு விடும்.
கொடுப்பது ஒன்று மற்றும் பெறுவது பலமடங்கு. அப்படி சுய இச்சை அதாவது திட எண்ணத்தோடு ஒன்று
கொடுப்பது, பல மடங்கு பெறுவது! எனவே நீங்கள் தான் கொடுக்க வேண்டும் ஏனென்றால் கொடுப்பதில் தான்
நன்மை இருக்கிறது. அப்படி கொடுப்பது, பெறுவது என்றால் என்ன என்று புரிந்து கொண்டீர்களா?
எப்பொழுது அந்த மாதிரி கொண்டாடுவது, சந்திப்பது மற்றும் கொடுக்கல், வாங்கல் ஆகிவிடுகிறது
என்றால் என்ன ஆகிறது? எப்பொழுதும் தந்தையுடன் குμயோடு விளையாடுவது. எப்பொழுதும் அதீந்திரிய
சுகத்தின் ஊஞ்சலில் ஆடுவது. அந்த மாதிரி மேளாவை (சந்திப்பை) கொண்டாடினீர்களா? இந்த ஆன்மீக
மேளாவை எப்பொழுதும் கொண்டாடிக் கொண்டே இருங்கள். மேலும் ஒவ்வொரு நாளும் மேளா தான்.
புரிந்ததா? நல்லது.
(3/5)
31.06.2016
அந்த மாதிரி ஒவ்வொரு விநாடியும் மேளாவை கொண்டாடக்கூடிய, எப்பொழுதும் தன்னுடைய மற்றும்
அனைவரின் வாயை இனிப்பாக்கக்கூடிய, எப்பொழுதும் புதிய உற்சாகம் வைக்கக்கூடிய அதாவது எப்பொழுதும்
உற்சவத்தைக் கொண்டாடக்கூடிய, ஒவ்வொரு விநாடியும் முன்னேறும் கலையின் புதிய நிலை அதாவது புதிய
ஆடை அணிந்த புதிய அலங்காரம் தரித்த, எப்பொழுதும் தந்தையுடன் குμயில் விளையாடக்கூடிய, அந்த
மாதிரி எப்பொழுதும் ஆன்மீக மேளாவைக் கொண்டாடக்கூடிய சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின்
அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.
தம்பதிகளுடன் சந்திப்பு லி
தன்னுடைய விசேஷத்தைத் தெரிந்திருக்கிறீர்களா? இந்த குரூப்பின் விசேஷம் என்ன? இந்த குரூப்
சன்னியாசி, மகாத்மாக்களையும் தலை வணங்க வைப்பவர்கள். சன்னியாசி என்றால் இன்றைய நாட்களில்
மகான் ஆத்மாக்கள். அப்படி இன்றைய நாட்களின் மகாத்மாக்கள் என்று கூறப்படுபவர்களுக்கும் தன்னுடைய
வாழ்க்கை மூலமாக அறிமுகம் கொடுப்பவர்கள் நீங்கள். இதே விசேஷத்தை எப்பொழுதும் நினைவில்
வைத்துக் கொண்டே ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தீர்கள் என்றால் ஒவ்வொரு காரியமும்
சரித்திரமாகிவிடும். எப்படி பிரம்மாவின் ஒவ்வொரு காரியத்தையும் சரித்திரத்தின் ரூபத்தில் வர்ணனை செய்கிறீர்கள்
இல்லையா? இங்கே மதுபன்னில் பிரம்மா பாபாவின் சரித்திர பூமி என்று புரிந்து வருகிறீர்கள் தான் இல்லையா?
பிரம்மா பாபாவின் ஒவ்வொரு காரியம் சரித்திரம் ஆகிவிட்டது. ஏனென்றால், உயர்ந்த காரியமாக இருந்தது,
அந்த மாதிரி இந்த குரூப்பின் விசேஷமானது ஒவ்வொரு காரியத்தையும் சரித்திரத்திற்கு சமமாக ஆக்குபவர்கள்.
ஏனென்றால் இப்பொழுது ஆன்மீகத் தந்தையின் குழந்தைகள், ஆன்மீகமாகி விட்டார்கள். பிரம்மாகுமார்,
குமாரியின் ஆன்மீக உறவு ஏற்பட்டு விட்டது. ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகள் மற்றும் ஆன்மீக
காரியம். ஆன்மீகக் காரியத்தைத் தான் சரித்திரம் என்று கூறுவோம். முழு நாளும் அமிர்தவேளையில்
தொடங்கி இரவு வரையிலும் ஒவ்வொரு காரியமும் சரித்திரமாக இருக்கட்டும், சாதாரணமானதாக இருக்க
வேண்டாம். ஆன்மீகமானதாக இருக்கட்டும். ஆன்மீக வாழ்க்கை உள்ளவர் சாதாரண காரியம் செய்யவே
முடியாது.
அனைவரின் இரண்டு சக்கர வண்டி சரியாகச் சென்று கொண்டிருக்கிறது தான் இல்லையா?
எப்பொழுதாவது ஏதாவது சக்கரம் மேலேயோ, கீழேயோ செல்வதில்லையே! ஒரு சக்கரம் முன்னுக்கு சென்று
கொண்டிருக்கிறது, இன்னொரு சக்கரம் பின்னாலேயே இருந்து விடவில்லையே? உங்கள் அனைவரின்
விசேஷமே ஒருவர் இன்னொருவரை விட முன்னுக்கு இருங்கள், மேலும் ஒருவர் இன்னொருவரை முன்னுக்கு
வைப்பவராகவும் இருக்கிறீர்கள் என்பது தான்! ஒருவர் இன்னொருவரை முன்னுக்கு வைப்பது தான் முன்னால்
இருப்பது. நான் ஆண் மற்றும் அவர் தன்னை சக்தி என்று நினைக்கிறார் என்று அப்படியும் வேண்டாம்.
ஒருவேளை நீங்கள் சக்தி என்றால் அந்த பாண்டவர்களும் குறைந்தவர்கள் அல்ல, சக்திகளும் குறைந்தவர்கள்
அல்ல. இருபாலாருமே தந்தையின் சகயோகிகள்! எனவே பாண்டவர்கள் முன்னுக்கு இருக்கிறார்களா அல்லது
சக்திகள் முன்னுக்கு இருக்கிறார்களா என்ற இதையும் கூற முடியாது. சக்திகளை கேடயம் என்று ஏன்
கூறுகிறோம் என்றால், அவர்கள் தன்னை வெகுகாலமாகத் தாழ்ந்தவர்கள் என்றே நினைத்து வந்திருக்கிறார்கள்.
எனவே போதை ஏறுவதற்காக முன்னுக்கு வைத்திருக்கிறோம். சக்திகளை முன்னுக்கு வைப்பதில் தான்
பாண்டவர்களுக்கு லாபம். சக்திகள் பின்னால் இருக்கிறார்கள் என்றால், உங்களையும் பின்னால் இழுத்து
விடுவார்கள். ஏனென்றால் சக்திகளிடம் கவர்ந்திழுக்கும் சக்தி அதிகமாக இருக்கிறது. எனவே சக்திகளை
முன்னுக்கு வைப்பது தான் நீங்கள் முன்னுக்கு இருப்பதாகும். பொதுவாகவே சக்திகள் பாண்டவர்களின்
கேடயம். பாண்டவர்கள் எங்காவது இந்த மாதிரி சொற்பொழிவு நிகழ்த்தினார்கள் என்றால், தடியடி பெற
வேண்டியதாக இருக்கும். பொதுவாக கீதா பாடசாலை திறக்கிறீர்கள் என்றால் சகோதரியை அனுப்புங்கள் என்று
கூறுகிறீர்கள். மாதா குரு ஆவார், எனவே மாதர்களில் பாவனை சுலபமாக வந்து விடுகிறது. பிரம்மா
பாபாவும் முதுகெலும்பாக இருந்தார். மேலும் சக்திகளை முன்னுக்கு வைத்தார் என்றால் நீங்களும் பிரம்மாவைப்
போன்றவர்கள் தான். எப்படி தந்தை சக்திகளை முன்னுக்கு வைத்தார் என்றால் வெற்றி கிடைத்தது அதே
போல் நீங்களும் சக்திகளை முன்னுக்கு வைத்தீர்கள் என்றால் வெற்றி கிடைத்து விடும்.
இல்லறத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்படுவதில்லையே? எப்பொழுதாவது ஒரு பாத்திரம் இன்னொரு
பாத்திரத்தோடு மோதுவதோ இல்லையே. ஏனென்றால் ஏதாவது சப்தம் எழுகிறது என்றால் என்ன கூறுவார்கள்?
பகவானின் குழந்தைகள் மேலும் பாத்திரம், பாத்திரத்தோடு மோதுகிறது. பொதுவாகவே பாத்திரம் பாத்திரத்தோடு
மோதுகிறது என்றால் அவசியம் சப்தம் எழும். ஆனால் இங்கு சப்தம் எழ முடியாது. ஏன்? ஏனென்றால்
இங்கு இடையில் தந்தை இருக்கிறார். எங்கு இடையில் தந்தை வந்து விட்டாரோ அங்கு சப்தம் இருக்குமா?
எப்பொழுது இடையிலிருந்து தந்தையை அகற்றி விடுகிறீர்களோ அப்பொழுது மோதல் ஏற்படுகிறது, சப்தம்
எழுகிறது. எனவே எப்பொழுதும் தந்தையை உடன் வைத்துக் கொள்ளுங்கள். தந்தை உடன் இருக்கிறார்
(4/5)
31.07.2016
என்றால், ஏதாவது ஒரு விஷயம் நடந்தது என்றாலும் சரியாகி விடும். பொதுவாகவே இரண்டு பேர்களின்
விஷயத்தில் மூன்றாவது நபர் இடையில் வருகிறார் என்றால் விஷயம் முடிந்து விடுகிறது இல்லையா?
அதுபோலவே தந்தையை இடையில் வைத்தீர்கள் என்றால் விஷயம் வளராது, முடிவு ஏற்பட்டு விடும்.
இல்லறத்தில் இருந்து கொண்டே எப்பொழுதும் உடலின் சம்மந்தத்தில் விலகியவராக இருங்கள்,
அப்பொழுது தான் தூய்மையான இல்லற மார்க்கம் என்ற பங்கைச் செய்ய முடியும். நான் ஆண், இவர் பெண்
என்ற இந்த உணர்வுகள் கனவில் கூட வர முடியாது. ஆத்மா சகோதரன் சகோதரன் என்றால், ஆண், பெண்
எங்கிருந்து வந்தார்கள். தம்பதியோ நீங்கள் மற்றும் தந்தை தான் இல்லையா, பிறகு இவர் என்னுடைய
ஜோடி (யுகல்) என்று அப்படி எப்படி கூற முடியும்? இதுவோ ஒரு காரணத்திற்காக சேவைக்காக மட்டும்
இருக்கிறது மற்றபடி இணைந்த ரூபமோ நீங்களும் தந்தையும் தான். இருந்தாலும் தைரியம் வைத்ததற்காக
பாப்தாதா வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார். தைரியத்துடன் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறீர்கள், மேலும்
சென்று கொண்டே இருப்பீர்கள். இந்த தைரியத்திற்கு வாழ்த்துக்கள்!
குமாரர்களுடன் லி
தன்னை எப்பொழுதும் இராஜரிμ என்று நினைக்கிறீர்களா? அதிகாரி மற்றும் ரிμ அதாவது
தபஸ்வி. சுயத்தின் இராஜ்யம் பிராப்தி ஆவதினால் இயல்பாகவே தபஸ்வி ஆகிவிடுகிறார்கள். ஏனென்றால்,
எப்பொழுது சுயத்தின் இராஜ்யம் இருக்கிறது என்றால் சுயத்தை ஆத்மா என்று புரிந்து கொள்வதால் தந்தையின்
குழந்தை ஆவதால், இதுவே தபஸ்யா ஆகிவிடுகிறது. ஆத்மா தந்தையின் குழந்தை ஆனது என்றால் தபஸ்வி
ஆனது. அப்படி இராஜ்யமும் இருக்கிறது மேலும் ரிμயாகவும் இருக்கிறீர்கள். அனைவரும் சுயராஜ்ய
அதிகாரியாக ஆகியிருக்கிறீர்களா? எந்தவொரு கர்மேந்திரியமும் தன் பக்கம் ஈர்க்கக்கூடாது, எப்பொழுதும்
தந்தையின் பக்கம் ஈர்க்க வேண்டும். எந்தவொரு நபர் மற்றும் பொருளின் பக்கம் கவர்ச்சி செல்ல வேண்டாம்.
அந்த மாதிரியான இராஜ்ய அதிகாரி தபஸ்வி குமாராக இருக்கிறீர்களா? முற்றிலும் வெற்றி அடைபவராக
இருக்க வேண்டும். ஏனென்றால், வாயுமண்டலமோ கலியுகம் தான் இல்லையா? மேலும் உடன் இருப்பவர்களும்
அன்னப்பறவை மற்றும் கொக்குகளாக இருக்கிறார்கள். அந்த மாதிரி சூழ்நிலையில் இருந்துகொண்டே சுயராஜ்ஜியம்
உடையவராக இருந்தீர்கள் என்றால் தான் பாதுகாப்பாக இருப்பீர்கள். கொஞ்சம் கூட உலகின் வைப்ரேஷனின்
ஈர்ப்பு இருக்கலாகாது. எந்த புகாரும் இன்றி எப்பொழுதும் முழுமையானவராக இருக்க வேண்டும். குமாரர்களின்
புகார் வருகிறது. ஒருவேளை குமார் வெற்றி அடைபவர் ஆகிவிடுகிறார் என்றால், அனைவரையும் விட மகான்
ஆகிவிடுகிறார் ஏனென்றால் அரசாங்கமும் இளைஞர்களை முன்னேற்றுகிறது. அதிலேயும் குமாரர்கள் அதிகமாக
இருப்பார்கள். குமார் என்ன விரும்புகிறாரோ அதைச் செய்ய முடியும். ஏனென்றால் மிகுந்த சக்தி இருக்கிறது.
ஆனால் சக்தியை வீணாக இழக்கவில்லையே. எண்ணம் மற்றும் கனவில் தந்தையைத் தவிர வேறு யாரும்
இல்லை என்றிருந்தால் தான் நம்பர் ஒன் குமார் என்று கூறுவோம். குமார் தடையற்றவர் ஆகிவிடுகிறார்
என்றால் அனைவரையும் தடையற்றவராக ஆக்க முடியும். குமாரர்களின் பட்டமே விக்ன விநாஷக். எந்த
விதமான விக்னம் அதாவது தடை லி எண்ணம், சொல், செயல் அப்படி எந்த விதமான விக்னத்தின் வசமானவராக
இருக்க வேண்டாம். எனவே தான் குழந்தைகளின் பட்டம் விக்ன விநாஷக். கணேஷ் குழந்தை தான்
இல்லையா. அப்படி உங்களுடைய நினைவாக விக்ன விநாஷக் என்ற பெயர் பிரசித்தி ஆகி இருக்கிறது.
நடைமுறையில் இருந்திருக்கிறீர்கள் அதனால் தான் நினைவுச் சின்னமும் உருவாகியது. விக்ன விநாஷக்
ஆவதினால் இயல்பாகவே மனதின் எண்ணங்கள் மூலமாக சேவை நடந்து கொண்டே இருக்கும்.
வாயுமண்டலமும் தடையற்றதாக ஆகிக்கொண்டே இருக்கும். எப்படி தத்துவங்கள் காரணமாக பருவமும்
மாறுகிறது அதே போல் விக்ன விநாஷக் குழந்தைகள் காரணமாக வாயுமண்டலமும் மாறி விடும். எனவே
நாலாபுறங்களிலும் விக்ன விநாஷக்கின் அலை பரவி விட வேண்டும். நான் வெற்றி அடையும் வாயுமண்டலத்தை
உருவாக்க வேண்டும் என்ற இந்த எண்ணத்தையே எப்பொழுதும் வையுங்கள். எப்படி சூரியன் அதுவே
சக்திசாலியாக இருக்கிறது என்றால் நாலாபுறங்களிலும் தன்னுடைய சக்தி மூலமாக பிரகாசத்தைப் பரப்புகிறது,
அந்த மாதிரியே சக்தி நிறைந்தவராக ஆகுங்கள். குமாரர்களுக்கு அவசியம் ஏதாவது ஒரு வேலை தேவையாக
இருக்கிறது. ஒருவேளை குமார் எந்த வேலையுமின்றி இருக்கிறார் என்றால் பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது.
குமார் பிஸியாக இருக்கிறார் என்றால், அது அவருக்கும் நன்மை, உலகிற்கும் நன்மை! எனவே விக்ன
விநாஷக் ஆகி, வாயுமண்டலத்தை உருவாக்குவதில் பிஸியாக இருங்கள். தன்னுடைய விசேஷத்தை இந்தக்
காரியத்தில் ஈடுபடுத்துங்கள். ஒவ்வொரு குமாரும் அனேகர்களுக்கு சஞ்சீவினி மூலிகை கொடுக்கக்கூடிய
மகாவீர் அதாவது மூர்ச்சையாகி இருப்பவர்களை மீண்டும் உணர்வில் கொண்டு வருபவர்களாக இருக்க
வேண்டும். தன்னுடைய இந்தக் காரியத்தை எப்பொழுதும் நினைவில் வைத்து கொள்ளுங்கள். எப்படி உலகீய
வேலை மறப்பதில்லையோ அதே போல் இந்த ஆன்மீக வேலையும் எப்பொழுதும் நினைவில் இருக்க
வேண்டும். சங்கமயுகத்தில் தந்தை மூலமாக என்னவெல்லாம் பட்டம் கிடைத்திருக்கின்றனவோ அதன் நினைவில்
இருங்கள். பட்டம் நினைவில் வருவதினால் இயல்பாகவே ஞானம் மற்றும் ஞானத்தை வழங்குபவர் இருவர்களின்
நினைவு வந்து விடும். நல்லது.
வரதானம் லி தன்னுடைய சம்பூர்ண சொரூபத்தை ஆவாஹனம் செய்வதின் (வரவழைப்பதின்)
மூலமாக வருவது போவது என்ற சக்கரத்திலிருந்து விடுபடக்கூடிய அதிர்ஷ்ட நட்சத்திரங்கள்
ஆகுக.
இப்பொழுது தன்னுடைய சம்பூர்ண நிலை மற்றும் சம்பூர்ண சொரூபத்தை ஆவாஹனம் செய்யுங்கள்.
பிறகு அதே சொரூபம் எப்பொழுதும் நினைவில் இருக்கும். பின்பு சில நேரம் உயர்ந்த நிலை, சில நேரம்
தாழ்ந்தை நிலையில் வந்து போவதற்கான சக்கரம் சுற்றிக்கொண்டிருக்கிறது, அடிக்கடி நினைவு மற்றும்
நினைவிழந்த நிலையின் சுழற்சியில் வருகிறீர்கள், இந்த சுழற்சியிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். அவர்கள்
பிறப்பு இறப்பின் சக்கரத்திலிருந்து விடுபட விரும்புகிறார்கள், மேலும் நீங்கள் வீணான விஷயங்களிலிருந்து
விடுபட்டு பிரகாசித்துக் கொண்டிருக்கும் அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் ஆகிவிடுகிறீர்கள்.
சுலோகன்: ஏதாவது தடையின் வசம் ஆவது என்றால், வைரத்தில் கரை ஏற்படுத்துவது!
(5/5)
TAMIL MURLI 18 TO 24 - 2016
18
18.07.2016
காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே !
தன்னுடைய சுயதர்மத்தில் நிலைத்திருந்து தங்களுக்குள்
அன்போடு ஒருவருக்கொருவர் ஓம்சாந்தி சொல்லவும். இது கூட ஒருவருக்கொருவர்
மரியாதை அளிப்பதாகும்.
கேள்வி : பக்தியில் கூட பகவானுக்கு பிரசாதம் படைக்கிறார்கள். இங்கு குழந்தைகளாகிய நீங்களும்
படைக்கிறீர்கள். இந்த பழக்கம் ஏன்?
பதில்: ஏனென்றால் இது கூட அவருக்கு மரியாதை அளிப்பதாகும். சிவபாபா நிராகாரர், எதையும்
அனுபவிக்காதவர் என்பது உங்களுக்கு தெரியும். சாப்பிடுவதில்லை. ஆனால் வாசனை சென்றடைகிறது.
அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல், பதீத பாவனர் பாபா ஆவார். எனவே நிச்சயமாக அவருக்கு
பிரசாதம் வைக்க (படைக்க) வேண்டும்.
பாடல் : நம்முடைய தீர்த்த யாத்திரை தனிப்பட்டது.....
ஓம் சாந்தி. குழந்தைகளின் மனதிலிருந்தும் கூட ஓம் சாந்தி எழுகிறது. யாருக்காவது நமஸ்காரம் கூறினால்
அவர்களும் திரும்ப நமஸ்காரம் என்கிறார்கள். இங்கே தந்தை ஓம் சாந்தி என்றார். ஆகவே, அனைத்து
குழந்தைகள், இவருடைய ஆத்மா உட்பட அனைவரின் மனதிலிருந்தும் ஓம்சாந்தி என்றால் நாம் ஆத்மா
சாந்தி சொரூபமானவர்கள் என்பது வரும். பதில் மரியாதை அளிக்க வேண்டும் அல்லவா. இது பதிலாகிவிட்டது
அல்லவா ! வேறு யாரும் இவ்வாறு பொருளுடன் கூற முடியாது. பாபா ஞான சூரியன் ஓம் சாந்தி என்கிறார்.
ஞான சந்திரன் கூட ஓம் சாந்தி என்கிறார். ஞான நட்சத்திரங்கள் கூட ஓம் சாந்தி என்கிறார்கள். நட்சத்திரங்களில்
அனைவரும் வந்து விட்டனர். இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு சுய தர்மம் பற்றி தெரிந்து விட்டது.
அதாவது நாம் சாந்தி சொரூபமானவர்கள், சாந்தி தாமத்தில் வசிக்கக் கூடியவர்கள். இது உங்களுக்கு நிச்சயமாகி
விட்டது. நீங்கள் ஆத்மாவை சரியாகத் தெரிந்துக் கொண்டீர்கள். மகான் ஆத்மா, பாவ ஆத்மா என்று கூட
கூறப்படுகிறது. ஆத்மா தான் ஒரு உடலை விட்டு விட்டு இன்னொன்றை எடுக்கிறது. ஆனால் ஆத்மாவின்
உண்மையான அறிமுகம் யாருக்கும் இல்லை. ஆத்மாக்களாகிய நாம் இவ்வளவு சிறியதாக இருக்கிறோம். 84
பிறவிகளின் நடிப்பை நடிக்கின்றோம். இது உங்களுக்கும் தெரியவில்லை. வேறு யாருக்கும் தெரியவில்லை.
இப்போது நீங்கள் எதிரில் அமர்ந்திருக்கிறீர்கள். தந்தையை தன்னுடையவராக்கி கொண்டீர்கள். குழந்தைகள்
சொத்து அடைவதற்காக தந்தையை தன்னுடையவராக மாற்றிக் கொள்கிறார்கள்.
ஆத்மாக்களாகிய நம்முடைய எல்லையற்ற தந்தை இந்த பிரம்மாவின் உடலில் வந்திருக்கிறார், பிரம்மாவின்
உடலில் வந்து ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தை உருவாக்குகிறார்கள் என குழந்தைகளாகிய நீங்கள்
அறிகிறீர்கள். போன கல்பத்தில் கூட ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் அதாவது சூரிய வம்சத்தின் தர்மம்
ஸ்தாபனை ஆகியது. இந்த ஸ்தாபனை காரியத்தை கல்ப கல்மாக பாபா தான் செய்கிறார். அவருக்கு பகவான்
என்று கூறப்படுகிறது. துக்கத்தை நீக்கி சுகம் கொடு என்று அனைவரும் பகவான் தந்தையிடம் கேட்கிறார்கள்.
சுகம் கிடைத்து விடுகிறது என்றால் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இங்கே கேட்கிறார்கள். ஏனென்றால்
துக்கம் இருக்கிறது. அங்கே எதையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அனைத்தையும்
கொடுத்து விட்டு சென்று விடுகிறார். ஆகையால் சத்யுகத்தில் யாரும் பாபாவை நினைப்பதில்லை. குழந்தைகளை
நான் சுக உலகிற்கு அதிபதியாக்குகிறேன் என பாபா புரிய வைக்கிறார். இந்த பாபாவிடமிருந்து நாம் மீண்டும்
சுகதாமத்தின் ஆஸ்தி அடைந்து கொண்டிருக்கிறோம் என குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துக் கொள்கிறீர்கள்.
எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற சுகத்தை அடைகிறீர்கள். பக்தி மார்க்கம் எப்படி நடக்கிறது என்று
உங்களுக்குப் புரிய வைக்கப்படுகிறது. மனித சிருஷ்டி என்ற மரம் எவ்வாறு உருவாகிறது, வளர்கிறது,
அழிகிறது அல்லது நாடகத்தின் முதல், இடை, இறுதி என்ன? இது சாகார உலகம் ஆகும். அது நிராகார
உலகம் ஆகும். நாம் முழுமையாக அரைக் கல்பம் பக்தி செய்தோம் என குழந்தைகள் புரிந்துக் கொண்டீர்கள்.
இப்போது கலியுகத்தின் முடிவாகும். சங்கமத்தில் சொத்து கிடைக்கிறது. இதை குழந்தைகளுக்கு நன்கு புரிய
வைக்க வேண்டும். இப்போது நாம் சங்கமத்தில் இருக்கின்றோம். இதை குழந்தைகளாகிய நீங்கள் தான்
புரிந்துக் கொள்கிறீர்கள். எது வரை அறிமுகம் கொடுக்கவில்லையோ அது வரை வேறு யாரும் புரிந்துக்
கொள்ள மாட்டார்கள். நிச்சயம் சங்கம யுகம் வருகிறது. அப்போது பழைய உலகம் புதியதாக மாறுகிறது. இது
முழுவதும் பழைய உலகம் ஆகும். இதற்கு கலியுகம் என்று பெயர். முதன் முதலில் முழு உலகத்திலும்
ஒரேயொரு தர்மம் தான் இருக்கிறது என்பதை கூட நீங்கள் அறிகிறீர்கள். புது உலகத்தில் பாரத கண்டம்
மட்டுமே இருக்கிறது. மிக சில மனிதர்களே இருக்கிறார்கள். புதிய உலகிற்கு தான் சொர்க்கம் என்று கூறப்படுகிறது.
இதன் மூலம் புது உலகில் புதிய பாரதம் இருந்தது என்பது நிரூபணம் ஆகிறது. இப்போது பழைய உலகத்தில்
18.07.2016
(2/4)
பழைய பாரதம் இருக்கிறது. புது உலகம் புதிய பாரதம், புதுடில்லி வேண்டும் என காந்தி கூட கூறினார்.
இப்போது புதிய பாரதம் அல்லது புது டில்லி இல்லை. புதிய பாரதத்தில் இந்த லஷ்மி நாராயணனின் இராஜ்யம்
இருந்தது. இப்போது அதே பாரதத்தில் இராவணனின் இராஜ்யம் இருக்கிறது. புதிய உலகம், புது டில்லி, இந்த
காலத்திலிருந்து இந்த காலம் வரை இவர்களுடைய இராஜ்யம் இருந்தது என்பதை கூட எழுத வேண்டும்.
புது உலகத்தை உருவாக்கக் கூடியவர்களே இதை புரிந்துக் கொள்வார்கள். பிரம்மா மூலமாக புது உலகம்
சொர்க்கம் ஸ்தாபனை ஆகின்றது. அந்த சொர்க்கத்தின் ஆஸ்தி அடைவதற்காக நீங்கள் வருகிறீர்கள். பாபா
உங்களுக்கு யுக்தியை தெரிவிக்கிறார். மேலும் முயற்சி செய்விக்கின்றார். எதிரில் சந்திக்கவும் வருகிறீர்கள்.
மேலும் அங்கேயும் அமர்ந்து படிக்கிறீர்கள். நேரடியாக சந்திக்க மனம் விரும்புகிறது. அந்த மனிதர்கள் மனிதர்
களை நேரடியாக சந்திக்கிறார்கள். இங்கே நீங்கள் சிவபாபாவை சந்திப்பதற்காக நாங்கள் செல்கிறோம் என
கூறுவீர்கள். அவரோ நிராகார் அல்லவா ! ஆத்மாக்களாகிய நாமும் நிராகாரர், நாமும் இங்கே நடிப்பதற்காக
வருகிறோம் அல்லவா. யாருக்கு பெயர் (பாகம்) இருக்கிறதோ அவர்கள் நிச்சயம் நடிகர்கள் ஆவர். பகவானுக்கும்
பெயர் (பார்ட்) இருக்கிறது அல்லவா. நிராகாரர் சிவனை தான் பகவான் என்று அழைக்கிறோம். வேறு யாருக்கும்
பகவான் என்று கூற முடியாது. பகவான் நிராகாரர் என்று பாடப்படுகிறது. அவருக்கும் பூஜை நடக்கிறது.
ஆத்மாக்களுக்கும் பூஜை நடக்கிறது. ருத்ர யக்ஞத்தை படைக்கிறார்கள் அல்லவா. அவர்கள் மண்ணினால்
சாலிகிராமத்தை உருவாக்குகிறார்கள். கல்லினால் உருவாக்குங்கள் அல்லது மண்ணினால். மண்ணினால் செய்ததை
உடைப்பது எளிதாக இருக்கின்றது. உலகத்தினருக்கு இந்த விஷயங்கள் பற்றி தெரியவில்லை. ருத்ர வேள்வியில்
எத்தனை ஆத்மாக்களுக்கு பூஜை செய்ய முடியும். குழந்தைகள் நிறைய பேர் இருக்கிறார்கள். பக்தர்கள்
அனைவரும் பகவானின் குழந்தைகள் ஆவார்கள். பாபாவை நினைக்கிறார்கள். சிவபாபா பாரதத்தில் தான்
வருகிறார் என பாபா புரிய வைக்கிறார். நீங்கள் சில குழந்தைகளே அவருடைய உதவியாளர்களாக, இறை
தொண்டர்களாக மாறுகிறீர்கள். அவர்களுடைய பூஜையை தான் பக்தர்கள் சாலிகிராமமாக உருவாக்கி செய்கிறார்கள்.
வேள்விகள் படைக்கிறார்கள். அதில் சிறிய வேள்விகள் கூட இருக்கிறது. பெரியது கூட இருக்கிறது. மிகப்
பெரிய பணக்காரர்கள் பெரிய வேள்வியை படைக்கிறார்கள். லட்சம் லட்சம் உருவாக்குகிறார்கள். சிறிய வேள்வியாக
இருந்தால் 5லி10 ஆயிரம் உருவாக்குவார்கள். சேட் எப்படியோ அப்படி வேள்விகளையும் அதில் சாலிகிராமங்
களையும் உருவாக்குகிறார்கள். ஒரு சிவன் மற்றவை சாலிகிராமம் உருவாக்குகிறார்கள். பிறகு அவ்வளவு
பிராமணர்கள் வேண்டும். பல பேர் வேள்விகளை பார்த்திருப்பீர்கள். பாபா குழந்தைகளாகிய நமக்கு சேவை
செய்கின்றார் என அறிகிறீர்கள். பிறகு நாம் மற்றவர்களுக்கு சேவை செய்கிறோம். ஆகவே தான் பூஜை
நடக்கிறது. இப்போது நீங்கள் பூஜைக்குரியவர் ஆகிறீர்கள். பாபா தாங்கள் எப்போதும் பூஜைக்குரியவர் என
ஆத்மா கூறுகிறது. எங்களையும் பூஜைக்குரியவராக மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். பூஜைக்குரிய ஆத்மா சரீரம்
தரிக்கிறது, அப்போது பூஜைக்குரிய தேவ லி தேவதைகள் ஆகின்றன. ஆத்மாதான் பூஜைக்குரியதாகவும்
பூஜாôரியகவும் ஆகிறது. பாபா ஒரு முறை தான் வருகிறார். பிறகு ஒரு போதும் பாபா ஆத்மாக்களை படிக்க
வைக்க மாட்டார். இது நடக்காது. ஆத்மா தான் கேட்கிறது. ஆத்மா எப்படி உடல் மூலமாக கேட்கிறதோ அது
போல பரம்பிதா பரமாத்மா, சுப்ரீம் ஆத்மா கூட சரீரத்தின் ஆதாரத்தை எடுத்து இவர் மூலமாக கேட்கின்றார்.
இவர் மூலமாக இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். அவருக்கு தனக்கென்று உடல் கிடையாது. பிரம்மா, விஷ்ணு,
சங்கரருக்கு கூட தங்களுக்கு என்று சூட்சும உடல் இருக்கிறது. இங்கேயோ அனைவருக்கும் அவரவருக்கென்று
உடல் இருக்கிறது. இது சாகார உலகம் ஆகும். சிவபாபா நிராகார் ஆவார். அவர் ஞானக்கடல், சுகக்கடல்,
அன்புக்கடலாக இருக்கிறார். அவர் வந்து அனைவரையும் அழுக்கிலிருந்து தூய்மையாக மாற்றுகிறார். இதில்
தூண்டுதலின் எந்த விஷயமும் கிடையாது. நான் ஒரு வேளை தூண்டுதலினால் தூய்மையாக மாற்ற வேண்டும்
என்றால் பிறகு இங்கே வந்து ரதத்தை எடுக்க வேண்டிய அவசியம் என்ன? சிவனுடைய கோவிலில்
முன்னால் காளை மாட்டை வைக்கிறார்கள். மனிதர்களின் புத்தி முற்றிலும் கல் புத்தியாக இருக்கின்ற காரணத்தால்
எதையும் புரிந்துக் கொள்ளவில்லை. காளை மாட்டை சிவனுக்கு முன்னால் ஏன் வைக்கிறார்கள். கோ சாலை
என்ற பெயரை கேட்டதும் காளை மாட்டை வைத்து விட்டனர். இப்போது காளை மாட்டின் மீது யார் சவாரி
செய்தது. கிருஷ்ணரின் ஆத்மா சத்யுகத்தில் இருக்கிறது. விலங்கில் வந்து அமர்வதற்கு அவருக்கு என்ன
இருக்கிறது. எதையும் புரிந்துக் கொள்ளவில்லை. ஒரு திரௌபதி கிடையாது. நிறைய பேர் அழைக்கிறார்கள்.
அவர்கள் ஒரு நாடகத்தை உருவாக்கி விட்டனர். ஸ்ரீகிருஷ்ணர் புடவைகளை கொடுத்துக் கொண்டே போகிறார்.
பொருள் எதுவும் புரிய வில்லை. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் 21 பிறவிக்கு நிர்வாணம் ஆகக் கூடாது
என புரிந்துக் கொள்கிறீர்கள். எவ்விடத்தின் விஷயத்தை எங்கே கொண்டு சென்று விட்டனர். பக்தி மார்க்கத்தில்
பல கதைகள் இருக்கின்றது. இந்த கதைகள் அனைத்தும் அனாதியாகும் என்று கூறுகிறார்கள். மறுபிறவி
எடுத்து கேட்டுக் கொண்டே வந்துள்ளனர். அனாதி என்றாலும் எப்போதிலிருந்து ஆரம்பம் ஆகியது என்பது
தெரியவில்லை. இராவண இராஜ்யம் எப்போதிலிருந்து ஆரம்பம் ஆகியது என்பதும் தெரியவில்லை. அதை
பற்றி எந்த வர்ணனையும் இல்லை. நீங்கள் எவ்வளவு சேவை செய்கிறீர்கள். அந்த சூரியன், சந்திரன்,
18.07.2016
(3/4)
நட்சத்திரங்கள் போன்றவைகள் இருக்கின்றது. சத்யுகத்திலும் இருக்கின்றது. இப்போதும் இருக்கின்றது, அதை
மாற்ற முடியாது. நீங்கள் அனைவரும் நிமித்தமாக இருக்கிறீர்கள். பாரதத்தினரை தான் மீண்டும் இருளில்
இருந்து எடுத்து வெளிச்சத்திற்கு அழைத்து செல்ல வேண்டும். பக்தி மார்க்கத்திற்கு காரிருள் என்று கூறப்படுகிறது.
உங்களுக்கு மகிமைகள் இருக்கிறது. நீங்கள் பூலோக நட்சத்திரங்கள். நட்சத்திரம் இருக்கிறது என்றால் சந்திரன்,
சூரியன் கூட இருக்க வேண்டும்.
இது உங்களுடைய ஆன்மீக தீர்த்தமாகும். நீங்கள் பிறகு மரண உலகத்திற்கே வருவதில்லை. அது
போன்று யாத்திரைக்கு செல்கிறீôகள். இப்போது இது மரண உலகம் ஆகும். பிறகு இங்கேயே தான் அமர
லோகம் உருவாகும். துவாபர யுகத்திலிருந்து மரண லோகம் ஆரம்பம் ஆகியது. இப்போது நீங்கள் உண்மையிலும்
உண்மையான அமர கதையை அமர லோகத்திற்குச் செல்வதற்காகக் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். ஆத்மாக்
களாகிய நம்முடைய யாத்திரை தனிப்பட்டது என நீங்கள் அறிகிறீர்கள். நீங்கள் இங்கே அமர்ந்து யாத்திரைக்குப்
போவதற்கு முயற்சி செய்கிறீர்கள். நினைவினால் தான் உங்களுடைய விகமர்ங்கள் அழியும். அந்த யாத்திரைக்குச்
செல்கிறார்கள். விகர்மம் எங்கே அழிகின்றது? குடிக்கும் பழக்கம் மனிதர்களுக்கு எவ்வளவு இருக்கிறது
என்றால் மறைத்து கூட நிச்சயம் எடுத்து செல்கிறார்கள். இன்றோ யாத்திரையில் மிகவும் அழுக்கானவர்கள்
கூட இருக்கிறார்கள். அனைவருமே அழுக்கானவர்கள் அல்லவ.ô. பிராமணர்கள் எப்படி அழுக்காக இருக்கிறார்களோ
அப்படியே யாத்திரை செய்பவர்களும் அழுக்காக இருக்கிறார்கள். வழிகாட்டிகள் யாத்திரை செய்விக்கிறார்கள்.
அவர்களே தூய்மையாக இல்லை. நீங்கள் தூய்யைமாக இருக்கிறீர்கள் நீங்களே உண்மையான பிராமணன்.
உங்களுடைய ஆத்மா தூய்மையாக இருக்கிறது. நினைவு யாத்திரையினால் தான் நீங்கள் தூய்மையாகிறீர்கள்.
சதோபிரதானம் ஆக வேண்டும். பாபா அடிக்கடி இனிமையான குழந்தைகளே என எழுதுகிறார். இந்த
சிவபாபா ஆத்மாக்களுக்கு எழுதினார்லி என்னை நினைத்தால் நீங்கள் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாகி
சதோபிரதானமான உலகத்திற்கு அதிபதியாகி விடலாம். அவ்வளவு தான், ஒரேயொரு டைரக்ஷன் தான்
முக்கியமாக இருக்கிறது. எவ்வளவு எளிதாக இருக்கிறது. நினைவினால் தான் பாவங்கள் அழியும் நினைக்கவில்லை
என்றால் பாவங்கள் அழியாது. பிறகு தண்டனை அடைவீர்கள். நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள்
வருமானத்தை சம்பாதிக்கலாம் என பாபா கூறுகின்றார். உட்கார்ந்தாலும் எழுந்தாலும், சாப்பிட்டாலும் பாபாவை
மட்டும் நினையுங்கள். உங்களுடையது வருமானம் ஆகும். குழந்தைகளுக்கு இன்னும் எளிதாகும். இதில்
எந்த ஒரு கவனத்தின் விஷயமும் கிடையாது. ஸ்ரீநாத் கோவிலில் ஸ்ரீநாத்தின் நினைவில் அமர்கிறார்கள்.
பிரசாதம் படைக்கிறார்கள். இருப்பினும் கற்சிலை அல்லவா. பிரசாதம் கூட யாருக்கு படைக்க வேண்டும். ஒரு
சிவபாபா தான் அதிகாரி ஆவார். அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல் பதீத பாவனர் அவரே. நான்
எதையும் ஏற்றுக் கொள்வதில்லை என பாபா கூறுகின்றார். நீங்கள் என் மீது தண்ணீர் கலந்த பாலை ஊற்றுகிறீர்கள்.
இந்த பிரசாதத்தை படைக்கிறீர். ஏன்? நானோ நிராகாரன் எதையும் அனுபவிக்காதவன் என்ன பூஜை செய்கிறீர்கள்?
என் முன்னால் பிரசாரதம் வைத்தீர்கள். ஆனால் பக்தர்கள் பிரசாதம் வைக்கின்றனர், அவர்களே பங்கிட்டு
உண்கின்றனர். சிவபாபாவிற்கு நிச்சயம் பிரசாதம் படைக்க வேண்டும் என நீங்கள் அறிகிறீர்கள். பிறகு பங்கிட்டு
நீங்கள் உண்ணுகிறீர்கள். இதுவே ஒருவருக்கு மரியாதை அளிப்பதாகும். நான் சிவபாபாவிற்கு பிரசாதம் படைக்
கின்றோம், சிவபாபாவின் பொக்கிஷம் அல்லவா. யாருடைய பொக்கிஷமோ அவருக்கு நிச்சயம் பிரசாதம்
வைக்க வேண்டும். நீங்கள் பிரசாதம் படைக்கிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் தான் உண்ணுகிறீர்கள். இந்த
பிரம்மா உண்ணுகிறார். நான் உண்பதில்லை. மற்றபடி வாசனை வருகிறது அல்லவா. மிகவும் நன்றாக பிரசாதம்
செய்யப்பட்டிருக்கிறது. சொல்வதற்கு கூட உடல் வேண்டும் அல்லவா. இந்த பிரம்மா சாப்பிட முடியும். இந்த
உடல் இவருடையது அல்லவா. நான் இவருக்குள் மட்டும் பிரவேசம் ஆகிறேன். வாயை பயன்படுத்துகிறேன்.
குழந்தைகளாகிய உங்களை அழுக்கிலிருந்து தூய்யைமாக்குவதற்காக. பசு வாய் என கூறுகிறார்கள் அல்லவா.
உண்மையில் பசுவும் இருக்கிறது, இதிலிருந்து தான் குழந்தைகளாகிய உங்களை தத்தெடுக்கிறார் என நீங்கள்
அறிகிறீர்கள். இங்கே தாய் தந்தை இருவரும் இருக்கிறார்கள். ஆனால் தாய்மார்களை யார் பார்த்துக் கொள்வார்கள்.
ஆகையால் சரஸ்வதியை நிமித்தமாக நாடகத்தின் படி வைத்தனர். மாதா குருவின் மகிமைகள் கூட வேண்டும்
அல்லவா. குரு முதல் நம்பரில் பிரசித்தமானவர். குரு பிரம்மா என்பது சரியாகும். எப்படி தந்தையோ அப்படியே
குழந்தைகள். பிராமணர்களாகிய நீங்களும் உண்மையான குரு ஆகிறீர்கள். அனைவருக்கும் சொர்க்கத்தின்
உண்மையான வழியை காட்டுகிறீர்கள். ஆத்மா தான் வாய் மூலமாக மன்மனாபவ, மத்யாஜீபவ என்ற வழியைக்
காட்டுகிறது. தாய், தந்தை, குழந்தைகள் அனைவரும் அதே வழியை தெரிவிக்கிறார்கள். இங்கே நீங்கள்
நேரடியாக அமர்ந்திருக்கிறீர்கள். நினைவு இருக்கிறது. பிறகு வீட்டிற்குச் சென்றதும் மறந்து போய்விடுகிறது.
இங்கே ஆனந்தம் வருகிறது. பாபாவிடம் வந்திருக்கிறோம், சுயதரிசன சக்கரதாரி ஆகி முக்தி தாமம், பாபாவை
மற்றும் ஆஸ்தியை நினையுங்கள் என பாபா கூறுகின்றார். நல்லது.
18.07.2016
(4/4)
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை
வணக்கம். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீக தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம் :
1. தங்களுக்குள் ஒருவர் மற்றொருவருக்கு மற்றும் தந்தைக்கு உண்மையான மதிப்பளிக்க
வேண்டும். பாபா எதையும் அனுபவிக்காதவர் ஆவார். ஆனால் யாருடைய பண்டாராவிலிருந்து
பாலனை நடக்கிறதோ அவருக்கு முதலில் நிச்சயம் படைக்க (போக்) வைக்க வேண்டும்.
2. பூஜைக் குரியவராக ஆவதற்கு இறை தொண்டர் ஆக வேண்டும். பாபாவுடன் சேவையில்
உதவியாளராக வேண்டும். எப்போது ஆத்மா உடல் இரண்டும் தூய்யைமயாகிறதோ அப்போது
பூஜை நடக்கும்.
வரதானம் : அதிகாரி (உரிமையுடையவர்) என்ற நினைவு மூலமாக அனைத்து
சக்திகளையும் அனுபவம் செய்யக் கூடிய பிராப்தி சொரூபம் ஆகுக !
புத்தியின் சம்மந்தம் ஒரு தந்தையிடம் இருந்தால் அனைத்து சக்திககளும், ஆஸ்திகளும் அதிகாரத்தின்
வடிவமாக கிடைக்கிறது. யார் அதிகாரி என புரிந்துக் கொண்டு ஒவ்வொரு செயலையும் செய்கிறார்களோ
அவர்களுக்கு சொல்வதிலும், எண்ணத்திலும் கூட கேட்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்த அதிகாரி
என்ற நினைவு தான் அனைத்து சக்திகளையும் பிராப்தியையும் அனுபவம் செய்விக்கிறது. அனைத்து சக்திகளும்
நம்முடைய பிறப்புரிமை என்ற பெருமிதம் இருக்கட்டும். அதிகாரி ஆகி நடந்தால் அடிமைத்தனம் முடிந்து
போகும்.
சுலோகன் : தன்னுடனேயே இயற்கையும் தூய்மையாக மாற்ற வேண்டும்
என்றால் முழுமையாக பற்றிலிருந்து விடுபடுங்கள்.
(1/4)
19
19.07.2016
காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! இந்த பாரதபூமி நிராகார தந்தையின் ஜென்ம பூமியாகும். இங்கு
தான் தந்தை உங்களுக்கு இராஜயோகம் கற்பித்து, இராஜ்யத்தை அளிக்க மற்றும் உங்களுக்கு
சேவை செய்ய வருகிறார்.
கேள்வி: சிவபாபா தன்னுடைய ஒவ்வொரு குழந்தையிடமும் என்ன ஒரு வாக்குறுதி எடுக்குமாறு
செய்விக்கிறார்?
பதில்: இனிமையான குழந்தைகளே, பாபா நாங்கள் எந்த ஒரு விகர்மமும் செய்ய மாட்டோம் என்று
உறுதி எடுங்கள். 5 விகாரங்களை நாம் தானமாகக் கொடுக்கிறோம். உள்ளுக்குள் பயம் இருக்க வேண்டும்.
ஒரு வேளை நீங்கள் தானம் கொடுத்து விட்டு, பிறகு திரும்பப் பெற்றுக் கொண்டீர்கள் என்றால் மிகவுமே
பாவம் ஏற்பட்டு விடும். அதற்குப் பிறகு கடுமையான தண்டனை வாங்க வேண்டி வரும். ஹரிச்சந்திரரின்
கதை கூட இது பற்றித் தான் அமைக்கப்பட்டுள்ளது.
ஓம் சாந்தி. இது குழந்தைகளுடைய இறை மாணவ வாழ்க்கையாகும். நாம் அவரிடம் வந்துள்ளோம்
என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். அவரே கல்ப கல்பமாக பாரதவாசி குழந்தைகளுக்கு வந்து இராஜ்ய
பாக்கியத்தை அளிக்கிறார். பாரதத்தில் தான் வருகிறார் இல்லையா? இது பாரத பூமியாகும். தங்களது பூமி மீது
மிகுந்த அன்பு, மதிப்பு இருக்கும். எப்படி யாராவது வெளிநாட்டின் பெரிய மனிதர் இங்கு இறந்து விட்டார்
என்றால் அந்த உடலை வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்கிறார்கள் அல்லது இங்கு இருந்த யாராவது பெரிய
மனிதர் வெளிநாட்டில் இறந்து விட்டார் என்றால், அவரது உடலை இங்கு எடுத்து வருகிறார்கள். தங்களது
பூமி மீது மதிப்பு வைக்கிறார்கள். பாரதத்திற்கு பகவானினுடைய ஜென்ம பூமி என்று கூறப்படுகிறது. யாரை
பகவான் அல்லது அல்லா, பரமாத்மா என்று அழைக்கிறார்களோ அவருக்கு முன்னால் இப்பொழுது நீங்கள்
அமர்ந்துள்ளீர்கள் என்பதையும் நீங்கள் அறிந்துள்ளீர்கள். பெயர் அவசியம் வேண்டும் அல்லவா? அல்லா
என்கிறார்கள். இருந்தாலும் லிங்கத்திற்குப் பூஜை செய்கிறார்கள். இறைவன் அல்லது குதா என்று கூறுகிறார்கள்
என்றால், நிச்சயம் அவருடைய அடையாளம் வேண்டும் அல்லவா? லிங்கத்தை எல்லா புறங்களிலும் பூஜிக்கிறார்கள்.
படங்களில் கூட தற்காலத்தில் தேவதைகளுக்கு முன்னால் பரமபிதா பரமாத்மாவின் சித்திரமாக லிங்கத்தை
காண்பிக்கிறார்கள். அவர் எல்லோரையும் விட உயர்ந்தவர். அவருக்கு தனக்கென்று சரீரம் கிடையாது. எனவே
நிராகாரமானவர் என்று கூறப்படுகிறது. சாகாரமானவர் கிடையாது. நாம் அவரிடமிருந்து கல்வியைப் பெறுவதற்காக
அவருக்கு முன்னால் கல்ப கல்பமாக ஆஜராகிறோம் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள்
அறிந்துள்ளீர்கள். பகவானுவாச் லி பகவான் கூறுகிறார் என்றால், நிச்சயம் இராஜயோகம் கற்பித்திருக்கக் கூடும்.
மாணவர்களுக்கு இராஜயோகம் கற்பித்திருந்தார் மற்றும் அவர்கள் ராஜா ராணி ஆகி இருந்தார்கள். சண்டை
ஆகியவற்றின் விஷயம் கிடையாது. இந்த இலட்சுமி நாராயணர் ஆகியோர் யுத்தத்தின் மூலமாக அரசாட்சியை
அடைந்தார்களா என்ன? முற்றிலும் கிடையாது. இவர்கள் சத்யுகத்தில் எப்படி இராஜ்யத்தை அடைந்தார்கள்
என்பது உலகத்திற்கு முற்றிலும் தெரியாது. நாம் தந்தையிடமிருந்து இராஜ்யத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம்
என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துள்ளீர்கள். நாம் அவருக்கு முன்னால் அமர்ந்துள்ளோம்.
அவர் தான் பாபா ஆவார். கிருஷ்ணர் அல்ல. கிருஷ்ணரோ சிறிய குழந்தை ஆவார். அவர் படைப்பு ஆவார்.
இப்பொழுது உண்மையில் கிருஷ்ணர் தனது பதவியை அடைந்து கொண்டிருக்கிறார். பின் வருங்காலத்தில்
கிருஷ்ணர் என்று அழைக்கப்படுவார். இவை எல்லாமே முழுமையாக படிப்பின் விஷயமாகும்.
பாபா நமக்கு இராஜயோகம் கற்பிக்கிறார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். எப்படி மனிதர்கள் மனிதர்களை
வழக்கறிஞர்களாக, பொறியியல் வல்லுநராக ஆக்குகிறார்கள். அவர்களும் மனிதர்கள் தான் இல்லையா? நாமும்
மனிதர்கள் தாம். ஆனால் நாம் பதீதமாக உள்ளோம் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். இப்பொழுது தந்தை
தூய்மையாகவும் ஆக்குகிறார். மேலும் நமக்கு ஆஸ்தியும் அளிக்கிறார். பாவன உலகம், புது உலகமாகத் தான்
இருக்கும். புது உலகத்தில் இருப்பதே இராஜ்யம். இப்பொழுது நீங்கள் தந்தைக்கு முன்னால் அமர்ந்துள்ளீர்கள்.
எப்படி லௌகீக தந்தை குழந்தைகளுக்கு அன்புடன் அமர்ந்து புரிய வைக்கிறார். இவர் பின் பரலௌகீக
விசித்திரமான தந்தை ஆவார். இவருக்காக த்வமேவ மாதாஸ்ச பிதா.... (தந்தையும் நீயே தாயும் நீயே) என்று
நீங்கள் பாடிக் கொண்டே வந்துள்ளீர்கள். இச்சமயம் இவர் தனது பாகத்தை ஏற்று நடிக்கிறார் என்பதை நீங்கள்
அறிந்துள்ளீர்கள். அதற்கு பக்தி மார்க்கத்தில் நாம் பாடல் பாடுகிறோம். நாங்கள் சிவபாபாவிடம் வந்துள்ளோம்
என்று நீங்கள் கூறுகிறீர்கள். கடிதம் கூட சிவபாபா ஸ்ரீ/ர் பிரம்மா என்று எழுதுகிறீர்கள். யாருக்காவது நீங்கள்
கடிதத்தைக் காண்பித்தீர்கள் என்றால், ஆச்சரியப்படுவார்கள். சிவபாபா ஸ்ரீ/ர் பிரம்மா என்று இது போல ஒரு
பொழுதும் கேள்விப்படவே இல்லையே ! சிவபாபா பிரம்மாவிற்குள் வந்து விஷ்ணுபுரியை ஸ்தாபனை செய்துக்
கொண்டிருக்கிறார். எதிரிலேயே நிற்கிறார் மேலே இருப்பவர் சிவபாபா. சிவபாபா பிரம்மா மூலமாக ஸ்தாபனை
19.07.2016
(2/4)
செய்திருந்தார். இப்பொழுது மீண்டும் செய்துக் கொண்டிருக்கிறார். இது இல்லற மார்க்கம் ஆகும். உலகீய
படிப்பில் கூட சட்டம் படிப்பிக்கிறார்கள் என்றால், ஆண் பெண் இருவரும் படிக்கிறார்கள். பெண்கள் கூட
நீதிபதி, வழக்கறிஞர், மருத்துவர்களாக ஆகிறார்கள். இது கூட இல்லற மார்க்கமாகும். சந்நியாசிகளினுடையது
துறவற மார்க்கமாகும். அது தனி ஆகும். ஒரு வேளை சங்காராச்சாரியார் வராமல் இருந்திருந்தார் என்றால்,
தூய்மையினுடைய அணு அளவும் கூட இருந்திருக்காது என்பதையும் பாபா புரிய வைத்திருந்தார். பாரதம்
முற்றிலுமே எரிந்து போய் விட்டிருக்கும். பாரதத்தை தாங்குவதற்காக இவர்களுடைய பாகம் அமைந்துள்ளது.
பாரதம் மிகவுமே தூய்மையாக இருந்தது. இப்பொழுது தூய்மையற்றதாகி விட்டது. இப்பொழுது பாரதம்
எவ்வளவு ஏழையாகி உள்ளது. தங்க இலங்கை கடலுக்குக் கீழே சென்று விட்டது என்று கூறுகிறார்கள்.
இப்பொழுது தங்கத்தினுடைய இலங்கை ஒன்றும் இருக்க முடியாது. இவை எல்லாமே கதைகளாக எழுதி
உள்ளார்கள். இவற்றால் எந்த நன்மையும் கிடையாது.
உண்மையில் பாபா நம்மை முற்றிலுமே சுலபமான நினைவின் பலத்தினால் எவ்வளவு உயர்ந்தவராக
ஆக்குகிறார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். நிரந்தர நினைவில் இருப்பதற்கான முயற்சி
செய்தீர்கள் என்றால் பாவங்கள் அழிந்து போய் விடும் என்று தந்தை வாக்குறுதி கொடுக்கிறார். பக்தி மார்க்கத்தில்
கூட நினைவு செய்வதற்கான முயற்சி செய்துள்ளீர்கள் அல்லவா? ஏன் நினைவு செய்கிறார்கள்? சாட்சாத்காரம்
(காட்சி தெரிதல்) ஆக வேண்டும் என்பதற்காக ! கிருஷ்ணபுரியில் நமக்கு அரசாட்சி கிடைத்து விட வேண்டும்
அல்லது நாம் நரனிலிருந்து நாராயணர் ஆகி விட வேண்டும் என்பதற்காக நினைவு செய்யவில்லை. நாம்
மனிதனிலிருந்து தேவதை ஆகலாம் என்ற இந்த விருப்பம் உங்களுக்குக் கூட இருக்கவில்லை. மனிதனிலிருந்து
தேவதையாக .. என்று பாடவும் செய்கிறார்கள். உண்மையில் கலியுகத்திற்குப் பிறகு சத்யுகம் வரும் என்பதை
நீங்கள் பார்க்கிறீர்கள். கலியுகத்தில் இத்தனை மனிதர்கள் உள்ளார்கள். சத்யுகத்தில் ஒரு தர்மம் இருக்கும்.
இப்பொழுது உங்களுக்கு ஆத்மா மற்றும் பரமாத்மா பற்றிய ஞானம் கூட கிடைத்துள்ளது. உலகத்தில் ஒரு
மனிதருக்குக் கூட ஆத்மா பற்றிய ஞானம் இல்லை. ஆத்மாவில் 84 பிறவிகளின் பாகம் எப்படி பொருந்தி
உள்ளது என்பது யாருக்கும் தெரியாது. இந்த வார்த்தைகள் கூட ஒரு பொழுதும் யாரிடமிருந்தும் கேட்கவே
இல்லை. தந்தை ஞானக் கடல் பதீதபாவனர், நிராகாரமானவர் ஆவார். நமது ஆத்மா இப்பொழுது பாவ
ஆத்மாவிலிருந்து புண்ணிய ஆத்மாவாக ஆகிக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். சத்யுகத்தில்
எல்லோருமே புண்ணிய ஆத்மாக்கள் ஆவார்கள். இங்கு இருப்பவர்கள் பாவ ஆத்மாக்கள் ஆவார்கள். அப்படி
யின்றி நிறைய தான புண்ணியம் செய்பவர்களுக்கு புண்ணிய ஆத்மா என்று கூறப்படுகிறது என்பதல்ல !
புண்ணிய ஆத்மாக்கள் இருப்பதே சத்யுகத்தில் தான் இங்கு எந்த மனிதர்கள் தான புண்ணியம் செய்கிறார்களோ,
அவர்களை புண்ணிய ஆத்மா என்று நினைக்கிறார்கள். அங்கு உங்களுக்கு தான புண்ணியம் ஆகியவை
செய்ய வேண்டிய அவசியம் இருப்பதில்லை. அங்கு யாரும் ஏழைகள் இருப்பதே இல்லை. நீங்கள் அங்கு
எப்பொழுதுமே புண்ணிய ஆத்மாவாக இருப்பீர்கள். நீங்கள் உடல், மனம், பொருள் அனைத்தையும் எல்லை
யில்லாத தந்தையின் பொருட்டு அளிக்கிறீர்கள். அதற்கு சமர்ப்பணம் ஆவது என்று கூறப்படுகிறது. முதலில்
நான் சமர்ப்பணம் ஆகிறேனா, இல்லை நீங்களா என்று தந்தை கூறுகிறார். முதலில் நீங்கள் பலி ஆகிறீர்கள்.
அப்பொழுது பிறகு 21 பிறவிகளுக்கு சமர்ப்பணம் கிடைக்கும் என்று பாபா கூறுகிறார். இந்த விஷயங்களை
இப்பொழுது நீங்கள் நல்ல முறையில் புரிந்துள்ளீர்கள். நேரடியாகக் கேட்கிறீர்கள். வீட்டில் இருக்கிறீர்கள் என்றால்,
அங்கு முரளி வருகிறது. தூரத்திலிருந்து கேட்கிறீர்கள். இப்பொழுது தந்தைக்கு முன்னால் அமர்ந்துள்ளீர்கள்.
குழந்தைகளே! நான் உங்களுக்கு தந்தையாகவும் இருக்கிறேன் என்று தந்தை கூறுகிறார். இங்கு குருட்டு
நம்பிக்கையின் எந்த விஷயமும் கிடையாது. தந்தையுமாக இருக்கிறார். ஆசிரியராகவும் இருக்கிறார். தந்தை
யினுடையவராக ஆகும் பொழுது அவர் கல்வி அளிக்கிறார். உங்களுடைய புத்தியில் இப்பொழுது முழு
ஞானம் உள்ளது. 84ன் சக்கரம் கூட உங்களுக்கு புரிய வைக்கப்படுகிறது. யார் 84 பிறவிகள் எடுக்கக்
கூடியவர்களாக இல்லையோ, அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். உண்மையில் நாம் 84ன் சக்கரம் சுற்றி
வந்து இப்பொழுது திரும்பிச் செல்கிறோம் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். ஆத்மாவாகிய நீங்கள் அசரீரியாக
வந்திருந்தீர்கள். பிறகு அசரீரியாகி திரும்பிச் செல்ல வேண்டும் என்று தந்தை கூறுகிறார். நீங்கள் தூய்மையான
ஆத்மாக்களாக ஆகிச் செல்கிறீர்கள். தூய்மையாக ஆவதற்காக நீங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்.
யோகபலம் அதாவது நினைவின் பலத்தினால் நீங்கள் தூய்மையாக ஆகி விடுவீர்கள். யோகம் என்ற வார்த்தை
சாஸ்திரங்களினுடையதாகும். சரியான வார்த்தை நினைவு என்பதாகும். மனைவிக்கு கணவனின் அல்லது
கணவனுக்கு மனைவியின் நினைவு இருக்கிறது அல்லவா? யோகம் என்பதன் பொருளே நினைவு தான். என்
ஒருவனை நினைவு செய்யுங்கள் மற்ற தொடர்புகளிலிருந்து புத்தி யோகத்தைத் துண்டித்து உங்களது தந்தையாகிய
என்னுடன் புத்தி யோகத்தை இணையுங்கள். நினைவு செய்யுங்கள். எந்த அளவு நினைவு செய்வீர்களோ
அந்த அளவு உங்களுடைய விகர்மங்கள் விநாசம் ஆகும். உண்மையில் பாரதத்திற்கு கல்ப கல்பமாக ஆஸ்தி
கிடைக்கிறது. சிவஜெயந்தி கூட பிரசித்தமானதாகும். எப்படி புத்தர், கிறிஸ்து ஆகியோருக்கு ஜெயந்தி உள்ளது.
19.07.2016
(3/4)
அதே போல நிராகார சிவனுக்கு ஜெயந்தி உள்ளது. அவர் உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஆகிறார். கிருஷ்ண
ஜெயந்தி கூட பிரசித்தமானதாகும். ஆனால் அவர் வந்து என்ன செய்கிறார் என்பது யாருக்குமே தெரியாது.
கிருஷ்ணர் சத்யுகத்தின் இளவரசராக இருந்தார். அவசியம் அவருக்கு யாரோ அப்பேர்ப்பட்ட கர்மத்தினைக்
கற்பித்திருக்கக் கூடுமல்லவா! அதனால் சத்யுகத்தின் இளவரசர் ஆனார். சிறிய குழந்தை தூய்மையாக இருக்கவே
செய்யும். அங்கு விகாரத்தின் விஷயம் இருப்பதில்லை. குழந்தை தூய்மையாக இருக்கும். பகவான் ஒரே ஒரு
நிராகாரமானவர் ஆவார். இறைவன் ஒருவர் மற்றது முழுவதுமே படைப்பு ஆகும். படைப்பிடமிருந்து ஒரு
பொழுதும் படைப்பிற்கு ஆஸ்தி கிடைக்க முடியாது. ஆஸ்தி தந்தையிடமிருந்து கிடைக்கும். சகோதரனுக்கு
சகோதரனிடமிருந்து ஆஸ்தி கிடைக்க முடியாது. நீங்கள் அனைவரும் சகோதர சகோதரர்கள் ஆவீர்கள்.
சகோதரத்துவம் என்று கூறுகிறார்கள் அல்லவா? தந்தை ஒரே ஒருவர் ஆவார். ஆஸ்தி தந்தையிடமிருந்து
கிடைக்கும். அனைத்து சகோதரர்களுக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல் ஒரு தந்தை ஆவார். அனைத்து
ஆத்மாக்களுக்கும் தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைத்துக் கொண்டிருக்கிறது. நான் ஆத்மாக்களுக்கு வந்து
கற்பிக்கிறேன். ஆத்மாக்களுக்கு சத்கதி அளிக்கிறேன் என்று தந்தை கூறுகிறார். தந்தை வந்து இராஜயோகம்
கற்பிக்கிறார். இந்த படிப்பின் பதவியை நீங்கள் இங்கு அடைவதில்லை. அவர்கள் வழக்கறிஞர்களாக இந்த
பிறவியில் ஆகிறார்கள். பிறகு மற்றொரு பிறவி எடுத்து மறுபடியும் படிப்பார்கள்.
இந்த படிப்பினால் நாங்கள் 21 பிறவிகளுக்கு பிராப்தியை அடைகிறோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
அங்கு சத்யுகத்தில் மருத்துவர் ஆகியோர் யாரும் இருப்பதில்லை. அங்கு நோய் நொடியே இருக்காது. அங்கு
நீங்கள் கர்ப்ப மாளிகையில் இருக்கிறீர்கள். இங்கு கர்ப்ப சிறையில் இருக்கிறீர்கள். இங்கு நிறைய தண்டனைகள்
கிடைக்கிறது. அதனால் தான் இந்த சிறையிலிருந்து வெளியே கொண்டு வாருங்கள், நாங்கள் மீண்டும் எந்த
தவறும் செய்ய மாட்டோம் என்று முறையிடுகிறார்கள். தர்மராஜரிடம் வாக்குறுதி கொடுக்கிறார்கள். இங்கு
நீங்கள் சிவபாபாவிடம் வாக்குறுதி கொடுக்க வேண்டும். பாபா நாங்கள் ஒரு பொழுதும் விகர்மம் செய்ய
மாட்டோம். 5 விகாரங்களை நாங்கள் உங்களுக்கு கொடுத்து விடுகிறோம். விகாரங்கள் ஒன்றும் அப்படியேக்
சட்டென்று விடுபட்டு விடாது என்பதையும் தந்தை அறிந்துள்ளார். உள்ளுக்குள் பயம் இருக்க வேண்டும்.
நாம் விகாரங்களை தானம் கொடுத்த பிறகு, மீண்டும் எடுத்தோம் என்றால், பெரிய பாவமாகி விடும். எப்படி
ராஜா ஹரிச்சந்திரனின் உதாரணம் உள்ளது. அப்படியின்றி 5 விகாரங்கள் சட்டென்று விடுபட்டு விடும் என்பதல்ல
என்பதை தந்தை அறிந்துள்ளார். நேரம் பிடிக்கிறது. உங்களது கர்மாதீத நிலை ஆகி விடும் பொழுது, சண்டை
ஏற்படும். இந்த 5 விகாரங்கள் பெரிய எதிரி ஆகும். அதில் கூட முக்கியமான ஒன்று தேக அபிமானம் ஆகும்.
அதை தானம் கொடுப்பது எவ்வளவு கடினம் ஆகும். தன்னை ஆத்மா என்று உணர்ந்து, தந்தையாகிய
என்னை நினைவு செய்யுங்கள் என்று அடிக்கடி தந்தை கூறுகிறார். ஆனால் அது ஆவதில்லை. தேக
அபிமானி ஆவதால் பின்னர் காமத்தின் அடி ஏற்படுகிறது. தேக அபிமானம் எல்லாவற்றையும் விட கூர்மை
யானது ஆகும். தேஹீ அபிமானி (ஆத்ம உணர்வு) ஆவதில் மிகுந்த முயற்சி தேவைப்படுகிறது. முக்கியமாக
தேக அபிமானம் வருவதால் தான் பாவங்கள் ஏற்பட்டுள்ளன. 5 விகாரங்களை தானமாக கொடுக்க வேண்டி
உள்ளது. இதில் நேரம் பிடிக்கிறது. மணமகனின்றி மணமகள்கள் போக முடியாது. முதலில் மணமகன் போக
வேண்டும் பிறகு மணமகள்கள். மணமகன் வந்து அனைத்து ஆத்மாக்களையும் அழைத்துச் செல்ல வேண்டி
உள்ளது. கர்மாதீத் நிலை ஆகும் வரை முயற்சி செய்ய வேண்டும். தேக அபிமானம் வருவதாலேயே பின்னர்
தவறுகள் ஆகின்றன. பாபா தேக அபிமானத்தில் வந்து விகாரத்தில் விழுந்தேன் என்பார்கள். புயல்களோ
நிறைய வரும். விகாரத்தின் எண்ணம் வந்தாலும் கூட கர்ம இந்திரியங்களால் ஒரு பொழுதும் எந்த பாவமும்
செய்யாதீர்கள். மாயையை வெல்வதற்காக எவ்வளவு உழைப்பு செய்ய வேண்டி உள்ளது. திருமணமாகி இருந்தது
என்றாலும் தூய்மையாக இருந்து காண்பியுங்கள். அப்பொழுது சந்நியாசிகளும் பார்ப்பார்கள் என்று தந்தை
கூறுகிறார். உங்களுக்கு எவ்வளவு பெரிய சம்பாத்தியம் உள்ளது பாருங்கள். தூய்மையாக இருந்து காண்பித்தீர்கள்
என்றால் மிக உயர்ந்த பதவியை அடைவீர்கள். உங்கள் மீது எல்லோருமே பலி ஆவார்கள். பாபா கூட மகிமை
செய்கிறார். தூய்மையாக இருந்தாலும் கூட பின்னர் யோகமும் வேண்டும். யோகத்தில் தான் அடிக்கடி தடைகள்
ஏற்படுகின்றன. தேக அபிமானம் வந்து விடுகிறது. தூய்மையாக இருக்கிறார்கள். அது சரி தான் ! தூய்மையினால்
தான் தூய்மையான உலகத்தின் ஆஸ்தியைப் பெறுவீர்கள். ஆனால் பிறகு மாயை கூட பலசாலியாக இருக்கும்.
மாயை நிறைய தாக்குகிறது. இவை எல்லாம் ஆகும் என்று தந்தை புரிய வைக்கிறார். துணிவை
வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் கூடவே நிரந்தர நினைவும் இருக்க வேண்டும். அப்பொழுது தான் விகர்மங்கள்
விநாசம் ஆகும். யார் சிறந்த வீரர் (ருஸ்தம்) ஆகிறார்களோ அவர்களை மாயை கூட நிறைய தொல்லைப்
படுத்துகிறது. நினைவில் இருப்பது அவர்களுக்கு கஷ்டமாக உள்ளது. யாரால் இருக்க முடியுமோ அவர்களிடம்
அனுபவம் பற்றி கேட்க வேண்டும். என்ன நினைக்கிறார்கள்? எப்படி இருக்கிறார்கள்? நினைவில் இருப்பதால்
விகர்மங்கள் விநாசம் ஆகும். இந்த விஷயமே முற்றிலுமே தனிப்பட்டது மற்றும் புதியதாகும். இங்கு
அமர்ந்திருக்கும் பொழுது போதை ஏறி இருக்கும். பகவான் ஒரே ஒரு நிராகாரமானவர், கிருஷ்ணர் அல்ல
19.07.2016
(4/4)
என்பதையும் புரிந்துள்ளீர்கள். உண்மையில் கிருஷ்ணருக்காக உரலில் கட்டி வைத்தார்கள். இப்படி செய்தார்கள்
என்று சாஸ்திரங்களில் எழுதப்பட்ட விஷயங்கள் எல்லாம் ஒன்றும் கிடையாது. இது கூட அவரை நிந்திப்பதாகும்.
இழிவு படுத்துகிறார்கள். கிருஷ்ணரிடம் எந்தவொரு அவகுணமும் இருக்கவில்லை. சஞ்சலப்படுவது லி இது
கூட ஒரு அவகுணம் ஆகுமல்லவா? கிருஷ்ணரோ முற்றிலுமே மரியாதா புருஷோத்தமர் ஆவார். அவருக்கு
சர்வகுண சம்பன்ன .... என்று மகிமை பாடுகிறார்கள். குரு பிரம்மா, குரு விஷ்ணு... . என்று பாடப்படுகிறது.
எங்களுக்கு இவர் குரு ஒன்றும் கிடையாது என்று கூறுங்கள். நாங்கள் இவரை குரு என்றும் ஏற்றுக்
கொள்வதில்லை, இறைவன் என்றும் ஏற்றுக் கொள்வதில்லை. பதீத பாவனரோ ஒரே ஒரு நிராகாரமானவர்
ஆவார் அல்லவா? சாகார குரு யாருமே பதீத பாவனராக இருக்க முடியாது. இச்சமயம் நீங்கள் பரமபிதா
பரமாத்மாவின் முழு வாழ்க்கை சரித்திரத்தை அறிந்துள்ளீர்கள். 5 ஆயிரம் வருடங்களில் சிவபாபாவின் என்ன
பாகம் நடக்கிறது என்பதை நீங்கள் தந்தை மூலமாக அறிந்துள்ளீர்கள். தந்தை ஞானம் நிறைந்தவர் ஆவார்
அல்லவா? சுகம், சாந்தி, ஆனந்தக் கடல்.. என்பது அவருடைய மகிமையாகும். தந்தையிடம் பொக்கிஷங்கள்
உள்ளன என்றால், அவசியம் குழந்தைகளுக்கு கூட கொடுத்திருக்கக் கூடும் அல்லவா? நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட
செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும்
காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. கர்மாதீத நிலையை அடைய வேண்டும் என்றால், இந்த கர்ம இந்திரியங்களால் எந்த ஒரு
தவறும் செய்யக் கூடாது. தூய்மையாக இருப்பதுடன் கூடவே நினைவிலும்
உறுதியானவராக வேண்டும்.
2. எப்பொழுதும் புண்ணிய ஆத்மாவாக ஆக வேண்டும் என்றால் உடல், மனம், பொருளால்
தந்தை மீது சமர்ப்பணமாக வேண்டும். ஒரு முறை சமர்ப்பணம் ஆவதால் 21 பிறவிகளுக்கு
புண்ணிய ஆத்மா ஆகி விடுவீர்கள்.
வரதானம்: தங்களது ஸ்மிருதி (நினைவு) விருத்தி (உள்ளுணர்வு) மற்றும் திருஷ்டியை (பார்வை)
அலௌகீகமானதாக ஆக்கிக் கொண்டு விடும் அனைத்து கவர்ச்சிகளிலிருந்தும் விடுபட்டவர்
ஆவீர்களாக.
எப்படி எண்ணமோ, அப்படி படைப்பு என்று கூறப்படுகிறது. யார் புதிய சிருஷ்டியை படைப்பதற்குக்
கருவியாக இருக்கும் விசேஷ ஆத்மாக்களாக இருக்கிறார்களோ அவர்களுடைய ஒவ்வொரு எண்ணமும்
சிறந்ததாக அதாவது அலௌகீகமானதாக இருக்கவேண்டும். ஸ்மிருதி, விருத்தி மற்றும் திருஷ்டி எல்லாமே
அலௌகீகமானதாக ஆகி விடும் பொழுது இந்த உலகத்தின் எந்த ஒரு மனிதர் அல்லது எந்த ஒரு
பொருளும் தன் பக்கம் கவர முடியாது. அவ்வாறு கவருகிறது என்றால், அவசியம் அலௌகீக தன்மையில்
குறைவு இருக்கிறது. அலௌகீக ஆத்மாக்கள் அனைத்து கவர்ச்சிகளிலிருந்தும் விடுபட்டு இருப்பார்கள்.
சுலோகன்: இதயத்தில் பரமாத்ம அன்பு அல்லது சக்திகள்
நிறைந்திருந்தது என்றால், மனதில் குழப்பங்கள் வர முடியாது.
(1/4)
20
20.07.2016
காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே ! இந்தப் பழைய உலகத்தில் மனிதர்கள் எந்த விதமான ஆசைகசை
வைத்திருக்கிறார்களோ, அந்த ஆசைகளை நீங்கள் வைக்கக் கூடாது. ஏனென்றால் இந்த
உலகம் விநாசமாகப் போகிறது.
கேள்வி : சங்கமயுகத்தில் எந்த ஓர் ஆசை வைப்பீர்களானால் அனைத்து ஆசைகளும் சதா
காலத்திற்கும் நிறைவேறி விடும்?
பதில் : நாம் பாவனமாகி, தந்தையை நினைவு செய்து அவரிடமிருந்து முழு ஆஸ்தியைப் பெற வேண்டும்
லி இந்த ஆசை மட்டுமே இருக்க வேண்டும். இந்த ஆசை மூலம் சதா காலத்திற்கும் அனைத்து ஆசைகளும்
நிறைவேறும். ஆயுஷ்வான் பவ, புத்திரவான் பவ, தனவான் பவ........ அனைத்து வரதானங்களும் கிடைத்து
விடும். சத்யுகத்தில் அனைத்து விருப்பங்களும் நிறைவேறி விடும்.
பாடல் : நீங்கள் தான் தாய், நீங்கள் தான் தந்தை.........
ஓம் சாந்தி. இனிமையிலும் இனிமையான ஆன்மிகக் குழந்தைகள், அதாவது ஆத்மாக்களிடம் பரமபிதா
பரமாத்மா இதைப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் அறிவீர்கள், எல்லையற்ற தந்தை நமக்கு
வரதானம் தந்து கொண்டிருக்கிறார். அந்த மனிதர்கள் ஆசீர்வாதம் தருகின்றனர்லிபுத்திரவான் பவ, ஆயுஷ்வான்
பவ, தனவான் பவ! இப்போது தந்தை உங்களுக்கு வரதானம் தருகிறார்லிஆயுஷ்வான் பவ. உங்களுடைய
ஆயுள் மிக நீண்டதாக ஆகும். அங்கே புத்திரர்களும் இருப்பார்கள், அதுவும் சுகம் தருபவர்களாக இருப்பார்கள்.
இங்கே இருக்கும் குழந்தைகள் அனைவரும் துக்கம் தருபவர்கள். சத்யுகத்தில் இருக்கும் குழந்தைகள் சுகம்
தருபவர்களாக இருப்பார்கள். இப்போது குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், எல்லையற்ற தந்தை எல்லையற்ற
சுகத்தின் ஆஸ்தியைத் தந்து கொண்டிருக்கிறார். நிச்சயமாக நாம் நீண்ட ஆயுள் உள்ளவர்களாகவும்,
செல்வந்தர்களாகவும் ஆவோம். இப்போது எந்த ஒரு விருப்பத்தையும் மனதில் வைக்கக் கூடாது. உங்கள்
விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். இந்த நரகத்தில் எந்த ஒரு விருப்பமும் வைக்கக் கூடாது. செல்வத்திற்
கான விருப்பமும் வைக்கக் கூடாது. அதிகமான செல்வம் இருக்க வேண்டும், பெரிய வேலை வேண்டும் லி
இந்த அதிகப்படியான விருப்பங்களையும் வைக்கக் கூடாது. வயிறோ ஒரு துண்டு ரொட்டியைச் சாப்பிடுகிறது.
அதிகமான பேராசையில் இருக்கக் கூடாது. அதிக செல்வம் இருக்குமானால் அது அழிந்து போகப் போகிறது.
குழந்தைகள் அறிவார்கள், பாபா நம்மை சொர்க்கத்தின் எஜமானர் ஆக்குகிறார். இப்போது பாபா சொல்கிறார் லி
தானம் கொடுத்தால் கிரகணம் விட்டுப் போகும். எதை தானம் கொடுக்க வேண்டும்? இந்த 5 விகாரங்களை.
இவற்றை தானமாகக் கொடுத்தால் கிரகணம் விட்டுப் போகும். மேலும் நீங்கள் 16 கலை சம்பூர்ணமாக ஆகி
விடுவீர்கள். நீங்கள் அறிவீர்கள், நாம் சர்வகுண சம்பன்னமாக, 16 கலை சம்பூர்ணமாக.......... இங்கே ஆக
வேண்டும். 5 விகாரங்களை தானமாகக் கொடுக்க வேண்டியுள்ளது. குழந்தைகளுக்கு பாபா சொல்கிறார்லிஇனிமையான
குழந்தைகளே, எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தி பெற வேண்டும் என்பதை தவிர வேறு
எந்த ஓர் ஆசையும் வைக்கக் கூடாது. இன்னும் கொஞ்சம் சமயமே மீதி உள்ளது. பாடவும் படுகின்றதுலிஅதிக
சமயம் முடிந்து விட்டது, கொஞ்ச சமயம் மிஞ்சியுள்ளது. இன்னும் கொஞ்ச சமயம் இந்த விநாசத்திற்காக
உள்ளது. அதனால் இந்தப் பழைய உலகத்தின் எந்த ஓர் ஆசையும் வைக்காதீகள். தந்தையை மட்டும்
நினைவு செய்து கொண்டே இருங்கள். நினைவின் மூலம் குழந்தைகள் சதோபிரதானமாக ஆக வேண்டும்.
இந்த உலகத்தில் மனிதர்கள் என்ன ஆசை வைக்கிறார்களோ, அதில் எதையும் நீங்கள் வைக்காதீர்கள். ஒரு
சிவபாபாவிடம் இருந்து நாம் நம்முடைய சொர்க்கத்தின் ஆஸ்தியைப் பெற வேண்டும் என்ற ஒரே ஓர் ஆசை
மட்டும் வையுங்கள். யாருக்கும் ஒரு போதும் துக்கம் கொடுக்கக் கூடாது. ஒருவர் மற்றவர் மீது காமக் கட்டாரி
செலுத்துவது என்பது அனைத்திலும் பெரிய துக்கமாகும். அதனால் தான் சந்நியாசிகள் பெண்களிடமிருந்து
விலகி விடுகின்றனர். இவர்கள் விட்டு விட்டார்கள் என்று சொல்கிறார்கள். இச்சமயம் இராவண இராஜ்யத்தில்
அனைவரும் தூய்மையற்ற பாவாத்மாக்கள்.
இப்போது சமயம் மிகவும் குறைவாக உள்ளது. நீங்கள் தந்தையின் ஸ்ரீமத் படி நடக்கவில்லை என்றால்
உயர்ந்தவராக ஆக மாட்டீர்கள். குழந்தைகள் உயர்ந்தவரிலும் உயர்ந்தவராக ஆக வேண்டும். அதனால் 5
விகாரங்களை தானமாகக் கொடுத்தால் கிரகணம் விட்டுப் போகும். அனைவர் மீதும் கிரகச்சாரி (கெட்ட
திசைகளின் பார்வை )உள்ளது. முற்றிலும் கருப்பாகி விட்டுள்ளனர். பாபா சொல்கிறார் லி என்னிடமிருந்து ஆஸ்தி
பெற வேண்டுமானால் தூய்மையாகுங்கள். துவாபரயுகத்தில் ஆரம்பித்து நீங்கள் தூய்மை இழக்கத் தொடங்கி
சதோபிரதானத்திலிருந்து தமோபிரதானம் ஆகி விட்டிருக்கிறீர்கள். அதனால் தான் பதீத பாவனா வாருங்கள்,
வந்து எங்களை தூய்மையாக்குங்கள் என்று பாடுகிறீர்கள். ஆகவே பாபா கட்டளை இடுகிறார்லிகுழந்தைகளே,
(2/4)
20.07.2016
இப்போது தூய்மையற்றவர்களாக ஆகாதீர்கள். காமம் என்ற மகா விரோதியை வெற்றி கொள்ளுங்கள். இதனால்
தான் நீங்கள் முதலில் இருந்து
கடைசி வரை துக்கம் அடைந்திருக்கிறீர்கள். பாபா சொல்கிறார்லிநீங்கள் சொர்க்கத்தில் முற்றிலும் தூய்மையாக
இருந்தீர்கள். இப்போது இராவணனின் வழிப்படி நீங்கள் தூய்மையற்றவர்களாக ஆகியிருக்கிறீர்கள். அதனால்
தான் தேவதைகளுக்கு முன் போய் அவர்களுக்கு மகிமை பாடுகிறீர்கள்லிநீங்கள் சர்வகுண சம்பன்னம், சம்பூர்ண
நிர்விகாரி, நாங்கள் விகாரிகளாக உள்ளோம். நிர்விகாரியாக இருப்பதால் சுகமே சுகம் தான். பாபா சொல்கிறார்லி
இப்போது நான் வந்திருக்கிறேன், குழந்தைகளாகிய உங்களை நிர்விகாரி ஆக்குவதற்காக. இப்போது குழந்தைகள்
நீங்கள் அனைத்து ஆசைகளையும் விட்டுவிட வேண்டும். உங்கள் வேலைலிதொழில் முதலியவற்றை வேண்டு
மானால் செய்யுங்கள். ஒருவர் மற்றவரை ஞான அமிர்தத்தை அருந்தச் செய்யுங்கள். பாடப் படவும் செய்கிறதுலி
அமிர்தத்தை விட்டு விஷத்தை ஏன் அருந்த வேண்டும்? பாபா சொல்கிறார், எந்த ஒரு விருப்பமும் வைக்காதீர்கள்.
நாம் நினைவு யாத்திரை மூலம் முழு சதோபிரதானமாக ஆகி விடுவோம். 63 பிறவிகளாக என்னென்ன பாவம்
செய்திருக்கிறீர்களோ, அவை நினைவினால் தான் நீங்கும். இப்போது நிர்விகாரி ஆக வேண்டும். மாயாவின்
புயல் வரலாம், ஆனால் தூய்மை இழக்கக் கூடாது. மனிதரில் இருந்து தேவதை ஆக வேண்டும். நீங்கள் தான்
சதோபிரதான பூஜைக்குரிய தேவதாக்களாக இருந்தீர்கள். பிறகு நீங்கள் தான் பூஜைக்குரிய நிலையில் இருந்து
பூஜாரி ஆகிறீர்கள். நாம் நோயற்றவர்களாக இருந்தோம். பிறகு நோயாளி ஆகிறோம். இப்போது மீண்டும்
நோயற்றவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம். நோயற்றவர்களாக இருந்த போது ஆயுள் நீண்டதாக இருந்தது.
இப்போதோ பாருங்கள், உட்கார்ந்திருக்கும் போதே திடீரென்று மனிதர்கள் இறந்து போகின்றனர். ஆக, எந்த
ஓர் ஆசையும் வைக்கக் கூடாது. இவையனைத்தும் மோசமான ஆசைகள். முள்ளில் இருந்து மலராக ஆவதற்கோ
ஒரே முதல் தரமான ஆசை லி பாபா சொல்கிறார், என்னை நினைவு செய்வீர்களானால் புண்ணிய ஆத்மா ஆகி
விடுவீர்கள். இச்சமயம் அனைவர் மீதும் ராகுவின் கிரகணம் (பார்வை) உள்ளது. முழு பாரதத்தின் மீதும்
ராகுவின் கிரகணம் உள்ளது. பிறகு பிரஹஸ்பதி தசா (குரு பார்வை) வேண்டும். நீங்கள் அறிவீர்கள், இப்போது
நம் மீது பிரஹஸ்பதி தசா அமர்ந்துள்ளது. பாரதம் சொர்க்கமாக இருந்தது இல்லையா? சத்யுகத்தில் உங்கள் மீது
பிரஹஸ்பதி தசா இருந்தது. இச்சமயம் ராகு தசா உள்ளது. இப்போது மீண்டும் எல்லையற்ற தந்தை மூலம்
பிரஹஸ்பதி தசா கிடைக்கின்றது. பிரஹஸ்பதி தசாவில் 21 பிறவிகளுக்கான சுகம் உள்ளது. திரேதாவில் உள்ளது
சுக்கிர தசா. எவ்வளவு ஒருவர் நினைவு செய்கிறாரோ, அதிக நினைவு செய்வாரானால் பிரஹஸ்பதி தசா
இருக்கும். இதுவும் புரிய வைக்கப் பட்டுள்ளது, இப்போது நாம் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும்.
அதனால் பாபாவை நினைவு செய்து கொண்டே இருங்கள். அப்போது விகர்மங்கள் விநாசமாகும். மேலும்
நீங்கள் பறப்பதற்குத் தகுதி உள்ளவர்களாக ஆகி விடுவீர்கள். மாயா உங்களுடைய இறக்கையைத் துண்டித்து
விட்டுள்ளது. இப்போது உங்களுக்கு ஈஸ்வரிய வழிமுறை கிடைக்கின்றது. இதன் மூலம் நீங்கள் சதா சுகமானவர்
களாக ஆகிறீர்கள். ஈஸ்வரிய வழிமுறைப்படி நீங்கள் சொர்க்கத்தின் எஜமானர் ஆகிறீர்கள். உலகத்தின் ராஜபதவியை
அடைந்து கொண்டிருக்கிறீர்கள். ஈஸ்வரிய வழிமுறை கிடைக்கின்றதுலிபாபாவை நினைவு செய்வீர்களானால்
அந்த் மதி úஸா கதி ஆகி விடும். நினைவின் மூலம் தான் விகர்மங்கள் விநாசமாகும், தூய்மையாகி விடுவீர்
கள். தூய்மையான ஆத்மா தான் சொர்க்கத்திற்குத் தகுதி உள்ளவர்களாக ஆக முடியும். அங்கே உங்களுக்கு
சரீரமும் நோயற்றதாக இருக்கும். ஆயுளும் நீண்டதாக இருக்கும். செல்வமும் நிறைய இருக்கும். அங்கே ஒரு
போதும் தர்மத்தின் குழந்தையை உருவாக்க மாட்டார்கள். பாபா சொல்கிறார்லிஆயுஷ்வான் பவ, சம்பத்திவான்
(செல்வம் நிறைந்தவர்) ஆகுக. ஒரு மகனும் அவசியம் இருப்பான். இச்சமயம் பாபா அனைவரையும் தர்மத்தின்
குழந்தை ஆக்குகிறார். ஆக, பிறகு சத்யுகத்தில் தர்மத்தின் குழந்தை என்று யாரும் இருக்க மாட்டார்கள். யோக
பலத்தின் மூலம் ஓர் ஆண்குழந்தை, ஒரு பெண்குழந்தை இருக்கும். குழந்தை எப்படிப் பிறக்கும் எனக்
கேட்கின்றனர். அங்கே இருப்பது யோகபலம். டிராமாவில் விதிக்கப் பட்டுள்ளது. சத்யுகத்தில் அனைவரும்
யோகிகள். கிருஷ்ணர் யோகேஷ்வர் எனச் சொல்லப் படுகின்றார். கிருஷ்ணர் யோகத்தில் இருக்கிறார் என்பதில்லை.
அவரோ முழு தூய்மையான யோகி ஆவார். ஈஸ்வரன் அனைவரையும் யோகேஷ்வர் ஆக்கியுள்ளார் என்பதால்
வருங்காலத்தில் யோகியாக இருக்கிறார்கள். பாபா தான் யோகியாக ஆக்கியிருக்கிறார். யோகிகளின் ஆயுள்
நீண்டதாக இருக்கும். போகிகளின் ஆயுள் குறுகியதாக இருக்கும். ஈஸ்வரன் குழந்தைகளை தூய்மையானவர்
களாக்கி, யோகம் கற்றுத் தந்து தேவதை ஆக்கியிருக்கிறார். இவர்கள் யோகிகள் எனச் சொல்லப் படுகின்றனர்.
யோகி என்றால் ரிμ, தூய்மையாக இருப்பவர்கள். நீங்கள் ராஜரிμ என்று உங்களுக்குப் புரிய வைக்கப்பட்டுள்ளது.
இராஜயோகத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள், இராஜ்ய பதவி பெறுவதற்காக. இச்சமயம் பாபாவை நினைவு
செய்ய வேண்டும். இங்கே லி குழந்தை பிறக்க வேண்டும் என்பது போன்ற எந்த ஒரு தலைகீழான ஆசையும்
வைக்கக் கூடாது. மீண்டும் விகாரத்தில் செல்ல வேண்டியிருக்கும், காமக் கட்டாரி செலுத்த வேண்டியிருக்கும்
இல்லையா? தேக அபிமானிகள் காமக் கட்டாரி செலுத்துவார்கள். தேகி அபிமானிகள் காமக் கட்டாரி செலுத்து
(3/4)
20.07.2016
வதில்லை. பாபா புரிய வைக்கிறார்லிதூய்மையாகுங்கள். ஆத்மாக்களோடு பேசுகிறார்லிஇப்போது காமக் கட்டாரி
செலுத்தாதீர்கள். தூய்மையாவீர்களானால் உங்களின் அனைத்து துக்கங்களும் விலகிப் போய்விடும். உங்களை
சொர்க்கத்தின் எஜமானர் ஆக்குகிறார். பாபா எவ்வளவு சுகம் கொடுக்கிறார்! பாபாவிடமிருந்தோ முழு ஆஸ்தி
பெற வேண்டும்.
பாபாவோ ஏழைப்பங்காளர். பாடப் படவும் செய்கிறதுலிசுதாமா இரு கைப்பிடி அவல் கொடுத்ததால் மாளிகை
கிடைத்தது என்பதாக. பாபா 21 பிறவிகளுக்கு ஆஸ்தி தருகிறார். இதையும் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்லிஇப்போது
அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும். சிவபாபாவின் ஸ்தாபனையின் காரியத்தில் எவ்வளவு உதவி
செய்கிறீர்களோ, அவ்வளவு ஆஸ்தி பெறுவீர்கள். வீட்டில் பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவமனை திறந்து
வையுங்கள். போர்டில் எழுதி வையுங்கள் லி சகோதரலிசகோதரிகளே, 21 பிறவிகளுக்கு சதா ஆரோக்கியமாக, சதா
செல்வந்தராக ஆக வேண்டுமானால் வந்து புரிந்து கொள்ளுங்கள். நாங்கள் ஒரு விநாடியில் சதா ஆரோக்கியமாக,
செல்வந்தராக ஆவதற்கான வழி சொல்கிறோம். நீங்கள் சர்ஜன் அல்லவா? சர்ஜன் என்ற போர்டையோ
அவசியம் வைக்கிறார்கள். இல்லையென்றால் மனிதர்களுக்கு எப்படித் தெரிய வரும்? நீங்களும் உங்கள்
வீட்டுக்கு வெளியில் போர்டு வையுங்கள். யாராவது வந்தால் அவர்களுக்கு இரண்டு தந்தையரின் இரகசியத்தைப்
புரிய வையுங்கள். எல்லைக்குட்பட்ட தந்தையிடம் எல்லைக்குட் பட்ட ஆஸ்தி பெற்றே வந்திருக்கிறீர்கள்.
என்னை மட்டுமே நினைவு செய்வீர்களானால் எல்லையற்ற ஆஸ்தி கிடைத்து விடும். என்று எல்லையற்ற
தந்தை சொல்கிறார். புரொஜெக்டர், கண்காட்சிகளில் முதலில் இதைப் புரிய வையுங்கள். இந்தப் முயற்சியை
செய்வதால் நீங்கள் இவ்வாறு ஆவீர்கள். இப்போது சங்கமயுகம். கலியுகத்திலிருந்து சத்யுகம் உருவாக வேண்டும்.
பாரதவாசிகள் நீங்கள் சதோபிரதானமாக இருந்தீர்கள். இப்போது தமோபிரதானமாக ஆகி விட்டிருக்கிறீர்கள்.
இப்போது பாபா சொல்கிறார்லிஎன்னை நினைவு செய்வீர்களானால் நீங்கள் சொர்க்கதின் எஜமானர் ஆகி விடுவீர்கள்.
வார்த்தைகள் இரண்டு தான். தந்தையை நினைவு செய்வீர்களானால் ஆஸ்தி (இராஜபதவி) உங்களுடையது.
இந்த நினைவு மூலம் குμயாக இருப்பீர்கள். இந்த மோசமான உலகத்தில் எந்த ஓர் ஆசையும் வைக்காதீர்கள்.
இங்கே நீங்கள் முயற்சி செய்கிறீர்கள்லிஉயிரோடு இருந்து கொண்டே இறந்த நிலையை அடைவதற்காக. அவர்களோ
இறந்த பிறகு சொர்க்கவாசி ஆகி விட்டதாகச் சொல்கின்றனர். நீங்கள் அனைவருக்கும் சொல்கிறீர்கள், நாங்கள்
சொôக்கவாசி ஆவதற்காக தந்தையை நினைவு செய்கிறோம். அவரிடமிருந்து எல்லையற்ற சுகம் கிடைக்கின்றது.
தந்தையை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் ஒரு போதும் அழுது புலம்ப மாட்டீர்கள். மாயாவின் புயல்கள்
வருகின்றன, அதனைப் பற்றிச் சிந்தனை செய்ய வேண்டாம். மாயாவின் புயல்களோ வரத்தான் செய்யும். இது
யுத்தமாகும். சங்கல்பலிவிகல்பங்கள் வருகின்றன என்றால் நேரம் வீணாகி விடுகின்றது. புயலோ கடந்து சென்று
விடும். சதா இருந்து கொண்டிருக்காது. அதிகாலை எழுந்து தந்தையை நினைவு செய்ய வேண்டும்.
தந்தையிடமிருந்து ஆஸ்தி பெற வேண்டும். இந்த ஈடுபாடு உள்ளுக்குள் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
தந்தை வேறு எந்த ஒரு கஷ்டமும் தரவில்லை. தந்தையை நினைவு செய்தால் போதும். மற்ற அனைவரையும்
மறந்து விடுங்கள். இவர்கள் அனைவரும் இறந்து விட்டனர். உங்களுக்குள் இதே உரையாடல் செய்து
கொண்டே இருங்கள். பாபா, இப்போதோ உங்களை மட்டுமே நினைவு செய்வோம். உங்களிடம் இருந்து
சொர்க்கத்தின் ஆஸ்தியைப் பெறுவோம். நேரம் ஒதுக்குங்கள்லிநான் 3லி4 மணிக்கு அவசியம் எழுந்து பாபாவை
நினைவு செய்வேன். சக்கரத்தையும் நினைவு வைக்க வேண்டும். பாபா நமக்கு படைப்பவர் மற்றும் படைப்பு
பற்றிய ஞானம் தந்துள்ளார். நாம் இந்த மனித சிருஷ்டி மரத்தைப் பற்றி அறிவோம். நாம் 21 பிறவிகளை
எப்படி எடுக்கிறோம்? லி இது புத்தியில் உள்ளது. இப்போது மீண்டும் நாம் செல்கிறோம். சொர்க்கத்தில் மீண்டும்
வந்து பாகத்தை நடிப்போம். நாம் ஆத்மா, ஆத்மாவுக்குத் தான் இராஜ்யம் கிடைக்கின்றது. பாபாவை நினைவு
செய்வதன் மூலம் ஆஸ்திக்கு உரிமை உள்ளவர்களாக ஆகிறோம். இது இராஜயோகம். தந்தையை நினைவு
செய்கிறோம். எல்லையற்ற தந்தை மூலம் அநேக தடவை உலகத்தின் எஜமானர் ஆகியிருக்கிறோம். இப்போது
மீண்டும் சொர்க்கவாசி ஆகிறோம் லி ஒரு தந்தையின் நினைவு மூலம். தந்தையை நினைவு செய்வதன் மூலம்
தான் பாவங்கள் பஸ்மமாகும். அதனால் இதை யோக அக்னி எனச் சொல்லப் படுகின்றது. பிராமணர்கள் நீங்கள்
இராஜரிμகள். ரிμகள் எப்போதும் தூய்மையாக இருப்பார்கள். தந்தையை நினைவு செய்து இராஜ்யத்தின்
ஆஸ்தி பெறுகிறோம். இப்போது விகாரத்திற்காக ஆசை வைக்கக் கூடாது. இது மோசமான ஆசையாகும்.
இப்போதோ பரலௌகிகத் தந்தையிடமிருந்து ஆஸ்தி பெற வேண்டும். நோய் இருந்தாலும் கூட நினைவு
செய்ய முடியும். தந்தைக்கும் குழந்தைகள் பிரியமானவர்களாக உள்ளனர். பாபா எத்தனைக் குழந்தைகளுக்குக்
கடிதம் முதலியன எழுத வேண்டி உள்ளது! சிவபாபா எழுதச் செய்கிறார். நீங்களும் கடிதம் எழுதுகிறீர்கள்லிசிவபாபா
கேர் ஆஃப் பிரம்மா. நாம் அனைவரும் சிவபாபாவின் குழந்தைகள், சகோதரர்கள். ஆன்மிகத் தந்தை வந்து
நம்மைப் தூய்மையாக்குகிறார். அதனால் பதீதலிபாவனர் எனச் சொல்லப்படுகிறார். அனைத்து ஆத்மாக்களையும்
தூய்மையாக்குகிறார். யாரையும் விடுவதில்லை. இயற்கையும் கூட தூய்மையாகின்றது. நீங்கள் அறிவீர்கள்,
(4/4)
20.07.2016
சத்யுகத்தில் இயற்கையும் கூட தூய்மையாக இருக்கும். இப்போது சரீரமும் தூய்மை இழந்து விட்டது. அதனால்
தான் கங்கையில் போய் சரீரத்தை சுத்தப்படுத்துவதற்காகச் செல்கின்றனர். அதனால் ஆத்மாவோ
தூய்மையாவதில்லை. இதுவோ யோக அக்னி மூலம் தான் தூய்மையாகும். நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும்
தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம் :
1) இந்தக் கலியுக உலகத்தில் எந்த ஒரு தலைகீழான ஆசையும் வைக்கக் கூடாது. சம்பூர்ண
சதோபிரதானமாக ஆவதற்காக ஈஸ்வரிய வழிமுறைப்படி நடக்க வேண்டும்.
2) தூய்மையாகி வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் லி இந்த ஓர் ஆசை மட்டுமே வைக்க
வேண்டும். அந்த் மதி úஸா கதி. மாயாவின் புயல்களில் நேரத்தை வீணாக்கக் கூடாது.
வரதானம் : சோம்பலின் பலவிதமான வேடத்தில் வருவதை முடித்து விட்டு சதா உற்சாகத்தில்
(மகிழ்ச்சியாக) இருக்கக் கூடிய தீவிர முயற்சியாளர் ஆகுக.
தற்போதைய சமயம் மாயாவின் யுத்தம் சோம்பலின் ரூபத்தில் பலவிதமான வழிகளில் நடைபெறுகின்றது.
இந்த சோம்பலும் கூட விசேஷமான ஒரு விகாரமாகும். இதை முடித்து விடுவதற்காக சதா உற்சாகத்தில்
இருங்கள். எப்போது வருமானம் சம்பாதிப்பதற்கான உற்சாகம் உள்ளதோ, அப்போது சோம்பல் முடிந்து போகும்.
அதனால் ஒரு போதும் உற்சாகத்தைக் குறைத்துவிடக் கூடாது. யோசிக்கிறோம், செய்வோம், செய்யத் தான்
போகிறோம், ஆகி விடும்......... இவையனைத்தும் சோம்பலின் அடையாளங்களாகும். அப்படிப்பட்ட சோம்பல்
உள்ளவர்கள் பலவீனமான சங்கல்பங்களை முடித்து விட்டு இதையே யோசியுங்கள் லி எதைச் செய்ய வேண்டுமோ,
எவ்வளவு செய்ய வேண்டுமோ, அதை இப்போதே செய்ய வேண்டும் லி அப்போது தான் தீவிர முயற்சியாளர்
எனச் சொல்வார்கள்.
சுலோகன் : யாருக்கு எண்ணமும், சொல்வதும் சமமாக உள்ளதோ,
அவர்கள் தான் உண்மையான சேவாதாரி.
(1/4)
21
21.07.2016
காலை முரü ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! நம்முடைய பாபா நம்மை உலகின் எஜமானர்களாக
ஆக்குவதற்காக வந்துள்ளார், நாம் அவர் முன்னால் அமர்ந்திருக்கிறோம் என்ற போதை
உங்களுக்கு இருக்க வேண்டும்.
கேள்வி: கர்மங்களின் ஆழமான கதியை அறிந்தவர்கள் என்ன முயற்சி அவசியமாகச்
செய்வார்கள்?
பதில்: நினைவில் இருப்பதற்கான முயற்சி. ஏனென்றால் நினைவின் மூலம்தான் பழைய கணக்கு
வழக்கு முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும். ஒரு வேளை ஆத்மா பழைய கணக்கு வழக்கு, கர்ம
போகத்தை முடிக்கவில்லை என்றால் தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும், மேலும் பதவியும் கீழானதாகி
விடும், மறுபிறவியும் அப்படிப்பட்டதாகவே இருக்கும் என அவர்களுக்குத் தெரியும்.
ஓம் சாந்தி. பாப்தாதா நேரில் வந்துள்ளார் என்பதை பார்க்கும்போது குழந்தைகளுக்கு எல்லையற்ற
குμயின் அளவு அதிகரிக்கிறது. மேலும் 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சிவபாபா பிரம்மாவின்
உடலில் வந்துள்ளார் என்பதையும் குழந்தைகள் அறிவார்கள். என்ன செய்வதற்காக? குழந்தைகளுக்கு இந்த
போதை ஏறி விட்டுள்ளது. சொர்க்கத்தின் எஜமானர்களாக ஆக்குவதற்காக தந்தை வந்துள்ளார், நம்மை தகுதி
வாய்ந்தவர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார் என அனைத்து குழந்தைகளும் அறிவார்கள். நம்மை தமோபிரதானத்
திலிருந்து சதோபிரதானமாக ஆக்குவதற்கான யுக்திகளை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
யுக்தி மிகவும் சகஜமானதேயாகும். முற்றிலும் சகஜமான நினைவை குழந்தைகளுக்குக் கற்பிக்கிறார். அஞ்ஞான
காலத்தில் ஆண் குழந்தை பிறந்தால் நம்முடைய வாரிசு பிறந்துள்ளது என புரிந்து கொள்கின்றனர். இந்த
சமயத்தில் தந்தை வந்து குழந்தைகளாகிய நம்மை தத்தெடுக்கிறார் என நீங்கள் அறிவீர்கள். நீங்கள்
அனைவருமே சிவபாபாவின் குழந்தைகள் தான். ஆனால் நமக்கு சொல்வதற்காகவும், நாம் அவரிடமிருந்து
(மகா வாக்கியங்களை) கேட்பதற்காகவும் பாபா தன்னுடையவர்களாக எப்படி ஆக்குவார்? சிவபாபா இந்த
பிரம்மாவின் உடல் மூலம் சொல்கிறார் லி நான் உங்களுடைய தந்தையாய் இருக்கிறேன். உங்களை சொர்க்கத்தின்
எஜமானர்களாக ஆக்குகிறேன். தூய்மையற்ற உங்களின் ஆத்மா மட்டும் முக்திக்கோ அல்லது ஜீவன்முக்தி
தாமத்திற்கோ செல்ல முடியாது. நீங்கள் அனைவரும் ஒரு தந்தையின் குழந்தைகள். அனைவரும் தந்தையின்
ஆஸ்தியை எடுக்க வேண்டும். அளவற்ற குழந்தைகள் உள்ளனர், அதிகரித்தபடி இருக்கின்றனர். தத்தெடுத்தபடி
இருக்கிறார். ஓ ஆத்மாக்களே இப்போது நீங்கள் என்னுடைய சந்தானங்கள் (குழந்தைகள்). தன்னை ஆத்மா
என புரிந்து கொள்ளுங்கள், நமக்கு பாபா கிடைத்திருக்கிறார், அவரை அரைக் கல்பம் நினைவு செய்தோம்.
இதனை ஒருபோதும் மறக்காதீர்கள். அரைக் கல்ப காலம் ஆத்மா இந்த சரீரத்தின் மூலம் நினவு செய்து
வந்தது லி ஓ பதித பாவனா, ஓ துக்கத்தை நீக்கி சுகத்தைக் கொடுப்பவரே! ஏனென்றால் இராவண இராஜ்யம்
உள்ளதல்லவா. நாங்கள் மிகவும் சுகம் நிறைந்தவர்களாக இருக்கிறோம், எங்களுக்கு இவ்வளவு கோடிகள்
உள்ளன, இவ்வளவு ஆலைகள் உள்ளன, அலுவலகம் முதலானவை உள்ளன என புரிந்து கொண்டிருக்கும்
இவையனைத்தும் குறுகிய காலத்திற்கானதாகும். இறுதியில் மிகவும் ஐயோ, ஐயோ என அலறத் தொடங்கி
விடுவார்கள். துக்கத்தின் மலைகள் விழும். இவ்வளவு செல்வங்கள் அனைத்தும் அழிந்து போய் விடும்.
தந்தையிடமிருந்து உங்களுக்கு ஒரு வினாடியில் ஆஸ்தி கிடைக்கும். உங்களுக்கு வினாடியில் சொர்க்கத்தின்
இராஜ்யத்தை கொடுக்கிறேன் என சொல்கிறார். இந்த பழைய உலகம் அழிந்து விடும். சண்டைகள் மூளும்.
இயற்கையின் சீற்றங்கள் ஏற்படும். சுத்தப்படுத்த வேண்டியுள்ளது அல்லவா. உங்களுடைய ஆத்மாவும் கூட
இப்போது தூய்மையடைந்து கொண்டிருக்கிறது. பாப்தாதா இருவரும் குழந்தைகள் எவ்வளவு உழைக்கின்றனர்
என புரிந்து கொள்ள முடியும். தந்தையிடமிருந்து ஆஸ்தியை எடுப்பதற்காக முற்றிலும் மிகச் சிறிய முயற்சியைக்
கொடுக்கின்றனர். தன்னை ஆத்மா என புரிந்து கொண்டு தந்தையை நினைவு செய்யுங்கள். அந்த ஆன்மீகத்
தந்தை சரீரமற்றவர், ஆத்மாக்களாகிய நாம் அவரை அழைக்கிறோம் அல்லவா. தூய்மை இழந்துள்ள உங்களுடைய
ஆத்மா எப்படி தூய்மையாகும் என தந்தை கேட்கிறார். பதீத பாவனர் ஒரு தந்தை அல்லவா. நீரோட்டம்
உள்ள நதி தூய்மைபடுத்தக் கூடியது என்றால் உடனே சென்று வர முழுக்குப் போட்டு (ஸ்நானம் செய்து)
வேண்டும். பலர் கங்கா ஸ்நானம் செய்கின்றனர் என்றாலும் கூட ஏன் தூய்மையற்றவர்களாக இருக்கின்றனர்?
இரவும் பகலும் இதையே பாடிக்கொண்டிருக்கின்றனர் லி பதித பாவன சீதா ராம் அதாவது பக்தர்கள் அல்லது
சீதைகள் அனைவரையும் காப்பாற்றக்கூடிய ஒரு ராமன் பரமபிதா பரமாத்மா ஆவார். பதித பாவனர், பதிகளுக்
கெல்லாம் பதி அவரே ஆவார். அவர் வரும்போது வந்து தூய்மையாக ஆக்குவார். ஆக என்னுடைய
(2/4)
21.07.2016
ஸ்ரீமத்படி நீங்கள் நடக்க வேண்டும், வேறு யாருடைய வழியிலும் நடக்காதீர்கள் என இப்போது தந்தை
சொல்கிறார். பக்தியின் மூலம் பகவான் கிடைப்பார் என அவர்கள் சொல்கின்றனர், பக்தியின் மூலம் பகவான்
கிடப்பார் என்றால் பக்தர்களைக் காப்பாற்ற பகவான் வருவார் என ஏன் சொல்கின்றனர்? பக்தர்களுக்கு என்ன,
ஆபத்து வந்துவிட்டதா, அதிலிருந்து காப்பாற்றுவதற்கு? ஏதாவது ஆபத்து ஏற்படும்போது பாதுகாப்பு
கொடுக்கப்படுகிறது. நீங்கள் எவ்வளவு துர்க்கதியை அடைந்து விட்டீர்கள் என தந்தை சொல்கிறார். இது
கொடுமையான நரகம், அனைவரும் துக்கம் மிக்கவர்களாக நோயாளிகளாக உள்ளனர். ஒவ்வொரு வீட்டிலும்
பாருங்கள் என்னென்ன நடக்கிறது என. துக்கமோ துக்கம், ஆகையால் பாபா எங்கள் துக்கத்தை நீக்குங்கள்,
சுகத்தைக் கொடுங்கள் என அழைக்கின்றனர். பாரதத்தில்தான் எப்போதும் சுகம் நிறைந்திருந்தது, இப்போது
துக்கம் உள்ளது. இது பாரதத்தின் விஷயம்தானாகும், மற்ற கண்டங்களே தனிப்பட்டவை. அவை பின்னர்தான்
வருகின்றன. சிலர் 60 பிறவிகள், சிலர் அதை விடவும் குறைந்த பிறவிகளும் எடுக்கின்றனர். தேவதா
தர்மத்தவர்கள் 84 பிறவிகள் எடுக்கின்றனர். ஆக, இந்த கணக்கின்படி அரைக் கல்பத்திற்குப் பின் வரக்கூடியவர்கள்
84 பிறவி எடுப்பதில்லை. பாதியளவு பிறவிகள் எடுக்கின்றனர். அனைவரும் 84 பிறவிகளின் சக்கரத்தைச்
சுற்றுகின்றனர் என்பதல்ல. மனிதர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் சொல்லி விடுகின்றனர். இப்போது
குழந்தைகளாகிய நீங்கள் தந்தையின் மூலம் அழிவற்ற ஞான ரத்தினங்களினால் (புத்தியை) பையை
நிரப்பிக்கொண்டிருக்கிறீர்கள். ரத்தினங்கள் மிகவும் விலை மதிப்பு வாய்ந்தவை ஆகும். தந்தை மிகவும் சகஜமாகப்
புரிய வைக்கிறார். தந்தை சொல்கிறார் லி ஓ பதீத பாவனா ! வந்து எங்களை தூய்மையாக்குங்கள் என நீங்கள்
அழைத்து வந்தீர்கள், இப்போது தந்தை வந்திருக்கிறார். நாம் தூய்மையடைந்தோம் என்றால் சொர்க்கத்தின்
எஜமானர்கள் ஆவோம் என இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். சிவபாபா நம்மை கல்புத்தியிலிருந்து
தங்கபுத்தியாக, கல் போன்றவர்களை தங்கம் போல (அஞ்ஞானிகளை ஞானமுள்ளவர்களாக) ஆக்குவதற்காக
வந்துள்ளார். பக்தி மார்க்கத்தின் சிலைகள் அனைத்தும் கல்லால் ஆக்கப்படுகின்றன. கற்களுடன் மண்டையை
உடைத்துக் கொள்கின்றனர். தந்தை சொல்கிறார் லி நீங்கள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் லாபம் எதுவுமில்லை.
முன்னர் நீங்கள் உங்களை பலி கொடுத்துக் கொண்டிருந்தீர்கள். என்றாலும் என்ன லாபம் இருந்தது?
மீறிப்போனால் தேவியின் காட்சி கிடைக்கும், பிறகு எப்படி இருந்தீர்களோ அப்படியே இருந்து விடுகிறீர்கள்.
பதித பாவன தந்தை சங்கம யுகத்தில் ஒரு முறை வருகிறார். சத்யுகத்தில் பக்தி மார்க்கத்தின் விஷயங்கள்
இருப்பதே இல்லை. கழுத்தை வெட்டிக்கொள்ளுங்கள், இதை அதை செய்யுங்கள் என தந்தை சொல்வதில்லை.
பக்தி மார்க்கத்தில் பல விதமாக என்னென்ன செய்கின்றனர்! முன்னர் தேவிகளுக்கு முன்பாக மனிதர்களை
பலி கொடுத்துக் கொண்டிருந்தனர். நீங்கள் நடத்தை திருந்தியவர்களாக (பூஜைக்கு தகுதியானவர்களாக மாறி)
இருந்த போது தேவதைகளாக இருந்தீர்கள். இப்போது எவ்வளவு கல்புத்தியாகி இருக்கிறீர்கள். உங்களுக்கு
சொர்க்கத்தின் இராஜ்யத்தைக் கொடுத்திருந்தேன். எவ்வளவு தங்கம், வைர வைடூரியத்தாலான மாளிகைகள்
இருந்தன, அளவற்ற செல்வங்கள் இருந்தன. அதனை என்ன செய்தீர்கள்? இப்போது நீங்கள் எவ்வளவு
துக்கம் மிக்கவர்களாக ஆகியுள்ளீர்கள். நீங்கள் உண்மையில் தேவி தேவதா தர்மத்தவர்களாக இருந்தீர்கள்
அல்லவா. இப்போது நீங்கள் ரஜோ, தமோவில் மட்டும் வந்துள்ளீர்கள். நீங்கள் தேவதா தர்மத்தவர்களாக
இருந்தீர்கள், பிறகு தம்மை இந்துக்கள் என ஏன் சொல்லிக் கொள்கிறீர்கள்? மற்ற அனைத்து தர்மத்தவர்களும்
தத்தமது தர்மத்தையே ஏற்றுக் கொள்கின்றனர். தர்மம் ஒன்றுதான் இருக்குமல்லவா. முஸ்லிம்களின் முஸ்லிம்
தர்மமும், கிறிஸ்தவர்களின் கிறிஸ்து தர்மமும் நடந்து வருகிறது. உங்களுக்கு என்ன ஆனது? நீங்கள் மிகவும்
சுகம் மிக்கவர்களாக, தூய்மையானவர்களாக, முழுமையான விகாரமற்றவர்களாக இருந்தீர்கள். இப்போது எவ்வளவு
விகாரிகளாக ஆகி விட்டுள்ளீர்கள். நாம் முழுமையான விகாரமற்றவர்களாக இருந்தோம், பிறகு முழுமையான
விகாரிகளாக எப்படி ஆனோம் என யாருக்கும் தெரியாது. 84 பிறவிகள் எடுத்து சதோவிலிருந்து தமோ
ஆனார்கள், இப்போது முற்றிலும் தமோபிரதானமாக தூய்மையற்றவர்களாக இருக்கின்றனர். சத்யுகத்திலிருந்து
கலியுகம் கண்டிப்பாக வர வேண்டும். அனைத்து தர்மங்களும் சதோலிரஜோலிதமோவில் வரவே வேண்டும்.
வளர்ச்சியை அடைய வேண்டும். நீங்களும் மரத்தில் இருக்கிறீர்கள் அல்லவா. (கல்ப விருட்ச) மரத்தில்
பாருங்கள் லி கடைசியில் பிரம்மா நின்றிருக்கிறார், மரத்தின் உச்சியில் பிரம்மாதான் 84 பிறவிகள் எடுத்துச்
சென்று கடைசியில் நின்றிருக்கிறார். நீங்களும் கூட கீழே பிராமணர்களாக அமர்ந்திருக்கிறீர்கள், பிறகு கடைசியில்
தூய்மையற்ற சூத்திரர்களாக ஆகியுள்ளீர்கள். பிறகு கீழே இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். நீங்களும்
சூத்திரர்களாக இருந்தீர்கள், இப்போது பிராமணர்களாக ஆகியுள்ளீர்கள். இவை மிகவும் புரிந்து கொள்ள வேண்டிய
விஷயங்கள் ஆகும். இப்போது மரத்தில் புரிந்துக் கொள்ளக் கூடிய மிக நல்ல அறிவு மிக்க விசயங்கள்
நிறைந்துள்ளது. இப்போது நீங்கள் இராஜயோகத்தின் தபஸ் செய்து கொண்டிருக்கிறீர்கள், உங்களுடைய நினைவுச்
சின்னம்தான் நின்று கொண்டுள்ளது. இது சைதன்யமான (உயிரோட்டமிக்க) தில்வாடா, அது ஜடம். சத்யுகத்தில்
இது இருக்கவில்லை. இந்த சமயத்தில் ஆத்மாக்களாகிய நீங்கள் தம்முடைய நினைவுச் சின்னத்தைப் பார்க்கிறீர்கள்.
நீங்கள் நடைமுறையில் உண்மையிலும் உண்மையான தில்வாடா கோவிலில் சைதன்யத்தில் அமர்ந்திருக்கிறீர்கள்.
21.07.2016
(3/4)
சொர்க்கத்தின் ஸ்தாபனை நடந்து கொண்டிருக்கிறது. பிறகு சொர்க்கத்தில் வந்துவிட்டால் இந்த கோவில்
முதலான எதுவும் இருக்காது. இந்த மம்மா பாபா மற்றும் குழந்தைகளாகிய நாம் அமர்ந்திருக்கிறோம். அதே
போல இருக்கும் உங்கள் கோவில் இது. பெயரே மதுபன் என வைக்கப்பட்டுள்ளது, சைதன்யமான தில்வாடா
கோவில் ஆகும். பிறகு பக்தி மார்க்கம் தொடங்கும்போது இந்த கோவிலை கட்டுவார்கள். தந்தை உங்களை
மிகவும் செல்வந்தர்களாக ஆக்கியிருந்தார். பிறகு நீங்களே அவருடைய கோவிலைக் கட்டுகிறீர்கள். சிவனின்
கோவில்களை ஒருவர் மட்டும் கட்டுவதில்லை, அனைவருமே கட்டுகின்றனர் லி தம் தகுதிக்கும் சக்திக்கும்
தகுந்தாற்போல.
நாம் பூஜைக்குரியவர்களாக இருந்தோம், பின்னர் துவாபரத்தில் பூஜாரிகள் ஆகி விட்டோம் என நீங்கள்
அறிவீர்கள். உங்களை இவ்வளவு செல்வந்தர்களாக ஆக்கிய சிவபாபாவுக்கு பக்தியில் நீங்கள்தான் அவருடைய
கோவிலைக் கட்டுவீர்கள். இந்த விஷயங்களை இப்போது நீங்கள்தான் அறிகிறீர்கள். ஆக இப்போது முயற்சி
செய்து ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவாக ஆக வேண்டும். சத்யுகத்தில் மஹாராஜாக்கள் என சொல்லப்படுகின்றனர்.
திரேதாவில் ராஜாக்கள் என சொல்லப்படுகின்றனர். பிறகு உலகம் தூய்மையை இழக்கும்போது மஹாராஜாக்களும்,
ராஜாக்களும் கூட தூய்மையற்றவர்களாக ஆகின்றனர். அவர்கள் விகாரமற்ற மஹாராஜாக்களின் கோவில்களைக்
கட்டி பூஜை செய்கின்றனர். முதன் முதலாக சிவனின் கோவிலைக் கட்டுகின்றனர், பிறகு தேவதைகளின்
கோவிலைக் கட்டுகின்றனர், தாமே கோவிலை கட்டி பூஜிக்கின்றனர், 84 பிறவிகள் அனுபவிக்கின்றனர் அல்லவா.
அரை கல்பத்திற்கு (தன்னுடைய நினைவுச் சின்னமாக) நீங்கள் பூஜைக்குரியவர்களாகவும், பிறகு அரைக்
கல்பம் பூஜாரிகளாகவும் ஆகிறீர்கள். பகவானைக் குறித்து மனிதர்கள் அவரே பூஜைக்குரியவராகவும், அவரே
பூஜாரியாகவும் ஆவதாக கூறுகின்றனர். அனைத்தும் அவரே கொடுக்கிறார், அவரே எடுத்தும் கொள்கிறார்.
நல்லது, அவர்தான் கொடுத்தார், பின்னர் எடுத்துக் கொண்டார் என்றால் பிறகு ஏன் கவலை ஏற்படுகிறது?
நீங்களோ டிரஸ்டி ஆகி விட்டீர்கள். பிறகு அழவேண்டிய அவசியம் என்ன? தந்தை அமர்ந்து ஆத்மாக்களுக்குப்
புரிய வைக்கிறார். இப்போது நீங்கள் வரிசைக்கிரமமாக ஆத்ம அபிமானி ஆகிறீர்கள். சிலரோ தந்தையை
நினவு செய்வதே இல்லை. ஆத்ம உணர்வுள்ளவர்களாக இருப்பதே இல்லை. நீங்கள் ஆத்மாக்கள், பரமாத்மா
உங்களுக்கு கற்பிக்கிறார் எனவே இங்கே எவ்வளவு புரிய வைக்கப்படுகிறது. ஆத்மாவில்தான் சம்ஸ்காரங்கள்
உள்ளன. ஆத்மாதான் வக்கீல் முதலானவர்களாக ஆகிறது, ஆத்மா மாஜிஸ்டிரேட் (நீதிபதி) ஆகிறது. நாளை
என்ன ஆகப் போகிறீர்கள்? ஆத்மா தந்தையை நல்ல விதமாக நினைவு செய்து கொண்டே இருந்தது என்றால்
பிறகு அமரலோகத்தில் சென்று பிறவி எடுப்பீர்கள். பிறகு மரணலோகத்தில் அடுத்த பிறவி எடுக்க மாட்டீர்கள்.
ஒருவேளை ஏதாவது கணக்கு வழக்கு மீதமிருந்திருந்தது என்றால் தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும்.
கர்மங்களின் விளைவை அனுபவித்து முடிக்க வேண்டும், பிறகு உயர்ந்த பதவி கிடைக்காது. இந்த கர்மங்களின்
ஆழமான விளைவுகள் குறித்து தந்தைதான் அமர்ந்து புரிய வைக்கிறார். சத்யுகம் சதோபிரதானமானது என்பதை
கூட குழந்தைகள் அறிவார்கள். அனைத்து பொருட்களுமே அங்கே சதோபிரதானமாக இருக்கும். கிருஷ்ணர்
பசுக்களை வளர்த்துக் கொண்டிருந்தார் என சொல்கின்றனர். ராஜாக்கள் பசுக்களை மேய்ப்பார்களா என்ன?
இப்படிப்பட்ட விஷயங்கள் நடக்காது. சத்யுகத்தில் பசுக்கள் கூட மிகவும் முதல் தரமாக இருக்கும், அவற்றை
காமதேனு என சொல்லப்படுகிறது. ஜகதம்பா சரஸ்வதியும் கூட காமதேனு ஆவார். 21 பிறவிகளுக்கு அனைவரின்
மன விருப்பங்களையும் நிறைவேற்றுகிறார். நீங்களும் கூட காமதேனு ஆவீர்கள். அந்தப் பெயரையே பிறகு
அதிகமாக பால் கொடுக்கும் பசுக்களுக்கு வைத்து விட்டனர், ராஜாக்களின் வீடுகளில் மிகவும் முதல் தரமான
பசுக்கள் இருக்கும். இங்கேயே ராஜாக்களிடம் நல்ல நல்ல பசுக்கள் இருக்கும்போது சொர்க்கத்தில் எவ்வளவு
அழகாக இருக்கும். அங்கே துர்நாற்றம் எதுவும் முற்றிலுமாக இருக்காது.
நான் வந்திருக்கிறேன், உங்களை நறுமணம் வீசும் மலர்களாக்கி உடன் அழைத்துச் செல்வேன் என
இப்போது தந்தை குழந்தைகளுக்குச் சொல்கிறார். பதித பாவனா வாருங்கள் என்றுதான் என்னை அழைக்கிறார்கள்.
தூய்மை இல்லாத உலகில் தூய்மையற்ற சரீரத்தில் வாருங்கள். இவர் தூய்மையை இழந்தவர் அவர் தூய்மையான
ஃபரிஸ்தா. ஒப்பிட்டுக் காட்டுகிறார். நீங்களும் கூட தூய்மையற்றவரிலிருந்து இப்படி தூய்மையான ஃபரிஸ்தாவாக
ஆவீர்கள். சத்யுகத்தின் தேவதைகளின் மூர்த்திகள் என சொல்கிறோம். ஃபரிஸ்தாக்கள் சூட்சுமவதனவாசிகள்
ஆவர். தந்தை எவ்வளவு சகஜமான படிப்பை சொல்லிக் கொடுக்கிறார். இங்கே வரும்போது வெளியில் உள்ள
எந்த ஒரு நண்பர்கள், உறவினர்கள், வீடு வாசல், வேலை தொழில் முதலான நினைவுகளும் வரக்கூடாது.
தந்தையின் முன்பாக வந்திருக்கிறீர்கள் அல்லவா ! இங்கே வந்ததே நினைவின் மூலம் வருமானத்தை
சேமிப்பதற்காக எனும்போது அதிலேயே ஈடுபட்டிருக்க வேண்டும். நல்லது!
21.07.2016
(4/4)
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு
தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்
1. தண்டனைகளிலிருந்து விடுபடுவதற்காக பழைய அனைத்து கணக்கு வழக்குகளையும்
முடிக்க வேண்டும். டிரஸ்டிகள் ஆகி அனைத்தையும் பராமரிக்க வேண்டும். எந்த விஷயத்தைக்
குறித்தும் கவலைப்படக் கூடாது. ஆத்ம அபிமானி ஆக வேண்டும்.
2. இது வருமானத்தை சேமிக்கக்கூடிய நேரமாகும், இதில் வீடு வாசல், வேலை தொழில் முதலான
எந்த நினைவும் வரக்கூடாது. ஃபரிஸ்தா ஆவதற்காக தந்தையின் நினைவில் இருக்கக்கூடிய
முழுமையிலும் முழுமையான முயற்சி செய்ய வேண்டும்.
வரதானம்: முழுமையான சமர்ப்பணத்தின் விதியின் மூலம் அனைத்து குணங்களிலும்
நிறைந்தவர் ஆகக்கூடிய முயற்சியில் எப்போதும் வெற்றியாளர் ஆகுக !
யாருடைய எண்ணத்திலும் கூட தேக உணர்வு இல்லையோ அவர்கள் முழுமையாக சமர்ப்பணம்
(தந்தையிடம் பலி) ஆனவர்கள் என சொல்லப்படுவர். தனது தேகத்தின் உணர்வைக் கூட அர்ப்பணம்
செய்துவிடுவது, நான் இன்னார் லி இந்த எண்ணத்தையும் கூட அர்ப்பணம் செய்து சம்பூரண சமர்ப்பணம்
ஆகிறவர்கள் அனைத்து குணங்களிலும் நிறைந்தவர்களாக ஆகின்றனர். அவர்களுக்குள் எந்த ஒரு குணத்தின்
குறைபாடும் இருக்காது. யார் அனைத்தும் சமர்ப்பணம் செய்து அனைத்து குணங்களிலும் நிறைந்தவராக
ஆவதற்காக அதாவது சம்பூரணம் அடைவதற்காக லட்சியம் வைக்கின்றனரோ அந்த முயற்சியாளர்களுக்கு
பாப்தாதா எப்போதும் வெற்றியாளர் ஆவீர்களாக என்ற வரதானத்தைக் கொடுக்கிறார்.
சுலோகன் : மனதை தன் வசத்தில் வைக்கக் கூடியவர்கள் தான்
மன்மனாபவ நிலையில் இருக்க முடியும்.
(1/4)
22
22.07.2016
காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா , மதுபன்
இனிமையான குழந்தைகளே! யாசிப்பவராக இளவரசர் ஆவதற்கு ஆதாரம் தூய்மையாகும்,
தூய்மையாவதன் மூலம் தான் தூய உலகின் இராஜ்யம் கிடைக்கும்.
கேள்வி: இந்த ஆன்மீகப் பள்ளியில் எந்த ஒரு பாடம் உங்களை மனிதனிலிருந்து தேவதையாக
ஆக்கி விடுகிறது?
பதில்: நீங்கள் இந்த ஆன்மீகப் பள்ளியில் நான் சரீரமல்ல, ஆத்மா என்ற பாடத்தை தினமும் படிக்கிறீர்கள்.
ஆத்ம அபிமானி ஆவதன் மூலம் தான் நீங்கள் மனிதனிலிருந்து தேவதையாக, நரனிலிருந்து நாராயணனாக
ஆக முடியும். இந்த நேரத்தில் அனைத்து மனிதர்களும் பூஜாரியாக அதாவது தூய்மை இழந்தவர்களாக, தேக
அபிமானியாக இருக்கின்றனர், ஆகையால் தூய்மையானவர்களாக ஆக்கக்கூடிய தந்தையை அழைத்துக்
கொண்டிருக்கின்றனர்.
பாட்டு: ஆகாய சிம்மாசனத்தை விட்டு .......
ஓம் சாந்தி. ஓம் சாந்தி என்று கூறியது யார்? என்பதை குழந்தைகள் அறிவீர்கள். எந்த குழந்தை?
ஓம்சாந்தி என்று யாருடைய ஆத்மா கூறியது? என்பதை குழந்தைகள் அறிவீர்கள். பரம்பிதா பரமாத்மா
கூறியிருக்கிறார். மனித ஆத்மாக்கள் கூறவில்லை என்பதை குழந்தைகள் அறிவீர்கள், இதை பரம்பிதா பரமாத்மா
சிவன் கூறியிருக்கின்றார். அவர் அனைவருக்கும் தந்தையானவர், உயர்ந்ததிலும் உயர்ந்தவர். பாட்டில் கேட்டீர்கள்,
இப்போது பாரதத்தில் மாயையின் நிழல் அதிகமாகப் பரவியிருக்கிறது. மிகவும் தூய்மையற்றவர்களாக ஆகி
விட்டனர். அதனால் தான் ஹே பதீத பாவனனே! மீண்டும் தூய்மை ஆக்குவதற்கு வாருங்கள் என்று
அழைக்கின்றனர். ஆத்மா தான் தனது தந்தையை அழைக்கிறது, அவர் தான் பகவான் என்று கூறப்படுகிறார்.
அவரைத் தான் பதீத பாவன் (தூய்மைபடுத்துபவர்) என்று கூறுகின்றனர். ஒரே ஒருவருக்குத் தான் மகிமை
பாடப்படுகிறது. அவர் அனைத்து ஆத்மாக்களுக்கும் எல்லையற்ற தந்தையாவார். இங்கு அனைவரும் தூய்மை
இழந்தவர்களாகிவிட்டனர் அதனால் தான் ஹே பரம்பிதா பரமாத்மா என்று அழைக்கின்றனர். அவரே ஞானக்
கடலாகவும் இருக்கிறார், பதீத பாவனாகவும் இருக்கிறார். அவரும் தந்தையாகவும் இருக்கிறார், ஆசிரியராகவும்
இருக்கிறார், ஏனெனில் ஞானக் கடலாகவும் இருக்கிறார், உலகின் சர்வ சக்திவானாகவும் இருக்கிறார். அனைத்து
வேதம், சாஸ்திரம், கிரந்தங்களையும் அறிந்தவராகவும் இருக்கிறார். அவரைத் தான் ஞானம் நிறைந்தவர் என்று
கூறுகின்றனர். ஆக இந்த நேரத்தில் அனைவரும் பரலௌகீகத் தந்தையை அழைக்கின்றனர், ஏனெனில்
அனைவரும் துக்கமானவர்களாக இருக்கின்றனர். பரம்பிதா என்று கூறுகின்றனர். அவருக்கு பெயரும் இருக்க
வேண்டும் அல்லவா! அவருக்கு சிவபாபா என்று பெயர் சூடப்பட்டிருக்கிறது. அவரே உயர்ந்ததிலும் உயர்ந்த
ஞானக் கடலானவர், சுகக் கடலானவர், அமைதிக் கடலானவர் ஆவார். மனித ஆத்மாக்கள் தான் தனது
தந்தையை இவ்வாறு மகிமை செய்கிறது. உயர்ந்ததிலும் உயர்ந்த ஆத்மா யார்? பரம்பிதா பரமாத்மா ஆவார்.
அவர் பரம் ஆக இருக்கிறார், பதீத மனிதர்களை அவரை நினைவு செய்கின்றனர். சத்யுகத்தில் பாரதம்
தூய்மையாக இருந்த போது தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது, அப்போது தூய்மையற்றவர்கள்
யாருமில்லை. இது தமோ பிரதான உலகமாகும், அதாவது உலகிலிருக்கும் மனிதர்கள் அனைவரும் பாவ
ஆத்மாக்கள் ஆவர். இதே பாரதம் தூய்மையாக இருந்தது, இதே பாரதம் தூய்மை இழந்துவிட்டதாகிவிட்டது.
இங்கு கலியுகத்தில் அனைவரும் தூய்மையற்றவர்கள். ஞானக் கடலான, பதீத பாவன் பரம்பிதா பரமாத்மா
பரந்தாமத்திலிருந்து வந்து பிரம்மாவின் மூலம் நமக்கு படிப்பு கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
அவசியம் அவருக்கு சரீரம் வேண்டும் அல்லவா! இந்த விசயங்கள் எந்த சாஸ்திரங்களிலும் கிடையாது.
அனைத்தையும் அறிந்த அதிகாரம் படைத்தவராக இருக்கக் கூடியவர் ஞானக் கடலானவர் அவர் தான்
விஷ்ணுவின் நாபியிலிருந்து பிரம்மா வெளிப்பட்டார் என்ற சித்திரம் பாரதத்தில் காண்பிக்கின்றனர், அவரது
கையில் சாஸ்திரங்களைக் கொடுத்து விட்டனர். இப்போது விஷ்ணு எந்த சாஸ்திரங்களின் சாரத்தையும் கூறுவது
கிடையாது. பரம்பிதா பரமாத்மா, ஞானக் கடலானவர் பிரம்மாவின் மூலம் அனைத்து சாஸ்திரங்களின் சாரத்தைப்
புரிய வைக்கின்றார். பிரம்மா, விஷ்ணு, சங்கரையும் அவர் படைத்தவர் ஆவார். பிரம்மாவை அல்லது விஷ்ணுவை
ஞானக் கடல் என்று கூறுவது கிடையாது. சங்கருக்கான விசயத்தையே விட்டு விடுங்கள். இப்போது ஞானக்
கடல் யார்? உயர்ந்ததிலும் உயர்ந்த, நிராகார பரமாத்மா தான் பதீத பாவன் ஆவார். இந்த மகிமை அந்த ஒரு
பரம்பிதா பரமாத்மாவினுடையது ஆகும். இங்கும் ஆத்மாவிற்குத் தான் மகிமை ஏற்படுகிறது. ஆத்மா தான்
சரீரத்தின் மூலம் நான் ஐனாதிபதி (குடியரசுத் தலைவர்) நான் வக்கீல், நான் இந்த மந்திரியாக இருக்கிறேன்
என்று கூறுகிறது. ஆத்மா தான் பதவி அடைகிறது. நான் ஒரு சரீரத்தை விடுத்து மற்றொன்றை எடுக்கிறேன்
என்று சரீரத்தின் மூலம் ஆத்மா கூறுகிறது. இந்த நேரத்தில் தந்தை வந்து கூறுகின்றார் லி குழந்தைகளே!
(2/4)
22.07.2016
ஆத்ம அபிமானி ஆகுங்கள். இந்த பாடத்தை கற்பிக்க உங்களது தந்தையாகிய நான் வந்திருக்கிறேன்.
மனிதனிலிருந்து தேவதை, நரனிலிருந்து நாராயணன், நாரியிலிருந்து லெட்சுமி ஆவதற்கான பள்ளிக் கூடம்
இதுவாகும். ஹே பரம்பிதா பரமாத்மா ........ என்று கூறி தந்தையை அனைவரும் அழைக்கின்றனர். இப்போது
நிராகார உலகிலிருந்து சாகார உலகிற்கு வாருங்கள். ரூபத்தை (உருவத்தை) மாற்றிக் கொள்ளுங்கள். நிராகார
ஆத்மாக்களாகிய நீங்கள் சரீரத்தில் வரும் போது கர்பத்தில் வருகிறீர்கள், மறுபிறவி எடுக்கிறீர்கள். நீங்கள் 84
பிறவிகள் கர்பத்தில் எடுத்தீர்கள் என்று தந்தை புரிய வைக்கின்றார். ஒரு சரீரத்தை விடுத்து பிறகு கர்பத்தில்
சென்று விடுவீர்கள். இவ்வாறு 84 பிறவிகள் எடுக்கிறீர்கள். நான் கர்பத்தில் வருவது கிடையாது. பாரதவாசிகள்
உண்மையில் தேவி தேவதா தர்மத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். பிறகு ஏணியில் இறங்கி வந்தீர்கள், சத்ரிய
வர்ணத்தில், பிறகு வைஷ்ய, சூத்ர வர்ணத்தில் கலைகள் குறைந்து கொண்டே வந்தது. பாரதம் 16 கலைகள்
நிறைந்ததாக இருந்தது, பிறகு 14 கலைகள் உடையதாக ஆனது. பாரதவாசிகள் தங்களது பிறவிகளைப் பற்றி
அறியவில்லை. 84 பிறவிகள் பாரதவாசிகள் தான் எடுக்கின்றனர். வேறு எந்த தர்மத்தினர்களும் 84 பிறவிகள்
எடுப்பது கிடையாது. நீங்கள் சுயதரிசன சக்கரதாரிகளாக ஆகியிருக்கிறீர்கள், இது ஞான விசயமாகும். சுவதரிசன
சக்கரதாரி ஆவதன் மூலம் நீங்கள் சொர்க்கத்தில் சக்கரவர்த்தி மகாராஜா ஆகிறீர்கள். நாம் இங்கு வந்திருப்பதே
தூய்மை இல்லாதவரிலிருந்து தூய்மையானவர்களாக ஆவதற்காக என்பதை நீங்கள் நன்றாக அறிந்திருக்கிறீர்கள்.
இதுவோ அசுத்தமான உலகமாகும். பதீத பாவன், அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல் ஒரே ஒரு
தந்தை ஆவார். அனைவரும் அவரைத் தான் அழைக்கின்றனர். தந்தையை நினைவு செய்கின்றனரே தவிர
கிருஷ்ணரை அல்ல. கிருஷ்ணர் கீதையைக் கூறவில்லை. கீதை அனைத்து சாஸ்திரங்களுக்கும் தலையாயதாக
விளங்குகிறது. பாரதத்தின் கீதை எந்த தர்மத்தைச் சார்ந்தது? ஆதி சநாதன தேவி தேவதா தர்மத்தைச்
சார்ந்தது. கீதையைக் கூறியது யார்? இராஜயோகம் கற்பித்தது யார்? பரம்பிதா பரமாத்மா, பதீத பாவன் தந்தை
ஆவார். ஆக நிராகாரமாக இருக்கும் உங்களது ஆத்மா இப்போது சாகார சரீரத்தை தாரணை செய்திருக்கிறது.
சாகார மனிதர்களை ஒருபோதும் பகவான் என்று கூறுவது கிடையாது. சத்யுகத்தில் இருந்த லெட்சுமி
நாராயணனையும் பகவான் என்று கூறுவது கிடையாது. இவ்வாறு பட்டம் கொடுக்கப்படுகிறது. நியமப்படி
பகவான் ஒரே ஒருவர் தான். படைப்பவர் கூட ஒரே ஒருவர் தான். மற்றபடி அவர்கள் தேவதைகள் ஆவர்.
5 ஆயிரம் ஆண்டிற்கான விசயமாகும். இந்த லெட்சுமி நாராயணனின் இராஜ்யம் இருந்தது, இவர்கள் மகாராஜா,
மகாராணி என்று கூறப்பட்டனர். பகவான் மகாராஜாவாக ஆவது கிடையாது. அவர் தந்தையாகவே இருக்கிறார்,
அவர் வந்து பாரதவாசிகளை இவ்வாறு தேவி தேவதைகளாக ஆக்குகின்றார். இப்போது தேவி தேவதா
தர்மத்தினர் யாரும் கிடையாது. இது இராவண வம்சம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இராவண இராஜ்யமாக
இருக்கிறது. இராவணனை ஆண்டிற்கு ஆண்டு எரித்துக் கொண்டே இருக்கின்றனர், ஏனெனில் இவர் பழைய
எதிரி ஆவார். ஆனால் இதை பாரதவாசிகள் அறியவில்லை. இராவணன் யார்? என்பது சாஸ்திரங்களிலும்
வர்ணிக்கப்படவில்லை. இராவணனுக்கு ஏன் 10 தலைகள் காண்பிக்கப்படுகிறது? இந்த விசயங்களை நல்ல
முறையில் புரிந்து கொள்ள வேண்டும். மனிதர்கள் முற்றிலும் கல் புத்தி உடையவர்களாக இருக்கின்றனர்.
தங்கபுத்தி என்று இந்த லெட்சுமி நாராயணனை கூறலாம். பாரஸ்நாத், பாரஸ்நாதினியின் இராஜ்யம் இருந்தது.
அரசர் எப்படியோ மக்கள் அப்படியே. பாரதம் போன்ற சுகதாமம் வேறு எந்த கண்டமும் கிடையாது. எப்போது
பாரதம் சொர்க்கமாக இருந்ததோ, அப்போது எந்த நோய், துக்கம் போன்றவை இல்லை. முழு சுகம் இருந்தது.
ஈஸ்வரனின் மகிமை அளவிட முடியாது என்று பாடப்படுகிறது. அதே போன்று பாரதத்தின் மகிமையும்
அளவிட முடியாதது. அனைத்திற்கும் ஆதாரம் தூய்மையில் தான் இருக்கிறது. அவ்வாறு தான் அழைக்கவும்
செய்கின்றனர், அனைவரும் தூய்மை இல்லாதவர்களாக இருக்கின்றனர். அமைதியில்லை, சுகம் இல்லை.
பாரதவாசிகளாகிய நாம் சூரியவம்ச தேவி தேவதைகளாக இருந்தோம், பிறகு சிறிது சிறிதாக தூய்மையை
இழந்து விட்டோம் என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொண்டீர்கள். இது மரண உலகம் என்று கூறப்படுகிறது.
இது எரிந்து சாம்பல் ஆகிவிடும். இது சிவ ஞான யக்ஞமாகும், ருத்ர ஞான யக்ஞம் என்றும் கூறுகின்றனர்.
மனிதர்கள் பல பெயர்களை வைத்து விடுகின்றனர். எங்கெல்லாம் சிவனின் மூர்த்தியைப் பார்க்கிறார்களோ வித
விதமான பல பெயர்களை வைத்து விடுகின்றனர். ஒருவருக்கு மட்டுமே பல பெயர்களின் கோயில் கட்டுகின்றனர்.
ஆக தந்தை அமர்ந்து புரிய வைக்கின்றார் லி ஞானம், பக்தி, வைராக்கியம். இப்போது பக்தி முடிவடைகிறது,
உங்களுக்கு பக்தியின் மீது வைராக்கியம் ஏற்படுகிறது. அதாவது இந்த பழைய உலகின் மீது வைராக்கியம்
ஏற்படுகிறது. இந்த பழைய உலகம் விநாசம் ஆகிவிடும்.
பாபா, நாங்கள் தூய்மையற்றதிலிருந்து தூய்மையானவர்களாக ஆவது எப்படி? என்று குழந்தைகள்
கேட்கின்றனர். யாராவது புதிதாக வருகின்றனர் எனில் அனுமதிக்கப்படுவது கிடையாது. கல்லூரியில் யாராவது
புதிதாக சென்று அமர்ந்தால் புரியாது அல்லவா! மேலும் மனிதனிலிருந்து தேவதையாக ஆவது எப்படி?
என்பது யாருக்கும் தெரியாது. தூய்மையில்லாதிருக்கும் மனிதர்கள் தான் தூய்மையற்றவர்களாக ஆகின்றனர்.
இந்த நேரத்தில் பாரதம் பிச்சைக்கார நாடாக இருக்கிறது. சத்யுகத்தில் பாரதம் இளவரசர் போன்று இருந்தது.
(3/4)
22.07.2016
ஸ்ரீகிருஷ்ணர் சத்யுகத்தின் முதல் இளவரசராக இருந்தார். அவரிடத்தில் அனைத்து குணங்களும் இருந்தன.
லெட்சுமி நாராயணனின் இராஜ்யம் என்று தான் கூறுவர். கிருஷ்ணர் இளவரசராக இருந்தார், இராதை இளவரசியாக
இருந்தார். இளவரசராகிய கிருஷ்ணருக்குத் தான் அனைத்து குணங்கள் நிறைந்தவர், 16 கலைகளிலும்
முழுமையானவர் ....... என்று மகிமை பாடப்படுகிறது. அவர் எந்த கீதையையும் கூறவில்லை. அவர் சத்யுகத்தின்
இளவரசர் ஆவார். தூய்மையற்ற மனிதர்களை தூய்மைபடுத்துவதற்காக அவர் கீதை கூறினார் என்பது இருக்கவே
முடியாது. இவை அனைத்தும் பக்தி மார்க்கத்தின் சாஸ்திரங்களாகும். சாஸ்திரங்களுக்கு எவ்வளவு மகிமைகள்
இருக்கின்றன! சத்யுகத்தில் எந்த சாஸ்திரமோ, பக்தி மார்க்கத்தின் சித்திரங்களோ இருக்காது. அங்கு ஞானத்தின்
பலன் 21 பிறவிகளுக்கு இருக்கும். மீண்டும் சத்யுகத்தின் பாக்கியத்தை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். பாரதவாசிகள்
சத்யுகத்தில் 5 ஆயிரம் ஆண்டிற்கு முன்பு உலகிற்கு எஜமானர்களாக இருந்தனர். வேறு எந்த பிரிவினைகளும்
கிடையாது. 5 ஆயிரம் ஆண்டிற்கான விசயமாகும். இப்போது கலியுகத்தின் இறுதி அல்லவா! விநாசம் எதிரில்
இருக்கிறது. பகவான் இந்த ஞான யக்ஞம் படைத்திருக்கின்றார். பதீத கலியுகத்தை பாவன சத்யுகமாக ஆக்குவதற்கு,
ஆக அவசியம் தூய்மையற்ற உலகம் விநாசம் ஆகிவிடும். பிரம்மாவின் மூலம் ஆதி சநாதன தேவி தேவதா
தர்மத்தின் ஸ்தாபனை என்று பாடப்பட்டிருக்கிறது, அதை இப்போது சிவபாபா பிரம்மாவின் மூலம் செய்விக்கின்றார்.
அவர் (பிரம்மா) பிரஜாபிதா ஆவார், அனைவரும் அவரது வம்சத்தினர்கள். பிரம்மாவின் மூலம் தான் சொர்க்கம்
ஸ்தாபனை ஆகியிருந்தது. இன்றிலிருந்து 5 ஆயிரம் ஆண்டிற்கு முன்பும் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்க
நான் சங்கமத்தில் வந்திருந்தேன். கிருஷ்ணர் அல்ல, நான் தான் வந்திருந்தேன். கிருஷ்ணர் அசுத்தமான
உலகில் வர முடியாது. தந்தை தான் வருகின்றார். அவர் தான் அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல்
ஆவார். மனிதர்கள் மனிதர்களுக்கு சத்கதி கொடுக்க முடியாது. அனைவரும் நினைவு செய்வதும் ஒரே
ஒருவரைத் தான். பரம்பிதா பரமாத்மா எங்கு இருக்கின்றார்? பரந்தாமத்தில் இருக்கின்றார் என்பதை குழந்தை
களாகிய நீங்கள் அறிவீர்கள். அது பிரம்ம மகா தத்துவமாகும். அங்கு ஆத்மாக்கள் மகாத்மாக்களைப் போன்று
தூய்மையாக இருக்கின்றன. இங்கும் மகான் ஆத்மா, பதீத ஆத்மா என்று கூறுகின்றனர் அல்லவா! உண்மையில்
இங்கு மகான் ஆத்மா ஒருவரும் கிடையாது. ஆத்மா தான் தூய்மையாக, சதோ பிரதானமாக ஆக வேண்டும்.
ஞான, யோகத்தினால் அன்றி தண்ணீரினால் அல்ல. ஆத்மா தான் தூய்மை இல்லாததாகியிருக்கிறது. ஆத்மாவில்
தான் கறைகள் படிந்திருக்கிறது. ஆத்மா தான் தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பாக ஆகிறது. இப்போது
தூய்மை இல்லாமல் இருக்கின்ற ஆத்மாக்களை யார் தூய்மையாக்குவது? பரம்பிதா பரமாத்மாவைத் தவிர
வேறு யாரும் ஆக்க முடியாது. என் ஒருவனை நினைவு செய்யுங்கள், உங்களது பாவங்கள் அழிந்து விடும்
என்று தந்தையே வந்து புரிய வைக்கின்றார். எந்த அளவிற்கு நினைவு செய்வீர்களோ அந்த அளவிற்கு
தூய்மையற்றதிலிருந்து தூய்மையாக ஆவீர்கள். இதில் தான் உழைப்பு இருக்கிறது. முழு ஞானமும் புத்தியில்
இருக்கிறது. இந்த சக்கரம் எவ்வாறு சுற்றுகிறது? நாம் 84 பிறவிகள் எவ்வாறு எடுக்கிறோம்? சத்யுகத்தில்
எவ்வளவு காலம் இராஜ்யம் நடைபெறுகிறது? பிறகு இராவணன் எப்படி வருகிறான்? இராவணன் யார்?
என்பதும் யாருக்கும் தெரியாது. எப்போதிலிருந்து இராவணனை எரித்து வருகிறோம்? என்பதும் யாருக்கும்
தெரியாது. ஒவ்வொரு ஆண்டும் எரிக்கின்றனர். சத்யுகத்தில் எரிக்க மாட்டீர்கள். இப்போதிருப்பதோ இராவண
இராஜ்யமாகும். இராம இராஜ்யத்தை யாரும் ஸ்தாபனை செய்ய முடியாது. இது தந்தையின் காரியமாகும்.
தூய்மை இல்லாத மனிதர்களால் செய்ய முடியாது. அவையனைத்தும் விநாசம் ஆகிவிடும். தூய்மையற்ற
உலகமே விநாசம் ஆக வேண்டும். ஹே பதீத பாவனனே வாருங்கள் என்று சத்யுகத்தில் ஒருவரும் கூறமாட்டார்
கள். அது தூய்மையான உலகம் அல்லவா! இந்த லெட்சுமி நாராயணனை இவ்வாறு சொர்கத்திற்கு எஜமானர்களாக
ஆக்கியது யார்? என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள். பிறகு அவர்கள் 84 பிறவிகள் எப்படி எடுத்தனர்?
ஆதி சநாதன தேவி தேவதா தர்மத்தினர் மட்டுமே 84 பிறவிகள் எடுக்கின்றனர். அவர்களே இந்த நேரத்தில்
சூத்ர வம்சத்தினர்களாக ஆகியிருக்கின்றனர். இப்போது மீண்டும் பிராமண வம்சத்தினர்களாக ஆகியிருக்கின்றனர்.
இப்போது நீங்கள் பிராமணர்கள் குடுமி போன்று இருக்கிறீர்கள். இது உயர்ந்ததிலும் உயர்ந்த குடுமியாகும்.
பிரம்மா வாய்வழி வந்த பிராமண குல பூஷணர்கள். இப்போது நீங்கள் சிவபாபாவின் குழந்தையாகவும்
இருக்கிறீர்கள். பேரன் பேத்திகளாகவும் இருக்கிறீர்கள். சிவவம்சி பிறகு பிரம்மா குமார்கள், குமாரிகள். தாத்தாவிட
மிருந்து ஆஸ்தி கிடைக்கிறது. என்னை நிரந்தரமாக நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார்.
தூய்மை ஆகுங்கள், நீங்கள் என் கூடவே முக்திதாமத்திற்கு வந்து விடுவீர்கள். யார் கல்பத்திற்கு முன்பு
புரிந்திருந்தார்களோ அவர்கள் தான் இந்த விசயங்களைப் புரிந்து கொள்ள முடியும். அவர்கள் ஆயிரக்கணக்கானவர்
கள் உள்ளனர். எத்தனை பி.கு, இருக்கின்றனர்? என்று சிலர் கேட்கின்றனர். ஆயிரக்கணக்கானவர்கள்
இருக்கின்றனர் என்று கூறுங்கள். இந்த தெய்வீக மரம் வளர்ச்சி அடைந்து கொண்டே செல்கிறது. இப்போது
மீண்டும் ஆதி சநாதன தேவி தேவதா தர்மத்தின் நாற்று நடப்பட்டுக் கொண்டிருக்கிறது, ஏனெனில் தற்சமயம்
தேவதா தர்மம் கிடையாது. இப்போது தங்களை இந்து என்று கூறிக் கொள்கின்றனர். மற்ற தர்மங்களில்
மாற்றமாகி விட்டனர். மீண்டும் அனைவரும் வெளிப்படுவார்கள், வந்து தந்தையிடம் ஆஸ்தி அடைவார்கள்.
(4/4)
22.07.2016
எல்லையற்ற தந்தையிடத்தில் எல்லையற்ற சுகத்தின் ஆஸ்தி அடைவதற்காக அதாவது மனிதனிலிருந்து
தேவதா ஆவதற்காக நீங்கள் வந்திருக்கிறீர்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய்
தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீக
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) தூய்மை இழந்தவரிலிருந்து தூய்மை ஆவதற்காக ஞானம் மற்றும் யோகாவில் (நினைவில்)
உறுதியானவர்களாக ஆக வேண்டும். ஆத்மாவிலிருந்து படிந்திருக்கும் கறையை
நினைவிற்கான முயற்சியின் மூலம் நீக்க வேண்டும்.
2) நாம் பிரம்மா வாய்வம்சாளி பிராமணர்கள், குடுமி போன்றவர்கள் என்ற போதையில் இருக்க
வேண்டும். பிராமணர்கள் தான் ஆஸ்திக்கு அதிகாரிகள், ஏனெனில் சிவபாபாவின் பேரன்களாக
இருக்கிறோம்.
வரதானம்: தனது சம்பூர்ண நிலையின் மூலம் அனைத்து வகையான அடிமைத்தனத்தையும்
சமாப்தி செய்யக் கூடிய இயற்கையை வென்றவர் ஆகுக.
எப்போது நீங்கள் தனது சம்பூர்ண நிலையில் நிலைத்திருப்பீர்களோ அப்போது இயற்கையையும் வென்று
விடுவீர்கள் அதாவது அதிகாரி என்ற அனுபவம் ஏற்படும். சம்பூர்ண நிலையில் எந்த வகையிலும் அடிமைத்தனம்
இருக்காது. ஆனால் அப்படிப்பட்ட சம்பூர்ண நிலை உருவாக்குவதற்கு மூன்று விசயங்கள் சேர்ந்தே இருக்க
வேண்டும் லி 1) ஆன்மீகம், 2) ஆன்மீக போதை, 3) இரக்க குணம். எப்போது இந்த மூன்றும் வெளிப்படையான
ரூபத்தில், ஸ்திதியில், முகத்தில் அல்லது செயலில் தென்படுகிறதோ அப்போது தான் அதிகாரி அல்லது
இயற்கையை வென்ற ஆத்மா என்று கூற முடியும்.
சுலோகன்: ஸ்ரீமத் என்ற கடிவாளம் உறுதியாக இருந்தால்
மனம் என்ற குதிரை இஷ்டம் போல் ஓடாது.
(1/4)
23
23.07.2016
காலை முரளி ஓம்சாந்தி பாப்தாதா , மதுபன்
இனிமையான குழந்தைகளே! இதுவரை நீங்கள் கேட்ட கேள்விப்பட்ட விஷயங்கள்படி நடந்து
வந்தீர்கள், இப்பொழுது பாபா உங்களுக்கு நேரடியாக வந்து ஞானம் கொடுத்து தனக்கு சமமாக
ஞானம் நிறைந்தவர்களாக ஆக்குகின்றார்.
கேள்வி: நல்ல புருஷார்த்தி குழந்தைகளின் அடையாளம் அதாவது அவர்களின் நிலையின் புகழ்
என்ன?
பதில்: நல்ல புருஷார்த்தி குழந்தைகளேலி தாய்லிதந்தையை முழுமையாக கடைப்பிடிப்பார். தன்னுடைய
வாழ்க்கையின் மீது இரக்கப்படுவார். முழுமையாக கவனம் செலுத்துவார். கொஞ்சமாவது நேரம் ஒதுக்கி
பாபாவை அவசியம் நினைவு செய்வார். அவர்கள் நிலையின் புகழ் தான்லி ஆடாத, அசையாத, நிலையானவர்
என்பது. அவர்கள் தான் மஹாவீரர் என்று அழைக்கப்படுகின்றனர்.
பாட்டு:லி போலாநாத் தனிப்பட்டவர்
ஓம்சாந்தி. பக்திமார்க்க உலகத்தில் பாட மட்டும் செய்கின்றார்கள். பக்திமார்கத்தில் நாம் கூட பாடினோம்
என்று குழந்தைகள் இப்பொழுது புரிந்து கொண்டீர்கள். இப்பொழுது அதே போலாநாத் நம் முன்னால் இருக்கின்றார்,
போலாநாத் என்ற வார்த்தை பக்தி மார்க்கத்தினுடையது. ஞானமார்கத்தில் அவரை சிவபாபா என்கின்றோம்.
நீங்கள் புரிந்து கொண்டீர்கள்லி அனாதியான ஆக்கப்பட்ட நாடகம்லி நாடகத் திட்டப்படி சங்கமயுகத்தில் பாபா
வந்து நம்மூலமாக முயற்சி செய்விக்கின்றார். கல்பலிகல்பமாக புருஷார்தம் செய்விகின்றார். எத்தனை காலம்
குழந்தைகள் நீங்கள் பக்தி செய்தீர்கள். இதைக் கூட தெளிவாக சொல்கின்றார். யார் முதன்லிமுதலில் பக்தி
செய்தார்களோ அவர்களே வந்து ஞானம் கேட்பார்கள். மேலும் அவர்களே சூர்யவம்சி ஆகின்றார்கள். சத்திய
யுகத்தில் இலட்சுமிலிநாராயணன் மட்டும் வருவதில்லை. அவர்களுடைய வம்சமும் இருக்குமல்லவா. அதனை
தெய்வீக வர்ணம் என்று கூறப்படுகின்றது. பாரதத்தில் தான் தெய்வீக வர்ணம் இருந்தது. இப்பொழுது அசுர
வர்ணமாக உள்ளது. இது சங்கமயுகம். இப்பொழுது அசுரரிலிருந்து தெய்வீக வர்ணத்திற்குப் போக வேண்டும்.
உண்மையில் இந்த மகாபாரதயுத்தத்தைத் தான் இதிகாசங்களில் சொல்லப்படுகின்றது. சிவனின் பெயருக்குப்
பதிலாக கிருஷ்ணரின் பெயரைப் போட்டு விட்டார்கள். கீதை சாஸ்திரம் கண்டனம் ஆகியதால் மற்ற அனைத்து
சாஸ்திரங்களும் கண்டனத்திற்கு ஆகிவிட்டன. முக்கியமான விஷயம் கீதைதான். கீதை பாடசாலை அதாவது
கீதா பவனம் எவ்வளவு உள்ளது! கீதை ஞானம் கேட்பதற்கான பாடசாலை உள்ளன.. யார் சொற்பொழிவாளர்களாக
உள்ளாரோ அவர்களை பின்பு பாராட்டுகினறார்கள். குழந்தைகளுக்கு பாபா தினந்தோறும் மிகவும் அன்போடு
புரிய வைக்கின்றார். பாபா அன்புக்கடல் என்று குழந்தைகளுக்குத் தெரியும். அனைவருக்கும் மிக அன்போடு
புரிய வைக்கின்றார். பாபா ஒரு போதும் கோபம் கொள்வதே இல்லை, எப்பொழுதும் அன்போடு புரிய
வைக்கின்றார். குழந்தைகளே ! நீங்கள் சதோபிரதானமாக இருந்தீர்கள். பிறகு புனர் ஜென்மம் எடுத்துக்
கொண்டே வந்து விட்டீர்கள். நீங்கள் பாரதவாசிகள் தான் உண்மையில் தேவிலிதேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்கள்.
இதையும் கூட பாபா கூறுகின்றார். முதன்லிமுதலில் ஆஸ்தியை வாங்க யார் வருவார்கள்? யார் கல்பத்திற்கு
முன்னால் வாங்கினார்களோ, அவர்களே பாபா ! உங்களைத் தவிர எங்களுக்கு உதவியாளர் வேறு யாரும்
இல்லை என்று சொல்வார்கள். பாபா சங்கமயுகத்தில் தான் மன்னிக்கின்றார். இராம இராஜ்ஜியம் மேலும்
இராவண இராஜ்யம் இங்கு தான் இருந்தது என்று குழந்தைகள் அறிந்து கொண்டீர்கள். இராவண இராஜ்யம்
இப்பொழுது இருப்பதால் தான் அனைவரும் இராம இராஜ்யம் வேண்டும் என்று விரும்புகின்றார்கள். நீங்கள்
எப்பொழுது சிவபாபா என்று சொல்கின்றீர்களோ அப்பொழுது உங்கள் புத்தி நிராகாரம் (பரந்தாமம்) பக்கம்
செல்கின்றது, நிராகாரின் நினைவு வருகின்றது. ஆத்மா தான் பாபாவை அழைக்கின்றது. பரமாத்மா என்று
ஒருவர் உட்கார்ந்து கேட்கின்றார், அப்படி கிடையாது. நாடகத்தின் அனுசாரமாக பதீதர்களை பாவனம் ஆக்குவதற்
காக நான் உடலில் வருகின்றேன், என்று பாபா புரியவைக்கின்றார். உங்கள் கூக்குரலைக் கேட்டு வருகின்றேன்
அப்படி இல்லை. பக்தி எப்பொழுது பூர்த்தி ஆகின்றதோ அப்பொழுது நான் வந்தே ஆக வேண்டும். இது
புரிந்து கொள்ள வேண்டிய விஷயம். சமயம் வரும் பொழுது, குழந்தைகள் அழைக்க ஆரம்பிக்கின்றீர்கள்.
அவர் எப்பொழுது வருகின்றார் என்ற விபரம் எவற்றிலும் எழுதி வைக்கவில்லை. அவர்கள் கல்பத்தின்
ஆயுளை தவறாக எழுதி வைத்து விட்டார்கள். இந்த படம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டும். அதை
தினந்தோறும் பார்க்கும் போதும் இது பாபா, இது தாதா, இது ஆஸ்தி என்று நினைவு வரும். குழந்தைகளே
சதோபிரதானம் ஆவதற்காக என்னை நினைவு செய்தால் கறை நீங்கும். இந்த வழியினை பாபா தான் புரிய
(2/4)
23.07.2016
வைக்கின்றார். இந்த அப்பா கூட நானும் கூட புருஷார்த்தம் செய்கின்றேன் என்று சொல்கின்றார். குழந்தைகளே!
ஒருவருக்கும் எச்சரிக்கை கொடுத்து முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டும். இந்த சித்திரங்களை வைத்து
புரிய வைப்பது மிகவும் சுலபம். சிவபாபா பிரம்மா மூலமாக ஸ்தாபனை செய்து கொண்டு இருக்கின்றார்.
உங்கள் முன்னால் மஹாபாரத யுத்தம் நின்று கொண்டு இருக்கின்றது. இவ்வளவு அநேக தர்மங்கள் அழிந்து
விடும், அதற்காக யுத்தம் அவசியம் தேவை. இந்த விஷயங்களை குழந்தைகள் மறக்கக் கூடாது. முற்றிலும்
இப்பொழுது கலியுகம் ஆழ்ந்த இருளிலில் உள்ளது. எவ்வளவு அநேக மனிதர்கள் உள்ளனர். அவசியம்
வினாசம் ஆகியே தீரும். சத்தியயுகத்தில் ஒரு தர்மம் இருக்கும். பிறகு மீண்டும் ஒரு தர்மம் ஸ்தாபனை
ஆகிக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் சத்கதி தாதா (வள்ளல்) ஒரு பாபா தான். பாபாவிடமிருந்து தான்
குழந்தைகளுக்கு ஆஸ்தி கிடைக்கின்றது. நாம் படிக்கும் இந்த படிப்பு எதிர்காலத்திற்கு 21 ஜென்மத்திற்காக
படிக்கின்றோம். பகவானின் மஹாவாக்கியம்லி நான் உங்களை கற்கச் செய்து 21 ஜென்மத்திற்காக சொர்க்கத்தின்
எஜமானன் ஆக்குகின்றேன். சூர்யவம்சம், சந்திரவம்ச குலம் நிச்சயம் ஸ்தாபனை ஆகின்றது. யார் எவ்வளவு
புருஷார்த்தம் செய்கின்றார்களோ, அவர்கள் அந்தளவு உயர்ந்த பதவியை அடைகின்றார்கள், அதனால்
தாய்லிதந்தையைப் பின்பற்றுங்கள் என்று சிவபாபா கூறுகின்றார். இவர்களை சூட்சுமவதனத்தில், வைகுண்டத்தில்
கூட பார்க்கின்றீர்கள். தன்னைத் தான் பாருங்கள், நாம் கூட மஹாராஜா, மஹாராணி ஆகின்றோம். வைகுண்டத்தின்
சாட்சாத்காரம் கூட ஆகின்றது. அவசியம் பாரதத்தில் வைகுண்டம் ஸ்ரீ கிருஷ்ணபுரி இருந்தது என்று ஏற்றுக்
கொள்கின்றார்கள். இன்று கம்சபுரி, நாளை கிருஷ்ணபுரி ஆக இருக்கும். இரவு மாறி பகல் வரும். இங்கே அரை
கல்பம் எல்லையற்ற பகல், மேலும் அரை கல்பம் எல்லையற்ற இரவு இருக்கும். இரவில் முட்டி மோதிக்
கொள்கின்றார்கள். பிரம்மாவின் இரவு என்றால், பிராமணர்களின் இரவு ஆகும். பிறகு நீங்கள் பிராமணர்களிலி
ருந்து தேவதைகளாக ஆகின்றீர்கள். சத்தியயுகத்தில் பிராமணர்கள் இருப்பதில்லை, தேவதைகள் தான் இருப்பார்கள்.
பாரதம் துôய்மையான இராஜஸ்தானாக இருந்தது. பிறகு துôய்மையற்ற இராஜஸ்தான் ஆகி விட்டது
என்று குழந்தைகள் தெரிந்து கொண்டீர்கள். பாரதம் எப்பொழுதும் இராஜஸ்தானாகத் தான் இருக்கும். இராஜ்யங்கள்
நடந்து கொண்டே தான் இருக்கின்றது, தர்மத்தைச் சேர்ந்தவர்கள் ஆரம்பத்திலிருந்தே இராஜ்ஜியம் செய்வதில்லை.
பகவான் தான் இராஜ்ஜியம் ஸ்தாபனை செய்கின்றார். பகவான் தான் வந்து இராஜயோகம் கற்றுக் கொடுக்கின்றார்.
அவர் தான் நிராகார் ஞானக்கடல், சுகக் கடல் பாபாவிடமிருந்து நமக்கு ஆஸ்தி கிடைக்கின்றது என்று நீங்கள்
அறிந்து கொண்டீர்கள். அவசியம் நம்முடைய முயற்சி தான் நேரமாகின்றது. யார் எவ்வளவு முயற்சி செய்கின்றார்
களோ, எவ்வளவு பாதை காட்டுகின்றார்களோ. பாபா சொல்கின்றார்லி என்னை நினைவு செய்தால் நீங்கள் பதீத
நிலையிலிருந்து பாவன நிலையை அவசியம் அடைவீர்கள், எவ்வளவு எளிதான விஷயம். லௌகீகத்தில்
தாய்லிதந்தை ஞானத்தில் இருக்கின்றார்கள் என்றால், குழந்தைகளையும் அவர்கள் சமம் ஆக்க வேண்டும். தாய்
தந்தை உண்மையான வருமானம் செய்கின்றீர்கள் என்றால், குழந்தைகளையும் உண்மையான வருமானம்
அடையச் செய்விக்க வேண்டும். சில குழந்தைகள் நல்ல குழந்தைகளாக இருக்கின்றார்கள். நாங்கள் ஆன்மீகப்
படிப்பை படித்துவிட்டு ஒவ்வொரு வீட்டிற்கும் போய் செய்தியை சொல்வோம் என்று சொல்கின்றார்கள். நான்
கூட செய்தியாளன் தான் என்று பாபா கூறுகின்றார். நான் உங்களுக்கு வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும்
என்ற செய்தியைக் கூறுகின்றேன். இந்த உலகம் இப்பொழுது இருப்பதற்குத் தகுதி இல்லை. என்னை நினைவு
செய்யுங்கள் துôய்மை அடைந்து விடலாம். நீங்கள் பாவனமாக இருந்தீர்கள், இராவணன் வந்து பதீதர்களாக
ஆக்கிவிட்டார். நான் மீண்டும் பாவனம் ஆக்க வந்துள்ளேன். சிறிது காலத்திற்குப் பிறகு அணுகுண்டு எல்லாம்
போடும் போது இது தான் உண்மையான மஹாபாரத யுத்தம் என்று அறிந்து கொள்வார்கள். அப்பொழுது
அவசியம் பகவானும் இருப்பார். ஆனால் மற்றவர்கள் கீதையின் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தான் என்று நினைக்
கின்றார்கள். எவ்வளவு குழப்பம் அடைகின்றார்கள். குழப்பம் அடையவில்லை என்றால், கடவுள் வர வேண்டியதின்
அவசியம் தான் என்ன? பக்திமார்க்கத்தைத் தான் மறந்து!லிமறக்க வைக்கும் விளையாட்டு என்று
சொல்லப்படுகின்றது. இப்பொழுது என்னை நினைப்பதால் அனைத்து தவறுகளும் அழிந்துவிடும் என்று பாபா
சொல்கின்றார். முன்னால் தன்னை இந்த உடல் என்று நினைத்தீர்கள். இப்பொழுது தன்னை ஆத்மா என்று
நினைக்கின்றீர்கள். குழந்தைகளே! ஆத்ம அபிமானி ஆகுங்கள் என்று இந்த எச்சரிக்கை பாபா தான்
கொடுக்கின்றார். இங்கே நீங்கள் பாபாவிற்கு முன்னால் அமர்ந்துள்ளீர்கள். இங்கே சென்டர்களில் சிவபாபா
இப்படிச் கூறுகின்றார் என்று குழந்தைகள் புரிய வைக்கின்றார்கள். இங்கே நேரடியாக நான் ஆத்மாக்களிடம்
அமர்ந்து பேசுகின்றேன் என்று பாபா கூறுகின்றார். பாபா இவர் மூலமாக நமக்கு புரிய வைக்கின்றார் என்று
நீங்கள் புரிந்து கொண்டீர்கள். இது தான் உண்மையான கல்யாணகாரி திருவிழா ஆகும். பாபா நிரந்தரமாக
என்னை நினைவு செய்யுங்கள் என்று சொல்கின்றார். பாபாவிடமிருந்து நாம் சொர்க்கத்தின் ஆஸ்தியை அடைய
வேண்டும். பாபா மற்றும் சொர்க்கம் இரண்டையும் நினைவு செய்ய வேண்டும். எந்த ஒரு விகர்மமும் செய்ய
வேண்டாம். நீங்கள் இப்பொழுது விகர்மம் செய்தீர்கள் என்றால் நுôறு மடங்கு தண்டனை கிடைக்கும். விகர்மம்
செய்விப்பவர் மாயா, அதன் மீது வெற்றி அடைய வேண்டும். ஆகையால் தான் மஹாவீர் ஹனுமான் கதை
(3/4)
23.07.2016
உள்ளது. நீங்கள் ஹனுமான் மஹாவீர் அல்லவா? நாம் பாபாவினுடையவர்களாக ஆகி விட்டோம். மாயாவிடமிருந்து
தோல்வி அடைய முடியாது. அதனால் பாபாவை நினைத்துலிநினைத்து சதோபிரதான், விகர்மாஜீத் ஆகி விடுவீர்கள்.
ஆகவில்லை என்றால் பதவி குறைந்து விடும். புருஷார்த்தி குழந்தைகள் தன்னுடைய வாழ்க்கையின் மீது
இரக்கப்படுவார்கள். என்ன ஆனாலும் சரி, நினைவு யாத்திரையில் இருப்பார்கள், ஆடாது, அசையாது, நிலையாக
இருப்பார்கள். வினாசம் ஆகியே தீரும். எல்லோருடைய பெரியப்பா, சித்தப்பா, மாமா, குரு, அனைவரும்
அழிந்து விடுவார்கள். நான் உங்களை என்னுடன் அழைத்துச் செல்கின்றேன் என்று சத்குரு சொல்கின்றார்.
மனிதர்கள் முற்றிலும் இருட்டில் உள்ளார்கள், பாபா நம்மை தன்னுடன் அழைத்துச் செல்வார் என்று நீங்கள்
அறிந்து கொண்டீர்கள். காலன் சாப்பிட்டுவிட்டான்லி என்று சொல்கின்றார்கள் அல்லவா? ஆனால் நான் உங்களை
சாந்திதாமம் அழைத்துச் செல்கின்றேன். ஆத்மா இந்த சரீரத்தை விட்டுப் போய்விடும். காலன் யாரும் கொண்டு
போவதில்லை, ஆத்மா தான் இந்த உடலை விட்டு வெளியில் போக வேண்டி உள்ளது. இப்பொழுது நான்
சுயம் வந்துள்ளேன்லி உங்களைக் கூடவே அழைத்துச் செல்கின்றேன். பாபா மரணத்தைத் தரவா வந்துள்ளார்,
இல்லை. நீங்கள் பழைய சரீரத்தை விட வேண்டும். ஆத்மா தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானம் ஆக
வேண்டும். இப்பொழுது 5 தத்துவம் கூட தமோபிரதானமாக உள்ளது, ஆகையால் உடல் கூட அப்படி கிடைக்
கின்றது. அங்கே தத்துவம் சதோபிரதானமாக இருக்கும். அதனால் உடல் கூட வெள்ளையாக இருக்கும். நான்
மீண்டும் ஆதி சனாதன தேவிலிதேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்கின்றேன் என்று பாபா சொல்கின்றார்.
நீங்கள் தான் 84 பிறவிகளை அனுபவிக்கின்றீர்கள். நீங்கள் உங்கள் தர்மத்தை மறந்து விட்டீர்கள். மேலும்
மற்றவர்கள் தங்களது தர்மத்தை மறப்பதில்லை. நீங்கள் இப்பொழுது அறிந்து கொண்டீர்கள் நாம் உண்மையில்
தேவிலிதேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்கள் என்று. பாபா கல்பலி கல்பமாக உங்களுக்குத் தான் புரிய வைக்கின்றார்.
நீங்கள் மற்றவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். இப்பொழுது 84 முழு சக்கரம் பூர்த்தி ஆகின்றது, வினாசம்
முன்னால் நிற்கின்றது. சொர்க்கத்தின் எஜமானன் ஆவதற்காக நீங்கள் தன்னை தகுதி ஆக்கிக் கொள்ள
வேண்டும். இது பாபாவின் நினைவால் தான் ஆக முடியும். அதிகாலையில் எழுந்து பாபாவை நினைக்க
வேண்டும். பாபா அற்புதம்லி நீங்கள் எப்படி வருகின்றீர்கள். கீதையில் கிருஷ்ணருடைய பெயரைப் போட்டு
விட்டார்கள். ஆனால் நீங்கள் முன்னால் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்கின்றீர்கள், இதை இப்பொழுது
நீங்கள் மட்டும் தான் அறிவீர்கள். அவை அனைத்தும் பக்தி மார்க்கத்தில் கேட்கப்பட்ட விஷயங்கள். இப்பொழுது
நம் ஆத்மாக்களுக்கு பாபா நீங்கள் கிடைத்துள்ளீர்கள், ஆத்மாக்களின் தந்தை வந்து சந்திக்கின்றார் என்றால்,
அன்பில் தான் வந்து சந்திக்கின்றார். குழந்தைகள் பாபாவுடன் மிகவும் அன்போடு சந்திக்கின்றீர்கள். இங்கே
அவர் நிராகாரகாரமாக தந்தை உள்ளார். அதனால் தான் இவரை சந்திக்கும் போதெல்லாம் சிவபாபாவை
நினைத்து சந்தியுங்கள் என்று பாபா எப்பொழுதும் சொல்கின்றார். மனிதர்கள் ஒன்றுமே அறிவதே இல்லை.
உங்களில் கூட ஒரு சிலர் தான் அறிகின்றார்கள், என்னுடையவர் ஆகிவிட்டு பின்பு மறந்து விடுகிறார்கள்.
தேக அபிமானத்தில் வந்து விடுகின்றார்கள். பாபா நான் உங்களுடையவன் ஆகி விட்டேன் என்று உறுதிமொழி
கூட கொடுக்கின்றார்கள். ஆண் ஆனாலும், பெண் ஆனாலும் சரி, ஆத்மா தான் சொல்கின்றது. ஆண்
உடலில் இருந்தால் ஆண் நான் உங்களுடையவன் ஆகி விட்டேன் என்று சொல்கின்றார். பெண் கூட நான்
உங்களுடையவன் ஆகி விட்டேன் என்று சொல்கின்றார். பாபா நாங்கள் உங்களிடமிருந்து முழுமையாக
ஆஸ்தியை அடைவோம் முழுவதுமாக உங்களை நினைப்போம், பாபாவை நினைக்காமல் பாவங்கள் நீங்காது,
தமோபிரதானத்தில் இருந்து சதோபிரதானம் ஆக முடியாது. சத்தியயுகத்தில் உங்களுக்கு அகண்ட உறுதியான,
சுகம்லிசாந்தி, நிறைந்து 21 ஜென்ம இராஜ்யம் கிடைக்கின்றது. சொர்க்கத்தைப் படைக்கும் பாபா அவசியம்
நமக்கு ஆஸ்தியைக் கொடுப்பார். பரபிரம்மத்தில் வசிப்பவர் பரமாத்மா என்று புகழ் பாடப்படுகின்றது. அவர் ஒரு
முறை தான் வருகின்றார். இது கூட புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் அல்லவா? சிலர் புரிந்து கொள்வதே
இல்லை, சிறிது நாள் போனால் கண்கள் திறக்கும். மிகப் பெரிய சண்டை நடக்கும்? உண்மையில் யக்ஞம்
படைக்கப்பட்டுள்ளது. இதில் யுத்தம் கூட நடக்கும். இந்த யக்ஞத்தைப் பற்றி யாருக்கும் தெரியாது. இந்த ருத்ர
ஞான யக்ஞத்தைப் படைத்தார் என்றால் வினாசம் ஆகும். அவர்கள் யக்ஞம் படைக்கின்றார்கள் வினாசம்
ஆகக் கூடாது என்று. சாந்திக்காக செய்கின்றார்கள். இந்த யக்ஞத்தை மீண்டும் படைப்பார். அவர்களுக்கு
வினாசம் ஆகுமா? பின்பு என்ன ஆகும் இது பற்றி தெரியாது. இப்பொழுது குழந்தைகளான நீங்களும் முழு
உலகத்தின் ஆதிலிமத்தியம்லிமுடிவின் அனைத்து விஷயங்களையும் அறிந்துள்ளீர்கள். அனைவரின் எல்லையற்ற
ஜென்மக் கதையையும் அறிந்துள்ளீர்கள். பரமபிதா பரமாத்மாவின் வாழ்க்கை வரலாறு சொல்ல முடியும் என்று
சொல்ல முடியாது. பரமாத்மாவைத் தான் அனைவரும் அழைக்கின்றார்கள் அல்லவா? அடிக்கடி நினைக்கின்றார்கள்.
சொல்கின்றார்கள் அல்லவா ! குழந்தையை பகவான் தான் கொடுத்தார், இது செய்தார் அது செய்தார்... யாருடைய
பொருளோ (குழந்தை இறந்து விட்டால்) அவரே எடுத்துக் கொண்டார் என்று சிலர் நினைக்கின்றார்கள்.
அப்படியும் சில புத்திசாலிகள் இருக்கின்றார்கள். அநேகவிதமான மனிதர்கள் இருக்கின்றார்கள். இப்பொழுது
உங்களுக்கு பாபா கிடைத்துள்ளார் என்றால், பாபாவைத் தான் நினைக்க வேண்டும். பாபாவின் நினைவில்
23.07.2016
(4/4)
தான் வருமானம் உள்ளது. நீங்கள் விஷ்ணுபுரிக்கு எஜமானன் ஆகிவிடுவீர்கள். நீங்கள் சத்தியயுகத்தில் இருந்து
கலியுகம் வரை முழு சக்கரத்தையும் அறிந்துள்ளீர்கள். உங்களுடைய புத்தியில் எப்படி உள்ளதோ அப்படி
பாபாவின் புத்தியில் உள்ளது. அதனால் தான் அவரை ஞானக்கடல், ஞானம் நிறைந்தவர் என்று சொல்லப்
படுகின்றது. இப்பொழுது நீங்கள் பாபாவிடமிருந்து ஆஸ்தியை அடைந்து கொண்டு இருக்கின்றீர்கள். நீங்கள்
குழந்தைகள் உறுதியாக, நிலையாக இருக்க வேண்டும். மாயா வந்து அடிக்கடி கீழே தள்ளியது என்று
இருக்கக் கூடாது. தொட்டால் சினுங்கியாக இருக்கக் கூடாது. சமயம் நெருங்கி வந்து கொண்டு இருக்கின்றது,
பிறகு நீங்கள் நம்முடைய புருஷார்த்தம் முடிந்து விட்டது என்று பார்ப்பீர்கள். கடைசி நேரம் வந்துவிட்டது.
நல்லது.
இனிமையிலும் இனிமையான குழந்தைகளே தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் !
மேலும் காலை வணக்கங்கள். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரனைக்கான முக்கிய சாரம்:லி
1) ஆன்மீகக் கல்வியைக் கற்று, உண்மையான வருமானம் செய்து, மேலும் செய்விக்கவும்
வேண்டும். வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற செய்தியை அனைவருக்கும் கொடுக்க
வேண்டும். இப்பொழுது எந்த விகர்மமும் செய்யக் கூடாது.
2) அதிகாலையில் எழுந்து பாபாவை மிகவும் அன்போடு நினைக்க வேண்டும். சின்னலிசின்ன
விஷயங்களுக்கு எல்லாம் தொட்டால் சினுங்கி ஆகக் கூடாது. உங்கள் நிலை ஆடாதுலி
அசையாது இருக்க வேண்டும்.
வரதானம்: மனதால் மஹாதானத்தின் மூலமாக ஒவ்வொரு எண்ணத்தின்
சித்தியையும் அடையக் கூடிய மாஸ்டர் சர்வ சக்திவான் பவ.
எந்த குழந்தைகள் எண்ணத்தின் மூலமாக சக்திகளை தானம் செய்கின்றார்களோ அவர்கள் மாஸ்டர்
சர்வ சக்திவான் என்ற வரதானத்தை அடைகின்றார்கள். ஏனென்றால் மனதின் மூலமாக சக்திகளை தானம்
செய்வதில் அவ்வளவு சக்தி சேமிப்பாகின்றது. ஆகையால் ஒவ்வொரு எண்ணத்திலும் சித்தியை பிராப்தியாக
அடைகின்றீர்கள். அவர்கள் தங்களது எண்ணத்தை எங்கு விரும்புகின்றார்களோ அங்கு ஒரு வினாடியில்
நிறுத்த முடியும். எண்ணங்கள் அவர்களின் வசத்தில் இருக்கும். அவர்கள் தன்னுடைய எண்ணங்களின் மீது
வெற்றி அடைந்ததின் காரணத்தால் சஞ்சல எண்ணம் கொண்டவர்கள் கூட சிறிது நேரத்திற்காக தமது
எண்ணங்களை நிலையாக வைத்து சாந்தி அடைய முடியும்.
சுலோகன்: நிரந்தரமாக ஒரு பாபாவின் தொடர்பில் இருந்தால்
தீய தொடர்பில் இருந்து காப்பாற்றப்படுவீர்கள்.
(1/4)
24
24.07.2016
காலை முரளி ஓம் சாந்தி ''அவ்யக்த பாப்தாதா''
ரிவைஸ் 22.10.1981 மதுபன்
''வள்ளலின் குழந்தைகள் நிரந்தர வள்ளல் ஆகுங்கள் ''
இன்று இரக்கத்தின் கடல் தன்னுடைய மாஸ்டர் இரக்கக் கடல் குழந்தைகளை சந்திப்பதற்காக வந்திருக்
கிறார். பக்தர்கள் பாப்தாதா மற்றும் மிக உயர்ந்த ஆத்மாக்கள் உங்களை இரக்கம் காட்டுபவரே லி கிருபை
செய்பவரே என்ற பெயரால் மகிமை செய்கிறார்கள். அனைத்து மதங்களின் ஆத்மாக்கள் பாப்தாதாவிடமிருந்து
மற்றும் மிக உயர்ந்த ஆத்மாக்கள் உங்களிடமிருந்து முக்கியமான ஒன்றை அவசியம் விரும்புகிறார்கள்.
ஞானம் மற்றும் யோகாவின் விஷயங்கள் ஒவ்வொரு மதத்திலும் வேறு வேறாக இருக்கிறது, அதைத் தான்
அவர்களின் நம்பிக்கை என்று கூறுவது. ஆனால் ஒரு விஷயம் அனைத்து மதங்களிலும் ஒன்றாகவே
இருக்கிறது. அனைத்து ஆத்மாக்களும் இரக்கம் மற்றும் கிருபையை அவர்களுடைய மொழியில் ஆசீர்வாதம்
என்று கூறுகிறார்கள், அதை அனைவரும் விரும்புகிறார்கள். அனைத்து ஆத்மாக்கள் உங்களிடமிருந்து இந்த
இறுதி ஜென்மத்திலும் கொஞ்சம் கிருபை நிறைந்த பார்வையை எம்மீது செலுத்துங்கள் என்ற இதைத் தான்
பக்தர்கள் விரும்புகிறார்கள். கொஞ்சம் எங்கள் மேலேயும் இரக்கம் காட்டுங்கள். அனைத்து மதங்களின் முக்கிய
அடையாளமாக 'இரக்கத்தை' ஏற்றுக் கொள்கிறார்கள். ஒருவேளை ஏதாவது ஒரு தர்ம ஆத்மா இரக்கம்
உடையவராக இல்லை, இரக்க பார்வையுடையவராக இல்லை என்றால், அவரை தர்மத் தலைவர் என்று
ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தர்மம் என்றால் தயை. அப்படி இன்று பாப்தாதா தயாளு (இரக்கம் நிறைந்தவர்)
மற்றும் கிருபாளு (கிருபை நிறைந்தவர்) ஆக எந்த அளவு ஆகியிருக்கிறீர்கள் என்பதை பார்த்துக்
கொண்டிருந்தார்கள்.
அனைத்து பிராமண ஆத்மாக்களும் தன்னை ஆதி சனாதன பழைமையான தர்மத்தின் சிரேஷ்ட
ஆத்மாக்கள் அதாவது தர்ம ஆத்மாக்கள் என்று நம்பத்தான் செய்கிறார்கள். ஹே தர்ம ஆத்மாக்களே, உங்கள்
அனைவரின் முதல் தர்மம் அதாவது தாரணையே, தனக்காகவும், பிராமண குடும்பத்திற்காகவும், உலகின்
அனைத்து ஆத்மாக்களுக்காகவும் இரக்க மனமுடையவர் மற்றும் கிருபை திருஷ்டி உள்ளவராக இருப்பது.
எனவே எப்பொழுதும் இரக்கத்தின் பாவனை மற்றும் கிருபை திருஷ்டி அனைவருக்காகவும் இருக்கிறதா
அல்லது வரிசைக்கிரமமாக இருக்கிறதா என்று உங்களை நீங்களே கேளுங்கள். இரக்க உணர்வு மற்றும்
கிருபை திருஷ்டி யார் மேல் வைக்க வேண்டியதாக இருக்கிறது. யார் பலஹீனமான ஆத்மாவோ, பிராப்தி
இல்லாத ஆத்மாவோ, ஏதாவது விஷயத்தின் வசமான ஆத்மாவோ, அந்த மாதிரி ஆத்மாக்கள், தயை மற்றும்
கிருபையின் ஆசை வைக்கிறார்கள். மேலும் அவர்களுடைய ஆசை இல்லாவிட்டாலும் கூட நீங்கள் வள்ளலின்
குழந்தைகள் அந்த ஆத்மாக்களுக்கு நல்ல விருப்பத்தோடு கொடுப்பவர்கள். முழு நாளின் எந்த ஆத்மாக்களின்
தொடர்பில் வருகிறீர்களோ, ஞானியாக இருந்தாலும் அல்லது அஞ்ஞானியாக இருந்தாலும், அனைவருக்காகவும்
எப்பொழுதும் இதே பார்வை இருக்கிறதா அல்லது வேறு வேறு பார்வையும் இருக்கிறதா? யார் எப்படிப்பட்ட
சம்ஸ்காரம் உள்ளவராக இருந்தாலும் இந்த இரக்கம் மற்றும் கிருபையின் பாவனை மற்றும் திருஷ்டியானது,
கல்லையும் கூட தண்ணீர் ஆக்க முடியும். எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அவர்களுடைய நிலையில் நிலைத்துவிடுவர்,
சுபாவத்தின் மோதலில் வருபவர்கள் கூட நல்லோர் ஆகி விட முடியும். கோப அக்னி யோக அக்னியாக
மாறிவிடும். அனேக ஜென்மங்களின் கடுமையான கணக்கு வழக்கு ஒரு நொடியில் முடிவடைந்து புதிய
சம்மந்தம் ஏற்பட்டு விடும். எவ்வளவு தான் விரோதியாக இருந்தாலும் இந்த விதி மூலம் கட்டி அணைப்பவராக
ஆகிவிடுவார். ஆனால் இவை அனைத்திற்குமான ஆதாரம் 'இரக்க உணர்வு'. இந்த மாதிரி சூழ்நிலை மற்றும்
இந்த மாதிரி நேரத்தில் இரக்க உணர்வு அவசியம் தேவைப்படுகிறது. தேவையான நேரத்தில் செய்யவில்லை
என்றால் மாஸ்டர் இரக்கக்கடல் என்று கூறுவோமா? யாரிடம் இரக்க உணர்வு இருக்குமோ அவர் எப்பொழுதும்
நிராகாரி, நிர்விகாரி மற்றும் நிர்அகங்காரியாக இருப்பார். எண்ணத்தில் நிராகாரி, வார்த்தையில் நிர்விகாரி, காரியத்தில்
நிர்அகங்காரி, இவரைத் தான் இரக்கம் காட்டும் மற்றும் கிருபையான ஆத்மா என்று கூறுவது. அப்படி ஹே,
இரக்கத்தில் நிரம்பிய களஞ்சியமாக இருக்கும் ஆத்மாக்களே ! தேவையான நேரத்தில் எந்த ஆத்மாவிற்காகவும்
இரக்க உணர்வின் அஞ்சலியும் கொடுக்க முடியாதா? நிரம்பிய களஞ்சியத்திலிருந்து அஞ்சலி கொடுத்து
விட்டீர்கள் என்றால், முழு பிராமண பரிவாரத்தின் பிரச்சனைகளே முடிவடைந்து விடும். உங்கள் அனைவரின்
அனாதி, ஆதி சம்ஸ்காரமே அழியாத வள்ளல் தன்மையினுடையது. தேவதை என்றால், கொடுப்பவர். சங்கம
யுகத்தில் மாஸ்டர் வள்ளல் ஆவீர்கள். அரைக்கல்பம் தேவதை அதாவது கொடுப்பவர்களாக இருக்கிறீர்கள்.
துவாபர்யுகத்திலிருந்து கூட உங்களுடைய ஜட விக்கிரகங்கள் கொடுக்கக்கூடிய தேவதைகள் என்றே
கூறப்படுகிறார்கள். அப்படி முழுக் கல்பத்தின் சம்ஸ்காரம் வள்ளல் தன்மையினுடையது. அந்த மாதிரி வள்ளல்
(2/4)
24.07.2016
தன்மையின் சம்ஸ்காரம் உள்ள நிரம்பிய ஆத்மாக்களே, தேவையான நேரத்தில் ஏன் வள்ளல் ஆவதில்லை?
ஏதாவது பெற வேண்டும் என்ற பாவனையை வள்ளலின் குழந்தைகள் வைக்க முடியாது. அடுத்தவர்
கொடுத்தார் என்றால் தான் நான் கொடுப்பேன் என்பவர் தேவதை அல்ல, யாசிப்பவராக ஆகிவிட்டார்.
அப்படியானால் நீங்கள் எந்த மாதிரி ஆத்மாக்கள்? தேவதையா அல்லது யாசிப்பவரா?
ஹே, ஆசை என்றால் என்னவென்று அறியாத ஆத்மாக்களே ! அற்ப காலத்தின் ஆசையின் காரணமாக
தேவதைக்குப் பதிலாக யாசிப்பவராக ஆகாதீர்கள். கொடுத்துக் கொண்டே இருங்கள், கொடுத்துக் கொண்டே
எத்தனை என்று எண்ணாதீர்கள். நான் எவ்வளவு செய்தேன், இவர் செய்யவில்லை, என்ற இந்த எண்ணிக்கை
பார்ப்பது வள்ளல் தன்மையின் சம்ஸ்காரம் இல்லை. பரந்த மனமுடைய தந்தையின் குழந்தைகள் இந்த
விஷயங்களில் எண்ணிக்கை செய்வதில்லை. களஞ்சியம் நிரம்பி இருக்கிறது ஏன் எண்ணிக்கை செய்கிறீர்கள்?
சத்யுகத்தில் கூட எந்தவொரு கணக்கு வழக்கையும் எண்ணிக்கை செய்வதில்லை. இராஜ குடும்பம், இராஜ
வம்சத்தினர் மாஸ்டர் வள்ளலாக இருப்பார்கள். அங்கே இந்த இவ்வளவு கொடுத்தேன், இவ்வளவு செய்தேன்
என்ற வியாபார முறை இருக்காது. யார் எவ்வளவு பெற்றுக் கொள்வாரோ அந்த அளவு நிரம்பிவிடுவார்.
இராஜ வம்சம் என்றால் வள்ளலின் வீடு. இந்த சம்ஸ்காரத்தை நிரப்ப வேண்டும். எங்கே நிரப்ப வேண்டும்,
சத்யுகத்திலா? இப்பொழுதிலிருந்தே நிரப்ப வேண்டும் இல்லையா. இங்கேயும் கூட தந்தையுடன் வியாபார
கணக்கை செய்கிறார்கள். தந்தை என்னிடம் கேட்கவில்லை, தந்தை என் மூலம் செய்யவில்லை. மேலும்
உங்களுக்குள்ளோ இதை மிக அதிகமாக செய்கிறீர்கள். மகாராஜா ஆகுங்கள், வள்ளலின் குழந்தை வள்ளல்
ஆகுங்கள். இவர் செய்தார் அதனால் நானும் இதைச் செய்தேன், இவர் இரண்டு கூறினார்: பதிலுக்கு அப்பொழுது
நானும் நான்கு கூறினேன். இவர் இரண்டு தடவை சொன்னார் அல்லது செய்தார், நான் ஒரு தடவை
செய்தேன். இந்த மாதிரி கணக்கை வள்ளலின் குழந்தைகள் செய்ய முடியாது. யாராவது உங்களுக்கு கொடுத்தாலும்
சரி, கொடுக்காவிட்டாலும் சரி, ஆனால் நீங்கள் கொடுத்துக் கொண்டே இருங்கள். இதைத் தான் இரக்க
உணர்வு மற்றும் கிருபை நிறைந்த பார்வை என்று கூறுவது. எனவே ஹே இரக்கமுடைய, கிருபை உடைய
ஆத்மாக்களே ! கொடுப்பவர்களாக ஆகுங்கள். புரிந்ததா?
பாப்தாதாவிடம் அனைத்து குழந்தைகளின் கணக்கு இருக்கிறது. முழு நாளில் எவ்வளவு நேரம்
இரக்கமுடையவர் மற்றும் கிருபை உடையவர் ஆகிறார்கள்? மேலும் எவ்வளவு நேரம் கொடுப்பதற்கான
பாவனைக்குப் பதிலாக பெறுவதற்கான எண்ணம் வைக்கிறார்கள் என்ற இந்த முழு நாளின் லீலையை பாப்தாதா
பார்க்கிறார்கள். எப்படி நீங்கள் இந்த வீடியோ செட்டை இணைத்திருக்கிறீர்கள் என்றால் பார்க்கவும் செய்கிறீர்கள்,
மேலும் கேட்கவும் செய்கிறீர்கள். அப்படி பாப்தாதாவிடமோ ஒவ்வொருவருக்காகவும், டி.வி செட் இருக்கிறது.
எப்பொழுது விரும்புகிறாரோ அப்பொழுது பொத்தானை அழுத்த முடியும்.
இது சேவைக்கான சாதனம் மற்றும் அது தந்தை குழந்தைகளின் நிலைமையை தெரிந்து கொள்ளும்
சாதனம். இந்த அனைத்து சாதனங்களுமே இறுதி நேரத்தில் அழிந்து விடும். இந்த வீடியோ காரியத்திற்கு
உதவாது. ஆனால் வில் பவரின் (மனோபலம்) செட் உபயோகத்தில் வரும். ஆனால் அறிவியலைச் சேர்ந்த
குழந்தைகள் யார் இந்த அளவு நேரம், சக்தி, பணத்தை செலவு செய்து சாதனத்தை உருவாக்கியிருக்கிறார்களோ,
அப்படி குழந்தைகளின் உழைப்பு தந்தையின் சேவையில் ஈடுபடுத்தப்படுகிறது எனவே தந்தையும் குழந்தைகளின்
கடும் உழைப்பைப் பார்த்து, இவர்கள் சேவைக்கான சாதனம் மிக நன்றாக உருவாக்கியிருக்கிறார்கள் என்று
குμ அடைகிறார். இருந்தாலும் அவர்களும் குழந்தைகள் தான் இல்லையா? தந்தை, குழந்தைகளின் கண்டு
பிடிப்பைப் பார்த்து குμ அடைவார் இல்லையா? எந்தக் காரியத்தில் ஈடுபட்டு இருக்கிறார்களோ, அதே
காரியத்தில் வெற்றி அடைந்து கொண்டிருக்கிறார்கள். அது அற்ப காலத்திற்கானதாக இருந்த போதிலும் வெற்றியோ
இருக்கிறது இல்லையா? எனவே பாப்தாதா வீடியோ செட்டைப் பார்ப்பதில்லை. ஆனால் அந்தக் குழந்தைகளை
பார்க்கிறார். நல்லது.
இதே சாதனம் மூலமாக பாரதம் மற்றும் வெளிநாட்டில் நாலாபுறங்களிலும் உள்ள குழந்தைகள்
பார்க்கிறார்கள் மற்றும் கேட்கிறார்கள் என்றால், பாப்தாதாவும் நாலாபுறங்களிலும் உள்ள அனைத்து குழந்தைகளுக்கு,
யார் இன்று மதுபன்னில் என்ன நடக்கும் என்ற இந்த ஆர்வத்திலேயே அமர்ந்திருக்கிறார்கள், உடலால்
பாரதம் மற்றும் வெளிநாட்டில் இருக்கிறார்கள், ஆனால் சூட்சும ரூபம் மூலமாக மதுபன்நிவாசியாக இருக்கிறார்கள்.
பாப்தாதா அந்த அனைத்து ஒளி வடிவ உடலிலிருக்கும் நினைவு சொரூப ஆத்மாக்களுக்கு, விசேஷ அன்பு
நினைவுகளைக் கொடுக்கிறார். பாப்தாதா ஒரு சபையைப் பார்ப்பதில்லை, இரண்டு சபைகளைப் பார்க்கிறார்.
ஒன்று நேரெதிரில் ஸ்தூலமாக இருக்கும் சபை மற்றும் இன்னொன்று, சூட்சும சபை. அனைவரின் நினைவு
வந்து சேர்ந்து கொண்டிருக்கிறது. நல்லது. அனைத்து கடிதங்களுக்கும் ஒரே ஒரு பதில், அவர்கள் தந்தையை
நினைவு செய்கிறார்கள், தந்தை பல மடங்கு அந்த குழந்தைகளை நினைவு செய்கிறார். எப்படி அவர்கள்
(3/4)
24.07.2016
நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அதே போல் தந்தை ஒவ்வொரு குழந்தைகளின் குணங்களின்
மாலையை எப்பொழுதும் நினைவு செய்கிறார். அனைத்து குழந்தைகளுக்கும் சந்திப்பதின் ஒரே ஒரு எண்ணம்
தான் இருக்கிறது. மேலும் பாப்தாதாவும் அந்த மாதிரி சந்திப்பைச் செய்யக்கூடிய, எண்ணத்தை வைக்கும்
ஆத்மாக்களுக்கு விசேஷமாக அமிர்தவேளையின் சந்திப்பில், அதற்கான பலனைக் கொடுக்கிறார். மேலும்
அனைவருக்கும் சேவைக்கான விசேஷ எண்ணத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். நல்லது.
அந்த மாதிரி எப்பொழுதும் இரக்க உணர்வு மற்றும் கிருபை திருஷ்டி வைத்திருக்கக்கூடிய, எப்பொழுதும்
கொடுக்கக்கூடிய, பெறுவதற்கான விருப்பம் வைக்காத, ஆசை என்றால் என்னவென்று அறியாத நிலையில்
இருக்கக்கூடிய ஆத்மாக்களுக்கு, அந்த மாதிரி இராஜ வம்ச சம்ஸ்காரம் உள்ள சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு
பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.
டீச்சர்களுடன் சந்திப்பு லிநீங்கள் அனைவரும் பாப்தாதாவின் விசேஷ சகயோகி ஆத்மாக்கள். யார்
அன்பானவராக இருக்கிறாரோ அவர் தான் சகயோகி ஆக முடியும். எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு
சகயோகம் கொடுக்காமல் இருக்க முடியாது. அப்படி சேவாதாரி என்றால் அன்பானவர் மற்றும் சகயோகி.
உடன் இருப்பவர்கள், ஒத்துழைப்பு கொடுப்பவர்கள் மற்றும் இறுதியில் உடன் செல்பவர்கள். அப்படி மூன்றிலும்
எவரெடியாக இருப்பவர்கள். உடன் இருப்பது மற்றும் ஒத்துழைப்பு கொடுப்பது தற்போது உள்ளது. அடுத்து
செல்வது பிற்காலத்தில். எப்பொழுது இரண்டு விஷயங்களுமே சரியாகி விடுகின்றன என்றால், மூன்றாவதின்
தேதியும் வந்து விடும். நீங்கள் அனைவரும் பொறுப்பில் இருக்கும் ஆத்மாக்கள் தான் இல்லையா? எந்த
அளவு நீங்கள் ஒத்துழைப்பு கொடுப்பீர்களோ, உடன் இருப்பீர்களோ அந்த அளவு உங்களைப் பார்த்து மற்றவர்
களுக்கும் ஊக்கம் உற்சாகம் இயல்பாகவே அதிகரிக்கும். ஒருவர் நீங்கள் அனேகர்களுக்கு பொறுப்பாளராக
இருக்கிறீர்கள். நான் இல்லை, ஆனால் தந்தை என்னை பொறுப்பாளர் அதாவது கருவியாக்கி இருக்கிறார்.
நான் என்ற உணர்வு முடிந்து விட்டது தான் இல்லையா? நான் என்பதற்குப் பதிலாக என்னுடைய பாபா, நான்
செய்தேன், நான் சொன்னேன் என்பதற்குப் பதிலாக தந்தை செய்வித்தார், தந்தை செய்தார் என்றிருக்க
வேண்டும், பிறகு பாருங்கள் வெற்றி சுலபமாக கிடைத்துவிடும். உங்களுடைய வாயிலிருந்து எந்த அளவு பாபா
பாபா என்பது வெளியாகுமோ அந்த அளவு அனேகர்களை பாபாவின் குழந்தையாக ஆக்க முடியும். அனைவரது
வாயிலிருந்தும் இவருடைய கௌரவத்தில் மற்றும் விஷயத்தில் பாபாவே பாபா தான் என்ற வார்த்தை
வெளியாகும். அப்பொழுது தான் மற்றவர்களுக்கும் அந்த கௌரவம் வந்து விடும். எந்த விஷயம் முழு
ஈடுபாட்டில் இருக்குமோ அதுவே விஷயமாகவும் ஆகிவிடும். பாப்தாதா சின்னஞ்சிறு குமாரிகளின் தைரியம்
மற்றும் தியாகத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். பெரியவர்களோ அனுபவித்து விட்ட பிறகு என்ன தியாகம்
செய்திருக்கிறார்கள், அதுவொன்றும் பெரிய விஷயம் இல்லை. அனுபவித்துப் பார்த்தார்கள் பிறகு அதை
விட்டார்கள். ஆனால் இவர்களோ விவேகத்தின் காரியத்தை செய்து விட்டார்கள். எந்த அளவு சிறியவர்களோ
அந்த அளவு பெரிய புத்திசாலிகள்.
பார்ட்டிகளுடன் சந்திப்பு : குஜராத் லிஎப்பொழுதும் தன்னை மகாவீர் அதாவது மகான் ஆத்மா என்று
புரிந்து நடந்து கொள்கிறீர்களா? யாருடைய குழந்தையாக ஆகியிருக்கிறேன் மற்றும் என்னவாக ஆகியிருக்கிறேன்
என்ற இதை மட்டும் யோசித்தீர்கள் என்றால், ஒருபொழுதும் தேக உணர்வில் வர முடியாது. தேக உணர்வை
விட்டு விலகி மேல் நிலையில் இருங்கள் அதாவது பரிஷ்தா ஆகி மேலே பறந்து கொண்டே இருங்கள்.
பரிஷ்தாக்கள் கீழே வருவதில்லை, பூமியில் கால் வைப்பதில்லை. இந்த தேக உணர்வு கூட தேகம் என்ற தரை
ஆகும். எப்பொழுது பரிஷ்தா ஆகிவிட்டீர்களோ பிறகு தேகத்தின் பூமியில் எப்படி வர முடியும். பரிஷ்தா
என்றால் மேலே பறப்பவர். நீங்கள் அனைவருமே பறக்கும் பறவைகளா, கூண்டில் அடைக்கப்பட்ட பறவைகளாக
இல்லையே? அரைக்கல்பமோ கூண்டில் அடைக்கப்பட்டிருந்தீர்கள், இப்பொழுது பறக்கும் பறவை ஆகிவிட்டீர்கள்.
கீழே உள்ள ஈர்ப்பு உங்களை இழுக்க முடியாது. கீழே இருந்தீர்கள் என்றால், வேட்டைக்காரன் வேட்டையாடி
விடுவான், மேலே பறந்து கொண்டே இருந்தீர்கள் என்றால் யாரும் எதுவும் செய்ய முடியாது. நீங்கள்
அனைவரும் பறக்கும் பறவைகள் தான் இல்லையா? கூண்டு அழிந்து விட்டதா? எவ்வளவு தான் அழகான
கூண்டாக இருந்தாலும் கூட அதுவும் பந்தனம் தான் இல்லையா? இந்த ஆன்மீக சம்மந்தமும் தங்கக்
கூண்டாகும், இதிலேயும் மாட்டிக் கொள்ளக் கூடாது. சுதந்திரமாக இருப்பது என்றால், முழுமையான சுதந்திரம்
! எப்பொழுதும் பந்தனமற்ற நிலையில் இருப்பவர் தான் ஜீவன்முக்த் நிலையின் அனுபவம் செய்ய முடியும்.
நல்லது.
டெல்லி லி இப்பொழுது டெல்லியில் வியாபாரிகள் யாருமே உருவாகவில்லை. வியாபாரி ஒருவர் லட்சக்கணக்
கானவர்களை முன்னேறச் செய்ய முடியும். ஏனென்றால் ஒரு வியாபாரி அனேகர்களின் தொடர்பில் வருவார்.
எத்தனை பேர்களின் தொடர்பில் வருகிறாரோ அவர்களில் பாதி பேர்கள் கூட செய்தியை கேட்பவர்களாக
(4/4)
24.07.2016
இருந்தார்கள் என்றால் எவ்வளவு பேர் உருவாகிவிடுவார்கள். இதுவும் வியாபாரம். வியாபாரிக்கு எவ்வளவு
பங்கு கிடைக்கும். சேவைக்கான வாய்ப்பு வியாபாரிகளுக்கு மிக நன்றாக இருக்கிறது. இப்பொழுது வியாபாரிகளின்
குரூப்பை தயார் செய்து வாருங்கள்.
சேவாதாரிகளுடன் சந்திப்பு லி
எவ்வளவு உயர்ந்த மகத்துவம் யக்ஞத்திற்கு இருக்கிறதோ அந்த அளவு யக்ஞ சேவாதாரிகளுக்கும்
மகத்துவம் இருக்கிறது. இந்த சேவையின் நினைவுச்சின்னம் இன்று வரையிலும் அனேக தர்ம ஸ்தானங்களில்
இருக்கிறது. எந்த இடங்கள் எல்லாம் பிற்காலத்தில் தர்ம ஸ்தானமாக ஆகின்றனவோ, அதே ஸ்தானங்களில்
சேவைக்காகவும் மகத்துவம் இருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். அப்படி சைத்தன்ய மஹாயக்ஞத்தின்
சேவாதாரிகளுக்கு எவ்வளவு மகத்துவம் இருக்கிறது. நீங்கள் சேவை செய்து கொண்டிருக்கவில்லை. ஆனால்
பல மடங்கு பலன் என்ற வெண்ணையை அருந்திக் கொண்டிருக்கிறீர்கள். உலகில் கூட செல்வந்தர்களாக யார்
இருக்கிறார்களோ அவர்களைப் பற்றி இவர் எப்பொழுதுமே வெண்ணை அருந்திக்கொண்டிருப்பவர் என்று
கூறுவார்கள். ஏழையைப் பற்றி இவர் கஞ்சி குடிக்கிறார் என்று கூறுவார்கள் மற்றும் செல்வந்தர்களுக்காக
இவர் வெண்ணை சாப்பிடுகிறார் என்று கூறுவார்கள். சேவாதாரி என்றால் வெண்ணை அருந்துபவர். அப்படி
யானால் நீங்கள் எவ்வளவு உயர்ந்தவர்கள் ஆகிவிட்டீர்கள். ஒவ்வொரு அடியிலும் இரட்டை வருமானம்.
மனதின் மூலமாகவும் காரியங்கள் மூலமாகவும் வருமானம். மனம் மூலம் என்றால் நினைவில் இருந்து
கொண்டு சேவை செய்கிறீர்கள் என்றால் இரட்டை வருமானம் ஆகிவிட்டது இல்லையா. யார் எந்த அளவு
வருமானம் செய்கிறார்கள் என்பதை ஒவ்வொருவரும் அவர்களே தெரிந்து கொள்ள முடியும். சேவையின்
களஞ்சியம் நிரம்பியிருக்கிறது. மஹா யக்ஞம் என்றால் சேவையின் களஞ்சியம். சேவையின் களஞ்சியம்
நிரம்பியிருக்கிறது, யார் எவ்வளவு விரும்புகிறார்களோ அவ்வளவு செய்யலாம். வரையறையும் இல்லை.
மேலும் எண்ணி எண்ணி கொடுப்பதும் இல்லை. இந்த வேலை முடிவடைந்து விட்டது, இப்பொழுது நான்
என்ன செய்வது என்ற எல்லையும் இல்லை, களஞ்சியம் நிரம்பியிருக்கிறது. எல்லைக்கப்பாற்பட்ட களஞ்சியம்,
எனவே எவ்வளவு செய்ய விரும்புகிறீர்களோ அந்த அளவு செய்ய முடியும். இது அனைத்தும் நிறைந்தவராக
ஆவதற்கான லாட்டரி. லாட்டரியோ கிடைத்திருக்கிறது, இப்பொழுது லாட்டரியில் நான் எந்த லாட்டரியைப்
பெற்றிருக்கிறேன், பல கோடியா, லட்சங்களா, ஆயிரங்களா அல்லது நூறா, இது உங்கள் மேல் இருக்கிறது.
இது மிகப்பெரிய லாட்டரி, பல கோடிகளையும் பெற முடியும்.
பாப்தாதாவும் சேவாதாரி ஆகி வருகிறார். உலகத்தின் அனைத்து சக்திகள் நிறைந்த அதிகாரம் உள்ளவரின்
முதல் சொரூபமே உலக சேவகன் தான் இல்லையா? எப்படி தந்தையோ அதே போல் குழந்தைகளும் என்ற
வர்ணனையும் இருக்கிறது. நீங்கள் தடையற்ற சேவாதாரி தான் இல்லையா? சேவையின் இடையில் ஏதாவது
தடை வருவதில்லையே? வாயுமண்டலத்தின், உடன் இருப்பவர்களின், சோம்பலின், விதவிதமான தடைகள்
இருக்கின்றன. அப்படி எந்த விதமான தடை வந்தாலும் சேவை துண்டிக்கப்பட்டது இல்லையா? துண்டுபடாத,
இடைவிடாத சேவை இருக்க வேண்டும். எந்த விதமான தடையிலும் ஒருபொழுதும் வராதீர்கள். தடையற்ற
சேவை அதற்குத் தான் மகத்துவம் இருக்கிறது. எண்ண அளவில் கூட கொஞ்சம் கூட தடை வேண்டாம்.
அந்த மாதிரி இடைவிடாத சேவாதாரி ஒருபொழுதும் எந்தவொரு பாதிப்பிலும் வர மாட்டார். ஒருபொழுதும்
ஏதாவது வீணானவற்றின் பாதிப்பில் வராதீர்கள். அப்பொழுது தான் சேவை வெற்றி பெறும். இல்லை
என்றால், சேவையில் வெற்றி இருக்காது. நல்லது.
வரதானம் : சந்தேகத்தின் எண்ணங்களை முடிவுகட்டி மாயாவை வென்றவர்
ஆகக்கூடிய வெற்றி இரத்தினம் ஆகுக !
ஒருபொழுதும் நான் தோல்வி அடைந்து விடுவேனோ என்னவென்று தெரியவில்லையே ! என்ற
இந்த சந்தேகம் நிறைந்த எண்ணம் முன்பாகவே உருவாக வேண்டாம். சந்தேகபுத்தி உடையவராக இருப்பதினால்
தான் தோல்வி ஏற்படுகிறது. எனவே நான் வெற்றியை அடைந்தே காண்பிப்பேன் என்ற இந்த எண்ணம் தான்
எப்பொழுதும் இருக்க வேண்டும். வெற்றியோ என்னுடைய பிறப்புரிமை, அந்த மாதிரி உரிமை உடையவராகி
காரியம் செய்வதினால் வெற்றியின் அதிகாரம் அவசியம் கிடைக்கிறது, இதன் மூலமாகத் தான் வெற்றி
இரத்தினம் ஆகிவிடுவீர்கள். எனவே மாஸ்டர் ஞானம் நிறைந்தவரின் வாயிலிருந்து ஒருபொழுதும் தெரியவில்லை
என்ற வார்த்தை வெளியாகக்கூடாது.
சுலோகன் :
இரக்க பாவனை சுலபமாகவே பொறுப்புணர்வை வெளிப்படுத்தி விடுகிறது !
18
18.07.2016
காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே !
தன்னுடைய சுயதர்மத்தில் நிலைத்திருந்து தங்களுக்குள்
அன்போடு ஒருவருக்கொருவர் ஓம்சாந்தி சொல்லவும். இது கூட ஒருவருக்கொருவர்
மரியாதை அளிப்பதாகும்.
கேள்வி : பக்தியில் கூட பகவானுக்கு பிரசாதம் படைக்கிறார்கள். இங்கு குழந்தைகளாகிய நீங்களும்
படைக்கிறீர்கள். இந்த பழக்கம் ஏன்?
பதில்: ஏனென்றால் இது கூட அவருக்கு மரியாதை அளிப்பதாகும். சிவபாபா நிராகாரர், எதையும்
அனுபவிக்காதவர் என்பது உங்களுக்கு தெரியும். சாப்பிடுவதில்லை. ஆனால் வாசனை சென்றடைகிறது.
அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல், பதீத பாவனர் பாபா ஆவார். எனவே நிச்சயமாக அவருக்கு
பிரசாதம் வைக்க (படைக்க) வேண்டும்.
பாடல் : நம்முடைய தீர்த்த யாத்திரை தனிப்பட்டது.....
ஓம் சாந்தி. குழந்தைகளின் மனதிலிருந்தும் கூட ஓம் சாந்தி எழுகிறது. யாருக்காவது நமஸ்காரம் கூறினால்
அவர்களும் திரும்ப நமஸ்காரம் என்கிறார்கள். இங்கே தந்தை ஓம் சாந்தி என்றார். ஆகவே, அனைத்து
குழந்தைகள், இவருடைய ஆத்மா உட்பட அனைவரின் மனதிலிருந்தும் ஓம்சாந்தி என்றால் நாம் ஆத்மா
சாந்தி சொரூபமானவர்கள் என்பது வரும். பதில் மரியாதை அளிக்க வேண்டும் அல்லவா. இது பதிலாகிவிட்டது
அல்லவா ! வேறு யாரும் இவ்வாறு பொருளுடன் கூற முடியாது. பாபா ஞான சூரியன் ஓம் சாந்தி என்கிறார்.
ஞான சந்திரன் கூட ஓம் சாந்தி என்கிறார். ஞான நட்சத்திரங்கள் கூட ஓம் சாந்தி என்கிறார்கள். நட்சத்திரங்களில்
அனைவரும் வந்து விட்டனர். இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு சுய தர்மம் பற்றி தெரிந்து விட்டது.
அதாவது நாம் சாந்தி சொரூபமானவர்கள், சாந்தி தாமத்தில் வசிக்கக் கூடியவர்கள். இது உங்களுக்கு நிச்சயமாகி
விட்டது. நீங்கள் ஆத்மாவை சரியாகத் தெரிந்துக் கொண்டீர்கள். மகான் ஆத்மா, பாவ ஆத்மா என்று கூட
கூறப்படுகிறது. ஆத்மா தான் ஒரு உடலை விட்டு விட்டு இன்னொன்றை எடுக்கிறது. ஆனால் ஆத்மாவின்
உண்மையான அறிமுகம் யாருக்கும் இல்லை. ஆத்மாக்களாகிய நாம் இவ்வளவு சிறியதாக இருக்கிறோம். 84
பிறவிகளின் நடிப்பை நடிக்கின்றோம். இது உங்களுக்கும் தெரியவில்லை. வேறு யாருக்கும் தெரியவில்லை.
இப்போது நீங்கள் எதிரில் அமர்ந்திருக்கிறீர்கள். தந்தையை தன்னுடையவராக்கி கொண்டீர்கள். குழந்தைகள்
சொத்து அடைவதற்காக தந்தையை தன்னுடையவராக மாற்றிக் கொள்கிறார்கள்.
ஆத்மாக்களாகிய நம்முடைய எல்லையற்ற தந்தை இந்த பிரம்மாவின் உடலில் வந்திருக்கிறார், பிரம்மாவின்
உடலில் வந்து ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தை உருவாக்குகிறார்கள் என குழந்தைகளாகிய நீங்கள்
அறிகிறீர்கள். போன கல்பத்தில் கூட ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் அதாவது சூரிய வம்சத்தின் தர்மம்
ஸ்தாபனை ஆகியது. இந்த ஸ்தாபனை காரியத்தை கல்ப கல்மாக பாபா தான் செய்கிறார். அவருக்கு பகவான்
என்று கூறப்படுகிறது. துக்கத்தை நீக்கி சுகம் கொடு என்று அனைவரும் பகவான் தந்தையிடம் கேட்கிறார்கள்.
சுகம் கிடைத்து விடுகிறது என்றால் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இங்கே கேட்கிறார்கள். ஏனென்றால்
துக்கம் இருக்கிறது. அங்கே எதையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அனைத்தையும்
கொடுத்து விட்டு சென்று விடுகிறார். ஆகையால் சத்யுகத்தில் யாரும் பாபாவை நினைப்பதில்லை. குழந்தைகளை
நான் சுக உலகிற்கு அதிபதியாக்குகிறேன் என பாபா புரிய வைக்கிறார். இந்த பாபாவிடமிருந்து நாம் மீண்டும்
சுகதாமத்தின் ஆஸ்தி அடைந்து கொண்டிருக்கிறோம் என குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துக் கொள்கிறீர்கள்.
எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற சுகத்தை அடைகிறீர்கள். பக்தி மார்க்கம் எப்படி நடக்கிறது என்று
உங்களுக்குப் புரிய வைக்கப்படுகிறது. மனித சிருஷ்டி என்ற மரம் எவ்வாறு உருவாகிறது, வளர்கிறது,
அழிகிறது அல்லது நாடகத்தின் முதல், இடை, இறுதி என்ன? இது சாகார உலகம் ஆகும். அது நிராகார
உலகம் ஆகும். நாம் முழுமையாக அரைக் கல்பம் பக்தி செய்தோம் என குழந்தைகள் புரிந்துக் கொண்டீர்கள்.
இப்போது கலியுகத்தின் முடிவாகும். சங்கமத்தில் சொத்து கிடைக்கிறது. இதை குழந்தைகளுக்கு நன்கு புரிய
வைக்க வேண்டும். இப்போது நாம் சங்கமத்தில் இருக்கின்றோம். இதை குழந்தைகளாகிய நீங்கள் தான்
புரிந்துக் கொள்கிறீர்கள். எது வரை அறிமுகம் கொடுக்கவில்லையோ அது வரை வேறு யாரும் புரிந்துக்
கொள்ள மாட்டார்கள். நிச்சயம் சங்கம யுகம் வருகிறது. அப்போது பழைய உலகம் புதியதாக மாறுகிறது. இது
முழுவதும் பழைய உலகம் ஆகும். இதற்கு கலியுகம் என்று பெயர். முதன் முதலில் முழு உலகத்திலும்
ஒரேயொரு தர்மம் தான் இருக்கிறது என்பதை கூட நீங்கள் அறிகிறீர்கள். புது உலகத்தில் பாரத கண்டம்
மட்டுமே இருக்கிறது. மிக சில மனிதர்களே இருக்கிறார்கள். புதிய உலகிற்கு தான் சொர்க்கம் என்று கூறப்படுகிறது.
இதன் மூலம் புது உலகில் புதிய பாரதம் இருந்தது என்பது நிரூபணம் ஆகிறது. இப்போது பழைய உலகத்தில்
18.07.2016
(2/4)
பழைய பாரதம் இருக்கிறது. புது உலகம் புதிய பாரதம், புதுடில்லி வேண்டும் என காந்தி கூட கூறினார்.
இப்போது புதிய பாரதம் அல்லது புது டில்லி இல்லை. புதிய பாரதத்தில் இந்த லஷ்மி நாராயணனின் இராஜ்யம்
இருந்தது. இப்போது அதே பாரதத்தில் இராவணனின் இராஜ்யம் இருக்கிறது. புதிய உலகம், புது டில்லி, இந்த
காலத்திலிருந்து இந்த காலம் வரை இவர்களுடைய இராஜ்யம் இருந்தது என்பதை கூட எழுத வேண்டும்.
புது உலகத்தை உருவாக்கக் கூடியவர்களே இதை புரிந்துக் கொள்வார்கள். பிரம்மா மூலமாக புது உலகம்
சொர்க்கம் ஸ்தாபனை ஆகின்றது. அந்த சொர்க்கத்தின் ஆஸ்தி அடைவதற்காக நீங்கள் வருகிறீர்கள். பாபா
உங்களுக்கு யுக்தியை தெரிவிக்கிறார். மேலும் முயற்சி செய்விக்கின்றார். எதிரில் சந்திக்கவும் வருகிறீர்கள்.
மேலும் அங்கேயும் அமர்ந்து படிக்கிறீர்கள். நேரடியாக சந்திக்க மனம் விரும்புகிறது. அந்த மனிதர்கள் மனிதர்
களை நேரடியாக சந்திக்கிறார்கள். இங்கே நீங்கள் சிவபாபாவை சந்திப்பதற்காக நாங்கள் செல்கிறோம் என
கூறுவீர்கள். அவரோ நிராகார் அல்லவா ! ஆத்மாக்களாகிய நாமும் நிராகாரர், நாமும் இங்கே நடிப்பதற்காக
வருகிறோம் அல்லவா. யாருக்கு பெயர் (பாகம்) இருக்கிறதோ அவர்கள் நிச்சயம் நடிகர்கள் ஆவர். பகவானுக்கும்
பெயர் (பார்ட்) இருக்கிறது அல்லவா. நிராகாரர் சிவனை தான் பகவான் என்று அழைக்கிறோம். வேறு யாருக்கும்
பகவான் என்று கூற முடியாது. பகவான் நிராகாரர் என்று பாடப்படுகிறது. அவருக்கும் பூஜை நடக்கிறது.
ஆத்மாக்களுக்கும் பூஜை நடக்கிறது. ருத்ர யக்ஞத்தை படைக்கிறார்கள் அல்லவா. அவர்கள் மண்ணினால்
சாலிகிராமத்தை உருவாக்குகிறார்கள். கல்லினால் உருவாக்குங்கள் அல்லது மண்ணினால். மண்ணினால் செய்ததை
உடைப்பது எளிதாக இருக்கின்றது. உலகத்தினருக்கு இந்த விஷயங்கள் பற்றி தெரியவில்லை. ருத்ர வேள்வியில்
எத்தனை ஆத்மாக்களுக்கு பூஜை செய்ய முடியும். குழந்தைகள் நிறைய பேர் இருக்கிறார்கள். பக்தர்கள்
அனைவரும் பகவானின் குழந்தைகள் ஆவார்கள். பாபாவை நினைக்கிறார்கள். சிவபாபா பாரதத்தில் தான்
வருகிறார் என பாபா புரிய வைக்கிறார். நீங்கள் சில குழந்தைகளே அவருடைய உதவியாளர்களாக, இறை
தொண்டர்களாக மாறுகிறீர்கள். அவர்களுடைய பூஜையை தான் பக்தர்கள் சாலிகிராமமாக உருவாக்கி செய்கிறார்கள்.
வேள்விகள் படைக்கிறார்கள். அதில் சிறிய வேள்விகள் கூட இருக்கிறது. பெரியது கூட இருக்கிறது. மிகப்
பெரிய பணக்காரர்கள் பெரிய வேள்வியை படைக்கிறார்கள். லட்சம் லட்சம் உருவாக்குகிறார்கள். சிறிய வேள்வியாக
இருந்தால் 5லி10 ஆயிரம் உருவாக்குவார்கள். சேட் எப்படியோ அப்படி வேள்விகளையும் அதில் சாலிகிராமங்
களையும் உருவாக்குகிறார்கள். ஒரு சிவன் மற்றவை சாலிகிராமம் உருவாக்குகிறார்கள். பிறகு அவ்வளவு
பிராமணர்கள் வேண்டும். பல பேர் வேள்விகளை பார்த்திருப்பீர்கள். பாபா குழந்தைகளாகிய நமக்கு சேவை
செய்கின்றார் என அறிகிறீர்கள். பிறகு நாம் மற்றவர்களுக்கு சேவை செய்கிறோம். ஆகவே தான் பூஜை
நடக்கிறது. இப்போது நீங்கள் பூஜைக்குரியவர் ஆகிறீர்கள். பாபா தாங்கள் எப்போதும் பூஜைக்குரியவர் என
ஆத்மா கூறுகிறது. எங்களையும் பூஜைக்குரியவராக மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். பூஜைக்குரிய ஆத்மா சரீரம்
தரிக்கிறது, அப்போது பூஜைக்குரிய தேவ லி தேவதைகள் ஆகின்றன. ஆத்மாதான் பூஜைக்குரியதாகவும்
பூஜாôரியகவும் ஆகிறது. பாபா ஒரு முறை தான் வருகிறார். பிறகு ஒரு போதும் பாபா ஆத்மாக்களை படிக்க
வைக்க மாட்டார். இது நடக்காது. ஆத்மா தான் கேட்கிறது. ஆத்மா எப்படி உடல் மூலமாக கேட்கிறதோ அது
போல பரம்பிதா பரமாத்மா, சுப்ரீம் ஆத்மா கூட சரீரத்தின் ஆதாரத்தை எடுத்து இவர் மூலமாக கேட்கின்றார்.
இவர் மூலமாக இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். அவருக்கு தனக்கென்று உடல் கிடையாது. பிரம்மா, விஷ்ணு,
சங்கரருக்கு கூட தங்களுக்கு என்று சூட்சும உடல் இருக்கிறது. இங்கேயோ அனைவருக்கும் அவரவருக்கென்று
உடல் இருக்கிறது. இது சாகார உலகம் ஆகும். சிவபாபா நிராகார் ஆவார். அவர் ஞானக்கடல், சுகக்கடல்,
அன்புக்கடலாக இருக்கிறார். அவர் வந்து அனைவரையும் அழுக்கிலிருந்து தூய்மையாக மாற்றுகிறார். இதில்
தூண்டுதலின் எந்த விஷயமும் கிடையாது. நான் ஒரு வேளை தூண்டுதலினால் தூய்மையாக மாற்ற வேண்டும்
என்றால் பிறகு இங்கே வந்து ரதத்தை எடுக்க வேண்டிய அவசியம் என்ன? சிவனுடைய கோவிலில்
முன்னால் காளை மாட்டை வைக்கிறார்கள். மனிதர்களின் புத்தி முற்றிலும் கல் புத்தியாக இருக்கின்ற காரணத்தால்
எதையும் புரிந்துக் கொள்ளவில்லை. காளை மாட்டை சிவனுக்கு முன்னால் ஏன் வைக்கிறார்கள். கோ சாலை
என்ற பெயரை கேட்டதும் காளை மாட்டை வைத்து விட்டனர். இப்போது காளை மாட்டின் மீது யார் சவாரி
செய்தது. கிருஷ்ணரின் ஆத்மா சத்யுகத்தில் இருக்கிறது. விலங்கில் வந்து அமர்வதற்கு அவருக்கு என்ன
இருக்கிறது. எதையும் புரிந்துக் கொள்ளவில்லை. ஒரு திரௌபதி கிடையாது. நிறைய பேர் அழைக்கிறார்கள்.
அவர்கள் ஒரு நாடகத்தை உருவாக்கி விட்டனர். ஸ்ரீகிருஷ்ணர் புடவைகளை கொடுத்துக் கொண்டே போகிறார்.
பொருள் எதுவும் புரிய வில்லை. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் 21 பிறவிக்கு நிர்வாணம் ஆகக் கூடாது
என புரிந்துக் கொள்கிறீர்கள். எவ்விடத்தின் விஷயத்தை எங்கே கொண்டு சென்று விட்டனர். பக்தி மார்க்கத்தில்
பல கதைகள் இருக்கின்றது. இந்த கதைகள் அனைத்தும் அனாதியாகும் என்று கூறுகிறார்கள். மறுபிறவி
எடுத்து கேட்டுக் கொண்டே வந்துள்ளனர். அனாதி என்றாலும் எப்போதிலிருந்து ஆரம்பம் ஆகியது என்பது
தெரியவில்லை. இராவண இராஜ்யம் எப்போதிலிருந்து ஆரம்பம் ஆகியது என்பதும் தெரியவில்லை. அதை
பற்றி எந்த வர்ணனையும் இல்லை. நீங்கள் எவ்வளவு சேவை செய்கிறீர்கள். அந்த சூரியன், சந்திரன்,
18.07.2016
(3/4)
நட்சத்திரங்கள் போன்றவைகள் இருக்கின்றது. சத்யுகத்திலும் இருக்கின்றது. இப்போதும் இருக்கின்றது, அதை
மாற்ற முடியாது. நீங்கள் அனைவரும் நிமித்தமாக இருக்கிறீர்கள். பாரதத்தினரை தான் மீண்டும் இருளில்
இருந்து எடுத்து வெளிச்சத்திற்கு அழைத்து செல்ல வேண்டும். பக்தி மார்க்கத்திற்கு காரிருள் என்று கூறப்படுகிறது.
உங்களுக்கு மகிமைகள் இருக்கிறது. நீங்கள் பூலோக நட்சத்திரங்கள். நட்சத்திரம் இருக்கிறது என்றால் சந்திரன்,
சூரியன் கூட இருக்க வேண்டும்.
இது உங்களுடைய ஆன்மீக தீர்த்தமாகும். நீங்கள் பிறகு மரண உலகத்திற்கே வருவதில்லை. அது
போன்று யாத்திரைக்கு செல்கிறீôகள். இப்போது இது மரண உலகம் ஆகும். பிறகு இங்கேயே தான் அமர
லோகம் உருவாகும். துவாபர யுகத்திலிருந்து மரண லோகம் ஆரம்பம் ஆகியது. இப்போது நீங்கள் உண்மையிலும்
உண்மையான அமர கதையை அமர லோகத்திற்குச் செல்வதற்காகக் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். ஆத்மாக்
களாகிய நம்முடைய யாத்திரை தனிப்பட்டது என நீங்கள் அறிகிறீர்கள். நீங்கள் இங்கே அமர்ந்து யாத்திரைக்குப்
போவதற்கு முயற்சி செய்கிறீர்கள். நினைவினால் தான் உங்களுடைய விகமர்ங்கள் அழியும். அந்த யாத்திரைக்குச்
செல்கிறார்கள். விகர்மம் எங்கே அழிகின்றது? குடிக்கும் பழக்கம் மனிதர்களுக்கு எவ்வளவு இருக்கிறது
என்றால் மறைத்து கூட நிச்சயம் எடுத்து செல்கிறார்கள். இன்றோ யாத்திரையில் மிகவும் அழுக்கானவர்கள்
கூட இருக்கிறார்கள். அனைவருமே அழுக்கானவர்கள் அல்லவ.ô. பிராமணர்கள் எப்படி அழுக்காக இருக்கிறார்களோ
அப்படியே யாத்திரை செய்பவர்களும் அழுக்காக இருக்கிறார்கள். வழிகாட்டிகள் யாத்திரை செய்விக்கிறார்கள்.
அவர்களே தூய்மையாக இல்லை. நீங்கள் தூய்யைமாக இருக்கிறீர்கள் நீங்களே உண்மையான பிராமணன்.
உங்களுடைய ஆத்மா தூய்மையாக இருக்கிறது. நினைவு யாத்திரையினால் தான் நீங்கள் தூய்மையாகிறீர்கள்.
சதோபிரதானம் ஆக வேண்டும். பாபா அடிக்கடி இனிமையான குழந்தைகளே என எழுதுகிறார். இந்த
சிவபாபா ஆத்மாக்களுக்கு எழுதினார்லி என்னை நினைத்தால் நீங்கள் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாகி
சதோபிரதானமான உலகத்திற்கு அதிபதியாகி விடலாம். அவ்வளவு தான், ஒரேயொரு டைரக்ஷன் தான்
முக்கியமாக இருக்கிறது. எவ்வளவு எளிதாக இருக்கிறது. நினைவினால் தான் பாவங்கள் அழியும் நினைக்கவில்லை
என்றால் பாவங்கள் அழியாது. பிறகு தண்டனை அடைவீர்கள். நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள்
வருமானத்தை சம்பாதிக்கலாம் என பாபா கூறுகின்றார். உட்கார்ந்தாலும் எழுந்தாலும், சாப்பிட்டாலும் பாபாவை
மட்டும் நினையுங்கள். உங்களுடையது வருமானம் ஆகும். குழந்தைகளுக்கு இன்னும் எளிதாகும். இதில்
எந்த ஒரு கவனத்தின் விஷயமும் கிடையாது. ஸ்ரீநாத் கோவிலில் ஸ்ரீநாத்தின் நினைவில் அமர்கிறார்கள்.
பிரசாதம் படைக்கிறார்கள். இருப்பினும் கற்சிலை அல்லவா. பிரசாதம் கூட யாருக்கு படைக்க வேண்டும். ஒரு
சிவபாபா தான் அதிகாரி ஆவார். அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல் பதீத பாவனர் அவரே. நான்
எதையும் ஏற்றுக் கொள்வதில்லை என பாபா கூறுகின்றார். நீங்கள் என் மீது தண்ணீர் கலந்த பாலை ஊற்றுகிறீர்கள்.
இந்த பிரசாதத்தை படைக்கிறீர். ஏன்? நானோ நிராகாரன் எதையும் அனுபவிக்காதவன் என்ன பூஜை செய்கிறீர்கள்?
என் முன்னால் பிரசாரதம் வைத்தீர்கள். ஆனால் பக்தர்கள் பிரசாதம் வைக்கின்றனர், அவர்களே பங்கிட்டு
உண்கின்றனர். சிவபாபாவிற்கு நிச்சயம் பிரசாதம் படைக்க வேண்டும் என நீங்கள் அறிகிறீர்கள். பிறகு பங்கிட்டு
நீங்கள் உண்ணுகிறீர்கள். இதுவே ஒருவருக்கு மரியாதை அளிப்பதாகும். நான் சிவபாபாவிற்கு பிரசாதம் படைக்
கின்றோம், சிவபாபாவின் பொக்கிஷம் அல்லவா. யாருடைய பொக்கிஷமோ அவருக்கு நிச்சயம் பிரசாதம்
வைக்க வேண்டும். நீங்கள் பிரசாதம் படைக்கிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் தான் உண்ணுகிறீர்கள். இந்த
பிரம்மா உண்ணுகிறார். நான் உண்பதில்லை. மற்றபடி வாசனை வருகிறது அல்லவா. மிகவும் நன்றாக பிரசாதம்
செய்யப்பட்டிருக்கிறது. சொல்வதற்கு கூட உடல் வேண்டும் அல்லவா. இந்த பிரம்மா சாப்பிட முடியும். இந்த
உடல் இவருடையது அல்லவா. நான் இவருக்குள் மட்டும் பிரவேசம் ஆகிறேன். வாயை பயன்படுத்துகிறேன்.
குழந்தைகளாகிய உங்களை அழுக்கிலிருந்து தூய்யைமாக்குவதற்காக. பசு வாய் என கூறுகிறார்கள் அல்லவா.
உண்மையில் பசுவும் இருக்கிறது, இதிலிருந்து தான் குழந்தைகளாகிய உங்களை தத்தெடுக்கிறார் என நீங்கள்
அறிகிறீர்கள். இங்கே தாய் தந்தை இருவரும் இருக்கிறார்கள். ஆனால் தாய்மார்களை யார் பார்த்துக் கொள்வார்கள்.
ஆகையால் சரஸ்வதியை நிமித்தமாக நாடகத்தின் படி வைத்தனர். மாதா குருவின் மகிமைகள் கூட வேண்டும்
அல்லவா. குரு முதல் நம்பரில் பிரசித்தமானவர். குரு பிரம்மா என்பது சரியாகும். எப்படி தந்தையோ அப்படியே
குழந்தைகள். பிராமணர்களாகிய நீங்களும் உண்மையான குரு ஆகிறீர்கள். அனைவருக்கும் சொர்க்கத்தின்
உண்மையான வழியை காட்டுகிறீர்கள். ஆத்மா தான் வாய் மூலமாக மன்மனாபவ, மத்யாஜீபவ என்ற வழியைக்
காட்டுகிறது. தாய், தந்தை, குழந்தைகள் அனைவரும் அதே வழியை தெரிவிக்கிறார்கள். இங்கே நீங்கள்
நேரடியாக அமர்ந்திருக்கிறீர்கள். நினைவு இருக்கிறது. பிறகு வீட்டிற்குச் சென்றதும் மறந்து போய்விடுகிறது.
இங்கே ஆனந்தம் வருகிறது. பாபாவிடம் வந்திருக்கிறோம், சுயதரிசன சக்கரதாரி ஆகி முக்தி தாமம், பாபாவை
மற்றும் ஆஸ்தியை நினையுங்கள் என பாபா கூறுகின்றார். நல்லது.
18.07.2016
(4/4)
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை
வணக்கம். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீக தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம் :
1. தங்களுக்குள் ஒருவர் மற்றொருவருக்கு மற்றும் தந்தைக்கு உண்மையான மதிப்பளிக்க
வேண்டும். பாபா எதையும் அனுபவிக்காதவர் ஆவார். ஆனால் யாருடைய பண்டாராவிலிருந்து
பாலனை நடக்கிறதோ அவருக்கு முதலில் நிச்சயம் படைக்க (போக்) வைக்க வேண்டும்.
2. பூஜைக் குரியவராக ஆவதற்கு இறை தொண்டர் ஆக வேண்டும். பாபாவுடன் சேவையில்
உதவியாளராக வேண்டும். எப்போது ஆத்மா உடல் இரண்டும் தூய்யைமயாகிறதோ அப்போது
பூஜை நடக்கும்.
வரதானம் : அதிகாரி (உரிமையுடையவர்) என்ற நினைவு மூலமாக அனைத்து
சக்திகளையும் அனுபவம் செய்யக் கூடிய பிராப்தி சொரூபம் ஆகுக !
புத்தியின் சம்மந்தம் ஒரு தந்தையிடம் இருந்தால் அனைத்து சக்திககளும், ஆஸ்திகளும் அதிகாரத்தின்
வடிவமாக கிடைக்கிறது. யார் அதிகாரி என புரிந்துக் கொண்டு ஒவ்வொரு செயலையும் செய்கிறார்களோ
அவர்களுக்கு சொல்வதிலும், எண்ணத்திலும் கூட கேட்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்த அதிகாரி
என்ற நினைவு தான் அனைத்து சக்திகளையும் பிராப்தியையும் அனுபவம் செய்விக்கிறது. அனைத்து சக்திகளும்
நம்முடைய பிறப்புரிமை என்ற பெருமிதம் இருக்கட்டும். அதிகாரி ஆகி நடந்தால் அடிமைத்தனம் முடிந்து
போகும்.
சுலோகன் : தன்னுடனேயே இயற்கையும் தூய்மையாக மாற்ற வேண்டும்
என்றால் முழுமையாக பற்றிலிருந்து விடுபடுங்கள்.
(1/4)
19
19.07.2016
காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! இந்த பாரதபூமி நிராகார தந்தையின் ஜென்ம பூமியாகும். இங்கு
தான் தந்தை உங்களுக்கு இராஜயோகம் கற்பித்து, இராஜ்யத்தை அளிக்க மற்றும் உங்களுக்கு
சேவை செய்ய வருகிறார்.
கேள்வி: சிவபாபா தன்னுடைய ஒவ்வொரு குழந்தையிடமும் என்ன ஒரு வாக்குறுதி எடுக்குமாறு
செய்விக்கிறார்?
பதில்: இனிமையான குழந்தைகளே, பாபா நாங்கள் எந்த ஒரு விகர்மமும் செய்ய மாட்டோம் என்று
உறுதி எடுங்கள். 5 விகாரங்களை நாம் தானமாகக் கொடுக்கிறோம். உள்ளுக்குள் பயம் இருக்க வேண்டும்.
ஒரு வேளை நீங்கள் தானம் கொடுத்து விட்டு, பிறகு திரும்பப் பெற்றுக் கொண்டீர்கள் என்றால் மிகவுமே
பாவம் ஏற்பட்டு விடும். அதற்குப் பிறகு கடுமையான தண்டனை வாங்க வேண்டி வரும். ஹரிச்சந்திரரின்
கதை கூட இது பற்றித் தான் அமைக்கப்பட்டுள்ளது.
ஓம் சாந்தி. இது குழந்தைகளுடைய இறை மாணவ வாழ்க்கையாகும். நாம் அவரிடம் வந்துள்ளோம்
என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். அவரே கல்ப கல்பமாக பாரதவாசி குழந்தைகளுக்கு வந்து இராஜ்ய
பாக்கியத்தை அளிக்கிறார். பாரதத்தில் தான் வருகிறார் இல்லையா? இது பாரத பூமியாகும். தங்களது பூமி மீது
மிகுந்த அன்பு, மதிப்பு இருக்கும். எப்படி யாராவது வெளிநாட்டின் பெரிய மனிதர் இங்கு இறந்து விட்டார்
என்றால் அந்த உடலை வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்கிறார்கள் அல்லது இங்கு இருந்த யாராவது பெரிய
மனிதர் வெளிநாட்டில் இறந்து விட்டார் என்றால், அவரது உடலை இங்கு எடுத்து வருகிறார்கள். தங்களது
பூமி மீது மதிப்பு வைக்கிறார்கள். பாரதத்திற்கு பகவானினுடைய ஜென்ம பூமி என்று கூறப்படுகிறது. யாரை
பகவான் அல்லது அல்லா, பரமாத்மா என்று அழைக்கிறார்களோ அவருக்கு முன்னால் இப்பொழுது நீங்கள்
அமர்ந்துள்ளீர்கள் என்பதையும் நீங்கள் அறிந்துள்ளீர்கள். பெயர் அவசியம் வேண்டும் அல்லவா? அல்லா
என்கிறார்கள். இருந்தாலும் லிங்கத்திற்குப் பூஜை செய்கிறார்கள். இறைவன் அல்லது குதா என்று கூறுகிறார்கள்
என்றால், நிச்சயம் அவருடைய அடையாளம் வேண்டும் அல்லவா? லிங்கத்தை எல்லா புறங்களிலும் பூஜிக்கிறார்கள்.
படங்களில் கூட தற்காலத்தில் தேவதைகளுக்கு முன்னால் பரமபிதா பரமாத்மாவின் சித்திரமாக லிங்கத்தை
காண்பிக்கிறார்கள். அவர் எல்லோரையும் விட உயர்ந்தவர். அவருக்கு தனக்கென்று சரீரம் கிடையாது. எனவே
நிராகாரமானவர் என்று கூறப்படுகிறது. சாகாரமானவர் கிடையாது. நாம் அவரிடமிருந்து கல்வியைப் பெறுவதற்காக
அவருக்கு முன்னால் கல்ப கல்பமாக ஆஜராகிறோம் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள்
அறிந்துள்ளீர்கள். பகவானுவாச் லி பகவான் கூறுகிறார் என்றால், நிச்சயம் இராஜயோகம் கற்பித்திருக்கக் கூடும்.
மாணவர்களுக்கு இராஜயோகம் கற்பித்திருந்தார் மற்றும் அவர்கள் ராஜா ராணி ஆகி இருந்தார்கள். சண்டை
ஆகியவற்றின் விஷயம் கிடையாது. இந்த இலட்சுமி நாராயணர் ஆகியோர் யுத்தத்தின் மூலமாக அரசாட்சியை
அடைந்தார்களா என்ன? முற்றிலும் கிடையாது. இவர்கள் சத்யுகத்தில் எப்படி இராஜ்யத்தை அடைந்தார்கள்
என்பது உலகத்திற்கு முற்றிலும் தெரியாது. நாம் தந்தையிடமிருந்து இராஜ்யத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம்
என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துள்ளீர்கள். நாம் அவருக்கு முன்னால் அமர்ந்துள்ளோம்.
அவர் தான் பாபா ஆவார். கிருஷ்ணர் அல்ல. கிருஷ்ணரோ சிறிய குழந்தை ஆவார். அவர் படைப்பு ஆவார்.
இப்பொழுது உண்மையில் கிருஷ்ணர் தனது பதவியை அடைந்து கொண்டிருக்கிறார். பின் வருங்காலத்தில்
கிருஷ்ணர் என்று அழைக்கப்படுவார். இவை எல்லாமே முழுமையாக படிப்பின் விஷயமாகும்.
பாபா நமக்கு இராஜயோகம் கற்பிக்கிறார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். எப்படி மனிதர்கள் மனிதர்களை
வழக்கறிஞர்களாக, பொறியியல் வல்லுநராக ஆக்குகிறார்கள். அவர்களும் மனிதர்கள் தான் இல்லையா? நாமும்
மனிதர்கள் தாம். ஆனால் நாம் பதீதமாக உள்ளோம் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். இப்பொழுது தந்தை
தூய்மையாகவும் ஆக்குகிறார். மேலும் நமக்கு ஆஸ்தியும் அளிக்கிறார். பாவன உலகம், புது உலகமாகத் தான்
இருக்கும். புது உலகத்தில் இருப்பதே இராஜ்யம். இப்பொழுது நீங்கள் தந்தைக்கு முன்னால் அமர்ந்துள்ளீர்கள்.
எப்படி லௌகீக தந்தை குழந்தைகளுக்கு அன்புடன் அமர்ந்து புரிய வைக்கிறார். இவர் பின் பரலௌகீக
விசித்திரமான தந்தை ஆவார். இவருக்காக த்வமேவ மாதாஸ்ச பிதா.... (தந்தையும் நீயே தாயும் நீயே) என்று
நீங்கள் பாடிக் கொண்டே வந்துள்ளீர்கள். இச்சமயம் இவர் தனது பாகத்தை ஏற்று நடிக்கிறார் என்பதை நீங்கள்
அறிந்துள்ளீர்கள். அதற்கு பக்தி மார்க்கத்தில் நாம் பாடல் பாடுகிறோம். நாங்கள் சிவபாபாவிடம் வந்துள்ளோம்
என்று நீங்கள் கூறுகிறீர்கள். கடிதம் கூட சிவபாபா ஸ்ரீ/ர் பிரம்மா என்று எழுதுகிறீர்கள். யாருக்காவது நீங்கள்
கடிதத்தைக் காண்பித்தீர்கள் என்றால், ஆச்சரியப்படுவார்கள். சிவபாபா ஸ்ரீ/ர் பிரம்மா என்று இது போல ஒரு
பொழுதும் கேள்விப்படவே இல்லையே ! சிவபாபா பிரம்மாவிற்குள் வந்து விஷ்ணுபுரியை ஸ்தாபனை செய்துக்
கொண்டிருக்கிறார். எதிரிலேயே நிற்கிறார் மேலே இருப்பவர் சிவபாபா. சிவபாபா பிரம்மா மூலமாக ஸ்தாபனை
19.07.2016
(2/4)
செய்திருந்தார். இப்பொழுது மீண்டும் செய்துக் கொண்டிருக்கிறார். இது இல்லற மார்க்கம் ஆகும். உலகீய
படிப்பில் கூட சட்டம் படிப்பிக்கிறார்கள் என்றால், ஆண் பெண் இருவரும் படிக்கிறார்கள். பெண்கள் கூட
நீதிபதி, வழக்கறிஞர், மருத்துவர்களாக ஆகிறார்கள். இது கூட இல்லற மார்க்கமாகும். சந்நியாசிகளினுடையது
துறவற மார்க்கமாகும். அது தனி ஆகும். ஒரு வேளை சங்காராச்சாரியார் வராமல் இருந்திருந்தார் என்றால்,
தூய்மையினுடைய அணு அளவும் கூட இருந்திருக்காது என்பதையும் பாபா புரிய வைத்திருந்தார். பாரதம்
முற்றிலுமே எரிந்து போய் விட்டிருக்கும். பாரதத்தை தாங்குவதற்காக இவர்களுடைய பாகம் அமைந்துள்ளது.
பாரதம் மிகவுமே தூய்மையாக இருந்தது. இப்பொழுது தூய்மையற்றதாகி விட்டது. இப்பொழுது பாரதம்
எவ்வளவு ஏழையாகி உள்ளது. தங்க இலங்கை கடலுக்குக் கீழே சென்று விட்டது என்று கூறுகிறார்கள்.
இப்பொழுது தங்கத்தினுடைய இலங்கை ஒன்றும் இருக்க முடியாது. இவை எல்லாமே கதைகளாக எழுதி
உள்ளார்கள். இவற்றால் எந்த நன்மையும் கிடையாது.
உண்மையில் பாபா நம்மை முற்றிலுமே சுலபமான நினைவின் பலத்தினால் எவ்வளவு உயர்ந்தவராக
ஆக்குகிறார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். நிரந்தர நினைவில் இருப்பதற்கான முயற்சி
செய்தீர்கள் என்றால் பாவங்கள் அழிந்து போய் விடும் என்று தந்தை வாக்குறுதி கொடுக்கிறார். பக்தி மார்க்கத்தில்
கூட நினைவு செய்வதற்கான முயற்சி செய்துள்ளீர்கள் அல்லவா? ஏன் நினைவு செய்கிறார்கள்? சாட்சாத்காரம்
(காட்சி தெரிதல்) ஆக வேண்டும் என்பதற்காக ! கிருஷ்ணபுரியில் நமக்கு அரசாட்சி கிடைத்து விட வேண்டும்
அல்லது நாம் நரனிலிருந்து நாராயணர் ஆகி விட வேண்டும் என்பதற்காக நினைவு செய்யவில்லை. நாம்
மனிதனிலிருந்து தேவதை ஆகலாம் என்ற இந்த விருப்பம் உங்களுக்குக் கூட இருக்கவில்லை. மனிதனிலிருந்து
தேவதையாக .. என்று பாடவும் செய்கிறார்கள். உண்மையில் கலியுகத்திற்குப் பிறகு சத்யுகம் வரும் என்பதை
நீங்கள் பார்க்கிறீர்கள். கலியுகத்தில் இத்தனை மனிதர்கள் உள்ளார்கள். சத்யுகத்தில் ஒரு தர்மம் இருக்கும்.
இப்பொழுது உங்களுக்கு ஆத்மா மற்றும் பரமாத்மா பற்றிய ஞானம் கூட கிடைத்துள்ளது. உலகத்தில் ஒரு
மனிதருக்குக் கூட ஆத்மா பற்றிய ஞானம் இல்லை. ஆத்மாவில் 84 பிறவிகளின் பாகம் எப்படி பொருந்தி
உள்ளது என்பது யாருக்கும் தெரியாது. இந்த வார்த்தைகள் கூட ஒரு பொழுதும் யாரிடமிருந்தும் கேட்கவே
இல்லை. தந்தை ஞானக் கடல் பதீதபாவனர், நிராகாரமானவர் ஆவார். நமது ஆத்மா இப்பொழுது பாவ
ஆத்மாவிலிருந்து புண்ணிய ஆத்மாவாக ஆகிக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். சத்யுகத்தில்
எல்லோருமே புண்ணிய ஆத்மாக்கள் ஆவார்கள். இங்கு இருப்பவர்கள் பாவ ஆத்மாக்கள் ஆவார்கள். அப்படி
யின்றி நிறைய தான புண்ணியம் செய்பவர்களுக்கு புண்ணிய ஆத்மா என்று கூறப்படுகிறது என்பதல்ல !
புண்ணிய ஆத்மாக்கள் இருப்பதே சத்யுகத்தில் தான் இங்கு எந்த மனிதர்கள் தான புண்ணியம் செய்கிறார்களோ,
அவர்களை புண்ணிய ஆத்மா என்று நினைக்கிறார்கள். அங்கு உங்களுக்கு தான புண்ணியம் ஆகியவை
செய்ய வேண்டிய அவசியம் இருப்பதில்லை. அங்கு யாரும் ஏழைகள் இருப்பதே இல்லை. நீங்கள் அங்கு
எப்பொழுதுமே புண்ணிய ஆத்மாவாக இருப்பீர்கள். நீங்கள் உடல், மனம், பொருள் அனைத்தையும் எல்லை
யில்லாத தந்தையின் பொருட்டு அளிக்கிறீர்கள். அதற்கு சமர்ப்பணம் ஆவது என்று கூறப்படுகிறது. முதலில்
நான் சமர்ப்பணம் ஆகிறேனா, இல்லை நீங்களா என்று தந்தை கூறுகிறார். முதலில் நீங்கள் பலி ஆகிறீர்கள்.
அப்பொழுது பிறகு 21 பிறவிகளுக்கு சமர்ப்பணம் கிடைக்கும் என்று பாபா கூறுகிறார். இந்த விஷயங்களை
இப்பொழுது நீங்கள் நல்ல முறையில் புரிந்துள்ளீர்கள். நேரடியாகக் கேட்கிறீர்கள். வீட்டில் இருக்கிறீர்கள் என்றால்,
அங்கு முரளி வருகிறது. தூரத்திலிருந்து கேட்கிறீர்கள். இப்பொழுது தந்தைக்கு முன்னால் அமர்ந்துள்ளீர்கள்.
குழந்தைகளே! நான் உங்களுக்கு தந்தையாகவும் இருக்கிறேன் என்று தந்தை கூறுகிறார். இங்கு குருட்டு
நம்பிக்கையின் எந்த விஷயமும் கிடையாது. தந்தையுமாக இருக்கிறார். ஆசிரியராகவும் இருக்கிறார். தந்தை
யினுடையவராக ஆகும் பொழுது அவர் கல்வி அளிக்கிறார். உங்களுடைய புத்தியில் இப்பொழுது முழு
ஞானம் உள்ளது. 84ன் சக்கரம் கூட உங்களுக்கு புரிய வைக்கப்படுகிறது. யார் 84 பிறவிகள் எடுக்கக்
கூடியவர்களாக இல்லையோ, அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். உண்மையில் நாம் 84ன் சக்கரம் சுற்றி
வந்து இப்பொழுது திரும்பிச் செல்கிறோம் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். ஆத்மாவாகிய நீங்கள் அசரீரியாக
வந்திருந்தீர்கள். பிறகு அசரீரியாகி திரும்பிச் செல்ல வேண்டும் என்று தந்தை கூறுகிறார். நீங்கள் தூய்மையான
ஆத்மாக்களாக ஆகிச் செல்கிறீர்கள். தூய்மையாக ஆவதற்காக நீங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்.
யோகபலம் அதாவது நினைவின் பலத்தினால் நீங்கள் தூய்மையாக ஆகி விடுவீர்கள். யோகம் என்ற வார்த்தை
சாஸ்திரங்களினுடையதாகும். சரியான வார்த்தை நினைவு என்பதாகும். மனைவிக்கு கணவனின் அல்லது
கணவனுக்கு மனைவியின் நினைவு இருக்கிறது அல்லவா? யோகம் என்பதன் பொருளே நினைவு தான். என்
ஒருவனை நினைவு செய்யுங்கள் மற்ற தொடர்புகளிலிருந்து புத்தி யோகத்தைத் துண்டித்து உங்களது தந்தையாகிய
என்னுடன் புத்தி யோகத்தை இணையுங்கள். நினைவு செய்யுங்கள். எந்த அளவு நினைவு செய்வீர்களோ
அந்த அளவு உங்களுடைய விகர்மங்கள் விநாசம் ஆகும். உண்மையில் பாரதத்திற்கு கல்ப கல்பமாக ஆஸ்தி
கிடைக்கிறது. சிவஜெயந்தி கூட பிரசித்தமானதாகும். எப்படி புத்தர், கிறிஸ்து ஆகியோருக்கு ஜெயந்தி உள்ளது.
19.07.2016
(3/4)
அதே போல நிராகார சிவனுக்கு ஜெயந்தி உள்ளது. அவர் உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஆகிறார். கிருஷ்ண
ஜெயந்தி கூட பிரசித்தமானதாகும். ஆனால் அவர் வந்து என்ன செய்கிறார் என்பது யாருக்குமே தெரியாது.
கிருஷ்ணர் சத்யுகத்தின் இளவரசராக இருந்தார். அவசியம் அவருக்கு யாரோ அப்பேர்ப்பட்ட கர்மத்தினைக்
கற்பித்திருக்கக் கூடுமல்லவா! அதனால் சத்யுகத்தின் இளவரசர் ஆனார். சிறிய குழந்தை தூய்மையாக இருக்கவே
செய்யும். அங்கு விகாரத்தின் விஷயம் இருப்பதில்லை. குழந்தை தூய்மையாக இருக்கும். பகவான் ஒரே ஒரு
நிராகாரமானவர் ஆவார். இறைவன் ஒருவர் மற்றது முழுவதுமே படைப்பு ஆகும். படைப்பிடமிருந்து ஒரு
பொழுதும் படைப்பிற்கு ஆஸ்தி கிடைக்க முடியாது. ஆஸ்தி தந்தையிடமிருந்து கிடைக்கும். சகோதரனுக்கு
சகோதரனிடமிருந்து ஆஸ்தி கிடைக்க முடியாது. நீங்கள் அனைவரும் சகோதர சகோதரர்கள் ஆவீர்கள்.
சகோதரத்துவம் என்று கூறுகிறார்கள் அல்லவா? தந்தை ஒரே ஒருவர் ஆவார். ஆஸ்தி தந்தையிடமிருந்து
கிடைக்கும். அனைத்து சகோதரர்களுக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல் ஒரு தந்தை ஆவார். அனைத்து
ஆத்மாக்களுக்கும் தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைத்துக் கொண்டிருக்கிறது. நான் ஆத்மாக்களுக்கு வந்து
கற்பிக்கிறேன். ஆத்மாக்களுக்கு சத்கதி அளிக்கிறேன் என்று தந்தை கூறுகிறார். தந்தை வந்து இராஜயோகம்
கற்பிக்கிறார். இந்த படிப்பின் பதவியை நீங்கள் இங்கு அடைவதில்லை. அவர்கள் வழக்கறிஞர்களாக இந்த
பிறவியில் ஆகிறார்கள். பிறகு மற்றொரு பிறவி எடுத்து மறுபடியும் படிப்பார்கள்.
இந்த படிப்பினால் நாங்கள் 21 பிறவிகளுக்கு பிராப்தியை அடைகிறோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
அங்கு சத்யுகத்தில் மருத்துவர் ஆகியோர் யாரும் இருப்பதில்லை. அங்கு நோய் நொடியே இருக்காது. அங்கு
நீங்கள் கர்ப்ப மாளிகையில் இருக்கிறீர்கள். இங்கு கர்ப்ப சிறையில் இருக்கிறீர்கள். இங்கு நிறைய தண்டனைகள்
கிடைக்கிறது. அதனால் தான் இந்த சிறையிலிருந்து வெளியே கொண்டு வாருங்கள், நாங்கள் மீண்டும் எந்த
தவறும் செய்ய மாட்டோம் என்று முறையிடுகிறார்கள். தர்மராஜரிடம் வாக்குறுதி கொடுக்கிறார்கள். இங்கு
நீங்கள் சிவபாபாவிடம் வாக்குறுதி கொடுக்க வேண்டும். பாபா நாங்கள் ஒரு பொழுதும் விகர்மம் செய்ய
மாட்டோம். 5 விகாரங்களை நாங்கள் உங்களுக்கு கொடுத்து விடுகிறோம். விகாரங்கள் ஒன்றும் அப்படியேக்
சட்டென்று விடுபட்டு விடாது என்பதையும் தந்தை அறிந்துள்ளார். உள்ளுக்குள் பயம் இருக்க வேண்டும்.
நாம் விகாரங்களை தானம் கொடுத்த பிறகு, மீண்டும் எடுத்தோம் என்றால், பெரிய பாவமாகி விடும். எப்படி
ராஜா ஹரிச்சந்திரனின் உதாரணம் உள்ளது. அப்படியின்றி 5 விகாரங்கள் சட்டென்று விடுபட்டு விடும் என்பதல்ல
என்பதை தந்தை அறிந்துள்ளார். நேரம் பிடிக்கிறது. உங்களது கர்மாதீத நிலை ஆகி விடும் பொழுது, சண்டை
ஏற்படும். இந்த 5 விகாரங்கள் பெரிய எதிரி ஆகும். அதில் கூட முக்கியமான ஒன்று தேக அபிமானம் ஆகும்.
அதை தானம் கொடுப்பது எவ்வளவு கடினம் ஆகும். தன்னை ஆத்மா என்று உணர்ந்து, தந்தையாகிய
என்னை நினைவு செய்யுங்கள் என்று அடிக்கடி தந்தை கூறுகிறார். ஆனால் அது ஆவதில்லை. தேக
அபிமானி ஆவதால் பின்னர் காமத்தின் அடி ஏற்படுகிறது. தேக அபிமானம் எல்லாவற்றையும் விட கூர்மை
யானது ஆகும். தேஹீ அபிமானி (ஆத்ம உணர்வு) ஆவதில் மிகுந்த முயற்சி தேவைப்படுகிறது. முக்கியமாக
தேக அபிமானம் வருவதால் தான் பாவங்கள் ஏற்பட்டுள்ளன. 5 விகாரங்களை தானமாக கொடுக்க வேண்டி
உள்ளது. இதில் நேரம் பிடிக்கிறது. மணமகனின்றி மணமகள்கள் போக முடியாது. முதலில் மணமகன் போக
வேண்டும் பிறகு மணமகள்கள். மணமகன் வந்து அனைத்து ஆத்மாக்களையும் அழைத்துச் செல்ல வேண்டி
உள்ளது. கர்மாதீத் நிலை ஆகும் வரை முயற்சி செய்ய வேண்டும். தேக அபிமானம் வருவதாலேயே பின்னர்
தவறுகள் ஆகின்றன. பாபா தேக அபிமானத்தில் வந்து விகாரத்தில் விழுந்தேன் என்பார்கள். புயல்களோ
நிறைய வரும். விகாரத்தின் எண்ணம் வந்தாலும் கூட கர்ம இந்திரியங்களால் ஒரு பொழுதும் எந்த பாவமும்
செய்யாதீர்கள். மாயையை வெல்வதற்காக எவ்வளவு உழைப்பு செய்ய வேண்டி உள்ளது. திருமணமாகி இருந்தது
என்றாலும் தூய்மையாக இருந்து காண்பியுங்கள். அப்பொழுது சந்நியாசிகளும் பார்ப்பார்கள் என்று தந்தை
கூறுகிறார். உங்களுக்கு எவ்வளவு பெரிய சம்பாத்தியம் உள்ளது பாருங்கள். தூய்மையாக இருந்து காண்பித்தீர்கள்
என்றால் மிக உயர்ந்த பதவியை அடைவீர்கள். உங்கள் மீது எல்லோருமே பலி ஆவார்கள். பாபா கூட மகிமை
செய்கிறார். தூய்மையாக இருந்தாலும் கூட பின்னர் யோகமும் வேண்டும். யோகத்தில் தான் அடிக்கடி தடைகள்
ஏற்படுகின்றன. தேக அபிமானம் வந்து விடுகிறது. தூய்மையாக இருக்கிறார்கள். அது சரி தான் ! தூய்மையினால்
தான் தூய்மையான உலகத்தின் ஆஸ்தியைப் பெறுவீர்கள். ஆனால் பிறகு மாயை கூட பலசாலியாக இருக்கும்.
மாயை நிறைய தாக்குகிறது. இவை எல்லாம் ஆகும் என்று தந்தை புரிய வைக்கிறார். துணிவை
வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் கூடவே நிரந்தர நினைவும் இருக்க வேண்டும். அப்பொழுது தான் விகர்மங்கள்
விநாசம் ஆகும். யார் சிறந்த வீரர் (ருஸ்தம்) ஆகிறார்களோ அவர்களை மாயை கூட நிறைய தொல்லைப்
படுத்துகிறது. நினைவில் இருப்பது அவர்களுக்கு கஷ்டமாக உள்ளது. யாரால் இருக்க முடியுமோ அவர்களிடம்
அனுபவம் பற்றி கேட்க வேண்டும். என்ன நினைக்கிறார்கள்? எப்படி இருக்கிறார்கள்? நினைவில் இருப்பதால்
விகர்மங்கள் விநாசம் ஆகும். இந்த விஷயமே முற்றிலுமே தனிப்பட்டது மற்றும் புதியதாகும். இங்கு
அமர்ந்திருக்கும் பொழுது போதை ஏறி இருக்கும். பகவான் ஒரே ஒரு நிராகாரமானவர், கிருஷ்ணர் அல்ல
19.07.2016
(4/4)
என்பதையும் புரிந்துள்ளீர்கள். உண்மையில் கிருஷ்ணருக்காக உரலில் கட்டி வைத்தார்கள். இப்படி செய்தார்கள்
என்று சாஸ்திரங்களில் எழுதப்பட்ட விஷயங்கள் எல்லாம் ஒன்றும் கிடையாது. இது கூட அவரை நிந்திப்பதாகும்.
இழிவு படுத்துகிறார்கள். கிருஷ்ணரிடம் எந்தவொரு அவகுணமும் இருக்கவில்லை. சஞ்சலப்படுவது லி இது
கூட ஒரு அவகுணம் ஆகுமல்லவா? கிருஷ்ணரோ முற்றிலுமே மரியாதா புருஷோத்தமர் ஆவார். அவருக்கு
சர்வகுண சம்பன்ன .... என்று மகிமை பாடுகிறார்கள். குரு பிரம்மா, குரு விஷ்ணு... . என்று பாடப்படுகிறது.
எங்களுக்கு இவர் குரு ஒன்றும் கிடையாது என்று கூறுங்கள். நாங்கள் இவரை குரு என்றும் ஏற்றுக்
கொள்வதில்லை, இறைவன் என்றும் ஏற்றுக் கொள்வதில்லை. பதீத பாவனரோ ஒரே ஒரு நிராகாரமானவர்
ஆவார் அல்லவா? சாகார குரு யாருமே பதீத பாவனராக இருக்க முடியாது. இச்சமயம் நீங்கள் பரமபிதா
பரமாத்மாவின் முழு வாழ்க்கை சரித்திரத்தை அறிந்துள்ளீர்கள். 5 ஆயிரம் வருடங்களில் சிவபாபாவின் என்ன
பாகம் நடக்கிறது என்பதை நீங்கள் தந்தை மூலமாக அறிந்துள்ளீர்கள். தந்தை ஞானம் நிறைந்தவர் ஆவார்
அல்லவா? சுகம், சாந்தி, ஆனந்தக் கடல்.. என்பது அவருடைய மகிமையாகும். தந்தையிடம் பொக்கிஷங்கள்
உள்ளன என்றால், அவசியம் குழந்தைகளுக்கு கூட கொடுத்திருக்கக் கூடும் அல்லவா? நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட
செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும்
காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. கர்மாதீத நிலையை அடைய வேண்டும் என்றால், இந்த கர்ம இந்திரியங்களால் எந்த ஒரு
தவறும் செய்யக் கூடாது. தூய்மையாக இருப்பதுடன் கூடவே நினைவிலும்
உறுதியானவராக வேண்டும்.
2. எப்பொழுதும் புண்ணிய ஆத்மாவாக ஆக வேண்டும் என்றால் உடல், மனம், பொருளால்
தந்தை மீது சமர்ப்பணமாக வேண்டும். ஒரு முறை சமர்ப்பணம் ஆவதால் 21 பிறவிகளுக்கு
புண்ணிய ஆத்மா ஆகி விடுவீர்கள்.
வரதானம்: தங்களது ஸ்மிருதி (நினைவு) விருத்தி (உள்ளுணர்வு) மற்றும் திருஷ்டியை (பார்வை)
அலௌகீகமானதாக ஆக்கிக் கொண்டு விடும் அனைத்து கவர்ச்சிகளிலிருந்தும் விடுபட்டவர்
ஆவீர்களாக.
எப்படி எண்ணமோ, அப்படி படைப்பு என்று கூறப்படுகிறது. யார் புதிய சிருஷ்டியை படைப்பதற்குக்
கருவியாக இருக்கும் விசேஷ ஆத்மாக்களாக இருக்கிறார்களோ அவர்களுடைய ஒவ்வொரு எண்ணமும்
சிறந்ததாக அதாவது அலௌகீகமானதாக இருக்கவேண்டும். ஸ்மிருதி, விருத்தி மற்றும் திருஷ்டி எல்லாமே
அலௌகீகமானதாக ஆகி விடும் பொழுது இந்த உலகத்தின் எந்த ஒரு மனிதர் அல்லது எந்த ஒரு
பொருளும் தன் பக்கம் கவர முடியாது. அவ்வாறு கவருகிறது என்றால், அவசியம் அலௌகீக தன்மையில்
குறைவு இருக்கிறது. அலௌகீக ஆத்மாக்கள் அனைத்து கவர்ச்சிகளிலிருந்தும் விடுபட்டு இருப்பார்கள்.
சுலோகன்: இதயத்தில் பரமாத்ம அன்பு அல்லது சக்திகள்
நிறைந்திருந்தது என்றால், மனதில் குழப்பங்கள் வர முடியாது.
(1/4)
20
20.07.2016
காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே ! இந்தப் பழைய உலகத்தில் மனிதர்கள் எந்த விதமான ஆசைகசை
வைத்திருக்கிறார்களோ, அந்த ஆசைகளை நீங்கள் வைக்கக் கூடாது. ஏனென்றால் இந்த
உலகம் விநாசமாகப் போகிறது.
கேள்வி : சங்கமயுகத்தில் எந்த ஓர் ஆசை வைப்பீர்களானால் அனைத்து ஆசைகளும் சதா
காலத்திற்கும் நிறைவேறி விடும்?
பதில் : நாம் பாவனமாகி, தந்தையை நினைவு செய்து அவரிடமிருந்து முழு ஆஸ்தியைப் பெற வேண்டும்
லி இந்த ஆசை மட்டுமே இருக்க வேண்டும். இந்த ஆசை மூலம் சதா காலத்திற்கும் அனைத்து ஆசைகளும்
நிறைவேறும். ஆயுஷ்வான் பவ, புத்திரவான் பவ, தனவான் பவ........ அனைத்து வரதானங்களும் கிடைத்து
விடும். சத்யுகத்தில் அனைத்து விருப்பங்களும் நிறைவேறி விடும்.
பாடல் : நீங்கள் தான் தாய், நீங்கள் தான் தந்தை.........
ஓம் சாந்தி. இனிமையிலும் இனிமையான ஆன்மிகக் குழந்தைகள், அதாவது ஆத்மாக்களிடம் பரமபிதா
பரமாத்மா இதைப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் அறிவீர்கள், எல்லையற்ற தந்தை நமக்கு
வரதானம் தந்து கொண்டிருக்கிறார். அந்த மனிதர்கள் ஆசீர்வாதம் தருகின்றனர்லிபுத்திரவான் பவ, ஆயுஷ்வான்
பவ, தனவான் பவ! இப்போது தந்தை உங்களுக்கு வரதானம் தருகிறார்லிஆயுஷ்வான் பவ. உங்களுடைய
ஆயுள் மிக நீண்டதாக ஆகும். அங்கே புத்திரர்களும் இருப்பார்கள், அதுவும் சுகம் தருபவர்களாக இருப்பார்கள்.
இங்கே இருக்கும் குழந்தைகள் அனைவரும் துக்கம் தருபவர்கள். சத்யுகத்தில் இருக்கும் குழந்தைகள் சுகம்
தருபவர்களாக இருப்பார்கள். இப்போது குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், எல்லையற்ற தந்தை எல்லையற்ற
சுகத்தின் ஆஸ்தியைத் தந்து கொண்டிருக்கிறார். நிச்சயமாக நாம் நீண்ட ஆயுள் உள்ளவர்களாகவும்,
செல்வந்தர்களாகவும் ஆவோம். இப்போது எந்த ஒரு விருப்பத்தையும் மனதில் வைக்கக் கூடாது. உங்கள்
விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். இந்த நரகத்தில் எந்த ஒரு விருப்பமும் வைக்கக் கூடாது. செல்வத்திற்
கான விருப்பமும் வைக்கக் கூடாது. அதிகமான செல்வம் இருக்க வேண்டும், பெரிய வேலை வேண்டும் லி
இந்த அதிகப்படியான விருப்பங்களையும் வைக்கக் கூடாது. வயிறோ ஒரு துண்டு ரொட்டியைச் சாப்பிடுகிறது.
அதிகமான பேராசையில் இருக்கக் கூடாது. அதிக செல்வம் இருக்குமானால் அது அழிந்து போகப் போகிறது.
குழந்தைகள் அறிவார்கள், பாபா நம்மை சொர்க்கத்தின் எஜமானர் ஆக்குகிறார். இப்போது பாபா சொல்கிறார் லி
தானம் கொடுத்தால் கிரகணம் விட்டுப் போகும். எதை தானம் கொடுக்க வேண்டும்? இந்த 5 விகாரங்களை.
இவற்றை தானமாகக் கொடுத்தால் கிரகணம் விட்டுப் போகும். மேலும் நீங்கள் 16 கலை சம்பூர்ணமாக ஆகி
விடுவீர்கள். நீங்கள் அறிவீர்கள், நாம் சர்வகுண சம்பன்னமாக, 16 கலை சம்பூர்ணமாக.......... இங்கே ஆக
வேண்டும். 5 விகாரங்களை தானமாகக் கொடுக்க வேண்டியுள்ளது. குழந்தைகளுக்கு பாபா சொல்கிறார்லிஇனிமையான
குழந்தைகளே, எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தி பெற வேண்டும் என்பதை தவிர வேறு
எந்த ஓர் ஆசையும் வைக்கக் கூடாது. இன்னும் கொஞ்சம் சமயமே மீதி உள்ளது. பாடவும் படுகின்றதுலிஅதிக
சமயம் முடிந்து விட்டது, கொஞ்ச சமயம் மிஞ்சியுள்ளது. இன்னும் கொஞ்ச சமயம் இந்த விநாசத்திற்காக
உள்ளது. அதனால் இந்தப் பழைய உலகத்தின் எந்த ஓர் ஆசையும் வைக்காதீகள். தந்தையை மட்டும்
நினைவு செய்து கொண்டே இருங்கள். நினைவின் மூலம் குழந்தைகள் சதோபிரதானமாக ஆக வேண்டும்.
இந்த உலகத்தில் மனிதர்கள் என்ன ஆசை வைக்கிறார்களோ, அதில் எதையும் நீங்கள் வைக்காதீர்கள். ஒரு
சிவபாபாவிடம் இருந்து நாம் நம்முடைய சொர்க்கத்தின் ஆஸ்தியைப் பெற வேண்டும் என்ற ஒரே ஓர் ஆசை
மட்டும் வையுங்கள். யாருக்கும் ஒரு போதும் துக்கம் கொடுக்கக் கூடாது. ஒருவர் மற்றவர் மீது காமக் கட்டாரி
செலுத்துவது என்பது அனைத்திலும் பெரிய துக்கமாகும். அதனால் தான் சந்நியாசிகள் பெண்களிடமிருந்து
விலகி விடுகின்றனர். இவர்கள் விட்டு விட்டார்கள் என்று சொல்கிறார்கள். இச்சமயம் இராவண இராஜ்யத்தில்
அனைவரும் தூய்மையற்ற பாவாத்மாக்கள்.
இப்போது சமயம் மிகவும் குறைவாக உள்ளது. நீங்கள் தந்தையின் ஸ்ரீமத் படி நடக்கவில்லை என்றால்
உயர்ந்தவராக ஆக மாட்டீர்கள். குழந்தைகள் உயர்ந்தவரிலும் உயர்ந்தவராக ஆக வேண்டும். அதனால் 5
விகாரங்களை தானமாகக் கொடுத்தால் கிரகணம் விட்டுப் போகும். அனைவர் மீதும் கிரகச்சாரி (கெட்ட
திசைகளின் பார்வை )உள்ளது. முற்றிலும் கருப்பாகி விட்டுள்ளனர். பாபா சொல்கிறார் லி என்னிடமிருந்து ஆஸ்தி
பெற வேண்டுமானால் தூய்மையாகுங்கள். துவாபரயுகத்தில் ஆரம்பித்து நீங்கள் தூய்மை இழக்கத் தொடங்கி
சதோபிரதானத்திலிருந்து தமோபிரதானம் ஆகி விட்டிருக்கிறீர்கள். அதனால் தான் பதீத பாவனா வாருங்கள்,
வந்து எங்களை தூய்மையாக்குங்கள் என்று பாடுகிறீர்கள். ஆகவே பாபா கட்டளை இடுகிறார்லிகுழந்தைகளே,
(2/4)
20.07.2016
இப்போது தூய்மையற்றவர்களாக ஆகாதீர்கள். காமம் என்ற மகா விரோதியை வெற்றி கொள்ளுங்கள். இதனால்
தான் நீங்கள் முதலில் இருந்து
கடைசி வரை துக்கம் அடைந்திருக்கிறீர்கள். பாபா சொல்கிறார்லிநீங்கள் சொர்க்கத்தில் முற்றிலும் தூய்மையாக
இருந்தீர்கள். இப்போது இராவணனின் வழிப்படி நீங்கள் தூய்மையற்றவர்களாக ஆகியிருக்கிறீர்கள். அதனால்
தான் தேவதைகளுக்கு முன் போய் அவர்களுக்கு மகிமை பாடுகிறீர்கள்லிநீங்கள் சர்வகுண சம்பன்னம், சம்பூர்ண
நிர்விகாரி, நாங்கள் விகாரிகளாக உள்ளோம். நிர்விகாரியாக இருப்பதால் சுகமே சுகம் தான். பாபா சொல்கிறார்லி
இப்போது நான் வந்திருக்கிறேன், குழந்தைகளாகிய உங்களை நிர்விகாரி ஆக்குவதற்காக. இப்போது குழந்தைகள்
நீங்கள் அனைத்து ஆசைகளையும் விட்டுவிட வேண்டும். உங்கள் வேலைலிதொழில் முதலியவற்றை வேண்டு
மானால் செய்யுங்கள். ஒருவர் மற்றவரை ஞான அமிர்தத்தை அருந்தச் செய்யுங்கள். பாடப் படவும் செய்கிறதுலி
அமிர்தத்தை விட்டு விஷத்தை ஏன் அருந்த வேண்டும்? பாபா சொல்கிறார், எந்த ஒரு விருப்பமும் வைக்காதீர்கள்.
நாம் நினைவு யாத்திரை மூலம் முழு சதோபிரதானமாக ஆகி விடுவோம். 63 பிறவிகளாக என்னென்ன பாவம்
செய்திருக்கிறீர்களோ, அவை நினைவினால் தான் நீங்கும். இப்போது நிர்விகாரி ஆக வேண்டும். மாயாவின்
புயல் வரலாம், ஆனால் தூய்மை இழக்கக் கூடாது. மனிதரில் இருந்து தேவதை ஆக வேண்டும். நீங்கள் தான்
சதோபிரதான பூஜைக்குரிய தேவதாக்களாக இருந்தீர்கள். பிறகு நீங்கள் தான் பூஜைக்குரிய நிலையில் இருந்து
பூஜாரி ஆகிறீர்கள். நாம் நோயற்றவர்களாக இருந்தோம். பிறகு நோயாளி ஆகிறோம். இப்போது மீண்டும்
நோயற்றவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம். நோயற்றவர்களாக இருந்த போது ஆயுள் நீண்டதாக இருந்தது.
இப்போதோ பாருங்கள், உட்கார்ந்திருக்கும் போதே திடீரென்று மனிதர்கள் இறந்து போகின்றனர். ஆக, எந்த
ஓர் ஆசையும் வைக்கக் கூடாது. இவையனைத்தும் மோசமான ஆசைகள். முள்ளில் இருந்து மலராக ஆவதற்கோ
ஒரே முதல் தரமான ஆசை லி பாபா சொல்கிறார், என்னை நினைவு செய்வீர்களானால் புண்ணிய ஆத்மா ஆகி
விடுவீர்கள். இச்சமயம் அனைவர் மீதும் ராகுவின் கிரகணம் (பார்வை) உள்ளது. முழு பாரதத்தின் மீதும்
ராகுவின் கிரகணம் உள்ளது. பிறகு பிரஹஸ்பதி தசா (குரு பார்வை) வேண்டும். நீங்கள் அறிவீர்கள், இப்போது
நம் மீது பிரஹஸ்பதி தசா அமர்ந்துள்ளது. பாரதம் சொர்க்கமாக இருந்தது இல்லையா? சத்யுகத்தில் உங்கள் மீது
பிரஹஸ்பதி தசா இருந்தது. இச்சமயம் ராகு தசா உள்ளது. இப்போது மீண்டும் எல்லையற்ற தந்தை மூலம்
பிரஹஸ்பதி தசா கிடைக்கின்றது. பிரஹஸ்பதி தசாவில் 21 பிறவிகளுக்கான சுகம் உள்ளது. திரேதாவில் உள்ளது
சுக்கிர தசா. எவ்வளவு ஒருவர் நினைவு செய்கிறாரோ, அதிக நினைவு செய்வாரானால் பிரஹஸ்பதி தசா
இருக்கும். இதுவும் புரிய வைக்கப் பட்டுள்ளது, இப்போது நாம் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும்.
அதனால் பாபாவை நினைவு செய்து கொண்டே இருங்கள். அப்போது விகர்மங்கள் விநாசமாகும். மேலும்
நீங்கள் பறப்பதற்குத் தகுதி உள்ளவர்களாக ஆகி விடுவீர்கள். மாயா உங்களுடைய இறக்கையைத் துண்டித்து
விட்டுள்ளது. இப்போது உங்களுக்கு ஈஸ்வரிய வழிமுறை கிடைக்கின்றது. இதன் மூலம் நீங்கள் சதா சுகமானவர்
களாக ஆகிறீர்கள். ஈஸ்வரிய வழிமுறைப்படி நீங்கள் சொர்க்கத்தின் எஜமானர் ஆகிறீர்கள். உலகத்தின் ராஜபதவியை
அடைந்து கொண்டிருக்கிறீர்கள். ஈஸ்வரிய வழிமுறை கிடைக்கின்றதுலிபாபாவை நினைவு செய்வீர்களானால்
அந்த் மதி úஸா கதி ஆகி விடும். நினைவின் மூலம் தான் விகர்மங்கள் விநாசமாகும், தூய்மையாகி விடுவீர்
கள். தூய்மையான ஆத்மா தான் சொர்க்கத்திற்குத் தகுதி உள்ளவர்களாக ஆக முடியும். அங்கே உங்களுக்கு
சரீரமும் நோயற்றதாக இருக்கும். ஆயுளும் நீண்டதாக இருக்கும். செல்வமும் நிறைய இருக்கும். அங்கே ஒரு
போதும் தர்மத்தின் குழந்தையை உருவாக்க மாட்டார்கள். பாபா சொல்கிறார்லிஆயுஷ்வான் பவ, சம்பத்திவான்
(செல்வம் நிறைந்தவர்) ஆகுக. ஒரு மகனும் அவசியம் இருப்பான். இச்சமயம் பாபா அனைவரையும் தர்மத்தின்
குழந்தை ஆக்குகிறார். ஆக, பிறகு சத்யுகத்தில் தர்மத்தின் குழந்தை என்று யாரும் இருக்க மாட்டார்கள். யோக
பலத்தின் மூலம் ஓர் ஆண்குழந்தை, ஒரு பெண்குழந்தை இருக்கும். குழந்தை எப்படிப் பிறக்கும் எனக்
கேட்கின்றனர். அங்கே இருப்பது யோகபலம். டிராமாவில் விதிக்கப் பட்டுள்ளது. சத்யுகத்தில் அனைவரும்
யோகிகள். கிருஷ்ணர் யோகேஷ்வர் எனச் சொல்லப் படுகின்றார். கிருஷ்ணர் யோகத்தில் இருக்கிறார் என்பதில்லை.
அவரோ முழு தூய்மையான யோகி ஆவார். ஈஸ்வரன் அனைவரையும் யோகேஷ்வர் ஆக்கியுள்ளார் என்பதால்
வருங்காலத்தில் யோகியாக இருக்கிறார்கள். பாபா தான் யோகியாக ஆக்கியிருக்கிறார். யோகிகளின் ஆயுள்
நீண்டதாக இருக்கும். போகிகளின் ஆயுள் குறுகியதாக இருக்கும். ஈஸ்வரன் குழந்தைகளை தூய்மையானவர்
களாக்கி, யோகம் கற்றுத் தந்து தேவதை ஆக்கியிருக்கிறார். இவர்கள் யோகிகள் எனச் சொல்லப் படுகின்றனர்.
யோகி என்றால் ரிμ, தூய்மையாக இருப்பவர்கள். நீங்கள் ராஜரிμ என்று உங்களுக்குப் புரிய வைக்கப்பட்டுள்ளது.
இராஜயோகத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள், இராஜ்ய பதவி பெறுவதற்காக. இச்சமயம் பாபாவை நினைவு
செய்ய வேண்டும். இங்கே லி குழந்தை பிறக்க வேண்டும் என்பது போன்ற எந்த ஒரு தலைகீழான ஆசையும்
வைக்கக் கூடாது. மீண்டும் விகாரத்தில் செல்ல வேண்டியிருக்கும், காமக் கட்டாரி செலுத்த வேண்டியிருக்கும்
இல்லையா? தேக அபிமானிகள் காமக் கட்டாரி செலுத்துவார்கள். தேகி அபிமானிகள் காமக் கட்டாரி செலுத்து
(3/4)
20.07.2016
வதில்லை. பாபா புரிய வைக்கிறார்லிதூய்மையாகுங்கள். ஆத்மாக்களோடு பேசுகிறார்லிஇப்போது காமக் கட்டாரி
செலுத்தாதீர்கள். தூய்மையாவீர்களானால் உங்களின் அனைத்து துக்கங்களும் விலகிப் போய்விடும். உங்களை
சொர்க்கத்தின் எஜமானர் ஆக்குகிறார். பாபா எவ்வளவு சுகம் கொடுக்கிறார்! பாபாவிடமிருந்தோ முழு ஆஸ்தி
பெற வேண்டும்.
பாபாவோ ஏழைப்பங்காளர். பாடப் படவும் செய்கிறதுலிசுதாமா இரு கைப்பிடி அவல் கொடுத்ததால் மாளிகை
கிடைத்தது என்பதாக. பாபா 21 பிறவிகளுக்கு ஆஸ்தி தருகிறார். இதையும் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்லிஇப்போது
அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும். சிவபாபாவின் ஸ்தாபனையின் காரியத்தில் எவ்வளவு உதவி
செய்கிறீர்களோ, அவ்வளவு ஆஸ்தி பெறுவீர்கள். வீட்டில் பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவமனை திறந்து
வையுங்கள். போர்டில் எழுதி வையுங்கள் லி சகோதரலிசகோதரிகளே, 21 பிறவிகளுக்கு சதா ஆரோக்கியமாக, சதா
செல்வந்தராக ஆக வேண்டுமானால் வந்து புரிந்து கொள்ளுங்கள். நாங்கள் ஒரு விநாடியில் சதா ஆரோக்கியமாக,
செல்வந்தராக ஆவதற்கான வழி சொல்கிறோம். நீங்கள் சர்ஜன் அல்லவா? சர்ஜன் என்ற போர்டையோ
அவசியம் வைக்கிறார்கள். இல்லையென்றால் மனிதர்களுக்கு எப்படித் தெரிய வரும்? நீங்களும் உங்கள்
வீட்டுக்கு வெளியில் போர்டு வையுங்கள். யாராவது வந்தால் அவர்களுக்கு இரண்டு தந்தையரின் இரகசியத்தைப்
புரிய வையுங்கள். எல்லைக்குட்பட்ட தந்தையிடம் எல்லைக்குட் பட்ட ஆஸ்தி பெற்றே வந்திருக்கிறீர்கள்.
என்னை மட்டுமே நினைவு செய்வீர்களானால் எல்லையற்ற ஆஸ்தி கிடைத்து விடும். என்று எல்லையற்ற
தந்தை சொல்கிறார். புரொஜெக்டர், கண்காட்சிகளில் முதலில் இதைப் புரிய வையுங்கள். இந்தப் முயற்சியை
செய்வதால் நீங்கள் இவ்வாறு ஆவீர்கள். இப்போது சங்கமயுகம். கலியுகத்திலிருந்து சத்யுகம் உருவாக வேண்டும்.
பாரதவாசிகள் நீங்கள் சதோபிரதானமாக இருந்தீர்கள். இப்போது தமோபிரதானமாக ஆகி விட்டிருக்கிறீர்கள்.
இப்போது பாபா சொல்கிறார்லிஎன்னை நினைவு செய்வீர்களானால் நீங்கள் சொர்க்கதின் எஜமானர் ஆகி விடுவீர்கள்.
வார்த்தைகள் இரண்டு தான். தந்தையை நினைவு செய்வீர்களானால் ஆஸ்தி (இராஜபதவி) உங்களுடையது.
இந்த நினைவு மூலம் குμயாக இருப்பீர்கள். இந்த மோசமான உலகத்தில் எந்த ஓர் ஆசையும் வைக்காதீர்கள்.
இங்கே நீங்கள் முயற்சி செய்கிறீர்கள்லிஉயிரோடு இருந்து கொண்டே இறந்த நிலையை அடைவதற்காக. அவர்களோ
இறந்த பிறகு சொர்க்கவாசி ஆகி விட்டதாகச் சொல்கின்றனர். நீங்கள் அனைவருக்கும் சொல்கிறீர்கள், நாங்கள்
சொôக்கவாசி ஆவதற்காக தந்தையை நினைவு செய்கிறோம். அவரிடமிருந்து எல்லையற்ற சுகம் கிடைக்கின்றது.
தந்தையை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் ஒரு போதும் அழுது புலம்ப மாட்டீர்கள். மாயாவின் புயல்கள்
வருகின்றன, அதனைப் பற்றிச் சிந்தனை செய்ய வேண்டாம். மாயாவின் புயல்களோ வரத்தான் செய்யும். இது
யுத்தமாகும். சங்கல்பலிவிகல்பங்கள் வருகின்றன என்றால் நேரம் வீணாகி விடுகின்றது. புயலோ கடந்து சென்று
விடும். சதா இருந்து கொண்டிருக்காது. அதிகாலை எழுந்து தந்தையை நினைவு செய்ய வேண்டும்.
தந்தையிடமிருந்து ஆஸ்தி பெற வேண்டும். இந்த ஈடுபாடு உள்ளுக்குள் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
தந்தை வேறு எந்த ஒரு கஷ்டமும் தரவில்லை. தந்தையை நினைவு செய்தால் போதும். மற்ற அனைவரையும்
மறந்து விடுங்கள். இவர்கள் அனைவரும் இறந்து விட்டனர். உங்களுக்குள் இதே உரையாடல் செய்து
கொண்டே இருங்கள். பாபா, இப்போதோ உங்களை மட்டுமே நினைவு செய்வோம். உங்களிடம் இருந்து
சொர்க்கத்தின் ஆஸ்தியைப் பெறுவோம். நேரம் ஒதுக்குங்கள்லிநான் 3லி4 மணிக்கு அவசியம் எழுந்து பாபாவை
நினைவு செய்வேன். சக்கரத்தையும் நினைவு வைக்க வேண்டும். பாபா நமக்கு படைப்பவர் மற்றும் படைப்பு
பற்றிய ஞானம் தந்துள்ளார். நாம் இந்த மனித சிருஷ்டி மரத்தைப் பற்றி அறிவோம். நாம் 21 பிறவிகளை
எப்படி எடுக்கிறோம்? லி இது புத்தியில் உள்ளது. இப்போது மீண்டும் நாம் செல்கிறோம். சொர்க்கத்தில் மீண்டும்
வந்து பாகத்தை நடிப்போம். நாம் ஆத்மா, ஆத்மாவுக்குத் தான் இராஜ்யம் கிடைக்கின்றது. பாபாவை நினைவு
செய்வதன் மூலம் ஆஸ்திக்கு உரிமை உள்ளவர்களாக ஆகிறோம். இது இராஜயோகம். தந்தையை நினைவு
செய்கிறோம். எல்லையற்ற தந்தை மூலம் அநேக தடவை உலகத்தின் எஜமானர் ஆகியிருக்கிறோம். இப்போது
மீண்டும் சொர்க்கவாசி ஆகிறோம் லி ஒரு தந்தையின் நினைவு மூலம். தந்தையை நினைவு செய்வதன் மூலம்
தான் பாவங்கள் பஸ்மமாகும். அதனால் இதை யோக அக்னி எனச் சொல்லப் படுகின்றது. பிராமணர்கள் நீங்கள்
இராஜரிμகள். ரிμகள் எப்போதும் தூய்மையாக இருப்பார்கள். தந்தையை நினைவு செய்து இராஜ்யத்தின்
ஆஸ்தி பெறுகிறோம். இப்போது விகாரத்திற்காக ஆசை வைக்கக் கூடாது. இது மோசமான ஆசையாகும்.
இப்போதோ பரலௌகிகத் தந்தையிடமிருந்து ஆஸ்தி பெற வேண்டும். நோய் இருந்தாலும் கூட நினைவு
செய்ய முடியும். தந்தைக்கும் குழந்தைகள் பிரியமானவர்களாக உள்ளனர். பாபா எத்தனைக் குழந்தைகளுக்குக்
கடிதம் முதலியன எழுத வேண்டி உள்ளது! சிவபாபா எழுதச் செய்கிறார். நீங்களும் கடிதம் எழுதுகிறீர்கள்லிசிவபாபா
கேர் ஆஃப் பிரம்மா. நாம் அனைவரும் சிவபாபாவின் குழந்தைகள், சகோதரர்கள். ஆன்மிகத் தந்தை வந்து
நம்மைப் தூய்மையாக்குகிறார். அதனால் பதீதலிபாவனர் எனச் சொல்லப்படுகிறார். அனைத்து ஆத்மாக்களையும்
தூய்மையாக்குகிறார். யாரையும் விடுவதில்லை. இயற்கையும் கூட தூய்மையாகின்றது. நீங்கள் அறிவீர்கள்,
(4/4)
20.07.2016
சத்யுகத்தில் இயற்கையும் கூட தூய்மையாக இருக்கும். இப்போது சரீரமும் தூய்மை இழந்து விட்டது. அதனால்
தான் கங்கையில் போய் சரீரத்தை சுத்தப்படுத்துவதற்காகச் செல்கின்றனர். அதனால் ஆத்மாவோ
தூய்மையாவதில்லை. இதுவோ யோக அக்னி மூலம் தான் தூய்மையாகும். நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும்
தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம் :
1) இந்தக் கலியுக உலகத்தில் எந்த ஒரு தலைகீழான ஆசையும் வைக்கக் கூடாது. சம்பூர்ண
சதோபிரதானமாக ஆவதற்காக ஈஸ்வரிய வழிமுறைப்படி நடக்க வேண்டும்.
2) தூய்மையாகி வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் லி இந்த ஓர் ஆசை மட்டுமே வைக்க
வேண்டும். அந்த் மதி úஸா கதி. மாயாவின் புயல்களில் நேரத்தை வீணாக்கக் கூடாது.
வரதானம் : சோம்பலின் பலவிதமான வேடத்தில் வருவதை முடித்து விட்டு சதா உற்சாகத்தில்
(மகிழ்ச்சியாக) இருக்கக் கூடிய தீவிர முயற்சியாளர் ஆகுக.
தற்போதைய சமயம் மாயாவின் யுத்தம் சோம்பலின் ரூபத்தில் பலவிதமான வழிகளில் நடைபெறுகின்றது.
இந்த சோம்பலும் கூட விசேஷமான ஒரு விகாரமாகும். இதை முடித்து விடுவதற்காக சதா உற்சாகத்தில்
இருங்கள். எப்போது வருமானம் சம்பாதிப்பதற்கான உற்சாகம் உள்ளதோ, அப்போது சோம்பல் முடிந்து போகும்.
அதனால் ஒரு போதும் உற்சாகத்தைக் குறைத்துவிடக் கூடாது. யோசிக்கிறோம், செய்வோம், செய்யத் தான்
போகிறோம், ஆகி விடும்......... இவையனைத்தும் சோம்பலின் அடையாளங்களாகும். அப்படிப்பட்ட சோம்பல்
உள்ளவர்கள் பலவீனமான சங்கல்பங்களை முடித்து விட்டு இதையே யோசியுங்கள் லி எதைச் செய்ய வேண்டுமோ,
எவ்வளவு செய்ய வேண்டுமோ, அதை இப்போதே செய்ய வேண்டும் லி அப்போது தான் தீவிர முயற்சியாளர்
எனச் சொல்வார்கள்.
சுலோகன் : யாருக்கு எண்ணமும், சொல்வதும் சமமாக உள்ளதோ,
அவர்கள் தான் உண்மையான சேவாதாரி.
(1/4)
21
21.07.2016
காலை முரü ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! நம்முடைய பாபா நம்மை உலகின் எஜமானர்களாக
ஆக்குவதற்காக வந்துள்ளார், நாம் அவர் முன்னால் அமர்ந்திருக்கிறோம் என்ற போதை
உங்களுக்கு இருக்க வேண்டும்.
கேள்வி: கர்மங்களின் ஆழமான கதியை அறிந்தவர்கள் என்ன முயற்சி அவசியமாகச்
செய்வார்கள்?
பதில்: நினைவில் இருப்பதற்கான முயற்சி. ஏனென்றால் நினைவின் மூலம்தான் பழைய கணக்கு
வழக்கு முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும். ஒரு வேளை ஆத்மா பழைய கணக்கு வழக்கு, கர்ம
போகத்தை முடிக்கவில்லை என்றால் தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும், மேலும் பதவியும் கீழானதாகி
விடும், மறுபிறவியும் அப்படிப்பட்டதாகவே இருக்கும் என அவர்களுக்குத் தெரியும்.
ஓம் சாந்தி. பாப்தாதா நேரில் வந்துள்ளார் என்பதை பார்க்கும்போது குழந்தைகளுக்கு எல்லையற்ற
குμயின் அளவு அதிகரிக்கிறது. மேலும் 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சிவபாபா பிரம்மாவின்
உடலில் வந்துள்ளார் என்பதையும் குழந்தைகள் அறிவார்கள். என்ன செய்வதற்காக? குழந்தைகளுக்கு இந்த
போதை ஏறி விட்டுள்ளது. சொர்க்கத்தின் எஜமானர்களாக ஆக்குவதற்காக தந்தை வந்துள்ளார், நம்மை தகுதி
வாய்ந்தவர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார் என அனைத்து குழந்தைகளும் அறிவார்கள். நம்மை தமோபிரதானத்
திலிருந்து சதோபிரதானமாக ஆக்குவதற்கான யுக்திகளை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
யுக்தி மிகவும் சகஜமானதேயாகும். முற்றிலும் சகஜமான நினைவை குழந்தைகளுக்குக் கற்பிக்கிறார். அஞ்ஞான
காலத்தில் ஆண் குழந்தை பிறந்தால் நம்முடைய வாரிசு பிறந்துள்ளது என புரிந்து கொள்கின்றனர். இந்த
சமயத்தில் தந்தை வந்து குழந்தைகளாகிய நம்மை தத்தெடுக்கிறார் என நீங்கள் அறிவீர்கள். நீங்கள்
அனைவருமே சிவபாபாவின் குழந்தைகள் தான். ஆனால் நமக்கு சொல்வதற்காகவும், நாம் அவரிடமிருந்து
(மகா வாக்கியங்களை) கேட்பதற்காகவும் பாபா தன்னுடையவர்களாக எப்படி ஆக்குவார்? சிவபாபா இந்த
பிரம்மாவின் உடல் மூலம் சொல்கிறார் லி நான் உங்களுடைய தந்தையாய் இருக்கிறேன். உங்களை சொர்க்கத்தின்
எஜமானர்களாக ஆக்குகிறேன். தூய்மையற்ற உங்களின் ஆத்மா மட்டும் முக்திக்கோ அல்லது ஜீவன்முக்தி
தாமத்திற்கோ செல்ல முடியாது. நீங்கள் அனைவரும் ஒரு தந்தையின் குழந்தைகள். அனைவரும் தந்தையின்
ஆஸ்தியை எடுக்க வேண்டும். அளவற்ற குழந்தைகள் உள்ளனர், அதிகரித்தபடி இருக்கின்றனர். தத்தெடுத்தபடி
இருக்கிறார். ஓ ஆத்மாக்களே இப்போது நீங்கள் என்னுடைய சந்தானங்கள் (குழந்தைகள்). தன்னை ஆத்மா
என புரிந்து கொள்ளுங்கள், நமக்கு பாபா கிடைத்திருக்கிறார், அவரை அரைக் கல்பம் நினைவு செய்தோம்.
இதனை ஒருபோதும் மறக்காதீர்கள். அரைக் கல்ப காலம் ஆத்மா இந்த சரீரத்தின் மூலம் நினவு செய்து
வந்தது லி ஓ பதித பாவனா, ஓ துக்கத்தை நீக்கி சுகத்தைக் கொடுப்பவரே! ஏனென்றால் இராவண இராஜ்யம்
உள்ளதல்லவா. நாங்கள் மிகவும் சுகம் நிறைந்தவர்களாக இருக்கிறோம், எங்களுக்கு இவ்வளவு கோடிகள்
உள்ளன, இவ்வளவு ஆலைகள் உள்ளன, அலுவலகம் முதலானவை உள்ளன என புரிந்து கொண்டிருக்கும்
இவையனைத்தும் குறுகிய காலத்திற்கானதாகும். இறுதியில் மிகவும் ஐயோ, ஐயோ என அலறத் தொடங்கி
விடுவார்கள். துக்கத்தின் மலைகள் விழும். இவ்வளவு செல்வங்கள் அனைத்தும் அழிந்து போய் விடும்.
தந்தையிடமிருந்து உங்களுக்கு ஒரு வினாடியில் ஆஸ்தி கிடைக்கும். உங்களுக்கு வினாடியில் சொர்க்கத்தின்
இராஜ்யத்தை கொடுக்கிறேன் என சொல்கிறார். இந்த பழைய உலகம் அழிந்து விடும். சண்டைகள் மூளும்.
இயற்கையின் சீற்றங்கள் ஏற்படும். சுத்தப்படுத்த வேண்டியுள்ளது அல்லவா. உங்களுடைய ஆத்மாவும் கூட
இப்போது தூய்மையடைந்து கொண்டிருக்கிறது. பாப்தாதா இருவரும் குழந்தைகள் எவ்வளவு உழைக்கின்றனர்
என புரிந்து கொள்ள முடியும். தந்தையிடமிருந்து ஆஸ்தியை எடுப்பதற்காக முற்றிலும் மிகச் சிறிய முயற்சியைக்
கொடுக்கின்றனர். தன்னை ஆத்மா என புரிந்து கொண்டு தந்தையை நினைவு செய்யுங்கள். அந்த ஆன்மீகத்
தந்தை சரீரமற்றவர், ஆத்மாக்களாகிய நாம் அவரை அழைக்கிறோம் அல்லவா. தூய்மை இழந்துள்ள உங்களுடைய
ஆத்மா எப்படி தூய்மையாகும் என தந்தை கேட்கிறார். பதீத பாவனர் ஒரு தந்தை அல்லவா. நீரோட்டம்
உள்ள நதி தூய்மைபடுத்தக் கூடியது என்றால் உடனே சென்று வர முழுக்குப் போட்டு (ஸ்நானம் செய்து)
வேண்டும். பலர் கங்கா ஸ்நானம் செய்கின்றனர் என்றாலும் கூட ஏன் தூய்மையற்றவர்களாக இருக்கின்றனர்?
இரவும் பகலும் இதையே பாடிக்கொண்டிருக்கின்றனர் லி பதித பாவன சீதா ராம் அதாவது பக்தர்கள் அல்லது
சீதைகள் அனைவரையும் காப்பாற்றக்கூடிய ஒரு ராமன் பரமபிதா பரமாத்மா ஆவார். பதித பாவனர், பதிகளுக்
கெல்லாம் பதி அவரே ஆவார். அவர் வரும்போது வந்து தூய்மையாக ஆக்குவார். ஆக என்னுடைய
(2/4)
21.07.2016
ஸ்ரீமத்படி நீங்கள் நடக்க வேண்டும், வேறு யாருடைய வழியிலும் நடக்காதீர்கள் என இப்போது தந்தை
சொல்கிறார். பக்தியின் மூலம் பகவான் கிடைப்பார் என அவர்கள் சொல்கின்றனர், பக்தியின் மூலம் பகவான்
கிடப்பார் என்றால் பக்தர்களைக் காப்பாற்ற பகவான் வருவார் என ஏன் சொல்கின்றனர்? பக்தர்களுக்கு என்ன,
ஆபத்து வந்துவிட்டதா, அதிலிருந்து காப்பாற்றுவதற்கு? ஏதாவது ஆபத்து ஏற்படும்போது பாதுகாப்பு
கொடுக்கப்படுகிறது. நீங்கள் எவ்வளவு துர்க்கதியை அடைந்து விட்டீர்கள் என தந்தை சொல்கிறார். இது
கொடுமையான நரகம், அனைவரும் துக்கம் மிக்கவர்களாக நோயாளிகளாக உள்ளனர். ஒவ்வொரு வீட்டிலும்
பாருங்கள் என்னென்ன நடக்கிறது என. துக்கமோ துக்கம், ஆகையால் பாபா எங்கள் துக்கத்தை நீக்குங்கள்,
சுகத்தைக் கொடுங்கள் என அழைக்கின்றனர். பாரதத்தில்தான் எப்போதும் சுகம் நிறைந்திருந்தது, இப்போது
துக்கம் உள்ளது. இது பாரதத்தின் விஷயம்தானாகும், மற்ற கண்டங்களே தனிப்பட்டவை. அவை பின்னர்தான்
வருகின்றன. சிலர் 60 பிறவிகள், சிலர் அதை விடவும் குறைந்த பிறவிகளும் எடுக்கின்றனர். தேவதா
தர்மத்தவர்கள் 84 பிறவிகள் எடுக்கின்றனர். ஆக, இந்த கணக்கின்படி அரைக் கல்பத்திற்குப் பின் வரக்கூடியவர்கள்
84 பிறவி எடுப்பதில்லை. பாதியளவு பிறவிகள் எடுக்கின்றனர். அனைவரும் 84 பிறவிகளின் சக்கரத்தைச்
சுற்றுகின்றனர் என்பதல்ல. மனிதர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் சொல்லி விடுகின்றனர். இப்போது
குழந்தைகளாகிய நீங்கள் தந்தையின் மூலம் அழிவற்ற ஞான ரத்தினங்களினால் (புத்தியை) பையை
நிரப்பிக்கொண்டிருக்கிறீர்கள். ரத்தினங்கள் மிகவும் விலை மதிப்பு வாய்ந்தவை ஆகும். தந்தை மிகவும் சகஜமாகப்
புரிய வைக்கிறார். தந்தை சொல்கிறார் லி ஓ பதீத பாவனா ! வந்து எங்களை தூய்மையாக்குங்கள் என நீங்கள்
அழைத்து வந்தீர்கள், இப்போது தந்தை வந்திருக்கிறார். நாம் தூய்மையடைந்தோம் என்றால் சொர்க்கத்தின்
எஜமானர்கள் ஆவோம் என இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். சிவபாபா நம்மை கல்புத்தியிலிருந்து
தங்கபுத்தியாக, கல் போன்றவர்களை தங்கம் போல (அஞ்ஞானிகளை ஞானமுள்ளவர்களாக) ஆக்குவதற்காக
வந்துள்ளார். பக்தி மார்க்கத்தின் சிலைகள் அனைத்தும் கல்லால் ஆக்கப்படுகின்றன. கற்களுடன் மண்டையை
உடைத்துக் கொள்கின்றனர். தந்தை சொல்கிறார் லி நீங்கள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் லாபம் எதுவுமில்லை.
முன்னர் நீங்கள் உங்களை பலி கொடுத்துக் கொண்டிருந்தீர்கள். என்றாலும் என்ன லாபம் இருந்தது?
மீறிப்போனால் தேவியின் காட்சி கிடைக்கும், பிறகு எப்படி இருந்தீர்களோ அப்படியே இருந்து விடுகிறீர்கள்.
பதித பாவன தந்தை சங்கம யுகத்தில் ஒரு முறை வருகிறார். சத்யுகத்தில் பக்தி மார்க்கத்தின் விஷயங்கள்
இருப்பதே இல்லை. கழுத்தை வெட்டிக்கொள்ளுங்கள், இதை அதை செய்யுங்கள் என தந்தை சொல்வதில்லை.
பக்தி மார்க்கத்தில் பல விதமாக என்னென்ன செய்கின்றனர்! முன்னர் தேவிகளுக்கு முன்பாக மனிதர்களை
பலி கொடுத்துக் கொண்டிருந்தனர். நீங்கள் நடத்தை திருந்தியவர்களாக (பூஜைக்கு தகுதியானவர்களாக மாறி)
இருந்த போது தேவதைகளாக இருந்தீர்கள். இப்போது எவ்வளவு கல்புத்தியாகி இருக்கிறீர்கள். உங்களுக்கு
சொர்க்கத்தின் இராஜ்யத்தைக் கொடுத்திருந்தேன். எவ்வளவு தங்கம், வைர வைடூரியத்தாலான மாளிகைகள்
இருந்தன, அளவற்ற செல்வங்கள் இருந்தன. அதனை என்ன செய்தீர்கள்? இப்போது நீங்கள் எவ்வளவு
துக்கம் மிக்கவர்களாக ஆகியுள்ளீர்கள். நீங்கள் உண்மையில் தேவி தேவதா தர்மத்தவர்களாக இருந்தீர்கள்
அல்லவா. இப்போது நீங்கள் ரஜோ, தமோவில் மட்டும் வந்துள்ளீர்கள். நீங்கள் தேவதா தர்மத்தவர்களாக
இருந்தீர்கள், பிறகு தம்மை இந்துக்கள் என ஏன் சொல்லிக் கொள்கிறீர்கள்? மற்ற அனைத்து தர்மத்தவர்களும்
தத்தமது தர்மத்தையே ஏற்றுக் கொள்கின்றனர். தர்மம் ஒன்றுதான் இருக்குமல்லவா. முஸ்லிம்களின் முஸ்லிம்
தர்மமும், கிறிஸ்தவர்களின் கிறிஸ்து தர்மமும் நடந்து வருகிறது. உங்களுக்கு என்ன ஆனது? நீங்கள் மிகவும்
சுகம் மிக்கவர்களாக, தூய்மையானவர்களாக, முழுமையான விகாரமற்றவர்களாக இருந்தீர்கள். இப்போது எவ்வளவு
விகாரிகளாக ஆகி விட்டுள்ளீர்கள். நாம் முழுமையான விகாரமற்றவர்களாக இருந்தோம், பிறகு முழுமையான
விகாரிகளாக எப்படி ஆனோம் என யாருக்கும் தெரியாது. 84 பிறவிகள் எடுத்து சதோவிலிருந்து தமோ
ஆனார்கள், இப்போது முற்றிலும் தமோபிரதானமாக தூய்மையற்றவர்களாக இருக்கின்றனர். சத்யுகத்திலிருந்து
கலியுகம் கண்டிப்பாக வர வேண்டும். அனைத்து தர்மங்களும் சதோலிரஜோலிதமோவில் வரவே வேண்டும்.
வளர்ச்சியை அடைய வேண்டும். நீங்களும் மரத்தில் இருக்கிறீர்கள் அல்லவா. (கல்ப விருட்ச) மரத்தில்
பாருங்கள் லி கடைசியில் பிரம்மா நின்றிருக்கிறார், மரத்தின் உச்சியில் பிரம்மாதான் 84 பிறவிகள் எடுத்துச்
சென்று கடைசியில் நின்றிருக்கிறார். நீங்களும் கூட கீழே பிராமணர்களாக அமர்ந்திருக்கிறீர்கள், பிறகு கடைசியில்
தூய்மையற்ற சூத்திரர்களாக ஆகியுள்ளீர்கள். பிறகு கீழே இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். நீங்களும்
சூத்திரர்களாக இருந்தீர்கள், இப்போது பிராமணர்களாக ஆகியுள்ளீர்கள். இவை மிகவும் புரிந்து கொள்ள வேண்டிய
விஷயங்கள் ஆகும். இப்போது மரத்தில் புரிந்துக் கொள்ளக் கூடிய மிக நல்ல அறிவு மிக்க விசயங்கள்
நிறைந்துள்ளது. இப்போது நீங்கள் இராஜயோகத்தின் தபஸ் செய்து கொண்டிருக்கிறீர்கள், உங்களுடைய நினைவுச்
சின்னம்தான் நின்று கொண்டுள்ளது. இது சைதன்யமான (உயிரோட்டமிக்க) தில்வாடா, அது ஜடம். சத்யுகத்தில்
இது இருக்கவில்லை. இந்த சமயத்தில் ஆத்மாக்களாகிய நீங்கள் தம்முடைய நினைவுச் சின்னத்தைப் பார்க்கிறீர்கள்.
நீங்கள் நடைமுறையில் உண்மையிலும் உண்மையான தில்வாடா கோவிலில் சைதன்யத்தில் அமர்ந்திருக்கிறீர்கள்.
21.07.2016
(3/4)
சொர்க்கத்தின் ஸ்தாபனை நடந்து கொண்டிருக்கிறது. பிறகு சொர்க்கத்தில் வந்துவிட்டால் இந்த கோவில்
முதலான எதுவும் இருக்காது. இந்த மம்மா பாபா மற்றும் குழந்தைகளாகிய நாம் அமர்ந்திருக்கிறோம். அதே
போல இருக்கும் உங்கள் கோவில் இது. பெயரே மதுபன் என வைக்கப்பட்டுள்ளது, சைதன்யமான தில்வாடா
கோவில் ஆகும். பிறகு பக்தி மார்க்கம் தொடங்கும்போது இந்த கோவிலை கட்டுவார்கள். தந்தை உங்களை
மிகவும் செல்வந்தர்களாக ஆக்கியிருந்தார். பிறகு நீங்களே அவருடைய கோவிலைக் கட்டுகிறீர்கள். சிவனின்
கோவில்களை ஒருவர் மட்டும் கட்டுவதில்லை, அனைவருமே கட்டுகின்றனர் லி தம் தகுதிக்கும் சக்திக்கும்
தகுந்தாற்போல.
நாம் பூஜைக்குரியவர்களாக இருந்தோம், பின்னர் துவாபரத்தில் பூஜாரிகள் ஆகி விட்டோம் என நீங்கள்
அறிவீர்கள். உங்களை இவ்வளவு செல்வந்தர்களாக ஆக்கிய சிவபாபாவுக்கு பக்தியில் நீங்கள்தான் அவருடைய
கோவிலைக் கட்டுவீர்கள். இந்த விஷயங்களை இப்போது நீங்கள்தான் அறிகிறீர்கள். ஆக இப்போது முயற்சி
செய்து ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவாக ஆக வேண்டும். சத்யுகத்தில் மஹாராஜாக்கள் என சொல்லப்படுகின்றனர்.
திரேதாவில் ராஜாக்கள் என சொல்லப்படுகின்றனர். பிறகு உலகம் தூய்மையை இழக்கும்போது மஹாராஜாக்களும்,
ராஜாக்களும் கூட தூய்மையற்றவர்களாக ஆகின்றனர். அவர்கள் விகாரமற்ற மஹாராஜாக்களின் கோவில்களைக்
கட்டி பூஜை செய்கின்றனர். முதன் முதலாக சிவனின் கோவிலைக் கட்டுகின்றனர், பிறகு தேவதைகளின்
கோவிலைக் கட்டுகின்றனர், தாமே கோவிலை கட்டி பூஜிக்கின்றனர், 84 பிறவிகள் அனுபவிக்கின்றனர் அல்லவா.
அரை கல்பத்திற்கு (தன்னுடைய நினைவுச் சின்னமாக) நீங்கள் பூஜைக்குரியவர்களாகவும், பிறகு அரைக்
கல்பம் பூஜாரிகளாகவும் ஆகிறீர்கள். பகவானைக் குறித்து மனிதர்கள் அவரே பூஜைக்குரியவராகவும், அவரே
பூஜாரியாகவும் ஆவதாக கூறுகின்றனர். அனைத்தும் அவரே கொடுக்கிறார், அவரே எடுத்தும் கொள்கிறார்.
நல்லது, அவர்தான் கொடுத்தார், பின்னர் எடுத்துக் கொண்டார் என்றால் பிறகு ஏன் கவலை ஏற்படுகிறது?
நீங்களோ டிரஸ்டி ஆகி விட்டீர்கள். பிறகு அழவேண்டிய அவசியம் என்ன? தந்தை அமர்ந்து ஆத்மாக்களுக்குப்
புரிய வைக்கிறார். இப்போது நீங்கள் வரிசைக்கிரமமாக ஆத்ம அபிமானி ஆகிறீர்கள். சிலரோ தந்தையை
நினவு செய்வதே இல்லை. ஆத்ம உணர்வுள்ளவர்களாக இருப்பதே இல்லை. நீங்கள் ஆத்மாக்கள், பரமாத்மா
உங்களுக்கு கற்பிக்கிறார் எனவே இங்கே எவ்வளவு புரிய வைக்கப்படுகிறது. ஆத்மாவில்தான் சம்ஸ்காரங்கள்
உள்ளன. ஆத்மாதான் வக்கீல் முதலானவர்களாக ஆகிறது, ஆத்மா மாஜிஸ்டிரேட் (நீதிபதி) ஆகிறது. நாளை
என்ன ஆகப் போகிறீர்கள்? ஆத்மா தந்தையை நல்ல விதமாக நினைவு செய்து கொண்டே இருந்தது என்றால்
பிறகு அமரலோகத்தில் சென்று பிறவி எடுப்பீர்கள். பிறகு மரணலோகத்தில் அடுத்த பிறவி எடுக்க மாட்டீர்கள்.
ஒருவேளை ஏதாவது கணக்கு வழக்கு மீதமிருந்திருந்தது என்றால் தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும்.
கர்மங்களின் விளைவை அனுபவித்து முடிக்க வேண்டும், பிறகு உயர்ந்த பதவி கிடைக்காது. இந்த கர்மங்களின்
ஆழமான விளைவுகள் குறித்து தந்தைதான் அமர்ந்து புரிய வைக்கிறார். சத்யுகம் சதோபிரதானமானது என்பதை
கூட குழந்தைகள் அறிவார்கள். அனைத்து பொருட்களுமே அங்கே சதோபிரதானமாக இருக்கும். கிருஷ்ணர்
பசுக்களை வளர்த்துக் கொண்டிருந்தார் என சொல்கின்றனர். ராஜாக்கள் பசுக்களை மேய்ப்பார்களா என்ன?
இப்படிப்பட்ட விஷயங்கள் நடக்காது. சத்யுகத்தில் பசுக்கள் கூட மிகவும் முதல் தரமாக இருக்கும், அவற்றை
காமதேனு என சொல்லப்படுகிறது. ஜகதம்பா சரஸ்வதியும் கூட காமதேனு ஆவார். 21 பிறவிகளுக்கு அனைவரின்
மன விருப்பங்களையும் நிறைவேற்றுகிறார். நீங்களும் கூட காமதேனு ஆவீர்கள். அந்தப் பெயரையே பிறகு
அதிகமாக பால் கொடுக்கும் பசுக்களுக்கு வைத்து விட்டனர், ராஜாக்களின் வீடுகளில் மிகவும் முதல் தரமான
பசுக்கள் இருக்கும். இங்கேயே ராஜாக்களிடம் நல்ல நல்ல பசுக்கள் இருக்கும்போது சொர்க்கத்தில் எவ்வளவு
அழகாக இருக்கும். அங்கே துர்நாற்றம் எதுவும் முற்றிலுமாக இருக்காது.
நான் வந்திருக்கிறேன், உங்களை நறுமணம் வீசும் மலர்களாக்கி உடன் அழைத்துச் செல்வேன் என
இப்போது தந்தை குழந்தைகளுக்குச் சொல்கிறார். பதித பாவனா வாருங்கள் என்றுதான் என்னை அழைக்கிறார்கள்.
தூய்மை இல்லாத உலகில் தூய்மையற்ற சரீரத்தில் வாருங்கள். இவர் தூய்மையை இழந்தவர் அவர் தூய்மையான
ஃபரிஸ்தா. ஒப்பிட்டுக் காட்டுகிறார். நீங்களும் கூட தூய்மையற்றவரிலிருந்து இப்படி தூய்மையான ஃபரிஸ்தாவாக
ஆவீர்கள். சத்யுகத்தின் தேவதைகளின் மூர்த்திகள் என சொல்கிறோம். ஃபரிஸ்தாக்கள் சூட்சுமவதனவாசிகள்
ஆவர். தந்தை எவ்வளவு சகஜமான படிப்பை சொல்லிக் கொடுக்கிறார். இங்கே வரும்போது வெளியில் உள்ள
எந்த ஒரு நண்பர்கள், உறவினர்கள், வீடு வாசல், வேலை தொழில் முதலான நினைவுகளும் வரக்கூடாது.
தந்தையின் முன்பாக வந்திருக்கிறீர்கள் அல்லவா ! இங்கே வந்ததே நினைவின் மூலம் வருமானத்தை
சேமிப்பதற்காக எனும்போது அதிலேயே ஈடுபட்டிருக்க வேண்டும். நல்லது!
21.07.2016
(4/4)
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு
தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்
1. தண்டனைகளிலிருந்து விடுபடுவதற்காக பழைய அனைத்து கணக்கு வழக்குகளையும்
முடிக்க வேண்டும். டிரஸ்டிகள் ஆகி அனைத்தையும் பராமரிக்க வேண்டும். எந்த விஷயத்தைக்
குறித்தும் கவலைப்படக் கூடாது. ஆத்ம அபிமானி ஆக வேண்டும்.
2. இது வருமானத்தை சேமிக்கக்கூடிய நேரமாகும், இதில் வீடு வாசல், வேலை தொழில் முதலான
எந்த நினைவும் வரக்கூடாது. ஃபரிஸ்தா ஆவதற்காக தந்தையின் நினைவில் இருக்கக்கூடிய
முழுமையிலும் முழுமையான முயற்சி செய்ய வேண்டும்.
வரதானம்: முழுமையான சமர்ப்பணத்தின் விதியின் மூலம் அனைத்து குணங்களிலும்
நிறைந்தவர் ஆகக்கூடிய முயற்சியில் எப்போதும் வெற்றியாளர் ஆகுக !
யாருடைய எண்ணத்திலும் கூட தேக உணர்வு இல்லையோ அவர்கள் முழுமையாக சமர்ப்பணம்
(தந்தையிடம் பலி) ஆனவர்கள் என சொல்லப்படுவர். தனது தேகத்தின் உணர்வைக் கூட அர்ப்பணம்
செய்துவிடுவது, நான் இன்னார் லி இந்த எண்ணத்தையும் கூட அர்ப்பணம் செய்து சம்பூரண சமர்ப்பணம்
ஆகிறவர்கள் அனைத்து குணங்களிலும் நிறைந்தவர்களாக ஆகின்றனர். அவர்களுக்குள் எந்த ஒரு குணத்தின்
குறைபாடும் இருக்காது. யார் அனைத்தும் சமர்ப்பணம் செய்து அனைத்து குணங்களிலும் நிறைந்தவராக
ஆவதற்காக அதாவது சம்பூரணம் அடைவதற்காக லட்சியம் வைக்கின்றனரோ அந்த முயற்சியாளர்களுக்கு
பாப்தாதா எப்போதும் வெற்றியாளர் ஆவீர்களாக என்ற வரதானத்தைக் கொடுக்கிறார்.
சுலோகன் : மனதை தன் வசத்தில் வைக்கக் கூடியவர்கள் தான்
மன்மனாபவ நிலையில் இருக்க முடியும்.
(1/4)
22
22.07.2016
காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா , மதுபன்
இனிமையான குழந்தைகளே! யாசிப்பவராக இளவரசர் ஆவதற்கு ஆதாரம் தூய்மையாகும்,
தூய்மையாவதன் மூலம் தான் தூய உலகின் இராஜ்யம் கிடைக்கும்.
கேள்வி: இந்த ஆன்மீகப் பள்ளியில் எந்த ஒரு பாடம் உங்களை மனிதனிலிருந்து தேவதையாக
ஆக்கி விடுகிறது?
பதில்: நீங்கள் இந்த ஆன்மீகப் பள்ளியில் நான் சரீரமல்ல, ஆத்மா என்ற பாடத்தை தினமும் படிக்கிறீர்கள்.
ஆத்ம அபிமானி ஆவதன் மூலம் தான் நீங்கள் மனிதனிலிருந்து தேவதையாக, நரனிலிருந்து நாராயணனாக
ஆக முடியும். இந்த நேரத்தில் அனைத்து மனிதர்களும் பூஜாரியாக அதாவது தூய்மை இழந்தவர்களாக, தேக
அபிமானியாக இருக்கின்றனர், ஆகையால் தூய்மையானவர்களாக ஆக்கக்கூடிய தந்தையை அழைத்துக்
கொண்டிருக்கின்றனர்.
பாட்டு: ஆகாய சிம்மாசனத்தை விட்டு .......
ஓம் சாந்தி. ஓம் சாந்தி என்று கூறியது யார்? என்பதை குழந்தைகள் அறிவீர்கள். எந்த குழந்தை?
ஓம்சாந்தி என்று யாருடைய ஆத்மா கூறியது? என்பதை குழந்தைகள் அறிவீர்கள். பரம்பிதா பரமாத்மா
கூறியிருக்கிறார். மனித ஆத்மாக்கள் கூறவில்லை என்பதை குழந்தைகள் அறிவீர்கள், இதை பரம்பிதா பரமாத்மா
சிவன் கூறியிருக்கின்றார். அவர் அனைவருக்கும் தந்தையானவர், உயர்ந்ததிலும் உயர்ந்தவர். பாட்டில் கேட்டீர்கள்,
இப்போது பாரதத்தில் மாயையின் நிழல் அதிகமாகப் பரவியிருக்கிறது. மிகவும் தூய்மையற்றவர்களாக ஆகி
விட்டனர். அதனால் தான் ஹே பதீத பாவனனே! மீண்டும் தூய்மை ஆக்குவதற்கு வாருங்கள் என்று
அழைக்கின்றனர். ஆத்மா தான் தனது தந்தையை அழைக்கிறது, அவர் தான் பகவான் என்று கூறப்படுகிறார்.
அவரைத் தான் பதீத பாவன் (தூய்மைபடுத்துபவர்) என்று கூறுகின்றனர். ஒரே ஒருவருக்குத் தான் மகிமை
பாடப்படுகிறது. அவர் அனைத்து ஆத்மாக்களுக்கும் எல்லையற்ற தந்தையாவார். இங்கு அனைவரும் தூய்மை
இழந்தவர்களாகிவிட்டனர் அதனால் தான் ஹே பரம்பிதா பரமாத்மா என்று அழைக்கின்றனர். அவரே ஞானக்
கடலாகவும் இருக்கிறார், பதீத பாவனாகவும் இருக்கிறார். அவரும் தந்தையாகவும் இருக்கிறார், ஆசிரியராகவும்
இருக்கிறார், ஏனெனில் ஞானக் கடலாகவும் இருக்கிறார், உலகின் சர்வ சக்திவானாகவும் இருக்கிறார். அனைத்து
வேதம், சாஸ்திரம், கிரந்தங்களையும் அறிந்தவராகவும் இருக்கிறார். அவரைத் தான் ஞானம் நிறைந்தவர் என்று
கூறுகின்றனர். ஆக இந்த நேரத்தில் அனைவரும் பரலௌகீகத் தந்தையை அழைக்கின்றனர், ஏனெனில்
அனைவரும் துக்கமானவர்களாக இருக்கின்றனர். பரம்பிதா என்று கூறுகின்றனர். அவருக்கு பெயரும் இருக்க
வேண்டும் அல்லவா! அவருக்கு சிவபாபா என்று பெயர் சூடப்பட்டிருக்கிறது. அவரே உயர்ந்ததிலும் உயர்ந்த
ஞானக் கடலானவர், சுகக் கடலானவர், அமைதிக் கடலானவர் ஆவார். மனித ஆத்மாக்கள் தான் தனது
தந்தையை இவ்வாறு மகிமை செய்கிறது. உயர்ந்ததிலும் உயர்ந்த ஆத்மா யார்? பரம்பிதா பரமாத்மா ஆவார்.
அவர் பரம் ஆக இருக்கிறார், பதீத மனிதர்களை அவரை நினைவு செய்கின்றனர். சத்யுகத்தில் பாரதம்
தூய்மையாக இருந்த போது தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது, அப்போது தூய்மையற்றவர்கள்
யாருமில்லை. இது தமோ பிரதான உலகமாகும், அதாவது உலகிலிருக்கும் மனிதர்கள் அனைவரும் பாவ
ஆத்மாக்கள் ஆவர். இதே பாரதம் தூய்மையாக இருந்தது, இதே பாரதம் தூய்மை இழந்துவிட்டதாகிவிட்டது.
இங்கு கலியுகத்தில் அனைவரும் தூய்மையற்றவர்கள். ஞானக் கடலான, பதீத பாவன் பரம்பிதா பரமாத்மா
பரந்தாமத்திலிருந்து வந்து பிரம்மாவின் மூலம் நமக்கு படிப்பு கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
அவசியம் அவருக்கு சரீரம் வேண்டும் அல்லவா! இந்த விசயங்கள் எந்த சாஸ்திரங்களிலும் கிடையாது.
அனைத்தையும் அறிந்த அதிகாரம் படைத்தவராக இருக்கக் கூடியவர் ஞானக் கடலானவர் அவர் தான்
விஷ்ணுவின் நாபியிலிருந்து பிரம்மா வெளிப்பட்டார் என்ற சித்திரம் பாரதத்தில் காண்பிக்கின்றனர், அவரது
கையில் சாஸ்திரங்களைக் கொடுத்து விட்டனர். இப்போது விஷ்ணு எந்த சாஸ்திரங்களின் சாரத்தையும் கூறுவது
கிடையாது. பரம்பிதா பரமாத்மா, ஞானக் கடலானவர் பிரம்மாவின் மூலம் அனைத்து சாஸ்திரங்களின் சாரத்தைப்
புரிய வைக்கின்றார். பிரம்மா, விஷ்ணு, சங்கரையும் அவர் படைத்தவர் ஆவார். பிரம்மாவை அல்லது விஷ்ணுவை
ஞானக் கடல் என்று கூறுவது கிடையாது. சங்கருக்கான விசயத்தையே விட்டு விடுங்கள். இப்போது ஞானக்
கடல் யார்? உயர்ந்ததிலும் உயர்ந்த, நிராகார பரமாத்மா தான் பதீத பாவன் ஆவார். இந்த மகிமை அந்த ஒரு
பரம்பிதா பரமாத்மாவினுடையது ஆகும். இங்கும் ஆத்மாவிற்குத் தான் மகிமை ஏற்படுகிறது. ஆத்மா தான்
சரீரத்தின் மூலம் நான் ஐனாதிபதி (குடியரசுத் தலைவர்) நான் வக்கீல், நான் இந்த மந்திரியாக இருக்கிறேன்
என்று கூறுகிறது. ஆத்மா தான் பதவி அடைகிறது. நான் ஒரு சரீரத்தை விடுத்து மற்றொன்றை எடுக்கிறேன்
என்று சரீரத்தின் மூலம் ஆத்மா கூறுகிறது. இந்த நேரத்தில் தந்தை வந்து கூறுகின்றார் லி குழந்தைகளே!
(2/4)
22.07.2016
ஆத்ம அபிமானி ஆகுங்கள். இந்த பாடத்தை கற்பிக்க உங்களது தந்தையாகிய நான் வந்திருக்கிறேன்.
மனிதனிலிருந்து தேவதை, நரனிலிருந்து நாராயணன், நாரியிலிருந்து லெட்சுமி ஆவதற்கான பள்ளிக் கூடம்
இதுவாகும். ஹே பரம்பிதா பரமாத்மா ........ என்று கூறி தந்தையை அனைவரும் அழைக்கின்றனர். இப்போது
நிராகார உலகிலிருந்து சாகார உலகிற்கு வாருங்கள். ரூபத்தை (உருவத்தை) மாற்றிக் கொள்ளுங்கள். நிராகார
ஆத்மாக்களாகிய நீங்கள் சரீரத்தில் வரும் போது கர்பத்தில் வருகிறீர்கள், மறுபிறவி எடுக்கிறீர்கள். நீங்கள் 84
பிறவிகள் கர்பத்தில் எடுத்தீர்கள் என்று தந்தை புரிய வைக்கின்றார். ஒரு சரீரத்தை விடுத்து பிறகு கர்பத்தில்
சென்று விடுவீர்கள். இவ்வாறு 84 பிறவிகள் எடுக்கிறீர்கள். நான் கர்பத்தில் வருவது கிடையாது. பாரதவாசிகள்
உண்மையில் தேவி தேவதா தர்மத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். பிறகு ஏணியில் இறங்கி வந்தீர்கள், சத்ரிய
வர்ணத்தில், பிறகு வைஷ்ய, சூத்ர வர்ணத்தில் கலைகள் குறைந்து கொண்டே வந்தது. பாரதம் 16 கலைகள்
நிறைந்ததாக இருந்தது, பிறகு 14 கலைகள் உடையதாக ஆனது. பாரதவாசிகள் தங்களது பிறவிகளைப் பற்றி
அறியவில்லை. 84 பிறவிகள் பாரதவாசிகள் தான் எடுக்கின்றனர். வேறு எந்த தர்மத்தினர்களும் 84 பிறவிகள்
எடுப்பது கிடையாது. நீங்கள் சுயதரிசன சக்கரதாரிகளாக ஆகியிருக்கிறீர்கள், இது ஞான விசயமாகும். சுவதரிசன
சக்கரதாரி ஆவதன் மூலம் நீங்கள் சொர்க்கத்தில் சக்கரவர்த்தி மகாராஜா ஆகிறீர்கள். நாம் இங்கு வந்திருப்பதே
தூய்மை இல்லாதவரிலிருந்து தூய்மையானவர்களாக ஆவதற்காக என்பதை நீங்கள் நன்றாக அறிந்திருக்கிறீர்கள்.
இதுவோ அசுத்தமான உலகமாகும். பதீத பாவன், அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல் ஒரே ஒரு
தந்தை ஆவார். அனைவரும் அவரைத் தான் அழைக்கின்றனர். தந்தையை நினைவு செய்கின்றனரே தவிர
கிருஷ்ணரை அல்ல. கிருஷ்ணர் கீதையைக் கூறவில்லை. கீதை அனைத்து சாஸ்திரங்களுக்கும் தலையாயதாக
விளங்குகிறது. பாரதத்தின் கீதை எந்த தர்மத்தைச் சார்ந்தது? ஆதி சநாதன தேவி தேவதா தர்மத்தைச்
சார்ந்தது. கீதையைக் கூறியது யார்? இராஜயோகம் கற்பித்தது யார்? பரம்பிதா பரமாத்மா, பதீத பாவன் தந்தை
ஆவார். ஆக நிராகாரமாக இருக்கும் உங்களது ஆத்மா இப்போது சாகார சரீரத்தை தாரணை செய்திருக்கிறது.
சாகார மனிதர்களை ஒருபோதும் பகவான் என்று கூறுவது கிடையாது. சத்யுகத்தில் இருந்த லெட்சுமி
நாராயணனையும் பகவான் என்று கூறுவது கிடையாது. இவ்வாறு பட்டம் கொடுக்கப்படுகிறது. நியமப்படி
பகவான் ஒரே ஒருவர் தான். படைப்பவர் கூட ஒரே ஒருவர் தான். மற்றபடி அவர்கள் தேவதைகள் ஆவர்.
5 ஆயிரம் ஆண்டிற்கான விசயமாகும். இந்த லெட்சுமி நாராயணனின் இராஜ்யம் இருந்தது, இவர்கள் மகாராஜா,
மகாராணி என்று கூறப்பட்டனர். பகவான் மகாராஜாவாக ஆவது கிடையாது. அவர் தந்தையாகவே இருக்கிறார்,
அவர் வந்து பாரதவாசிகளை இவ்வாறு தேவி தேவதைகளாக ஆக்குகின்றார். இப்போது தேவி தேவதா
தர்மத்தினர் யாரும் கிடையாது. இது இராவண வம்சம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இராவண இராஜ்யமாக
இருக்கிறது. இராவணனை ஆண்டிற்கு ஆண்டு எரித்துக் கொண்டே இருக்கின்றனர், ஏனெனில் இவர் பழைய
எதிரி ஆவார். ஆனால் இதை பாரதவாசிகள் அறியவில்லை. இராவணன் யார்? என்பது சாஸ்திரங்களிலும்
வர்ணிக்கப்படவில்லை. இராவணனுக்கு ஏன் 10 தலைகள் காண்பிக்கப்படுகிறது? இந்த விசயங்களை நல்ல
முறையில் புரிந்து கொள்ள வேண்டும். மனிதர்கள் முற்றிலும் கல் புத்தி உடையவர்களாக இருக்கின்றனர்.
தங்கபுத்தி என்று இந்த லெட்சுமி நாராயணனை கூறலாம். பாரஸ்நாத், பாரஸ்நாதினியின் இராஜ்யம் இருந்தது.
அரசர் எப்படியோ மக்கள் அப்படியே. பாரதம் போன்ற சுகதாமம் வேறு எந்த கண்டமும் கிடையாது. எப்போது
பாரதம் சொர்க்கமாக இருந்ததோ, அப்போது எந்த நோய், துக்கம் போன்றவை இல்லை. முழு சுகம் இருந்தது.
ஈஸ்வரனின் மகிமை அளவிட முடியாது என்று பாடப்படுகிறது. அதே போன்று பாரதத்தின் மகிமையும்
அளவிட முடியாதது. அனைத்திற்கும் ஆதாரம் தூய்மையில் தான் இருக்கிறது. அவ்வாறு தான் அழைக்கவும்
செய்கின்றனர், அனைவரும் தூய்மை இல்லாதவர்களாக இருக்கின்றனர். அமைதியில்லை, சுகம் இல்லை.
பாரதவாசிகளாகிய நாம் சூரியவம்ச தேவி தேவதைகளாக இருந்தோம், பிறகு சிறிது சிறிதாக தூய்மையை
இழந்து விட்டோம் என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொண்டீர்கள். இது மரண உலகம் என்று கூறப்படுகிறது.
இது எரிந்து சாம்பல் ஆகிவிடும். இது சிவ ஞான யக்ஞமாகும், ருத்ர ஞான யக்ஞம் என்றும் கூறுகின்றனர்.
மனிதர்கள் பல பெயர்களை வைத்து விடுகின்றனர். எங்கெல்லாம் சிவனின் மூர்த்தியைப் பார்க்கிறார்களோ வித
விதமான பல பெயர்களை வைத்து விடுகின்றனர். ஒருவருக்கு மட்டுமே பல பெயர்களின் கோயில் கட்டுகின்றனர்.
ஆக தந்தை அமர்ந்து புரிய வைக்கின்றார் லி ஞானம், பக்தி, வைராக்கியம். இப்போது பக்தி முடிவடைகிறது,
உங்களுக்கு பக்தியின் மீது வைராக்கியம் ஏற்படுகிறது. அதாவது இந்த பழைய உலகின் மீது வைராக்கியம்
ஏற்படுகிறது. இந்த பழைய உலகம் விநாசம் ஆகிவிடும்.
பாபா, நாங்கள் தூய்மையற்றதிலிருந்து தூய்மையானவர்களாக ஆவது எப்படி? என்று குழந்தைகள்
கேட்கின்றனர். யாராவது புதிதாக வருகின்றனர் எனில் அனுமதிக்கப்படுவது கிடையாது. கல்லூரியில் யாராவது
புதிதாக சென்று அமர்ந்தால் புரியாது அல்லவா! மேலும் மனிதனிலிருந்து தேவதையாக ஆவது எப்படி?
என்பது யாருக்கும் தெரியாது. தூய்மையில்லாதிருக்கும் மனிதர்கள் தான் தூய்மையற்றவர்களாக ஆகின்றனர்.
இந்த நேரத்தில் பாரதம் பிச்சைக்கார நாடாக இருக்கிறது. சத்யுகத்தில் பாரதம் இளவரசர் போன்று இருந்தது.
(3/4)
22.07.2016
ஸ்ரீகிருஷ்ணர் சத்யுகத்தின் முதல் இளவரசராக இருந்தார். அவரிடத்தில் அனைத்து குணங்களும் இருந்தன.
லெட்சுமி நாராயணனின் இராஜ்யம் என்று தான் கூறுவர். கிருஷ்ணர் இளவரசராக இருந்தார், இராதை இளவரசியாக
இருந்தார். இளவரசராகிய கிருஷ்ணருக்குத் தான் அனைத்து குணங்கள் நிறைந்தவர், 16 கலைகளிலும்
முழுமையானவர் ....... என்று மகிமை பாடப்படுகிறது. அவர் எந்த கீதையையும் கூறவில்லை. அவர் சத்யுகத்தின்
இளவரசர் ஆவார். தூய்மையற்ற மனிதர்களை தூய்மைபடுத்துவதற்காக அவர் கீதை கூறினார் என்பது இருக்கவே
முடியாது. இவை அனைத்தும் பக்தி மார்க்கத்தின் சாஸ்திரங்களாகும். சாஸ்திரங்களுக்கு எவ்வளவு மகிமைகள்
இருக்கின்றன! சத்யுகத்தில் எந்த சாஸ்திரமோ, பக்தி மார்க்கத்தின் சித்திரங்களோ இருக்காது. அங்கு ஞானத்தின்
பலன் 21 பிறவிகளுக்கு இருக்கும். மீண்டும் சத்யுகத்தின் பாக்கியத்தை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். பாரதவாசிகள்
சத்யுகத்தில் 5 ஆயிரம் ஆண்டிற்கு முன்பு உலகிற்கு எஜமானர்களாக இருந்தனர். வேறு எந்த பிரிவினைகளும்
கிடையாது. 5 ஆயிரம் ஆண்டிற்கான விசயமாகும். இப்போது கலியுகத்தின் இறுதி அல்லவா! விநாசம் எதிரில்
இருக்கிறது. பகவான் இந்த ஞான யக்ஞம் படைத்திருக்கின்றார். பதீத கலியுகத்தை பாவன சத்யுகமாக ஆக்குவதற்கு,
ஆக அவசியம் தூய்மையற்ற உலகம் விநாசம் ஆகிவிடும். பிரம்மாவின் மூலம் ஆதி சநாதன தேவி தேவதா
தர்மத்தின் ஸ்தாபனை என்று பாடப்பட்டிருக்கிறது, அதை இப்போது சிவபாபா பிரம்மாவின் மூலம் செய்விக்கின்றார்.
அவர் (பிரம்மா) பிரஜாபிதா ஆவார், அனைவரும் அவரது வம்சத்தினர்கள். பிரம்மாவின் மூலம் தான் சொர்க்கம்
ஸ்தாபனை ஆகியிருந்தது. இன்றிலிருந்து 5 ஆயிரம் ஆண்டிற்கு முன்பும் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்க
நான் சங்கமத்தில் வந்திருந்தேன். கிருஷ்ணர் அல்ல, நான் தான் வந்திருந்தேன். கிருஷ்ணர் அசுத்தமான
உலகில் வர முடியாது. தந்தை தான் வருகின்றார். அவர் தான் அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல்
ஆவார். மனிதர்கள் மனிதர்களுக்கு சத்கதி கொடுக்க முடியாது. அனைவரும் நினைவு செய்வதும் ஒரே
ஒருவரைத் தான். பரம்பிதா பரமாத்மா எங்கு இருக்கின்றார்? பரந்தாமத்தில் இருக்கின்றார் என்பதை குழந்தை
களாகிய நீங்கள் அறிவீர்கள். அது பிரம்ம மகா தத்துவமாகும். அங்கு ஆத்மாக்கள் மகாத்மாக்களைப் போன்று
தூய்மையாக இருக்கின்றன. இங்கும் மகான் ஆத்மா, பதீத ஆத்மா என்று கூறுகின்றனர் அல்லவா! உண்மையில்
இங்கு மகான் ஆத்மா ஒருவரும் கிடையாது. ஆத்மா தான் தூய்மையாக, சதோ பிரதானமாக ஆக வேண்டும்.
ஞான, யோகத்தினால் அன்றி தண்ணீரினால் அல்ல. ஆத்மா தான் தூய்மை இல்லாததாகியிருக்கிறது. ஆத்மாவில்
தான் கறைகள் படிந்திருக்கிறது. ஆத்மா தான் தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பாக ஆகிறது. இப்போது
தூய்மை இல்லாமல் இருக்கின்ற ஆத்மாக்களை யார் தூய்மையாக்குவது? பரம்பிதா பரமாத்மாவைத் தவிர
வேறு யாரும் ஆக்க முடியாது. என் ஒருவனை நினைவு செய்யுங்கள், உங்களது பாவங்கள் அழிந்து விடும்
என்று தந்தையே வந்து புரிய வைக்கின்றார். எந்த அளவிற்கு நினைவு செய்வீர்களோ அந்த அளவிற்கு
தூய்மையற்றதிலிருந்து தூய்மையாக ஆவீர்கள். இதில் தான் உழைப்பு இருக்கிறது. முழு ஞானமும் புத்தியில்
இருக்கிறது. இந்த சக்கரம் எவ்வாறு சுற்றுகிறது? நாம் 84 பிறவிகள் எவ்வாறு எடுக்கிறோம்? சத்யுகத்தில்
எவ்வளவு காலம் இராஜ்யம் நடைபெறுகிறது? பிறகு இராவணன் எப்படி வருகிறான்? இராவணன் யார்?
என்பதும் யாருக்கும் தெரியாது. எப்போதிலிருந்து இராவணனை எரித்து வருகிறோம்? என்பதும் யாருக்கும்
தெரியாது. ஒவ்வொரு ஆண்டும் எரிக்கின்றனர். சத்யுகத்தில் எரிக்க மாட்டீர்கள். இப்போதிருப்பதோ இராவண
இராஜ்யமாகும். இராம இராஜ்யத்தை யாரும் ஸ்தாபனை செய்ய முடியாது. இது தந்தையின் காரியமாகும்.
தூய்மை இல்லாத மனிதர்களால் செய்ய முடியாது. அவையனைத்தும் விநாசம் ஆகிவிடும். தூய்மையற்ற
உலகமே விநாசம் ஆக வேண்டும். ஹே பதீத பாவனனே வாருங்கள் என்று சத்யுகத்தில் ஒருவரும் கூறமாட்டார்
கள். அது தூய்மையான உலகம் அல்லவா! இந்த லெட்சுமி நாராயணனை இவ்வாறு சொர்கத்திற்கு எஜமானர்களாக
ஆக்கியது யார்? என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள். பிறகு அவர்கள் 84 பிறவிகள் எப்படி எடுத்தனர்?
ஆதி சநாதன தேவி தேவதா தர்மத்தினர் மட்டுமே 84 பிறவிகள் எடுக்கின்றனர். அவர்களே இந்த நேரத்தில்
சூத்ர வம்சத்தினர்களாக ஆகியிருக்கின்றனர். இப்போது மீண்டும் பிராமண வம்சத்தினர்களாக ஆகியிருக்கின்றனர்.
இப்போது நீங்கள் பிராமணர்கள் குடுமி போன்று இருக்கிறீர்கள். இது உயர்ந்ததிலும் உயர்ந்த குடுமியாகும்.
பிரம்மா வாய்வழி வந்த பிராமண குல பூஷணர்கள். இப்போது நீங்கள் சிவபாபாவின் குழந்தையாகவும்
இருக்கிறீர்கள். பேரன் பேத்திகளாகவும் இருக்கிறீர்கள். சிவவம்சி பிறகு பிரம்மா குமார்கள், குமாரிகள். தாத்தாவிட
மிருந்து ஆஸ்தி கிடைக்கிறது. என்னை நிரந்தரமாக நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார்.
தூய்மை ஆகுங்கள், நீங்கள் என் கூடவே முக்திதாமத்திற்கு வந்து விடுவீர்கள். யார் கல்பத்திற்கு முன்பு
புரிந்திருந்தார்களோ அவர்கள் தான் இந்த விசயங்களைப் புரிந்து கொள்ள முடியும். அவர்கள் ஆயிரக்கணக்கானவர்
கள் உள்ளனர். எத்தனை பி.கு, இருக்கின்றனர்? என்று சிலர் கேட்கின்றனர். ஆயிரக்கணக்கானவர்கள்
இருக்கின்றனர் என்று கூறுங்கள். இந்த தெய்வீக மரம் வளர்ச்சி அடைந்து கொண்டே செல்கிறது. இப்போது
மீண்டும் ஆதி சநாதன தேவி தேவதா தர்மத்தின் நாற்று நடப்பட்டுக் கொண்டிருக்கிறது, ஏனெனில் தற்சமயம்
தேவதா தர்மம் கிடையாது. இப்போது தங்களை இந்து என்று கூறிக் கொள்கின்றனர். மற்ற தர்மங்களில்
மாற்றமாகி விட்டனர். மீண்டும் அனைவரும் வெளிப்படுவார்கள், வந்து தந்தையிடம் ஆஸ்தி அடைவார்கள்.
(4/4)
22.07.2016
எல்லையற்ற தந்தையிடத்தில் எல்லையற்ற சுகத்தின் ஆஸ்தி அடைவதற்காக அதாவது மனிதனிலிருந்து
தேவதா ஆவதற்காக நீங்கள் வந்திருக்கிறீர்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய்
தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீக
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) தூய்மை இழந்தவரிலிருந்து தூய்மை ஆவதற்காக ஞானம் மற்றும் யோகாவில் (நினைவில்)
உறுதியானவர்களாக ஆக வேண்டும். ஆத்மாவிலிருந்து படிந்திருக்கும் கறையை
நினைவிற்கான முயற்சியின் மூலம் நீக்க வேண்டும்.
2) நாம் பிரம்மா வாய்வம்சாளி பிராமணர்கள், குடுமி போன்றவர்கள் என்ற போதையில் இருக்க
வேண்டும். பிராமணர்கள் தான் ஆஸ்திக்கு அதிகாரிகள், ஏனெனில் சிவபாபாவின் பேரன்களாக
இருக்கிறோம்.
வரதானம்: தனது சம்பூர்ண நிலையின் மூலம் அனைத்து வகையான அடிமைத்தனத்தையும்
சமாப்தி செய்யக் கூடிய இயற்கையை வென்றவர் ஆகுக.
எப்போது நீங்கள் தனது சம்பூர்ண நிலையில் நிலைத்திருப்பீர்களோ அப்போது இயற்கையையும் வென்று
விடுவீர்கள் அதாவது அதிகாரி என்ற அனுபவம் ஏற்படும். சம்பூர்ண நிலையில் எந்த வகையிலும் அடிமைத்தனம்
இருக்காது. ஆனால் அப்படிப்பட்ட சம்பூர்ண நிலை உருவாக்குவதற்கு மூன்று விசயங்கள் சேர்ந்தே இருக்க
வேண்டும் லி 1) ஆன்மீகம், 2) ஆன்மீக போதை, 3) இரக்க குணம். எப்போது இந்த மூன்றும் வெளிப்படையான
ரூபத்தில், ஸ்திதியில், முகத்தில் அல்லது செயலில் தென்படுகிறதோ அப்போது தான் அதிகாரி அல்லது
இயற்கையை வென்ற ஆத்மா என்று கூற முடியும்.
சுலோகன்: ஸ்ரீமத் என்ற கடிவாளம் உறுதியாக இருந்தால்
மனம் என்ற குதிரை இஷ்டம் போல் ஓடாது.
(1/4)
23
23.07.2016
காலை முரளி ஓம்சாந்தி பாப்தாதா , மதுபன்
இனிமையான குழந்தைகளே! இதுவரை நீங்கள் கேட்ட கேள்விப்பட்ட விஷயங்கள்படி நடந்து
வந்தீர்கள், இப்பொழுது பாபா உங்களுக்கு நேரடியாக வந்து ஞானம் கொடுத்து தனக்கு சமமாக
ஞானம் நிறைந்தவர்களாக ஆக்குகின்றார்.
கேள்வி: நல்ல புருஷார்த்தி குழந்தைகளின் அடையாளம் அதாவது அவர்களின் நிலையின் புகழ்
என்ன?
பதில்: நல்ல புருஷார்த்தி குழந்தைகளேலி தாய்லிதந்தையை முழுமையாக கடைப்பிடிப்பார். தன்னுடைய
வாழ்க்கையின் மீது இரக்கப்படுவார். முழுமையாக கவனம் செலுத்துவார். கொஞ்சமாவது நேரம் ஒதுக்கி
பாபாவை அவசியம் நினைவு செய்வார். அவர்கள் நிலையின் புகழ் தான்லி ஆடாத, அசையாத, நிலையானவர்
என்பது. அவர்கள் தான் மஹாவீரர் என்று அழைக்கப்படுகின்றனர்.
பாட்டு:லி போலாநாத் தனிப்பட்டவர்
ஓம்சாந்தி. பக்திமார்க்க உலகத்தில் பாட மட்டும் செய்கின்றார்கள். பக்திமார்கத்தில் நாம் கூட பாடினோம்
என்று குழந்தைகள் இப்பொழுது புரிந்து கொண்டீர்கள். இப்பொழுது அதே போலாநாத் நம் முன்னால் இருக்கின்றார்,
போலாநாத் என்ற வார்த்தை பக்தி மார்க்கத்தினுடையது. ஞானமார்கத்தில் அவரை சிவபாபா என்கின்றோம்.
நீங்கள் புரிந்து கொண்டீர்கள்லி அனாதியான ஆக்கப்பட்ட நாடகம்லி நாடகத் திட்டப்படி சங்கமயுகத்தில் பாபா
வந்து நம்மூலமாக முயற்சி செய்விக்கின்றார். கல்பலிகல்பமாக புருஷார்தம் செய்விகின்றார். எத்தனை காலம்
குழந்தைகள் நீங்கள் பக்தி செய்தீர்கள். இதைக் கூட தெளிவாக சொல்கின்றார். யார் முதன்லிமுதலில் பக்தி
செய்தார்களோ அவர்களே வந்து ஞானம் கேட்பார்கள். மேலும் அவர்களே சூர்யவம்சி ஆகின்றார்கள். சத்திய
யுகத்தில் இலட்சுமிலிநாராயணன் மட்டும் வருவதில்லை. அவர்களுடைய வம்சமும் இருக்குமல்லவா. அதனை
தெய்வீக வர்ணம் என்று கூறப்படுகின்றது. பாரதத்தில் தான் தெய்வீக வர்ணம் இருந்தது. இப்பொழுது அசுர
வர்ணமாக உள்ளது. இது சங்கமயுகம். இப்பொழுது அசுரரிலிருந்து தெய்வீக வர்ணத்திற்குப் போக வேண்டும்.
உண்மையில் இந்த மகாபாரதயுத்தத்தைத் தான் இதிகாசங்களில் சொல்லப்படுகின்றது. சிவனின் பெயருக்குப்
பதிலாக கிருஷ்ணரின் பெயரைப் போட்டு விட்டார்கள். கீதை சாஸ்திரம் கண்டனம் ஆகியதால் மற்ற அனைத்து
சாஸ்திரங்களும் கண்டனத்திற்கு ஆகிவிட்டன. முக்கியமான விஷயம் கீதைதான். கீதை பாடசாலை அதாவது
கீதா பவனம் எவ்வளவு உள்ளது! கீதை ஞானம் கேட்பதற்கான பாடசாலை உள்ளன.. யார் சொற்பொழிவாளர்களாக
உள்ளாரோ அவர்களை பின்பு பாராட்டுகினறார்கள். குழந்தைகளுக்கு பாபா தினந்தோறும் மிகவும் அன்போடு
புரிய வைக்கின்றார். பாபா அன்புக்கடல் என்று குழந்தைகளுக்குத் தெரியும். அனைவருக்கும் மிக அன்போடு
புரிய வைக்கின்றார். பாபா ஒரு போதும் கோபம் கொள்வதே இல்லை, எப்பொழுதும் அன்போடு புரிய
வைக்கின்றார். குழந்தைகளே ! நீங்கள் சதோபிரதானமாக இருந்தீர்கள். பிறகு புனர் ஜென்மம் எடுத்துக்
கொண்டே வந்து விட்டீர்கள். நீங்கள் பாரதவாசிகள் தான் உண்மையில் தேவிலிதேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்கள்.
இதையும் கூட பாபா கூறுகின்றார். முதன்லிமுதலில் ஆஸ்தியை வாங்க யார் வருவார்கள்? யார் கல்பத்திற்கு
முன்னால் வாங்கினார்களோ, அவர்களே பாபா ! உங்களைத் தவிர எங்களுக்கு உதவியாளர் வேறு யாரும்
இல்லை என்று சொல்வார்கள். பாபா சங்கமயுகத்தில் தான் மன்னிக்கின்றார். இராம இராஜ்ஜியம் மேலும்
இராவண இராஜ்யம் இங்கு தான் இருந்தது என்று குழந்தைகள் அறிந்து கொண்டீர்கள். இராவண இராஜ்யம்
இப்பொழுது இருப்பதால் தான் அனைவரும் இராம இராஜ்யம் வேண்டும் என்று விரும்புகின்றார்கள். நீங்கள்
எப்பொழுது சிவபாபா என்று சொல்கின்றீர்களோ அப்பொழுது உங்கள் புத்தி நிராகாரம் (பரந்தாமம்) பக்கம்
செல்கின்றது, நிராகாரின் நினைவு வருகின்றது. ஆத்மா தான் பாபாவை அழைக்கின்றது. பரமாத்மா என்று
ஒருவர் உட்கார்ந்து கேட்கின்றார், அப்படி கிடையாது. நாடகத்தின் அனுசாரமாக பதீதர்களை பாவனம் ஆக்குவதற்
காக நான் உடலில் வருகின்றேன், என்று பாபா புரியவைக்கின்றார். உங்கள் கூக்குரலைக் கேட்டு வருகின்றேன்
அப்படி இல்லை. பக்தி எப்பொழுது பூர்த்தி ஆகின்றதோ அப்பொழுது நான் வந்தே ஆக வேண்டும். இது
புரிந்து கொள்ள வேண்டிய விஷயம். சமயம் வரும் பொழுது, குழந்தைகள் அழைக்க ஆரம்பிக்கின்றீர்கள்.
அவர் எப்பொழுது வருகின்றார் என்ற விபரம் எவற்றிலும் எழுதி வைக்கவில்லை. அவர்கள் கல்பத்தின்
ஆயுளை தவறாக எழுதி வைத்து விட்டார்கள். இந்த படம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டும். அதை
தினந்தோறும் பார்க்கும் போதும் இது பாபா, இது தாதா, இது ஆஸ்தி என்று நினைவு வரும். குழந்தைகளே
சதோபிரதானம் ஆவதற்காக என்னை நினைவு செய்தால் கறை நீங்கும். இந்த வழியினை பாபா தான் புரிய
(2/4)
23.07.2016
வைக்கின்றார். இந்த அப்பா கூட நானும் கூட புருஷார்த்தம் செய்கின்றேன் என்று சொல்கின்றார். குழந்தைகளே!
ஒருவருக்கும் எச்சரிக்கை கொடுத்து முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டும். இந்த சித்திரங்களை வைத்து
புரிய வைப்பது மிகவும் சுலபம். சிவபாபா பிரம்மா மூலமாக ஸ்தாபனை செய்து கொண்டு இருக்கின்றார்.
உங்கள் முன்னால் மஹாபாரத யுத்தம் நின்று கொண்டு இருக்கின்றது. இவ்வளவு அநேக தர்மங்கள் அழிந்து
விடும், அதற்காக யுத்தம் அவசியம் தேவை. இந்த விஷயங்களை குழந்தைகள் மறக்கக் கூடாது. முற்றிலும்
இப்பொழுது கலியுகம் ஆழ்ந்த இருளிலில் உள்ளது. எவ்வளவு அநேக மனிதர்கள் உள்ளனர். அவசியம்
வினாசம் ஆகியே தீரும். சத்தியயுகத்தில் ஒரு தர்மம் இருக்கும். பிறகு மீண்டும் ஒரு தர்மம் ஸ்தாபனை
ஆகிக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் சத்கதி தாதா (வள்ளல்) ஒரு பாபா தான். பாபாவிடமிருந்து தான்
குழந்தைகளுக்கு ஆஸ்தி கிடைக்கின்றது. நாம் படிக்கும் இந்த படிப்பு எதிர்காலத்திற்கு 21 ஜென்மத்திற்காக
படிக்கின்றோம். பகவானின் மஹாவாக்கியம்லி நான் உங்களை கற்கச் செய்து 21 ஜென்மத்திற்காக சொர்க்கத்தின்
எஜமானன் ஆக்குகின்றேன். சூர்யவம்சம், சந்திரவம்ச குலம் நிச்சயம் ஸ்தாபனை ஆகின்றது. யார் எவ்வளவு
புருஷார்த்தம் செய்கின்றார்களோ, அவர்கள் அந்தளவு உயர்ந்த பதவியை அடைகின்றார்கள், அதனால்
தாய்லிதந்தையைப் பின்பற்றுங்கள் என்று சிவபாபா கூறுகின்றார். இவர்களை சூட்சுமவதனத்தில், வைகுண்டத்தில்
கூட பார்க்கின்றீர்கள். தன்னைத் தான் பாருங்கள், நாம் கூட மஹாராஜா, மஹாராணி ஆகின்றோம். வைகுண்டத்தின்
சாட்சாத்காரம் கூட ஆகின்றது. அவசியம் பாரதத்தில் வைகுண்டம் ஸ்ரீ கிருஷ்ணபுரி இருந்தது என்று ஏற்றுக்
கொள்கின்றார்கள். இன்று கம்சபுரி, நாளை கிருஷ்ணபுரி ஆக இருக்கும். இரவு மாறி பகல் வரும். இங்கே அரை
கல்பம் எல்லையற்ற பகல், மேலும் அரை கல்பம் எல்லையற்ற இரவு இருக்கும். இரவில் முட்டி மோதிக்
கொள்கின்றார்கள். பிரம்மாவின் இரவு என்றால், பிராமணர்களின் இரவு ஆகும். பிறகு நீங்கள் பிராமணர்களிலி
ருந்து தேவதைகளாக ஆகின்றீர்கள். சத்தியயுகத்தில் பிராமணர்கள் இருப்பதில்லை, தேவதைகள் தான் இருப்பார்கள்.
பாரதம் துôய்மையான இராஜஸ்தானாக இருந்தது. பிறகு துôய்மையற்ற இராஜஸ்தான் ஆகி விட்டது
என்று குழந்தைகள் தெரிந்து கொண்டீர்கள். பாரதம் எப்பொழுதும் இராஜஸ்தானாகத் தான் இருக்கும். இராஜ்யங்கள்
நடந்து கொண்டே தான் இருக்கின்றது, தர்மத்தைச் சேர்ந்தவர்கள் ஆரம்பத்திலிருந்தே இராஜ்ஜியம் செய்வதில்லை.
பகவான் தான் இராஜ்ஜியம் ஸ்தாபனை செய்கின்றார். பகவான் தான் வந்து இராஜயோகம் கற்றுக் கொடுக்கின்றார்.
அவர் தான் நிராகார் ஞானக்கடல், சுகக் கடல் பாபாவிடமிருந்து நமக்கு ஆஸ்தி கிடைக்கின்றது என்று நீங்கள்
அறிந்து கொண்டீர்கள். அவசியம் நம்முடைய முயற்சி தான் நேரமாகின்றது. யார் எவ்வளவு முயற்சி செய்கின்றார்
களோ, எவ்வளவு பாதை காட்டுகின்றார்களோ. பாபா சொல்கின்றார்லி என்னை நினைவு செய்தால் நீங்கள் பதீத
நிலையிலிருந்து பாவன நிலையை அவசியம் அடைவீர்கள், எவ்வளவு எளிதான விஷயம். லௌகீகத்தில்
தாய்லிதந்தை ஞானத்தில் இருக்கின்றார்கள் என்றால், குழந்தைகளையும் அவர்கள் சமம் ஆக்க வேண்டும். தாய்
தந்தை உண்மையான வருமானம் செய்கின்றீர்கள் என்றால், குழந்தைகளையும் உண்மையான வருமானம்
அடையச் செய்விக்க வேண்டும். சில குழந்தைகள் நல்ல குழந்தைகளாக இருக்கின்றார்கள். நாங்கள் ஆன்மீகப்
படிப்பை படித்துவிட்டு ஒவ்வொரு வீட்டிற்கும் போய் செய்தியை சொல்வோம் என்று சொல்கின்றார்கள். நான்
கூட செய்தியாளன் தான் என்று பாபா கூறுகின்றார். நான் உங்களுக்கு வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும்
என்ற செய்தியைக் கூறுகின்றேன். இந்த உலகம் இப்பொழுது இருப்பதற்குத் தகுதி இல்லை. என்னை நினைவு
செய்யுங்கள் துôய்மை அடைந்து விடலாம். நீங்கள் பாவனமாக இருந்தீர்கள், இராவணன் வந்து பதீதர்களாக
ஆக்கிவிட்டார். நான் மீண்டும் பாவனம் ஆக்க வந்துள்ளேன். சிறிது காலத்திற்குப் பிறகு அணுகுண்டு எல்லாம்
போடும் போது இது தான் உண்மையான மஹாபாரத யுத்தம் என்று அறிந்து கொள்வார்கள். அப்பொழுது
அவசியம் பகவானும் இருப்பார். ஆனால் மற்றவர்கள் கீதையின் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தான் என்று நினைக்
கின்றார்கள். எவ்வளவு குழப்பம் அடைகின்றார்கள். குழப்பம் அடையவில்லை என்றால், கடவுள் வர வேண்டியதின்
அவசியம் தான் என்ன? பக்திமார்க்கத்தைத் தான் மறந்து!லிமறக்க வைக்கும் விளையாட்டு என்று
சொல்லப்படுகின்றது. இப்பொழுது என்னை நினைப்பதால் அனைத்து தவறுகளும் அழிந்துவிடும் என்று பாபா
சொல்கின்றார். முன்னால் தன்னை இந்த உடல் என்று நினைத்தீர்கள். இப்பொழுது தன்னை ஆத்மா என்று
நினைக்கின்றீர்கள். குழந்தைகளே! ஆத்ம அபிமானி ஆகுங்கள் என்று இந்த எச்சரிக்கை பாபா தான்
கொடுக்கின்றார். இங்கே நீங்கள் பாபாவிற்கு முன்னால் அமர்ந்துள்ளீர்கள். இங்கே சென்டர்களில் சிவபாபா
இப்படிச் கூறுகின்றார் என்று குழந்தைகள் புரிய வைக்கின்றார்கள். இங்கே நேரடியாக நான் ஆத்மாக்களிடம்
அமர்ந்து பேசுகின்றேன் என்று பாபா கூறுகின்றார். பாபா இவர் மூலமாக நமக்கு புரிய வைக்கின்றார் என்று
நீங்கள் புரிந்து கொண்டீர்கள். இது தான் உண்மையான கல்யாணகாரி திருவிழா ஆகும். பாபா நிரந்தரமாக
என்னை நினைவு செய்யுங்கள் என்று சொல்கின்றார். பாபாவிடமிருந்து நாம் சொர்க்கத்தின் ஆஸ்தியை அடைய
வேண்டும். பாபா மற்றும் சொர்க்கம் இரண்டையும் நினைவு செய்ய வேண்டும். எந்த ஒரு விகர்மமும் செய்ய
வேண்டாம். நீங்கள் இப்பொழுது விகர்மம் செய்தீர்கள் என்றால் நுôறு மடங்கு தண்டனை கிடைக்கும். விகர்மம்
செய்விப்பவர் மாயா, அதன் மீது வெற்றி அடைய வேண்டும். ஆகையால் தான் மஹாவீர் ஹனுமான் கதை
(3/4)
23.07.2016
உள்ளது. நீங்கள் ஹனுமான் மஹாவீர் அல்லவா? நாம் பாபாவினுடையவர்களாக ஆகி விட்டோம். மாயாவிடமிருந்து
தோல்வி அடைய முடியாது. அதனால் பாபாவை நினைத்துலிநினைத்து சதோபிரதான், விகர்மாஜீத் ஆகி விடுவீர்கள்.
ஆகவில்லை என்றால் பதவி குறைந்து விடும். புருஷார்த்தி குழந்தைகள் தன்னுடைய வாழ்க்கையின் மீது
இரக்கப்படுவார்கள். என்ன ஆனாலும் சரி, நினைவு யாத்திரையில் இருப்பார்கள், ஆடாது, அசையாது, நிலையாக
இருப்பார்கள். வினாசம் ஆகியே தீரும். எல்லோருடைய பெரியப்பா, சித்தப்பா, மாமா, குரு, அனைவரும்
அழிந்து விடுவார்கள். நான் உங்களை என்னுடன் அழைத்துச் செல்கின்றேன் என்று சத்குரு சொல்கின்றார்.
மனிதர்கள் முற்றிலும் இருட்டில் உள்ளார்கள், பாபா நம்மை தன்னுடன் அழைத்துச் செல்வார் என்று நீங்கள்
அறிந்து கொண்டீர்கள். காலன் சாப்பிட்டுவிட்டான்லி என்று சொல்கின்றார்கள் அல்லவா? ஆனால் நான் உங்களை
சாந்திதாமம் அழைத்துச் செல்கின்றேன். ஆத்மா இந்த சரீரத்தை விட்டுப் போய்விடும். காலன் யாரும் கொண்டு
போவதில்லை, ஆத்மா தான் இந்த உடலை விட்டு வெளியில் போக வேண்டி உள்ளது. இப்பொழுது நான்
சுயம் வந்துள்ளேன்லி உங்களைக் கூடவே அழைத்துச் செல்கின்றேன். பாபா மரணத்தைத் தரவா வந்துள்ளார்,
இல்லை. நீங்கள் பழைய சரீரத்தை விட வேண்டும். ஆத்மா தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானம் ஆக
வேண்டும். இப்பொழுது 5 தத்துவம் கூட தமோபிரதானமாக உள்ளது, ஆகையால் உடல் கூட அப்படி கிடைக்
கின்றது. அங்கே தத்துவம் சதோபிரதானமாக இருக்கும். அதனால் உடல் கூட வெள்ளையாக இருக்கும். நான்
மீண்டும் ஆதி சனாதன தேவிலிதேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்கின்றேன் என்று பாபா சொல்கின்றார்.
நீங்கள் தான் 84 பிறவிகளை அனுபவிக்கின்றீர்கள். நீங்கள் உங்கள் தர்மத்தை மறந்து விட்டீர்கள். மேலும்
மற்றவர்கள் தங்களது தர்மத்தை மறப்பதில்லை. நீங்கள் இப்பொழுது அறிந்து கொண்டீர்கள் நாம் உண்மையில்
தேவிலிதேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்கள் என்று. பாபா கல்பலி கல்பமாக உங்களுக்குத் தான் புரிய வைக்கின்றார்.
நீங்கள் மற்றவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். இப்பொழுது 84 முழு சக்கரம் பூர்த்தி ஆகின்றது, வினாசம்
முன்னால் நிற்கின்றது. சொர்க்கத்தின் எஜமானன் ஆவதற்காக நீங்கள் தன்னை தகுதி ஆக்கிக் கொள்ள
வேண்டும். இது பாபாவின் நினைவால் தான் ஆக முடியும். அதிகாலையில் எழுந்து பாபாவை நினைக்க
வேண்டும். பாபா அற்புதம்லி நீங்கள் எப்படி வருகின்றீர்கள். கீதையில் கிருஷ்ணருடைய பெயரைப் போட்டு
விட்டார்கள். ஆனால் நீங்கள் முன்னால் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்கின்றீர்கள், இதை இப்பொழுது
நீங்கள் மட்டும் தான் அறிவீர்கள். அவை அனைத்தும் பக்தி மார்க்கத்தில் கேட்கப்பட்ட விஷயங்கள். இப்பொழுது
நம் ஆத்மாக்களுக்கு பாபா நீங்கள் கிடைத்துள்ளீர்கள், ஆத்மாக்களின் தந்தை வந்து சந்திக்கின்றார் என்றால்,
அன்பில் தான் வந்து சந்திக்கின்றார். குழந்தைகள் பாபாவுடன் மிகவும் அன்போடு சந்திக்கின்றீர்கள். இங்கே
அவர் நிராகாரகாரமாக தந்தை உள்ளார். அதனால் தான் இவரை சந்திக்கும் போதெல்லாம் சிவபாபாவை
நினைத்து சந்தியுங்கள் என்று பாபா எப்பொழுதும் சொல்கின்றார். மனிதர்கள் ஒன்றுமே அறிவதே இல்லை.
உங்களில் கூட ஒரு சிலர் தான் அறிகின்றார்கள், என்னுடையவர் ஆகிவிட்டு பின்பு மறந்து விடுகிறார்கள்.
தேக அபிமானத்தில் வந்து விடுகின்றார்கள். பாபா நான் உங்களுடையவன் ஆகி விட்டேன் என்று உறுதிமொழி
கூட கொடுக்கின்றார்கள். ஆண் ஆனாலும், பெண் ஆனாலும் சரி, ஆத்மா தான் சொல்கின்றது. ஆண்
உடலில் இருந்தால் ஆண் நான் உங்களுடையவன் ஆகி விட்டேன் என்று சொல்கின்றார். பெண் கூட நான்
உங்களுடையவன் ஆகி விட்டேன் என்று சொல்கின்றார். பாபா நாங்கள் உங்களிடமிருந்து முழுமையாக
ஆஸ்தியை அடைவோம் முழுவதுமாக உங்களை நினைப்போம், பாபாவை நினைக்காமல் பாவங்கள் நீங்காது,
தமோபிரதானத்தில் இருந்து சதோபிரதானம் ஆக முடியாது. சத்தியயுகத்தில் உங்களுக்கு அகண்ட உறுதியான,
சுகம்லிசாந்தி, நிறைந்து 21 ஜென்ம இராஜ்யம் கிடைக்கின்றது. சொர்க்கத்தைப் படைக்கும் பாபா அவசியம்
நமக்கு ஆஸ்தியைக் கொடுப்பார். பரபிரம்மத்தில் வசிப்பவர் பரமாத்மா என்று புகழ் பாடப்படுகின்றது. அவர் ஒரு
முறை தான் வருகின்றார். இது கூட புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் அல்லவா? சிலர் புரிந்து கொள்வதே
இல்லை, சிறிது நாள் போனால் கண்கள் திறக்கும். மிகப் பெரிய சண்டை நடக்கும்? உண்மையில் யக்ஞம்
படைக்கப்பட்டுள்ளது. இதில் யுத்தம் கூட நடக்கும். இந்த யக்ஞத்தைப் பற்றி யாருக்கும் தெரியாது. இந்த ருத்ர
ஞான யக்ஞத்தைப் படைத்தார் என்றால் வினாசம் ஆகும். அவர்கள் யக்ஞம் படைக்கின்றார்கள் வினாசம்
ஆகக் கூடாது என்று. சாந்திக்காக செய்கின்றார்கள். இந்த யக்ஞத்தை மீண்டும் படைப்பார். அவர்களுக்கு
வினாசம் ஆகுமா? பின்பு என்ன ஆகும் இது பற்றி தெரியாது. இப்பொழுது குழந்தைகளான நீங்களும் முழு
உலகத்தின் ஆதிலிமத்தியம்லிமுடிவின் அனைத்து விஷயங்களையும் அறிந்துள்ளீர்கள். அனைவரின் எல்லையற்ற
ஜென்மக் கதையையும் அறிந்துள்ளீர்கள். பரமபிதா பரமாத்மாவின் வாழ்க்கை வரலாறு சொல்ல முடியும் என்று
சொல்ல முடியாது. பரமாத்மாவைத் தான் அனைவரும் அழைக்கின்றார்கள் அல்லவா? அடிக்கடி நினைக்கின்றார்கள்.
சொல்கின்றார்கள் அல்லவா ! குழந்தையை பகவான் தான் கொடுத்தார், இது செய்தார் அது செய்தார்... யாருடைய
பொருளோ (குழந்தை இறந்து விட்டால்) அவரே எடுத்துக் கொண்டார் என்று சிலர் நினைக்கின்றார்கள்.
அப்படியும் சில புத்திசாலிகள் இருக்கின்றார்கள். அநேகவிதமான மனிதர்கள் இருக்கின்றார்கள். இப்பொழுது
உங்களுக்கு பாபா கிடைத்துள்ளார் என்றால், பாபாவைத் தான் நினைக்க வேண்டும். பாபாவின் நினைவில்
23.07.2016
(4/4)
தான் வருமானம் உள்ளது. நீங்கள் விஷ்ணுபுரிக்கு எஜமானன் ஆகிவிடுவீர்கள். நீங்கள் சத்தியயுகத்தில் இருந்து
கலியுகம் வரை முழு சக்கரத்தையும் அறிந்துள்ளீர்கள். உங்களுடைய புத்தியில் எப்படி உள்ளதோ அப்படி
பாபாவின் புத்தியில் உள்ளது. அதனால் தான் அவரை ஞானக்கடல், ஞானம் நிறைந்தவர் என்று சொல்லப்
படுகின்றது. இப்பொழுது நீங்கள் பாபாவிடமிருந்து ஆஸ்தியை அடைந்து கொண்டு இருக்கின்றீர்கள். நீங்கள்
குழந்தைகள் உறுதியாக, நிலையாக இருக்க வேண்டும். மாயா வந்து அடிக்கடி கீழே தள்ளியது என்று
இருக்கக் கூடாது. தொட்டால் சினுங்கியாக இருக்கக் கூடாது. சமயம் நெருங்கி வந்து கொண்டு இருக்கின்றது,
பிறகு நீங்கள் நம்முடைய புருஷார்த்தம் முடிந்து விட்டது என்று பார்ப்பீர்கள். கடைசி நேரம் வந்துவிட்டது.
நல்லது.
இனிமையிலும் இனிமையான குழந்தைகளே தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் !
மேலும் காலை வணக்கங்கள். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரனைக்கான முக்கிய சாரம்:லி
1) ஆன்மீகக் கல்வியைக் கற்று, உண்மையான வருமானம் செய்து, மேலும் செய்விக்கவும்
வேண்டும். வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற செய்தியை அனைவருக்கும் கொடுக்க
வேண்டும். இப்பொழுது எந்த விகர்மமும் செய்யக் கூடாது.
2) அதிகாலையில் எழுந்து பாபாவை மிகவும் அன்போடு நினைக்க வேண்டும். சின்னலிசின்ன
விஷயங்களுக்கு எல்லாம் தொட்டால் சினுங்கி ஆகக் கூடாது. உங்கள் நிலை ஆடாதுலி
அசையாது இருக்க வேண்டும்.
வரதானம்: மனதால் மஹாதானத்தின் மூலமாக ஒவ்வொரு எண்ணத்தின்
சித்தியையும் அடையக் கூடிய மாஸ்டர் சர்வ சக்திவான் பவ.
எந்த குழந்தைகள் எண்ணத்தின் மூலமாக சக்திகளை தானம் செய்கின்றார்களோ அவர்கள் மாஸ்டர்
சர்வ சக்திவான் என்ற வரதானத்தை அடைகின்றார்கள். ஏனென்றால் மனதின் மூலமாக சக்திகளை தானம்
செய்வதில் அவ்வளவு சக்தி சேமிப்பாகின்றது. ஆகையால் ஒவ்வொரு எண்ணத்திலும் சித்தியை பிராப்தியாக
அடைகின்றீர்கள். அவர்கள் தங்களது எண்ணத்தை எங்கு விரும்புகின்றார்களோ அங்கு ஒரு வினாடியில்
நிறுத்த முடியும். எண்ணங்கள் அவர்களின் வசத்தில் இருக்கும். அவர்கள் தன்னுடைய எண்ணங்களின் மீது
வெற்றி அடைந்ததின் காரணத்தால் சஞ்சல எண்ணம் கொண்டவர்கள் கூட சிறிது நேரத்திற்காக தமது
எண்ணங்களை நிலையாக வைத்து சாந்தி அடைய முடியும்.
சுலோகன்: நிரந்தரமாக ஒரு பாபாவின் தொடர்பில் இருந்தால்
தீய தொடர்பில் இருந்து காப்பாற்றப்படுவீர்கள்.
(1/4)
24
24.07.2016
காலை முரளி ஓம் சாந்தி ''அவ்யக்த பாப்தாதா''
ரிவைஸ் 22.10.1981 மதுபன்
''வள்ளலின் குழந்தைகள் நிரந்தர வள்ளல் ஆகுங்கள் ''
இன்று இரக்கத்தின் கடல் தன்னுடைய மாஸ்டர் இரக்கக் கடல் குழந்தைகளை சந்திப்பதற்காக வந்திருக்
கிறார். பக்தர்கள் பாப்தாதா மற்றும் மிக உயர்ந்த ஆத்மாக்கள் உங்களை இரக்கம் காட்டுபவரே லி கிருபை
செய்பவரே என்ற பெயரால் மகிமை செய்கிறார்கள். அனைத்து மதங்களின் ஆத்மாக்கள் பாப்தாதாவிடமிருந்து
மற்றும் மிக உயர்ந்த ஆத்மாக்கள் உங்களிடமிருந்து முக்கியமான ஒன்றை அவசியம் விரும்புகிறார்கள்.
ஞானம் மற்றும் யோகாவின் விஷயங்கள் ஒவ்வொரு மதத்திலும் வேறு வேறாக இருக்கிறது, அதைத் தான்
அவர்களின் நம்பிக்கை என்று கூறுவது. ஆனால் ஒரு விஷயம் அனைத்து மதங்களிலும் ஒன்றாகவே
இருக்கிறது. அனைத்து ஆத்மாக்களும் இரக்கம் மற்றும் கிருபையை அவர்களுடைய மொழியில் ஆசீர்வாதம்
என்று கூறுகிறார்கள், அதை அனைவரும் விரும்புகிறார்கள். அனைத்து ஆத்மாக்கள் உங்களிடமிருந்து இந்த
இறுதி ஜென்மத்திலும் கொஞ்சம் கிருபை நிறைந்த பார்வையை எம்மீது செலுத்துங்கள் என்ற இதைத் தான்
பக்தர்கள் விரும்புகிறார்கள். கொஞ்சம் எங்கள் மேலேயும் இரக்கம் காட்டுங்கள். அனைத்து மதங்களின் முக்கிய
அடையாளமாக 'இரக்கத்தை' ஏற்றுக் கொள்கிறார்கள். ஒருவேளை ஏதாவது ஒரு தர்ம ஆத்மா இரக்கம்
உடையவராக இல்லை, இரக்க பார்வையுடையவராக இல்லை என்றால், அவரை தர்மத் தலைவர் என்று
ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தர்மம் என்றால் தயை. அப்படி இன்று பாப்தாதா தயாளு (இரக்கம் நிறைந்தவர்)
மற்றும் கிருபாளு (கிருபை நிறைந்தவர்) ஆக எந்த அளவு ஆகியிருக்கிறீர்கள் என்பதை பார்த்துக்
கொண்டிருந்தார்கள்.
அனைத்து பிராமண ஆத்மாக்களும் தன்னை ஆதி சனாதன பழைமையான தர்மத்தின் சிரேஷ்ட
ஆத்மாக்கள் அதாவது தர்ம ஆத்மாக்கள் என்று நம்பத்தான் செய்கிறார்கள். ஹே தர்ம ஆத்மாக்களே, உங்கள்
அனைவரின் முதல் தர்மம் அதாவது தாரணையே, தனக்காகவும், பிராமண குடும்பத்திற்காகவும், உலகின்
அனைத்து ஆத்மாக்களுக்காகவும் இரக்க மனமுடையவர் மற்றும் கிருபை திருஷ்டி உள்ளவராக இருப்பது.
எனவே எப்பொழுதும் இரக்கத்தின் பாவனை மற்றும் கிருபை திருஷ்டி அனைவருக்காகவும் இருக்கிறதா
அல்லது வரிசைக்கிரமமாக இருக்கிறதா என்று உங்களை நீங்களே கேளுங்கள். இரக்க உணர்வு மற்றும்
கிருபை திருஷ்டி யார் மேல் வைக்க வேண்டியதாக இருக்கிறது. யார் பலஹீனமான ஆத்மாவோ, பிராப்தி
இல்லாத ஆத்மாவோ, ஏதாவது விஷயத்தின் வசமான ஆத்மாவோ, அந்த மாதிரி ஆத்மாக்கள், தயை மற்றும்
கிருபையின் ஆசை வைக்கிறார்கள். மேலும் அவர்களுடைய ஆசை இல்லாவிட்டாலும் கூட நீங்கள் வள்ளலின்
குழந்தைகள் அந்த ஆத்மாக்களுக்கு நல்ல விருப்பத்தோடு கொடுப்பவர்கள். முழு நாளின் எந்த ஆத்மாக்களின்
தொடர்பில் வருகிறீர்களோ, ஞானியாக இருந்தாலும் அல்லது அஞ்ஞானியாக இருந்தாலும், அனைவருக்காகவும்
எப்பொழுதும் இதே பார்வை இருக்கிறதா அல்லது வேறு வேறு பார்வையும் இருக்கிறதா? யார் எப்படிப்பட்ட
சம்ஸ்காரம் உள்ளவராக இருந்தாலும் இந்த இரக்கம் மற்றும் கிருபையின் பாவனை மற்றும் திருஷ்டியானது,
கல்லையும் கூட தண்ணீர் ஆக்க முடியும். எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அவர்களுடைய நிலையில் நிலைத்துவிடுவர்,
சுபாவத்தின் மோதலில் வருபவர்கள் கூட நல்லோர் ஆகி விட முடியும். கோப அக்னி யோக அக்னியாக
மாறிவிடும். அனேக ஜென்மங்களின் கடுமையான கணக்கு வழக்கு ஒரு நொடியில் முடிவடைந்து புதிய
சம்மந்தம் ஏற்பட்டு விடும். எவ்வளவு தான் விரோதியாக இருந்தாலும் இந்த விதி மூலம் கட்டி அணைப்பவராக
ஆகிவிடுவார். ஆனால் இவை அனைத்திற்குமான ஆதாரம் 'இரக்க உணர்வு'. இந்த மாதிரி சூழ்நிலை மற்றும்
இந்த மாதிரி நேரத்தில் இரக்க உணர்வு அவசியம் தேவைப்படுகிறது. தேவையான நேரத்தில் செய்யவில்லை
என்றால் மாஸ்டர் இரக்கக்கடல் என்று கூறுவோமா? யாரிடம் இரக்க உணர்வு இருக்குமோ அவர் எப்பொழுதும்
நிராகாரி, நிர்விகாரி மற்றும் நிர்அகங்காரியாக இருப்பார். எண்ணத்தில் நிராகாரி, வார்த்தையில் நிர்விகாரி, காரியத்தில்
நிர்அகங்காரி, இவரைத் தான் இரக்கம் காட்டும் மற்றும் கிருபையான ஆத்மா என்று கூறுவது. அப்படி ஹே,
இரக்கத்தில் நிரம்பிய களஞ்சியமாக இருக்கும் ஆத்மாக்களே ! தேவையான நேரத்தில் எந்த ஆத்மாவிற்காகவும்
இரக்க உணர்வின் அஞ்சலியும் கொடுக்க முடியாதா? நிரம்பிய களஞ்சியத்திலிருந்து அஞ்சலி கொடுத்து
விட்டீர்கள் என்றால், முழு பிராமண பரிவாரத்தின் பிரச்சனைகளே முடிவடைந்து விடும். உங்கள் அனைவரின்
அனாதி, ஆதி சம்ஸ்காரமே அழியாத வள்ளல் தன்மையினுடையது. தேவதை என்றால், கொடுப்பவர். சங்கம
யுகத்தில் மாஸ்டர் வள்ளல் ஆவீர்கள். அரைக்கல்பம் தேவதை அதாவது கொடுப்பவர்களாக இருக்கிறீர்கள்.
துவாபர்யுகத்திலிருந்து கூட உங்களுடைய ஜட விக்கிரகங்கள் கொடுக்கக்கூடிய தேவதைகள் என்றே
கூறப்படுகிறார்கள். அப்படி முழுக் கல்பத்தின் சம்ஸ்காரம் வள்ளல் தன்மையினுடையது. அந்த மாதிரி வள்ளல்
(2/4)
24.07.2016
தன்மையின் சம்ஸ்காரம் உள்ள நிரம்பிய ஆத்மாக்களே, தேவையான நேரத்தில் ஏன் வள்ளல் ஆவதில்லை?
ஏதாவது பெற வேண்டும் என்ற பாவனையை வள்ளலின் குழந்தைகள் வைக்க முடியாது. அடுத்தவர்
கொடுத்தார் என்றால் தான் நான் கொடுப்பேன் என்பவர் தேவதை அல்ல, யாசிப்பவராக ஆகிவிட்டார்.
அப்படியானால் நீங்கள் எந்த மாதிரி ஆத்மாக்கள்? தேவதையா அல்லது யாசிப்பவரா?
ஹே, ஆசை என்றால் என்னவென்று அறியாத ஆத்மாக்களே ! அற்ப காலத்தின் ஆசையின் காரணமாக
தேவதைக்குப் பதிலாக யாசிப்பவராக ஆகாதீர்கள். கொடுத்துக் கொண்டே இருங்கள், கொடுத்துக் கொண்டே
எத்தனை என்று எண்ணாதீர்கள். நான் எவ்வளவு செய்தேன், இவர் செய்யவில்லை, என்ற இந்த எண்ணிக்கை
பார்ப்பது வள்ளல் தன்மையின் சம்ஸ்காரம் இல்லை. பரந்த மனமுடைய தந்தையின் குழந்தைகள் இந்த
விஷயங்களில் எண்ணிக்கை செய்வதில்லை. களஞ்சியம் நிரம்பி இருக்கிறது ஏன் எண்ணிக்கை செய்கிறீர்கள்?
சத்யுகத்தில் கூட எந்தவொரு கணக்கு வழக்கையும் எண்ணிக்கை செய்வதில்லை. இராஜ குடும்பம், இராஜ
வம்சத்தினர் மாஸ்டர் வள்ளலாக இருப்பார்கள். அங்கே இந்த இவ்வளவு கொடுத்தேன், இவ்வளவு செய்தேன்
என்ற வியாபார முறை இருக்காது. யார் எவ்வளவு பெற்றுக் கொள்வாரோ அந்த அளவு நிரம்பிவிடுவார்.
இராஜ வம்சம் என்றால் வள்ளலின் வீடு. இந்த சம்ஸ்காரத்தை நிரப்ப வேண்டும். எங்கே நிரப்ப வேண்டும்,
சத்யுகத்திலா? இப்பொழுதிலிருந்தே நிரப்ப வேண்டும் இல்லையா. இங்கேயும் கூட தந்தையுடன் வியாபார
கணக்கை செய்கிறார்கள். தந்தை என்னிடம் கேட்கவில்லை, தந்தை என் மூலம் செய்யவில்லை. மேலும்
உங்களுக்குள்ளோ இதை மிக அதிகமாக செய்கிறீர்கள். மகாராஜா ஆகுங்கள், வள்ளலின் குழந்தை வள்ளல்
ஆகுங்கள். இவர் செய்தார் அதனால் நானும் இதைச் செய்தேன், இவர் இரண்டு கூறினார்: பதிலுக்கு அப்பொழுது
நானும் நான்கு கூறினேன். இவர் இரண்டு தடவை சொன்னார் அல்லது செய்தார், நான் ஒரு தடவை
செய்தேன். இந்த மாதிரி கணக்கை வள்ளலின் குழந்தைகள் செய்ய முடியாது. யாராவது உங்களுக்கு கொடுத்தாலும்
சரி, கொடுக்காவிட்டாலும் சரி, ஆனால் நீங்கள் கொடுத்துக் கொண்டே இருங்கள். இதைத் தான் இரக்க
உணர்வு மற்றும் கிருபை நிறைந்த பார்வை என்று கூறுவது. எனவே ஹே இரக்கமுடைய, கிருபை உடைய
ஆத்மாக்களே ! கொடுப்பவர்களாக ஆகுங்கள். புரிந்ததா?
பாப்தாதாவிடம் அனைத்து குழந்தைகளின் கணக்கு இருக்கிறது. முழு நாளில் எவ்வளவு நேரம்
இரக்கமுடையவர் மற்றும் கிருபை உடையவர் ஆகிறார்கள்? மேலும் எவ்வளவு நேரம் கொடுப்பதற்கான
பாவனைக்குப் பதிலாக பெறுவதற்கான எண்ணம் வைக்கிறார்கள் என்ற இந்த முழு நாளின் லீலையை பாப்தாதா
பார்க்கிறார்கள். எப்படி நீங்கள் இந்த வீடியோ செட்டை இணைத்திருக்கிறீர்கள் என்றால் பார்க்கவும் செய்கிறீர்கள்,
மேலும் கேட்கவும் செய்கிறீர்கள். அப்படி பாப்தாதாவிடமோ ஒவ்வொருவருக்காகவும், டி.வி செட் இருக்கிறது.
எப்பொழுது விரும்புகிறாரோ அப்பொழுது பொத்தானை அழுத்த முடியும்.
இது சேவைக்கான சாதனம் மற்றும் அது தந்தை குழந்தைகளின் நிலைமையை தெரிந்து கொள்ளும்
சாதனம். இந்த அனைத்து சாதனங்களுமே இறுதி நேரத்தில் அழிந்து விடும். இந்த வீடியோ காரியத்திற்கு
உதவாது. ஆனால் வில் பவரின் (மனோபலம்) செட் உபயோகத்தில் வரும். ஆனால் அறிவியலைச் சேர்ந்த
குழந்தைகள் யார் இந்த அளவு நேரம், சக்தி, பணத்தை செலவு செய்து சாதனத்தை உருவாக்கியிருக்கிறார்களோ,
அப்படி குழந்தைகளின் உழைப்பு தந்தையின் சேவையில் ஈடுபடுத்தப்படுகிறது எனவே தந்தையும் குழந்தைகளின்
கடும் உழைப்பைப் பார்த்து, இவர்கள் சேவைக்கான சாதனம் மிக நன்றாக உருவாக்கியிருக்கிறார்கள் என்று
குμ அடைகிறார். இருந்தாலும் அவர்களும் குழந்தைகள் தான் இல்லையா? தந்தை, குழந்தைகளின் கண்டு
பிடிப்பைப் பார்த்து குμ அடைவார் இல்லையா? எந்தக் காரியத்தில் ஈடுபட்டு இருக்கிறார்களோ, அதே
காரியத்தில் வெற்றி அடைந்து கொண்டிருக்கிறார்கள். அது அற்ப காலத்திற்கானதாக இருந்த போதிலும் வெற்றியோ
இருக்கிறது இல்லையா? எனவே பாப்தாதா வீடியோ செட்டைப் பார்ப்பதில்லை. ஆனால் அந்தக் குழந்தைகளை
பார்க்கிறார். நல்லது.
இதே சாதனம் மூலமாக பாரதம் மற்றும் வெளிநாட்டில் நாலாபுறங்களிலும் உள்ள குழந்தைகள்
பார்க்கிறார்கள் மற்றும் கேட்கிறார்கள் என்றால், பாப்தாதாவும் நாலாபுறங்களிலும் உள்ள அனைத்து குழந்தைகளுக்கு,
யார் இன்று மதுபன்னில் என்ன நடக்கும் என்ற இந்த ஆர்வத்திலேயே அமர்ந்திருக்கிறார்கள், உடலால்
பாரதம் மற்றும் வெளிநாட்டில் இருக்கிறார்கள், ஆனால் சூட்சும ரூபம் மூலமாக மதுபன்நிவாசியாக இருக்கிறார்கள்.
பாப்தாதா அந்த அனைத்து ஒளி வடிவ உடலிலிருக்கும் நினைவு சொரூப ஆத்மாக்களுக்கு, விசேஷ அன்பு
நினைவுகளைக் கொடுக்கிறார். பாப்தாதா ஒரு சபையைப் பார்ப்பதில்லை, இரண்டு சபைகளைப் பார்க்கிறார்.
ஒன்று நேரெதிரில் ஸ்தூலமாக இருக்கும் சபை மற்றும் இன்னொன்று, சூட்சும சபை. அனைவரின் நினைவு
வந்து சேர்ந்து கொண்டிருக்கிறது. நல்லது. அனைத்து கடிதங்களுக்கும் ஒரே ஒரு பதில், அவர்கள் தந்தையை
நினைவு செய்கிறார்கள், தந்தை பல மடங்கு அந்த குழந்தைகளை நினைவு செய்கிறார். எப்படி அவர்கள்
(3/4)
24.07.2016
நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அதே போல் தந்தை ஒவ்வொரு குழந்தைகளின் குணங்களின்
மாலையை எப்பொழுதும் நினைவு செய்கிறார். அனைத்து குழந்தைகளுக்கும் சந்திப்பதின் ஒரே ஒரு எண்ணம்
தான் இருக்கிறது. மேலும் பாப்தாதாவும் அந்த மாதிரி சந்திப்பைச் செய்யக்கூடிய, எண்ணத்தை வைக்கும்
ஆத்மாக்களுக்கு விசேஷமாக அமிர்தவேளையின் சந்திப்பில், அதற்கான பலனைக் கொடுக்கிறார். மேலும்
அனைவருக்கும் சேவைக்கான விசேஷ எண்ணத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். நல்லது.
அந்த மாதிரி எப்பொழுதும் இரக்க உணர்வு மற்றும் கிருபை திருஷ்டி வைத்திருக்கக்கூடிய, எப்பொழுதும்
கொடுக்கக்கூடிய, பெறுவதற்கான விருப்பம் வைக்காத, ஆசை என்றால் என்னவென்று அறியாத நிலையில்
இருக்கக்கூடிய ஆத்மாக்களுக்கு, அந்த மாதிரி இராஜ வம்ச சம்ஸ்காரம் உள்ள சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு
பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.
டீச்சர்களுடன் சந்திப்பு லிநீங்கள் அனைவரும் பாப்தாதாவின் விசேஷ சகயோகி ஆத்மாக்கள். யார்
அன்பானவராக இருக்கிறாரோ அவர் தான் சகயோகி ஆக முடியும். எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு
சகயோகம் கொடுக்காமல் இருக்க முடியாது. அப்படி சேவாதாரி என்றால் அன்பானவர் மற்றும் சகயோகி.
உடன் இருப்பவர்கள், ஒத்துழைப்பு கொடுப்பவர்கள் மற்றும் இறுதியில் உடன் செல்பவர்கள். அப்படி மூன்றிலும்
எவரெடியாக இருப்பவர்கள். உடன் இருப்பது மற்றும் ஒத்துழைப்பு கொடுப்பது தற்போது உள்ளது. அடுத்து
செல்வது பிற்காலத்தில். எப்பொழுது இரண்டு விஷயங்களுமே சரியாகி விடுகின்றன என்றால், மூன்றாவதின்
தேதியும் வந்து விடும். நீங்கள் அனைவரும் பொறுப்பில் இருக்கும் ஆத்மாக்கள் தான் இல்லையா? எந்த
அளவு நீங்கள் ஒத்துழைப்பு கொடுப்பீர்களோ, உடன் இருப்பீர்களோ அந்த அளவு உங்களைப் பார்த்து மற்றவர்
களுக்கும் ஊக்கம் உற்சாகம் இயல்பாகவே அதிகரிக்கும். ஒருவர் நீங்கள் அனேகர்களுக்கு பொறுப்பாளராக
இருக்கிறீர்கள். நான் இல்லை, ஆனால் தந்தை என்னை பொறுப்பாளர் அதாவது கருவியாக்கி இருக்கிறார்.
நான் என்ற உணர்வு முடிந்து விட்டது தான் இல்லையா? நான் என்பதற்குப் பதிலாக என்னுடைய பாபா, நான்
செய்தேன், நான் சொன்னேன் என்பதற்குப் பதிலாக தந்தை செய்வித்தார், தந்தை செய்தார் என்றிருக்க
வேண்டும், பிறகு பாருங்கள் வெற்றி சுலபமாக கிடைத்துவிடும். உங்களுடைய வாயிலிருந்து எந்த அளவு பாபா
பாபா என்பது வெளியாகுமோ அந்த அளவு அனேகர்களை பாபாவின் குழந்தையாக ஆக்க முடியும். அனைவரது
வாயிலிருந்தும் இவருடைய கௌரவத்தில் மற்றும் விஷயத்தில் பாபாவே பாபா தான் என்ற வார்த்தை
வெளியாகும். அப்பொழுது தான் மற்றவர்களுக்கும் அந்த கௌரவம் வந்து விடும். எந்த விஷயம் முழு
ஈடுபாட்டில் இருக்குமோ அதுவே விஷயமாகவும் ஆகிவிடும். பாப்தாதா சின்னஞ்சிறு குமாரிகளின் தைரியம்
மற்றும் தியாகத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். பெரியவர்களோ அனுபவித்து விட்ட பிறகு என்ன தியாகம்
செய்திருக்கிறார்கள், அதுவொன்றும் பெரிய விஷயம் இல்லை. அனுபவித்துப் பார்த்தார்கள் பிறகு அதை
விட்டார்கள். ஆனால் இவர்களோ விவேகத்தின் காரியத்தை செய்து விட்டார்கள். எந்த அளவு சிறியவர்களோ
அந்த அளவு பெரிய புத்திசாலிகள்.
பார்ட்டிகளுடன் சந்திப்பு : குஜராத் லிஎப்பொழுதும் தன்னை மகாவீர் அதாவது மகான் ஆத்மா என்று
புரிந்து நடந்து கொள்கிறீர்களா? யாருடைய குழந்தையாக ஆகியிருக்கிறேன் மற்றும் என்னவாக ஆகியிருக்கிறேன்
என்ற இதை மட்டும் யோசித்தீர்கள் என்றால், ஒருபொழுதும் தேக உணர்வில் வர முடியாது. தேக உணர்வை
விட்டு விலகி மேல் நிலையில் இருங்கள் அதாவது பரிஷ்தா ஆகி மேலே பறந்து கொண்டே இருங்கள்.
பரிஷ்தாக்கள் கீழே வருவதில்லை, பூமியில் கால் வைப்பதில்லை. இந்த தேக உணர்வு கூட தேகம் என்ற தரை
ஆகும். எப்பொழுது பரிஷ்தா ஆகிவிட்டீர்களோ பிறகு தேகத்தின் பூமியில் எப்படி வர முடியும். பரிஷ்தா
என்றால் மேலே பறப்பவர். நீங்கள் அனைவருமே பறக்கும் பறவைகளா, கூண்டில் அடைக்கப்பட்ட பறவைகளாக
இல்லையே? அரைக்கல்பமோ கூண்டில் அடைக்கப்பட்டிருந்தீர்கள், இப்பொழுது பறக்கும் பறவை ஆகிவிட்டீர்கள்.
கீழே உள்ள ஈர்ப்பு உங்களை இழுக்க முடியாது. கீழே இருந்தீர்கள் என்றால், வேட்டைக்காரன் வேட்டையாடி
விடுவான், மேலே பறந்து கொண்டே இருந்தீர்கள் என்றால் யாரும் எதுவும் செய்ய முடியாது. நீங்கள்
அனைவரும் பறக்கும் பறவைகள் தான் இல்லையா? கூண்டு அழிந்து விட்டதா? எவ்வளவு தான் அழகான
கூண்டாக இருந்தாலும் கூட அதுவும் பந்தனம் தான் இல்லையா? இந்த ஆன்மீக சம்மந்தமும் தங்கக்
கூண்டாகும், இதிலேயும் மாட்டிக் கொள்ளக் கூடாது. சுதந்திரமாக இருப்பது என்றால், முழுமையான சுதந்திரம்
! எப்பொழுதும் பந்தனமற்ற நிலையில் இருப்பவர் தான் ஜீவன்முக்த் நிலையின் அனுபவம் செய்ய முடியும்.
நல்லது.
டெல்லி லி இப்பொழுது டெல்லியில் வியாபாரிகள் யாருமே உருவாகவில்லை. வியாபாரி ஒருவர் லட்சக்கணக்
கானவர்களை முன்னேறச் செய்ய முடியும். ஏனென்றால் ஒரு வியாபாரி அனேகர்களின் தொடர்பில் வருவார்.
எத்தனை பேர்களின் தொடர்பில் வருகிறாரோ அவர்களில் பாதி பேர்கள் கூட செய்தியை கேட்பவர்களாக
(4/4)
24.07.2016
இருந்தார்கள் என்றால் எவ்வளவு பேர் உருவாகிவிடுவார்கள். இதுவும் வியாபாரம். வியாபாரிக்கு எவ்வளவு
பங்கு கிடைக்கும். சேவைக்கான வாய்ப்பு வியாபாரிகளுக்கு மிக நன்றாக இருக்கிறது. இப்பொழுது வியாபாரிகளின்
குரூப்பை தயார் செய்து வாருங்கள்.
சேவாதாரிகளுடன் சந்திப்பு லி
எவ்வளவு உயர்ந்த மகத்துவம் யக்ஞத்திற்கு இருக்கிறதோ அந்த அளவு யக்ஞ சேவாதாரிகளுக்கும்
மகத்துவம் இருக்கிறது. இந்த சேவையின் நினைவுச்சின்னம் இன்று வரையிலும் அனேக தர்ம ஸ்தானங்களில்
இருக்கிறது. எந்த இடங்கள் எல்லாம் பிற்காலத்தில் தர்ம ஸ்தானமாக ஆகின்றனவோ, அதே ஸ்தானங்களில்
சேவைக்காகவும் மகத்துவம் இருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். அப்படி சைத்தன்ய மஹாயக்ஞத்தின்
சேவாதாரிகளுக்கு எவ்வளவு மகத்துவம் இருக்கிறது. நீங்கள் சேவை செய்து கொண்டிருக்கவில்லை. ஆனால்
பல மடங்கு பலன் என்ற வெண்ணையை அருந்திக் கொண்டிருக்கிறீர்கள். உலகில் கூட செல்வந்தர்களாக யார்
இருக்கிறார்களோ அவர்களைப் பற்றி இவர் எப்பொழுதுமே வெண்ணை அருந்திக்கொண்டிருப்பவர் என்று
கூறுவார்கள். ஏழையைப் பற்றி இவர் கஞ்சி குடிக்கிறார் என்று கூறுவார்கள் மற்றும் செல்வந்தர்களுக்காக
இவர் வெண்ணை சாப்பிடுகிறார் என்று கூறுவார்கள். சேவாதாரி என்றால் வெண்ணை அருந்துபவர். அப்படி
யானால் நீங்கள் எவ்வளவு உயர்ந்தவர்கள் ஆகிவிட்டீர்கள். ஒவ்வொரு அடியிலும் இரட்டை வருமானம்.
மனதின் மூலமாகவும் காரியங்கள் மூலமாகவும் வருமானம். மனம் மூலம் என்றால் நினைவில் இருந்து
கொண்டு சேவை செய்கிறீர்கள் என்றால் இரட்டை வருமானம் ஆகிவிட்டது இல்லையா. யார் எந்த அளவு
வருமானம் செய்கிறார்கள் என்பதை ஒவ்வொருவரும் அவர்களே தெரிந்து கொள்ள முடியும். சேவையின்
களஞ்சியம் நிரம்பியிருக்கிறது. மஹா யக்ஞம் என்றால் சேவையின் களஞ்சியம். சேவையின் களஞ்சியம்
நிரம்பியிருக்கிறது, யார் எவ்வளவு விரும்புகிறார்களோ அவ்வளவு செய்யலாம். வரையறையும் இல்லை.
மேலும் எண்ணி எண்ணி கொடுப்பதும் இல்லை. இந்த வேலை முடிவடைந்து விட்டது, இப்பொழுது நான்
என்ன செய்வது என்ற எல்லையும் இல்லை, களஞ்சியம் நிரம்பியிருக்கிறது. எல்லைக்கப்பாற்பட்ட களஞ்சியம்,
எனவே எவ்வளவு செய்ய விரும்புகிறீர்களோ அந்த அளவு செய்ய முடியும். இது அனைத்தும் நிறைந்தவராக
ஆவதற்கான லாட்டரி. லாட்டரியோ கிடைத்திருக்கிறது, இப்பொழுது லாட்டரியில் நான் எந்த லாட்டரியைப்
பெற்றிருக்கிறேன், பல கோடியா, லட்சங்களா, ஆயிரங்களா அல்லது நூறா, இது உங்கள் மேல் இருக்கிறது.
இது மிகப்பெரிய லாட்டரி, பல கோடிகளையும் பெற முடியும்.
பாப்தாதாவும் சேவாதாரி ஆகி வருகிறார். உலகத்தின் அனைத்து சக்திகள் நிறைந்த அதிகாரம் உள்ளவரின்
முதல் சொரூபமே உலக சேவகன் தான் இல்லையா? எப்படி தந்தையோ அதே போல் குழந்தைகளும் என்ற
வர்ணனையும் இருக்கிறது. நீங்கள் தடையற்ற சேவாதாரி தான் இல்லையா? சேவையின் இடையில் ஏதாவது
தடை வருவதில்லையே? வாயுமண்டலத்தின், உடன் இருப்பவர்களின், சோம்பலின், விதவிதமான தடைகள்
இருக்கின்றன. அப்படி எந்த விதமான தடை வந்தாலும் சேவை துண்டிக்கப்பட்டது இல்லையா? துண்டுபடாத,
இடைவிடாத சேவை இருக்க வேண்டும். எந்த விதமான தடையிலும் ஒருபொழுதும் வராதீர்கள். தடையற்ற
சேவை அதற்குத் தான் மகத்துவம் இருக்கிறது. எண்ண அளவில் கூட கொஞ்சம் கூட தடை வேண்டாம்.
அந்த மாதிரி இடைவிடாத சேவாதாரி ஒருபொழுதும் எந்தவொரு பாதிப்பிலும் வர மாட்டார். ஒருபொழுதும்
ஏதாவது வீணானவற்றின் பாதிப்பில் வராதீர்கள். அப்பொழுது தான் சேவை வெற்றி பெறும். இல்லை
என்றால், சேவையில் வெற்றி இருக்காது. நல்லது.
வரதானம் : சந்தேகத்தின் எண்ணங்களை முடிவுகட்டி மாயாவை வென்றவர்
ஆகக்கூடிய வெற்றி இரத்தினம் ஆகுக !
ஒருபொழுதும் நான் தோல்வி அடைந்து விடுவேனோ என்னவென்று தெரியவில்லையே ! என்ற
இந்த சந்தேகம் நிறைந்த எண்ணம் முன்பாகவே உருவாக வேண்டாம். சந்தேகபுத்தி உடையவராக இருப்பதினால்
தான் தோல்வி ஏற்படுகிறது. எனவே நான் வெற்றியை அடைந்தே காண்பிப்பேன் என்ற இந்த எண்ணம் தான்
எப்பொழுதும் இருக்க வேண்டும். வெற்றியோ என்னுடைய பிறப்புரிமை, அந்த மாதிரி உரிமை உடையவராகி
காரியம் செய்வதினால் வெற்றியின் அதிகாரம் அவசியம் கிடைக்கிறது, இதன் மூலமாகத் தான் வெற்றி
இரத்தினம் ஆகிவிடுவீர்கள். எனவே மாஸ்டர் ஞானம் நிறைந்தவரின் வாயிலிருந்து ஒருபொழுதும் தெரியவில்லை
என்ற வார்த்தை வெளியாகக்கூடாது.
சுலோகன் :
இரக்க பாவனை சுலபமாகவே பொறுப்புணர்வை வெளிப்படுத்தி விடுகிறது !
11 to 17 July 2016
11
11.07.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! குழந்தைகளாகிய உங்களின் பையை அழியாத ஞான
இரத்தினங்களினால் நிரப்புவதற்காக தந்தை வந்திருக்கிறார். இந்த ஒவ்வொரு ஞான இரத்தினமும்
இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்பாகும்.
கேள்வி : மறைமுகமான தானத்திற்கு ஏன் இவ்வளவு அதிமான மகத்துவம்?
பதில்: ஏனென்றால், பாபா உங்களுக்கு மறைமுகமான ஞான இரத்தினங்களை இப்போது தானமாக
அளிக்கிறார். இதை உலகத்தினர் அறியவில்லை. பிறகு குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞான இரத்தினங்களை
தானம் செய்வதால் விஷ்வத்தின் இராஜ்ய பதவியை அடைகிறீர்கள். இதுவும் குப்தமாக இருக்கிறது. எந்த ஒரு
சண்டையும் இல்லை, எந்த ஒரு வெடிகுண்டும் இல்லை, எந்த செலவும் இல்லை. மறைமுகமாக உங்களுக்கு
இராஜ்ய பதவியை தானமாக அளிக்கிறார். ஆகையால் தான் மறைமுகமான தானம் மிகவும் மகத்துவம்
வாய்ந்தது.
டபுள் ஓம் சாந்தி. ஒன்று சிவபாபா கூறுகிறார், ஒன்று பிரம்மா தாதா (மூத்த சகோதரர்) கூறுகின்றார்.
இருவரின் சுய தர்மமும் சாந்தி ஆகும். இருவருமே சாந்திதாமத்தில் வசிக்கக் கூடியவர்கள் ஆவர். குழந்தை
களாகிய நீங்களும் சாந்திதாமத்தில் வசிக்கக் கூடியவர்கள். நிராகார் உலகத்தில் வசிக்கக் கூடியவர் சாகார
தேசத்தில் நடிப்பதற்காக வந்துள்ளார். ஏனென்றால் இது நாடகம் அல்லவா. குழந்தைகளுக்கு நாடகத்தின்
முதல், இடை, இறுதி ஞானம் மேலிருந்து கீழ் வரை புத்தியில் நிறைத்திருக்கிறது. உயர்ந்ததிலும் உயர்ந்தவர்
பகவான். அவருடன் குழந்தைகள் உள்ளனர். இந்த விசயங்களை நன்குப் புரிந்துக் கொள்ளுங்கள் உங்களைத்
தவிர இந்த ஞானம் வேறு யாரிடமும் இல்லை. இறைவனின் பள்ளிக் கூடத்தில் நீங்கள் படிக்கிறீர்கள். பகவான்
ஒருவரே என்பது பகவான் வாக்கு. 10லி20 பகவான் எல்லாம் கிடையாது. அனைத்து தர்மத்தை சார்ந்தவர்களுக்கும்
அவர்களுடைய ஆத்மாக்கள் யாராக இருந்தாலும் அனைவருக்கும் ஒரேயொரு தந்தை ஆவார். பிறகு தந்தை
சிருஷ்டியை படைக்கிறார் என்றால் பிரஜா பிதா பிரம்மா என்று கூறப்படுகிறது. சிவனுக்கு பிரஜா பிதா என்று
கூற முடியாது பிரஜைகள் பிறப்பு இறப்பில் வருகிறார்கள். ஆத்மா சம்ஸ்காரத்தின் ஆதாரத்தினால் பிறப்பு
இறப்பில் வருகிறது. மறுபடியும் பிரஜாபிதா பிரம்மா வேண்டும். பரம்பிதா பரமாத்மா, பிரஜாபிதா பிரம்மா
மூலமாக படைப்பை படைக்கிறார் என்று பாடப்பட்டிருக்கிறது. பதீத பாவனர் வாருங்கள் என அவர் அழைக்கப்
படுகிறார். உலகம் தூய்மையை இழந்துவிடும் போது, மற்றும் அதனுடைய முடிவு வரும் போது தூய்மை
யற்றவர்களை தூய்மையாக்குவதற்காக தந்தை வருகிறார். தந்தை ஒரு முறை தான் வருகிறார். வேறு எப்போதும்
வருவதில்லை என குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள். இப்போது உங்களுக்கு முழு ஞானமும்
கிடைக்கிறது. நீங்கள் நாடகத்தின் நடிகர்கள் அல்லவா. மேடை நாடகத்தின் நடிகர்களுக்கு அனைவரின்
நடிப்பும் என்னென்ன நடிப்பு என கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். அது சிறிய எல்லைக்குட்பட்ட நடிப்பு
(டிராமா), அதை பற்றி அனைவருக்கும் தெரிகிறது. நீங்களும் பார்த்துக் கொண்டே வருகிறீர்கள். எப்படி
வேண்டுமோ அப்படி எழுதலாம், நினைக்கலாம். சிறியதாக இருக்கிறது. இது மிகவும் பெரிய எல்லையற்ற
நாடகம் ஆகும். இதை நீங்கள் சத்யுகத்திலிருந்து கலியுக முடிவு வரை அறிகிறீர்கள். எல்லையற்ற தந்தையிடமிருந்து
இப்போது எல்லையற்ற சொத்து கிடைக்கிறது என குழந்தைகள் அறிகிறீர்கள். பிறகு எல்லைக்குட்பட்ட தந்தையிட
மிருந்து எல்லைக்குட்பட்ட சொத்து, எல்லைக்குட்பட்ட ஆஸ்தி கிடைக்கிறது. ராஜாக்களாக யார் மாறுகிறார்களோ,
அவர்கள் அதற்கு முந்தைய பிறவியில் தான புண்ணியங்களை செய்து ஒரு பிறவிக்காக ராஜா ஆகிறார்கள்
என பாபா புரிய வைத்திருக்கிறார். அவர்கள் அடுத்த பிறவியிலும் அதே போல மாறுவார்கள் என்பது
கிடையாது. நீங்கள் சத்யுகத்தில் ராஜாக்கள், மகாராஜாக்களாக இருந்தீர்கள். உங்களுடைய இராஜ்யம் மறைந்து
போகிறது. பிறகு பக்தி மார்க்கம் தோன்றும் போது அவர்களே தானம் புண்ணியம் செய்கிறார்கள். அவர்களும்
இராஜ்யத்தில் செல்கிறார்கள் என நினைக்காதீர்கள். ஆனால் அவர்கள் விகாரி ராஜாக்கள் ஆகிறார்கள். பூஜைக்குரிய
வராக இருந்த நீங்களே பூஜாரி ஆகிறீர்கள். அது அல்ப காலத்தின் சுகம் ஆகும், துக்கம் இப்போது தான்
ஏற்படுகிறது. இப்போது தமோ பிரதானத்தில் கூட உங்களுக்கு சுகம் இருக்கிறது. சண்டை சச்சரவுகளின்
விசயம் எதுவும் இல்லை. இது பிறகு தோன்றுகிறது. இலட்சக்கணக்கானவர்கள் என்ற எண்ணிக்கையில் வரும்
போது தான் சண்டை ஏற்படுகிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு சத்யுகம், திரேதா, துவாபரயுகத்தில் சுகம்
இருக்கிறது. தமோபிரதானம் ஆகும் போது சிறிது துக்கம் ஏற்படுகிறது. இப்போதோ தமோபிரதானமாக இருக்கின்றது.
இதுவோ தமோபிரதான உலகம் என பாபா புரிய வைக்கிறார். இது எல்லையற்ற நாடகம், இதிலிருந்து யாரும்
விடுபட முடியாது என நீங்கள் அறிகிறீர்கள். மனிதர்கள் துக்கத்தில் துன்புறும் போது பகவான் இப்படிப்பட்ட
விளையாட்டை ஏன் படைத்தான் என கூறுகிறார்கள். பகவான் படைக்கவே இல்லை என்றால் உலகமே
இருக்காது. எதுவுமே இருக்காது. படைப்பவர் மற்றும் படைப்பு என்று இருக்கிறது அல்லவா. அதுவும்
11.07.2016
(2/4)
சத்யுகத்திலிருந்து கலியுகத்தின் கடைசி வரைக்கு மான விளக்கமும் இருக்கிறது. இன்னும் சிறிது நாட்களே
இருக்கிறது. நீங்களும் நடைமுறையில் பார்ப்பீர்கள். முதலிலேயே (எல்லாவற்றையும்) காண்பிக்க மாட்டார்கள்.
5000 வருடத்தில் இன்னும் சிறிது சக்கரம் இருக்கிறது. அது இப்போதே காண்பிக்க முடியாது. எப்போது
நடக்குமோ அப்போது அதை சாட்சியாக இருந்து பார்ப்பீர்கள். எது நடக்க வேண்டுமோ அது போன கல்பத்தைப்
போன்றே நடக்கும். ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருக்கிறது என்பதை பார்க்கிறீர்கள். நிச்சயமாக வினாசம்
நடக்கும். அனைத்திற்கும் ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருக்கிறது. அதுவும் நாடகத்தில் ஏற்கனவே நிச்சயிக்கப்
பட்டிருக்கிறது. நிச்சயம் வினாசம் நடக்கும். இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு பாபா புரிய வைக்கின்றார்லி
உங்களுடைய ஆத்மா தமோபிரதானமாக இருக்கிறது அதை இங்கேயே சதோபிரதானமாக மாற்ற வேண்டும்.
இதை இப்போது நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள்.
பாபா குப்தமாக வருகிறார். குப்தமாக தான் உங்களுக்கு ஞானம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். உலகத்தில்
யாரும் அறியவில்லை. குப்தமாக நீங்கள் உலகத்தின் இராஜ்யத்தை அடைகிறீர்கள். எந்த ஒரு சத்தமும்
இல்லை. முற்றிலும் குப்ததானம் என கூறப்படுகிறது அல்லவா. தந்தை வந்து குழந்தைகளுக்கு அழிவற்ற
ஞான இரத்தினங்களை மறைமுகமாக தானமாக அளிக்கிறார். பாபாவும் எவ்வளவு மறைமுகமாக இருக்கிறார்.
யாருக்கும் தெரியவில்லை. இவர்கள் அனைவரும் எங்கே போகிறார்கள், பிரம்மா குமார் குமாரிகள் என்ன
செய்கிறார்கள் எதையும் புரிந்துக் கொள்ளவில்லை. பாபா எவ்வளவு மறைமுகமாக இருக்கிறார் என குழந்தைகளாகிய
உங்களுக்குத் தெரியும். குழந்தைகளாகிய உங்களை உலகத்திற்கே அதிபதியாக மாற்றுகின்றார். எந்த சண்டையும்
இல்லை. எந்த வெடிகுண்டும் இல்லை, எந்த செலவும் இல்லை. இங்கே ஒரு சிறிய ஊரை அடைவதில் கூட
எவ்வளவு சண்டை, அடிதடி நடக்கிறது. எனவே தந்தை வந்து மறைமுகமாக தானம் செய்கிறார். அழியாத
ஞான இரத்தினங்களினால் உங்கள் பையை நிரப்புகின்றார். சிவ பாபா கள்ளம், கபடம் அற்றவரே, பொக்கிஷத்தினால்
எங்கள் பையை நிரப்புங்கள் என கூறுகிறார்கள்.
சிவபாபா அழிவற்ற ஞான இரத்தினங்களினால் நம்முடைய பையை நிரப்பிக் கொண்டிருக்கிறார்
என நீங்கள் அறிகிறீர்கள். எனவே ஒவ்வொரு இரத்தினமும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ளதாகும்.
நீங்கள் எவ்வளவு இரத்தினங்களை கொடுக்கிறீர்கள். பிறகு நீங்கள் எந்தளவு வள்ளல் ஆகிறீர்கள், அது
மறைமுகமாக இருக்கிறது. தேவதைகளுக்கு எவ்வளவு ஆயுதங்கள் உடைய கைகளைக் கொடுத்திருக்கிறார்கள்.
உண்மையில் எதுவும் இல்லை. சத்யுகத்தில் தேவதைகளுக்கு இவ்வளவு புஜங்கள் கிடையாது. கலியுகத்தில்
எத்தனை விதமான ஆயுதங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அழிவிற்காக அணுகுண்டுகள் இருக்கிறது
என்றால் பிறகு வாள், அம்பு போன்றவைகளை வைத்து என்ன செய்வார்கள். ஞான வாள், ஞான கத்தி
நீங்கள் கூறுவதை அவர்கள் ஆயுதம் என நினைத்துக் கொண்டார்கள் அப்படி எதுவும் இல்லை.
உங்களுக்கு மறைமுகமாக தானம் கிடைத்திருக்கிறது. நீங்கள் அனைவருக்கும் மீண்டும் மறைமுகமாக
தானம் அளிக்கிறீர்கள். பாபா நமக்கு ஸ்ரீமத் கொடுத்துக் கொண்டிருக்கிறார், பகவானுடையது ஸ்ரீமத்
ஆகும் என நீங்கள் அறிகிறீர்கள். நரனிலிருந்து நாராயணன் ஆவதற்காக நாம் வருகின்றோம் என
அறிகிறீர்கள். அவருக்கு சர்வ குணங்களும் நிறைந்தவர், 16 கலைகளிலும் நிறைந்தவர், தெய்வீக குணங்களை
உடையவர் என கூறப்படுகிறது. தெய்வீக குணம் அந்த தேவி தேவதைகளிடம் மட்டும் இருக்கிறது.
பிறகு கலைகள் குறைந்துக் கொண்டே வருகிறது. எப்படி முழு நிலவின் ஒளி நன்றாக இருக்கிறது. பிறகு
குறைந்துக் கொண்டே வருகிறது. குறைந்துக் கொண்டே வந்து ஒரேயடியாக மெல்லியதாக கோடு மட்டும்
மிஞ்சுகிறது. முழுமையாக மறைவது கிடையாது. நிச்சயமாக கோடு இருக்கிறது. அதற்கு அமாவாசை
என்கிறார்கள். இப்போது உங்களுடையது எல்லையற்ற விசயம் ஆகும். நீங்கள் 16 கலைகளில் நிரம்பியவர்
ஆகிறீர்கள். கிருஷ்ணரின் வாயில் தாய்மார்கள் சந்திரனை பார்த்தார்கள் என காண்பிக்கிறார்கள். இது
சாட்சாத்காரத்தின் விசயம் ஆகும். இதை பாபா வந்து புரிய வைக்கிறார். இப்போது நீங்கள் முழுமையாக
மாற வேண்டும் மாயாவின் சம்பூரண கிரகணம் பிடித்திருக்கிறது. மற்றபடி ஒரு மெல்லிய கோடு தான் மீதம்
இருக்கிறது. ஏணியில் இறங்கிக் கொண்டே வந்துள்ளீர்கள். அனைவரும் ஏணியில் இறங்கத்தான் வேண்டும்.
அப்போது தான் அனைவரும் வீட்டிற்குத் திரும்பப் போக முடியும். இப்போது நீங்கள் குறைந்த
எண்ணிக்கையில் இருக்கிறீர்கள். மெல்ல மெல்ல வளர்ச்சி அடையும். படிப்பில் பலர் தேர்ச்சி அடைவதில்லை.
உங்களுடைய சென்டர்கள் கூட மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்துக் கொண்டே இருக்கிறது. நேரம்
நெருங்கிக் கொண்டே போகும். பிறகு இவர்களிடம் என்ன இருக்கிறது என புரிந்துக் கொள்வார்கள்.
ஒவ்வொரு நாளும் வளர்ச்சி அடைந்துக் கொண்டே இருக்கிறார்கள். நாங்கள் இது எதுவரை தான்
நடக்கும், முடிந்து போகும் என்று நினைத்தோம் என இப்போது கூறுகிறார்கள். ஆரம்பத்தில் இந்த
பயத்தினால் பலர் வெளியேறி விட்டனர். என்ன நடக்கும் என தெரியவில்லை. இங்கேயும் இல்லை,
அங்கேயும் இல்லை. இதை காட்டிலும் வெளியேறி விடுவோம்.!
11.07.2016
(3/4)
அவர்களில் சிலர் மீண்டும் திரும்பி வந்துக் கொண்டிருக்கிறார்கள். பாபா எவ்வளவு எளிதாக புரிய
வைத்துக் கொண்டிருக்கிறார். இந்த அபலைகளுக்கு, அகல்யை போன்றவர்களுக்கு எந்த துன்பமும் கொடுப்ப
தில்லை. இவர்களையும் சீர்திருத்த வேண்டும். பாபா எங்களுக்கு எதுவும் எழுத படிக்கத் தெரியாது என
கூறுகிறார்கள். எதுவும் படிக்க வில்லை என்றால் மிகவும் நல்லது என பாபா கூறுகிறார். சாஸ்திரம் போன்ற
எவற்றை படித்திருக்கிறீர்களோ அவை அனைத்தையும் மறந்து விடுங்கள். நான் அதிகமாக எதையும் படிக்க
வைக்கவில்லை. என்னை நினைவு செய்தீர்களானால் இராஜ்ய பதவி உங்களுடையது என மட்டும் புரிய
வைக்கிறேன். அவ்வளவு தான் உங்களுடைய படகு கடந்து விடும். பிள்ளை பிறந்து விட்டால் பாபா என்று
கூறுவார்கள். அவ்வளவு தான். சொத்துக்கு உரிமையாளர் ஆகிவிடுகிறார்கள். இங்கேயும் நீங்கள் உரிமையாளர்
ஆகிறீர்கள். பாப்தாதாவை நினைத்தீர்கள், என்றால் இராஜ்யம் உங்களுடையதாகி விட்டது. ஆகவே தான்
நொடியில் ஜீவன் முக்தி என்று பாடப்பட்டிருக்கிறது. செல்வந்தர்களுக்கு கடைசியில் அவர்களுடைய நடிப்பின்
பாகம் ஆகும். முதலில் ஏழைகளின் முறையாகும். உங்களிடம் அவர்களாகவே வருவார்கள். (தோட்டி) துப்புரவு
தொழிலாளர்களைக் கூட முன்னேற்ற வேண்டும். மலைவாழ் மக்கள் பற்றிக் கூட பாடப்பட்டிருக்கிறது. இராமர்
காட்டுவாழ் மனிதனின் இலந்தை பழத்தை சாப்பிட்டார் என கூறுகிறார்கள். உண்மையில் இராமரும் சாப்பிடவில்லை,
சிவபாபாவும் சாப்பிடவில்லை. ஆம், ஒரு வேளை இந்த பிரம்மா வேண்டுமானால் சாப்பிட்டிருக்கலாம். மலைவாழ்
மக்கள் போன்றோர் வருவார்கள். டோலி போன்றவைகளை எடுத்து வந்தால் எப்படி மறுக்க முடியும். மலை
வாழ் மக்கள், வேசிகள் போன்றோர் எடுத்து வருவார்கள் என்றால் நீங்களும் சாப்பிடுவீர்கள். நான் சப்பிட
மாட்டேன். நான் எதையும் அனுபவிக்காதவன் என சிவபாபா கூறுகின்றார். உங்களிடம் அனைவரும் வருவார்கள்.
இவர்களை கை தூக்கி விடுங்கள் என அரசாங்கம் கூட உதவி செய்யும். உங்களுக்கும் கூட தானாகவே
தூண்டுதல் ஏற்படும். பாபா ஏழை பங்காளன் என்றால் நாம் கூட ஏழைகளுக்குப் புரிய வைக்கலாம். காட்டுவாழ்
மக்களிலிருந்தும் வருவார்கள். இவ்வளவு பெரிய மரமாக இருக்கிறது, இதில் ஒருவர் கூட தேவி தேவதா
தர்மத்தினர் இல்லை. மற்ற தர்மங்களில் மாறி போய் இருக்கிறார்கள். பக்தி செய்யக் கூடியவர்களுக்கு புரிய
வையுங்கள் என பாபா இப்போது புரிய வைக்கிறார். நாற்று எவ்வாறு நடப்படுகிறது என நீங்கள் பார்த்துக்
கொண்டிருக்கிறீர்கள். எப்படி பிராமணர் ஆகிறார்கள். சூரிய வம்சம், சந்திர வம்ச தேவதையாக மாறக் கூடியவர்கள்
வந்துக் கொண்டே இருப்பார்கள். ஒரு முறை கேட்டாலும் சொர்க்கத்தில் நிச்சயம் வருவார்கள். பாபா காசியில்
கிணற்றில் குதித்து இறப்பவர்களின் எடுத்துக்காட்டைப் பற்றியும் கூறியிருக்கிறார். சிவனிடம் சென்று அர்ப்பணம்
செய்தனர். அவர்களுக்கு ஏதாவது கிடைக்க வேண்டும். நீங்களும் அர்ப்பணம் ஆகிறீர்கள். இராஜ்யத்திற்காக
முயற்சி செய்கிறீர்கள். பக்தி மார்க்கத்தில் இராஜ்யம் எதுவும் இல்லை. ஒருவரும் திரும்பி போக முடியாது.
என்ன நடக்கிறது. அவர்கள் செய்த பாவங்களினுடைய தண்டனையை அனுபவித்து முடிக்கிறார்கள். பிறகு
புதிய தலை முறையில் பிறவி எடுக்கிறார்கள். புதிய தலைமுறையில் பாவம் ஆரம்பம் ஆகிறது. நீங்களும்
நம்பர் ஒன்னில் இருக்கிறீர்கள். நீங்கள் தான் 84 பிறவிகளை அனுபவிக்கிறீர்கள். அனைவரும் சதோ, ரஜோ,
தமோவில் வர வேண்டியிருக்கிறது. இச்சமயம் முழு மனித சிருஷ்டி என்ற மரமும் இற்றுப் போய் இருக்கிறது
என பாபா கூறியிருக்கிறார். மனிதர்கள் முற்றிலும் காரிருளில் கும்பகர்ணனின் தூக்கத்தில் தூங்கிக்
கொண்டிருக்கிறார்கள். ஒரு கும்பகர்ணன் இல்லை. பலர் இருக்கிறார்கள். நீங்கள் எவ்வளவு தான் புரிய வைத்தாலும்
கேட்பதில்லை. யாருக்கு பாகம் இருக்கிறதோ அவர்கள் முயற்சி செய்கிறர்கள். மேலும் அவர்களே தாய்
தந்தையின் இதயத்திலும் அமர்கிறார்கள். இராஜ்ய சிம்மாசனத்திலும் அவர்களே அமர்வார்கள். நிறைய பெண்
குழந்தைகள், பாபா குழந்தைகளை மிரட்ட வேண்டியிருக்கிறது என கேட்கிறார்கள். குழந்தைகளுக்கு அந்தளவு
புரிதல் இல்லை என பாபா கூறுகிறார். அழுக்கான எங்களை தூய்மையாக்குங்கள் என நீங்கள் எங்களை
அழைத்தீர்கள். காமம் மிகப் பெரிய எதிரி என பாபா கூறுகின்றார். கோபம் எதிரி என கூறப்படுவதில்லை.
தாய்மார்களுக்குள் இவ்வளவு கிடையாது. ஆண்கள் மிகவும் சண்டை இடுகிறார்கள். இப்போது பாபா தாய்மார்
களாகிய உங்களை முன்னால் வைத்திருக்கிறார். வந்தேமாதரம். இல்லையென்றால் தாய்மார்களிடம் உன்னுடைய
கணவரே உனக்கு குரு ஈஸ்வர், அவருடைய வழிப்படி நடக்க வேண்டும் என கூறுகிறார்கள். கை விலங்கு
போடப்பட்டது. பிறகு உடனே அழுக்காகி விடுகின்றனர். இப்படிப்பட்ட இந்த ஈஸ்வர் அவர்களுக்கு கிடைத்திருக்
கிறார். இப்போது அராம இராஜ்யம் உருவாகிறது. மற்ற அனைவரும் இறந்துக் கொண்டே போவார்கள்.
வினாசக் காலத்தில் விபரீத புத்தி, வினாசக் காலத்தில் அன்பு புத்தி என பாபா புரிய வைக்கின்றார். உங்களுக்கு
பரம்பிதா பரமாத்மாவோடு அன்பான புத்தி இருக்கிறது. சிவபாபா இவருக்குள் வருகிறார். இவர் மூலமாக நாம்
கேட்டுக் கொண்டிருக்கின்றோம் என உங்களுடைய ஆத்மா அறிகிறது. இவ்வளவு சிறிய புள்ளியாகும். இது
சிவபாபாவினுடைய தற்காலிக ரதம் ஆகும். இவர் மூலமாக இந்த ருத்ர ஞான யக்ஞத்தை படைக்கிறார். அது
வளர்ச்சி அடைந்துக் கொண்டே போகும். குழந்தைகளின் சிறு, சிறு துளிகளினால் குளம் நிறைந்துக்
கொண்டிருக்கிறது. குழந்தைகள் தங்களுடையதை அர்ப்பணம் செய்துக் கொண்டே இருக்கிறார்கள். ஏனென்றால்
இது அனைத்துமே மண்ணோடு மண்ணாகிறது, எதுவுமே இருக்காது என அறிகிறார்கள். இவ்வளவாது
11.07.2016
(4/4)
பயன்படட்டுமே. சுதாமாவின் எடுத்துக் காட்டு இருக்கிறது அல்லவா. பெண்குழந்தைகள் பாபாவிடம் ஒரு பிடி
அரிசி அல்லது 6லி8 ரூபாய் அனுப்புகிறார்கள். ஆஹா குழந்தாய்! பாபா ஏழைபங்காளன் அல்லவா. இது
அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது, மீண்டும் நடக்கும் பந்தனத்தில் இருப்பவர்கள் இருக்கிறார்கள்.
பாக்கியசாலி நீங்கள். சிவபாபாவின் கை கிடைத்திருக்கிறது அல்லவா என்று பாபா கூறுகிறார். ஒரு நாள் வரும்,
அனைத்து ஆரிய சமாஜம் போன்றோரும் வருவார்கள். எங்கே போவார்கள். முக்தி, ஜீவன் முக்திக்கான கடை
ஒன்று தான். தண்டனைகளை அடைந்து அனைவரும் முக்திக்குப் போக வேண்டும். இது அழிவுக்கான
தருணம் ஆகும். அனைவரும் திரும்பி போவார்கள். இது பிரிய தர்ஷனின் ஊர்வலம், ஊர்வலம் எப்படி
போகும் என்பதன் காட்சிகள் கூட கிடைக்கும். உங்களைத் தவிர வேறு யாரும் பார்க்க முடியாது. நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை
வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம் :
1. பாபா மூலமாக மறைமுகமாக ஞான தானம் கிடைத்திருக்கிறது. அதன் மதிப்பை புரிந்துக்
கொண்டு தங்களின் பையை ஞானரத்தினங்களால் நிரப்ப வேண்டும். அனைவருக்கும் மறைமுகமாக
தானம் அளித்துக் கொண்டே செல்ல வேண்டும்.
2. இது அழிவுக்கான சமயம், இப்போது திரும்பச் செல்ல வேண்டும் என்பதால் உங்களுடைய
அனைத்தையும் அர்ப்பணம் செய்ய வேண்டும். அன்பான புத்தி உடையவர்களாக வேண்டும். முக்தி
மற்றும் ஜீவன் முக்தியின் வழியை அனைவருக்கும் கூற வேண்டும்.
வரதானம் : புத்தி என்ற கால், மரியாதை என்ற கோட்டிற்குள்ளாகவே வைக்கக் கூடியவராகி
அனைத்து பலன்கள் நிறைந்த சக்திசாலி ஆகுக !
எந்த குழந்தைகள் புத்தி என்ற கால் மூலமாக மரியாதை என்ற கோட்டிலிருந்து வெளியே
எடுக்கவில்லையோ அவர்கள் அதிர்ஷ்டசாலி மற்றும் அன்பிற்கு உட்பட்டவர் ஆகிறார்கள். அவர்களுக்கு ஒரு
போதும் எந்த ஒரு தடை மற்றும் புயல், குழப்பம், மனச்சோர்வு வர முடியாது. ஒரு வேளை வருகிறது
என்றால் நிச்சயம் புத்தி என்ற கால் மரியாதை என்ற கோட்டிற்கு வெளியே வந்திருக்கிறது என புரிந்துக்
கொள்ள வேண்டும். கோட்டை விட்டு வெளியே வருதல் என்றால் பிச்சைக்காரன் ஆகுதல் என்று பொருள்.
ஆகவே, ஒரு போதும் பிச்சைக்காரன் என்றால் கேட்கக் கூடியவராக இருக்காதீர்கள். அனைத்து பிராப்திகளிலும்
நிரம்பியவராகி சக்திசாலி ஆகுங்கள்.
சுலோகன் : யார் எப்போதும் விடுபட்டும் அப்பாவிற்கு அன்புடையவராகவும்
இருக்கிறார்களோ அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.
(1/4)
12
12.07.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! நீங்கள் உங்களது வாழ்க்கையை வைரம் போல ஆக்குவதற்காக
தந்தையிடம் வந்துள்ளீர்கள். தந்தையின் நினைவினால் தான் அப்பேர்ப்பட்ட வாழ்க்கை
அமையும்.
கேள்வி: புதிய உலகத்தில் உயர்ந்த பதவிக்காக எந்த ஒரு முக்கியமான முயற்சி செய்ய வேண்டும்?
பதில்: பாபா கூறுகிறார் லி இனிமையான குழந்தைகளே ! எந்த பழைய சம்பந்தியினர் (உறவினர்)
இவ்வளவு துக்கம் தந்தனரோ, அவர்களது மோக வலையிலிருந்து புத்தியை நீக்கி தற்போது என் ஒருவனை
நினைவு செய்யுங்கள். அவர்களுடன் வாழ்ந்து கொண்டே மனதை என்னிடம் ஈடுபடுத்துங்கள். மன்மனாபவ
என்ற மந்திரத்தை எப்பொழுதும் நினைவில் கொண்டீர்கள் என்றால் நீங்கள் புதிய உலகத்தில் உயர்ந்த
பதவியை அடைவீர்கள்.
பாடல்: நீ இரவெல்லாம் உறங்கி இழந்தாய்.. .. .. ..
ஓம் சாந்தி. எப்படி குழந்தைகளுக்கு எல்லா சாஸ்திரங்களின் சாரத்தை புரிய வைக்கிறாரோ, அதே போல
இந்த பாடல்களின் சாரத்தைக் கூட உங்களுக்குப் புரிய வைக்கிறார். அவரே அனைவரின் ஆன்மீகத் தந்தை.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு பிரம்மா உடலில் வந்து புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். ஹே குழந்தைகளே,
நமது வைரம் போன்ற பிறவி அமைந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்துள்ளீர்கள் என்று தந்தை புரிய
வைக்கிறார். தந்தையிடம் நீங்கள் வருவதே வைரம் போன்ற பிறவியை அமைப்பதற்காக. சொர்க்கவாசி
களினுடையது வைரம் போன்ற பிறவி என்று கூறப்படுகிறது. நரகவாசிகளினுடையது சோழி போன்ற பிறவியாகும்.
நீங்கள் சங்கம யுகத்தையும் அறிந்து கொண்டு விட்டுள்ளீர்கள். நாம் இப்பொழுது சங்கமயுகவாசி ஆவோம்.
இந்த சங்கமயுகம் அனைவருக்குமே மங்களமானதாகும். இந்த சங்கமயுகத்தில் தான் அனைவருக்கும் கதி
சத்கதி ஆகிறது. யார் செய்கிறார்? பரந்தாமத்திலிருந்து வரக்கூடிய பிரயாணி. அவர் பிரயாணி ஆவார். நீங்கள்
பிரயாணி கிடையாது. நீங்கள் வந்து போவது இல்லை. நான் பழைய உலகத்தில் வந்து பிறகு திரும்பிச்
செல்கிறேன் என்று தந்தை கூறுகிறார். இந்த சேவை செய்யக் கூடிய பிரயாணி ஒரே ஒருவர் ஆவார் என்பதை
குழந்தைகள் அறிந்துள்ளார்கள். அவர் வந்து குழந்தைகளாகிய நமக்கு பெரிய சேவை செய்கிறார். இப்பேர்ப்பட்ட
சேவையை வேறு யாரும் செய்ய முடியாது. பதீதர்களாகிய நமக்கு வந்து சேவை செய்யுங்கள் என்று சேவைக்காகத்
தான் அழைக்கிறார்கள். நான் குழந்தைகளின் சேவையில் வந்துள்ளேன். ஏனெனில் குழந்தைகள் மிகவும்
துக்கமடைந்துள்ளார்கள் என்று தந்தையும் கூறுகிறார். எங்களது துக்கத்தை நீக்குங்கள் மற்றும் அமைதியை
வழங்குங்கள் என்று முறையிடவும் செய்கிறார்கள். சுகம் மற்றும் சாந்தி இரண்டு விஷயங்கள் எப்பொழுதும்
நினைவில் இருக்கின்றன. இங்கு துக்கம் மற்றும் அசாந்தி உள்ளது. அதனால் தான் அழைக்கிறார்கள். தந்தை
தான் வந்து சிருஷ்டிச் சக்கரத்தின் முழு இரகசியத்தையும் குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். இப்பொழுது
பக்தி மார்க்கம் முடிவடைகிறது என்பதை குழந்தைகள் புரிந்துள்ளார்கள். கலியுகத்தின் கடைசி என்றால் பக்தி
கீழே இறங்கி கொண்டே வருகிறது. ஞானத்தினால் உங்களுக்கு முன்னேறும் கலை ஆகி விடுகிறது. நீங்கள்
உயர்ந்ததிலும் உயர்ந்த பதவியை அடைந்து விடுகிறீர்கள். பின்னர் அந்த பிராப்தியின் சுகம் குறைந்துக்
கொண்டே போகிறது. பக்தி பாரதத்தில் இருக்கும் அளவிற்கு வேறு எங்குமே இல்லை. அரை கல்பம் பக்தி
நடக்கிறது. துவாபரம் ஆரம்பமானது முதல் மற்ற தர்மங்களின் ஸ்தாபனை ஆக ஆரம்பமானது. முதல் பக்தி
ஆரம்பமாகிறது. பக்தி கூட முதலில் நன்றாக இருக்கும். எப்படி சொர்க்கம் முதலில் மிகவும் நன்றாக இருக்குமோ
அப்படி. பிறகு மெது மெதுவாகக் கலைகள் குறைந்துக் கொண்டே போகின்றன. பக்தி ஆரம்பமாகும் பொழுது
முதன் முதலில் சிவனின் பூசாரி ஆகிறார்கள். அரை கல்பம் எந்த ஒரு பூஜையும் ஆவதில்லை. பிறகு பக்தி
மார்க்கம் ஆரம்பமாகும் பொழுது மற்ற தர்மங்களும் ஆரம்பமாகின்றன. இவ்வளவு பக்தி வேறு யாரும்
செய்யமுடியாது. முழுமையாக அரைகல்பம் பக்தி நடக்கிறது. எந்த தந்தை அனைவருக்கும் குறிப்பாக பாரதத்திற்கு
சத்கதி அளிக்கிறாரோ, சொர்க்கத்திற்கு அதிபதியாக ஆக்குகிறாரோ, அதே தூரதேசத்துப் பிரயாணி இப்பொழுது
குழந்தைகளாகிய நமக்கு மீண்டும் சொர்க்கத்தின் அரசாட்சியை அளிக்க வந்துள்ளார் என்பதையும் குழந்தைகளாகிய
நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஆஸ்தி கூட எவ்வளவு வலிமையானது. ஆனால் ஒரு விஷயம் கூட யாருடைய
புத்தியிலும் பதியவில்லை. பாரதத்தில் எவ்வளவு பக்தி செய்கிறார்கள். எவ்வளவு கோவில்கள் உள்ளன. பாரத
கண்டத்தில் ஏராளமான கோவில்கள் உள்ளன. இவை யாருடைய கோவில்கள் என்பதை இப்பொழுது நீங்கள்
அறிந்துள்ளீர்கள். முதன் முதலில் சிவபாபாவின் கோவில் அமைக்கப்படுகிறது. பிறகு தேவதைகளின் கோவில்கள்
அமைக்கப்படுகின்றன. அந்த கோவில்கள் கூட உங்கள் முன்னால் உள்ளன. ஒரு புறம் சிவபாபாவிற்கு பூஜை
செய்துக் கொண்டே இருக்கிறார்கள், மறுபுறம் சிவபாபா உங்களை பூஜைக்குரியவராக ஆக்கிக் கொண்டிருக்கிறார்.
நீங்கள் பூஜைக்குரிய தேவதை ஆவதற்காக இங்கு வந்துள்ளீர்கள். யாரெல்லாம் தேவதைகளுக்குப் பூசாரியாக
12.07.2016
(2/4)
இருக்கிறார்களோ உண்மையில் அவர்களும் வந்து இங்கு பிராமணர்களாக ஆவார்கள். மெள்ள மெள்ள விருத்தி
ஆகிக்கொண்டே போகும். எல்லோரும் ஒட்டு மொத்தமாக படிக்க முடியாது. நேரம் பிடிக்கிறது. முந்தைய
கல்பத்தில் கூட யார் படித்திருக்கக் கூடுமோ அவர்களே பின்னர் படிப்பார்கள். ஒருவருக்கொருவர் படிப்பித்துக்
கொண்டே இருக்க வேண்டும். அனைவருக்கும் தந்தை மற்றும் சிருஷ்டியின் முதல், இடை, கடை பற்றிய
ஞானத்தைக் கூறுகிறீர்கள். அதன் மூலம் மனிதர்கள் சொர்க்கத்தின் அதிபதி ஆகி விட முடியும். அதை வந்து
புரிந்து கொள்ளுங்கள். இந்த நாடகம் எப்படி சக்கரம் சுற்றி வருகிறது என்பது குழந்தைகளாகிய உங்களுடைய
புத்தியில் உள்ளது. இலட்சக்கணக்கான வருடங்களின் கதையை யாருமே கூற முடியாது. 5 ஆயிரம்
வருடங்களுக்கு முன்னால் என்ன இருந்தது, யாருடைய ஆட்சி இருந்தது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
பாரதத்தில் பூஜைக்குரிய தேவி தேவதைகளாகிய நம்முடைய இராஜ்யம் இருந்தது. நாம் பூஜைக்குரியவராக
இருந்தோம். பிறகு பூஜாரி ஆனோம் என்பது நினைவில் வந்தது அல்லவா? இதற்கு முன்பு இது தெரியாமல்
இருந்தது. நாமே பூஜைக்குரிய தேவதைகளாக இருந்தோம். பிறகு நாம் 84 பிறவிகள் எடுத்தோம். 84 பிறவிகளின்
கதை இலட்சுமி நாராயணருடையதாகும். நீங்கள் உங்களுடைய 84 பிறவிகளின் கதையைக் கூறுகிறீர்கள்.
அவர்களுக்கு தங்களுடைய கதையை அமர்ந்து எழுதுவதில் நிறைய நேரம் பிடிக்கிறது. உங்களால் ஒரு
நிமிடத்தில் 84 பிறவிகளின் கதையைக் கூற முடியும். அவர்கள் ஒரு பிறவியின் கதையை எழுதுகிறார்கள்.
சிறிய வயதில் என்னென்ன செய்தோம் என்பதை அவர்களுடைய கதையில் கூறுகிறார்கள். நாங்கள் எப்படி
84ன் சக்கரத்தைச் சுற்றுகிறோம். ஒருவருடைய விஷயம் கிடையாது. நிறைய பிராமணர்கள் இருக்கிறார்கள்.
நீங்கள் தான் இந்த சக்கரத்தை அறிந்துள்ளீர்கள். இந்த சக்கரத்தை அறிந்து கொள்வதால் நீங்கள் இராஜா
இராணி ஆகிறீர்கள். மேலும் மற்றவர்களை ஆக்கவும் செய்கிறீர்கள். பக்தி கூட பாரதவாசிகளைப் போல வேறு
யாரும் செய்வதில்லை. மற்றது எதெல்லாம் மடங்கள், சம்பிரதாயங்கள், தர்மங்கள் ஆகியவை உள்ளனவோ,
அவை நமது பக்தியின் காலத்தில் ஸ்தாபனை ஆகிறது. முதன் முதலில் நம்முடையது எவ்வளவு சிறிய
மலர்களின் செடியாக இருந்தது. ஆன்மீகத் தோட்டமாக இருந்தது. நீங்கள் உயிரூட்டமுடைய மலர்களாக
இருந்தீர்கள். இதற்கு மலர்களின் தோட்டம் என்று கூறப்படுகிறது. பிறகு அதுவே முட்களின் தோட்டமாக
ஆகிக் கொண்டே போகிறது. இச்சமயம் எல்லோருமே முட்களாக ஆகி விட்டுள்ளார்கள். பிறகு முட்களிலிருந்து
மலராக எப்படி ஆவது என்பதை தந்தை வந்து புரிய வைக்கிறார். ஒருவருக்கொருவர் துக்கம் கொடுப்பது
முள் குத்துவது போல ஆகும். மாணவ வாழ்க்கை மிகச் சிறந்தது என்று கூறப்படுகிறது. அது மிகவும் நன்றாக
இருக்கும். ஆண் குழந்தைகளும், பெண் குழந்தைகளும் மிகவும் மகிழ்ச்சியுடன் படித்துக் கொண்டே இருப்பார்கள்.
திருமணம் செய்தார்களோ இல்லையோ பின் ஒருவருக்கொருவர் முள் குத்த ஆரம்பிப்பார்கள். சத்யுகத்தில்
யாருமே முள் குத்துவதில்லை. இப்பொழுது நீங்கள் மீண்டும் மலர் ஆகிறீர்கள். பாரதம் சொர்க்கமாக இருக்கும்
பொழுது எவ்வளவு அளவற்ற சுகம் இருந்தது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். தங்கச் சுரங்கங்கள் இருந்தன.
இப்பொழுது அவை காலியாகி விட்டது. பிறகு உங்களுக்கு நிரம்ப கிடைக்கும். பாரதத்தில் தான் தங்கம்,
வைரம், வைடூரியத்தின் சுரங்கங்கள் இருந்தன. அச்சமயம் அமெரிக்கா போன்ற எதுவும் இருக்காது. பாம்பே
கூட இருக்காது. ஆச்சரியமல்லவா? கலியுகக் கடைசியில் சிறிதளவு கூட தங்கம் தென்படுவதில்லை. பிறகு
சத்யுக ஆரம்பத்தில் இத்தனை தங்கச் சுரங்கங்களும் நிரம்பியதாகி விடுகிறது. தங்க மாளிகை ஆகி விடுகின்றன.
ஆச்சரியமில்லையா? அங்கு சுரங்கங்களிலிருந்து எவ்வளவு ஏராளமான தங்கத்தை வெளியே எடுக்கிறார்கள்.
எப்படி இங்கு மண்ணினால் செங்கல் தயாராகிறதோ, அதேபோல அங்கு தங்கக் கட்டிகள் தயாராகின்றன.
மாயா மச்சந்தர் என்ற நாடகத்தைக் காண்பிக்கிறார்கள். அங்கு தங்கமே தங்கம் என்ற காட்சியைப் பார்த்தார்.
உண்மையில் சத்யுகத்தில் தங்கம் இருக்கும். இங்கே பாருங்கள், மண்ணினுடைய செங்கற்கள் கூட கிடைப்பதில்லை.
இங்கு எந்த அளவிற்கு செங்கற்கள் பைசா கொடுத்து கிடைக்கிறதோ, அந்த அளவு அங்கு தங்க கற்கள்
இலவசமாக கிடைக்கும். இரவு பகலுக்கான வித்தியாசம் உள்ளது. பின் ஏன் புது உலகத்தில் உயர்ந்த பதவியை
அடைவதற்கான முயற்சி செய்யக் கூடாது. இங்கு மோகத்தின் வலையில் ஏன் சிக்க வேண்டும்?
பழைய சம்பந்தங்களில் நீங்கள் எவ்வளவு துக்கம் எடுக்கிறீர்கள் என்று தந்தை கூறுகிறார்? இவர்களை
விட்டு விடுங்கள் என்று அப்படி ஒன்றும் பாபா கூறுவதில்லை. புத்தியோகத்தை ஒரு தந்தையிடம்
ஈடுபடுத்தினால் மட்டும் போதும். பின் நீங்கள் உலகத்தின் அதிபதி ஆகி விடுவீர்கள். மன்மனாபவ என்பதன்
பொருளே என்னை நினைவு செய்யுங்கள் மற்றும் விஷ்ணு சதுர்புஜ லி அதாவது விஷ்ணுபுரியை நினைவு
செய்யுங்கள். அடிப்படை வார்த்தை ஒன்றே ஒன்று தான். பக்தி மார்க்கத்தில் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.
இப்பொழுது ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் பிரியதரிசனான ஒரே ஒரு பரமபிதா பரமாத்மாவின்
பிரியதரிசினிகள் ஆவீர்கள். அவர் உங்களை சுகதாமத்திற்கு அதிபதியாக ஆக்குகிறார். அனைத்து ஆத்மாக்களும்
அவரை நினைவு செய்கிறார்கள். நீங்கள் ஆன்மீக பிரியதரிசனருக்கு உடையவர்களான ஆன்மீக பிரியதரிசினிகளாக
ஒரே ஒரு முறை ஆகிறீர்கள். மற்றபடி எல்லா மனிதர்களும் உலகியலிலான பிரியதரிசினி மற்றும் பிரியதரிசனர்
களாக இருக்கிறார்கள். இப்பொழுது எல்லையில்லாத பிரியதரிசினிகளுக்கு எல்லையில்லாத பிரியதரிசனர் வந்து
12.07.2016
(3/4)
கிடைத்துள்ளார். வாருங்கள் வந்து எங்களை பதீத நிலையிலிருந்து பாவனமாக ஆக்குங்கள் என்றும் அவருக்குக்
கூறுகிறார்கள். ஒருவரைத் தான் அழைக்கிறார்கள். நமது ஆத்மா பதீதமாக ஆகி விட்டுள்ளது. எனவே பதீத
பாவனரே ! வாரும், என்று அழைக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். கும்பமேளா நடைபெறுகிறது.
அதில் எத்தனை பேர் போய் கங்கா ஸ்நானம் செய்கிறார்கள். நன்மை எதுவும் கிடையாது. யாருமே தூய்மை
யாக ஆவதில்லை. இப்பொழுது தந்தை வந்து ஞானமழை பொழிகிறார். உங்கள் மீது ஞானமழை ஆகிக்
கொண்டிருக்கிறது. அதன் மூலம் மீண்டும் முட்களின் காடு மலர்களின் தோட்டமாக ஆகி விடும். நமது
இராஜ்யம் இருக்கும் பொழுது அங்கு பதீதமானோர் எவரும் இருக்கவே மாட்டார்கள் என்பதை நீங்கள்
அறிந்துள்ளீர்கள். முழு உலகத்தின் மீது ஞான மழை ஏற்பட்டு விடுகிறது. எல்லாமே பசுமையாக ஆகி
விடுகிறது. வைரம், வைடூரியங்களின் சுரங்கங்கள் கூட புதியதாகி விடுகிறது. இப்பொழுது குழந்தைகளாகிய
நீங்கள் எவ்வளவு குμயில் இருக்க வேண்டும். நீங்கள் என்னை நினைவு செய்தீர்கள் என்றால், உங்களுடைய
விகர்மங்கள் அழிந்து போகும் என்று எல்லையில்லாத தந்தை வந்து புரிய வைக்கிறார் என்பதை நேரிடையாகப்
பார்க்கிறீர்கள். நீங்கள் எங்கு அமர்ந்திருந்தாலும் சரி, ஸ்நானம் செய்யுங்கள், புத்தியில் தந்தையின் நினைவிருக்
கட்டும். அங்கு நினைவு செய்வதற்கான நேரம் உள்ளது. தந்தையை எவ்வளவு நினைவு செய்வீர்களோ
அவ்வளவு சம்பாத்தியம் உள்ளது. நினைவினால் தான் சம்பாத்தியம் உள்ளது. நினைவினால் சம்பாத்தியம்
ஆகிறது என்று எப்பொழுதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எவ்வளவு பெரிய சம்பாத்தியம் ஆகும். நீங்கள்
விஷ்ணுபுரிக்கு அதிபதி ஆகி விடுவீர்கள். ஆத்மாக்களாகிய நம்முடைய தந்தை நிராகாரமானவர் ஆவார்
என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அவர் இந்த சரீரத்தின் ஆதாரம் எடுத்துள்ளார். பாகீரதனின் வர்ணனை
கூட உள்ளது அல்லவா? பாக்கியசாலி ரதம் ஆகும். அந்த ரதத்தில் பரமபிதாவின் பரம ஆத்மா சவாரி
செய்கிறார். ஆத்மாவின் ரதம் தயாராக ஆகி விடும் பொழுது சட்டென்று ஆத்மா வந்து பிரவேசம் செய்கிறது.
தந்தை இந்த ரதத்தில் தான் வந்து ஞானத்தை மட்டும் அளிக்க வேண்டி உள்ளது. அநேக பிறவிகளின்
கடைசி பிறவியில், வானப் பிரஸ்த நிலையாகும் பொழுது, நான் வந்து இவருக்குள் பிரவேசம் செய்கிறேன்
அல்லது இந்த ரதத்தில் வந்து அமருகிறேன். மற்றபடி எந்த ஒரு குதிரை வண்டி, ரதத்தின் விஷயம்
கிடையாது. இப்பொழுது உங்களுக்கு இந்த ஞானம் கிடைத்துள்ளது. தந்தை வந்து நேரிடையாக குழந்தைகளாகிய
உங்களுக்குப் புரிய வைக்கிறார். உங்களுக்கு மிகுந்த குμ இருக்க வேண்டும். ஐ.சி.எஸ். பரீட்சைக்காகப்
படிக்கிறார்கள் என்றால், மிகுந்த போதை இருக்கும். அது எல்லாவற்றையும் விட உயர்ந்த பரீட்சையாகும்.
உங்களுடையதும் இது படிப்பு ஆகும். இது பகவானின் பாடசாலையாகும். இப்பொழுது பகவான் யார் என்ற
கேள்வி எழுகிறது. ஸ்ரீ கிருஷ்ணரா இல்லை சிவபாபாவா? அனைவருக்கும் பகவான் யார்? ஒரே ஒரு
நிராகாரமானவரைத் தவிர எல்லோருமே கிருஷ்ணரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அனைத்து ஆத்மாக்களின்
தந்தை அவர் நிராகாரமான பரமபிதா பரமாத்மா ஆவார். அவர் எப்பொழுதும் பரந்தாமத்தில் இருக்கிறார்.
குழந்தைகளை சொர்க்கத்திற்கு அதிபதியாக ஆக்க ஒரே ஒரு முறை வருகிறார். அதே பாபா கல்ப கல்பமாக
வந்து நம்மை ஆண்டியிலிருந்து அரசனாக ஆக்குகிறார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். பாரதம் இப்பொழுது
மிகவும் ஏழையாக உள்ளது அல்லவா? பிறகு அடுத்த பிறவியில் என்ன ஆக வேண்டி உள்ளது என்பது
எல்லாமே உங்களுக்கு சாட்சாத்காரம் ஆகி உள்ளது. விநாசத்தினுடைய சாட்சாத்காரம் கூட செய்துள்ளீர்கள்.
ஸ்தாபனையையும் பார்த்துள்ளீர்கள். நான் உங்களை இராஜாக்களுக்கெல்லாம் இராஜாவாக ஆக்குகிறேன் என்று
பகவான் கூறுகிறார். நிறைய தான புண்ணியம் செய்வதால் ஒரு சிலருக்கு அல்ப கால சுகம் கிடைக்கிறது.
இராஜாக்களிடம் பிறவி எடுத்து பிறகு உடனே இறந்து விடுகிறது. ஒரு சில கர்ப்பத்திலேயே இறந்து விடுகிறது.
ஒரு சில நொண்டியாக, முடவனாக, ஒற்றைக் கண்ணனாக ஆகி விடுகிறார்கள். எப்படி கர்மம் செய்கிறார்களோ,
அப்படி பதவியை அடைகிறார்கள். இப்பொழுது உங்களை இராஜாக்களுக்கெல்லாம் இராஜாவாக ஆக்குகிறார்.
பாபா நாங்கள் சமர்ப்பணம் ஆகிறோம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். எனவே அவசியம் நீங்கள் இராஜ்யத்தையும்
பெறுவீர்கள். பாரத தேசம் மகாதானி கண்டம் என்று கூறப்படுகிறது. இங்கு தான புண்ணியம் நிறைய செய்கிறார்கள்.
அது பிறகு பக்தி மார்க்கத்தில் ஆரம்பமாகிறது. இப்பொழுது தந்தை உங்களுக்கு 21 பிறவிகளுக்கு தானம்
கொடுக்கிறார். இப்பொழுது நீங்கள் பாபா மீது சமர்ப்பணம் ஆகிறீர்கள். உடல், மனம், பொருள் ஆகிய எல்லா
வற்றையும் கொடுத்து விட்டீர்கள். இப்பொழுது டிரஸ்டி ஆகி இருங்கள் என்று தந்தை கூறுகிறார். உங்கள் வீடு
வாசலை பராமரியுங்கள். எல்லாமே சிவபாபாவினுடையதாகும். நான் உங்களுடையவன் ஆவேன். உங்களை
தான் நினைவு செய்கிறேன். மனதார சமர்ப்பணம் செய்கிறார்கள். தாரளமாக மாளிகையில் இருங்கள், உலாவுங்கள்,
சுற்றுங்கள், குμயைக் கொண்டாடுங்கள். என்னை நினைவு மட்டும் செய்தீர்கள் என்றால், நீங்கள் மகிழ்ச்சியாக
இருப்பீர்கள் என்று தந்தை கூறுகிறார். நீங்கள் உலகிற்கு அதிபதியாக இருந்தீர்கள். இப்பொழுது மீண்டும்
நீங்கள் முயற்சி செய்து அது போல ஆகிறீர்கள். இனிமையிலும் இனிமையான குழந்தைகளே ! இந்த யோக
பலத்தினால் தான் நீங்கள் விகர்மங்களை வென்றவர்களாக ஆவீர்கள் என்று தந்தை புரிய வைக்கிறார். தந்தையின்
நினைவினால் நீங்கள் உலகிற்கு அதிபதி ஆகிறீர்கள். நல்லது.
12.07.2016
(4/4)
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட
செல்லமான குழந்தைகளுக்குத் தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும்
காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. இராஜ்ய பதவியைப் பெறுவதற்காக தந்தை மீது முழுமையாக சமர்ப்பணமாக வேண்டும்.
உடல், மனம், பொருள் அனைத்தையும் சமர்ப்பணம் செய்து டிரஸ்டியாகி இருக்க வேண்டும்.
விகர்மங்களை வென்றவராக (விகர்மாஜீத்) ஆவதற்கான முயற்சி செய்ய வேண்டும்.
2. நினைவில் தான் சம்பாத்தியம் உள்ளது. எனவே நிரந்தர நினைவில் இருப்பதற்கான முயற்சி
செய்ய வேண்டும். மலர்களின் உலகத்திற்கு அதிகாரியாகி விடக் கூடிய வகையில்
அப்பேர்ப்பட்ட ஆன்மீக மலராக வேண்டும். உள்ளுக்குள் எந்த ஒரு முள் கூட இருக்கக்
கூடாது.
வரதானம்: அலௌகீக விளையாட்டு மற்றும் விளையாட்டு பொருட்களுடன்
விளையாடியபடியே சதா சக்திசாலியாகக் கூடிய ஆடாது அசையாதவர் ஆகுக !
அலௌகீக வாழ்க்கையில் மாயையின் தடை வருவது கூட அலௌகீக விளையாட்டு ஆகும். எப்படி
உடலின் சக்திக்காக விளையாட்டு விளையாடப்படுகிறதோ அதேபோல அலௌகீக யுகத்தில் நிலைமைகளை
விளையாட்டு பொருட்களாகக் கருதி, இந்த அலௌகீக விளையாட்டை விளையாடுங்கள். அவற்றிற்கு பயப்படா
தீர்கள் மற்றும் குழம்பாதீர்கள். அனைத்து எண்ணங்கள் சகிதமாக சுயம் தங்களை பாப்தாதாவிற்கு சமர்ப்பணம்
செய்து விடுங்கள். அப்பொழுது மாயை ஒரு பொழுதும் தாக்க முடியாது. தினமும் அமிருதவேளை பார்வையாளராக
ஆகி, சுயம் தங்களை அனைத்து சக்திகளாலும் அலங்காரம் செய்யுங்கள். அப்பொழுது ஆடாது அசையாதவராக
ஆகி இருப்பீர்கள்.
சுலோகன்: எந்த ஒரு உலகீய சமாச்சாரத்தைக் கேட்பதும் கூறுவதும்
கூட தனக்குள் குப்பையை சேமிப்பதாகும்.
(1/4)
13
13.07.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! நீங்கள் உங்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். மற்றவர்களைப்
பற்றி அல்ல. ஏனென்றால் டிராமாவின் அனுசாரம் யார் என்ன செய்கிறார்களோ, அதை
அடைவார்கள்.
கேள்வி : திரிகாலதரிசி ஆவதால் ஆத்மாவுக்கு எந்த நினைவு வந்துள்ளது?
பதில்: ஆத்மாவுக்கு நினைவு வந்துள்ளது லி நாம் அசலில் மூலவதன நிவாசி. இந்த டிராமாவில் நமது
பார்ட்டை நடிப்பதற்காக வந்துள்ளோம். நாம் முக்கிய நடிகர் ஆகி 84 பிறவிகளின் பார்ட்டை நடித்தோம்.
இப்போது பாபாவின் முன்பாக உள்ளோம். பிறகு அவரோடு கூடவே வீட்டுக்குச் செல்வோம். பாவனமாகி
வீட்டுக்குச் செல்ல வேண்டும். பிறகு சுகதாமத்தில் வர வேண்டும். இந்த விளையாட்டு முழுவதும் பாரதத்தில்
தான் உருவாக்கப் பட்டுள்ளது. இந்த நினைவு முழுவதும் திரிகாலதரிசி ஆவதன் மூலம் வந்து விட்டது.
பாடல் : இருந்தாலும் இறந்தாலும் உன் மடியில்.........
ஓம் சாந்தி. இந்தப் பாடலை யார் பாடினார்கள்? குழந்தைகள். குழந்தைகள் என்ன சொல்கின்றனர்? பாபா,
இப்போதே உங்கள் கழுத்துக்கு மாலை ஆக வேண்டும். இந்த சரீரத்தை இங்கேயே விட்டுவிட வேண்டும்.
குழந்தைகள் அறிவார்கள், சாந்திதாமம் அதாவது நிர்வாண்தாமத்தில் தந்தை மற்றும் குழந்தைகள், ஆத்மாக்களாகிய
நாம் இருக்கிறோம். இப்போது பாபா அடிக்கடி சொல்கிறார்லிதன்னை ஆத்மா என்று நிச்சயம் செய்யுங்கள்.
நீங்கள் அறிவீர்கள், நாம் ஆத்மாக்கள் பாபாவுடன் கூடவே நிர்வாண்தாமத்தில் வசித்திருந்தோம். பிறகு இந்த
சரீரத்தை தாரணை செய்து 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வந்துள்ளோம். குழந்தைகள் அறிவார்கள், நாம்
நிச்சயமாக பரந்தாம நிவாசிகள். இப்போது மீண்டும் பாபா வந்துள்ளார். நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள், பாபா
உங்களுக்கு முன் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறீர்கள். இங்கே இருப்பது லௌகிக் சரீர சம்மந்தங்கள். நாம்
அசலில் ஆத்மாக்களாக இருந்தோம். பிறகு லௌகிக் சம்மந்தத்தில் சுகம் மற்றும் துக்கத்தின் வாழ்க்கையைக்
கழித்தோம். இப்போது நீங்கள் ஆத்மாக்கள் திரிகாலதரிசி ஆகியிருக்கிறீர்கள். பாபாவும் கூட மூன்று காலங்கள்
மற்றும் மூன்று உலகங்களை அறிந்தவர். நீங்களும் கூட நம்பர்வார் புருஷார்த்தத்தின் அனுசாரம் அறிவீர்கள்.
படிப்பின் நினைவோ இருக்க வேண்டும் இல்லையா? இப்போது நினைவு வந்து விட்டது. பாபா புரிய
வைத்துள்ளார் லி நாமும் மூலவதனத்தில் வசிப்பவர்கள். நாம் இப்போது திரிகாலதரிசி ஆகியிருக்கிறோம். நீங்கள்
அறிவீர்கள், நாம் இந்த டிராமாவின் முக்கிய நடிகர்கள். முழு டிராமாவின் ஞானம் இப்போது உங்கள் புத்தியில்
உள்ளது. அரைக்கல்பமாக நாம் சுகதாமத்தில் இருக்கிறோம் என்பது நினைவு வந்து விட்டது. அங்கே இராவணன்
இருப்பதில்லை. நாம் ஆத்மாக்கள் முழு 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றுகிறோம். இப்போது பாபா நம்
முன்பாக அமர்ந்துள்ளார். உங்கள் ஸ்ரீமத் படி நடந்து நாங்கள் உங்களோடு கூடவே வருவோம். எவ்வளவு
முடியுமோ, உங்களை நினைவு செய்வோம். குழந்தைகளாகிய நீங்கள் இப்போது திரிகாலதரிசி ஆகியிருப்பதால்
உங்களுக்கு நாள் முழுவதும் இதே சிந்தனை இருந்து கொண்டிருக்க வேண்டும். உயர்ந்தவரிலும் உயர்ந்தவர்
பகவான். அவருடன் கூடவே குழந்தைகள் நீங்களும் உயர்ந்ததிலும் உயர்ந்த இருப்பிடத்தில் இருப்பவர்கள்.
இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு வீட்டின் நினைவு வந்து விட்டது. நாம் தூய்மையாகி, நமது பரந்தாமமாகிய
வீட்டுக்குச் செல்வோம். தந்தை சிவனுடைய பூஜை நடைபெறுகிறது என்றால் சாலிகிராம்களுக்கும் பூஜை
நடைபெறுகின்றது. பாபா தான் வந்து ஆத்மாக்களைப் தூய்மையாக்குகிறார். ஆத்மாக்களைப் தூய்மையாக்குபவர்
ஒரு தந்தை மட்டுமே! வேறு யாராலும் ஆக்க முடியாது. இப்போது நீங்கள் முழு டிராமாவின் விளையாட்டை
அறிந்து கொண்டு விட்டீர்கள். பாரதத்தில் தான் இந்த விளையாட்டு உருவாக்கப் பட்டுள்ளது என்பதைப்
புரிந்திருக்கிறீர்கள். ஆக, இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு பாபா முன்பாக அமர்ந்து புரிய வைக்கிறார்.
ஒவ்வொரு ஜீவாத்மாவும் அறிந்துள்ளது, பாபா ஞானக்கடலாக உள்ளார். அவரை பக்தி மார்க்கத்தில் அழைத்தே
வந்துள்ளனர், உறுதிமொழி அளித்தே வந்துள்ளனர். பாபா, நீங்கள் வருவீர்களானால் நிச்சயமாக நாங்கள்
உங்கள் அறிவுரைப்படி நடப்போம். இது ஒன்றும் லௌகிக் சம்மந்தத்தின் விஷயமல்ல. நீங்கள் ஆத்ம
அபிமானி ஆகி, நாம் ஓர் எல்லையற்ற தந்தையின் ஸ்ரீமத் படி நடக்க வேண்டும். அவர் சொல்வதையே ஏற்று
நடக்க வேண்டும் என்ற இந்தச் சிந்தனை செய்ய வேண்டும். அவரோ மிக சுலபமாகப் புரியும்படி சொல்கிறார்.
இப்போது உங்களுக்கு ஞானத்தின் மூன்றாவது கண் திறந்து கொண்டுள்ளது. இந்த ஞானம் உங்களுக்கு
இங்கே சங்கமத்தில் உள்ளது. மூலவதனத்தில் தந்தை மற்றும் குழந்தைகள் உள்ளனர். அங்கே இது யாருக்கும்
தெரியாது. இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு பாபா தமது முடிவைத் (நோக்கத்தை) தருகிறார். அவரே
ஞானக்கடல். வேறு எந்த ஒரு சத்சங்கத்திலும் இது போல் சொல்ல மாட்டார்கள் லி பாபா, ஆத்மாக்களாகிய
எங்களுக்குப் படிப்பு சொல்லித் தருகிறார் என்று. இதை நீங்கள் அறிவீர்கள். அடிக்கடி உங்களுக்குச் சொல்ல
வேண்டியுள்ளது லி ஆத்ம அபிமானி ஆகுங்கள் என்று. ஆத்மா இந்த டிராமாவில் நடிகராகத் தனது பாகத்தை
(2/4)
13.07.2016
நடிக்கின்றது. நாம் ஆத்மா சரீரமாகிய ஆடையை எடுத்துக் கொண்டுள்ளோம். அந்த நடிகர்கள் ஆடைகளை
மாற்றுகின்றனர்.
ஆத்மாக்கள் நீங்கள் நிராகாரி உலகத்தில் இருந்து இங்கே வந்து இந்த சரீரம் என்ற ஆடையை எடுத்துக்
கொள்கிறீர்கள். ஆத்மாக்களாகிய நமக்கு பாபா மீண்டும் வந்து இராஜயோகம் கற்பித்துக் கொண்டிருக்கிறார்.
இப்போது குழந்தைகள் நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்லிபாபா வந்துள்ளார் என்றால் நாம் பாபாவுக்கு உதவியாளர்
ஆவோம். தூய்மையாகி, பாரதம் முழுவதையும் தூய்மையாக்குவோம். நாம் ஸ்ரீமத் படி தான் நடக்க வேண்டும்.
ஸ்ரீமத் சொல்கிறதுலிதந்தையை நினைவு செய்ய வேண்டும். யார் செய்வார்களோ, அவர்கள் பலன் அடைவார்கள்.
அனைவருமோ வந்து புருஷார்த்தம் செய்ய மாட்டார்கள். யார் கல்பத்திற்கு முன் புருஷார்த்தம் செய்திருக்
கின்றனரோ, அவர்கள் தான் செய்வார்கள். இப்போது திரும்பிச் செல்ல வேண்டும். அதனால் புருஷார்த்தம்
செய்து அவசியம் தூய்மை ஆக வேண்டும். நாம் மேலே மூலவதனத்தில் வசிப்பவர்கள். முதல்லிமுதலில்
சொர்க்கத்தில் வந்திருந்தோம். பிறகு ஏணிப்படியில் கீழே இறங்கியே வந்துள்ளோம். பாபா புரிய வைப்பதும்
பாரதவாசிகளுக்குத் தான். பாரதத்தில் தான் வருகிறார். வந்து எங்களை தூய்மையாக்குங்கள் என்று அவரை
நினைவு செய்வதும் பாரதத்தில் தான். சரீரத்தை தாரணை செய்து எங்களுக்கு சிரேஷ்ட கர்மம் கற்றுக்
கொடுங்கள். சரீரத்தின் பெயரும் பாடப்பட்டுள்ளது. இது பாக்கியசாலி ரதம். பாபாவும் சொல்கிறார், நான் சாதாரண
உடலில் பிரவேசமாகிறேன். இதற்கு முன்பும் கூடச் சொல்லியிருந்தேன்லிகுழந்தைகள் உங்களுக்கு நினைவு
வந்து விட்டதுலிநிச்சயமாக 5000 ஆண்டுகளுக்கு முன்பும் கூட பாபா இதையே சொல்லியிருக்கிறார். வேறு
யாரும் இந்த விஷயத்தைச் சொல்ல முடியாது. பாபா தான் சொல்கிறார், 5000 ஆண்டுகளுக்கு முன்பும் கூட
நான் இந்த சரீத்தில் பிரவேசமாகி உங்களுக்குப் புரிய வைத்திருந்தேன். இப்போது மீண்டும் குழந்தைகளாகிய
உங்களுக்குச் சொல்கிறேன்லிஆத்ம அபிமானி ஆகுங்கள். எப்படி நாடக நடிகர்களுக்குத் தெரிந்துள்ளது இல்லையாலி
நாம் எந்த ஆடையை அணிந்து கொண்டு என்னென்ன பாத்திரங்களை நடிக்கிறோம்? என்று. ஆனால்
அவர்களோ தேக அபிமானிகள். இது எல்லையற்ற விஷயம். ஆத்ம அபிமானி ஆக வேண்டும். நாம்
உண்மையில் ஆத்மாக்கள் தாம். இப்போது நமது பார்ட் முடிவடைகின்றது. பாபா நம் முன் அமர்ந்து
அனைத்தையும் நமக்குப் புரிய வைக்கிறார். இதை மறந்துவிடக் கூடாது. மாயா எவ்வளவு விக்னங்களை
ஏற்படுத்துகிறது! பாபா புரிய வைக்கிறார்லிகுழந்தைகளே, நீங்கள் எந்த ஒரு விகர்மமும் செய்யக் கூடாது.
மனதில் புயல்கள் அதிகம் வரலாம். தன்னைத் தான் சோதிக்க வேண்டும். நம்முடைய கர்மேந்திரியங்கள்
சஞ்சலமடையாமல் உள்ளனவா? நாம் காமத்தை வெல்ல முடியுமா? உங்களுக்கோ மிகவும் சுலபம். நாம்
ஆத்மா, ஒரு தந்தையின் குழந்தைகள். தந்தையிடம் தான் நினைவின் தொடர்பு வைக்க வேண்டும். கர்மேந்திரியங்
களில் சஞ்சலம் அடைவதும் கூட தேக அபிமானம் ஆகிறது இல்லையா? நீங்கள் யாரிடமும் பயப்படக்
கூடாது. பயமற்றவராக ஆக வேண்டும். எப்போதும் எங்கே சென்றாலும் சாட்சியாக இருந்து பார்க்க வேண்டும்.
நாமோ ஆத்மாக்கள். இந்த விளையாட்டை நீங்கள் முழுமையாக அறிந்து கொண்டு விட்டீர்கள். உயர்ந்தவரிலும்
உயர்ந்தவர் தந்தை. இது புத்தியில் வந்துள்ளது. அவர் பிந்தி (புள்ளி வடிவமானவர்) எனச் சொல்லப் படுகின்றார்.
நிராகாரி உலகத்தில் ஆத்மாக்களின் மரம் உள்ளது. விதையிலிருந்து மரம் வெளிவருகின்றது. பிறகு வரிசையாக
இலைகள் வருகின்றன. மேலிருந்து ஆத்மாக்கள் தரவரிசைப்படி வருகின்றன. ஆத்மா எப்படிப் பிரவேசமாகின்றது
என்பதை யாராலும் பார்க்க முடியாது. இப்போது பாபா புரிய வைக்கிறார், உங்களுடைய ஆத்மா தூய்மையற்றதாக
ஆகி விட்டுள்ளது. அதை தூய்மையாக்குங்கள். இவர் மூலமாக பாபா வந்து புரிய வைக்கிறார். கர்மேந்திரியங்கள்
மூலமாகத் தான் பேசுவார் இல்லையா? ஆத்மாவாகிய பிந்தி இவருக்குள் இல்லை என்றால் கர்மேந்திரியங்களால்
எதையும் செய்ய இயலாது. இவ்வளவு சிறிய புள்ளி எவ்வளவு சக்தி வாய்ந்ததாக உள்ளது! அதற்குள் முழு
ஞானமும் உள்ளது. பாபா ஞானக்கடலாக இருப்பதால் உங்களுக்கு அமர்ந்து புரிய வைக்கிறார். அவரிடம்
ஞானம் முழுவதும் உள்ளது. அவருடைய இந்த நடிப்பின் பாகமும் விதிக்கப் பட்டுள்ளது. ஆத்மாவாகிய
உங்களுக்குள்ளும் 84 பிறவிகளின் பாகம் உள்ளது. நீங்கள் சுகம்லிதுக்கத்தின் பாகத்தை நடிக்கிறீர்கள். துக்கத்தில்
அதிகமான கஷ்டத்தை அனுபவிக்கிறீர்கள். பாபா சொல்கிறார் லி நானோ புனர்ஜென்மத்தில் வருவதில்லை.
நீங்கள் 84 ஜென்மங்களை எடுக்கிறீர்கள். நான் எடுப்பதில்லை. நான் வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு சகஜ
யுக்தி சொல்கிறேன்லிஎன்னை நினைவு செய்வீர்களானால் தூய்மையாவீர்கள். அரைக்கல்பமாக நீங்கள் காமசிதையில்
அமர்ந்து தமோபிரதான் ஆகியிருக்கிறீர்கள். ஆத்மாக்களோடு தான் பாபா பேசுகிறார். ஆத்மாவின் உறுப்புகள்
முதலில் சிறியதாக இருக்கும். பிறகு பெரியதாக ஆகின்றன. ஆத்மாவோ பெரியதுலிசிறியதாக ஆவதில்லை.
ஆத்மா தான் சொல்கிறதுலிஹே பதீத பாவனா வாருங்கள் என்று. ஆத்மா தந்தையை அழைக்கின்றது. தந்தை
சொல்கிறார் லி நான் கல்பலிகல்பமாக வருகிறேன், தூய்மையற்றவர்களாகிய உங்களைப் தூய்மையாக்குவதற்காக.
இப்போது நீங்கள் அறிவீர்கள், ஆத்மா எப்படி வருகிறதுலிபோகிறது என்று. மனிதர்கள் அதிகம் தலையை
உடைத்துக் கொள்கிறார்கள் . ஆத்மா எப்படி வெளியேறுகிறது என்று பார்க்க விரும்புகிறார்கள். ஆனால் அது
(3/4)
13.07.2016
பற்றி யாருக்கும் தெரிவதில்லை. ஏனென்றால் அது மிகவும் சூட்சுமமானது. சிறிய ஆத்மாவுக்குள் எவ்வளவு
பாகம் அடங்கியுள்ளது! எப்படி விதைக்குள் முழு ஞானம் உள்ளது, அந்த விதையோ ஜடமாகும். ஆலமரத்தின்
மரம் உள்ளது, இதனுடைய விதை எவ்வளவு சிறியது! அதிலிருந்து மரம் எவ்வளவு பெரியதாக,
வெளிப்படுகின்றது! கல்கத்தாவில் உள்ள ஆலமரத்தை அநேகர் பார்த்திருக்கக் கூடும். அது மிகப் பெரிய மரம்.
இப்போது அதனுடைய அஸ்திவாரம் முழுவதும் அழுகிப்போய் விட்டது. மற்றப்படி மரம் நின்று கொண்டுள்ளது.
இதுவும் அது போல் தான். தேவதா தர்மத்தின் அஸ்திவாரம் இல்லை. மரத்திற்கும் இப்போது இற்றுப் போன
நிலை. இதையும் நீங்கள் அறிவீர்கள், அதனால் தான் அரசாங்கத்திற்கும் சொல்கிறீர்கள், நாங்கள் இவ்வளவு
காலத்திற்குள் உலகத்தைப் தூய்மையாக்கிக் காட்டுவோம். மனிதர்கள் இந்த விஷயங்களைப் புரிந்து கொள்ள
வில்லை. உங்களுக்கோ நிச்சயம் உள்ளது, நாம் இந்த பாரதத்தை உயர்ந்ததாக அவசியம் ஆக்குவோம்.
அப்போது தான் மிகவும் தாழ்ந்துள்ள இந்த உலகம் விநாசம் ஆகும். சாந்தி வேண்டும் என்று விரும்புகின்றனர்.
ஆத்மா தனது பாகத்தை நடித்துலிநடித்துக் களைத்துப் போய் விட்டது. அதனால் அழைக்கின்றனர்லிஹே சாந்தி
தேவா! ஆத்மா சாந்த சொரூபம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் இங்கே ஆத்மாக்கள்
கர்மேந்திரியங்களின் மூலம் கர்மமோ அவசியம் செய்தாக வேண்டும். சாந்தி கொடு என வேண்டுகின்றனர்.
சாந்திதாமம் வேறு, சுகதாமம் வேறு என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. சுகதாமத்தில் மிகக் கொஞ்சம்
மனிதர்கள் இருப்பார்கள். அது தூய்மையான உலகம் தான். அங்கே சாந்தியை யாரும் வேண்ட மாட்டார்கள்.
கர்மமோ அங்கேயும் செய்கின்றனர். ஆனால் அங்கே அசாந்தி இருக்காது. ஜீவன்முக்தி தாமம் மற்றும்
சாந்திதாமம் இரண்டும் வேறுலிவேறு. சத்யுகத்தில் ஜீவாத்மாக்களுக்கு சுகமும் இருக்கும் என்றால் சாந்தியும்
இருக்கும். சதா ஆரோக்கியமானவர்களாக, செல்வந்தர்களாக இருப்பார்கள்.
சொர்க்கம் எனச் சொல்லப்படுவது எது என்பதை இப்போது நீங்கள் அறிந்து கொண்டீர்கள். சொர்க்கம்
எது என்பதும் கூட உலகத்தில் யாருக்கும் தெரியவில்லை. இவர்கள் (லட்சுமிலிநாராயணர்) குழந்தைகள் இல்லையா?
இந்தக் குழந்தைகளுக்கும் கூட யார் சுகம் கொடுத்தார்? யாராவது சுகம் தருபவர் இருப்பார் இல்லையா?
இவர்களுடைய இராஜ்யம் மீண்டும் வரப் போகிறதா என்ன? சொர்க்கம் நிச்சயமாக மீண்டும் ரிப்பீட் ஆகும்.
சொர்க்கத்தில் இருக்கும் போது நரகம் மறுபடியும் ரிப்பீட் ஆகும் என்று சொல்ல மாட்டார்கள். இப்போது
சொல்கிறீர்கள், தூய்மையான, சுகம், சாந்தியின் புது உலகம் மீண்டும் ரிப்பீட் ஆகும் என்று. இதுவோ பழைய
உலகம், துக்க தாமம். இது இரும்பு யுகம் என்று சொல்லப் படுகின்றது. புது உலகமும் கூட இருந்தது
அல்லவா? அதை சொர்க்கம் எனச் சொல்கின்றனர். இந்த ஞானம் உங்கள் புத்தியில் பதிந்துள்ளது. நிச்சயமாக
நாம் மீண்டும் தேவிலிதேவதா ஆகிக் கொண்டிருக்கிறோம். உங்களுடைய நோக்கம்லிகுறிக்கோளே இது தான்.
நாம் மீண்டும் சொர்க்கத்தின் ராஜபதவியைப் பெறுகிறோம். எல்லையற்ற தந்தையிடமிருந்து ஆஸ்தியை அவசியம்
பெறுவோம். இதை நல்லபடியாக நினைவு செய்ய வேண்டும். நாம் ஆத்மாக்கள் அங்கே வசிக்கிறோம். பிறகு
நாம் நமது பாகத்தை நடிப்பதற்காக இங்கே வந்துள்ளோம். இப்போது 84 பிறவிகளை எப்படி எடுத்தோம் என்ற
நினைவு வந்துள்ளது. பாபா புரிய வைப்பதும் பிரம்மா முகவம்சாவளி பிராமணர்களாகிய உங்களுக்குத் தான்.
பிராமணர் ஆகாமல், பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தையாக ஆகாமல் சிவபாபாவிடம் ஆஸ்தி எப்படிப் பெறுவார்கள்?
பிரஜாபிதா பிரம்மாவோ புகழ் பெற்றவர் இல்லையா? பிரம்மாவின் மூலம் புது உலகத்தின் ஸ்தாபனை செய்கிறார்.
ஆக, புது உலக ராஜதானியும் கூட அவர்களுக்குக் கிடைத்திருக்கும். 5000 ஆண்டுகளுக்கு முன்பும் கூட
பிரம்மா மூலம் விஷ்ணுபுரியின் ஸ்தாபனை செய்திருந்தார். இப்போது மீண்டும் ரிப்பீட் ஆகும். அதற்காக
நீங்கள் ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறீர்கள். அநேகக் குழந்தைகள் கேட்கின்றனர் லி டிராமாவை பெரியதென
ஏற்றுக் கொள்வதா, அல்லது புருஷார்த்தத்தைப் பெரியதென ஏற்றுக் கொள்வதா? புரிய வைக்கப் படுகின்றது லி
புருஷார்த்தமோ அவசியம் செய்தே ஆக வேண்டும். புருஷார்த்தம் இல்லாமல் பலன் (ஆஸ்தி) எப்படிக்
கிடைக்கும்? முழுமையாகப் புருஷார்த்தம் செய்ய வேண்டும். சிலர் நன்றாகப் புருஷார்த்தம் செய்கின்றனர்
என்றால் புரிய வைக்கப்படுகின்றது லி டிராமா அனுசாரம் இவருடைய புருஷார்த்தம் நன்றாக நடைபெறுகின்றது.
பதவியும் நல்லதாகப் பெறுவார்கள. அவர்களுடைய புருஷார்த்தம் மிகத் தீவிரமாகச் செல்கின்றது. பிறகு
போகப் போக சிலருடையது குறைந்த பதவி ஆகி விடுகின்றது. பிராமணிகள் அறிவார்கள், பிராமணிகளிடம்
வருபவர்களும் அறிவார்கள். இன்னார் மிக நன்றாகச் சென்று கொண்டிருந்தார். தற்சமயம் வருவதில்லை.
சொல்கின்றனர், ஏன் எனது புத்தியில் பதிவதில்லை என்பது புரியவில்லை . பாபாவை என்னால் நினைவு
செய்யவே முடிவதில்லை. அவ்வளவு தான் என்னால் தொடர முடியவில்லை. பெரிய குறிக்கோளாக உள்ளது.
இப்படிலிஇப்படி எழுதி விடுகின்றனர். முக்கியமான விஷயமே நிர்விகாரி ஆவது தான். விகாரங்களை விடுவது
மிகவும் கஷ்டமாக உள்ளது. நீங்கள் அறிவீர்கள், டிராமா அனுசாரம் கல்பத்திற்கு முன்பு போல் இவர்களுக்கு
இத்தகைய நிலமைதான் இருந்து வந்துள்ளது. நல்லது.
(4/4)
13.07.2016
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும்
தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம் :
1) நாம் எல்லையற்ற விளையாட்டை சாட்சியாக இருந்து பார்க்க வேண்டும். யாரிடமும்
பயப்படக் கூடாது. பயமற்றவராக ஆவதற்கு நான் ஆத்மா என்ற பாடத்தை உறுதியாக்க
ஆக்க வேண்டும்.
2) தன்னைத் தான் சோதித்து தன்னைப் பரீட்சைக்கு உட்படுத்த வேண்டும்லிஎந்த ஒரு
கர்மேந்திரியமாவது சஞ்சலம் அடையாதிருக்கிறதா? காமவிகாரத்தின் மீது வெற்றி பெற்றோமா?
ஆத்ம அபிமானியாக எது வரை ஆகியிருக்கிறோம்?
வரதானம் : சுய நினைவில் (தான் யார் என்ற நினைவில் ) இருந்து தனது ஒவ்வொரு
கர்மத்தையும் நியமமாக (விதியாக) ஆக்கக் கூடிய அத்தாரிட்டி சொரூபம் ஆகுக !
எப்படி சாகாரத்தில் (பிரம்மா பாபா) சுயத்தின் ஸ்மிருதியில் இருப்பதன் மூலம் என்ன கர்மம் செய்தாரோ,
அதுவே பிராமணப் பரிவாரத்தின் நியமமாக ஆகி விட்டது. சுயத்தின் நஷாவில் இருப்பதன் காரணத்தால்
அத்தாரிட்டியோடு சொல்ல முடிந்ததுலிசாகார் மூலமாக ஏதேனும் தலைகீழான கர்மம் கூட நடைபெற்று விட்டால்
அதை (சிவபாபா) நேராக ஆக்கி விடுவார். சுயத்தின் சொரூபத்தின் ஸ்மிருதியில் இருப்பதன் மூலம் இந்த நஷா
உள்ளதுலிஎந்த ஒரு கர்மமும் தலைகீழானதாகவே ஆக முடியாது. குழந்தைகள் நீங்களும் கூட சுயத்தின்
ஸ்திதியில் நிலைத்திருப்பீர்களானால் என்ன சங்கல்பம் நடைபெறுகிறதோ, என்ன வார்த்தை பேசுவீர்களோ,
அல்லது கர்மம் செய்வீர்களோ, அதுவே நியமம் ஆகி விடும்.
சுலோகன் : தூய்மை என்ற தூணை உறுதியாக ஆக்குவீர்களானால்
இந்த தூண் லைட் ஹவுஸின் காரியத்தைச் செய்து கொண்டே இருக்கும்.
(1/4)
14
14.07.2016, காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! விருட்சபதி தந்தை குழந்தைகளாகிய உங்கள் மீது குரு திசையை
அமர வைத்துள்ளார், இப்போது நீங்கள் அழிவற்ற சுகத்தின் உலகத்திற்குச் சென்று
கொண்டிருக்கிறீர்கள்.
கேள்வி: அழிவற்ற குரு திசை (குரு பார்வை) எந்த குழந்தைகளுக்கு ஏற்படுகிறது, அவர்களின்
அடையாளங்கள் என்ன?
பதில்: வாழ்ந்தபடியே தேகத்தின் அனைத்து சம்மந்தங்களையும் தியாகம் செய்து தன்னை ஆத்மா என
நிச்சயப்படுத்தக்கூடிய நிச்சயம் நிறைந்த ஆன்மீக புத்தியுள்ள குழந்தைகளின் மீது குரு திசை அமர்கிறது.
அவர்களுடைய சுகத்தைப் பற்றித்தான் பாடல் உள்ளது லி அதீந்திரிய சுகத்தைப் பற்றி கோப கோபியரிடம்
கேளுங்கள். அவர்களுடைய குμ ஒருபோதும் மறைந்து (குறைந்து) போக முடியாது.
பாடல்: ஓம் நம: சிவாய. . .
ஓம் சாந்தி. குழந்தைகள் தந்தையின் மகிமையைக் கேட்டீர்கள். இன்றைய நாள் விருட்சபதி நாள் என்றே
சொல்லப்படுகிறது. அதனை இணைத்து பிருகஸ்பதி நாள் என சொல்லப்படுகிறது. இதுவே குருவாரம் என்றும்
சொல்லப்படுகிறது. வெறும் குருவாரம் அல்ல, ஆனால் சத்குருவாரம் ஆகும். வங்காளத்தில் மிகவும் மதிப்பு
தருகிறார்கள். மனித சிருஷ்டியின் விதை ரூபம் என பாடப்படுகிறார், ஆகையால் விருட்சபதி என சொல்கின்றனர்.
விதையாக இருக்கிறார், பதியாகவும் இருக்கிறார். விருட்சத்தின் (மரத்தின்) விதையை தந்தை என்றும் சொல்வார்கள்.
அதிலிருந்து மரம் தோன்றி வளர்கிறது. இது மனித சிருஷ்டி என்னும் மரம். இதன் விதை மேலே உள்ளது.
குழந்தைகளாகிய நம் மீது இப்போது அழிவற்ற விருட்சபதியின் திசை உள்ளது, ஏனென்றால் அழிவற்ற
சுயராஜ்யம் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்று நீங்கள் அறிவீர்கள். சத்யுகம் அழிவற்ற சுகதாமம் என்றே
சொல்லப்படுகிறது. கலியுகம் அழியும் துக்கதாமம் என சொல்லப்படுகிறது. இப்போது துக்கதாமம் வினாசம்
ஆகவுள்ளது. சுகதாமம் அழிவற்றது, அரைக் கல்பம் நடக்கிறது, அதனை அழிவற்ற விருட்சபதி ஸ்தாபனை
செய்துக் கொண்டிருக்கிறார். குழந்தைகள் சேவைக்காக ஞான விஷயங்களைக் குறித்துக் கொள்ள வேண்டும்
லி கண்காட்சிகளில் இன்ன இன்ன விஷயங்கள் புரிய வைக்க வேண்டும் என்று. ஏனென்றால் மனிதர்களுக்கு
ஒன்றும் தெரியாது. இது ஞானமாகும். இப்போது தந்தை இந்த ஞானத்தை சொல்வதே புதிய மற்றும் பழைய
உலகத்தின் இடையில், பிறகு இது மறைந்து விடும். தேவதைகளிடம் இந்த ஞானம் இருக்காது. ஒரு வேளை
இந்த சக்கரத்தின் ஞானம் இருந்தது என்றால் பிறகு இராஜ்யத்தின் மகிழ்ச்சியே இருக்காது. இப்போதும் கூட
உங்களுக்கு சிந்தனை செல்கிறது அல்லவா. இராஜ்யத்தை எடுத்தபின் நம்முடைய நிலை இப்படி ஆகி
விடுமா என்ன? ஆனால் இந்த நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. சக்கரம் சுழலத்தான் வேண்டும். உலகின்
வரலாறு புவியியல் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருக்கிறது. எப்படி நடக்கிறது என குழந்தைகளாகிய
நீங்கள் அறிவீர்கள். இது மனித சிருஷ்டியாகும். உங்களுடைய புத்தியில் மூலவதனத்தின் மரம் கூட உள்ளது.
அனைவரின் பிரிவுகளும் தனித்தனியாக இருக்கும். இந்த விஷயங்கள் யாருடைய புத்தியிலும் எப்போதும்
இருக்காது. எந்த சாஸ்திரத்திலும் இது எழுதப்படவில்லை. ஆத்மாக்களாகிய நாம் உண்மையில் சாந்திதாமத்தில்
வசிப்பவர்கள், அழிவற்றவர்கள். ஒருபோதும் அழிவதில்லை. நீர்க்குமிழி நீரிலிருந்து வெளிப்பட்டு பிறகு அதிலேயே
கரைந்து விடும் என அவர்கள் புரிந்து கொள்கின்றனர். உங்களுடைய புத்தியில் முழு ரகசியமும் உள்ளது.
ஆத்மா அழிவற்றது, அதில் முழுமையான நடிப்பும் பதிவாகியுள்ளது. இந்த சக்கரத்தின் ஞானம் எந்த சாஸ்திரங்
களிலும் இல்லை. அங்கங்கே ஸ்வஸ்திக் சின்னத்தையும் காட்டுகின்றனர். சக்கரத்தின் கோடுகளை பலவறாகப்
போடுகின்றனர், அதிலிருந்து பல தர்மங்கள் இருந்தன என்பது நிரூபணம் ஆகிறது. முக்கிய தர்மங்களும்
சாஸ்திரங்களும் 4 உள்ளன என தந்தை புரிய வைத்திருக்கிறார். சத்ய, திரேதா யுகங்களில் எந்த தர்மமும்
ஸ்தாபனை ஆவதில்லை, அங்கே எந்த தர்ம சாஸ்திரமும் இருப்பதில்லை. இவை அனைத்தும் துவாபரத்திலிருந்து
தொடங்குகின்றன. பிறகு பாருங்கள், எவ்வளவு வளர்ச்சி ஏற்படுகிறது. நல்லது, கீதை எப்போது சொல்லப்பட்டது?
தந்தை சொல்கிறார் லி நான் கல்பத்தில் சங்கம யுகத்தில்தான் வருகிறேன். அவர்கள் பிறகு கல்பம் என்ற
வார்த்தையை நீக்கிவிட்டு ஒவ்வொரு சங்கமயுகத்திலும் (யுகே யுகே) என எழுதிவிட்டனர். உண்மையில்
சங்கம யுகத்தில் வேறு யாரும் தர்ம ஸ்தாபனை செய்வதில்லை. திரேதாவின் கடைசியில், துவாபரத்தின்
ஆரம்பத்தின் சங்கமத்தில் இஸ்லாம் தர்மம் ஸ்தாபிக்கப்பட்டது என்பதல்ல. இல்லை, துவாபரத்தில் ஸ்தாபனை
ஆயிற்று என்பார்கள். இந்த சங்கமம் மகிழ்ச்சிக்கான சமயம், இதை கும்ப (மேளா) என்று கூறுகின்றனர்.
கும்பமேளா என்று சங்கமத்திற்குச் சொல்லப்படுகிறது. ஆத்மாக்களும் பரமாத்மாவும் சந்திக்கக் கூடிய சங்கமம்
என சொல்வோம். இந்த ஆன்மீக சந்திப்பு சங்கமத்தில்தான் ஏற்படுகிறது. அவர்கள் நீராலான கங்கையின்
பெயரை புகழடையச் செய்து விட்டனர். ஞானக் கடல், பதித பாவனரை தெரிவதே இல்லை. அவர் தூய்மையற்ற
(2/4)
14.07.2016
உலகை எப்படி தூய்மையக்கினார் என்பது எந்த சாஸ்திரங்களிலும் கிடையாது. இப்போது குழந்தைகளாகிய
உங்களுக்கு தந்தை சொல்கிறார் லி என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். தேகத்தின் அனைத்து தர்மங்களையும்
தியாகம் செய்யுங்கள். யாருக்குச் சொல்கிறார்? ஆத்மாக்களுக்கு. இது வாழ்ந்தபடியே இறப்பது என சொல்லப்
படுகிறது. மனிதர்கள் சரீரத்தை விடும்போது தேகத்தின் அனைத்து சம்மந்தங்களும் விடுபட்டு விடுகின்றன.
தந்தை சொல்கிறார் லி இருக்கக் கூடிய தேகத்தின் சம்பந்தங்கள் அனைத்தையும் விட்டு தன்னை ஆத்மா
என நிச்சயப்படுத்துங்கள். நிச்சய ஆன்மீக புத்தியுடையவராக ஆகுங்கள். எந்த அளவு அதிகமாக நினைவு
செய்கிறீர்களோ அந்த அளவு பிருஹஸ்பதி (குரு) திசை ஏற்படும். நாம் சிவபாபாவை எவ்வளவு நினைவு
செய்கிறோம் என சோதியுங்கள். நினைவின் மூலமே துரு நீங்கிச் செல்லும், மேலும் உங்களுக்கு குμ
இருக்கும். நான் ஆத்மா தந்தையை எவ்வளவு நினைவு செய்கிறேன் என நீங்கள் உணர முடியும். ஒருவேளை
குறைவாக நினைவு செய்தீர்கள் என்றால் துருவும் குறைவாகவே நீங்கும். குμயும் குறைவாக இருக்கும்.
பதவியும் குறைவானதாக அடைவீர்கள். ஆத்மாதான் சதோ, ரஜோ, தமோ ஆகிறது. கோப கோபியரின்
அதீந்திரிய சுகத்தைப் பற்றிய பாடல் இந்த சமயத்தினுடையதுதான் ஆகும். ஒரு தந்தையைத் தவிர வேறு
எந்த நினைவும் இருக்கலாகாது, அப்படி இருக்கும்போதுதான் குμயின் அளவு அதிகரிக்கும். நம் மீது
பிருஹஸ்பதியின் தசை (குருபார்வை) அல்லது சத்குருவின் தசை இருக்கிறது. பிறகு எப்போதாவது குμ
மறைந்து விட்டது என்றால் பிருஹஸ்பதியின் தசை மாறி ராகுவின் தசை அமர்ந்து விட்டது என அர்த்தம்.
சிலர் மிகவும் செல்வந்தர்களாக ஆகின்றனர், சிலர் கை மாற்று வியாபாரம் செய்யும்போது திவால் ஆகி
விடுகின்றனர். பாரதத்தில்தான் கிரஹணம் பிடிக்கும்போது தானம் கொடுத்தால் கிரஹணம் விடுபடும் என
சொல்கின்றனர். உங்களுடைய தேவி தேவதா தர்மம் கூட 16 கலைகளில் நிறைந்திருந்தது, அவர்களுக்கு
கிரஹணம் பிடித்துள்ளது. ராகுவின் தசை அமர்ந்து விடுகிறது. ஆகையால் தேவதைகளுக்கு முன்னால்
சென்று நீங்கள் அனைத்து குணங்களில் நிறைந்தவர். . . நாங்கள் பாவிகள், கபடர்கள் என பாடுகின்றனர்.
ராகுவின் கிரஹணம் பிடிக்கும்போது அனைவரும் கருப்பாகி விட்டனர் என நீங்கள் இப்போது புரிந்து
கொள்கிறீர்கள். சந்திரனுக்குப் பின்னால் கோடு விழுந்து விடுகிறது. தேவி தேவதைகளாகிய உங்களின்
படங்களும் உள்ளன என தந்தையும் புரிய வைக்கிறார். கீதைதான் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தின்
சாஸ்திரம் ஆகும். ஆனால் இவர்கள் தம்முடைய தர்மத்தை தெரிந்து கொள்ளவில்லை. மதத் தலைவர்களுடைய
மாநாடு நடத்துகின்றனர். நீங்கள் அங்கும் கூட புரிய வைக்க முடியும் லி இறைவன் எங்கும் நிறைந்தவர்
அல்ல. அவர் எல்லைக்கப்பாற்பட்ட தந்தை. வந்து குழந்தைகளுக்கு ஆஸ்தி கொடுக்கிறார். சாது சன்னியாசி
முதலானவர்களுக்கு ஆஸ்தி கிடைப்பதில்லை எனும்போது எப்படி ஒப்புக் கொள்வார்கள். குழந்தைகளாகிய
உங்களுக்குத்தான் ஆஸ்தி கிடைக்கிறது. ஈஸ்வரன் எங்கும் நிறைந்தவர் அல்ல என்பதுதான் நிரூபிக்க
வேண்டிய முக்கியமான வி'யம் ஆகும். சிவ ஜெயந்தி நடக்கிறது. சிவ ஜெயந்தி என்றாலும் சரி, ருத்ர
ஜெயந்தி என்றாலும் சரி லி ருத்ரன் இந்த ஞான யக்ஞத்தை படைக்கிறார். அவர் சிவன் ஆவார். வினாசத்தின்
ஜுவாலை மூண்டெழுந்த அதே கீதா ஞான யக்ஞமாகும். எப்படி நிராகார தந்தை இந்த ருத்ர ஞான
யக்ஞத்தை படைத்தார் என்று நடைமுறையில் நீங்கள் பார்க்கிறீர்கள். சாகார தந்தை (பிரம்மா பாபா) எதுவும்
செய்ய முடியாது. இது எல்லைக்கப்பாற்பட்ட யக்ஞமாகும், இதில் முழு பழைய உலகமும் ஸ்வாஹா (அர்ப்பணம்)
ஆக வேண்டியுள்ளது. மற்றவையனைத்தும் ஸ்தூல யக்ஞமாகும். எவ்வளவு இரவுக்கும் பகலுக்குமான
வித்தியாசம் உள்ளது. இது ருத்ர ஞான யக்ஞமாகும், வினாசமும் ஆகவேண்டியுள்ளது என தந்தை சொல்கிறார்.
நீங்கள் தேர்ச்சி அடையும்போது, முழுமையன யோகி, ஞானி ஆகிவிடும்போது, பிறகு உங்களுக்காக புதிய
உலகம், சொர்க்கம் தேவை. நரகம் கண்டிப்பாக வினாசம் ஆக வேண்டும். ராஜஸ்வ அஸ்வமேத என்னும்
வார்த்தையும் சரியாக உள்ளது. குதிரையை ஸ்வாஹா (அர்ப்பணம்) செய்கின்றனர். உண்மையில் இது
உங்களுடைய ரதமாகும். ஒரு தக்ஷபிரஜாபதியின் யக்ஞத்தையும் உருவாக்குகின்றனர், அதன் கதையும்
உள்ளது. நம்மை விருட்சபதியாகிய தந்தை படிப்பித்துக் கொண்டிருக்கிறார் என்று குழந்தைகளாகிய உங்களுக்கு
எவ்வளவு குμ இருக்க வேண்டும். நம் மீது இப்போது பிருஹஸ்பதியின் தசை உள்ளது, நம்முடைய நிலை
மிகவும் நன்றாக உள்ளது. பிறகு போகப் போக, பாபா நாங்கள் குழம்பி விட்டோம் என எழுதுகின்றனர்.
முதலில் நாங்கள் மிகவும் குμயாக இருந்தோம், ஆனால் இப்போது என்ன ஆயிற்று என தெரியவில்லை.
இங்கே வந்து தந்தையுடையவராக ஆவது என்பது பெரிய யாத்திரை ஆகும். அங்கே தீர்த்த யாத்திரையில்
செல்லும்போது எவ்வளவு செலவு செய்கின்றனர். இப்போது இங்கே தானம் செய்யக் கூடிய வி'யம்
எதுவுமில்லை. இதில் கொஞ்சம் கூட பணம் செலவு செய்யக்கூடாது. அது ஸ்தூலமான யாத்திரை, உங்களுடையது
ஆன்மீக யாத்திரை ஆகும். ஸ்தூல யாத்திரையினால் எந்த லாபமும் கிடையாது. பாடலிலும் உள்ளது
அல்லவா லி நாலா புறங்களிலும் சுற்றி அலைந்த போதும் பிறவி பிறவிகளாக பிரிந்திருந்தோம். எவ்வளவு
அளவற்ற யாத்திரைகள் செய்திருப்போம் என இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். எங்காவது ஓரிடத்திற்கு
மனிதர்கள் கண்டிப்பாக செல்கின்றனர். ஹரித்துவாரில் கங்கைக்கு கண்டிப்பாக செல்கின்றனர். பதித பாவனி
14.07.2016
(3/4)
(தூய்மையற்றவர்களை தூய்மையாக்குவது) கங்கை என புரிந்து கொள்கின்றனர் அல்லவா. இப்போது
உண்மையில் நீங்கள் உண்மையிலும் உண்மையான ஞான கங்கைகளாக இருக்கிறீர்கள். உங்களிடமும் கூட
பலரும் வந்து ஞான ஸ்நானம் செய்கின்றனர். பாபா புரிய வைத்திருக்கிறார் லி சத்குரு ஒருவரே ஆவார்.
அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல் ஒரு சத்குருவைத் தவிர வேறு எந்த குருவும் கிடையாது. நான்
உங்களை கல்பம் தோறும் சங்கம யுகத்தில் வந்து சத்கதி கொடுத்து பூஜாரியிலிருந்து பூஜைக்குரியவர்களாக
ஆக்குகிறேன் என தந்தை சொல்கிறார். பிறகு நீங்கள் பூஜாரிகளாகி துக்கம் மிக்கவர்களாக ஆகி விடுவீர்கள்.
இதுவும் கூட இப்போது தெரிந்துள்ளது. நம்முடைய ராஜ்ஜியம் அரை கல்பம் நடக்கும், பிறகு துவாபரத்தில்
தேவி தேவதைகளாகிய நாமே வாம மார்க்கத்தில் சென்று விடுவோம். ராவண ராஜ்ஜியம் தொடங்கும்
போதுதான் வாம மார்க்கம் தொடங்குகிறது. அதனுடைய அடையாளங்களும் உள்ளன. ஜகன்னாதரின்
கோவிலுக்குச் சென்றீர்கள் என்றால் உள்ளே கருப்பான மூர்த்தி இருக்கிறது, வெளியே தேவதைகளின் அழுக்கான
சிலைகள் உள்ளன. அந்த சமயம் தனக்கும் (பிரம்மாவுக்கும்) கூட இது என்ன என்பது புரியவில்லை.
விகாரம் மிக்க மனிதர்கள் விகாரம் மிக்க பார்வையில் பார்ப்பார்கள். ஆக, தேவதைகளும் விகாரிகளாக
இருந்தனர் என புரிந்து கொள்கின்றனர். தேவதைகள் வாம மார்க்கத்தில் சென்றனர் என எழுதப்பட்டுள்ளது.
உடையும் கூட தேவதைகளுடையதை கொடுத்துள்ளனர். இங்கும் கூட தில்வாடா கோவிலுக்குச் சென்றீர்கள்
என்றால் மேலே சொர்க்கம் காட்டப்பட்டுள்ளது. கீழே தபஸ்ஸில் அமர்ந்திருக்கின்றனர். இந்த அனைத்து
ரகசியங்கள் வேறு யாருக்கும் தெரியாது. பாபாவின் ரதம் அனுபவம் மிக்கவர் அல்லவா.
குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் லி ஆத்மாக்களும் பரமாத்மாவும் வெகு காலம்
பிரிந்திருந்தனர். . . முதலில் பிரிந்த நீங்களே பிறகு வந்து முதலில் சந்திக்கிறீர்கள். சத்யுகத்தின் முதல்
இளவரசர் ஸ்ரீகிருஷ்ணர். கிருஷ்ணரின் தந்தையும் இருப்பார் அல்லவா. கிருஷ்ணரின் தாய் தந்தையரை
அவ்வளவாகக் காட்டுவதில்லை. தலை மீது கூடையில் வைத்து நதியைக் கடந்து அழைத்துச் சென்றதை
மட்டும் காட்டுகின்றனர். ராஜ்ஜியம் முதலான எதையும் காட்டவில்லை. அவருடைய தந்தைக்கு மகிமை
எதுவும் இல்லையே, ஏன்? இந்த சமயம் கிருஷ்ணரின் ஆத்மா நல்ல விதமாக படிப்பை படித்தார் என
இப்போது நீங்கள் அறிகிறீர்கள். அதன் காரணமாக தாய் தந்தையை விடவும் உயர்ந்த பதவியை அடைந்தார்.
நாம் ஸ்ரீகிருஷ்ணரின் ராஜ்ஜியத்தில் இருந்தோம் என்று நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். சொர்க்கத்தில் இருந்தோம்
அல்லவா. பிறகு நாம் சந்திர வம்சத்தவர் ஆகினோம். இப்போது மீண்டும் சூரிய வம்சத்தவர் ஆவதற்காக
ஸ்ரீமத்படி நடந்து தூய்மையடைந்து தூய்மையான உலகத்தின் எஜமான் ஆகப் போகிறோம். அனைவருமே
தம்முடைய நிலையை பார்க்க முடியும். ஒருவேளை நாம் இந்த சமயத்தில் சரீரத்தை விட்டோம் என்றால்
எந்த கதியை அடைவோம்? ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள முடியும். எந்த அளவு தந்தையை நினைவு
செய்வோமோ அந்த அளவு விகர்மங்கள் வினாசமாகும். மனிதர்களுக்கு ஏதாவது ஆபத்து விளைந்தாலோ,
துக்கம் ஏற்பட்டாலோ அல்லது திவால் ஆகி விட்டாலோ சாதுக்களிடம் செல்கின்றனர். பிறகு மனிதர்கள் இவர்
பக்தர், ஏமாற்று வேலைகள் எதுவும் செய்ய மாட்டார் என புரிந்து கொள்கின்றனர். இப்படி இப்படியாகவே
இரண்டு லி நான்கு வருடங்களில் மிகப் பெரிய செல்வந்தராக ஆகி விடுவார். அவர்களுடைய மறைக்கப்பட்ட
பணம் நிறைய இருக்கும். அனைவரும் தம்முடைய புத்தியின் மூலம் புரிந்து கொள்ள முடியும்.
உங்களுக்குள்ளும் பலர் மிகவும் குறைவாக நினைவு செய்யக் கூடியவர்களாக இருக்கின்றனர். ஆகையால்
தனக்கு நன்மை செய்து கொள்ள வேண்டும் என்றால் தன்னிடம் நோட்டுப் புத்தகம் வைத்துக் கொள்ள
வேண்டும். சார்ட்டை குறித்துக் கொள்ளுங்கள். நாம் முழு நாளிலும் எவ்வளவு நேரம் நினைவில் இருந்தோம்?
மனிதர்கள் முழு வாழ்க்கையின் சரித்திரத்தைக் கூட எழுதுகின்றனர். நீங்கள் நினைவின் சார்ட்டை மட்டும்
எழுத வேண்டும். தன்னுடைய முன்னேற்றம்தான் இதில் உள்ளது. பாபாவை நினைவு செய்யாவிட்டால் உயர்
பதவி அடைய முடியாது. விகர்மங்கள் (பாவ கர்மங்கள்) அழியவே இல்லை என்றால் உயர் பதவி எப்படி
அடைவீர்கள்? பிறகு தண்டனை அடைய வேண்டியிருக்கும். தண்டனை அடையாவிட்டால் நல்ல பதவி
கிடைக்கும். தண்டனையை அனுபவித்து பிறகு கொஞ்சம் சிறிய பதவியை அடைவதால் என்ன பயன்?
தர்மராஜாவிடம் தண்டனையை பெறாமல், கௌரவத்தை இழக்காமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும்.
நீங்கள் பார்க்கிறீர்கள் லி சிவபாபா அமர்ந்தபடி இருக்கிறார், பிறகு தர்மராஜாவும் இருக்கிறார். உங்களுக்கு
அனைத்தையும் காட்சியில் காட்டுவார். நீ இதை இதை எல்லாம் செய்தாய், நினைவிருக்கிறதா? இப்போது
தண்டனையை அனுபவி. பிறகு அதே நேரத்தில் பிறவி பிறவிகளாக அனுபவித்த தண்டனைகளை
அனுபவிப்பார்கள். கடைசியில் ஏதோ ரொட்டித் துண்டு அளவு கிடைத்தது என்பதில் என்ன லாபம் உள்ளது?
தண்டனையை அனுபவிக்கக் கூடாது. தன்னுடைய நிலையை சோதிக்க வேண்டும் லி கணக்கு வழக்கு
பார்ப்பதைப் போல. சிலர் 6 மாத கணக்கு, சிலர் 12 மாத கணக்கு பார்க்கின்றனர். சிலரோ தினசரி கணக்கும்
கூட எடுக்கின்றனர். நீங்களும் கூட வியாபாரிகள் அல்லவா என தந்தை சொல்கிறார். அபூர்வமாக சில
வியாபாரிகள் தந்தையிடம் வியாபாரம் செய்கின்றனர். பணம் இல்லாவிட்டால், உடலும் மனமும் உள்ளதல்லவா.
14.07.2016
(4/4)
அப்படிப்பட்டவர்களை ராஃப் என்றும் சொல்கின்றனர். முதலீடு இல்லாமலே வியாபாரம் செய்கின்றனர் அல்லவா.
நீங்கள் உடல்லிமனம்லிபொருளைக் கொடுக்கிறீர்கள், பதிலாக 21 பிறவிகளுக்கு எவ்வளவு ஆஸ்தியை பெறுகிறீர்கள்.
பாபா நான் உங்களுடையவன். என்னுடைய ஆத்மா இந்த லட்சுமி நாராயணர் போல ஆகி விடக் கூடிய
யுக்தியை சொல்லுங்கள். நான் உங்களை எவ்வளவு வெண்மையாக (அழகாக) ஆக்குகிறேன் என பாபா
சொல்கிறார். ரூபத்தையே ஒரேயடியாக மாற்றி விடுகிறேன். அடுத்த பிறவியில் உங்களுக்கு முதல் தரமான
சரீரம் கிடைக்கும். நீங்கள் வைகுண்டத்திலும் கூட பார்க்கிறீர்கள். இந்த மம்மா பாபா பிறகு லட்சுமி நாராயணர்
ஆகப் போகின்றனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். லட்சியம், குறிக்கோளும் கூட காட்டுகிறார். இப்போது
யார் எவ்வளவு முயற்சி செய்வார்களோ. . . ஒருவேளை முயற்சியை முழுமையாக செய்யாவிட்டாலோ, வீண்
பேச்சு பேசித் திரிந்தாலோ தன்னுடைய பதவியைத்தான் கீழானதாக ஆக்கிக் கொள்வார்கள். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு
தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்
1. தனது நிலையை தானே சோதிக்க வேண்டும். தனது நன்மைக்காக தினசரி குறிப்பேட்டை
வைக்க (டைரி) வேண்டும். அதில் நினைவின் சார்ட்டை எழுத வேண்டும்.
2. எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிடம் உண்மையிலும் உண்மையான வியாபரம் செய்ய
வேண்டும். தனது உடல், மனம், பொருளை தந்தைக்கு அர்ப்பணித்து 21 பிறவிகளுக்கு
பலனை எடுக்க வேண்டும். நிச்சய புத்தியாகி தனக்கு நன்மை செய்ய வேண்டும்.
வரதானம் : சகயோகத்தின் சக்தியின் மூலம் சகயோகம் செய்யாதவரையும் சகயோகியாக
ஆக்கக் கூடிய தந்தைக்குச் சமமான பரோபகாரி ஆகுக.
விளக்கம்: சகயோகிகளிடம் சகயோகியாக ஆவதில் பெரிய வீரம் ஏதும் இல்லை, ஆனால் தந்தை
அபகாரம் செய்தவர்களுக்கு உபகாரம் செய்வது போல குழந்தைகளாகிய நீங்களும் தந்தையைப் போல ஆகுங்கள்.
ஒருவர் எவ்வளவுதான் சகயோகம் செய்யாதவராக இருப்பினும், நீங்கள் தன்னுடைய சகயோகத்தின் சக்தியின்
மூலம் சகயோகம் செய்யாதவரையும் சகயோகியாக ஆக்கி விடுங்கள், இந்த காரணத்தினால் இவர் முன்னேற
மாட்டார் என நினைக்கக் கூடாது. பலவீனமானவர்களை பலவீனர்கள் என விட்டு விடாதீர்கள், ஆனால்
அவர்களுக்கு பலத்தைக் கொடுத்து பலவானாக ஆக்குங்கள். இந்த வி'யத்தில் கவனம் கொடுத்தீர்கள்
என்றால் சேவையின் திட்டங்கள் என்ற ஆபரணங்களில் வைரங்கள் ஜெôலிக்கும் அதாவது சகஜமான வெளிப்பாடு
ஏற்படும்.
சுலோகன் : கோபத்தின் காரணம் சுயநலம் மற்றும் பொறாமை லி இதுவே சிடுசிடுப்பின்
வேர் ஆகும், முதலில் இதற்கு முடிவு கட்டுங்கள்.
(1/4)
15
15.07.2016 காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! நினைவு யாத்திரையில் ஒருபோதும் களைப்படையக் கூடாது,
தேக அபிமானம் என்ற புயல் களைப்படையச் செய்கிறது, ஆத்ம அபிமானியாகும் போது
களைப்பு தூரமாக விலகிப் போய் விடும்.
கேள்வி: எந்த சம்ஸ்காரம் 21 பிறவிகளுக்கான உயர்ந்த அதிர்ஷ்டத்தைக் கெடுக்கக் கூடியது?
பதில்: கோபித்துக் கொள்ளும் சம்ஸ்காரம் (பழக்கம்) ஆகும். தந்தையிடம் அல்லது படிப்பின் மீது
கோபப்பட்டு விட்டால் 21 பிறவிகளுக்கான அதிர்ஷ்டம் கெட்டு விடுகிறது. அதனால் தான் பாபா கூறுகின்றார்
லி இனிமையான குழந்தைகளே! தேக அபிமானத்திற்கு வசமாகி நான் இத்தனை பேருக்கு புரிய வைத்திருக்கிறேன்,
இவ்வளவு உதவி செய்திருக்கிறேன்! என்ற தலைகீழான போதை ஒருபோதும் ஏற்பட்டு விடக் கூடாது.
பாருங்கள், பாபா எவ்வளவு பெரிய அதிகாரமுடையவர் (அதாரிட்டி), இருப்பினும் எவ்வளவு அகங்காரமற்றவராக
இருக்கின்றார்! ஆகையால் தந்தையைப் பாருங்கள்.
பாட்டு: இரவு பயணிகளே களைப்படைந்து விடாதீர்கள் .......
ஓம்சாந்தி. இனிமையிலும் இனிமையான குழந்தைகளே! பாட்டு கேட்டீர்கள். மேலும் யார் யோகயுக்த்,
நினைவில் இணைந்திருக்கும் சேவாதாரி குழந்தைகளோ அவர்கள் உடனேயே இதன் பொருளைப் புரிந்து
கொள்வார்கள். நாம் இரவு பயணிகள் என்றால் பிராமணர்களின் இரவு இப்போது முடிவடைந்துவிட்டது. பக்தி
மார்க்கம் இரவு என்ற கூறப்படுகிறது. அரைக் கல்பத்திற்கான இரவு முடிவடைகிறது. எல்லைக்குட்பட்ட பகல்,
இரவும் இருக்கிறது. இது பிராமணர்களின் அரைக் கல்பத்திற்கான பகல் மற்றும் அரை கல்பத்திற்கான இரவு
ஏற்படுகிறது. தந்தை வரக் கூடிய இந்த நேரம் காரிருளாக இருக்கிறது. விடியல் ஏற்படக் கூடிய முதல் சாமம்
ஆகும், அதிகாலை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்போது தந்தை கூறுகின்றார் லி இனிமையிலும் இனிமையான
குழந்தைகளே! நினைவு யாத்திரையில் களைப்படைந்து விடாதீர்கள். உலகாய யாத்திரையில் ஏற்படுவது போன்று!
முன்பு நடந்து சென்றனர்! மிகவும் மெதுவாக, இடையிடையே தங்கி சென்றனர். நாம் இந்த இந்த இடங்களில்
தங்க வேண்டும் என்று அறிந்திருப்பர். முன்பு மிகுந்த சிரத்தையுடன் நடந்து சென்றனர், அதில் மிகுந்த
உழைப்பு இருக்கிறது. ஆனால் இப்போது இது மிகவும் எளிதாகும். இது எளிய நினைவு அல்லது யோகா
என்று கூறப்படுகிறது. தந்தையை மட்டும் நினைவு செய்ய வேண்டும், களைப்படைகிறீர்கள் என்றாலே தேக
அபிமானத்தில் இருக்கிறீர்கள் என்பதாகும். இதில் எந்த திறமையும் இல்லை, மாயையின் தடைகள் ஏற்படும்.
ஆனால் இதில் களைப்படைந்து விடக் கூடாது. களைப்படைவதன் மூலம் தேக அபிமானம் வந்து விடுகிறது.
குழந்தைகளே! சரீர நிர்வாகத்திற்காகக் காரியங்கள் செய்யுங்கள், அதற்கு விடுப்பு (சமயம் ஒதுக்கி)
கொடுத்திருக்கின்றார். 8 மணி நேரம் சரீர நிர்வாகத்திற்கு, 8 மணி நேரம் ஓய்வு, பாக்கி 8 மணி நேரம் இதற்கு
(நினைவிற்கு) கொடுங்கள் என்று தந்தை கூறுகின்றார். இப்போது முழு 8 மணி நேரமும் யாரும் கொடுப்பது
கிடையாது. கடைசியில் 8 மணி நேரம் வரை இருக்க முடியும். சார்ட் அதிகப்படுத்திக் கொண்டே இருங்கள்.
இங்கு வந்து அமர்கின்ற பொழுது நினைவு ஏற்படுத்தப்படுகிறது. இதைத் தான் நீங்கள் நிஷ்டை என்று
கூறுகிறீர்கள். பாபாவின் நினைவில் வந்து அமர்கிறீர்கள். இதற்காக இங்கு வரும் போது தான் நினைவில் அமர
வேண்டும் என்பது கிடையாது. 5 லி 10 நிமிடம் நினைவில் இருந்து விட்டு எழுந்திருக்க வேண்டும் என்று பலர்
நினைக்கின்றனர். ஆனால் தந்தை கூறுவது என்னவெனில் தொழில் செய்யுங்கள், எங்கு சென்று வந்தாலும்
நினைவில் இருங்கள். கங்கையில் குளிக்க செல்கின்றனர் எனில் ராம் ராம் என்று ஜெபிக்கின்றனர் அல்லவா!
இங்கு நீங்கள் எதையும் ஜெபிக்க வேண்டாம், தந்தையை நினைவு செய்தால் போதும். இவ்வாறு தந்தை
குழந்தைகளிடத்தில் பேசிக் கொண்டிருக்கின்றார். நினைவு யாத்திரையில் தான் உங்களுக்கு நன்மை
அடங்கியிருக்கிறது, இதில் களைப்படையக் கூடாது. இதில் அதிக புயல்கள் வரும், புயல் என்றால் மண்
போன்றவைகளினால் ஏற்படும் புயல் அல்ல. மாயையின் புயல் வருவதன் மூலம் நினைவு யாத்திரை
துண்டிக்கப்பட்டு விடுகிறது. பிறகு தேக அபிமானத்தில் வருவதன் மூலம் தொழில், குழந்தைகள் போன்ற
நினைவுகள் வந்து விடுகிறது. இந்த தொழில் போன்ற அனைத்தும் அழியப் போகிறது என்று தந்தை
கூறுகின்றார். உங்களது குழந்தை வாரிசாக ஆகவே முடியாது. அனைத்தும் அழிந்து விடும். இப்போது
எல்லையற்ற தந்தை வந்திருக்கின்றார். எல்லைக்குட்பட்ட ஆஸ்தி அழியப் போகிறது. இப்போது குழந்தை
வளரும், திருமணம் செய்வோம் பிறகு இது நடக்கும் என்றெல்லாம் செல்வந்தர்கள் நினைக்கின்றனர். அந்த
அளவிற்கு இப்போது நேரம் கிடையாது என்று தந்தை கூறுகின்றார். ஆகையால் உலகத்தின் மீதிருக்கும்
பற்றுதலை முழுமையாக நீக்கி விடுங்கள். இது சுடுகாடாகும். தொழில், குழந்தைகள் போன்ற சிந்தனையிலேயே
(2/4)
15.07.2016
இறந்தால் தன்னை நாசப்படுத்திக் கொள்கிறீர்கள். சிவபாபாவை நினைவு செய்தால் அதிக லாபம் ஏற்படும். தேக
அபிமானத்தில் வருவதன் மூலம் நாசம் ஏற்படுகிறது. ஆத்ம அபிமானி ஆகின்ற போது லாபம் ஏற்படும். எந்த
அளவிற்கு நினைவு செய்வீர்களோ அந்த அளவிற்கு எதிர்கால 21 பிறவிகளுக்கான ஆஸ்தி அடைவீர்கள்.
நினைவு செய்யவில்லையெனில் அதிக நஷ்டம் ஏற்பட்டு விடும். பிறகு அது கல்ப கல்பத்திற்காக என்றாகிவிடும்.
அந்த அளவிற்கு நஷ்டம் ஏற்படுத்தக் கூடிய விசயமாகும். நான் முழு ஆஸ்தியை எப்படி அடைவது? என்று
சிந்திக்க வேண்டும். செல்வத்திற்காகவும் அதிகப் பேராசை படக் கூடாது. எதிலும் அதிக பேராவல் கொள்ள
வேண்டாம். யாராவது திவால் ஆகின்றனர் எனில் மிக அதிகமாக கவலைப்படுவர். சிவபாபாவை முற்றிலும்
மறந்து விடுவர். ஞானத்திற்கு வந்த பின்பு தான் திவால் ஆனது, வியாதி வந்தது என்று குற்றம் கூறுவர்.
இவ்வாறு ஒருபோதும் நினைக்கக் கூடாது. வியாதி போன்றவைகள் வருகிறது எனில் அது கர்ம கணக்காகும்.
விகர்மங்கள் விநாசம் ஆகிறது எனில் நல்லது தான். தர்மராஜரின் தண்டனை அடைவதை விட வியாதி
நல்லது அல்லவா! கர்ம கணக்கை முடிக்க வேண்டும். இது மகா நோயாளி சரீரமாகும். எவ்வளவு பாதுகாக்க
வேண்டியிருக்கிறது. நடந்து சென்று கொண்டிருக்கும் போதே நின்று விடுகின்றனர். இதய துடிப்பு (ஹார்ட்
பெயில்) நின்று விடுகிறது. இப்படிப்பட்ட பழைய உலகை புத்தியினால் முற்றிலும் மறந்து விட வேண்டும்.
தந்தை புதிய வீடு கட்டிக் கொண்டிருக்கிறார் எனில் பழையதிலிருந்து உள்ளத்தை நீக்கி விட வேண்டும். பாபா,
விரைவில் கட்டடம் கட்டுங்கள் என்று குழந்தைகள் கூறுகின்றனர். பழைய கட்டடத்தில் அதிக தொந்தரவு
ஏற்படுகிறது. இந்த பழைய உலகம் மிகவும் அசுத்தமானது என்பதை நீங்களும் அறிவீர்கள். இது உங்களது
எல்லையற்ற சந்நியாசமாகும். அவர்கள் வீடு வாசலை சந்நியாசம் செய்கின்றனர். அது எல்லைக்குட்பட்ட
சந்நியாசம் என்று கூறப்படுகிறது. நீங்கள் விகாரங்களை சந்நியாசம் செய்கிறீர்கள். தேக சகிதமாக தேகத்தின்
உங்களது சம்மந்தகளைத் துண்டித்து என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். இந்த
கண்களினால் பார்க்கக் கூடிய உலகை மறந்து விடுங்கள். நாம் சொர்க்கத்தின் இராஜ்யத்திற்காக முயற்சி செய்து
கொண்டிருக்கிறோம் என்பதை உங்களது புத்தி அறிந்திருக்கிறது. ஞானம் என்ற மூன்றாவது கண்
கிடைத்திருக்கிறது. இவை அனைத்தும் சுடுகாடாக ஆகிவிடும், இதன் மீது அன்பு வைக்காதீர்கள். இன்றைய
நாட்களில் மனிதர்களிடத்தில் அதிக செல்வம் இருப்பதால் விகாரமும் மிக வேமாக ஆகிவிட்டது. காம விகாரம்
எவ்வளவு வேகமாக இருக்கிறது! காமம் இல்லாமல் இருக்கவே முடியாது. 4லி5 ஆண்டுகள் தூய்மையாக
இருந்து விட்டு பிறகு பாபா, இன்று இந்த பூதம் வந்து, முகத்தை கருப்பாக்கிக் கொண்டேன் என்று கடிதம்
எழுதுகின்றனர். எவ்வளவு ஏமாற்றம் அடைகின்றனர்! ஒரேயடியாக ஐந்தாவது மாடியிலிருந்து கீழே விழுந்து
விடுகின்றனர். முதலில் இருப்பது தேக அபிமானமாகும். மேலிருந்து கீழே விழும் போது கட்டை போல
துண்டு துண்டாகி விடும். எலும்பு முற்றிலும் உடைந்து விடும். பிறகு முயற்சி செய்வதற்கு நேரம் ஏற்படும்.
இது தான் அனைத்தையும் விட மிகப் பெரிய அடியாகும், ஆகையால் காமம் மிகப் பெரிய எதிரி என்று பாபா
கூறுகின்றார். விகாரத்தை தான் பதீதம் என்று கூறப்படுகிறது. பாபா, எங்களை பதீதத்திலிருந்து பாவனம்
ஆக்குங்கள் என்று கூறுகின்றனர். பாரதத்தில் தான் சம்பூர்ண நிர்விகாரிகள் இருந்தனர் அல்லவா! பாரதமே
விகாரமற்றதாக இருந்தது. இப்போது பாரதம் விகாரியாக இருக்கிறது. சம்பூர்ண நிர்விகாரிகள் என்று
சூரியவம்சத்தினர்களை கூறலாம். இராமச்சந்திரனின் இராஜ்யத்திலும் விகாரங்களுக்கான விசயம் இருக்காது.
ஆனால் கலைகள் குறைந்து விடுகிறது. 1250 ஆண்டுகள் குறைந்து விடும் போது அந்த உலகின் சக்தியும்
குறைந்து விடும் அல்லவா! அதனால் தான் அதை சதோ பிரதானம் என்றும் இதை சதோ என்றும் கூறப்படுகிறது.
நாம் மம்மா, பாபாவை பின்பற்றி சூரியவம்சி மகாராஜா, மகாராணியாக ஆவோம் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்,
இதில் கஷ்டம் அல்லது செலவிற்கான விசயமே கிடையாது. இதற்காக வாயில் எதுவும் பேசவும் வேண்டாம்.
நினைவு செய்தால் போதும், இது தான் எளிய யோகம் என்று கூறப்படுகிறது. இதற்கு மிகுந்த முயற்சி தேவை.
பாபாவிற்கு முன் அனைவரும் மகாரதி ஆவீர்கள். இதற்கு யோகா முழுமையாக இருக்க வேண்டும், அப்போது
தான் சிறிதாவது அம்பு பாயும். யோக பலம் அல்லவா! யோகா மிகவும் குறைவாக இருக்கிறது. நினைவு
யாத்திரையில் தான் அதிக தடைகளும் ஏற்படுகிறது. எல்லையற்ற தந்தை இனிமையிலும் இனிமையான
குழந்தைகளுக்கு அமர்ந்து புரிய வைக்கின்றார். தந்தையிடமோ அல்லது படிப்பின் மீதோ ஒருபோதும் கோபித்துக்
கொள்ளக் கூடாது. கோபித்துக் கொண்டால் 21 பிறவிகளுக்கான அதிர்ஷ்டத்திடம் கோபித்துக் கொள்கிறீர்கள்.
மிக நல்ல நல்ல குழந்தைகளும் கூட கோபித்துக் கொள்கின்றனர். தேக அபிமானத்திற்கான போதை அதிகரித்து
விடுகிறது. நான் இத்தனை பேருக்கு புரிய வைத்தேன். தேக அகங்காரம் வந்தவுடனேயே கீழே விழுந்து
விடுவர். இதில் அகங்காரம் வரவே கூடாது. சிவபாபாவிற்கு ஏதாவது அகங்காரம் இருக்கிறதா? எவ்வளவு
அகங்காரமற்றவராக இருக்கின்றார்! ஆனால் மிகப் பெரிய அதிகாரமுடையவராக இருக்கின்றார்! நான் சாதாரண
உடலில், சாதாரண வீட்டில் வருகிறேன் என்று கூறுகின்றார். செல்வந்தரின் வீட்டில் வருவது கிடையாது. ஆக
இப்போது குழந்தைகளை விழிப்படையச் செய்ய வேண்டும். பாபா மிக நல்ல யுக்திகளை கூறிக் கொண்டிருக்கின்றார்.
குழந்தைகளாகிய நீங்கள் தான் தாமதப்படுத்துகிறீர்கள். நாடகப்படி இன்னும் மனநிலையில் வேகம் ஏற்படவில்லை.
(3/4)
15.07.2016
நாளடைவில் வேகம் ஏற்பட்டு விடும். இத்தனை ஆண்டுகளுக்குள் சொர்க்கம் ஸ்தாபனை ஆகிவிடும் என்று
நாம் அரசாங்கத்திற்கு சவால் விடுகிறோம். இதை செய்தித்தாள்களில் படிக்கும் போது மனிதர்கள் வந்து
உங்களிடம் கேட்பார்கள். சிறிது ஆண்டுகளுக்குள் ஸ்தாபனை ஆகும் எனில் அவசியம் விநாசமும் ஏற்படும்.
பலர் வருவார்கள். இந்த சொத்து போன்றவைகள் சிறிது காலத்திற்காகவே. இந்த சொத்துக்களை நீங்கள் சொத்து
என்ற நினைப்பதே கிடையாது. இவைகள் சிறிது காலத்திற்குத் தான் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த
கட்டடம் போன்றவைகள் வசிப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது, ஏனெனில் மதுவனத்திற்கு பல குழந்தைகள்
புத்துணர்வு பெறுவதற்காக வருவார்கள். தலைமை நிலையம் மதுவனம் ஆகும். இன்று நீங்கள் என்ன
செய்கிறீர்கள்? நாளை என்ன செய்வீர்கள்? இங்கு தபஸ்யா செய்து கொண்டிருக்கிறீர்கள், பிறகு டெல்லி
பிருந்தாவனத்திற்கு சென்று இராஜ்யம் செய்வீர்கள். நமது நினைவுச் சின்னம் எப்படி இருக்கிறது! என்பதை
நல்ல முறையில் காண்பிக்க வேண்டும். எந்த காரியம் 5 ஆயிரம் ஆண்டிற்கு முன்பு செய்திருந்தோமோ அதை
இப்போது செய்து கொண்டிருக்கிறோம். முதன் முதலில் சிவபாபாவின் கோயில் கட்டுகிறோம். மற்றபடி தில்வாடா
கோயில் பிறகு தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. புத்திக்கு வேலை கொடுக்க வேண்டும். தில்வாடா கோயிலின்
கணக்கு எடுக்க வேண்டுமென்றாலும் எடுத்து விட முடியும். முழுவதும் நமது நினைவுச் சின்னமாகும். இது
ஸ்தாபனைக்கான நினைவுச் சின்னம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்கு மிகுந்த குμ இருக்க வேண்டும். சேவைகள்
அதிகரிக்கச் செய்வதற்கான யுக்திகளை உருவாக்க வேண்டும். இராமர் ஆண்டால் என்ன!, இராவணன் ஆண்டால்
என்ன ......... அதற்கு பெரிய குடும்பம் இருக்கிறது. இராவணனுக்கு எவ்வளவு பெரிய குடும்பம் இருக்கிறது
பாருங்கள்! இராமருக்கு மிகவும் சிறிய குடும்பமாகும். சரியாகத் தான் புகழ் பாடப்பட்டிருக்கிறது. ஆனால்
யாரும் புரிந்து கொள்வது கிடையாது. தந்தையே அமர்ந்து புரிய வைக்கின்றார் என்றாலும் கூட நம்பிக்கை
ஏற்படுவது கிடையாது. சரீர நிர்வாகத்திற்காக நீங்கள் அவசியம் காரியங்களும் செய்ய வேண்டும். யார் சேவாதாரி
பாண்டவ குழந்தைகளோ அவர்கள் அரசாங்கத்திடமிருந்து உதவியும் பெற்றுக் கொள்ளலாம். அவர்களை
முழுமையாக நாம் வளர்க்க வேண்டியிருக்கும். குழந்தைகளின் மனநிலை அந்த அளவிற்கு இருக்க வேண்டும்.
பாபாவின் நினைவில் இந்த உலகின் அனைத்தையும் மறந்து விட வேண்டும். நினைவு யாத்திரையில் யார்
பக்காவாக மூழ்கியிருக்கிறார்களோ அவர்களது மனநிலையும் மிக உறுதியானதாக இருக்கும். சிவபாபாவின்
நினைவில் நீங்கள் சரீரம் விடுவது போன்று! சந்நியாசிகள் பிரம்மத்தின் நினைவில் சரீரத்தை விடுகின்றனர்
எனில் வாயுமண்டலம் முற்றிலும் அமைதியாக ஆகிவிடுகிறது. பாபாவிற்கு அனுபவம் இருக்கிறது. மனிதர்கள்
இறக்கின்ற போது வீட்டில் அமைதி நிலவுகிறது அல்லவா! இங்கும் அப்படியே இருக்கிறது. கடைசியில்
அனைத்தும் மறந்து போய் விடுவீர்கள். இப்போது நாம் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். தேக
அபிமானம் நீங்கிக் கொண்டே செல்லும். கடைசியில் குμயுடன் சரீரம் விட வேண்டும், மலர்ந்த முகத்துடன்!
அவ்வளவு தான்! நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம், வெற்றி மாலையில் வருவதற்கு தகுதியானவர்களாக
ஆகின்ற போது தான் அப்படிப்பட்ட மனநிலை ஏற்படும். உங்களிடம் அமைதிக்கான சக்தி இருக்கிறது. யார்
வந்தாலும் இங்கு அமைதி நிலவுகிறது என்று கூறுகின்றனர். இது தான் உண்மையான அமைதியாகும். ஆத்மா
சரீரத்திலிருந்து விடுபட்டு விடுகிறது. நான் ஆத்மா, சாந்த சொரூபமானவன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நாம்
நமது சுயதர்மத்தில் அமர்ந்து விடுகிறோம். காரியங்கள் செய்யாமல் எந்த மனிதனும் இருந்து விட முடியாது.
அவர்கள் ஹடயோகா மூலம் எதைத் தான் செய்யாமல் இருக்கின்றனர்! நமது சுயதர்மமே அமைதி தான்
என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொண்டீர்கள். நாம் நடிப்பதற்காக இங்கு வந்திருக்கிறோம். இப்போது
வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். என்னை நினைவு செய்யுங்கள் மற்றும் வீட்டையும் நினைவு செய்யுங்கள்
என்று தந்தை கூறுகின்றார். தந்தையை நினைவு செய்தால் ஆஸ்தி கிடைக்கும். என்னையும் வீட்டில் நினைவு
செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். இங்கு நான் தற்காலிகமாக வந்திருக்கிறேன். உங்களது புத்தி பாபாவின்
நினைவின் மூலம் சாந்திதாமத்தில் நிலைக்க செய்ய வேண்டும். வீட்டின் ஆஸ்தியையும் அடைய வேண்டும்
அல்லவா! அது ஆத்மாக்களின் வீடாகும். இது ஜீவாத்மாக்களின் வீடாகும். தனது வீட்டையும் மறந்து விடாதீர்கள்.
தந்தையையும் மறந்து விடாதீர்கள். தந்தையை நினைவு செய்தால் தான் தூய்மையாகி வீட்டிற்குச் சென்று
விடுவீர்கள். ஞானத்தை தாரணை செய்வதால் புது உலகில் இராஜ்யம் செய்ய வருவீர்கள். எவ்வளவு முடியுமோ
மற்றவர்களுக்கு வழி கூறிக் கொண்டே செல்லுங்கள். எப்போதும் தந்தையைப் பாருங்கள். தந்தை என்ன
செய்தார் என்பது உங்களுக்குத் தெரியும். அனைத்தையும் தாய்மார்களிடம் கொடுத்து விட்டார். அனைத்தையும்
தாய்மார்களின் சேவையில் ஈடுபடுத்து என்று அவர் தான் கட்டளையிட்டார். ஒருவரைப் பார்த்து மற்றொருவர்
பின்பற்றினார். சுவாஹா (அர்ப்பணம்) ஆகிவிட்டனர். ஆனால் பிறகு நிலைத்திருக்கவும் வேண்டும் அல்லவா!
நாடகப்படி பட்டியும் நடக்க வேண்டும் என்று இருந்திருக்கிறது. பாகிஸ்தான் இந்துஸ்தானாக மாறியது. உங்களது
பட்டி முதலில் பாகிஸ்தானில் ஆரம்பமானது. நீங்கள் நதியை கடந்தீர்கள், சாஸ்திரங்களில் என்ன என்ன
விசயங்களை எழுதி விட்டனர். நடைமுறையில் இப்போது நீங்கள் கேட்கிறீர்கள் அல்லவா! பிறகு கல்பத்திற்கு
(4/4)
15.07.2016
பின் நீங்களே கேட்பீர்கள். இப்போது தந்தை கூறுகின்றார் லி தீயவைகளைக் கேட்காதீர்கள், தொழில்
போன்றவைகளைச் செய்யுங்கள், ஆனால் தீயவைகளைக் கேட்காதீர்கள். ஒவ்வொரு விசயத்திலும் ஸ்ரீமத்
பெறுங்கள் என்று தந்தை கூறுகின்றார். பாபா, இந்த சூழ்நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்? பாபா
உடனேயே கூறிவிடுவார். ஏதாவது விசயம் நீங்கள் கேட்க வேண்டுமென்றால் பாபாவிடம் வாருங்கள். நீங்கள்
ஏன் பயப்படுகிறீர்கள்? ஒவ்வொரு அடியிலும் கேட்க வேண்டும். ஸ்ரீமத் படி நடக்கும் போது ஒவ்வொரு
அடியிலும் பல மடங்கு வருமானம் இருக்கிறது. நீங்கள் கடக்கும் ஒவ்வொரு நொடியிலும் பல மடங்கு
வருமானம் இருக்கிறது. ஆக எவ்வளவு வருமானம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது! நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய்
தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீக
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) வெற்றி மாலையில் வருவதற்காக இந்த சரீரத்திலிருந்து விடுபட்டு இருப்பதற்கான
முழு முயற்சி செய்ய வேண்டும். தேக அபிமானத்தை விட்டுக் கொண்டே செல்ல
வேண்டும். இந்த உலகை புத்தியினால் மறக்க வேண்டும்.
2) பணத்தின் பேராசையில் செல்லக் கூடாது. தந்தையின் நினைவு தவிர வேறு எந்த
சிந்தனையும் இருக்கக் கூடாது. ஒருபோதும் தந்தையிடம் அல்லது படிப்பின் மீது
கோபித்துக் கொள்ளக் கூடாது.
வரதானம்: மன்மனாபவ என்ற ஸ்திதியின் மூலம் மன உணர்வுகளை அறிந்து கொள்ளக் கூடிய
வெற்றி சொரூபம் ஆகுக.
எந்த குழந்தைகள் மன்மனாபவ என்ற ஸ்திதியில் நிலைத்திருப்பார்களோ அவர்களால் மற்றவர்களது மன
உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும். வார்த்தைகள் எப்படி வேண்டுமென்றாலும் இருக்கட்டும், ஆனால்
அவர்களது உணர்வுகள் என்ன? என்பதை அறியும் பயிற்சி செய்து கொண்டே செல்லுங்கள். ஒவ்வொருவரின்
மன உணர்வுகளைப் புரிந்து கொள்வதன் மூலம் அவர்களது விருப்பம் அல்லது எந்த பலன் பெற
ஆசைப்படுகிறார்களோ அதை நிறைவேற்ற முடியும். இதன் மூலம் அவர்கள் அழிவற்ற முயற்சியாளர்களாக
ஆகிவிடுவார்கள். பிறகு குறுகிய காலத்தில் அதிக வெற்றி என்பது தென்படும். மேலும் நீங்கள் முயற்சியாளர்
சொரூபத்திற்கு பதிலாக வெற்றி சொரூபமாக ஆகிவிடுவீர்கள்.
சுலோகன்: தூங்கும் போது அனைத்தையும் தந்தையிடம் அர்ப்பணித்து விட்டு (புத்தி) காலியாகி
விட்டால் வீணான அல்லது விகார கனவுகள் வராது.
(1/4)
16
16.07.2016 காலை வகுப்பு ஓம்சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளேலி யோகபலத்தால் தான் ஆத்மாவின் கறை நீங்கும், ஆகையால்
யோகத்தில் ஒரு போதும் தவறு செய்யக் கூடாது.
கேள்வி:லி பாபா குழந்தைகளுக்கு எல்லையற்ற ஆஸ்தியை கொடுப்பதற்கு என்ன யுக்தி கூறியுள்ளார்,
அதில் மாயா நாலா புறமும் தடைகளைப் போடுகின்றது?
பதில்:லி நீங்கள் பிரம்மா குமார், குமாரிகள் ஒரு பாபாவின் குழந்தைகள் தங்களுக்குள் சகோதரன்லிசகோதரி,
உங்களுக்குள் ஒருபோதும் தீய பார்வை இருக்க முடியா என்று பாபா யுக்தி கூறி இருக்கின்றார். சகோதரன்,
சகோதரி ஒருபோதும் விகாரத்தில் போக முடியாது, நீங்கள் சிவபாபாவின் வழிப்படி நடந்து எல்லையற்ற
ஆஸ்தியை அடைய வேண்டும். ஆனால் மாயா குறைந்தது இல்லை, நாலா விதத்திலும் தடைகளை
போட்டுவிடுகின்றது. நாம் சகோதரன்லிசகோதரிகள், ஒரு தந்தையிடம் இருந்து ஆஸ்தியை அடைகின்றோம்,
இதை மறந்து விடுகின்றோம்.
பாட்டு:லி உங்களை அடைந்து நாங்கள்.
ஓம்சாந்தி. இந்த பாட்டின் ஒரு வார்த்தை போதும். எல்லையற்ற தந்தையிடம் இருந்து எல்லையற்ற
ஆஸ்தி கிடைக்கின்றது என்று குழந்தைகள் அறிந்துள்ளீர்கள். மேலும் கல்பலிகல்பம் கிடைக்கின்றது. எல்லையற்ற
இந்த ஆஸ்தி பாரதத்திற்கு மட்டும் தான் கிடைக்கின்றது என்பதையும் நீங்கள் குழந்தைகள் தெரிந்து கொண்டீர்கள்.
இப்பொழுது மட்டும் இல்லை, மீண்டும் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. பார்க்கின்றீர்கள்லி இப்பொழுது
சொர்கத்தின் ஆஸ்தி இல்லை என்பதைப் பார்க்கின்றீர்கள், இராவணன் மூலமாக நரகத்தின் சாபம் கிடைத்துக்
கொண்டு இருக்கின்றது. சாபத்தால் மனிதன் துக்கம் அடைகின்றார்கள். வரம் என்றால் ஆஸ்தியால் சுகம்
கிடைக்கின்றது. எல்லையற்ற நிராகார தந்தை பாபா, எல்லையற்ற சாகார தந்தை பிரஜா பிதா பிரம்மாவைத்
தவிர வேறு யாரும் இல்லை என்று இப்பொழுது பிராமண குழந்தைகள் அறிந்துள்ளீர்கள். காந்தியை பாபு
என்று கூறுகின்றார்கள். ஆனால் சட்டப்படி மனித சிருஷ்டிக்கு அவர் தந்தை ஆக முடியாது. முழு உலகத்திற்கும்
தந்தை சிவன். நாம் சிவபாபாவின் குழந்தைகள் ஆகியுள்ளோம் என்பதை இப்பொழுது நீங்கள் குழந்தைகள்
அறிந்துள்ளீர்கள். சிவபாபா நமக்கு ஆஸ்தியைக் கொடுப்பதற்காக நம்மை தன்னுடையவர் ஆக ஆக்கியுள்ளார்.
மதுபன் வந்துள்ளீர் எதற்காக? சிவபாபாவை சந்திப்பதற்காக, ஆனால் அவர் நிராகார். சிவபாபா என்று மட்டும்
சொன்னால் புரிந்து கொள்ள முடியாது, அதனால் தான் பாப்தாதா என்று சொல்கின்றோம். சிவபாபா மேலும்
பிரம்மா தாதா. தாதா பெயர் தனி, பாபா என்ற பெயர் தனி. அவர் நிராகாரர் அனைவருக்கும் தந்தையாக
உள்ளார். அனைவருக்கும் தாதாவாகவும் உள்ளார். அனைத்துக் குழந்தைகளுக்கும் அவசியம் ஆஸ்தி
கிடைக்கின்றது. எல்லையற்ற தந்தையிடம் இருந்து ஆஸ்தி கிடைக்கின்றது. தந்தை துக்கத்தை நீக்கி, சுகத்தைக்
கொடுக்கக் கூடியவர். சத்தியயுகத்தில் எந்த மனிதரும் துக்கத்தில் இருக்க முடியாது. பெயரே சொர்க்கம், அந்த
சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யக் கூடியவர் கடவுள் தந்தை. பாரதம் மிகவும் பழமையானது என்றால்,
முற்றிலும் புதியதாக இருந்தது. இப்பொழுது முற்றிலும் பழையதாகிவிட்டது. சத்தியயுகம், கலியுகம் என்று
பாரதத்தில் தான் சொல்கின்றார்கள். பாரதம் தான் சொர்க்கமாக இருந்தது. இங்கே இலட்சுமிலிநாராயணன் ஆட்சி
செய்தார். இது உங்கள் புத்தியில் உள்ளது. இப்பொழுது நீங்கள் இலட்சுமிலிநாராயணன் கோவிலுக்குச் சென்றீர்கள்,
என்றால் உடனே உங்கள் புத்தியில் வரும் இவர்கள் இந்த ஆஸ்தியை எப்படி அடைந்தார்கள்? இவர்கள்
பூஜிக்கத் தகுதியான நிலையை எப்படி அடைந்தார்கள்? எப்பொழுது இராஜ்ஜியம் செய்தார்கள்? யார் மூலமாக
இராஜ்ஜியம் அடைந்தார்கள்? இவை அனைத்தும் உங்கள் புத்தியில் வரும். இதற்கு முன்னால்
இலட்சுமிலிநாராயணன் கோவிலுக்கு போனால் மாலை உருட்டுவீர்கள். அவர்களின் அறிமுகம் ஒன்றுமே தெரியாது.
இப்பொழுது கூட உங்கள் புத்தியில் வரிசைக்கிரமமாகத் தான் உள்ளது. இப்பொழுது நீங்கள் இலட்சுமிலிநாராயணன்
கோவிலுக்குப் போய் நின்றீர்கள், ஆனால் புன்சிரிப்பு வரும். புத்தியில் இவர்கள் எப்படி பலன் அடைந்தார்கள்
என்பதை அறிந்துவிட்டீர்கள் சங்கமயுகத்தில் தான் அடைந்தார்கள், ஏனென்றால், சங்கமயுகத்தில் தான் பழைய
உலகம் மாறுகின்றது. சங்கமயுகத்தில் தான் தந்தை வந்து இராஜயோகம் கற்றுக் கொடுகின்றார். அநேக
ஜென்மத்தின் கடைசி ஜென்மத்தின் கடைசியில் தான் பிரம்மா ஆகின்றார். பிரம்மா மூலமாகத் தான் விஷ்ணுபுரி
ஸ்தாபனை ஆகின்றது. இந்த லெட்சுமிலி நாராயணன் தான் முன் ஜென்மத்தில் நிச்சயம் பிரம்மா, சரஸ்வதியாக
இருந்தார்கள். பிரம்மா கூட பிராமணர், பிராமணிகள் இருந்திருப்பார்கள். சத்தியயுகத்தில் லட்சுமிலிநாராயணன்
இராஜ்ஜியம் இருந்தது அல்லவா, அப்பொழுது அவசியம் பிரஜாபிதா இருந்திருப்பாரல்லவா. நாம் முயற்சி
செய்கின்றோம் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள், கல்பத்திற்கு முன்னால் யாரெல்லாம் முயற்சி செய்தார்கள்
என்பதை நாம் சாட்சியாகி பார்க்கின்றோம். ஒன்று இராஜா குடும்பம், இன்னொன்று பிரஜா குடும்பம். அதிலும்
(2/4)
16.07.2016
சிலர் பணக்காரர்களாக இருப்பார்கள், சிலர் குறைவாக இருப்பார்கள். இராஜாக்களில் கூட சிலர் பணக்கார
இராஜ்ஜாக்களாக இருப்பார்கள், சிலர் குறைவான பணக்காரர்களாக இருப்பார்கள். நீங்கள் லெட்சுமிலிநாராயணன்
கோவிலில் யாருக்கு வேண்டுமானாலும் புரியவைக்கலாம் அவர்கள் எப்படி இராஜ்ஜியம் அடைந்தார்கள் என்று.
இப்பொழுது அவர்கள் மீண்டும் இராஜ்ஜிய பாக்கியத்தை அடைந்து கொண்டிருக்கின்றார்கள், இராஜதானி
ஸ்தாபனை ஆகிக் கொண்டு இருக்கின்றது. எவ்வளவு எளிதாக உள்ளது, அம்பா யார்லி இதைக் கூட அறிவதில்லை.
இவர்தான் ஜகத்அம்பா என்று நீங்கள் சொல்ல முடியும். கல்பத்திற்கு முன்னால் கூட ஜகத் அம்பாலிஜகத்பிதா
இருந்தார்கள். அவர்களின் குழந்தைகள் நாமாக இருந்தோம். சங்கமயுகத்தில் தான் பாபா ராஜயோகம் கற்றுக்
கொடுக்கின்றார். ஜகத்அம்பாவின் குழந்தைகள் அநேக பேர் உள்ளார்கள். ஆனால் அனைவரையும் உட்கார
வைக்க முடியாது. இப்பொழுது உங்களுக்கு மூன்றாவது கண் கிடைத்துள்ளது. பாபா ஞானக்கடலாக உள்ளார்
என்றால் அவசியம் குழந்தைகளுக்கு ஞானம்தானே கொடுப்பார். அவரை மனிதன் என்றோ, தேவதை என்றோ
சொல்ல முடியாது. அவரை பரமாத்மா என்று தான் சொல்ல முடியும். நீங்கள் எந்த கோவிலுக்கு போனாலும்
அவர்களின் வாழ்க்கை வரலாறு சொல்ல முடியும். ராமருக்காக கூட நீங்கள் சொல்ல முடியும். சந்திரவம்ச குலம்
இப்பொழுது இஸதாபனை ஆகி கொண்டு இருக்கின்றது. பிரம்மா மூலமாக பிராமணர்களின் தர்மம் கூட
ஸ்தாபனை ஆகின்றது. பிரம்மாவின் பெயர் எவ்வளவு புகழ் பெற்றது. பிரம்மா மூலமாக பாபா பிராமணர்களைப்
படைக்கின்றார். நீங்கள் பிரம்மாகுமார்லிபிரம்மாகுமாரி ஆனதால், நாம் அனைவரும் ஒரு தந்தையின் குழந்தைகள்
சகோதரன்லிசகோதரிகள் என்று தெரிந்து கொண்டீர்கள். பிறகு நாம் தீய பார்வையில் பார்க்க முடியாது.
சகோதரன்லிசகோதரி விகாரத்தில் போக முடியாது. தந்தை தான் இந்த யுக்தியை உருவாக்கினார். டிராமா
அனுசாரமாக நீங்கள் கூட பிரம்மாகுமார், நாம் கூட பிரம்மாகுமாரி ஆக உள்ளோம். உண்மையில் முழு
உலகமே பி.கே தான். ஆனால் இதை அறிவதில்லை. நாம் சிவபாபாவின் வழியில் சென்று எல்லையற்ற ஆஸ்தி
அடைகின்றோம். மாயா கூட குறைந்தது இல்லை. நாலா புறமும் தடைகள் போடுகின்றது. நாம் சகோதரன்லிசகோதரி,
ஒரு தந்தையின் குழந்தைகள் என்பதை மறந்துவிடுகின்றோம். சத்தியயுகத்தில் ஒரே தர்மம் தான் இருந்தது
என்பதை நீங்கள் நல்லவிதமாகப் புரிந்து கொண்டீர்கள். மற்ற அனைத்து தர்மங்களும் அழிந்துவிடும். இது
ஒன்றும் புதிய விஷயமில்லை என்பதை குழந்தைகள் நீங்கள் அறிந்து கொண்டீர்கள். ஒவ்வொரு 5 ஆயிரம்
வருடத்திற்குப் பிறகு இந்த சக்கரம் இப்படியே சுற்றுகின்றது. நாள்,தேதி கூட எழுதப்பட்டுள்ளது. நாம்
சிவபாபாவிடமிருந்து இந்த யுக்தியில் ஆஸ்தி அடைகின்றோம் என்பது உங்கள் புத்தியில் இருக்க வேண்டும்.
லட்சியம் கிடைத்துவிட்டது அல்லவா, பாபாவை நினைவு செய்து பாபாவிடமிருந்து ஆஸ்தியை அடைய
வேண்டும். நினைவு என்றால் யோக பலத்தினால் தான் பாவம் நீங்கும். இதில் எந்த தவறும் செய்யக் கூடாது,
இதற்காகா தான் ஞான முரளி கிடைக்கின்றது. நிச்சய புத்தி உறுதியாக இருந்தால் எங்கு வேண்டுமானாலும்
போகலாம் முரளி கிடைக்கவில்லை என்றாலும் கூட புத்தியில் நாம் பாபாவின் குழந்தைகள் ஆகிவிட்டோம்
என்பது உள்ளது அல்லவா ? உங்களுடைய ஆத்மா தமோ பிரதானமாக ஆகிவிட்டது என்று பாபா புரிய
வைக்கின்றார். இப்பொழுது பாபாவின் நினைவில் இருங்கள் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானம்
ஆகிவிடுவீர்கள். இந்த மஹாமந்திரத்தை பாபாவைத் தவிர வேறு யாரும் புரிய வைக்க முடியாது.
இனிமையிலும்லிஇனிமையான குழந்தைகளே நினைவு என்ற பலத்தால் தான் நீங்கள் தமோபிரதானத்தில்
இருந்து சதோபிரதானம் ஆக வேண்டும் என்று பாபா சொல்கின்றார். ஆனால் இந்த வார்த்தை யாருடைய
புத்தியிலும் வருவதில்லை. நிச்சயம் கல்பத்திற்கு முன்னால் கூட பாபா இந்த வார்த்தையைக் கூறினார் தேகம்,
தேக சம்மந்தப் பட்ட அனைத்து தர்மங்களையும் விட்டு தன்னை ஆத்மா என்று நினைவு செய்யுங்கள் என்று
கூறினார் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள். இவை அனைத்தும் தேக தர்மங்கள் தானே ! அனைவருக்கும்
தந்தை ஒருவர் தான். அனைத்து ஆத்மாக்களும் அந்த ஒரு தந்தையைத் தான் அழைக்கின்றார்கள். போப்
கூட அந்த ஒரு தந்தையைத் தான் நினைக்கின்றார். ஹே கடவுளே! தந்தையே ! கருணை காட்டுங்கள் என்று
தான் சொல்கின்றார். இந்த கோபமுள்ள புத்தியை திருத்துங்கள் அப்பொழுது தான் இவர்களுக்குள் சண்டை
போடமாட்டார்கள். நினைவு என்பது பாபாவைத் தானே செய்கின்றார்கள். மற்ற யாரையும் நினைப்பதில்லை.
சிவபாபாவைத் தான் அழைக்கின்றார்கள் வந்து பதீதர்களைலிபாவனம் ஆக்குங்கள் என்கின்றார்கள். பாவனம்
ஆகிவிட்டால் பின்பு இந்த சீலிசீ இராவணன் உலகத்தில் இருக்க மாட்டோம், பிறகு அவசியம் புதிய உலகம்
தேவை. கலியுகம் மாறி சத்தியயுகம் வரும் அல்லவா? ஆனால் இதைக் கூட புரிந்து கொள்வதில்லை. ஒரு
டாக்டர் வந்திருந்தார் அவர் லி கலியுகத்தில் கலியுகம் தானே நடக்கும் என்று சொன்னார். அடே சதா கயுகத்
திலேயே எப்படி இருப்பது ? கலியுகம் என்ன நன்றாக இருக்கின்றதா என்ன? புரிந்து கொள்வதே
இல்லை, வெறும் பாவனையோடு இருப்பதால் அழைத்து வருகின்றார்கள். அவர்களுக்குப் புரியவில்லை என்றாலும்,
வேறு யாராவது ஞானத்தைப் புரிந்து கொள்வதால் கொஞ்சமாவது தரகு கிடைக்கும் நாம் சொர்க்கத்தில் வந்து
விடுவோம். பாபாவிடம் சிறிதாவது ஞானம் கேட்டால் அவர்கள் அவசியம் சொர்க்கத்திற்கு வந்து விடுவார்கள்.
ஏனெனில், சொர்க்கத்தைப் படைக்கும் கடவுள் தந்தை முன்னால் வந்து அமர்ந்து விட்டார்கள் அல்லவா. நான்
(3/4)
16.07.2016
அனைவருக்கும் தந்தை அல்லவா? என்று பாபா புரிய வைக்கின்றார். சிவபாபா எப்படி வருகின்றார் என்பதை
யாரும் ஏற்றுக் கொள்வதே இல்லை. அரே ஆத்மா வர முடியும் எனும் போது நான் ஏன் வரமுடியாது?
ஆத்மா ஒரு உடலை விட்டு இன்னொரு உடலில் வர முடியும் எனும் போது நான் வர முடியாதா? இல்லை
என்றால், நான் எப்படி வருவேன்? பதீதலிபாவனன் வாருங்கள் எங்களை பதீத நிலையில் இருந்து பாவனம்
ஆக்குங்கள் என்று அழைக்கின்றீர்கள். நான் பாரதத்தில் தான் வருகின்றேன் என்று பாபா சொல்கின்றார்.
கல்பலிகல்பமாய் சங்கமயுகத்தில் ஒரு முறை தான் நான் வருகின்றேன். நீங்கள் எப்பொழுது 84 ஜன்மம் எடுத்து
முடிக்கின்றீர்களோ அப்பொழுது நான் வருகின்றேன். பாபா வந்து விட்டார் ஆஸ்தியைக் கொடுக்கின்றார் என்று
குழந்தைகளாகிய உங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. பாபா சொல்கின்றார் என்னுடைய தொழிலே இதுதான்
பழைய உலகத்தை மாற்றி புதிய உலகத்தை ஸ்தாபனை செய்வது ஆகையால் பாடப்படுகின்றது புதிய உலகம்
ஸ்தாபனை, பழைய உலகம் அழிவது, பின்பு நீங்கள் இதை பாலனை செய்கின்றீர்கள். இப்பொழுது ஒளி
கிடைத்து விட்டது அல்லவா? காளி கோவிலுக்குப் போய் பார்த்தீர்களென்றால் இது பொய்யான படம் என்று
நினைப்பீர்கள். காளி என்பது உண்மையில் ஜெகத்தம்பா தான். ஆனால் அப்படி பயங்கரமான ரூபம் எல்லாம்
இல்லை. வங்காளத்தில் காளிக்கு முன்னால் பலி எல்லாம் கொடுக்கின்றார்கள், ஆனால் ஒன்றும் புரிந்து
கொள்வதே இல்லை. ஜெகத்தம்பா கோவிலுக்கு இலட்சக்கணக்கான பேர் வருகின்றார்கள். சதா திருவிழா போல்
இருக்கும். சின்ன மூர்த்தி தான் வைக்கப்பட்டுள்ளது. ஜகதம்பாள் என்று பெயர் வைத்துள்ளர்கள். அப்பொழுது
ஜெகதம்பா ஒருவர் இ!ருக்க வேண்டுமல்லவா? சிந்தியில் காளி கோவில் எப்படி உருவாக்கி உள்ளார்கள். ஒரு
முறை கோட்டையில் அணுகுண்டு வெடித்தது, அதில் கோட்டை உடைந்தது, ஒரு ஏழை சொன்னார் காளிக்கு
கோபம் வந்துவிட்டது, அதனால் உடனே அங்கே காளி கோவில் உருவாக்கினார். இப்பொழுது காளி என்பவர்
யார் இதை யாரும் அறிவதில்லை. உங்களுக்கு ஞானம் கிடைத்து உள்ளது, அப்படி ஒரு விசயமே இல்லை,
இதை நீங்கள் அறியவில்லை. பாபாவிடம் இருந்துதான் ஆஸ்தி கிடைக்கின்றது என்பதை அறிந்துள்ளார்கள்
என்றால் முயற்சி செய்ய வேண்டுமல்லவா?
எப்பொழுது குமார்லிகுமாரி திருமணம் செய்து கொள்கின்றார்களோ அப்பொழுது முதல் நம்பர் துக்கம்
ஆரம்பம் ஆகின்றது. உங்களுக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே வரக் கூடாது.
இப்பொழுது இராவண இராஜ்ஜியம் அழியப் போகின்றது என்று பாபா சொல்கின்றார். குடும்பத்தில் இந்த
விகார செயல்கள் நடக்கின்றது. தேவிலிதேவதைகளுக்காகப் பாடுகின்றார்கள். இந்த தேவிலிதேவதைகளை நிர்விகாரி
ஆக யார் செய்கின்றார் என்பது யாருக்கும் தெரியாது. சத்தியயுகம் என்பது சம்பூர்ண நிர்விகார உலகம்.
சாஸ்த்திரங்களில் அங்கேயும் விகாரிகளாக இருந்ததாகக் காட்டுகின்றார்கள். ஆனால் அதுவோ நிர்விகார உலகம்,
விகார உலகத்திற்கும், நிர்விகார உலகத்திற்கும் எத்தனை வித்தியாசம் உள்ளது. இந்த விசயம் யாருடைய
புத்தியிலும் இருப்பதில்லை. லட்சுமிலிநாராயணன் இராஜ்ஜியத்தில் கொஞ்ச மனிதர்கள் தான் இருந்தார்கள் என்பதை
நீங்கள் அறிந்து கொண்டீர்கள். ஒரு தர்மம் தான் இருந்தது பின்பு தான் அதிகமாகின்றது. சக்கரம் கூட
முழுமையாக சுழல வேண்டியுள்ளது, அப்பொழுது தான் முழு உலகம் சுற்றி வந்தார் என்று சொல்ல முடியும்.
சமுத்திரத்தைச் சுற்றி வர முடியாது. சத்தியயுகத்தில் கொஞ்ச பேர் உள்ளதால் கொஞ்ச பூமி தான்
பயன்படுத்தப்படுகின்றது. இப்பொழுது மனித ஸ்ருஷ்டி முடிவு அடையப் போகின்றது. மேலே உள்ள கொஞ்ச
ஆத்மாக்களும் வந்து கொண்டே இருக்கின்றார்கள். மனிதர்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றார்கள்.
அங்கிருந்து வரக் கூடிய ஆத்மாக்கள் பூர்த்தி ஆகிவிட்டது என்றால், நீங்கள் கர்மாதீத நிலையை அடைந்து
விடுவீர்கள் பின்பு ஆத்மாக்கள் உடலை விட்டு போக வேண்டி வரும். அவர்கள் வருவது நீங்கள் போவதுமாக
இருக்கும். கொஞ்சம்லிகொஞ்சமாக வருகின்றார்கள். இது புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். நாம்
முதன்லிமுதலில் அங்கே போக வேண்டி வரும். நாம் போனதும் யாரும் இருக்க வேண்டாம். இது விரிவான
விஷயம். நல்லதுலிநீங்கள் பாபுல்நாத்தை நினைவு செய்யுங்கள் என்று மீண்டும் பாபா குழந்தைகளுக்குச்
சொல்கின்றார். உங்களுக்குத் தான் பாபாவை நினைப்பதால் இலாபம். இந்த சரித்திரலிபூகோளம் மனிதர்கள்
படிக்கின்றார்கள். மிகவும் துôரம்லிதுôரம் செல்கின்றார்கள். சந்திரனுக்குக் கூட போகின்றார்கள். இது விஞ்ஞானத்தின்
கர்வம். எல்லைக்கே போகின்றார்கள். சந்திரனில் யாராவது நிற்க முடியுமா என்ன, நீங்கள் சூரியன் சந்திரனைக்
கூட கடந்து செல்கின்றீர்கள். இந்த ஞானம் உங்கள் புத்தியில் இருக்கின்றது. நாடகத்தின் அனுசாரமாக பாபா
இதை எல்லாம் புரிய வைக்கின்றார் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள். நான் உங்களை பதீத நிலையிலி
ருந்து பாவன நிலைக்கு ஆக்குகின்றேன் என்று பாபா சொல்கின்றார். இது தான் என்னுடைய பார்ட்.
பக்திமார்க்கத்தில் கூட என்னுடைய பார்ட் உள்ளது. இது நாடம் தானே ! நீங்கள் எப்படி நடிக்கின்றீர்களோ,
நானும் கூட நடிக்கின்றேன். என்னுடைய வேலை உங்களை பதீத நிலையிலிருந்து பாவனமாக்குவது. என்ன
செய்தாலும் அதற்கு புகழ் கிடைக்கின்றது அல்லவா? இந்த இலட்சுமிலிநாராணனுக்கு எவ்வளவு புகழ்
பாடுகின்றார்கள் ! ஆனால் இந்தளவு தகுதியுடையோராக யார் ஆக்கினார்கள். அவர்கள் சுகதாமத்திற்கு
எஜமானர்களாக இருந்தார்கள். இன்று எத்தனை விதம் விதமாக துக்கங்கள் உள்ளன. இன்று யாராவது
16.07.2016
(4/4)
இறந்தார், சண்டை நடந்தது, கோடிக்கணக்கான செல்வம் இருந்தாலும் ஏதாவது நோய் வந்துவிடுகின்றது
என்றால் என்ன செய்வது? பிர்லாவிடம் எவ்வளவு பணம் உள்ளது. ஆனால் துக்கம் இல்லை என்று யாரும்
சொல்ல முடியாது. ஏதாவது விதத்தில் துக்கம் அனைவருக்கும் உள்ளது. இப்பொழுது இந்த செல்வம் எல்லாம்
மண்ணில் போய்விடும். நல்லது.
இனிமையிலும்லிஇனிமையான செல்லமான குழந்தைகளுக்கு, தாய்லிதந்தை பாப்தாதாவின் அன்பு
நினைவுகள்! மேலும் காலை வணக்கங்கள். ஆன்மீகத் தந்தையின் ஆன்மீகக் குழந்தைகளுக்கு
நமஸ்தே !
தாரணைக்கான முக்கிய சாரம்:லி
1) கர்மாதீத நிலை அடைந்து வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். ஆனால், எப்பொழுது
அனைத்து ஆத்மாக்களும் வருவது நின்றுவிடுகின்றதோ, அப்பொழுது தான் நீங்கள் செல்ல
முடியும்.
2) ஞான ஒளி கிடைத்துள்ளது, ஆகையால் நிச்சயபுத்தி ஆகி பாபாவிடமிருந்து முழு
ஆஸ்தியை அடைய வேண்டும். எங்கிருந்தாலும் கூட நினைவு பலத்தால் ஆத்மாவை
தமோபிரதான நிலையிலிருந்து சதோபிரதான நிலையை அடைய முயற்சி செய்ய
வேண்டும்.
வரதானம்: தேகலிஅபிமானத்தை தியாகம் (விட்டு விடுவது) செய்வதின் மூலமாக சிரேஷ்ட
பாக்கியத்தை அடையக் கூடிய அனைத்து சித்தி சொரூப பவ !
தேக அபிமானத்தை தியாகம் செய்து அதாவது ஆத்மா அபிமானியாக ஆவதால் பாபாவிடம் சர்வ
சம்மந்தம், சர்வ சக்திகள் அனுபவம் ஏற்படும், இந்தஅனுபவம் தான் சங்கமயுகத்தில் சர்வ சிரேஷ்ட
பாக்கியமாகும். விதாதா மூலமாகக் கிடைத்துள்ள இந்த விதியை தன்னுடையதாக்கிக் கொள்வதால் முன்னேற்றம்
கூட கிடைக்கும். மேலும் அனைத்து சித்திகளும் கிடைக்கும். தேகதாரி சம்மந்த அன்பால் நீங்கள் கீரிடம்,
சிம்மாசனம் மேலும் தன்னுடைய உண்மையான சொரூபம் அனைத்தையும் விட்டுவிட்டீர்கள் என்றால்,
பாபாவின் அன்பிற்காக தேக அபிமானத்தை விட முடியாதா. இந்த ஒரு தியாகத்தால் அனைத்து பாக்கிய
களும் அடையலாம்.
சுலோகன்: கோபத்திலிருந்து முக்தி அடைய வேண்டும் என்றால் சுயநலம் இல்லாமல்
பரந்தநலம் உள்ளவர் ஆகுங்கள், ஆசைகளின் பல ரூபத்தை மாற்றுங்கள்.
(1/4)
17
17.07.2016 காலை முரளி ஓம் சாந்தி ''அவ்யக்த பாப்தாதா''
ரிவைஸ் 19.10.1981 மதுபன்
'' ஒவ்வொரு பிராமணனும் சைத்தன்ய நட்சத்திர மண்டலத்தின் அலங்காரம் ''
இன்று ஞான சூரியன், ஞான சந்திரன் தங்களுடைய நட்சத்திர மண்டலத்தை பார்ப்பதற்காக
வந்திருக்கிறார்கள். நட்சத்திரங்களின் நடுவே ஞான சூரியன், ஞான சந்திரன் இருவர்களுமே சேர்ந்து வந்திருக்
கிறார்கள். பொதுவாக இந்த பௌதீக உலகத்தில் சூரியன், சந்திரன் மற்றும் கூடவே நட்சத்திரங்கள் சேர்ந்திருப்ப
தில்லை. ஆனால் சைத்தன்ய நட்சத்திரங்கள் சூரியன் மற்றும் சந்திரனின் உடன் இருக்கிறார்கள். இது
நட்சத்திரங்களின் ஆன்மீகக் கூட்டம். இன்று பாப்தாதா விதவிதமான நட்சத்திரங்களை பார்க்கிறார். ஒவ்வொரு
நட்சத்திரத்திலும் அவரவர்களின் விசேஷம் இருக்கிறது. சின்ன சின்ன நட்சத்திரங்களும் இந்த நட்சத்திர
மண்டலத்தை மிக நல்ல அழகானதாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். பெரியவர்களும் இருக்கத் தான்
இருக்கிறார்கள் ஆனால் சிறியவர்களின் மின்மினுப்பு கூட்டத்தின் அழகை அதிகரிக்கிறது. பாப்தாதா ஒவ்வொரு
நட்சத்திரத்தின் அவசியம் எவ்வளவு இருக்கிறது என்ற இந்த விஷயத்தைப் பார்த்து பார்த்து தான் மகிழ்ச்சி
அடைந்து கொண்டிருக்கிறார். சிறியதிலும் சிறிய நட்சத்திரமும் மிக அவசியமாக இருக்கிறது. மகத்துவம்
நிறைந்த காரியம் செய்பவர்களாக இருக்கிறார்கள் என்றால் இன்று பாப்தாதா ஒவ்வொருவரின் மகத்துவத்தைப்
பார்த்துக் கொண்டிருந்தார். எப்படி வெளியுலக குடும்பத்தில் தாய் தந்தையர் ஒவ்வொரு குழந்தையின்
குணங்களின், செய்யும் காரியங்களின், நடத்தையின் விஷயங்களை பேசுகிறார்கள். அதே போலவே
எல்லைக்கப்பாற்பட்ட தாய் தந்தையாகிய ஞான சூரியன் மற்றும் சந்திரன் எல்லைக்கப்பாற்பட்ட பரிவாரத்தின்
மற்றும் அனைத்து நட்சத்திரங்களின் விசேஷங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். பிரம்மா பாபா அல்லது
சந்திரன் இன்று உலகின் நாலாபுறங்களிலும் மூலை மூலையில் மின்னிக் கொண்டிருக்கும் தன்னுடைய
நட்சத்திரங்களை பார்த்து பார்த்து விசேஷமாக குμயில் ஆடிக்கொண்டிருந்தார். ஞான சூரியன் தந்தையோ
ஒவ்வொரு நட்சத்திரங்களின் அவசியம் மற்றும் விசேஷத்தை கூறிக் கொண்டே அந்த அளவு மகிழ்ச்சி
அடைந்து கொண்டிருந்தார், அதை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது. அந்த நேரத்தின் சித்திரத்தை
புத்தியின் நினைவு என்ற கேமரா மூலம் படம் பிடிக்க முடியுமா? சாகாரத்தில் யார் யாரெல்லாம் அனுபவம்
செய்திருந்தார்களோ அவர்களோ நல்ல முறையில் தெரிந்து கொள்ள முடியும். முகம் எதிரில் வந்து விட்டது
தான் இல்லையா? என்ன தென்படுகிறது? கண்களில் முத்து ஜெôலிக்கும் மாதிரி அந்த அளவு மகிழ்ச்சி
அடைந்து கொண்டிருந்தார்கள். இன்று எப்படி வைர வியாபாரி ஒவ்வொரு வைரத்தின் மகத்துவத்தை
வர்ணனை செய்கிறார், அதே போல் சந்திரன் ஒவ்வொரு வைரத்தின் மகிமை செய்து கொண்டிருந்தார்.
உங்கள் அனைவரின் மகிமையாக என்ன கூறியிருப்பார் என்று நீங்கள் புரிந்து கொள்ள முடியுமா? தன்னுடைய
மகான் நிலையின் மகிமையை தெரிந்திருக்கிறீர்களா?
அனைவரின் ஒரு முக்கியமான விஷயத்தின் விசேஷம் மற்றும் மகான் நிலை மிகத் தெளிவாக
இருக்கிறது. அது யாராக இருந்தாலும் யானைப்படையோ (மகாரதியோ) அல்லது காலாட்படையோ, சின்ன
நட்சத்திரமோ அல்லது பெரிய நட்சத்திரமோ ஆனால் தந்தையை தெரிந்திருக்கும் விசேஷம், தந்தையின்
குழந்தையாக ஆகியிருக்கும் விசேஷமோ அனைவரிலும் இருக்கிறது தான் இல்லையா. தந்தையை
சாஸ்திரங்களின் அதிகாரம் உள்ள மிகப்பெரியவர்கள், மதத்தின் அதிகாரம் உள்ளவர்கள், அறிவியலின் அதிகாரம்
உள்ளவர்கள், இராஜ்ஜியத்தின் அதிகாரம் உள்ளவர்கள், பெரிய பெரிய அழியும் பட்டங்களின் அதிகாரம்
உள்ளவர்கள் அனைவருமே தந்தையை தெரிந்திருக்கவில்லை ஆனால் நீங்கள் அனைவரும் தந்தையை
தெரிந்து கொண்டீர்கள். அவர்கள் இதுவரையிலும் வாருங்கள் வாருங்கள் என்று அழைத்துக் கொண்டே தான்
இருக்கிறார்கள். சாஸ்திரவாதிகளோ இப்பொழுது கணக்கைத் தான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
விஞ்ஞானிகளோ தங்களுடைய கண்டுபிடிப்புகளில் அந்தளவு மூழ்கியிருக்கிறார்கள், அதனால் தந்தையின்
விஷயங்களை கேட்பதற்கும் மற்றும் புரிந்து கொள்வதற்கும் நேரமே இருப்பதில்லை. தன்னுடைய
காரியங்களிலேயே மூழ்கியிருக்கிறார்கள். இராஜ்ய அதிகாரம் உள்ளவர்கள் தன்னுடைய இராஜ்ஜியத்தின்
நாற்காலியை பாதுகாப்பதிலேயே பிஸியாக இருக்கிறார்கள், நேரமே இருப்பதில்லை. மதத்தலைவர்களோ
தங்களுடைய மதம் அழிந்து விடக்கூடாது என்று அதை பாதுகாப்பதிலேயே பிஸியாக இருக்கிறார்கள். இந்த
என்னுடைய என்னுடையது என்பதிலேயே மிகவும் பிஸியாக இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் அனைவரும்
வரவழைப்பதற்கு பதிலாக சந்திப்பு செய்பவர்கள், இந்த விசேஷம் மற்றும் மகான் தன்மை உங்கள்
அனைவரிடமும் இருக்கிறது. என்னிடம் என்ன விசேஷம் இருக்கிறது மற்றும் என்னிடமோ ஒரு குணமும்
(2/4)
17.07.2016
இல்லை என்று அப்படி நினைக்கவில்லையே. என்னில் ஒரு குணமும் இல்லை என்ற வார்த்தையோ
பக்தர்களினுடையது. குணங்களின் கடல் தந்தையின் குழந்தை ஆவது என்றால் குணம் நிறைந்தவர் ஆவது.
அப்படி ஒவ்வொருவரிலும் ஏதாவது குணத்தின் விசேஷம் இருக்கிறது. மேலும் தந்தை அந்த விசேஷத்தைத்
தான் பார்க்கிறார். எப்படி இராஜ பரிவாரத்தின் ஒவ்வொரு நபரிலும் அந்த அளவு சம்பன்னம் அவசியம்
இருக்கிறது. அவர் ஒருபொழுதும் யாசிப்பவராக இருக்க முடியாது என்று தந்தை தெரிந்திருக்கிறார். அந்த
மாதிரி குணங்களின் கடல் தந்தையின் குழந்தைகள் ஏதாவது குணத்தின் விசேஷம் இன்றி குழந்தை என்று
கூற முடியாது. அப்படி நீங்கள் அனைவரும் குணம் நிறைந்தவர்கள் மகான், விசேஷ ஆத்மாக்கள், சைத்தன்ய
நட்சத்திர மண்டலத்தின் அலங்காரம் ஆவீர்கள். நீங்கள் யார் என்று இப்பொழுது புரிந்து கொண்டீர்களா?
நீங்கள் பலமற்றவர் அல்ல, பலம் நிரம்பியவர்கள் ஏனென்றால் நீங்கள் மாஸ்டர் சர்வ சக்திவான் ஆவீர்கள்.
அந்த மாதிரி ஆன்மீக போதை எப்பொழுதும் இருக்கிறதா? ஆன்மீக நிலையில் ஒருபொழுதும் அபிமானம்
இருக்காது, சுவமானம் இருக்கும். சுவமானம் என்றால் சுயம் லி ஆத்மாவின் உணர்வு. சுவமானம் மற்றும்
அபிமானம் இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது. எனவே எப்பொழுதும் சுவமானம் என்ற ஆசனத்தில்
அமர்ந்திருங்கள். அபிமானம் என்ற ஆசனத்தை விட்டு விடுங்கள். அபிமானத்தின் ஆசனம் மேலோட்டமாக
மிக அலங்கரிக்கப்பட்டதாக இருக்கும். பார்க்கும் பொழுது இதயத்திற்கு பிடித்ததாக ஓய்வாக அமரலாம் என்ற
விருப்பம் இருக்கும். ஆனால் உள்ளே முட்களின் ஆசனம் இருக்கும். இந்த அபிமானத்தின் ஆசனம்
எப்படி சாப்பிட்டாலும் வேதனை அடை மற்றும் சாப்பிடாவிட்டாலும் வேதனை அடை என்ற பழமொழி
இருக்கிறது, இந்த ஆசனமும் அதே போல் தான். ஒருவர் மற்றவரை பார்த்து நானும் ருசி பார்த்து விட
வேண்டும் என்று யோசிக்கிறார்கள். இன்னார் இன்னார் அனுபவம் செய்திருக்கிறார், எனவே நானும் ஏன்
அனுபவம் செய்யக்கூடாது. அப்படி விடவும் முடியாது, மேலும் எப்பொழுது அமருகிறார்களோ அப்பொழுது
முள்ளோ கண்டிப்பாக குத்தும். அந்த மாதிரி வெளிப்படையாக மிக நன்றாக இருப்பதாக தோன்றும். ஏமாற்றம்
அளிக்கும் அபிமானத்தின் ஆசனத்தில் அமருவதற்கு ஒருபொழுதும் முயற்சி செய்யாதீர்கள். சுவமானத்தின்
ஆசனத்தில் எப்பொழுதும் சுகமானவராக, எப்பொழுதும் உயர்ந்த, எப்பொழுதும் அனைத்து பிராப்தி சொரூபத்தின்
அனுபவம் செய்யுங்கள். தந்தையை தெரிந்து கொள்வது மற்றும் சந்திப்பு செய்வதற்கான விசேஷத்தை
மட்டும் நினைவில் வைத்து எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள். எப்படி சந்திரன் நட்சத்திரங்களை பார்த்து
மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறார் என்று ஏற்கனவே கூறியிருந்தோம். அதே போல் தந்தையை பின்பற்றி
நடங்கள் லி நல்லது.
அந்த மாதிரி எப்பொழுதும் சுவமானத்தின் ஆசனத்தில் அமர்ந்திருக்கக்கூடிய, எப்பொழுதும் தன்னை
விசேஷ ஆத்மா என்று புரிந்து விசேஷங்கள் மூலமாக மற்றவர்களையும் விசேஷ ஆத்மாவாக ஆக்கக்கூடிய,
சந்திரன் மற்றும் ஞான சூரியனை எப்பொழுதும் பின்பற்றி நடக்கக்கூடிய, அந்த மாதிரி நம்பிக்கைக்குரிய,
கட்டளைப்படி நடக்கும் உண்மையான குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.
தாதி அவர்களுடன் சந்திப்பு லி
நீங்களும் அனைவரின் விசேஷங்களை பார்த்திருக்கிறீர்கள் இல்லையா. (சென்ற இடங்களை) சுற்றி
வந்ததில் என்ன பார்த்தீர்கள்? சிறியவர்களின் விசேஷத்தையும், பெரியவர்களின் விசேஷத்தையும் பார்த்தீர்கள்
இல்லையா. அப்படி விசேஷத்தை வர்ணனை செய்வதில், கேட்பதில் அனைவரும் எவ்வளவு மகிழ்ச்சி
அடைகிறார்கள். அனைவரும் மகிழ்ச்சி அடைந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள் இல்லையா (தாதி அவர்கள்
அம்பாலா மற்றும் பிரோஸாபாத் மேளாவின் செய்தியை வகுப்பில் கூறினார்) அதே போலவே எப்பொழுதும்
அனைவரும் விசேஷத்தை மட்டுமே வர்ணனை செய்கிறார்கள் என்றால் என்னவாகிவிடும். எப்படி விசேஷ
காரியத்தில் எப்பொழுதும் குμயின் இசை ஒலிக்கும் இல்லையா. அதே போல் பிராமண பரிவாரத்தில்
நாலாபுறங்களிலும் குμயின் இசை தான் ஒலித்துக் கொண்டே இருக்கும். சுறுக்கமான மற்றும் இனிமையான
பயணமாக இருந்தது. குμகளின் சுரங்கத்தைப் பெற்று அனைவரையும் குμயால் அனைத்தும் நிறைந்தவராக
ஆக்கி வந்திருக்கிறீர்கள். ஒவ்வொரு ஸ்தானத்தின் தைரியம் மற்றும் உற்சாகம், ஒன்று இன்னொன்றை விட
உயர்ந்தது. தந்தையும் குழந்தைகளின் தைரியம் மற்றும் உற்சாகத்திற்காக ஒவ்வொரு குழந்தையின் மகிமையின்
குணங்களின் மலர் மழை பொழிகிறார். நல்லது.
பார்ட்டிகளுடன் சந்திப்பு லி
ஒவ்வொருவரும் தன்னுடைய உயர்ந்த எதிர்காலத்தை தெரிந்திருக்கிறீர்கள் இல்லையா? எவ்வளவு
உயர்ந்த எதிர்காலத்தை உயர்ந்த காரியங்கள் மூலமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்? எவ்வளவு உயர்ந்த
காரியமோ அந்த அளவே எதிர்காலத்தின் ரேகை நீளமானதாகவும் தெளிவானதாகவும் இருக்கிறது. எப்படி
கைகள் மூலமாக எதிர்காலத்தை பார்க்கிறார்கள் என்றால், என்ன பார்க்கிறார்கள்? ரேகை நீளமாக இருக்கிறதா,
(3/4)
17.07.2016
இடையிடையில் துண்டிக்கவோ படவில்லையே என்று பார்க்கிறார்கள். அதே போல் இங்கேயும் அந்த மாதிரி
தான். ஒருவேளை எப்பொழுதும் உயர்ந்த காரியம் செய்பவராக இருக்கிறார் என்றால் எதிர்காலத்தின் ரேகையும்
நீளமானதாக மற்றும் நிரந்தரமாக தெளிவானதாக மற்றும் உயர்ந்ததாக இருக்கிறது. ஒருவேளை சில நேரம்
உயர்ந்ததாக, சில நேரம் சாதாரணமானதாக இருக்கிறது என்றால் ரேகையும் இடையிடையே துண்டிக்கப்பட்டிருக்கும்,
அழியாததாக இருக்காது. சில நேரம் நிற்பார்கள், சில நேரம் முன்னேறிச் செல்வார்கள், எனவே எப்பொழுதும்
உயர்ந்த காரியம் செய்பவராக இருக்க வேண்டும். தந்தையோ எதிர்காலத்தை உருவாக்கும் சாதனத்தையோ
தந்து விட்டார் லி உயர்ந்த காரியம். எதிர்காலத்தை உருவாக்குவது எவ்வளவு சுலபமானதாக இருக்கிறது.
உயர்ந்த காரியம் செய்யுங்கள், மேலும் பல கோடி மடங்கு பாக்கியசாலியின் எதிர்காலத்தை அடையுங்கள்.
உயர்ந்த காரியத்தின் ஆதாரம் லி உயர்ந்த நினைவு. உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையின் நினைவில் இருப்பது
என்றால் உயர்ந்த காரியம் நடப்பது. அந்த மாதிரி நீங்கள் நல்ல எதிர்காலம் உள்ளவர்கள் தான் இல்லையா.
அனைவருமே எதிர்காலம் உள்ளவர்கள் தான் ஆனால் உயர்ந்ததாக இருக்கிறதா அல்லது சாதாரணமானதாக
இருக்கிறதா என்ற இதில் வரிசை எண் வந்து விடுகிறது. நிரந்தரமான எதிர்காலத்தின் ரேகையை போட்டு
விட்டீர்களா அல்லது சின்னஞ்சிறியதை போட்டிருக்கிறீர்களா? நீளமானது தான் இல்லையா, அழியாதது தான்
இல்லையா. இடையிடையே அழியக்கூடியது அல்ல, எப்பொழுதுமே இருக்கக்கூடியது. அந்த மாதிரி எதிர்காலம்
உள்ளவர்கள். இப்போதைக்கும் நல்ல எதிர்காலம் உள்ளவர் மற்றும் அனேக ஜென்மங்களுக்கும் நல்ல
எதிர்காலம் உள்ளவர்.
2) அனைவரும் தன்னை இந்த நாடகத்திற்குள் தந்தையுடன் அன்பான மற்றும் சகயோகி
ஆத்மாக்கள் என்று அப்படி புரிந்து நடந்து கொள்கிறீர்களா? ஆத்மாக்கள் நமக்கு இந்த அளவு உயர்ந்த
பாக்கியம் கிடைத்திருக்கிறது, இந்த பதவி எப்பொழுதும் நினைவிருக்கிறதா? எப்படி உலகில் கூட உயர்ந்த
பதவியில் இருக்கும் ஆத்மாவின் உடன் காரியம் செய்பவர்களும் எவ்வளவு உயர்ந்ததாக நினைக்கிறார்கள்.
ஆனால் உங்களுடைய பங்கு, உங்களுடைய காரியம் சுயம் தந்தையுடன் இருக்கிறது. அப்படியென்றால்
எவ்வளவு உயர்ந்த பங்காக ஆகிவிட்டது. அந்த மாதிரி நினைக்கிறீர்களா? முன்போ சிறிதளவு தரிசனம்
கிடைத்து விடட்டுமே என்று அழைத்துக் கொண்டு மட்டும் இருந்தீர்கள். இந்த ஆசையைத் தான்
வைத்திருந்தீர்கள் இல்லையா. அதிகாரி ஆவதற்கான ஆசை மற்றும் எண்ணத்தையோ நினைத்துக்கூட பார்க்க
முடியாது, அசம்பவம் என்று நினைத்தீர்கள். ஆனால் இப்பொழுது அசம்பவ விஷயமாக என்ன இருந்ததோ
அது சம்பவமாக மற்றும் நடந்தேறிவிட்டது. இந்த நினைவு இருக்கிறதா? எப்பொழுதும் இருக்கிறதா அல்லது
சில நேரம் இருக்கிறதா? ஒருவேளை சில நேரம் இருக்கிறது என்றால் பிராப்தியாக என்ன அடைவீர்கள்?
சில நேரம் இராஜ்ஜியம் கிடைக்கும், சில நேரம் இராஜா ஆவீர்கள், சில நேரம் பிரஜை ஆவீர்கள். யார்
நிரந்தரமான சகயோகியாக இருக்கிறாரோ அவர் தான் நிரந்தரமான இராஜா. அதிகாரமோ அழியாததாக மற்றும்
நிரந்தரமானதாக இருக்கிறது. எவ்வளவு காலம் தந்தை உத்திரவாதம் கொடுத்திருக்கிறாரோ, அரைக்கல்பம்
அதில் எப்பொழுதிற்குமான இராஜ பதவியை பிராப்தி செய்ய முடியும். ஆனால் இராஜயோகி இல்லை
என்றால் இராஜ்ஜியமும் இல்லை. எப்பொழுது வாய்ப்பு நிரந்தரமாக இருக்கிறது என்றால் சிறிது காலத்திற்காக
ஏன் பெற்றுக் கொள்கிறீர்கள். நல்லது.
3) சங்கமயுகத்தை புதிய யுகம் என்றும் கூற முடியும். ஏனென்றால் அனைத்தும் புதியதாக
ஆகிவிடுகிறது. புதிய யுகத்தைச் சேர்ந்தவர்களின் ஒவ்வொரு நேரத்தின் ஒவ்வொரு நடத்தையும் புதியது.
எழுவதும் புதியது, பேசுவதும் புதியது, நடப்பதும் புதியது. புதியது என்றால் ஆன்மீகம். புதிய கௌரவம்,
புதிய விஷயம், அனைத்தும் புதியதாக ஆகிவிட்டது இல்லையா. நினைவிலும் புதுமை வந்து விட்டது.
எப்படி நினைவோ அப்படி நிலையும் ஆகிவிட்டது. விஷயங்களும் புதியது, கிடைப்பதும் புதியது, அனைத்தும்
புதியது. பார்க்கிறார்கள் என்றாலும் ஆத்மா, ஆத்மாவை பார்ப்பார்கள். முன்பு உடலைப் பார்த்தார்கள்,
இப்பொழுது ஆத்மாவை பார்க்கிறார்கள். முன்பு தொடர்பில் வந்தார்கள் என்றால் பல விகார பாவனையோடு
வந்தார்கள். இப்பொழுது சகோதரன் சகோதரனின் பார்வையோடு தொடர்பில் வருகிறீர்கள். இப்பொழுது
தந்தையின் துணைவன் ஆகிவிட்டீர்கள். முன்பு உலகியல் குடும்பத்தின் துணைவர்களாக இருந்தீர்கள்.
பிராமணர்களின் பாஷையும் புதியது, உங்களுடைய பாஷையை உலகத்தினர் புரிந்து கொள்ள முடியாது. பகவான்
வந்து விட்டார் என்ற இந்த விஷயத்தை மட்டும் கூறுகிறீர்கள் என்றாலும் ஆச்சரியம் அடைகிறார்கள். புரிந்து
கொள்வதில்லை. இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கூறுகிறார்கள். அப்படி உங்களுடைய அனைத்து
விஷயங்களும் புதியவை எனவே ஒவ்வொரு நேரமும் தனக்குள்ளும் புதுமையை கொண்டு வாருங்கள்.
என்ன மனநிலை ஒருநொடி முன்பு இருந்ததோ அது அடுத்த விநாடி இல்லை, அதை விட மேலாக
இருந்தது. இதைத் தான் வேகமான முயற்சி என்று கூறுவது. யார் சில நேரம் முன்னேறும் கலையிலும் சில
நேரம் நிற்கும் கலையிலும் இருப்பாரோ அவரை நம்பர் ஒன் முயற்சியாளர் என்று கூறமாட்டோம். நம்பர் ஒன்
(4/4)
17.06.2016
முயற்சி செய்பவரின் அடையாளம் ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு எண்ணத்திலும் முன்னேறும் கலை.
இந்த நேரம் 80 சதவிகிதம் இருக்கிறது என்றால் ஒரு விநாடிக்கு பிறகு 81 சதவிகிதம் என்று இருக்க
வேண்டும், 80 ற்கு 80 ஆகவே இருக்க வேண்டாம். ஏறும் கலை என்றாலே எப்பொழுதும் முன்னேறிச்
சென்று கொண்டிருப்பது. பிராமண வாழ்க்கையின் காரியமே முன்னேறுவது மற்றும் மற்றவர்களை
முன்னேற்றுவது. உங்களுடைய முன்னேறும் கலையில் அனைவருக்கும் நன்மை இருக்கிறது. அந்த அளவு
உங்கள் அனைவர் மேலும் பொறுப்பு இருக்கிறது. நல்லது லி ஓம் சாந்தி.
வரதானம் லி வீணானதின் கசிவை முடித்து சக்தி நிறைந்தவர் ஆகக்கூடிய குறைந்த செலவில்
நிறைந்த பலன் பெறுபவர் ஆகுக.
சங்கமயுகத்தில் பாப்தாதா மூலமாக என்னென்ன பொக்கிஷங்கள் கிடைத்திருக்கின்றனவோ அந்த
அனைத்து பொக்கிஷங்களை வீணாக செல்வதிலிருந்து பாதுகாத்தீர்கள் என்றால் குறைந்த செலவில் நிறைந்த
பலன் அடைபவராக ஆகிவிடுகிறீர்கள். வீணானவற்றிலிருந்து மிச்சப்படுத்துவது என்றால் சக்தி நிறைந்தவர்
ஆவது. எங்கு சக்தி நிறைந்த நிலை இருக்கிறது என்றால் அங்கு வீணானவை இருக்கிறது என்பது இருக்க
முடியாது. ஒருவேளை வீணானவற்றின் கசிவு இருக்கிறது என்றால் சோதனை செய்து அதை முடித்து
விட்டீர்கள் என்றால் வீணானவையிலிருந்து சக்தி நிறைந்தவர் ஆகிவிடுவீர்கள்.
சுலோகன் : இல்லறத்தில் இருந்து கொண்டே சம்பூர்ண தூய்மையாக இருப்பது லி இது தான்
யோகி மற்றும் ஞான சொரூப ஆத்மாவிற்கான சவாலாகும்.
11
11.07.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! குழந்தைகளாகிய உங்களின் பையை அழியாத ஞான
இரத்தினங்களினால் நிரப்புவதற்காக தந்தை வந்திருக்கிறார். இந்த ஒவ்வொரு ஞான இரத்தினமும்
இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்பாகும்.
கேள்வி : மறைமுகமான தானத்திற்கு ஏன் இவ்வளவு அதிமான மகத்துவம்?
பதில்: ஏனென்றால், பாபா உங்களுக்கு மறைமுகமான ஞான இரத்தினங்களை இப்போது தானமாக
அளிக்கிறார். இதை உலகத்தினர் அறியவில்லை. பிறகு குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞான இரத்தினங்களை
தானம் செய்வதால் விஷ்வத்தின் இராஜ்ய பதவியை அடைகிறீர்கள். இதுவும் குப்தமாக இருக்கிறது. எந்த ஒரு
சண்டையும் இல்லை, எந்த ஒரு வெடிகுண்டும் இல்லை, எந்த செலவும் இல்லை. மறைமுகமாக உங்களுக்கு
இராஜ்ய பதவியை தானமாக அளிக்கிறார். ஆகையால் தான் மறைமுகமான தானம் மிகவும் மகத்துவம்
வாய்ந்தது.
டபுள் ஓம் சாந்தி. ஒன்று சிவபாபா கூறுகிறார், ஒன்று பிரம்மா தாதா (மூத்த சகோதரர்) கூறுகின்றார்.
இருவரின் சுய தர்மமும் சாந்தி ஆகும். இருவருமே சாந்திதாமத்தில் வசிக்கக் கூடியவர்கள் ஆவர். குழந்தை
களாகிய நீங்களும் சாந்திதாமத்தில் வசிக்கக் கூடியவர்கள். நிராகார் உலகத்தில் வசிக்கக் கூடியவர் சாகார
தேசத்தில் நடிப்பதற்காக வந்துள்ளார். ஏனென்றால் இது நாடகம் அல்லவா. குழந்தைகளுக்கு நாடகத்தின்
முதல், இடை, இறுதி ஞானம் மேலிருந்து கீழ் வரை புத்தியில் நிறைத்திருக்கிறது. உயர்ந்ததிலும் உயர்ந்தவர்
பகவான். அவருடன் குழந்தைகள் உள்ளனர். இந்த விசயங்களை நன்குப் புரிந்துக் கொள்ளுங்கள் உங்களைத்
தவிர இந்த ஞானம் வேறு யாரிடமும் இல்லை. இறைவனின் பள்ளிக் கூடத்தில் நீங்கள் படிக்கிறீர்கள். பகவான்
ஒருவரே என்பது பகவான் வாக்கு. 10லி20 பகவான் எல்லாம் கிடையாது. அனைத்து தர்மத்தை சார்ந்தவர்களுக்கும்
அவர்களுடைய ஆத்மாக்கள் யாராக இருந்தாலும் அனைவருக்கும் ஒரேயொரு தந்தை ஆவார். பிறகு தந்தை
சிருஷ்டியை படைக்கிறார் என்றால் பிரஜா பிதா பிரம்மா என்று கூறப்படுகிறது. சிவனுக்கு பிரஜா பிதா என்று
கூற முடியாது பிரஜைகள் பிறப்பு இறப்பில் வருகிறார்கள். ஆத்மா சம்ஸ்காரத்தின் ஆதாரத்தினால் பிறப்பு
இறப்பில் வருகிறது. மறுபடியும் பிரஜாபிதா பிரம்மா வேண்டும். பரம்பிதா பரமாத்மா, பிரஜாபிதா பிரம்மா
மூலமாக படைப்பை படைக்கிறார் என்று பாடப்பட்டிருக்கிறது. பதீத பாவனர் வாருங்கள் என அவர் அழைக்கப்
படுகிறார். உலகம் தூய்மையை இழந்துவிடும் போது, மற்றும் அதனுடைய முடிவு வரும் போது தூய்மை
யற்றவர்களை தூய்மையாக்குவதற்காக தந்தை வருகிறார். தந்தை ஒரு முறை தான் வருகிறார். வேறு எப்போதும்
வருவதில்லை என குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள். இப்போது உங்களுக்கு முழு ஞானமும்
கிடைக்கிறது. நீங்கள் நாடகத்தின் நடிகர்கள் அல்லவா. மேடை நாடகத்தின் நடிகர்களுக்கு அனைவரின்
நடிப்பும் என்னென்ன நடிப்பு என கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். அது சிறிய எல்லைக்குட்பட்ட நடிப்பு
(டிராமா), அதை பற்றி அனைவருக்கும் தெரிகிறது. நீங்களும் பார்த்துக் கொண்டே வருகிறீர்கள். எப்படி
வேண்டுமோ அப்படி எழுதலாம், நினைக்கலாம். சிறியதாக இருக்கிறது. இது மிகவும் பெரிய எல்லையற்ற
நாடகம் ஆகும். இதை நீங்கள் சத்யுகத்திலிருந்து கலியுக முடிவு வரை அறிகிறீர்கள். எல்லையற்ற தந்தையிடமிருந்து
இப்போது எல்லையற்ற சொத்து கிடைக்கிறது என குழந்தைகள் அறிகிறீர்கள். பிறகு எல்லைக்குட்பட்ட தந்தையிட
மிருந்து எல்லைக்குட்பட்ட சொத்து, எல்லைக்குட்பட்ட ஆஸ்தி கிடைக்கிறது. ராஜாக்களாக யார் மாறுகிறார்களோ,
அவர்கள் அதற்கு முந்தைய பிறவியில் தான புண்ணியங்களை செய்து ஒரு பிறவிக்காக ராஜா ஆகிறார்கள்
என பாபா புரிய வைத்திருக்கிறார். அவர்கள் அடுத்த பிறவியிலும் அதே போல மாறுவார்கள் என்பது
கிடையாது. நீங்கள் சத்யுகத்தில் ராஜாக்கள், மகாராஜாக்களாக இருந்தீர்கள். உங்களுடைய இராஜ்யம் மறைந்து
போகிறது. பிறகு பக்தி மார்க்கம் தோன்றும் போது அவர்களே தானம் புண்ணியம் செய்கிறார்கள். அவர்களும்
இராஜ்யத்தில் செல்கிறார்கள் என நினைக்காதீர்கள். ஆனால் அவர்கள் விகாரி ராஜாக்கள் ஆகிறார்கள். பூஜைக்குரிய
வராக இருந்த நீங்களே பூஜாரி ஆகிறீர்கள். அது அல்ப காலத்தின் சுகம் ஆகும், துக்கம் இப்போது தான்
ஏற்படுகிறது. இப்போது தமோ பிரதானத்தில் கூட உங்களுக்கு சுகம் இருக்கிறது. சண்டை சச்சரவுகளின்
விசயம் எதுவும் இல்லை. இது பிறகு தோன்றுகிறது. இலட்சக்கணக்கானவர்கள் என்ற எண்ணிக்கையில் வரும்
போது தான் சண்டை ஏற்படுகிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு சத்யுகம், திரேதா, துவாபரயுகத்தில் சுகம்
இருக்கிறது. தமோபிரதானம் ஆகும் போது சிறிது துக்கம் ஏற்படுகிறது. இப்போதோ தமோபிரதானமாக இருக்கின்றது.
இதுவோ தமோபிரதான உலகம் என பாபா புரிய வைக்கிறார். இது எல்லையற்ற நாடகம், இதிலிருந்து யாரும்
விடுபட முடியாது என நீங்கள் அறிகிறீர்கள். மனிதர்கள் துக்கத்தில் துன்புறும் போது பகவான் இப்படிப்பட்ட
விளையாட்டை ஏன் படைத்தான் என கூறுகிறார்கள். பகவான் படைக்கவே இல்லை என்றால் உலகமே
இருக்காது. எதுவுமே இருக்காது. படைப்பவர் மற்றும் படைப்பு என்று இருக்கிறது அல்லவா. அதுவும்
11.07.2016
(2/4)
சத்யுகத்திலிருந்து கலியுகத்தின் கடைசி வரைக்கு மான விளக்கமும் இருக்கிறது. இன்னும் சிறிது நாட்களே
இருக்கிறது. நீங்களும் நடைமுறையில் பார்ப்பீர்கள். முதலிலேயே (எல்லாவற்றையும்) காண்பிக்க மாட்டார்கள்.
5000 வருடத்தில் இன்னும் சிறிது சக்கரம் இருக்கிறது. அது இப்போதே காண்பிக்க முடியாது. எப்போது
நடக்குமோ அப்போது அதை சாட்சியாக இருந்து பார்ப்பீர்கள். எது நடக்க வேண்டுமோ அது போன கல்பத்தைப்
போன்றே நடக்கும். ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருக்கிறது என்பதை பார்க்கிறீர்கள். நிச்சயமாக வினாசம்
நடக்கும். அனைத்திற்கும் ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருக்கிறது. அதுவும் நாடகத்தில் ஏற்கனவே நிச்சயிக்கப்
பட்டிருக்கிறது. நிச்சயம் வினாசம் நடக்கும். இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு பாபா புரிய வைக்கின்றார்லி
உங்களுடைய ஆத்மா தமோபிரதானமாக இருக்கிறது அதை இங்கேயே சதோபிரதானமாக மாற்ற வேண்டும்.
இதை இப்போது நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள்.
பாபா குப்தமாக வருகிறார். குப்தமாக தான் உங்களுக்கு ஞானம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். உலகத்தில்
யாரும் அறியவில்லை. குப்தமாக நீங்கள் உலகத்தின் இராஜ்யத்தை அடைகிறீர்கள். எந்த ஒரு சத்தமும்
இல்லை. முற்றிலும் குப்ததானம் என கூறப்படுகிறது அல்லவா. தந்தை வந்து குழந்தைகளுக்கு அழிவற்ற
ஞான இரத்தினங்களை மறைமுகமாக தானமாக அளிக்கிறார். பாபாவும் எவ்வளவு மறைமுகமாக இருக்கிறார்.
யாருக்கும் தெரியவில்லை. இவர்கள் அனைவரும் எங்கே போகிறார்கள், பிரம்மா குமார் குமாரிகள் என்ன
செய்கிறார்கள் எதையும் புரிந்துக் கொள்ளவில்லை. பாபா எவ்வளவு மறைமுகமாக இருக்கிறார் என குழந்தைகளாகிய
உங்களுக்குத் தெரியும். குழந்தைகளாகிய உங்களை உலகத்திற்கே அதிபதியாக மாற்றுகின்றார். எந்த சண்டையும்
இல்லை. எந்த வெடிகுண்டும் இல்லை, எந்த செலவும் இல்லை. இங்கே ஒரு சிறிய ஊரை அடைவதில் கூட
எவ்வளவு சண்டை, அடிதடி நடக்கிறது. எனவே தந்தை வந்து மறைமுகமாக தானம் செய்கிறார். அழியாத
ஞான இரத்தினங்களினால் உங்கள் பையை நிரப்புகின்றார். சிவ பாபா கள்ளம், கபடம் அற்றவரே, பொக்கிஷத்தினால்
எங்கள் பையை நிரப்புங்கள் என கூறுகிறார்கள்.
சிவபாபா அழிவற்ற ஞான இரத்தினங்களினால் நம்முடைய பையை நிரப்பிக் கொண்டிருக்கிறார்
என நீங்கள் அறிகிறீர்கள். எனவே ஒவ்வொரு இரத்தினமும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ளதாகும்.
நீங்கள் எவ்வளவு இரத்தினங்களை கொடுக்கிறீர்கள். பிறகு நீங்கள் எந்தளவு வள்ளல் ஆகிறீர்கள், அது
மறைமுகமாக இருக்கிறது. தேவதைகளுக்கு எவ்வளவு ஆயுதங்கள் உடைய கைகளைக் கொடுத்திருக்கிறார்கள்.
உண்மையில் எதுவும் இல்லை. சத்யுகத்தில் தேவதைகளுக்கு இவ்வளவு புஜங்கள் கிடையாது. கலியுகத்தில்
எத்தனை விதமான ஆயுதங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அழிவிற்காக அணுகுண்டுகள் இருக்கிறது
என்றால் பிறகு வாள், அம்பு போன்றவைகளை வைத்து என்ன செய்வார்கள். ஞான வாள், ஞான கத்தி
நீங்கள் கூறுவதை அவர்கள் ஆயுதம் என நினைத்துக் கொண்டார்கள் அப்படி எதுவும் இல்லை.
உங்களுக்கு மறைமுகமாக தானம் கிடைத்திருக்கிறது. நீங்கள் அனைவருக்கும் மீண்டும் மறைமுகமாக
தானம் அளிக்கிறீர்கள். பாபா நமக்கு ஸ்ரீமத் கொடுத்துக் கொண்டிருக்கிறார், பகவானுடையது ஸ்ரீமத்
ஆகும் என நீங்கள் அறிகிறீர்கள். நரனிலிருந்து நாராயணன் ஆவதற்காக நாம் வருகின்றோம் என
அறிகிறீர்கள். அவருக்கு சர்வ குணங்களும் நிறைந்தவர், 16 கலைகளிலும் நிறைந்தவர், தெய்வீக குணங்களை
உடையவர் என கூறப்படுகிறது. தெய்வீக குணம் அந்த தேவி தேவதைகளிடம் மட்டும் இருக்கிறது.
பிறகு கலைகள் குறைந்துக் கொண்டே வருகிறது. எப்படி முழு நிலவின் ஒளி நன்றாக இருக்கிறது. பிறகு
குறைந்துக் கொண்டே வருகிறது. குறைந்துக் கொண்டே வந்து ஒரேயடியாக மெல்லியதாக கோடு மட்டும்
மிஞ்சுகிறது. முழுமையாக மறைவது கிடையாது. நிச்சயமாக கோடு இருக்கிறது. அதற்கு அமாவாசை
என்கிறார்கள். இப்போது உங்களுடையது எல்லையற்ற விசயம் ஆகும். நீங்கள் 16 கலைகளில் நிரம்பியவர்
ஆகிறீர்கள். கிருஷ்ணரின் வாயில் தாய்மார்கள் சந்திரனை பார்த்தார்கள் என காண்பிக்கிறார்கள். இது
சாட்சாத்காரத்தின் விசயம் ஆகும். இதை பாபா வந்து புரிய வைக்கிறார். இப்போது நீங்கள் முழுமையாக
மாற வேண்டும் மாயாவின் சம்பூரண கிரகணம் பிடித்திருக்கிறது. மற்றபடி ஒரு மெல்லிய கோடு தான் மீதம்
இருக்கிறது. ஏணியில் இறங்கிக் கொண்டே வந்துள்ளீர்கள். அனைவரும் ஏணியில் இறங்கத்தான் வேண்டும்.
அப்போது தான் அனைவரும் வீட்டிற்குத் திரும்பப் போக முடியும். இப்போது நீங்கள் குறைந்த
எண்ணிக்கையில் இருக்கிறீர்கள். மெல்ல மெல்ல வளர்ச்சி அடையும். படிப்பில் பலர் தேர்ச்சி அடைவதில்லை.
உங்களுடைய சென்டர்கள் கூட மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்துக் கொண்டே இருக்கிறது. நேரம்
நெருங்கிக் கொண்டே போகும். பிறகு இவர்களிடம் என்ன இருக்கிறது என புரிந்துக் கொள்வார்கள்.
ஒவ்வொரு நாளும் வளர்ச்சி அடைந்துக் கொண்டே இருக்கிறார்கள். நாங்கள் இது எதுவரை தான்
நடக்கும், முடிந்து போகும் என்று நினைத்தோம் என இப்போது கூறுகிறார்கள். ஆரம்பத்தில் இந்த
பயத்தினால் பலர் வெளியேறி விட்டனர். என்ன நடக்கும் என தெரியவில்லை. இங்கேயும் இல்லை,
அங்கேயும் இல்லை. இதை காட்டிலும் வெளியேறி விடுவோம்.!
11.07.2016
(3/4)
அவர்களில் சிலர் மீண்டும் திரும்பி வந்துக் கொண்டிருக்கிறார்கள். பாபா எவ்வளவு எளிதாக புரிய
வைத்துக் கொண்டிருக்கிறார். இந்த அபலைகளுக்கு, அகல்யை போன்றவர்களுக்கு எந்த துன்பமும் கொடுப்ப
தில்லை. இவர்களையும் சீர்திருத்த வேண்டும். பாபா எங்களுக்கு எதுவும் எழுத படிக்கத் தெரியாது என
கூறுகிறார்கள். எதுவும் படிக்க வில்லை என்றால் மிகவும் நல்லது என பாபா கூறுகிறார். சாஸ்திரம் போன்ற
எவற்றை படித்திருக்கிறீர்களோ அவை அனைத்தையும் மறந்து விடுங்கள். நான் அதிகமாக எதையும் படிக்க
வைக்கவில்லை. என்னை நினைவு செய்தீர்களானால் இராஜ்ய பதவி உங்களுடையது என மட்டும் புரிய
வைக்கிறேன். அவ்வளவு தான் உங்களுடைய படகு கடந்து விடும். பிள்ளை பிறந்து விட்டால் பாபா என்று
கூறுவார்கள். அவ்வளவு தான். சொத்துக்கு உரிமையாளர் ஆகிவிடுகிறார்கள். இங்கேயும் நீங்கள் உரிமையாளர்
ஆகிறீர்கள். பாப்தாதாவை நினைத்தீர்கள், என்றால் இராஜ்யம் உங்களுடையதாகி விட்டது. ஆகவே தான்
நொடியில் ஜீவன் முக்தி என்று பாடப்பட்டிருக்கிறது. செல்வந்தர்களுக்கு கடைசியில் அவர்களுடைய நடிப்பின்
பாகம் ஆகும். முதலில் ஏழைகளின் முறையாகும். உங்களிடம் அவர்களாகவே வருவார்கள். (தோட்டி) துப்புரவு
தொழிலாளர்களைக் கூட முன்னேற்ற வேண்டும். மலைவாழ் மக்கள் பற்றிக் கூட பாடப்பட்டிருக்கிறது. இராமர்
காட்டுவாழ் மனிதனின் இலந்தை பழத்தை சாப்பிட்டார் என கூறுகிறார்கள். உண்மையில் இராமரும் சாப்பிடவில்லை,
சிவபாபாவும் சாப்பிடவில்லை. ஆம், ஒரு வேளை இந்த பிரம்மா வேண்டுமானால் சாப்பிட்டிருக்கலாம். மலைவாழ்
மக்கள் போன்றோர் வருவார்கள். டோலி போன்றவைகளை எடுத்து வந்தால் எப்படி மறுக்க முடியும். மலை
வாழ் மக்கள், வேசிகள் போன்றோர் எடுத்து வருவார்கள் என்றால் நீங்களும் சாப்பிடுவீர்கள். நான் சப்பிட
மாட்டேன். நான் எதையும் அனுபவிக்காதவன் என சிவபாபா கூறுகின்றார். உங்களிடம் அனைவரும் வருவார்கள்.
இவர்களை கை தூக்கி விடுங்கள் என அரசாங்கம் கூட உதவி செய்யும். உங்களுக்கும் கூட தானாகவே
தூண்டுதல் ஏற்படும். பாபா ஏழை பங்காளன் என்றால் நாம் கூட ஏழைகளுக்குப் புரிய வைக்கலாம். காட்டுவாழ்
மக்களிலிருந்தும் வருவார்கள். இவ்வளவு பெரிய மரமாக இருக்கிறது, இதில் ஒருவர் கூட தேவி தேவதா
தர்மத்தினர் இல்லை. மற்ற தர்மங்களில் மாறி போய் இருக்கிறார்கள். பக்தி செய்யக் கூடியவர்களுக்கு புரிய
வையுங்கள் என பாபா இப்போது புரிய வைக்கிறார். நாற்று எவ்வாறு நடப்படுகிறது என நீங்கள் பார்த்துக்
கொண்டிருக்கிறீர்கள். எப்படி பிராமணர் ஆகிறார்கள். சூரிய வம்சம், சந்திர வம்ச தேவதையாக மாறக் கூடியவர்கள்
வந்துக் கொண்டே இருப்பார்கள். ஒரு முறை கேட்டாலும் சொர்க்கத்தில் நிச்சயம் வருவார்கள். பாபா காசியில்
கிணற்றில் குதித்து இறப்பவர்களின் எடுத்துக்காட்டைப் பற்றியும் கூறியிருக்கிறார். சிவனிடம் சென்று அர்ப்பணம்
செய்தனர். அவர்களுக்கு ஏதாவது கிடைக்க வேண்டும். நீங்களும் அர்ப்பணம் ஆகிறீர்கள். இராஜ்யத்திற்காக
முயற்சி செய்கிறீர்கள். பக்தி மார்க்கத்தில் இராஜ்யம் எதுவும் இல்லை. ஒருவரும் திரும்பி போக முடியாது.
என்ன நடக்கிறது. அவர்கள் செய்த பாவங்களினுடைய தண்டனையை அனுபவித்து முடிக்கிறார்கள். பிறகு
புதிய தலை முறையில் பிறவி எடுக்கிறார்கள். புதிய தலைமுறையில் பாவம் ஆரம்பம் ஆகிறது. நீங்களும்
நம்பர் ஒன்னில் இருக்கிறீர்கள். நீங்கள் தான் 84 பிறவிகளை அனுபவிக்கிறீர்கள். அனைவரும் சதோ, ரஜோ,
தமோவில் வர வேண்டியிருக்கிறது. இச்சமயம் முழு மனித சிருஷ்டி என்ற மரமும் இற்றுப் போய் இருக்கிறது
என பாபா கூறியிருக்கிறார். மனிதர்கள் முற்றிலும் காரிருளில் கும்பகர்ணனின் தூக்கத்தில் தூங்கிக்
கொண்டிருக்கிறார்கள். ஒரு கும்பகர்ணன் இல்லை. பலர் இருக்கிறார்கள். நீங்கள் எவ்வளவு தான் புரிய வைத்தாலும்
கேட்பதில்லை. யாருக்கு பாகம் இருக்கிறதோ அவர்கள் முயற்சி செய்கிறர்கள். மேலும் அவர்களே தாய்
தந்தையின் இதயத்திலும் அமர்கிறார்கள். இராஜ்ய சிம்மாசனத்திலும் அவர்களே அமர்வார்கள். நிறைய பெண்
குழந்தைகள், பாபா குழந்தைகளை மிரட்ட வேண்டியிருக்கிறது என கேட்கிறார்கள். குழந்தைகளுக்கு அந்தளவு
புரிதல் இல்லை என பாபா கூறுகிறார். அழுக்கான எங்களை தூய்மையாக்குங்கள் என நீங்கள் எங்களை
அழைத்தீர்கள். காமம் மிகப் பெரிய எதிரி என பாபா கூறுகின்றார். கோபம் எதிரி என கூறப்படுவதில்லை.
தாய்மார்களுக்குள் இவ்வளவு கிடையாது. ஆண்கள் மிகவும் சண்டை இடுகிறார்கள். இப்போது பாபா தாய்மார்
களாகிய உங்களை முன்னால் வைத்திருக்கிறார். வந்தேமாதரம். இல்லையென்றால் தாய்மார்களிடம் உன்னுடைய
கணவரே உனக்கு குரு ஈஸ்வர், அவருடைய வழிப்படி நடக்க வேண்டும் என கூறுகிறார்கள். கை விலங்கு
போடப்பட்டது. பிறகு உடனே அழுக்காகி விடுகின்றனர். இப்படிப்பட்ட இந்த ஈஸ்வர் அவர்களுக்கு கிடைத்திருக்
கிறார். இப்போது அராம இராஜ்யம் உருவாகிறது. மற்ற அனைவரும் இறந்துக் கொண்டே போவார்கள்.
வினாசக் காலத்தில் விபரீத புத்தி, வினாசக் காலத்தில் அன்பு புத்தி என பாபா புரிய வைக்கின்றார். உங்களுக்கு
பரம்பிதா பரமாத்மாவோடு அன்பான புத்தி இருக்கிறது. சிவபாபா இவருக்குள் வருகிறார். இவர் மூலமாக நாம்
கேட்டுக் கொண்டிருக்கின்றோம் என உங்களுடைய ஆத்மா அறிகிறது. இவ்வளவு சிறிய புள்ளியாகும். இது
சிவபாபாவினுடைய தற்காலிக ரதம் ஆகும். இவர் மூலமாக இந்த ருத்ர ஞான யக்ஞத்தை படைக்கிறார். அது
வளர்ச்சி அடைந்துக் கொண்டே போகும். குழந்தைகளின் சிறு, சிறு துளிகளினால் குளம் நிறைந்துக்
கொண்டிருக்கிறது. குழந்தைகள் தங்களுடையதை அர்ப்பணம் செய்துக் கொண்டே இருக்கிறார்கள். ஏனென்றால்
இது அனைத்துமே மண்ணோடு மண்ணாகிறது, எதுவுமே இருக்காது என அறிகிறார்கள். இவ்வளவாது
11.07.2016
(4/4)
பயன்படட்டுமே. சுதாமாவின் எடுத்துக் காட்டு இருக்கிறது அல்லவா. பெண்குழந்தைகள் பாபாவிடம் ஒரு பிடி
அரிசி அல்லது 6லி8 ரூபாய் அனுப்புகிறார்கள். ஆஹா குழந்தாய்! பாபா ஏழைபங்காளன் அல்லவா. இது
அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது, மீண்டும் நடக்கும் பந்தனத்தில் இருப்பவர்கள் இருக்கிறார்கள்.
பாக்கியசாலி நீங்கள். சிவபாபாவின் கை கிடைத்திருக்கிறது அல்லவா என்று பாபா கூறுகிறார். ஒரு நாள் வரும்,
அனைத்து ஆரிய சமாஜம் போன்றோரும் வருவார்கள். எங்கே போவார்கள். முக்தி, ஜீவன் முக்திக்கான கடை
ஒன்று தான். தண்டனைகளை அடைந்து அனைவரும் முக்திக்குப் போக வேண்டும். இது அழிவுக்கான
தருணம் ஆகும். அனைவரும் திரும்பி போவார்கள். இது பிரிய தர்ஷனின் ஊர்வலம், ஊர்வலம் எப்படி
போகும் என்பதன் காட்சிகள் கூட கிடைக்கும். உங்களைத் தவிர வேறு யாரும் பார்க்க முடியாது. நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை
வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம் :
1. பாபா மூலமாக மறைமுகமாக ஞான தானம் கிடைத்திருக்கிறது. அதன் மதிப்பை புரிந்துக்
கொண்டு தங்களின் பையை ஞானரத்தினங்களால் நிரப்ப வேண்டும். அனைவருக்கும் மறைமுகமாக
தானம் அளித்துக் கொண்டே செல்ல வேண்டும்.
2. இது அழிவுக்கான சமயம், இப்போது திரும்பச் செல்ல வேண்டும் என்பதால் உங்களுடைய
அனைத்தையும் அர்ப்பணம் செய்ய வேண்டும். அன்பான புத்தி உடையவர்களாக வேண்டும். முக்தி
மற்றும் ஜீவன் முக்தியின் வழியை அனைவருக்கும் கூற வேண்டும்.
வரதானம் : புத்தி என்ற கால், மரியாதை என்ற கோட்டிற்குள்ளாகவே வைக்கக் கூடியவராகி
அனைத்து பலன்கள் நிறைந்த சக்திசாலி ஆகுக !
எந்த குழந்தைகள் புத்தி என்ற கால் மூலமாக மரியாதை என்ற கோட்டிலிருந்து வெளியே
எடுக்கவில்லையோ அவர்கள் அதிர்ஷ்டசாலி மற்றும் அன்பிற்கு உட்பட்டவர் ஆகிறார்கள். அவர்களுக்கு ஒரு
போதும் எந்த ஒரு தடை மற்றும் புயல், குழப்பம், மனச்சோர்வு வர முடியாது. ஒரு வேளை வருகிறது
என்றால் நிச்சயம் புத்தி என்ற கால் மரியாதை என்ற கோட்டிற்கு வெளியே வந்திருக்கிறது என புரிந்துக்
கொள்ள வேண்டும். கோட்டை விட்டு வெளியே வருதல் என்றால் பிச்சைக்காரன் ஆகுதல் என்று பொருள்.
ஆகவே, ஒரு போதும் பிச்சைக்காரன் என்றால் கேட்கக் கூடியவராக இருக்காதீர்கள். அனைத்து பிராப்திகளிலும்
நிரம்பியவராகி சக்திசாலி ஆகுங்கள்.
சுலோகன் : யார் எப்போதும் விடுபட்டும் அப்பாவிற்கு அன்புடையவராகவும்
இருக்கிறார்களோ அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.
(1/4)
12
12.07.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! நீங்கள் உங்களது வாழ்க்கையை வைரம் போல ஆக்குவதற்காக
தந்தையிடம் வந்துள்ளீர்கள். தந்தையின் நினைவினால் தான் அப்பேர்ப்பட்ட வாழ்க்கை
அமையும்.
கேள்வி: புதிய உலகத்தில் உயர்ந்த பதவிக்காக எந்த ஒரு முக்கியமான முயற்சி செய்ய வேண்டும்?
பதில்: பாபா கூறுகிறார் லி இனிமையான குழந்தைகளே ! எந்த பழைய சம்பந்தியினர் (உறவினர்)
இவ்வளவு துக்கம் தந்தனரோ, அவர்களது மோக வலையிலிருந்து புத்தியை நீக்கி தற்போது என் ஒருவனை
நினைவு செய்யுங்கள். அவர்களுடன் வாழ்ந்து கொண்டே மனதை என்னிடம் ஈடுபடுத்துங்கள். மன்மனாபவ
என்ற மந்திரத்தை எப்பொழுதும் நினைவில் கொண்டீர்கள் என்றால் நீங்கள் புதிய உலகத்தில் உயர்ந்த
பதவியை அடைவீர்கள்.
பாடல்: நீ இரவெல்லாம் உறங்கி இழந்தாய்.. .. .. ..
ஓம் சாந்தி. எப்படி குழந்தைகளுக்கு எல்லா சாஸ்திரங்களின் சாரத்தை புரிய வைக்கிறாரோ, அதே போல
இந்த பாடல்களின் சாரத்தைக் கூட உங்களுக்குப் புரிய வைக்கிறார். அவரே அனைவரின் ஆன்மீகத் தந்தை.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு பிரம்மா உடலில் வந்து புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். ஹே குழந்தைகளே,
நமது வைரம் போன்ற பிறவி அமைந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்துள்ளீர்கள் என்று தந்தை புரிய
வைக்கிறார். தந்தையிடம் நீங்கள் வருவதே வைரம் போன்ற பிறவியை அமைப்பதற்காக. சொர்க்கவாசி
களினுடையது வைரம் போன்ற பிறவி என்று கூறப்படுகிறது. நரகவாசிகளினுடையது சோழி போன்ற பிறவியாகும்.
நீங்கள் சங்கம யுகத்தையும் அறிந்து கொண்டு விட்டுள்ளீர்கள். நாம் இப்பொழுது சங்கமயுகவாசி ஆவோம்.
இந்த சங்கமயுகம் அனைவருக்குமே மங்களமானதாகும். இந்த சங்கமயுகத்தில் தான் அனைவருக்கும் கதி
சத்கதி ஆகிறது. யார் செய்கிறார்? பரந்தாமத்திலிருந்து வரக்கூடிய பிரயாணி. அவர் பிரயாணி ஆவார். நீங்கள்
பிரயாணி கிடையாது. நீங்கள் வந்து போவது இல்லை. நான் பழைய உலகத்தில் வந்து பிறகு திரும்பிச்
செல்கிறேன் என்று தந்தை கூறுகிறார். இந்த சேவை செய்யக் கூடிய பிரயாணி ஒரே ஒருவர் ஆவார் என்பதை
குழந்தைகள் அறிந்துள்ளார்கள். அவர் வந்து குழந்தைகளாகிய நமக்கு பெரிய சேவை செய்கிறார். இப்பேர்ப்பட்ட
சேவையை வேறு யாரும் செய்ய முடியாது. பதீதர்களாகிய நமக்கு வந்து சேவை செய்யுங்கள் என்று சேவைக்காகத்
தான் அழைக்கிறார்கள். நான் குழந்தைகளின் சேவையில் வந்துள்ளேன். ஏனெனில் குழந்தைகள் மிகவும்
துக்கமடைந்துள்ளார்கள் என்று தந்தையும் கூறுகிறார். எங்களது துக்கத்தை நீக்குங்கள் மற்றும் அமைதியை
வழங்குங்கள் என்று முறையிடவும் செய்கிறார்கள். சுகம் மற்றும் சாந்தி இரண்டு விஷயங்கள் எப்பொழுதும்
நினைவில் இருக்கின்றன. இங்கு துக்கம் மற்றும் அசாந்தி உள்ளது. அதனால் தான் அழைக்கிறார்கள். தந்தை
தான் வந்து சிருஷ்டிச் சக்கரத்தின் முழு இரகசியத்தையும் குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். இப்பொழுது
பக்தி மார்க்கம் முடிவடைகிறது என்பதை குழந்தைகள் புரிந்துள்ளார்கள். கலியுகத்தின் கடைசி என்றால் பக்தி
கீழே இறங்கி கொண்டே வருகிறது. ஞானத்தினால் உங்களுக்கு முன்னேறும் கலை ஆகி விடுகிறது. நீங்கள்
உயர்ந்ததிலும் உயர்ந்த பதவியை அடைந்து விடுகிறீர்கள். பின்னர் அந்த பிராப்தியின் சுகம் குறைந்துக்
கொண்டே போகிறது. பக்தி பாரதத்தில் இருக்கும் அளவிற்கு வேறு எங்குமே இல்லை. அரை கல்பம் பக்தி
நடக்கிறது. துவாபரம் ஆரம்பமானது முதல் மற்ற தர்மங்களின் ஸ்தாபனை ஆக ஆரம்பமானது. முதல் பக்தி
ஆரம்பமாகிறது. பக்தி கூட முதலில் நன்றாக இருக்கும். எப்படி சொர்க்கம் முதலில் மிகவும் நன்றாக இருக்குமோ
அப்படி. பிறகு மெது மெதுவாகக் கலைகள் குறைந்துக் கொண்டே போகின்றன. பக்தி ஆரம்பமாகும் பொழுது
முதன் முதலில் சிவனின் பூசாரி ஆகிறார்கள். அரை கல்பம் எந்த ஒரு பூஜையும் ஆவதில்லை. பிறகு பக்தி
மார்க்கம் ஆரம்பமாகும் பொழுது மற்ற தர்மங்களும் ஆரம்பமாகின்றன. இவ்வளவு பக்தி வேறு யாரும்
செய்யமுடியாது. முழுமையாக அரைகல்பம் பக்தி நடக்கிறது. எந்த தந்தை அனைவருக்கும் குறிப்பாக பாரதத்திற்கு
சத்கதி அளிக்கிறாரோ, சொர்க்கத்திற்கு அதிபதியாக ஆக்குகிறாரோ, அதே தூரதேசத்துப் பிரயாணி இப்பொழுது
குழந்தைகளாகிய நமக்கு மீண்டும் சொர்க்கத்தின் அரசாட்சியை அளிக்க வந்துள்ளார் என்பதையும் குழந்தைகளாகிய
நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஆஸ்தி கூட எவ்வளவு வலிமையானது. ஆனால் ஒரு விஷயம் கூட யாருடைய
புத்தியிலும் பதியவில்லை. பாரதத்தில் எவ்வளவு பக்தி செய்கிறார்கள். எவ்வளவு கோவில்கள் உள்ளன. பாரத
கண்டத்தில் ஏராளமான கோவில்கள் உள்ளன. இவை யாருடைய கோவில்கள் என்பதை இப்பொழுது நீங்கள்
அறிந்துள்ளீர்கள். முதன் முதலில் சிவபாபாவின் கோவில் அமைக்கப்படுகிறது. பிறகு தேவதைகளின் கோவில்கள்
அமைக்கப்படுகின்றன. அந்த கோவில்கள் கூட உங்கள் முன்னால் உள்ளன. ஒரு புறம் சிவபாபாவிற்கு பூஜை
செய்துக் கொண்டே இருக்கிறார்கள், மறுபுறம் சிவபாபா உங்களை பூஜைக்குரியவராக ஆக்கிக் கொண்டிருக்கிறார்.
நீங்கள் பூஜைக்குரிய தேவதை ஆவதற்காக இங்கு வந்துள்ளீர்கள். யாரெல்லாம் தேவதைகளுக்குப் பூசாரியாக
12.07.2016
(2/4)
இருக்கிறார்களோ உண்மையில் அவர்களும் வந்து இங்கு பிராமணர்களாக ஆவார்கள். மெள்ள மெள்ள விருத்தி
ஆகிக்கொண்டே போகும். எல்லோரும் ஒட்டு மொத்தமாக படிக்க முடியாது. நேரம் பிடிக்கிறது. முந்தைய
கல்பத்தில் கூட யார் படித்திருக்கக் கூடுமோ அவர்களே பின்னர் படிப்பார்கள். ஒருவருக்கொருவர் படிப்பித்துக்
கொண்டே இருக்க வேண்டும். அனைவருக்கும் தந்தை மற்றும் சிருஷ்டியின் முதல், இடை, கடை பற்றிய
ஞானத்தைக் கூறுகிறீர்கள். அதன் மூலம் மனிதர்கள் சொர்க்கத்தின் அதிபதி ஆகி விட முடியும். அதை வந்து
புரிந்து கொள்ளுங்கள். இந்த நாடகம் எப்படி சக்கரம் சுற்றி வருகிறது என்பது குழந்தைகளாகிய உங்களுடைய
புத்தியில் உள்ளது. இலட்சக்கணக்கான வருடங்களின் கதையை யாருமே கூற முடியாது. 5 ஆயிரம்
வருடங்களுக்கு முன்னால் என்ன இருந்தது, யாருடைய ஆட்சி இருந்தது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
பாரதத்தில் பூஜைக்குரிய தேவி தேவதைகளாகிய நம்முடைய இராஜ்யம் இருந்தது. நாம் பூஜைக்குரியவராக
இருந்தோம். பிறகு பூஜாரி ஆனோம் என்பது நினைவில் வந்தது அல்லவா? இதற்கு முன்பு இது தெரியாமல்
இருந்தது. நாமே பூஜைக்குரிய தேவதைகளாக இருந்தோம். பிறகு நாம் 84 பிறவிகள் எடுத்தோம். 84 பிறவிகளின்
கதை இலட்சுமி நாராயணருடையதாகும். நீங்கள் உங்களுடைய 84 பிறவிகளின் கதையைக் கூறுகிறீர்கள்.
அவர்களுக்கு தங்களுடைய கதையை அமர்ந்து எழுதுவதில் நிறைய நேரம் பிடிக்கிறது. உங்களால் ஒரு
நிமிடத்தில் 84 பிறவிகளின் கதையைக் கூற முடியும். அவர்கள் ஒரு பிறவியின் கதையை எழுதுகிறார்கள்.
சிறிய வயதில் என்னென்ன செய்தோம் என்பதை அவர்களுடைய கதையில் கூறுகிறார்கள். நாங்கள் எப்படி
84ன் சக்கரத்தைச் சுற்றுகிறோம். ஒருவருடைய விஷயம் கிடையாது. நிறைய பிராமணர்கள் இருக்கிறார்கள்.
நீங்கள் தான் இந்த சக்கரத்தை அறிந்துள்ளீர்கள். இந்த சக்கரத்தை அறிந்து கொள்வதால் நீங்கள் இராஜா
இராணி ஆகிறீர்கள். மேலும் மற்றவர்களை ஆக்கவும் செய்கிறீர்கள். பக்தி கூட பாரதவாசிகளைப் போல வேறு
யாரும் செய்வதில்லை. மற்றது எதெல்லாம் மடங்கள், சம்பிரதாயங்கள், தர்மங்கள் ஆகியவை உள்ளனவோ,
அவை நமது பக்தியின் காலத்தில் ஸ்தாபனை ஆகிறது. முதன் முதலில் நம்முடையது எவ்வளவு சிறிய
மலர்களின் செடியாக இருந்தது. ஆன்மீகத் தோட்டமாக இருந்தது. நீங்கள் உயிரூட்டமுடைய மலர்களாக
இருந்தீர்கள். இதற்கு மலர்களின் தோட்டம் என்று கூறப்படுகிறது. பிறகு அதுவே முட்களின் தோட்டமாக
ஆகிக் கொண்டே போகிறது. இச்சமயம் எல்லோருமே முட்களாக ஆகி விட்டுள்ளார்கள். பிறகு முட்களிலிருந்து
மலராக எப்படி ஆவது என்பதை தந்தை வந்து புரிய வைக்கிறார். ஒருவருக்கொருவர் துக்கம் கொடுப்பது
முள் குத்துவது போல ஆகும். மாணவ வாழ்க்கை மிகச் சிறந்தது என்று கூறப்படுகிறது. அது மிகவும் நன்றாக
இருக்கும். ஆண் குழந்தைகளும், பெண் குழந்தைகளும் மிகவும் மகிழ்ச்சியுடன் படித்துக் கொண்டே இருப்பார்கள்.
திருமணம் செய்தார்களோ இல்லையோ பின் ஒருவருக்கொருவர் முள் குத்த ஆரம்பிப்பார்கள். சத்யுகத்தில்
யாருமே முள் குத்துவதில்லை. இப்பொழுது நீங்கள் மீண்டும் மலர் ஆகிறீர்கள். பாரதம் சொர்க்கமாக இருக்கும்
பொழுது எவ்வளவு அளவற்ற சுகம் இருந்தது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். தங்கச் சுரங்கங்கள் இருந்தன.
இப்பொழுது அவை காலியாகி விட்டது. பிறகு உங்களுக்கு நிரம்ப கிடைக்கும். பாரதத்தில் தான் தங்கம்,
வைரம், வைடூரியத்தின் சுரங்கங்கள் இருந்தன. அச்சமயம் அமெரிக்கா போன்ற எதுவும் இருக்காது. பாம்பே
கூட இருக்காது. ஆச்சரியமல்லவா? கலியுகக் கடைசியில் சிறிதளவு கூட தங்கம் தென்படுவதில்லை. பிறகு
சத்யுக ஆரம்பத்தில் இத்தனை தங்கச் சுரங்கங்களும் நிரம்பியதாகி விடுகிறது. தங்க மாளிகை ஆகி விடுகின்றன.
ஆச்சரியமில்லையா? அங்கு சுரங்கங்களிலிருந்து எவ்வளவு ஏராளமான தங்கத்தை வெளியே எடுக்கிறார்கள்.
எப்படி இங்கு மண்ணினால் செங்கல் தயாராகிறதோ, அதேபோல அங்கு தங்கக் கட்டிகள் தயாராகின்றன.
மாயா மச்சந்தர் என்ற நாடகத்தைக் காண்பிக்கிறார்கள். அங்கு தங்கமே தங்கம் என்ற காட்சியைப் பார்த்தார்.
உண்மையில் சத்யுகத்தில் தங்கம் இருக்கும். இங்கே பாருங்கள், மண்ணினுடைய செங்கற்கள் கூட கிடைப்பதில்லை.
இங்கு எந்த அளவிற்கு செங்கற்கள் பைசா கொடுத்து கிடைக்கிறதோ, அந்த அளவு அங்கு தங்க கற்கள்
இலவசமாக கிடைக்கும். இரவு பகலுக்கான வித்தியாசம் உள்ளது. பின் ஏன் புது உலகத்தில் உயர்ந்த பதவியை
அடைவதற்கான முயற்சி செய்யக் கூடாது. இங்கு மோகத்தின் வலையில் ஏன் சிக்க வேண்டும்?
பழைய சம்பந்தங்களில் நீங்கள் எவ்வளவு துக்கம் எடுக்கிறீர்கள் என்று தந்தை கூறுகிறார்? இவர்களை
விட்டு விடுங்கள் என்று அப்படி ஒன்றும் பாபா கூறுவதில்லை. புத்தியோகத்தை ஒரு தந்தையிடம்
ஈடுபடுத்தினால் மட்டும் போதும். பின் நீங்கள் உலகத்தின் அதிபதி ஆகி விடுவீர்கள். மன்மனாபவ என்பதன்
பொருளே என்னை நினைவு செய்யுங்கள் மற்றும் விஷ்ணு சதுர்புஜ லி அதாவது விஷ்ணுபுரியை நினைவு
செய்யுங்கள். அடிப்படை வார்த்தை ஒன்றே ஒன்று தான். பக்தி மார்க்கத்தில் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.
இப்பொழுது ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் பிரியதரிசனான ஒரே ஒரு பரமபிதா பரமாத்மாவின்
பிரியதரிசினிகள் ஆவீர்கள். அவர் உங்களை சுகதாமத்திற்கு அதிபதியாக ஆக்குகிறார். அனைத்து ஆத்மாக்களும்
அவரை நினைவு செய்கிறார்கள். நீங்கள் ஆன்மீக பிரியதரிசனருக்கு உடையவர்களான ஆன்மீக பிரியதரிசினிகளாக
ஒரே ஒரு முறை ஆகிறீர்கள். மற்றபடி எல்லா மனிதர்களும் உலகியலிலான பிரியதரிசினி மற்றும் பிரியதரிசனர்
களாக இருக்கிறார்கள். இப்பொழுது எல்லையில்லாத பிரியதரிசினிகளுக்கு எல்லையில்லாத பிரியதரிசனர் வந்து
12.07.2016
(3/4)
கிடைத்துள்ளார். வாருங்கள் வந்து எங்களை பதீத நிலையிலிருந்து பாவனமாக ஆக்குங்கள் என்றும் அவருக்குக்
கூறுகிறார்கள். ஒருவரைத் தான் அழைக்கிறார்கள். நமது ஆத்மா பதீதமாக ஆகி விட்டுள்ளது. எனவே பதீத
பாவனரே ! வாரும், என்று அழைக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். கும்பமேளா நடைபெறுகிறது.
அதில் எத்தனை பேர் போய் கங்கா ஸ்நானம் செய்கிறார்கள். நன்மை எதுவும் கிடையாது. யாருமே தூய்மை
யாக ஆவதில்லை. இப்பொழுது தந்தை வந்து ஞானமழை பொழிகிறார். உங்கள் மீது ஞானமழை ஆகிக்
கொண்டிருக்கிறது. அதன் மூலம் மீண்டும் முட்களின் காடு மலர்களின் தோட்டமாக ஆகி விடும். நமது
இராஜ்யம் இருக்கும் பொழுது அங்கு பதீதமானோர் எவரும் இருக்கவே மாட்டார்கள் என்பதை நீங்கள்
அறிந்துள்ளீர்கள். முழு உலகத்தின் மீது ஞான மழை ஏற்பட்டு விடுகிறது. எல்லாமே பசுமையாக ஆகி
விடுகிறது. வைரம், வைடூரியங்களின் சுரங்கங்கள் கூட புதியதாகி விடுகிறது. இப்பொழுது குழந்தைகளாகிய
நீங்கள் எவ்வளவு குμயில் இருக்க வேண்டும். நீங்கள் என்னை நினைவு செய்தீர்கள் என்றால், உங்களுடைய
விகர்மங்கள் அழிந்து போகும் என்று எல்லையில்லாத தந்தை வந்து புரிய வைக்கிறார் என்பதை நேரிடையாகப்
பார்க்கிறீர்கள். நீங்கள் எங்கு அமர்ந்திருந்தாலும் சரி, ஸ்நானம் செய்யுங்கள், புத்தியில் தந்தையின் நினைவிருக்
கட்டும். அங்கு நினைவு செய்வதற்கான நேரம் உள்ளது. தந்தையை எவ்வளவு நினைவு செய்வீர்களோ
அவ்வளவு சம்பாத்தியம் உள்ளது. நினைவினால் தான் சம்பாத்தியம் உள்ளது. நினைவினால் சம்பாத்தியம்
ஆகிறது என்று எப்பொழுதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எவ்வளவு பெரிய சம்பாத்தியம் ஆகும். நீங்கள்
விஷ்ணுபுரிக்கு அதிபதி ஆகி விடுவீர்கள். ஆத்மாக்களாகிய நம்முடைய தந்தை நிராகாரமானவர் ஆவார்
என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அவர் இந்த சரீரத்தின் ஆதாரம் எடுத்துள்ளார். பாகீரதனின் வர்ணனை
கூட உள்ளது அல்லவா? பாக்கியசாலி ரதம் ஆகும். அந்த ரதத்தில் பரமபிதாவின் பரம ஆத்மா சவாரி
செய்கிறார். ஆத்மாவின் ரதம் தயாராக ஆகி விடும் பொழுது சட்டென்று ஆத்மா வந்து பிரவேசம் செய்கிறது.
தந்தை இந்த ரதத்தில் தான் வந்து ஞானத்தை மட்டும் அளிக்க வேண்டி உள்ளது. அநேக பிறவிகளின்
கடைசி பிறவியில், வானப் பிரஸ்த நிலையாகும் பொழுது, நான் வந்து இவருக்குள் பிரவேசம் செய்கிறேன்
அல்லது இந்த ரதத்தில் வந்து அமருகிறேன். மற்றபடி எந்த ஒரு குதிரை வண்டி, ரதத்தின் விஷயம்
கிடையாது. இப்பொழுது உங்களுக்கு இந்த ஞானம் கிடைத்துள்ளது. தந்தை வந்து நேரிடையாக குழந்தைகளாகிய
உங்களுக்குப் புரிய வைக்கிறார். உங்களுக்கு மிகுந்த குμ இருக்க வேண்டும். ஐ.சி.எஸ். பரீட்சைக்காகப்
படிக்கிறார்கள் என்றால், மிகுந்த போதை இருக்கும். அது எல்லாவற்றையும் விட உயர்ந்த பரீட்சையாகும்.
உங்களுடையதும் இது படிப்பு ஆகும். இது பகவானின் பாடசாலையாகும். இப்பொழுது பகவான் யார் என்ற
கேள்வி எழுகிறது. ஸ்ரீ கிருஷ்ணரா இல்லை சிவபாபாவா? அனைவருக்கும் பகவான் யார்? ஒரே ஒரு
நிராகாரமானவரைத் தவிர எல்லோருமே கிருஷ்ணரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அனைத்து ஆத்மாக்களின்
தந்தை அவர் நிராகாரமான பரமபிதா பரமாத்மா ஆவார். அவர் எப்பொழுதும் பரந்தாமத்தில் இருக்கிறார்.
குழந்தைகளை சொர்க்கத்திற்கு அதிபதியாக ஆக்க ஒரே ஒரு முறை வருகிறார். அதே பாபா கல்ப கல்பமாக
வந்து நம்மை ஆண்டியிலிருந்து அரசனாக ஆக்குகிறார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். பாரதம் இப்பொழுது
மிகவும் ஏழையாக உள்ளது அல்லவா? பிறகு அடுத்த பிறவியில் என்ன ஆக வேண்டி உள்ளது என்பது
எல்லாமே உங்களுக்கு சாட்சாத்காரம் ஆகி உள்ளது. விநாசத்தினுடைய சாட்சாத்காரம் கூட செய்துள்ளீர்கள்.
ஸ்தாபனையையும் பார்த்துள்ளீர்கள். நான் உங்களை இராஜாக்களுக்கெல்லாம் இராஜாவாக ஆக்குகிறேன் என்று
பகவான் கூறுகிறார். நிறைய தான புண்ணியம் செய்வதால் ஒரு சிலருக்கு அல்ப கால சுகம் கிடைக்கிறது.
இராஜாக்களிடம் பிறவி எடுத்து பிறகு உடனே இறந்து விடுகிறது. ஒரு சில கர்ப்பத்திலேயே இறந்து விடுகிறது.
ஒரு சில நொண்டியாக, முடவனாக, ஒற்றைக் கண்ணனாக ஆகி விடுகிறார்கள். எப்படி கர்மம் செய்கிறார்களோ,
அப்படி பதவியை அடைகிறார்கள். இப்பொழுது உங்களை இராஜாக்களுக்கெல்லாம் இராஜாவாக ஆக்குகிறார்.
பாபா நாங்கள் சமர்ப்பணம் ஆகிறோம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். எனவே அவசியம் நீங்கள் இராஜ்யத்தையும்
பெறுவீர்கள். பாரத தேசம் மகாதானி கண்டம் என்று கூறப்படுகிறது. இங்கு தான புண்ணியம் நிறைய செய்கிறார்கள்.
அது பிறகு பக்தி மார்க்கத்தில் ஆரம்பமாகிறது. இப்பொழுது தந்தை உங்களுக்கு 21 பிறவிகளுக்கு தானம்
கொடுக்கிறார். இப்பொழுது நீங்கள் பாபா மீது சமர்ப்பணம் ஆகிறீர்கள். உடல், மனம், பொருள் ஆகிய எல்லா
வற்றையும் கொடுத்து விட்டீர்கள். இப்பொழுது டிரஸ்டி ஆகி இருங்கள் என்று தந்தை கூறுகிறார். உங்கள் வீடு
வாசலை பராமரியுங்கள். எல்லாமே சிவபாபாவினுடையதாகும். நான் உங்களுடையவன் ஆவேன். உங்களை
தான் நினைவு செய்கிறேன். மனதார சமர்ப்பணம் செய்கிறார்கள். தாரளமாக மாளிகையில் இருங்கள், உலாவுங்கள்,
சுற்றுங்கள், குμயைக் கொண்டாடுங்கள். என்னை நினைவு மட்டும் செய்தீர்கள் என்றால், நீங்கள் மகிழ்ச்சியாக
இருப்பீர்கள் என்று தந்தை கூறுகிறார். நீங்கள் உலகிற்கு அதிபதியாக இருந்தீர்கள். இப்பொழுது மீண்டும்
நீங்கள் முயற்சி செய்து அது போல ஆகிறீர்கள். இனிமையிலும் இனிமையான குழந்தைகளே ! இந்த யோக
பலத்தினால் தான் நீங்கள் விகர்மங்களை வென்றவர்களாக ஆவீர்கள் என்று தந்தை புரிய வைக்கிறார். தந்தையின்
நினைவினால் நீங்கள் உலகிற்கு அதிபதி ஆகிறீர்கள். நல்லது.
12.07.2016
(4/4)
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட
செல்லமான குழந்தைகளுக்குத் தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும்
காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. இராஜ்ய பதவியைப் பெறுவதற்காக தந்தை மீது முழுமையாக சமர்ப்பணமாக வேண்டும்.
உடல், மனம், பொருள் அனைத்தையும் சமர்ப்பணம் செய்து டிரஸ்டியாகி இருக்க வேண்டும்.
விகர்மங்களை வென்றவராக (விகர்மாஜீத்) ஆவதற்கான முயற்சி செய்ய வேண்டும்.
2. நினைவில் தான் சம்பாத்தியம் உள்ளது. எனவே நிரந்தர நினைவில் இருப்பதற்கான முயற்சி
செய்ய வேண்டும். மலர்களின் உலகத்திற்கு அதிகாரியாகி விடக் கூடிய வகையில்
அப்பேர்ப்பட்ட ஆன்மீக மலராக வேண்டும். உள்ளுக்குள் எந்த ஒரு முள் கூட இருக்கக்
கூடாது.
வரதானம்: அலௌகீக விளையாட்டு மற்றும் விளையாட்டு பொருட்களுடன்
விளையாடியபடியே சதா சக்திசாலியாகக் கூடிய ஆடாது அசையாதவர் ஆகுக !
அலௌகீக வாழ்க்கையில் மாயையின் தடை வருவது கூட அலௌகீக விளையாட்டு ஆகும். எப்படி
உடலின் சக்திக்காக விளையாட்டு விளையாடப்படுகிறதோ அதேபோல அலௌகீக யுகத்தில் நிலைமைகளை
விளையாட்டு பொருட்களாகக் கருதி, இந்த அலௌகீக விளையாட்டை விளையாடுங்கள். அவற்றிற்கு பயப்படா
தீர்கள் மற்றும் குழம்பாதீர்கள். அனைத்து எண்ணங்கள் சகிதமாக சுயம் தங்களை பாப்தாதாவிற்கு சமர்ப்பணம்
செய்து விடுங்கள். அப்பொழுது மாயை ஒரு பொழுதும் தாக்க முடியாது. தினமும் அமிருதவேளை பார்வையாளராக
ஆகி, சுயம் தங்களை அனைத்து சக்திகளாலும் அலங்காரம் செய்யுங்கள். அப்பொழுது ஆடாது அசையாதவராக
ஆகி இருப்பீர்கள்.
சுலோகன்: எந்த ஒரு உலகீய சமாச்சாரத்தைக் கேட்பதும் கூறுவதும்
கூட தனக்குள் குப்பையை சேமிப்பதாகும்.
(1/4)
13
13.07.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! நீங்கள் உங்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். மற்றவர்களைப்
பற்றி அல்ல. ஏனென்றால் டிராமாவின் அனுசாரம் யார் என்ன செய்கிறார்களோ, அதை
அடைவார்கள்.
கேள்வி : திரிகாலதரிசி ஆவதால் ஆத்மாவுக்கு எந்த நினைவு வந்துள்ளது?
பதில்: ஆத்மாவுக்கு நினைவு வந்துள்ளது லி நாம் அசலில் மூலவதன நிவாசி. இந்த டிராமாவில் நமது
பார்ட்டை நடிப்பதற்காக வந்துள்ளோம். நாம் முக்கிய நடிகர் ஆகி 84 பிறவிகளின் பார்ட்டை நடித்தோம்.
இப்போது பாபாவின் முன்பாக உள்ளோம். பிறகு அவரோடு கூடவே வீட்டுக்குச் செல்வோம். பாவனமாகி
வீட்டுக்குச் செல்ல வேண்டும். பிறகு சுகதாமத்தில் வர வேண்டும். இந்த விளையாட்டு முழுவதும் பாரதத்தில்
தான் உருவாக்கப் பட்டுள்ளது. இந்த நினைவு முழுவதும் திரிகாலதரிசி ஆவதன் மூலம் வந்து விட்டது.
பாடல் : இருந்தாலும் இறந்தாலும் உன் மடியில்.........
ஓம் சாந்தி. இந்தப் பாடலை யார் பாடினார்கள்? குழந்தைகள். குழந்தைகள் என்ன சொல்கின்றனர்? பாபா,
இப்போதே உங்கள் கழுத்துக்கு மாலை ஆக வேண்டும். இந்த சரீரத்தை இங்கேயே விட்டுவிட வேண்டும்.
குழந்தைகள் அறிவார்கள், சாந்திதாமம் அதாவது நிர்வாண்தாமத்தில் தந்தை மற்றும் குழந்தைகள், ஆத்மாக்களாகிய
நாம் இருக்கிறோம். இப்போது பாபா அடிக்கடி சொல்கிறார்லிதன்னை ஆத்மா என்று நிச்சயம் செய்யுங்கள்.
நீங்கள் அறிவீர்கள், நாம் ஆத்மாக்கள் பாபாவுடன் கூடவே நிர்வாண்தாமத்தில் வசித்திருந்தோம். பிறகு இந்த
சரீரத்தை தாரணை செய்து 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வந்துள்ளோம். குழந்தைகள் அறிவார்கள், நாம்
நிச்சயமாக பரந்தாம நிவாசிகள். இப்போது மீண்டும் பாபா வந்துள்ளார். நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள், பாபா
உங்களுக்கு முன் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறீர்கள். இங்கே இருப்பது லௌகிக் சரீர சம்மந்தங்கள். நாம்
அசலில் ஆத்மாக்களாக இருந்தோம். பிறகு லௌகிக் சம்மந்தத்தில் சுகம் மற்றும் துக்கத்தின் வாழ்க்கையைக்
கழித்தோம். இப்போது நீங்கள் ஆத்மாக்கள் திரிகாலதரிசி ஆகியிருக்கிறீர்கள். பாபாவும் கூட மூன்று காலங்கள்
மற்றும் மூன்று உலகங்களை அறிந்தவர். நீங்களும் கூட நம்பர்வார் புருஷார்த்தத்தின் அனுசாரம் அறிவீர்கள்.
படிப்பின் நினைவோ இருக்க வேண்டும் இல்லையா? இப்போது நினைவு வந்து விட்டது. பாபா புரிய
வைத்துள்ளார் லி நாமும் மூலவதனத்தில் வசிப்பவர்கள். நாம் இப்போது திரிகாலதரிசி ஆகியிருக்கிறோம். நீங்கள்
அறிவீர்கள், நாம் இந்த டிராமாவின் முக்கிய நடிகர்கள். முழு டிராமாவின் ஞானம் இப்போது உங்கள் புத்தியில்
உள்ளது. அரைக்கல்பமாக நாம் சுகதாமத்தில் இருக்கிறோம் என்பது நினைவு வந்து விட்டது. அங்கே இராவணன்
இருப்பதில்லை. நாம் ஆத்மாக்கள் முழு 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றுகிறோம். இப்போது பாபா நம்
முன்பாக அமர்ந்துள்ளார். உங்கள் ஸ்ரீமத் படி நடந்து நாங்கள் உங்களோடு கூடவே வருவோம். எவ்வளவு
முடியுமோ, உங்களை நினைவு செய்வோம். குழந்தைகளாகிய நீங்கள் இப்போது திரிகாலதரிசி ஆகியிருப்பதால்
உங்களுக்கு நாள் முழுவதும் இதே சிந்தனை இருந்து கொண்டிருக்க வேண்டும். உயர்ந்தவரிலும் உயர்ந்தவர்
பகவான். அவருடன் கூடவே குழந்தைகள் நீங்களும் உயர்ந்ததிலும் உயர்ந்த இருப்பிடத்தில் இருப்பவர்கள்.
இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு வீட்டின் நினைவு வந்து விட்டது. நாம் தூய்மையாகி, நமது பரந்தாமமாகிய
வீட்டுக்குச் செல்வோம். தந்தை சிவனுடைய பூஜை நடைபெறுகிறது என்றால் சாலிகிராம்களுக்கும் பூஜை
நடைபெறுகின்றது. பாபா தான் வந்து ஆத்மாக்களைப் தூய்மையாக்குகிறார். ஆத்மாக்களைப் தூய்மையாக்குபவர்
ஒரு தந்தை மட்டுமே! வேறு யாராலும் ஆக்க முடியாது. இப்போது நீங்கள் முழு டிராமாவின் விளையாட்டை
அறிந்து கொண்டு விட்டீர்கள். பாரதத்தில் தான் இந்த விளையாட்டு உருவாக்கப் பட்டுள்ளது என்பதைப்
புரிந்திருக்கிறீர்கள். ஆக, இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு பாபா முன்பாக அமர்ந்து புரிய வைக்கிறார்.
ஒவ்வொரு ஜீவாத்மாவும் அறிந்துள்ளது, பாபா ஞானக்கடலாக உள்ளார். அவரை பக்தி மார்க்கத்தில் அழைத்தே
வந்துள்ளனர், உறுதிமொழி அளித்தே வந்துள்ளனர். பாபா, நீங்கள் வருவீர்களானால் நிச்சயமாக நாங்கள்
உங்கள் அறிவுரைப்படி நடப்போம். இது ஒன்றும் லௌகிக் சம்மந்தத்தின் விஷயமல்ல. நீங்கள் ஆத்ம
அபிமானி ஆகி, நாம் ஓர் எல்லையற்ற தந்தையின் ஸ்ரீமத் படி நடக்க வேண்டும். அவர் சொல்வதையே ஏற்று
நடக்க வேண்டும் என்ற இந்தச் சிந்தனை செய்ய வேண்டும். அவரோ மிக சுலபமாகப் புரியும்படி சொல்கிறார்.
இப்போது உங்களுக்கு ஞானத்தின் மூன்றாவது கண் திறந்து கொண்டுள்ளது. இந்த ஞானம் உங்களுக்கு
இங்கே சங்கமத்தில் உள்ளது. மூலவதனத்தில் தந்தை மற்றும் குழந்தைகள் உள்ளனர். அங்கே இது யாருக்கும்
தெரியாது. இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு பாபா தமது முடிவைத் (நோக்கத்தை) தருகிறார். அவரே
ஞானக்கடல். வேறு எந்த ஒரு சத்சங்கத்திலும் இது போல் சொல்ல மாட்டார்கள் லி பாபா, ஆத்மாக்களாகிய
எங்களுக்குப் படிப்பு சொல்லித் தருகிறார் என்று. இதை நீங்கள் அறிவீர்கள். அடிக்கடி உங்களுக்குச் சொல்ல
வேண்டியுள்ளது லி ஆத்ம அபிமானி ஆகுங்கள் என்று. ஆத்மா இந்த டிராமாவில் நடிகராகத் தனது பாகத்தை
(2/4)
13.07.2016
நடிக்கின்றது. நாம் ஆத்மா சரீரமாகிய ஆடையை எடுத்துக் கொண்டுள்ளோம். அந்த நடிகர்கள் ஆடைகளை
மாற்றுகின்றனர்.
ஆத்மாக்கள் நீங்கள் நிராகாரி உலகத்தில் இருந்து இங்கே வந்து இந்த சரீரம் என்ற ஆடையை எடுத்துக்
கொள்கிறீர்கள். ஆத்மாக்களாகிய நமக்கு பாபா மீண்டும் வந்து இராஜயோகம் கற்பித்துக் கொண்டிருக்கிறார்.
இப்போது குழந்தைகள் நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்லிபாபா வந்துள்ளார் என்றால் நாம் பாபாவுக்கு உதவியாளர்
ஆவோம். தூய்மையாகி, பாரதம் முழுவதையும் தூய்மையாக்குவோம். நாம் ஸ்ரீமத் படி தான் நடக்க வேண்டும்.
ஸ்ரீமத் சொல்கிறதுலிதந்தையை நினைவு செய்ய வேண்டும். யார் செய்வார்களோ, அவர்கள் பலன் அடைவார்கள்.
அனைவருமோ வந்து புருஷார்த்தம் செய்ய மாட்டார்கள். யார் கல்பத்திற்கு முன் புருஷார்த்தம் செய்திருக்
கின்றனரோ, அவர்கள் தான் செய்வார்கள். இப்போது திரும்பிச் செல்ல வேண்டும். அதனால் புருஷார்த்தம்
செய்து அவசியம் தூய்மை ஆக வேண்டும். நாம் மேலே மூலவதனத்தில் வசிப்பவர்கள். முதல்லிமுதலில்
சொர்க்கத்தில் வந்திருந்தோம். பிறகு ஏணிப்படியில் கீழே இறங்கியே வந்துள்ளோம். பாபா புரிய வைப்பதும்
பாரதவாசிகளுக்குத் தான். பாரதத்தில் தான் வருகிறார். வந்து எங்களை தூய்மையாக்குங்கள் என்று அவரை
நினைவு செய்வதும் பாரதத்தில் தான். சரீரத்தை தாரணை செய்து எங்களுக்கு சிரேஷ்ட கர்மம் கற்றுக்
கொடுங்கள். சரீரத்தின் பெயரும் பாடப்பட்டுள்ளது. இது பாக்கியசாலி ரதம். பாபாவும் சொல்கிறார், நான் சாதாரண
உடலில் பிரவேசமாகிறேன். இதற்கு முன்பும் கூடச் சொல்லியிருந்தேன்லிகுழந்தைகள் உங்களுக்கு நினைவு
வந்து விட்டதுலிநிச்சயமாக 5000 ஆண்டுகளுக்கு முன்பும் கூட பாபா இதையே சொல்லியிருக்கிறார். வேறு
யாரும் இந்த விஷயத்தைச் சொல்ல முடியாது. பாபா தான் சொல்கிறார், 5000 ஆண்டுகளுக்கு முன்பும் கூட
நான் இந்த சரீத்தில் பிரவேசமாகி உங்களுக்குப் புரிய வைத்திருந்தேன். இப்போது மீண்டும் குழந்தைகளாகிய
உங்களுக்குச் சொல்கிறேன்லிஆத்ம அபிமானி ஆகுங்கள். எப்படி நாடக நடிகர்களுக்குத் தெரிந்துள்ளது இல்லையாலி
நாம் எந்த ஆடையை அணிந்து கொண்டு என்னென்ன பாத்திரங்களை நடிக்கிறோம்? என்று. ஆனால்
அவர்களோ தேக அபிமானிகள். இது எல்லையற்ற விஷயம். ஆத்ம அபிமானி ஆக வேண்டும். நாம்
உண்மையில் ஆத்மாக்கள் தாம். இப்போது நமது பார்ட் முடிவடைகின்றது. பாபா நம் முன் அமர்ந்து
அனைத்தையும் நமக்குப் புரிய வைக்கிறார். இதை மறந்துவிடக் கூடாது. மாயா எவ்வளவு விக்னங்களை
ஏற்படுத்துகிறது! பாபா புரிய வைக்கிறார்லிகுழந்தைகளே, நீங்கள் எந்த ஒரு விகர்மமும் செய்யக் கூடாது.
மனதில் புயல்கள் அதிகம் வரலாம். தன்னைத் தான் சோதிக்க வேண்டும். நம்முடைய கர்மேந்திரியங்கள்
சஞ்சலமடையாமல் உள்ளனவா? நாம் காமத்தை வெல்ல முடியுமா? உங்களுக்கோ மிகவும் சுலபம். நாம்
ஆத்மா, ஒரு தந்தையின் குழந்தைகள். தந்தையிடம் தான் நினைவின் தொடர்பு வைக்க வேண்டும். கர்மேந்திரியங்
களில் சஞ்சலம் அடைவதும் கூட தேக அபிமானம் ஆகிறது இல்லையா? நீங்கள் யாரிடமும் பயப்படக்
கூடாது. பயமற்றவராக ஆக வேண்டும். எப்போதும் எங்கே சென்றாலும் சாட்சியாக இருந்து பார்க்க வேண்டும்.
நாமோ ஆத்மாக்கள். இந்த விளையாட்டை நீங்கள் முழுமையாக அறிந்து கொண்டு விட்டீர்கள். உயர்ந்தவரிலும்
உயர்ந்தவர் தந்தை. இது புத்தியில் வந்துள்ளது. அவர் பிந்தி (புள்ளி வடிவமானவர்) எனச் சொல்லப் படுகின்றார்.
நிராகாரி உலகத்தில் ஆத்மாக்களின் மரம் உள்ளது. விதையிலிருந்து மரம் வெளிவருகின்றது. பிறகு வரிசையாக
இலைகள் வருகின்றன. மேலிருந்து ஆத்மாக்கள் தரவரிசைப்படி வருகின்றன. ஆத்மா எப்படிப் பிரவேசமாகின்றது
என்பதை யாராலும் பார்க்க முடியாது. இப்போது பாபா புரிய வைக்கிறார், உங்களுடைய ஆத்மா தூய்மையற்றதாக
ஆகி விட்டுள்ளது. அதை தூய்மையாக்குங்கள். இவர் மூலமாக பாபா வந்து புரிய வைக்கிறார். கர்மேந்திரியங்கள்
மூலமாகத் தான் பேசுவார் இல்லையா? ஆத்மாவாகிய பிந்தி இவருக்குள் இல்லை என்றால் கர்மேந்திரியங்களால்
எதையும் செய்ய இயலாது. இவ்வளவு சிறிய புள்ளி எவ்வளவு சக்தி வாய்ந்ததாக உள்ளது! அதற்குள் முழு
ஞானமும் உள்ளது. பாபா ஞானக்கடலாக இருப்பதால் உங்களுக்கு அமர்ந்து புரிய வைக்கிறார். அவரிடம்
ஞானம் முழுவதும் உள்ளது. அவருடைய இந்த நடிப்பின் பாகமும் விதிக்கப் பட்டுள்ளது. ஆத்மாவாகிய
உங்களுக்குள்ளும் 84 பிறவிகளின் பாகம் உள்ளது. நீங்கள் சுகம்லிதுக்கத்தின் பாகத்தை நடிக்கிறீர்கள். துக்கத்தில்
அதிகமான கஷ்டத்தை அனுபவிக்கிறீர்கள். பாபா சொல்கிறார் லி நானோ புனர்ஜென்மத்தில் வருவதில்லை.
நீங்கள் 84 ஜென்மங்களை எடுக்கிறீர்கள். நான் எடுப்பதில்லை. நான் வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு சகஜ
யுக்தி சொல்கிறேன்லிஎன்னை நினைவு செய்வீர்களானால் தூய்மையாவீர்கள். அரைக்கல்பமாக நீங்கள் காமசிதையில்
அமர்ந்து தமோபிரதான் ஆகியிருக்கிறீர்கள். ஆத்மாக்களோடு தான் பாபா பேசுகிறார். ஆத்மாவின் உறுப்புகள்
முதலில் சிறியதாக இருக்கும். பிறகு பெரியதாக ஆகின்றன. ஆத்மாவோ பெரியதுலிசிறியதாக ஆவதில்லை.
ஆத்மா தான் சொல்கிறதுலிஹே பதீத பாவனா வாருங்கள் என்று. ஆத்மா தந்தையை அழைக்கின்றது. தந்தை
சொல்கிறார் லி நான் கல்பலிகல்பமாக வருகிறேன், தூய்மையற்றவர்களாகிய உங்களைப் தூய்மையாக்குவதற்காக.
இப்போது நீங்கள் அறிவீர்கள், ஆத்மா எப்படி வருகிறதுலிபோகிறது என்று. மனிதர்கள் அதிகம் தலையை
உடைத்துக் கொள்கிறார்கள் . ஆத்மா எப்படி வெளியேறுகிறது என்று பார்க்க விரும்புகிறார்கள். ஆனால் அது
(3/4)
13.07.2016
பற்றி யாருக்கும் தெரிவதில்லை. ஏனென்றால் அது மிகவும் சூட்சுமமானது. சிறிய ஆத்மாவுக்குள் எவ்வளவு
பாகம் அடங்கியுள்ளது! எப்படி விதைக்குள் முழு ஞானம் உள்ளது, அந்த விதையோ ஜடமாகும். ஆலமரத்தின்
மரம் உள்ளது, இதனுடைய விதை எவ்வளவு சிறியது! அதிலிருந்து மரம் எவ்வளவு பெரியதாக,
வெளிப்படுகின்றது! கல்கத்தாவில் உள்ள ஆலமரத்தை அநேகர் பார்த்திருக்கக் கூடும். அது மிகப் பெரிய மரம்.
இப்போது அதனுடைய அஸ்திவாரம் முழுவதும் அழுகிப்போய் விட்டது. மற்றப்படி மரம் நின்று கொண்டுள்ளது.
இதுவும் அது போல் தான். தேவதா தர்மத்தின் அஸ்திவாரம் இல்லை. மரத்திற்கும் இப்போது இற்றுப் போன
நிலை. இதையும் நீங்கள் அறிவீர்கள், அதனால் தான் அரசாங்கத்திற்கும் சொல்கிறீர்கள், நாங்கள் இவ்வளவு
காலத்திற்குள் உலகத்தைப் தூய்மையாக்கிக் காட்டுவோம். மனிதர்கள் இந்த விஷயங்களைப் புரிந்து கொள்ள
வில்லை. உங்களுக்கோ நிச்சயம் உள்ளது, நாம் இந்த பாரதத்தை உயர்ந்ததாக அவசியம் ஆக்குவோம்.
அப்போது தான் மிகவும் தாழ்ந்துள்ள இந்த உலகம் விநாசம் ஆகும். சாந்தி வேண்டும் என்று விரும்புகின்றனர்.
ஆத்மா தனது பாகத்தை நடித்துலிநடித்துக் களைத்துப் போய் விட்டது. அதனால் அழைக்கின்றனர்லிஹே சாந்தி
தேவா! ஆத்மா சாந்த சொரூபம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் இங்கே ஆத்மாக்கள்
கர்மேந்திரியங்களின் மூலம் கர்மமோ அவசியம் செய்தாக வேண்டும். சாந்தி கொடு என வேண்டுகின்றனர்.
சாந்திதாமம் வேறு, சுகதாமம் வேறு என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. சுகதாமத்தில் மிகக் கொஞ்சம்
மனிதர்கள் இருப்பார்கள். அது தூய்மையான உலகம் தான். அங்கே சாந்தியை யாரும் வேண்ட மாட்டார்கள்.
கர்மமோ அங்கேயும் செய்கின்றனர். ஆனால் அங்கே அசாந்தி இருக்காது. ஜீவன்முக்தி தாமம் மற்றும்
சாந்திதாமம் இரண்டும் வேறுலிவேறு. சத்யுகத்தில் ஜீவாத்மாக்களுக்கு சுகமும் இருக்கும் என்றால் சாந்தியும்
இருக்கும். சதா ஆரோக்கியமானவர்களாக, செல்வந்தர்களாக இருப்பார்கள்.
சொர்க்கம் எனச் சொல்லப்படுவது எது என்பதை இப்போது நீங்கள் அறிந்து கொண்டீர்கள். சொர்க்கம்
எது என்பதும் கூட உலகத்தில் யாருக்கும் தெரியவில்லை. இவர்கள் (லட்சுமிலிநாராயணர்) குழந்தைகள் இல்லையா?
இந்தக் குழந்தைகளுக்கும் கூட யார் சுகம் கொடுத்தார்? யாராவது சுகம் தருபவர் இருப்பார் இல்லையா?
இவர்களுடைய இராஜ்யம் மீண்டும் வரப் போகிறதா என்ன? சொர்க்கம் நிச்சயமாக மீண்டும் ரிப்பீட் ஆகும்.
சொர்க்கத்தில் இருக்கும் போது நரகம் மறுபடியும் ரிப்பீட் ஆகும் என்று சொல்ல மாட்டார்கள். இப்போது
சொல்கிறீர்கள், தூய்மையான, சுகம், சாந்தியின் புது உலகம் மீண்டும் ரிப்பீட் ஆகும் என்று. இதுவோ பழைய
உலகம், துக்க தாமம். இது இரும்பு யுகம் என்று சொல்லப் படுகின்றது. புது உலகமும் கூட இருந்தது
அல்லவா? அதை சொர்க்கம் எனச் சொல்கின்றனர். இந்த ஞானம் உங்கள் புத்தியில் பதிந்துள்ளது. நிச்சயமாக
நாம் மீண்டும் தேவிலிதேவதா ஆகிக் கொண்டிருக்கிறோம். உங்களுடைய நோக்கம்லிகுறிக்கோளே இது தான்.
நாம் மீண்டும் சொர்க்கத்தின் ராஜபதவியைப் பெறுகிறோம். எல்லையற்ற தந்தையிடமிருந்து ஆஸ்தியை அவசியம்
பெறுவோம். இதை நல்லபடியாக நினைவு செய்ய வேண்டும். நாம் ஆத்மாக்கள் அங்கே வசிக்கிறோம். பிறகு
நாம் நமது பாகத்தை நடிப்பதற்காக இங்கே வந்துள்ளோம். இப்போது 84 பிறவிகளை எப்படி எடுத்தோம் என்ற
நினைவு வந்துள்ளது. பாபா புரிய வைப்பதும் பிரம்மா முகவம்சாவளி பிராமணர்களாகிய உங்களுக்குத் தான்.
பிராமணர் ஆகாமல், பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தையாக ஆகாமல் சிவபாபாவிடம் ஆஸ்தி எப்படிப் பெறுவார்கள்?
பிரஜாபிதா பிரம்மாவோ புகழ் பெற்றவர் இல்லையா? பிரம்மாவின் மூலம் புது உலகத்தின் ஸ்தாபனை செய்கிறார்.
ஆக, புது உலக ராஜதானியும் கூட அவர்களுக்குக் கிடைத்திருக்கும். 5000 ஆண்டுகளுக்கு முன்பும் கூட
பிரம்மா மூலம் விஷ்ணுபுரியின் ஸ்தாபனை செய்திருந்தார். இப்போது மீண்டும் ரிப்பீட் ஆகும். அதற்காக
நீங்கள் ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறீர்கள். அநேகக் குழந்தைகள் கேட்கின்றனர் லி டிராமாவை பெரியதென
ஏற்றுக் கொள்வதா, அல்லது புருஷார்த்தத்தைப் பெரியதென ஏற்றுக் கொள்வதா? புரிய வைக்கப் படுகின்றது லி
புருஷார்த்தமோ அவசியம் செய்தே ஆக வேண்டும். புருஷார்த்தம் இல்லாமல் பலன் (ஆஸ்தி) எப்படிக்
கிடைக்கும்? முழுமையாகப் புருஷார்த்தம் செய்ய வேண்டும். சிலர் நன்றாகப் புருஷார்த்தம் செய்கின்றனர்
என்றால் புரிய வைக்கப்படுகின்றது லி டிராமா அனுசாரம் இவருடைய புருஷார்த்தம் நன்றாக நடைபெறுகின்றது.
பதவியும் நல்லதாகப் பெறுவார்கள. அவர்களுடைய புருஷார்த்தம் மிகத் தீவிரமாகச் செல்கின்றது. பிறகு
போகப் போக சிலருடையது குறைந்த பதவி ஆகி விடுகின்றது. பிராமணிகள் அறிவார்கள், பிராமணிகளிடம்
வருபவர்களும் அறிவார்கள். இன்னார் மிக நன்றாகச் சென்று கொண்டிருந்தார். தற்சமயம் வருவதில்லை.
சொல்கின்றனர், ஏன் எனது புத்தியில் பதிவதில்லை என்பது புரியவில்லை . பாபாவை என்னால் நினைவு
செய்யவே முடிவதில்லை. அவ்வளவு தான் என்னால் தொடர முடியவில்லை. பெரிய குறிக்கோளாக உள்ளது.
இப்படிலிஇப்படி எழுதி விடுகின்றனர். முக்கியமான விஷயமே நிர்விகாரி ஆவது தான். விகாரங்களை விடுவது
மிகவும் கஷ்டமாக உள்ளது. நீங்கள் அறிவீர்கள், டிராமா அனுசாரம் கல்பத்திற்கு முன்பு போல் இவர்களுக்கு
இத்தகைய நிலமைதான் இருந்து வந்துள்ளது. நல்லது.
(4/4)
13.07.2016
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும்
தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம் :
1) நாம் எல்லையற்ற விளையாட்டை சாட்சியாக இருந்து பார்க்க வேண்டும். யாரிடமும்
பயப்படக் கூடாது. பயமற்றவராக ஆவதற்கு நான் ஆத்மா என்ற பாடத்தை உறுதியாக்க
ஆக்க வேண்டும்.
2) தன்னைத் தான் சோதித்து தன்னைப் பரீட்சைக்கு உட்படுத்த வேண்டும்லிஎந்த ஒரு
கர்மேந்திரியமாவது சஞ்சலம் அடையாதிருக்கிறதா? காமவிகாரத்தின் மீது வெற்றி பெற்றோமா?
ஆத்ம அபிமானியாக எது வரை ஆகியிருக்கிறோம்?
வரதானம் : சுய நினைவில் (தான் யார் என்ற நினைவில் ) இருந்து தனது ஒவ்வொரு
கர்மத்தையும் நியமமாக (விதியாக) ஆக்கக் கூடிய அத்தாரிட்டி சொரூபம் ஆகுக !
எப்படி சாகாரத்தில் (பிரம்மா பாபா) சுயத்தின் ஸ்மிருதியில் இருப்பதன் மூலம் என்ன கர்மம் செய்தாரோ,
அதுவே பிராமணப் பரிவாரத்தின் நியமமாக ஆகி விட்டது. சுயத்தின் நஷாவில் இருப்பதன் காரணத்தால்
அத்தாரிட்டியோடு சொல்ல முடிந்ததுலிசாகார் மூலமாக ஏதேனும் தலைகீழான கர்மம் கூட நடைபெற்று விட்டால்
அதை (சிவபாபா) நேராக ஆக்கி விடுவார். சுயத்தின் சொரூபத்தின் ஸ்மிருதியில் இருப்பதன் மூலம் இந்த நஷா
உள்ளதுலிஎந்த ஒரு கர்மமும் தலைகீழானதாகவே ஆக முடியாது. குழந்தைகள் நீங்களும் கூட சுயத்தின்
ஸ்திதியில் நிலைத்திருப்பீர்களானால் என்ன சங்கல்பம் நடைபெறுகிறதோ, என்ன வார்த்தை பேசுவீர்களோ,
அல்லது கர்மம் செய்வீர்களோ, அதுவே நியமம் ஆகி விடும்.
சுலோகன் : தூய்மை என்ற தூணை உறுதியாக ஆக்குவீர்களானால்
இந்த தூண் லைட் ஹவுஸின் காரியத்தைச் செய்து கொண்டே இருக்கும்.
(1/4)
14
14.07.2016, காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! விருட்சபதி தந்தை குழந்தைகளாகிய உங்கள் மீது குரு திசையை
அமர வைத்துள்ளார், இப்போது நீங்கள் அழிவற்ற சுகத்தின் உலகத்திற்குச் சென்று
கொண்டிருக்கிறீர்கள்.
கேள்வி: அழிவற்ற குரு திசை (குரு பார்வை) எந்த குழந்தைகளுக்கு ஏற்படுகிறது, அவர்களின்
அடையாளங்கள் என்ன?
பதில்: வாழ்ந்தபடியே தேகத்தின் அனைத்து சம்மந்தங்களையும் தியாகம் செய்து தன்னை ஆத்மா என
நிச்சயப்படுத்தக்கூடிய நிச்சயம் நிறைந்த ஆன்மீக புத்தியுள்ள குழந்தைகளின் மீது குரு திசை அமர்கிறது.
அவர்களுடைய சுகத்தைப் பற்றித்தான் பாடல் உள்ளது லி அதீந்திரிய சுகத்தைப் பற்றி கோப கோபியரிடம்
கேளுங்கள். அவர்களுடைய குμ ஒருபோதும் மறைந்து (குறைந்து) போக முடியாது.
பாடல்: ஓம் நம: சிவாய. . .
ஓம் சாந்தி. குழந்தைகள் தந்தையின் மகிமையைக் கேட்டீர்கள். இன்றைய நாள் விருட்சபதி நாள் என்றே
சொல்லப்படுகிறது. அதனை இணைத்து பிருகஸ்பதி நாள் என சொல்லப்படுகிறது. இதுவே குருவாரம் என்றும்
சொல்லப்படுகிறது. வெறும் குருவாரம் அல்ல, ஆனால் சத்குருவாரம் ஆகும். வங்காளத்தில் மிகவும் மதிப்பு
தருகிறார்கள். மனித சிருஷ்டியின் விதை ரூபம் என பாடப்படுகிறார், ஆகையால் விருட்சபதி என சொல்கின்றனர்.
விதையாக இருக்கிறார், பதியாகவும் இருக்கிறார். விருட்சத்தின் (மரத்தின்) விதையை தந்தை என்றும் சொல்வார்கள்.
அதிலிருந்து மரம் தோன்றி வளர்கிறது. இது மனித சிருஷ்டி என்னும் மரம். இதன் விதை மேலே உள்ளது.
குழந்தைகளாகிய நம் மீது இப்போது அழிவற்ற விருட்சபதியின் திசை உள்ளது, ஏனென்றால் அழிவற்ற
சுயராஜ்யம் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்று நீங்கள் அறிவீர்கள். சத்யுகம் அழிவற்ற சுகதாமம் என்றே
சொல்லப்படுகிறது. கலியுகம் அழியும் துக்கதாமம் என சொல்லப்படுகிறது. இப்போது துக்கதாமம் வினாசம்
ஆகவுள்ளது. சுகதாமம் அழிவற்றது, அரைக் கல்பம் நடக்கிறது, அதனை அழிவற்ற விருட்சபதி ஸ்தாபனை
செய்துக் கொண்டிருக்கிறார். குழந்தைகள் சேவைக்காக ஞான விஷயங்களைக் குறித்துக் கொள்ள வேண்டும்
லி கண்காட்சிகளில் இன்ன இன்ன விஷயங்கள் புரிய வைக்க வேண்டும் என்று. ஏனென்றால் மனிதர்களுக்கு
ஒன்றும் தெரியாது. இது ஞானமாகும். இப்போது தந்தை இந்த ஞானத்தை சொல்வதே புதிய மற்றும் பழைய
உலகத்தின் இடையில், பிறகு இது மறைந்து விடும். தேவதைகளிடம் இந்த ஞானம் இருக்காது. ஒரு வேளை
இந்த சக்கரத்தின் ஞானம் இருந்தது என்றால் பிறகு இராஜ்யத்தின் மகிழ்ச்சியே இருக்காது. இப்போதும் கூட
உங்களுக்கு சிந்தனை செல்கிறது அல்லவா. இராஜ்யத்தை எடுத்தபின் நம்முடைய நிலை இப்படி ஆகி
விடுமா என்ன? ஆனால் இந்த நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. சக்கரம் சுழலத்தான் வேண்டும். உலகின்
வரலாறு புவியியல் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருக்கிறது. எப்படி நடக்கிறது என குழந்தைகளாகிய
நீங்கள் அறிவீர்கள். இது மனித சிருஷ்டியாகும். உங்களுடைய புத்தியில் மூலவதனத்தின் மரம் கூட உள்ளது.
அனைவரின் பிரிவுகளும் தனித்தனியாக இருக்கும். இந்த விஷயங்கள் யாருடைய புத்தியிலும் எப்போதும்
இருக்காது. எந்த சாஸ்திரத்திலும் இது எழுதப்படவில்லை. ஆத்மாக்களாகிய நாம் உண்மையில் சாந்திதாமத்தில்
வசிப்பவர்கள், அழிவற்றவர்கள். ஒருபோதும் அழிவதில்லை. நீர்க்குமிழி நீரிலிருந்து வெளிப்பட்டு பிறகு அதிலேயே
கரைந்து விடும் என அவர்கள் புரிந்து கொள்கின்றனர். உங்களுடைய புத்தியில் முழு ரகசியமும் உள்ளது.
ஆத்மா அழிவற்றது, அதில் முழுமையான நடிப்பும் பதிவாகியுள்ளது. இந்த சக்கரத்தின் ஞானம் எந்த சாஸ்திரங்
களிலும் இல்லை. அங்கங்கே ஸ்வஸ்திக் சின்னத்தையும் காட்டுகின்றனர். சக்கரத்தின் கோடுகளை பலவறாகப்
போடுகின்றனர், அதிலிருந்து பல தர்மங்கள் இருந்தன என்பது நிரூபணம் ஆகிறது. முக்கிய தர்மங்களும்
சாஸ்திரங்களும் 4 உள்ளன என தந்தை புரிய வைத்திருக்கிறார். சத்ய, திரேதா யுகங்களில் எந்த தர்மமும்
ஸ்தாபனை ஆவதில்லை, அங்கே எந்த தர்ம சாஸ்திரமும் இருப்பதில்லை. இவை அனைத்தும் துவாபரத்திலிருந்து
தொடங்குகின்றன. பிறகு பாருங்கள், எவ்வளவு வளர்ச்சி ஏற்படுகிறது. நல்லது, கீதை எப்போது சொல்லப்பட்டது?
தந்தை சொல்கிறார் லி நான் கல்பத்தில் சங்கம யுகத்தில்தான் வருகிறேன். அவர்கள் பிறகு கல்பம் என்ற
வார்த்தையை நீக்கிவிட்டு ஒவ்வொரு சங்கமயுகத்திலும் (யுகே யுகே) என எழுதிவிட்டனர். உண்மையில்
சங்கம யுகத்தில் வேறு யாரும் தர்ம ஸ்தாபனை செய்வதில்லை. திரேதாவின் கடைசியில், துவாபரத்தின்
ஆரம்பத்தின் சங்கமத்தில் இஸ்லாம் தர்மம் ஸ்தாபிக்கப்பட்டது என்பதல்ல. இல்லை, துவாபரத்தில் ஸ்தாபனை
ஆயிற்று என்பார்கள். இந்த சங்கமம் மகிழ்ச்சிக்கான சமயம், இதை கும்ப (மேளா) என்று கூறுகின்றனர்.
கும்பமேளா என்று சங்கமத்திற்குச் சொல்லப்படுகிறது. ஆத்மாக்களும் பரமாத்மாவும் சந்திக்கக் கூடிய சங்கமம்
என சொல்வோம். இந்த ஆன்மீக சந்திப்பு சங்கமத்தில்தான் ஏற்படுகிறது. அவர்கள் நீராலான கங்கையின்
பெயரை புகழடையச் செய்து விட்டனர். ஞானக் கடல், பதித பாவனரை தெரிவதே இல்லை. அவர் தூய்மையற்ற
(2/4)
14.07.2016
உலகை எப்படி தூய்மையக்கினார் என்பது எந்த சாஸ்திரங்களிலும் கிடையாது. இப்போது குழந்தைகளாகிய
உங்களுக்கு தந்தை சொல்கிறார் லி என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். தேகத்தின் அனைத்து தர்மங்களையும்
தியாகம் செய்யுங்கள். யாருக்குச் சொல்கிறார்? ஆத்மாக்களுக்கு. இது வாழ்ந்தபடியே இறப்பது என சொல்லப்
படுகிறது. மனிதர்கள் சரீரத்தை விடும்போது தேகத்தின் அனைத்து சம்மந்தங்களும் விடுபட்டு விடுகின்றன.
தந்தை சொல்கிறார் லி இருக்கக் கூடிய தேகத்தின் சம்பந்தங்கள் அனைத்தையும் விட்டு தன்னை ஆத்மா
என நிச்சயப்படுத்துங்கள். நிச்சய ஆன்மீக புத்தியுடையவராக ஆகுங்கள். எந்த அளவு அதிகமாக நினைவு
செய்கிறீர்களோ அந்த அளவு பிருஹஸ்பதி (குரு) திசை ஏற்படும். நாம் சிவபாபாவை எவ்வளவு நினைவு
செய்கிறோம் என சோதியுங்கள். நினைவின் மூலமே துரு நீங்கிச் செல்லும், மேலும் உங்களுக்கு குμ
இருக்கும். நான் ஆத்மா தந்தையை எவ்வளவு நினைவு செய்கிறேன் என நீங்கள் உணர முடியும். ஒருவேளை
குறைவாக நினைவு செய்தீர்கள் என்றால் துருவும் குறைவாகவே நீங்கும். குμயும் குறைவாக இருக்கும்.
பதவியும் குறைவானதாக அடைவீர்கள். ஆத்மாதான் சதோ, ரஜோ, தமோ ஆகிறது. கோப கோபியரின்
அதீந்திரிய சுகத்தைப் பற்றிய பாடல் இந்த சமயத்தினுடையதுதான் ஆகும். ஒரு தந்தையைத் தவிர வேறு
எந்த நினைவும் இருக்கலாகாது, அப்படி இருக்கும்போதுதான் குμயின் அளவு அதிகரிக்கும். நம் மீது
பிருஹஸ்பதியின் தசை (குருபார்வை) அல்லது சத்குருவின் தசை இருக்கிறது. பிறகு எப்போதாவது குμ
மறைந்து விட்டது என்றால் பிருஹஸ்பதியின் தசை மாறி ராகுவின் தசை அமர்ந்து விட்டது என அர்த்தம்.
சிலர் மிகவும் செல்வந்தர்களாக ஆகின்றனர், சிலர் கை மாற்று வியாபாரம் செய்யும்போது திவால் ஆகி
விடுகின்றனர். பாரதத்தில்தான் கிரஹணம் பிடிக்கும்போது தானம் கொடுத்தால் கிரஹணம் விடுபடும் என
சொல்கின்றனர். உங்களுடைய தேவி தேவதா தர்மம் கூட 16 கலைகளில் நிறைந்திருந்தது, அவர்களுக்கு
கிரஹணம் பிடித்துள்ளது. ராகுவின் தசை அமர்ந்து விடுகிறது. ஆகையால் தேவதைகளுக்கு முன்னால்
சென்று நீங்கள் அனைத்து குணங்களில் நிறைந்தவர். . . நாங்கள் பாவிகள், கபடர்கள் என பாடுகின்றனர்.
ராகுவின் கிரஹணம் பிடிக்கும்போது அனைவரும் கருப்பாகி விட்டனர் என நீங்கள் இப்போது புரிந்து
கொள்கிறீர்கள். சந்திரனுக்குப் பின்னால் கோடு விழுந்து விடுகிறது. தேவி தேவதைகளாகிய உங்களின்
படங்களும் உள்ளன என தந்தையும் புரிய வைக்கிறார். கீதைதான் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தின்
சாஸ்திரம் ஆகும். ஆனால் இவர்கள் தம்முடைய தர்மத்தை தெரிந்து கொள்ளவில்லை. மதத் தலைவர்களுடைய
மாநாடு நடத்துகின்றனர். நீங்கள் அங்கும் கூட புரிய வைக்க முடியும் லி இறைவன் எங்கும் நிறைந்தவர்
அல்ல. அவர் எல்லைக்கப்பாற்பட்ட தந்தை. வந்து குழந்தைகளுக்கு ஆஸ்தி கொடுக்கிறார். சாது சன்னியாசி
முதலானவர்களுக்கு ஆஸ்தி கிடைப்பதில்லை எனும்போது எப்படி ஒப்புக் கொள்வார்கள். குழந்தைகளாகிய
உங்களுக்குத்தான் ஆஸ்தி கிடைக்கிறது. ஈஸ்வரன் எங்கும் நிறைந்தவர் அல்ல என்பதுதான் நிரூபிக்க
வேண்டிய முக்கியமான வி'யம் ஆகும். சிவ ஜெயந்தி நடக்கிறது. சிவ ஜெயந்தி என்றாலும் சரி, ருத்ர
ஜெயந்தி என்றாலும் சரி லி ருத்ரன் இந்த ஞான யக்ஞத்தை படைக்கிறார். அவர் சிவன் ஆவார். வினாசத்தின்
ஜுவாலை மூண்டெழுந்த அதே கீதா ஞான யக்ஞமாகும். எப்படி நிராகார தந்தை இந்த ருத்ர ஞான
யக்ஞத்தை படைத்தார் என்று நடைமுறையில் நீங்கள் பார்க்கிறீர்கள். சாகார தந்தை (பிரம்மா பாபா) எதுவும்
செய்ய முடியாது. இது எல்லைக்கப்பாற்பட்ட யக்ஞமாகும், இதில் முழு பழைய உலகமும் ஸ்வாஹா (அர்ப்பணம்)
ஆக வேண்டியுள்ளது. மற்றவையனைத்தும் ஸ்தூல யக்ஞமாகும். எவ்வளவு இரவுக்கும் பகலுக்குமான
வித்தியாசம் உள்ளது. இது ருத்ர ஞான யக்ஞமாகும், வினாசமும் ஆகவேண்டியுள்ளது என தந்தை சொல்கிறார்.
நீங்கள் தேர்ச்சி அடையும்போது, முழுமையன யோகி, ஞானி ஆகிவிடும்போது, பிறகு உங்களுக்காக புதிய
உலகம், சொர்க்கம் தேவை. நரகம் கண்டிப்பாக வினாசம் ஆக வேண்டும். ராஜஸ்வ அஸ்வமேத என்னும்
வார்த்தையும் சரியாக உள்ளது. குதிரையை ஸ்வாஹா (அர்ப்பணம்) செய்கின்றனர். உண்மையில் இது
உங்களுடைய ரதமாகும். ஒரு தக்ஷபிரஜாபதியின் யக்ஞத்தையும் உருவாக்குகின்றனர், அதன் கதையும்
உள்ளது. நம்மை விருட்சபதியாகிய தந்தை படிப்பித்துக் கொண்டிருக்கிறார் என்று குழந்தைகளாகிய உங்களுக்கு
எவ்வளவு குμ இருக்க வேண்டும். நம் மீது இப்போது பிருஹஸ்பதியின் தசை உள்ளது, நம்முடைய நிலை
மிகவும் நன்றாக உள்ளது. பிறகு போகப் போக, பாபா நாங்கள் குழம்பி விட்டோம் என எழுதுகின்றனர்.
முதலில் நாங்கள் மிகவும் குμயாக இருந்தோம், ஆனால் இப்போது என்ன ஆயிற்று என தெரியவில்லை.
இங்கே வந்து தந்தையுடையவராக ஆவது என்பது பெரிய யாத்திரை ஆகும். அங்கே தீர்த்த யாத்திரையில்
செல்லும்போது எவ்வளவு செலவு செய்கின்றனர். இப்போது இங்கே தானம் செய்யக் கூடிய வி'யம்
எதுவுமில்லை. இதில் கொஞ்சம் கூட பணம் செலவு செய்யக்கூடாது. அது ஸ்தூலமான யாத்திரை, உங்களுடையது
ஆன்மீக யாத்திரை ஆகும். ஸ்தூல யாத்திரையினால் எந்த லாபமும் கிடையாது. பாடலிலும் உள்ளது
அல்லவா லி நாலா புறங்களிலும் சுற்றி அலைந்த போதும் பிறவி பிறவிகளாக பிரிந்திருந்தோம். எவ்வளவு
அளவற்ற யாத்திரைகள் செய்திருப்போம் என இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். எங்காவது ஓரிடத்திற்கு
மனிதர்கள் கண்டிப்பாக செல்கின்றனர். ஹரித்துவாரில் கங்கைக்கு கண்டிப்பாக செல்கின்றனர். பதித பாவனி
14.07.2016
(3/4)
(தூய்மையற்றவர்களை தூய்மையாக்குவது) கங்கை என புரிந்து கொள்கின்றனர் அல்லவா. இப்போது
உண்மையில் நீங்கள் உண்மையிலும் உண்மையான ஞான கங்கைகளாக இருக்கிறீர்கள். உங்களிடமும் கூட
பலரும் வந்து ஞான ஸ்நானம் செய்கின்றனர். பாபா புரிய வைத்திருக்கிறார் லி சத்குரு ஒருவரே ஆவார்.
அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல் ஒரு சத்குருவைத் தவிர வேறு எந்த குருவும் கிடையாது. நான்
உங்களை கல்பம் தோறும் சங்கம யுகத்தில் வந்து சத்கதி கொடுத்து பூஜாரியிலிருந்து பூஜைக்குரியவர்களாக
ஆக்குகிறேன் என தந்தை சொல்கிறார். பிறகு நீங்கள் பூஜாரிகளாகி துக்கம் மிக்கவர்களாக ஆகி விடுவீர்கள்.
இதுவும் கூட இப்போது தெரிந்துள்ளது. நம்முடைய ராஜ்ஜியம் அரை கல்பம் நடக்கும், பிறகு துவாபரத்தில்
தேவி தேவதைகளாகிய நாமே வாம மார்க்கத்தில் சென்று விடுவோம். ராவண ராஜ்ஜியம் தொடங்கும்
போதுதான் வாம மார்க்கம் தொடங்குகிறது. அதனுடைய அடையாளங்களும் உள்ளன. ஜகன்னாதரின்
கோவிலுக்குச் சென்றீர்கள் என்றால் உள்ளே கருப்பான மூர்த்தி இருக்கிறது, வெளியே தேவதைகளின் அழுக்கான
சிலைகள் உள்ளன. அந்த சமயம் தனக்கும் (பிரம்மாவுக்கும்) கூட இது என்ன என்பது புரியவில்லை.
விகாரம் மிக்க மனிதர்கள் விகாரம் மிக்க பார்வையில் பார்ப்பார்கள். ஆக, தேவதைகளும் விகாரிகளாக
இருந்தனர் என புரிந்து கொள்கின்றனர். தேவதைகள் வாம மார்க்கத்தில் சென்றனர் என எழுதப்பட்டுள்ளது.
உடையும் கூட தேவதைகளுடையதை கொடுத்துள்ளனர். இங்கும் கூட தில்வாடா கோவிலுக்குச் சென்றீர்கள்
என்றால் மேலே சொர்க்கம் காட்டப்பட்டுள்ளது. கீழே தபஸ்ஸில் அமர்ந்திருக்கின்றனர். இந்த அனைத்து
ரகசியங்கள் வேறு யாருக்கும் தெரியாது. பாபாவின் ரதம் அனுபவம் மிக்கவர் அல்லவா.
குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் லி ஆத்மாக்களும் பரமாத்மாவும் வெகு காலம்
பிரிந்திருந்தனர். . . முதலில் பிரிந்த நீங்களே பிறகு வந்து முதலில் சந்திக்கிறீர்கள். சத்யுகத்தின் முதல்
இளவரசர் ஸ்ரீகிருஷ்ணர். கிருஷ்ணரின் தந்தையும் இருப்பார் அல்லவா. கிருஷ்ணரின் தாய் தந்தையரை
அவ்வளவாகக் காட்டுவதில்லை. தலை மீது கூடையில் வைத்து நதியைக் கடந்து அழைத்துச் சென்றதை
மட்டும் காட்டுகின்றனர். ராஜ்ஜியம் முதலான எதையும் காட்டவில்லை. அவருடைய தந்தைக்கு மகிமை
எதுவும் இல்லையே, ஏன்? இந்த சமயம் கிருஷ்ணரின் ஆத்மா நல்ல விதமாக படிப்பை படித்தார் என
இப்போது நீங்கள் அறிகிறீர்கள். அதன் காரணமாக தாய் தந்தையை விடவும் உயர்ந்த பதவியை அடைந்தார்.
நாம் ஸ்ரீகிருஷ்ணரின் ராஜ்ஜியத்தில் இருந்தோம் என்று நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். சொர்க்கத்தில் இருந்தோம்
அல்லவா. பிறகு நாம் சந்திர வம்சத்தவர் ஆகினோம். இப்போது மீண்டும் சூரிய வம்சத்தவர் ஆவதற்காக
ஸ்ரீமத்படி நடந்து தூய்மையடைந்து தூய்மையான உலகத்தின் எஜமான் ஆகப் போகிறோம். அனைவருமே
தம்முடைய நிலையை பார்க்க முடியும். ஒருவேளை நாம் இந்த சமயத்தில் சரீரத்தை விட்டோம் என்றால்
எந்த கதியை அடைவோம்? ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள முடியும். எந்த அளவு தந்தையை நினைவு
செய்வோமோ அந்த அளவு விகர்மங்கள் வினாசமாகும். மனிதர்களுக்கு ஏதாவது ஆபத்து விளைந்தாலோ,
துக்கம் ஏற்பட்டாலோ அல்லது திவால் ஆகி விட்டாலோ சாதுக்களிடம் செல்கின்றனர். பிறகு மனிதர்கள் இவர்
பக்தர், ஏமாற்று வேலைகள் எதுவும் செய்ய மாட்டார் என புரிந்து கொள்கின்றனர். இப்படி இப்படியாகவே
இரண்டு லி நான்கு வருடங்களில் மிகப் பெரிய செல்வந்தராக ஆகி விடுவார். அவர்களுடைய மறைக்கப்பட்ட
பணம் நிறைய இருக்கும். அனைவரும் தம்முடைய புத்தியின் மூலம் புரிந்து கொள்ள முடியும்.
உங்களுக்குள்ளும் பலர் மிகவும் குறைவாக நினைவு செய்யக் கூடியவர்களாக இருக்கின்றனர். ஆகையால்
தனக்கு நன்மை செய்து கொள்ள வேண்டும் என்றால் தன்னிடம் நோட்டுப் புத்தகம் வைத்துக் கொள்ள
வேண்டும். சார்ட்டை குறித்துக் கொள்ளுங்கள். நாம் முழு நாளிலும் எவ்வளவு நேரம் நினைவில் இருந்தோம்?
மனிதர்கள் முழு வாழ்க்கையின் சரித்திரத்தைக் கூட எழுதுகின்றனர். நீங்கள் நினைவின் சார்ட்டை மட்டும்
எழுத வேண்டும். தன்னுடைய முன்னேற்றம்தான் இதில் உள்ளது. பாபாவை நினைவு செய்யாவிட்டால் உயர்
பதவி அடைய முடியாது. விகர்மங்கள் (பாவ கர்மங்கள்) அழியவே இல்லை என்றால் உயர் பதவி எப்படி
அடைவீர்கள்? பிறகு தண்டனை அடைய வேண்டியிருக்கும். தண்டனை அடையாவிட்டால் நல்ல பதவி
கிடைக்கும். தண்டனையை அனுபவித்து பிறகு கொஞ்சம் சிறிய பதவியை அடைவதால் என்ன பயன்?
தர்மராஜாவிடம் தண்டனையை பெறாமல், கௌரவத்தை இழக்காமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும்.
நீங்கள் பார்க்கிறீர்கள் லி சிவபாபா அமர்ந்தபடி இருக்கிறார், பிறகு தர்மராஜாவும் இருக்கிறார். உங்களுக்கு
அனைத்தையும் காட்சியில் காட்டுவார். நீ இதை இதை எல்லாம் செய்தாய், நினைவிருக்கிறதா? இப்போது
தண்டனையை அனுபவி. பிறகு அதே நேரத்தில் பிறவி பிறவிகளாக அனுபவித்த தண்டனைகளை
அனுபவிப்பார்கள். கடைசியில் ஏதோ ரொட்டித் துண்டு அளவு கிடைத்தது என்பதில் என்ன லாபம் உள்ளது?
தண்டனையை அனுபவிக்கக் கூடாது. தன்னுடைய நிலையை சோதிக்க வேண்டும் லி கணக்கு வழக்கு
பார்ப்பதைப் போல. சிலர் 6 மாத கணக்கு, சிலர் 12 மாத கணக்கு பார்க்கின்றனர். சிலரோ தினசரி கணக்கும்
கூட எடுக்கின்றனர். நீங்களும் கூட வியாபாரிகள் அல்லவா என தந்தை சொல்கிறார். அபூர்வமாக சில
வியாபாரிகள் தந்தையிடம் வியாபாரம் செய்கின்றனர். பணம் இல்லாவிட்டால், உடலும் மனமும் உள்ளதல்லவா.
14.07.2016
(4/4)
அப்படிப்பட்டவர்களை ராஃப் என்றும் சொல்கின்றனர். முதலீடு இல்லாமலே வியாபாரம் செய்கின்றனர் அல்லவா.
நீங்கள் உடல்லிமனம்லிபொருளைக் கொடுக்கிறீர்கள், பதிலாக 21 பிறவிகளுக்கு எவ்வளவு ஆஸ்தியை பெறுகிறீர்கள்.
பாபா நான் உங்களுடையவன். என்னுடைய ஆத்மா இந்த லட்சுமி நாராயணர் போல ஆகி விடக் கூடிய
யுக்தியை சொல்லுங்கள். நான் உங்களை எவ்வளவு வெண்மையாக (அழகாக) ஆக்குகிறேன் என பாபா
சொல்கிறார். ரூபத்தையே ஒரேயடியாக மாற்றி விடுகிறேன். அடுத்த பிறவியில் உங்களுக்கு முதல் தரமான
சரீரம் கிடைக்கும். நீங்கள் வைகுண்டத்திலும் கூட பார்க்கிறீர்கள். இந்த மம்மா பாபா பிறகு லட்சுமி நாராயணர்
ஆகப் போகின்றனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். லட்சியம், குறிக்கோளும் கூட காட்டுகிறார். இப்போது
யார் எவ்வளவு முயற்சி செய்வார்களோ. . . ஒருவேளை முயற்சியை முழுமையாக செய்யாவிட்டாலோ, வீண்
பேச்சு பேசித் திரிந்தாலோ தன்னுடைய பதவியைத்தான் கீழானதாக ஆக்கிக் கொள்வார்கள். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு
தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்
1. தனது நிலையை தானே சோதிக்க வேண்டும். தனது நன்மைக்காக தினசரி குறிப்பேட்டை
வைக்க (டைரி) வேண்டும். அதில் நினைவின் சார்ட்டை எழுத வேண்டும்.
2. எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிடம் உண்மையிலும் உண்மையான வியாபரம் செய்ய
வேண்டும். தனது உடல், மனம், பொருளை தந்தைக்கு அர்ப்பணித்து 21 பிறவிகளுக்கு
பலனை எடுக்க வேண்டும். நிச்சய புத்தியாகி தனக்கு நன்மை செய்ய வேண்டும்.
வரதானம் : சகயோகத்தின் சக்தியின் மூலம் சகயோகம் செய்யாதவரையும் சகயோகியாக
ஆக்கக் கூடிய தந்தைக்குச் சமமான பரோபகாரி ஆகுக.
விளக்கம்: சகயோகிகளிடம் சகயோகியாக ஆவதில் பெரிய வீரம் ஏதும் இல்லை, ஆனால் தந்தை
அபகாரம் செய்தவர்களுக்கு உபகாரம் செய்வது போல குழந்தைகளாகிய நீங்களும் தந்தையைப் போல ஆகுங்கள்.
ஒருவர் எவ்வளவுதான் சகயோகம் செய்யாதவராக இருப்பினும், நீங்கள் தன்னுடைய சகயோகத்தின் சக்தியின்
மூலம் சகயோகம் செய்யாதவரையும் சகயோகியாக ஆக்கி விடுங்கள், இந்த காரணத்தினால் இவர் முன்னேற
மாட்டார் என நினைக்கக் கூடாது. பலவீனமானவர்களை பலவீனர்கள் என விட்டு விடாதீர்கள், ஆனால்
அவர்களுக்கு பலத்தைக் கொடுத்து பலவானாக ஆக்குங்கள். இந்த வி'யத்தில் கவனம் கொடுத்தீர்கள்
என்றால் சேவையின் திட்டங்கள் என்ற ஆபரணங்களில் வைரங்கள் ஜெôலிக்கும் அதாவது சகஜமான வெளிப்பாடு
ஏற்படும்.
சுலோகன் : கோபத்தின் காரணம் சுயநலம் மற்றும் பொறாமை லி இதுவே சிடுசிடுப்பின்
வேர் ஆகும், முதலில் இதற்கு முடிவு கட்டுங்கள்.
(1/4)
15
15.07.2016 காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! நினைவு யாத்திரையில் ஒருபோதும் களைப்படையக் கூடாது,
தேக அபிமானம் என்ற புயல் களைப்படையச் செய்கிறது, ஆத்ம அபிமானியாகும் போது
களைப்பு தூரமாக விலகிப் போய் விடும்.
கேள்வி: எந்த சம்ஸ்காரம் 21 பிறவிகளுக்கான உயர்ந்த அதிர்ஷ்டத்தைக் கெடுக்கக் கூடியது?
பதில்: கோபித்துக் கொள்ளும் சம்ஸ்காரம் (பழக்கம்) ஆகும். தந்தையிடம் அல்லது படிப்பின் மீது
கோபப்பட்டு விட்டால் 21 பிறவிகளுக்கான அதிர்ஷ்டம் கெட்டு விடுகிறது. அதனால் தான் பாபா கூறுகின்றார்
லி இனிமையான குழந்தைகளே! தேக அபிமானத்திற்கு வசமாகி நான் இத்தனை பேருக்கு புரிய வைத்திருக்கிறேன்,
இவ்வளவு உதவி செய்திருக்கிறேன்! என்ற தலைகீழான போதை ஒருபோதும் ஏற்பட்டு விடக் கூடாது.
பாருங்கள், பாபா எவ்வளவு பெரிய அதிகாரமுடையவர் (அதாரிட்டி), இருப்பினும் எவ்வளவு அகங்காரமற்றவராக
இருக்கின்றார்! ஆகையால் தந்தையைப் பாருங்கள்.
பாட்டு: இரவு பயணிகளே களைப்படைந்து விடாதீர்கள் .......
ஓம்சாந்தி. இனிமையிலும் இனிமையான குழந்தைகளே! பாட்டு கேட்டீர்கள். மேலும் யார் யோகயுக்த்,
நினைவில் இணைந்திருக்கும் சேவாதாரி குழந்தைகளோ அவர்கள் உடனேயே இதன் பொருளைப் புரிந்து
கொள்வார்கள். நாம் இரவு பயணிகள் என்றால் பிராமணர்களின் இரவு இப்போது முடிவடைந்துவிட்டது. பக்தி
மார்க்கம் இரவு என்ற கூறப்படுகிறது. அரைக் கல்பத்திற்கான இரவு முடிவடைகிறது. எல்லைக்குட்பட்ட பகல்,
இரவும் இருக்கிறது. இது பிராமணர்களின் அரைக் கல்பத்திற்கான பகல் மற்றும் அரை கல்பத்திற்கான இரவு
ஏற்படுகிறது. தந்தை வரக் கூடிய இந்த நேரம் காரிருளாக இருக்கிறது. விடியல் ஏற்படக் கூடிய முதல் சாமம்
ஆகும், அதிகாலை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்போது தந்தை கூறுகின்றார் லி இனிமையிலும் இனிமையான
குழந்தைகளே! நினைவு யாத்திரையில் களைப்படைந்து விடாதீர்கள். உலகாய யாத்திரையில் ஏற்படுவது போன்று!
முன்பு நடந்து சென்றனர்! மிகவும் மெதுவாக, இடையிடையே தங்கி சென்றனர். நாம் இந்த இந்த இடங்களில்
தங்க வேண்டும் என்று அறிந்திருப்பர். முன்பு மிகுந்த சிரத்தையுடன் நடந்து சென்றனர், அதில் மிகுந்த
உழைப்பு இருக்கிறது. ஆனால் இப்போது இது மிகவும் எளிதாகும். இது எளிய நினைவு அல்லது யோகா
என்று கூறப்படுகிறது. தந்தையை மட்டும் நினைவு செய்ய வேண்டும், களைப்படைகிறீர்கள் என்றாலே தேக
அபிமானத்தில் இருக்கிறீர்கள் என்பதாகும். இதில் எந்த திறமையும் இல்லை, மாயையின் தடைகள் ஏற்படும்.
ஆனால் இதில் களைப்படைந்து விடக் கூடாது. களைப்படைவதன் மூலம் தேக அபிமானம் வந்து விடுகிறது.
குழந்தைகளே! சரீர நிர்வாகத்திற்காகக் காரியங்கள் செய்யுங்கள், அதற்கு விடுப்பு (சமயம் ஒதுக்கி)
கொடுத்திருக்கின்றார். 8 மணி நேரம் சரீர நிர்வாகத்திற்கு, 8 மணி நேரம் ஓய்வு, பாக்கி 8 மணி நேரம் இதற்கு
(நினைவிற்கு) கொடுங்கள் என்று தந்தை கூறுகின்றார். இப்போது முழு 8 மணி நேரமும் யாரும் கொடுப்பது
கிடையாது. கடைசியில் 8 மணி நேரம் வரை இருக்க முடியும். சார்ட் அதிகப்படுத்திக் கொண்டே இருங்கள்.
இங்கு வந்து அமர்கின்ற பொழுது நினைவு ஏற்படுத்தப்படுகிறது. இதைத் தான் நீங்கள் நிஷ்டை என்று
கூறுகிறீர்கள். பாபாவின் நினைவில் வந்து அமர்கிறீர்கள். இதற்காக இங்கு வரும் போது தான் நினைவில் அமர
வேண்டும் என்பது கிடையாது. 5 லி 10 நிமிடம் நினைவில் இருந்து விட்டு எழுந்திருக்க வேண்டும் என்று பலர்
நினைக்கின்றனர். ஆனால் தந்தை கூறுவது என்னவெனில் தொழில் செய்யுங்கள், எங்கு சென்று வந்தாலும்
நினைவில் இருங்கள். கங்கையில் குளிக்க செல்கின்றனர் எனில் ராம் ராம் என்று ஜெபிக்கின்றனர் அல்லவா!
இங்கு நீங்கள் எதையும் ஜெபிக்க வேண்டாம், தந்தையை நினைவு செய்தால் போதும். இவ்வாறு தந்தை
குழந்தைகளிடத்தில் பேசிக் கொண்டிருக்கின்றார். நினைவு யாத்திரையில் தான் உங்களுக்கு நன்மை
அடங்கியிருக்கிறது, இதில் களைப்படையக் கூடாது. இதில் அதிக புயல்கள் வரும், புயல் என்றால் மண்
போன்றவைகளினால் ஏற்படும் புயல் அல்ல. மாயையின் புயல் வருவதன் மூலம் நினைவு யாத்திரை
துண்டிக்கப்பட்டு விடுகிறது. பிறகு தேக அபிமானத்தில் வருவதன் மூலம் தொழில், குழந்தைகள் போன்ற
நினைவுகள் வந்து விடுகிறது. இந்த தொழில் போன்ற அனைத்தும் அழியப் போகிறது என்று தந்தை
கூறுகின்றார். உங்களது குழந்தை வாரிசாக ஆகவே முடியாது. அனைத்தும் அழிந்து விடும். இப்போது
எல்லையற்ற தந்தை வந்திருக்கின்றார். எல்லைக்குட்பட்ட ஆஸ்தி அழியப் போகிறது. இப்போது குழந்தை
வளரும், திருமணம் செய்வோம் பிறகு இது நடக்கும் என்றெல்லாம் செல்வந்தர்கள் நினைக்கின்றனர். அந்த
அளவிற்கு இப்போது நேரம் கிடையாது என்று தந்தை கூறுகின்றார். ஆகையால் உலகத்தின் மீதிருக்கும்
பற்றுதலை முழுமையாக நீக்கி விடுங்கள். இது சுடுகாடாகும். தொழில், குழந்தைகள் போன்ற சிந்தனையிலேயே
(2/4)
15.07.2016
இறந்தால் தன்னை நாசப்படுத்திக் கொள்கிறீர்கள். சிவபாபாவை நினைவு செய்தால் அதிக லாபம் ஏற்படும். தேக
அபிமானத்தில் வருவதன் மூலம் நாசம் ஏற்படுகிறது. ஆத்ம அபிமானி ஆகின்ற போது லாபம் ஏற்படும். எந்த
அளவிற்கு நினைவு செய்வீர்களோ அந்த அளவிற்கு எதிர்கால 21 பிறவிகளுக்கான ஆஸ்தி அடைவீர்கள்.
நினைவு செய்யவில்லையெனில் அதிக நஷ்டம் ஏற்பட்டு விடும். பிறகு அது கல்ப கல்பத்திற்காக என்றாகிவிடும்.
அந்த அளவிற்கு நஷ்டம் ஏற்படுத்தக் கூடிய விசயமாகும். நான் முழு ஆஸ்தியை எப்படி அடைவது? என்று
சிந்திக்க வேண்டும். செல்வத்திற்காகவும் அதிகப் பேராசை படக் கூடாது. எதிலும் அதிக பேராவல் கொள்ள
வேண்டாம். யாராவது திவால் ஆகின்றனர் எனில் மிக அதிகமாக கவலைப்படுவர். சிவபாபாவை முற்றிலும்
மறந்து விடுவர். ஞானத்திற்கு வந்த பின்பு தான் திவால் ஆனது, வியாதி வந்தது என்று குற்றம் கூறுவர்.
இவ்வாறு ஒருபோதும் நினைக்கக் கூடாது. வியாதி போன்றவைகள் வருகிறது எனில் அது கர்ம கணக்காகும்.
விகர்மங்கள் விநாசம் ஆகிறது எனில் நல்லது தான். தர்மராஜரின் தண்டனை அடைவதை விட வியாதி
நல்லது அல்லவா! கர்ம கணக்கை முடிக்க வேண்டும். இது மகா நோயாளி சரீரமாகும். எவ்வளவு பாதுகாக்க
வேண்டியிருக்கிறது. நடந்து சென்று கொண்டிருக்கும் போதே நின்று விடுகின்றனர். இதய துடிப்பு (ஹார்ட்
பெயில்) நின்று விடுகிறது. இப்படிப்பட்ட பழைய உலகை புத்தியினால் முற்றிலும் மறந்து விட வேண்டும்.
தந்தை புதிய வீடு கட்டிக் கொண்டிருக்கிறார் எனில் பழையதிலிருந்து உள்ளத்தை நீக்கி விட வேண்டும். பாபா,
விரைவில் கட்டடம் கட்டுங்கள் என்று குழந்தைகள் கூறுகின்றனர். பழைய கட்டடத்தில் அதிக தொந்தரவு
ஏற்படுகிறது. இந்த பழைய உலகம் மிகவும் அசுத்தமானது என்பதை நீங்களும் அறிவீர்கள். இது உங்களது
எல்லையற்ற சந்நியாசமாகும். அவர்கள் வீடு வாசலை சந்நியாசம் செய்கின்றனர். அது எல்லைக்குட்பட்ட
சந்நியாசம் என்று கூறப்படுகிறது. நீங்கள் விகாரங்களை சந்நியாசம் செய்கிறீர்கள். தேக சகிதமாக தேகத்தின்
உங்களது சம்மந்தகளைத் துண்டித்து என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். இந்த
கண்களினால் பார்க்கக் கூடிய உலகை மறந்து விடுங்கள். நாம் சொர்க்கத்தின் இராஜ்யத்திற்காக முயற்சி செய்து
கொண்டிருக்கிறோம் என்பதை உங்களது புத்தி அறிந்திருக்கிறது. ஞானம் என்ற மூன்றாவது கண்
கிடைத்திருக்கிறது. இவை அனைத்தும் சுடுகாடாக ஆகிவிடும், இதன் மீது அன்பு வைக்காதீர்கள். இன்றைய
நாட்களில் மனிதர்களிடத்தில் அதிக செல்வம் இருப்பதால் விகாரமும் மிக வேமாக ஆகிவிட்டது. காம விகாரம்
எவ்வளவு வேகமாக இருக்கிறது! காமம் இல்லாமல் இருக்கவே முடியாது. 4லி5 ஆண்டுகள் தூய்மையாக
இருந்து விட்டு பிறகு பாபா, இன்று இந்த பூதம் வந்து, முகத்தை கருப்பாக்கிக் கொண்டேன் என்று கடிதம்
எழுதுகின்றனர். எவ்வளவு ஏமாற்றம் அடைகின்றனர்! ஒரேயடியாக ஐந்தாவது மாடியிலிருந்து கீழே விழுந்து
விடுகின்றனர். முதலில் இருப்பது தேக அபிமானமாகும். மேலிருந்து கீழே விழும் போது கட்டை போல
துண்டு துண்டாகி விடும். எலும்பு முற்றிலும் உடைந்து விடும். பிறகு முயற்சி செய்வதற்கு நேரம் ஏற்படும்.
இது தான் அனைத்தையும் விட மிகப் பெரிய அடியாகும், ஆகையால் காமம் மிகப் பெரிய எதிரி என்று பாபா
கூறுகின்றார். விகாரத்தை தான் பதீதம் என்று கூறப்படுகிறது. பாபா, எங்களை பதீதத்திலிருந்து பாவனம்
ஆக்குங்கள் என்று கூறுகின்றனர். பாரதத்தில் தான் சம்பூர்ண நிர்விகாரிகள் இருந்தனர் அல்லவா! பாரதமே
விகாரமற்றதாக இருந்தது. இப்போது பாரதம் விகாரியாக இருக்கிறது. சம்பூர்ண நிர்விகாரிகள் என்று
சூரியவம்சத்தினர்களை கூறலாம். இராமச்சந்திரனின் இராஜ்யத்திலும் விகாரங்களுக்கான விசயம் இருக்காது.
ஆனால் கலைகள் குறைந்து விடுகிறது. 1250 ஆண்டுகள் குறைந்து விடும் போது அந்த உலகின் சக்தியும்
குறைந்து விடும் அல்லவா! அதனால் தான் அதை சதோ பிரதானம் என்றும் இதை சதோ என்றும் கூறப்படுகிறது.
நாம் மம்மா, பாபாவை பின்பற்றி சூரியவம்சி மகாராஜா, மகாராணியாக ஆவோம் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்,
இதில் கஷ்டம் அல்லது செலவிற்கான விசயமே கிடையாது. இதற்காக வாயில் எதுவும் பேசவும் வேண்டாம்.
நினைவு செய்தால் போதும், இது தான் எளிய யோகம் என்று கூறப்படுகிறது. இதற்கு மிகுந்த முயற்சி தேவை.
பாபாவிற்கு முன் அனைவரும் மகாரதி ஆவீர்கள். இதற்கு யோகா முழுமையாக இருக்க வேண்டும், அப்போது
தான் சிறிதாவது அம்பு பாயும். யோக பலம் அல்லவா! யோகா மிகவும் குறைவாக இருக்கிறது. நினைவு
யாத்திரையில் தான் அதிக தடைகளும் ஏற்படுகிறது. எல்லையற்ற தந்தை இனிமையிலும் இனிமையான
குழந்தைகளுக்கு அமர்ந்து புரிய வைக்கின்றார். தந்தையிடமோ அல்லது படிப்பின் மீதோ ஒருபோதும் கோபித்துக்
கொள்ளக் கூடாது. கோபித்துக் கொண்டால் 21 பிறவிகளுக்கான அதிர்ஷ்டத்திடம் கோபித்துக் கொள்கிறீர்கள்.
மிக நல்ல நல்ல குழந்தைகளும் கூட கோபித்துக் கொள்கின்றனர். தேக அபிமானத்திற்கான போதை அதிகரித்து
விடுகிறது. நான் இத்தனை பேருக்கு புரிய வைத்தேன். தேக அகங்காரம் வந்தவுடனேயே கீழே விழுந்து
விடுவர். இதில் அகங்காரம் வரவே கூடாது. சிவபாபாவிற்கு ஏதாவது அகங்காரம் இருக்கிறதா? எவ்வளவு
அகங்காரமற்றவராக இருக்கின்றார்! ஆனால் மிகப் பெரிய அதிகாரமுடையவராக இருக்கின்றார்! நான் சாதாரண
உடலில், சாதாரண வீட்டில் வருகிறேன் என்று கூறுகின்றார். செல்வந்தரின் வீட்டில் வருவது கிடையாது. ஆக
இப்போது குழந்தைகளை விழிப்படையச் செய்ய வேண்டும். பாபா மிக நல்ல யுக்திகளை கூறிக் கொண்டிருக்கின்றார்.
குழந்தைகளாகிய நீங்கள் தான் தாமதப்படுத்துகிறீர்கள். நாடகப்படி இன்னும் மனநிலையில் வேகம் ஏற்படவில்லை.
(3/4)
15.07.2016
நாளடைவில் வேகம் ஏற்பட்டு விடும். இத்தனை ஆண்டுகளுக்குள் சொர்க்கம் ஸ்தாபனை ஆகிவிடும் என்று
நாம் அரசாங்கத்திற்கு சவால் விடுகிறோம். இதை செய்தித்தாள்களில் படிக்கும் போது மனிதர்கள் வந்து
உங்களிடம் கேட்பார்கள். சிறிது ஆண்டுகளுக்குள் ஸ்தாபனை ஆகும் எனில் அவசியம் விநாசமும் ஏற்படும்.
பலர் வருவார்கள். இந்த சொத்து போன்றவைகள் சிறிது காலத்திற்காகவே. இந்த சொத்துக்களை நீங்கள் சொத்து
என்ற நினைப்பதே கிடையாது. இவைகள் சிறிது காலத்திற்குத் தான் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த
கட்டடம் போன்றவைகள் வசிப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது, ஏனெனில் மதுவனத்திற்கு பல குழந்தைகள்
புத்துணர்வு பெறுவதற்காக வருவார்கள். தலைமை நிலையம் மதுவனம் ஆகும். இன்று நீங்கள் என்ன
செய்கிறீர்கள்? நாளை என்ன செய்வீர்கள்? இங்கு தபஸ்யா செய்து கொண்டிருக்கிறீர்கள், பிறகு டெல்லி
பிருந்தாவனத்திற்கு சென்று இராஜ்யம் செய்வீர்கள். நமது நினைவுச் சின்னம் எப்படி இருக்கிறது! என்பதை
நல்ல முறையில் காண்பிக்க வேண்டும். எந்த காரியம் 5 ஆயிரம் ஆண்டிற்கு முன்பு செய்திருந்தோமோ அதை
இப்போது செய்து கொண்டிருக்கிறோம். முதன் முதலில் சிவபாபாவின் கோயில் கட்டுகிறோம். மற்றபடி தில்வாடா
கோயில் பிறகு தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. புத்திக்கு வேலை கொடுக்க வேண்டும். தில்வாடா கோயிலின்
கணக்கு எடுக்க வேண்டுமென்றாலும் எடுத்து விட முடியும். முழுவதும் நமது நினைவுச் சின்னமாகும். இது
ஸ்தாபனைக்கான நினைவுச் சின்னம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்கு மிகுந்த குμ இருக்க வேண்டும். சேவைகள்
அதிகரிக்கச் செய்வதற்கான யுக்திகளை உருவாக்க வேண்டும். இராமர் ஆண்டால் என்ன!, இராவணன் ஆண்டால்
என்ன ......... அதற்கு பெரிய குடும்பம் இருக்கிறது. இராவணனுக்கு எவ்வளவு பெரிய குடும்பம் இருக்கிறது
பாருங்கள்! இராமருக்கு மிகவும் சிறிய குடும்பமாகும். சரியாகத் தான் புகழ் பாடப்பட்டிருக்கிறது. ஆனால்
யாரும் புரிந்து கொள்வது கிடையாது. தந்தையே அமர்ந்து புரிய வைக்கின்றார் என்றாலும் கூட நம்பிக்கை
ஏற்படுவது கிடையாது. சரீர நிர்வாகத்திற்காக நீங்கள் அவசியம் காரியங்களும் செய்ய வேண்டும். யார் சேவாதாரி
பாண்டவ குழந்தைகளோ அவர்கள் அரசாங்கத்திடமிருந்து உதவியும் பெற்றுக் கொள்ளலாம். அவர்களை
முழுமையாக நாம் வளர்க்க வேண்டியிருக்கும். குழந்தைகளின் மனநிலை அந்த அளவிற்கு இருக்க வேண்டும்.
பாபாவின் நினைவில் இந்த உலகின் அனைத்தையும் மறந்து விட வேண்டும். நினைவு யாத்திரையில் யார்
பக்காவாக மூழ்கியிருக்கிறார்களோ அவர்களது மனநிலையும் மிக உறுதியானதாக இருக்கும். சிவபாபாவின்
நினைவில் நீங்கள் சரீரம் விடுவது போன்று! சந்நியாசிகள் பிரம்மத்தின் நினைவில் சரீரத்தை விடுகின்றனர்
எனில் வாயுமண்டலம் முற்றிலும் அமைதியாக ஆகிவிடுகிறது. பாபாவிற்கு அனுபவம் இருக்கிறது. மனிதர்கள்
இறக்கின்ற போது வீட்டில் அமைதி நிலவுகிறது அல்லவா! இங்கும் அப்படியே இருக்கிறது. கடைசியில்
அனைத்தும் மறந்து போய் விடுவீர்கள். இப்போது நாம் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். தேக
அபிமானம் நீங்கிக் கொண்டே செல்லும். கடைசியில் குμயுடன் சரீரம் விட வேண்டும், மலர்ந்த முகத்துடன்!
அவ்வளவு தான்! நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம், வெற்றி மாலையில் வருவதற்கு தகுதியானவர்களாக
ஆகின்ற போது தான் அப்படிப்பட்ட மனநிலை ஏற்படும். உங்களிடம் அமைதிக்கான சக்தி இருக்கிறது. யார்
வந்தாலும் இங்கு அமைதி நிலவுகிறது என்று கூறுகின்றனர். இது தான் உண்மையான அமைதியாகும். ஆத்மா
சரீரத்திலிருந்து விடுபட்டு விடுகிறது. நான் ஆத்மா, சாந்த சொரூபமானவன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நாம்
நமது சுயதர்மத்தில் அமர்ந்து விடுகிறோம். காரியங்கள் செய்யாமல் எந்த மனிதனும் இருந்து விட முடியாது.
அவர்கள் ஹடயோகா மூலம் எதைத் தான் செய்யாமல் இருக்கின்றனர்! நமது சுயதர்மமே அமைதி தான்
என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொண்டீர்கள். நாம் நடிப்பதற்காக இங்கு வந்திருக்கிறோம். இப்போது
வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். என்னை நினைவு செய்யுங்கள் மற்றும் வீட்டையும் நினைவு செய்யுங்கள்
என்று தந்தை கூறுகின்றார். தந்தையை நினைவு செய்தால் ஆஸ்தி கிடைக்கும். என்னையும் வீட்டில் நினைவு
செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். இங்கு நான் தற்காலிகமாக வந்திருக்கிறேன். உங்களது புத்தி பாபாவின்
நினைவின் மூலம் சாந்திதாமத்தில் நிலைக்க செய்ய வேண்டும். வீட்டின் ஆஸ்தியையும் அடைய வேண்டும்
அல்லவா! அது ஆத்மாக்களின் வீடாகும். இது ஜீவாத்மாக்களின் வீடாகும். தனது வீட்டையும் மறந்து விடாதீர்கள்.
தந்தையையும் மறந்து விடாதீர்கள். தந்தையை நினைவு செய்தால் தான் தூய்மையாகி வீட்டிற்குச் சென்று
விடுவீர்கள். ஞானத்தை தாரணை செய்வதால் புது உலகில் இராஜ்யம் செய்ய வருவீர்கள். எவ்வளவு முடியுமோ
மற்றவர்களுக்கு வழி கூறிக் கொண்டே செல்லுங்கள். எப்போதும் தந்தையைப் பாருங்கள். தந்தை என்ன
செய்தார் என்பது உங்களுக்குத் தெரியும். அனைத்தையும் தாய்மார்களிடம் கொடுத்து விட்டார். அனைத்தையும்
தாய்மார்களின் சேவையில் ஈடுபடுத்து என்று அவர் தான் கட்டளையிட்டார். ஒருவரைப் பார்த்து மற்றொருவர்
பின்பற்றினார். சுவாஹா (அர்ப்பணம்) ஆகிவிட்டனர். ஆனால் பிறகு நிலைத்திருக்கவும் வேண்டும் அல்லவா!
நாடகப்படி பட்டியும் நடக்க வேண்டும் என்று இருந்திருக்கிறது. பாகிஸ்தான் இந்துஸ்தானாக மாறியது. உங்களது
பட்டி முதலில் பாகிஸ்தானில் ஆரம்பமானது. நீங்கள் நதியை கடந்தீர்கள், சாஸ்திரங்களில் என்ன என்ன
விசயங்களை எழுதி விட்டனர். நடைமுறையில் இப்போது நீங்கள் கேட்கிறீர்கள் அல்லவா! பிறகு கல்பத்திற்கு
(4/4)
15.07.2016
பின் நீங்களே கேட்பீர்கள். இப்போது தந்தை கூறுகின்றார் லி தீயவைகளைக் கேட்காதீர்கள், தொழில்
போன்றவைகளைச் செய்யுங்கள், ஆனால் தீயவைகளைக் கேட்காதீர்கள். ஒவ்வொரு விசயத்திலும் ஸ்ரீமத்
பெறுங்கள் என்று தந்தை கூறுகின்றார். பாபா, இந்த சூழ்நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்? பாபா
உடனேயே கூறிவிடுவார். ஏதாவது விசயம் நீங்கள் கேட்க வேண்டுமென்றால் பாபாவிடம் வாருங்கள். நீங்கள்
ஏன் பயப்படுகிறீர்கள்? ஒவ்வொரு அடியிலும் கேட்க வேண்டும். ஸ்ரீமத் படி நடக்கும் போது ஒவ்வொரு
அடியிலும் பல மடங்கு வருமானம் இருக்கிறது. நீங்கள் கடக்கும் ஒவ்வொரு நொடியிலும் பல மடங்கு
வருமானம் இருக்கிறது. ஆக எவ்வளவு வருமானம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது! நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய்
தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீக
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) வெற்றி மாலையில் வருவதற்காக இந்த சரீரத்திலிருந்து விடுபட்டு இருப்பதற்கான
முழு முயற்சி செய்ய வேண்டும். தேக அபிமானத்தை விட்டுக் கொண்டே செல்ல
வேண்டும். இந்த உலகை புத்தியினால் மறக்க வேண்டும்.
2) பணத்தின் பேராசையில் செல்லக் கூடாது. தந்தையின் நினைவு தவிர வேறு எந்த
சிந்தனையும் இருக்கக் கூடாது. ஒருபோதும் தந்தையிடம் அல்லது படிப்பின் மீது
கோபித்துக் கொள்ளக் கூடாது.
வரதானம்: மன்மனாபவ என்ற ஸ்திதியின் மூலம் மன உணர்வுகளை அறிந்து கொள்ளக் கூடிய
வெற்றி சொரூபம் ஆகுக.
எந்த குழந்தைகள் மன்மனாபவ என்ற ஸ்திதியில் நிலைத்திருப்பார்களோ அவர்களால் மற்றவர்களது மன
உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும். வார்த்தைகள் எப்படி வேண்டுமென்றாலும் இருக்கட்டும், ஆனால்
அவர்களது உணர்வுகள் என்ன? என்பதை அறியும் பயிற்சி செய்து கொண்டே செல்லுங்கள். ஒவ்வொருவரின்
மன உணர்வுகளைப் புரிந்து கொள்வதன் மூலம் அவர்களது விருப்பம் அல்லது எந்த பலன் பெற
ஆசைப்படுகிறார்களோ அதை நிறைவேற்ற முடியும். இதன் மூலம் அவர்கள் அழிவற்ற முயற்சியாளர்களாக
ஆகிவிடுவார்கள். பிறகு குறுகிய காலத்தில் அதிக வெற்றி என்பது தென்படும். மேலும் நீங்கள் முயற்சியாளர்
சொரூபத்திற்கு பதிலாக வெற்றி சொரூபமாக ஆகிவிடுவீர்கள்.
சுலோகன்: தூங்கும் போது அனைத்தையும் தந்தையிடம் அர்ப்பணித்து விட்டு (புத்தி) காலியாகி
விட்டால் வீணான அல்லது விகார கனவுகள் வராது.
(1/4)
16
16.07.2016 காலை வகுப்பு ஓம்சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளேலி யோகபலத்தால் தான் ஆத்மாவின் கறை நீங்கும், ஆகையால்
யோகத்தில் ஒரு போதும் தவறு செய்யக் கூடாது.
கேள்வி:லி பாபா குழந்தைகளுக்கு எல்லையற்ற ஆஸ்தியை கொடுப்பதற்கு என்ன யுக்தி கூறியுள்ளார்,
அதில் மாயா நாலா புறமும் தடைகளைப் போடுகின்றது?
பதில்:லி நீங்கள் பிரம்மா குமார், குமாரிகள் ஒரு பாபாவின் குழந்தைகள் தங்களுக்குள் சகோதரன்லிசகோதரி,
உங்களுக்குள் ஒருபோதும் தீய பார்வை இருக்க முடியா என்று பாபா யுக்தி கூறி இருக்கின்றார். சகோதரன்,
சகோதரி ஒருபோதும் விகாரத்தில் போக முடியாது, நீங்கள் சிவபாபாவின் வழிப்படி நடந்து எல்லையற்ற
ஆஸ்தியை அடைய வேண்டும். ஆனால் மாயா குறைந்தது இல்லை, நாலா விதத்திலும் தடைகளை
போட்டுவிடுகின்றது. நாம் சகோதரன்லிசகோதரிகள், ஒரு தந்தையிடம் இருந்து ஆஸ்தியை அடைகின்றோம்,
இதை மறந்து விடுகின்றோம்.
பாட்டு:லி உங்களை அடைந்து நாங்கள்.
ஓம்சாந்தி. இந்த பாட்டின் ஒரு வார்த்தை போதும். எல்லையற்ற தந்தையிடம் இருந்து எல்லையற்ற
ஆஸ்தி கிடைக்கின்றது என்று குழந்தைகள் அறிந்துள்ளீர்கள். மேலும் கல்பலிகல்பம் கிடைக்கின்றது. எல்லையற்ற
இந்த ஆஸ்தி பாரதத்திற்கு மட்டும் தான் கிடைக்கின்றது என்பதையும் நீங்கள் குழந்தைகள் தெரிந்து கொண்டீர்கள்.
இப்பொழுது மட்டும் இல்லை, மீண்டும் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. பார்க்கின்றீர்கள்லி இப்பொழுது
சொர்கத்தின் ஆஸ்தி இல்லை என்பதைப் பார்க்கின்றீர்கள், இராவணன் மூலமாக நரகத்தின் சாபம் கிடைத்துக்
கொண்டு இருக்கின்றது. சாபத்தால் மனிதன் துக்கம் அடைகின்றார்கள். வரம் என்றால் ஆஸ்தியால் சுகம்
கிடைக்கின்றது. எல்லையற்ற நிராகார தந்தை பாபா, எல்லையற்ற சாகார தந்தை பிரஜா பிதா பிரம்மாவைத்
தவிர வேறு யாரும் இல்லை என்று இப்பொழுது பிராமண குழந்தைகள் அறிந்துள்ளீர்கள். காந்தியை பாபு
என்று கூறுகின்றார்கள். ஆனால் சட்டப்படி மனித சிருஷ்டிக்கு அவர் தந்தை ஆக முடியாது. முழு உலகத்திற்கும்
தந்தை சிவன். நாம் சிவபாபாவின் குழந்தைகள் ஆகியுள்ளோம் என்பதை இப்பொழுது நீங்கள் குழந்தைகள்
அறிந்துள்ளீர்கள். சிவபாபா நமக்கு ஆஸ்தியைக் கொடுப்பதற்காக நம்மை தன்னுடையவர் ஆக ஆக்கியுள்ளார்.
மதுபன் வந்துள்ளீர் எதற்காக? சிவபாபாவை சந்திப்பதற்காக, ஆனால் அவர் நிராகார். சிவபாபா என்று மட்டும்
சொன்னால் புரிந்து கொள்ள முடியாது, அதனால் தான் பாப்தாதா என்று சொல்கின்றோம். சிவபாபா மேலும்
பிரம்மா தாதா. தாதா பெயர் தனி, பாபா என்ற பெயர் தனி. அவர் நிராகாரர் அனைவருக்கும் தந்தையாக
உள்ளார். அனைவருக்கும் தாதாவாகவும் உள்ளார். அனைத்துக் குழந்தைகளுக்கும் அவசியம் ஆஸ்தி
கிடைக்கின்றது. எல்லையற்ற தந்தையிடம் இருந்து ஆஸ்தி கிடைக்கின்றது. தந்தை துக்கத்தை நீக்கி, சுகத்தைக்
கொடுக்கக் கூடியவர். சத்தியயுகத்தில் எந்த மனிதரும் துக்கத்தில் இருக்க முடியாது. பெயரே சொர்க்கம், அந்த
சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யக் கூடியவர் கடவுள் தந்தை. பாரதம் மிகவும் பழமையானது என்றால்,
முற்றிலும் புதியதாக இருந்தது. இப்பொழுது முற்றிலும் பழையதாகிவிட்டது. சத்தியயுகம், கலியுகம் என்று
பாரதத்தில் தான் சொல்கின்றார்கள். பாரதம் தான் சொர்க்கமாக இருந்தது. இங்கே இலட்சுமிலிநாராயணன் ஆட்சி
செய்தார். இது உங்கள் புத்தியில் உள்ளது. இப்பொழுது நீங்கள் இலட்சுமிலிநாராயணன் கோவிலுக்குச் சென்றீர்கள்,
என்றால் உடனே உங்கள் புத்தியில் வரும் இவர்கள் இந்த ஆஸ்தியை எப்படி அடைந்தார்கள்? இவர்கள்
பூஜிக்கத் தகுதியான நிலையை எப்படி அடைந்தார்கள்? எப்பொழுது இராஜ்ஜியம் செய்தார்கள்? யார் மூலமாக
இராஜ்ஜியம் அடைந்தார்கள்? இவை அனைத்தும் உங்கள் புத்தியில் வரும். இதற்கு முன்னால்
இலட்சுமிலிநாராயணன் கோவிலுக்கு போனால் மாலை உருட்டுவீர்கள். அவர்களின் அறிமுகம் ஒன்றுமே தெரியாது.
இப்பொழுது கூட உங்கள் புத்தியில் வரிசைக்கிரமமாகத் தான் உள்ளது. இப்பொழுது நீங்கள் இலட்சுமிலிநாராயணன்
கோவிலுக்குப் போய் நின்றீர்கள், ஆனால் புன்சிரிப்பு வரும். புத்தியில் இவர்கள் எப்படி பலன் அடைந்தார்கள்
என்பதை அறிந்துவிட்டீர்கள் சங்கமயுகத்தில் தான் அடைந்தார்கள், ஏனென்றால், சங்கமயுகத்தில் தான் பழைய
உலகம் மாறுகின்றது. சங்கமயுகத்தில் தான் தந்தை வந்து இராஜயோகம் கற்றுக் கொடுகின்றார். அநேக
ஜென்மத்தின் கடைசி ஜென்மத்தின் கடைசியில் தான் பிரம்மா ஆகின்றார். பிரம்மா மூலமாகத் தான் விஷ்ணுபுரி
ஸ்தாபனை ஆகின்றது. இந்த லெட்சுமிலி நாராயணன் தான் முன் ஜென்மத்தில் நிச்சயம் பிரம்மா, சரஸ்வதியாக
இருந்தார்கள். பிரம்மா கூட பிராமணர், பிராமணிகள் இருந்திருப்பார்கள். சத்தியயுகத்தில் லட்சுமிலிநாராயணன்
இராஜ்ஜியம் இருந்தது அல்லவா, அப்பொழுது அவசியம் பிரஜாபிதா இருந்திருப்பாரல்லவா. நாம் முயற்சி
செய்கின்றோம் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள், கல்பத்திற்கு முன்னால் யாரெல்லாம் முயற்சி செய்தார்கள்
என்பதை நாம் சாட்சியாகி பார்க்கின்றோம். ஒன்று இராஜா குடும்பம், இன்னொன்று பிரஜா குடும்பம். அதிலும்
(2/4)
16.07.2016
சிலர் பணக்காரர்களாக இருப்பார்கள், சிலர் குறைவாக இருப்பார்கள். இராஜாக்களில் கூட சிலர் பணக்கார
இராஜ்ஜாக்களாக இருப்பார்கள், சிலர் குறைவான பணக்காரர்களாக இருப்பார்கள். நீங்கள் லெட்சுமிலிநாராயணன்
கோவிலில் யாருக்கு வேண்டுமானாலும் புரியவைக்கலாம் அவர்கள் எப்படி இராஜ்ஜியம் அடைந்தார்கள் என்று.
இப்பொழுது அவர்கள் மீண்டும் இராஜ்ஜிய பாக்கியத்தை அடைந்து கொண்டிருக்கின்றார்கள், இராஜதானி
ஸ்தாபனை ஆகிக் கொண்டு இருக்கின்றது. எவ்வளவு எளிதாக உள்ளது, அம்பா யார்லி இதைக் கூட அறிவதில்லை.
இவர்தான் ஜகத்அம்பா என்று நீங்கள் சொல்ல முடியும். கல்பத்திற்கு முன்னால் கூட ஜகத் அம்பாலிஜகத்பிதா
இருந்தார்கள். அவர்களின் குழந்தைகள் நாமாக இருந்தோம். சங்கமயுகத்தில் தான் பாபா ராஜயோகம் கற்றுக்
கொடுக்கின்றார். ஜகத்அம்பாவின் குழந்தைகள் அநேக பேர் உள்ளார்கள். ஆனால் அனைவரையும் உட்கார
வைக்க முடியாது. இப்பொழுது உங்களுக்கு மூன்றாவது கண் கிடைத்துள்ளது. பாபா ஞானக்கடலாக உள்ளார்
என்றால் அவசியம் குழந்தைகளுக்கு ஞானம்தானே கொடுப்பார். அவரை மனிதன் என்றோ, தேவதை என்றோ
சொல்ல முடியாது. அவரை பரமாத்மா என்று தான் சொல்ல முடியும். நீங்கள் எந்த கோவிலுக்கு போனாலும்
அவர்களின் வாழ்க்கை வரலாறு சொல்ல முடியும். ராமருக்காக கூட நீங்கள் சொல்ல முடியும். சந்திரவம்ச குலம்
இப்பொழுது இஸதாபனை ஆகி கொண்டு இருக்கின்றது. பிரம்மா மூலமாக பிராமணர்களின் தர்மம் கூட
ஸ்தாபனை ஆகின்றது. பிரம்மாவின் பெயர் எவ்வளவு புகழ் பெற்றது. பிரம்மா மூலமாக பாபா பிராமணர்களைப்
படைக்கின்றார். நீங்கள் பிரம்மாகுமார்லிபிரம்மாகுமாரி ஆனதால், நாம் அனைவரும் ஒரு தந்தையின் குழந்தைகள்
சகோதரன்லிசகோதரிகள் என்று தெரிந்து கொண்டீர்கள். பிறகு நாம் தீய பார்வையில் பார்க்க முடியாது.
சகோதரன்லிசகோதரி விகாரத்தில் போக முடியாது. தந்தை தான் இந்த யுக்தியை உருவாக்கினார். டிராமா
அனுசாரமாக நீங்கள் கூட பிரம்மாகுமார், நாம் கூட பிரம்மாகுமாரி ஆக உள்ளோம். உண்மையில் முழு
உலகமே பி.கே தான். ஆனால் இதை அறிவதில்லை. நாம் சிவபாபாவின் வழியில் சென்று எல்லையற்ற ஆஸ்தி
அடைகின்றோம். மாயா கூட குறைந்தது இல்லை. நாலா புறமும் தடைகள் போடுகின்றது. நாம் சகோதரன்லிசகோதரி,
ஒரு தந்தையின் குழந்தைகள் என்பதை மறந்துவிடுகின்றோம். சத்தியயுகத்தில் ஒரே தர்மம் தான் இருந்தது
என்பதை நீங்கள் நல்லவிதமாகப் புரிந்து கொண்டீர்கள். மற்ற அனைத்து தர்மங்களும் அழிந்துவிடும். இது
ஒன்றும் புதிய விஷயமில்லை என்பதை குழந்தைகள் நீங்கள் அறிந்து கொண்டீர்கள். ஒவ்வொரு 5 ஆயிரம்
வருடத்திற்குப் பிறகு இந்த சக்கரம் இப்படியே சுற்றுகின்றது. நாள்,தேதி கூட எழுதப்பட்டுள்ளது. நாம்
சிவபாபாவிடமிருந்து இந்த யுக்தியில் ஆஸ்தி அடைகின்றோம் என்பது உங்கள் புத்தியில் இருக்க வேண்டும்.
லட்சியம் கிடைத்துவிட்டது அல்லவா, பாபாவை நினைவு செய்து பாபாவிடமிருந்து ஆஸ்தியை அடைய
வேண்டும். நினைவு என்றால் யோக பலத்தினால் தான் பாவம் நீங்கும். இதில் எந்த தவறும் செய்யக் கூடாது,
இதற்காகா தான் ஞான முரளி கிடைக்கின்றது. நிச்சய புத்தி உறுதியாக இருந்தால் எங்கு வேண்டுமானாலும்
போகலாம் முரளி கிடைக்கவில்லை என்றாலும் கூட புத்தியில் நாம் பாபாவின் குழந்தைகள் ஆகிவிட்டோம்
என்பது உள்ளது அல்லவா ? உங்களுடைய ஆத்மா தமோ பிரதானமாக ஆகிவிட்டது என்று பாபா புரிய
வைக்கின்றார். இப்பொழுது பாபாவின் நினைவில் இருங்கள் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானம்
ஆகிவிடுவீர்கள். இந்த மஹாமந்திரத்தை பாபாவைத் தவிர வேறு யாரும் புரிய வைக்க முடியாது.
இனிமையிலும்லிஇனிமையான குழந்தைகளே நினைவு என்ற பலத்தால் தான் நீங்கள் தமோபிரதானத்தில்
இருந்து சதோபிரதானம் ஆக வேண்டும் என்று பாபா சொல்கின்றார். ஆனால் இந்த வார்த்தை யாருடைய
புத்தியிலும் வருவதில்லை. நிச்சயம் கல்பத்திற்கு முன்னால் கூட பாபா இந்த வார்த்தையைக் கூறினார் தேகம்,
தேக சம்மந்தப் பட்ட அனைத்து தர்மங்களையும் விட்டு தன்னை ஆத்மா என்று நினைவு செய்யுங்கள் என்று
கூறினார் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள். இவை அனைத்தும் தேக தர்மங்கள் தானே ! அனைவருக்கும்
தந்தை ஒருவர் தான். அனைத்து ஆத்மாக்களும் அந்த ஒரு தந்தையைத் தான் அழைக்கின்றார்கள். போப்
கூட அந்த ஒரு தந்தையைத் தான் நினைக்கின்றார். ஹே கடவுளே! தந்தையே ! கருணை காட்டுங்கள் என்று
தான் சொல்கின்றார். இந்த கோபமுள்ள புத்தியை திருத்துங்கள் அப்பொழுது தான் இவர்களுக்குள் சண்டை
போடமாட்டார்கள். நினைவு என்பது பாபாவைத் தானே செய்கின்றார்கள். மற்ற யாரையும் நினைப்பதில்லை.
சிவபாபாவைத் தான் அழைக்கின்றார்கள் வந்து பதீதர்களைலிபாவனம் ஆக்குங்கள் என்கின்றார்கள். பாவனம்
ஆகிவிட்டால் பின்பு இந்த சீலிசீ இராவணன் உலகத்தில் இருக்க மாட்டோம், பிறகு அவசியம் புதிய உலகம்
தேவை. கலியுகம் மாறி சத்தியயுகம் வரும் அல்லவா? ஆனால் இதைக் கூட புரிந்து கொள்வதில்லை. ஒரு
டாக்டர் வந்திருந்தார் அவர் லி கலியுகத்தில் கலியுகம் தானே நடக்கும் என்று சொன்னார். அடே சதா கயுகத்
திலேயே எப்படி இருப்பது ? கலியுகம் என்ன நன்றாக இருக்கின்றதா என்ன? புரிந்து கொள்வதே
இல்லை, வெறும் பாவனையோடு இருப்பதால் அழைத்து வருகின்றார்கள். அவர்களுக்குப் புரியவில்லை என்றாலும்,
வேறு யாராவது ஞானத்தைப் புரிந்து கொள்வதால் கொஞ்சமாவது தரகு கிடைக்கும் நாம் சொர்க்கத்தில் வந்து
விடுவோம். பாபாவிடம் சிறிதாவது ஞானம் கேட்டால் அவர்கள் அவசியம் சொர்க்கத்திற்கு வந்து விடுவார்கள்.
ஏனெனில், சொர்க்கத்தைப் படைக்கும் கடவுள் தந்தை முன்னால் வந்து அமர்ந்து விட்டார்கள் அல்லவா. நான்
(3/4)
16.07.2016
அனைவருக்கும் தந்தை அல்லவா? என்று பாபா புரிய வைக்கின்றார். சிவபாபா எப்படி வருகின்றார் என்பதை
யாரும் ஏற்றுக் கொள்வதே இல்லை. அரே ஆத்மா வர முடியும் எனும் போது நான் ஏன் வரமுடியாது?
ஆத்மா ஒரு உடலை விட்டு இன்னொரு உடலில் வர முடியும் எனும் போது நான் வர முடியாதா? இல்லை
என்றால், நான் எப்படி வருவேன்? பதீதலிபாவனன் வாருங்கள் எங்களை பதீத நிலையில் இருந்து பாவனம்
ஆக்குங்கள் என்று அழைக்கின்றீர்கள். நான் பாரதத்தில் தான் வருகின்றேன் என்று பாபா சொல்கின்றார்.
கல்பலிகல்பமாய் சங்கமயுகத்தில் ஒரு முறை தான் நான் வருகின்றேன். நீங்கள் எப்பொழுது 84 ஜன்மம் எடுத்து
முடிக்கின்றீர்களோ அப்பொழுது நான் வருகின்றேன். பாபா வந்து விட்டார் ஆஸ்தியைக் கொடுக்கின்றார் என்று
குழந்தைகளாகிய உங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. பாபா சொல்கின்றார் என்னுடைய தொழிலே இதுதான்
பழைய உலகத்தை மாற்றி புதிய உலகத்தை ஸ்தாபனை செய்வது ஆகையால் பாடப்படுகின்றது புதிய உலகம்
ஸ்தாபனை, பழைய உலகம் அழிவது, பின்பு நீங்கள் இதை பாலனை செய்கின்றீர்கள். இப்பொழுது ஒளி
கிடைத்து விட்டது அல்லவா? காளி கோவிலுக்குப் போய் பார்த்தீர்களென்றால் இது பொய்யான படம் என்று
நினைப்பீர்கள். காளி என்பது உண்மையில் ஜெகத்தம்பா தான். ஆனால் அப்படி பயங்கரமான ரூபம் எல்லாம்
இல்லை. வங்காளத்தில் காளிக்கு முன்னால் பலி எல்லாம் கொடுக்கின்றார்கள், ஆனால் ஒன்றும் புரிந்து
கொள்வதே இல்லை. ஜெகத்தம்பா கோவிலுக்கு இலட்சக்கணக்கான பேர் வருகின்றார்கள். சதா திருவிழா போல்
இருக்கும். சின்ன மூர்த்தி தான் வைக்கப்பட்டுள்ளது. ஜகதம்பாள் என்று பெயர் வைத்துள்ளர்கள். அப்பொழுது
ஜெகதம்பா ஒருவர் இ!ருக்க வேண்டுமல்லவா? சிந்தியில் காளி கோவில் எப்படி உருவாக்கி உள்ளார்கள். ஒரு
முறை கோட்டையில் அணுகுண்டு வெடித்தது, அதில் கோட்டை உடைந்தது, ஒரு ஏழை சொன்னார் காளிக்கு
கோபம் வந்துவிட்டது, அதனால் உடனே அங்கே காளி கோவில் உருவாக்கினார். இப்பொழுது காளி என்பவர்
யார் இதை யாரும் அறிவதில்லை. உங்களுக்கு ஞானம் கிடைத்து உள்ளது, அப்படி ஒரு விசயமே இல்லை,
இதை நீங்கள் அறியவில்லை. பாபாவிடம் இருந்துதான் ஆஸ்தி கிடைக்கின்றது என்பதை அறிந்துள்ளார்கள்
என்றால் முயற்சி செய்ய வேண்டுமல்லவா?
எப்பொழுது குமார்லிகுமாரி திருமணம் செய்து கொள்கின்றார்களோ அப்பொழுது முதல் நம்பர் துக்கம்
ஆரம்பம் ஆகின்றது. உங்களுக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே வரக் கூடாது.
இப்பொழுது இராவண இராஜ்ஜியம் அழியப் போகின்றது என்று பாபா சொல்கின்றார். குடும்பத்தில் இந்த
விகார செயல்கள் நடக்கின்றது. தேவிலிதேவதைகளுக்காகப் பாடுகின்றார்கள். இந்த தேவிலிதேவதைகளை நிர்விகாரி
ஆக யார் செய்கின்றார் என்பது யாருக்கும் தெரியாது. சத்தியயுகம் என்பது சம்பூர்ண நிர்விகார உலகம்.
சாஸ்த்திரங்களில் அங்கேயும் விகாரிகளாக இருந்ததாகக் காட்டுகின்றார்கள். ஆனால் அதுவோ நிர்விகார உலகம்,
விகார உலகத்திற்கும், நிர்விகார உலகத்திற்கும் எத்தனை வித்தியாசம் உள்ளது. இந்த விசயம் யாருடைய
புத்தியிலும் இருப்பதில்லை. லட்சுமிலிநாராயணன் இராஜ்ஜியத்தில் கொஞ்ச மனிதர்கள் தான் இருந்தார்கள் என்பதை
நீங்கள் அறிந்து கொண்டீர்கள். ஒரு தர்மம் தான் இருந்தது பின்பு தான் அதிகமாகின்றது. சக்கரம் கூட
முழுமையாக சுழல வேண்டியுள்ளது, அப்பொழுது தான் முழு உலகம் சுற்றி வந்தார் என்று சொல்ல முடியும்.
சமுத்திரத்தைச் சுற்றி வர முடியாது. சத்தியயுகத்தில் கொஞ்ச பேர் உள்ளதால் கொஞ்ச பூமி தான்
பயன்படுத்தப்படுகின்றது. இப்பொழுது மனித ஸ்ருஷ்டி முடிவு அடையப் போகின்றது. மேலே உள்ள கொஞ்ச
ஆத்மாக்களும் வந்து கொண்டே இருக்கின்றார்கள். மனிதர்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றார்கள்.
அங்கிருந்து வரக் கூடிய ஆத்மாக்கள் பூர்த்தி ஆகிவிட்டது என்றால், நீங்கள் கர்மாதீத நிலையை அடைந்து
விடுவீர்கள் பின்பு ஆத்மாக்கள் உடலை விட்டு போக வேண்டி வரும். அவர்கள் வருவது நீங்கள் போவதுமாக
இருக்கும். கொஞ்சம்லிகொஞ்சமாக வருகின்றார்கள். இது புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். நாம்
முதன்லிமுதலில் அங்கே போக வேண்டி வரும். நாம் போனதும் யாரும் இருக்க வேண்டாம். இது விரிவான
விஷயம். நல்லதுலிநீங்கள் பாபுல்நாத்தை நினைவு செய்யுங்கள் என்று மீண்டும் பாபா குழந்தைகளுக்குச்
சொல்கின்றார். உங்களுக்குத் தான் பாபாவை நினைப்பதால் இலாபம். இந்த சரித்திரலிபூகோளம் மனிதர்கள்
படிக்கின்றார்கள். மிகவும் துôரம்லிதுôரம் செல்கின்றார்கள். சந்திரனுக்குக் கூட போகின்றார்கள். இது விஞ்ஞானத்தின்
கர்வம். எல்லைக்கே போகின்றார்கள். சந்திரனில் யாராவது நிற்க முடியுமா என்ன, நீங்கள் சூரியன் சந்திரனைக்
கூட கடந்து செல்கின்றீர்கள். இந்த ஞானம் உங்கள் புத்தியில் இருக்கின்றது. நாடகத்தின் அனுசாரமாக பாபா
இதை எல்லாம் புரிய வைக்கின்றார் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள். நான் உங்களை பதீத நிலையிலி
ருந்து பாவன நிலைக்கு ஆக்குகின்றேன் என்று பாபா சொல்கின்றார். இது தான் என்னுடைய பார்ட்.
பக்திமார்க்கத்தில் கூட என்னுடைய பார்ட் உள்ளது. இது நாடம் தானே ! நீங்கள் எப்படி நடிக்கின்றீர்களோ,
நானும் கூட நடிக்கின்றேன். என்னுடைய வேலை உங்களை பதீத நிலையிலிருந்து பாவனமாக்குவது. என்ன
செய்தாலும் அதற்கு புகழ் கிடைக்கின்றது அல்லவா? இந்த இலட்சுமிலிநாராணனுக்கு எவ்வளவு புகழ்
பாடுகின்றார்கள் ! ஆனால் இந்தளவு தகுதியுடையோராக யார் ஆக்கினார்கள். அவர்கள் சுகதாமத்திற்கு
எஜமானர்களாக இருந்தார்கள். இன்று எத்தனை விதம் விதமாக துக்கங்கள் உள்ளன. இன்று யாராவது
16.07.2016
(4/4)
இறந்தார், சண்டை நடந்தது, கோடிக்கணக்கான செல்வம் இருந்தாலும் ஏதாவது நோய் வந்துவிடுகின்றது
என்றால் என்ன செய்வது? பிர்லாவிடம் எவ்வளவு பணம் உள்ளது. ஆனால் துக்கம் இல்லை என்று யாரும்
சொல்ல முடியாது. ஏதாவது விதத்தில் துக்கம் அனைவருக்கும் உள்ளது. இப்பொழுது இந்த செல்வம் எல்லாம்
மண்ணில் போய்விடும். நல்லது.
இனிமையிலும்லிஇனிமையான செல்லமான குழந்தைகளுக்கு, தாய்லிதந்தை பாப்தாதாவின் அன்பு
நினைவுகள்! மேலும் காலை வணக்கங்கள். ஆன்மீகத் தந்தையின் ஆன்மீகக் குழந்தைகளுக்கு
நமஸ்தே !
தாரணைக்கான முக்கிய சாரம்:லி
1) கர்மாதீத நிலை அடைந்து வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். ஆனால், எப்பொழுது
அனைத்து ஆத்மாக்களும் வருவது நின்றுவிடுகின்றதோ, அப்பொழுது தான் நீங்கள் செல்ல
முடியும்.
2) ஞான ஒளி கிடைத்துள்ளது, ஆகையால் நிச்சயபுத்தி ஆகி பாபாவிடமிருந்து முழு
ஆஸ்தியை அடைய வேண்டும். எங்கிருந்தாலும் கூட நினைவு பலத்தால் ஆத்மாவை
தமோபிரதான நிலையிலிருந்து சதோபிரதான நிலையை அடைய முயற்சி செய்ய
வேண்டும்.
வரதானம்: தேகலிஅபிமானத்தை தியாகம் (விட்டு விடுவது) செய்வதின் மூலமாக சிரேஷ்ட
பாக்கியத்தை அடையக் கூடிய அனைத்து சித்தி சொரூப பவ !
தேக அபிமானத்தை தியாகம் செய்து அதாவது ஆத்மா அபிமானியாக ஆவதால் பாபாவிடம் சர்வ
சம்மந்தம், சர்வ சக்திகள் அனுபவம் ஏற்படும், இந்தஅனுபவம் தான் சங்கமயுகத்தில் சர்வ சிரேஷ்ட
பாக்கியமாகும். விதாதா மூலமாகக் கிடைத்துள்ள இந்த விதியை தன்னுடையதாக்கிக் கொள்வதால் முன்னேற்றம்
கூட கிடைக்கும். மேலும் அனைத்து சித்திகளும் கிடைக்கும். தேகதாரி சம்மந்த அன்பால் நீங்கள் கீரிடம்,
சிம்மாசனம் மேலும் தன்னுடைய உண்மையான சொரூபம் அனைத்தையும் விட்டுவிட்டீர்கள் என்றால்,
பாபாவின் அன்பிற்காக தேக அபிமானத்தை விட முடியாதா. இந்த ஒரு தியாகத்தால் அனைத்து பாக்கிய
களும் அடையலாம்.
சுலோகன்: கோபத்திலிருந்து முக்தி அடைய வேண்டும் என்றால் சுயநலம் இல்லாமல்
பரந்தநலம் உள்ளவர் ஆகுங்கள், ஆசைகளின் பல ரூபத்தை மாற்றுங்கள்.
(1/4)
17
17.07.2016 காலை முரளி ஓம் சாந்தி ''அவ்யக்த பாப்தாதா''
ரிவைஸ் 19.10.1981 மதுபன்
'' ஒவ்வொரு பிராமணனும் சைத்தன்ய நட்சத்திர மண்டலத்தின் அலங்காரம் ''
இன்று ஞான சூரியன், ஞான சந்திரன் தங்களுடைய நட்சத்திர மண்டலத்தை பார்ப்பதற்காக
வந்திருக்கிறார்கள். நட்சத்திரங்களின் நடுவே ஞான சூரியன், ஞான சந்திரன் இருவர்களுமே சேர்ந்து வந்திருக்
கிறார்கள். பொதுவாக இந்த பௌதீக உலகத்தில் சூரியன், சந்திரன் மற்றும் கூடவே நட்சத்திரங்கள் சேர்ந்திருப்ப
தில்லை. ஆனால் சைத்தன்ய நட்சத்திரங்கள் சூரியன் மற்றும் சந்திரனின் உடன் இருக்கிறார்கள். இது
நட்சத்திரங்களின் ஆன்மீகக் கூட்டம். இன்று பாப்தாதா விதவிதமான நட்சத்திரங்களை பார்க்கிறார். ஒவ்வொரு
நட்சத்திரத்திலும் அவரவர்களின் விசேஷம் இருக்கிறது. சின்ன சின்ன நட்சத்திரங்களும் இந்த நட்சத்திர
மண்டலத்தை மிக நல்ல அழகானதாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். பெரியவர்களும் இருக்கத் தான்
இருக்கிறார்கள் ஆனால் சிறியவர்களின் மின்மினுப்பு கூட்டத்தின் அழகை அதிகரிக்கிறது. பாப்தாதா ஒவ்வொரு
நட்சத்திரத்தின் அவசியம் எவ்வளவு இருக்கிறது என்ற இந்த விஷயத்தைப் பார்த்து பார்த்து தான் மகிழ்ச்சி
அடைந்து கொண்டிருக்கிறார். சிறியதிலும் சிறிய நட்சத்திரமும் மிக அவசியமாக இருக்கிறது. மகத்துவம்
நிறைந்த காரியம் செய்பவர்களாக இருக்கிறார்கள் என்றால் இன்று பாப்தாதா ஒவ்வொருவரின் மகத்துவத்தைப்
பார்த்துக் கொண்டிருந்தார். எப்படி வெளியுலக குடும்பத்தில் தாய் தந்தையர் ஒவ்வொரு குழந்தையின்
குணங்களின், செய்யும் காரியங்களின், நடத்தையின் விஷயங்களை பேசுகிறார்கள். அதே போலவே
எல்லைக்கப்பாற்பட்ட தாய் தந்தையாகிய ஞான சூரியன் மற்றும் சந்திரன் எல்லைக்கப்பாற்பட்ட பரிவாரத்தின்
மற்றும் அனைத்து நட்சத்திரங்களின் விசேஷங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். பிரம்மா பாபா அல்லது
சந்திரன் இன்று உலகின் நாலாபுறங்களிலும் மூலை மூலையில் மின்னிக் கொண்டிருக்கும் தன்னுடைய
நட்சத்திரங்களை பார்த்து பார்த்து விசேஷமாக குμயில் ஆடிக்கொண்டிருந்தார். ஞான சூரியன் தந்தையோ
ஒவ்வொரு நட்சத்திரங்களின் அவசியம் மற்றும் விசேஷத்தை கூறிக் கொண்டே அந்த அளவு மகிழ்ச்சி
அடைந்து கொண்டிருந்தார், அதை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது. அந்த நேரத்தின் சித்திரத்தை
புத்தியின் நினைவு என்ற கேமரா மூலம் படம் பிடிக்க முடியுமா? சாகாரத்தில் யார் யாரெல்லாம் அனுபவம்
செய்திருந்தார்களோ அவர்களோ நல்ல முறையில் தெரிந்து கொள்ள முடியும். முகம் எதிரில் வந்து விட்டது
தான் இல்லையா? என்ன தென்படுகிறது? கண்களில் முத்து ஜெôலிக்கும் மாதிரி அந்த அளவு மகிழ்ச்சி
அடைந்து கொண்டிருந்தார்கள். இன்று எப்படி வைர வியாபாரி ஒவ்வொரு வைரத்தின் மகத்துவத்தை
வர்ணனை செய்கிறார், அதே போல் சந்திரன் ஒவ்வொரு வைரத்தின் மகிமை செய்து கொண்டிருந்தார்.
உங்கள் அனைவரின் மகிமையாக என்ன கூறியிருப்பார் என்று நீங்கள் புரிந்து கொள்ள முடியுமா? தன்னுடைய
மகான் நிலையின் மகிமையை தெரிந்திருக்கிறீர்களா?
அனைவரின் ஒரு முக்கியமான விஷயத்தின் விசேஷம் மற்றும் மகான் நிலை மிகத் தெளிவாக
இருக்கிறது. அது யாராக இருந்தாலும் யானைப்படையோ (மகாரதியோ) அல்லது காலாட்படையோ, சின்ன
நட்சத்திரமோ அல்லது பெரிய நட்சத்திரமோ ஆனால் தந்தையை தெரிந்திருக்கும் விசேஷம், தந்தையின்
குழந்தையாக ஆகியிருக்கும் விசேஷமோ அனைவரிலும் இருக்கிறது தான் இல்லையா. தந்தையை
சாஸ்திரங்களின் அதிகாரம் உள்ள மிகப்பெரியவர்கள், மதத்தின் அதிகாரம் உள்ளவர்கள், அறிவியலின் அதிகாரம்
உள்ளவர்கள், இராஜ்ஜியத்தின் அதிகாரம் உள்ளவர்கள், பெரிய பெரிய அழியும் பட்டங்களின் அதிகாரம்
உள்ளவர்கள் அனைவருமே தந்தையை தெரிந்திருக்கவில்லை ஆனால் நீங்கள் அனைவரும் தந்தையை
தெரிந்து கொண்டீர்கள். அவர்கள் இதுவரையிலும் வாருங்கள் வாருங்கள் என்று அழைத்துக் கொண்டே தான்
இருக்கிறார்கள். சாஸ்திரவாதிகளோ இப்பொழுது கணக்கைத் தான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
விஞ்ஞானிகளோ தங்களுடைய கண்டுபிடிப்புகளில் அந்தளவு மூழ்கியிருக்கிறார்கள், அதனால் தந்தையின்
விஷயங்களை கேட்பதற்கும் மற்றும் புரிந்து கொள்வதற்கும் நேரமே இருப்பதில்லை. தன்னுடைய
காரியங்களிலேயே மூழ்கியிருக்கிறார்கள். இராஜ்ய அதிகாரம் உள்ளவர்கள் தன்னுடைய இராஜ்ஜியத்தின்
நாற்காலியை பாதுகாப்பதிலேயே பிஸியாக இருக்கிறார்கள், நேரமே இருப்பதில்லை. மதத்தலைவர்களோ
தங்களுடைய மதம் அழிந்து விடக்கூடாது என்று அதை பாதுகாப்பதிலேயே பிஸியாக இருக்கிறார்கள். இந்த
என்னுடைய என்னுடையது என்பதிலேயே மிகவும் பிஸியாக இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் அனைவரும்
வரவழைப்பதற்கு பதிலாக சந்திப்பு செய்பவர்கள், இந்த விசேஷம் மற்றும் மகான் தன்மை உங்கள்
அனைவரிடமும் இருக்கிறது. என்னிடம் என்ன விசேஷம் இருக்கிறது மற்றும் என்னிடமோ ஒரு குணமும்
(2/4)
17.07.2016
இல்லை என்று அப்படி நினைக்கவில்லையே. என்னில் ஒரு குணமும் இல்லை என்ற வார்த்தையோ
பக்தர்களினுடையது. குணங்களின் கடல் தந்தையின் குழந்தை ஆவது என்றால் குணம் நிறைந்தவர் ஆவது.
அப்படி ஒவ்வொருவரிலும் ஏதாவது குணத்தின் விசேஷம் இருக்கிறது. மேலும் தந்தை அந்த விசேஷத்தைத்
தான் பார்க்கிறார். எப்படி இராஜ பரிவாரத்தின் ஒவ்வொரு நபரிலும் அந்த அளவு சம்பன்னம் அவசியம்
இருக்கிறது. அவர் ஒருபொழுதும் யாசிப்பவராக இருக்க முடியாது என்று தந்தை தெரிந்திருக்கிறார். அந்த
மாதிரி குணங்களின் கடல் தந்தையின் குழந்தைகள் ஏதாவது குணத்தின் விசேஷம் இன்றி குழந்தை என்று
கூற முடியாது. அப்படி நீங்கள் அனைவரும் குணம் நிறைந்தவர்கள் மகான், விசேஷ ஆத்மாக்கள், சைத்தன்ய
நட்சத்திர மண்டலத்தின் அலங்காரம் ஆவீர்கள். நீங்கள் யார் என்று இப்பொழுது புரிந்து கொண்டீர்களா?
நீங்கள் பலமற்றவர் அல்ல, பலம் நிரம்பியவர்கள் ஏனென்றால் நீங்கள் மாஸ்டர் சர்வ சக்திவான் ஆவீர்கள்.
அந்த மாதிரி ஆன்மீக போதை எப்பொழுதும் இருக்கிறதா? ஆன்மீக நிலையில் ஒருபொழுதும் அபிமானம்
இருக்காது, சுவமானம் இருக்கும். சுவமானம் என்றால் சுயம் லி ஆத்மாவின் உணர்வு. சுவமானம் மற்றும்
அபிமானம் இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது. எனவே எப்பொழுதும் சுவமானம் என்ற ஆசனத்தில்
அமர்ந்திருங்கள். அபிமானம் என்ற ஆசனத்தை விட்டு விடுங்கள். அபிமானத்தின் ஆசனம் மேலோட்டமாக
மிக அலங்கரிக்கப்பட்டதாக இருக்கும். பார்க்கும் பொழுது இதயத்திற்கு பிடித்ததாக ஓய்வாக அமரலாம் என்ற
விருப்பம் இருக்கும். ஆனால் உள்ளே முட்களின் ஆசனம் இருக்கும். இந்த அபிமானத்தின் ஆசனம்
எப்படி சாப்பிட்டாலும் வேதனை அடை மற்றும் சாப்பிடாவிட்டாலும் வேதனை அடை என்ற பழமொழி
இருக்கிறது, இந்த ஆசனமும் அதே போல் தான். ஒருவர் மற்றவரை பார்த்து நானும் ருசி பார்த்து விட
வேண்டும் என்று யோசிக்கிறார்கள். இன்னார் இன்னார் அனுபவம் செய்திருக்கிறார், எனவே நானும் ஏன்
அனுபவம் செய்யக்கூடாது. அப்படி விடவும் முடியாது, மேலும் எப்பொழுது அமருகிறார்களோ அப்பொழுது
முள்ளோ கண்டிப்பாக குத்தும். அந்த மாதிரி வெளிப்படையாக மிக நன்றாக இருப்பதாக தோன்றும். ஏமாற்றம்
அளிக்கும் அபிமானத்தின் ஆசனத்தில் அமருவதற்கு ஒருபொழுதும் முயற்சி செய்யாதீர்கள். சுவமானத்தின்
ஆசனத்தில் எப்பொழுதும் சுகமானவராக, எப்பொழுதும் உயர்ந்த, எப்பொழுதும் அனைத்து பிராப்தி சொரூபத்தின்
அனுபவம் செய்யுங்கள். தந்தையை தெரிந்து கொள்வது மற்றும் சந்திப்பு செய்வதற்கான விசேஷத்தை
மட்டும் நினைவில் வைத்து எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள். எப்படி சந்திரன் நட்சத்திரங்களை பார்த்து
மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறார் என்று ஏற்கனவே கூறியிருந்தோம். அதே போல் தந்தையை பின்பற்றி
நடங்கள் லி நல்லது.
அந்த மாதிரி எப்பொழுதும் சுவமானத்தின் ஆசனத்தில் அமர்ந்திருக்கக்கூடிய, எப்பொழுதும் தன்னை
விசேஷ ஆத்மா என்று புரிந்து விசேஷங்கள் மூலமாக மற்றவர்களையும் விசேஷ ஆத்மாவாக ஆக்கக்கூடிய,
சந்திரன் மற்றும் ஞான சூரியனை எப்பொழுதும் பின்பற்றி நடக்கக்கூடிய, அந்த மாதிரி நம்பிக்கைக்குரிய,
கட்டளைப்படி நடக்கும் உண்மையான குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.
தாதி அவர்களுடன் சந்திப்பு லி
நீங்களும் அனைவரின் விசேஷங்களை பார்த்திருக்கிறீர்கள் இல்லையா. (சென்ற இடங்களை) சுற்றி
வந்ததில் என்ன பார்த்தீர்கள்? சிறியவர்களின் விசேஷத்தையும், பெரியவர்களின் விசேஷத்தையும் பார்த்தீர்கள்
இல்லையா. அப்படி விசேஷத்தை வர்ணனை செய்வதில், கேட்பதில் அனைவரும் எவ்வளவு மகிழ்ச்சி
அடைகிறார்கள். அனைவரும் மகிழ்ச்சி அடைந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள் இல்லையா (தாதி அவர்கள்
அம்பாலா மற்றும் பிரோஸாபாத் மேளாவின் செய்தியை வகுப்பில் கூறினார்) அதே போலவே எப்பொழுதும்
அனைவரும் விசேஷத்தை மட்டுமே வர்ணனை செய்கிறார்கள் என்றால் என்னவாகிவிடும். எப்படி விசேஷ
காரியத்தில் எப்பொழுதும் குμயின் இசை ஒலிக்கும் இல்லையா. அதே போல் பிராமண பரிவாரத்தில்
நாலாபுறங்களிலும் குμயின் இசை தான் ஒலித்துக் கொண்டே இருக்கும். சுறுக்கமான மற்றும் இனிமையான
பயணமாக இருந்தது. குμகளின் சுரங்கத்தைப் பெற்று அனைவரையும் குμயால் அனைத்தும் நிறைந்தவராக
ஆக்கி வந்திருக்கிறீர்கள். ஒவ்வொரு ஸ்தானத்தின் தைரியம் மற்றும் உற்சாகம், ஒன்று இன்னொன்றை விட
உயர்ந்தது. தந்தையும் குழந்தைகளின் தைரியம் மற்றும் உற்சாகத்திற்காக ஒவ்வொரு குழந்தையின் மகிமையின்
குணங்களின் மலர் மழை பொழிகிறார். நல்லது.
பார்ட்டிகளுடன் சந்திப்பு லி
ஒவ்வொருவரும் தன்னுடைய உயர்ந்த எதிர்காலத்தை தெரிந்திருக்கிறீர்கள் இல்லையா? எவ்வளவு
உயர்ந்த எதிர்காலத்தை உயர்ந்த காரியங்கள் மூலமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்? எவ்வளவு உயர்ந்த
காரியமோ அந்த அளவே எதிர்காலத்தின் ரேகை நீளமானதாகவும் தெளிவானதாகவும் இருக்கிறது. எப்படி
கைகள் மூலமாக எதிர்காலத்தை பார்க்கிறார்கள் என்றால், என்ன பார்க்கிறார்கள்? ரேகை நீளமாக இருக்கிறதா,
(3/4)
17.07.2016
இடையிடையில் துண்டிக்கவோ படவில்லையே என்று பார்க்கிறார்கள். அதே போல் இங்கேயும் அந்த மாதிரி
தான். ஒருவேளை எப்பொழுதும் உயர்ந்த காரியம் செய்பவராக இருக்கிறார் என்றால் எதிர்காலத்தின் ரேகையும்
நீளமானதாக மற்றும் நிரந்தரமாக தெளிவானதாக மற்றும் உயர்ந்ததாக இருக்கிறது. ஒருவேளை சில நேரம்
உயர்ந்ததாக, சில நேரம் சாதாரணமானதாக இருக்கிறது என்றால் ரேகையும் இடையிடையே துண்டிக்கப்பட்டிருக்கும்,
அழியாததாக இருக்காது. சில நேரம் நிற்பார்கள், சில நேரம் முன்னேறிச் செல்வார்கள், எனவே எப்பொழுதும்
உயர்ந்த காரியம் செய்பவராக இருக்க வேண்டும். தந்தையோ எதிர்காலத்தை உருவாக்கும் சாதனத்தையோ
தந்து விட்டார் லி உயர்ந்த காரியம். எதிர்காலத்தை உருவாக்குவது எவ்வளவு சுலபமானதாக இருக்கிறது.
உயர்ந்த காரியம் செய்யுங்கள், மேலும் பல கோடி மடங்கு பாக்கியசாலியின் எதிர்காலத்தை அடையுங்கள்.
உயர்ந்த காரியத்தின் ஆதாரம் லி உயர்ந்த நினைவு. உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையின் நினைவில் இருப்பது
என்றால் உயர்ந்த காரியம் நடப்பது. அந்த மாதிரி நீங்கள் நல்ல எதிர்காலம் உள்ளவர்கள் தான் இல்லையா.
அனைவருமே எதிர்காலம் உள்ளவர்கள் தான் ஆனால் உயர்ந்ததாக இருக்கிறதா அல்லது சாதாரணமானதாக
இருக்கிறதா என்ற இதில் வரிசை எண் வந்து விடுகிறது. நிரந்தரமான எதிர்காலத்தின் ரேகையை போட்டு
விட்டீர்களா அல்லது சின்னஞ்சிறியதை போட்டிருக்கிறீர்களா? நீளமானது தான் இல்லையா, அழியாதது தான்
இல்லையா. இடையிடையே அழியக்கூடியது அல்ல, எப்பொழுதுமே இருக்கக்கூடியது. அந்த மாதிரி எதிர்காலம்
உள்ளவர்கள். இப்போதைக்கும் நல்ல எதிர்காலம் உள்ளவர் மற்றும் அனேக ஜென்மங்களுக்கும் நல்ல
எதிர்காலம் உள்ளவர்.
2) அனைவரும் தன்னை இந்த நாடகத்திற்குள் தந்தையுடன் அன்பான மற்றும் சகயோகி
ஆத்மாக்கள் என்று அப்படி புரிந்து நடந்து கொள்கிறீர்களா? ஆத்மாக்கள் நமக்கு இந்த அளவு உயர்ந்த
பாக்கியம் கிடைத்திருக்கிறது, இந்த பதவி எப்பொழுதும் நினைவிருக்கிறதா? எப்படி உலகில் கூட உயர்ந்த
பதவியில் இருக்கும் ஆத்மாவின் உடன் காரியம் செய்பவர்களும் எவ்வளவு உயர்ந்ததாக நினைக்கிறார்கள்.
ஆனால் உங்களுடைய பங்கு, உங்களுடைய காரியம் சுயம் தந்தையுடன் இருக்கிறது. அப்படியென்றால்
எவ்வளவு உயர்ந்த பங்காக ஆகிவிட்டது. அந்த மாதிரி நினைக்கிறீர்களா? முன்போ சிறிதளவு தரிசனம்
கிடைத்து விடட்டுமே என்று அழைத்துக் கொண்டு மட்டும் இருந்தீர்கள். இந்த ஆசையைத் தான்
வைத்திருந்தீர்கள் இல்லையா. அதிகாரி ஆவதற்கான ஆசை மற்றும் எண்ணத்தையோ நினைத்துக்கூட பார்க்க
முடியாது, அசம்பவம் என்று நினைத்தீர்கள். ஆனால் இப்பொழுது அசம்பவ விஷயமாக என்ன இருந்ததோ
அது சம்பவமாக மற்றும் நடந்தேறிவிட்டது. இந்த நினைவு இருக்கிறதா? எப்பொழுதும் இருக்கிறதா அல்லது
சில நேரம் இருக்கிறதா? ஒருவேளை சில நேரம் இருக்கிறது என்றால் பிராப்தியாக என்ன அடைவீர்கள்?
சில நேரம் இராஜ்ஜியம் கிடைக்கும், சில நேரம் இராஜா ஆவீர்கள், சில நேரம் பிரஜை ஆவீர்கள். யார்
நிரந்தரமான சகயோகியாக இருக்கிறாரோ அவர் தான் நிரந்தரமான இராஜா. அதிகாரமோ அழியாததாக மற்றும்
நிரந்தரமானதாக இருக்கிறது. எவ்வளவு காலம் தந்தை உத்திரவாதம் கொடுத்திருக்கிறாரோ, அரைக்கல்பம்
அதில் எப்பொழுதிற்குமான இராஜ பதவியை பிராப்தி செய்ய முடியும். ஆனால் இராஜயோகி இல்லை
என்றால் இராஜ்ஜியமும் இல்லை. எப்பொழுது வாய்ப்பு நிரந்தரமாக இருக்கிறது என்றால் சிறிது காலத்திற்காக
ஏன் பெற்றுக் கொள்கிறீர்கள். நல்லது.
3) சங்கமயுகத்தை புதிய யுகம் என்றும் கூற முடியும். ஏனென்றால் அனைத்தும் புதியதாக
ஆகிவிடுகிறது. புதிய யுகத்தைச் சேர்ந்தவர்களின் ஒவ்வொரு நேரத்தின் ஒவ்வொரு நடத்தையும் புதியது.
எழுவதும் புதியது, பேசுவதும் புதியது, நடப்பதும் புதியது. புதியது என்றால் ஆன்மீகம். புதிய கௌரவம்,
புதிய விஷயம், அனைத்தும் புதியதாக ஆகிவிட்டது இல்லையா. நினைவிலும் புதுமை வந்து விட்டது.
எப்படி நினைவோ அப்படி நிலையும் ஆகிவிட்டது. விஷயங்களும் புதியது, கிடைப்பதும் புதியது, அனைத்தும்
புதியது. பார்க்கிறார்கள் என்றாலும் ஆத்மா, ஆத்மாவை பார்ப்பார்கள். முன்பு உடலைப் பார்த்தார்கள்,
இப்பொழுது ஆத்மாவை பார்க்கிறார்கள். முன்பு தொடர்பில் வந்தார்கள் என்றால் பல விகார பாவனையோடு
வந்தார்கள். இப்பொழுது சகோதரன் சகோதரனின் பார்வையோடு தொடர்பில் வருகிறீர்கள். இப்பொழுது
தந்தையின் துணைவன் ஆகிவிட்டீர்கள். முன்பு உலகியல் குடும்பத்தின் துணைவர்களாக இருந்தீர்கள்.
பிராமணர்களின் பாஷையும் புதியது, உங்களுடைய பாஷையை உலகத்தினர் புரிந்து கொள்ள முடியாது. பகவான்
வந்து விட்டார் என்ற இந்த விஷயத்தை மட்டும் கூறுகிறீர்கள் என்றாலும் ஆச்சரியம் அடைகிறார்கள். புரிந்து
கொள்வதில்லை. இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கூறுகிறார்கள். அப்படி உங்களுடைய அனைத்து
விஷயங்களும் புதியவை எனவே ஒவ்வொரு நேரமும் தனக்குள்ளும் புதுமையை கொண்டு வாருங்கள்.
என்ன மனநிலை ஒருநொடி முன்பு இருந்ததோ அது அடுத்த விநாடி இல்லை, அதை விட மேலாக
இருந்தது. இதைத் தான் வேகமான முயற்சி என்று கூறுவது. யார் சில நேரம் முன்னேறும் கலையிலும் சில
நேரம் நிற்கும் கலையிலும் இருப்பாரோ அவரை நம்பர் ஒன் முயற்சியாளர் என்று கூறமாட்டோம். நம்பர் ஒன்
(4/4)
17.06.2016
முயற்சி செய்பவரின் அடையாளம் ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு எண்ணத்திலும் முன்னேறும் கலை.
இந்த நேரம் 80 சதவிகிதம் இருக்கிறது என்றால் ஒரு விநாடிக்கு பிறகு 81 சதவிகிதம் என்று இருக்க
வேண்டும், 80 ற்கு 80 ஆகவே இருக்க வேண்டாம். ஏறும் கலை என்றாலே எப்பொழுதும் முன்னேறிச்
சென்று கொண்டிருப்பது. பிராமண வாழ்க்கையின் காரியமே முன்னேறுவது மற்றும் மற்றவர்களை
முன்னேற்றுவது. உங்களுடைய முன்னேறும் கலையில் அனைவருக்கும் நன்மை இருக்கிறது. அந்த அளவு
உங்கள் அனைவர் மேலும் பொறுப்பு இருக்கிறது. நல்லது லி ஓம் சாந்தி.
வரதானம் லி வீணானதின் கசிவை முடித்து சக்தி நிறைந்தவர் ஆகக்கூடிய குறைந்த செலவில்
நிறைந்த பலன் பெறுபவர் ஆகுக.
சங்கமயுகத்தில் பாப்தாதா மூலமாக என்னென்ன பொக்கிஷங்கள் கிடைத்திருக்கின்றனவோ அந்த
அனைத்து பொக்கிஷங்களை வீணாக செல்வதிலிருந்து பாதுகாத்தீர்கள் என்றால் குறைந்த செலவில் நிறைந்த
பலன் அடைபவராக ஆகிவிடுகிறீர்கள். வீணானவற்றிலிருந்து மிச்சப்படுத்துவது என்றால் சக்தி நிறைந்தவர்
ஆவது. எங்கு சக்தி நிறைந்த நிலை இருக்கிறது என்றால் அங்கு வீணானவை இருக்கிறது என்பது இருக்க
முடியாது. ஒருவேளை வீணானவற்றின் கசிவு இருக்கிறது என்றால் சோதனை செய்து அதை முடித்து
விட்டீர்கள் என்றால் வீணானவையிலிருந்து சக்தி நிறைந்தவர் ஆகிவிடுவீர்கள்.
சுலோகன் : இல்லறத்தில் இருந்து கொண்டே சம்பூர்ண தூய்மையாக இருப்பது லி இது தான்
யோகி மற்றும் ஞான சொரூப ஆத்மாவிற்கான சவாலாகும்.